Search This Blog

15.12.14

பார்ப்பனர்கள் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - நாணயம் கெட்டவர்கள் -நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன்


பார்ப்பனர்கள் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - நாணயம் கெட்டவர்கள் அவர்கள்
கொள்கைக்கேடர்களைச் சாடும் ஒரே மனிதர் நம் வீரமணிதான்
நமது வீரமணி நெடுநாள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நீதிக்கட்சி ஆண்டு விழாவில் முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன்

சென்னை, டிச. 13- பார்ப்பனர்களின் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்து விடாதீர்கள் - அவர்கள் நாணயம் கெட்டவர்கள். இந்தக் காலகட்டத்தில் கொள்கையில் உறுதியாக நின்று, கொள்கையற்றவர்களைச் சாடும் ஒரே தலைவர் நமது வீரமணி தான். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார் உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் அவர்கள்.
20.11.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யக் கூட்டத்தில் நீதியரசர் கோகுலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நீ அரசியலுக்கு வரவேண்டாம்;  எங்களுக்காக வாதாடு!
இத்தகைய கூட்டத்தில் நான் கலந்துகொள்வது முதல் தடவை என்று கருதுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டங்களில் அந்தக் காலத்தில் இவர்களெல்லாம் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுது நான் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு நான் நீதித்துறைக்குச் சென்றுவிட்டேன். நீதித்துறையில் என்னுடைய கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னால், வழக்குரைஞர் தொழிலில் நான் இருந்தேன். அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று அண்ணா அவர்கள், கலைஞர் அவர்கள்  பலமுறை சொன்னார்கள். ஆனால், நான் சொன்னேன், அரசியல் எனக்குப் பிடிக்காத ஒன்று; ஆனால், சமுதாயத்தைப் பார்ப்பதிலே எனக்கு மிகவும் பிடிக்கும்; ஆகவே, என்னை விட்டுவிடுங்கள் நான் வழக்குரைஞராகவே இருக்கிறேன் என்று சொன்னேன். அப்பொழுது தஞ்சையில் வழக்குரைஞர்களை வைத்து அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் நான் இதே கருத்தினை சொன்னேன்; அதற்கு அண்ணா அவர்கள் சொன்னார்கள், நீ அரசிய லுக்கு வரவேண்டாம்; ஆனால், எங்கள் கட்டுகளையெல்லாம் சேர்த்து வைத்துக்கொள்; எங்களுக்காக வாதாடு என்று சொன்னார். அதை அப்பழுக்கின்றி, அந்த நாளில் இருந்து இந்த நாள்வரை செய்து வருகின்றவன் நான்.

இப்பொழுதெல்லாம் வழக்குரைஞர் தொழில் என்றால், நிறைவாக சம்பாதிக்க முடிகின்ற தொழில். ஆனால், படித்த வழக்குரைஞர்கள் சிலர்; படிக்காத வழக்குரைஞர் பலர். ஆகவே, அவர்களெல்லாம் அந்த சிலருக்கே வழக்கு களைக் கொடுத்துவிட்டு, அந்தக் கட்சிக்காரர்களிடத்தில் அதிகப் பணத்தை வசூலிக்கின்ற காலமாக இன்றைக்கு இருக்கின்றது.
எனக்காக, ஏதாவது வழக்குக்காகக் கொடுத்தேன் என்று எழுதியிருக்கின்றீர்களா? நான், வழக்குரைஞர் தொழிலை மட்டும் சொல்ல வில்லை; மருத்துவத் தொழிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆகவே, எல்லா தொழில்களிலும் இத்தகைய நிலைமைகள் உருவாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தையும், அந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், என்னிடத்தில் வழக்கைக் கொண்டு வருகிறவர்கள், பெரும் பணக்காரர் களாக இருக்க முடியாது. கழகத்தைச் சேர்ந்தவர்கள், சாதாரண மனிதர்கள் வழக்கைக் கொடுத்துவிட்டு, வழக் காடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஊருக்குச் செல்வதற்குப் பணம் இல்லை என்று கேட்டு வாங்கிய காலம் அந்தக் காலம். அவர்களுக்கெல்லாம் வாதாடி, எந்தவிதமான பணத்தையும் பெறாமல், என்னுடைய வாதத்தை ஆரம் பித்தவன் நான். அதோடு மட்டுமல்ல, சமீபத்தில் நம்முடைய மானமிகு கலைஞர் அவர்கள் பேசுகின்ற ஒரு கூட்டத்தி லேயும் இதைச் சொன்னேன். ஏனென்றால், கழகத்தில் அவர் பல ஆண்டுகளாக பொருளாளராக இருந்தார். எனக்காக, ஏதாவது வழக்குக்காகக் கொடுத்தேன் என்று எழுதியிருக்கின்றீர்களா? இருக்க முடியாது!
முதலில் பணத்தை வை என்று, வாதத்தை மறந்தவன் அல்ல நான்!

ஆகவே, நான் அந்தக் காலம் தொட்டு, கழகத்திற்காக வாதாடியதற்கு ஒரே காரணம், நம்முடைய சமுதாயம், திராவிட இனம் சிறப்பாக வாழவேண்டும் என்கிற எண்ணத்தில், நம்முடைய பங்கை, படித்ததினுடைய பலனை அவர்கள் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக, என்னுடைய வாதத்தை இலவசமாக கொடுத்தால் வாங்கிக் கொள்ளவேண்டும். என்னுடைய ஜூனியர்கள்கூட அருகில் வந்து, இந்த வழக்கிற்கு இவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் போலிருக்கிறதே என்று சொல்வார்கள். நீ எம்.எல்.ஜே.வைப் பார்; ஏ.ஏ.ஆரைப் பார், எந்த வழக்கு என்று பார், எந்தத் தீர்ப்புகள் இருக்கிறது என்று கவனி! பணத்தைப்பற்றி பிறகு கவனித்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கின்றேனே ஒழிய, முதலில் பணத்தை வை என்று வாதத்தை மறந்தவன் அல்ல நான்.
ஆகவே, அந்த நிலையில் வாழ்ந்து வந்த நான், இந்த நீதிக்கட்சியைப்பற்றி எனக்கு அதிகமாக தெரியும். ஆனால், நம்முடைய பாலு அவர்கள் பேசிய அளவிற்கு என்னால் பேச முடியாது. காரணம், அவர் அரசியலிலேயே இருக் கின்றவர். நான் சமுதாயத்தோடு அதிகம் தொடர்பு கொண் டவன்.
புத்தகங்களை எழுதிவிட்டால் மட்டும் போதாது!
நீங்கள் எவ்வளவுதான் பழைமையைப்பற்றி பேசினா லும், பண்பாட்டைப்பற்றி பேசினாலும் நம்முடைய கதி இன்றைக்கு என்ன என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நீங்கள் உணரவேண்டும். படித்துவிட்டு, புத்த கங்கள் எழுதிவிட்டால் மட்டும் போதாது; பாமரனுக்குப் போய்ச் சேருகிறதா என்பதில், சில தவறுகள் இருக்கின்றன. பாமரன் அதை அறிந்துகொண்டிருக்கின்றானா என்பது, எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.

