Search This Blog

28.12.14

ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல!-கி.வீரமணி


வீரத்தால் - விவேகத்தால் பார்ப்பனர்கள் வென்றது கிடையாது!
தந்திரத்தாலும், சூழ்ச்சியாலுமே வென்றனர்!
சேலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றுப் பேருரை


சென்னை, டிச. 11- வீரத்தால் - விவேகத்தால் பார்ப்பனர் கள் வென்றது கிடையாது! தந்திரத்தாலும், சூழ்ச்சியாலுமே வென்றனர்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
7.12.2014 அன்று மாலை சேலத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சிறப்பான ஒரு உறுதி எடுக்கின்ற நாளாக...

மிகுந்த எழுச்சியோடு இந்த சேலம் மாநகரில் இந்த சிறப்பான காலகட்டத்தில் சேலம் செயலாற்றுகின்ற காலமாக எப்படி மாறிக்கொண்டிருக்கிறது  என்பதை காட்டக்கூடிய வகையில், அற்புதமான ஒரு நிதியளிப்பு விழா, அதுவும் பெரியார் உலகம் அமைப்பதற்காக என்ற முறையில் இங்கு என்னை அழைத்து 30 லட்சம் ரூபாயை முதற்கட்டமாகத் திரட்டி இங்கே கொடுத்திருக்கின்ற ஒரு நிகழ்வாகவும், தமிழ்நாட்டில் புகக்கூடாதவைகள் புகுந்து கொண்டிருக்கின்றன. அகற்றப்படவேண்டியவைகள் குப்பைகள், கூளங்கள் மட்டுமல்ல, நம்மை ஒற்றுமைப்படுத்த முடியாது; மக்களைப் பேதப்படுத்தி, மக்களையெல்லாம் பிளவுபடுத்தி வரக்கூடிய தீய சக்திகளையும், மதவாத, மதவெறி சக்திகளையும், ஜாதிவெறி சக்திகளையும் அகற்றவேண்டும் என்ற முறையில், சிறப்பான ஒரு உறுதி எடுக்கின்ற நாளாக, அனைவருக்கும் சுயமரியாதை வேண்டும் என்ற சுயமரியாதை நாளாக நடைபெறக்கூடியது இந்த அற்புதமான நிகழ்ச்சியாகும்.

அனைத்துக் கட்சி நண்பர்களிலேயே பலரும் இங்கே வந்து வாழ்த்து சொன்னார்கள்; அவர்கள் சொன்ன வாழ்த்து எனக்கல்ல; நீங்கள் அறிவிக்கப் போகின்ற போராட்டத்தில் எங்களுக்கு அறவழிப்பட்ட ஆதரவு உண்டு; எங்கள் ஆதரவு உண்டு என்று சொல்லக்கூடிய வகையில்தான் அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில், அனைத்துக் கட்சி நண்பர்களுக்கும், ஒத்தக் கருத்துள்ளவர்களுக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலம், திருப்புமுனையாகக்கூட அமைந்திருக்கிறது

அருமைத் தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் தெரியாத செய்தியல்ல. இந்த சேலத்தில் மிகப்பெரிய அளவிற்கு எத்தனையோ அடக்கு முறைகள், எத்தனையோ எதிர்ப்புகள் இவைகளையெல் லாம் தாண்டி இந்த சேலம் எத்தனையோ வரலாற்றைப் படைத்திருக்கிறது. சேலம் திருப்புமுனையாகக் கூட அமைந்திருக்கிறது. இந்த சேலத்தில், 1971 ஆம் ஆண்டில், தேர்தலுக்கு முன்பாக தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு; அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். அப்பொழுது ஜனசங்கமாக இருந்த இன் றைய காவிக் கட்சியினர் பெரியார் அவர்கள்மீது செருப்பு வீசிய அந்த நிலை - இவைகளெல்லாம் நமக்கு மறக்க முடி யாதவை. ஆனால், அதனுடைய விளைவு என்னாயிற்று என்று சொன்னால், ராமனுக்குச் செருப்படியா? என்று இந்தியா முழுவதும் கேட்கக்கூடிய ஒரு மிகப்பெரிய வரலாற்றைத் தந்து, அதனால், திராவிட முன்னேற்றக் கழகமே மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது; துடைத்து வழித்தெறிய போகிறார்கள் என்று கருதிய நேரத்தில், இன உணர்வை யாராலும் இந்த மண்ணிலிருந்து அழித்துவிட முடியாது. தியாகராயர் தொட்டு, அதேபோல, டாக்டர் நடேசனார் தொட்டு, அதேபோல, டாக்டர் டி.எம். நாயரைப் பொறுத்து, பன்னீர்செல்வம் பொறுத்து, அறி வாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இடையறாது செய்த பணி, அறிஞர் அண்ணா செய்த பணி, கலைஞர் அவர்கள் அன்றைக்கு முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்ற உணர்வோடு அவர்களுக்கு அன்றைக்கு இந்த மாநகரத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு, பெரியாருடைய ஊர் வலத்தின் அருகிலேயேதான் அந்த சம்பவம் நடை பெற்றது.

ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல!
இங்கே உள்ளவர்களில், வயதான தோழர்களுக்கு நினைவிருக்கும், இங்கே எத்தனையோ தோழர்கள் கையைத் தூக்குகிறார்கள்; நல்ல வாய்ப்பாக அவர்கள் சாட்சியத்திற்கு இருக்கிறார்கள். அதற்காக மிகுந்த நன்றி! பக்கத்திலேதான் அந்த நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், என்ன ஆயிற்று? இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் புது வாழ்வு பெற முடியாது என்றெல்லாம் கரு திய நேரத்தில்தான், ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல. தந்தை பெரியாருக் குக் கருப்புக் கொடி காட்ட வந்த ஜனசங்கத்துக்காரர்கள் செருப்பை பெரியார்மீது வீசினார்கள். பெரியார் அவர்கள் அமர்ந்து வந்த வாகனம் நகர்ந்துவிட்டது. பிறகு நம்முடைய கருப்புச் சட்டைத் தோழர்கள்மீது விழுந்தது. அப்படி விழுந்த நிலையில், அந்த செருப்பை பிடித்தனர். எங்களு டைய தோழர்களுக்கு எது மெயின் சுவிட்ச் என்று தெரியும். அவர்கள் தனித்தனியே பொத்தான்களை அழுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். எதைச் செய்தால் சரியான பதில் கிடைக்கும் என்று நினைத்தார்களோ, அதனை அடிப் படையாகக் கொண்டுதான் பின்னாலே வந்த ராமன் உருவத்தை செருப்பால் அடித்தார்கள். அந்த செருப்பை வழங்கியது, ஜனசங்கத்துக்காரர்கள். அது திராவிடர் கழகத் துக்காரனுடைய செருப்பல்ல. வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில், கொஞ்சம் அமைதியாக செய்திகளை இருட்டடித்தார்கள். இரண்டு நாள் செய்திகள் சரியாக வரவில்லை. ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் வருகிறது.

எல்லாவற்றிலும் தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டார் கலைஞர்!
கலைஞர் அப்பொழுதுதான் முதல் முறையாக முதலமைச்சராக ஈராண்டு பதவியில் இருந்தார். 1971 ஆம் ஆண்டில், இந்திரா காந்தி அம்மையார் தேர்தலை அறி வித்தவுடன், அதில், தமிழ்நாட்டிற்கும் தேர்தலை அறிவித் தார்கள். இன்னொரு செய்தியை இங்கு சொல்லவேண்டும். எல்லாவற்றிலும் தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டார், அண்ணாவிற்குப் பிறகும்கூட, நம்முடைய அருமை கலைஞர் அவர்கள்.

தேர்தலை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்; நமக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது; இப்பொழுது தேர்தலை நடத்தலாமா? வேண்டாமா? என்று கலைஞர் அவர்கள் தந்தை பெரியாரின் அறிவுரையை கேட்டார்கள்; இதே சேலத்தில் இருந்துதான் அந்த அறிவுரை சென்றது. அந்த அடிப்படையில், சட்டமன்றத் தேர்தலை அவர்கள் அறி வித்தார்கள். அன்றைய தி.மு.க. ஆட்சிக்கு வேறு எதையும் சொல்ல முடியாது என்றவுடன், ஊழலா ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று அன்றைக்குப் போஸ்டர் அடித்தார்கள்.

இன்றைக்கு மீண்டும் காவி ஒரு பேருரு எடுத்துவிட்டது என்று நினைக்கிறார்களே, அவர்களுக்காக, உங்களுக்காக நண்பர்களே சொல்கிறோம், அந்த வரலாறு நடைபெற்ற பிறகு பிறந்த இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்; நம் முடைய இளைஞர்கள் அந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறோம்.
நீங்கள் உங்கள் அரசியலைப் பாருங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்
உடனடியாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அந்த சம்பவத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இதற்காகவே, மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், எந்த அமைச்சரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தந்தை பெரியார் அவர்கள் தெளிவாகச் சொல்லி, நாங்கள் சுதந்திரமாக இந்தப் பணியைச் செய்கிறோம். நீங்கள் ஓட்டு வாங்கக் கூடியவர்கள்; நீங்கள் உங்கள் அரசியலைப் பாருங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

வேறு வகையில் கலைஞர் ஆட்சியை வீழ்த்த முடியாது, திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியாது, திராடர் இயக்கத்தை அழிக்க முடியாது என்று நினைத்த காரணத் தினால்தான், இரண்டு, மூன்று நாள்கள் பொறுத்திருந்து, திட்டமிட்ட ஒரு காரியத்தை செய்தார்கள்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்வு - சேலத்துக்காரர் களுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் செய்த விளம்பரம் உலகத்திற்கே தெரிந்தது; அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
துக்ளக் இதழில் அட்டைப் படம் போட்டனர்

துக்ளக் இதழில், நண்பர் சோ (அய்யர்)  - அவர்தான் அட்டைப் படம் போட்டார்; தந்தை பெரியார் கையில் ஒரு செருப்பு; இன்னொரு கையில் ராமர் படத்தை வைத்துக் கொண்டு, ஓங்கி அடிப்பதுபோல, முகப்பு அட்டை துக்ளக் பத்திரிகையில். இன்னொரு பக்கம், கலைஞர் துண்டைப் போட்டுக்கொண்டு, பலே, பலே,  நன்றாக அடியுங்கள்! என்று சொல்வதைப்போல படத்தைப் போட்டார்கள்.

உண்மையில் கலைஞருக்கும், அந்த நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை. அதுதான் அப்பட்டமான உண்மை.


ராமனை செருப்பாலடித்த இவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று அவர்கள் கேட்டார்கள்.


ராஜகோபாலாச்சாரியாரும், பச்சைத் தமிழர் காமராசரும் இணைந்து தேர்தலில் நின்ற ஒரு கொடுமை அந்த வரலாற்றில் உண்டு. இளைஞர்கள் அதனைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
சேலம் தொகுதியில் இரண்டு ராமன்கள் நின்றார்கள். ஒரு ராமன் ஜெயராமன்; இன்னொரு ராமன் ராஜாராமன். ராமன்களும் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இனிமேல் தி.மு.க. அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். திராவிட முன்னேற்றக் கழக சகோதரர் கள்கூட, என்னய்யா, இப்படி செய்துவிட்டீர்கள்; எங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் ஆக்கிவிட்டீர்களே என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், இன உணர்வு பிரச்சாரம் மிகத் தீவிரமாக கனன்ற காரணத்தினால், ராஜகோபாலாச்சாரியார் இறங்கி, அவர் இந்த இனத்திற்கு எதிரான பிரச்சாரத்தை செய்தார்; அந்தக் கூட்டணியில் காமராசரும் இருந்தார். (பிறகு, இதுவரையில் செய்யாத தவறை நான் செய்துவிட்டேன் என்று காமராசர் மனம் வருந்தினார்).

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தேர்தல் முடிந்தது; அந்த கடைசி  ஒரு வாரத்தில்தான் மிகப்பெரிய மாறுதல் நடைபெற்றது. இன்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரம் அது. வாக்குப் பெட்டியை எண்ணத் தொடங் கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் இனி ஆட்சிக்கு வராது; அதனுடைய கதை முடிந்துவிட்டது என்றனர்


தேர்தலுக்கு முன்பு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138; அதற்குப் பிறகு ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று கேட்டு, அதையே கடைசி நேரத்தில் பெரிதாக ஆக்கினார்களே, எல்லோரும் நினைத்தார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் இனி ஆட்சிக்கு வராது; அதனுடைய கதை முடிந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இன உணர்வு வேகமாக வந்த காரணத்தினால், தி.மு.க.வினர் 184 இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு. சேலத்துக்காரர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்கள் என்பதற்கு இதுதான் நல்ல உதாரணமும்கூட.
சேலத்தில் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியதன் விளைவு எதிர்பாராமல் அமைந்ததுதான். ஆனால், பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதை அவர்கள் எடுத்ததினுடைய விளைவாக, இன உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. அதனுடைய விளைவாகத்தான் ஒரு வாரத்தில் தமிழ்நாடே மாறியது, மிகப்பரிய அளவில்!

