Search This Blog

26.12.14

பெரியார் என்பவர் உலகத்திலேயே ஒரு பெரியார்தான்

கழகத்திற்குக் கிடைத்திட்ட அற்புதமான படைத் தளபதி அறிவுக்கரசு

தனியாக நின்று யாரும் சாதித்திட முடியாது!
கழகத்திற்குக் கிடைத்திட்ட அற்புதமான படைத் தளபதி அறிவுக்கரசு
செயலவைத் தலைவரின் பவள விழாவில் தமிழர் தலைவர் படப்பிடிப்பு
கடலூர், டிச. 16- கழகத்திற்குக் கிடைத்திட்ட அற்புதமான படைத் தளபதி கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு என்று பாராட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

8.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பவழ விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெளியீட்டுச் செயலாளராக இருக்கக்கூடிய வந்தியத்தேவன் அவர்கள் நம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர். இன்னும் இயக்கத்தோடு இணைந்திருக்கக்கூடிய ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு இன்றைக்கு 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதை அறிந்தோம். அவருக்கும் இந்த விழாவில், நம் மகிழ்ச்சியை, நம் அன்பை எல்லோருடைய கைதட்டல்மூலமாக, அவர் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்ற அந்த மகிழ்ச்சியோடு சிறப்பாக கைதட்டலாம்.

இணையவேண்டியவர்கள் எப்பொழுதும் இணைந்திருக் கிறோம் என்பதற்கு இது அடையாளம்; அதில் யாருக்கும் எந்தவிதமான கூச்சமும் தேவையில்லை. இவர்கள் கொள்கை உறவுக்காரர்கள்.

கொள்கையைப் பொறுத்தவர்கள் தியாகத்தை செய்வார்கள்!

அதுபோலவே, நம்முடைய நெருங்கிய உறவுக்காரர்கள் என்று சொன்னார்கள், தனசேகர் அவர்கள் இல்லாமல் எங்கள் குடும்பத்து திருமண விழாக்களே கூட கிடையாது. அந்த வகை யில், அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், கொள்கை ரீதியாகவும் நாம் இப்பொழுது நெருங்கி இருக்கக் கூடியவர்கள். மதவாதம் மிக வேகமாகத் தலை தூக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், உறவு என்பது இருக் கிறதே, அது வெறும் குருதியைப் பொறுத்தது அல்ல; இப்பொழு தெல்லாம் கொள்கையைப் பொறுத்தது. குருதியைப் பொறுத்த வர்களிடையே அங்கே பிரிவு ஏற்படலாம்; ஆனால், கொள் கையைப் பொறுத்தவர்கள் தியாகத்தைச் செய்வார்கள்; அந்த உணர்வு இருக்கும். அந்த வகையில், அருமைத் தோழர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தனசேகரன் அவர்களே,

அதுபோலவே, சிறந்த எழுத்தாளர், எல்லாத் துறைகளிலும் பல்கலை தோழராக இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினுடைய மேனாள் மாநில துணைத் தலைவர் கவிஞர் கா.கருப்பையா அவர்களே,

அதுபோல, தமிழ்நாடு மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் சங்கத்தின் தலைவராக - பொறுப்பாளராக இருக்கக்கூடிய கோவிந்தராசன் அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றிய, கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், பவழ விழாக் குழுவினுடைய ஒருங்கிணைப்பாளரும், அறி வுக்கரசு அவர்களுடைய மருமகனுமான நம்முடைய அருமை தோழர், அருமைத் தம்பி டாக்டர் ஜெயக்குமார் அவர்களே,

நன்றியுரை கூற இருக்கக்கூடிய பொறியாளர், மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த மணிநிலவன் அவர்களே, இந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, குடும்ப உறுப்பினர்களே, பல ஊர்களிலிருந்து, மாநிலம் முழுவதும் இருந்து இங்கே திரண்டு வந்திருக்கக்கூடிய கழகத்தினுடைய பொறுப்பாளர்களே, முக்கிய பொறுப்பாளர் கள் ஒவ்வொருவரையும் நான் குறிப்பிடவேண்டுமானால், நேரம் அதிகமாகிவிடும். ஆகவேதான், எல்லோரையும் விளித்ததாக நீங்கள் கருதவேண்டும் என்று அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நான்காவது தலைமுறையைச் சார்ந்த பெரியார் பிஞ்சுகளே...

ஏராளமாக வந்திருக்கக்கூடிய கழகத் தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, உறவினர் பெருமக்களே, கொள்கை உறவுகளே, அதுபோலவே, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய அரசு குடும்பத்தைச் சார்ந்த அரசு ஊழியர்களான அந்தக் குடும்பத்தைச் சார்ந்த அருமைத் தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே, நான்காவது தலை முறையைச் சார்ந்த பெரியார் பிஞ்சுகளே, உங்கள் எல்லோருக் கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தைப் பார்த்த நேரத்தில், நான் கொஞ்சம் முன்யோசனை இல்லாமல் நடந்துகொண்டோமே என்ற ஒரு உறுத்தல் எனக்கு இருந்தது.கொஞ்சம் முன் யோசனை இல்லாமல் நான் பல விஷயங்களை நான் திட்டமிட்டாலும்கூட, இதில் தவறிவிட்டோமே என்றுதான் நான் இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றபொழுது, ஒரு பக்கத்தில் மற்றவர்களுடைய பாராட்டுரைகளையெல்லாம் கேட்டு பெருமிதப்பட்டுக் கொண்டே, இந்த சிந்தனையும் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. அது என்னவென்று சொன்னால், அடுத்த மாதம் 7 ஆம் தேதியன்று சேலத்தில் திராவிடர் கழகத்தினுடைய மாநிலப் பொதுக்குழுவைக் கூட்டுமாறு, துணைத் தலைவர், தலைமைக் கழகப் பொறுப்பாளரான கழகப் பொதுச் செயலா ளர் இவர்களிடத்தில் எல்லாம் நான் வெளிநாட்டிலிருந்து வந்ததும், கலந்துபேசி, அங்கிருப்பவர்களைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்தச் செய்தியும் விடு தலையில் வந்திருக்கிறது.


ஆனால், இங்கே வந்து பார்த்தபொழுது, மாநிலத்தினுடைய பல்வேறு பகுதிகளிலிருந்து இவ்வளவு தோழர்கள் வந்திருக் கிறார்களே, இங்கேயே  பொதுக்குழுவை நாம் ஏற்பாடு செய் திருந்தால், செலவு எவ்வளவு மிச்சமாகியிருக்கும் என்ற சிந் தனைதான் என்னை முன்யோசனை இல்லாமல் நடந்து கொண்டோமே என்று உறுத்தியது. செலவு என்று சொல் கிறபொழுது,  சாப்பாட்டு செலவும் எங்களுக்கு மிச்சமாகும். அது இந்தக் குழுவின் செலவிலேயே போய்விடும். அதைவிட முக்கியம், வந்திருக்கின்ற உங்களுக்கு இரண்டு செலவுகள் ஏற்பாடு. செலவு என்று சொல்லும்பொழுது இந்தச் செலவை மட்டும் நான் சொல்லவில்லை. அந்த அளவிற்கு தோழர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், நம்முடைய செயல வைத் தலைவர் அறிவுக்கரசு அவர்களுடைய தொண்டு எப் படிப்பட்ட தாக்கத்தை கழகத் தோழர்களிடத்தில் உருவாக்கி இருக்கிறது என்பதற்கு, இந்த மாபெரும் அரங்கம்தான்  அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
அவர், மிகச் சிறப்பான வகையில் உருவாகிக்கொண்டு, இயக்கத்திற்குப் பயன்படுகிறார்.  தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள் என்று நினைப்பதுதான் இயக்கப் பணி, பொதுப் பணி, பொதுத் தொண்டு. தந்தை பெரியார் அவர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த மிகப்பெரிய பாடங்களிலேயே தலையாய பாடம், இதற்கு முன்பாக இருந்தவர்கள் இரண்டு அறங்களைத்தான் சொல்லிக் கொடுத்தார்கள். இல்லறத்தை விட்டால், துறவறம். இல்லறத் தைத் தொடங்கும்பொழுதுகூட ஆரிய முறைகளில், காசிக்குப் போ, சந்நியாசியாகப் போ என்று, அதேதான் நம்முடைய ஒழுக்கத்திற்கு மாறான ஒரு கலாச்சாரத்தை அவர்கள்  புகுத்திய நேரத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், இல்லறம் - துறவறம் என்றுதான் சொன்னார்கள்.

எல்லா வகையிலும் புதிய வழியைக் காட்டிய, புதிய ஒளியைக் காட்டிய, பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் அவர்கள், நமக்கு மிக அற்புதமான ஒரு வழியைச் சொன்னார் கள். இல்லறத்தில் இருந்துகொண்டே நீ செய்யவேண்டிய அறம் ஒன்று உண்டு. அதுதான் தொண்டறம் என்று அழகாகச் சொன்னார்கள். அந்தத் தொண்டறம் என்பது சமுதாயத்திற்கு நாம் பயன் படவேண்டும். நம்முடைய வாழ்வு என்பது, நமக் காக மட்டுமல்ல, அழகாக தந்தை பெரியார் சொன்னார், மனி தன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை. எவ்வளவு அழகான சொற்கள்; எவ்வளவு ஆழமான சொற்கள், அறிவுரைகள். இதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.
அந்த வகையில், மனித சமுதாயத்தில், சுயநலம் அவரவர் களுக்கு உண்டு என்று சொன்னாலும்கூட, அதை ஒரு கட்டுக் குள்ளே வைத்துவிட்டு, பாடுபட வேண்டும் என்பது அடையாளம்.

மகிழ்ச்சியோடு செய்யுங்கள் என்றேன்
அந்த வகையிலே, எளிய முறையில் அறிவுக்கரசு அவர் களுக்கு ஏன் பவழ விழா? அதை பெரிதாக நடத்தவேண்டும் என்று அவருடைய மருமகன் ஜெயக்குமார் வந்து கேட்ட நேரத்தில், மகிழ்ச்சியோடு செய்யுங்கள் என்று நான் சொன்னேன். அதற்காகவே நான் என்னுடைய பயணங்களைக் கூட வெளியில் குறைத்துக் கொண்டு, இந்த நிகழ்ச்சிக்கு முதலாவ தாக வந்து நிற்கிறேன்.

உங்களோடு இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று சொன்னால், இந்தப் பணி என்பது இருக்கிறதே, வேறு யாரும் எளிதில் செய்ய முன்வராத பணியாகும்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக, என்னுடைய மக்களை ஆக்கவேண்டும்; உலக மக்கள்போல் என்னுடைய மக்களும் வரவேண்டும்; என்னுடைய சமுதாய மக்கள் வரவேண்டும். அதை மற்றவர்கள் செய்ய முன்வராத காரணத்தினாலே, நான் இந்தத் தொண்டை என் தோள்மீது போட்டுக்கொண்டு செய்கிறேன் என்று சொன்னார். அந்தப் பணியை தொடருவதுதான் பெரியார் தொண்டர்களாக இருக்கக்கூடிய நம்முடைய தலையாய கடமையாகும்.

