Search This Blog

27.12.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 48

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


பன்னிரெண்டாம் அத்தியாயம் 

தூதர்கள் வருவதற்கு முந்திய நாளிரவில் பரதன் தன் தசரதனுடைய இறப்பை அறிவிக்கும் சில தீயகனாக்களைக் கண்டு வருந்தியிருந்தான். அப்போது அயோத்தியிலிருந்து வந்த தூதர்கள் கேகய மன்னனையும், அவன் மகன் யுதாசித்தையும் கண்டு, பரதனையடைந்து வசிட்டனும் மந்திரிகளும் அவனை உடனே அழைத்துவரக் கூறியதைப் புகன்றனர். தன்னைப் பெற்றோர் முதலிய எல்லாருடைய நலத்தையும் பரதன் வினாவ, அவர்கள் ஆமென்று கூறி அவசரப்படுத்தினர். பரதன் தன் கனாவாலும், தூதர்கள் அவசரத்தாலும் மனங்கலங்கி விடைபெற்றுப் புறப்பட்டான். அவன் ஏழு நாள்கள் இரவுபகலாகச் சென்று எட்டாவது நாள் காலையில் அயோத்தியில் நுழைந்தான். நகரம் பொலி வழிந்திருப்பதைக் கண்டு அவன் மனம் வருந்தித் தன்னை விரைவில் வரவழைத்ததால் ஏதோ தீமை நிகழ்ந்திருக்க வேண்டுமெனத் தேரோட்டியிடம் கூறிக் கொண்டு அரண்மனையையடைந்தான். அவன் தசரத னிருக்கு மிடத்தில் அவனைக் காணாமல் கைகேயி, வீடுபோய் அவளை வினாவக் கைகேயி, தசரதன் இறந்ததைக் கூறினாள். உடனே பரதன் கீழே விழுந்து நெடுநேரம் அழுது கடைசியாக என் தந்தை யாது கூறினார்? என வினவினான். கைகேயி, இராமா, சீதா என்று கூவி அவர் உயிரை விட்டார். இராமன் சீதை இலக்கு வருடனே அயோத்திக்குத் திரும்பும்போது பார்ப்பவர்களே பயன் பெற்றோர் என்று கூறியிறந்தார் எனப் புகன்றாள். பரதன், இராமனெங்கே என்று கேட்க, அவள், இராமன் சீதையுடனும் இலக்குவனுடனும் காடேகினான் என்றாள். இதைக்கேட்ட பரதன் தன் அண்ணனுடைய ஒழுக்கத்திற் சந்தேகப்பட்டு வாட்டமடைந்தவனாய் எந்தப் பிராமணனது பொருளையாவது இராமன் பறித்தனனோ? பெண்களைக் கற்பழித்தானோ? பார்ப்பனனைக் கொன்றவனைப் போல இராமனை ஏன் காட்டிற்குத் துரத்திவிட்டார்கள்? என்று வினவினான். கைகேயி நடந்த வரலாற்றைக் கூறி அவனை முடிசூட்டிக்கொள்ளச் சொன்னாள். நடந்ததையறிந்த பரதன், தீயவளே! உன்னால் முறைமை அழிந்தது நான் இராமனை இப்போதே அழைத்து, வந்து முடிசூட்டுவேன். உன் மனப்படி நடவேன் என்று கடிந்துரைத்தான். அவன் மறுபடியும், நீ பெண்ணா, பேயா? இவ்விதமான கொடிய தீமை செய்தாயே? கோசலைக்குப் பிள்ளையைப் பிரிந்து பொறுக்க முடியாத துன்பத்தை உண்டுபண்ணி விட்டாய். உன் உயிரைக் கழுத்திற்கயிறிட்டாவது விட்டுவிடு என்று சீறினான். அப்போது சுமந்திரன் முதலிய அமைச்சர்கள் வந்தனர். அவர்களை நோக்கி அவன், நான் ஒரு பாவமும் அறியேன். என்னை இவள் கெடுத்துவிட்டாள் என்று கதறினான். இச்சத்தத்தைக் கேட்ட கோசலை சுமித்திரையுடன் பரதனைப் பார்க்கவந்தாள். பரதனும் சத்துருக்கனுடன் அவளைப் பார்க்கப் போய் வழியில் கண்டு பணிந்தான். கோசலை, பலநாளாக நினைத்திருந்த உன் எண்ணம் ஈடேறியது. கைகேயியும் பல சூழ்ச்சிகள் செய்து இந்நாட்டை உன்வசமாக்கினாள். இனி எதிரற்று ஆள்க. என் மகனைக் காட்டிற்கனுப்பியதால், அவள் என்ன பெற்றாள்? உன்னைப் பிரேதக்கிரியைகள் செய்யாமல் தசரதர் தடுத்திருக்கிறார். அவருடைய பிரேதத்தை எடுத்துக்கொண்டு இராமனிடம் போகிறேன். என்னை இராமனிடம் கொண்டுபோய் விடு என்று கொடிய சொற்களால் நிந்தித்தாள். பரதன் தன்மனம் துடித்து, அம்மா! எனக்கொன்றும் தெரியாது. நான் மனமாரக் குற்றம் செய்தால் எள்ளன்னம், பாயசம், ஆட்டின் மாமிசம் இவற்றைத் தேவதைகளுக்கும், தென்புலத்தாருக்கும் விருந்தினர்க்கும் ஊட்டாமல் எவன் உண்கிறானோ, அவனடையும் தீயகதியை நானடைவேன் என்று இவ்வாறு பல வஞ்சினம் கூறி அவளைத் தேற்றினான். கோசலை அவனை வாழ்த்திப் புலம்பினாள்.

