Search This Blog

4.5.14

காஷ்மீர் எரிமலையில் அமர்ந்து பிடில் வாசிக்க ஆசைப்படும் பிஜேபி!




இந்தியத் துணைக் கண்டத்தின் தலை ஜம்மு - காஷ்மீர் மாநிலம்! அதன் பரப்பளவு 2,2,2,770 சதுர கிலோ மீட்டர்; இதில் பாகிஸ்தான் ஆளுமையின் கீழ் இருக்கும் ஆசாத் பகுதி 78,114 சதுர கிலோ மீட்டர் காஷ்மீர், ஜம்மு, லடாக் என்ற மூன்று பகுதிகள் கொண்ட அம்மாநிலத்தின் மக்கள் தொகை 60 லட்சம்.

காஷ்மீர் இந்தியத் துணைக் கண்டத் தோடு இணைக்கப்பட்டது என்பது எதிர்பாராத ஒரு விபத்தே!

77.11 சதவிகிதம் முஸ்லீம்கள், 20.12 சதவிகிதம் இந்துக்கள், 2.77 சதவிகிதம் சீக்கியர்களும், பவுத்தர்களும் வாழ்ந்தனர். இந்தியத் துணைக் கண்டத்துக்குச் சுதந் திரம் கிடைத்தபோதுகூட காஷ்மீர் இந்தியாவோடு இருந்ததில்லை. ஹரிசிங் என்ற இந்து மன்னனின் ஆளுகையின் கீழ்தான் இருந்தது.

பாகிஸ்தான் வல்லூறு வட்டமிட்டு இந்தப் பகுதியை அலக்காகத் தூக்கிக் கொண்டு போகலாம் என்று எத்தனித்த போது, இந்தியாவிடம் அபயம் தேடியவர் தான் இந்தச் சிற்றரசன்.

அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அம்மன்னனிடம் சுதந்திர இந்தியா ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொண்டது. (26.1.0.1947) காஷ்மீர் சிங்கம் என்று கருதப் படும் ஷேக் அப்துல்லாவின் ஒப்புதலும் அதற்கு இருந்தது.
காஷ்மீரத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, தகவல் தொடர்பு இம்மூன்றும் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் இருக்கும். மீதி அதிகாரங்கள் அனைத்துமே காஷ்மீர் மாநில ஆட்சியின் வசம் அடங்கி இருக்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தது.
பாகிஸ்தான்  நாட்டோடு இந்தியா போர் நடத்திக் கொண்டு இருக்கும் போதே -காஷ்மீர்ப் பிரச்சினை அய்.நா.வுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1949 சனவரி முதல் நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
(1) போரை உடனடியாக நிறுத்துவது 2) ஜம்மு, காஷ்மீர் லடாக் பகுதியில் தனி நாடாக இயங்குவதா? இநதியாவுடன் இணைவதா? என்பதை  அய்.நா.வின் மேற்பார்வையில் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்துவதுஎன்ற நிபந்தனை களை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் ஏற்றுக் கொண்டன.

1949 அக்டோபர் 17ஆம் நாள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 370ஆவது பகுதி இணைக்கப்பட்டு, காஷ்மீருக்கென்று சிறப்பு அந்தஸ்தும் உரிமைகளும் வழங்கப் பட்டன.

காஷ்மீர் முதல் அமைச்சர் பிரதமர் என்று அழைக்கப்படுவார்; அம்மாநிலத் துக்கென்று தனிக் கொடி உண்டு. பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது என்பது போன்ற தனித் தன்மை யான உரிமைகள் அம்மாநிலத்திற்கு ஒப்பந்த ரீதியாகவே வழங்கப்பட்டன.
இந்திய மத்திய அரசின் அதிகாரத் திற்குட்பட்ட அம்சங்களிலும் மத்திய - மாநில அரசுகளுக்குட்பட்ட அதிகாரங் களிலும் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படும் பொழுது காஷ்மீர் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 1952 ஜூலை 24ஆம் நாள் அன்று இதன் அடிப்படையில் மத்திய மாநில உறவினைபற்றி காஷ்மீர் முதல் அமைச்சர் ஷேக் அப்துல்லாவுக்கும் இந்தியப் பிரதமர் நேரு அவர்களுக்கு மிடையே ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டது.
இன்றைக்கு பி.ஜே.பி. தேர்தல் அறிக் கையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 370ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே - இந்தப் பிரச் சினையை அன்றைய இந்து அமைப்பான பிரஜா பரீஷத், அன்றைய ஜன சங்கமும் (இன்றைய பிஜேபி) எதிர்த்துக் குரல் கொடுத்ததுமட்டுமின்றி போராட்டமும் நடத்தின!

இந்துத்துவா அமைப்புகளின் அந்தச் செயல்பாடுகள் காஷ்மீர் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத் துவதற்குக் காரணமாக அமைந்தன. காஷ்மீர் சிங்கம் ஒன்று கர்ச்சிக்க ஆரம்பித்தது. ஷேக் அப்துல்லா தான் அவர்; அப்பொழுதே  வெளிப்படையாகக் கூறினார்.

எங்கள் தலைவிதியை நிர்ணயித் துக் கொள்ள எங்களுக்கு உரிமை இல் லையா? மதவெறி இப்படி இந்தியாவில் தலை தூக்குமேயானால் இந்தியா நம்மை விழுங்கி விடாது என்று எப்படி நாங்கள் காஷ்மீர் முஸ்லீம்களைச் சமாதானப்படுத்த முடியும்? என்று ஆவேசப் புயலாக வெடித்துக் கிளம்பினார். அவர் போக்கில் ஒரு புது வேகம் வெடித்துக் கிளம்ப ஆரம்பமாகி விட்டது. விளைவு, அவர் ஆட்சி கலைக்கப்பட்டதோடு அவரும் கைது செய்யப்பட்டார் (9.8.1953).

இந்த வரலாற்றைத் தெரிந்து கொண் டால்தான் இப்பொழுது பிஜேபியினர் தேர்தல் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவோம் என்பது எத்தகைய பாரதூர விளவுகளை ஏற் படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அன்றைக்கு காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா கொடுத்த குரலின் எதி ரொலியை அவரின் மகனான ஃபரூக் அப்துல்லாவின் குரலில் கேட்க முடிகிறதா இல்லையா?

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட் டுக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமாகிய ஃபரூக் அப்துல்லாஹ் கடந்த 27.4.2014 தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் மோடி தேர்தலில் வென்றால், காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக நீடித்து இருக்க முடியாது. வகுப்புவாதத்தை காஷ்மீர் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றார்.

மேலும், அது (மோடி அதிகாரத்துக்கு வருவது) நடந்துவிட்டால், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடித்து இருக்காது. இதை பொதுப்படையாகவே கூறுகிறேன். வகுப்பு வாதியை காஷ்மீர் மக்கள் ஏற்கமாட்டார்கள். அப்படியே மோடிக்கு வாக்களித்தவர்கள் கடலில் தான்போய் விழவேண்டும் என்று ஃபரூக் அப்துல்லா குமுறி எழுந்தார். (ஏ.என்.அய். செய்தி, 27-4-2014)

ஏற்கெனவே காஷ்மீர்ப் பகுதி கொந்தளிக்கும் கடலாய் இருந்து வருகிறது. இந்திய இராணுவத்தின் ஒரு பகுதிக்கு காஷ்மீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்கே போதும் போதும் என்றாகி விட்டது.

அந்த எரிமலையின்மீது பிடில் வாசிக்க ஆசைப்படுகிறது பிஜேபி. இப்பொழுதே பிரதமர் ஆகிவிட்டது போன்ற வெறியில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார் நரேந்திர மோடி.

மேற்கு வங்கத்திற்குத் தேர்தல் பரப்புரை செய்யச் சென்ற அவர், வங்காள தேசத்திலிருந்து இங்கே ஊடுருவியவர்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடையூறு ஏற்படுமேயானால் அவர்களை அகதி களாக இரு கைகளை ஏந்தி வரவேற்போம் என்றெல்லாம்  தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது நாட்டை  நாளும் மதக்கலவரப் பூமியாக ஆக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதையே பறைசாற்றும்.

மேற்கு வங்கம் சென்று கொக்கரித்த மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா சரியான பதிலடி கொடுத்தார். பங்களா தேஷ் மக்களும், நாங்களும் ஒரு மொழி பேசக் கூடியவர்கள். இதில் குறுக்கே கோடு போட நீ யார்? என்ற வினாவை எழுப்பி யுள்ளார். மதமோதலா? மொழி மோதலா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எந்த வகையில் பார்த்தாலும் மக்களைப் பிளவுபடுத்தி, ரத்தச் சேற்றை உண்டாக்கி தாமரையை மலர வைக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது ஒரு மனு - மந்தாதா வழி வந்த ஒரு கும்பல்! அதனால்தான்....
நொபெல் அறிஞர் அமர்த்தியா சென் போன்றவர்கள் இந்தியப் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி போன்ற நடுநிலை அறிஞர் பெருமக்கள் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அதனால் ஏற்படும் ஆபத்தினைச் சுட்டிக் காட்டி எச்சரித்தும் உள்ளார்கள்.

------------------------- கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள் 3-5-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Read more: http://viduthalai.in/page-1/79604.html#ixzz30eCtqyHv 03-05-2014

57 comments:

தமிழ் ஓவியா said...


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க
விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்படுவார் மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

புதுடில்லி, மே 3- குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி உத்தர விட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததையொட்டி இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசா ரணை ஆணையத்திற்கு விரைவில் நீதிபதி நியமிக் கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித் துள்ளார்.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்கு மாறு கூறியதன் பேரில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித்ஷா, இது தொடர்பாக காவல் துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல் துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங் களை ஊடகங்கள் வெளி யிட்டன. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறி வித்தது. எனினும் இந்த குழுவுக்கான நீதிபதி இது வரை நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று (2.5.2014) சிம்லாவில் செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுசில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய் தது. இந்த குழுவுக்கான நீதிபதி 16ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்படுவார் என்றார்.

அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தலுக்கு இடையே நீதிபதியை நிய மிப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லையா? என்று கேட்டதற்கு, இந்த முடிவு 4 மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்றும், எனவே இது தேர் தல் நடத்தை விதிமீறல் இல்லை என்றும் தெரி வித்தார்.

மேலும், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, இளம்பெண் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வேவு பார்த்துள்ள நிலையில், அவர் பிரதம ரானால் பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? என் பது குறித்து உண்மையி லேயே வருத்தப்படுவ தாகவும் ஷிண்டே கூறினார்.

இதற்கிடையே மத்திய அரசின் இந்த முடிவு, அர சியல் உள்நோக்கம் கொண் டது என பா.ஜனதா கூறி யுள்ளது. இது குறித்து அக் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, மோடிக்கு எதிராக காங்கிரசின் அரசி யல் காழ்ப்புணர்ச்சி நட வடிக்கை இது என்று தெரி வித்தார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு எந்த நீதிபதியும் ஒத்துழைக்கமாட்டார் என்றும் அவர் கூறினார். இதைப்போல, காங் கிரஸ் கட்சியின் உள் நோக் கம் கொண்ட இந்த நடவ டிக்கைக்கு, மதிப்பு மிக்க நீதித்துறை துணை போகாது என நம்புவதாக ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.

ஆனால், இந்த விவகா ரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண்டிப்பாக நீதிபதி நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது. இது குறித்து மத் திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண் டிப்பாக நீதிபதி நியமிக்கப் படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள் ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் மேலும்கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் பா.ஜனதா தலைவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகி றார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. விசா ரணைக்குழுவில் எந்த நீதி பதியும் சேரமாட்டார்கள் என ஏன் வெளிப்படையாக கூறுகிறார்கள்? இந்த விவ காரத்தின் உண்மை நிலை அவர்களுக்கு தெரியும்.

ஏனெனில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவ காரத்தில் மோடி என்ன செய்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் உள் ளது. எனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட் டால், மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது என் பது அவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79641.html#ixzz30hi2zwYc

தமிழ் ஓவியா said...



மோடி ஒரு போதும் பிரதமராக மாட்டார் கபில்சிபல் பேச்சு

பாட்னா, மே 3- "குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு போதும் நாட்டின் பிரதமராக மாட்டார்'' என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது:

குஜராத் மாநிலத்தில் துளசிராம் பிரஜாபதி, இஷ்ராத் ஜஹான் ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர். அந்த மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த உதவித் தொகைத் திட்டத்தை மோடி அரசு நிறுத்தி விட்டது.

மேலும், கட்ச் பகுதியில் இருந்த சீக்கியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். எனவே, இவற்றுக் கெல்லாம் காரணமாக இருந்த மோடியை, நாட்டின் பிரதமராக்க யாரும் விரும்ப மாட்டார்கள். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தாக்கப்படுகிறார்கள்.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைப் போன்று, மோடியும் குழு மனப்பான்மை கொண்டவர் என்று கபில்சிபல் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiDPBwk

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திரமோடி தகுதியானவர் இல்லை
லாலு பாய்ச்சல்

பாட்னா, மே 3- பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை. ஆர்எஸ் எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியாக பாஜ தலைவர்கள் செயல்படுகின் றனர் என்று லாலு பிரசாத் யாதவ் கிண்டலடித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் அளித்த பேட்டி:

பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியாக இருந்தாலும், நான் தான் உண்மையான பிரதமர் பதவியை கையாளுவேன். ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த எனக்காக பாஜ.வுக்கு வாக்களியுங்கள் என்று பீகார் மக்களையும், அவரது இனத்தவரையும் ராஜ்நாத் சிங் ஏமாற்றி வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை.

பீகார் மக்களை முட்டாளாக்கி வரும் ராஜ்நாத் சிங் குக்கும், நரேந்திர மோடிக்கும் மக்கள் அரசியல் அடிப் படையை கற்றுத் தருவார்கள். ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியை போல, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் செயல்படுகிறார். தலித்து களின் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உண்மையிலேயே பாடுபடுகின்றனர். இவ் வாறு லாலு பிரசாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiM4J12

தமிழ் ஓவியா said...

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசுங்கள்
மோடிக்கு பிரியங்கா சவால்

அமேதி, மே 3- தைரி யம் இருந்தால் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று மோடிக்கு பிரியங்கா சவால் விடுத் துள்ளார். காங்கிரஸ் தலைவரும், அமேதி மக் களவை தொகுதி வேட்பாள ருமான சோனியா காந்தியை ஆதரித்து, மகள் பிரியங்கா காந்தி நேற்று கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள ஷாஹ்காரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: நான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இடங் களில் எல்லாம், என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றி யும் அவதூறான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை இர வோடு இரவாக பா.ஜ கட்சி, கோழைத்தனமாக வெளி யிட்டு வருகிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் நின்று பேசவேண்டும்.
நாட்டில் தற்போது தேர்தல் பிரச்சாரம் என்பது மிகவும் மட்டரகமாகப் போய் கொண்டு இருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்களுக்குதான். ஆனால், ஒரு சில தலைவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். மக்க ளின் அடிப்படை நலன் குறித்து கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் செயல்படுகின்றனர். நரேந்திர மோடி பத விக்காக ஆசைப்படுகிறார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனது தாய் சோனியா காந்தியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiRgLpT

தமிழ் ஓவியா said...

வாஜ்பாய் மகாத்மா காந்தியாம்!
மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோசாம்!!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்

டில்லி, மே. 3- பாஜகவில் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மகாத்மா காந்தியுடனும் ஆர்.எஸ்.எஸ் தலை வர் இந்திரேஷ் குமார் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார். சி.என்.என். அய்.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தரேஷ்குமார் கூறியிருப்பதாவது: வாஜ்பாயும், மோடியும் ஒன்றுபோல் தான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர்; மற்றொருவர் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். வாஜ்பாயும் மோடியும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துகிறது. இவ்வாறு இந்தரேஷ்குமார் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiXDH7H

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தி எதிரொலி இடஒதுக்கீடு அமலாகும் பாண்டியன் கிராம வங்கி உறுதி



விருதுநகர், மே 3-அதி காரிகள் பணியிட நிரப்ப லில் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்துவதற் கான அனைத்து நடவடிக் கைகளையும் எடுப்போம் என்று பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பாண்டியன் கிராம வங்கியில் அதிகாரிகள் பணி யிடங்களை நிரப்புவதற் கான நேர்காணலுக்கு நிர் ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் இட ஒதுக் கீட்டு உரிமையை மறுக் கும் வகையில் உள்ளது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன், பாண் டியன் கிராம வங்கி ஊழி யர்கள் சங்கம் ஆகியவை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

மேலும், இந்த அமைப் புகளின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வர வில்லையென்றால் மே 2 ஆம் தேதி மாலையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத் துவதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு திட்ட மிடப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு நிர் வாகம் அழைப்பு விடுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார் பாக மாநிலச் செயலாளர் கே.கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலை வர் பி.எஸ்.போஸ் பாண்டி யன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஜா.மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத் தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர் ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் தவறா னவை என்பதை ஏற்றுக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், அதிகாரிகள் நேர்காண லுக்கு விண்ணப்பித்திருக் கும் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்தது.

நேர்காணல் நிறைவு பெற்று வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் அரசி யல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உரிமைக்கு உத்தரவாதம் தரப்பட வேண் டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.

அதையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் மோசடி செய் யும் வேலைகள் பல அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் நடக்கின்றன. இந்நிலையில், பாண்டியன் கிராம வங்கி வேலை வாய்ப்பில் அத்தகைய முயற்சிகள் நடக்காமல் தடுத்திருப்பது குறிப்பிடத் தக்க வெற்றியாகும்

Read more: http://viduthalai.in/e-paper/79647.html#ixzz30hiimLce

தமிழ் ஓவியா said...


கல்கியின் நளினம்!


நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்று சொல்லுவார்கள்; அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கல்கி போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு அப்படியே பொருந்தும்.