வடநாட்டு பிளிட்ஸ் பத்திரிகை எழுதியது!

பிளிட்ஸ் பத்திரிகை, கரண்ட் ஆங்கில வார பத்திரி கைகள் இவைகளெல்லாம் பம்பாயிலிருந்து அன்றைக்கு வெளிவந்த வார ஏடுகளாகும். அதில் எழுதினார்கள், என்னய்யா, தமிழ்நாட்டை நினைத்தால் அதிசயமாக இருக்கிறதே! ராமனை செருப்பால் அடிப்பதா? என்று மிகப்பெரிய அளவிற்குப் பிரச்சினையாக ஆக்கினார்கள். இதுவே வடநாட்டில் நடைபெற்றிருந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலை வந்திருக்கும். தமிழ்நாட்டில் ராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு 138; செருப்பால் அடித்த பிறகு 184 என்று சொன்னால், இதிலிருந்து என்ன தெரிகிறது, ராமனை செருப்பால் அடித்துவிட்டு, தேர்தலில் நின்றால், தமிழ்நாட் டில் ஓட்டுகள் அதிகமாகக் கிடைக்கும்; இடங்கள் அதிகமா கக் கிடைக்கும் போலிருக்கிறதே என்று கரஞ்சியா எழுதினார்; எதற்காக இதனை சொல்கிறேன் என்றால், நண் பர்களே, யாரையும் கொச்சைப்படுத்துவதற்காக சொல்ல வில்லை. காவிக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம், மார் தட்டுகிறோம், தோள் தட்டுகிறோம், தொடை தட்டுகிறோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு நாங்கள் சொல்கிறோம்,    அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வு, கருப்புச் சட்டைகளுடைய குரலாக மட்டுமல்ல, எங்கள் இனத்தின் சார்பாக, எக்கட்சியில் இருந்தாலும், தமிழன் தமிழனாக இருப்பான்; திராவிடன் திராவிடனாக இருப்பான். நாங்கள் ஆடாவிட்டாலும், எங்கள் சதை ஆடும்; எங்கள் உணர்வு கள் மிகவேகமாக வெளிவரும், அதுதான் மிக முக்கியம்.

எத்தனை மோடிகள் வந்தாலும், எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும்....
தளபதி அண்ணன் அழகிரிகளுடைய உணர்வுகள் எங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. பட்டுக்கோட்டை தளபதி அழகிரி சொல்வார் அந்தக் காலத்தில், ஈட்டி இருக் கிறதே அது எட்டிய வரையில் பாயும்; பணம் இருக்கிறதே, அது பாதாளம் வரையிலும் பாயும்; ஆனால், எங்கள் பெரியார் ராமசாமியினுடைய கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற் கப்பாலும் பாயும் என்று சொல்வார்!
ஆகவே, அந்த உணர்வுகளை நீங்கள் எத்தனை மோடி கள் வந்தாலும், எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும், தமிழ்நாட்டை நீங்கள் மாற்றிவிட முடியாது. அமித்ஷா வரு கிறார், மோடி வருகிறார், தேடி வருகிறார், நாடி வருகிறார் ஓடி வருகிறார் என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். வாருங்கள், நிறைய வித்தைகளை செய்யுங்கள். ஆனால், பெரியார் இல்லையே என்று நினைத்துவிடாதீர்கள்.

அன்று பெரியார் ஒருவராக இருந்தார்; இன்றைக்குப் பெரியார் பலராகத் தெரிகிறார். எல்லாக் கட்சிகளிலும் பெரியார் இருக்கிறார். இந்த மண்ணிலே பெரியார் என்கிற அடித்தளம் இருக்கிறதே, அது எரிமலை. நீங்கள் நெருப்பை அணைக்கலாம்; எரிமலையை அணைக்க முடியுமா? அதுதான் மற்றவர்களுக்கு!

அரசியலிலே சில விஷயங்கள், அவர்கள் மாறினார்கள்; இவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள் என்று சொன்னார்கள். ஆனால், என்ன நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பாருங் கள், எங்களைப் பொறுத்தவரையில், இப்போது தோன்றியி ருக்கின்ற ஆபத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும்

எந்த அளவிற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொன்னால் நண்பர்களே, இப்பொழுது அவர்கள் நேரிடையாக இருக்கின்ற அந்தப் பணியை செய்யவில்லை. அந்த எச்சரிக்கையை சொல்லவேண்டுமானால், பெரியாரு டைய நுண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும். பெரியாருடைய கண்ணாடிதான், அந்த நுண்ணாடி. எனவே, அந்த நுண்ணாடியை வைத்துப் பார்த்தால்தான் உங்களுக்குச் சரியாகப் புரியும்.

நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பாருங்கள், நம்முடைய இனத்தினுடைய வாழ்வு, காலங்காலமாக அடிமைப்பட்டி ருந்த நாம், சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக, அடிமைகளாக - அதன் காரணமாக சிறுபான்மை சமுதாய மக்களாக இன்றைக்கு மாறியிருக்கின்ற நாமெல்லாம் யார்? உழைக்கின்ற மக்கள் அல்லவா! இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் அல்லவா! அப்படிப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு இப்பொழுது தந்திரங்களைக் கையாள்கிறார்கள்.
தந்திரமூர்த்தி போற்றி! போற்றி! அண்ணா அவர்கள் அழகாக சொன்னார்கள். சூழ்ச்சியினாலே, தந்திரத்தினாலே தான் ஆரியம் வென்றதாக வரலாறு உண்டே தவிர, வீரத் தால், விவேகத்தால் அவர்கள் ஒருபோதும் நம்மை வென்ற தாக வரலாறு கிடையாது. அதை எண்ணிப் பார்க்கவேண் டும். அந்த அடிப்படையை வைத்துப் பார்க்கின்ற நேரத்தில், நேரமின்மை காரணத்தினால், அவசர அவசரமாக சில செய்திகளை சொல்லுகிறேன்.

இங்கே புத்தகங்கள் விற்கப்படுகின்றன. மற்ற மற்ற மிக முக்கிய செய்திகளையெல்லாம் ஆதாரப்பூர்வமாகக் கொண்டு வந்திருக்கிறோம். சமஸ்கிருத மயத்தைப்பற்றி பல்வேறு அறிஞர்கள் கூறியதை, எப்படியெல்லாம் இந்த நாட்டில் ஆரம்ப காலத்தில் ஆரிய மயம், சமஸ்கிருத மயம் அது இன்றைக் கும் தொடரலாம் என்று நினைக்கிறார்களே, இந்தக் காலகட்டத்திலே, அதை வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்!
                      ---------------------------(தொடரும்)11-12-2014

Read more: http://viduthalai.in/page1/92665.html#ixzz3Ls8SNtWA
*************************************************************************************

திருக்குறளை ஹிந்து நூல் என்று கூறுகிறார் கோல்வால்கர்
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?
சேலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவரின் எச்சரிக்கை வினா!


சேலம், டிச. 12- திருக்குறளை ஹிந்து நூல் என்று கூறு கிறார் கோல்வால்கர் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


7.12.2014 அன்று மாலை சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் நாங்கள் இவ்வளவு ஓட்டு வாங்கிவிட்டோம் என்கிற காரணத்தினாலே, சமஸ்கிருதத்தைக் கட்டாயம் ஆக்குவோம் என்று சொல் கிறார் விசுவ இந்து பரிஷத் தலைவர் சிங்கால்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளில் ஒருவர்தான் அசோக்சிங்கால்!
இந்த சிங்கால் யார்? டிசம்பர் 6 ஆம் நாளை பாபர் மசூதி இடிப்பு நாள் என்று, அம்பேத்கருடைய நினைவு நாளையே மறைத்தார்களே! மறைப்பதற்காக பயன்படுத்துகிறார்களே என்று இங்கே உரையாற்றிய எங்கள் தோழர், தோழியர்கள் சொன்னார்களே!


உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், மிகத் தெளி வாக, அந்த நாளையே மாற்றிவிட்டீர்களே, பாபர் மசூதியை இடித்த நாள் என்று. அந்த பாபர் மசூதியை இடித்த குற்ற வாளிகளில் ஒருவர்தான் அசோக்சிங்கால். விசுவ இந்து பரிஷத்காரர்.


அந்த விசுவ இந்து பரிஷத்தினுடைய கொள்கை என்ன? அவர்களுடைய மாநாட்டில் தீர்மானமே போட்டிருக்கிறார் கள். அண்ணல் அம்பேத்கருடைய அரிய அறிவுரையைப் பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம்; மதச் சார்பின்மையை வலியுறுத்தக்கூடிய அரசியல் சட்டம்; சமதர்மத்தை வலியுறுத்தக்கூடிய அரசியல் சட்டம்; முழு உரிமை ஜனநாயகக் குடியரசு என்று சொல்லக்கூடிய அரசியல் சட்டம் - “Soverign, Socialist, Secular Democratic Reforms” Republic State  என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் - இந்த சட்டத்தையே மாற்றிவிட்டு, அரசியல் சட்ட மாக வேறொன்றை அறிவிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான மாகும்; அதனை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.


இளைஞர்களே, வெறும் இணைய தளத்தினை மட்டுமே பார்த்துவிட்டு, ஏமாந்து கொண்டிருக்கின்ற என்னருமை இளைஞர்களே, தோழர்களே, நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்! வரலாற்றிலே எவ்வளவு பெரிய பயங்கரங்கள் பதுங்கி யிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


மனுதர்மம் அரசியல் சட்டமாகவேண்டும். தீர்மானமே போட்டிருக்கிறார்கள். மனுதர்மம் இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக வரவேண்டும் என்று சொன்னால், அது என்ன மனுதர்மம்?


அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைப் படைப்ப தற்காக, தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று இந்த நான்கு ஜாதிகளையும் உண்டாக்கினார். அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை, அவரவர் கடைபிடிக்கவேண்டும்.
சூத்திரனுக்கு என்ன வேலை என்றால், படிக்க உரிமை யில்லை.  அடிமைச் சேவகம் செய்வதற்காக, மேல்வருணத் தார் மூன்று பேருக்கும் அவன் அடிமைச் சேவகம் செய் வதற்காக வந்திருக்கிறான் என்று எழுதப்பட்டது மனுதர்மம்.


சமஸ்கிருதம்தான் இந்தியா - இந்தியாதான் சமஸ்கிருதமாம்!


யாருக்காவது சந்தேகம் இருந்தால், இங்கே அசல் மனுதர்மம் புத்தகம் விற்கப்படுகிறது; அதனை வாங்கிப் படியுங்கள்! அந்த மனுதர்மத்தை மீண்டும் அரசியல் சட்ட மாக்கவேண்டும் என்று துடிக்கின்ற கூட்டம், அந்தக் கூட்டத் திற்குத் தலைவர் விசுவ இந்து பரிஷத்தினுடைய அகில இந்தியத் தலைவர் அசோக்சிங்கால். அவர் நேற்று சொல் கிறார், சமஸ்கிருதம்தான் இந்தியா - இந்தியாதான் சமஸ் கிருதம். இப்படி பல பேர் சொல்லி, கவிழ்ந்திருக்கிறார்கள் ஏற்கெனவே!


இந்தியா தான்  இந்திரா - இந்திரா தான் இந்தியா என்று நெருக்கடி காலத்தில் ஒருவர் சொல்லி, அதற்குப் பிறகு அவர் காணாமல் போய்விட்டார். யாரும், யாரையும் ஒரு நாட்டை உருவகப்படுத்தும்பொழுது, இந்தியா என்றால், சமஸ்கிருதமா? அட பரிதாபத்திற்குரிய தோழர்களே, அறிவு ஜீவிகளே, உங்களுக்காக நாங்கள் கேட்கிறோம், இந்த அர சியல் சட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கக்கூடிய எட் டாவது அட்டவணையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?


22 மொழிகளில்  மிகவும் அதிகமாகப் பேசப்படுவது, எழுதப்படுவது என்னவென்றால், சமஸ்கிருதம்தான், என்றா இருக்கிறது?

