Search This Blog

16.12.14

மதமாற்றமா - மனமாற்றமா?



ந்தியாவில் மதமாற்றப் பிரச்சினை பூகம்பமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்திலும் எகிறிப் பாய்ந்துள்ளது. ஊடகங்களும் பெரிய அளவில் செய்தி களை உலவ விட்டு வருகின்றன.


இன்றைக்கு மத்தியில் பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், இந்துத்துவாவாதிகள் மிகவும் வெளிப்படை யாக இந்த மத மாற்ற வேலையில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக உத்தரப்பிரதேசம் மேற்குப் பகுதியில் தரம் ஜக்ரான் சமிதி என்ற இந்துமத அமைப்பு  வெளிப்படை யாக துண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்துக்களாக மாறும் கிறித்தவர்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், முஸ்லிம்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடையும் திரட்டப் படுகின்றன. 20 மாவட்டங்களில் 40,000 பேர்கள் இந்து மதத்திற்குக் கொண்டு வரப்பட உள்ளனராம் - இதற்காக விழா எடுக்கப்படுமாம்.

இதற்குமுன் ஆக்ரா போன்ற இடங்களில் முஸ்லிம் களை இந்து மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இப்படி வெளிப்படையாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மாற்றுவதன் மூலம் எதனைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்து மதத்தின் கோட்பாடுகள்மீது கொண்டுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிற மதத்தவர் இந்து மதத்திற்கு வரவில்லை; பணத்திற்காகவும், சலுகை களுக்காகவும்தான் மதம் மாறி வருகின்றனர் என்பது வெளிப்படையாகி விட்டது.

இந்த நிலையில் இந்து மதத்திற்கு என்ன பெருமை ஏற்படப் போகிறது? மாறாக பிற மதத்தினரை விலை பேசி வாங்கும் ஒரு வியாபார நிறுவனமாகத்தான் இந்து மதம் விளங்குகிறது என்று தெரிந்தது தான் மிச்சம்!
இந்து மதத்தில் உள்ளவர்கள் ஏன் வேறு மதங்களுக்குச் சென்றார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமை, ஜாதீய குரூரங்கள்தான் மதமாற்றத்திற்குக் காரணங்கள் இந்து மதத்தில் இந்தக் கொடுமைகள் இப்பொழுதும் நிலவவில்லையா?

இந்து மதத்தின் கோட்பாடுகளை மாற்றி அமைத்து விட்டனரா!? இன்னும் தீண்டாமை இருக்கத்தானே செய்கிறது? இன்னும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருக்கத் தானே செய்கிறது? மறுக்க முடியுமா? சுடுகாட்டில்கூட பேதம் இருக்கிறதே!

இந்து மதத்திலிருந்து கிறித்தவர்களாகவோ, முசுலிமாகவோ மாறிய நிலையில் அவர்கள்மீதான ஜாதி இழிவு ஒழிக்கப்படுகிறது. இந்து மதத்தில் நீண்ட காலமாக இருந்ததால் அதன் விட்ட குறை, தொட்ட குறையின் காரணமாக அம்மக்களின்மீது ஜாதி நிழல் படிந்திருக் கலாம் அதுவும் இந்து மதத்தின் தாக்கமே!

அப்படி மாறியவர்கள் கிறித்தவர்களாக இருந்தால், அவர்கள் விரும்பினால் பாதிரியாராக ஆக முடியும்; மதம் மாறிய இஸ்லாமியர்கள் விரும்பினால் மவுல்வியாக முடியும். இப்பொழுது இந்து மதத்திற்கு மாற்றப்பட்டவர் களும் விரும்பினால், இந்துக் கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியுமா? அப்படி ஆக முடியாததற்குக் காரணம் இந்து சமூகத்தில் வேரோடிப் போன பார்ப்பன ஆதிக்க நிலைதானே? இந்து மதம் என்று சொன்னால் அதன் ஆணி வேர் ஜாதிதானே? ஜாதியில்லை என்றால் இந்து மதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது.

இதில் இன்னொரு மிக முக்கியமான கேள்வியும் உண்டு. வேறு மதங்களிலிருந்து இந்து மதத்திற்குச் சலுகைகளைக் காட்டி, லஞ்சமாகப் பணம் கொடுத்து மத மாற்றம் செய்யப்பட்டவர்கள் இந்து மதத்தில் எந்த ஜாதியில் வைக்கப்படுகின்றனர் என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
தொடக்கத்தில் எந்த ஜாதி நிலையிலிருந்து மாற்று மதங்களுக்குச் சென்றனரோ, அதே ஜாதியின் பட்டியலில் வைக்கப்படுவார்களாம். என்ன கொடுமையடா இது!

இந்த ஜாதி இழிவிலிருந்து விடுபடத்தானே இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தை உதறிவிட்டு, மாற்று மதங்களைத் தேடினார்கள்? இப்பொழுது அந்த இழிவை வாரி அணைத்துக் கொள்வதற்காக மீண்டும் இந்து மதத்திற்கு வருகிறார்களா? சூத்திரன் பஞ்சமன் என்ற இழிவைச் சுமந்து கொள்வதற்காகவா இந்தக் கேடு கெட்ட மதத்திற்கு வந்து சேர்கிறார்கள்?

நெல்லை மாவட்டம் மீனாட்சி புரத்தில் இந்து மதத்திலிருந்து 210 குடும்பங்கள் இஸ்லாமிய மதத்திற்குச் சென்றபோது, அவர்களிடம் விடுதலை சார்பில் நேரில் பேட்டி கண்டபோது (25.7.1981) இந்து மதத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் இழிவுபடுத்தப்படுகிறோம் என்பது பற்றி மனங் குமுறிக் கருத்துகளைக் கூறினார்களே! அப் பொழுதே நமது ஏடுகளில் வெளியிட்டோமே! ஏன், ஒரு சிறு வெளியீடாகவே கொண்டு வரப்பட்டுள்ளதே! 


மறுபடியும், மறுபடியும் அந்தப் பகுதிக்குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வர வற்புறுத்திய நிலையிலும், பல்வேறு உபாயங்களையும் கொண்டு சென்றபோதும் இஸ்லாமி யத்தை தழுவிய அவர்கள் அத்தனைப் பேரும் உறுதி யாகவே நின்றனர் - இன்று வரை தொடரவும் செய் கின்றனர். 

மனமாற்றத்தால் மதமாற்றம் என்றால் அதனை யார் தடுக்க முடியும்? ஆனால் இந்துத்துவாவாதிகளின் செயல்பாடுகள் மாறாகவே உள்ளன. பெரிய எண்ணிக் கையில் மத மாற்றத்தினை அதிகாரத்தின் துணை கொண்டு செய்து கொண்டிருப்பவர்களே - மத மாற்றத் தடை சட்டம் கொண்டு  வர வேண்டும் என்று இன்னொரு புறத்தில் கூறுகிறார்கள். இப்பொழுது இருக்கும் சட்டமே - வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்வதைத் தடை தான் செய்கிறது - அதுவே போதுமானதுங்கூட!

ஆளும் கட்சியாக இருந்து கொண்டு, அதிகாரத் தையும் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்வதை இத்தகைய சட்டங்கள் தடுக்கப் போவதில்லை. இந்து மதத்திலிருந்து சிறுபான்மை மதங்களைத் தழுவும் இடத்தில்தான் இத்தகைய சட்டம் தன் வேலையைச் செய்யும்.

மத்தியில் உள்ள இந்துவெறி ஆட்சியை, கட்சியை சகல தளங்களிலும் மக்களிடம் அம்பலப்படுத்தம் விழிப் புணர்வுப் பிரச்சாரம் தேவைப்படுகிறது; திராவிடர் கழகம் அதனைச் செய்யும். செய்தும் வருகிறது; மற்ற முற்போக்குச் சக்திகளும் இத்திசையில் கவனம் செலுத்துவார்களாக!

                                   -----------------------”விடுதலை” தலையங்கம்  15-12-2014

Read more: http://viduthalai.in/page-2/92920.html#ixzz3Lxp8oG6K

38 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

திருநீறு

நீறில்லா நெற்றி பாழ் என்பது திருநீற்றின் மகி மையைக் குறிக்கிறதாம். திருநீறு இல்லா நெற் றியைச் சுடு என்கிறார்கள் - அப்படியானால் கிறித் தவர், முஸ்லிம், நாத்திகர் களைச் சுட்டு விடு வார்களோ!

Read more: http://viduthalai.in/e-paper/92939.html#ixzz3M4LVD5U7

தமிழ் ஓவியா said...

கல்யாணம்


மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம். - (விடுதலை, 10.8.1968)

Read more: http://viduthalai.in/page-2/92932.html#ixzz3M4Lhr9pD

தமிழ் ஓவியா said...



பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

கட்டுப்பாடு என்கிற கவசத்தை அணிந்தால்-

காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்! துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத்தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், பகுத்தறிவை பயன்படுத்தாமை, மதவெறி - இவற்றையெல் லாம் ஒழிப்பதை தனது மூலக் கொள்கையாய் கொண்டுள்ள ஓர் அரசியல் கட்சி - திராவிடர் கழகத்தைத் தாய்க் கழகமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட நாகரிகம், பண்பாடு, மொழி இவைகளை வர லாற்றுப் பெருமையாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட தளம் உள்ள - பலமான வேர் உள்ள ஒரு சுயமரியாதை இயக்கத்தின் ஒரு கூறு.

யதார்த்தத்தை உணராதவர்கள் அல்ல நாம்!

வாக்கு வங்கியை எதிர்நோக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும், திராவிடர் கழகத்தைப்போல் - நூற்றுக்கு நூறு - அதே இலட்சியங்களை அப்படியே கூறி, அரசியல் கட்சியை - நடத்திட முடியாது என்ற யதார்த்தத்தைஉணராதவர்கள் அல்ல நாம்!

சில விஷம விமர்சனங்கள் திராவிடம் மாறிவிட்டது; தேய்ந்து விட்டது என்றெல்லாம் கூறிடுவது - சில பல மாற் றங்கள் அதன் கொள்கை அணுகுமுறைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கூறுவது, திராவிடர் இயக்கம் அரசியலில் பெற்ற வளர்ச்சியை அழிக்க எண்ணும் சூழ்ச்சிப் பிரச்சாரம் ஆகும்.

