Search This Blog

13.12.14

திராவிடத்தைக் கொச்சைப்படுத்தும் திருவாளர்களுக்கு

திராவிடத்தைக் கொச்சைப்படுத்தும் திருவாளர்களுக்கு



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் சரி, அவர்தம் அருமை மகன் மருத்துவர் அன்புமணி அவர்களாக இருந்தாலும் சரி... திராவிட இயக்கத்தைக் குறை கூறுவது என்பதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள்; மருத்துவர் அன்புமணி அளித்த பேட்டி ஏடுகளில் வெளி வந்துள்ளது.


இந்த காலத்தில் திராவிட கொள்கைகள் எடுபடாது: அன்புமணி பேட்டி
அன்புமணி எம்.பி. திராவிட கட்சி களையும், கொள்கைகளையும் விமர்சித்து  பேட்டியில் கூறியதாவது:


1920ஆம் ஆண்டுகளில் பிராமண ஆதிக் கத்தில் இருந்து விடுபட திராவிட கொள்கைகள் தேவைப்பட்டன. பெரியாரும், அண்ணாவும் திராவிட கொள்கைகளை கையிலெடுத்து சாதி வெறியை கடுமையாக எதிர்த்தார்கள்.


இப்போது திராவிட கொள்கைகள் செல்வாக்கை இழந்து விட்டன. இந்த காலத்தில் அது எடுபடாது. 50 ஆண்டு களாக தமிழகத்தை ஆட்சி செய்த இரண்டு திராவிட கட்சிகளும் தங்கள் கொள்கை களை கைவிட்டு விட்டன. கடந்த 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததுதான் நாங்கள் செய்த தவறு. இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனிமேல் அந்த தவறைச் செய்ய மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார். மாலைமலர் 9.12.2014


திராவிட இயக்கக் கொள்கைகள் காலங் கடந்தவை - பார்ப்பன எதிர்ப்பும் அப் படியே என்று இரு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

திராவிட இயக்கக் கட்சிகளைக் குறை கூறும் இவர் இனிமேல் திராவிட இயக்க அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைப்ப தில்லை என்பதில் உறுதியாக இருப்பாரா?

இதற்கு முன்பேகூட மருத்துவர் இராம தாசு அவர்கள் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலோ, மேற்கே மறையும் சூரியன் கிழக்கே மறைந்தாலோ அதிமுக வுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது (குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு (10.2.2005) மருத்துவர் ச. இராமதாசு அளித்த பேட்டி) என்று சொன்னவர் தானே - அதற்குப்பின் திருப்பி திருப்பி அதிமுக வுடன் கூட்டணி அமைக்கவில்லையா?


2009 மக்களவைத் தேர்தலில் என்ன நடந்தது? மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு அ.திமு.க. என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவோம் என்ற சொன் னவர் தானே பா.ம.க. நிறுவனர் (தினமணி 28.3.2009).


இப்போது மட்டும் அதிமுகவையும் சேர்த்து திராவிட கட்சியின் அடையாளம் போயே போச்சா?


பிரதமர் ஆவதற்குத் தகுதி உள்ளவர் ஜெயலலிதாதான் என்று ஜெய பேரிகை கொட்டவில்லையா மருத்துவர்!


பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2012 ஜூலை மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளுடன் இனி கூட்டணி அமைப்பதில்லை என நாங்கள் தீர்மானித்துள்ளோம். இனி தனித்து தேர்தலை சந்திப்பது என்ற முடிவின் அடிப்படையில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற புதிய ஆவணத்தைத் தயாரித்துள்ளோம்

(பா.ம.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான தமிழ் ஓசையில் 2.2.2012 பக்கம் 1  மற்றும் 4) என்று சொன்னார்களே அது என்னாயிற்று?


கடந்த மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளவில்லையா? அதில் திராவிடக் கட்சியான மதிமுகவும் இடம் பெற வில்லையா? தேசிய கட்சியுடனும் கூட் டணி இல்லை என்று ஆவணம் தயாரித்துச் சொன்னது, திராவிடக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றது எல்லாம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலேயே நொண்டியடித்து விடவில்லையா? சிங்கம் சிறு நரியிடம் ஒரு போதும் பிச்சை கேட்காது என்ற  வீராப்பாகப் பேசி விட்டு, கடைசியில் ஒரு சீட்டோடு சீட்டுக் கிழிக்கப்படவில்லையா பா.ம.க.? (ஆதாரம்: மாலைமலர் 17.3.2014).

திராவிட இயக்கம் கெட்ட வார்த்தை, திராவிட இயக்கம் ஒன்றும் சாதிக்கவில்லை - அதன் கொள்கை எடுபடாது பார்ப்பனீய ஆதிக்கம் என்பதெல்லாம் ஒன்றும் கிடை யாது என்று அப்பாவும் - மகனும் சொல்லி வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்துள் ளார்களே!


அப்படியென்றால் இதுவரை சொல்லி வந்தார்களே பா.ம.க.வில் பார்ப்பனரைச் சேர்க்க மாட்டோம் என்று சொன்னது வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதா? ஏன் அதனைப் பகிரங்கமாக அறிவிக்க வில்லை? கட்சிக்காரர்களுக்குக் கறுப்புச் சட்டை போடச் சொன்னது  யாரை ஏமாற்ற? யாரை ஏமாற்றினார்களோ என்னவோ, முதலில் தங்களைத்  தாங்களே ஏமாற்றிக் கொண்டு விட்டார்கள் என்பது மட்டும் உண்மை!


22.2.1991 தினப்புரட்சி நாளேட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு பெரியார் வழி நடக்கும் தொண்டர் களுக்குத் திறந்த மடல் ஒன்றை எழு தினார்.


அதில் ஒன்று. அய்யா இருந்தவரை அடங்கிக்கிடந்த பார்ப்பனீய புற்றுப் பாம்புகள் இன்றைக்கும் படம் எடுத்து வெளியில் வந்து ஆடத் தொடங்கியது யாரால்? எதிரியை எதிரியாகவும், நண்பனை நண்பனாகவும் நாம் பார்க்கத் தவறியது தானே இதற்குக் காரணம் என்று திறந்த மடல் எழுதி இருந்தாரே - அதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கப்பட்டது.


அதில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்? மறுபடியும் ஒரு முறை படியுங்கள்: பார்ப்பனீயப் புற்றுப் பாம்புகள் இன்றைக்கும் படம் எடுத்து ஆடுகின்றன என்று குறிப்பிட்டுள்ளாரே - அந்த மருத்துவரா பார்ப்பன ஆதிக்கம் என்பதெல்லாம் சும்மா என்று புரூடா விடுவது? இந்த 20 வருடங்களில் அய்யா ராமதாஸ் கிருபையால் நாங்கள் எங்கள் (பாம்பு) தோலை உரித்துக் கொண்டு சமரச சன்மார்க்கவாதிகளாக இதோ ஜொலிக் கிறோம்? என்று கூறி சரணாகதி அடைந்து விட்டார்களா பார்ப்பனர்கள்? சிறுத்தைகள் தங்கள் புள்ளிகளை மாற்றிக் கொண்டு விட்டனவா?

மருத்துவர் அன்புமணி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது பார்ப்பனர்கள் எந்தெந்த வகைகளில் எல்லாம் தொல்லை கொடுத்தார்கள்? பார்ப்பனீய ஊடகங்கள் எப்படி எப்படி யெல்லாம் சல்லடம் கட்டி ஆடின? எய்ம்ஸ் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால் - அமைச்சர்  அன்புமணிக் கிடையே ஏற்பட்ட மோதலுக்குப் பெயர் என்ன? திராவிடர் கழகத் தலைவர் தானே அமைச்சர் மருத்துவர் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளி யிட்டார். அதெல்லாம் இப்பொழுது வசதியாக மறந்து போய் விட்டதா?


திராவிட இயக்கத்தின் தாய்க் கழகம் திராவிடர் கழகம் அதுபற்றி இவர்களின் மதிப்பீடு என்ன?

தோ பா.ம.க. நிறுவனர் பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!


தந்தை பெரியார் அவர்களுடைய எண்ணங்களை துணிந்து நாங்கள் பட்டி தொட்டி எங்கும் பறைசாற்றி வருகிறோம். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரை, வன்னியர் சங்கத்தை பொறுத்த வரை தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை முழுவதும் ஏற்றுக் கொள்கிறோம். அந்த வகையில்தான் எந்த நிகழ்ச்சி, எந்தப் போராட்டமாக இருந் தாலும் தந்தை பெரியார் பிறந்த தினமான செம்டம்பர் - 17 அன்று வைத்துக் கொண்டு வருகின்றோம். அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இன்னும் சிறப்பாக மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டிய காலம் இது.


(வடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் (21.9.1991) பேசிய பேச்சு இது).


திராவிட இயக்கத்தில் கொள்கை இந்தக் காலத்துக்குத் தேவையில்லை - காலங் கடந்தது என்பது உண்மையானால், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்பிட திராவிடர் கழகத்தின் பின்னால் வரத் தயார் என்று பா.ம.க. மற்றும் வன்னிய சங்க நிறுவனர் கூற வேண்டிய அவசியம் என்ன? எந்த அளவுக்குப் போயிருக்கிறார் இப்பொழுது? சேலத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டி ஒரு கூட்டம் நடத்தினார் மருத்துவர் ச. இராமதாசு கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் என்ன பேசினார்? (27.12.2012).