ஏதோ தயவு தாட்சண்யத்திற்காக 22 மொழிகளில் சமஸ்கிருதத்தையும் சேர்த்திருக்கிறான். அவ்வளவுதானே தவிர, 22 மொழிகளில் சமஸ்கிருதத்தைப் பேசக்கூடியவர் கள் கிடையாது; எழுதக் கூடியவர்கள் ஒருசிலரே. அதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆரியரிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது; வெள்ளைக்காரனால்Made Over செய்யப்பட்ட நாள் என்ற காரணத்திற்காக அந்தச் சூழ்நிலை வந்திருக்கிறது. ஆகவே, அந்த சமஸ்கிருதம்தான் என்று சொல்கிறீர்களே, அப்படியானால், மற்றவர்களுடைய உரிமைகளை நீங்கள் மதிக்கிறீர்களா? அரசியல் சட்டத்தை நீங்கள் மதிக்கிறீர்களா? அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் செய்கிறார்களே, அதன் பொருள் என்ன?


தமிழ்நாட்டில், ஆறு மாதங்களில் தலைகீழாக மாறிவிட்டது!


அதுமட்டுமல்ல, நண்பர்களே, இப்படியெல்லாம் அவர்கள் சொல்வது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மிகவும் தந்திரமான பேச்சுகள்; அதுவும், தமிழ்நாட்டை எப்படி யாவது அவர்கள் காவி மயமாக்கிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். மோடி வித்தையெல்லாம் அவர்கள் இங்கு செய்து பார்த்தார்கள். இன்னுங்கேட்டால், எங்கள் பரிதாபத்திற்குரிய சகோதரர்கள் சில பேர், அவர்களுக்குக் கைகொடுக்கத் தேர்தல் நேரத்தில் சென்றார்கள். அது பற்றி எங்களுக்கு இன்னமும் வருத்தம் உண்டு. ஆனால், நிச்சயமாக, கெட்ட குமாரன் திரும்பி வந்த கதை நாட்டிலே உண்டு. அப்படித் திரும்பி வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதிலே எங்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
இன்றைக்குக்கூட என்ன? ஆறு மாதத்திலே தமிழ் நாட்டிலே காலூன்றுவோம், காலூன்றுவோம் அதற்காக திட்டமிடுவோம் என்று சொல்கிறீர்களே, டில்லியிலிருந்து வரக்கூடிய ஒரு அரசியல் ஏடு எழுதியிருக்கிறது. ‘‘New Post’’ என்ற அது பொதுவான அரசியல் ஆய்வு ஏடாகும். அதில், தமிழ்நாட்டிலே இவர்கள் சென்று காலூன்ற வேண் டும் என்பதற்காக, கஜகர்ணம் போடுகிறார்கள்; புரிகிறது. ஆனால், ஆறு மாதத்திற்கு முன்னால், மோடியைப்பற்றி இருந்த அபிப்பிராயமும், மோடிக்குக் கிடைத்த ஆதரவும், தமிழ்நாட்டில், ஆறு மாதங்களில் தலைகீழாக மாறிவிட்டது. யார் யார் அவரோடு போனார்களோ, அவர்களெல்லாம் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது.


எங்கள் சகோதரர் வைகோ; இன்னமும் அவர் எங்கள் சகோதரர்தான்!


மிகப்பெரிய அளவிற்கு, பிரச்சார பீரங்கியாக அவர் களுக்குக் கிடைத்தது யார்? எங்கள் சகோதரர் வைகோ; இன்னமும் அவர் எங்கள் சகோதரர்தான். நாங்கள் பிரிந் திருந்தாலும், நாங்கள் கொள்கை ரத்த உறவுகள்; எங்களை யாராலும் அந்த வகையிலே மாற்றிவிட முடியாது. நீதிமன்றத்திற்குப் போய் சொல்ல முடியுமா? அண்ணன், தம்பி இல்லை என்று. அதேபோலத்தான் கலைஞர்; அதே போலத்தான் இந்த சூழ்நிலை. நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது, இவர்தானே மோடியை மிகப்பெரிய அளவிற்கு தூக்கிப் பிடித்தார். மோடியை அப்படி கட்டித் தழுவிக் கொண்டாரே! இன் றைக்கு அதே மோடி, யாரோ ஒரு அனாமதேயக்கார காரைக் குடி பார்ப்பான், காரைக்குடியிலேகூட கட்சியில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்றிருக்கின்ற ஒரு ஆள், நம்மு டைய வைகோவை பார்த்து மிரட்டலாகப்பேசக்கூடிய துணிவு எப்படி வந்தது? அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமா? நாங்கள்தான் அதனைத் தட்டிக் கேட்டோம்.
வைகோ அவர்கள், அது பரவாயில்லை, அது போகட் டும் என்று அதனை அலட்சியப்படுத்தினார். அவருக்கு அது சரி! ஆனால், எங்களுக்கு, இந்த உணர்வு என்று நினைக்கும்பொழுது, தான் ஆடாவிட்டாலும் தனது சதை ஆடும் என்பதுபோல.


இப்பொழுது நினைத்துப் பாருங்கள் அவர்களுடைய தந்திரங்களை, அவர்கள் ஒரு பக்கத்தில் சுப்பிரமணிய சாமியை விட்டுப் பேச வைப்பது; இன்னொரு பக்கத்தில் ராஜாக்கள் குரைப்பது; அதேநேரத்தில், இன்னொரு தலைவர், இன்னமும் வைகோ எங்களோடுதான் இருக் கிறார் என்று அதை அவர் சொல்வதற்கு என்ன அவசியம்? ஆடு கிறது, பூகம்பம் வருகிறது, அதுதான்!
என் வழி தனி வழியாக இருக்கப் போகிறது என்று அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்


அதேபோல, டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி யினுடைய தலைவர், அவர் அங்கே சென்றார், ஒரு இடத்திலே வென்றார், இப்பொழுது அவர் விமர்சிக்கின்ற நேரத்திலே, ஆகா, நீங்கள் விமர்சிக்கலாமா என்றார்கள். அவர் உடனே, யாரும் விமர்சிக்கலாம் என்று தெளிவாகச் சொல்லி, என் வழி தனி வழியாக இருக்கப் போகிறது என்று அவர் அறிவித்தார்.


எனவே, உங்களோடு இருக்கக்கூடியவர்கள் யார்? கேப்டன் விஜயகாந்த் என்று சொல்வீர்கள். கேப்டன் எப்பொழுதுமே மக்களோடு கூட்டு சேர்வாரே தவிர, உங்க ளோடு கூட்டுச் சேர்ந்ததாக வரலாறு கிடையாது. எனவே, மக்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தெரியும். அதுவரையில், எந்தப் பக்கம் என்று, அவரே முடிவு செய்ய முடியாது. இதுதான் அவருடைய தனித் தன்மையான அரசியல்!


இந்தக் கட்சிகளின் பெயர்களை எடுத்துப் பார்த்தீர்களே யானால், திராவிடர் கழகம் என்கிற வார்த்தை அதனுள் இருக்கும்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்; தேசிய முற்போக்கு திராவிட கழகம்; திராவிட முன்னேற்றக் கழகம்; இன்னுங்கேட்டால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அண்ணாவை பொம்மையாக, முத்திரையாகப் போட்ட இடத்திலும் கூட திராவிடர் கழகம்  இருக்கும். அத னாலேதான், நாங்கள் பல நேரங்களில், திராவிடர் கழகத் தைப் பரப்புவதைவிட, பாதுகாப்பதற்கு ஆயத்தமாக வேண் டும் என்று சொல்லவேண்டிய நிலையிலும் இருக்கிறோம்.


ஆகவே, நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்க வேண்டும் தோழர்களே, தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னால், உங்களோடு யார் யார் இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் புரிந்துவிட்டதே! சரக்கு என்னவென்று தெளிவாகத் தெரிந்துவிட்டதே!  இவர் வந்தால் ஈழப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவார்! இவர் வந்தால், காவிரிப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவார்! இவர் வந்தால், உடனே அதைச் செய்வார், இதைச் செய்வார் என்று, 202 வியாதிக்கும் ஒரே மருந்து என்று சொல்லி, மருந்து விற்கக்கூடிய, தாயத்து விற்கக்கூடியவர்களைப் போல பலர் சொன்னார்கள்; ஆனால், இப்பொழுது ஆறே மாதத்தில் புரிந்துகொண்டார்கள். தமிழ்நாட்டிலே அவர்க ளோடு யார், யார் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தார்களோ, அவர்கள் இப்பொழுது இல்லை. இப்படி சொல்வது வீரமணி அல்ல; டில்லியிலிருந்து வரக்கூடிய ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரையாளர்.

திடீரென்று அவர்களுக்கு
இராஜேந்திர சோழன்மீது ஒரு காதல்!

ஆகவேதான், அவர்கள் தந்திரங்களைச் செய்கிறார்கள். நேரிடையாக வர முடியாது என்று சொன்னவுடன், இப் பொழுது தந்திரங்களைச் செய்கிறார்கள். அது என்ன தந் திரம்? திடீரென்று அவர்களுக்கு இராஜேந்திர சோழன்மீது ஒரு காதல்.


இராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா வாம். இராஜேந்திர சோழன் கப்பற்படை வைத்தானாம்; இப்பொழுதுதான் தெரிகிறது இவர்களுக்கு! இதற்கு முன்பு தெரியவில்லை.


நாங்கள் சொன்னோம், இருப்பதிலேயே உருப்படியான காரியம் செய்த ஒரு சோழன் என்று சொன்னால், அவன் கரிகால் பெருவளத்தானே தவிர, கல்லணை கட்டி விவசாயிகளுக்கு வாழ்வளித்தவனே தவிர, மற்ற ராஜாக்கள் எல்லாம், பல்குடுமி பல்யாக சாலை
முதுகுடுமி பெருவழுதிகள்தான்!


அவ்வளவுதான். இப்படியெல்லாம் ராஜாக்கள் எல்லாம் மண்டியிட்டார்கள். ராஜராஜன் எந்த வகையிலும் தமிழர் களுக்குப் பாடுபட்டவன் அல்ல. ராஜேந்திரன் முழுக்க முழுக்க பல்கலைக் கழகம் அமைத்து சமஸ்கிருதப் பாடத் தைச் சொல்லிக் கொடுத்தவன் என்பதுதான் வரலாறு. ஆகவே, இங்கே ஒன்றும் டேக்ஆஃப் ஆகாது. எத்தனை விமானங்கள் மேலே கிளம்புவதற்குள் கீழே வந்துவிடு கிறது. அதேபோல்தான், இங்கேயும் அது வெளியே வரவில்லை.


திருக்குறளை தேசிய நூலாக்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை!


ராஜேந்திர சோழன் முடிந்து போய்விட்டது. இப்பொழுது அடுத்ததாக ஒருத்தர் வடநாட்டிலே இருந்து வந்து, திருக்குறள் என்று சொன்னார்.
உடனே நம்மாள்கள், ஆக, திருக்குறளை வடநாட்டில் இருந்து வந்து சொல்கிறார்களே என்று மகிழ்கிறார்கள்.


திருக்குறளை தேசிய நூலாக்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. திருக்குறளை சொல்லிக் கொடுக்கவேண் டும் என்றுதான் சொன்னார். அதை உடனே நம்மவர்கள் பாராட்டினார்கள். எனக்குக்கூட அந்த விழாவிற்கு அழைப் பிதழ் வந்தது. கவிஞர் வைரமுத்து அழைப்பிதழை அனுப்பி யிருந்தார். நான் அந்த அழைப்பிதழுக்குப் பதில் எழுதி னேன். ஏனென்றால், எந்த அழைப்பிதழ் வந்தாலும், உடனே பதில் எழுதுவது எங்களுடைய வழமையாகும்.
அழைப்பிதழ் கிடைத்தது! விழா சிறக்க வாழ்த்துகிறேன்; திருக்குறளைப்பற்றி நாடாளுமன்றத்தில் ஒருவர் பேசியி ருக்கிறார் என்பதற்காகப் பாராட்டலாம். ஆனால், எச்சரிக் கையோடு இருக்கவேண்டும். இதில், முகமூடியோ அல்லது வேறுவகையான தன்மையோ உள்ளே நுழைந்துவிட்டதா என்று கவனிக்கவேண்டும் என்று எழுதினேன்.


இந்தியா முழுவதும் திருவள்ளுவருடைய வரலாறு வருமாம்....