அரசியல் கட்சியாக உருவாகிவிட்டாலே, கொள்கை களில் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் என்பதால்தான் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் பதவி, அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்கவும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள்.

அண்ணாவின் கருத்துரை

என்றாலும், அவரது கொள்கை லட்சியங்களுக்கு அருகில் - நெருங்கி வந்த அரசியல் கட்சியாக மற்ற கட்சி களைவிட, திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்துள்ளது என்பது அதன் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் கீழ்க்காணும் கருத்துரை மூலம் தெளிவாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனைப் பேரும் யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள் வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ் வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும்.

தி.மு.க.வின் உறுப்பினர்கள் முக்கிய பொறுப்பாளர் களுக்கான பாலபாடம் இது!

தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கும், நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தி.மு.க.வின் பிரதான லட்சியம், சமூகச் சீர்திருத்தம் - அந்த லட்சியங்களை அடைய ஒரு வழி - தி.மு.க.வின் அரசியல் பங்கெடுப்பு. பதவிகள் அதற்கு ஒரு வாய்ப்பு அவ்வளவே!

ஆனால், மற்ற கட்சிகளுக்கு இந்த இலக்கு பெரும் பாலும் இருக்காது; இருந்தாலும், இருப்பதாகச் சொல்லப்பட் டாலும் அது ஊறுகாய், துவையல் போன்ற அளவேயாகும்.

தமிழ் ஓவியா said...

1967 இல் தி.மு.க. வெற்றி பெற்றபோது, அறிஞர் அண்ணா தெளிவுபடுத்திய ஒரு கருத்தும் தி.மு.க. தோழர்கள் உள்பட அனைவரும் புரிந்துகொண்டு, மனதில் இறுத்திட வேண்டிய முக்கிய கருத்தாகும்.

10 ஆண்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடித்துவிடவில்லை. இதற்குமுன் இதன் பாட்டன் 50 ஆண்டு வரலாறு பெற்ற நீதிக்கட்சி என்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் கொண்ட பார்ப்பனரல்லாதார் கட்சி - அதன் தொடர்ச்சி - புத்தெழுச்சிதான் தி.மு.க.வின் அரசியல் வெற்றி என்று செய்தியாளர்களுக்கு அண்ணா அவர்கள் கூறினார்.

இதற்கு நேர்மாறான கட்சிகள் - அரசியல் கட்சிகள் பல உள்ளன.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை!

எனவேதான், திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் - உணர்ந்து ஓதிட வேண்டும்.

வெறும் பதவிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல தி.மு.க.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணம் அல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை எல்லாம்!

இதைத்தான் மிக அழகாக மிகுந்த பொறுப்புணர்ச்சி யுடன் - தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலி ஏட்டில் (17.12.2014) விரிவான கடித அறிக்கையாக உடன் பிறப்புகளுக்கு எழுதியுள்ளார்.

வாசித்தால் மட்டும் போதாது - சுவாசிக்கவேண்டும்!

தாய்க்கழகமான திராவிடர் கழகம் அதனைப் பாராட்டி வரவேற்பதோடு, அதனை தி.மு.க.வினர் வாசித்தால் மட்டும் போதாது; சுவாசிக்கவேண்டும்; மனதில் பதிய வைத்துக்கொண்டு அசை போடவேண்டும். அதனை செயலில் காட்டவேண்டும்.

தி.மு.க.வின் பலம் என்பது ஆட்சியால் அளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; திராவிடர் இனத்தின் மீட்சியால் அளவிடப்படவேண்டிய காலக் கடமைகளில் ஒன்று!

தி.மு.க.விற்கு எதிராக ஒரு சிறு துரும்பு தென்பட்டாலும், அதைப் பெரும் தூணாக ஆக்கி மகிழும் பார்ப்பனீய ஊடகங்களுக்கு ஆத்திரம் ஏன்?

தி.மு.க.வை அழித்துவிட்டால், தங்களது மிகப்பெரிய இன எதிரி அரசியல் களத்தில் வேறு இருக்க முடியாது என்பதற்காகத்தான் - நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஊதி ஊதி ஒரு பெரும் பிரச்சாரப் போரையே தந்திர மூர்த்திகள் செய்கின்றனர்; காரணம், ஆரிய மாயை அப்படிப்பட்டது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் தெளிவு பெறாத பேதையர்கள். திராவிடத்தால் எழுந்தோம் - வாழ்ந்தோம் - வாழ்வோம் என்பவர்கள் தீரம் மிக்க வீரர்கள் என்பதை தி.மு.க. தனது பிரச்சார முழக்கமாக ஆக்கி திக்கெட்டும் கொண்டு செல்லவேண்டிய தருணம் இது!

திராவிடம் - ஆரியம் என்பது தனி மனித ரத்தப் பரிசோதனையால் அல்ல, பண்பாட்டின் அடையாளம்; தனித் தன்மை! அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக் களம்!

முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள்!

இன்றைய காலகட்டத்தில் தி.மு.க.வின் அரிய காவ லர்கள் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களும், அதன் லட்சியக் காவலர் இனமானப் பேராசிரியரும், அவர்களது ஆணைகளை செயல்படுத்திடும் செயல் வீரச் செம்மல் தளபதி ஸ்டாலின் ஆகிய மூவரும்தான்!

இம்மூவரும் முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள் தி.மு.க.வுக்கு.

இந்த எஃகு கோட்டைகளின் மூலபலச் சுவர்கள் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்ற அதிர முடியாத அஸ்திவாரங்கள் அந்தக் கோட்டைக்கு உண்டு.

எனவே, பதவிச் சலசலப்புகள் - பத்திரிகைப் புரளிகள், பகடிகள் - இதன் பலத்தை ஒருபோதும் பறித்துவிட முடியாது!

பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி, விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

ஜாதிவெறி - மதவெறி மற்றும் பல்வேறு சூழ்ச்சிப் பொறிகள் - தி.மு.க.வை வீழ்த்திவிடக் காணும் கனவுகள் கலைந்துவிடும் என்பது உறுதி.

கட்டுப்பாடு - கட்டுப்பாடு - கட்டுப்பாடு என்ற கவசத்தை அணிந்தால், தோழர்களே மற்றவரின் காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத் தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது!
சூளுரையுங்கள்!

சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

அதை வைத்தே இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

உரிமையுள்ள தாய்க்கழகத்தின்

கி.வீரமணி
பொறுப்பாளன்
திராவிடர் கழகம்

சென்னை
17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92977.html#ixzz3M9mCth00

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தோழர்களுக்கு கலைஞர் வேண்டுகோள்!


அண்ணா இருந்தபோது அவருடைய நோக்கத்தை எப்படி நாம் நிறைவேற்றியி ருக்கிறோமோ, அதைப்போல இன்றும் அண்ணா இருக்கிறார்; உயிரோடுதான் இருக்கிறார்; அணுப் பொழுதும் நம்மை விட்டு அகலாமல் நமது இதய உணர்வோடு ஒன்றிக் கலந் திருக்கிறார்; அவரை என்றைக்கும் நாம் மறப்பதில்லை; மறக்கவும் மாட்டோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்தத் தேர்தலில் கழகத்தினர் பெறுகின்ற வெற்றி தோல் விகளைப் பொறுத்து; இயக்கத்தின் தொடக்கக் காலத்தி லிருந்து நாம் ஏற்றுக்கொண்டுள்ள அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப் போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்த அய்ம்பெரும் முழக்கங்கள் நம்முடைய நெஞ்சத்தில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்க - கடமை உணர் வுக்கும், கண்ணிய நடவடிக்கைகளுக்கும், அண்ணா வழியை நெஞ்சாரப் பின்பற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக கட்டுப்பாடு குலையாமல் காக்கின்ற, பெரும் பணியில் நம் மையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரியாரின் வழியை மறவாமல் பாதுகாத்தும், நமது இயக்கத்தையும் பாதுகாத்து, நம்முடைய எதிர்கால திராவிட சந்ததியினரையும், தன்மான உணர்வோடு, தலைசிறந்து வாழ்ந்திட வழிவகுத்தும், நடைபோடுவதற்கு ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பணி மேலும் மேலும் சிறந்தோங்க தொய்வின்றி தொடர்ந்து நடைபோட இந்த 14 ஆவது கழகப் பொதுத் தேர்தலும் பயன்படுமாக!
நன்றி: முரசொலி, 17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92978.html#ixzz3M9n4IFoP

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினை: சிவாவின் கேள்வியும் - அமைச்சரின் பதிலும்!


புதுடில்லி, டிச.17- தமிழ் உள்பட 22 மொழிகள் மத்திய அரசில் அலுவல் மொழியாக ஆக்கப்படுமா என்று (3.12.2014) திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள் ளார். அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இதுவரை இல்லை என்றும், அதற்கான கேள்விக்கே இடமில்லை என்றும் பதில் அளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

3.12.2014 நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி:

வினா எண் 1154
திருச்சி சிவா:

உள்துறை அமைச்சகம் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8ஆம் அட்டவணையில் உள்ள அனைத்து 22 இந்திய மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவித்துள்ளதா?

2. அதற்கான அறிவிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகளுக்கான விளக்கங்கள்வேண்டும்.

3. அப்படி இல்லை என்றாலும் அதற் கான காரணத்தை அளிக்கவேண்டும்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பதில்:

1. இதுவரை இல்லை.
2, 3. கேள்விக்கே இடமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/92980.html#ixzz3M9nEcqit

தமிழ் ஓவியா said...

அத்வானியின் அருள்வாக்கு!



மகாபாரதத்தை வீட்டில் வைத்திருந்தால் துரதிருஷ்டமான சம்பவம் நடைபெறும் என்று பழங்காலத்திலிருந்து நம் நாட்டில் ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது.

-டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பி.ஜே.பி. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (14.12.2014)

Read more: http://viduthalai.in/e-paper/92982.html#ixzz3M9nPLgEW

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் - ஒழுக்க ஈனம்


உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
_ (குடிஅரசு, 4.6.1949)

Read more: http://viduthalai.in/page-2/92987.html#ixzz3M9nmgL00

தமிழ் ஓவியா said...