வசிட்டன் தசரதனுடைய பிணத்தை விரைவிற் கொளுத்துமாறு ஏவ, பரதன் வருந்தி எண்ணெயிற்கிடந்த சவத்தை எடுத்துக் கொண்டுபோய்ச் சரயூ நதிக்கரையை யடைந்தான். அரசனுடைய மனைவிமார் தத்தம் ஊர்தி களிலேறி வந்தனர். பின் மனைவியரும், பிள்ளைகளும் கட்டையிற்கிடந்த சவத்தைச் சுற்றிவந்தனர். பரதன் எரி மூட்டினான். பின் அரசனுடைய மனைவியர் முதலிய எல்லோரும் ஊருக்குத் திரும்பினர். பத்து நாள்கள் கழிந்து பதினோராம் நாளில் புண்ணியாக வாசனம் நடந்தது. பன்னிரண்டாவது நாள் மாசிகம் முதலிய கிரியைகள் நடந்தன. தசரதனுக்குத் திருப்தியுண்டாவதற்குப் பரதன் பிராமணர்களுக்கு வேண்டுவன தந்தான். பதின்மூன்றாவது நாள் காலையில், சஞ்சயனம் செய்யப்பரதன் சுடு காட்டுக்குப்போய்த் தசரதனுடைய எலும்புகளையும். சாம்ப லையும் கண்டு புலம்பி, வசிட்டன் ஏவலால் அவற்றுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தான்.

அரண்மனை வந்தவுடன் சத்துருக்கன், அண்ணா! இராமனாவது அபவாதத்திற்குப் பயந்து காடேகினான். இலக்குவன் ஏன் மன்னனைக் கண்டித்து இராமனுக்கு முடிசூட்டியிருக்கக் கூடாது? என்று கூறினான். அப்போது கூனி அங்கேவரச் சத்துருக்கன் அவளைத் தரையில் தள்ளி அங்குமிங்கும் இழுத்துதைத்தான். அப்போது அவளை விடுவிக்கவந்த கைகேயியையும் அவன் நிந்தித்தான். பரதன் உடனே சத்துருக்கனைக் கண்டித்தான். மறுபடியும் சத்துருக்கன் உதைத்துத்தள்ள கைகால்கள் முறிந்து கீழே விழுந்த கூனி புலம்பினாள். கைகேயி அவளைத் தேற்றினாள்.
ஊரார் கூடிப் பரதனுக்கு முடி சூட்ட வேண்ட, அவன் மறுத்து இராமனை அழைத்துவரத்துணிந்து கங்கைக் கரைவரை வழியுண்டாக்கினான். வசிட்டன், குறுநிலை மன்னர், அமைசசர் முதலிய அனைவரையும் சபைகூட்டிப் பரதனை எதிர் கொண்டழைத்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளக் கூறினான். பரதன் அதைத் தீயசொல் என்று கருதியதால் வசிட்டனை நிந்தித்துச் சுமந்திரனை நோக்கிச் சேனைகளைப் புறப்படக் கட்டளையிட ஆணைதந்தான், எல்லோரும் புறப்பட்டனர். பரதன் தேரேறினான். கைகேயியும், சுமித்திரையும், சோசலையும் புறப்பட்டனர். எல்லோரும் கங்கையையடைந்து தங்கினர். இவ்வர லாற்றை ஆராய்வோம்.
                                         ---------------------"விடுதலை” 23-12-2014

Read more: http://viduthalai.in/page-3/93339.html#ixzz3MjKyKCvk

************************************************************************************

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.


அயோத்தியா காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் வசிட்டன் தசரதனுடைய பிணத்தை விரைவிற் கொளுத்துமாறு ஏவ, பரதன் வருந்தி எண்ணெயிற்கிடந்த சவத்தை எடுத்துக் கொண்டுபோய்ச் சரயூ நதிக்கரையை யடைந்தான். அரசனுடைய மனைவிமார் தத்தம் ஊர்தி களிலேறி வந்தனர். பின் மனைவியரும், பிள்ளைகளும் கட்டையிற்கிடந்த சவத்தைச் சுற்றிவந்தனர். பரதன் எரி மூட்டினான். பின் அரசனுடைய மனைவியர் முதலிய எல்லோரும் ஊருக்குத் திரும்பினர். பத்து நாள்கள் கழிந்து பதினோராம் நாளில் புண்ணியாக வாசனம் நடந்தது. பன்னிரண்டாவது நாள் மாசிகம் முதலிய கிரியைகள் நடந்தன. தசரதனுக்குத் திருப்தியுண்டாவதற்குப் பரதன் பிராமணர்களுக்கு வேண்டுவன தந்தான். பதின்மூன்றாவது நாள் காலையில், சஞ்சயனம் செய்யப்பரதன் சுடு காட்டுக்குப் போய்த் தசரதனுடைய எலும்புகளையும். சாம்பலையும் கண்டு புலம்பி, வசிட்டன் ஏவலால் அவற்றுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தான்.