எடுத்துக்காட்டுக்கு வெகு தூரம் செல்ல வேண்டாம். இந்த வார கல்கி (4.5.2014)யின் தலையங்கம் ஒன்றே ஒன்று போதுமானது.

நரேந்திரமோடி 2014 மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுக்கச் செய்துள்ள பிரச்சாரப் பயண தூரம் சுமார் 5,40,381 கிலோ மீட்டர்! இங்கிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவே 3,84,400 கிலோ மீட்டர்தான்! சுமார் 450 அரசியல் கூட்டங்களில் இந்தியாவெங்கும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரும் இந்தளவுக்கு உழைப்பையும், அர்ப்பணிப் பையும் செய்திருப்பாரா என்பது சந்தேகமே

பல தலைவர்கள் மாநில அளவில் மட்டுமே புகழ் உடையவர்கள். மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாகப் பரிணமித்திருப்பவர் மோடி. இந்த நம்பிக்கையும், உத்வேகமும், அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற உதவ வேண்டும்! என்று உண்மைகளைக் களப்பலியாக்கி, ஆசை என்ற வெட்க மறியாத குதிரையில் ஏறி சவாரி செய்கிறது கல்கி.

கலைஞர் போன்றவர்கள் 90 வயதைக் கடந்து தேர்தல் பிரச்சாரம் செய்தது எல்லாம் அவாளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

பண முதலைகளின் தனி விமானத்தில் பயணித்து சொகுசுப் பிரச்சாரம் செய்வது பெரிய சாதனையாம்!

மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறதாம்!

இதைப் படிப்பவர்கள் யாரும் வாயால் சிரிக்கவே மாட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்டவர் என்பதை கல்கிகள் மறைக்கப் பார்க்கலாம் - அதற்குக் காரணம் உண்டு. இந்து வெறிப் பார்ப்பனிய ஆதி பத்தியத்தை இந்தப் பிற்படுத்தப்பட்ட வாடகைக் குதிரை நிறுவிக் காட்டும் என்ற ஆசையின் உந்துதல் தான் கல்கியை இபபடி எழுதத் தூண்டுகிறது.
இரண்டாயிரம் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு நர வேட்டை மனிதன் மத எல்லைகளைத் தாண்டி பரிண மித்து நிற்கிறாராம்! எங்கே போய் முட்டிக் கொள்வது!

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், இன்னொருவரும் சீக்கியர்!

பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதியிலிருந்தே பொடா வின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில்!

தம் குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு ஆளாகி சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு, வாழவே வழியில்லை என்று முகாம்களில் முடங்கிக் கிடக்கும் முஸ்லீம்களைப் பார்த்து இனப் பெருக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட மனிதநேயமின்றி ஆபாச வக்கிரக் கீழ்ப் புத்தியோடு பேசிய ஒருவர்தான் மத எல்லை களைக் கடந்த மாமனிதராம்! அதுவும் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாம் மோடி!

மத மூடநம்பிக்கைகளை எல்லாம் கடந்து துணைக் கண்டத்து மக்களையெல்லாம் சகோதரத்துவ வாஞ்சை யுடன் பார்த்த பகுத்தறிவாளர் நேரு எங்கே? இந்துத் துவா வெறி பிடித்து அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் மரண வியாபாரியாம் மோடி எங்கே? ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கின்றன என்கிற மமதையில் சாக்கடையை ஜவ்வாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்று மனப்பால் குடிப்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லிமோ, கிறித்தவரோ பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப் படாதது ஏன்? மத எல்லைகளைத் தாண்டிய மாமனிதர் என்பதற்கு இதுதான் அளவுகோலா?

நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்களும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுகளும், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆனந்தமூர்த்திகளும் கட்சிகளைக் கடந்த அறிஞர்கள் மோடியைப் எப்படி விமர்சித்துள்ளார்கள் என்பதைக் கல்கிகள் பூணூல் பார்வையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நிதானமாகச் சிந்தித்துப் பார்க் கட்டும் உண்மை மிக வெளிச்சமாகவே தெரியும்.

மோடியளவுக்கு மோசமாக விமர்சிக்கப்பட்டது வேறு யாருமில்லை - அதில் கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Read more: http://viduthalai.in/page-2/79632.html#ixzz30hj0vLlr

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன. - (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/79630.html#ixzz30hj9MQZi

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களால், தாழ்த்தப்பட்டவர் களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக ஆக் கப்பட்ட நமது நாட்டு உழைக்கும் மக்கள், கிராமம் கிராமமாக சிதறுண்டு, பிரிந்து கிடக்கின்றார்கள். படித்த பார்ப்பன வர்க்கம், கணினியை ஏற்கனவே கற்று வைத்துக் கொண்டுள்ளது. குளிரூட்டப் பட்ட அறைகளிலே உட்கார்ந்து கொண்டு, ஊடகங்களில், பத்திரிகை களில் , இணைய் தளங்களில் , வலைத் தளங்களில் கூசாமல் கற்பனை பெயர் களைச்சூட்டிக் கொண்டு பொய்யை திரும்ப திரும்ப எழுதிக்கொண்டு இருக் கின்றார்கள். திராவிட இயக்க உணர்வு உள்ள மூத்த தோழர்கள் பெரும்பாலும் கணினி கல்வி இல்லாமல் இருக்கின் றார்கள். மின்னஞ்சல், முகநூல் பதி விடுதல், பத்திரிகைகளுக்கு பின்னோட் டம் இடுதல் போன்றவை எப்படி என்பதனை அறியாமல் இருக்கின்றார்கள். இளைய தலைமுறையில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் கூட எதையும் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு பார்ப்பனர்கள் சொல்லும் செய்திகளை, பொய்களை நம்பக்கூடிய வர்களாக இருக்கின்றார்கள்.

தமிழ் ஓவியா said...

இதனை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கணினி கல்வியின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார். ஈரோட்டுப் பாதைக்கு நமது ஒடுக்கப் பட்டவர்களைத் திருப்ப, தமிழர் தலைவர் அவர்கள் பல ஊர்களில் இணையம், கணினி குறித்து வகுப்புகள் எடுக்கச் சொன்னார். எடுத்தோம். இப்பொழுது, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் கணினி வாகனம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு , ஊர் ஊராக் வருகின்றது. ஆப்பிரிக்காவில் நடமாடும் கணினி வகுப்பறைகள் பற்றி படித்தபொழுது எனக்கு நமது இயக்கத் தின் நடமாடும் கணினி வகுப்பறைகள் தான் நினைவிற்கு வந்தது. நமது தோழர்களும், மாணவ, மாணவிகளும் கணினியை , இணையத்தை கற்றுக் கொள்ள உதவும் ஏற்பாடாக ,மிகச் சிறப்பான ஏற்பாடாக அது உள்ளது. அதனை பெருமளவில் பயன்படுத்தி, நமது மூத்த தோழர்களுக்கு, தோழியர் களுக்கு, இளைஞர்களுக்கு கணினி பயிற்சி கொடுக்க வேண்டும். பயன்படுத் தும் முறையை கற்றுத்தரவேண்டும். நமது பரம்பரை எதிரிகள் , திராவிட இயக்கத்தை அழித்து விட துடியாகத் துடிக்கின்றார்கள். இட்டுக் கட்டுகின் றார்கள், இல்லாததை இருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆப்பிரிக்க கல்விக்கு விளக்கேற்றும் சூரிய ஒளி வகுப்பறைகள் போல , பகுத்தறிவு விளக்கேற்றும் கணினி ஒளி வகுப்பறைகளாய் வலம் வரும் இந்த நடமாடும் கணினி வாகனம் ந்ல்ல முறையில் பயன்படுத்தப் படவேண்டும். 'கற்பி', 'ஒன்று சேர்', 'புரட்சி செய்' என்றார் அண்ணல் அம்பேதகர். தனது வாழ் நாள் முழுவதும் ஊர் ஊராக பயணம் செய்து, ஜாதி என்னும் நாகத்தை , தனது கொள்கைத்தடியால் தாக்கி, தாக்கி மூர்ச்சையுறச்செய்தார் தந்தை பெரியார். தந்தை பெரியார், அன்னை மணியம் மையாருக்குப் பின்னால் கழகத் தலைமை ஏற்ற ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியாரைப் போல ஊர் ஊராகப் பயணம் செய்து ஜாதி ஒழிப்பு பிரச்சாரம் செய்வதோடு, இன்றைய அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி, இணையத் தின் மூலமும், வலைத்தளங்கள் மூலமும் பகுத்தறிவுப் பிரச்சாரங்களைச் செய்கின் றார். மற்றவர்களையும் செய்ய தூண் டுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மரியாதைக்குரிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பல இடங்களில் கணினியையும், திராவிட இயக்கத்தை யும் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் நடத்த செய்கின்றார்கள். நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்ற சட்ட சபைத் தேர்தல் போல் இல்லாமல் இணையதளங்களில்,தமிழ் மணம் போன்ற தமிழ் திரட்டிகளில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் புகுந்து விளை யாடுகின்றார்கள். உடனுக்குடன், சுடச்சுட, எதிராளி எந்த மொழியில் பேசுகின் றானோ, அதே மொழியில், அதே பாணியில் ஆதாரத்தோடு விளக்கம், பதிலடி கொடுக்கின்றார்கள். நமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த பாணி பல்கிப் பெருகவேண்டும். "எதிரிதான், நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கின்றான்" என் பார்கள். இன்றைய காலகட்டத்தில் நமது எதிரிகள், இணையதளம், கணினி என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தி நிற்கின்றார்கள்.

திராவிட இயக்க வரலாற்றை கற்பிக்க, நிறைய கணினி வகுப்பறைகள் வேண் டும். பழைய வரலாறுகள் காணொலி காட்சிகளாக, இளைஞர்களே உங்களுக் குத் தெரியுமா என்னும் கேள்விகளோடு கற்பிக்கப்பட வேண்டும். இந்தத் தேர் தலில் அமைந்த கூட்டணியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செல்லும் இடமெல்லாம், கொள்கைக் கூட்டணி எனக் குறிப்பிட்டார். அந்தக் கொள்கை கூட்டணியில் உள்ள ஒவ் வொரு இயக்கமும், தனது உறுப்பினர் களுக்கு, ஆதரவாளர்களுக்கு கணினி பயிற்சி தர வேண்டும். எப்படி ஆப்பிரிக்க குழந்தைகள் ககணினி கற்றுக் கொள்ள நடமாடும் கணினி வகுப்பறைகள் போகின்றனவோ, அப்படி நம்மை எதிர் நோக்கியுளள் சமூக நீதிக்கு எதிரான போக்கு, ஜாதிச்சண்டைகள், மதச்சண் டைகள் ஒழிய இணைப்புப் பாலமாய் இருக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடமாடும் கணினி வகுப் பறைகளில் கணினி கற்றுக் கொள்ள நம்மை அழைக்கின்றார். கற்றுக் கொள் வோம், கற்பிப்போம். கணினி போர்க் களத்திலும் நமது பரம்பரை எதிரிகளை வெற்றி கொள்வோம்.

Read more: http://viduthalai.in/page-2/79636.html#ixzz30hjJ0Qxb

தமிழ் ஓவியா said...


விரைவில் பெரிய கிராம மாநாடு, பெரியார் மன்றம் திறப்பு விழா


விரைவில் பெரிய கிராம மாநாடு, பெரியார் மன்றம் திறப்பு விழா
அன்பழகன்-கீதா மணவிழாவில் தமிழர் தலைவர் அறிவிப்பு

திருச்சி, மே 3- திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞீலியில் 27.4.2014 அன்று காலை 9 மணிக்கு கே.பி. திருமண மகாலில் அன்பழகன் - கீதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ஆசைத்தம்பி வரவேற்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் மா.முருகேசன், க.சிவசங்கரன், பெரியார் பெருந்தொண்டர் நீ.வனத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை வழக்குரைஞர் பூவை.புலிகேசி தொகுத்து வழங்கினார். பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர் ப.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ப.ஆல்பர்ட், உடுக்கடி அட்டலிங்கம், மாவட்ட மகளிரணி தலைவர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜா, மாணவரணி தலைவர் சு.முரளி தரன், இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடி வள்ளல், மாவட்ட ப.க. தலைவர் ச.மணிவண்ணன், ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பி.பாவேந்தர், மணச்சநல்லூர் நகர தலைவர் சா.ஜெயபால் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

மலர்ச்செல்வி வீரமணி ஆகியோரின் மகன் வீ.அன்பழ கனுக்கும், கோவிந்தராஜ் - இந்திராணி ஆகியோரது மகள் கோ.கீதாவிற்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மணமக்களுக்கு உறுதி மொழி கூறி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார். நிறைவாக வீ.இளவரசன் நன்றி கூறினார்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு

மணவிழாவிற்கு வருகை தந்த கி.வீரமணி அவர்கள் கழகத்தின் நீண்ட நாள்களாக கொள்கையோடு வாழக் கூடிய கொள்கைச் செம்மல்கள் பெரியார் பெருந்தொண்டர் கள் நீ.வனத்தான், திருப்பதி, வெங்கடாசலம், வேலு, பிச்சைய்யா, து.பொ.பெரியசாமி, தர்மலிங்கம் ஆகியோ ருக்கு கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து அவர் களது தொண்டு மேலும் தொடர பாராட்டுகளைத் தெரி வித்தார்.

வரவேற்பு

மணவிழாவை நடத்தி வைக்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு திருப்பைஞ்ஞீலி ஊர் எல்லையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஏராளமான தோழர்கள் தாரைத் தப்பட்டை முழங்க தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து கொள்கை முழக்க மிட்டு வரவேற்றனர். இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்ல தமிழர் தலைவர் வாகனம் பின் தொடர ஊரே திரும்பி பார்க்கும் வண்ணம் எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

27.4.2014 அன்று திருச்சி - திருப்பைஞ்ஞீலியில் நடைபெற்ற அன்பழகன் - கீதா ஆகியோரின் திருமண நிகழ்வில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

இந்த மணவிழா நம் கொள்கைக் குடும்பத்து மண விழாவாகும். இங்கே நண்பர்கள் குறிப்பாக அருமை நண்பர் பூவை.புலிகேசி அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இன்றைய நாள் நான் ஏற்கெனவே சென்னையில் புத்தகச் சங்கமத்தில் நிறைவுரை நடத்துவதற்கு, ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு நிறைவு நாள். அதுமட்டுமல்ல, உங் களுக்கே தெரியும் தேர்தலில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக அலைந்து திரிந்து, பிறகு சென்னைக்குத் திரும்பி, ஓரிரு நாள்கள்கூட ஓய்வெடுக்க முடியாத சூழ்நிலையில், நேற்றும் புத்தகச் சந்தையில் நடைபெற்ற புத்தகர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுவிட்டு, திருச்சி ரயிலை பிடித்து திருச்சிக்கு இன்று காலையில் வந்து சேர்ந்தேன். இத்திருமண விழாவிவை முடித்துவிட்டு, மாலையில் நடைபெறும் புத்தகச் சங்கம நிறைவு விழாவில் பங்கேற்க செல்லவேண்டும்.


தமிழ் ஓவியா said...

உறவோடும், உரிமையோடும் இங்கே வந்திருக்கிறேன்

இரண்டு நாள் நிகழ்வுகளும் சென்னையில் இருந் தாலும், நம்முடைய தோழர் சிவசங்கரன் திருமண நிகழ் வுக்கு தேதி கேட்ட நேரத்தில், தலைமைக் கழகத்தில் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், எனக்கு உடல்நிலையாகட்டும், மற்றவையாகட்டும் தொந்தரவு இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், வீரமணி, அய்யா வனத்தான் போன்றவர்களுடைய குடும்பத்து நிகழ்ச்சி என்று சொன்னால், கட்டாயம் அது நம்முடைய குடும்பத்து நிகழ்ச்சி என்ற உறவோடும், உரிமையோடும் அதில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

நண்பர் வீரமணி அவர்கள் எத்தகைய செயல்வீரர் என்பதையெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். இந்தக் குடும்பம் இருக்கிறதே, அதுவும் இந்தப் பகுதி திருப்பைஞ்ஞீலியாக இருந்தாலும், வாழ்மானபாளையமாக இருந்தாலும், மண்ணச்சநல்லூர் தொடங்கி இந்தப் பகுதிக்கு வரும்பொழுதெல்லாம் கழகத்திற்கு இது ஒரு பாசறை போன்ற பகுதி என்பதை பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்றைய இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு வயதானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் மகிழ்ச்சியடைக்கூடிய செய்தி என்னவென்றால், வீரமணி அவர்கள் அன்று மணவிழாவின்போது, எப்படி கருப்புச் சட்டையை போட்டு, எவ்வளவு தீவிரமான உணர்வாளராக இருந்தாரோ, அதேபோல, அவருடைய அன்புச்செல்வன் அன்பழகன் அவர்கள், அதில் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறார் என்று சொல்லும்பொழுதுதான், இந்த இயக்கம் மாற்றுக் குறையாத ஒரு சிறப்பான அமைப்பு என்பது தலைமுறை தலைமுறையாக இங்கே இருக்கிறது.