நம்முடைய பண்பாடு இந்த அளவிற்கு இருக்கிறது என்றால், இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதைப்பற்றி நான் ஓரளவிற்கு அறிந்திருக்கின்றேன். நமக்கென்று ஒரு இனம்; நமக்கென்று ஒரு குணம்; நமக்கென்று ஒரு சமுதாயம்; நமக்கென்று ஒரு பண்பாடு அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. அது நம் உள்ளத்தைவிட்டு, சாதாரண பாமரன் உள்ளத்தை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. ஆகவேதான், நாம் இன்று இருக்கிறோம்; தமிழ் இன்று இருக்கிறது; பண்பாடு இன்று இருக்கிறது. அவையும் நீங்கிவிட்டால், இனி நாம் இருக்க முடியாது. அவை எல்லாம் நீங்கக்கூடாது என்பதற்காகத்தான், சமுதாயத்தை மட்டும் நினைக்கின்ற திராவிடர் கழகம்; சமுதாயம்தான் முக்கியம் என்று சொன்ன பெரியார்; சமுதாயத்தைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தால், நமக்கு நிச்சயமாக வெற்றி உண்டு என்று சொன்ன உங்களைப் போன்றவர்கள் நிரம்ப இருக்கின்ற காரணத்தினால்தான், இன்றைக்கும் திராவிட உணர்வு இருக்கிறது; இன்றைக்கும் தமிழன் வாழ்கிறான்; இன்றைக்கும் நாம் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம்.
மக்களுடைய மனதைத் தொட்டுப் பேசுகின்றவர்கள் யார் இருக்கின்றார்கள்?
பதவியைப் பிடித்தோம்; கட்சிகளை வளர்த்தோம். ஆனால், நாம் அதிலே வெற்றி பெற்றிருக்கிறோமா என்றால், வெற்றி பெறவில்லை. நான் இதனை சொல்லு கின்ற நேரத்தில், நீங்கள் எல்லாம், இவர் ஏதோ விரக்தியில் பேசுகிறார் என்று நினைக்கலாம். நீங்கள் இப்பொழுது பேசுகின்றீர்களே, நம்மை ஆளவந்துவிட்டார்கள், தமிழ் ஒழிந்துவிடும்; நம்மை அடக்க வந்து விட்டார்கள், நம் பண்பாடு குலைந்துவிடும் என்றெல்லாம் சொல்வதற்கு என்ன காரணம் என்பதை ஆழமாக எண்ணிப் பாருங்கள். உங்களுடைய பணி நிரம்ப இருக்கிறது என்பதை உணருங்கள். படித்த பெருமக்கள் பலர் இருக்கின்றார்கள். எடுத்து எழுதி, மக்களுக்குச் சொல்வதற்காக ஏராளமான பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களுடைய மனதைத் தொட்டுப் பேசுகின்றவர்கள் யார் இருக்கின்றார் கள்? அவர்களுக்காகத்தான் நான் பாடுபடுகின்றேன் என்று சொல்கின்றவர்கள் சிலர்தான் இருக்கின்றார்கள். பதவியும், பணமும், பட்டமும் அவர்களை இழுக்கின்றதே தவிர, பண்பாடும், திராவிடமும் அவர்களை இழுக்கவில்லை என்பதுதான் இன்றைய காலகட்டத்தினுடைய உண்மை என்று நீங்கள் உணரவேண்டும்.
நீதிக்கட்சியைப்பற்றி நாம் பேசுகின்றோம்; இன்றைக்கு அதற்கு வயது 98. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டைத் தொடப் போகிறது. இந்த நீதிக்கட்சி இப்பொழுது இருக்கிறதா? என்று சொன்னால், இன்றைக்குத் திராவிடர் கழகம் இல்லை என்றால், இந்த நீதிக்கட்சியின் பெயரே இன்றைக்குத் தெரியாது. அந்த அளவிற்கு, நம் முடைய இனத் தலைவராக, தமிழர் தலைவராக இருக் கின்ற வீரமணி அவர்கள் ஆற்றுகின்ற பணியை என்னால் அளந்து சொல்ல முடியாது.

நான் டி.ஆர்.பாலுவைப்பற்றி சொல்லுகின்றேன்,  சமுதாயத்திற்காக அவர் அந்தக் காலத்தில் உழைக்கின்ற  நாளிலிருந்து எனக்குத் தெரியும். இவருக்கு முன்பிருந்த திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர்களையெல்லாம், சென்னை செயலாளர்களையெல்லாம் எனக்குத் தெரியும். இவருடைய மாமனாரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு முன்பிருந்தவரையும் எனக்கு மிக நன்றாகத் தெரியும்.
பேரறிஞர் அண்ணாவை மட்டுமல்ல, பெரியாரையும் வரவழைத்த பெருமை எனக்குண்டு!


அப்பொழுதெல்லாம் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பொதுமக்கள், தமிழ், நம்முடைய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்ற அந்தப் பிரகடனம் இவைதான் எங்களுக்குத் தெரியுமே தவிர, வேறொன்றும் தெரியாது.

நான் மாநிலக் கல்லூரியில் படித்தேன்; அந்தக் கல்லூ ரியில் தமிழ் என்பதைப்பற்றியே பலருக்குத் தெரியாது. அவர்கள் எல்லாம் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து, பளிங்கு போன்ற காரில் உள்ளே நுழைந்து, பகட்டாக வாழ்ந்து, நாகரிகத்திலே உழன்று கொண்டிருந்தார்களே தவிர, நம்முடைய பண்பாட்டைப் பற்றி அறிந்தவர்கள் ஒருசிலர்தான் இருந்தார்கள். அங்கேயே தமிழ்க் கழகத்தை ஏற்படுத்தி, அதற்குச் செயலாளராக நான் இருந்து, பேரறிஞர் அண்ணாவை மட்டுமல்ல, பெரியாரையும் வரவழைத்த பெருமை எனக்குண்டு.
இவற்றையெல்லாம் செய்த காரணத்தினால்தான், இன்னும் சில இளைஞர்களின் உள்ளத்தில், அவர்களெல் லாம் இப்பொழுது பெரியவர்களாகி இருப்பார்கள். அவர் களின் உள்ளத்தில் அந்த உணர்வு இருக்கிறது. ஆகவே தான் நீதிக்கட்சிக்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள். அந்தக் காலத்து மனிதர்கள், நான் சில இளைஞர்களையும் இங்கு பார்க்கிறேன், அதற்காக நான் மிக்க மகிழ்ச்சிய டைகிறேன்.
நான் பெருமைக்காக சொல்லவில்லை; நம்முடைய வீரமணி இருக்கின்றார்களே, அவரைப்போல உழைப்பா ளியை நான் பார்த்ததில்லை. எத்தனையோ இடர்ப்பாடுகள், எத்தனையோ தொல்லைகள்; எத்தனையோ எதிர்ப்புகள், எந்தப் பட்டமும், பதவியும் எனக்கு வேண்டாம் என்ற நிலைமையில், சமுதாயத்திற்காக ஒரு ஏட்டையும், தன் வீட்டையும், இந்த நாட்டைக் காணுகின்ற கண்களையும் பெற்றிருக்கின்ற பெருந்தகை என்றே வீரமணி அவர்களை நான் கருதுகின்றேன்.
டி.ஆர்.பாலு அவர்களைப்பற்றி நான் எண்ணுகின்ற நேரத்தில், நான்கு வழிச் சாலைகளும், அழகான ரயில் பாதைகளையும், வடக்கே இருந்தாலும், தெற்கே இருந்தா லும் இரு சுற்றுதான் இந்தியா என்ற நல்ல உளவியலில் அருமையாக பணி செய்த சிறந்த ஒரு மத்திய அமைச்சராக இருந்தவர் பாலு அவர்கள்.
வீரமணி அவர்களுடைய வாதங்கள் நாட்டில் ஓரள வுக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், பாலு அவர்க ளின் வாதத்தினால், பாலு தோற்கத்தான் முடிந்ததே ஒழிய, அவர் வெற்றி பெற முடியவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நீங்கள் நன்றாக ஊன்றிக் கவனித்துப் பார்க்கவேண்டும். இதற்குக் காரணங்களை கண்டுபிடிக் காமல், நான் ஏதோ சொல்லிவிட்டேன் என்றால், அது போதாது.
இன்றைக்கு இருக்கின்ற உணர்வு எப்படி வந்தது? என்பதையே அவர்கள் அறியமாட்டார்கள்