அரண்மனை வந்தவுடன் சத்துருக்கன், அண்ணா! இராமனாவது அபவாதத்திற்குப் பயந்து காடேகினான். இலக்குவன் ஏன் மன்னனைக் கண்டித்து இராமனுக்கு முடிசூட்டியிருக்கக் கூடாது? என்று கூறினான். அப்போது கூனி அங்கேவரச் சத்துருக்கன் அவளைத் தரையில் தள்ளி அங்குமிங்கும் இழுத்துதைத்தான். அப்போது அவளை விடுவிக்கவந்த கைகேயியையும் அவன் நிந்தித்தான். பரதன் உடனே சத்துருக்கனைக் கண்டித்தான். மறுபடியும் சத்துருக்கன் உதைத்துத்தள்ள கைகால்கள் முறிந்து கீழே விழுந்த கூனி புலம்பினாள். கைகேயி அவளைத் தேற்றினாள்.
ஊரார் கூடிப் பரதனுக்கு முடி சூட்ட வேண்ட, அவன் மறுத்து இராமனை அழைத்துவரத்துணிந்து கங்கைக் கரைவரை வழியுண்டாக்கினான். வசிட்டன், குறுநிலை மன்னர், அமைசசர் முதலிய அனைவரையும் சபைகூட்டிப் பரதனை எதிர் கொண்டழைத்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளக் கூறினான். பரதன் அதைத் தீயசொல் என்று கருதியதால் வசிட்டனை நிந்தித்துச் சுமந்திரனை நோக்கிச் சேனைகளைப் புறப்படக் கட்டளையிட ஆணைதந்தான், எல்லோரும் புறப்பட்டனர். பரதன் தேரேறினான். கைகேயியும், சுமித்திரையும், சோசலையும் புறப்பட்டனர். எல்லோரும் கங்கையையடைந்து தங்கினர். இவ்வர லாற்றை ஆராய்வோம்.


பரதனிடம் தசரதன் இறந்ததைக் கூறாதிருக்குமாறு அவனை அழைத்துவரச் சென்றோரிடம் வசிட்டன் கட்டளையிடுகிறான். இதனால் தன் தந்தை முதலியோர் நலன் கேட்ட பரதனிடம் அவர்கள் பொய்புகல நேர்ந்தது. வசிட்டன்  அவ்வாறு உண்மையைக் கூறாதிருக்க ஆணை தந்த உண்மை. கேகய மன்னனுக்குத் தெரிந்திருந்தால், இராமனுக்கு முடிசூட்ட முயன்றமைக்கு வசிட்டன் முதலியோர் உடந்தையாயிருந்ததை அவன் அறிந்து அவர்களை நிந்திப்பான்.

             ----------------------------தொடரும்...”விடுதலை” 26-12-2014

21 comments:

தமிழ் ஓவியா said...

" உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் மாளவியா தலைமை வகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம் ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது. அதாவது 11-ஆம் தேதி இந்து பத்திரிகை வேண்டுமென்றே அயோக்கியதன மாய் அடியோடு மறைத்துவிட்டு உணர்ச்சியுள்ள வாதங்கள் நடந்தன என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

10-ஆம் தேதி சுயராஜ்ஜியாவில் மாளவியாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆட்சேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன என்றும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டாயிற்று என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.

12-ஆம் தேதி மித்திரனில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர் மானம் செய்திருப்பதாகவும் பிரீபிரஸ்சின் பேரால் போடப்பட்டிருக்கின்றது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும் திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்; எனக்கு சாதிரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிறிதவனையோ , மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்குச் சாஸ்திரம் பார்த்துதான் சொல்ல வேண்டுமென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜி நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவியாஜியை மூர்ச்சையடையச் செய்து விட்டது.

எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக் கூடும்."

- தந்தை பெரியார் , ( குடிஅரசு - தலையங்கம் - 12-05-1929

தமிழ் ஓவியா said...

மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.

அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.

- தந்தை பெரியார் ( விடுதலை - 23.7.1971 )

தமிழ் ஓவியா said...

மாளவியாஜீ

சேரன்மாதேவி குருகுல சம்பந்தமாக தூத்துக்குடி டி.ஆர். மகாதேவய்யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? """"பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாக உட்காரக்கூடாது"" என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜி அவர்கள் எந்த விதத்தில் திரு.மகாதேவய்யரை விட மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் - நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜி அவர்களோ, """"கீழ் ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது"" என்றும், """"அவர்களுக்கு வேறு இடம் வேறு கோயில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்"" என்றும் சொல்லுகிறார்.