அந்தப் பணியை, அன்னை மணியம்மையார் அவர்கள், பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து செய்து, அய்யா அவர்களை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவர் தந்த இயக்கத்தை மேலும் அய்ந்தாண்டு காலம் பாதுகாத்து, நம்மிடம் ஒப்படைத்துவிட்டு, நூற்றாண்டு விழாவினை நாம் நடத்தக்கூடிய அளவிற்கு வந்த அந்த காலகட்டத்தில், என்னைப் போன்ற சாதாரணமானவர்கள், மாணவப் பருவந்தொட்டு, வினா தெரிந்த காலம் என்று சொல்வார்களே, அதுபோல, இந்த நகரத்தில், நான் ஒரு அரைக்கால் சட்டைவாசியாக இருந்து, மேஜைமீது நிறுத்தி, ஆசிரியர் திராவிடமணி அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டு, உரையாற்றிய அந்தக் காலத்திலிருந்து இன்றுவரையில் உங்களோடு பழகிக் கொண்டிருக்கக் கூடிய ஒருவனாக, இந்தக் கொள்கையைத் தவிர வேறு கொள்கை இல்லை என்று  சொல்லக்கூடிய அளவிற்கு, அறியாதவனாக, வேறு கொள்கை என்னால் ஏற்க முடியாததாக இருக்கிறது என்ற மனிதநேய அடிப்படையிலேயே, சிறந்த ஒரு சுயமரியாதை வாழ்வை தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், தனியாக  என்னைப் போன்றவர்கள் செய்திட முடியாது.


ஓர் அற்புதமான ஒரு படைத்தளபதிதான் இன்றைய பவழ விழா நாயகர்

பெரியார் என்பவர் உலகத்திலேயே ஒரு பெரியார்தான். ஒரு புத்தரைப் போல; ஒரு வள்ளுவரைப் போல. மற்றவர்கள் அந்த முயற்சியைத் தொடரவேண்டும். அவர்கள் தந்த தத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதுதான் நம்முடைய பணி. எப்பொழுதுமே அவர்கள் தந்த தத்துவங்கள், அவர்களாலே பரப்பப்பட்டது என்று சொல்ல முடியாது; அவர் களுடைய தொண்டர்களாலே, அவர்களுடைய தோழர்களா லேதான் பரப்பப்பட்டது. அந்தப் பணி நம்முடைய கடமை என்று நினைக்கின்ற நேரத்தில்தான், எங்களுக்கு அற்புதமான ஆயுதங்களைப் போல, படை வீரர்களை போல பயன்பட்டார் கள், கிடைத்திருக்கிறார்கள் என்றால், அதிலே ஓர் அற்புதமான ஒரு படைத் தளபதிதான் இன்றைய பவழ விழா நாயகர் பெருமைக்குரிய மானமிகு அறிவுக்கரசு அவர்கள்.

எனவேதான், அறிவுக்கரசு அவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டும்; பாராட்டவேண்டும்; உற்சாகப்படுத்தவேண்டும். அதுமட்டுமல்ல, அறிவுக்கரசு அவர்கள், நீண்ட காலம் வருவாய்த் துறையில் இருந்துவிட்ட காரணத்தினால், நான் உரிமை எடுத்துக்கொண்டு சொல்வேன், வருவாய்த் துறை நண்பர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது; அவர்கள் கொஞ்சம் அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவர்கள். காரணம் என்னவென்று சொன்னால், ஏற்கெனவே அதிகாரத்திற்கு அவர்கள் கீழே இருந்தபொழுது கட்டுப்பட்டு, அவர்கள் மேலே வந்தபொழுது, அந்தக் கோபத்தோடு மற்றவர்களிடம் அதே அதிகாரத்தை செலுத்துவார்கள். தாய்மார்களுக்குப் புரிகின்ற ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், மருமகளை மாமியாரை எந்த அளவிற்கு நடத்துவார்; பழைய காலத்தில், இந்தக் காலத்தில் நடக்காது, அது வேறு செய்தி. பழைய காலத்தில் எப்படி நடத்துவார் என்று தெளிவாகத் தெரியும். ஏனம்மா, உன் மருமகளிடம் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டால், என்னுடைய மாமியார் என்னை இப்படித் தான் நடத்தினார் என்று சொல்வது அவர்களுடைய பழைய காலத்து வாடிக்கை.


நீங்கள் கழகத்துக்காரர், கருப்புச்சட்டைக்காரர் மட்டும்தான்
அதுபோலத்தான், வருவாய்த் துறையில் இருக்கக்கூடிய வர்களும். இவர்களை அவர்கள் சொன்னார்கள் அல்லவா; நாங்கள் எல்லாம் அடிமைகளாக இருந்தோம். இங்கே உரை யாற்றிய வருவாய்த் துறை அதிகாரி உரையாற்றும்பொழுது சொன்னார், அவர்கள் அப்படி அதிகாரத்திற்குக் கீழ்பட்டு நடந்து நடந்து, அவர்கள் மேலே வரும்பொழுது, அவர்கள் எவ் வெப்பொழுதெல்லாம் தங்களை மற்றவர்கள் அழுத்தினார் களோ, அந்தக் கோபம், அவர்களைப் பழிவாங்கவேண்டும் என்று நினைப்பது, அந்த அதிகாரத்தைச் செலுத்துவார்கள்.

எனவேதான், அவரை நான் பொறுப்பிற்குப் போட்ட நேரத்தில் எல்லாம், கழகத்திற்கு வந்து அவர் பணிகள் செய்த நேரத்தில் எல்லாம், ஒவ்வொரு முறையும், கழகத்தினுடைய பொதுக்குழுவிலும் சரி, தலைமைச் செயற்குழுவிலும் சரி, நாங்கள் கூடும்பொழுது, அவருக்கு மட்டும் கொஞ்சம் தனியாக எடுத்துக்கொண்டு, அறிவுக்கரசு அவர்களே, நீங்கள் இப்பொழுது அதிகாரி இல்லை. நீங்கள் கழகத்துக்காரர், கறுப்புச் சட்டைக்காரர் மட்டும்தான். ஆகவே, அதை அடிக்கடி நாங்கள் நினைவூட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே, நம்முடைய தோழர்களிடத்திலே நீங்கள் பழகுகின்ற நேரத்தில், வெறும் தோழமை உணர்வு மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர, வேறு இருக்கக்கூடாது என்போம்.

அறிவுக்கரசு அவர்களுக்கு, எங்களைப் போல் பெரியார் அவர்களிடம் நெருங்கிப் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பில்லை; நெருங்கிய எங்களோடு பழகியிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில், அய்யாவிடத்தில் பார்க்கின்றபொழுது, பல நேரங்களில் எங்களின் கண்களில் நீர் கசிந்து கொண்டிருக்கும். அவ்வளவு பெரிய அளவிற்கு அய்யா அவர்களுடைய பொது வாழ்க்கையினுடைய பயணம். மிகக் காரமாக இருக்கும்; மற்றவர்களால் வாயில் வைக்க முடியாது. ஆனால், தந்தை பெரியார் அவர்கள், பரிமாறிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாமல், குவளையில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில், அது மீனாக இருக்கலாம்; இறைச்சியாக இருக்கலாம்; காய் கறிகளாகக் கூட இருக்கலாம். அதை அய்யா அவர்கள் அந்தக் குவளை நீரில் நொடிப்பொழுதில் கழுவிவிட்டு, சாப்பிடுவார்; அதனைக் கீழே போடமாட்டார்; வீணாக்கமாட்டார்.

விருந்து படைத்தவர்கள் அய்யாவிடம் கேட்பார்கள், அய்யா எங்கள் வீட்டு சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்பார்கள். உடனே  அய்யா அவர்கள், ரொம்ப அருமையாக இருந்ததுங்க; ரொம்ப அருமையாக இருந்ததுங்க என்று சொல்வார்கள். நாங்கள் எல்லாம், எவ்வளவு பெரிய தொந்தரவு; நமக்குப் பரவாயில்லை; அய்யாவினுடைய வயது என்ன? அவருடைய ஜீரண சக்தி எப்படிப்பட்டது என்றெல்லாம் நினைப்போம். அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். விருந்து முடிந்து வந்தவுடன், அதற்குரிய மருந்து என்ன வென்று, அதைச் சாப்பிடுவார். பல நேரங்களில் கடுமையான அவதியைக்கூட பட்டிருக்கிறார்கள்.

அறிவுக்கரசு அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகம் இல்லை
என்றாலும், விருந்தளித்தவர்களின் முகம் அங்கு கோணக்கூடாது; அவர்கள் அன்போடு கொடுப்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் சொல்லிச் சொல்லி, அதையெல்லாம் நேரில் பார்த்துப் பார்த்து, பழக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆகவேதான், எங்களுக்கு அது சாதாரணம். ஆனால், அறிவுக்கரசு அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகம் இல்லை. அந்தத் துறையிலேயே நீண்ட காலமாக இருந்துவிட்ட காரணத் தினால், அவர்கள் இப்பொழுது இங்கே வருகிறபொழுது சொன்னார், இந்தப் பவழ விழாவில் ஒரு பெரிய லாபம் என்ன வென்றால், அவர் பெயராலே  எண்டோமென்ட் வைக்கப் பட்டது என்பது அல்ல; எப்பொழுது சொன்னாலும்  வைப் பார்கள்; நாங்கள் வைப்போம். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், வாய்ப்பிருந்தால், டாக்ட்ரேட் வரக்கூடிய வாய்ப்புகளைப் பெறலாம். நிச்சயமாக வருவார், அதற்குண் டான ஆற்றல், அறிவு, திறமை, தெளிவு எல்லாமும் உண்டு.
அதைவிட இன்றைக்கு நம் அனைவரின் முன்னிலையிலும் ஒரு உறுதிமொழியை சொல்லியிருக்கிறார். நான் என்னை மாற்றிக் கொள்ளப் போகிறேன். இதைவிட பெரிய பவழ விழா விளைவு வேறு எதுவும் கிடையாது.

நம்மைவிட, குடும்பத்துப் பிள்ளைகள், அவருடைய செல்வங்கள் இருக்கிறார்களே, பெயரப் பிள்ளைகள், அவருடைய மருமகப் பிள்ளைகள்; மலர் போட்டுக்கூட, அவருடைய மருமகனை வறுத்தெடுத்திருக் கிறார் என்பதை நான் கேள்விப்பட்டேன். ஏனென்றால், பல நேரங்களில் என்ன நடக்கிறது என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவன் நான்.