மதவாத மத்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 17_ பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவப் பாசிசப் போக்கைக் கண் டித்து 23.12.2014 அன்று சென்னையில் தோழமைக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் என்றும் இதில் மதச் சார்பற்ற சக்திகள் பங்கேற்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:_

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து தொடர்ச்சி யாக தமது மதவெறி மேலாதிக்க அரசியலை முதன்மைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அரசியலமைப்புச் சட்டத் திற்கு எதிரான வகையி லும், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை அச் சுறுத்தும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, மய்ய அரசின் அனைத்துத் துறைகளுக்கு மான சமூக வலைதளங் களில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வேண்டு மென ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்தனர். இந்திய அரசிலமைப் புச் சட்டத்தில் 21 மொழி கள் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு மொழியை முதன்மைப் படுத்துவதன் மூலம் பிற மொழிகளைத் தாய்மொழி யாகக் கொண்ட தேசிய இனங்களை அவமதித்தன.

அடுத்து, செப்டம்பர் 5 ஆசிரியர் நாள், முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அள வில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் ஆசிரி யராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். ஆதலால் ஆசிரியப் பெருமக்களை ஊக்கப் படுத்தும் வகையில் கொண் டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த நாளை 'குரு உத்சவ்' என்று கொண் டாட வேண்டு மென கல்வித்துறைக்கான இந் திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சர் அறி விப்புச் செய்தார். இதனை வெறும் பெயர் மாற்றமா கக் கருத இயலாது.

குரு என்பது ஆசிரியர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல என்பது ஆட்சியா ளர்களுக்குத் தெரியும். எனினும் இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங் கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் தமிழகம் மட்டுமின்றி தேசிய அள வில் கடும் விமர்சனத்துக் குள்ளாகியது.

கீதை தேசியப் புனித நூலா?

அடுத்து, இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்தியா வின் தேசியப் புனித நூலாக குறிப்பிட்ட மதத் திற்குரிய, அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக் குரிய நூலை, அனைத்து மதத்தினருக்கும் உரிய புனித நூலாக அறிவிக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இது வும் இந்திய அளவில் கடு மையான எதிர்ப்புக்கு உள் ளானது. மேலும் பார திய சனதாவைத் தவிர மற் றவர்கள் யாவரும் முறை தவறிப் பிறந்தவர்கள் என ஒரு பெண் அமைச்சர் பேசியதால் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் பெரும் கொந் தளிப்பு உருவானது. அத்துடன், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக் ராவில் இந்துக்கள் அல் லாத பிற மதங்களைச் சார்ந்தோரை பல்வேறு ஆசைகளைத் தூண்டி, பாஜக இந்துக்களாக கட் டாய மதமாற்றம் செய்ய வைத்தனர்.

இந்த நடவடிக் கையும் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை உரு வாக்கியது. பாரதிய சனதா கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் 'மீண்டும் தாய் மதம் வாருங்கள்' என்று அழைப்பு விடுக் கிறார். இசுலாமியர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 5 இலட்சமும், கிறித் துவர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 2 இலட் சமும் வழங்குவதாக வெளிப் படையாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவிப்புச் செய்கின்றனர்.

பாபர் மசூதி இந்தியாவின் அவ மானச் சின்னம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தி னர் அறிவிப்புச் செய்கின் றனர். தாஜ்மகாலையும் இடிக்க வேண்டுமென்று கொக்கரிக்கின்றனர். இந் தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டுமென்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராஜ்நாத் சிங் உரத்து முழங்குகிறார்.

தமிழ் ஓவியா said...

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தாம்

தற்போது, நவோதயா மற்றும் கேந்திரிய வித்யா லயா போன்ற பள்ளிகளி லும் மைய அரசின் பாடத் திட்டமுள்ள பள்ளிகளி லும் டிசம்பர் 25 கிறிஸ் மஸ் விழா அன்று விடு முறை இல்லையெனவும் முன்னாள் பிரதமர் வாஜ் பாய், இந்து மகா சபை யின் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரது பிறந்தநாளைக் கொண் டாட வேண்டுமென்றும், அவர்களின் நினைவாக கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டுமென்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் அப் பள்ளிகளின் நிர்வாகத்துக் குச் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அத்துடன் அந்த நாளை நல்லாட்சி நாளா கக் கொண்டாட வேண்டு மெனவும் கூறியுள்ளது. இதற்கும் நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்ப் புக் கிளம்பியதும் அத்த கைய முடிவைக் கைவிட்டு விட்டதாக அறிவிப்புச் செய்துள்ளனர்.

இவ்வாறு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளி லிருந்து பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் களும், ஆர்எஸ்எஸ் இயக் கத்தைச் சார்ந்தவர்களும் தமது இந்துத்துவ மேலா திக்கக் கருத்துக்களைத் திணிப்பதிலும், மறைமுகச் செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருவது அரசியலமைப்புச் சட்டத் திற்கும், சனநாயகத்திற்கும், மதவெறி சக்திகள் செய்யும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக, தலித் துகள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினர் அனை வருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது.

எனவே சனநாயகத் தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டிய தேவையினை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இத்தகைய தொடர்ச்சி யான இந்துத்துவப் பாசி சப் போக்கைக் கண்டித்து 23.12.14 அன்று சென்னை யில் தோழமைக் கட்சிக ளின் தலைவர்கள் பங்கேற் கும் மாபெரும் ஆர்ப்பாட் டத்தை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி ஒருங்கி ணைக்கிறது. இவ்வார்ப் பாட்டத்திற்கு மதச்சார் பற்ற சக்திகள் பெருந்திர ளாகப் பங்கேற்க வேண்டு மென விடுதலைச் சிறுத்தை கள் அழைப்பு விடுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-8/93007.html#ixzz3M9qJGTTl

தமிழ் ஓவியா said...

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பெண்கள் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஆளுமைக்கும் துணை புரியும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கலைப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி யிருப்பது - கண்டிக்கத்தக்கது; பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்பது வீட்டில் வெறும் இல்லத்தரசிகளாகவும், குறைந்த நேரத்தில் சமையல் மற்றும் பணிகளைக் குடும் பத்திற்காக செய்துவிட்டு, பெரிதும் தொலைக் காட்சியில் தமது நேரத்தைச் செலவிடும் நிலையில், வசதியற்ற ஏழை, எளிய பெண்கள் - விதவைகள் மற்றும் ஆதரவு இழந்த மகளிர் - இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை யையும், தன்னிறைவு உணர்வையும், பொருளா தார மேம்பாட்டு வசதியையும், ஆளுமையையும் ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் தற்சார்புத் தன்மையையும் உண்டாக்கி, மிகவும் நிம்மதியாக மகளிர் தங்கள் வாழ்க்கையை நடத்திட வழங்கப் பட்ட அருமையான வாய்ப்பு இது!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை!

இது தி.மு.க. ஆட்சிக் காலத்தில், குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தபோது, கிரா மங்களில் உள்ள தாய்மார்கள், மகளிர் புத்தாக்கம் பெற பரவலாக ஏற்பட்ட, பயன்பெற்ற திட்டமாகும்!

இதிலும் எப்படியோ அரசியல் கண் ணோட்டம் புகுந்து, வளர்ந்துள்ள பயிர்களில் பூச்சிகள் நுழைந்ததைப்போல, முன்பே அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்தினர்; என்றாலும், அது வலிமையாக செயல்படாவிட்டாலும், தொடரவே செய்தது; பிறகு இதை அதிமுகவினர் செல்வாக்குச் சாய லுடன் இயங்கும் ஒன்றாக மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது.

இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நமது மகளிரின் ஆளுமைத் திறன் - புதைந்து கிடந்தது வெளிப்பட ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மகளிர் சுயஉதவிக் குழு அமைந்து, பல கிராமங் களில் ஒருவகை மறுமலர்ச்சி மகளிர் மத்தியில் ஏற்படவும் செய்தது!

குண்டைத் தூக்கிப் போடும் மேனகா!

இதற்கு வேட்டு வைப்பதுபோல மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள், சுயஉதவிக் குழுக்கள் கலைக்கப்படும் என்று நேற்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்!

மகளிர் முன்னேற்றப் பார்வை சிறிதுமின்றி, மேட்டுக்குடியில் வளர்ந்துள்ள சூழலில், அம்மையாருக்கு என்ன கோபமோ சுயஉதவிக் குழுக்கள்மீது என்று தெரியவில்லை!

இதற்கு முன்பு அவர் சமூகநீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிராணிகள் நலன் என்பதற்குத் திருப்பிவிட்ட திருப்பணியைச் செய்தவராயிற்றே!

வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை!

இப்போது இப்படி ஒரு தேவையற்ற - விரும்பத்தகாத - மகளிர் வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள் ளார். குறிப்பாக, இது தமிழ்நாட்டையே குறி வைத்து இறங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது!
இதில் பிரதமர் மோடி தலையிட்டு, தடுத்து நிறுத்திடவேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை அமைச்சர்களுக்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, பிரதமர் மோடியின் அவசரக் கடமையுமாகும்.

ஆறு மாத ஆட்சியின் அல்லல்!

பாஜ.க. - மோடியின் ஆறு மாத கால ஆட்சியில் அமைச்சர்களின் பேச்சும், அறிவிப்பு களும் இவருக்குப் பெருமையை சேர்ப்ப தாகவோ, மக்களுக்கு நலன் விளைவிப்ப தாகவோ அமையவில்லை என்பது சுவர் எழுத்தாகப் பளிச்சிட்டுத் தெரிகிறது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93049.html#ixzz3MFbpWeCs

தமிழ் ஓவியா said...

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்

132 பள்ளி மாணவர்களைக் கொன்ற தலிபான்களின் பயங்கரவாத செயல்!

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்;

எங்களின் அன்புக் கண்ணீர் காணிக்கை!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் அடாத செயல் காரணமாக உலகின் கறை படிந்த மதக் கொடுமைகளின் பட்டியலில் மதவெறி மற்றொரு மனிதநேயமற்ற, பச்சாதாபம் பார்க்காது, 132 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது; பலரை உயிருக்கு மன்றாடச் செய்துள்ளது.