பிராமணர்களும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இனி எவனா வது வாலாட்ட முடியுமா? அவுங் களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன் வந்து நிற்போம்! என்று பேசினாரே!


எவ்வளவுப் பெரிய விபீடண சரணாகதி இது!  காலம் காலமாக தொடர்வது இது தானே? இதற்குத்தான் தம் கட்சிக்கார்களைக் கறுப்புச் சட்டை போட சொன்னார்களா?


தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் மூட்டிய  பார்ப்பன எதிர்ப்புதான் பார்ப்பனர் அல்லாதாருக்குக் கல்வி முதல் அத் தனையையும் கொண்டு வந்து குவித்தது என்பதை மறுக்க முடியுமா? அதைக் கொட்டிக் கவிழ்த்தால் மீண்டும் குல தொழிலுக்குத்தான் நாம் போக நேரும் என்பதை மறுக்க முடியுமா?


பா.ம.க. நிறுவனர் இதுவரை சொல்லி வந்த கருத்துகளையும், தகவல்களையும் வரிசைப்படுத்தினால் இதற்குமேல் யாரும் இவ்வளவு பல்டி அடித்து இருக்க முடியாது. இந்த வகையில் வேண்டுமானால் இவருக் குக் கின்னஸ் சாதனை விருது அளித்துப் பாராட்டிடலாம்! திராவிட இயக்கம் இந்த நாட்டுக்கு, இந்த இனத்துக்கு ஒன்றுமே செய்யவில்லையா? சாதிக்கவில்லையா?

இதோ ஒரு சிறு பட்டியல்:


(1) இந்தத் திராவிடர் இயக்கப் பார்ப்பன எதிர்ப்பு உணர்வில் விளைந்தது தான் இட ஒதுக்கீடு. அதற்கான முதல் ஆணையைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்க நீதிக்கட்சி ஆட்சியே! (1928).

(2) அந்தச் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புச் சொன்ன தருணத்தில் கொந் தளிக்கும் கடலாய்ப் பொங்கியெழுந்து போர் முரசினை தந்தை பெரியார் தலைமை யேற்றுக் கொட்டியதால் இந்திய அரசமைப் புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது - இதன் காரணமாகத்தானே?


கல்வியிலும் இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது. கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதால்தான் இன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாண வர்களில் 89 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதவர்.

(சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி 95 ஆம் ஆண்டு விழாவில் (20.-10.-2010) சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் க.திருவாசகம் கூறிய தகவல்.)


(3) இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் கல்வி, வேலை வாய்ப்பினை அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா?


(4) மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தடையை நீதிக் கட்சி ஆட்சியில் பனகல் அரசர் ஒழிக்காதிருந்தால், இன்றைக்குக் குப்பன் மகனும், தொப்புளான் மகனும் டாக்டர் ஆகி இருக்க முடியுமா? (ஏன்? ராம தாசும் அவர்தம் குடும்பத்தாரும்தான் மருத்துவர்கள் ஆகியிருப்பார்களா?)

 (5) பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் என்று பிரித்து அதற்காகத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்காக பாடுபட்டதாக மார் தட்டு கிறாரே மருத்துவர் இராமதாசு அதற்கான ஆணையைப்  - பிறப்பித்தது எந்த ஆட்சி? மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையி லான திராவிடர் ஆட்சியல்லவா?


இந்த ஒதுக்கீட்டின் காரணமாக அதற்கு முந்தைய ஆண்டைவிட வன்னியர் களுக்கு தொழிற் கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கவில்லையா? அதனை வரவேற்று அதற்காகக் கலைஞர் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் ச. இராமதாசு கூறவில்லையா (தினப்புரட்சி 17.7.1989).


1967-1974 இடைப்பட்ட கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் குரூப் ஒன்று பதவிகள் 122இல் 112 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கிடைத்ததே _ அந்தக் கலைஞரையா நாம் வசைபாடுவது - இது திராவிட இயக்க சாதனை இல்லையா?


 (6) இன்றைக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு கிடைத்தது என்றால் அதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங் களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா? அப்பொழுதெல்லாம் எங்கே போயிருந்தார் மருத்துவர் அய்யா?


(7) தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது (50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு) அதனைப் பாதுகாக்க சட்ட வடிவம் தயாரித்துக் கொடுத்து, நிலை நாட்டியது திராவிடர் கழகத் தலைவர் அல்லவா? அதற்கு முட்டுக்கட்டை போட முனைந்த அம்பாசங்கர் அவர்கள் வன்னியர் என்ற காரணத்தால் மருத்துவர் மவுனம் சாதிக்கவில்லையா? ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இன்று பாதுகாப்புடன் நிலை பெற்றுள்ளதே.


இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது திராவிடர் இயக்க (கலைஞர்) ஆட்சியில்தானே!


(8) இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சியல்லவா?


(9) தேவதாசி முறையை ஒழித்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றியது எந்த ஆட்சி?


(10) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் அல்லவா?


(11) பொதுச் சாலைகளை தாழ்த்தப் பட்டவர்கள் பயன்படுத்தலாம், கிணறு களிலும், குளங்களிலும் தாழ்த்தப்பட் டவர்கள் தண்ணீர் எடுக்கலாம் என்று ஆணை பிறப்பித்தது யார்?



(12) தாழ்த்தப்பட்டவர்களை பேருந்து களில் அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தாழ்த்தப்பட்டவர் களை சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது எந்த ஆட்சி? ஒருக்கால் இதற்காகத்தான் ராமதாஸ் கோபப்படுகிறாரோ?


(13) இந்தியை எதிர்த்து விரட்டி யடித்தது யார்? தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்திக்கு இடம் இல்லை என்று சட்டம் செய்தவர் திராவிடர் இயக்கத் தீரராகிய அறிஞர் அண்ணா அல்லவா? 

(14) நமஸ்காரம் வணக்கம் ஆனது எப்போது? அக்ராசனர் தலைவராக மாற்றப் பட்டது எப்படி? பிரசங்கம் சொற்பொழி வானது எங்ஙனம்? வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்தது எந்தச் சூழ்நிலையில்?


1938-இல் தந்தை பெரியார் தலைமை யில் கிளர்ந்து எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஊட்டிய உணர்ச்சியின் விளைச்சல் அல்லவா இது?


(15) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது தி.மு.க. ஆட்சி யல்லவா?


(16) தமிழன் வீட்டு நிகழ்ச்சி தமிழன் தலைமையில் நடக்க முடியாது; தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் அவன் தாய் மொழிக்கு இடமில்லை என்றிருந்த நிலையை ஒழித்து, தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் தமிழன் தலைமை தாங்கவும், அவன் தாய்மொழி இடம் பெறவுமான புரட்சியை நிகழ்த்தியவர் யார்? சுயமரியாதைத் திருமணம் வந்தது எப்படி? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது அறிஞர் அண்ணா ஆட்சியில் தானே!


கிரகப்பிரவேசம் புதுமனை புகுவிழா வாக மாறவில்லையா? உத்திர கிரியை - நீத்தார் நினைவு நாளாகப் புது உருவெடுக்க வில்லையா?


(17) தமிழ்நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லையே ஏன் என்று கேட்டு, தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு நடத்தியது யார்? (சென்னையில் திராவிடர் கழகத்தால் 25.-12.-1980 அன்று நடத்தப்பட்டது.)


தமிழிலும் வழிபாடு என்று கோயில்களில் விளம்பரப் பலகை தொங்கியதை அகற்றி யது தி.மு.க.ஆட்சியல்லவா?


(18) தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதே - அதனை மாற்றி தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டம் கொண்டு வரப்பாடுபட்டது யாரால்? தந்தைபெரியாரும் திராவிடர் கழகமும் தானே!


அதனை ஏற்று சட்டம் இயற்றியவர் திராவிடர் இயக்க ஆட்சியாளரான கலைஞர் அவர்கள்தானே?


(19) ஈழத் தமிழர் பிரச்சினையில் யாரும் கனவு காணாத காலத்திலேயே 1939 ஆம் ஆண்டிலேயே அக்கறை காட்டியது நீதிக் கட்சியல்லவா?


ஈரோடு பெரியார் மாளிகையில் 10.-8.-1939 அன்று நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகக் கூட் டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டதே!


இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தி யதையும் அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஊ,பு.அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் இலங்கைக்குச் சென்று அவர்களின் நிலை மையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே!

                                 ---------------------(விடுதலை 11-8-1939 - பக்கம் 3)

1983 ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழர்கள் மிகக் கொடூரமாய்த் தாக்கப்பட்ட நிலையில் கட்டிய துணிகளோடு தமிழ்நாடு வந்த மக்களுக்கு அந்த முக்கியமான கால கட்டத்தில் ஆதரவுக் கரம் நீட்டிய கை யாருடையது?
உடனடியாக 14-8-1983  அன்று மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது திராவிடர் கழகம் அல்லவா? சென்னை அண்ணாநகரில் புல்லாரெட்டி அவென்யூவில் அனைத்துக் கட்சி முதல் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகமாயிற்றே. அலை அலையான நட வடிக்கைகள் -  சொல்லிக்கொண்டே போக முடியுமே!
உச்சக் கட்டமாக மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே இரண்டு நாட்கள் நடத்தி, குமரி நாடன் என்ற ஈழத் தமிழர் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றிடவில்லையா? ஒட்டு மொத்த உலகத் தமிழின மக்களின் உணர்ச்சி எரிமலையின் உக்கிரம் எத்தனை டிகிரி என்று அன்று காட்டப்படவில்லையா?
                                                                  ------------------  (மதுரை 17,18.-12.-1983).