அவருக்கு மனதில் ஒரு விகற்பம் கிடையாது; உணர்ச்சி வந்தால், அதனை அடக்கிவிடமாட்டார்; உடனடியாக அதனை அப்படியே காட்டுவார். சிறுபிள்ளைகள் சில நேரங்களில் பிடிவாதமாக இருப்பதைப்போல, அவர் கோபித்துக்கொண்டு கூட்டத்திற்கு வரமாட்டேன்; நான் போகிறேன் என்று சொல்வார். அதை அனுபவித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். தனித்தனியே சொல்லச் சொன்னால் நிறைய சொல்வார்கள். அப்பொழுது நான் இருந்தால் கூப்பிட்டு கண்டிப்பேன், உரிமையோடு. ஏனென்றால், அவரை பாராட்ட எவ்வளவு உரிமை உண்டோ, அதைவிட அதிகமான உரிமை அவரைக் கண்டிக்கவும் எங்களுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய அளவில், இந்த மலரில் நான் எழுதிக் கொடுத்த கட்டுரையில் கூட, கடைசியாக அதைத்தான் இந்தத் தம்பியிடத்தில் எழுதி யிருக்கிறேன். இன்றைக்கு எழுதிய வாழ்வியல் சிந்தனையில் கூட ஒரு வரியைப் பயன்படுத்தியிருக்கிறேன். இந்தக் கோபக் கார தம்பி என்று. அதற்கு நல்ல விளைவு ஏற்பட்டிருக்கிறது. நான் தொடர்ந்து சொல்லியது வீண் போகவில்லை. அது கட்டாந்தரையில் விதைத்த விதையாக இல்லாமல், நல்ல பக்குவப்படுத்தப்பட்ட மனதில் பதிந்த கருத்தாக அது அமைந்த காரணத்தினால்தான், அவர் மிகத் தெளிவாக சொன்னார், இனிமேல் நான் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, அடியோடு விட்டுவிடுவேன் என்று ஓர் உறுதிமொழியை இந்த அறிவார்ந்த அவை முன்னால் சொல்லியிருக்கிறார். இதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தயக்கத்தோடு ஏற்றுக்கொள்வோம். அவர் குறைத்துக் கொள்வார் என்பதிலே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அடியோடு மாறிவிடுவார் என்று சொல்வதிலே எனக்கு நம்பிக்கையில்லை. என்னுடைய நம்பிக்கையைப் பொய்யாக்க வேண்டியது அவருடைய கடமையாகும். அதுதான் மிக முக்கியம். நான் அதில் தோற்றுவிட்டேன் என்று நினைப்பதில்லை. நான் பல நேரங்களில் இயக்கத் தோழர் களிடம் தோற்பதைத்தான் விரும்புகிறேனே தவிர, நான் இயக்கத் தோழர்களிடத்தில் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பதில்லை.

ஏனென்றால், நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய தோழர்கள் மத்தியில் வெற்றி - தோல்வி என்பதற்குத் தனிப் பொருளே கிடையாது. அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, அந்த வகையில் மிகச் சிறப்பான ஓர் அற்புதமான விழாவை இந்த விழாவை ஏற்பாடு செய்த நம்முடைய நண்பர்கள், குறிப்பாக நம்முடைய ஜெயக்குமார் அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சி கொஞ்ச நஞ்சம் அல்ல. இயக்கத் தோழர்கள் ஏராளமாக ஒத்துழைத்திருக்கிறார்கள். மலர் மிகவும் கம்பீரமான மலராக இருக்கிறது. அந்த மலரின் அட்டைப் படம் இருக்கிறதே, மீசையின் சிறப்பு எவ்வளவு என்றெல்லாம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யாராவது, எங்கள் இரண்டு பேரை நிறுத்தி வைத்துப்பார்த்தால், யார், யாருக்குத் தம்பி என்று அய்யம் வரக்கூடிய அளவிற்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அவர் எல்லா வகையிலும் மிகச் சிறப்பாக வளர்ந்து, இன்னும்  இந்த இயக்கத்திற்குப் பயன்படவேண்டும். அதுதான் மிக முக்கியம். நாம் பாராட்டுவது எதற்கு? பாராட்டு வெறும் புகழ்மாலைக்காக அல்ல; அவர் பயன்படவேண்டும் என்பதற்கு ஒரு அச்சாரம் கொடுக்கிறோம். பணி ஒப்பந்தத்தை நாம் புதுப்பித்துக் கொள்கிறோம். இன்னும் பணி செய்யவேண்டும்; நம் இறுதி மூச்சு இருக்கின்ற வரை பணி செய்யவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

நிறைய பேசலாம் அவரைப்பற்றி; மலரில் வந்திருக்கிறது; தோழர்கள் இங்கே உரையாற்றினார்கள். அவர் மற்றவர்களுக்கு மனிதநேயத்தோடு உதவியிருக்கிறார். நான் வாழ்வியல் சிந்தனையில் இரண்டு, மூன்று செய்திகளை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஒன்று, கொள்கை ரீதியாக, ஒரு அரசு ஊழியனாக இருந்தால் பயப்படவேண்டிய அவசியமில்லை. வந்திருக்கின்ற தோழர்களுக்கு, இந்த அரங்கத்திற்காக மட்டும் பேசவில்லை.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு; to speak for vigar audience என்று சொல்வார்கள். வந்தவர்களுக்கு மட்டுமல்ல, வராதவர்களுக்கும் சேர்த்து; இந்த உரை வெளியில் போகும். அப்பொழுது மற்றவர்களும் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிலே இருக்கவேண்டும். அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கு நேர்மையும், யாருக்கு கொள்கையும் இருக்கிறதோ, அவர்கள் ஒருபோதும் கோழைகளாக இருக்கவேண்டிய அவசியமே கிடையாது. அரசு ஊழியர்கள் என்பதற்காக, அவர்கள் தங்களுடைய மனிதத் தன்மையை, தங்களுடைய நேர்மையை, கொள்கையை அவர்கள் விட்டுக் கொடுக்கவேண்டும் என்கிற அவசியமே கிடையாது. கறுப்புச் சட்டையைப்பற்றி அவர்கள் சொன்ன பொழுது, ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள். கறுப்புச் சட்டையை ஏன் அணிந்துகொண்டு போகக்கூடாது; கறுப்புச் சட்டை அணியக்கூடாது என்று எங்கே விதி இருக்கிறது?
இதற்கெல்லாம் ஒரு வேடிக்கையாக சொல்கிறேன், நாங்கள் எல்லாம் மிசா காலத்தில் சிறையில் இருந்தபொழுது, பொறியா ளர் குமாரசாமி என்பவர், மிகப்பெரிய ஜீனியஸ் அவர். மிகப் பெரிய கெட்டிக்காரர், திறமைசாலி. நம்முடைய நாவலருக்கு உறவினர்; அதைவிட திராவிடர் கழக உணர்வாளர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களிடத்தில் எல்லாம் மிகப்பெரிய அளவிற்கு ஈடுபாடு உள்ளவர்கள் .

ஆயிரம் கோடிக்கு உன்னிடத்தில் திட்டம் இருக்கிறதா? என்று பக்தவத்சலம் கேட்டார்
கிண்டி பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு படித்தபொழுதே, நான்காவது ஆண்டுக்கான கணக்குகளைப் போட்டுக் கொடுப்பார் என்ற பெருமிதமானவர். அவ்வளவுக் கெட்டிக்காரர். ஆயிரம் கோடி கொடுத்தால், திராவிட நாடு பிரச்சினையை நான் ஒத்தி வைக்கிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னபொழுது, ஆயிரம் கோடிக்கு உன்னிடத் தில் திட்டம் இருக்கிறதா? என்று பக்தவத்சலம் கேட்டார்.

இது பழைய வரலாறு. ஆயிரம் கோடிக்கு உன்னால் திட்டம் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். அப்பொழுது குமாரசாமி அவர்கள் உதவிப் பொறியாளர், இயக்கக் கொள்கை உறுதி படைத்தவர். பக்தவச் சலத்திற்கே நேரே கடிதம் எழுதிவிட்டார். ஆயிரம் கோடிக்கு திட்டம் கொடுத்து, அண்ணாவின்மூலம் அனுப்புகிறேன் என்று கேட்டார். அதற்காக அவரிடம் விளக்கம் கேட்டார்கள்; அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.
அப்படிப்பட்டவர் நெருக்கடி காலத்தில், இவரைப் போலவேதான், மற்றவர்கள் சொன்னார்கள் அல்லவா, கடவுள் இல்லை, பத்திரிகையை நிறுத்து இதுபோன்று எல்லாம் சொன்ன நேரத்தில், இரண்டு ஆலோசகர் இருந்தார்கள், தவே என்ற குஜ ராத்திப் பார்ப்பனர் ஒருவர். சுப்பிரமணியம் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர். அவர்கள்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் மிசாவில் சிறைச்சாலையில் இருந்தோம். எப்படி நடத்தப்பட்டோம் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அப்படிப்பட்ட நேரத்தில், அவரை விசாரிப்பதற்காக அழைத்திருந்தார்கள். இவர் கறுப்புச் சட்டையை அணிந்து கொண்டு, தலைமைச் செயலகத்திலுள்ள அவருடைய அறைக் குச் சென்றார். வழியில் நண்பர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, அவரைத் தடுத்து, என்னய்யா, இப்பொழுது பார்த்து கறுப்புச் சட்டையை அணிந்துகொண்டு செல்கிறாயே? என்று.

அவர் எப்பொழுதும் மிகவும் நகைச்சுவையாக பேசுவார். கறுப்புச் சட்டை போடக்கூடாது என்று அரசாங்கக் கோடில் எந்த இடத்தில் இருக்கிறது. அதை சொல்லட்டும், நான் பதில் சொல்கிறேன். என்னய்யா பதில் சொல்வாய் என்று கேட்டார் அருகிலிருந்தவர். நான் கோபமாக ஒன்றும் சொல்லமாட்டேன். நிதானமாக, சார், நான் மனைவிக்கு மிகவும் கட்டுப்பட்டவன். என் மனைவிக்கு கறுப்பு கலர்தான் பிடிக்கும். என்னைக்கு எந்தக் கலரில் சட்டை அணியச் சொல்கிறாரோ, அந்தக் கலரில்தான் சட்டை போடுவேன். இன்றைக்கு கறுப்புச் சட்டையைப் போடச் சொன்னார், அதனால் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருக் கிறேன் என்று சொல்வேன் என்று சொன்னார்.
         ----------------------(தொடரும்) 16-12-2014
Read more: http://viduthalai.in/page-4/92925.html#ixzz3M4NEeQYT
**********************************************************************************
அறிவுக்கரசு போன்றவர்களின் பணி அதிகமாகத் தேவைப்படுகிறது

நம்முடைய காலத்தின் எதிரிகள் நாணயமற்றவர்கள் அறிவுக்கரசு போன்றவர்களின் பணி அதிகமாகத் தேவைப்படுகிறது
செயலவைத் தலைவரின் பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

கடலூர், டிச. 17- பெரியார் காலத்தில் இருந்தவர்கள் நாணய மானவர்கள். இப்பொழுது அப்படியில்லை, இந்த நிலையில் தம்பி அறிவுக்கரசு போன்றவர்களின் பணி அதிகம் தேவைப் படும் நேரம் இது என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

