கூத்தாண்டவர் கோயில் மூடத்தனம் ஒழியட்டும்!
சமூகத்தில் அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட வர்கள் ஒரு கால கட்டத்தில் கேலிக்குரியவர்களாக இழிவுபடுத்தப்பட்ட நிலையில் இருந்தனர்.
மனிதன் நாகரிகம் பெற்று வருகிறான் என்பதற்கு அடையாளம் அவர்களையும் மனித ஜீவனாக மதித்து அங்கீகரித்திருக்கும் நிலைப்பாடாகும்.
அரவாணி என்ற பெயரைத் தூக்கி எறிதல்
என்பதேகூட முதற்கட்டப் புரட்சியே! அவர்களை திரு நங்கைகள் என்று தமக்கே
உரித்தான தமிழ் ஆற்றலால் திருநங்கை என்று பெயர் சூட்டியவர் மானமிகு கலைஞர்
அவர்களே! அடுத்த கட்டமாக அவர்களுக்கென்று நல வாரியம் அமைக்கப்பட்டதும் அவர்
ஆட்சியில்தான்.
திருநங்கைகள் வாழ்வில் ஒரு முக்கிய
திருப்பம் - உச்சநீதிமன்றம் அவர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து
அறிவித்ததாகும். (15.4.2014). நீதிபதிகள் கே.எஸ். இராதா கிருஷ்ணன்,
திரிபாதி ஆகிய நீதிபதிகள் இதன் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து
தேசீய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அவர்களைப் பிற்படுத் தப்பட்டோர்
பட்டியலில் இணைத்துக் கொள்ள ஆணையம் முன் வந்திருப்பது - மேலும் ஒரு கூடுதல்
சிறப்பும் - அவர்களின் வளர்ச்சிக்கு ஆக்க ரீதியான செயல்பாடும் ஆகும்.
கோவை - சுந்தராபுரத்தில் திராவிடர்
கழகத்தின் சார் பில் நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாட்டில் (13.4.2013)
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சட்ட வடிவம் கிடைக்கப் பெறப் போகிறது
என்று நினைக்கும் பொழுது திராவிடர் கழகம் இறும்பூதெய்துகிறது.
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்
மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கை யருக்கும் வாய்ப்பு
அளிக்கப்படல் வேண்டும் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில்
திருநங்கையர்க்குக் குறிப் பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்
என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை நிதி உட்பட அனைத்து
வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில
அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் கோவைப் புரட்சிப் பெண்கள் மாநாட்டுத்
தீர்மானமாகும்.
இந்தியாவிலேயே இரு திருநங்கைகள் மக்களவைத்
தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டிப் போடுகின்றார் என்பது தமிழ் மண்ணுக்கே
உரித்தான புரட்சியின் வாசமாகும்.
இந்த நேரத்தில் இன்னொன்றைச் சுட்டிக்
காட்ட வேண்டியது நமது கடமையாகும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் முக்கியமாக ஒரு கருத்தினை
வலியுறுத்தினார்.
இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள்
இருக்கின்றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு
மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள்
விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும்.
அவர்களில் படித்தவர்கள் இந்த வகையில் வழிகாட்ட வேண்டியது அவசியமாகும்.
கழகமும் இதில் கவனம் கொள்ளும் (விடுதலை 16.4.2004) என்று
குறிப்பிட்டிருந்தார் திராவிடர் கழகத் தலைவர்.
இதனை இந்த நேரத்தில் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கும் காரணம் உண்டு.
திரு நங்கைகள் இதர பிற்படுத்தப்பட்டோர்
பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர்
ஆணையம் முடிவு செய்த செய்தி வெளிவரும் அதே நாளிலே (14.5.2014) இன்னொரு
செய்தியும் நாளேடுகளில் வெளிவந்துள்ளது.
விழுப்புரத்தையடுத்த கூத்தாண்டவர்
கோயிலில் திருநங்கைகள் நடத்திய கேலிக்குரிய மூட நிகழ்வுகளாகும்.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக் கும் இடையே சண்டை நடந்தபோது
சண்டையைத் தொடங்குவதற்கு பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் யுத்தத்
தேவதையைத் திருப்திப்படுத்துவதற்கு களப்பலி கொடுத்தனர்.
இதற்கு 32 சாமுத்திரிகா லட்சணமும் கொண்ட
ஆண் மகனைப் பலி கொடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமானவர்
அர்ச்சுனனுக்கும், நாகக் கன்னிக்கும் பிறந்த அரவான் மட்டுமே!
கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து அரவானை
மண முடித்தார். மறுநாள் அரவான் களப்பலி கொடுக் கப்படுகிறார். அப்போது தலை
துண்டாகியும் உயிர்ப் போக வில்லையாம். அவரது கடைசி ஆசையாக மகாபாரதப் போரில்
எட்டாவது நாள் சண்டை அரவானுக்குக் கொடுக்கப்படுகிறது.
அந்த யுத்தத்தில் வெறும் தலையுடன்
கத்தியைக் கவ்விக் கொண்டு குதித்துக் குதித்துப் போரிட்டார் இதனால் அரவான்
கூத்தாண்டவர் என்று பெயர் பெற்றாராம்.
அந்தக் கூத்தாண்டவர் கோயில் உளுந்தூர்ப்
பேட்டையையடுத்த கூவாகம் என்னும் ஊரில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்
சித்திரைத் திருவிழாவில் திருநங்கை கள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது. தங்களை மணப் பெண்ணாக அலங்கரித்துக் கொள் வார்கள்
திருநங்கைகள் அந்தக் கோயில் பூசாரிதான் இவர்கள் அத்தனைப் பேர்களுக்கும்
தாலி கட்டுவார். இரவு பூராவும் திருநங்கைகள் கும்மியடிப்பது உள்ளிட்ட ஆட்ட
பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
விழாவின் கடைசி நாள் தேரோட்டம் - அரவான்
களப்பலி நடைபெறும். திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவார்கள். தாலியை
அறுத்து எறிவார்கள் இத்தியாதி... இத்தியாதி. இந்த மூடநிகழ்ச்சியில்
பங்கேற்க இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் திரு நங்கைகள் வருகிறார்கள்
என்பது எவ்வளவு அநாகரிகமானது!
காலம் மாறி விட்டது. அரவாணிகள்,
திருநங்கைகளாகப் பரிணமித்து விட்டார்கள் - முன்னேற்றத் திசையில் அடி
எடுத்து வைக்கும் நிலையில், இந்த அநாகரிக மூடத்தனச் சேற்றிலிருந்தும்
வெளியேறினால் தான் முழுமையான விடுதலை கிடைக்கும். (அரவான் என்ற
அடிப்படையில் தான் அரவாணியும் வந்தது) இந்த மூடத்தனம் நீடித்தால்
மறுபடியும் பழைய நிலைதான் திரும்பும் - எச்சரிக்கை! படித்த திருநங்கையர்கள்
நல்ல வகையில் அவர்களுக்கு வழி காட்டுவார்களாக!