இந்தச் செயல்களின் அடிப்படைக் காரணம் மதவெறி! மதவெறி!! மதவெறி!!!

கடவுள் கருணையே வடிவானவர்; அங்கு இங்கு எனாது எல்லா இடங்களிலும் பரவியுள்ளவர்; அவர் இல்லாத இடமே இல்லை என்று கதையளக்கும் கடவுள், மத நம்பிக்கைவாதிகளே, அப்படி ஒரு சர்வசக்தி உடைய ஆண்டவனோ, கடவுளோ இருந்தால், இந்தப் பச்சிளம் தளிர்களின் உயிர்களைக் கொன்றிட உடன்பட்டு வேடிக்கைப் பார்த்திருப்பானா?

நாட்டில் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இரத்த ஆறு ஓடுவது சகித்துக் கொள்ளக் கூடியதா?

உலகம் - மதவெறி காரணமாக - மீண்டும் காட்டுமிராண்டி யுகத்திற்கே திரும்பிச் செல்லுகிறதா? மகாவெட்கக்கேடு இது!

இதை ஒரு வன்முறைச் செயலாக மட்டும் பார்க்காமல், இதன்மூலம் - ஆணிவேர் - மதத் தீவிரவாதம் - அடிப்படை வாதம் என்ற தலிபான்கள் என்றால், அவர்களை உருவாக்கி மனிதாபிமானம் அறியாத வெறித்தனத்தை அவர்களுள் விதைத்தது எது?

கடவுளும், மதமும்தானே! அவைகளை ஏற்றுக்கொண்டே, மறுபுறம் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று உபதேசம் செய்வது அர்த்தமுள்ளதா? முரண்பாடு அல்லவா?

பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், மனிதநேயம் உள்ளவர்கள்; ஆனால், மதவெறியர்களோ சரித்திரத்தின் அந்நாள் தொட்டு, இந்நாள் வரை - அசல் காட்டுமிராண்டிகளாய், சகிப்புத்தன்மை அறியாததாக மிருக உணர்ச்சியின் பிண்டங்களாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்! இதனை மறுக்க முடியுமா?

இலங்கையில் புத்தம் என்ற மனித நேயத்தையே ரத்தத் தடாகத்தில் தள்ளி குளிக்க வைத்து மகிழும் குள்ளநரிக் கூட்டத்தின் யதேச்சாதிகார அரசு பயங்கரவாதம் - அரசே - செஞ்சோலை என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குண்டுவீசி கொன்று அழித்து, மகிழவில்லையா?

அந்த ரத்தக் கறையாளன், சட்ட புத்தகத்தையே திருத்தி, தானே மீண்டும் நாட்டை ஆளத் திட்டமிடுவதற்கு, அந்தச் சம்பவம் போன்றவற்றை - பயங்கரவாதத்தை நான் துடைத்து எறிந்துவிட்டேன் என்று கொக்கரிக்கிறாரே!

இது பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிரச்சினையாக மட்டும் உலகம் பார்க்காது; பார்க்கக்கூடாது;

மனிதநேயத்திற்கு மதவெறி விடுத்த சவால் என்று எடுத்துக் கொண்டு, அனைவரும் அந்த மதவெறிக்குச் சமாதி கட்ட முனைப்போடு, நாடு, இனம், மதம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகம் ஒரு குலம்; மானிடப் பரப்பு பரந்து விரிந்தது என்ற அணுகுமுறையில் இதற்கு முடிவு கட்டி, நாகரிகத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும்!

இளந்தளிர்களே, மொட்டுகளே, உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்! எங்களின் அன்புக் கண்ணீர்க் காணிக்கை!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
18.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93048.html#ixzz3MFbzh9JD

தமிழ் ஓவியா said...

வனத்துறை அரசு வளாகத்தில் கோயிலா?


ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், அந்தியூர் கஸ்பாவில் பர்கூர் சாலையில் அந்தியூர் ரேஞ்சுக்கு சொந்தமான ரேஞ்சர் ஆபிஸ் (சுமார் ஒரு ஏக்கர் அல்லது கூடுதலாகவோ, குறைவாகவோ நிலப்பரப்பு கொண்ட) உள்ளது. 8.12.2014 திடீரென்று இந்த அலுவலகத்தின் வளாகத்திற்குள் புதிய வினாயகர் கோவில் கட்டி இக்கோவிலின் வழிபாட்டு துவக்கத்தை வனத்துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு செய்துள்ளனர். அரசு சார்ந்த அலுவலகங்களில் இதுபோன்ற மதம் குறித்த எவ்வித வழிபாட்டுத் தலங்களும் அமைக்கப்படுதல் இந்திய அரசியல் சட்டத்தின் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக அமையும் என்று கருதி அரசு அலுவலக வளாகங்களில் மதவழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுதல் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் ஸ்டேட் ஆப் குஜராத் க்ஷி யூனியன் ஆப் இந்தியா என்று தெளிவாக தீர்ப்புரைத்துள்ளதை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை இது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/93052.html#ixzz3MFcPD0Mv

தமிழ் ஓவியா said...

22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்?

வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார் (விடுதலை, 16.12.2014).

மூன்று முக்கிய காரணங்களின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

1. கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டுவதை எதிர்த்தும்

2. கேரளாவில் புதிய அணை ஒன்று கட்டப்படுவதைக் கண்டித்தும்

3. இந்தியாவின் தேசிய புனித நூலாகக் கீதை அறிவிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருப்பதை எதிர்த்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அணைகளைப் பொறுத்தவரை கருநாடகமும், கேரளமும் திட்டமிட்டே சட்ட விரோதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாகவும் கட்டி வருகின்றன. இதனைத் தடுக்கவேண்டிய மத்திய அரசோ சட்ட விரோதமாகச் செயல்படும் இரு மாநில அரசுகளுக்கும் துணை போகின் றது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானதாகும்.

இந்தியத் தேசியத்தையே கேள்விக் குறி ஆக்குவதாகும்.

இந்த இரு மாநிலங்களும் இப்படி தான்தோன்றித் தனமாக செயல்படுமேயானால், அதன் பலன் - தமிழ்நாடு பாலைவன மாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

தமிழ்நாடு என்றால், அங்குத் தேசிய நீரோட்டம் இல்லை என்பதால் இந்த நீரோட்டத்தில் கை வைக்கிறார்களா?
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதன்மீது இத்தகைய கண்ணோட்டம் இருக்குமானால், மேலும் மேலும் தேசிய நீரோட்டம் நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்க முடியாத நிலைக்கு ஆளாகாதா? குட்டக் குட்ட எவ்வளவுக் காலத்திற்குத்தான் தமிழர்கள் குனிந்து கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.?

நதிநீர்ப் பிரச்சினையானாலும், ஈழத் தமிழர்ப் பிரச் சினையானாலும், தமிழக மீனவர்ப் பிரச்சினையானாலும் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்படவேண்டிய திட்டங் களானாலும் சரி, வஞ்சிக்கப்படுவது என்பது தமிழ்நாடாகவும், தமிழர்களாகவுமே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினை களில்கூட பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதும், இதற்கு மிக முக்கிய காரணமாகும். கருநாடகத்திலோ, கேரளாவிலோ அரசியலைத் தாண்டி ஒரே குரலில் பிசிறு சிறிதுமின்றி எழுந்து நின்று குரல் கொடுக்கின்றனர். அந்த மாநிலங்களைக் கண் குளிர பார்த்த பிறகாவது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மாறினால் நல்லது.

மூன்றாவது கீதை புனித நூலாக மத்திய அரசால் அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் பிரச்சினை.

கீதை என்பது பச்சையாக வர்ணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் கடைந் தெடுத்த இந்து மத நூலாகும்.

குறிப்பிட்ட ஒரு மதத்தின் நூல் எப்படி மதச் சார்பற்ற ஒரு நாட்டின் புனித நூலாகும்? மதச் சார்பின்மையை ஏற்றுக்கொண்டால் மட்டும்தானே இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் அமர முடியும்? அப்படி ஏற்காது செயல் பட்டால் அது சட்ட விரோத ஆட்சியல்லவா!

சுதந்திர நாடு என்றால், அந்நாட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி - கீழ் ஜாதி என்று பிரிப்பது தானா? சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் என்ற பேதமிருந்தால், அதை எப்படி சுதந்திர நாடு என்று கூற முடியும் என்று தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

பெண்களை கீதையைப் போல் இழிவுபடுத்தும் ஒரு நூலைப் பார்க்க முடியுமா? பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று சொல்பவன் ஒரு கடவுளா? சொல்லும் நூல் - புனித நூலா?

கிருஷ்ணன்பற்றிய புராணக் கதைகளை அறிந்த வர்கள், கிருஷ்ணன் பெண்களைப்பற்றிக் கீதையில் கூறியதற்கான பொருளை எளிதில் புரிந்துகொள்வார்கள்.

சின்ன வயதில் வெண்ணெயைத் திருடியவன், வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் என்று இந்து மதத் தலைவர்களும், பிரமுகர்களும், உபந்நியாசிகளும் சொல்லுகிறார்கள் என்றால், இதன்மூலம் இந்து மதத்தின் யோக்கியதையும், இந்தப் பெரிய மனிதர்களின் யோக்கியதையும் எந்தத் தகுதியில் உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

பதினாயிரம் கோபிகாஸ்திரிகளுடன் கிருஷ்ணன் சல்லாப வேட்டை நடத்தினான் என்பதும், குளிக்கச் சென்ற பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரத்தில் உட்கார்ந்துகொண்டு, குளியலாடும் பெண்களை ரசித்தான் என்பதும்தான் கடவுளின் உயர்நிலைப் பண்பாடா? கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டால் தான் ஆடைகளைத் தருவேன் என்று சொல்லுகின்ற அப்பட்டமான மனநோயாளியும் ஒரு கடவுளா?

மக்கள் மத்தியில் இவற்றையெல்லாம் தோலுரித்துக் காட்டவே 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம். பெரும்பாலும் பெண்களே தலைமை தாங்குவது பொருத்தமானதாக இருக்கும்.