8.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பவழ விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடச்சி வருமாறு:


அது வேறு வகை; ஆனாலும், கொள்கையிலே தெளி வாக இருந்து, கறுப்புச் சட்டை அணிந்தால் தவறு என்ன என்று கேட்டார் அல்லவா. யாருக்குத் தொல்லை என்று சொன்னால், ஒரு கொள்கையும் இல்லாதவர்களுக்கு ஒரு தொல்லையும் இல்லை, அரசாங்க ஊழியர்களாக இருந்தாலும். கொள்கையில் மிகத் தீவிரமாக இருக்கிறவர்களுக்கும் தொல்லை வராது.
இரண்டுக்கும் நடுவில், இந்த அரைகுறையாக இருக்கிறார் பாருங்கள்; வழவழா கொழகொழா என்று, பட்டும் படாமல், எல்லோரையும் ஏமாற்றவேண்டும் என்று நினைப்பது; முன்னே நாய்க்கர் குதிரை; பின்னே ராவுத்தர் குதிரை என்று பழமொழி சொல்வதுபோல் காட்டவேண்டும் என்று நினைப்பவர்களுக் குத்தான் தொல்லை வரும். ஓடுகிறவர்களைக் கண்டால்தான் துரத்துகின்றவர்களுக்கு லாபம்; ஆனால், ஓடுகிறவர் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தால், துரத்துகிறவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

ஆகவே, அரசு ஊழியர்களே, அறிவுக்கரசு அவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்தை நீங்கள் ஆவணமாகக் கொள்ளுங் கள். அதனை ஒரு கையேடு போல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிக்கல் வந்தால், நேர்மையாக அதனை எதிர்கொள்ளுங் கள். எந்த நேரத்திலும் அவர் பொய் சொன்னது கிடையாது. எந்த நேரத்திலும் துணிச்சலாக உண்மையைச் சொல்லுங்கள். ஆகவே, அதற்காக நான் எதை வேண்டுமானாலும் பயன் படுத்துவேன் என்று சொல்லுங்கள்.

இது நம்முடைய தலைவர்  அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கற்றுக்கொடுத்தது.


தந்தை பெரியாரின் நாணயம்!


வெங்கட்ட நாயக்கர் மண்டி என்று அவருடைய தந்தை பெயரில் மஞ்சள் வியாபாரம் ஈரோட்டில் நடைபெற்ற அந்தக் காலகட்டத்தில், இவருக்கு மாற்றி விடுகிறார்கள். இவர் துடிப் பான இளைஞர் என்பதனால், பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாதவர் என்கிற காரணத்தினாலும், வியாபாரத்தையே நன்றாகப் பழகிக் கொண்டவர் என்கிற காரணத்தினால், இவர் நாணயமான வியாபாரத்தை எல்லோரிடத்திலும் செய்து கொண்டிருந்தார். மண்டி அவர் தந்தையார் பெயரில் இருந்தது; பிறகுதான் ராமசாமி நாயக்கர் மண்டி என்று மாறியது. அவருடைய தந்தையார் கையெழுத்தை, வியாபாரத்திற்காக போடுவது என்பது அப்போது சர்வசாதாரணமானது. அப்பொழுது பெரியார் அவர்கள் தந்தையார் கையெழுத்தைப் போட்டுவிட்டார். இவரைப் பிடிக்காதவர்கள் அரசாங்கத்திற்கு புகார்க் கடிதம் அனுப்பி விட்டார்கள். போர்ஜரி என்று புகார் செய்திருந்தனர்.


பிரிட்டிஷார் அரசாங்கம் அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தது. போர்ஜரி என்பது பெரிய கிரிமினல் குற்றமாகும். பலரும், உங்களுடைய பையன் நிச்சயமாக சிறைச்சாலைக்குச் செல்வான் என்று பெரியாருடைய தந்தையாரிடம் சொல்லி பயப்படுத்தி விட்டார்கள்.


சிறைச்சாலைக்குச் செல்வது என்பது அந்தக் காலகட்டத்தில் பெரிய அவமானமாகக் கருதக்கூடிய பருவம். அந்தக் காலகட்டத்தில் பெரியாரை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கவலைப்பட்ட அவர் தந்தை, ஒரு பிரபல அய்யங்கார் வக்கீலை வைத்து, பெரியார் சிறைச்சாலைக்குச் செல்லாமல் தடுக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில்,
பெரியார் அவர்கள் இதனைப்பற்றி கவலைப்படாமல், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே, தன்னுடைய கட்டிலில் படுத்துக்கொள்ளாமல், கீழே படுத்து உறங்கினார். ஏன் என்று கேட்டதற்கு, சிறைச்சாலைக்குச் சென்றால், நான் கீழேதானே படுக்கவேண்டும்; அதை இப்பொழுதிருந்தே பழகிக் கொள்கிறேன் என்றார்!


அந்த வழக்கிற்காக பிரபலமான வழக்குரைஞரை  பெரியாருடைய தந்தையார் அமர்த்தினார். அந்த வழக்குரைஞர் தந்தை பெரியாரிடம், அந்தக் கையெழுத்தை நீங்கள் போடவில்லை என்று சொல்லி விடுங்கள். அது போதும் உங்களை நான் காப்பாற்றிவிடுவேன், என்னுடைய வாதத் திறமையாமல் என்று சொல்கிறார்.


எந்தவிதமான தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்


அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நேரத்தில்,  தந்தை பெரியார் அவர்கள் எனக்காக வழக்குரைஞர் வாதாடவேண் டாம்; நீங்கள் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன் என்று வெள்ளைக்கார நீதிபதியிடம் சொல்கிறார்.


கையெழுத்தை நீங்கள் போட்டீர்களா? என்று நீதிபதி கேட்டவுடன்.
ஆமாம், நான்தான் போட்டேன். எங்கள் அப்பா  கையெழுத்தை நான் போடவில்லை என்று மறுக்கமாட்டேன். இது வழமையாக நடப்பதுதான். எல்லா வியாபாரத்திலும் நடப்பதுதான். அதனால் யாருக்கும் எந்தவிதமான நட்டமும் இல்லை. மண்டி அவருடைய பெயரில் இருந்ததால், வரவு - செலவிற்காக அதனை நான் செய்தேன். தவறு செய்ய வேண்டிய கெட்ட எண்ணம் எனக்கு எதுவும் கிடையாது. நான் போட்ட கையெழுத்தை நான் மறுக்க மாட்டேன். எந்தவிதமான தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.


அந்த வெள்ளைக்கார நீதிபதி வியந்து சொன்னார், இவரால் எந்தவிதமான நட்டமும், இந்தக் கையெழுத்தினால் இல்லை. தவறான நோக்கத்துடனோ, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யவேண்டிய வகையிலோ இல்லை. ஆகவே, இவரை விடுதலை செய்கிறேன் என்று சொல்லி தீர்ப்பளித்தார்.


இது நம்முடைய தலைவர் நமக்குக் காட்டிய வெளிச்சம்.


எங்களுடைய தலைவருடைய கட்டளை, அதனால் கொளுத்தினேன். தண்டனை என்ன கொடுத்தாலும் பரவாயில்லை
ஆகவேதான், அவர் பல நேரங்களில் இக்கட்டான நிலையி லிருந்து வெளியே வந்திருக்கிறார்; அதையே எழுதியிருக்கிறார். எங்களுடைய தோழர்களுக்குக்கூட நாங்கள் அதைத்தான் சொல்வோம். நீ குற்றம் செய்தாயா? என்றால், ஆம், குற்றம் செய்தோம் என்று ஒப்புக்கொள்ளவேண்டும்.நான் மனதார குற்றம் என்று நினைத்துக்கொண்டு செய்யவில்லை. போராட்டம் என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் என்ன அறிக்கை விடுவார் என்றால், இதைக் கொளுத்தி னாயா? ஆம் கொளுத்தினேன். எங்களுடைய தலைவருடைய கட்டளை, அதனால் கொளுத்தினேன். தண்டனை என்ன கொடுத்தாலும் பரவாயில்லை; அதுமட்டுமல்ல, குற்றம் செய் தால், அந்தக் குற்றத்திற்கு வேறு வியாக்கியானம் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அது நம்முடைய தலைவர் காட்டிய பண்பாடு மட்டுமல்ல, இந்த இனத்தின் பண்பாடும்கூட அதுதான்.

எற்றென்றி ரங்கவ செய்யற்க செய்வானேகில்
மற்றன்ன செய்யாமை நன்று!


இதுதான் திருக்குறளுடைய பண்பாடு. திருக்குறள் மொழி. தவறு செய்யாதே, தவறு செய்தால், தண்டனையை அனு பவிக்கவேண்டுமானால், அதற்குத் தயாராக இரு. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்காதே! அதுதான் மிக முக்கியம்.


அப்படித் தயாராகும்போது, அதனுடைய விளைவுகளை நாம் ஏற்கக்கூடிய அறிவு நேர்மை இருக்கிறது பாருங்கள் - மிஸீமீறீறீமீநீணீறீ பிஷீஸீமீஹ்  இந்த அறிவு நேர்மைதான் சுய மரியாதைக்காரர்களுடைய சொத்திலேயே தலைசிறந்த சொத் தாகும். அதனை யாரும் மறந்துவிட முடியாது.


எனக்கு ஒரு பெருமை என்னவென்றால்...

அந்த வகையில், அரசு ஊழியராக இருந்து ஓர் எளிய எழுத்தராக உள்ளே நுழைந்து, கடைசியில், மாவட்ட ஆட்சியராகக்கூட சில நேரங்களில் பொறுப்பு வகித்திருக்கிறார் நம்முடைய அறிவுக்கரசு அவர்கள்.  அப்படிப்பட்ட அளவிற்கு அவர் உயரும்பொழுது, எனக்கு ஒரு பெருமை என்ன வென்றால், அவரை பணிக்கு அனுப்பியபொழுதும் நான் இருந்தேன்; வருவாய்த் துறைக்குச் சென்று, பிறகு திரும்பி வரு வாய் என்று சொல்லி, திரும்பி வரும்பொழுதும் அழைப்பதற்கு புதுக்கோட்டைக்குச் சென்று, கறுப்புச்சட்டையைக் கொடுத்து வந்தேன். இந்தச் சட்டையை சில நேரங்களில் பயன்படுத்துங் கள்; சில நேரங்களில் பயன்படுத்தாதீர்கள் என்று அவருக்குச் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லியிருக்கிறோம்.


எனவேதான், ஒரு அற்புதமான விழா இந்த விழா என்று சொன்னால், இது அவருக்காக அல்ல; ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள், அந்தக் கொள்கைக்காக தான் தன்னல மறுப்பை செய்வதற்குத் தயாராக இருக்கின்றபொழுது, நேர்மை யாக நடக்கின்றபொழுது, அந்தக் கொள்கைக்கு மரியாதை; அதைச் சார்ந்த இயக்கத்திற்கு மரியாதை; அவரை ஆளாக்கிய தலைமைக்கு மரியாதை என்பதை எடுத்துச் சொல்வதாகத் தான் விழா இருக்கிறது.