தனது சமபந்தி பார்ப்பனரல்லாதவரிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அவரை ஜாதியை விட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி ஹிந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார். இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்ணிய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? என்றுகேட்கின்றோம். இன்றைய தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத் தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றவர். சுயராஜ்யம் வாங்கப்போகும் போது கூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்ததாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜ்யம் கிடைக்கும் என்பதை ‘தேசபக்தர்கள்’ கவனிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். இதைச் சொன்னால் நம்மை கெட்டவன் என்றும், பாவி என்றும் சொல்லுகின்றார்களேயொளிய அவர் அப்படிச் செய்வது நியாயமா? அல்லது சுயமரியாதைக்கேற்றதா? என்று யாரும் சிந்திப்பதில்லையென்றால் பிறகு நாம் என்னதான் செய்வது? இவர்களைப்பற்றி நாம் என்ன தான் நினைப்பது? நமது மக்களை எப்படித்தான் நினைப்பது? என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதைக்காக பாடுபடுவதாகச் சொல்லுகின்றவர்கள் இதையெல்லாம் எப்படி மறைத்து வைப்பது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

பண்டித மாளவியாஜி அவர்கள் நம்மெதிரில் சாப்பிடுவதால் நமக்குப் பசி அடங்கிவிடும் என்பதாகக் கருதி நாம் அதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவர் அப்படி மறைவாக சாப்பிடும் போது நம்மை என்னமாய்க் கருதி அப்படிச் சாப்பிடுகின்றார் என்பது தான் கவனிக்கத்தக்கது என்று சொல்லுகின்றோம்.

-----பெரியார் - குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1931

தமிழ் ஓவியா said...

காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாக வாழ முடியாது;மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாக இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்கு தகுதியுடையவன் ஆவான்.
பெரியார்--(26-1-1936"குடி அரசு" பக்கம்6

தமிழ் ஓவியா said...

" தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசீய ஒருமைப்பாட்டிற்கான வழியா?

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது.

கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை.

எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல.

நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன்.

இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.

நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம். "

- மாநிலங்களைவையில் அண்ணாவின்
முதல் முழக்கத்திலிருந்து .

தமிழ் ஓவியா said...

காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்


யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்


ஒகேனக்கல், டிச.28- ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங் களுக்குரிய பிரச்சார திட்டம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒகேனக்கல்லில் 28.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் இளம்பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, தனது 81ஆம் வயது வரை, கழக வீராங்கனையாக ஒளி விட்ட ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம் அவர்களின் மறை விற்கு தலைமை செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு, பிப்ரவரியில் தமிழர் உரிமைக் காப்பு, மார்ச்சில் மகளிர் புரட்சி, ஏப்ரலில் ஒடுக்கப் பட்டோர் உரிமைக் காப்பு, தமிழர் கலை-பண்பாட்டுப் புரட்சி, மே மாதத்தில் தொழிலாளர் உரிமைக் காப்பு (சமதர்மம் சமத்துவம் பரப்புரை), ஜூன் மாதத்தில் மொழி மானம் - உணர்வு உரிமைக்காப்பு, ஜூலையில் கல்விப் புரட்சி, ஆகஸ்ட் மாதத்தில் சமூகநீதி எழுச்சி, செப்டம்பரில் தமிழர் எழுச்சி-புரட்சி, அக்டோபரில் மூடநம்பிக்கை ஒழிப்பு, நவம்பரில் ஜாதி ஒழிப்புப் புரட்சி, டிசம்பரில் இன இழிவு ஒழிப்பு என்கிற தலைப்புகளில் திராவிடர் கழகம் தனது பிரச்சாரங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

குறிப்பாக வரும் ஜனவரி 30-ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அள வில் காந்தியார் படுகொலை செய்யப் பட்ட நாளில் மதவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

3. ஒவ்வோர் ஆண்டிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்டம்பர் 17) கொள்கை முழக்கத்துடன் பேரணி நடத்துவது என்றும் ஒவ்வொரு நினைவு நாளிலும் (டிசம்பர் 24) அமைதிப் பேரணி நடத் துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

4. தமிழ்நாடு முழுவதும் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டை எல்லா ஒன்றி யங்களிலும் நடத்துவது என் றும், அதனுடன் இணைந்து புத்தகச் சந்தைகளை நடத் துவது என்றும், ஒவ்வொரு மாநாட்டிலும் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத் துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. வட்டார மாநாடு களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர் களையும் அழைத்து நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

5. இதிகாசம், புராணம், பார்ப்பனப் புரட்டுகள், சாமியார்கள் பற்றி சிறப்பு அரங்கக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

6. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் மேற் கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற் றமும், உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 29.12.2014 முதல் தொடங்கப்பட உள்ள தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியைச் சேர்ந்த தோழர்களும் பங்கு பெறுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93533.html#ixzz3NCgJ0yI0

தமிழ் ஓவியா said...

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!


போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளர் களின் சங்கங்கள், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல நியாயமான கோரிக் கைகள் தொடர்பாக வேலை நிறுத்த அறிவிப்பு தந்துள்ள நிலையில் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் 27.12.2014-இல் கூட, உடன்பாடு ஏற்படாத நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, 29.12.2014-இல் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. வேலைநிறுத்தத் தில் போக்குவரத்து திராவிடர் தொழிலாளர் அணியைச் சார்ந்த பணியாளர்களும் பங்குபெற்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகத் தலைவரின் வழி காட்டுதல்படி இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

- சு.அறிவுக்கரசு
28.12.2014 தொழிலாளர் அணிச் செயலாளர்
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93538.html#ixzz3NCgY4EN7

தமிழ் ஓவியா said...