----------------------"விடுதலை” தலையங்கம் 15-5-2014
----------------------"விடுதலை” தலையங்கம் 15-5-2014
29 comments:
பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!
கோவில் விழாவில் தகராறு இளைஞர்களுக்கு கத்திக்குத்து!
காரைக்குடியில் கோவில் விழாவில் ஏற்பட்ட தகரா றில் 2 இளைஞர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி பர்மா காலனி அழகப்பா நகரில் பெரிச்சியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது. விழாவில் உரி யடிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அதே பகுதியை சேர்ந்த சங்குப்பாண்டி என்பவர் உரிஅடித்தாராம்
அப்போது அவரை பாரி நகரைச் சேர்ந்த விஜயக்குமார் (வயது 24), வெங்கடேஷ் (26) ஆகி யோர் விசில் அடித்துகேலி செய்தனராம். இதில் ஆத் திரம் அடைந்த சங்குப் பாண்டி தனது நண்பர்கள் துரைப் பாண்டி, மணி கண்டன், காளி தாஸ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார், வெங்க டேஷ் ஆகியோரைத் தாக்கி கத்தியால் குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த இரு வரும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து சங்குப்பாண்டி, காளிதாஸ், ரமேஷ் ஆகி யோரை கைது செய்தார். துரைப் பாண்டி, மணிகண்டன் ஆகியோரை தேடி வருகிறார். கோவில் வழிபாடு தொடர்பாக மோதல்!
தம்மம்பட்டியை அடுத்த மேல்வாஞ்சாரை கிராமத்தில் ராமர் கோவில், பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நடுவஞ்சாலை, பழமரத் தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது கோவில் பூசாரி கோவிலின் சாவியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களி டையே வாக்குவாதம் ஏற் பட்டது. இந்த நிலையில் நடுவஞ்சாரை, பழமரத் தூர் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த சிலருக்கும், மேல் வாஞ்சாரை கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை யொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதில் சின்னக்குழந்தை, கோவிந்தன் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதுதொடர்பாக தம் மம் பட்டி காவல்துறை யினர் 3 கிராமங்களையும் சேர்ந்த 15க்கும் மேற் பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vlyKuPo
கோவில் விழாவில் பயங்கர மோதல்!
பழனி அருகே உள்ள இந்திராநகர் நாயக்கர் தோட்டம் பகுதியில் பிள் ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வுக்காக வரிவசூல் செய்த போது பிரபாகரன்(29) என்பவர் சென்ற வரு டத்தை விட இந்த வருடம் அதிகமாக வரி கேட் கிறீர்கள்.
எனவே நான் சென்ற வருடம் கொடுத்த வரிதான் கொடுப்பேன் என்றார். ஆனால் அவர்கள் வரி வாங் காமல் சென்று விட்டனர்.
இந்த நிலையில் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்த போது பிரபாகரன் தனது நண்பர்கள் ராஜா, பெரிய சாமி, சுரேஷ், முனி யாண்டி, நிலவாழன், காளீஸ்வரன் ஆகியோரு டன் சென்றார். அப்போது அவர்கள் குடி போதையில் கலை நிகழ்ச் சியை நடத்த விடாமலும், மைக்செட் மற்றும் டியூப் லைட்களை உடைத்த தாகவும் கூறப்படுகிறது.
இதனை ஆனந்தகுமார், வேலப்பன், செந்தில், ஆனந்தம், நடராஜ், குமார், மகுடீஸ் வரன் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையை சிகிச் சைக்காக சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து பிரபா கரன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தனித் தனியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்
Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vm5uFb6
அழகரை தரிசிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!
மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று காலை இறங்கினார். அழகரை தரிசிக்க மதுரை மற்றும் விருதுநகர், சிவ கங்கை, போன்ற மாவட் டங்களில் இருந்து பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர்.
தல்லாகுளம் வந்த போது ஆத்திக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி, சூரியா (32) என்பவர் அழகரை தரிசிக்க சென்றார். அப்போது கூட் டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டான். இது குறித்து சூரியா காவல்துறை யில் புகார் செய்துள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vmCYeXc
பார்ப்பன சாதி
பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும். - (விடுதலை, 29.5.1973)
Read more: http://viduthalai.in/page-2/80348.html#ixzz31vmOnuX8
விடுதலை செய்தி எதிரொலி: நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!
விடுதலை செய்தி எதிரொலி:
நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தமிழ்நாட்டி லுள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்; பல போராட்டங்களையும் நடத்தினர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம். அதனால் சமூக ஆர்வலர்கள் பலர் திராவிடர் கழகத்தை அணுகினர். இது சம்பந்தமாக விடுதலை (27.3.2013) குறிப்பிட்டிருந்ததாவது:
விடுதலையின் பெருமையை - திராவிடர் கழகத்தின் பணிகளை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையங்களைப் பற்றி அந்தக் கோட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத் தார்கள். முதலில் நாம் நாகர்கோயில் டவுன் (Nagercoil Town) ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத் தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கின்றோம்.
குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோயிலின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், இங்கே எந்த அடிப் படை வசதிகளும் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் பல கையில் ஓய்வெடுக்கின்ற நிலையை இங்கே காணலாம்.
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்ற ஹப்பா, பிலாஸ்பூர் விரைவு வண்டிகள் நாகர் கோயில் சந்திப்பு நிலையத்துக்குச் செல்லாமல் இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. இத்தகைய முக் கியத்துவம் இருந்தும் இங்கே எவரும் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்வதே இல்லை என்று அந்த நிலைய நிரு வாகமே சொல்கின்றது.
இந்த நிலையத்திலுள்ள குறை பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, உடனே உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார், இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தான் ஆகின்றது. ரயில்கள் ஓடத்துவங்கிய பின் 30 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்தின்மீது தெற்கு ரயில்வே தலைமையின் பார்வை விடுதலையின் பணியால் விழுந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார்.
அந்தக் கட்டத்தில் கன்னியாகுமரியி லும் பெரும் குறைபாடு காணப்பட்டது. பயணிகளுக்கு கழிவறை இல்லை என்பதே அது. பொது மேலாளர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு, பூட்டப் பட்டிருந்த காத்திருப்போர் அறையை திறக்க வைத்தார். இதன் விளைவாக பயணிகள் நிம்மதியான மூச்சை விட்டனர். மேலும், நாகர்கோயில் டவுன் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள்.