இப்பொழுதெல்லாம் நூறாண்டு வாழ்வது ஒன்றும் கஷ்டமில்லை


ஆகவே, அறிவுக்கரசு அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு, அதற்குமேலே வாழவேண்டும். ஏனென்றால், இப் பொழுதெல்லாம் நூறாண்டு வாழ்வது ஒன்றும் கஷ்டமில்லை. காரணம், எல்லா உடல் உறுப்புகளையெல்லாம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்களே!
பகவான் செயல், பகவான் செயல் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால், யாரும் பகவான் செயல் என்று சொல்லிக்கொண்டு, டாக்டரிடம் செல்லாமல் இல்லை.

சங்கராச்சாரியாருக்குக்கூட ஸ்கேன் இயந்திரம் கொண்டு தான் உடலைப் பரிசோதனை செய்கிறார்கள்.


ஆகவே, இப்பொழுதெல்லாம் மருத்துவத் துறை, அறி வியல் துறை வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே, இப் பொழுதெல்லாம் இதயத்தையே மாற்றுகிறார்கள். எந்தப் பாகம் பழுதடைகிறதோ, அந்தப் பாகத்தை மாற்றுகிறார்கள்.


ஓய்வு என்பது, அரசு பணிக்குத்தானே தவிர, தொண்டறத்திற்கு ஓய்வே கிடையாது


எனவே, நீண்ட காலம் வாழுங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது; நீண்ட காலம் நல்ல உடல்நலத்தோடு வாழுங்கள். நல்ல உடல்நலத்தோடு வாழ்வது என்பது இருக் கிறதே, கட்டுப்பாடான வாழ்க்கை என்பது மட்டுமல்ல, இங்கே ஓய்வு பெற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். ஓய்வு பெற்றுவிட்டோம் என்று வீட்டி லேயே இருந்தால், நமக்கு முதுமை அதிகமாகிக்கொண்டே இருக்கும். ஓய்வு என்பது, அரசு பணிக்குத்தானே தவிர, தொண் டறத்திற்கு ஓய்வே கிடையாது. அதைத்தான் அறிவுக்கரசு அவர்கள் மீசை  தெளிவாகத் தெரிவிக்கிறது. அதுதான் மிக முக்கியம்.

அவருடைய கம்பீரம் மிகத் தெளிவாக இருக்கிறது. அவருடைய அழுத்தம் திருத்தமான உரைகள், எழுத்துகள் அதுதான் மிக முக்கியம்.


ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும் நான் சொல்கிறேன், இங்கே நம்முடைய துணைத் தலைவர் சொல்லியதைப்போல, குழந் தையைக் கொண்டு போய் விடுவது; மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்; கீழே விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் நினைக்கவேண்டும். விழுந்தால், எழுந்து கொள்ளலாம்; அதையும் மீறி நமக்கு ஏதாவது ஊனம் ஏற் பட்டால், மருத்துவமனைகள் இருக்கிறது. உடனே அங்கே சென்று சரி செய்துகொள்ளலாம். இப்பொழுதுதான் எல்லா துறைகளிலும் வசதி இருக்கிறதே.


எனவே, முதலில் துணிச்சலை இழக்காதீர்கள்; அந்தத் துணிச்சல் எப்பொழுது வரும் என்றால், பெரியாரை நீங்கள் துணைக் கொள்கின்ற நேரத்தில், உங்களுக்கு எல்லாத் துறை களிலும் துணிச்சல் வரும்.
இங்கே நம்முடைய புகழேந்தி அவர்கள் கேட்டார், உங் களுக்கெல்லாம் வயது அதிகமானது போலவே தெரிய வில்லையே! என்று.
வயது குறைவானவர்களைப் பாராட்டி பாராட்டி, நம்முடைய வயதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்!


எப்படித் தெரியும்? நாங்கள் இளமையானவர்கள். நாங்கள் வயதானவர்கள் என்று எப்படி எங்களால் ஒப்புக்கொள்ள முடியும். எங்கள் தலைவருக்கு 95 வயது; இப்பொழுது கலைஞருக்கு 91 வயது; பேராசிரியருக்கு 92 வயது; எனக்கு இன்னும் அதைவிட வயது குறைச்சல்தானே. அப்பொழுது நான் இளைஞன் இல்லையா!  என்னைவிட அறிவுக்கரசு அவர்களுக்கு வயது குறைவு அல்லவா! இந்த விழாவிற்கு ஏன் வருகிறோம்? நம்மைவிட வயது குறைவானவர்களைப் பாராட்டி பாராட்டி, நம்முடைய வயதைக் குறைத்துக் கொள்ளவேண்டும், அதுதான் மிக முக்கியம்.


ஆகவே, அந்த வகையில், இன்றைக்கு ஒரு அற்புதமான ஒரு விழாவாகும். அதேநேரத்தில்,  அறிவுக்கரசு போன்றவர்கள் மற்ற நம்முடைய தோழர்களுடைய பணி இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்ற காலகட்டம் இது.

பெரியாருடைய காலத்தில் இருந்த எதிரிகள் நாணயமான எதிரிகள்; ஆனால், நம்முடைய காலத்தில் இருக்கின்ற எதிரிகள் நாணயமான எதிரிகளல்ல; சூழ்ச்சி மிகுந்த எதிரிகள். அதுதான் மிக முக்கியம். எவ்வளவு சூழ்ச்சி என்கிறீர்கள்; எதையெல்லாம் நாம் செய்தோமோ, இன்றைக்கு அதையெல்லாம் புதிதாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மாள்கள் சுலபமாக ஏமாந்து போகிறார்கள்; குடுகுடுப்பையைக் காட்டினால் ஏமாறு கிற குழந்தைகள்போல. மயக்க பிஸ்கட்டை காட்டி ஏமாற்றுவது போல, இன்றைக்கு தமிழக மக்கள் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்.
வடக்கே இருந்து அதற்காகத்தானே வருகிறார்கள். இங்கே உரையாற்றிய தோழர் தனசேகரன் அவர்கள் சொன்னாரே, இன்றைக்கு நம் முன்னால், மதச்சார்பின்மை, ஜாதி ஒழிப்பு, சமதர்மம், சமூகநீதி இவை அத்தனைக்கும் மிகப்பெரிய அளவில் கேடு சூழ்கிறதே!


இன்று காலையில் ஒரு செய்தி நாளேடுகளில் வெளி வந்துள்ளதே, எவ்வளவு சந்தோசமாக அந்தச் செய்தியை பார்ப்பன ஏடுகள் வெளியிட்டிருக்கிறதே!
ஜாதி அடிப்படையில் இனிமேல் கணக்கெடுப்பு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்று போட்டிருக்கிறார்கள். தீர்ப்பா அது? இடைக்கால தடையை நீக்கியிருக்கிறார்கள். அறிவு இருக்கிறவர்களுக்குத் தெரியவேண்டாமா? இடைக்கால தடை வேறு! இன்ட்ரீம் ஸ்டே! வழக்குரைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.


நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கக்கூடிய நிலை இருந்ததா, 30 நாள்களுக்கு முன்பு!

ஒரு வழக்கில் இடைக்கால தடை; வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை வந்தது என்று சொன்னால், நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லா தீர்ப்புக்கும், அதேமாதிரி அந்தத் தீர்ப்பை வரவேற்று இருக்கிறீர்களா? நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கக் கூடிய நிலை இருந்ததா, 30 நாள்களுக்கு முன்பு.


ஒடுக்கப்பட்ட சமுதாயம் இன்றைக்குத் தலைநிமிர்ந்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது.


மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்பொழுது, நம்மாள்களில் இளைஞர்களுக்கே தெரியாது. ஏங்க, ஜாதி கூடாது என்று சொல்லும்பொழுது, பிறகு ஏன் நாம் ஜாதியைப் போட வேண்டும் என்று சொன்னால், பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப் பட்டவன், பழங்குடியினர் இவர்களை அடையாளம் காண வேண்டுமானால், எப்படி அடையாளம் காண முடியும்.

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் மட்டும் இல்லையானால்...

நீதிமன்றத்திற்குச் சென்று, 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை நிலைநாட்டினோம். இன்றைக்கு நம் பிள்ளைகளில் நிறைய பேர் முத்தன் மகன் முனியன், சுப்பன் மகன் குப்பன் இவர்கள் அத் தனை பேரும் ஆஸ்திரேலியாவில், நியூசிலாந்தில், அமெரிக் காவில், பின்லாந்தில் இன்னும் மற்ற மற்ற நாடுகளில் இருக் கிறார்கள் என்றால், இவையெல்லாம் சத்ய சாய்பாபா கைகளைத் தூக்கியதால், பொத்தென்று கீழே விழுந்த விஷயமா? வேறு ஏதாவது அற்புதம் நிகழ்ந்ததா? அது எப்படி நிகழ்ந்தது?
பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால், இந்த இயக்கம் மட்டும் இல்லையானால், கறுப்புச் சட்டைக்காரனுடைய தியாகம் மட்டும் இல்லையானால், குலக்கல்வித் திட்டம் நீடித்திருக்குமானால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் யாராவது பொறியாளர்களாக, மருத்துவர்களாக, மற்ற மற்ற துறைகளில் வந்திருக்க முடியுமா?


சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டும்தான் மருத்துவர்களாக முடியும் என்கிற நிலை இருந்ததே, நீதிக்கட்சி அதனை எதிர்த்து தொடர்ந்து போராடி, சுப்பராயலு ரெட்டியார் அவர்களுடைய காலகட்டம் முடிந்து பெரியார் அவர்கள் சொல்லி, நம்முடைய ஊரைச் சார்ந்த முதன் முதலாக  நீதிக்கட்சியினுடைய ஒரு பிரதமர் அன்றைக்கு முதல்வர் என்று அழைப்பதில்லை, பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்.  பனகல் அரசர் வந்த நேரத்தில்தான், மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு சமஸ் கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற நிலையை ஒழித்தார்கள்.


இன்றைக்குள்ள எத்தனை மருத்துவர்களுக்கு இந்த பழைய வரலாறு தெரியும். இந்த இயக்கம் பாடுபட்டதினால்தான் அந்தக் கதவு திறந்தது என்று தெரியுமா?


எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு?


இன்றைக்கு அது வளர்ந்து, 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை காப்பாற்றினால், நீதிமன்றத்தில் கேட்கிறார்கள், 69 சதவிகி தத்தை நீங்கள் எப்படி வைத்தீர்கள்? கணக்கு வைத்திருக்கிறீர் களா? எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு? கொடுப்பீர்கள்.