இன்றைக்கு நம்முடைய நீதிக்கட்சியினுடைய தன்மைகளைப்பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னீர்கள். இது சமுதாயத்திற்குப் போய்ச் சேர்ந்ததா? என்பதைப்பற்றி எண்ணிப் பாருங்கள். நிச்சயமாக, சமுதாயத்தில் உள்ள இளைஞர்களுக்கும் சரி, நடுத்தர வகுப்பில் இருக்கின்றவர் களுக்கும் சரி, இன்றைக்கு இருக்கின்ற உணர்வு எப்படி வந்தது? என்பதையே அவர்கள் அறியமாட்டார்கள்.

அந்தக் காலத்தில் வழக்குரைஞர் தொழிலில் இருந்த வர்கள் பிராமணர்கள்; பிராமணர்கள் என்று மரியாதை யாகச் சொல்லவேண்டாம், பார்ப்பனர்கள். அவர்கள் சென்னை மயிலாப்பூரையும், திருவல்லிக்கேணியையும் அவர்களின் சொந்த இடமாக வைத்திருந்தார்கள். படிக்கத் தெரிகிறதோ, இல்லையோ, அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அதிகமான உறவு வைத்திருந்தார்கள். அவர்கள் எதை எடுத்துச் சொன்னாலும் வெற்றி பெறுவார்கள். நாம் கொண்டு போனால், அதற்கு அதிகமாக வாதாடி வெற்றி பெறவேண்டும். அவர்களுக்கு நல்ல பெயர் வந்த தெல்லாம், அவர்களுடைய திறமையால் அல்ல; அவர்கள் பழகிய முறையால் வந்தது.
Non Brahmin Association
அந்தக் காலகட்டங்களில் நாங்கள் எல்லாம் வழக் குரைஞர்களாக வந்த காலம். அதற்கு முன்பும் வழக் குரைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம், நம்மால் இது முடியாத காரியம் என்பதை உணர்ந்துதான், ஆரம்ப கட்டத்தில், சுப்பரமணியம், புருஷோத்தம நாயுடு என்கிற இளம் வழக்குரைஞர்கள், இவற்றையெல்லாம் மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காக, ‘‘Non Brahmin Association’’ என்று ஆரம்பித்தார்கள். இது வழக்குரைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு இவை ஓரளவிற்குத் தெரிந் திருந்தாலும், நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், ராமசாமி அவர்களுடைய எழுத்துகள். அழகாக எழுதி யிருக்கின்றார்கள். பெரிய பெரிய எழுத்தாளர்களின் கருத்துகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அழகாக இருக்கிறது, அருமையான கருத்துகள், அதனைச் சிறப்பாக நம்மவர்கள் படிக்கவேண்டும். நம்முடைய பழங்கால உணர்வுகளையெல்லாம் உணரவேண்டும். நாட்டு மக்கள் உணர்ந்தார்களா? உணர வைக்க முடிந்ததா? ஒரு விடுதலை! ஒரு வீரமணி போதாது? பத்தாயிரம் விடுதலை போன்ற இதழ்கள் நாட்டிற்கு வேண்டும்; வீரமணி போன்றவர்கள் பிரச்சாரம் செய்யவேண்டும்; தேர்தலுக்காக அல்ல; பட்டத்திற்கும், பதவிக்கும் மட்டுமல்ல. சமுதாயம், நம்முடைய சமுதாயமாக மாறவேண்டும் என்பதற்காகப் போரிடவேண்டும். அந்த நிலைமையைத்தான் தந்தை பெரியார் அவர்கள் உணர்த்தினார்கள்.

ஆகவேதான், இன்றைக்கும் தந்தை பெரியார் என்றால், நாமெல்லாம் அவரைப்பற்றி, தெய்வமாகக் கருதினால், அது வேறுவிதமாகப் போய்விடும். இதைப்போல ஒரு தந்தை நாட்டிற்கு எப்போது வரப் போகிறார்? என்கிற ஏக்கத்தில் தான் நாம் இருக்கிறோம். இதோடு மட்டுமல்ல, 1912 ஆம் ஆண்டு ‘‘Non Brahmin Officers’’ என்ற நிலைமையில், ஆங்கிலேயர் ஆண்ட காலங்களில் யாருமில்லை. பெரிய பதவிகள் என்றால், அது பிரிட்டிஷ்காரர்களுக்கு. அதை விட அடுத்த பதவி என்றால், அது பார்ப்பனர்களுக்கு. அதை விட கீழே இருக்கின்ற பதவிகள் என்றால், அவையெல்லாம் சூத்திரர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு.

Madras United League
1912 ஆம் ஆண்டு Madras United League என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதில் டாக்டர் நடேசனார் இருந்து பணியாற்றினார் என்பதை நான் படித்து உள்ளபடியே மகிழ்ந்தேன். இப்படியே வளர்ந்து வந்தது.
வளர்ந்து வந்த காலத்தில், அது பணக்காரர் என்கிற பட்டியலுக்காக வரவில்லை. உள்ளத்திலே உணர்வு உள்ளவர்கள் என்ற பட்டியலில் வந்தவர்கள்தான், தியாகராயர் செட்டியார், பனகல் அரசர், பொப்பிலி அரசர் ஆகியோர்.
இவர்களெல்லாம் அந்த அசோசியேசனில் இருக்கின்ற வர்கள். படித்துப் பட்டம் பெற்று வருகின்ற மாணவர்களை அறிமுகப்படுத்தினார்கள். அவர்களின்மூலமாக அந்த மாணவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தனர். இதற்காகப் பாடுபட்டவர் நடேச முதலியார் என்றால், அது மிகையாகாது.
Dravidian Home
அந்தக் காலத்திலேயே ஏழை மாணவர்கள், திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள், தள்ளி வைக்கப்பட்டவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் சென்னைக்கு வந்து படித் தால், அவர்களுக்கென்று ஒரு இடம் இருக்கவேண்டும் என் பதற்காக, Dravidian Home
என்று ஆரம்பித்தவர்கள்தான்
நம்முடைய மூதாதையர்கள்.
Home Rule என்ற இயக்கம் வந்த காலத்தில், அன்னிபெசன்ட் அவர்கள் அந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்கள். ஆனால், அந்த அம்மையார் தலைமை தாங்கியபொழுது, பிராமணர்களுக்கு உதவியாகவும், சமஸ்கிருதம் வரவேண்டும் என்று சொன்ன காரணத் தினால், அந்த ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்தார்கள்; அன்னிபெசன்ட் அம்மையாரையும் எதிர்த்தார்கள். அத்தகைய நிலைமைகளையெல்லாம், அன்றைக்கு இருந்த உணர்வு பெற்ற தமிழர்கள் செய்தார்கள்.
Non Brahmin Manifesto
1916 ஆம் ஆண்டு, The South Indian Liberal Federation ஆரம்பிக்கப்பட்டது. Non Brahmin Manifestoவை இந்த பெடரேஷன் ஏற்படுத்தியது. அந்த Non Brahmin Manifesto என்பதுதான், , magna karta என்று சொல்கிறார் களே, இங்கிலாந்தில், உருவைச் சாசனம் என்று - அதைக் கொண்டு வந்த பெருமை இந்த அசோசியேசனுக்கு இருந்தது. இப்படி, இந்த magna karta வை உருவாக்குகின்ற முறையில், நம்முடைய சமுதாயத்திற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை அந்த இயக்கம் உருவாக்கியது.