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர் முன்னணி கண்டனம்


மதுரை, டிச.28- இந்திய கிறிஸ்தவர் முன் னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: சங்பரிவாரங்களின் சங்க மத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்டாய மத மாற்றுத் தடைச்சட்டம் ஒன்றை அரங்கேற்ற முயல்வது கண்டனத்திற் குரியது. இம்முயற்சி, இந் திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. மதச் சிறு பான்மையினரை அச் சுறுத்தி, நசுக்கும் செய லாகும். ஆட்சியைப் பிடிக் குமுன், சமயச்சார்பற்ற கொள்கையை தூக்கிப் பிடிப்போம் என உறுதி யளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் தன் விருப்பம் போல் சமய அடிப் படை வாதிகளின் ஆலோசனை யில் கிறிஸ் தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை யினரின் சமய உரிமை களை மறுக்கவும், மறைக் கவும், அழிக்கவும் ஆவன செய்யும் அராஜக சட் டத்தை மத்தியில் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.

இது முற்றிலும் ஜனநாய கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகும். இத்த கையச் சூழலில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அழைக்கப்படும் பெரு மையை இழந்துவிடும். பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி என நம்பி வாக் களித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மைச் சமூகத்தினரை ஏமாற்றும் செயலாகும். மத உரிமை மனித உரிமையே! கட் டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே நாட் டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் போதுமானது என்ற நிலையில், இப் போது இதுபோன்ற புதிய சட்டங்கள் தேவை யில்லை. எனவே, கிறிஸ்த வர்களும், இஸ்லாமியர் களும் ஒன்றிணைந்து இத்தகைய அவசியமற்ற சட்டத்தை எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93540.html#ixzz3NCgxkmw0

தமிழ் ஓவியா said...

ஜி.எஸ்.டி வரி சில விவரங்கள்


நாட்டுல இருக்குற வரியெல்லாம் பத்தாதுன்னு இதென்னப்பா புதுசா ஜிஎஸ்டி வரி? பயப்பட வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில வரிகளை விதிக்கும் முறையை மாற்றி அமைக்கப்பட்ட வடிவம்தான் ஜிஎஸ்டி வரி.

எதுனா பொருள் வாங்கும்போது அதோட பேக்கிங் அட்டையில் எம்.ஆர்.பி maximum retail price என்று குறிப்பிட்டு அந்தப் பொருளின் விலை எழுதப்பட்டு இருக்கும். அதாவது அனைத்து வரிகளும் உட்பட அந்தப் பொருளின் விலை என்று அர்த்தம். ஆனால், விற்பனை வரி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுவதால் தமிழகத்தில் வாங்கும் கோல்கேட் பேஸ்டின் விலை ஆந்திராவில் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக் கும். இன்னும் புரியுற மாதிரி சொல்றதுன்னா தமிழ் நாட்டைவிட புதுச்சேரியில் உங்கள் அபிமான பொருள் விலை மலிவாகக் கிடைக்கும் காரணம் அதுதான்.

ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும். சரி இதன் சாதக பாதகங்கள் என்ன?

ஒரு வாட்ச் வாங்குறீங்கன்னு வச்சுக்குவோம். அந்த வாட்சோட சில பார்ட்ஸை ஒரு கம்பெனி உற்பத்தி செய்து வாட்ச்சை முழுமையாக தயாரிக்கும் நிறுவனத்துக்கு விற்கும். விற்கும்போது அந்த மூலப்பொருளை வரியோடு சேர்த்துதான் விற்கும்.

வாட்ச்சை முழுமையாகத் தயாரிக்கும் நிறுவனம்

மொத்த வியாபாரியிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரிசேர்த்து விற்கும். அவர் ரீடைலரிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரி சேர்த்து விற்பார். ரீடைலர் நம்மிடம் விற்கும்போதும் ஒரு விற்பனை வரி சேரும். இப்படி பல மட்டங்களில் பொருளின் உண்மை விலையோடு வரிகள் பல சேர்த்துதான் நம் கையில் கிடைக்கும். ஆனால், ஜிஎஸ்டி வரி என்பது வாடிக்கையாளரிடம் வரும்போது மட்டுமே விதிக்கப் படும். இதனால் பல்வேறு முனை வரிகள் குறைந்து பொருளின் விலை குறைவாக நமக்குக் கிடைக்கும்.

நாடு முழுவதும் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றும் தொல்லை ஒழியும். நிர்வாகச் செலவும் பெருமளவில் இதனால் குறையும். இப்படி நிர்வாகச் செலவும், வரிகள் குறைப்பு இதனால் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்கள் வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வணிகம் அதிகரிக்கும். எனவே வரும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் ( ஜிடிபி) 2 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம்னும் சொல்றாங்க.