ஏற்கெனவே கணக்கெடுப்பில் ஜாதி அடிப்படையை கடைப்பிடிக்கவில்லை. கொள்கை ரீதியாக நாம் போராடி ஒரு முடிவெடுத்தோம். எப்படி அம்மை நோய்க்கு, அம்மைக் கிருமியைச் செலுத்தியே, அந்த அம்மையை ஒழிப்பதுபோல, உள்ளே இருக்கிற நோய்க் கிருமியை வைத்தே அதை ஒழிப்பது மாதிரி அந்தப் பணியை செய்திருக்கிறோம். இதை விளக்கு வதற்கு ஒரு அறிவு தேவை. புரிந்துகொள்வதற்கு அதைவிட அதிகம் அறிவு தேவை.
ஆகவே, அதனை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் கேட்கிறார்கள், எப்படி நீங்கள் இவ்வளவு தூரத்திற்கு வந்தீர்கள் என்று? கணக்குப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள்.


எல்லாக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து ஒரு கொள்கை முடிவு எடுத்தார்கள்
உடனே, நாடாளுமன்றத்தில் எல்லாக் கட்சித் தலைவர் களும் சேர்ந்து, பி.ஜே.பி. உள்பட கொள்கை முடிவு எடுத்தார் கள். அந்தக் கொள்கை முடிவு என்ன தெரியுமா? ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை! எதற்காக? ஜாதியை நிலைநாட்டுவ தற்காக அல்ல.

ஜாதியைப் பார்க்காமல் இருப்பீர்களா நீங்கள்? இந்தக் கணக்கெடுப்பின்மூலமாகத்தான் ஜாதி உண்டாயிற்றா? வைதீகன் முதுகில் பூணூல் இருக்கிறது; என் முதுகு வெறும் முதுகாக இருக்கிறது. அப்புறம் எப்படி இரண்டு முதுகும் ஒன்றாக இருக்க முடியும்?


நீங்கள்தான் வித்தியாசப்படுத்துகிறீர்கள் என்று சொன்னார் ஒரு பார்ப்பன வழக்குரைஞர், திருச்சியில் ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த பொழுது, பேச்சுவாக்கில்.


சோ என்னை பேட்டி கண்டபொழுது ஒருமுறை சொன்னார், நமக்குள் ஏன் வித்தியாசப்படுத்துகிறீர்கள் என்று.


இல்லீங்க, நீங்க முதலில் சட்டையைக் கழற்றுங்கள் என்று சொன்னேன்.
என்னய்யா, சொல்கிறீர்கள் என்று கேட்டார்.


சண்டை போடுவதற்கு அல்ல; இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். இரண்டு பேருடைய முதுகையும் பார்ப்போம். என் முதுகுபோல உங்கள் முதுகு இருக்கிறதா என்று பார்ப்போம். எதற்காக உங்கள் முதுகில் நூல் தொங்குகிறது? என்னுடைய முதுகு ஏன் வெறும் முதுகாக இருக்கிறது. எதற்காக நூலை போட்டுக் கொண்டீர்கள்?

சங்கராச்சாரியார் ஒப்புக்கொள்வாரா?


பகவான் உண்டாக்கினான் என்றால், அவன் உண்டாக்கும்பொழுதே, மூக்கை வைத்தான், காதை வைத்தான், நூலையும் சேர்த்து வைத்திருப்பான் அல்லவா? அப்படி இல்லாமல், நீங்கள் மட்டும் தனியா ஆவணி அவிட்டம் - பூணூல் விழா நடத்துகிறீர்கள் என்று கேட்டேன்.


உடனே அவர், ஏங்க, நீங்களும் பூணூல் போட்டுக் கொள்ளுங்களேன் என்றார்.
நான் பூணூல் போடுவதைப்பற்றி நீங்கள் சொன்னால் மட்டும் போதாது, சங்கராச்சாரியார் ஒப்புக்கொள்வாரா? என்று கேளுங்கள் என்றேன்.


எல்லாருக்கும் பூணூல் போட்டுக்கொண்டால் வசதிதானே என்றார்.


நான் உடனே, அது மிகவும் கஷ்டம்; நூல் விலை ஏறிப் போய்விடும் என்றேன்.


3 பேர் பூணூல்களை கழற்றி வைத்துவிட்டால்...

97 பேர் உங்களைப் பார்த்து பூணூல் போடுவதைவிட, 3 பேர் பூணூல்களை கழற்றி வைத்துவிட்டால், நம் முதுகெல்லாம் ஒரே முதுகாக மாறிவிடும் அல்லவா என்றேன்.


அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார்.
எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறேன் என்று சொன்னால், இன்றைக்குக் காலையில் பார்ப்பனப் பத்திரிகைகள் மகிழ்ச்சியாக செய்தி போடுகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்புப்பற்றி தீர்ப்பு என்று.
ஜாதியை நாம்தான் உண்டாக்கியதுபோல; வாரந்தோறும் வருகின்ற அந்த நாளிதழ்களில் வருகின்ற செய்தியைப் பாருங்கள்; மணமகள், மணமகன் தேவை பகுதியில் என்ன போடுகிறார்கள் என்று.


கவுரவக் கொலை


இப்பொழுது புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் கவுரவக் கொலை என்று.  கொலையிலேயே கவுரவக் கொலை. தன் ஜாதியில் காதல் செய்யாமல், வேறு ஜாதியில் காதல் செய்தால் கவுரவக் கொலையாம். கொலையிலே புதுக்கொலையாம் கவுரவக் கொலையாம். இவனுடைய கவுரவம் ஜாதியில்தான் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறதா? நன்றாக நினைத்துப் பாருங்கள் நீங்கள்.


ஜாதியை ஒழிக்கின்ற நாம், ஜாதியை அடையாளப் படுத்தவேண்டும்; எதற்காக, சமூகநீதிக்காக மட்டும் என்று நாம் தெளிவாகச் சொல்கிறோம்.
ஜாதியை அடையாளப்படுத்தினால்தானே, காலங்காலமாக பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருந்தவர் களுக்குத் தெரியும். தாழ்த்தப்பட்டவன் அதைவிட முக்கியமாக சக்கிலியர், அருந்ததியர் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்கவேண்டும் என்றால், அந்தப் பிரிவை பிரித்துப் பார்த்தால்தானே இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியும். இல்லையென்றால், இட ஒதுக்கீட்டை எப்படி கொடுக்க முடியும்?
கால் எலும்பு உடைந்துவிட்டது; அதைக் கண்டுபிடிப்பதற்காக எக்ஸ்ரே எடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்; அநியாயம், அநியாயம் உடைந்துபோன எலும்பை பிரச்சாரம் செய் கிறார்களே என்று சொன்னால், என்ன அர்த்தம்?


சமூகநீதிப் போராளிகள் களத்தில் தேவைப்படுகிறார்கள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, உடைந்த பாகத்திற்கு எக்ஸ்ரே எடுப்பதுபோன்று தேவை. அது சிகிச்சைக்காக செய்யப்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

 இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதற்கு அறிவுக்கரசுகள் தேவைப்படுகிறார்கள். இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதற்கு கறுப்புச் சட்டைகள் தேவைப்படுகிறார்கள். இவையெல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதற்கு சமூகநீதிப் போராளிகள் களத்தில் தேவைப்படுகிறார்கள்.


இப்பொழுது புதிது புதிதாக கொண்டு வருகிறார்கள். திடீரென்று ராஜேந்திர சோழன்மீது பக்தி வந்துவிட்டது வடக்கே இருந்து வந்தவர்களுக்கு. ஆர்.எஸ்.எஸ்சுக்கு. ராஜேந்திர சோழனின் ஆயிரமாமாண்டு விழாவினை கொண்டாடுங்கள் என்று. ஏன்? நம்மூரில் உள்ள கோவிலில் பார்ப்பானுக்கு மட்டும் பணி கொடுத்ததால், அவனைக் கொண்டாடச் சொல்கிறார்கள்.


பெரியார் தந்த புத்தி இருப்பதால், ஒருபோதும் நாங்கள் ஏமாறமாட்டோம்


கடாரத்தை வென்றான் என்று வெளியில் சொன்னவுடன், நம்மாள் உடனே புரியாமல், நம் சோழனை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பாராட்டச் சொல்லிவிட்டார்கள் என்று ஏமாறுவதா? எங்கள் சொந்த புத்தி இருந்தால் நாங்கள் ஏமாந்து போவோம்; பெரியார் தந்த புத்தி இருப்பதால், ஒருபோதும் நாங்கள் ஏமாறமாட்டோம். இந்த இயக்கம் அந்தப் பணியை செய்யும்.
கடாரத்தை வென்றான், கங்கையைக் கொண்டு வந்து கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்தான் அந்தப் பெருமைக்காக நாங்கள் பாராட்டுகிறோம் என்று சொல்லி ஏமாற்றினால், அதைவிட கனகவிசயர் தலையில், கல்லைத் தூக்கிக் கொண்டு வந்தானே, சேரன் செங்குட்டுவன் அவனுக்கு அல்லவா விழா எடுக்கவேண்டும்? ஆர்.எஸ்.எஸ். அவனுக்கு விழா எடுக்கத் தயாரா?
அதுமட்டுமல்ல, நெடுஞ்சேரலாதன், நேரே இமயத்தில் கொடி பதித்தான் என்று இருக்கிறதே, அவனுக்கு விழா எடுக்கத் தயாரா?


இவர்களுக்கெல்லாம் விழா எடுக்காமல், ஏன் ராஜேந்திர சோழனுக்கு மட்டும் விழா எடுக்கிறார்கள். காரணம் என்ன? அவன்தான் கோவில் கட்டிக்கொடுத்து, பார்ப்பான் கொள்ளை அடிப்பதற்கு வசதி செய்து கொடுத்தான்.
இதைத்தானே பெரியார் சொன்னார், பெரியாருடைய கண் ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், அது நுண்ணாடிக்குமேல் சக்தி வாய்ந்தது; ஆகவேதான், கிருமிகள் எங்கே நெளிகின்றன என்று தெரியும்.
எனவே, இந்த இயக்கம் தேவை! இந்த இயக்கம் சிறப்பாக இருப்பதற்கு, அறிவுக்கரசு போன்ற ஆயிரம் ஆயிரம் தளபதிகள் தேவை.


தன்னை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல, சமுதாயத்தை மாற்றுவதற்கும்...


எனவே, இந்த விழா அவருக்காக மட்டுமல்ல; இந்தக் கொள்கைக்கு ஏற்பட்ட சவால்களைச் சந்திக்கின்ற அறைகூவல்களைச் சந்திக்கக்கூடிய - அவைகளைத் தாண்டி, ஆயிரம் எதிர்ப்புகள் இருந்தாலும், தடைகள் ஆயிரம் இருந்தாலும், அதைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்று காட்டக்கூடிய தடந்தோள்கள் உண்டு என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான பாசறை வீரர்களுடைய அறிவிப்பு இந்த நிகழ்ச்சி என்று கூறிக்கொண்டு, வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி என்று சொல்லி, அறிவுக்கரசு அவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று நினைக்கின்றேன். எனவே, தன்னை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல, சமுதாயத்தை மாற்றுவதற்கும் அவர் தன்னுடைய பணியை தொடர் பணியாகச் செய்யவேண்டும். நாமெல்லாம் ஒத்துழைப்புக் கொடுப்போம் என்று சொல்லி, இப்பொழுது இருப்பதைப் போன்ற மிகப்பெரிய அறைகூவல் எப்பொழுதும் கிடையாது

இயக்கத் தோழர்களே, இளைஞர்களை உற்பத்தி செய்யுங்கள்; இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இப்பொழுது இருப்பதைப் போன்ற மிகப்பெரிய அறைகூவல் எப்பொழுதும் கிடையாது. எனவே, மிகப்பெரிய திருப்பத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில், இந்தக் கொள்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சோதனைகளை நாம் சந்தித்தாகவேண்டும் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.