அடுத்த நாள் மனிதவள அமைச்சராக இருக்கக்கூடிய ஸ்மிருதி இரானி அவர்கள், உடனடியாக திருவள்ளுவர் நாளைக் கொண்டாடுவோம். உடனடியாக இந்தியா முழு வதும் திருவள்ளுவருடைய வரலாறு வரும் என்று சொன் னால், அதனுடைய அடிப்படை என்ன? இதனை அவர்கள் திடீரென்று ஏற்பாடு செய்யவில்லை நண்பர்களே, அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதோ, என்னுடைய கையில் இருக்கின்ற ஆதாரத் தோடு சொல்கிறேன். யாராவது மறுப்பு சொல்வதானால், சொல்லட்டும்; சரியாக இருந்தால், திருத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். சுயமரியாதை இயக்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததே, திருந்து அல்லது திருத்து; இரண்டே வார்த்தைதான். நீ தவறாக இருந்தால், திருந்தவேண்டும். நான் தவறாகச் சொன்னால், என்னைத் திருத்து என்பதுதான் அது.


கோல்வால்கர் எழுதிய ‘‘Bunch of Thoughts’’


இது கோல்வால்கர் எழுதிய ஞானகங்கை சர்ஜங்சாலக் - அவர்தான் அந்தக் கட்சிக்கே தத்துவ கர்த்தா! இதுதான் ஞானகங்கை, இதுதான் ஆர்.எஸ்.எஸுக்கு வழிகாட்டி நூல்.


முஸ்லிம்களை விரட்டவேண்டும்; முஸ்லிம்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்க முடியாது; கிறிஸ்தவர்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்க முடியாது. அவர்கள் இங்கே இருக்கவேண்டும் என்றால், இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்களும்,
கிறிஸ்தவர்களும் யார்?



இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் என்ன அரேபியா வில் இருந்து வந்தவர்களா? நான்கு தலைமுறைகளுக்கு முன்பு அவர்கள் யார்? முழுக்க முழுக்க உன்னுடைய இந்து மதம் என்று சொல்கிறாயே, அந்த மதத்தைச் சார்ந்தவர் கள்தானே! நீ தாழ்த்தப்பட்டவன், ஒதுங்கிப் போ! தொடாதே! என்று சொன்னாய்.  யார் கட்டிப் பிடித்தானோ, அங்கு போய் அவன் மனிதன் ஆனான். அதுதானே, மிக முக்கியம். அதை எப்படி தவறு என்று நீ சொல்ல முடியும்!
அதேபோல், கிறிஸ்தவர்கள் யார்? இஸ்ரேல் நாட்டி லிருந்தோ, பாலஸ்தீன நாட்டிலிருந்தோ வந்தவர்களா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.


இந்த அடிப்படையிலே ஞானகங்கை நூலில் சொல் கிறார்,
இஸ்லாமியர்கள், ராமனை கடவுளாக ஏற்றால், அவர்களையும் இந்துக்கள் என்று கருதி நாங்கள் நாட்டிலிருக்க அனுமதிப்போம்.


கிருஷ்ணனை வணங்கினால், கிறிஸ்துவர்களை நாங்கள் அனுமதிப்போம் என்று இருக்கிறதே!


இதனை யாராவது மறுக்கட்டும்.
இப்படியானால், இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மை பிரகடனம் என்ன ஆவது?


அந்த அடிப்படையில்தான், இன்றைக்குத் திருக்குறளை வைத்து நம்மை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய தமிழ் அறிஞர்களும் மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது. எது பாம்பு? எது பழுதை? என்று. பச்சைப் பாம்பும், பழுதையும் பார்ப்பதற்கு ஒன்றாகத்தான் இருக்கும். ஆகவே, நீங்கள்தான் அதனை தெளிவாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.


திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! எந்த மதத் தையும் சாராத ஒரு அறநூல். உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய ஒரு நூல். அப்பேர்ப்பட்ட அறவழிப்பட்ட வள்ளுவனுடைய அறிவு சாதாரணமானதல்ல. வள்ளுவன் தமிழிலே அதைக் கொடுத்திருக்கிறான் என்று சொன்னால், தமிழன் எவ்வளவு பெரிய அறிவாளியாக அந்தக் காலத்தில் வாழ்ந்திருக் கிறான். தமிழ் நாகரிகம், திராவிட நாகரிகம் என்பது காலத்தால், கருத்தால் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. இதனை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.


ஞானகங்கையில் திருக்குறளைப்பற்றி என்ன சொல்கிறார்கள்?


கோல்வால்கர் எழுதிய ‘‘Bunch of Thoughts’  என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பான ஞானகங்கை நூலில், திருக்குறள்பற்றி என்ன சொல்கிறார்? பக்கம் 168-169 இல் உள்ளதை அப்படியே இங்கே படிக்கின்றேன்.
தற்காலத்தில் தமிழைப் பற்றி நாம் அதிகம் கேள்விப் படுகிறோம். தமிழன்பர்கள் சிலர், தமிழ் என்பது தனக்கென வேறான கலாச்சாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கைக் கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்கள் மறையாகக் கருது கின்றனர்! திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான்! திருவள்ளுவர் முனிவர், அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம், நமது பிராதஸ் மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ்பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு. அய்யர் திருக்குறளை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்கு விதமான வாழ்க்கை முறை. சதுர்வித புருஷாத்தம், அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப்பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும், எந்த வழிபாட்டு முறையையும் பின் பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத் தைப்பற்றியே கூறுகின்றது. எனவே, எந்த ஒரு சாராரின் நூலும் அல்ல; மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவதுபோன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகிறது. ஹிந்துக் களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும் என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

யாருடா அவன், துரோபதைக்குப் பிறந்த பயல்!


நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள், நாடகத்தில் நடிக்கும்பொழுது, அவரைப்பற்றி யாராவது கூச்சல் குழப்பம் செய்வார்கள்; ஏய், ராதா என்ன பேசுகிறாய்? கடவுளைப்பற்றி பேசாதே! மதத்தைப்பற்றி பேசாதே என்று சத்தம் போட்டால், உடனே ராதா அவர்கள் வசனத்தை நிறுத்திவிட்டு, யாருடா அவன், துரோபதைக்குப் பிறந்த பயல் என்று கேட்பார். இது ஒன்றேபோதும் மகாபாரதக் கலாச்சாரம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு!


கூட்டுறவு சொசைட்டியை முதன்முதலில் உருவாக்கியதே துரோபதைதான்!
பெரியார் அவர்கள் சொல்வார், கூட்டுறவு சொசைட் டியை முதன்முதலில் உருவாக்கியதே மகாபாரதத்தில் துரோபதைதான் என்று!


மகாபாரதத்தைப்பற்றி மறுபடியும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்றால், திராவிடர் கழகத்துக்காரன் தயாராக இருக்கிறான். இதுதான் பாரதக் கலாச்சாரம் என்று சொல்லி, இதை திருக்குறளோடு ஒப்பிட்டால், என்னய்யா அர்த்தம்? வடநாட்டில் இப்படித்தான் திருக்குறளை சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்றால், இதைவிட வள்ளுவர் வடநாட்டிற்குப் போகாமல் இருந்தாலாவது பத்திரமாக இருக்கமாட்டாரா? முயற்சியை நாணயமாக செய்யுங்கள்!


கலைஞர்கூட இந்த நிலையை வரவேற்கத்தகுந்தது என்று சொல்லியிருக்கிறார். உங்களுக்கு நல்லெண்ணம் இருந்தால், திருக்குறளை தேசிய நூலாக ஆக்குங்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் இரண்டு நாள்களுக்கு முன்பு! இதனை திராவிடர் கழகம் நீண்ட நாள்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள்.

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டுமாம்!


இன்னொரு செய்தி, இப்பொழுது வந்திருக்கின்ற செய்தி! உங்களுக்கெல்லாம்கூட அதிசயமாக இருக்கும்; இப்பொழுது சில மணித் துளிகளுக்கு முன்பாக வந்த செய்தி என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொலைக் காட்சியின்மூலம் இன்று இரவு 8.30 மணிக்கு வந்த செய் தியை நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மத்திய அரசுக்கு வேண்டுகோள்!


சமஸ்கிருதத்தைக் கட்டாய மொழியாக்கவேண்டும்; பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று திருமதி சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார்கள்.


பகவத் கீதை என்ன சொல்கிறது?, பெண்கள் அத்தனை பேரும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்கிறது.
கீதையின் மறுபக்கம் என்று புத்தகம் எழுதியிருக்கி றோமே, அதிலே உள்ள ஒரு வரியையாவது யாரையாவது மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஜாதியை வலியுறுத்தித்தானே சொல்லியிருக்கிறார்கள் முழுக்க முழுக்க,
பகவான் கிருஷ்ணன் சொல்கிறான்:


நான்கு ஜாதியை நானே உருவாக்கினேன்;
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்
நானே நினைத்தால்கூட இதனை மாற்ற முடியாது.

இப்பொழுது நமக்கிருக்கின்ற மிகப்பெரிய பிரச் சினையே, இந்த ஜாதி இழிவை ஒழிப்பதைத்தவிர வேறு கிடையாது என்று சொல்லும்பொழுது, நாம் பகவத் கீதை பிரச்சாரத்தை அனுமதிக்கலாமா? அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
எனவே, நண்பர்களே! காவி நுழைகிறது என்று சொன்னால், இளைஞர்களைப் பார்த்து, குஜராத்தைப் பாருங்கள், அதனுடைய வளர்ச்சியைப் பாருங்கள், வேலை வாய்ப்பைப் பாருங்கள் என்றெல்லாம் சொல்லி திசை திருப்பினார்கள்; நம்முடைய இளைஞர்கள் எல்லாம் ஏமாந்தார்கள். ஏற்கெனவே காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட வெறுப்பு இருக்கிறதே, அதனை அவர்கள் தங்கள்வயப்படுத்திக் கொண்டு, அதை லாபமாக ஆக்கிக் கொண்டார்கள். யார் யாரெல்லாம் காங்கிரசோடு இருந்தார்களோ, அவர்களுக்கும் சேர்ந்து அந்த விளைவு ஏற்பட்டது. அதன் காரணமாக, மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. இது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் நடந்துகொண்டிருக்கின்ற ஒரு செய்தி நடப்பு.


ஆகவே, இங்கு ஜாதி ஒழிப்பிற்காக மிகப்பெரிய ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்யவேண்டும். அதுமட்டுமல்ல, நண்பர்களே, பாபர் மசூதியை இடித்த நாள் நேற்று. அந்த சங்கதிகளைப்பற்றி இன்றைக்குச் சொன்னார்கள் என்றால், அவர்கள் திருக்குறளுக்கு எப்படி தவறான வியாக்கியானம் சொன்னார்களோ, அதுபோல, அதற்கடுத்து பாரதியாருக்கு விழா கொண்டாடப் போகிறோம் என்றார்கள். நிறைய பேர் அதனை நினைத்து மகிழ்ந்தார்கள்.


என் கையில் இருப்பது விஜயபாரதம் (12.12.2014) ஆர்.எஸ்.எஸ்.சினுடய வார ஏடாகும். இதுதான் அவர் களின் அதிகாரப்பூர்வமான ஏடாகும். எதைச் சொன்னாலும், திராவிடர் கழகத்துக்காரன் ஆதாரமில்லாமல் பேசமாட்டான்.
எவ்வளவு விஷமத்தனமான கருத்து!


இந்த வாரம் வந்திருக்கின்ற அந்த ஏட்டில்,
பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்.
மிடி பயங்கொள்ளுவார்; துயர் பகை வெல்லுவார் என்கிற பாட்டில்,
வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
என்கிற பாட்டின் ஒரு வரியில்,
பள்ளித்தலம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்




பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் கோவில்களாக மதிக்கவேண்டும் என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள். இது தவறானது என்பதற்கு, பாரத தேசம் என்று தொடங் கும் இந்தப் பாடலிலேயே மற்றொரு சரணத்தில், ஆலை கள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம் என்று கூறுகிறார். எனவே, பள்ளி என்று அவர் குறிப்பிடுவது, கல்விக் கூடங்களை அல்ல! நமது கோவில்களாக இருந்த மசூதி, சர்ச்சாக மாற்றப்பட்ட தலங்கள் மீட்டெடுத்து, மீண்டும் கோவில்களாக மாற்றவேண்டும் என்று பாரதி விரும்பினார் என்று எழுதியிருக்கிறார்!