ஆனால் பிரச்சனை என்னன்னா ஜிஎஸ்டி நுகர் வோர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படுவதால் எந்த மாநிலம் அதிகம் செலவு செய்யுதோ அங்கு தான் அதிக வரி கிடைக்கும். தமிழகம், மகாராஷ் டிரம், குஜராத் போன்ற உற்பத்தி மிகுந்த மாநிலங் களுக்கு வரி அதிகம் கிட்டாது. ஜிஎஸ்டியில் ஒரு பங்கு மத்திய அரசுக்கு இன்னொரு பங்கு மாநிலத் திற்கு. இந்த சிக்கலின் போக்கு எப்படி இருக்கும் என்பது நடைமுறைக்கு வந்த பிறகே தெரியும்.

ஆனால் எந்த வரிவிகிதமானாலும் கழடுவது என்னவோ நமது டவுசர்தான் என்பதைத் தெரிந்து கொள்ள எவரும் எந்தப் பொருளாதார சித்தாந்தமும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை

முகநூலிலிருந்து...

தகவல்: கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/93542.html#ixzz3NChJRbeQ

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் விளக்கம்

தருமபுரி, டிச.29_ திராவிடர் கழகத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்றுவரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாள் வகுப்புகள் டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் முதல் வகுப்புத் தொடங்கியது. தமிழர் தலைவர் அவர்கள் இந்துத்துவா என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

தமிழர் தலைவர்

இந்து மதத்தின் அடிப்படைகள், ஜாதியக் கொடுமைகள் போன்றவை குறித்தும், இந்துத்துவா என்பதன் பொருளையும் விளக்கங்களுடனும், ஆதாரத்துடனும் தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து பேராசிரியர் காளிமுத்து அவர்கள், ஆரியர் _ திராவிடர் _ தமிழர் என்ற தலைப்பில் திராவிடர் இனத்தின் வரலாறு, ஆரியர்கள், திராவிட மொழிகளை சிதைத்தது, பார்ப்பனப் பண்பாடுகளை திராவிட கலாச்சாரத்துடன் கலந்து, திரா விடர்களின் உண்மையான கலாச்சாரங்களை சீரழித்தது போன்ற வரலாற்று உண்மை களை எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, மூட நம்பிக்கை கள் ஒரு மோசடியே என்ற தலைப்பில், மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள் வகுப்பெடுத்தார். அவர் சாமியாடுதல், பேய், பில்லி, சூனிய மோசடிகள் குறித்து மருத்துவ ரீதியான உண்மைகளை எடுத்துரைத்தார்.

அவரது உரை புதிய தோழர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தது.

பகல் உணவிற்கு முன்னர், இறுதி வகுப்பாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் நமது திராவிட கலாச்சாரத்தின்மீது தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். பெயர் வைப்பதில் தொடங்கி, பண்டிகைகள், மொழி, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறை என பல்வேறு வகையிலும் பார்ப்பனியம் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சிதைத்து, தனது பண்பாட்டுப் படை யெடுப்பை திராவிட இனத்தின்மீதும், தமிழ் மொழியின்மீது திட்டமிட்டு தொடுத்ததை விரிவாக விளக்கிக் கூறினார்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதி ஒழிப்புபற்றி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். அதைத் தொடர்ந்து, கழகச் சொற்பொழி வாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் இயக்க மாவீரர்கள் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.

கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி, பெரியாரும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

விழிப்புணர்வுப் பாடல்கள்

அடுத்ததாக, தஞ்சை சம்பந்தம் அவர்கள், மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி பற்றி விளக்கினார். அதைத் தொடர்ந்து அன்பு கலைக் குழுவினரின் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக பயிற்சி பெறுபவர்களுக்குப் பெரியார் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/93607.html#ixzz3NHxL0RRq

தமிழ் ஓவியா said...

நோய்களை தீர்க்கும் கீரைகள்..


காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:

ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.

ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.

இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.

முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.

இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxbpaBP

தமிழ் ஓவியா said...

நலம் தரும் நல்லெண்ணெய்

தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப் படும் எண்ணெய் உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxhknX9

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.

75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.

78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.

79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

81. சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

தமிழ் ஓவியா said...

83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.

93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxoSNvo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ருந்து நாம் பெறும் பயன்கள், செல்வங்கள் அனைத்தும் இலட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும் என்கிறது ஒரு வார இதழ்.

அப்படியென்றால் குறுக்கு வழியில் சென்று பணம் குவிக்கிறார்களே, கள்ள நோட்டு அடித்து கோடீசுவரர்கள் ஆகிறார் களே - அவைகூட இலட்சுமி தேவியாரின் கடாட்சத் தால்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/93577.html#ixzz3NHz60JMu

தமிழ் ஓவியா said...