ஒவ்வொருவரும் அப்படித்தான். அய்யா செம்பறை நடராசன் அவர்கள் மாவட்டத் தலைவராக இருந்தார்கள். இன்றைக்கு அவருடைய மகன். அதுபோல, ஒவ்வொரு வரையும் எடுத்துக்கொண்டால், நம்முடைய இயக்கம் என்று சொன்னால், அது வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டம் என்ற கொள்கைக் கூட்டமாக, கொள்கைக் குடும்பமாக என்றைக்கும் திகழ்வது. இன்றைய அளவிற்கு வளர்ச்சி, மருத்துவத் துறையில் அன்றைக்கு இல்லை

வீரமணி அவர்கள் உடல்நிலை குறைந்திருந்த நேரத்தில் எல்லாம், அவரை எப்படியாவது காப்பாற்றிடவேண்டும் என்று நாங்கள் எல்லோரும் அரும்பாடு பட்டோம். அவருடைய வாழ்விணையரும், அவருடைய குடும்பத் தினரும் எல்லையில்லா அளவிற்கு போராடினார்கள். என்றாலும், இன்றைய அளவிற்கு வளர்ச்சி, மருத்துவத் துறையில் அன்றைக்கு இல்லை. இன்றைய அளவிற்கு வளர்ச்சி இருந்திருந்தால், ஓரளவுக்கு நாம் அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடும். என்றாலும், பரவாயில்லை, இன் றைக்கு அதே கொள்கையில் இவர்கள் வந்திருக்கிறார்கள்.

அய்யா வனத்தான் அவர்கள், எப்படி நீங்கள் இந்த இயக்கத்திற்கு, எவ்வளவு காலத்திற்கு முன்னால் வந்தீர்கள் என்று கேட்ட நேரத்தில்,
அவர் சொன்னார்,

1948 ஆம் ஆண்டிற்கு முன்பு, மிகப்பெரிய பக்தி மானாக இருந்த நான், அய்யா வழியில் 1948 ஆம் ஆண்டுதான் இந்த இயக்கத்திற்கு வந்தேன் என்று சொன்னார்.

அதுபோல, நம் இயக்கப் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், வாழ்மானபாளையம், திருப்பைஞ்ஞீலியும் உள்ள நம்முடைய தோழர்கள் பங்கேற்காத போராட்டமே கிடையாது. பெரியார் அய்யா அவர்கள் சொன்னால், அதைவிட பெரிய ஆணை நமக்குக் கிடையாது என்று கருதிக்கொண்டு, அன்றைக்கு சிறைக்குச் சென்றவர்கள் இன்றைக்கு வயதானவர்களாக காட்சியளிக்கிறார்கள். ஆனால், அன்பழகனைப் போல, அன்புராஜாவைப்போல மற்ற மற்ற இங்கே வந்த இளைஞர்கள், மாணவரணியைப் போல, பூவை புலிகேசியைப் போல, அடுத்த தலைமுறை இளைஞர்கள் இப்பொழுது பொறுப்பேற்க வந்துவிட்டார் கள். இதுதான் மிகவும் சிறப்பானது.

இந்தப் பகுதியில் இளைஞரணி தலைவராக இருக்கக் கூடியவர் நம்முடைய அன்புராஜா, முரளிதரன், வான்முடி வள்ளல், மணிவண்ணன் இவர்களையெல்லாம் பார்த்தீர் களேயானால், நம்முடைய இளைஞர்களைத் தயாரிக்கக் கூடியவர்கள்,

தமிழ் ஓவியா said...

இளைஞர்களாக இருக்கக் கூடியவர்கள். ஆகவேதான், இது நம்முடைய குடும்பத்து மணவிழா வாகும். ஆயிரம் இடைஞ்சல்கள் இருந்தாலும், அவை களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த மணவிழா வினை நடத்தி வைத்துவிட்டு செல்லவேண்டும் என்பதில் நான் குறியாக இருந்தேன்.

அதுமட்டுமல்ல, உங்களில் சில பேருக்குத் தெரியாது; புதிதாக வந்திருக்கின்ற இளைஞர்களுக்கு, தாய்மார்கள், மற்றவர்களுக்கெல்லாம் சொல்லவேண்டும். மணமகன் அன்பழகனுடைய தந்தையார் வீரமணி; அதேபோல, மணமகனுடைய தாயார் மலர்ச்செல்வி ஆகியோருடைய மணவிழாவிவை 19.4.1982 ஆம் ஆண்டு இன்றைக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவர்களின் மணவிழாவினை நடத்தி வைத்துவிட்டு, இன்றைக்கு அவர்களுடைய பிள்ளையினுடைய மணவிழாவினை நான் நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இது எனக்கு மட்டும் வாய்ப்பல்ல, அது இரண்டாம்பட்சம். ஆனால், அதைவிட மகிழ்ச்சியடைக் கூடிய ஒரு செய்தி இருக்கிறது.

ஒரு மயிரிழைகூட எள் மூக்கு முனையளவு கூட அவர்கள் வழுவவில்லை

அவர்கள் சொன்ன மாதிரி, வசதி, வாய்ப்பு, அது மட்டுமல்ல, இப்பொழுது எத்தனையோ திசை திருப்பல் கள், இவைகளெல்லாம் வளர்ந்திருக்கின்ற நேரத்தில், இந்தக் குடும்பம் அந்தக் கொள்கையிலிருந்து ஒரு மயிரி ழைகூட எள் மூக்கு முனையளவு கூட அவர்கள் வழுவ வில்லை என்றால், இதைவிட சிறந்த குடும்பத்திற்கு, லட்சியக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. ஆகவேதான், இங்கே வரவேண்டும் என்ற அந்த உணர்வோடு நான் வந்தேன்.

தமிழ் ஓவியா said...

அதுபோலவே, நம்முடைய வீரமணி அவர்கள், அன்பு காம்ப்ளக்ஸ் யும், பெரியார் இல்லம் -வீடு திறப்பு - இந்த இரண்டையும் எப்பொழுது திறந்து வைத்தார்கள் என்றால், 20.2.1992 அது 22 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகவே 32 ஆண்டுகளுக்கு முன்னாலே, அவர்களுடைய மணவிழா; இந்த முறையில் செய்தால், வாழ்வார்களா, வளருவார் களா, உருப்படுவார்களா என்றெல்லாம் மூட நம்பிக்கை யாளர்கள் நினைப்பார்கள். நாங்கள் வளர்ந்து வந்திருக்கி றோம் என்று காட்டக்கூடிய அளவில், அவர்கள் சிறந்த முறையில் அதனை எடுத்துக்காட்டினார்கள்.

22 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாய்ப்பினை பெற்றார் கள். இன்னமும் அய்யா அவர்கள் கொள்கையில் உறுதி யாக இருக்கிறார்கள்.

ஒரு பெரிய கிராம மாநாடாகவும், திறப்பு விழாவாகவும் விரைவில் நடைபெறும்
வாழ்மானபாளையம் தோழர்கள் ஒரு மணக்கூடத்தை அமைத்திருக்கிறார்கள்; அங்கு விரைவில் ஒரு பெரிய கிராம மாநாடாகவும், அதேநேரத்தில் திறப்பு விழாவாகவும் அது நடைபெறும். அப்பொழுதும் நாங்கள் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்று, இந்த வட்டாரத்திலேயே ஒரு சிறந்த நிகழ்வாக அது இருக்கும் என்பதை எடுத்துச் சொல்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆகவே, இந்தக் குடும்பம் பெரியாரின் பெருங்குடும்ப மாகத் திகழ்கிறது. எங்களுக்கு ஜாதியில்லை; இன்னமும் எனக்கு இவர்கள் என்ன ஜாதி என்று தெரியாது; நான் என்ன ஜாதி என்று இவர்களுக்குத் தெரியாது. எங்கள் தோழர் களுக்கு ஜாதி என்றால் என்னவென்று தெரியாது. கருப்புச் சட்டை போட்டுவிட்டால், மனிதநேயம் மட்டும்தான் தெரியுமே தவிர, எங்களுக்கு கட்சி, ஜாதி, மதம் இந்தப் பிரிவினைகள் எல்லாம் கிடையாது.

அப்படிப்பட்ட நிலையில், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவில், மிக அற்புதமாக இந்த மணமக்கள் அன்பழகன் - கீதா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள். எந்தவித சடங்கு சம்பிரதாயங்களும் இங்கே கிடையாது. அதைவிட ஆண்களுக்கு நிகர் பெண்கள். ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கவேண்டும். ஆணுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு பெண்களுக்கும் இருக்கவேண்டும். ஆண்கள் என்னென்ன உத்தியோகத் திற்குச் செல்கிறார்களோ, அதேபோல் பெண்களும் அந்த உத்தியோகங்களுக்குச் செல்லவேண்டும்.

இங்கே பார்த்தீர்களேயானால், பெண்கள் அமர்ந்திருக் கிறார்கள், சில ஆண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இந்த நிலை உண்டா?
ஒரு திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்று தந்தை பெரியார் சொல்கிறார்:

ஒருத்தருடைய வருமானத்தில் கணக்கு போட்டு, ஒரு நாள் எவ்வளவு வருமானம் என்று கணக்கு போட்டு, 10 நாள் வருமானத்தை திருமணத்திற்காக செலவு செய்யலாம் என்று தந்தை பெரியார் சொன்னார்.

எனவேதான் அருமைப் பெரியோர்களே, நான் உங் களைக் கேட்டுகொள்வது, இந்த மணமக்கள், இவர்களு டைய தந்தையார், இந்தக் கொள்கையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்தக் கொள்கையில் அந்தக் குடும்பம் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள். பாரம் பரியமாக இது மூன்றாவது, நான்காவது தலைமுறையாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றால், நமக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும், வாழ்வில் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
என மேலும் பல கருத்துகளை எடுத்துச் சொல்லி மணவிழாவினை நடத்தி வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

Read more: http://viduthalai.in/page-4/79652.html#ixzz30hjrvPnk

தமிழ் ஓவியா said...

வட இந்தியாவிலும் நாஸ்திகம்

இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் போல்ஷ்விக்காரர் (எதிரிகள்) கடவுள், நம்பிக்கையை ஒழிப்பவர்கள்.

இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள் பௌத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்துமதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துவிட வேண்டும்.

இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரச்சாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்.....

இக்கொள்கைக்காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அனுசரித்து அதற்கேற்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும் லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர் என்று எடுத்துக் காட்டினார்.

அப்போது எதிரிகளின் வக்கீல் எதிரிகள் மீது தப்பெண்ணம் கற்பிப்பதற்காக இந்த விஷயங்களைப் புகுத்திப் பிரசாரம் செய்யப்படுகின்றது என்று கூறினார்.

வழக்கின் தத்துவம் எவ்விதமாயினும் உலகமெங்கும் கடவுள் மத சம்பந்தமான இத்தகைய உணர்ச்சி பரவியிருக்கிறதென்பதற்கும் அதிகமாகப் பேசப் படுகிறது என்பதற்குமே இதை எடுத்துக் காட்டினோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு- 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79650.html#ixzz30hlXGNeM

தமிழ் ஓவியா said...


பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு சுயமரியாதை ஆசிரமத் திறப்பு விழாச் சொற்பொழிவு


சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர்களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரவுற்புக் கமிட்டியார் தேர்ந்தெடுத்ததற்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.

ஏனெனில் நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர் களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர்களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக் கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சவுந்தர பாண்டியனார், சொ. முருகப்பா, ஆகிய முக்கியமானவர்களில் சி.குருசாமி ஒருவராவார்.

ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக் கொள்கையையே பின்பற்று கிறவருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய ரிவோல்ட்க்கு பெயரளவில் நான் பத்திராதி பனே ஒழிய, காரியத்தில் அவரே தான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர்.

அவரது எழுத்துக்களும் கருத்துக்களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளி மகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத்தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது.

இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா அய்ரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதைத் தவிர திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதால் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும் அதிலும் விதவை யாயிருத்தலே மேல் என்றும் தீர்மானித் துக் கொண்டிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லா வற்றிலும் ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.

(பட்டுக்கோட்டையில் 24.05.1929 வெள்ளி இரவு 11 மணியளவில் திரு.சி.குருசாமி தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlhSTqf

தமிழ் ஓவியா said...

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல் லாதார்களை விலக்கிவிட்டார்கள்.

இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாச மும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப்போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவ தாகத் தெரிகிறது.

குடிஅரசு - செய்தி விளக்ககுறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlorfcT

தமிழ் ஓவியா said...


ஒத்திப் போடுதல்

இந்திய சட்டசபை, மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்திப் போட்டு விட்டார்கள்.

அதுபோலவே, திரு. கல்யாண சுந்தரமுதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும் சைவப் பெரியார்கள் மகாநாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டு விடும். திரு. வரதராஜுலுவின் உத்தியோக மேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்திபோடப்பட்டாய் விட்டது.

இதுமாத்திரமல்லாமல் திரு. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்குப் பிரசாரமும் திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரச்சாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத்துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்படலாம்.

அன்றியும் தேசமே பிரதானமென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமான பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்பட்டுவிடும்.

இவற்றையெல்லாம் விட, 1929ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு 12 மணி 5-நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாய் ஒத்துழையாமை நடத்துவது என்கின்ற திரு.காந்தியின் வாய்தாவும் கண்டிப்பாய் யார் தடுத்தாலும் நிற்காமல் ஒத்திப் போட்டாய்விடும்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hlunH1I

தமிழ் ஓவியா said...

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசைப் பற்றி நாம், அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்லவென்றும் இவர்களுக்கு கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 வருடகாலமாக விடாமல் சொல்லி வருகின்றோம்.

இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரச்சாரமே செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில் காங்கிரசு பணக்காரர்கள் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது.

உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகி விட்டார்கள் காங்கிரசுக்கு எதிரிகளாய் விட்டார்கள் முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள் என்று எழுதி இருக்கின்றது.

இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm2Nac6

தமிழ் ஓவியா said...

நாஸ்திகத்தின் சக்தி

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரச்சாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டிவருகின்றனர்.

அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கிறது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரிய வில்லை.

அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும். நாதிகத்தின் சக்தியே சக்தி!

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 23-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm96jfZ

தமிழ் ஓவியா said...


மோடி ஒருமுறை மட்டுமே அதிகாரத்திற்கு வந்துவிட்டால் வெறுக்கத்தக்கதான கொள்கைகள் சட்டபூர்வமாகிவிடும் கலைஞர்கள் கருத்து


ஸ்டாக்ஹோம், மே 3- இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களான நடிகை நந்திதாதாஸ் மற்றும் சிற்பக் கலைஞர் அனீஷ்கபூர் ஆகி யோர் மோடித்துவ அர சியலை எதிர்த்து பொது மக்கள் குரல் எழுப்பவேண் டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர்.

மோடி வெல்வது என் பது அரசு எந்திரத்தின்மீது வெறுப்புணர்வை உண் டாக்கும். மேலும், அந்த வெறுப்புணர்வு நிறுவ னங்கள், அதன் கொள்கை களிலும் பரவிவிடும் என்று நந்திதாதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாக்ஹோமில் ஃபிராக் என்கிற படத்தை இந்தியப் பட விழாவில் திரையிட்டபோது நந்திதா தாஸ் மோடி குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறும்போது, மோடி பிரதமர் பதவிக்கு வருவது என்பது முஸ்லிம் போன்ற சிறுபான்மையர்களை, ஏற் கெனவே ஒடுக்கப்பட் டுள்ள அவர்களை முன் எப் போதும் இல்லாத வகை யில் காயப்படுத்துவதாக அமைந்து விடும் என்று கூறினார்.

மேலும், குறைந்த கால கட்டமே பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்த போதும், கல்வித்துறையில் பாடத் திட்டங்களை அவர் களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டனர். மோடி ஒரே ஒருமுறை மட்டுமே அதிகாரத்துக்கு வந்துவிட்டால், வெறுக்கத் தக்கதான கொள்கைகளை சட்டபூர்வமாக்கி விடுவார். அப்படி மாற்றியதைக்கூட நாம் அறிந்துகொள்ள முடி யாமல் போய்விடும் என்று குறிப்பிட்டார்.

பல்வகைப்பட்ட கலாச் சாரம் குறித்த பிரச்சாரத்தை ஆதரிக்கும் நந்திதாதாஸ், மதச்சார்பின்மைக்கு ஆத ரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட் டுக்கொண்டுள்ளார். மோடியை எதிர்ப்பதன் மூலம் குரூரமான தாக்கு தலை எதிர்கொள்கிறார்.

மேலும் அவர் கூறும் போது, நான் மோடியை எதிர்ப் பதால் இதுவரை நான் சந்தித்திராத வகையில், என்னையும், என் மகனை யும் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவும், பாகிஸ் தானுக்கு செல்லுமாறும் வெறுப்பான மின்னஞ் சல்கள் எனக்கு வருகின்றன.

இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிரட்டலாக உள் ளது. முதன்முறையாக உண்மையிலேயே நான் அஞ்சும் நிலை ஏற்பட்டுள் ளது என்று கூறினார்.

வளர்ச்சி குறித்த போலி வாக்குறுதிகளை நம்பி மனித உரிமைகளை விற்றுவிட இந்தியர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும் வருத்தப்படுகிறார். இது முடிவான ஒன்றா கவே உள்ளது. மோடி ராஜ் ஜியத்தின்மூலம், மாறுபா டான கருத்துகளுக்கு இட மில்லை.

மோடியை எதிர்ப் பவர் யாராக இருந்தாலும் சகிப்புத்தன்மை கிடை யாது என்பதைக் காணலாம். மோடியை எதிர்ப்பதோ, எதிர்க்கும் எண்ணத்து டனோ இருந்தால் அவர் களின் நம்பிக்கைகள் சீர் குலைக்கப்படும். சமூக விரோதிகள், அரசியல் குண் டர்களை பாதுகாப்பவர்கள் யாரென்று அவர்களுக்குத் தெளிவாகவேத் தெரியும்.

இதேபோன்றே சிற்பக் கலைஞர் அனீஷ்கபூரிடமி ருந்தும் மோடி எதிர்ப்புள் ளது. அண்மையில் அவரு டைய கடிதம்மூலம் எதிர்ப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக்கடிதத்தை வெளியிட்டதிலிருந்து தொடர்ந்து, ஆபாசமாக வும், மிரட்டும் தொனி யிலும் (தொலைபேசி, டிவிட்டர், மின்னஞ்சல் வாயிலாக) மிரட்டல் இருந்துகொண்டே உள்ளது.