இதற்கு என்னய்யா அர்த்தம்? இதுதான் பாரதியினு டைய பாட்டுக்கு புது விளக்கமா? பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்வோம் என்று பாரதி சொன்னதற்கு, இவன் பள்ளி வாசலை சொல்கிறான்; சர்ச்சை சொல்கிறான். எவ்வளவு விஷமத்தனமான கருத்து. நமக்கெல்லாம் அறிவு இருக்கிறது; பெரியார் பிறந்த மண் இது. பகுத்தறிவு இருக்கின்ற மண். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட வியாக்கியானத்தைச் சொல்கிறானே!


மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய புத்தகத்தைப் படியுங்கள்!


இப்பொழுது இருக்கின்ற கோவில்களை எடுத்துக் கொண்டாலே, பழைய காலத்து புத்தர் கோவில்கள். சமணர் கோவில்கள். காஞ்சிபுரத்திலிருந்து பெரும்பகுதி தேறவே தேறாது. யாருக்காவது சந்தேகம் இருந்தால், சமணமும் தமிழும்! மயிலை சீனி.வேங்கடசாமி புத்தகத்தைப் படியுங் கள்! பவுத்தமும் தமிழும்! காஞ்சிபுரத்திலுள்ள ஒவ்வொரு கோவிலும், ஏன்? திருப்பதி கோவில்கூட சமணக்கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.


ஆகவேதான், நண்பர்களே!  இதிலே, மதக்கலவரத்திற்கு வித்திடுகிறார்கள்! சும்மா இருக்க முடியுமா? எனவே, ஒரு பக்கம் ஜாதி! இன்னொரு பக்கம் மதம். இவற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இதற்கு இளை ஞர்களே நீங்கள் பலியாகலாமா? கல்வித் திட்டத்திலே காவியை உண்டாக்கினால், மறுபடியும் குலக்கல்வித் திட் டம் வரும். குலக்கல்வித் திட்டத்தை அழித்தது பெரியார்! இந்த இயக்கம்! கருப்புச் சட்டைக்காரர்கள்! அந்தக் குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததினால்தான், இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன் பொறியாளராக இருக்கிறான்.


மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணவர்களே, சமஸ் கிருதம் படித்தால்தான் நீங்கள் அந்தப் படிப்பிற்கே மனு போட முடியும் என்று வைத்திருந்தார்களே, இப்பொழு துள்ள டாக்டர்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும். இதனை ஒழித்த பெருமை, தந்தை பெரியார் சொல்லி, நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவை ரத்து செய்தார்கள்.


பெரியாருடைய கொள்கை இருக்கிறதே, அது அசைக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிர்!


டாக்டருக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிருதமே கட்டாயம் என்று இப்பொழுது வெளிப்படை யாக வந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், இதனையெல்லாம் வெளிப்படையாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், நண்பர்களே, நீங்கள் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும். எப்படிப்பட்ட கொடுமை இன்றைக்குத் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. எனவேதான், இதனை மறைத்து மறைத்து செய்துகொண்டிருக்கிறார்கள். விஷ உருண்டைக்கு தேன் தடவிக் காட்டுகிறார்கள். ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எப் பொழுதுமே எச்சரிக்கை மணி அடிக்கின்ற இயக்கம் திராவிடர் கழகம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எல்லோருக்காகவும் சேர்த்து நாங்கள் பேசுகிறோம்; எங்களுக்காக அல்ல. எங்களுக்கு ரயிலில் ஏறுவதும் ஒன்றுதான்; ஜெயிலுக்குப் போவதும் ஒன்றுதான். நாங்கள் பெயிலுக்காக அலைந்து கொண்டிருக்கின்றவர்கள் அல்ல. இதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். சங்கராச்சாரியா? உடனே போகவேண்டும் என்று சொல் வதற்கு. நெருக்கடி காலத்தில் நாங்கள் சிறைச் சாலைக்குச் சென்றோமே, அதனாலே என்னாயிற்று! அடக்கு முறைகளை யும் நாங்கள் சந்திப்போம்! அதேநேரத்தில், பெரியாருடைய கொள்கை இருக்கிறதே, அது அசைக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிர்! இதனுடைய விழுதுகள் பலமாக இருக்கின்றன. காரணம், வேர்களும் பலமாக இருக்கிறது. இந்தக் கொள்கைகளை யாரும் இந்த மண்ணைவிட்டு பெயர்த்துவிட முடியாது!


இன்றைக்குக் கருப்புச் சட்டை இல்லாத கட்சிக்காரர்களே கிடையாது!


2025 ஆம் ஆண்டு பார் என்று சொல்கிறார்கள்! இன்னும் அய்ந்தாண்டுகாலம்கூட உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது; அது இப்பொழுதே புரிந்துவிட்டது. காவி மாறும்; ஆனால், கருப்பு எதன்மீது விழுந்தாலும்,  கருப் பின்மீது எந்த சாயமும் ஏறாது. இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் தலைவர் மிகவும் கெட்டிக்காரர்; அதனால்தான் கருப்புச் சட்டையைக் கொடுத்திருக்கிறார். கருப்புச் சட்டை சாதாரணமானதல்ல. இன்றைக்குப் பெரிய ஆயுதமே அதுதான்! யாருக்கெல்லாம் அதிருப்தி வருகிறதோ, யாருக்கெல்லாம் எதிர்ப்பு வரு கிறதோ அப்பொழுதெல்லாம் கருப்புச் சட்டையை அணிந்து கொள்கிறார்கள். எல்லாக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையை தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டில். இன்றைக்குக் கருப்புச் சட்டை இல்லாத கட்சிக் காரர்களே கிடையாது. நீதிக்கானது அக்கருப்புடை அல் லவா? அய்யப்பனும் தைத்துவிட்டான், அதுதான் எங்களுக்கு வேதனையாக இருந்தது, பரவாயில்லை! இது அய்யப்பன் கருப்புச் சட்டையல்ல; இது முழுக்க முழுக்க எங்கப்பன் கொடுத்த கருப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் காட்டிருக் கிறார் என்று சொன்னால், அது சாதாரணமானதா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.


எனவேதான் நண்பர்களே, இந்த இயக்கம் ஆபத்து களை எடுத்துச் சொல்கிறது. நம்முடைய பணி என்பதிருக் கிறதே, அது சாதாரணமானதல்ல. எங்களை ஊக்குவிக் கின்ற சக்திகள் இரண்டுவிதமான சக்திகள்.
ஒன்று, நம்முடைய பாசறை வீரர்கள், வீராங்கனைகள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள், கண்ணுக்குத் தெரி யாதவர்கள் பலர் உண்டு. அரசியலில் எந்தக் கட்சியிலே  இருந்தாலும், எங்கள் தோழர்கள் இங்கே வந்து ஊக்கப் படுத்தவில்லையா! உற்சாகப்படுத்தவில்லையா! அரசியலில் நாங்கள் எந்த நிலை எடுக்கிறோம், அவர்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்பது எங்களைப் பிரித்திருக்கிறதா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


ஆகவேதான், எங்களுடைய அடித்தளம் என்பதிருக் கிறதே, இது தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திரா விடர் இயக்கத்தினுடைய அடித்தளம். திராவிடத்தால் வீழ்ந் தோம் என்று யாரும் சொல்லிவிட்டுத் தப்பிவிட முடியாது. ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம் என்று சொல்வதுதான், மிகப்பெரிய உண்மையாக நம்மு டைய நாட்டில் இருக்கலாம்.
இதற்கு மிகத் தந்திரமாக அவர்கள் ஒரு முயற்சியை செய்திருக்கிறார்கள். அது என்ன முயற்சி? அதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், இதை எங்கள் மேடையைத் தவிர, வேறு மேடையில் நீங்கள் சுலபமாகப் பார்க்க முடியாது.


என் கையில் இருப்பது டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ். சில வாரங்களுக்கு முன்னால் அதில் வந்த ஒரு செய்தி.

Saffron flew over the dravidian land times perry....


திராவிட மண்ணில் காவியினுடைய அந்த வேகமான முயற்சிகள் எப்படி நடக்கிறது என்பதைப்பற்றி எழுதும்போது,


ஆரியம் - திராவிடம் என்றெல்லாம் இனிமேல் பேச முடியாது. காரணம், நாங்கள் அமெரிக்காவிலேயே ஒரு  பெரிய ஆராய்ச்சி செய்து, கண்டுபிடித்து கொண்டு வந்துவிட்டோம். டிஎன்ஏ ஆராய்ச்சி. மரபணு ஆராய்ச்சி.
என்ன அந்த மரபணு ஆராய்ச்சி? அமெரிக்காவிலுள்ள சில நிபுணர்களைப் பிடித்து, ஆரியம் இல்லை, திராவிடம் இல்லை என்று காட்டுவதற்காக, அவர்களுடைய உத்தரவை கொண்டு வந்து இங்கே போடுகிறார்களாம்!
தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இதற்காக அமெரிக்காவிற்குச் சென்று, மரபணு ஆராய்ச்சி செய்து சொல்கிறார்களாம். ரத்தத்தில் கலந்துவிட்டார்கள், இப்பொழுது தனியாக திராவிடன் கிடையாது; தனியாக ஆரியர் கிடையாது என்று.


பெரியாரும், அண்ணாவும் நீண்ட நாள்களுக்கு முன் பாகவே இதற்குப் பதில் சொல்லிவிட்டார்கள்.


கலந்துவிட்டீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியுமே! இதை யாரும் சொல்லவேண்டிய அவசியமில் லையே! எப்பொழுது கலந்தார்கள்; எவ்வளவு கலந்தார்கள்; எங்கே கலந்தார்கள்; எப்படி கலந்தார்கள் என்று எல்லாமே எங்களுக்குத் தெரியுமே!  இப்பொழுது அது பிரச்சினையல்ல!
இப்பொழுது எங்களுடைய கேள்வி, ஆரியம் - திராவிடர் என்று இருக்கிறதே, அதற்கு அடையாளம் என்னவென்று சொன்னால், பெரியார் சொன்னார், அண்ணாவும் அதனை வழிமொழிந்தார் அதுதான் மிக முக்கியம்.
தெளிவாகச் சொன்னார், இது ரத்தப் பரிசோதனை அல்ல. இன்னமும் ஆரியம், நான்கு ஜாதிகளை வற்புறுத்து கிறது. இன்னமும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் களாகக் கூடாது என்று சட்டத்திற்குக் குறுக்கே அவர்கள் தடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பெயர் தான் ஆரியம்.
மாற்றம் தேவை! வளர்ச்சி தேவை! சமத்துவம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால் - இது திராவிடம்.
நான்கு ஜாதிகளை நான்தான் உண்டாக்கினேன் - இது ஆரியம்.
எனவே, தத்துவம்தான் அடையாளப்படுத்தக் கூடியதே தவிர, வெறும் ரத்தப் பரிசோதனை ஆராய்ச்சி அல்ல நண்பர்களே!


அவர்கள் எவ்வளவு தந்திரசாலி என்றால், நீதிமன் றத்தில் இட ஒதுக்கீடு இருக்கிறது. இட ஒதுக்கீடுக்காக சொல் கின்ற நேரத்தில், அங்கே இருக்கின்ற ஒரு உயர்ஜாதிக்காரன் வேண்டுமென்றே ஒரு கேள்வியைக் கேட்கிறார், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை வைத்திருக்கிறீர்களே, அதற்கு முன்பாக ஜாதிவாரியாகக் கணக்கு எடுத்திருக்கிறீர்களா? உங்களிடம் புள்ளிவிவரம் இருக்கிறதா? என்று.


உடனே, ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால்தான், இட ஒதுக்கீடு என்று சொல்லும்பொழுது, அதற்கு மட்டும் ஜாதியைச் சொல்கிறோம்.
சில நேரங்களில் நோய்களுக்கு நாம் ஆண்டிபயாடிக் மருந்து கொடுக்கும்பொழுது, கிருமியைக் கொல்லுவதற்கு, அந்த மருந்தில் விஷத்தை அளவாக வைப்பதில்லையா? அதுபோல், இட ஒதுக்கீடு என்பது ஒரு மாற்று. அது ஒன்றும் நிரந்தரப் பரிகாரம் அல்ல.


உடனே இவர்கள் எழுதுகிறார்கள், ஆகா! கலைஞரும், வீரமணியும், திராவிடர் கழகமும், மற்றவர்களும் ஜாதிவாரி யான கணக்கெடுப்பு என்று கேட்கிறார்களே, ஜாதியை இப்படியெல்லாம் வலியுறுத்தலாமா? என்று.
அட புத்திசாலிகளே, உனக்கு எழுதுவதற்குத் தகுதி உண்டா உன் பேனாவால்! நீ உன்னுடைய முதுகில் பூணூல் போட்டிருக்கிறாய்! என்னுடைய முதுகு வெறும் முதுகுதான்!