இன்னும் எவ்வளவோ சொல்லலாம். டெசோ எவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. காலத்தின் அவசியம் கருதி மீண்டும் டெசோ அமைப்பு புதுப்பிக்கப் படுகிறது என்றால், பிரச்சினையின் மீது அக்கறையும், கவலையும் கொண்டவர்கள் வரவேற்பார்கள். கை முதல் பறி போகிறது என்பதால் கதறுவார்கள். அதற்கு நாம் என்ன செய்வது!


இதே ஈழப் பிரச்சினையில் இதே மருத்துவர் இராமதாசு எப்படி எல்லாம் கருத்து  தெரிவித்தார்? அதை எல்லாம் அவிழ்த்துக் கொட்ட வேண்டுமா?


(20) கச்சத்தீவு மீட்பு மாநாட்டை இராமேசுவரத்தில் (25-7-1997) நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா? (ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களும் கலந்து கொண்டனரே! பழ.நெடுமாறன் அறிவாரே!) அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன் றத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர் களால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதே!


(21) வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டுக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - இராமேசு வரம் முதல் திருத்தணி வரை என்று தொடர்  கூட்டங்கள் நடத்தப்பட்டதை  அறிய மாட்டார்களா?


(22) முக்கியமாக மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெரும் பணியை ஒப்பரிய மானுடத் தொண்டினை ஓர் இயக்கமாக நடத்துவது உலகத்திலேயே திராவிடர் கழகம் மட்டுமே அல்லவா!


(23) ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டம் வரை எரித்து ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ் சிறை ஏகினார்களே, - பலர் இன்னுயிரை ஈந்தனரே! இதன் பக்கத்தில் எந்த ஓர் அமைப்பாவது நிற்கமுடியுமா? 


மேற்கண்ட பட்டியல் திராவிடர் இயக் கத்தின் சாதனைச் சரிதம் அல்லவா? இதில் எதை மறுக்க முடியும்? முடிந்தால் மறுக்க முயலுங்கள் பார்க்கலாம் - அதனையும் சந்திக்கத் தயார்! தயார்!!


கட்சியிலோ அரசியலிலோ தாமோ தம் குடும்பமோ பதவி வகிக்காது என்று தாயின்மேல் சத்தியம் என்று அய்ந்து அம்ச திட்டங்கள் அறிவிக்கப்பட்டதே - அவற் றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைப்பா? யார் மறந்தாலும் கறுப்புச் சட்டைக்காரன் மறக்க மாட்டானே!


அய்ந்தும் மூன்றும் எட்டு - அரசியல்வாதியை வெட்டு என்று முழக்கம் போட்டு அதற்கு அடையாளமாக கிராமங்களில் அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டிய இந்தக் கொள்கைக் கோமான்கள்தான் பரம்பரை அரசியல் வாதிகளே பிச்சை வாங்கும்  அளவுக்கு அவமரியாதையைத் தேடிக் கொண்டு  விட்டார்கள் என்பதை மறுக்க முடியுமா?


தாமும் தமது கட்சியும் எத்தகைய கொள்கைக் கோமேதகங்கள் என்பதற்குத் தமக்குத் தாமே சர்டிபிகேட் கொடுத்த தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களும் அவர்தம் கட்சியும்தான்.


இதோ அவரது கண்ணாடி சட்டம் போட்ட கொள்கை நன்னடத்தைச் சான்றிதழ் இன்றைக்குத் தமிழ்நாட்டின் எந்த கட்சி கொள்கையா நடக்குது -  எங்க கட்சி உட்பட? எல்லாருக்குமே அரசியல் ஆதாயம் ஒன்றுதான் அடிப்படை
(ஆதாரம்: ஆனந்தவிகடன் பேட்டி 13.9.1998)


இதற்கு மேல் என்ன வேண்டும்? எந்தத் தைரியத்தில் இவர்கள் எல்லாம் பேட்டி கொடுக்கிறார்கள், மக்கள் முன் முழங்கு கிறார்கள்?

திராவிட இயக்கமும், தந்தை பெரி யாரும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை உருவாக்கி பார்ப்பன ஆதிக்கத்தின் கெடு  பிடிகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டு சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்கள்  எல்லாத் தடங்களிலும் மிகப் பெரிய புரட்சிகர மாற்றத்தை உண்டாக்கினார்கள்.


அதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி - தலித் அல்லாதார் அமைப்பை என்றைக்கு உருவாக்க முயன்றாரோ மருத்துவர் இராமதாசு அந்தக் கணமே தன் பொதுத் தொண்டுக்குத் தற்கொலைக் கம்பத்தை எழுப்பி விட்டார். (அடுத்த முதல்வர் தமிழ்நாட்டுக்குத் தலித் ஒருவர் என்று சொன்னதும் இந்த வாய்தான்!)


என்றைக்குக் காதலைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கு ஜாதி வண்ணம் பூசத் தலைப்பட்டாரோ அந்தக் கணமே முற் போக்குச் சிந்தனையாளர்களால் முத்திரை குத்தப்பட்டு நவீன தீண்டாதார் பட்டியலில் அடைக்கப்பட்டு விட்டார்! பரிதாபமாகத் தான் இருக்கிறது, என்ன செய்ய!




சொன்னவர் யார்?

திராவிடர் கழகத்துக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் எங்கள் கட்சி ஓட்டுப் பொறுக்குகிற கட்சி, அவ்வளவுதான், ஒட்டுப் பொறுக்குகிற; வேலையையும் சற்று ஒத்தி வைத்து விட்டு தி.க.வின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.
6.11.1993 பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதி ஆதரவு, மதவெறி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் பேசியது.


ஒரு ஒட்டுப் பொறுக்கும் கட்சி திராவிடர் இயக்கத்தின் தாய்க் கழகமான சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தையும் சேர்த்து பொத்தாம் பொதுவாக திராவிட இயக்கத்தைச் சாடலாமா?



சொன்னவர் யார்?


தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி தேர்தலுக்காக மட்டுமல்ல; பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை மீட்க தொடர்ந்து நிலைக்கும். இந்தத் தேர்தலுக்குப்பிறகு பல தேர்தல்கள் வரலாம். சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணி இருக்கும். பா.ம.க. இல்லை என்றாலும் பரவாயில்லை. கட்சியில் ஒருவன் கூட இல்லை என்றாலும் பரவாயில்லை. இனி அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சாகும் வரை கூட்டணி இருக்காது 

(விழுப்புரம் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் மருத்துவர் ச. இராமதாசு 1.5.2004)


2004இல் பெரியாரும், தி.மு.க.வும் (திராவிடக் கட்சியும்) தேவை - 2014இல் தேவையில்லையா? 10 ஆண்டுகளுக்குள் அவை காலம் கடந்த கொள்கை ஆகி விட்டதா?


பார்ப்பன ஆதிக்கம் மனுதர்ம வீச்சின் வயது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்பதை வசதியாக மறந்து விடலாமா!

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------- மின்சாரம் அவர்கள் 13-12-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

35 comments:

தமிழ் ஓவியா said...

ஒரு வித்தியாசமான தலைவர் - எப்படி?

2013 தஞ்சையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா. வழக்கமாகப் பிறந்த நாள் என்றால் எவ்வித ஆர்ப்பாட் டங்கள், ஆடம்பரத்திற்கும் இடம் கொடாத தமிழர் தலைவர் இரண்டு முறை அன்புக் கட்டளைகளுக்குப் பணிந்து அன்பு விலங்கில் சிக்கிக் கொண் டது உண்டு. அதில் ஒன்று தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள். சிக்க வைத்தவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் வாடிக்கையில்லாத பெருவிழா. ஆசிரியர் வீரமணியின் 75-ஆம் ஆண்டுப் பிறந்த நாள். அது மட்டுமல்ல. ஆசிரியரை மட்டும் சிறப் பிக்கவில்லை. முத்தமிழ் அறிஞர், ஆசிரியரைப்போலவே தன்னைச் சற்றும் எந்த விழாவிலும் முன்னிறுத்திக் கொள்ளாத மோகனா வீரமணி அம்மையாரையும் கலைஞர் அழைத்து மேடையில் வைத்துச் சிறப்பித்தது பசுமையாக இருக்கிறது.

அடுத்து 2013ல் தமிழர் தலைவரின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலையை பெரியார் உலகத் திற்கு நிதியளிப்பு விழா திராவிடர் கழகக்கூட்டம் அன்று காலையில் தஞ்சை பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பான கூட்டம். அதுவும் நிதியளிப்புக் கூட்டம் தான். ஆசிரியர்கள், மாணவர்கள், கழகத்தவர் என்று வரிசை வரிசையாக நிதியளிக்கக் கூடிச் சென்று விழா முடியவே மதியம் 2 மணி ஆகிவிட்டது.