தொடர்ந்து, நாகர்கோயில் டவுன் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நபர் மாற்றப்பட்டார். காண்ட்ராக்ட் பணிகள் விரைவாகவே நடந்தன. இங்கே ரயில்வே கிராசிங் வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி என ரூ. 2 கோடி செலவில் மேம் பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது. ஜனவரி 31 ஆம் நாள் திருவனந்தபுரம் கோட்ட புதிய மேலாளர் சுனில் பாஜ்பாய், கோட்ட ரயில்வே பொறியாளர் சிறீகுமார், கோட்ட உதவிப்பொறியாளர் ஆனந்த் ஆகி யோர் நாகர்கோயில் டவுன் நிலையத் துக்கு வருகைபுரிந்து ஆய்வு செய் தார்கள்.
முப்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த ஒரு நிலையம், திராவிடர் கழகத்தின் தலையீட்டால் விரைவாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள், திராவிடர் கழகத்துக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றார்கள்.
- த.அமலா, திருச்செந்தூர்
Read more: http://viduthalai.in/page-2/80351.html#ixzz31vmmfht1
புதிய இ-மெயில் சேவை பிஎஸ்என்எல் அறிமுகம்
ஜெய்ப்பூர், மே 16- இந்தி யாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக் கப்பட்ட புதிய இ-மெயில் சேவையை அறிமுகப்படுத் துகிறது. வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாக வுள்ள இந்த இ-மெயில் சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூரை சேர்ந்த டேட்டா இன் போசிஸ் அய்.டி. நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள் ளது.
முதற்கட்டமாக, பி.எஸ். என்.எல் அறிமுகம் செய்யும் இந்த எக்ஸ்-ஜென் பர்சனல் மற்றும் எண்டர்பிரைஸ் இ-மெயில் சேவை பி.எஸ்.என். எல் பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு பெற்றுள்ள வர்களுக்கு இலவசமாக வும், மற்றவர்களுக்கு கட் டண முறையிலும் வழங்கப் படுகின்றன.தற்போது கூகுள், யாஹூ, ரெட்டிஃப் போன்ற நிறுவனங்கள் வழங் கும் இ-மெயிலில் இல்லாத பல புதிய வசதிகள் இதில் இருப்பதாக டேட்டா இன் போசிஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரைட்ஸ் மேனேஜ்மண்ட் என்ற வசதியில், இ-மெயில் அனுப் புபவரே, அதை பெறுபவர் அந்த மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை மற்றும் பிரிண்ட் செய்வதை கட்டுப்படுத்த முடியும். அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் அந்த மெயில் சென்றடையும் வகையில் முன்னதாகவே ஷெடியூல் செய்தும் அனுப்பலாம்.
குறுஞ்செய்தியும் அனுப்ப முடியும். அனைத்து மெயில் மற்றும் மெசேஜ்களும் சர் வரில் தானாகவே சேமிக்கப் படுகின்றன. இதற்காக இல வசமாக 1 ஜி.பி. வரையி லான விர்ச்சுவல் ஸ்டோ ரேஜூம் வழங்கப்படுகிறது. பயனாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில் கள் வரை அனுப்ப முடியும்.
ஒவ்வொரு முறையும் மெயிலை லாக் இன் செய் யும் போது பாஸ்வேர்டை ஞாபகப்படுத்த தேவை யில்லை. இதற்காக டூவல் ஆத்தென்டிகேஷன் என்ற அதிக பாதுகாப்புடன் கூடிய ஓ.டி.பி (ஒன் டைம் பாஸ் வேர்டு) வழங்கப்படுகிறது. தற்போது புழக்கத்தில் இருக் கும் இ-மெயில் சேவைக ளுக்கு பிஎஸ் என்எல்-ன் புதிய அறிமுகம் எக்ஸ்-ஜென் ஒரு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Read more: http://viduthalai.in/page-8/80366.html#ixzz31voO2evj
கடவுள் இல்லை!
ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா
கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்
கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)
மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்
உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்
கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்
Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voXQLUs
பார்ப்பனர் பற்றி...
சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா
திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப் பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31vojo1cu
பேய்க்கு திருமணம்!
பேய்க்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டால் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில் இங்கு இதுவும் நடக்கும் - இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கும்.
ஜாம் நகரில் பத்தாண்டுகளுக்கு முன்பு சாரதா என்ற 16 வயது பெண்ணுக்கும் வாகனர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜகதீஸ் சந்திரா சோலங்கி என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணம் நடக்கும் முன்னரே மணமகள் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார். இதனால் திருமணம் தடைபட்டு விட்டது. இத்துடன் கதை முடிந்து விட வில்லை. இனி மேல்தான் ஆரம்பமாகிறது.
இறந்து போன சாரதாவின் ஆத்மா சாந்தியடைய வில்லை. அவள் பேயாக அலைந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவள் குடும்பத்தினர் நம்பினார்கள்.
அவளுடைய தாயையும், சகோதரனையும் அவளுடைய பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாகவும் அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பையனையே திருமணம் செய்துக் கொள்ள விரும்பு வதாகவும் தாயார், சகோதரன் மூலம் அந்த பேய் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தப் பேயைக் கண்டு குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பீதியடைந்தார்கள்.
பேயை வீட்டை விட்டு விரட்டுவதற்கு திட்டமிட்டனர். பேய்க்கு திருமணம் நடத்தி வைத்தால் பேய் கணவனுடன் வீட்டை விட்டு ஓடிவிடும் என்று கருதி பேய் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு சாரதாவின் சிலை செய்யப்பட்டு மண வறையில் சாரதாவின் சிலை அமர்த்தப்பட்டது. மணமகள் வேண்டுமா? எங்கு போவது? உடனே ஒரு கடவுளின் சிலை மணமகனாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மணமகள் வேறு யாரும் அல்ல. எல்லாம் வல்ல கோபிகா கிருஷ்ணன்தான். கிருஷ்ணனின் தோழர்களான மற்ற பொம்மைகளும் அலங்காரம் செய்யப்பட்டு மணவிழாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பார்ப்பனர்கள் மந்திரம் ஓதி சாரதா - கிருஷ்ணன் திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது.
தடபுடலான விருந்தும் நடைபெற்றது. திருமணத்திற்கு ஏற்கெனவே சாரதாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்த ஜகதீஸ் சந்திர சோலங்கியும் வந்திருந்தார் - தன் மனைவியுடன்.
Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voq0olX
ஏழு மொழிகள்
1. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்
2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்
3. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்
4. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்
5. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.
6. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
7. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல்
- தந்தை பெரியார்
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vozv6Uj
தந்தை பெரியார் பொன்மொழிகள்
தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக, இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vp8gHmM
சாத்தாணியின் புரோகிதம்
நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.
அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.
அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்
- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpEPqnP
இராவணனுக்குப் பிறந்த பிள்ளை
இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!
இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.
இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.
இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!
-புரட்சிக் கவிஞர்
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpVZwGW
தேர்தல் முடிவுகள் குறித்து
தேர்தல் முடிவுகள் குறித்து தமிழர் தலைவர்
கலைஞர் அறிக்கை, பேராசிரியர், மு.க. ஸ்டாலின், முதல் அமைச்சரின் பேட்டிகள்!
சென்னை, மே 17- தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு :
மிகப்பெரிய அதிர்ச்சித் தோல் வியை நமக்குத் தந்த இந்த தேர்தல் முடிவுகள் நமது தேர்தல் ஜனநாயகத் தில் புதியதல்ல; வழமையானதுதான்.
இது மக்கள் தீர்ப்பு என்பதால் அதை மனம் தளராது ஏற்று, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிப் பெற்ற அனைவருக்கும், கட்சி - ஆட்சி தலைமையேற்போருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் - கொள்கைகளில் மாறுபட்டாலும் கூட!இதன் விளைவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்தால், அதனை என்றும் வரவேற்போம்!இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
கலைஞர் அறிக்கை
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.
மக்களின் இந்த முடிவை, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன் னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. வெற்றி கண்டு வெறி கொள்வது மில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.
இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் க. அன்பழகன்
எங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. தோல்விக்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை என்றார் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்.
தளபதி மு.க. ஸ்டாலின்
தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். தேர்தல் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். தி.மு.க. மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றும் என்றார் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
முதலமைச்சர் பேட்டி
கேள்வி: மத்திய அமைச்சரவையில் இடம் பெறு வீர்களா?
முதல்வர்: அப்படிஒரு சூழ்நிலை இல்லை.
கேள்வி: நாடாளுமன்றத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?
முதல்வர்: தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை நிறைவேற்றப் பாடுபடுவோம்.
- முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா
அளித்த பேட்டி 16.5.2014
Read more: http://viduthalai.in/e-paper/80424.html#ixzz321X8sfsB
கோயில் திருவிழா கூத்துகள்!
சென்னிமலை கோவில் தேர் விபத்து சென்னிமலையில் கோவில் தேர் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட் டது. இதில் ஓட்டுநர் கிளீனர் உயிர் தப்பினர்.
சென்னை துறைமுகத் தில் இருந்து ஒரு டாரஸ் லாரி 2 கண்டெய்னர்களில் கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம், காங்கயம் நோக்கி சென்று கொண்டு இருந்தது லாரியை நாகை மேலத்தெருவை சேர்ந்த முருகவேல் (வயது 25) என்பவர் ஓட்டிச்சென்றார். கிளீனராக பாண்டியராஜன் என்பவர் இருந்தார்.
இந்த லாரி நேற்று மதியம் ஈரோடு மாவட் டம், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே ஒரு கார் வந்தது. இதனால் லாரி ஓட்டுநர் பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் எதிர்பாராத வித மாக லாரியில் இருந்த 2 கண்டெய்னர்களும் சரிந்த தால் கோவில் தேர் மீது ஒரு பக்கமாக லாரி கவிழ்ந்தது. இதில் தேர் மீது மூடி வைத்து இருந்த தகர பலகை சேதம் அடைந்தது. லாரியில் இருந்த கொப் பரை தேங்காய்கள் கீழே சிதறின.
அப்போது முருகவே லும், பாண்டியராஜனும் லாரியில் இருந்து கீழே குதித்தார்கள். இதில் பாண்டியராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்த இடம் மக்கள் எப்போதும் நட மாட்டம் அதிகமாக காணப் படும். ஆனால் நேற்று அந்த வழியாக பொது மக்கள் யாரும் செல்லாத தால் உயிர்ச்சேதம் இல்லை.
விபத்து நடந்த இடத் துக்கு மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, சிதறிக்கிடந்த கொப்பரை தேங்காய்கள் அதில் ஏற்றப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டன. கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர்களை மீட் கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னிமலை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமி ஊர்வலம் : தாக்குதல் 15 பேர் கைது கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் முன் ஆட்டம் போட்டபடி வந் ததை கண்டித்ததால் ஆத் திரம் அடைந்த கும்பல் ஆயுதங்களுடன் தெரு வுக்குள் புகுந்து தாக்குத லில் ஈடுபட்டது. இந்த மோதல் தொடர்பாக 15 பேரை காவலர் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி இரவு அம்மன் வீதி உலா நடந் தது. அப்போது களத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில், காமராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சாமி வீதி உலா வுக்கு முன்பாக நடனமாடி யபடி வந்தனர்.
அவர்கள் ஒரு தெரு வுக்குள் அவ்வாறு ஆடிய படி வந்தபோது அங்கு இருந்தவர்கள் 3 பேரிடமும் சாமி ஊர்வலம் முன் நடனமாடக்கூடாது எனக் கூறி அவர்களை கண்டித்து அனுப்பினர். ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அது குறித்து கூறினர். பின்னர் அவர்கள் 25-க்கும் மேற்பட்டோரு டன் கல், உருட்டுக்கட்டை, கத்தி, கொம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களைக் கண் டித்தவர்கள் இருந்த தெரு வுக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் சாமி ஊர்வலம் முன் நடனமாடு வதற்கு எதிர்ப்பு தெரிவித் தவர்கள் யார்? என்று கேட் டவாறு அந்த தெருவில் இருந்தவர்களை ஆயுதங்க ளால் கடுமையாகத் தாக் கினர். பலர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித் தனர்.
கும்பல் தாக்கியதில் அந்த தெருவில் இருந்த மணிகண்டன் (வயது 29), சுப்பிரமணி (39), ஜெகன் (37), சின்னப்பையன் (45), விஜயன் (35) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர்.
தங்களைத் தாக்கிய கும்பல் மீது காவேரிப் பாக் கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித் தார். அதன்பேரில் 15 பேரை காவல் ஆய்வாளர் பழனி கைது செய்தார். இதில் 10 பேர் தலைமறைவாகி விட் டனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின் றனர்.
Read more: http://viduthalai.in/e-paper/80430.html#ixzz321XgI4se
குறையில்லாமல்...
மனக்குறை இல்லாமல் வாழ வேண்டு மென்றால் வசதியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழ வேண்டும். - (விடுதலை, 10.6.1970)
Read more: http://viduthalai.in/page-2/80435.html#ixzz321XyAo5D
தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜினாமா
திரு.ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 04.07.1929ஆம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா/நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்கு களுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகின்றேன்.