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்
குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி

புதுடில்லி, டிச.29_ சங் பரிவாரங்களின் மடத்தன மான, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கூச் சல் இந்தியாவிற்குப் பேரா பத்தை விளைவிக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி கூறியுள்ளார். ஞாயிறன்று ஜவகர் லால் நேரு பல்கலைகழத் தில் நடந்த இந்திய வர லாற்று ஆய்வு குழுமத்தின் (மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ் சிஷீஸீரீக்ஷீமீ) 75- ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வர லாற்று ஆய்வு மாணவர் களுக்கு மத்தியில் பேசிய அமித் அன்சாரி கூறிய தாவது:- இந்திய துணைக் கண்டம் என்பது பல் வேறு பகுதிமக்களின் தனித்தனி கலாச்சாரங் களை, பழக்கவழக்கங் களை உள்ளடக்கியது. இந்திய மனித வரலாறு குறித்து ஆய்வு நூல்களில், இந்தியாவில் பிரபலமான 4,635 இனக்குழுக்கள் உள்ளன. இது பிரபல மான இனக்குழுக்கள் மாத்திரமே, அட்டவ ணையில் இல்லாத பல் வேறு சிறிய இனக்குழுக் கள் உண்டு. இந்த இனக் குழுக்கள் நமது நாட்டின் அடையாளச் சின்ன மாகும்.

தற்போது பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியற்ற சூழல் உரு வாகிக்கொண்டு இருக் கிறது. பல்வேறு தேசிய இனக்குழுக்கள் அடங்கிய நாட்டில் வாழ்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு பகுதி யில் வாழும் மக்களி டையே பல்வேறு கலாச் சார மாறுபாடுகள் உள் ளன. நமது நாடு பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு கலாச்சாரங்கள் ஊடுருவிய போது நாம் அதை ஏற்றுக்கொண்டு பிரிவு பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்திய நாட்டில் வாழும் மக்களின் இந்த மன நிலைதான் நமது நாட் டின் அடையாளமாக இன் றளவும் உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. நாம் நமது வர லாற்றை தெளிவாகப் படிக்கவேண்டும். கலாச் சார மாற்றங்களினால் ஏற்பட்ட நன்மை தீமை களை அலசவேண்டும். தேவையற்றவைகளை தவிர்த்து நன்மைகளை எடுத்துக்கொண்டு வளர்ச் சிப் பாதையில் நாம் செல்லவேண்டும்.

வரலாறு மத நம்பிக் கையின் கீழ் என்றுமே எழுதப்படக்கூடாது, அதன் பாதையில் நாம் செல்லவும் கூடாது. மத நம்பிக்கையால் எழுப்பப் பட்ட வரலாறும், மனித நாகரிக வளர்ச்சியை மய் யமாகக் கொண்டு எழுதப் பட்ட வரலாறும் ஒன் றல்ல. முன்னது ஒருபால் மக்கள் அவர்களது நன் மைக்காக எழுதி வைப்பது. பின்னது தவறுகளைத் திருத்திக்கொள்ள எதிர் காலத்திற்கு ஒரு கருவூலச் செல்வமாகச் சேர்த்து வைப்பது. வரலாறு நமது தவறு களை திருத்திக் கொள்ள வும், அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் தவிர்க்கவும் நல்ல வழி காட்டும் காலக்கண்ணா டியாக இருக்கவேண்டும். அன்று நடந்த அதே தவறுகளை மீண்டும் செய்ய முனைதல் கூடாது. மேலும் நமது பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட நமது நாட்டை ஒரே கலாச்சாரம் என்ற குடையின்கீழ் கொண்டு வந்தால் அது எதிர்கால இந்தியாவிற்கே பேரா பத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கம் ஓங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந் துக்கள்தான் இருக்க வேண்டும். எந்த மதத் தவரானாலும் அவர் இந்துதான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார். மறைமுகமாக கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கும் போது குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கூற்று பலரின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93575.html#ixzz3NHzDB1y6

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.
_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/93579.html#ixzz3NHzQ9tPT

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல்லின் முடிவுகள்


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (ஒகேனக்கல், 28.12.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம் என்பது - குறிப்பாக காந்தியாரை இந்துவெறி பாசிசக் கும்பல் படுகொலை செய்ததை மய்யப்படுத்தியே! வேறு எந்தக் காலகட்டத் தையும்விட, இந்தக் காலகட்டத்தில் இது மிகமிக முக்கிய மானதாகும்.

1948 ஜனவரி 30 இல் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. படு கொலை செய்த நாதுராம் கோட்சே என்ற இந்துமத வெறியன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல்லப்பட்டபொழுது அதனை மறுத்தனர் - அப்படியென்றால் இந்த கோட்சே என்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுந்தபோது, அவன் இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று கைகாட்டினர்.

அதேநேரத்தில், நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேயும், அவன் மனைவியும் நாதுராம் கோட்சே பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். நாங்கள் பிறந்து வளர்ந்த தொட்டில் ஆர்.எஸ்.எஸ். என்றே அடித்துக் கூறினார்கள். கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுவது பச்சை கோழைத்தனம் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியைச் சாடினார்கள்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் என்ன தெரியுமா? கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல - இந்து மகா சபைக்காரர் என்று சொன்னார்கள் அல்லவா - இப்பொழுது அந்த இந்து மகாசபையை உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் போகிறதாம் - நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு. அதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.