உங்கள் சட்டையை கழற்றுங்கள்;
நானும் சட்டையை கழற்றுகிறேன்!



என்னை ஒருமுறை சோ பேட்டி எடுத்தார். அப் பொழுது சோ அவர்கள், என்ன சார் நீங்கள் இப்பொழுது போய், ஆரியம் - திராவிடம் என்று பேசுகிறீர்களே, இப்பொழுதெல்லாம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதானே சாப்பிடுகிறோம் என்று சொன்னார்.

உடனே நான், நண்பர் சோ அவர்களே, இதற்கு நான் பதில் சொல்லட்டுமா? உங்கள் சட்டையை கழற்றுங்கள்; நானும் சட்டையை கழற்றுகிறேன் என்றேன்.

சோ அவர்கள், என்ன சார் வம்புக்கு வர்றீங்களே! என்றார்

உடனே நான், அடிதடிக்காக சொல்லவில்லை. இரண்டு பேரும் சட்டையைக் கழற்றுவோம். உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறது. என்னுடைய முதுகு வெறும் முது காக இருக்கிறதே, அதற்குப் பதில் சொல்லுங்கள் என்றேன்.
சோ அவர்கள், இது நானாக விரும்பிப் போட்டுக் கொண்ட நூல் சார் என்றார்.
நீங்களா விரும்பிப் போட்டுக்கொண்டாலும், அந்த நூலுக்கு என்ன மரியாதை என்பதுதான் மிக முக்கியம் என்றேன்.


சோ, நீங்கள் அந்த நூலை வாங்கிப் போட்டுக் கொள் ளலாமே! எல்லோருக்கும் நூலை வாங்கிக் கொடுத்துப் போடச் சொல்லலாமே! என்றார்.


ராமானுஜர் நூல் வாங்கிப் போட்டு ஒன்றும் நடக்க வில்லை; நாங்கள் ஏன் பைத்திக்காரத்தனமாக நூலை வாங்கவேண்டும். இவ்வளவு பேர் நூலைப் போடுவதை விட, நீங்கள் மூன்று சதவிகிதம் பேர் நூலைக் கழற்றி விட்டால், ஒரே முதுகு, ஒரே மாதிரி ஒருமைப்பாடாக இருக்குமே, அதுதானே சுலபம் என்று சொன்னேன்.


உடனே, இதற்கு அவர் பதில் சொல்லாமல், வேறு கேள்விக்குச் சென்றுவிட்டார்.


எதற்காக இதனைச் சொல்கிறேன் என்று சொன்னால், நண்பர்களே, அந்த ஜாதி!
அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இன்றைக்கு ஆரியம் - திராவிடம் என்றெல்லாம் என்ன என்று கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?
இன்னமும் நீங்கள் மனுதர்மம், இன்னமும் மகாபாரதம்; இன்னமும் பாரதிதாசனை விட்டுவிட்டு, பாரதியாருக்கு மட்டும் விழா என்றால், ஆரியம் எங்கே இருக்கிறது? திராவிடம் எங்கே இருக்கிறது? என்பது புரியவில்லையா!
எனவே, நண்பர்களே! ஜாதியை ஒழித்தாகவேண்டும்; தீண்டாமையை அழித்தாகவேண்டும். ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை, மதவெறி நீங்கிய ஒரு சமுதாயத்தை, மனிதநேயத்தைக் கட்டிக்காக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கின்றோம். இந்தக் கருத்து இப்பொழுது எல்லோருக்கும் வருகிறது.

பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்!


இதோ என்னுடைய கையில் இருப்பது தீக்கதிர் ஏடு. இந்த ஏட்டில், பிரகாஷ் காரத் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்.


ஜாதியை ஒழிக்காமல் சோசலிசத்தை அடைய முடியாது என்று சொல்லியிருக்கிறார்.


இதைத்தான் நீண்ட காலத்திற்கு முன்பாக தந்தை பெரியார் சொன்னார், வருண பேதமா? வர்க்க பேதமா? என் றெல்லாம் விவாதம் செய்துகொண்டிருந்த காலம் மாறி விட்டது. இப்பொழுது வர்க்கம் முக்கியமல்ல, வர்ணம்தான் முதலிலே ஒழிக்கப்படவேண்டியது என்று சொல்லக்கூடிய கருத்து வந்திருக்கிறது என்றால், பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்; எப்படி மருந்து எப்பொழுதும் தேவைப் படுகிறதோ, அதுபோல! மருத்துவர்களும் எப்பொழுதும் தேவைப்படுவார்கள்; மருத்துவக் கல்லூரியும் எப்பொழுதும் தேவைப்படும், அதுதான் மிக முக்கியம்.


மறுபடியும் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்!


அந்த அடிப்படையிலே, திராவிடர் கழகம் என்பது வெறும் மருத்துவக் கல்லூரி மட்டுமல்ல, வருமுன்னரே காப்பதற்காக எடுத்துச் சொல்லக்கூடியது. எனவே, திராவிடர் கழகம் என்கிற இந்த அமைப்பு எங்களுக்காக அல்ல நண்பர்களே, உங்கள் பிள்ளைகளுடைய எதிர் காலத்திற்காக! இளைஞர்களே, உங்களுடைய வாழ்வு வெறும் ஏமாற்றத்திற்காக ஆகிவிடக்கூடாது. இன்றைக்கு நீங்கள் கணினி மூலமாக, இணையத்தின் மூலமாக கைநிறையச் சம்பாதிக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள்! நாளைக்கு இந்த முறை மாற்றப்பட்டு, மறுபடியும் பெரியாருக்கு முன், திராவிட இயக்கத்திற்கு முன்னாலே ஏற்பட்ட சூழல் மீண்டும் வருமானால், ஏகலைவன்களாக நீங்கள் ஆக்கப்படுவீர்கள். பாரதக் கதையில் ஏகலைவன் கதை என்ன? கட்டை விரலை வெட்டிக் கொடு என்று கேட்டாரா, இல்லையா துரோணாச்சாரியார்! அதுதானே குருதட்சணை என்று தெளிவாகச் சொன்னார்கள். எனவே, அந்தக் கதை திரும்பி வந்துவிடும்.
இப்பொழுதுதான் துரோணாச்சாரியார்கள் உங்களிடம் பயந்துகொண்டிருக் கிறார்கள். எந்த ஏகலவனையாவது பார்த்து இன்றைய துரோணாச்சாரிகள் கட்டை விரலை வெட்டிக் கொடு என்றால், அவன் கைகளையே வெட்டுவான், அந்த அளவிற்கு துணிவாக இருக்கக்கூடிய அறிவு, பெரியார் தந்த அறிவு. ஆகவே, அதனைப் புரிந்துகொள்ளுங்கள்.


மீண்டும் பழைய துரோணாச்சாரியார்களும், பழைய ஏகலைவன்களும் மீண்டும் வந்துவிடக் கூடாது. இதனைச் சொல்வதுதான் எங்களுடைய வேலை. இதுதான் சுயமரியாதை நாளினுடைய தத்துவம். எனவேதான், நேரிடையாக வர முடியாத எதிரிகள் மறைந்து வருகிறார்கள், மிகப்பெரிய அளவிற்கு. ஆங்கிலத்திலே Came of Pledge என்ற ஒரு வார்த்தை உண்டு. உருமாற்றம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு. பச்சை செடியில், பச்சை நிறத்தில் இருப்பார்கள். மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் நிறமாக மாறுவார்கள். அதுபோல, இந்தத் தமிழ் மண்ணிலே காவிகள், புதிய புதிய திட்டத்தை நுழைக்கப் பார்க்கிறார்கள்; ராஜேந்திர சோழன் உங்களுக்குக் கைகொடுக்கமாட்டான்; வள்ளுவர் கூட கைக்கொடுக்க மாட்டார். பாரதியை வைத்துக்கொண்டு நீங்கள் இப்படியெல்லாம் மிகப்பெரிய வியாக்கியானம் செய்து மதவெறியை உண்டாக்கலாம்; ஜாதி வெறியைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்தால், கடைசி கருஞ்சட்டைக்காரனுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையில், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடியவர்கள். விளைவுகளில் இருந்து தப்பவேண்டும் என்று நினைக்கமாட்டோம்.


பெரியார் சொன்னால், எந்த லட்சியத்தை நீ அடைய வேண்டுமானாலும், அதற்குரிய விலையைக் கொடுப்ப தற்குத் தயாராக இரு! அது கடுமையான விலையாக இருந்தாலும் பரவாயில்லை. இலவசமாகப் பெறாதே! அதற்குரிய லட்சியத்தைப் பெறுவதற்காக தயாராக இருங்கள்! தயாராக இருங்கள்! என்று சொன்னார்கள்.


எங்களுடைய இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அந்த லட்சியத்தைப் பெறுவதற்காக, தங்களுடைய இன்னுயி ரையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். நாளைக்கு அந்தத் திட்டம் வரும். ஆனால், நாங்கள் பகுத்தறிவு வாதிகள்; எதை எப்படி எடுப்பது என்று எங்களுக்குத் தெரியும். முள்ளை எப்படி எடுப்பது? முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொன்னால், அந்த முள் எங்கிருந்து வரு கிறது என்பதை பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத் திருக்கிறார். எங்களுடைய அணுகுமுறை எங்களுடைய சொந்த புத்தி அல்ல; பெரியார் தந்த புத்தி. அதனை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


எனவே, தோழர்களே, இளைஞர்களே! இவ்வளவு அற்புதமான இந்த நிகழ்ச்சியை, சிறப்பாக நடத்தி, சேலத்தில் வரலாறு படைத்த அத்துணை பேருக்கும் எங்கள் மனமுவந்த பாராட்டினை கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்களுடைய உணர்வுகள் இந்த இயக்கத்தை நோக்கி எப்படி இருக்கிறது!
கடைவீதி வசூல் செய்திருக்கிறார்கள்; ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால், மக்களுடைய உணர்வுகள் இந்த இயக்கத்தை நோக்கி எப்படி இருக்கிறது என்பதற்கு இதைவிட அற்புதமான ஒரு அடையாளம் கிடையாது.
அப்படிப்பட்ட பணிகளைச் செய்த நம்முடைய பொதுச் செயலாளர் குணசேகரன் அவர்களுடைய அந்த வழி காட்டுதல்களிலே, அதேபோல, மற்ற திட்டங்களையெல் லாம் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் வகுத்தார் கள். அதுபோல, நம்முடைய தோழர்கள் அத்துணை மாவட்டக் கழக, மண்டலத் தலைவர்கள் அத்துணை பேரும் சிறப்பாகச் செய்தார்கள். அவர்கள் அத்துணை பேரையும் பாராட்டி, நேரமின்மை காரணத்தால், சில பெயர்களை மட்டும் சொல்கிறேன், மண்டல இளை ஞரணிச் செயலாளர் சுரேஷ் அவர்கள், ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சேகர் அவர்கள், மண்டல மாணவரணிச் செயலாளர் தமிழ்பிரபாகரன் அவர்கள், மேட்டூர் மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஜெயப்பிர காஷ் அவர்கள், ஒரத்தநாடு பொறியாளர் பக்ருதீன் அவர்கள், தஞ்சை பொறியாளர் செந்தூரப்பாண்டியன், ஏலாக்குறிச்சி அறிவேந்தி, தஞ்சை இளவரசன், முனியன், மேட்டூர் அழகேசன், மேட்டூர் கோவிந்தராஜ், சதீஷ், ஒரத்த நாடு நா.பிரபு, ஆத்தூர் நகரத் தலைவர் அண்ணாதுரை, தென்னங்குடிபாளையம் ஜெயராமன், பெத்தநாயக்கன் பாளையம் சம்பத், மேட்டூர் மோகன்ராஜ், பாச்சாளியூர் அய்யனார், இப்படிப்பட்ட தலைவர்களும், அதுபோல, பழனி.புள்ளையண்ணன், கவிஞர் சுப்பிரமணியம், பூபதி, கடவுள் இல்லை சிவக்குமார், அய்யா ஜவகர், கிருஷ்ண மூர்த்தி, இளவழகன், இராவணபூபதி, வடிவேல், தமிழர் தலைவர் சவுந்திரராஜன், ஆசிரியர் கந்தசாமி போன்ற அத்துணை தோழர்களுக்கும், மனமுவந்து இங்கே வந்து இதுவரையில் இருந்து கேட்டு, ஆதரவு தருகின்ற அனைத் துக் கட்சி நண்பர்களுக்கும் எங்களுடைய அன்பை, பாராட்டை, நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்!