South Indian Liberal Federation Organise South Indian Peoples Association இந்த அசோசியேசன் மக்களு டைய அசோசியேசன் - இயக்கம் என்பதுதான், நீதிக்கட்சி யாக உருவாகியது. அந்த நீதிக்கட்சி பல மாநாடுகளை நடத்தியது. அந்த மாநாட்டிற்கு, பனகல் அரசர், பொப்பலி அரசர், தியாகராயர் செட்டியார் போன்றவர்கள் எல்லாம் வந்தார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்; ஒருமுறை அல்ல, மூன்று முறை ஆட்சிக்கு வந்தார்கள். நடுவில் ஒருமுறை தோல்வி அடைந்தார்கள். 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் இருந்தது. அப்பொழுது நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வென்றது.

1935 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் இருந்தது. அப் பொழுது நீதிக்கட்சி வென்றது. அவர்கள் வெற்றி பெற்ற காரணத்தினால்தான், தாழ்த்தப்பட்ட சமுதாயம் பெறவேண் டிய சலுகைகளையெல்லாம் அவர்கள் கொடுத்தார்கள். அதனைப்பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
நீதிக்கட்சி திராவிடர் கழகமாக
பெயர் மாற்றப்பட்டது
பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்; காங்கிரஸ் நம்முடைய தமிழகத்திற்காகவும், திராவிட இனத்திற்காகவும் போராட முடியாது என்பதை உணர்ந்தார். ஆகவேதான், 1925 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு விலகினார். 1938 ஆம் ஆண்டு, நீதிக்கட்சியினுடைய தலைவராக பெரியார் வந்தார். அதற்குப் பிறகு 1939 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் நீதிக்கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் Indian Liberal Federation Changed is name Dravidar Kazhagam.
ஆகவே, 1944 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுதான் திராவிடர் கழகம். அந்தத் திராவிடர் கழகம், மற்றவை மங்கிப் போனாலும், குறைந்து போனாலும், அது மங்காமல், தயங்காமல், தளராமல், தன்னுடைய கடமைகளையும், எடுத்துச் சொல்லுகின்ற போராட்டங்களையும், விடுக்கின்ற அந்த வினாக்களையும் சிறப்பாக செய்து வருபவர் வீரமணி என்று சொன்னால், அது மிகையாகாது.

இன்றைக்கு நீங்கள் விரல் விட்டுச் சொல்லுங்கள், இன் றைக்கு யார் அவ்வளவு தைரியமாகச் சொல்லுகின்றார்கள். எந்த விழாக்கள் வந்தாலும், அதற்கு முன்பு, அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தால், உதாரணமாக விநாயகர் சதுர்த்தி வருவதற்கு முன்னால், நம்முடைய விடுதலையில் என்ன கேள்வி கேட்பார்கள்; எப்பொழுதாவது ஒருமுறை இந்தப் பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிட்டிருப்பாரா? மானமுள்ள தமிழனே, தீபாவளி உனக்கு வேண்டுமா? இவற்றையெல்லாம் படிக்க படிக்க நான் உள்ளபடியே மகிழ்ந்தேன்.
வீரமணியை நினைக்கும்பொழுது நான் உள்ளபடியே பெருமையடைகிறேன்!
தெய்வம் உண்டா? இல்லையா? அது பெரிய பிரச்சினை. அதிலே நாம் நுழையவேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், தெய்வம் இருக்கிறது என்று சொல்பவர் களின் பித்தலாட்டங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள். இன்றுகூட, ஒரு சாமி யாரைப் பிடிப்பதற்காக எத்தனைப் பேர் மரணமடைந் திருக்கிறார்கள். இது தேவையா? அந்தத் தெய்வம் அவனையே காப்பாற்றவில்லை, பிறகு எவனை காப்பாற்றப் போகிறது? இப்படி எத்தனை பேர்? ஏதோ இயற்கையின் தன்மையினால் குணமடைந்தவர்கள் எல்லாம், அவரு டைய ஆசியினால், விபூதியால், மந்திரத்தினால் குண மடைந்தது என்று நினைத்து, பணத்தைக் கொடுத்துவிட்டு, பிறகு ஏமாந்தவர்கள் ஏராளமானோர். நூற்றுக்கு இரண்டு பேர் இயற்கையால் குணமடைந்து, 98 பேரை, அந்த இரண்டு பேர் செய்கின்ற பிரச்சாரம் ஈர்த்து விடுகிறது. இவற்றையெல்லாம் மிக தைரியமாக இன்று பேசக்கூடிய ஒரே மனிதன்; சமயத்திற்காக மாறிப் போகாமல் இருக்கின்ற ஒரே மனிதன்; இங்கே பேசிவிட்டு,  பின் விபூதியை நெற்றி யில் இட்டுக்கொண்டு, பாம்புப் புற்றைச் சுற்றிக்கொண்டு முட்டையும், பாலையும் ஊற்றுகின்ற மனிதர்கள் இருக்கின்ற காலத்தில், அத்தகைய மனிதர்களையெல்லாம் சாடுகின்ற ஒரே மனிதன் நம்முடைய வீரமணி என்று நினைக்கின்ற நேரத்தில், நான் உள்ளபடியே பெருமையடைகிறேன்.
திராவிடர் கழகம் நெடுநாள் வாழவேண்டும். வீரமணி பல நாள் வாழவேண்டும். பல்லாண்டு பல்லாண்டு என்று சொல்வது வைணவ சம்பிரதாயம் மட்டுமல்ல, நம்முடைய பழக்கமும்கூட. நீங்கள் பல ஆண்டு வாழுங்கள், வாழ்ந்து, சமுதாயத்திற்காகப் பணிபுரியுங்கள்.
இன்றைக்குச் சொல்லுகின்றேன், நாட்டில் பல தோல்வி களை பல கட்சிகள் சம்பாதிக்கின்றன. அதனாலேயே திராவிட உணர்வு போய்விட்டது என்று யாரும் கருத வேண்டாம்; தமிழ் உணர்வு அழிந்துவிட்டதா?  தூண்டுங் கள்; மறையாமல் காத்துக்கொள்ளுங்கள். அப்படி மறைக் கப்படாமல் இருப்பதற்குப் பாடுபடுகின்ற கட்சி என்று சொன் னால், அது திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்று சொன்னால், அது மிகையாகாது.
தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு
வீரமணி அவர்களுடையது!
நம்முடைய கலைஞரைப்பற்றி ஒரு சில வார்த்தை களைச் சொல்கிறேன்.
இன்றைக்கு சமுதாயத்தில் அறிவாளிகள் எத்தனை பேர் இருந்தாலும், அவரைப்போல அறிவாளியை நான் பார்த்த தில்லை. எந்தக் காரியமாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந்தாலும், சமுதாய சீர்திருத்தமாக இருந்தாலும், இலக்கி யத்தினுடைய மேம்பாடாக இருந்தாலும் அவற்றை எடுத்து விளக்கிச் சொல்லி, யாருக்கும் சவாலாக நிற்கின்ற ஒரே தலைவர் கலைஞர் அவர்கள்தான். ஆகவேதான், கலைஞர் அவர்கள், எப்பொழுதும் தாழ்ந்துபோவதும் கிடையாது; அல்லது தோற்றுப் போவதும் கிடையாது. என்றைக்கும் அவர் உள்ளத்தால் வெற்றி பெறுபவர்; உணர்வால் வெற்றி பெறுபவர்; அவருடைய பேச்சால் வெற்றி பெறுபவர். அவருடைய கருத்தை அசைக்காமல் இருக்கின்ற காரணத் தால், வெற்றி பெற்றுக்கொண்டு இருப்பவர். ஏதோ சில சம யங்கள், சூழ்நிலைகள், சில மயக்கங்கள் இதனால் பாடுபடுகின்ற அவரை, தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு வீரமணி அவர்களுடையது. எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பு டி.ஆர்.பாலு போன்ற உத்தமர்களுடையது. வரிந்து கட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கு உதவியாக நிற்கவேண்டிய பொறுப்பு தமிழர்களுடையது. அந்தத் தமிழர்களுக்கு உறுதியாக, அன்றைக்கு இருந்து இன்றைய வரை இருக்கின்ற அருமையான கட்சிதான் நீதிக்கட்சி.