அதன்வின் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்ட பிறந்த நாள் பெருமங்கலம். அதிலும் ஒரு சிறப்புக் கூறு அந்த விழாவில் திராவிட முன் னேற்றக்கழகப் பொருளாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று வாழ்த்த வருகைப் புரிந்தார். அத்தோடு விடுதலைச் சிறுத்தைகளின் வீரம் மிகு தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இவர்கள் வாழ்த்த வந்ததைக்காண விண்ணிலிருந்து மழைத்துளி துளிதுளியாக விழுந்தது கொட்டும் மழையாய்க் கொட்டிய போதும் கூட்டம் கலைந்து விடவேண்டுமே. கலைந்து நகர வேண்டுமே அதுதான் இல்லை. நின்ற இடத்திலேயே உட்கார இருந்த நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு மழையிலிருந்து தலைமைய மட்டுமே காத்து நின்ற காட்சி மறக்கமுடியாத காட்சி. இப்படிக் கொட்டும் மழையில் கூடியது 1949-இல் ஜூலை 18 இல் திமுக தொடக்க விழாக் கூட்டம் இராபின்சன் பூங்காவில் கூடியபோது இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


இந்த நேரத்தில் கொட்டும் மழையில் நன்றியுணர்வு மிக்கத் தமிழர் கூட்டம் கூடியது தஞ்சையில். ஆனால் தமிழர் தலைவர் வாழ்க்கையில் அவராலேயே மறக்கமுடியாத மழை நாள் கூட்டம் ஒன்று இந்தத் தமிழ் மண்ணில் அல்ல - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களுக்கு அப்பால் பீகார் மண்ணில் கூடியதை இந்த பிறந்த நாள் சிந்தனையாக நினைத்துப் பார்ப்பதோடு பதிவு செய்திட வேண்டும்.

பீகாரில் கர்ப்பூரி தாகூர் - முடி வெட்டும் மருத்துவர் குலத்தில் பிறந் தவர். மக்கள் தொண்டினால் அந்த மண்ணின் முதல்வராக உயர்ந்தவர். அவர் முதலமைச்சர், அவருடைய தந்தை, மகன் முதலமைச்சர் என்பதற் காகத் தாம் செய்து வந்த முடிதிருத்தும் தொழிலை சாகும் வரை விடாமல் செய்து வந்தவர். மகன் தாகூரின் முதலமைச்சர் கார் அந்தப் பக்கம் செல்லும். தந்தை அப்போதும் தன் தொழிலை விடாமல் செய்து வந்தார்.

அப்பேர்ப்பட்ட கர்ப்பூரி தாகூர் தம் மாநிலத்தில் தமிழர் தலைவரை அழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் என்றால் அந்த மண்ணில் அவ்வளவு கூட்டம் கூடியது ஜே.பி. பேசும் போது மட்டும் கூடியது என்பர்.

அவ்வளவு சிறப்பு மிக்க மரியா தையைத் தமிழர் தலைவருக்குக் கொடுத் துக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். பலரும் பேசுவதாக ஏற்பாடு கூட்டம் தொடங்கியது. வரவேற்றுப் பேசிய கர்ப்பூர் தாகூர் மற்றவர்கள் எல்லாம் பேசவேண்டாம் - வீரமணிஜி மட்டும் பேசி னால் போதும் என்று கூறிவிட்டார்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தவுடன் இவருடைய சொற்பொழிவு மழை தொடங்கியதும் மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு கொட்டத் தொடங்கியது. கூட்டம் அப்படி இப்படி நகர வேண்டுமே. நகரவேயில்லை. ஆசிரியருக்குக் குடை பிடிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நனையும்போது எனக்கு மட்டும் குடை வேண்டாம் என்று மழையில் நனைந்தவாறே ஒன்றரை மணிநேரம் சொல்மாரி பொழிய மக்கள் கூட்டம் கலையாது கேட்ட அற்புதம் அயல் மண்ணில் நிகழ்த்தியிருக்கிறார், பேசி முடிக்கவில்லை. பேசிக்கொண்டேயி ருக்கிறார். துண்டுச் சீட்டு ஒன்று வருகிறது. விமானத்திற்கு தாமதமா கிறது என்று தகவல் இருந்தது துண்டுச் சீட்டில். ஆசிரியர் பேச்சை முடித்து ஈர ஆடையைக் களைந்து ஆடையை மாற்றி விமானத்தில் வர நேரம் சரியாக இருந்திருக்கிறது. விமானத்தில் ஏறி விட்டார் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன.

மறுபடியும் விமானம் புறப்படுவதற்கு முன் விமானக் கதவுகள் திறக்கின்றன. விமானத்தில் ஏறும் ஏணி இறக்கப் படுகிறது. கர்ப்பூரிதாகூர்தான் நனைந்த ஆடையுடன் வருகிறார். கட்டித்தழுவி வீரமணிஜி இதற்கு முன் அந்த மைதானத்தில் லோக்நாயக் ஜே.பி.ஜி. பேசும்போதுதான் மக்கள் அப்படி அசையாமல் இருந்திருக் கிறார்கள். இப்போது அப்படி எங்கள் ஊர் மக்களை ஒன்றரை மணி நேரம் மழையிலும் கட்டிப்போட்டுவிட்டீர்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியி ருக்கிறார்.

ஆசிரியர் அவரிடம் இந்தப் பாராட்டை என் பேச்சை மொழி பெயர்ப்புச் செய்தாரே அவருக்குத் தெரிவியுங்கள் என்று அடக்கமாகக் கூறி விட்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தார்.

இதுபோல் தமிழர் தலைவரைப் பாராட்டிய வடநாட்டுத் தலைவர் களில் ஒருவர் ஒரிசாவின் முதலமைச்சர் பிஜூபட்நாயக். இப்போதைய பட்நாயக்கின் தந்தை. ஒரிசாவில் அவர் ஒரு பார்ப்பன எதிரி. அவர் வீட்டினுள் பார்ப்பனரை நுழைய விடமாட்டாராம். வீட்டில் வாசலில் கோலமா போடுவது, மாடு குளிப்பாட்டுவது என்று வேலை களுக்கு அவர்களை வைத்திருப்பவர். அவர்களை வீட்டிற்குள் விடமாட் டாராம். அவருடைய இந்தப் பாப் பனரல்லாதார் பற்றுதான், எம்.ஜி.ஆர். திட்டமிட்டுத் திமுகழகத்தைப் பிளந்தபோது, திராவிட இயக்கம் பிளவு படக்கூடாது என்று சமரசம் செய்ய முன் வந்தது. அத்தகைய முதல்வரின் பாராட்டும் பெற்றவர் தான் தமிழர் தலைவர்.

இப்போது மூன்றாம் முறையாகப் பிறந்த நாள் விழாவில் மக்கள் அன்புக் கட்டளைக்குப் பணிந்து அதற்குச் சம்மதித்திருக்கிறார். அதுவும் கூட அவருடைய கனவுத் திட்டமான 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலை - பெரியார் உலகம் உருவாக்கும் திட்டத்தின் பொருட்டுத் தான் சம்மதித்திருக்கிறார். உண்மை யாகவே ஆசிரியர் ஒரு வித்தியாசமான தலைவரே!

Read more: http://viduthalai.in/page5/92780.html#ixzz3Ls2SiW23

தமிழ் ஓவியா said...

பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை - சிவாஜி கணேசன்

தினமணியில் பணியாற்றியபோது சிவாஜி கணேசன் அவர்களைப் பேட்டி காண சென்றிருந்தேன். தினமணி பிராமணப் பத்திரிகையாச்சே... என்னை எல்லாம் பேட்டி காண மாட்டாங்களே என்றார். அப்போது இராம். திரு.சம்பந்தம் ஆசிரியராக இருந்தார். எங்கள் ஆசிரி யரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர் பெரியாரிஸ்ட் என்றேன். அப்படியானால் இனி பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவு பண்ணிட்டாங்க போல என்றார்.

- முக நூலில் இருந்து நன்றி: தமிழ் மகன்

Read more: http://viduthalai.in/page4/92779.html#ixzz3Ls3nl3rN

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டாம்?

மூடநம்பிக்கை வேண்டாம்
மூலகாரணமானவர்கள் வேண்டாம்
தப்பு அடிக்க வேண்டாம்
தறிகெட்டுப் போக வேண்டாம்
வண்ணான் வேண்டாம்
வாய்க்கரிசி வேண்டாம்
பரியாரி வேண்டாம்
பாடை கட்ட வேண்டாம்
கோடி வேண்டாம்
வெடி வேண்டாம்
குளிப்பாட்ட வேண்டாம்
கொள்ளிச் சட்டி வேண்டாம்
பால் தெளிக்க வேண்டாம்
படத் திறப்பு விழா வேண்டாம்
கண்தானம் வேண்டும்
குளிர் பெட்டியில் வைக்க வேண்டும்
ஊர்வலம் ஊர்தியில் போக வேண்டும்
தீ குச்சியால் தீ மூட்ட வேண்டும்
நினைவு நாள் வேண்டும்
பெரியார் கொள்கை பரவிட வேண்டும்
- கோபால கிருஷ்ணன் (கோகி)
திராவிடர்கழகம், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page3/92776.html#ixzz3Ls4Zk5d1

தமிழ் ஓவியா said...