இதன்மூலம், மோடியின் கூடாரம் அச்சத்தில் ஏற்படும் விமர்ச னங்களாக உள்ளன என்பது தெளிவாகவே தெரிகிறது. மறைப்பதற்கு அவர்களி டம் ஏராளமாக உள்ளன. மோடிக்கு எதிரான கடி தத்தில் கையொப்பமிட்ட அனைத்துத் தனி நபருக்கும் மின்னஞ்சல், டிவிட்டரில் எழுதுவது உள்ளிட்டவற் றின்மூலம் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

2002 கலவரத்துக்கு பொறுப் பேற்கவோ, மன்னிப்பு கேட்கவோ மோடி முன்வர வில்லை. எந்த ஒரு கேள் விக்கும் உட்படுத்தாமல் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முடிவுக்கு வருகி றது. குஜராத்தில் மோடி அரசின் கொடுமைகளாக, குஜராத்தில் 2002 இல் நடை பெற்ற பயங்கரக் கலவர சம்பவங்களை மிக முக்கிய மாக நினைத்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் சிறு பான்மையர் தற்காத்துக் கொள்ள முடியாமல், சொத் துக்கள் சூறையாடப்பட்டு, கொலை, பயங்கரவாதத் தால் பாதிப்புக்குள்ளா னார்கள். அதன் விளைவாக ஆண்கள், பெண்கள், குழந் தைகள் என்று இரண்டாயி ரம் பேர் கொல்லப்பட் டனர்.

குறிப்பாக பெண் கள்மீதான காட்டுமிராண் டித்தனமானத் தாக்குதல் கள், வன்முறை வெறியாட் டங்கள் யாவும் காவல் துறையால் தடுக்க முடி யாமல் இருந்தன. அவர் களின் குரல்கள் கேட்கப் படவேண்டும்.

ஒவ்வொரு வரிடமும் இதுபற்றி உரக் கக் கூறவேண்டும் என்று சொல்லவேண்டும். வியா பாரம் எந்த ஒரு விலையை யும் கொண்டதாக இருப்ப தில்லை. அப்பாவி, வறிய வர்களின் உயிரும், அதிக செல்வத்துடன் உள்ளவரின் உயிரும் ஒரே மதிப்புள்ள வைதான். இந்திய, இங்கி லாந்து நண்பர்களிடம் நான் கூறுவதெல்லாம், சமுதாயத் தின், சமூக சூழலின் விலையை எண்ணிப்பாருங் கள். -இவ்வாறு சிற்பக் கலை ஞர் அனீஷ்கபூர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79634.html#ixzz30hmGFj3A

தமிழ் ஓவியா said...


மோடி சொல்வது முழுப் பொய்- ஆதாரமற்றதுமோடியின் முகமூடியைக் கிழிக்கும் அகமதுபட்டேல்

புதுடில்லி, மே 3- குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நான் எப்போதுமே சந்தித்தது கிடையாது. இது தொடர் பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியது சுத்தப் பொய் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல்.

இந்த சர்ச்சை எழ கார ணம் தொலைக்காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டி யில் வெளியான விவரங் கள்தான்.

அகமது பட்டேல் காங் கிரஸ் கட்சியில் எனக்கு உள்ள நெருக்கமான நண் பர்களில் ஒருவர். இப் போது அவர் மாறி இருக் கிறார். அதற்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம், தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் அளிப் பதில்லை.

அகமது பட்டேலின் வீட்டுக்கு சென்று அவரு டன் சேர்ந்து உணவு அருந் தியிருக்கிறேன். அது நல்ல சினேகிதம். அந்த தனிப் பட்ட தோழமை உறவு தொடரவேண்டும் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அகமதுபாய் என எப் போதும் அவரை அழைத் ததில்லை. மாறாக பல ஆண்டுகளாக பாபுபாய் என்றே அழைத்து வருகி றோம்.

பொது வாழ்வில் அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும். பாபுபாய் என்று அழைத்தால் அது நல்லதாக இருக்காது. மியான் சாஹிப் என்றால் இன்னும் மரியாதை. இந்த மரியாதைமிக்க வார்த் தையை நான் பயன்படுத்து கிறேன், என்று மியான்பாய் என பட்டேலை அழைப்ப தற்கான காரணம்பற்றி கேட் டதற்கு மோடி சொன்ன பதில்.

மோடியின் இந்த பேட்டி தொடர்பாக பட்டேல் கூறிய விளக்கம் வருமாறு:

காங்கிரஸில் மோடிக்கு நண்பர்களாக உள்ளவர்கள் யார், நண்பர்களாக இல் லாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. மோடி சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஆதாரமற்றது. நகைப்புக்குரியது. அவரது வீட்டுக்கோ, அலுவலகத் துக்கோ சென்று ஏதாவது சலுகை கேட்டு பெற்றதாக அவர் நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

என்னை தனது நண்பர் என மோடி கூறியதை கேட்டு சிரிப்புதான் வரு கிறது. எனது வீட்டுக்கு அவ ரும், அவரது வீட்டுக்கு நானும் சென்று உணவு சாப் பிட்டதாக மோடி கூறுவது உண்மைக்கு மாறானது.

1980-களில் அவர் பாஜக பொதுச்செயலாளராக இருந்தபோது, அவர் எனது வீட்டுக்கு வந்தது நினை விருக்கிறது. அப்போது அவரை நாங்கள் உபசரித் தோம்.

முதல்முறையாக முதல் வராக பொறுப்பேற்ற போது அவர் தொலைபேசி யில் அழைத்துப் பேசினார், அவர் போன் செய்தால் பதிலுக்கு மரியாதை கார ணமாக எடுத்துப் பேசிய துண்டு.

தேர்தல் சமயத்தில் மோடி இவ்வாறு பேசுவது மக்களை குழப்பவே. பெரிய பொறுப்பில் உள்ள வருக்கு ஏற்றதாக இது இல்லை. ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர். அவர் பேட்டியில் அரசியல் இருக்கிறது. தேர்தல் ஆதா யத்தைக் கருதியே அவர் இவ்வாறு பேசுகிறார் என் றார் அகமது பட்டேல். மோடி ஒரு பிரிவினைவாதி:

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmebCa1

தமிழ் ஓவியா said...


சாதிச் சண்டையும், ஆடை மாற்றமும்


அண்மையில், சமுதாய சிந்தனை என்ற சிற்றிதழில் (மார்ச் 2014) படித்த செய்தி இது:

மத்திய மேல் நிலைக் கல்வி வாரியம் (CBSE) 9ஆம் வகுப்பு வரலாறு பாட நூலில், சாதிச் சண்டையும் ஆடை மாற்றமும் என்ற தலைப்பில், குமரி மாவட்டத்தில் 1822 முதல் 1859 வரை நடந்த மேலாடைப் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு தந்திருந்தது. அதில் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவ மிஷனரி களின் பணி சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொறுக்க இயலாத இந்து நாடார் அமைப்புகள், அதை நீக்க, இழிவு... இழிவு... எனக் கூச்சல் போட்டன. இது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குள்ள நரி உலகம் அழியப் போகிறது என்று கூச்சல் போட்டதற்குச் சமமாக இருந்தது. உடனே நாடார்களை வளைத்தெடுக்கும் நோக்கில் எல்லா அரசியல் கட்சிகளும் போராட களம் இறங்கின. பிற மாநில மாவட்ட நாடார் களும் வழக்கம்போல போராட்டத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்றம் விளக்கம் கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட புரோட்டஸ் டண்டு கிறிஸ்தவர்களின் புனிதமான விடுதலை வரலாற்றை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று சி.பி.எஸ்.ஈ.யைக் கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்டது. இச்செயலுக்கு யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. காரணம், புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர் களுக்கு மானம், மரியாதை, உரிமை முதலியவைமீது அக்கறை இல்லை. பிழைப்பு, ஆசீர்வாதம் முதலியவை மீதுதான் கவலை.

பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சமுதாய சிந்தனை ஆசிரியரும் கன்னி யாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்ற நிறுவனரு மான டி. பீட்டர் அவர்களின் மேற்கண்ட கூற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடார்களைப்பற்றி சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் எழுதப்பட்டதை நீக்கக் கோரி களத்தில் இறங்கியவை இந்து நாடார் அமைப்புகள் அல்ல. நாடார் சங்கங்கள் தான் களத்தில் இறங்கின. அங்கே இந்து நாடார்களும் உண்டு; கிறித்தவ நாடார் களும் உண்டு.

சேர நாட்டு (திரு விதாங்கூர்) நாடார்கள் ஆதிகாலம் தொட்டே தீண்டத்தகாத - பார்க்கத் தகாத குலத்தவர்கள் அல்ல; அதுபோல மேலாடை அணியாதவர்களும் அல்ல. பாண்டிய நாட்டில் நாடாண்டவர்கள் நாடார் குலம் ஆனது போல, சேர நாட்டில், மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்தவர்கள் சான்றோர் குலத்தவர்கள் ஆனார்கள். இவர்களையே தென் திருவிதாங்கூரில் நாடார்கள் என்றனர்.

மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்த வர்கள் மக்கள் (மகன்கள்) வழி வாரிசு கொள்கையைக் கொண்டவர்கள். பிற் காலத்தில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா மருமக்கள்(மருமகன்கள்) வழி யைக் கடைபிடித்தவர். இதை சேரமான் பெருமாள் மரபினர் எதிர்தததால்தான் அவர்கள் மார்த்தாண்ட வர்மாவால் அடக்கி ஒடுக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை புராட் டஸ்டண்டு கிறித்தவர்கள் ஆதரித்தார்கள். காரணம், அப்பொழுதுதான் அவர்கள் பிழைப்பை இங்கே நடத்த முடியும்.

மீட் பாதிரியாரால் கிறித்தவ மதத்தில் சேர்ந்த பெண்களுக்கு குப்பாயம் அணியும் உரிமைதான் கிடைத்தது. இதை அணிந்துகொண்டு பொது இடங்களில், தைரியமாக நடந்து செல்ல கிறித்தவ நாடார் பெண்களால் முடியவில்லை என்பதே உண்மை. நாடார் பெண்கள் பாண்டிய நாட்டுப் பெண்களைப் போல மேலாடை அணியவே விரும்பினார்கள். அதற்காக இந்து நாடார்கள் நடத்திய போராட்டங்கள் - கொடுத்த விலை சாமானியமானதல்ல; அதைக் குறைவாக மதிப்பிட முடியாது. வைகுண்ட சுவாமி கள் என்று மக்களால் அன்புடன் அழைக் கப்படுகின்ற முத்துக்குட்டி தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களே திருவிதாங்கூரில் நாடார் பெண்கள் மார்பை மறைத்து சேலை அணியக்கூடிய உரிமையைப் பெற்றுக் கொடுத்தன. நாத்திகரான முத்துக்குட்டியை இன்று கடவுளாக்கியதால் அவர் வரலாற்றின் பக்கங்களிலிருந்தே மறைந்து விட்டார்.

திருவிதாங்கூர் நாடார் பெண்கள் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதும் மீண்டு வந்ததுமான வரலாறு இதுதான். நாடார் கள் இழி நிலையிலிருந்து மீள முத்துக் குட்டி முதற்காரணம்; பிற்காலத்தில் நாடார்களை முழுமையாக உயர்த்திய பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

திருவிதாங்கூர் நாடார்களின் உண் மையான நிலை இதுதான். மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் இதைக் கவனத்தில் கொண்டு பாடநூலில் திருத்தம் செய்ய வேண்டும்.

- த. அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page2/79605.html#ixzz30hnDORTB

தமிழ் ஓவியா said...



குடிஅரசுத் திரட்டு!

நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுப வத்தில், பிராமண தேசீயவாதிகளென் போரில் பெரும்பாலோர், தங்கள் சுய நலத்திற்கும், தங்கள் வகுப்பு முன்னேற் றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்துக்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் சிறீமான் நாயக்கர்போன்றாரை உபயோ கப்படுத்திக் கொண்டு வந்திருக் கின்றார்களென்றும், நினைக்கும் படி யாகவே ஏற்பட்டுப்போய் விட்டது.

பிராமணர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப் படுவதாய் காணப்படுகிறது.

####

குடிஅரசின் போக்கையும் அதன் தொண்டையும் விரும்புகிறவர்கள் இது சமயம் முன் வந்து உதவாவிடில் எதிர் பார்க்கும் பலனை அடைய முடியாது.

அதாவது ஒவ்வொரு பட்டணங் களிலும் குடிஅரசுக்கு கவுரவ ஏஜெண் டுகள் முன்வர வேண்டும்.

அவர்கள் பத்திரிகையை தெருத் தெருவாய் விற்க வேண்டும்.
சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச் செய்ய வேண்டும்.

####

அரசியல் தலைவர்கள், தேசாபி மானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும் என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்?

சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரி யத்தை ஏன் செய்யவேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப் படியோ போகட்டும்.
நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்?
நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ்,கீர்த்தி, சம்பாதனையா?
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா?
ஒரு தலைவராவது உதவியுண்டா?
ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?

####

குடிஅரசினால் தேசிய வாழ்வுக் காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டி ருப்பதும், புராண பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக் கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம்.

யார் பிராமணன்?

யார் பிராமணன்? என்று கேட்கும் போது மாத்திரம் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டும் யோக்கியனாக இருந்து கொண்டும் இருக்கிறவன் பிரா மணன் என்று சொல்லுவதும் மற்ற சமயங்களில் மான ஈனமின்றி உலகிலுள்ள சகல அயோக்கியத்தனங் களையும் அதாவது கொலை, களவு, திருட்டு, புரட்டுகள் செய்வதும் சாமி தரிச னைக்கும், தாசி தரிசனைக்கும் தரகு பெறு வதும், போலீசு வேலை செய்வதும், வக்கீல் வேலை செய்வதும், இஷ்ட மில்லாத பெண்களைக் கூட்டிக் கொடுத் தாவது உத்தியோகம் பெறுவதும்,

அவ்வுத்தியோகத்தில் லஞ்சம் வாங் குவதம், தங்கள் வகுப்பாரைத் தவிர மற்ற வகுப்பார் தலையெடுக்காமல் அழுத்து வதும் தங்கள் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல் தடுப் பதும்,

தேசத்தையும், ஏழை மக்களையும் காட்டிக் கொடுத்து உயிர் வாழ்வதுமான காரியங்களையெல்லாம் செய்துகொண்டு தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டும், இந்தப் பிராமணத் தன்மைக்காக கள்ளுக்கடை, வேசி வீடு முதல் கடவுள் சன்னிதானம் என்பது வரையில் தங் களுக்கு வேறு உரிமையும் மற்றவர் களுக்கு வேறு உரிமையும் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றது மான அக்கிரமங்களை இனியும் எத்தனை காலத்திற்கு மறைக்கலாம் என்று திரு. ஆச்சாரியார், கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.

- தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page3/79608.html#ixzz30hnNCntq

தமிழ் ஓவியா said...


அரசை ஆட்டுவிக்கும் சாமியார்கள்!


இந்தியாவின் இருபத்தொன்பதாவது மாநிலத்தை தோற்றுவிக்க சட்ட வடிவம் கொடுத்து விட்டு நாடாளுமன்றம் ஆயுளை முடித்துக் கொண்டது.

மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங் களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 பேர் இவர்களின் செயல்பாடுகளால்தான் இந்தியாவின் குடிநாயகமும், இறையாண்மையும் காப்பாற்றப்படுவதாக வெகுசன மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்அதுவல்ல உண்மை. கிராமத் திற்கு ஒரு சாமியாரும், தாலுக்காவிற்கு ஐந்துக்கு குறைவில்லாத கார்ப்பரேட் சாமியார்கள் தான் ஆளுகின்றனர். இந்த சாமியார்களின் காலில் விழுந்து ஆசிர் வாதமும் அரசின் பதவி உயர்வும் பெறாத அரசு அலுவலர்களோ காவல் துறையினரோ இல்லை என்றே கூறலாம். கெட்டுத் தப்பி குற்றப்பின்னணி வெளிப் பட்டு சிறைக்கோட்டத்திற்கு உள்ளே சென்றால், மிக உன்னதமான சொகுசு வாழ்வு, சிலகால நடைமுறைக்குப் பின் ஏகபோக உச்சகட்ட வரவேற்போடு வெளிவந்து விடுவது வாடிக்கையாகி உள்ளது. அண்மைக்கால சாமியார்களின் செயல்பாடு.

ஒரு மாநில அரசிடம் கூட இல்லாத இருப்புப்பணம் ஒரு சாமியாரிடம் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது. திட்டங்கள் தீட்டி, பட்ஜெட் போட்டு, வரி விதிப்பு செய்து ஆட்சியாளர்கள் கூட அரசு அலுவலர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஏற்றும்போது இழப்பு ஏற்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் அரசு இறுக்கமான முகத்தோடு அறிவிக்கிறது.

சாமியார்களின் வழிக்காட்டுதலின் பேரில்தான் ஆட்சியாளர்கள் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்கின்றனர். அண்மையில் வடஇந்தியாவில் உல்லால் கிராமத்தில் பாழடைந்த கோட்டைக்குள் 1000 கிலோ தங்கம் இருப்பதாக ஒரு சாமியார் மத்திய அமைச்சரை பார்த்து கூறி தேடி எடுக்கும்படி கட்டளையிட்டான். இது கனவு கண்ட புதையல். அதன்படி அமைச்சர் சகிதம் தேடுதல் வேட்டையை 12 நாள்கள்... முயன்ற சாமியாரின் கனவு வீணாகப் போய்விட்டது. சாமியாரின் கனவுக்கு மத்திய உள்துறைவரை கிடு கிடுத்து வேலை செய்தது என்றால் பாருங்களேன்.