 வணக்கம்! நன்றி!


எச்சரிக்கை! எச்சரிக்கை! என்பதை மீண்டும் உங்களிடம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.


அருமைத் தோழர்களே, ஒரே ஒரு முழக்கத்தை மட்டும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்ன முழக்கம் என்று சொன்னால், நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், இனிமேல் மிகத்தெளிவாகச் சொல்ல வேண்டிய செய்திகள், மிகத்தெளிவாக இருக்கிறது. அதனைச் சொல்லித்தான் என்னுடைய உரையை நிறைவு செய்ய இருக்கிறேன். அதை மட்டும் இங்கே எடுத்துச் சொல்கிறேன். அருள்கூர்ந்து நீங்கள் திரும்பக் கூறவேண்டும்.


தனித்தன்மையால், தனித்தன்மையால்
பண்பாட்டுத் தனித்தன்மையால்
பண்பாட்டுத் தனித்தன்மையால்
நாங்கள் திராவிடர்கள், நாங்கள் திராவிடர்கள்
இந்து மதத்தில், இந்து மதத்தில்
நாங்கள் சூத்திரன், நாங்கள் சூத்திரன்
இந்து மதத்தில், இந்து மதத்தில்
நாங்கள் பஞ்சமன், நாங்கள் பஞ்சமன்
ஒழிக்கவேண்டியது எது?
உணருங்கள் பெரியோர்களே!
திராவிடத்தால், திராவிடத்தால்
நாங்கள், நாங்கள்
சமத்துவ மனிதர், சமத்துவ மனிதர்
புராணக் குப்பைகளை, புராணக் குப்பைகளை
ஆக்காதே! ஆக்காதே! அறிவியல் ஆக்காதே!
மாற்றாதே மாற்றாதே! வரலாற்றை மாற்றாதே!
வரலாற்றை மாற்றாதே!
புராணக் குப்பை மேடாக, புராணக் குப்பை மேடாக
மாற்றாதே, மாற்றாதே!
மாய்ப்போம்! மாய்போம்!
மதவெறி மாய்ப்போம்!
சாய்ப்போம், சாய்ப்போம்!
ஜாதிகளை சாய்ப்போம்!
வளர்ப்போம், வளர்ப்போம்!
காப்போம், காப்போம்!
மனிதநேயத்தை, மனிதநேயத்தை
காப்போம், காப்போம்!
ஒழிப்போம், ஒழிப்போம்!
ஜாதிகளை ஒழிப்போம்!
படைப்போம், படைப்போம்!
சமதர்மங்களைப் படைப்போம்!
ஒழிப்போம், ஒழிப்போம்!
வருண தருமத்தை, வருண தருமத்தை
ஒழிப்போம், ஒழிப்போம்!
காப்போம், காப்போம்!
சமூகநீதியை காப்போம்!
சமதர்மத்தைக் காப்போம்!
நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

                                     -------------------------- “விடுதலை”12-12-2014
Read more: http://viduthalai.in/page1/92721.html#ixzz3LsBJMIQ6

20 comments:

தமிழ் ஓவியா said...

காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்


யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்


ஒகேனக்கல், டிச.28- ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங் களுக்குரிய பிரச்சார திட்டம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒகேனக்கல்லில் 28.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் இளம்பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, தனது 81ஆம் வயது வரை, கழக வீராங்கனையாக ஒளி விட்ட ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம் அவர்களின் மறை விற்கு தலைமை செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு, பிப்ரவரியில் தமிழர் உரிமைக் காப்பு, மார்ச்சில் மகளிர் புரட்சி, ஏப்ரலில் ஒடுக்கப் பட்டோர் உரிமைக் காப்பு, தமிழர் கலை-பண்பாட்டுப் புரட்சி, மே மாதத்தில் தொழிலாளர் உரிமைக் காப்பு (சமதர்மம் சமத்துவம் பரப்புரை), ஜூன் மாதத்தில் மொழி மானம் - உணர்வு உரிமைக்காப்பு, ஜூலையில் கல்விப் புரட்சி, ஆகஸ்ட் மாதத்தில் சமூகநீதி எழுச்சி, செப்டம்பரில் தமிழர் எழுச்சி-புரட்சி, அக்டோபரில் மூடநம்பிக்கை ஒழிப்பு, நவம்பரில் ஜாதி ஒழிப்புப் புரட்சி, டிசம்பரில் இன இழிவு ஒழிப்பு என்கிற தலைப்புகளில் திராவிடர் கழகம் தனது பிரச்சாரங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

குறிப்பாக வரும் ஜனவரி 30-ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அள வில் காந்தியார் படுகொலை செய்யப் பட்ட நாளில் மதவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

3. ஒவ்வோர் ஆண்டிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்டம்பர் 17) கொள்கை முழக்கத்துடன் பேரணி நடத்துவது என்றும் ஒவ்வொரு நினைவு நாளிலும் (டிசம்பர் 24) அமைதிப் பேரணி நடத் துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

4. தமிழ்நாடு முழுவதும் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டை எல்லா ஒன்றி யங்களிலும் நடத்துவது என் றும், அதனுடன் இணைந்து புத்தகச் சந்தைகளை நடத் துவது என்றும், ஒவ்வொரு மாநாட்டிலும் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத் துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. வட்டார மாநாடு களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர் களையும் அழைத்து நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

5. இதிகாசம், புராணம், பார்ப்பனப் புரட்டுகள், சாமியார்கள் பற்றி சிறப்பு அரங்கக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

6. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் மேற் கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற் றமும், உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 29.12.2014 முதல் தொடங்கப்பட உள்ள தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியைச் சேர்ந்த தோழர்களும் பங்கு பெறுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93533.html#ixzz3NCgJ0yI0

தமிழ் ஓவியா said...

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!


போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளர் களின் சங்கங்கள், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல நியாயமான கோரிக் கைகள் தொடர்பாக வேலை நிறுத்த அறிவிப்பு தந்துள்ள நிலையில் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் 27.12.2014-இல் கூட, உடன்பாடு ஏற்படாத நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, 29.12.2014-இல் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. வேலைநிறுத்தத் தில் போக்குவரத்து திராவிடர் தொழிலாளர் அணியைச் சார்ந்த பணியாளர்களும் பங்குபெற்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகத் தலைவரின் வழி காட்டுதல்படி இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

- சு.அறிவுக்கரசு
28.12.2014 தொழிலாளர் அணிச் செயலாளர்
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93538.html#ixzz3NCgY4EN7

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிள்ளுக் கீரையா?

பார்வதி குளிக்கும் பொழுது பிர்மா எட்டிப் பார்த்தான் என்று பிர்மாவின் ஒரு தலையை சிவன் கிள்ளினானாமே - இதுதான் கடவுளின் ஒழுக்கமா? பிர்மா என்ன சிவனுக்குக் கிள்ளுக் கீரையா?

Read more: http://viduthalai.in/e-paper/93541.html#ixzz3NCgoP6yT

தமிழ் ஓவியா said...

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர் முன்னணி கண்டனம்


மதுரை, டிச.28- இந்திய கிறிஸ்தவர் முன் னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: சங்பரிவாரங்களின் சங்க மத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்டாய மத மாற்றுத் தடைச்சட்டம் ஒன்றை அரங்கேற்ற முயல்வது கண்டனத்திற் குரியது. இம்முயற்சி, இந் திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. மதச் சிறு பான்மையினரை அச் சுறுத்தி, நசுக்கும் செய லாகும். ஆட்சியைப் பிடிக் குமுன், சமயச்சார்பற்ற கொள்கையை தூக்கிப் பிடிப்போம் என உறுதி யளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் தன் விருப்பம் போல் சமய அடிப் படை வாதிகளின் ஆலோசனை யில் கிறிஸ் தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை யினரின் சமய உரிமை களை மறுக்கவும், மறைக் கவும், அழிக்கவும் ஆவன செய்யும் அராஜக சட் டத்தை மத்தியில் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.

இது முற்றிலும் ஜனநாய கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகும். இத்த கையச் சூழலில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அழைக்கப்படும் பெரு மையை இழந்துவிடும். பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி என நம்பி வாக் களித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மைச் சமூகத்தினரை ஏமாற்றும் செயலாகும். மத உரிமை மனித உரிமையே! கட் டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே நாட் டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் போதுமானது என்ற நிலையில், இப் போது இதுபோன்ற புதிய சட்டங்கள் தேவை யில்லை. எனவே, கிறிஸ்த வர்களும், இஸ்லாமியர் களும் ஒன்றிணைந்து இத்தகைய அவசியமற்ற சட்டத்தை எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93540.html#ixzz3NCgxkmw0

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் விளக்கம்

தருமபுரி, டிச.29_ திராவிடர் கழகத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்றுவரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாள் வகுப்புகள் டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் முதல் வகுப்புத் தொடங்கியது. தமிழர் தலைவர் அவர்கள் இந்துத்துவா என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

தமிழர் தலைவர்

இந்து மதத்தின் அடிப்படைகள், ஜாதியக் கொடுமைகள் போன்றவை குறித்தும், இந்துத்துவா என்பதன் பொருளையும் விளக்கங்களுடனும், ஆதாரத்துடனும் தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து பேராசிரியர் காளிமுத்து அவர்கள், ஆரியர் _ திராவிடர் _ தமிழர் என்ற தலைப்பில் திராவிடர் இனத்தின் வரலாறு, ஆரியர்கள், திராவிட மொழிகளை சிதைத்தது, பார்ப்பனப் பண்பாடுகளை திராவிட கலாச்சாரத்துடன் கலந்து, திரா விடர்களின் உண்மையான கலாச்சாரங்களை சீரழித்தது போன்ற வரலாற்று உண்மை களை எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, மூட நம்பிக்கை கள் ஒரு மோசடியே என்ற தலைப்பில், மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள் வகுப்பெடுத்தார். அவர் சாமியாடுதல், பேய், பில்லி, சூனிய மோசடிகள் குறித்து மருத்துவ ரீதியான உண்மைகளை எடுத்துரைத்தார்.

அவரது உரை புதிய தோழர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தது.

பகல் உணவிற்கு முன்னர், இறுதி வகுப்பாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் நமது திராவிட கலாச்சாரத்தின்மீது தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். பெயர் வைப்பதில் தொடங்கி, பண்டிகைகள், மொழி, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறை என பல்வேறு வகையிலும் பார்ப்பனியம் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சிதைத்து, தனது பண்பாட்டுப் படை யெடுப்பை திராவிட இனத்தின்மீதும், தமிழ் மொழியின்மீது திட்டமிட்டு தொடுத்ததை விரிவாக விளக்கிக் கூறினார்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதி ஒழிப்புபற்றி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். அதைத் தொடர்ந்து, கழகச் சொற்பொழி வாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் இயக்க மாவீரர்கள் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.

கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி, பெரியாரும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

விழிப்புணர்வுப் பாடல்கள்

அடுத்ததாக, தஞ்சை சம்பந்தம் அவர்கள், மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி பற்றி விளக்கினார். அதைத் தொடர்ந்து அன்பு கலைக் குழுவினரின் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக பயிற்சி பெறுபவர்களுக்குப் பெரியார் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/93607.html#ixzz3NHxL0RRq

தமிழ் ஓவியா said...

நோய்களை தீர்க்கும் கீரைகள்..


காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:

ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.

ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.

இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.

முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.

இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxbpaBP

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.

75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.

78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.

79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

81. சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

தமிழ் ஓவியா said...


85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.

93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxoSNvo

தமிழ் ஓவியா said...

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்; சாமியாருக்கு எதிரான மனு மத்திய புலனாய்வு குழு விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர், டிச.29- பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப் பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம். இவர் மீது இவரது முன்னாள் சீடரான சவுகான் என்பவர் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்த தாகவும், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுகான் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஆண்மை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் கொடுத் திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றார். இந்த மனு தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93578.html#ixzz3NHyzkXEt

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ருந்து நாம் பெறும் பயன்கள், செல்வங்கள் அனைத்தும் இலட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும் என்கிறது ஒரு வார இதழ்.