இதுதான் மனுதர்மம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
_ அத்தியாயம் 1, சுலோகம் 87

பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ்செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ அத்தியாயம் 1, சுலோகம் 88

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91

பிராமணன் முதல் வருணத்தானான தாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100

பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-அத்தியாயம் 8, சுலோகம் 413

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417

பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73

ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83

தமிழ் ஓவியா said...

சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்தி லேயுடைய கலப்பையும், மண்வெட்டி யும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?
அத்தியாயம் 10, சுலோகம் 84

பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14

மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால், கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

அத்தியாயம் 9, சுலோகம் 15

மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் , சுலோகம் 16

படுக்கை,ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17

மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால், தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.

அத்தியாயம் 2, சுலோகம் 213

ஜிதேந்திரியனாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214

தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215

தானியம், லோகம், பசு, இவைகளைத் திருடுதல், குடிக்கிற மனையாளைப் புணர்தல், ஸ்திரி, சூத்திரன், வைசியன், சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.

இந்துலா என்ற இந்துச் சட்டத்தை, இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படி, சட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி

இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்

எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

Read more: http://viduthalai.in/page2/92771.html#ixzz3Ls4mxi5i

தமிழ் ஓவியா said...

வெங்காயம்


* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காயத்தை வதக்கி சாப்பிட் டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்த நாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page2/92772.html#ixzz3Ls5LrQ00

தமிழ் ஓவியா said...

ஒரு சுயமரியாதை வீரரின் கடைசி விருப்பம்! ஆணை!


உயிர் பறந்து உடல் சரிந்தால் உதிர்ந்த சருகு!
எனது இறந்த உடலுக்கு எந்த விதச் சடங்கும் வேண்டாம்.
முதலில் அரசு பொதுமருத்துவமனைக்குத் தகவல் தந்து
உடல் உறுப்புகள் தேவைப்படுவன எடுத்துக் கொள்ளுமாறு
கூறி, அதற்காவன செய்ய வேண்டும்.
நீராட்டு! பூ மாலை, புத்தாடை எதுவும் வேண்டாம்.
சங்கு ஊதிச் சத்தமிடும் மணியோசை, எதற்கு?
போகும் வழி எங்கும் பூப்போட்டுப் புதுக்குப்பை சேர்க்காதீர்!
எளியமுறையில் எடுத்துச் சென்று எரியூட்டல் வேண்டும்.
தொலைவில் உள்ளோர்க்குத் தெரிவித்துக் காத்திருக்க
வேண்டாம். பின்னர் அறிவிக்கலாம்!
அண்டையில் இருப்போர்க்கு மட்டும் அறிவித்தால் போதும்.
யாருக்கும் இடர் இன்றி, உடனே எரித்துவிட வேண்டும்.
மரணச் சடங்கு, மற்றவர் செலவு, சுற்றச் சடங்கு
எதுவும் வேண்டாம். காரியம் சம்பந்திகள் தலைக்கட்டு
மரியாதையும் வேண்டாம்.
நீத்தார் நினைவு நாள் நடத்தலாம்; ஆனாலும்
படையலிடும் பழக்கம் தேவையில்லை.
மரணம் உறுதி என்பதால் துயரமும் தேவையில்லை.
என் மனைவிக்கு எந்தக் குறைவும் ஏற்படுத்தக் கூடாது;
இப்போது இருப்பதுபோல் எப்போதும் இருக்க வேண்டும்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம்
சென்னை- 78

Read more: http://viduthalai.in/page2/92773.html#ixzz3Ls5TDABD

தமிழ் ஓவியா said...

காவடியாடும் காவல்துறை!


கன்னியாகுமரி, டிச.14- கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருந்து குமார கோவில் வேனிமலை முருகன் கோவிலுக்கு நேற்றுமுன்தினம் (12.12.2014) பொதுப் பணித் துறை, காவல்துறையினர் சார்பில் காவடி ஊர்வலம் தொடங்கியதாம். பத்மனாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் அருண்சத்யா இவ்வூர்வலத்தைத் தொடங்கி வைத்தாராம்.

காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் விக்ராந்த் பாட்டில் மற்றும் பொதுப்பணித் துறை சார்ந்த உயரதிகாரிகள் பலரும் இவ்வூர்வலத்தில் கலந்துகொண்டனராம். இதில் பல அரசு அதிகாரிகள் காவடி எடுத்து ஆடினார்களாம். பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி என்று பல காவடிகள் இதில் அடக்கமாம். மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், திருடர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும் காவடி எடுத்ததாக பொதுப் பணித்துறை - காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. இந்நிலையில், முருகன் கோவிலுக்கு இந்தக் காவடி திருவிழாவை காவல்துறை - பொதுப் பணித் துறையினரே அதற்கான முழுச் செலவையும் ஏற்று, பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டிப் பணம் வசூலித்து இதை நடத்தியுள்ளனர். இதுதான் அரசு அதிகாரிகளின் கடமையா? இதுதான் அவர்கள் மதச்சார்பின்மையை பின்பற்றும் லட்சணமா? அரசு அதிகாரிகள், பல வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு, இந்த மத விழாவில் பங்கேற்கலாமா?

பக்தகோடி ஒருவர் கீழே விழுந்து படுகாயம்

இவ்வூர்வலத்தில் பறக்கும் காவடியில் தொங்கியபடி வந்த குமாரபுரத்தைச் சார்ந்த அசோக்குமார் என்ற பக்தருக்கு, அவருடைய முதுகில் மாட்டியிருந்த கொக்கி கழன்று விழுந்ததால், கீழே விழுந்தார்.

அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தியின் பெயரால் பறக்கும் காவடியில் தொங்கிய பக்தரின் உயிர் இப்போது ஊசலாடுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/92857.html#ixzz3Ls6FcIhX

தமிழ் ஓவியா said...

ரஜினி ரசிகர் மன்றத்தின் மோசடி


காலமெல்லாம் கடவுளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துத் தமிழ் மக்களின் சமூக விடுதலைக்காகப் போராடியவர் தந்தை பெரியார். ஆனால், இந்தக் கொள்கைகளுக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஓர் ஆன்மீக ஆசாமி.

இருந்தாலும், மதுரை திருப்பரங் குன்றத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆன்மீகப் பெரியாரே! என்று தலைப்பிட்டு, கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் பெரியாரின் முகத்துக்குப் பதில், ரஜினி முகத்தை ஒட்டி சுவரொட்டி அடித்துள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது - மோசடியானது - அப்புறப்படுத்தவில்லையானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பெரியார் ஒரே ஒருவர்தான் - அவர் பகுத்தறிவுத் தந்தை பெரியார் மட்டும்தான்!

Read more: http://viduthalai.in/page-8/92845.html#ixzz3Ls6QOxWG

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முரண்பாடே உன் பெயர்தான் ஜோதிடமா?

செய்தி: துலாம் ராசியில் பிறந்தவர். ஜென்ம சனி விலகி, பாதச் சனி துவங் குகிறது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ் சரிக்கும், இக்கால கட்டத்தில் புதிய கட்சியை உரு வாக்குவார்.

தினமலரில் வெளிவந்த சனி பெயர்ச்சி பலனில் ஜி.கே.வாசனுக்கு ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சிந்தனை: கடந்த நவம்பர் 28 ஆம் தேதியே ஜி.கே. வாசன் திருச்சியில் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். ஆனால், இப்பொ ழுதுதான் அவர் புதிய கட்சியை உருவாக்குவார் என்று சனி பெயர்ச்சி கணிப்பில் பரணிதரன் என்ற ஜோதிடர் கண்டு பிடித்திருக்கிறார்; முரண் பாடே, உன் பெயர்தான் ஜோதிடமா?

Read more: http://viduthalai.in/page1/92832.html#ixzz3Ls6wviBf

தமிழ் ஓவியா said...

நோய் நொடி நீங்குமாமே!

இன்றைய ஆன்மிகம்?

நோய் நொடி நீங்குமாமே!

சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். அபி ஷேகப் பொருள்களைத் தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டா குமாம்!

ஓ, புதிய கண்டு பிடிப்போ! தலையில் வைத்தால் உடல் முழு வதும் எப்படி பரவும்! அது என்ன அப்படிப்பட்ட சக்தி? நோய் நொடி நீங்கு மாமே - அப்படியானால் ஆஸ்பத்திரி எதற்கு? சங்கரராச்சாரியாரே இந்து மிஷன் ஆஸ்பத்திரி நடத் துகிறாரே!

Read more: http://viduthalai.in/page1/92833.html#ixzz3Ls77V8Pf

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதா? உச்சநீதிமன்றத்தின் தடை பாராட்டத்தக்கது

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதா?

உச்சநீதிமன்றத்தின் தடை பாராட்டத்தக்கது

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


கருநாடகாவில் ஒரு கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளும் மூடநம் பிக்கையை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது இதனை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடகத்தில் சில கோயில்களில் நடைபெறும் அருவருக்கத்தக்க திருவிழா ஒன்றைத் தடை செய்து உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டீஸ் திரு. மதன்லோக்கூர், ஜஸ்டீஸ் பானுமதி ஆகியோர் தந்துள்ள தீர்ப்புதான் உண்மையில் அரசியல் சட்ட கடமைகளில் ஒன்றான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு, சீர்திருத்தம், மனிதநேயம், வளர்ப்பு இவைகளை நடைமுறைப்படுத்தும் நல்லதோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு ஆகும்!