ஒரு வேளை சேது சமுத்திரத் திட் டத்தை ஒரு சாமியார் கனவு கண்டதாக கூறினால் மாநில மய்ய அரசு வரிந்து கட்டிக்கொண்டு செய்யுமோ என்னவோ! தயவு செய்து ஏதாவது காவியின் கனவு காண வேண்டுவதாக...!

1992 ஆம் ஆண்டு பாபர்மசூதி இடிப்பு நிகழ்வதற்கும் இரு சாமியார்களின் நில அபகரிப்பு கோஷ்டி மோதலே காரணம் என்று ஓலன் என்ற ஆங்கில ஏடு சாதுக்களின் நில அபகரிப்புச் செய்திகளை வெளிக்கொண்டு வந்தது. இவர்களின் கைகள் கமண்டலமும், கையில் மூங்கில் குச்சியும், உத்திராட்ச மாலை பிடிக்கும் கைகளில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி களோடு தான் திரிவார்களாம்.

சினிமா பட வில்லன் நடவடிக்கைகள் தான். துப்பாக்கி முழக்கம் கேட்காத நாளே இல்லை என பைசாபாத் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான தர்மேந்திர சிங் கூறுகின்றார். ஏதாவது ஒரு சாமியாரின் மீது புகார் மனு வராத நாளே கிடையாது. சாது குருக்களுக்குள் சண்டை, சிறுமிகள் மற் றும் பெண்களை தீண்டியது, போதைப் பொருள் உட்கொண்டு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்வது. இது போன்ற காரியங்கள் செய்வதற்கு சாமியாராக ஏன் இருக்க வேண்டும். பேசாமல் ரவுடிகளாக மாறிவிடலாமே? என்று வேதனையோடு கூறுகின்றார்.

பக்தர்களின் உள்ளத்தில் சாமி (கடவுள்)யை விட சாமியார்கள்தான் உயர்ந்தவர்கள் சாமியார்களுக்குத் தலை வர் குரு அவரே என்று அதிகாரங்களையும் கையில் கொண்டவர். ஆகையால் குருவின் காலைப் பிடித்து சீடனாக வேண்டும் பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு அங்கு தான் குருவாகிவிட வேண்டும். இதுதான் தற்போதைய சாமியார்களின் நடவடிக்கை என்கிறார் சரயு நதிக்கரையிலுள்ள ராம்ஜானகி கோவில் மடத்தலைமை குருவான கிஷோர் சாஸ்திரி.

தமிழ் ஓவியா said...

குற்றப்பின்னணி சாதுக்கள் என்னும் சாமியார்களை ஆள் ஆளுக்கு ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துபோட்டு வம்பு தும்பு செயல்களை நிகழ்த்துவது வாடிக்கை.

சாதுக்களாம் இவர்களுக்கு அகில பாரதிய வினர்ய மற்றும் சாமியார்கள் சங்கம் என்ற பெரிய அமைப்பே உள்ளது.

உஜ்ஜையினி மடத்தை சேர்ந்த திரிபுவன்தாஸ் தான் அயோத்தியில் நடக்கும் அனைத்து குற்ற சம்பவங் களுக்கும் மூலகாரணமாய் இயங்குபவர். ராமஜென்மபூமி சமிதியின் தலைவர் இராமச்சந்திர பரமஹம்சர், நிருத்திய கோபால்தாஸ் சாமியார் பெயரில் பல கொலை வழக்குகள் உள்ளனவாம். அதேபோல, அனுமான் காடி மடமும் கொலை மடமாம். மடத்தலைவர் பிரஹ லதாஸ் என்பவனை அங்குள்ள மக்கள் ரவுடிபாபா (குண்டாபாபா) என்றே அழைக்கின்றனர். அயோத்தியில் பார்ப் பனர்கள், தாக்கூர் மற்றும் யாதவ் சாதியைச் சேர்ந்த பூசாரியினர் அதிகம் உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

நமது ஊரில் சாதி சங்கங்களைப்போல அங்கு சாதி மடங்களும் உண்டு. அதில் நாவூ கோவில், பதாயி கோவில், விஷ்வ கர்மா கோவில், சந்திரவிதாஸ்கோவில், ஹல்வாயி கோவில், தோபி கோவில், திரிகுப்தகோவில் என தங்களின் சாதிக்களுக்கு என கோயிலை உருவாக்கி அதற்கு பல நூறு ஏக்கர் நிலங்களுடன் மடங்களையும் உருவாக்கி விடுகின்றனர்.

இதே கதை காஞ்சிபுரம் சங்கர மடத்திலும் திருவாளர் செயேந்திரர் அன்கோ சங்கரராமனை கோவிலுக் குள்ளே வெட்டிக்கொன்று, படுஜோரான வழக்கில் விடுதலையாகி சுப்பிரமணிய சாமி தலைமையில் ஊர் அறிய மெச்ச ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் சாமி அசுதோஷ் மகராஜ் என்ற சாமியார் இறந்து போனார். இருந்தும் அவர் ஜீவமரணம் அடைய வில்லை என அவரது பக்தர் அரியானா, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டில்லியிலிருந்து வருபவர்கள் கூறு கின்றனர். இவரும் மிகப்பெரிய கார்ப் பரேட் சாமியார் தான். சுமார் ரூ. 7 கோடி செலவில் இமயமலையின் பனிச்சிகரத் திற்கு சமமான சூழ்நிலையில் அவரது சமாதி அறை அமைக்கப்பட்டுள் ளது.இறந்தவருக்கு அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சாமியாருக்கு உலகம் முழுவதும் 110 அமைப்புகளும் ஆயிரக்கணக்கான கிளைகளும் ரூபாய் 1,70,000 கோடி சொத் துக்கள் உள்ளனவாம்.

தனியாக ஒரு சக்தி தங்களுக்கு இருப்பதாக கூறிக்கொண்டு மக்களையும், ஆட்சியாளரையும் மிரட்டி பணிய வைக்கின்றனர். சாதுக்கள் என்னும் சாமியார்கள். பணம் வந்து கொட்டோ கொட்டுவென கொட்டுகிறது. தங்கம் வெள்ளி என குவிகிறது.

கடந்தாண்டு புட்டபர்த்தி சாயிபாபா இறக்கும்போது தனது அறையில் பல கோடி தங்கக்கட்டிகளும், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களாய் இருந்து எடுத்தது நாடே அறிந்த செய்தி. பல ஆயிரம் கோடிக்கு நிலம் வாங்கி, அரசு அனுமதி வாங்கி, ஒரு தொழிற்சாலை நிறுவினால் கூட இவ்வளவு சொத்தும், நகைகளும், ரொக்க பணமும் குவியாது. வரி, ஊதியம் தொழிலாளர் சிக்கல்கள் எல்லாம் வரும். ஆனால், சாமியார்கள் நடத்தும் ஆசிரமம், மடம், கோவில் பக்கம் யாரும் எட்டிக் கூடப் பார்க்க தைரியம் வரவே வராது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிர மம் நடத்திய சிரிப்பு நடிகரைப்போன்ற பிரேமானந்தா என்பவரின் காமக் களியாட்டம், கற்பழிப்பு கொள்ளை, கொலைகள் தோண்டத் தோண்ட மர்ம முடிச்சாக வெளிப்பட்டு மிகப்பெரிய சொகுசு பெருவாழ்வுக்கு (சிறை) தள்ளப் பட்டு, ஆடி, அடங்கி அங்கேயே மரண மடைந்தார். குட்டி சமஸ்தானத்தையே நிறுவி நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சமுதாய சீர்திருத்தம் போதிய அளவு செயல்பட்டிருந்தபோதும் இந்த சாமியார் களின் மோடி வேலைகள் குறைந்த பாடில்லை. மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு கடவுளும், அதன் மகிமையும் தான் என நம்புகின்றனரே தவிர, உழைப்பு உயர்த்தும். தன்னம் பிக்கையின்மையே சாமிகளின் பலமாக செயல்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

சாமியார்களின் பல்வேறு தொழில் நுட்பங்களையும், பெயர் முறைகளையும் வைத்து செயல்படுகின்றனர். பீடிசாமியார், சுருட்டு சாமியார், கஞ்சா, சாராய சாமியார், கெட்ட வார்த்தை சாமியார், கட்டிபிடி சாமியார், வெற்றிலையில் மைபோடும் சாமியார், எலுமிச்சை மாலை சாமியார் எனப் பல்வேறு ரகச்சாமியார்கள் மோசடி யிலும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சாமியார்களாகத் தான் உள்ளார்கள்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் செவ்வாடை குரு என மாவட்டம், வட்டம் என கிளை மன்றங்களை அமைத்து மக்களை அழைத்துவர ஏஜெண்டுகள் மூலம் செயல்பட்டு மருத்துவக்கல்லூரி, உட்பட எல்லா கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றார். ஏன் என்றால் இவர் துவக்க நிலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்.
மேடவாக்கம் பகுதியில் யாகவா முனிவர் என்பவர் செயல்பட்டு சிறிய அளவு வசூல் வேட்டைக்குப் பின் மரணமடைந்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் ஆதீனம் என்ற பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நில உரிமையாளராகவும், சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களின் நிர்வாகியாக ராஜவாழ்வு வாழ்கின்றனர். திருவாவடு துறை திருப்பனந்தாள் ஆதீனங்களின் புதிய ஆதீனங்கள் நியமிக்கும்போது வெட்டுகுத்து கலவரமே.

மதுரை ஆதீனம் சற்று தூக்கல்தான். திருவண்ணாமலையிலிருந்து கருநாடகம் பிடதியில் பல ஆயிரம் ஏக்கரில் ஆசிரமம் பெரிய கார்பரேட் நிர்வாக சினிமா நடிகைகள் முதல் சீமான்கள் வரை புகலிடம். போதாக்குறைக்கு மதுரை ஆதினம் தத்து பிள்ளையாய் போய் சேர்ந்து பல கோடி கருப்பு வெள்ளை களில் கைமாறி திரும்ப பிடதி மடத்தி லேயே தஞ்சம். இதுபோல பெட்டிக்கடை ஆதீனங்கள் தமிழ்நாட்டில் பலபல.

கேரளாவில் கட்டிபிடி சாமியார் என்ற பெயரில் அமிர்தானந்தமயி என்ற பெண்சாமியார். கல்வி நிறுவனங்களில் கொடிகட்டிப் பறக்கின்றார். கள்ள நோட்டு அடிப்பவர் கூட வளர முடியாத வளர்ச்சி கண்டுள்ளவர்கள் சாமியார்கள்.

கர்நாடக மாநிலத்தில் மடங்களுக்கு நிதியும் மான்யமும் தற்போதைய அரசு நிறுத்தி விட்டது. மடங்களின் செயல் பாட்டினை அடக்கி ஒடுக்கும் நிகழ்வாக உள்ளது. நாட்டை ஆள அரசு இருக் கும்போது மோசடியை போர்த்திக் கொண்டு ஆன்மீ கம் என்ற பெயரால் மடங்களும் சாமியார்களும் செயல்படத் தேவையில்லை.

- இரா.முல்லைக்கோ, பெங்களூர்
தமிழர் முழக்கம் மார்ச்சு 2014

Read more: http://viduthalai.in/page4/79610.html#ixzz30hnZdMGf

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி துளசிதாசர்


அவர்களுக்கு அறிவு அதிகமாக இருப்பதில்லை; அவர்கள் கடுமையானவர்கள்; அவர்களிடம் மென்மையிருப்பதில்லை - என்று பெண்களைப்பற்றி துளசிதாசர் இப்படிக் கூறுகிறாரே! - என்பதற்காக நாம் அவரிடம் குறைபட்டுக் கொள்ளவில்லை. வாழையடி வாழையாக பாரத நாட்டு அறப்பாதையை வகுத்துவரும் எத்தனையோ பேர் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறி வந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்மிருதிகள் எழுதியவர்கள்; சிலர் சாது சந்தியாசிகள்; சிலர் உயர்குல ஆரியர்கள் - நாம் குறைபட்டுக் கொள்வதெல்லாம் முற்போக்கு என்ற சொல்லுக்கு இன்று தரப்படும் விளக்கத்திற்கு ஏற்ப துளசிதாசர் ஒரு முற்போக்குக் கவிதான்! என்று கூறி அத்தனை துறைகளிலும் அவருக்கு முற்போக்குகள் இதற்கு (இராமாயணத்திற்கு) தீ வைக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய செய்தி!

- இப்படி எழுதியிருக்கிறார் ஒரு இந்தி எழுத்தாளர்,

பதந்த் ஆனந்த கௌசல்யாயன். இராமாயணம் பற்றி பெரியாரும், அண்ணாவும் கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவைச் சிறுமைப்படுத்தக் கூடுமானால், சில எழுத்தாளர்கள் இராமாயணம் பற்றி கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடுமானால், இத்தகு கருத்துக்களை வெளியிட்டுள்ள புத்தமதத் துறவியை - இவர்கள் நாத்திகர் பட்டியலில் சேர்க்கப் போகிறார்கள் அல்லது பிற்போக்காளர் பட்டியலிலா?

எல்லா வகையான சூது - பாவம் - தீமை இவற்றின் சுரங்கம் பெண்ணின் உள்ளம் - துளசிதாசர் இராமாயணம் (அயோத்திகா காண்டம் 162-2)

- குயில் 2014 மார்ச் - ஏப்ரல் பக்கம் 16

Read more: http://viduthalai.in/page4/79611.html#ixzz30hnyRr3m

தமிழ் ஓவியா said...


பெரியார் வழியை அறிந்திட்டால்.....


பல்லி சத்தம்
பக்தனுக்கு பரவசம் - ஆம்
நல் சகுணம்
பல்லிக்கோ அது
உல் தினம்
என்னை பார் யோகம் வரும்
கழுதை முகத்தினிலே
அவன் தலையில்
கழுதை இருந்தும்
மழை வேண்டி
புண்ணிய திரு நாட்டில்
கழுதைகளுக்கு திருமணம்
விதவைத் தன்மை கொண்டதனாலேயே
மணக்கோலத்தில் நின்றிட்ட
மகனே தாயை வணங்க
மறுத்திடும் கயமைத்தனம்
ஆன்மீகமும் அறிவியலே என்ற
பொய்மைவாத புரட்டுத்தனம்
பக்தியால் புத்தி அழிந்து
உறவையே இழந்து நிற்கும் - மடமைத்தனம்
இவையெல்லாம் அழிந்து போகும்
இக்கணமே பெரியார் வழியை அறிந்திட்டால்
அறிவில் தெளிவு உண்டாகும்.


- ஆறுமுகம், ஆசிரியர்
ப.க. துணைச் செயலாளர், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/79613.html#ixzz30hoQ5CR9

தமிழ் ஓவியா said...


திராவிடர் இயக்கம் என்ன செய்தது?


திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நன்றி உணர்வில்லா நாக்குகள்சில பேசுகின்றன.

சென்னையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில் - அதுவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தங்கும் இடம், உணவு, இலவசக் கல்வி அளிக்க முன் வந்தனர், திராவிடர் இயக்கத் தலைவர்கள் என்றால், அது என்ன சாதாரணமா? இதோ (ஏப்ரல் 28) குடிஅரசு இதழில் வெளிவந்த ஒரு விளம்பரம். (1937 ஏப்ரல் 18).

தியாகராய நகர் இல்லம்

(Theagaraya Nagar Home)

தியாகராய நகர், சென்னை
ஆதி திராவிட மாணவிகளுக்கு
இருப்பிடமும், உணவும், படிப்பும், நன்கொடை

மேற்படி இல்லம் 1937 ஜூனில் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தை ஒட்டித் துவக்கப்படும்.

2. அதில், கல்வியில் விருப்பமும், வேண்டிய அறிவுக் கூர்மையும், போதிய படிப்புத் தேர்ச்சியும், உள்ள கிறிஸ்தவர் அல்லாத ஏழை ஆதி திராவிடப் பெண்களுக்கு இருப்பிடமும், உணவும், நன்கொடையாக அளிக்கப்படும். படிப்பதற்கு அவர்கள் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

3. அவர்கள் 1937 ஜூலை 1உயில் கீழேகுறிப்பிட்ட வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.

வகுப்பு வயது வகுப்பு வயது
4வது 10 7வது 13
5வது 11 8வது 14
6வது 12

4. ஆதி திராவிடர் முன்னேற்றத்தில் நாட்டமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த மேலே குறிப்பிட்ட தகுதியுடைய ஆதி திராவிடப் பெண்களை மேற்படி இல்லத்தில் சேரத் தூண்டவும், சேர்ப்பிப்பதற்கான துணை புரியவும் வேண்டப்படுகிறார்கள்.

5. சேர்க்கை விண்ணப்பங்கள் இப்பொழுது படிக்கிற பள்ளிக்கூடத்தின் மூலமாக அனுப்பப்பட வேண்டும். அவை இப்பொழுது முதலே பெறப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும். இன்னும் வேண்டிய விவரம் தெரிய விரும்புகிறவர்கள் நேரிலாவது, கடித ம் எழுதியாவது தெரிந்துகொள்ளலாம். தபால் வழி விடை விரும்புகிறவர்கள் தங்கள் கடிதத்துடன் தங்கள் விலாசம் எழுதி முத்திரையொட்டிய உறை வைத்து அனுப்ப வேண்டப்படுகிறார்கள்.

65-கி, சர். மகம்மது செ.தெ. நாயகம்
உஸ்மான் சாலை, (C.D. Nayagam)
தியாகராய நகர், சென்னை மேல்அதிகாரி

குறிப்பு: (1938 இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியான சுயமரியாதை இயக்கத்தலைவர்)

குறிப்பு: கிறித்தவர் அல்லாதார் என்று குறிப்பிடப் பட்டதற்குக் காரணம் அவர்களுக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் விடுதிகள் ஏராளமாக இருந்தன.

Read more: http://viduthalai.in/page7/79616.html#ixzz30homSCXC

தமிழ் ஓவியா said...