அப்படிப் பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாள வியாவுக்குப் பாரத ரத்னா விருது அளித்தால், அதன் பொருள் என்ன?
காந்தியாரைக் கொன்றதற்காக அந்த அமைப்பை உரு வாக்கியவருக்கு, இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்படுகிறது என்றால், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் தராதரத்தை - பாசிச மதவெறித்தனத்தை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

இப்பொழுது எந்த அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் மதவெறிக் கை நீண்டுள்ளது தெரியுமா? காந்தியாரைப் படுகொலை செய்த அந்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியா வின் முக்கிய நகரங்களில் சிலை எழுப்பப் போகிறார்களாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்கூட கொலைகாரன் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்து மதவெறியர்களுக்கு, பாசிஸ்டு களுக்குப் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. அந்தத் தெம்பு என்பது மத்தியில் இந்துத்துவா கட்சியான பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் வந்ததால் வந்த ஒன்றே!

தமிழ் ஓவியா said...

இன்னும் ஒருபடி மேலே சென்று கோட்சேவுக்குக் கோவில் எழுப்புகிறார்களாம். அதுவும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட அதே ஜனவரி 30 இல் இது நடைபெறுமாம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பி.ஜே.பி.யில் உள்ள பிரமுகர் களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாகவே கலந்துகொள்கிறார்கள். நெருக்கிக் கேட்கும்போது, கோட்சேவுக்குச் சிலை எழுப்புவதற்கும், கோவில் கட்டு வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருபுறத்தில் சொன்னாலும், பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் இதில் ஈடுபட்டு வருவது குறித்துக் கேட்டால், நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கித் திணறுகிறார்கள். ஒவ் வொரு தொலைக்காட்சி விவாதத்திலும் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிகப் பரிதாபகரமான இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!

கோட்சேயின் சிலைகள் நிறுவப்படுவதற்கும், கோவில்கள் கட்டப்படுவதற்கும் இந்தப் பி.ஜே.பி. அரசு அனுமதிக்கிறதா? ஒரு கொலைக் குற்றவாளிக்குச் சிலை வைப்பதற்கும், கோவில் கட்டுவதற்கும் ஓர் அரசே அனுமதிக்குமேயானால், மறைமுக மாகக் காந்தியார் படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்றுதானே பொருள்படும்.

ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்திலும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான பொருள் கொடுக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேச மாட்டார் கள் என்று அதற்குப் பொருள் அல்ல. அந்தத் தலைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளாகும்.

திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாகும். நம் நாட்டு ஊடகங்களும், கலைகளுக்கான கருவிகளும் மக்கள் மத்தியில் மூடச் சரக்குகளை விநியோகம் செய்யும் கேடுகெட்ட வேலையில் இறங்கி இருப்பதால், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், முற்போக்குப் பிரச்சாரம் மிகவும் அதிகமாகத்தேவைப்படுகிறது.

அந்த வகையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது. கழகப் பொறுப் பாளர்கள் இதில் கவனம் செலுத்துவார்களாக.

அடுத்ததாக, ஒகேனக்கல் தலைமைச் செயற்குழு வற்புறுத்தி இருப்பது, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடாகும். நாடு தழுவிய அளவில் 2000 மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கை ஓங்கி நிற்கும் காவி மதவாதத் தடுப் புக்குத் தேவையான மூலிகை என்பது - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கச் சித்தாந்தம்தான்.

1925 இல் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் நாட்டுக்குத் தந்த அந்தச் சுயமரியாதை இயக்கத் தத்துவம்தான் - நாட்டை அச்சுறுத்தி வரும் இந்துத்துவா பாசிச நோயினை முறிக்கும் மூலிகையாகும்.

அதுவும் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியாவிற்கே தேவைப்படும் மகத்தான தலைவராகப் பேருரு எடுத்துள்ளார். அதற்கான முன் குரலைத் தமிழ்நாட்டில் உரத்த முறையில் எழுப்புவோம்!

இதன் எதிரொலி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

எழுச்சியுடன் செயல்படுவீர் தோழர்காள்!

Read more: http://viduthalai.in/page-2/93580.html#ixzz3NHzZeLQ7

தமிழ் ஓவியா said...

பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கனிவான கவனத்திற்கு..

இந்தியாவிலிருந்து 6 பெரிய நிறுவனங்கள் தான் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றில் 4 நிறுவனங்கள் இந்துக்களால் குறிப்பாக பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது.

1. அல்கபீர் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சதிஷ் & அதுல் அகர்வால்

2. அரேபியன் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சுனில் அகர்வால்

3. M.K.R புரோசன் புட் ஏற்றமதி பிரை.லிட்
உரிமையாளர்: மதன் அபோட்

4. P.M.L இன்டஸ்டிரீஸ் பிரை.லிட்
உரிமையாளர்: A.S.பிந்தரா

முதலில் இந்த நிறுவனங்களை தடை செய்ய தயாரா? முடியாது எனில் உங்கள் மாட்டரசியல் யாரை ஏமாற்ற??

நன்றி : மக்கள் உரிமை & வேந்தன். இல

தமிழ் ஓவியா said...

ஒரு கதை

நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வர வேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை.

பெரியார்--குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938