நீதிக்கட்சியைப்பற்றி சொல்லும்பொழுது, மறைந்த சண்டே அப்சர்வர் பத்திரிகையின் ஆசிரியர் பாலசுப்பிர மணியத்தை நாம் மறக்க முடியாது. பார்ப்பனர்களைப்பற்றி சொல்கின்றீர்களே, நான்கு ஓட்டு, மூன்று ஓட்டு என்று சொல்கிறார்களே, அது உண்மையா? இல்லையா? என்று கேட்டார்கள்.

பாலசுப்பிரமணியத்திற்காக நாங்கள் எல்லாம் வேலை செய்வோம். சண்டே அப்சர்வர் பத்திரிகையை அவர் நடத்தினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவார்; இவரும் நிற்பார். வடசென்னையில் வாக்குகள் எண்ணப்படும். அப்பொழுது ஒரு கார் வைத்திருப்பார்; அதுவும் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் நின்று விடும். உள்ளே நாங்கள் உட்கார்ந் திருப்போம், அதனைத் தள்ளிக்கொண்டுதான் செல்வார்கள். நாங்கள் எல்லாம் வேலை செய்வோம்; அதற்காக எங் களுக்குப் பணம் கிடையாது. ஆனால், கட்சியைப் பாதுகாப் பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இருந் தார்கள்.
பார்ப்பனர்களின் பிரச்சாரத்தை நம்பிவிடாதீர்கள், நாணயமானவர்கள் அல்ல அவர்கள்!
அப்பொழுதெல்லாம் ஓட்டு எண்ணுவார்கள்; வீடு உள்ளவர்களுக்குத்தான் ஓட்டு என்று சொல்வார்கள். அங்கே 400 ஓட்டு, 500 ஓட்டு என்று சொல்வார்கள். அதுவே, மயிலாப்பூர் பக்கம் நின்றால், ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டுதான் விழும். இதுதான் ஜாதியினுடைய பிடிப்பு. இதுதான் பிராமணர்களுடைய அற்புதமான வேலை. காப்பதைப்போல, அழிப்பதுபோல செய்துவிட்டு, அவர்கள் செய்கின்ற தவறுகள் இருக்கிறதே, ஏராளமான தவறுகள். அவர்கள் செய்கின்ற பிரச்சாரங்கள் இருக்கின்றதே, நம்மை யெல்லாம் மயக்கும் பிரச்சாரங்கள். நம்பிவிடாதீர்கள், நாணயமானவர்கள் அல்ல அவர்கள். அடுத்து கெடுப்பவர் கள் என்று ஒரு இடம் இருந்தால், அது பிராமணர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் இருக்காது.
நம்மையெல்லாம் ஏதோ சொந்தமாகக் கொண்டாடு கிறார்கள், கட்டித் தழுவுகிறார்கள் என்று சொன்னார்கள். பேச முடியாமல், சொல்ல முடியாமல் அண்ணா சொன்னார், பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று.
ஆனால், அதனுடைய அர்த்தத்தை, விளக்கத்தை, இலக்கணத்தை அவர் விளக்கினார். எவன் ஒருவன் சுயநலக்காரனாக, எவன் ஒருவன் அடுத்து கெடுக்கிறானோ, எவன் ஒருவன் நன்றி கெட்டு வாழ்கின்றானோ, நல்லவர்களை வதைக்கின்றானோ, அவன்தான் பிராமணன் என்று அழுத்தந்திருத்தமாக சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இந்த நன்மைகளையெல்லாம், இந்தத் தத்துவங்களை யெல்லாம், இந்தக் குணங்களையெல்லாம் இன்றைக்கும் கட்டிக் காத்து வருவதுதான் நீதிக்கட்சி. நீதியைக் கைவிடா தீர்கள். நீதியை விடாமல் நீங்கள் வாழ்த்திக் கொண்டி ருங்கள், வளர்த்துக் கொண்டிருங்கள், இளைஞர்களை சேர்த்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன், வணக்கம்!
------------------------- இவ்வாறு நீதியரசர் கோகுலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார். --"விடுதலை”13-12-2014

15 comments:

தமிழ் ஓவியா said...

முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா எப்பொழுது மதமாற்றம்?


சங்பரிவாரின் உதிரிகள் மறு மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரச்சினை செய்வதை பிஜேபியின் தலைமை விரும்புவதாக இருந்தால், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா போன்ற முஸ்லிம்களையும், கட்சியின் சிறுபான்மை அமைப்பி லிருக்கும் சில கிறிஸ்துவர்களையும், சீக்கியர்களையும் முதலில் மறு மதமாற்றம் செய்யலாமே! அவர்களும் மகிழ்ச்சியாக மீடியாவுக்கு போஸ் கொடுப்பார்கள். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சரவை பொதுத் துறை நிறுவனத் தலைவர் பதவிகளைக் காட்டி இப்படி ஒரு முடிவை நோக்கி அவர்களை கவர்ந்திழுக்கலாமே!

- (முக நூலில் இருந்து: - விஜய் குரோவர்)

Read more: http://viduthalai.in/e-paper/92910.html#ixzz3LxpYaMl0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, ஒன்றான வழிபடும் முறை களை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன்தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன் றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்த தால் செவ்வாய்க்கிழமை யும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படு கிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழ மையும் சேர்ந்து வரும் நாளை சங்கடஹர சதுர்த்தி என்று மக்கள் வழிபட வேண்டுமாம்.

செவ்வாய்க் கிரகம் பூமிக்கு வந்து விநாயகரை நோக்கித் தவமிருந்ததா? 890 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள ஒரு கோள் விநாயகரை நோக்கித் தவமிருந்ததாம். செவ்வாய்க்கோள் என்ன இந்துக்களின் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமோ!

Read more: http://viduthalai.in/e-paper/92911.html#ixzz3Lxpiyzyz

தமிழ் ஓவியா said...