நிற்க, மேற்படி 4ஆம் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவ தானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும்,
மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோத மானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறிவிடும் பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர வேறு வழியில்லாததாலும், அது கமிட்டியில் விவாதத்தில் இருக்கும் சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.
ஆனால் எதிர்பாராத சம்பவங்களால் அந்த சந்தர்ப்பம் எனக்கு இல்லாமல் போய்விட்டது.
ஆதலால், இந்த நிலையில் நான் இந்தக் கமிட்டியில் என்னுடைய மெம்பர் பதவியையும், வைஸ் பிரசிடெண்டு பதவியையும் ராஜினாமா கொடுத்து கமிட்டியிலுள்ள எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை.
எனவே திரு.பிரசிடெண்டு அவர்களும், கமிட்டி மெம்பர் கனவான்கள் அவர்களும் தயவு செய்து எனது ராஜினாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
(ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் வகித்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் - குடிஅரசு - 14.07.1929
Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YfN3o9
தந்தை பெரியார் பொன்மொழிகள்
நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கிறவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;
இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.
Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YnhbCH
தமிழர் சங்கம்
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.
தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்: திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.
மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929
Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Yx1VLc
சென்னைக் காங்கிரஸ் கமிட்டி
இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங்களி லெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதாரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம். சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது.
அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள். திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டியவர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம் அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைக் கன்னாபின்னா என்று வையச் சொன்னாராம்.
கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து தேர்தலை நடத்தி இருக்கின்றார்கள் வழக்கம்போல் அய்யங்கார் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையார் என்கின்ற முறையில் அத்தேர்தலை செல்லுபடி அற்றது என்று சொல்லப் போகின்றார்கள் என்பது உறுதி. எனவே காங்கிரஸ் என்பது திரு. சீனிவாசய்யங்காருக்கும் அவர்களின் தாசர்களுக்கும் கூலிகளுக்கும் மாத்திரம்தான் சொந்தமேயன்றி மற்றபடி பொது ஜனங்களுக்கு அதில் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இனியும் என்ன சாட்சி வேண்டும்.
- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929
Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Z4xZQo
திரு.சொ. முருகப்பர்
திரு. முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையைப் பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.
நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலானதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல.
அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும். கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்தத் தியாக புத்தியும், வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள் திரு.மரகத வல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க பெரிதும் துணை புரிவாராக!
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929
Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZBdTxJ
காந்தியின் கண் விழிப்பு
கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படா தென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.
சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார்.
அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும் படியான புதிய கையந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார்.
இது பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.
- குடிஅரசு - கட்டுரை - 11.08.1929
Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZKZxyn
வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் ஆபத்தான கோவில் விரிவாக்கம்!
மக்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக உள்ள சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் குறுகலான தெருவில், நாள்தோறும் விபத்துக்களும், மக்கள் நெரிசலும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் இடமாகும். ஆசியாவிலேயே உள்ள பெரிய தொகுதியான வில்லிவாக் கத்தில் உள்ள பேருந்து நிலையம் மிக மிக சிறியதான ஒன்றே ஆகும். இந்த லட்சணத்தில் இருக்கின்ற கோவிலை, பொது மக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு செய்யும் விதத்தில் இப்படி ஒரு கோவில் விரிவாக்கம் தேவையா என்று அனைவரும் வருத்தம் அடைகின்றனர். தேவையே இல்லாத இப்படிப்பட்ட இந்து மத கோவில்களின் விரிவாக்கங்களால் எங்களைப் போன்ற இந்துக்கள்தான் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர்.
ஒரு காலத்தில் 2 அடிக்கு 2 அடியாக இருந்த கோவில், இன்று 10 அடிக்கு 60 அடி கோவிலாக வளர்ந்துள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டிய போக்குவரத்துக் கழகமும், மாநகராட்சியும் கண்களை மூடிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஏனென்றால் இந்து மதத்தின் பெயரால் நாம் எதையும் தடை இன்றி செய்யலாம் என்பதே இக் கோவில்களின் நிருவாகிகள் செய்வது அன்றாட வழக்கமாகி விட்டது. சென்னையிலேயே மக்கள் நெருக்கம் அதிகமுள்ள வில்லிவாக்கத்தில் பெரியது, சிறியது என்று எங்கு நோக்கினாலும் கோவில்கள் மயமாக உள்ளது. வில்லிவாக்கத்தில் 100-க்கு மேல் கோவில்கள் உள்ளன. எதற்காக இப்படி பொது வழிகளை அடைத்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்? எங்கு நாம் தடுக்கி விழுந்தாலும் அங்கு ஒரு கோவில் இருக்கின்றது.
வில்லிவாக்கத்தில் மட்டும் ஏராளமான பூங்காக்கள் எல்லாம் இன்று கோவில்களாக மாறி உள்ளன. எதற்காக இப்படி தேவை இல்லாமல் பொதுமக்களுக்கு நிரந்தரமான இடையூறு? கனவில் சாமி வந்து எனது கோவிலை பெரிதாக மாற்று என்று சொன்னார்களா? ஒருவேளை சொன்னாலும் சொல்வார்கள். இப்படிப்பட்ட கோவில்களின் நிருவாகிகள் எளிதாக கல்லா கட்ட முடிவதால், வில்லிவாக்கத்தில் எங்கு நோக்கினும் இதே கதையாக உள்ளது. இப்படிப்பட்ட பொதுச் சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை ஏழை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். வில்லிவாக்கத்தில், தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. சரியான சாலைகள் இல்லை. கொசு தொந்தரவு சொல்லவே வேண்டாம். இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இப்படிப்பட்ட கோவில்களால் பொது மக்களுக்குத் தான் தொந்தரவு. இந்தப் பேருந்து நிலையத்தை ஒரே அடியாக மூடி விட்டு, கோவிலாக மாற்றிவிட்டாலும், இந்தக் கோவில் நிருவாகிகள் பேராசை முடிவுக்கு வராது என்று இந்தத் தெருவில் உள்ளவர்கள் கூறி வருந்துகிறார்கள். எங்கள் வீட்டு ஆண்களிடம் இதைச் சொன்னால், உங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று சொல்லி எங்களை அவர்கள் மிரட்டுகிறார்கள். எனவே பெரியார் இயக்கம் இங்கு ஒரு பொதுக் கூட்டம் மூலம் உடனே நிறுத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எனவே, மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டே ஆர்டர் மூலம் இந்த விரிவாக்கத்தை உடனே நிறுத்தி, பேருந்து நிலையத்தை அழிவிலிருந்து காப்பாற் றுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்..