மூளையின் அபாரத்திறன்


- டாக்டர் வி. நிகோலயேவ்

மூளையின் அபாரத் திறன்தான் என்ன என்பது பற்றி டாக்டர் வி. நிக் கோலயேவ் கூறுவதை இக்கட்டுரை விளக்குகிறது.

சோவியத் நாட்டில் மெலிக்கெஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த என்ஜினீயரான யூசெஃப் புரோகோத்கோ என்பவர் எந்த எண்ணின் இரு மடங்கு. மும்மடங்குப் பெருக்கலையும் மனக்கணக்காகவே, நொடிப்பொழுதில் செய்துமுடிக்க முடி கிறது என்று சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது 10,15, 20 இலக்கமுள்ள எண்களின் பெருக்குத் தொகையையும் அந்த மனிதர் சில வினாடிகளில் கூறிவிடுகிறார் என்றும் அச்செய்தியில் காணப்பட்டிருந்தது. மனித மூளையின் திறனுக்கு, அதில் மறைந் திருக்கும் ஆற்றலுக்கு, இது ஓர் உதாரண மாகும். மூளையின் புறணிப் பகுதி 1400 கோடி நரம்பு ஸெல்களைக் கொண்டது என்று விஞ்ஞான ரீதியாக நிலை நாட்டப்பட் டுள்ளது. என்றாலும்கூட அவ்வளவு நரம்பு ஸெல்களும் சேர்ந்து 2 அல்லது 5 மில்லி மீட்டர் அடுக்காகவே உள்ளது என்றால் அவை எவ்வளவு நுண்ணியவை என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். மூளையின் வெண்மைப் பகுதிதான் அது. மூளையின் அமைப்பையும் நன்கறிந்து, அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மின் னணுக் கணிதமானியொன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முற்பட்டபோது அந்த எந்திரத்தின் அளவு ஒரு பெரிய வீட ளவுக்குச் சென்று விட்டது.

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

தற்போது பதிவை இணைக்கலாம்.

தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

www.Nikandu.com
நிகண்டு.காம்

தமிழ் ஓவியா said...


எய்ம்ஸ் நிறுவனம் இடஒதுக்கீட்டைப் புறக்கணிப்பதா? போராட்டத்தில் குதித்தனர் மருத்துவர்கள், மாணவர்கள்


டில்லி.மே4- எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் எய்ம்ஸ் நிறுவனத்தில் பணிநியம னத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற மறுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத் தில் குதித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அறிவிய லாளர்கள் முன்னேற்ற அமைப்பு, உரிமைகள் மற் றும் சமத்துவத்துக்கான அமைப்புடன் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது. போராட் டத்தின் நிறைவாக இருநபர் குழு போராட்ட நோக்கங் கள் மற்றும் தீர்மானங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கி, இந்த விவகாரத் தில் புதிதாக அமையக்கூடிய அரசுடன் சேர்ந்து நட வடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாண வர்கள், வர்தமான் மகாவீர் மருத்துவக்கல்லூரி மாண வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். எய்ம்ஸ் கல்லூரி சார்பில் மருத்துவர் எல்.ஆர்.மூர்மு, ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவர் விகாஸ் பாஜ்பாய், மவ் லானா ஆசாத் மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத் துவர் பி.ரத்தோர் ஆகியோர் போராட்ட நோக்கங்களை விளக்கி உரை ஆற்றினார்கள்.

உரையில், இட ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத் துவதில், விதிமுறைகளை கையாள்வதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத்தழுவியுள்ளோம் என்றனர். மேலும், சிறிய அளவில் சாலைவிதிகளைப் பின்பற்றாதவர்கள்மீதுகூட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், அதைவிட அதிகப்படியான குற்றமாக, அரசியலமைப்பு வழங் கியுள்ள அம்சங்களையே மீறக்கூடியவை தண்டிக்கப் படாமல் போகிறதே என் றும் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.

தீர்மானத்தில், நாங்கள் சுகாதாரத்துறை, தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி,எஸ்டி) தேசிய ஆணை யம், இதர பிற்படுத்தப்பட் டவர் நலன்களுக்கான தேசிய ஆணையம், நாடாளு மன்றக் குழு ஆகிய அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களி டம் மனுக்கள் கொடுத்துள் ளோம்.

அரசியலமைப்பு வழங்கும் இதர பிற்படுத் தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடி யினர் ஆகியோருக்கு பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை வழங் காமல் இருப்பதை விளக் கமாகச் சுட்டிக்காட்டியது டன், இடஒதுக்கீடுக் கொள் கையை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத் துரைத்தோம். மேலும், இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டோம் -இவ்வாறு போராட்டத் தீர் மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79716.html#ixzz30nEXApTD

தமிழ் ஓவியா said...


பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் குழந்தைத் திருமணம்


ஜெய்ப்பூர், மே 4- இப்போதும் இந்தியாவின் பல பகுதிகளில் மூன்று வய தில்கூட திருமணம் செய் விப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல, நடைமுறையில் இருந்து வருவதுதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர் பாக தி இந்து ஆங்கில நாளேடு (மே 3) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது. நீலு (பெயர் மாற்றப்பட்டி ருக்கிறது) ஓர் எட்டு வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவ ருக்கு அய்ந்தாண்டுகளுக்கு முன்பே அதாவது இவருக்கு மூன்றுவயதாக இருக்கை யிலேயே திருமணம் நடந்து விட்டது.

இது தொடர்பாக அச் சிறுமியிடம் கேட்கையில், எனக்குத் திருமணம் நடந் தது குறித்து எனக்கு எது வுமே தெரியாது என் கிறார்.இவ்வாறு நீலு மட்டுமல்ல, ஏராளமான சிறுமிகள் இந்தமாதத்தின் (வைசாக்) அட்சயதிரிதியை நாளில் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில்ஏராளமான அள வில் குழந்தைத் திரும ணங்கள் அட்சய திரிதியை நாளன்று நடைபெற்றுள் ளன.

ராஜஸ்தான் மாநிலம், சிட்டோ கார் மாவட்டத்தில் கண்பத்கேடா என்னும் நீலு வின் கிராமத்தில் இவ்வாறு சிறுமிகள் திருமணம் செய் விக்கப்படுவது வழக்கத் திற்கு மாறான செயல் அல்ல, மாறாக இயல்பான ஒன்றுதான். ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் இத்தகைய படுபிற்போக்குத் தனமான சமூக நிகழ்வுகளை இன் றைக்கும் காண முடி யும்.

நீலுவின் கிராமத்தி லிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் நாத்தி பாய் என்னும் 57 வயது மூதாட்டி இது குறித்துக் கூறுகையில், தனக்கு ஏழு வயதாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றது என்றும், அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரிகள் அனைவருமே சிக்கனம் கருதி ஒருவருக்கே திருமணம் செய்விக்கப் பட்டு விடுவதுண்டு என் றும் கூறுகிறார்.

இது தொடர்பாக கொஞ் சம் விஷயம் தெரிந்த பெரி யவர்களிடம் கேட்கையில், குழந்தைத் திருமணம் இந் தக் காலத்தில் விநோதமான ஒன்றாகக் காட்சி அளிப்பது உண்மைதான் என்றாலும், இன்றைக்கும்கூட பெற் றோர் தங்கள் பெண் குழந்தைகளை மிகவும் சிறு வயதிலேயே திருமணம் செய்விக்கத்தான் விரும்பு கிறார்கள் என்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்,இன்றைய தினம் பெண்குழந்தைகள் மிக எளிதாக செல்போன் மூல மாகவும், இணைய தளம் மூலமாகவும் மற்றும் பல் வேறு வழிகளிலும் மிகவும் எளிதாக மிகவும் கீழ்த் தரமான செக்ஸ் காட்சி களையும், சங்கதிகளையும் தெரிந்து கொண்டு விடு கிறார்கள்.

எனவே, அவர்கள் கெட்டுப்போவதற்குள் அவர்களுக்குத் திரும ணத்தை செய்துவிட வேண் டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கூறினார் கள். குழந்தைத் திருமணங் களைத் தடுக்கக் கூடிய விதத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஏதே னும் செய்கிறதா என்றால் குழந்தைத் திருமணங் களுக்கு எதிராக சுற்றறிக் கைகள் வெளியிடுவதோடு அவர்கள் தங்கள் கடமை முடிந்துவிடுவதாகக் கருதிக் கொண்டு விடுகிறார்கள்.

ஆயினும் குழந்தைத் திருமணங்களுக்கு எதி ராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது மிகவும் அபூர்வம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கிறார்கள். பன்வீர் தேவி என்பவர் குழந்தைத் திரு மணம் கூடாது என்று பிரச்சாரம் செய்ததற்காக கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூக ஆர்வலராவார். அவர் இது தொடர்பாக கூறுகையில், இப்போது நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இப்போதெல் லாம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகள் முத லில் படிக்கட்டும், பின்னர் சரியான பருவத்தில் திரு மணம் செய்து கொள்ளட் டும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இருந்தாலும், எங்கள் சமூ கம் முழுமையாக மாறிவிட் டது என்று சொல்வதற் கில்லை, இன்னும் சிறிது காலம் பிடிக்கும், என்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/79710.html#ixzz30nEgnf3X

தமிழ் ஓவியா said...


பாஜகவில் ஒருநபர் ராஜ்ஜியம்தான்.. மோடி மீது ஜஸ்வந்த்சிங் தாக்கு


டில்லி, மே 4- பாரதீய ஜனதா கட்சியில் மோடி என்ற ஒற்றை மனிதரின் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அக் கட்சியில் இருந்து 2ஆவது முறை யாக நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா வின் வேட்பாளராக ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித் திருந்தார். தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் தமது சொந்த தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார்.

ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்ததற்காக பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த்சிங், வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவில் ஒரு நபர் ராஜ்ஜியம் நடந்தது.

ஆனால் தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து மோடி அலை எதுவும் வீசவில்லை. நான் மத்தியில் அமையப் போகும் எந்த அரசையும் ஆதரிப்பதாக சொல்லவில்லை. பிரச்சினைகளைப் பொறுத்து நாட்டின் நலனுக்காகத்தான் முடிவெடுப்பேன். இவ்வாறு ஜஸ்வந்த்சிங் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79711.html#ixzz30nEro4sE

தமிழ் ஓவியா said...


நெஞ்சை நெகிழ வைத்த நிகழ்வு நக்கீரன் இதழுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


செய்தியாளர்: தேர்தல் பிரச்சார பயணத்தில் உங் களை நெகிழ வைத்த சம்பவம்?

மு.க.ஸ்டாலின்: நிறைய இருக்குது. என் வாகனத்துக்கு முன் னாடி இளைஞர்கள் பைக்கில் வேகமாகப் போய்க்கொண்டே பிரச் சாரம் செய்தாங்க. கையில கொடியைப் பிடிச்சிருப்பாங்க. அந்தக் கொடி கீழே விழுந்திடக் கூடாதுன்னு கவனமும் இருக்கும். அதேநேரத்தில் பைக்கும் வேகமாகப்போகும்.

அதைப் பார்க்கும்போது, எனக்கு பதற்றமா இருக்கும். ஜாக்கிரதையா பைக் ஓட்டுங்கன்னு சொல்லுவேன். அவங்க அதைக் கேட்டுக்கிட்டாலும், வெற்றி பெறணும்ங்கிற வேகத்தை பைக்கில் காட்டுவாங்க. எனக்கு வெற் றியைவிட அவங்களோட உயிரும் உடல்நலனும் தான் முக்கியமா தெரியும்.

அதேமாதிரி இன்னொரு நெகிழ்ச்சியான சம்ப வம். பெரம்பலூர் தொகுதிக்குள் வரும் பாடலூரில் விஜய்னு ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர். பேஸ்புக்கில் தீவிரமாச் செயல்படக் கூடிய தி.மு.க. தொண்டர். சென்னையில் பேஸ்புக் தி.மு.க. இளை ஞர்களை நேரில் சந்திச்சப்ப ஒரு தொண்டர், அந்த விஜய் பற்றி சொன்னார். உடனே போன் போடச் சொல்லி அவர்கிட்டே பேசினேன்.

பிரச்சாரத்திற்கு வரும்போது உங்களைப் பார்க்கிறேன்னு சொன் னேன். அதேபோல பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்றப்ப, பாடலூர்னு பெயர் பார்த் ததும் அவர் ஞாபகம் வந்தது.

பிரச்சாரம் முடிந்த பிறகு இரவு 10 மணிக்குமேல பாடலூர் போய் அவரோட எளிமையான வீட்டில் சந்தித்தேன். சக்கரநாற்காலியில் இருந்த அந்தத் தம்பிக்கும், அவரோட குடும்பத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சி. எனக்கோ, இந்தநிலையிலும் ஒரு மொபைல் போனை வச்சிக்கிட்டு கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறாரே, நான் உள்பட கழகத் தொண்டர்கள் இன்னும் அதிகம் உழைக்கணும்ங் கிற எண்ணம்வந்தது.

அவர்கிட்டே, நாம எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம்னு நினைக்கிறீங்கன்னு கேட்டேன். நாற்பது தொகுதியும் ஜெயிப்போம்ண் ணேன்னு நம்பிக்கையோடு சொன்னார். இந்த நம்பிக்கையை என்னுடைய பிரச்சாரம் நெடுகிலும் பெற முடிந்தது.

இவ்வாறு `நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79674.html#ixzz30nGKcV5h

தமிழ் ஓவியா said...


குற்றத்தை நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: ஆ.இராசா


புதுடில்லி, மே 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். காவல்துறையின ரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச் சர் ஆ.இராசா தற்போது பிணையில் உள்ளார். நாடா ளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டில்லி யில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்தி ருப்பதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளி யாகி இருந்தது. அன்றே நான் நீதிபதியை சந்தித்து அந்த பத்திரிகைச் செய் தியை அவரிடம் காட்டி னேன்.

வெளிநாட்டு வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ டெபாசிட் செய்யப்பட்டி ருப்பதை சி.பி.அய். கண்டு பிடித்தால் நான் இந்த வழக்கை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்கி றேன். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்.

இதை வருமான வரித் துறைக்கும், மத்திய அம லாக்கப் பிரிவு இயக்குநர கத்துக்கும், சி.பி.அய்.க்கும் சவாலாக விடுக்கிறேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/page-8/79679.html#ixzz30nGnGdp4

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...


தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி அறவே ஒழிப்பேன்

துணிவுடன் திருமணம் செய்து கொண்ட பெண் சூளுரை

ஹூப்ளி.மே5- கர்நாடகா மாநிலத்தில் ஹூப்ளி வட்டத்தில் தேவ தாசியாக்கப்பட்ட பெண் கடும் எதிர்ப்புகளுக்கிடையே துணிச்சலாக திருமணம் செய்து கொண்ட தோடு, தேவதாசி முறையை எதிர்த் துப் போராடி அறவே ஒழிப்பேன் என்று சூளூ ரையை ஏற்றுள்ளார். எச்.சுமங்களா (வயது 35) எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய தாயாராலாயே வற்புறுத்தப் பட்டு தேவதாசியாக ஆக் கப்பட்டார்.

இருப்பினும் ஏழு ஆண்டுகளாக வேணு என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். வேணுவின் தொடர்பால் சுமங்களாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெண்களுக்கான மாநில அரசின் பாக்கிய லட்சுமி என்னும் உதவித் திட்டத்தில் தன்னுடைய மகளை சேர்க்கும்போது தந்தையின் பெயரைக் குறிப் பிடுமாறு கேட்டுள்ளனர்.

திருமணத்துக்கு முன் பாக வேணுவுடன் ஏற் பட்ட உறவில் குழந்தை கள் பிறந்துள்ளதால், குழந் தைகளின் எதிர்காலத்தை யும் கருத்தில்கொண்டு வேணுவைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். தற்போது, தன் தாயார் உட்பட பலரையும் எதிர்த்து, கடந்த 3-5-2014 அன்று பெல்லாரி மாவட்டத்தில் மாளவி கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் வேணு என்கிற எம்.வேணுகோ பால் என்பவருடன் திரு மணம் செய்து கொண்டு இல்லறத்தில் இணைந் துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தேவதாசிகளாக தள்ளப் பட்டு, வாழ்வில் பல கொடுமைகளை சந்திக்கும் பெண்களின் மறுவாழ்வுக் காக தேவதாசி மகிளேயரா விமோச்சனா கர்நாடகா என்கிற தொண்டு நிறுவ னம் செயல்பட்டுவரு கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் பி.பாலம்மாவின் உதவியுடன் சுமங்களாவின் திருமணம் ஹகாரிபொம் மனஹள்ளி பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனில் எளி மையாக நடைபெற்றது. வாழ்வில் பல தடங்களில் பயணிக்கும் ஏராளமான வர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

சுமங்களாவின் வீட் டுக்கு வேணு செல்லும் போது, கிராமத்தினர், உற வினர்கள் மற்றும் நண்பர் களின் எதிர்ப்பை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப்போது, எங்களுடைய உறவு தற்போது அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. என் வீட்டாரும், அவளு டனே இருந்துகொள் என்று கூறி என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட் டார்கள். நானும் சுமங் களாவை ஆழமாக நேசிப் பதால், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது ஒப்புக்கொண்டேன் என்று விளக்கி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, அரசு எங்களுக்கு எங்கள் கிராமத்திலேயே வாழ்வதற்கு சிறிய அளவில் இடம் கொடுத்தால் ஒரு குடிசை போட்டுக்கொண்டு என் மனைவி குழந்தை களோடு வாழ்வேன் என்று வேணு கூறுகிறார்.

தேவதாசி விமோச்சனா அமைப்பின் தலைவர் பி.பாலம்மா கூறும்போது, திருமணமுறையில் நம் பிக்கை ஏற்பட்டபின் சுமங் களாவின் ஒப்புதலின் பேரில், திருமணத்துக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தோம் என்றார்.