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருளும் கேவலம்!

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை வரிசையாக போட்டு அதன்மீது பக்தர்கள் உருண்டு புரண்டு செல்லும் அநாகரிக காட்டுமிராண்டித்தனம், பக்திப் போர்வையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்தது!

மூடத்தனத்தின் முடைநாற்றம் அல்லவா இது?

கடந்த 500 ஆண்டுகளாக உருளுசேவா என்ற பெயரில், தட்சண கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குக்கு சுப்ரமணியசுவாமி கோயிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்மீது மற்றவர்கள் உருண்டு புரண்டு வரும் நிகழ்ச்சி என்பது பொது ஒழுக்கம் அமைதி, சுகாதாரம் இவற்றிற்கு எதிரானது அருவருப்பானது என்பதால் இதனை கர்நாடக அரசு தடை செய்தது.
வியாதிகள் நீங்குமாம்!

தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாட கத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரை ஞர்கள் வாதித்தனர்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி

அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண் டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-12-2014

Read more: http://viduthalai.in/page1/92831.html#ixzz3Ls7HrzHg

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல; துயரம், துன்பம் என்பதும் நிரந்தர மல்ல. நிரந்தரமாக அவை இருந்திடின், இரண்டின் தனித் தன்மை நமக்குத் தரும் அனுபவங்கள் காணாமற் போய்விடும்.

மகிழ்ச்சியின்மை - ஒவ்வொரு வரது வாழ்விலும் ஏற்படுவது இயற் கையே - தவிர்க்க முடியாததும்கூட.
சில நேரங்களில் மகிழ்ச்சிக்கு விலை கிடைக்காமலே அது நமக்குக் கிடைக்கிறது.

பல நேரங்களில் அதிக விலை கொடுத்துத்தான் அதைப் பெற்றாக வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை என்று ஒரு தீர்ப்பு வந்து அவர்களது சிறைக் கதவுகள் திறக்கும்போதும், 10 மாதம் சுமந்து பெற்று, தனக்காக இல்லா விடினும் தனது கருவினுள் உள்ள குழந்தைகளுக்காக எல்லாவித பத் தியங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பிரசவ வேதனை - அறுவை சிகிச்சை வரை சென்றும், குழந்தையின் நலன் காக்கும் தியாகம் - துன்பத்தைத் துடைத் தெறிந்து, மகிழ்ச்சியை, பிறந்த குழந்தையின் உச்சி மோந்து முத்தம் தருகின்ற போது, விலை கொடுத் தாலும் நல்லதைப் பெற்றோம் என்ற தாயின் மகிழ்ச்சியையும் அளவிட அளவுகோல்தான் உண்டா?

மகிழ்ச்சி ஏற்பட்டாலும், துன்பம் துயரம் நம்மைத் தாக்கினாலும்கூட, அதை நம்மில் சிலர் மறைத்து வைத்துக் கொள்ள முயலுகிறார்கள்; அது தேவையற்ற ஒரு தவறான அணுகு முறையாகும். எதையும் வெளிப்படையாக்கிக் கொண்டால் தான் கனத்த இதயம் லேசாகி நமக்கு நிம் மதியைத் தரும்! விரைந்து அது அகல வாய்ப்பு ஏற்படும்.

மகிழ்ச்சியைக் கண்டபோது சிலர் அளவு கடந்த துள்ளல், ஆட்டம், பாட்டம் போட்டு ஊரையே துவம்சம் செய்து விடுவார்கள். அதுபோலவே ஒரு சிறு அளவுக்குத் துன்பமோ, துயரமோ வந்தால் அதைத் தாங்கும் மன வலிமை இல்லாது மனந்தளர்ந்து, மூலையில் ஒடுங்கிக் கிடப்பர்.

இரண்டு எல்லை தாண்டிய நிலைப் பாடும் மகிழ்ச்சியான சராசரி பக்குவம் கொண்ட மனிதருக்குத் தேவையில்லை.
மகிழ்ச்சியை, எப்படிப் பெறுவது என்று ஏராளமான ஹிதோபதேசங்களும் - அறிவுரைகளும் - ஒலி நாடாக்களும், புத்தகங்களும் வியாபாரப் பொருள்களாகி சந்தையில் மலிந்து கிடக்கின்றன.

விற்றவருக்கு மகிழ்ச்சி - அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு. மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் சரக்கல்ல. நம் மனதில் நமக்குள்ள பக்குவத்தின் முதிர்ச்சி, முனைப்பு. அவ்வளவுதான்.

மகிழ்ச்சி என்பது தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்றதாக அமைய வேண்டும். அதை நாமே நமது ஏகபோகச் சொத்தாக்கி மகிழ்வதில் உண்மை இன்பம் இல்லை. மகிழ்ச்சியை நாம் மற்றவர் களுக்கு - அது தேவைப்படும் நிலையில் நமது உற்றார், நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கும்போதுதான் நமக்கு அது ஊற்றாக சுரக்கிறது! வற்றாத ஜீவ நதியாக என்றும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

அடுத்தவருக்குப் பயன்படாது அணை கட்டிக் கொண்டு இயற்கையைப் பங்கு போடும் ஈன புத்தியாளர்களைப் போல, பலர் மகிழ்ச்சியைக்கூட அணை கட்டித் தேக்கினால், அது அதன் இயல்பை இழந்து விடுவது உறுதி. மகிழ்ச்சிக்கும் நம் உடல் நலத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவு உண்டு. மறந்து விடாதீர்!

எதற்காகவும் கவலைப்படாமல், ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதை, விருப்பு, வெறுப்பற்ற முழுப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும்போது விடையும் கிடைக் கும், தடையும் நீங்கும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளே இல்லை. அறிவால், அனுபவத்தால் - பிறரின் உதவியால் தீர்க்கப்படலாம். துணி வுடன் அணுகுங்கள் - மீறி தோல்வி ஏற்பட்டாலும் அதையும் ஏற்று சுவைத்து அனுப விக்கப் பழகுங்கள் - பரங்கிக் காய் இனிப்புடன் உள்ள கறி ; எனவே இனிக்கிறது.

பாகற்காய் கசப்புடன் உள்ளது. பலருக்கு உட்கொள்ளவே தயக்கம் - ஆனால் அது தரும் சுக கசப்பு போல் பரங்கியின் இனிப்பு தருவ தில்லையே!

இனிப்பின் பெருமை - அருமை கூட கசப்பு என்று ஒன்று ஒன்பான் சுவையில் ஒன்றாக இருப்பதால் தானே! எண்ணுவீர்!

எனவே மகிழ்ச்சியை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் - நமது மூச்சை நாமே (சுவாசித்து) உள்ளே இழுத்து வெளியே தள்ளுகிறோமே அதுபோல; மகிழ்ச்சியை உள்ளே இழுத்து, துன்பத்தை வெளியே தள்ளுங்கள். இரண்டும் வாழ்வின் இரு இன்றியமையாக் கூறுகள் - தேவைகள் - மறவாதீர்!

Read more: http://viduthalai.in/page1/92676.html#ixzz3Ls7yaDgW

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

புனிதமாம்

அய்யப்பன் கோயில் பம்பை நதியில் குளித் தால் எல்லாப் பாவங் களும் நீங்குமாம். உண்மை நிலை என்ன? இந்தியா டுடே ஏடு (19.12.2007) அளிக்கும் விவரம் இதோ:

பம்பை நதியில் 100 மி.லி தண்ணீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள், 1995-1996இல் 9500 என்பதாக இருந்தது. இந்தப் பாக்டீரி யாக்கள் 500அய்த் தாண் டினாலே ஆபத்து என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இந்த லட்ச ணத்தில் பம்பை நதி புனிதமாம்.

Read more: http://viduthalai.in/page1/92758.html#ixzz3Ls9iQBXd

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

வெளியூர் 2..12.2014-ல் வெளிவந்த மானமிகு அய்யா தோழர் வீரமணி அவர்களின் விடுதலை மலர் படித்தேன். அது அறிவியல் பெட்டகமாக அமைந்து விட்டது.

ஒரு பெரிய லட்சியத்தில் வாழ்ந்த பெரியார் அவர்களின் தத்து பிள்ளையாக, தேர்தலையும் வாக்குச் சாவடிகளையும் சந்திக்காமல் லட்சியத்தை மனதில் நிறுத்தி செயல்படுகின்ற செயல்பாடு என்னையே பிரமிக்க வைத்தது.

நான் பொதுவுடைமை தத்துவத்தில் வளர்ந்தவன், திராவிடர் கழக கொள்கை, செயல்பாட்டால் வீரமணி அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எத்தனை தத்துவத்தைப் பேசினாலும் சூழ்நிலையை ஒத்து நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி பெறும். அதைத்தான் லெனின் கூறுகிறார்.

அதில் திராவிடர் கழக இயக்கம், செயல்பாடு, நடைமுறைகள் விடுதலை பத்திரிகை வாயிலாக அன்றாடம் வாசிப்பவன். தோழமை என்பது தங்கள் இயக்கத்தை தவிர வேறொரு இயக்கத்தில் இல்லை என்பதை நடைமுறை வாயிலாக கண்டு கொண்டவன்.

விடுதலையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் மலரில் பார்ப்பனியத்தைப்பற்றி 1978-ல் நெல்லையில் பேசிய செய்தியை படித்தவுடன் எவ்வளவு தீர்க்கமாக பேசி உள்ளார் என்று அறிந்தேன்.

விடுதலை பத்திரிகையில் வரும் செய்திகளை பார்த்தவுடன் எதிர் காலத்தில் ஒரு மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. அரிய முத்துக்களாக 82 வாக்கியங்கள் மனதை ஈர்த்து விட்டன.

வைகோ அவர்களை பாரதிய ஜனதா தலைவர் ராஜா பேசிய பேச்சிற்கு துணிந்து பதில் சொன்ன ஒர் ஒப்பற்ற தோழர் எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்பதை எதிர்கால சிந்தனையுடன் கூறிய வாசகம் சிறப்பு. இயக்கத்திற்கு அப்படியொரு தலைவர் தேவை. பெரியாரின் லட்சியத்தை அடி பிறழாது. இளமைத் துடிப்போடு செயல்படுத்துவதைப் பார்த்து, நானும் அதை விட ஒரு படி தாண்டி செயல்படுவேன்.

நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என்ற கட்டுரை தோழர் திருநாவுக்கரசு சிறந்த கண்ணோட்டதோடு எழுதியுள் ளார்கள். பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகம் என்ற தலைப்பில் ஜே.வி. கண்ணன் கட்டுரை ஓர் ஆய்வுரையாக செய்துள் ளார்கள்.

தோழர் அறிவுக்கரசு கவிதை ரொம்ப சிறப்பு. இறுதி மூச்சுவரை இந்தப் பணியை விட்டால் எனக்கு வேறு பணி ஏது? என்ற தலைப்பை படித்தவுடன் எனக்கே ஓர் உத்வேகம் பிறந்து விட்டது.

ஒவ்வொரு தோழரும் எழுதிய கட் டுரைகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பெட்டகம். சிவப்பாக இருந்த வனை கருப்பாக மாற்றிய பெருமை தலைவர் வீரமணிக்கு உண்டு. இறுதி வரை பெரியாரை நேசிப்பேன். மானமிகு தலைவரை நேசிப்பதோடு மறக்கவும் முடியாது.

தோழன் இரா. சண்முகவேல்,

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல் - 627860

Read more: http://viduthalai.in/page1/92752.html#ixzz3LsAW9DD8

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியா விலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.
- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBpBgoM

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBxniKy

தமிழ் ஓவியா said...

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை


கிரேக்கப் புராணத்தின்படி குரோணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால் தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்
பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsC6B23o

தமிழ் ஓவியா said...

ஆன்மா பற்றி மொக்கலவாத கருத்து

கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.
ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)
இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம். - சேலம் ர.ஒந்தாட்சி

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCE28Ci

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?
அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடை மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
தி இண்டு, 30.11.2002

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCKTZ9G

தமிழ் ஓவியா said...

பெரியார் பேசுகிறார்

உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) - வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

தந்தை பெரியார், 4.10.1931 பொது உடைமை வேறு; பொது உரிமை வேறு. பொது உடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அநுபவம் என்பதாகும். தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமானால், தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொது உடைமை ஏற்பட வசதி உண்டாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும், அதிக உரிமை இருக்கிறவனிடந்தான் போய் சேர்ந்துக்கொண்டே இருக்கும் என்பது பொதுவுடமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும். - தந்தை பெரியார், 25.3.1944



Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCRqEtQ

தமிழ் ஓவியா said...

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம்

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதி மன்றம் தீர்ப்பு அளித் திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடு என்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன் படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?
(ராணி, 3.1.1991)

Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCbd8dV

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சித் துறையில் சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயம்?


புரிந்து கொள்ளுங்கள்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு கூறுகிறது!

மோடி ஆட்சித் துறையில் சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயம்?

தேசிய ஆராய்ச்சிக்கான பேராசிரியர் ஆய்வுத் துறையில் முன்பு சர் சி.வி. இராமன், எஸ்.என். போஸ், மகாஸ்வேத தேவி, பிஸ்மில்லாகான், ஆந்திரி பெட்டில், கோவர்தன் மேத்தா போன்றவர்கள் இருந்த ஆய்வுத்துறையில், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், அனுதாபிகளான எஸ்.எஸ். பைரப்பா, அசோக் கஜனன் மோடக் மற்றும் சூரியகாந்த் பாலி ஆகியோரை நியமிக்க மனிதவள மேம்பாட்டுத்துறை ஆயத்தமாகி விட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட, மிகப் பெரிய அளவில் மிகச் சிறப்பான ஆய்வுகளைத் தந்த மிகத் திறமை வாய்ந்த ஆராய்ச்சிக்கானவர்களையே நியமனம் செய்யும் வழக்கம் இதற்கு முன்பு இருந்தது - இப்போது அதற்கு விடை கொடுத்தனுப்பப்படுகிறது.

மேற்கூறிய மூன்று பெயர்களும் வெளியிலிருந்து வந்தன. (அது எது என்று குறிப்பிடப்படவில்லை) பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் சொன்னார்; இம்மூன்று பெயர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் அளிக்கப்பட்டவை. இம்மூன்று பெயர்களில் ஒருவரான பைரப்பா எழுதிய நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் அண்மையில் வெளியிட்டார். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மேடையில் அமர்ந்து முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது!

இம்மூவரில் ஒருவரான சூரியகாந்தபாலி என்பவர் குறிப்பிடும் போது திறமை என்பது அவ்வப்போது மாறிடும் ஒன்றுதான், எனவே இதைப்பற்றி யாரும் எதுவும் கூற முடியாது. அவரவர் கண்ணோட்டத்தில் அது அடிக்கடி மாறத்தான் செய்யும் என்கிறார்! இதில் இருவர் தேர்தல் நேரத்தில் மோடிக்காக பகிரங்கமாக வேலை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/92787.html#ixzz3LsDIMZy3

தமிழ் ஓவியா said...

அம்பலமாகும் இந்திய தேசியமும், இந்து புனிதமும்


- குடந்தை கருணா

நாட்டின் வெளிவிவகாரங்களை சமன் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள் விவகாரத்தை கிளப்புகிறார். டில்லி யில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார். மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சட்டத்தில் பிரகடனப்படுத்திய ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கான நூலை, எல்லா மக்களுக்குமான நூலாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்வியோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் பணியை முடித்துக் கொண்டன. அதனைக் கடந்து, பகவத் கீதை ஒரு புனித நூலா? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் தமிழ் நாட்டில் பெரியார் பிறந்த மண்ணில் மட்டும் தான் எழுந்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் நேற்று (12.12.2014) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் தேசியத்தை யும், புனிதத்தையும் அறுவை சிகிச்சை செய்து காட்டினர்.

பகவத் கீதை, நால்வகை வர்ணத்தை நிலை நாட்டும் ஒரு பிற்போக்கான வன்முறையைத் தூண்டும் நூல் என்பதுதான் சாராம்சம். ஆனால், அதன் உள்ளே சென்று ஆராய்ந்தால், இந்த நூல், பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற் கான அத்தனையும் சொல்லப்படும் நூல் என்பது விளங்கும்.

கடமையைச் செய்; பலனை எதிர் பாராதே என்ற வாசகத்தை, கீதை சொல்கிறது என இன்றும் பலராலும் சொல்லப்படும் நிலையில், நால்வகை வர்ணத்தில் கடைநிலையில் இருக்கும் சூத்திரர்கள், பார்ப்பனர்களுக்கு ஏவல் செய்வதை தங்கள் கடமையாக செய்ய வேண்டும்; அதற்கு எந்தப் பலனையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியும், உரிமையும் இல்லை என்பதுதான் பொருள் என்பது இன்று எத்தனைப் பேருக்கு தெரியும்?

நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திர மக்களை மீண்டும் பார்ப்பனர் களுக்கு ஏவல் செய்வதை கடமையாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியோடு அரங்கே றும் இந்த பகவத் கீதை நாடகம், அதை தேசிய நூலாக ஆக்கிடத் துடிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தேசியம் என்பதே, பார்ப்பன தேசியம் தான். அவர்களுக்கான அமைப்புகளை கட்ட மைப்பதுதான். அதற்கு பகவத் கீதை வழி செய்கிறது. ஆகவே, அது தேசிய நூல்.

பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பான அத்தனையும் புனிதம் நிறைந்தது. மாட் டில் பசு மாடு புனித மாடு, உலகிலேயே அதிக மாசு கொண்டுள்ள கங்கை, புனித கங்கை. அதை சுத்தப்படுத்துவதற்கு மோடி அரசு ஆயிரக்கணக்கான கோடி செலவிடுவதாகச் சொன்னாலும், அப் போதும் அந்த மாசு படிந்த ஆறு, புனித ஆறு. அது போலத்தான் பகவத் கீதை புனித நூல்!

அரசமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதில் சமஸ்கிருதம் தவிர, மீதம் உள்ள அனைத்து மொழி களும், ஏதேனும் ஒரு மா நிலத்தில் அந்தப் பகுதி மக்களால், பேசப்படுகிறது. ஆனால், எந்த மாநிலத்திலும், எந்த மக்களாலும், பேசப்படாத மொழியான சமஸ்கிருதம் எப்படி தேசிய மொழி யாகும்? சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழி. ஆகவே அது தேசிய மொழி, அது தேவ பாஷை, அப்படித்தானே?