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சரமாரி கேள்விகள்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டி அய்) மூலம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் கூற முடியா மல் திருப்பதி தேவஸ்தான அதி காரிகள் திக்குமுக் காடி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலை யான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள், இதிகாசங்கள் தெரிவிக் கின்றன. இதனால் பக் தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கை களை குபேரனுக்கு வட்டி யாக செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை யில்தான் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோடிக் கணக் கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் சிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத் துக்கு மனு அனுப்பி வரு கின்றனர். ஏழுமலையான் தனது திருமண செலவுக் காக குபேரனிடம் எவ் வளவு கடன் வாங்கினார்? இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத் திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார்? மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத் தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் கிடைக்காவிட்டால் நீதி மன்றத்தை அணுகப் போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் இதே கேள்விகளை கேட்டு தேவஸ்தானத்துக்கு சமீபத் தில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ் தான அதிகாரிகள் கூறும் போது, புராண, இதிகாசங் களில் ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதாக கூறப்பட் டுள்ளது. ஆனால் சிலர் இதற்கு சாட்சியங்கள் தேவை என்றும், இது வரை தேவஸ்தானம் சார்பில் குபேரனுக்கு கட்டிய வட்டி குறித்து கணக்கு காட்ட வேண் டும் என்றும் ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் கோரி உள்ளனர். சுய விளம் பரத்துக்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92913.html#ixzz3LxpskF86

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய் யப்பட்ட கதைகளேயாகும். இவைகளை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும்.
(விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/92919.html#ixzz3Lxq7QGOT

தமிழ் ஓவியா said...

சிக்கலே மோடி அரசின் சாதனை!

- மு.வி.சோமசுந்தரம்

எரிமலை என்றவுடன், தீக்குழம்பும், அழிவும், அழுகுரலும் நம் சிந்தனைக்கு வரும். எரிமலைகளிலும் தரம் பிரித்துக் கூறப்படும் செயலற்றுப்போன எரிமலை (DEFUNCT) தூங்கும் எரிமலை (DORMANT) வெடிக்கும் தன்மைக் கொண்ட எரிமலை (ACTIVE) என்பவை அவை.

செழுமையையும், ஒற்றுமையையும், அமைதியையும், சீர்குலைக்கும் வகை யில் வெறுப்பு, வன்மை, மடமை என்ற தீக்குழம்பைத் தன் வயிற்றில் தக்க வைத்துக்கொண்டு தூங்கும் எரிமலை யாக இருக்கும் ஒரு அமைப்பைக் கண்டு அஞ்சவேண்டிய நிலையில் மனித நேய பற்றாளர்கள் உள்ளனர்.

குமுறும் தீக்குழம்பாக நாம் பார்க்க இருப்பது கள்ளிச்செடி என்ற ஆர். எஸ்.எஸ். என்ற அமைப்பின் ஒரு முள்ளாக உள்ள விசுவஇந்து பரிட்சத்தின் முதன்மைத் தலைவரான அசோக் ஷிங்காலின் உள்ளக்கிடக்கையும் நச்சு நினைப்பும்.

இந்திய துணைக்கண்டத்தின் இன் றைய பிரதமர் நநேரந்திர மோடி அவர்கள். அவர் இந்த பதவிக்கு வர வேண்டும் என்று ஏங்கிய தவமிருந்த நிலையை விளக்கும் வகையில் அசோக் ஷிங்கேல், அவுட்லுக் (Out Look)
9.9.2013 இதழில் அவர் அளித்த பேட்டியில் கூறி யுள்ள செய்தியாவது (தூங்கும் எரி மலையான மனநிலை)

அசோக் ஷிங்காலின் ஆசையும் ஆசியும்

இன்றைய நிலையில் எங்கள் மதக் குருக்களுக்கு, கோயில்களுக்கு, பசுக் களுக்கு, கங்கை நதிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு சங்கராச்சாரியார் மேல் கொலை குற்றம் உள்ளது. வேறு ஒருவர் மேல் பாலியல் குற்றம் உள்ளது. இவையெல்லாம் இந்துமதத்தைப் புரிந்து கொள்ளாத, மதிக்காத, நாத்திக, மதச் சார்பின்மைப் பற்றி பேசுகிற ஒரு கூட்டத் தினரால் ஏற்படும் பிரச்சனைகள். சோனியா காந்தி போன்ற வெளிநாட் டவர்கள் கூட இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். 1990க்குப் பிறகு இந்து மதத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படு வார்கள். எங்கள் மதகுருக்களையும், மதத் தையும் கொச்சைப்படுத்தும் அசம்கான் போன்றவர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புக வேண்டியவர்கள்.

ராமர் கோயில் கட்டுவதை ஆதரிப்ப வர்கள் புகழடைவார்கள். எதிர்ப்பவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள். எங்களுக்கு அரசியல் கட்சிகளால் பயன் ஏதும் இல்லை. உண்மையில் அரசியல் கட்சிகள்தான் எங்களால் பயன் பெறுவர்.

மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று கடவுளே விரும்புகிறார். கேதார் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குபோல 2002, கோத்ரா நிகழ்வு குஜராத்தில் ஏற்பட்ட பிறகு, இந்துக் களிடையே ஒரு வீரியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இந்துத்துவா வின் எழுச்சியைக் காணமுடியும். அதன் விளைவாக அரசியல் கட்சிகள், ராமர் கோயில் கட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டி யிருக்கும் (பி.ஜே.பி. அதன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி அது செயல்பட 2019 வரை கால அவ காசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார். ஏன் தமிழ்நாட்டில் அஇஅதிமுக கூட அதன் தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரத் திட்டம் தேவை பற்றி கூறியிருக்கிறது).

ஏற்பட்டிருக்கும் இந்துத்துவா அவை அரசியல் காரணத்துக்காகவோ, தேர் தலை கவனத்தில் கொண்டோ ஏற்பட வில்லை. இந்த முறை, இந்த நாட்டின் வெளிப்பாட்டை, ராமபக்தர்கள் தான் தீர்மானிக்க உள்ளார்கள். ராமர் கோயில் கட்டுவதில் ஈடுபாடு காட்டாதவர்களுக்கு பாதிப்புதான் வந்து சேரும். அத்த கையோர் ஆட்சி அதிகாரத்தின் வாசலைக்கூட மிதிக்க முடியாது. தேர்தல் முடிவு பலரை வியப்பிலாழ்த்தும் என்பது உறுதி.

அசோக் ஷிங்காலின் ஆசை, எதிர் பார்ப்பு கை கூடிவிட்டது. அவர் விருப்பப் படியும் கடவுள் விருப்பப்படியும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். பிறகு என்ன? பலா பலன் என்ன? பலப்பல கூறலாம். எனினும் தற்போதைய நிலை யில், இந்தியாடுடே (டிசம்பர் 3, 2014) இதழில் வந்துள்ள கணிப்பை (பக்கம் 10) பார்ப்போம்.

ஆக மோடியின் எழுச்சி புத்தாயிர மாண்டில் பின்னோக்கி பாய்ச்சலை மேற்கொண்டு கடந்த காலத்துடன் தொடர்பு கொள்வதற்கான முதல் வாய்ப் பாகும். அல்லது இன்னும் கடுமையாக சொல்வதானால் கடிகாரத்தையும் நாட் காட்டியையும் பின்னோக்கி திருப்புவ தாகும். முற்போக்கை பாராம்பரியத்துடன், ஆர்வத்தை புராணங்களுடன் குழப்பிக் கொள்ளும் மனநிலை. இது மிகவும் சிக்கலாகிறது.