உங்கள் சகோதரிகள்.
Read more: http://viduthalai.in/page2/80466.html#ixzz321ZxcTdu
இந்தியாவில் கங்கை ஆறு - குறிப்புகள்
இந்தியாவின் நீளமான ஆறு 2,525 கி.மீ. உத்தர் காண்ட் - 450கி.மீ., உத்தரப்பிரதேசம்- 1000கி.மீ., பிகார் - 450 கி.மீ. ,ஜார்கண்ட்-40கி.மீ., மேற்கு வங்கம்-520 கி.மீ., பிகார், உத்தரப்பிரதேச எல்லைப்பகுதி-110கி.மீ.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவ்முக் (கங்கோத்ரி பனிக்கட்டிஆறு) பகுதியிலிருந்து உருவாகிறது.
இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு கங்கை ஆற்றுத்திட்டம் பலனளிக்கிறது
ஆற்றோட்டப்பகுதியின் பரப்பளவு: 8,61,404 சதுரகி.மீ.
ஆண்டுக்கு கடலில் கலக்கும் நீரின் அளவு: 4,93,400 மில்லியன் கனமீட்டர்
கிளை நதிகள், துணை நதிகள்: யமுனா, ராம்கங்கா, கோம்தி, காகரா, கண்டாக், தாமோதர், கோசி, கலி, சம்பல், சிந்து, பெட்வா, கென், டோன்ஸ், சோனெ, காசியா-
ஹால்டி
ஆற்றங்கரையில் முக்கிய நகரங்கள்: ரிஷிகேஷ், அரித்துவார், ரூர்கி(உத்தர்கண்ட்) பிஜ்னோர், நரோரா,, கன்னோஜ், கான்பூர், அலகாபாத், வாரணாசி, மீர்சாப்பூர் (உத்தரப்பிரதேசம்), பாட்னா, பகல்பூர் (பிகார்) பஹ்ரம்பூர், செராம்பூரெ, ஹவுரா, கோல்கட்டா (மேற்கு வங்காளம்)
கங்கா செயல்திட்டம்: (28ஆண்டுகளில் இரண்டு திட்டங்கள்)
கங்கா செயல்திட்டம்-1
1986 ஜூன் தொடங்கி 2000 மார்ச்சில் முடிந்தது 462.04 கோடி ஒதுக்கீடு 25 மாநகரங்கள், நகரங்கள் உபி-6, பிகார்-4, மேற்கு வங்காளம்-15 உள்ளடக்கியது
கங்கா செயல்திட்டம்-2
1993யிலிருந்து 1996 வரையிலும் பெல கட்டங் களாக தொடக்கம் 2001 ஏப்ரல்-1இல் அமல்படுத்தப் பட்டது 95 மாநகரங்கள், நகரங்கள் முக்கிய கிளை நதிகள் உள்ளடக்கியது
பொருளாதார செலவினங்கள்: தாவரங்களுக் காக கழிவுகள் மேலாண்மை, தண்ணீர் மாசு கண் காணிப்பகங்கள், வெள்ளச்சேதங்களிலிருந்து பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் செலவு செய்யப்பட திட்டமிடப்பட்டது.
2008-09 தேசிய ஆறாக அறிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, திட்டமிடுதல், செலவிடு தல், கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள என்ஜிஆர்பிஏ என்கிற அமைப்பு 2009இல் உருவாக்கப்பட்டது.
Read more: http://viduthalai.in/page4/80469.html#ixzz321aY5NTV
நாத்திகர்களை தீவிரவாதிகள் எனும் சவுதி சட்டம்: நீக்கப்பட அழுத்தம்
அண்மையில் சவுதி அரேபிய அரசு இரு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒன்று நாத்திகர்கள் (கடவுள், மத மறுப்பாளர்கள்) தீவிரவாதிகள் என்றும், மரணதண்டனையை அதிகபட்ச தண்டனையாக அளிக்கலாம் என்றும் அந்த சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள்மூலம் நாத்திகர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை சவுதி அரசு ஏற்படுத்தி உள்ளது.
நாத்திகத்தைப்பற்றி முழுமையாக அறியாதவர்கள்கூட, அந்த நாட்டிலிருந்து நாத்திக இணையதளத்துக்கு சென்று பார்வையிடுபவர், அதில் தம் கருத்தை பதிவிடுபவர், நாத்திகர்களுடன் தொடர் பில் இருப்பவர் மற்றும் எந்த ஒரு தனி நபருடனோ, எந்த நாத்திக அமைப் புடனோ தொடர்பில் இருப்பவர் என்று இச்சட்டத்தின்கீழ் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்று தண்டிக்க ஏதுவா கிறது. சவுதி அரசின் மதரீதியிலான நம்பிக் கையை அலுவலக நடைமுறைகளில் கடைபிடிக்கவில்லை என்றுகூறி எவ்வித ஆதாரங்களும் இல்லாமலே பெரும் பாலானவர்களை குற்றவாளிகளாக்கும் சட்டங்களாக அவை உள்ளன. இது சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறும் செயலாகும்.
அரேபிய நாட்டின் அடிப்படைகளை தகர்ப்பததாக, அரேபிய மனித உரிமைகள் குறித்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும் அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சட்டங்கள்மூலம் நீதிக்கு இடமின்றி சிறையில் அடைத்து துன்புறுத்தும் அபாயம் உள்ளது. பத்தில் தொடங்கி ஆயிரம் என்று சவுதி குடிமக்களை துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். அதனாலேயே, சவுதி நாத்திகர்கள் வேறு அதிக சகிப்புத்தன்மை உள்ள நாடுகளில் புகலிடம் தேட ஏதுவாகும்.