                                     --------------------------------"விடுதலை” 17-12-2014

Read more: http://viduthalai.in/page-4/93006.html#ixzz3M9plSCpj

17 comments:

தமிழ் ஓவியா said...

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை... ஜனவரி 30ந் தேதி திறப்பு விழா!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார். காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை... ஜனவரி 30ந் தேதி திறப்பு விழா! இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இந்தக் கோயிலானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, அதாவது காந்தியின் நினைவு நாளன்று திறக்கப் படும் என கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்து மகா சபா மற்றும் ஓம் சிவ மகாகால் சேவா சமிதியும் இணைந்து மீரட்டில் நாட்டிலேயே கோட்சேவுக்கான முதல் சிலையை நிறுவும் பணிக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. இந்த சிலையும் வரும் ஜனவரி 30ம் தேதி அன்றே திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர, கோட்சே தொடர்பான திரைப்படம் ஒன்றும் ஜனவரி 30ல் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனே கோர்ட்டில் நாளை ( வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்

Read more at: http://tamil.oneindia.com/news/india/first-godse-statue-come-up-meerut-217754.html

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

காரணம்

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.
(குடிஅரசு, 4.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/93491.html#ixzz3N0OE3fBQ

தமிழ் ஓவியா said...

காலத்தின் கட்டாயம்

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட (23.12.2014) ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த - அறிவித்த கருத்து இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது.

அது - சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் - ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்குகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான் திராவிடர் கழகத் தலைவர் மதச் சார்பற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற ஓர் அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் தமிழர் தலைவர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் ஆசிரியர் அவர்களின் கருத்தினை, அறிவிப்பினை வழிமொழிகின்ற வகையில் பேசியது வரவேற்கத்தக்கது.

நேற்று (25.12.2014) நாகப்பட்டிணம் மாவட்டம் கீழவெண்மணியில் சுயமரியாதையை உயர்த்திப் பிடிப்போம்! எனும் தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (ஞிசீதிமி) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

அந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்திற்குச் சிறப்பு அழைப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றார். இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது நிறைவு உரையில் முக்கியமாக இதே கருத்தினை வலியுறுத்தினார்.

இந்துத்துவா - பாசிச சக்திகள் கொடும் மூர்க்கத் தனத்துடன் தமது மதவாதக் கோட்பாடுகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்ல துடிதுடித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், இந்த அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு அவசியம் தேவை என்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் கண்டிப்பாகவே இருக்காது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது - இந்தியாவில் ஓர் இந்து ஆட்சி வந்தால் என்ன தவறு? என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்துத்துவா கொள்கையை மூச்சாகக் கொண்டவர் களும், சங்பரிவார் வட்டாரங்களுக்குச் சொந்தக்காரர் களுமான தலைவர்களுக்குப் பாரத ரத்னா அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

கண் விழி எனப் போற்றப்படும் கல்வியையே காவி மயமாக்குவதற்கான முயற்சிகளில் மனிதவள மேம் பாட்டுத் துறை இறங்கிவிட்டது; பார்ப்பனீய கலாச் சாரத்தின் சின்னமான சமஸ்கிருத மொழியை திணிக் கவும் முண்டாசு கட்டி முயலுகிறது.

இந்துக்களாக மாற மனமில்லை என்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடலாம் என்று பொருளில் பிஜேபியின் முன்னணித் தலைவர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.

மதமாற்றம் என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், சலுகை களை முன் வைத்துப் பணம் கொடுத்தும், பொருள்களை வழங்கியும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களை இந்து மதப் பட்டியலில் அடக்கும் விபரீதமான வேலையும் வாயு வேகத்தில் நடந்து கொண்டுள்ளது.

இவையெல்லாம் பாசிசத்தின் அப்பட்டமான சிந்தனையும், செயல்பாடுகளும்தான் என்பது வெளிப் படை. இவர்களின் ஆட்சிக் காலத்தில், வேறு எந்த காலத்தையும்விட மதக் கலவரங்கள் வெடித்துக் கிளம் புமோ என்ற பீதி, மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக - அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பதவி நாற்காலிகளில் உட்கார்ந்தவர்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, அதன் ஆணி வேரை அடியோடு வெட்டுகிறவரை - இவ்வளவுப் பச்சையாக இந்தியாவை இந்து மயமாக்கும் ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள் என்கிறபோது - மதச் சார்பற்ற சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!

மதச் சார்பற்ற சக்திகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், குறிப்பாக அரசியல் அடிப்படையில் சிதறுண்டு கிடப்பது - இந்துத்துவா சக்திகளுக்கு கொழுத்த தீனியாகி விட்டது. மத அடிப்படையில் வாக்கு வங்கிகளை உருவாக்கி, எளிதில் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற அவர்களின் திட்டம் எளிதாகவே நிறைவேறி விடுகிறது.

அரசியலில் ஆழமான அனுபவமும், புரிதலும் உள்ள தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்வதில் ஒன்றும் சிரமம் இருக்கப் போவதில்லை.

வட மாநிலங்களில் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும், நிதிஷ்குமாரும் ஒரு கட்டத்தில் எதிர் எதிராக இருந்தாலும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள காவி மதவாதஅச்சுறுத்தல் பூகம்பத்தை எதிர் கொள்ள வேண்டியது - காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்து கொண்ட நிலையில், தங்களுக்கிடையே இருந்த மாச்சரியங்களை மரண குழியில் தள்ளி விட்டு ஒன்றிணைந்து உயரே கைகளை உயர்த்தியுள்ளனர்.

மற்ற மாநிலங்களைவிட சமுதாய விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இந்தப் புரிதல் என்பது எளிதானதே! இன்னும் சொல்லப் போனால் இதனை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்பதற்கான சகல தகுதிகளும் உண்டு.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஆராய்ச்சி யில் ஈடுபடாமல், உரிய காலமான இந்தத் தருணத் திலேயே மதச் சார்பற்ற சக்திகள் - சமூகநீதி அமைப் புகள் முனைய வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்! விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் - இதற்கு உதவிடத் தயார் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள் ளார். தேர்தலில் ஈடுபடாத அமைப்புஎன்ற கூடுதல் தகுதியும் திராவிடர் கழகத்துக்கு உண்டே!

Read more: http://viduthalai.in/page-2/93492.html#ixzz3N0OMtxeK

தமிழ் ஓவியா said...

கண் விழி எனப் போற்றப்படும் கல்வியையே காவி மயமாக்குவதற்கான முயற்சிகளில் மனிதவள மேம் பாட்டுத் துறை இறங்கிவிட்டது; பார்ப்பனீய கலாச் சாரத்தின் சின்னமான சமஸ்கிருத மொழியை திணிக் கவும் முண்டாசு கட்டி முயலுகிறது.

இந்துக்களாக மாற மனமில்லை என்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடலாம் என்று பொருளில் பிஜேபியின் முன்னணித் தலைவர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.

மதமாற்றம் என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், சலுகை களை முன் வைத்துப் பணம் கொடுத்தும், பொருள்களை வழங்கியும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களை இந்து மதப் பட்டியலில் அடக்கும் விபரீதமான வேலையும் வாயு வேகத்தில் நடந்து கொண்டுள்ளது.

இவையெல்லாம் பாசிசத்தின் அப்பட்டமான சிந்தனையும், செயல்பாடுகளும்தான் என்பது வெளிப் படை. இவர்களின் ஆட்சிக் காலத்தில், வேறு எந்த காலத்தையும்விட மதக் கலவரங்கள் வெடித்துக் கிளம் புமோ என்ற பீதி, மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக - அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பதவி நாற்காலிகளில் உட்கார்ந்தவர்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, அதன் ஆணி வேரை அடியோடு வெட்டுகிறவரை - இவ்வளவுப் பச்சையாக இந்தியாவை இந்து மயமாக்கும் ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள் என்கிறபோது - மதச் சார்பற்ற சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!

மதச் சார்பற்ற சக்திகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், குறிப்பாக அரசியல் அடிப்படையில் சிதறுண்டு கிடப்பது - இந்துத்துவா சக்திகளுக்கு கொழுத்த தீனியாகி விட்டது. மத அடிப்படையில் வாக்கு வங்கிகளை உருவாக்கி, எளிதில் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற அவர்களின் திட்டம் எளிதாகவே நிறைவேறி விடுகிறது.

அரசியலில் ஆழமான அனுபவமும், புரிதலும் உள்ள தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்வதில் ஒன்றும் சிரமம் இருக்கப் போவதில்லை.

வட மாநிலங்களில் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும், நிதிஷ்குமாரும் ஒரு கட்டத்தில் எதிர் எதிராக இருந்தாலும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள காவி மதவாதஅச்சுறுத்தல் பூகம்பத்தை எதிர் கொள்ள வேண்டியது - காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்து கொண்ட நிலையில், தங்களுக்கிடையே இருந்த மாச்சரியங்களை மரண குழியில் தள்ளி விட்டு ஒன்றிணைந்து உயரே கைகளை உயர்த்தியுள்ளனர்.

மற்ற மாநிலங்களைவிட சமுதாய விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இந்தப் புரிதல் என்பது எளிதானதே! இன்னும் சொல்லப் போனால் இதனை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்பதற்கான சகல தகுதிகளும் உண்டு.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஆராய்ச்சி யில் ஈடுபடாமல், உரிய காலமான இந்தத் தருணத் திலேயே மதச் சார்பற்ற சக்திகள் - சமூகநீதி அமைப் புகள் முனைய வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்! விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் - இதற்கு உதவிடத் தயார் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள் ளார். தேர்தலில் ஈடுபடாத அமைப்புஎன்ற கூடுதல் தகுதியும் திராவிடர் கழகத்துக்கு உண்டே!