இது கடவுள் கொடுத்த மோடியின் ஆட்சி, அனுபவி ராஜா அனுபவி! அடுத்து வரும் அதிர்ச்சி ஆபத்து மோடி அரசு அறிவிப்புக்கு காத்திருப்போம்.

Read more: http://viduthalai.in/page-2/92922.html#ixzz3LxqfQoVY

தமிழ் ஓவியா said...

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.15: ஓய்வூதியம் விதிகளின் அடிப்படையில் 1 ஆண் டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21இல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரண மடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரி சுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர் தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண் டுக்கு குறைவாக பணியாற்றியிருந்தா லும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு 4 வாரங் களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்கா ளருக்கு சுகாதாரத்துறை அனுப்ப வேண்டும். ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித் தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/92923.html#ixzz3Lxr2nNrB

தமிழ் ஓவியா said...

வயிற்றை சீரமைக்கும் சீரகம்


சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருள் சீரகம். சீரகம் ஒரு சிறுதானியப் பயிர். மருத்துவ குணமுள்ள மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத் தன்மைக்காக உணவுப்பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழ சாற்றுடன் சீரக குடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மசிய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாக வாய்ப்புள்ளது. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்துத் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி + சிறிது இஞ்சி இவைகளை லேசாக வறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் சீரகத்தில் உள்ளன.

Read more: http://viduthalai.in/page-7/92880.html#ixzz3LxsJfwCh

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருள்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

23. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் ஒரு மேசைக் கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 15 நிமிடங்களில் வலி பறந்துவிடும்.

24. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

25. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

26. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் ஒரு சிட்டிகை கலந்து இரண்டு வேளை சாப்பிட குணமாகும்.

27. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைத்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

28. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

29.. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

30. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

31. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து நான்கு சிட்டிகை எடுத்து இஞ்சி சாற்றுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

31. உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

32. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

33. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

34. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

35. புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

36. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை உணவை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.

37. கேரட் சாறும், சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

38. எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு குறையும்.

39. நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

40. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

41. கொழு கொழுவென குண்டாக இருப்பவருக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு கொடுக்கவேண்டும்.

42. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைத்துக் காணப்படுபவர்கள், உடல் நலம் தேறி எடை அதிகரிக்கும்.

43. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

44. தினமும் குடிநீரைக் காய்ச்சும்போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், செரிமானத்திற்கு உதவும், வாயுவை அகற்றும், மலச் சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

45. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

46. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

47. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

48. வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

49. வால்மிளகின் தூளை பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட கபம் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/92881.html#ixzz3LxseHQJm

தமிழ் ஓவியா said...

கல்யாணம்


மனிதன் மிருகப் பிராயத்தி லிருந்தபோது காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் மனிதன் தன் மூர்க்கத்தனத்தைக் காட்டப் பெண்ணை அடக்கியாள பெண்ணைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கல்யாணம். - (விடுதலை, 10.8.1968)

Read more: http://viduthalai.in/page-2/92932.html#ixzz3M4Lhr9pD

தமிழ் ஓவியா said...



பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

கட்டுப்பாடு என்கிற கவசத்தை அணிந்தால்-

காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்! துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத்தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், பகுத்தறிவை பயன்படுத்தாமை, மதவெறி - இவற்றையெல் லாம் ஒழிப்பதை தனது மூலக் கொள்கையாய் கொண்டுள்ள ஓர் அரசியல் கட்சி - திராவிடர் கழகத்தைத் தாய்க் கழகமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட நாகரிகம், பண்பாடு, மொழி இவைகளை வர லாற்றுப் பெருமையாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட தளம் உள்ள - பலமான வேர் உள்ள ஒரு சுயமரியாதை இயக்கத்தின் ஒரு கூறு.

யதார்த்தத்தை உணராதவர்கள் அல்ல நாம்!

வாக்கு வங்கியை எதிர்நோக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும், திராவிடர் கழகத்தைப்போல் - நூற்றுக்கு நூறு - அதே இலட்சியங்களை அப்படியே கூறி, அரசியல் கட்சியை - நடத்திட முடியாது என்ற யதார்த்தத்தைஉணராதவர்கள் அல்ல நாம்!

சில விஷம விமர்சனங்கள் திராவிடம் மாறிவிட்டது; தேய்ந்து விட்டது என்றெல்லாம் கூறிடுவது - சில பல மாற் றங்கள் அதன் கொள்கை அணுகுமுறைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கூறுவது, திராவிடர் இயக்கம் அரசியலில் பெற்ற வளர்ச்சியை அழிக்க எண்ணும் சூழ்ச்சிப் பிரச்சாரம் ஆகும்.

அரசியல் கட்சியாக உருவாகிவிட்டாலே, கொள்கை களில் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் என்பதால்தான் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் பதவி, அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்கவும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள்.

அண்ணாவின் கருத்துரை

என்றாலும், அவரது கொள்கை லட்சியங்களுக்கு அருகில் - நெருங்கி வந்த அரசியல் கட்சியாக மற்ற கட்சி களைவிட, திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்துள்ளது என்பது அதன் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் கீழ்க்காணும் கருத்துரை மூலம் தெளிவாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனைப் பேரும் யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள் வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ் வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும்.

தி.மு.க.வின் உறுப்பினர்கள் முக்கிய பொறுப்பாளர் களுக்கான பாலபாடம் இது!

தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கும், நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தி.மு.க.வின் பிரதான லட்சியம், சமூகச் சீர்திருத்தம் - அந்த லட்சியங்களை அடைய ஒரு வழி - தி.மு.க.வின் அரசியல் பங்கெடுப்பு. பதவிகள் அதற்கு ஒரு வாய்ப்பு அவ்வளவே!

ஆனால், மற்ற கட்சிகளுக்கு இந்த இலக்கு பெரும் பாலும் இருக்காது; இருந்தாலும், இருப்பதாகச் சொல்லப்பட் டாலும் அது ஊறுகாய், துவையல் போன்ற அளவேயாகும்.

தமிழ் ஓவியா said...

1967 இல் தி.மு.க. வெற்றி பெற்றபோது, அறிஞர் அண்ணா தெளிவுபடுத்திய ஒரு கருத்தும் தி.மு.க. தோழர்கள் உள்பட அனைவரும் புரிந்துகொண்டு, மனதில் இறுத்திட வேண்டிய முக்கிய கருத்தாகும்.

10 ஆண்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடித்துவிடவில்லை. இதற்குமுன் இதன் பாட்டன் 50 ஆண்டு வரலாறு பெற்ற நீதிக்கட்சி என்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் கொண்ட பார்ப்பனரல்லாதார் கட்சி - அதன் தொடர்ச்சி - புத்தெழுச்சிதான் தி.மு.க.வின் அரசியல் வெற்றி என்று செய்தியாளர்களுக்கு அண்ணா அவர்கள் கூறினார்.

இதற்கு நேர்மாறான கட்சிகள் - அரசியல் கட்சிகள் பல உள்ளன.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை!

எனவேதான், திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் - உணர்ந்து ஓதிட வேண்டும்.

வெறும் பதவிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல தி.மு.க.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணம் அல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை எல்லாம்!

இதைத்தான் மிக அழகாக மிகுந்த பொறுப்புணர்ச்சி யுடன் - தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலி ஏட்டில் (17.12.2014) விரிவான கடித அறிக்கையாக உடன் பிறப்புகளுக்கு எழுதியுள்ளார்.