இந்த பார்ப்பன மேலாதிக்கத்தை தோலுரித்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான். ஆனால், அம்பேத்கரின் சிந்தனையை கொண்டு செல்ல ஓர் இயக்கம் இல்லாத நிலையில், பெரியாரின் இயக்கம் அந்த பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய தேவை இன்று அதிகம் ஆகியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கே உரிய கிரிமினல் புத்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு விஷயத்தை இங்கே செய்து கொண்டே, இன்னொரு பக்கம் வேறொரு விஷ யத்தை சன்னமாகச் செய்வதுதான். அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக் கிறார்கள். ஒருபக்கம், சமஸ்கிருதம் கட்டாயம், பகவத் கீதை தேசிய நூல், காந்தியைவிட கோட்சே ஒரு தேசபக்தன், ராமனுக்கு கோவில் கட்டவேண்டும் என கோரிக்கை என நம்மை திசை திருப்பி விட்டு, இன்னொரு பக்கத்திலே, சத்த மில்லாமல், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் பணியையும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தில் அவர்களுக்கு விரோதமான, பனியா கும்பலுக்கு சாதகமான பல அம்சங்களை (ஷரத்து)களை சேர்க்கும் பணியையும் துவக்கி உள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை ஓசையின்றி ஒழித்துக் கட்ட, வளர்ச்சி, தூய்மை என மயக்க பிஸ்கெட்டு கொடுத்து, தனியார் மயமாக் கும் போக்கை இந்த மோடி அரசு செய்து வருகிறது.

இந்த பார்ப்பன பனியா கதியைத் தான், தன் ஆயுள் முழுவதும் தந்தை பெரியார் எதிர்த்து வந்தார். பார்ப்பனர் களை இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிர்ப்பது, தங்கள் வீட்டு அத்தனை சடங்குகளையும் அவர்களைக் கொண்டு நடத்துவது, சரிப்பட்டு வராது. பார்ப்பனர் களை நம்முடைய அத்தனை நிகழ்வு களிலும், பிறப்பு முதல் இறப்பு வரை, அவர்களின் மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

அதனால்தான், இன்று பகவத் கீதை ஒரு புனிதமும் இல்லை; தேசியமும் இல்லை என்று துணிந்து தமிழ் நாட்டில் சொல்ல முடிகிறது கட்சிகளுக்கு அப்பாற் பட்டு அந்த சிந்தனையை ஒன்றுபடுத்த முடிகிறது.

இந்தப் பணியை பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு யாரும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. முனைப்புடன் செயல்பட்ட ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாராட்ட வேண் டும் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லா தாரும். ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்து, சர்வாதிகாரமாக ஆட்சி செய்வது ஹிட்லர் பாணி; அதைத்தான் இன்றைய மோடி அரசு செய்து கொண்டு வருகிறது. ஆபத்தை புரிந்தவர்கள், புரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சொல்வ தற்கு, நேற்றைய கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தி உள்ளனர், பயன்படுத்திக் கொள்வோம். பார்ப்பன பனியா சதிகளை அம்பலப்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page1/92799.html#ixzz3LsDg44r7

தமிழ் ஓவியா said...

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே...!

பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ''இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்'' என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.

அதெல்லாம் இருக்கட்டும், ''யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?'' என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்.......

... மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது..........

இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.

சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.

இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!

- க.அருள்மொழி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!


திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, ஒன்றான வழிபடும் முறை களை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன்தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன் றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்த தால் செவ்வாய்க்கிழமை யும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படு கிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழ மையும் சேர்ந்து வரும் நாளை சங்கடஹர சதுர்த்தி என்று மக்கள் வழிபட வேண்டுமாம்.

செவ்வாய்க் கிரகம் பூமிக்கு வந்து விநாயகரை நோக்கித் தவமிருந்ததா? 890 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள ஒரு கோள் விநாயகரை நோக்கித் தவமிருந்ததாம். செவ்வாய்க்கோள் என்ன இந்துக்களின் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமோ!

Read more: http://viduthalai.in/e-paper/92911.html#ixzz3Lxpiyzyz

தமிழ் ஓவியா said...

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சரமாரி கேள்விகள்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டி அய்) மூலம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் கூற முடியா மல் திருப்பதி தேவஸ்தான அதி காரிகள் திக்குமுக் காடி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலை யான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள், இதிகாசங்கள் தெரிவிக் கின்றன. இதனால் பக் தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கை களை குபேரனுக்கு வட்டி யாக செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை யில்தான் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோடிக் கணக் கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் சிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத் துக்கு மனு அனுப்பி வரு கின்றனர். ஏழுமலையான் தனது திருமண செலவுக் காக குபேரனிடம் எவ் வளவு கடன் வாங்கினார்? இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத் திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார்? மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத் தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் கிடைக்காவிட்டால் நீதி மன்றத்தை அணுகப் போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் இதே கேள்விகளை கேட்டு தேவஸ்தானத்துக்கு சமீபத் தில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ் தான அதிகாரிகள் கூறும் போது, புராண, இதிகாசங் களில் ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதாக கூறப்பட் டுள்ளது. ஆனால் சிலர் இதற்கு சாட்சியங்கள் தேவை என்றும், இது வரை தேவஸ்தானம் சார்பில் குபேரனுக்கு கட்டிய வட்டி குறித்து கணக்கு காட்ட வேண் டும் என்றும் ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் கோரி உள்ளனர். சுய விளம் பரத்துக்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92913.html#ixzz3LxpskF86

தமிழ் ஓவியா said...

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.15: ஓய்வூதியம் விதிகளின் அடிப்படையில் 1 ஆண் டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21இல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரண மடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரி சுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர் தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண் டுக்கு குறைவாக பணியாற்றியிருந்தா லும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு 4 வாரங் களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்கா ளருக்கு சுகாதாரத்துறை அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித் தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/92923.html#ixzz3Lxr2nNrB

தமிழ் ஓவியா said...

இருதய நோய்க்கு ஒலி அலை அதிர்வு சிகிச்சை

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, உடல் தகுதி யின்மை மற்றும் வேறு காரணங்களால் சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு புதிய அதிநவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நெஞ்சுவலி, மாரடைப்பு, இருதய செயலிழப்பு, ரத்தநாள அமைப்பு பிரச்சினைகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் மற்றும் இஇசிபி சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ளது. இத்தகைய சிகிச்சையினால் இருதய ரத்தகுழாய் அடைப்புகள் சரி செய்யப்பட்டு இருதய ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது.

ஆனால், உடல் தகுதியின்மை, சிறுநீரக கோளாறு, இருதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு மேற்கூறிய சிகிச்சை முறைகள் செய்ய முடிவதில்லை. மேற்கூறிய பிரச்சினை உள்ளவர்கள், பைபாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து மீண்டும் நெஞ்சுவலி, மூச்சு திணறல் உள்ளவர்கள் நவீன ஒலி அலை அதிர்வு சிகிச்சை செய்யலாம்.

இச்சிகிச்சையானது பாதிக்கப்பட்ட இருதய தசைகளின் மீது கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அலை அதிர்வுகளை செலுத்துவதன்மூலம் புதிய நுண்ணிய ரத்த நாளங்களை உருவாக்கி தடைபட்ட ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

இந்த சிகிச்சை முறையில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மயக்க மருந்து கிடையாது, வலி இல்லை, உடலினுள் எந்தவிதமான மருந்துகளோ, ஊசியோ செலுத்துவது இல்லை. இந்த சிகிச்சை முறையில் இருதயத்தில் எந்த பகுதிக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமோ அந்த இடத்தை கணினி மற்றும் இருதய ஸ்கேன்மூலம் பதிவு செய்து அந்த இடத்தில் ஒலி அலை அதிர்வு சிகிச்சை கருவியை உடலின் மேல் மார்பு பகுதியில் பொருத்தி ஒலி அலை அதிர்வுகள் செலுத்தப்படுகிறது.

ஒலி அலை சிகிச்சையின்மூலம் பலன் பெறும் இருதய நோயாளிகள் முன்பு போல் அதிக மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட இருதய தசைகள் புத்துயிர் பெறுகிறது. இதனால், நோயாளிகள் மூச்சு திணறல், நெஞ்சுவலி குறைகிறது மற்றும் நடக்கும் திறன் அதிகரிக்கிறது.

இந்த சிகிச்சையை தொடர்வதற்கு முன்பு நோயாளிகள் இருதய மற்றும் ஒலி அலை அதிர்வு சிகிச்சை நிபுணரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி இருதய ரத்த நாளங்கள், தசைகள் மற்றும் செயல்திறனை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுகிறார்கள்.

அதன்பின்னர் நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய இருதய தசை பகுதிகள் கண்ட றியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகளின் தன்மைக்கேற்ப இச்சிகிச்சை அளவு முடிவு செய்யப்படுகிறது என்கின்றனர் இருதய சிகிச்சை நிபுணர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/92882.html#ixzz3LxsoQpvq