கர்நாடகா மாநிலத்தில் தேவதாசி முறை தடை செய்யப்பட்டிருந்தாலும், 1982ஆம் ஆண்டு தேவதாசி முறை தடை சட்டம் அம லில் இருந்தாலும், மாநி லத்தின் பல்வேறு பகுதி களிலும் பழைமைவாதி களால் தொடர்ந்து பின் பற்றப்பட்டுவருகிறது.

திருமணத்துக்குப்பின்னர் சுமங்களா கூறும்போது: நான் தேவதாசி என்னும் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. நடத் தைக்குறைவான தேவதாசி முறையை எதிர்த்துப் போரா டுவேன். நன்மதிப்பைக் கெடுக்கும் இந்த முறையை அறவே ஒழிப்பதற்கும், என்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் எதிர் காலத்தை பாதுகாக்கவும் என்னை ஒப்படைத்துக் கொள்வேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79748.html#ixzz30tPtxfeh

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் தூக்கிய போர்க் கொடி!


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவர்கள் ஒரு முக்கியமான போராட்டத்தில் குதித்துள்ளார்கள். போராட்டத்தில் குதித்துள்ள அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில், விதிமுறைகளைக் கையாளுவதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத் தழுவி யுள்ளோம். சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால்கூட சட்ட ரீதியாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிராக நடந்து கொள் பவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? என்ற நியாயமான வினாவை எழுப்பியுள் ளனர் - போராட்டக் குழுவினர். இது குறித்து அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் முக்கியமானது.

சுகாதாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், நாடாளுமன்ற நிலைக் குழு ஆகிய அனைத்து அதிகார பூர்வ அமைப்புகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பணி நியமனங் களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டியதுடன் இடஒதுக்கீட்டை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.

மேலும் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்று தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமாக சட்டரீதியாக ஆக்கப்பட்ட நிலையிலும், எய்ம்ஸ் நிறுவனம் இப்படி திமிரடியாக - சட்ட விரோதமாக நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல!

வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் சரி, அதன்பின் கல்வியிலும் இடஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்ட கால கட்டத்திலும் சரி, எய்ம்ஸில் படித்துக் கொண்டிருந்த உயர் ஜாதிப் பார்ப்பன மாணவர்களும், பேராசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு.

என்ன கொடுமை என்றால், அந்தச் சட்ட விரோத போராட்டத்திற்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் அனைத்துப் பொருள்களையும், (மின்சாரம் உட்பட) பயன்படுத்திக் கொண்டனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளையும்கூட அவர்கள் கவனிக்கத் தயாராக இல்லாத குரூர மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் என்பது வெட்கக் கேடானதாகும்!

மருத்துவ சோதனையின் போது 49 குழந்தைகள் இறந்தன எனக் குற்றச்சாற்று எழுந்ததுண்டு.

அவர்கள் பணி செய்யாத அந்த வேலை நிறுத்தக் கால கட்டத்திற்கு சம்பளத்தை நிறுத்தியபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று சகாயமான ஆணையை பெற்றுக் கொண்டார்கள் என்பது வேதனைக்குரியது.

ஒரு கால கட்டத்தில் இவர்களுக்கெல்லாம் துணை போய் கொண்டிருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால். இவர் பிஜேபி ஆட்சியில் 5 ஆண்டு காலம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டவர் (3.7.2003 - 3.7.2008).

2007 நவம்பர் 28 இல் எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கான ஓய்வு வயது 65 என்று சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் வேணுகோபால். இடஒதுக்கீட்டுக்கு விரோதமாக இயக்குநர் வேணுகோபால் செயல்பட்டது பற்றியெல் லாம் எடுத்துக் கூறப்பட்டது. பார்ப்பனர் வேணுகோ பாலுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடியவர் பி.ஜே.பி. பார்ப்பனரான அருண்ஜெட்லி. (இதற்குப் பெயர்தான் இனவுணர்வு என்பது!)
எய்ம்ஸில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டனர் இழிவுபடுத்தப்பட்டனர்.

தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குமுறினர் என்றால், அங்கு நிலவிய சமூக அநீதியின் கொடுங்கோன்மை எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே!

அனில்குமார் மீனா, பால் முகுந்த்பார்தி, வினேஷ் மோகன் காவ்லே ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது!

ஆட்சியதிகாரம் யார் கைகளில் இருந்தாலும் நிருவாக இயந்திரம் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கைகளில் இருந்தால் இந்த நிலைதான் நீடிக்கும் என்பது வெளிப்படை.

தமிழ் ஓவியா said...


மத்திய தேர்வாணையமே இடஒதுக்கீடு வழங்கு வதில் குளறுபடிகள் செய்யவில்லையா? திறந்த போட் டிக்கான இடங்களைமுதலில் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களை அவர் களுக்குரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதானே சட்ட ரீதியான நிலைப்பாடு!

இதனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, திறந்த போட்டியென்றாலே இடஒதுக்கீடே இல்லாத உயர் ஜாதியினருக்கு என்று ஆக்கிச் செயல்படுத்த வில்லையா?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் இப்படி சட்ட விரோதமாக நடக்கும் பொழுது, பெரும்பான் மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சட்டப்படியான உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடிட என்ன தயக்கம்?

டில்லியில் எய்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் சமூக நீதி உரிமைக்காக வீதிக்கு வந்து விட்டனர். இது நாடெங்கும் பரவட்டும்! பரவட்டும்!!

Read more: http://viduthalai.in/page-2/79744.html#ixzz30tQWAVo7

தமிழ் ஓவியா said...


நடவடிக்கை



பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய் வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. - (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/79742.html#ixzz30tQe2iCt

தமிழ் ஓவியா said...


அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!


குழந்தைகள் பழகு முகாம் - 2014 தொடக்கம்

அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் பிஞ்சுகளிடம் பேச்சு!


தஞ்சை, மே 5- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாமின் தொடக்கவிழாவில் சொந்தமாக சிந்திக்க கற்றுத் தரப் போகிறோம் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டார்.

குவிந்தனர் மழலைப் பட்டாளங்கள்!

நான்காவது ஆண்டாக நடைபெறும் பழகு முகாமில் மொத்தமாக 209 பெரியார் பிஞ்சுகள் குவிந்துவிட்டனர். 150-க்குள் திட்டவட்டமாக சுருக்கிவிட வேண்டுமென்று பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சி செய்தும் பெரியார் பிஞ்சுகளின் அளவு கடந்த ஆர்வத்தால் இலக்கை விஞ்சினர்.

இதில் 13-வயதுக்கு மேற்பட்டவர்கள் A-(ADOLESCENT) என்றும் மற்றவர்கள் K-பிரிவு (KIDS) எனவும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டிலும் 15 பேர் கொண்ட உட் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவர் (VOLUNTEERS) நியமிக்கப்பட்டனர். 13-வயதுக்கு மேற்பட்டோரில் பெண் கள் 35, ஆண்கள் 38 ஆக 73 பேரும், குழந்தைகள் பிரிவில் பெண்கள் 53, ஆண்கள் 83 ஆக 136 பேருமாக மொத்தம் 209 பேர் ஆவர்.

சிட்டுக்குருவிகளுடன் நடைப்பயிற்சி

பதிவுகள், குருதிப் பரிசோதனை முதலியவை முடிந்த பிறகு சென்னை அரங்கநாதன் விடுதியிலிருந்து உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் பெரியார் பிஞ்சுகளின் நடைப்பயிற்சி தொடங்கியது.

வெயிலுக்கு குடை பிடித்த மழை மேகங்கள்

பெற்றோர்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விட்டு விடுதலையாகி நின்ற பெரியார் பிஞ்சுகளுக்கு இயற்கையும் அருமையாக ஒத்துழைத்தது. சுளீரென்று அடிக்க வேண்டிய வெயிலை தடுக்கும் விதமாக கருநிற மேகங்கள் குடையாக பரந்து விரிந்து சுற்றுச்சூழலையே சில்லென்று மாற்றிவிட பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் சிறகடித்தனர்.

தொடக்க விழா

காலை உணவுக்குப்பிறகு சிக்மண்ட் ஃபிராய்டு அரங் கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. பவர் அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் பர்வீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோவிந்தராஜி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்திப் பேசினார். திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவருக்கும் நன்றி கூறி தொடக்க விழாவை நிறைவு செய்தார்.

சிந்திக்க கற்றுத் தருகிறோம்

முன்னதாக தொடக்கவிழாவில் பேசிய பேராசிரியர் பர்வின் இந்த பழகு முகாமானது எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள் கிறோம் என்று குறிப்பிட்டார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி பேசுகையில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தங்களை நம்பி ஒப்படைத்ததற்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பிஞ்சுகளிடம் கலகலப்பாக உரையாடினார். அப்பொழுது தான் புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப்படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும், அவரைப்போல, ரிலேட்டிவிட்டி தியரி கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போல, பழகு முகாமின் ஆறு நாட்களும் நாங்கள் உங்களுக்கு சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி நிரல்படி தொடர்ந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் கல்வி வளாகங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிரமணியன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/79738.html#ixzz30tRfLFx4

தமிழ் ஓவியா said...


மஞ்சளின் மருத்துவ குணங்கள்


1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மது போதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகை யான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப் பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

6. மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணு யிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.

7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கொண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.

8. மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

9. மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத் தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.

10. மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSDxrdW

தமிழ் ஓவியா said...

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தி லான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட் டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலி பிளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மை யாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும். ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது. அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது.

மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSMLCdn

தமிழ் ஓவியா said...


கோடை வெயிலை சமாளிக்க பழங்கள் இருக்கு...

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும்.

இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற் போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.

தர்பூசணி: தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.

அத்திப்பழச்சாறு: அத்திப்பழத்தின் சாறு பிழிந்து, தேங்காய் பால், தேன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். அத்திப்பழம் தேன் ஆகியவற்றுடன் கல் உப்பு சேர்த்து குடித்தால் ஆரம்ப கால சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, புத்துணர்வு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல் களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்ற வற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும். கர்ப்பிணிகள் இச்சாற்றை குடித்து வர பிரசவத்தின்போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை சாறு: திராட்சை சாறு தொடர்ந்து குடித்தால் ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும். திராட்சை சாறுடன், தேன் கலந்து குடித்தால் உடல்பலம் மிகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாறு குடிப்பது மிகவும் நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSTPE3U

தமிழ் ஓவியா said...

குளிர வைத்த தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான். சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருள்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான நீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மலேரியாவை குணமாக்கும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்தோ அல்லது வெல்லம் கலந்தோ ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் என கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை குடிக்கும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து குடிப்பதால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து குடித்தால் மலேரியா நோய் குணமாகும். எலுமிச்சை சாறுடன் வெள்ளை வெங்காயம், கற்பூரம் சேர்த்து குடித்தால் காலரா குணமாகும்.

உடல் களைப்பு, கை, கால் கணுக்களில் வீக்கம்-வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSeS0Rx

தமிழ் ஓவியா said...

எனக்குத் தெரியும் எல்லாம்...


ஒரு நாள்...
என் நாட்டு
அரசியல் சாரா
அறிவுஜீவிகள் என்போர்...
நடுநிலை வாதிகள் என்று
நா சரசம் பேசியோர்...
துலாக்கோல் என
தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்ட
ஊடகங்கள்...
நடிப்பு
விளையாட்டு
இலக்கியம் என்று
விளம்பரமும்
பணமும்
விளம்பரத்தின் மூலம்
பணமும் பண்ணியோர்...
இன்னும் நல்லவர்கள்
என்று நம்பப்பட்டோர்
எல்லோரும்
எம் நாட்டு எளிய மக்களால்
குறுக்கு விசாரணை
செய்யப்படுவர்.
இந்நாட்டின் எதிர்காலம்
காவியிருளுக்குள்
கசையடி படப்போகிறது
என்று தெரிந்தும்
அந்தக் கொட்டடிக்குள்
எம்மைத் தள்ளிவிட்டு
சுற்றி நின்று -கைகொட்டிச்
சிரித்ததற்காக
அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கூடிநின்ற ரசிகர்களை
வரி ஏய்ப்புக்கும்
வருங்கால வாய்ப்புக்கும்
கூறுகட்டி விற்பனை செய்தவர்கள்
வரிசையாய் நிறுத்தப்பட்டு
அணிவகுப்பில் அடையாளம்
குறிக்கப்படுவார்கள்.
அதில் மரு வைத்து
மாறுவேடமிடுவோர்,
தடாலடி கட்சி மாறிகள்
தனியாக விசாரிக்கப்படுவர்.
ஒருகையில் விளக்குமாற்றையும்
மறுகையில் வெண்சாமரத்தையும்
வீசிக் கொண்டே
நடுநிலை என்று
வியாக்யானம் பேசியவர்கள்
நடுநிலையான
கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
தேஷ வளர்ச்சி என்று
கார்ப்பொரேட்டுகளைக் கைகாட்டி
கூலிக்கு மேல் கூவியவர்களின்
தேக வளர்ச்சி
புள்ளி விவரங்கள்
பெருந்திரையில் காட்டி
விவாதிக்கப்படும்.
சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென
இந்த மக்கள்
செத்துக் கொண்டிருந்தபோது
அந்த நெருப்பில்
குளிர் காய்ந்தவர்களின்
கோணல் புத்திகள்
சோதனைக்குட்படுத்தப்படும்.
அக் குற்றப் பத்திரிகையில்....
தெரிந்தே இச்சதி செய்தவர்கள்
மட்டுமல்லாமல்...
எல்லாம்
தங்களுக்குத் தெரியும் என்று
தங்களையே
ஏமாற்றிக் கொண்டவர்கள்...
நூல் ஏடுகளுக்கு
வால் பிடித்தவர்கள்...
போலி மின்னஞ்சல்களுக்கு
முகவரி கொடுத்தவர்கள்...
ஒரு கோக்குக்கும்
காக்டெயிலுக்குமிடையில்
சரித்திரம் பேசியவர்கள்...
ஒரு பார்ப்பன
ஷொட்டுக்காக
தாம் ஷர்ட்டு போட்ட
வரலாற்றை மறந்தவர்கள்...
சமூகநீதியால் கிடைத்த
சக்கர நாற்காலிகளில்
சுற்றிக் கொண்டே
அர்த்த சாஸ்திரத்தின்
பெருமை பேசியவர்கள்...
நேஷனல் இண்டகரிட்டி
ப்ரோக்ராமில்
இந்துத்துவாவை
#இன்க்ளூட் செய்து
சிறுபான்மையோரை
எஸ்க்ளூட் செய்தவர்கள்...
காவியும் அரைடவுசரும்
வைத்த குண்டுகளுக்கு
எவ்வித விசாரணையுமின்றி
தாடியையும்
குல்லாவையும் நோக்கிக்
கை நீட்டியவர்கள்...
தேவனுக்குச் சுவிசேஷம் சொல்லி
சேர்த்த சொத்துகளை
காத்தருள காவியிடம்
மண்டியிட்டவர்கள்...
மகளிர்க்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று
உதட்டில் பேசிக் கொண்டே
வேலைக்குப் போனால்
வீணாகிப் போவார்கள் என்று
வேதாந்தம் பேசியவர்களை
மறந்தவர்கள்...
எல்லோரும்...
எல்லோரும்...
அக்குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்!
ஒரு மரண வியாபாரிக்கு
மகுடம் சூட்ட விரும்பியோர்...
ஒரு சர்வாதிகாரிக்கு
சனநாயகச் சாயம் பூசியோர்...
சுயநலத்துக்காக எம் மக்களை
சூழ்ச்சிக்குப் பலி கொடுத்தோர்...
அனைவரும்...
அனைவரும்...!
நிறுத்து...
இதையெல்லாம்
பேசவும் எழுதவும்
சிந்திக்கவும் கூட
உனக்கு
வாய்ப்பளித்தால் தானே!
என்ற குரல் கேட்கிறது.
என் குரல் வளை
நெரிக்கப்படலாம்.
எம் உடல் அமிலத்தால் எரிக்கப்படலாம்.
அதன் சாம்பலும்
சத்தமின்றி புதைக்கப்படலாம்.
ஆனால்
எமக்குத் தெரியும்!
எந்த ஒரு
கொடுங்கோலனின் உச்சமும்
ஒரு சில ஆண்டுகள் தான்.
அதன் பிறகான பெருவெடிப்பில்
அண்டம் சிதறியது போல
உங்கள்
அகண்ட பாரதம் சிதறும்.
அப்போதும்
எம்மக்கள் இருப்பார்கள்.
உங்களை நம்பி
ஏமாந்த எம் மக்கள்...
அப்போதும் இருப்பார்கள்.
அவர்களே சாட்சிகளாய்
அவர்களே வழக்காடிகளாய்
காலத்தின் தீர்ப்புக்காக
உங்களைக் கூண்டிலேற்றுவார்கள்.

- சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...

சரவணன் யார்...?


சரவணா, சரவணன், சரவணக்குமார், சரவணராசு, சரவணதேவி, சரவணசங்கர், சரவணக்குமாரன், என்று சரவணா என பெயர் ஆரம்பிக்கும் அனைவரும் மஹாவீரரின் பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்று அவரை நினைத்துப் பார்க்கவேண்டும்.

சரவணா முருகனின் பெயர் என்பதெல்லாம், மத ரீதியாக பரப்பிவிடப்பட்ட பொய்கள்.

கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பவுத்தமும், சமணமுமே தமிழர்களின் தலையாய மதங்களாகத் திகழ்ந்தன. இரண்டு மதங்களும் மக்களின் கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் போன்றவைகளில் பெரிதும் துணை நின்றன..

நாம் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உண்டு வந்தோமே, அதைத் துவக்கி வைத்தவர்கள் சமண, பவுத்தர்கள்தான். அன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் விகாரைகளில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்காக வீடு வீடாகச் சென்று அரிசி கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியங்கள் வாங்கி வந்து சமண பவுத்த விகாரைகளில் கல்வி கற்று வரும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார்கள். பகலில் பெற்றோர் வயல் வேலை அல்லது வேறு பணிக்குச் சென்றுவிடுவதால் அவர்கள் குழந்தைகளின் மதிய உணவைக் கவனிக்கவேண்டி இப்பணியைச் செய்தனர்.