Read more: http://viduthalai.in/page-2/93492.html#ixzz3N0OMtxeK

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அரசு அலுவலகத்தில் கோயிலா? கழகம் நடவடிக்கை


விருத்தாசலம், டிச. 26_ விருத்தா சலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத் தக்கோரி விருத்தாசலம் மாவட்டம் தி.க. சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில், இந்து மதக் கோயில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஆண்டு அலுவலக செயற் பொறியாளர் மற்றும் கோட்டாட்சிய ரிடம் முறையிடப்பட்டது. அப் போதைய கோட்டாட்சியர் ஆனந்த குமார் கோயில் கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், அதே அலுவலக்தில் மீண்டும் கோயில் கட்டுமானப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதை அறிந்த கழகத் தோழர்கள், நீர்வள ஆதா ரத்துறை அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, விருத் தாசலம் கோட்டாட்சியர் ப.மு.செந் தில் குமாரை சந்தித்து, விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் மனு அளித்தார். அப்போது, மாவட்ட செயலர் முத்து. கதிரவன், மாநில மாணவரணி இணைச் செயலர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன், மண்டல இளைஞரணி செயலர் ப.வேல்முருகன், மாவட்ட இளை ஞரணி செயலர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.ராமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.குமரேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் இந்துக் கடவுள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் விதி முறையை மீறிய செய லாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு அரசு பொது இலாகா, நாள் 29.04.1968, நினைவுக் குறிப்பு எண் 7553-_6-2 இல் மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத் தைச் சார்ந்த சாமியார்கள், கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரஸி அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கக்கூடாது எனவும், இவை இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் ஆணை பிறப் பித்துள்ளது. இதே போல், 17.03.2010 அன்று, அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித் துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் ஆணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மேற்கண்ட அலுவலகத்தில் நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/93493.html#ixzz3N0PGwJuA

தமிழ் ஓவியா said...

நல்லதோர் கருத்துப் பரிமாற்றம்


நல்லதோர் கருத்துப் பரிமாற்றம் என்ற தலைப்பில் விடுதலையில் 03.12.2014 அன்று வெளிவந்த தலையங்கம் அருமை. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் செய்தியில் பெரியார் தொலைக்காட்சி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும். பெரியார் தொலைக் காட்சியின் வரவை ஆவலுடன் எதிர்பார்கிறோம். ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர் என்ற தலைப்பில் விடுதலையில் 04.12.2014 அன்று வெளிவந்த ராசி பலன் முரண் பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்பதை இதைவிட யாரும் விளக்க முடியாது.

- ஞான. அய்யாப்பிள்ளை, செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தாராவி கிளை, மும்பை 400017.

Read more: http://viduthalai.in/page-2/93519.html#ixzz3N0Pavirb

தமிழ் ஓவியா said...

உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க, ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற ஆராய்ச்சி விசயமுங்க... மூளை ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரச மரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில் குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக் கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்! முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க!

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கை யெங்குறாங்க - இனிமேல் இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம். இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981)

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rb3bIJ

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

புதையல் எடுத்து தருவதாக மோசடி செய்த சோதிடர்கள்

ஓமலூர், டிச.26_ சேலம் மாவட்டம் ஓம லூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பழைய சினிமா தியேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (45). இவரது மனைவி கோவிந்தம்மாள் (45). நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டிற்கு ஜாதகம் பார்ப்பதாக கூறி வந்தனர். அவர்களிடம் ஜாதகம் பார்த்தபோது அவர்கள் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றும், வீட்டில் தங்க காசுகள் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்தால் நீங்கள் கோடீஸ்வரனாக ஆகி விடுவீர்கள் என்றும் கூறி உள்ளனர்.

வீட்டிற்குள் பூஜை செய்யவேண்டும் என்று கூறி அவர்கள் எலுமிச்சை பழம், ஊதுபத்தி, கற்பூரம் உள்ளிட்ட பொருள் களை வாங்கி வாருங்கள் என்று கூறிவிட்டு பூஜையை ஆரம்பித்தனர். அப்போது வீட்டில் பூஜை செய்யும் போது கடப்பாரை கொண்டு வாருங்கள் என்று கூறி வீட்டின் வட கிழக்கு மூலையில் குழி தோண்டினர். குழியின் உள்ளே இருந்த வெண்கலத்திலான சிறிய குடத்தை எடுத்தனர்.

அதை சாக் குப்பை கொண்டு கட்டி 15 நாள்கள் கழித்து அவிழ்த்து பார்த்தால் அதில் குடம் நிறைய தங்கக் காசுகள் இருக்கும் என்று கூறினர். இருவருக்கும் பூஜை செய்யவேண்டும் என்று கூறி புகை போட்டனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காணப்பட்டது. கணவன் மனைவி இருவருக்கும் தீர்த்தம் என்று ஏதோ ஒரு திரவத்தைக் கொடுத்தனர். அதை குடித்த இருவரும் மயக்கம் அடைந்த னர்.

இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அவர் களிடம் இருந்த பணம் 2 ஆயிரம், அரை பவுன் தாலி, கடப்பாறை கம்பி, வீட்டிற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகளை பிடித்துக் கொண்டு டெம் போவை வரவழைத்து அனைத்தையும் எடுத் துக்கொண்டு தப்பி விட்டனர்.

கிட்டத்தட்ட 2 மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த கணவன்_ மனைவி இருவரும் புதையல் எடுக்க வந்தவர்களை காணவில்லை என்று வீட்டிற்கு வெளியே வந்து தேடினர். அப்போது தான் வந்தவர்கள் ஜோதிடர்கள் அல்ல என்பதும், அவர்கள் கொள்ளையர்கள் என்றும் தெரிய வந்தது.

வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டு இருந்த 3 பசு மாடு மற்றும் பணம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி விட்டனர் என்பதை அறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் புதையல் இருப்பதாக கூறப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய குடத்தை அவிழ்த்து பார்த்தனர். அந்த குடத்தில் தங்கக் காசுகள் இல்லை. மாறாக மண் கொட்டி நிரப்பப்பட்டு இருந்தது.

ஏமாந்த கணவன்_ மனைவி இருவரும் இது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். புதையல் எடுத்துத் தருவதாக கூறி அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து கொண்டு சென்ற கும் பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SYRyHt

தமிழ் ஓவியா said...

என்னே காட்டுவிலங்காண்டித்தனம்! தலையில் தேங்காய் உடைத்து கிராம மக்கள் நேர்த்திகடனாம்

வத்தலக்குண்டு, டிச.26_ வத்தலக்குண்டு அருகே குவாரி செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே மல்லணம்பட்டி அழகாபுரியில் கல்குவாரி உள்ளது. இங்கு வெடி வைத்து கற்கள் உடைத்து எடுக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தக் கல்குவாரியை மூட வலியுறுத்தி 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வார கால மாக பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. உத்தமன் தலை மையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

நேற்று குவாரிக்கு போராட சென்ற கிராம முக்கிய பிரமுகர்களை காவல்துறை யினர் கைது செய்ததால் பொதுமக்கள் போராட்டத்திற்குச் செல்லாமல் கோவிலில் தங்கினர்.

அவர்களின் சார்பில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மனோகர் காவல்துறையி னரிடம் பேசினார். அப்போது ஒதுக்கப்பட் டுள்ள அளவை விட கூடுதல் இடங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வழக் குரைஞர் தெரிவித்தார். அது குறித்த மனு வையும் காவல்துறையினரிடம் கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை யினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து தனிக்குழு நியமித்து குவாரியை அளக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கு சம்மதித்த கிராம மக்கள் அதுவரை குவாரியில் பணி நடக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

காவல்துறையினர் ஆட்சியரிடம் பேசி அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டனர். தற்காலிகமாக இந்த போராட்டம் வெற்றி அடைந்ததால் கிராம மக்கள் அங்குள்ள மகாலட்சுமி கோவில் முன்பாக தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத் தினர்.

இது குறித்து ஊர் பிரமுகர் ஒருவர் கூறு கையில், எங்கள் போராட்டம் வெற்றி பெறு வதற்காக தெய்வத்திடம் வேண்டியிருந்தோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்திருப்பதால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினோம் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SecI7N

தமிழ் ஓவியா said...

அந்தோ பரிதாபம் - அய்யப்ப பக்தர் பலி

பாலையம்பட்டி, டிச.26_ திருவண்ணா மலை மாவட்டம் பேரூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவரது மகன் பாலாஜி (28). இவர்கள் சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர்.

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் (28), முனியாண்டி (22), சத்திய ராஜ் (21), ரமேஷ் (45), மும்மூர்த்தி (40), முருகன் (33) ஆகியோரும் மாலை அணிந்து வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரி சனம் முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட் டனர்.

நேற்று நள்ளிரவு அந்த வேன் அருப்புக் கோட்டை 4 வழிச்சாலையில் ராமநாயக் கன்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது.

இதனை தொடர்ந்து மாற்று டயர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப் பொழுது அய்யப்ப பக்தர்களில் சிலர் வேனுக்கு வெளியேயும், சிலர் வேனின் உள்ளேயும் இருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த டாரஸ் லாரி வேகமாக வந்து பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில் அய்யப்ப பக்தர் சுப்பிரமணி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து பந்தல்குடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சத்தியநாராயணன் (30) என்பவரை கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் தும்மல் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0Snon2H

தமிழ் ஓவியா said...

மாளவியாஜீ

சேரன்மாதேவி குருகுல சம்பந்தமாக தூத்துக்குடி டி.ஆர். மகாதேவய்யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? """"பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாக உட்காரக்கூடாது"" என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜி அவர்கள் எந்த விதத்தில் திரு.மகாதேவய்யரை விட மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் - நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜி அவர்களோ, """"கீழ் ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது"" என்றும், """"அவர்களுக்கு வேறு இடம் வேறு கோயில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்"" என்றும் சொல்லுகிறார்.

தனது சமபந்தி பார்ப்பனரல்லாதவரிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அவரை ஜாதியை விட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி ஹிந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார். இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்ணிய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? என்றுகேட்கின்றோம். இன்றைய தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத் தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றவர். சுயராஜ்யம் வாங்கப்போகும் போது கூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்ததாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜ்யம் கிடைக்கும் என்பதை ‘தேசபக்தர்கள்’ கவனிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். இதைச் சொன்னால் நம்மை கெட்டவன் என்றும், பாவி என்றும் சொல்லுகின்றார்களேயொளிய அவர் அப்படிச் செய்வது நியாயமா? அல்லது சுயமரியாதைக்கேற்றதா? என்று யாரும் சிந்திப்பதில்லையென்றால் பிறகு நாம் என்னதான் செய்வது? இவர்களைப்பற்றி நாம் என்ன தான் நினைப்பது? நமது மக்களை எப்படித்தான் நினைப்பது? என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதைக்காக பாடுபடுவதாகச் சொல்லுகின்றவர்கள் இதையெல்லாம் எப்படி மறைத்து வைப்பது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

பண்டித மாளவியாஜி அவர்கள் நம்மெதிரில் சாப்பிடுவதால் நமக்குப் பசி அடங்கிவிடும் என்பதாகக் கருதி நாம் அதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவர் அப்படி மறைவாக சாப்பிடும் போது நம்மை என்னமாய்க் கருதி அப்படிச் சாப்பிடுகின்றார் என்பது தான் கவனிக்கத்தக்கது என்று சொல்லுகின்றோம்.

-----பெரியார் - குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1931