அப்படியென்றால் குறுக்கு வழியில் சென்று பணம் குவிக்கிறார்களே, கள்ள நோட்டு அடித்து கோடீசுவரர்கள் ஆகிறார் களே - அவைகூட இலட்சுமி தேவியாரின் கடாட்சத் தால்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/93577.html#ixzz3NHz60JMu

தமிழ் ஓவியா said...

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்
குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி

புதுடில்லி, டிச.29_ சங் பரிவாரங்களின் மடத்தன மான, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கூச் சல் இந்தியாவிற்குப் பேரா பத்தை விளைவிக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி கூறியுள்ளார். ஞாயிறன்று ஜவகர் லால் நேரு பல்கலைகழத் தில் நடந்த இந்திய வர லாற்று ஆய்வு குழுமத்தின் (மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ் சிஷீஸீரீக்ஷீமீ) 75- ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வர லாற்று ஆய்வு மாணவர் களுக்கு மத்தியில் பேசிய அமித் அன்சாரி கூறிய தாவது:- இந்திய துணைக் கண்டம் என்பது பல் வேறு பகுதிமக்களின் தனித்தனி கலாச்சாரங் களை, பழக்கவழக்கங் களை உள்ளடக்கியது. இந்திய மனித வரலாறு குறித்து ஆய்வு நூல்களில், இந்தியாவில் பிரபலமான 4,635 இனக்குழுக்கள் உள்ளன. இது பிரபல மான இனக்குழுக்கள் மாத்திரமே, அட்டவ ணையில் இல்லாத பல் வேறு சிறிய இனக்குழுக் கள் உண்டு. இந்த இனக் குழுக்கள் நமது நாட்டின் அடையாளச் சின்ன மாகும்.

தற்போது பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியற்ற சூழல் உரு வாகிக்கொண்டு இருக் கிறது. பல்வேறு தேசிய இனக்குழுக்கள் அடங்கிய நாட்டில் வாழ்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு பகுதி யில் வாழும் மக்களி டையே பல்வேறு கலாச் சார மாறுபாடுகள் உள் ளன. நமது நாடு பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு கலாச்சாரங்கள் ஊடுருவிய போது நாம் அதை ஏற்றுக்கொண்டு பிரிவு பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்திய நாட்டில் வாழும் மக்களின் இந்த மன நிலைதான் நமது நாட் டின் அடையாளமாக இன் றளவும் உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. நாம் நமது வர லாற்றை தெளிவாகப் படிக்கவேண்டும். கலாச் சார மாற்றங்களினால் ஏற்பட்ட நன்மை தீமை களை அலசவேண்டும். தேவையற்றவைகளை தவிர்த்து நன்மைகளை எடுத்துக்கொண்டு வளர்ச் சிப் பாதையில் நாம் செல்லவேண்டும்.

வரலாறு மத நம்பிக் கையின் கீழ் என்றுமே எழுதப்படக்கூடாது, அதன் பாதையில் நாம் செல்லவும் கூடாது. மத நம்பிக்கையால் எழுப்பப் பட்ட வரலாறும், மனித நாகரிக வளர்ச்சியை மய் யமாகக் கொண்டு எழுதப் பட்ட வரலாறும் ஒன் றல்ல. முன்னது ஒருபால் மக்கள் அவர்களது நன் மைக்காக எழுதி வைப்பது. பின்னது தவறுகளைத் திருத்திக்கொள்ள எதிர் காலத்திற்கு ஒரு கருவூலச் செல்வமாகச் சேர்த்து வைப்பது. வரலாறு நமது தவறு களை திருத்திக் கொள்ள வும், அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் தவிர்க்கவும் நல்ல வழி காட்டும் காலக்கண்ணா டியாக இருக்கவேண்டும். அன்று நடந்த அதே தவறுகளை மீண்டும் செய்ய முனைதல் கூடாது. மேலும் நமது பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட நமது நாட்டை ஒரே கலாச்சாரம் என்ற குடையின்கீழ் கொண்டு வந்தால் அது எதிர்கால இந்தியாவிற்கே பேரா பத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கம் ஓங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந் துக்கள்தான் இருக்க வேண்டும். எந்த மதத் தவரானாலும் அவர் இந்துதான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார். மறைமுகமாக கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கும் போது குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கூற்று பலரின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93575.html#ixzz3NHzDB1y6

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.
_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/93579.html#ixzz3NHzQ9tPT

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல்லின் முடிவுகள்


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (ஒகேனக்கல், 28.12.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம் என்பது - குறிப்பாக காந்தியாரை இந்துவெறி பாசிசக் கும்பல் படுகொலை செய்ததை மய்யப்படுத்தியே! வேறு எந்தக் காலகட்டத் தையும்விட, இந்தக் காலகட்டத்தில் இது மிகமிக முக்கிய மானதாகும்.

1948 ஜனவரி 30 இல் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. படு கொலை செய்த நாதுராம் கோட்சே என்ற இந்துமத வெறியன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல்லப்பட்டபொழுது அதனை மறுத்தனர் - அப்படியென்றால் இந்த கோட்சே என்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுந்தபோது, அவன் இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று கைகாட்டினர்.

அதேநேரத்தில், நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேயும், அவன் மனைவியும் நாதுராம் கோட்சே பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். நாங்கள் பிறந்து வளர்ந்த தொட்டில் ஆர்.எஸ்.எஸ். என்றே அடித்துக் கூறினார்கள். கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுவது பச்சை கோழைத்தனம் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியைச் சாடினார்கள்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் என்ன தெரியுமா? கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல - இந்து மகா சபைக்காரர் என்று சொன்னார்கள் அல்லவா - இப்பொழுது அந்த இந்து மகாசபையை உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் போகிறதாம் - நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு. அதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.

அப்படிப் பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாள வியாவுக்குப் பாரத ரத்னா விருது அளித்தால், அதன் பொருள் என்ன?
காந்தியாரைக் கொன்றதற்காக அந்த அமைப்பை உரு வாக்கியவருக்கு, இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்படுகிறது என்றால், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் தராதரத்தை - பாசிச மதவெறித்தனத்தை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

இப்பொழுது எந்த அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் மதவெறிக் கை நீண்டுள்ளது தெரியுமா? காந்தியாரைப் படுகொலை செய்த அந்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியா வின் முக்கிய நகரங்களில் சிலை எழுப்பப் போகிறார்களாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்கூட கொலைகாரன் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்து மதவெறியர்களுக்கு, பாசிஸ்டு களுக்குப் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. அந்தத் தெம்பு என்பது மத்தியில் இந்துத்துவா கட்சியான பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் வந்ததால் வந்த ஒன்றே!

இன்னும் ஒருபடி மேலே சென்று கோட்சேவுக்குக் கோவில் எழுப்புகிறார்களாம். அதுவும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட அதே ஜனவரி 30 இல் இது நடைபெறுமாம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பி.ஜே.பி.யில் உள்ள பிரமுகர் களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாகவே கலந்துகொள்கிறார்கள். நெருக்கிக் கேட்கும்போது, கோட்சேவுக்குச் சிலை எழுப்புவதற்கும், கோவில் கட்டு வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருபுறத்தில் சொன்னாலும், பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் இதில் ஈடுபட்டு வருவது குறித்துக் கேட்டால், நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கித் திணறுகிறார்கள். ஒவ் வொரு தொலைக்காட்சி விவாதத்திலும் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிகப் பரிதாபகரமான இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!

கோட்சேயின் சிலைகள் நிறுவப்படுவதற்கும், கோவில்கள் கட்டப்படுவதற்கும் இந்தப் பி.ஜே.பி. அரசு அனுமதிக்கிறதா? ஒரு கொலைக் குற்றவாளிக்குச் சிலை வைப்பதற்கும், கோவில் கட்டுவதற்கும் ஓர் அரசே அனுமதிக்குமேயானால், மறைமுக மாகக் காந்தியார் படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்றுதானே பொருள்படும்.

ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்திலும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான பொருள் கொடுக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேச மாட்டார் கள் என்று அதற்குப் பொருள் அல்ல. அந்தத் தலைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளாகும்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாகும். நம் நாட்டு ஊடகங்களும், கலைகளுக்கான கருவிகளும் மக்கள் மத்தியில் மூடச் சரக்குகளை விநியோகம் செய்யும் கேடுகெட்ட வேலையில் இறங்கி இருப்பதால், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், முற்போக்குப் பிரச்சாரம் மிகவும் அதிகமாகத்தேவைப்படுகிறது.

அந்த வகையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது. கழகப் பொறுப் பாளர்கள் இதில் கவனம் செலுத்துவார்களாக.

அடுத்ததாக, ஒகேனக்கல் தலைமைச் செயற்குழு வற்புறுத்தி இருப்பது, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடாகும். நாடு தழுவிய அளவில் 2000 மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கை ஓங்கி நிற்கும் காவி மதவாதத் தடுப் புக்குத் தேவையான மூலிகை என்பது - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கச் சித்தாந்தம்தான்.

1925 இல் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் நாட்டுக்குத் தந்த அந்தச் சுயமரியாதை இயக்கத் தத்துவம்தான் - நாட்டை அச்சுறுத்தி வரும் இந்துத்துவா பாசிச நோயினை முறிக்கும் மூலிகையாகும்.

அதுவும் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியாவிற்கே தேவைப்படும் மகத்தான தலைவராகப் பேருரு எடுத்துள்ளார். அதற்கான முன் குரலைத் தமிழ்நாட்டில் உரத்த முறையில் எழுப்புவோம்!

இதன் எதிரொலி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

எழுச்சியுடன் செயல்படுவீர் தோழர்காள்!

Read more: http://viduthalai.in/page-2/93580.html#ixzz3NHzZeLQ7

தமிழ் ஓவியா said...

பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கனிவான கவனத்திற்கு..

இந்தியாவிலிருந்து 6 பெரிய நிறுவனங்கள் தான் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றில் 4 நிறுவனங்கள் இந்துக்களால் குறிப்பாக பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது.

1. அல்கபீர் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சதிஷ் & அதுல் அகர்வால்

2. அரேபியன் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சுனில் அகர்வால்

3. M.K.R புரோசன் புட் ஏற்றமதி பிரை.லிட்
உரிமையாளர்: மதன் அபோட்

4. P.M.L இன்டஸ்டிரீஸ் பிரை.லிட்
உரிமையாளர்: A.S.பிந்தரா

முதலில் இந்த நிறுவனங்களை தடை செய்ய தயாரா? முடியாது எனில் உங்கள் மாட்டரசியல் யாரை ஏமாற்ற??

நன்றி : மக்கள் உரிமை & வேந்தன். இல

தமிழ் ஓவியா said...

ஒரு கதை

நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வர வேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை.

பெரியார்--குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938

தமிழ் ஓவியா said...

கர்நாடகாவில் டிசம்பர் 29 பகுத்தறிவு நாளாகக் கொண்டாடப்படும்!

முதல்வர் சித்தராமய்யா அறிவிப்பு

பகுத்தறிவுக் கவிஞர் குவேம்புவின் பிறந்த நாளன்று (டிசம்பர் 29) அவரைச் சிறப்பிக்கும் வகையில் பகுத்தறிவு நாளாகக் கொண்டா டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 29) குப்பள்ளியில் ராஷ்ட் ரகவி குவேம்பு பிரதீஸ் டனா என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சித்தராமய்யா இதை அறிவித்தார். மேலும் அவர் தமதுரை யில், தனது இலக்கியப் பணியின் மூலம் மூட நம்பிக்கைகளையும், ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர் அவருக்கு சரியான வகையில் சிறப்பு செய்யும் பொருட்டு அவரது பிறந்த நாளான டிசம்பர் 29 அய் பகுத்தறிவு நாளாக அரசு கொண்டா டும் என்று அறிவித்தார். அதையொட்டி ஒவ்வோ ராண்டும் அரசு அலு வலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், பகுத் தறிவையும், அறி வியல் மனப்பான்மை யையும் வளர்க்கும் விதத் தில் நிகழ்ச்சிகள் நடத் தப்படும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93647.html#ixzz3NOPDJb00

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


லக்னோ, டிச.30- காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்ப வர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ் திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங் குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள் ளார். இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப் பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா அறிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93650.html#ixzz3NOPPlBkq

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/93638.html#ixzz3NOPvFppW

தமிழ் ஓவியா said...

மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!


மரணம் - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.

தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.
மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!

இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.
கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.

காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும் இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!

மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.

குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!
தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.

சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.

மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா? 10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.

கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93640.html#ixzz3NOQ5bcIs