22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அதிகாரவர்க்கத்தின் கண்களைத் திறப்பதாக இருக்கட்டும்; தமிழ் மக்களின் எண்ணங்களிலும் கிளர்ச்சியை ஏற்படுத்தட்டும்.

தோழர்களே, செயல்படுவீர்! செயல்படுவீர்!!

Read more: http://viduthalai.in/page-2/93054.html#ixzz3MFceXkBA

தமிழ் ஓவியா said...

முட்டாளும் - அறிவாளியும்!


முட்டாள்தனம் என்றாலே சுலபத்தில் தீப்பிடித்துக் கொள்ளும் வஸ்து என்று சொல்லலாம். அறிவு என்றால், சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்க முடியாத வஸ்து என்பது பொருள்.
_ (விடுதலை, 17.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/93053.html#ixzz3MFcnK0PQ

தமிழ் ஓவியா said...

எரிவாயு மானியம் பெற ஒரு படிவம் போதும் அய்.ஓ.சி. அதிகாரி பேட்டி


சென்னை, டிச.18_ சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு பல படிவங் களைக் கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் யாரும் அவதிப்பட வேண்டாம். எரிவாயு நிறுவன இணைய தளத்தில் இருந்து ஒரே ஒரு படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென் னையில் நேற்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

மாற்றியமைக்கப்பட்ட சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மறுபடியும் கொண்டு வரப்பட்டுள் ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு 2015 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத் தப்பட உள்ளது.

ஆதார் எண் இல்லாத நுகர் வோர்கள் மானியத் தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியமாகும்.
மார்ச் 31 ஆம் தேதிக்குள்

வங்கிக் கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படு கிறது. அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மூலம் மானியத்தை பெற்று கொள்ளவேண்டும். இந்தக் கால அவகாசம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.

அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஆகும். இந்த 3 மாதத்தில் அவர்கள் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளவேண்டும். இதற் கான மானியத் தொகை விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கும். அதேநேரத்தில் இம் மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய எல்.பி.ஜி. சிலிண்டருக்குரிய மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க் கப்படும்.

இத்திட்டத்தில் சேராத நுகர்வோர் களுக்கு 1.7.2015 முதல் சந்தை விலை யில் மட்டும்தான் சிலிண்டர் விநி யோகம் செய்யப்படும். எப்போது அவர்கள் மானிய திட்டத்தில் இணை கிறார்களோ அன்று முதல் மட்டும் தான் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் இணைந்தபிறகு, முதன் முதலில் ஒரு சிலிண்டருக்குப் பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கிக் கணக்கில் ரூ.568 நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்தப்படும். நுகர்வோர் தங்களது எல்.பி.ஜி. சிலிண்டரை சந்தைவிலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன்வைப்புத் தொகை உறுதி செய்கிறது.

படிவ விவரம்

நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு எல்.பி.ஜி. வாடிக்கை யாளர்கள் ஆதார் எண் இருந்தால் படிவம் 1-அய் பூர்த்தி செய்து விநி யோகஸ்தர்களிடமும், படிவம் 2அய் பூர்த்தி செய்து வங்கியிலும் கொடுக்க வேண்டும். ஆதார் எண் இல்லை என் றால் படிவம் 3 அய் விநியோகஸ்தரிட மும், 4அய் வங்கியிலும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைதான் தற்போது உள்ளது.

புதிய வழி

படிவம் 1, 2 மற்றும் 3, 4 இருப்பது நுகர்வோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனிமேல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு படிவம் வி.1.0 என் பதை மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதும். இதற்கான படிவங்கள் இல வசமாக எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும்

hp:petroleum.nic.in/dbtlform.html
www.mylpg.in

என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு இந் தப் படிவத்தை பூர்த்தி செய்து வங்கி யில் அளிக்கலாம் அல்லது எல்.பி.ஜி. விநி யோகஸ்தரிடம் அதற்கென வைக் கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம்.

எந்த நிறுவனத்துக்கு
எந்த எண்:

பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு 17 இலக்க நுகர்வோர் எண் ணுக்கு பதிலாக 16 தான் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 16 இலக்க எண்ணுடன் பாரத் நிறுவனமாக இருந்தால் முதலில் 1_ம், ஹெச்.பி.யாக இருந்தால் 2_ம், இண்டேனாக இருந் தால் 3_ம் சேர்த்துக் கொள்ள வேண் டும்.

மானியம் கூடும், குறையும்!

தமிழ் ஓவியா said...

தற்போது சந்தை விலையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.749.50. மானியம் போகரூ.404.75. இந்த மாதத்துக்கான மானியம் ரூ.345 ஆகும். இந்த மானியத்தொகை கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப கூடவும், குறையவும் வாய்ப்புள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் தாங்களா கவே முன்வந்து எல்.பி.ஜி. மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.

ரூ.133 கூடுதல்
மானியம்

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் இணைந்த வாடிக் கையாளர்களுக்கு, அவர்கள் இணைந்த பிறகு, முதல் சிலிண்டருக் குப் பதிவு செய்தவுடன் அறிவித்தப்படி நிரந்தர முன்பணம் என்று ரூ.568 ஒரு முறை மட்டுமே அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மானிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்த முன்பணமாக ரூ.435 பெற்றுள் ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த ஒரு நிரந்தர முன்பணமும் செலுத்தப் பட மாட்டாது. இது கடந்த முறையை விட தற்போதுரூ.133 கூடுதலாகும்.

Read more: http://viduthalai.in/page-2/93056.html#ixzz3MFfu1wbP

தமிழ் ஓவியா said...

மோடி தான் பதில் சொல்லவேண்டும்


- குடந்தை கருணா

பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, தாலிபான் அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டவனும் சரி, இறந்த குழந்தைகளும் சரி, ஒரே மதக் கோட் பாடு கொண்டவர்கள்தான். மதம் மனி தனை வழி நடத்துகிறதா? என்று மத குரு மார்களும், மதக் கோட்பாட்டை நம்பி பின் பற்றுவர்களும் ஆழ யோசிக்கவேண்டும்.

இந்த கொடூர சாவிற்கு உலகமே கண்டனம் தெரிவிக்கிறது. நமது பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின் செயலைக் கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளார், நல்லது.

கடந்த ஒரு மாத காலமாக, மோடியின் கட்சியிலும் அவரது கட்சியை பின்னிருந்து இயக்கும் கூட்டமும், இன்னதான் பேசுவ தென்று இல்லாமல் பேசி வருகிறதே, மோடியின் அமைச்சரவையில் இயங்கும் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்து நவோதயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை, கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 ஆம் தேதி பள்ளிகளை திறந்து, வாஜ்பாய், மாள வியா ஆகியோரின் பிறந்த நாளை கொண் டாடும் வகையில் நிகழ்ச்சி நடத்திட உத் தரவு இடப்பட்டதே, ஆக்ராவில் இஸ்லாமி யர்களை மிரட்டி மதமாற்றம் நடைபெற் றதே, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி, அலிகாரில் அதேபோன்று பெரிய அளவில் மதமாற்றம் செய்வோம் என பாஜக எம்.பி ஒருவரின் தலைமையில் உ.பி.அரசையும் மிரட்டி அறிக்கை வெளியிடப்படுகிறதே, இந்த தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்டித்து, பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டாமா? இப்படி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் பேச்சினை, செயலினை செய்யும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை; கட்சி யிலும் இடமில்லை என்று சொல்லி விட்டு, அடுத்த நாட்டில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந் தால் அதில் ஓர் நேர்மை வெளிப்பட்டிருக்கும்.

அப்படி இல்லாமல், அண்டை நாடு இஸ்லாமிய நாடு என்பதற்காக ஒரு கண் டனம் தெரிவித்துவிட்டு, உள்நாட்டில் தனது கட்சியினர் செய்யும் அடாவடித் தனத்தை கண்டுகொள்ளாமல் மவுனம் கடைப்பிடித்தால், நாளை இங்கேயும் பாகிஸ்தானில் நடைபெற்றதுபோல், தீவிர வாத நடவடிக்கைகள் வராது என்பதற்கு பிரதமர் என்ன உத்தரவாதம் வைத்துள்ளார்?

Read more: http://viduthalai.in/page-2/93057.html#ixzz3MFg2CiyU

தமிழ் ஓவியா said...

தமிழிலிருந்து...

தெய்வ மொழி சமஸ் கிருதம் என்றும், நீஷ பாஷை தமிழ் என்றும் கூறக் கூடிய மனப் பான்மை கொண்டவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரி யார்கள் இதில் அவாளுக்கு வழி காட்டிகள்!

சமஸ்கிருதத்திலிருந்து தான் அதிக சொற்களை தமிழ் கடன் வாங்கிக் கரணம் போட்டது என்று கூறும் குறுமதியினரும் உண்டு.
உண்மை என்ன வென்றால் தமிழிலிருந்து சமஸ்கிருதம் பெற்ற சொற்கள் எண்ணற்றவை.

தொல் காப்பியச் சொல் லதிகாரத்துக்கு எழுதியுள்ள ஒரு சூத்திர உரையில் சேனாவரையர் என்ன குறிப்பிடுகிறார் தெரியுமா? தமிழ்ச் சொற்கள் வட மொழியில் சென்று சேர மாட்டா எனக் குறிப்பிட் டுள்ளார். இது ஒரு வகைக் காழ்ப்பால் கதைக்கப் பட்டது - உண்மை என்ன?

அப்பா - வடமொழிச் சொல், அம்மா தமிழ்ச் சொல் என்று சிலர் கூறு வதுண்டு உண்மையில் தமிழ் அம்மா அம்மை என்ற வடிவங்கள்தாம் அம்மாள் எனத் திரிந்து, பிறகு வடமொழிக்குச் சென்று அம்பா என்ற வடிவத்தைப் பெற்றிருத் தல் வேண்டும். ஆள் ஈறு திராவிட மொழிகளில் காணப்படுகின்ற பெண்பால் விகுதி என்பது யாவரும் அறிந்ததே! அச்சொல்தான் அம்பா, அம்பாலா, அம் பாலிகை என்று சமஸ் கிருதத்திலும் காணப்படு கிறது என்ற ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பர்ரே காட் டியுள்ளார்.