வெளிப்படையாகவே தங்களை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டுள் ளவர்கள் சவுதியில் பலபேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெற்ற இளைஞர்களாக இருக்கின்றனர். உலகஅளவில் வின்கேல்லப் நிறுவ னத்தின் புள்ளிவிவரப்படி சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் அய்ந்து விழுக்காட்டினர் நாத்திகர்களாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 19 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டில் முப்பது மில்லியன் மக்களில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி ஏழு மில்லியன் சவுதி குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
சவுதி அரேபியா அரசு மதத்தின்மீதான மரியாதையைக் காத்திட குறிப்பாக இசுலாம் மதத்தை மதிப்புக்குரியதாக்கிட அய்நாவின் மதவிரோதச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக ஆதரித்தது. மேலும், சவுதி அரேபியாவில் அய்நாவின் மனித உரிமை ஆணையத்தை அண்மையில் ஏற்படுத்தியது. அது எதிர்பார்க்கக் கூடிய மதிப்பை அது விரும்பும் மதம் பெற வேண்டுமானால், அதே அளவு மதிப்பையும், பாதுகாப்பை யும் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
சவுதி அரசை விரைவாக அந்த சட்டங்களை நீக்க வலியுறுத்துவதோடு அப்பாவிகளின் உயிர்களை அழிவிலிருந்து காக்கவும், அகதிகள் உருவாகாமல் தடுக் கவும் விரைந்து அந்த சட்டங்களை நீக்கிட வேண்டும் என்று மதசார்பற்ற உலகுக் கான சர்வதேச நாத்திக கூட்டமைப்பின் (கிலீமீவீ கிறீறீவீணீஸீநீமீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வேண்டு கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது
Read more: http://viduthalai.in/page5/80471.html#ixzz321akHYZa
அணுகுண்டு சோதனைகள்
இந்தியாவில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்படுவதற்கு சக்தி நடவடிக்கை (Operation Shakthi) என்று பெயரிடப்பட்டு இரண்டுமுறை சோத னைகள் நடந்துள்ளன. சக்தி நடவடிக்கை (Operation Shakthi) இராஜஸ்தான் மாநி லத்தில் பாலைவனப்பகுதியாகிய போக் ரான் பகுதியில் நடைபெற்றன.
போக்ரான் -2 (Pokhron-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய அய்ந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று அணுகுண்டு சோதனைகள் 11-5-1998 தேதியிலும், இரண்டுஅணுகுண்டு சோத னைகள் 13-5-1998 வெடிக்கப்பட்டன. இந்த அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டதால், இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறு தரப்பட்ட வணிகத் தடைகளை விதித்தன. மேலும், இந்தியாவைத் தொடர்ந்து 28-5-1998 மற்றும் 30-5-1998 ஆகிய நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாகவும் அமைந்தது. இந்தியா முதன்முதலாக 18-5-1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டு அணு குண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு 11-5-1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்துத்துவ தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று பெயரிட்டது. சக்தி என்ற சமஸ்கிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல் லாகும்(அவர்கள் அப்படித்தானே!). 1998இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும், பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த நாளை நினை வுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப் படுகின்றன.
Read more: http://viduthalai.in/page5/80470.html#ixzz321asSfXb
மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!
மாணவர்களின் விடைத்தாள் களைத் தகுதி இல்லாத ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தால், தகுதி இல்லாத வர்களுக்கு அதிக மதிப்பெண் ணும், தகுதி உள்ளவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்ணும் கிடைக் கும் நிலை ஏற்படும். எனவே விடைத்தாள்களைத் திருத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்களை திருவள் ளுவர் பல்கலைக் கழகம் (வேலூர்) உறுதி செய்ய வேண்டும் இவ் வாறு சென்னை உயர்நீதி மன்றத் தின் முதல் அமர்வு உத்திரவிட் டுள்ளது (விடுதலை நாளிதழ், 4.5.2014 பக்கம்3)
நம் நாட்டுக் கல்வி முறையில் விடைத்தாள் என்பது மாணவர் களின் உழைப்பின்அறுவடை, ஒரளவு மாணவர்களின் எதிர் காலத்தையே தீர்மானிக்கும் கருவி.
மாணவர்களின் விடைத்தாள் கள் தகுதி இல்லாத ஆசிரியர்களால் திருத்தப்பட்டதற்கு நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி உதாரண மாகத் திகழ்கிறது. பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் களைத் திருத்துவதில் கவனக்குறை வாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்து றை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாண வர்களின் மதிப்பெண் மாறியது. ஒரு மாணவனின் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யா மல் மதிப்பெண் வழங்கப்பட்டி ருந்தது. மறு மதிப்பீட்டில் அவரது மதிப்பெண் 200 ஆக அதிகரித்தது. (தினமணி 9.12.2013 பக்கம் 4)
சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் விசுவநாதன் பின்வரு மாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
18 மதிப்பெண்ணுக்கு மதிப் பீடு செய்த ஒரு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தபோது 78 மதிப்பெண் வந்தது. எனவே இனி மேல் நல்ல முறையில் விடைத் தாள் மதிப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் (விடுதலை இதழ் 19.7.2005).
நடுநிலை தவறிய பேராசிரியர் கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப் பட்டால் மாணவர்களின் எதிர் காலமே பாதிக்கப்படுகிறது. சென்னை அய்.அய்.டி (மி.மி.ஜி) இல் பேராசிரியராகப் பணிபுரியும் கல்பனா சாவ்லா விருது பெற்ற பேராசிரியர் வசந்தா கந்தசாமி பின்வருமாறு கருத்து தெரி வித்துள்ளார்: பெரியாரும், அம் பேத்கரும் வராமல் இருந் திருந்தால் நான் அய்.அய்.டியில் பேராசிரியராக இருந்திருக்க மாட் டேன். வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பேன்.
அய்.அய்.டியில் இது வரை ஒரு தலித் பெண் கூட ஆய்வுப்பட்டம் (றிலீ.பீ) பெற்றதில்லை! ஐ.ஐ.டியில் எம்.எஸ்ஸி (வி.ஷிநீ) படிக்கும் பெண்கள் தலித் என்றால் அவர் களை உடனே ஃபெயிலாக்கி விடு கிறார்கள். நிறைய தலித் மாண விகள் இது போல் பாதிக்கப்பட் டுள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக் கிறேன்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்தபோது பல மாணவ மாணவிகளின் மதிப்பெண் பட்டி யலில் குளறுபடிகள் நடந்திருப் பது தெரியவந்தது. இந்த மோசடி யின் உச்சக்கட்டமாக பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்ற 2 மாணவர்கள், ஒரு மாணவி தேர்வுக்கு விண்ணப்பிக் காமலும், தேர்வுக்குரிய கட்டணம் செலுத்தாமலும் தேர்வே எழுதா மலும் ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மெகா மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது (விடுதலை இதழ் 19.2.2012 பக்கம் 7)
சென்னை மாநிலக் கல்லூரியில் நான் 1954 - 56-இல் பொருளாதாரத் துறையில் எம்.ஏ. படித்தபோது, எனது பல்கலைக்கழக விடைத் தாளை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்துறை தலைமைப் பேராசிரியர் அவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்தினார். பெரியார் தொண்டனாகிய நான் தன்மானத்துடன் மறுக்கவே என்னை எம்.ஏ., வகுப்பில் அரை சதவீதம் மதிப்பெண் குறைவாகக் கொடுத்து மூன்றாம் வகுப்பில் (மிமிமி சிறீணீ) தள்ளிவிட்டார். இதனால் என் வாழ்க்கை ஓரளவு பாதிக் கப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இன்றைய மதிப்பெண் முறையைக் கடுமையாக எதிர்த் துள்ளார். மார்க்தான் (மதிப் பெண்) தகுதி, திறமையின் அறிகுறி என்பது அக்கிரமம் மாத்திரமல்ல; மகா மகா அயோக்கியத்தனம் அல்லது மடத்தனம் என்பேன்.