வாசித்தால் மட்டும் போதாது - சுவாசிக்கவேண்டும்!

தாய்க்கழகமான திராவிடர் கழகம் அதனைப் பாராட்டி வரவேற்பதோடு, அதனை தி.மு.க.வினர் வாசித்தால் மட்டும் போதாது; சுவாசிக்கவேண்டும்; மனதில் பதிய வைத்துக்கொண்டு அசை போடவேண்டும். அதனை செயலில் காட்டவேண்டும்.

தி.மு.க.வின் பலம் என்பது ஆட்சியால் அளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; திராவிடர் இனத்தின் மீட்சியால் அளவிடப்படவேண்டிய காலக் கடமைகளில் ஒன்று!

தி.மு.க.விற்கு எதிராக ஒரு சிறு துரும்பு தென்பட்டாலும், அதைப் பெரும் தூணாக ஆக்கி மகிழும் பார்ப்பனீய ஊடகங்களுக்கு ஆத்திரம் ஏன்?

தி.மு.க.வை அழித்துவிட்டால், தங்களது மிகப்பெரிய இன எதிரி அரசியல் களத்தில் வேறு இருக்க முடியாது என்பதற்காகத்தான் - நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஊதி ஊதி ஒரு பெரும் பிரச்சாரப் போரையே தந்திர மூர்த்திகள் செய்கின்றனர்; காரணம், ஆரிய மாயை அப்படிப்பட்டது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் தெளிவு பெறாத பேதையர்கள். திராவிடத்தால் எழுந்தோம் - வாழ்ந்தோம் - வாழ்வோம் என்பவர்கள் தீரம் மிக்க வீரர்கள் என்பதை தி.மு.க. தனது பிரச்சார முழக்கமாக ஆக்கி திக்கெட்டும் கொண்டு செல்லவேண்டிய தருணம் இது!

திராவிடம் - ஆரியம் என்பது தனி மனித ரத்தப் பரிசோதனையால் அல்ல, பண்பாட்டின் அடையாளம்; தனித் தன்மை! அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக் களம்!

முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள்!

இன்றைய காலகட்டத்தில் தி.மு.க.வின் அரிய காவ லர்கள் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களும், அதன் லட்சியக் காவலர் இனமானப் பேராசிரியரும், அவர்களது ஆணைகளை செயல்படுத்திடும் செயல் வீரச் செம்மல் தளபதி ஸ்டாலின் ஆகிய மூவரும்தான்!

இம்மூவரும் முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள் தி.மு.க.வுக்கு.

இந்த எஃகு கோட்டைகளின் மூலபலச் சுவர்கள் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்ற அதிர முடியாத அஸ்திவாரங்கள் அந்தக் கோட்டைக்கு உண்டு.

எனவே, பதவிச் சலசலப்புகள் - பத்திரிகைப் புரளிகள், பகடிகள் - இதன் பலத்தை ஒருபோதும் பறித்துவிட முடியாது!

பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி, விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

ஜாதிவெறி - மதவெறி மற்றும் பல்வேறு சூழ்ச்சிப் பொறிகள் - தி.மு.க.வை வீழ்த்திவிடக் காணும் கனவுகள் கலைந்துவிடும் என்பது உறுதி.

கட்டுப்பாடு - கட்டுப்பாடு - கட்டுப்பாடு என்ற கவசத்தை அணிந்தால், தோழர்களே மற்றவரின் காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத் தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது!
சூளுரையுங்கள்!

சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

அதை வைத்தே இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

உரிமையுள்ள தாய்க்கழகத்தின்

கி.வீரமணி
பொறுப்பாளன்
திராவிடர் கழகம்

சென்னை
17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92977.html#ixzz3M9mCth00

தமிழ் ஓவியா said...

தி.மு.க. தோழர்களுக்கு கலைஞர் வேண்டுகோள்!


அண்ணா இருந்தபோது அவருடைய நோக்கத்தை எப்படி நாம் நிறைவேற்றியி ருக்கிறோமோ, அதைப்போல இன்றும் அண்ணா இருக்கிறார்; உயிரோடுதான் இருக்கிறார்; அணுப் பொழுதும் நம்மை விட்டு அகலாமல் நமது இதய உணர்வோடு ஒன்றிக் கலந் திருக்கிறார்; அவரை என்றைக்கும் நாம் மறப்பதில்லை; மறக்கவும் மாட்டோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்தத் தேர்தலில் கழகத்தினர் பெறுகின்ற வெற்றி தோல் விகளைப் பொறுத்து; இயக்கத்தின் தொடக்கக் காலத்தி லிருந்து நாம் ஏற்றுக்கொண்டுள்ள அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப் போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்த அய்ம்பெரும் முழக்கங்கள் நம்முடைய நெஞ்சத்தில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்க - கடமை உணர் வுக்கும், கண்ணிய நடவடிக்கைகளுக்கும், அண்ணா வழியை நெஞ்சாரப் பின்பற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக கட்டுப்பாடு குலையாமல் காக்கின்ற, பெரும் பணியில் நம் மையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரியாரின் வழியை மறவாமல் பாதுகாத்தும், நமது இயக்கத்தையும் பாதுகாத்து, நம்முடைய எதிர்கால திராவிட சந்ததியினரையும், தன்மான உணர்வோடு, தலைசிறந்து வாழ்ந்திட வழிவகுத்தும், நடைபோடுவதற்கு ஜனநாயக வழியில் நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பணி மேலும் மேலும் சிறந்தோங்க தொய்வின்றி தொடர்ந்து நடைபோட இந்த 14 ஆவது கழகப் பொதுத் தேர்தலும் பயன்படுமாக!
நன்றி: முரசொலி, 17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92978.html#ixzz3M9n4IFoP

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினை: சிவாவின் கேள்வியும் - அமைச்சரின் பதிலும்!


புதுடில்லி, டிச.17- தமிழ் உள்பட 22 மொழிகள் மத்திய அரசில் அலுவல் மொழியாக ஆக்கப்படுமா என்று (3.12.2014) திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள் ளார். அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இதுவரை இல்லை என்றும், அதற்கான கேள்விக்கே இடமில்லை என்றும் பதில் அளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

3.12.2014 நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி:

வினா எண் 1154
திருச்சி சிவா:

உள்துறை அமைச்சகம் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8ஆம் அட்டவணையில் உள்ள அனைத்து 22 இந்திய மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவித்துள்ளதா?

2. அதற்கான அறிவிப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கைகளுக்கான விளக்கங்கள்வேண்டும்.

3. அப்படி இல்லை என்றாலும் அதற் கான காரணத்தை அளிக்கவேண்டும்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அளித்த பதில்:

1. இதுவரை இல்லை.
2, 3. கேள்விக்கே இடமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/92980.html#ixzz3M9nEcqit

தமிழ் ஓவியா said...

அத்வானியின் அருள்வாக்கு!



மகாபாரதத்தை வீட்டில் வைத்திருந்தால் துரதிருஷ்டமான சம்பவம் நடைபெறும் என்று பழங்காலத்திலிருந்து நம் நாட்டில் ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது.

-டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பி.ஜே.பி. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (14.12.2014)

Read more: http://viduthalai.in/e-paper/92982.html#ixzz3M9nPLgEW

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் - ஒழுக்க ஈனம்


உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
_ (குடிஅரசு, 4.6.1949)

Read more: http://viduthalai.in/page-2/92987.html#ixzz3M9nmgL00