தமிழில் வழங்கப்படும் கலை என்ற சொல் வடமொழியின் திரிபு என சிலர் சொல்லுவதுண்டு. ஆயினும் கல் என்ற அடிப்படையிலிருந்து இச்சொல் பிறந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளெல் லாம் அறிவது என்ற பொருளைத் தருவதற்குக் கல் என்ற அடிவேரே பயன்படுகிறது. இதனடி யாகத்தான் கலை என்ற சொல் தமிழிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதனை வடமொழியினர் கலா எனத் திரித்து வழங்க லுற்றார்கள்.

குழல் என்ற தமிழ்ச் சொல் குரால என்ற வடமொழியிற் சென்று வழங்குகிறது. கூந்தல் எனும் பொருளைக் குறிக்க மலையாளத்திலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் இதனை யொத்த சொற்கள் உண்டு; குழல்- தமிழும், மலையாள மும்; குருள் - கன்னடம், குருளு - தெலுங்கு; கோட்டை என்ற திராவிட சொல்லிலிருந்துதான் வடமொழி கோடா என்பது எழுந்துள்ளது. இதுபோன்ற ஏராளமான சொற்கள் தமிழிலிருந்து வட மொழி யால் கடன் வாங்கப்பட் டன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பர நாதன் ஆராய்ச்சிக் கட்டு ரைகள் உரைகள் (தொகுதி - 1) நூலிலிருந்து இந்தத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/93079.html#ixzz3MLwLk6W5

தமிழ் ஓவியா said...

நம் இனமானப் பேராசிரியர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!


நமது திராவிடர் இயக்க கொள்கைவேள் இனமானப் பேராசிரியர் அவர்கள் இன்று அகவை 93இல் அடி எடுத்து வைக்கிறார். மாணவப் பருவம் தொட்டு, மானமிகு சுய மரியாதை பாரம்பரியத் தில் வளர்ந்தவர் - வாழ்கின்றவர்! அவரது தந்தையார் திரு. மண வழகனார் துவங்கி, சகோதரர்கள் பேராசிரியர்கள் திருமாறன், அறிவழகன், பாலகிருஷ்ணன் என்று குடும்ப ரீதியாகவே சீரிய பகுத்தறிவுவாதிகள்.

தந்தை பெரியாரின் நிழலாக அக்காலத்தில் சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்ட சுயமரியாதை வீரர் மாயூரம் சி. நடராசன் அவர்களது உறவு வழியாக மட்டுமின்றி கொள்கை வழியாகவும் பயிற்சி பெற்று, தண்ணார் தமிழ் வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கல்வித் தொட்டியிலும், ஈரோட்டுப் பயிற்சிப் பாசறையிலும், அறிவு ஆசான் என்ற தமிழ்நாட்டின் முதல் பேராசிரியரான தந்தை பெரியாரின் மாணாக் கராகவும் பின்னாளில் இனமானப் பேராசிரியராகவும் தன்னிகரற்று உயர்ந்து ஓங்கியுள்ளார்!

சீரிளமைத்திறம் அவரது உள்ளம், கொள்கை உறுதி குன்றாத நெஞ்சுரம் எப்போதும், எங்கும் பெரியார் - அண்ணா வழியை, மறக்காமல் கூறி, இன்று திராவிடர் எழுச்சியின் நாயகராக, அரசியலில் 90 அகவை தாண்டிய நிலையில் உள்ள இளைஞர் மானமிகு கலைஞரின் தலைமைக்கு என்றும் உறுதுணையாய் உள்ள பேராசிரியர்தம் வாழ்வு எல்லா நலன்களுடன் ஓங்கிச் சிறக்க வாழ்த்தும் கொள்கை உள்ளங்களோடு, தாய்க் கழகமாம் திராவிடர் கழகமும் இணைந்து வாழ்த்துகின்றோம்! நம் இனமானப் பேராசிரியர்தம் வாழ்க்கையால் பெரும் பயன் அடைவது நமது இயக்கமும் சமுதாயமும் தான்!

எனவே பல்லாண்டு நீடு வாழ்க! வாழ்கவே!!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

திருச்சி
19-12-2014

குறிப்பு: திருச்சிராப்பள்ளியிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைப்பேசி மூலம் பேராசிரியர் அவர்களுடன் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93081.html#ixzz3MLwXwZd4

தமிழ் ஓவியா said...

தமிழ் ஏடுகளில் இந்தி விளம்பரமா?


டில்லியில் முக்கிய சுற்றுலாத்தளமான ரெயில்வே அருங் காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிக் காக 24 டிசம்பர் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் இந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பள்ளிமாணவ\மாணவிகள் டில்லி போன்ற நகரங் களுக்குச் சுற்றுலா செல்வார்கள்.

அப்படிச் செல்லும் போது டில்லியில் உள்ள ரெயில்வே அருங் காட்சியகமும் முக்கியமான பார்வை யகமாகும். முக்கியமான ஒரு செய்தியை ரெயில்வே நிர்வாகம் இதுவரையில் செய்திகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே விளம்பரங்களைத் தருவார்கள். ஆனால் தற்போது புதிதாக இந்தியில் கொடுத்திருப்பது யாருக்காக? தெரியாத ஒரு மொழியில் முக்கியமான செய்தியை மத்திய அரசு கொடுப்பதற்கு என்ன காரணம்?

Read more: http://viduthalai.in/e-paper/93084.html#ixzz3MLx0mbiC

தமிழ் ஓவியா said...

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை

ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?


உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை!


மக்கள் எழுச்சி கூட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் தயங்காது

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விரும்பத் தகாத போக்குகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தின்மீது ஏராளமான புகார்கள் - ஊழல்கள் - பாலியல் கொடுமைகள் பற்றியவை - பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.

அது ஒரு போட்டி அரசுபோல - புதுவையில் (Parallel Government) நடந்து வரும் ஒரு மர்ம ஆசிரமம் ஆகி வெகு காலம் ஆகி விட்டது.

அதனுடன் வடபுலத்திலும், மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் கொண்ட ஆதி நாள் தொடர்பு காரணமாக, அதில் நடைபெற்றவை களைக் குறித்து யாரும் கவலைப்படாமல், அதை தனிக்காட்டு ராஜ்ஜியம்போல் நடத்தி வந்தனர்.

எந்த நோக்கத்திற்காக அந்த ஆசிரமத்தை வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்கோஷ் - பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்ட கால கட்டத்தில் வந்து தங்கி துவக்கி நடத்தினாரோ, அந்த நோக்கம் இப்போதும் அங்கு நிறைவேறும் வண்ணம் அதன் செயல்பாடுகள் இருக்கின் றனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.

அங்கு கடந்த சில காலமாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளும், ஏனைய ஊழல்களும் கொதி நிலை அதிகமாகி வெடித் துக் கிளம்பியுள்ளது ஒருபுறம்; மற்றொருபுறம் அய்ந்து பேர்களைக் கொண்ட, பீகாரிலிருந்து வந்து தொண்டு செய்ய விரும்பி, பல ஆண்டுகள் அங்கே தொண்டாற்றிய ஒரு குடும்பத்தினர் கொடுமைகளை சகிக்க முடி யாமல் அநீதியை அகற்ற முடியாமல், அத னையே நாளும் பூண் போட்டுப் பாதுகாக் கிறார்களே என்ற வேதனை காரணமாக தற்கொலை முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்!

புதுவையில் உள்ள ஒரு அரசு இதற்குரிய தடுப்பு நடவடிக்கையை சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றிடும் வகையில், உரிய நேரத்தில் எடுத்திருந்தால், இந்த மூன்று உயிர்க் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம்; அதைச் செய்யத் தவறி விட்டது.

ரவுடிகள் ராஜ்ஜியமா?

அங்கே ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறு கிறது; கொலைகளும், கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்ற அனைத் துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அந்த அரசும் முதல்வரும் - ஏன் மத்திய அரசும்கூட (யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கும் முக்கிய பங்கு உண்டு) கவனத்தில் கொள்ள வில்லை? சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவறிவிட்டது.

இந்நிலையில், புதுவை மக்கள் பொங்கி எழுந்து, தங்களது ஆவேச உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகளும், தவிர்க்க இயலாமல் நடை பெற்றுள்ள செய்தி பொது அமைதிக்குக் கேடு தருவதான கவலையை உருவாக்குகிறது!

விசாரணை ஆணையம் அமைத்திடுக!

இதுபற்றி உடனடியாக மத்திய அரசு இந்த ஆசிரமத்தின் நடப்புகள்பற்றி - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள், முதலிய மூவரைக் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் (Time Bound) விசாரித்து, ஒரு அறிக்கையைப் பெற்று, பொது மக்கள் - சமூக ஆர்வலர்கள், நலம்விரும்பிகள் அனைவரின் கருத்துக்களைக் கேட்டுத் தர வேண்டும்.

அதன் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. உடனே செய்யட்டும்! இதனை வற்புறுத்தி, புதுவையில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தை ஒத்த கருத்துள்ள வர்களை அழைத்து திராவிடர் கழகம் - அரசியல் பார்வை ஏதும் இன்றி - பொது நலக் கண்ணோட்டத்தோடு நடத்திடவும் தயங்காது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

திருச்சி
19-12-2014

Read more: http://viduthalai.in/headline/93080-2014-12-19-09-46-52.html#ixzz3MLxA4UOk

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93126.html#ixzz3MLzjAZos

தமிழ் ஓவியா said...

வசம் கெட்டது


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு - புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1FIx5i

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுச் சிந்தனை!

அறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித்தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தன மாகாது. அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது. - ஷேக்ஸ்பியர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1Un7ms

தமிழ் ஓவியா said...

கடவுளை நம்புகிறாயா?

ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1c2FsH

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்... 41 ஆண்டுகளுக்குமுன் ஒரு முழக்கம்!


பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோவிலுக்குள் வரவேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடை யாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுய ராஜ்ஜியத்திலும் நாம் சூத்திரர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.