தற்போதுள்ள தேர்வு முறை யினால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க் கையே பாழடிக்கப்படுகிறது. கல்வித்துறைச் சான்றோர்கள் மாணவர்களின் தகுதி, திறமையை மதிப்பிடுவதற்கு காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
- செய்யாறு இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மாவட்டம்
Read more: http://viduthalai.in/page7/80476.html#ixzz321b7AXAX
அன்று காந்தியார் சொன்னது
கரூர் மாவட்டம் நெருரி வடபாகம் காவேரி ஆறு அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுற்றுலா விளையாட்டு பூங்கா அருகே அரச மரம் உள்ளது. அந்த அரச மரத்தடியில் விநாயகர் சிலை சிவன் முருகன் போட்டோக்களும் உள்ளன. காவேரி ஆற்றுக்கு குளிக்க வரும் பக்தர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து மது பானம் சாப்பிட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்
காந்தியார் சொன்ன மாதிரி கோயில்கள் விபச்சார விடுதி என்பதற்கு இது ஒரு சான்று! அரச மரத்தடியில் மதுபானம், சிகரெட் பீடி துண்டுகள் ஆணுறைகள் போன்றவை அங்கேயே கிடக்கின்றன. ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் சாமி கும்பிட்டு இவற்றையும் செய்கின்றனர்.
மதமாற்றம்: விவேகானந்தர்
Read more: http://viduthalai.in/page6/80474.html#ixzz321btV9st
இது அல்லவோ மனிதநேயம்!
மும்பையைச் சேர்ந்தவர் ஃபாரூக் மாப்கர். இவர் சிப்லூன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இவர் மற்றவர் களைக் காப்பாற்றும் நோக் கில் தன் காயங்களைப் பொருட்படுத்தாமல் வேக மாக செயல்பட்டுள்ளார். அவரைச்சுற்றி இருந்த பயணிகள் விபத்தில் உடைந்து நொறுங்கிய தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்தனர். அவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு சென்றிருக்க லாம்.
ஆனால், அவரால் செய்யக்கூடிய உதவிகள்குறித்து நினைத்து செயல்பட் டார். மூன்று வயது சம்ருதி நக்தி என்கிற சிறுமி தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தபோது, அவ்ளின் தந்தை என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண் டிருந்தார். சிறுமியின் தந்தைமீது வேறு ஒருவர் விழுந்து கிடந்தார். இந்நிலையில் தான், உடனடியாக அச்சிறுமியை மாப்கர் மீட்டு, ஆட்டோமூலமாக தாமாகவே அவள் கால் துண்டான நிலையில் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றார்.
நகோத்தானேவுக்கும் ரோகாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது தன்னுடைய பணப்பை உள்ளிட்ட தன்பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டபோதிலும், விடாமுயற்சியாக சிறு மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்ப்பித்தார். ஆட்டோ ஓட்டுநர் இவர்நிலைகண்டு தொகை பெறாமலே இவர்தம் சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். விபத்துப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலும், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இலவச மாக ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே வழங்கப்படும் வசதி இருந்தது. அச்சிறுமியுடன் மேலும் இருவரை அரசு பொது மருத்துவ மனைக்கு சிவசேனா அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு சென்று சேர்க்குமாறு மாப்கரிடம் மருத்துவர் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி மருத்துவர் இரண்டாயிரம் ரூபாய் தொகை கட்டுமாறு கேட்டபோது, மாப்கர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். அச்சிறுமியுடன், இளம்பெண் மற்றும் சவான் என்பவரையும் மாப்கர் அலிபாக் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். சவானிடமும் பணம் ஏதும் இல்லை. சிறுமியின் மன உறுதி குறித்து மாப்கர் வியந்து கூறுகிறார். மிகுந்த வலி இருக்கும்போதும் ஒருவார்த்தைக்கூட பேசாமல், மாப்கர்மீது சாய்ந்தவாறு மிக அமைதியாக இருந்தாள். தன்னுடைய உறவினருக்கு இறுதி மரியாதை செலுத்து வதற்காகச் சென்ற மாப்கர் முற்றிலும் அச்சிறுமி உட்பட மற்றவர்களையும் காக்கும் செயலில் இருந்துவிட்டதால் உறவினரின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.
சம்ருதி என்கிற அச்சிறுமி பிற்பாடு சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவள் கால்களை அறுவை மூலம் அகற்றி தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் அக்காள் வாஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாள். சிறுமியின் தாய் இந்த விபத்தில் உயிர் இழந்து விட்டார். எதுவுமே தெரியாமல் அவள் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மாப்கர் இவ்விபத்து குறித்து கூறும் போது, திவா-சவந்த்வாடி பாசஞ்சர் தொடர்வண்டி தாமதாக இயக்கப் பட்டதால், இழந்த நேரத்தை சரிகட்ட அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது. பின்னால் வரக்கூடிய விரைவு தொடர் வண்டிக்கு வழிவிடுவதற்காக வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில்வே நிர்வாகம் பாசஞ்சர் தொடர் வண்டியை குறித்த நேரத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற விபத் துகள் நடைபெறாது. விபத்துக்குள்ளாகி எல்லாவற்றையும் இழந்திருப்பவர் களிடம், இழப்பீடு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று கூறினார்.
மாப்கர் ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட 1992-93 கலவரங்களின்போது வடாலா பகுதியில் 1993 சனவரி 10ஆம்தேதி அன்று குண்டடிப் பட்டார். அதேநாளில் காவல்துறையின் துப்பாச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் மசூதிக்குள் இருந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தனர்.
நீதிபதி பி.என்.சிறீகிருஷ்ணா குழு அறிக் கையில் காவல்துறையின் உதவி ஆய் வாளர் நிக்கில் காப்சே என்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்திருந் தார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. மத்தியப் புலனாய்வுக்குழுவின் விசாரணையைக் கோரி மாப்கர் நீதிமன்றத்தில் அணுகி ஆதரவாக தீர்ப்பு பெற்றார். ஆனாலும், மத்தியப்புலனாய்வுக்குப்பின் விசாரணை முடிவு காவல் உதவி ஆய்வாளர் காப்சேவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த மாப்கர்தான் மிகுந்த மனிதநேயத்துடன் சிறுமி உள்ளிட்டவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
-மும்பை மிர்ரர், 11-5-2014
Read more: http://viduthalai.in/page8/80479.html#ixzz321cDQvRe
Post a Comment