சமண முனிவர்கள் தங்களிடம் கல்விபயின்ற மாணவர்கள் குழுவில் அனைவரையும் கவனிக்க ஒரு தலைமைப் பையனை நியமித்தனர். அந்த மாணவனை ஷரஹனா என பாலிமொழியில் அழைத்தனர். ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும். (உதாரணமாக இராமாயணத்தில் பெற்றோரைத் தோளில் சுமந்து சென்று தசரதனால் கொலை செய்யப்பட்ட இளைஞன் பற்றிப் படித்திருப்பீர்கள். இவனை வடமொழியில் ஷ்ராவன் என்று கூறுவர். இதையே கம்பன் சிரவணன் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பார்) இந்த ஷரஹனாதான் தமிழில் சரவணா என்று அழைக்கப்பட்டது.

பள்ளி அல்லது விகாரைகளில் மதிப்புமிக்க மாணவன் என்றால் எந்தப் பெற்றோருக்குத்தான் ஆசை வராது. ஆகையால் தொடர்ச்சியாக தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப சரவணா என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 2500-ஆண்டு பழமை வாய்ந்த இந்த சரவணா என்ற பெயர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் சைவம் வந்த பிறகு சிவனின் பையனாக முருகன் என்று மருவியது முருகனும் இளையவனாகையால் ஏற்கெனவே லட்சக்கணக்கில் உள்ள சரவணாக்களையும் முருகனோடு கோர்த்துவிட இறுதியில் சரவணாவும் முருகக்கடவுள் பெயராக மாறிவிட்டது.

(ஹரத்தோ அஹிம்ச ப்ராஹ, சபி ஜிவ் பிரேம ஜவதோ-)

அன்பே அனைவருக்குமான உயிர்மூச்சு அனைத்து உயிரிலும் அன்பைக்காண்-.

- மஹாவீரர்

தமிழ் ஓவியா said...

தள்ளுபடி வியாபாரம்



அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!

ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர்!

- க. அருள்மொழி,
குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் மாதிரி வரைபடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்


லக்னோ, மே 6- நரேந் திர மோடி பிரசாரம் செய்த மேடையின் பின்னால் ராமன் படம் வரையப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந் தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பைசாபாத் மாவட்ட தேர்தல் அதிகா ரிக்கு மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் அனுப்பி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத் தில், பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அவர் அந்த தொகுதியில் போட்டி யிடும் பா.ஜனதா வேட் பாளர் லாலு சிங்கை ஆதரித்து பேசினார்.

மேடையின் பின்னணி யில் ராமன் படம் மற்றும் அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமன் கோவிலின் மாதிரி வரைபடம் ஆகியவை வரையப்பட்ட பேனர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் மோடி பேசு கையில், ராமன் கோவில் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ராமன் வரலாறு மற்றும் வழிகாட்டி நெறி முறைகளை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா வேட் பாளரை வெற்றி பெற செய் யுமாறு கேட்டுக் கொண் டார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார்.

அப்போது பொது மக்கள் ஜெய் சிறீராம் என்று முழக்கம் எழுப்பினர்.

அரசியல் கட்சி தலை வர்கள் தேர்தல் பிரச்சாரத் தின்போது மதம் சார்ந்த அல்லது கடவுள் படங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. எனவே மோடி பேசிய மேடையின் பின்ன ணியில் ராமன் மற்றும் மாதிரி வடிவ கோவில் படம் அமைக்கப்பட்டிருந் ததை கவனித்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, பைசாபாத் மாவட்ட தேர் தல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப் பினார். இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவே செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79779.html#ixzz30zFyj4oq

தமிழ் ஓவியா said...


பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கம்


பெங்களூரு, மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் ஜி.வி. சிறீராம ரெட்டி செய்தியாளர்களி டையே கூறியிருப்பதாவது:

:உடுப்பி சிறீகிருஷ்ண மடத்தில் பிராமணர்களுக் குத் தனி சாப்பிடுமிடமும், பிராமணர் அல்லாதவர் களுக்குத் தனி சாப்பிடு மிடமும் என்கிற பங்கி பேதா என்னும் வர்ணா சிரம முறைக்கு எதிராக பெங்களூரிலும், உடுப்பி யிலும் தொடர் ஆர்ப்பாட் டங்கள் நடத்திடவும்,. மற்ற மாவட்டத் தலைநகர்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசுஉறுதியாக நட வடிக்கை எடுத்து, இம் முறையை தடை செய்திட வேண்டும்.

மாநிலத்தின் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் படுத்துப் புரளும் மட ஸ்நானா என்னும் இழி வான நடைமுறைக்கும், சாப்பிடுமிடத்தைப் பிரிக் கும் இக்கேவலமான பங்கி பேதா நடை முறைக்கும் கர்நாடக முதல்வர் சித்த ராமய்யா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர் பார்த்தோம். ஆயினும் எது வும் நடை பெறவில்லை. இவ்வாறு ஜி.வி.சிறீராம ரெட்டி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79780.html#ixzz30zGKXZ2c

தமிழ் ஓவியா said...


இது உண்மையா?


சிதம்பரம் நடராசர் கோயிலில் பல உண்டியல்கள் தமிழக அரசால் வைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபின் இதுவரை உண்டியல்கள் திறக்கப்படவில்லை. தற்பொழுது, தீட்சிதர்கள் உண்டியல்களைத் திறக்க முயற்சி செய்தனர். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமுகர் ஒருவர் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் - இந்து சமய அறநிலையத்துறைக்கும் கடிதம் எழுதி - முயற்சி செய்து, தீட்சிதர்கள் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். உண்டியல் திறப்பது அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையா?

Read more: http://viduthalai.in/e-paper/79782.html#ixzz30zGVsV4u

தமிழ் ஓவியா said...


ஒரு பொதுவுடைமைவாதியின் பார்வை

அய்யா கி.வீரமணி அவர்களுக்கு நலம்! தங்கள் நலம் இயக்க தோழர்கள் நலம் அறிய ஆசை.

26.4.2014 இல் தங்கள் கையால் புத்தக திருவிழாவில் பெரியார் புத்தகர் விருதைப் பெற்றேன். நான் பழைய பொதுவுடைமை வாதி. இத்தனை காலமும் பொதுவுடைமை இயக்கத்தில் என்னுடைய காலம் சென்றா லும் தோழமை என்ற உறவை தங்கள் இயக்கத்தில் பார்க்கின்றேன். பெரியார் வரலாறு படித்திருக்கின்றேன்.

பெரியார் ஒருவர் இந்த நாட்டில் பிறந்த தால் தான் சாதிய உணர்வு குறைந்திருக் கிறது. மூடநம்பிக்கை இருக்கக்கூடாது என்பதை தன் உயிர் மூச்சுவரை பாடுபட்ட மாபெரும் மனிதர். ரஷ்யாவில் லெனின் தமிழகத்தின் ஓர் லெனின் என்று ஒப்பிட லாம். அந்த அளவிற்கு சோவியத் நாடு சென்று அந்த பூமியை, மக்களைப் பார்த்து விட்டு அப்படி ஓர் புதிய பூமி இந்தியாவில் வரவேண்டும் என்று பொதுவுடைமை பிரச்சாகராக மாறிய பெரியாரை பொது வுடைமை இயக்கம் ஏன் நேசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

கிணற்று தவளையாகவே இருந்து விட் டோமே என்று என்னும் நிலை ஏற்பட்டது. பழையகால பொதுவுடைமையாளர்கள் தோழமை என்ற உணர்வோடு செயல் பட்டார்கள்.

இயக்கத்தில் கடுமையான விமர்சனம் இருந்தாலும் தோள்மீது கைபோட்டு சிரித்தபடி வருவார்கள்.

பழைய தோழர்கள் மறைந்த பின்பு புதிய தோழர்கள் நிலைப்பாடு தலை கீழாக மாறி விட்டது. போட்டி பதவிகளை கொள்கை நடை முறையை செயல்படுத் தும் விதத்தில் மாற்றம் பல்வேறு குணக் கேடுகள்.

26 ஆண்டு கால ஜீவா படிப்பக விழா வில் கலந்து கொள்ள எந்த தலைவர்களும் வரவில்லை. தோழர் பொன்னீலர், தோழர் ராதா கிருஷ்ணன், தோழர் கருப்பசாமி, தோழர் பரிணாமன் தவிர இதையும் பெரியார் திடலில் வைத்து நினைத்துப் பார்க்கின்றேன்.

பள்ளிகளிலும் பொது மேடைகளிலும் ஜீவா, பெரியார், காந்தி, காமராசர் வாழ்ந்த சரித்திரத்தை சொல்லி புத்தகங்களை வாசிக்கச் சொல்லுவேன்.

புத்தகர் விருது மூன்று பொதுவுடைமைத் தோழர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொருவரின் வாழ்க்கை குறிப்பை வாசித்த அற்புதம் ஒருபக்கம். அதோடு மேடையில் பேச வாய்ப்புக் கொடுத்தது அதைவிட உற்சாகம்.

பெரியார் விருதை வாங்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி வாழ்க்கையில் பிறந்த பிறவியில் நமக்கு கிடைத்த பாக்யம் என நினைக்கின்றேன்.

தீண்டாமை ஒழிப்பு, பொருளாதார நிலைபாடுகள் மாறிவிட்டால் மனிதகுலம் ஒரு சமமான சமுதாயமாக மாறிவிடும். காலத்தில் இரு இயக்கங்களும் ஒத்துப் போக முடியாததற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன்.

ஒரு சிலர் பொதுவுடைமை இயக்கத்தில் பிராமணர்கள் தலையீடு காரணத்தால் பொதுவுடைமை இயக்கம் பின்னடைந்து விட்டதாக கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நம்பூதிரிபாட் போன்ற பல தோழர்கள் இயக்கத்திற்காக தன் சொத்தையெல்லாம் தாரை வார்த்ததையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்கள் வேறு இயக்கத்தில் இருந்திருந்தால் அவர்கள் எவ்வளவு பதவிகளைப் பெற்றிருப்பார்கள்!

பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிரிந்ததின் விளைவு. இரு இயக்கங்களும் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லியே காலத்தை கழித்து தோழர்களையும் சிந்திக்க விடாமல் சகோதர சண்டையாக மாறி ஊரே சிரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
பொதுவுடமையாளர்கள் எளிமையை மறந்து எப்படியாவது யாருடன் சேர்ந்து தொகுதிகளைப் பற்றி, சுகம் கண்டதின் விளைவு இன்று இயக்கம் தனிமைப்பட்டு கண் போன பின் சூரிய நமஸ்காரம் என்ற நிலை ஏற்பட்ட நிலை.

தி.க தோழர்கள் பதவி என்ற நிலை இல்லாமல் பெரியாரின் கருத்துக்களை தன்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்து அவர்கள் இயக்கத்தை தக்கவைத்து வருகி றார்கள். அதில் உணர்வு பூரணமான தோழர் கள் கடமை உணர்வோடு வேலை செய் வதை கண்கூடாக பார்க்கிறேன். லட்சிய வெறியோடு இருப்பதைப் பார்க்கின்றேன். பழகும் விதத்திலும், மரியாதை கொடுக்கும் விஷயத்தை அவர்களிடம் படிக்க வேண்டும். இந்த இயக்கத்தை உடைத்து வெளி யேற நினைத்தால் அதில் சுய நலநோக்கம், இயலாத்தன்மை, கடமையை செய்ய நினைக்காதவர்களாக இருக்கலாம்.

புத்தக விருதில் அய்யா வீரமணி பேசும் பொழுது நாங்கள் கொடுக்கும் விருது அரசியல் பார்த்து அல்ல. உண்மையிலேயே கொடுக்க வேண்டியவர்களுக்கு, திறமைக் காக கொடுக்கிறோம் என்று கூறிய வார்த்தை என்னை நெகிழ வைத்து விட்டது.

பள்ளிகளிலும், இலக்கிய கூட்டங்களில் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பே ஓங்கி குரல் கொடுப்பேன். திராவிடர் கழக இயக்க கொள்கைக்கு துணை நிற்பேன். மார்க்சிய கருத்துக்களை முன்னெடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

- இரா. சண்முகவேல், கீழக்களங்கள்

Read more: http://viduthalai.in/page-2/79795.html#ixzz30zH3jmbx

தமிழ் ஓவியா said...


இவர்கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?

உத்தரப்பிரதேசம், பைசாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் மோடி. மேடையில் ராமர் படம்; கிரீடம் வைக்கப்பட்ட ராமர் படம். மோடி பேசும் ஒலிபெருக்கிக்கு பின் னால், ராமர் படம் இருக்க வேண்டும் என முடிவு செய்து, பேனர் வைக்கப் பட்டுள்ளது.

மேடையில் பேசும் போது, மோடிக்குப் பின்னால், ராமரின் உருவத்தை மறைப்பதுபோல் மோடி நிற்பதற்கும், ராமரின் தலையில் உள்ள கிரீடம், மோடி தலையில் இருப்பது போல, மேடைக்கு எதிரே உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம், அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அங்கே பேசிய மோடி, தன் வாழ்நாள் முழு வதும், ஊழலை ஒழிப்பதற்கு போராட இருப்பதாகவும், ராமர் பிறந்த நிலத்தில் இருந்து இதனைக் கூறுவதாகவும் பேசி உள்ளார். காந்தியை வேறு சாட்சிக்கு அழைத்து உள்ளார். காந்தி ராமராஜ்யம் வேண் டும் என கனவு கண்டாராம்;

அதனைப் போல், இவர் ராமராஜ்யம் அமைத் திட வாக்களியுங்கள் என்கிறார். பைசாபாத் தொகுதிக்கு உட்பட்டதுதான் அயோத்தி நகரம். ராமர் அங்கே தான் பிறந்தார் என்று சொல்லி, 400 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்த இடம் அந்த தொகுதியில்தான் உள்ளது.

அத்தகைய பதற்றமான ஒரு பகுதியில் தான், மோடி, ராமர் படத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அப்பட்டமாக, மத உணர்வோடு பேசி உள்ளார். இது குறித்து, அந்த கட்சியின் இன்னொரு யோக்கியர் அருண் ஜெட்லியிடம், தொலைக்காட்சி ஊடகம் கேள்வி கேட்டதற்கு, ஜெட்லி சொல்கிறார்; மோடிக்கு ராமர் படம் வைத்தது தெரிந்திருக்காது; அந்த பகுதி நிர்வாகி கள் வைத்திருப்பார்கள்;

இனிமேல், இதுபோல் செய்யாதீர்கள் என அறிவு றுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார், சட்ட நிபுணர் என கூறப்படும் ஜெட்லி. மத சின்னங்களை, தேர்தல் நேரத் தில் பயன்படுத்தக்கூடாது என்ற தேர் தல் விதிகூட தெரியாமலா இருக் கிறார்கள், பிரதமர் கனவு காணும் மோடியும், அவருக்கு துணை நிற்கும் ஜெட்லியும். இவ்வாறு மதச் சின்னங்களை பயன்படுத்துவது தவறுதானே என செய்தியாளர் ஜெட்லியிடம் கேட் கிறார். அதற்கு, ஜெட்லி, இது தவறு என்று சொல்ல முடியாது; பிழையான முடிவு என்று வேண்டுமானால் சொல் லலாம் என்கிறார். சட்டம் படித்தவர், வார்த்தை விளையாட்டைக் காட்டுகிறார்.

1992-இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது, அதில் கலந்துகொண்ட அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள், எங்களை மீறி இந்த செயல் நடந்து விட்டது என்றுதானே கூறினார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம், மசூதி இடிப்பில் கலந்து கொண்ட கரசேவர்களின் பொறுமை யின்மையை கணக்கில் எடுக்காதது பிழைதான்; ஆனால், அதற்கு அந்த இயக்கத்தவர் பொறுப்பு என கூற முடியாது என்று சொன்னவர் தான் அத்வானி (இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2011).

இப்போது, ஜெட்லியும் பிழை என்கிறார். கலவரம் நடைபெற்ற முசாபர் நகர் பகுதியில் ஜாட் மக்களைப் பார்த்து, நீங்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசிய மோடியின் வலது கரம், அமீத் ஷாவை, உ.பி.யில் எங்கும் பேசக்கூடாது என தடைவிதித்த தேர்தல் ஆணையம், பின்னர் அதனை தளர்த்தியது.

இப் போது, அதே, அமீத் ஷா, ஆசாம்கர் தொகுதியில் பேசும் போது, இந்த பகுதிதான், தீவிரவாதிகளின் தளம் என முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஆசாம்கர் பற்றி பேசுகிறார். ஆக, மோடி அலை எங்கும் வீச வில்லை என்பது தெரிந்ததும், குஜராத் வளர்ச்சி என்ற கோஷம் வீக்கம்தான் என்பது தோலுரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளதை, தேர்தல் ஆணையம் தடுக்க தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறார் மோடி.

இப்போது இறுதிக்கட்டமாக, ராம ரையும், ராமராஜ்யத்தையும், பயன் படுத்தி, தனது சுயரூபத்தை காட்டி யுள்ளார் மோடி. இதில் மிக முக்கிய மான விஷயம் எதுவெனில், பைசா பாத் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் லாலுசிங், பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். ஏற்கனவே, முசாபர் நகர் தொகுதி யில் அந்த கலவரத்துக் காரணமானவர் தான் பாஜக வேட்பாளர்;

2002 குஜராத் கலவரம் நடைபெற்றபோது, முதல்வ ராக இருந்தவர் மோடி; உள்துறை அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. இப்போது சொல்லுங்கள், இவர் கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும் என்று?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79800.html#ixzz30zHE1e9R