இந்து என்றால் என்ன?

எதன்படி என்றால், சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான்.

இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால், 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2, 3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்க முடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவோ இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக் கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது;

பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக்கப்பட்டான் என்கிறான். சிந்துநதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை!

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான் மற்றவன் சூத்திரன். பார்ப்பான் என்றால் மேல் ஜாதி, சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி.

இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறதுதான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால், ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?

நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? நாம் எல்லாம் வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்பமாட்டானா? உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டி என்று சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

தந்தை பெரியார் இறுதியாக முழங்கிய நாள் இந்நாள் (19.12.1973). அந்நாளில் அறிவுலக ஆசான் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் இது.
சிந்திப்பீர், செயல்படுவீர்!

Read more: http://viduthalai.in/page-8/93121.html#ixzz3MM1pp2uu

தமிழ் ஓவியா said...

இப்படி ஓர் அமைச்சர்!!


கர்நாடக சட்ட மன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற உழைப்பவர்களுள் முக்கியமானவர் அம்மாநில அரசின் எக்ஸைஸ் அமைச்-சரான சதீஷ் ஜார்கிகோலி. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தனது மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக பேய்கள் உலவும் இடமாய் கருதப்படும் பெலகாவியில் உள்ள வைகுந்தம் எனும் சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டதுடன், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் தூங்கினார்.

இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறுகையில், முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும்.

என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார்.

நான்கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ. 600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது என்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

பெலகாவி நகராட்சியின் கீழ் வரும் வைகுந்தம் எனும் சுடுகாட்டில் அமைச்சர் இந்தக் "காரியத்தை" வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

ஓட்டினை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் அரசியல் சூழலில் இது போன்று பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கதியில் மக்கள் பிரதிநிதிகள் இறங்குவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

- இளங்கோவன் பாலகிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

இப்படியும் ஓர் அமைச்சர்?!


நாட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மனிதவளத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணியிடம் இருக்கும் போது அவர் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கையை நீட்டி நான் டில்லிக்கு முதல்வர் ஆகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள பில்வாடா என்ற ஊரில் 23.11.2014 அன்று மனிதவளத்துறை அமைச்சர் அவரது ஆஸ்தான ஜோதிடரான நதுலால் வியாஸைச் சந்தித்தார். அப்போது அவர் ஜோதிடரிடம், நான் உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பு உங்களைச் சந்தித்த போது எனது ராசிபலனின்படி நீ கேபினட் அமைச்சராவாய் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே நான் தற்போது அமைச்சராகிவிட்டேன். விரைவில் டில்லி மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு என்னை முதல்வராக்க மோடி விருப்பம் தெரிவித்திருக்கிறார். தற்போது எனது ஜாதகப்படி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுமா, நான் டில்லிக்கு முதல்வராகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட நந்துலால் வியாஸ், உடனே கையில் சிலேட்டை எடுத்து ஸ்மிருதி இராணியின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் அரைமணிநேரம் சிலேட்டில் கட்டங்களைப் போட்டு பல்வேறு கணக்குகளைப் பார்த்த வியாஸ் இறுதியாக ஸ்மிருதி இராணியின் நெற்றியில் திலகமிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நீண்ட காலமாக உனது ஜாதகத்தைக் கணித்து வருகிறேன். முதலிலேயே நீ மிகவும் உயர்ந்த பதவியை அடைவாய் என்று கூறியுள்ளேன். அதே போல் நீ கேபினெட் மந்திரியாகிவிட்டாய், உனது ஜாதகத்தில் உச்சம்தான் உள்ளது. உனது அரசியல் வாழ்க்கையில் இனி உனக்கு எதிரி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரசியல் வாழ்வில் நீ இன்னும் அதிக உயரத்திற்குச் செல்வாய், வரும் தேர்தல் உனக்கு நல்ல ஒரு செய்தியைத் தரும், தற்போது இருக்கும் பதவி இனி வரும் பதவி இரண்டுமே உனக்கு பேரும் புகழும் தரும் பதவிகள் ஆகும் என்று கூறினார்.

மேலும், தனது குடும்ப நலன் பற்றியும் ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர், குடும்ப நலத்திற்கு மஹாமிருதுஞ்சய் யாகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போது அவர் கெட்டவர்களின் பார்வை பாதிப்பிலிருந்து விலகி இருக்க, 13 தோல் நீக்காத உளுந்தை எப்போதும் அவரது ஆடையில் முடிந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர குடும்பத்தினருடன் உஜ்ஜைன் மகாபைரவர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுமார் 4 மணிநேரம் ஜோதிடரிடம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி விவாதித்தார். அதன் பிறகு பில்வாடா அனுமன் கோவிலுக்குச் சென்ற ஸ்மிருதி இராணி அனுமானுக்கு சனிதோச பூசைகள் செய்தார். ஸ்மிருதி இராணியின் பில்வாட பயணத்தின் போது அவருக்கு என சிறப்பு இசட் பிளஸ் பாதுகாப்புப் படைவீரர்களுடன் பல்வேறு வசதிகளுடனுள்ள இரண்டு அரசு வாகனங்களும் உடன் சென்றன.

விரைவில் குடியரசுத் தலைவர் ஆவாராம்

ஸ்மிருதி இராணி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போதே என்னிடம் ஜாதகம் பார்த்தார். நான் அவரது பிறந்த நாள், நேரம் பற்றித் துல்லியமாகக் கணித்து திரைப்பட உலகில் மிகவும் முக்கியமான நபராய் வருவாய் என்றேன். அதன்படி அவர் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகராக முன்னுக்கு வந்தார். நான் அவருக்கு ஜோதிடம் பார்த்த சில ஆண்டுகளிலேயே அவர் பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு மீண்டும் என்னிடம் வந்தார். அப்போது நான், நாட்டின் முக்கியத் தலைவராக 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு வருவாய் என்றேன். அதே போல் தற்போது அவர் கேபினெட் அமைச்சராகிவிட்டார். விரைவில் அவர் மீண்டும் ஒரு மிகவும் முக்கியப் பதவியை அடைய இருக்கிறார். அவருக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது என்று அவரது ராசி கூறுகிறது என்று ஸ்மிருதி இராணி சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால் ஸ்மிரிதி இராணி அரசியல் வாழ்க்கையிலும், சின்னத்திரை, பெரிய திரை நடிப்பிலும் பெரிய வெற்றிபெற்ற நபரல்ல. கல்வித் துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்மிருதி இராணியுடன் அவரது கணவரும் வந்திருந்தார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்காக ஆலோசனை பெற்றார். மனிதவளத்துறை அமைச்சர் ஜோதிடம் பார்த்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

நாட்டின் கல்வித்துறை உள்ளடக்கிய ஒரு துறையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி 5-ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரிடம் கைநீட்டி தனது எதிர்காலம் குறித்துக் கேட்பது மிகவும் கேவலமான ஓர் எடுத்துக்காட்டாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கும் அந்தப் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

உங்கள் கங்கை நதிக்கரையில்..


இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம் ரயில் நிலையம்

விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- கவிஞர் பழநிபாரதி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!



திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

கதையைப் படித்துவிட்டு இங்க வாங்க!


இந்தக் கதை நமக்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று. இதை பிரசுரத்திற்குத் தேர்ந்-தெடுத்து அச்சுக்கு அனுப்பும்போதுதான், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு ஒன்று வந்தது. கோயில் பூஜைகளில் கற்பூரம் பயன்படுத்த தடை என்கிறது அந்த அறிவிப்பு. காரணம் இதுதான், அதிலிருந்து வெளிப்படும் புகை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நுரையீரல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

இதைக் கேட்டதும், கொதித்துக் கொந்தளித்து எங்கள் பழமையைக் குலைக்கிறீர்கள். பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்... ஆகமத்தை மறைக்-கிறீர்கள்.. சாஸ்திர சம்பிரதாயங்களை.. புதைக்... என்றெல்லாம் தம் கட்டி வீராவேசம் பேசியிருப்பார்கள் அர்ச்சகர்களும், இந்துத்வா கும்பலும் என்று நீங்கள் கருதியிருப்பீர்-களேயானால், ஏமாந்துதான் போவீர்கள். அப்படி நடக்கவில்லை. கதையில் வரும் சதாசிவ அய்யர் போல இந்தத் தொழிலே வேண்டாம் என்று முடிவும் எடுக்கவில்லை.

பகுத்தறிவாளர்கள் சொன்னபோதெல்லாம் இல்லை என்று மறுத்தவர்கள் இப்போது, கற்பூரத்தால் உடல் நலம் பாதிக்கப்-படுவது உண்மைதான். அறநிலையத் துறையின் தடை வரவேற்கத்தக்கதுதான் என்று ஏற்றுக்கொண்டு மணியாட்டப் போய்விட்டார்கள்.

கற்பூர நாயகியே... கனகவல்லி... காளி மகமாயி... ஆஸ்மாக்காரி என்று இனி பாடுவார்களோ?

தமிழ் ஓவியா said...

கருத்து

கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இளைஞர்களின் கோபம் அந்தப் பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என கருப்பின இளைஞர்கள் கருதுகின்றனர். அனைவருக்கும் சமத்துவம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடு.

இருந்தும், கருப்பின இளைஞர்கள் அவ்வாறு கருதும் நிலை இருந்தால் அது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல. இந்த தேசத்தின் பிரச்சினையும் ஆகும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் கருப்புப் பணப் பதுக்கலும் பரிவர்த்தனைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.

- லினஸ் வான் காஸ்டிலின், சுவிட்சர்லாந்து தூதர்

நாட்டில் பெண்கள் பாதுகாபபு மக முககயமானது. பெண்களைக் கட்டுப்-படுத்தியோ, அல்லது அவர்களின் சுதநதரததைப் பாதிககும வகையலோ நடநது கொள்வதன் மூலம தான அவரகளன பாதுகாபபை உறுத செயய வேணடும என நனைககக் கூடாது. பாலயல வன்செயலகளுககு உரய தணடனை பெறறுத் தருவது குறததுத் தான சநதகக வேணடும.

- தத்து, உச்ச நீதிமன்ற தலைமை நதபத

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது. மனிதன் அந்தக் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்ற 300 ஆண்டுகள் ஆகும். சுனாமி ஏற்படும் சமயங்களிலும் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பும் போதும், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறையும். இது நமக்குத் தெரியாது. எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு நொடி கழிவது போல் இந்த நிகழ்வு நடக்கிறது.

- வெங்கடேஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியலாளர் (மங்கள்யான்)

தமிழ் ஓவியா said...

பழைய அதிகாரத்தோடு நடமாடக்கூடாது


- கோசின்ரா

ஒளிப்பழம் பறித்து உண்போம்
மழைப்பாலை அருந்துவோம்
நிலத்திற்கும் அருந்தத் தருவோம்
இரவு குளத்தில் இறங்கி
நிலவைக் கரைக்கு இழுத்து வருவோம்
நீரின் நூலால் நெய்யப்பட்ட ஆடையணிந்து
நதிகளோடு அந்தரங்கத்தைப் பகிர்வோம்

நீங்கள் ஒளிப்பழம் உதிர்க்கும் சூரியனுக்கு
சட்டை மாட்டினீர்கள்
சமத்துவம் கசியும் நதிகளுக்கு
பெண் வேடம் கட்டினீர்கள்...
நெருப்புக்கு மழைக்கு ஆகாயத்திற்கு
மனித உடல்களை மாட்டினீர்கள்...
படைப்பு சக்திகளின் வடிவங்களான
ஆணுறுப்பிற்கு சிவனென்றும்
பெண்ணுறுப்பிற்கு சக்தியென்றும்
பெயர் சூட்டி புராணங்களில் ஏற்றினீர்கள்!
வளர் அறிவு
உங்கள் கற்பிதங்களைத் திருப்பி அனுப்பி விட்டது
அதை இழுத்து வந்து
வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் சிறுபான்மையென்று
உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கென்று பூமியில்லை
அதுவும் தெரியும்
இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது
நீங்கள் சில நூற்றாண்டுகளாக
எங்களுடன் இருக்கிறீர்கள்
இருந்துவிட்டுப் போங்கள்
உங்கள் சொற்களுக்குத் தலையாட்டிப் பொம்மைகளாய் இருந்து
மக்களை அடக்கிவைத்த மன்னர்களை
ஜனநாயகம் துரத்திவிட்டது

பூர்வீக அடையாளங்களை அழிப்பது
கைவந்த கலையாக இருக்கலாம்
எல்லாவற்றையும் கடந்துவிடுங்கள்
கடவுளின் உதடுகளில் புரண்டு
மந்திரங்களின் ஆடையை அணிந்து
மலை முகடுகளில் உங்கள் மொழி
ஆடிய ஆட்டங்களை
காலப்பருந்து தின்றுவிட்டது
முன்னொரு காலத்தில்
ஈயக்கரைசல்களின் அகழிகளுக்குள்ளே இருந்தது
சாமான்யன் தீண்டக்கூடாதவாறு
கொடிய தண்டனைகளால்
வேலியிடப்பட்டிருந்தது
கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில்
சாமன்யர்களின் தெருக்களில் நிற்கிறது
யார் பேசுவார்கள்
தீண்டிய நாவுகளை அறுத்தெறிந்த காலம்
புதைந்து போயிருக்கலாம்
அதன் வலிகள் இங்கேயே இருக்கிறது
அதிசயங்கள் நிகழட்டும்
அது பிழைக்கட்டும்
அதன் வானம் அப்படியே இருக்கிறது
சிறகு முளைத்துப் பறக்கட்டும்
என் நிலத்தில் அது படரக்கூடாது
என் வேர்களைத் தின்றுவிடக்கூடாது
என் வானத்தின் கதவுகளை அது திறக்கக்கூடாது
என் கருமேகங்களை அது கலைக்கக்கூடாது
பழைய அதிகாரத்தோடு என் தெருக்களில் நடமாடக்கூடாது
தமிழுக்காகத் தீக்குளித்தவர்கள்
ஒவ்வொரு நாளும்
சூரியனின் ஒளிக்கற்றைகளில்
இறங்கி வருகிறார்கள் தமிழ் நிலத்திற்கு
எங்கள் வரலாறுகளை உரக்கச் சொல்லிக்கொண்டு.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க


தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே போதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்-படுத்தியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் விரைவாகத் தேர்ந்து வருகின்றனர். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் தேர்ந்திருப்பதும் அதைக் கற்பித்தலில் பயன்படுத்துவதும் அவசியமாகும்.

- ஆர்.கோவிந்தா, துணைவேந்தர், புதுடில்லி தேசிய கல்வித் திட்டம், மேலாண்மைப் பல்கலைக்கழகம்.

இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி என கல்வி மாறிவிட்டது. இந்தியாவில் இன்று ஒரு புதிய சவால் தோன்றியிருக்கிறது. மனித குலம் இன்றைக்குப் புதிதாகக் கற்பதற்கு எதுவுமே இல்லை என்றும் பரிணாமத்தின் சிகரத்தை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து இனம் தொட்டுவிட்டது என்றும் பேசப்படுகிறது. நாம் தேடுகிற கல்வி மானுட விடுதலைக்கானது. மானிட மகத்துவத்துக்கானது. அது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளை பிறக்கும்.

- வி.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.



சொல்றேங்க....!

நல்லா சொல்லுங்கம்!
இன்னும் லட்சம் வருசங்களுக்கு முன்னாடியே இருக்காய்ங்க!

தமிழ் ஓவியா said...

வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு


- சு.ஒளிச்செங்கோ

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.



அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்

வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

தமிழ் ஓவியா said...

மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!


அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய

காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில் அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் கொண்ட பாராளுமன்றமானது. உங்கள் மொழி எதுவென்று கேட்டால், மொழிபெயர்ப்பு என்கிறார்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தினர். ஒவ்வொரு நாட்டினைச் சேர்ந்த உறுப்பினருக்கும் தன் மொழியில் பேசும் உரிமையும், அந்த நேரத்திலேயே அவருடைய உரையை மற்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் மொழியில் கேட்கும்வகையில் அதனை மொழிபெயர்க்கும் வசதியும் கொண்டதாக அந்த அவை உள்ளது. உறுப்பினர் அனைவருக்கும் தத்தமது மொழி, மத, பண்பாட்டினைப் போற்றும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உரை மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலான ஆவணங்களும் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதாகப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அக்காணொளியில்!

ம்ம்ம்ம்... அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுகின்ற இந்தியா - இதற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது மட்டுமன்று, பெரும்பான்மையான மக்கள் மீது ஹிந்தி யைத் தேசியமொழியாகவும், சமஸ்கிருதத்தைப் புனித நூலாகவும் திணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சட்டநூலிலும், பள்ளிப் பாட நூல்களிலும் மட்டும் இருக்கின்ற ஒரு சொல்லாக ஆக்கப்பட்ட அளவு, மக்கள் மனதில் - குறிப்பாக ஆதிக்க அரசியல் தலைவர்கள், பெரிய பொறுப்புகளை வகிக்கும் அரசு அதிகாரிகள் எண்ணத்தில் ஒட்டாமல் போனதுதான் அவலம்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

கட்டாயம் நான் புத்தந்தான்”

அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார்.

வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா.

புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு:

புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும். அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன்.

புத்தியை முக்கியமாகக் கொண்டது பவுத்தம்..... நான் மாத்திரம் அல்ல; புத்தியை உபயோகப்படுத்துகிற எல்லோரும் புத்தர்கள்தாம். இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுள் இல்லையென்பவன் என்றாக்கி விட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன். ..... அப்படி புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். ... ... அபிதான சிந்தாமணி, என்சைக்ளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் புத்தியைக் கொண்டு _ அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள், குருட்டுத்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். - பெரியார் புத்தநெறி ப.6

இன்று நீ பெரிய புத்தனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். மௌனமாக, அடுத்தவர் கொடுக்கும் அடியைப் பெற்றுக்கொண்டு நியாயப்படித் தேவைப்படினும் எதிர்க்காமல் நிற்பவன் என்ற அளவில் மக்கள் _ புத்தரைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே அக்கேள்வி காட்டுகிறது.

ஆனால் புத்தர், தமது வாழ்வின் இறுதி நிமிடங்கள் நெருங்கியபோதும் தம் தலைமைச் சீடரான ஆனந்தரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: நீயே உன் தீவு; நீயே உன் விளக்கு. உனக்கு வழங்கப்பட்டுள்ள தம்மத்தை (பௌத்தக் கொள்கைகளை) அறிந்து தம் வாழ்வில் ஒருவர் தானே புரிதலுடன் ஒளியேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். நான்தான் தலைவர், என் வாய்மொழியை அப்படியே ஏற்றுக்கொள், அதன்படி நட என்று கூறவில்லை.

அய்யாவும் அப்படித்தான். உலகில் தாம் கண்டது, கேட்டது அனைத்தையும் பகுத்தறிவுடன் அலசி ஆய்ந்து அவற்றின் நன்மை தீமைகளைத் தயங்காமல் சுட்டி, சுயமரியாதை நிறைந்த சமுதாய நீதியுடன் கூடிய வாழ்க்கையை மனித சமுதாயம் பெற தேவை ஏற்பட்டபோதெல்லாம் போராடினார்.

இடையில் பௌத்த மடாலயங்களில் சடங்குகள் புகுந்ததை ஏற்றுக் கொள்ளாவிடினும் புத்தர் மீது அவர் வைத்த மரியாதை இறுதிவரை நிலைத்தது. 19.12.1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் அய்யா தன் வாழ்வின் இறுதி உரையை (மரண சாசனம்) ஆற்றினார். அவ்வுரையிலும், நம்பிவிடாதீர்கள் _ சிந்தியுங்கள் என்றான் புத்தன் என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்றார். ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். முக்கியமாக அறிவுதான் இன்றியமையாதது என்றுரைத்தார். யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொன்னதால் அவரை தாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் அய்யா.

- பேராசிரியர் முனைவர்
இரா.பே.வே.இசையமுது