Search This Blog

24.12.14

நான் யார்?எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா? -பெரியார்

(தந்தைபெரியார் அவர்களின் 41 ஆண்டு நினைவு நாள்(24-12-1973) சிந்தனையாக இக்கட்டுரையை பதிவு செய்கிறோம். ஊன்றிப் படித்து உண்மைய உணர்ந்து அதன் வழி செயல்படவேண்டுகிறோம். நன்றி. ----தமிழ் ஓவியா)


நான் யார்?


 தந்தை பெரியார்

அன்புள்ள திராவிட மந்திரிமார்களே நான் யார்?
உங்கள் சொந்த எதிரியா?
உங்கள் இன எதிரியா?
உங்கள் கொள்கை எதிரியா?
உங்கள் உத்தியோகம், பதவி பற்றிப் பொறாமைப்படுகிறவனா?
அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா?

இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா?

உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா?
எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா?
டாக்டர் சி. ராஜகோபாலாச்-சாரியாருக்கு நாளைக்கு கருப்புக் கொடி பிடிக்கச் செய்ய வேண்டியவனாக நான் ஆனாலும் அவரிடத்தில் சொந்தத்தில் சிறிதாவது வெறுப்போ துவேஷமோ அல்லது அன்புக்குறைவோ, மதிப்புக் குறைவோ எனக்கு உண்டு என்று அவராவது, வேறுயாராவது சொல்ல முடியுமா?

 தவிர  - 1911ஆவது வருஷம் வரை நான் மைனர், ஒரு முரடன், 1911இல் என் தகப்பனார் செத்தது முதல், அதாவது 1911 முதல் 1920ஆம் ஆண்டு வரையில் நான்

1. தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்ட்
2. ஆனரரி மாஜிஸ்டிரேட்
3. கோ-ஆப்ரேடிவ் அர்பன் பாங்கி செக்ரட்டரி
4. தாலுகா போர்டு மெம்பர்
5. ஜில்லா போர்டு மெம்பர்
6. 1914இல் ஈரோட்டில் நடந்த கோவை ஜில்லா காங்கிரஸ் கான்பிரன்சுக்கு செக்ரட்டரி
7. ஆனரரி வார் ரிக்ரூட்டிங் ஆபீசர்
8. மகாஜன ஸ்கூல் செக்ரட்டரி
9. ஈரோடு ரீடிங் ரூம் செக்ரட்டரி
10. ஈரோடு முனிசிபல் வாட்டர் ஸ்கீம் செக்ரட்டரி
11. வார்கமிட்டி செக்ரட்டரி
12. வார்பண்ட் கலெக்ஷன் கமிட்டி பிரசிடெண்ட்
13. ஓல்ட் பாய்ஸ் அசோசியேஷன் பிரசிடெண்ட்
14. எஸ்.அய்.சேம்பர் ஆப் காமர்ஸ் சப் கமிட்டி மெம்பர்
15. வருஷம், 900 ரூ இன்கம் டாக்ஸ் (1920இல்) அந்தக் காலத்தில் கொடுத்து வந்த வியாபாரி.
16. கடைசியாக முனிசிபல் சேர்மன் ஆகவும் இருந்தவன்.
17. ஈரோடு வாட்டர் வர்க்ஸ் வேலை முடிந்து திறப்பு விழா ஆற்றியதற்கு சர்க்காரில் எனக்கு சர்.பி. ராஜகோபாலாச்சாரியர் சிபாரிசு செய்த ராவ்பகதூர் பட்டத்தை மறுத்துவிட்டு, காங்கிரஸ் சேவைக்கு ஆக என்று இவ்வளவு பதவிகளையும் ராஜினாமா கொடுத்து, சிலவற்றை ஏற்க மறுத்து, சன்யாசி வேஷம் கொண்டு ஆச்சாரியார், வரதராஜூலு நாயுடு விருப்பப்படி காங்கிரசில் சேர்ந்தவன்.
18. இவைகளை ராஜினாமா கொடுத்தபிறகு கூட சர்க்கார் இன்கம் டாக்ஸ் -_ அப்பீல் கமிட்டி மெம்பராக எண்ணை வித்து, கயிறு வியாபாரிகள் அப்பீலுக்கு தனி அப்பீல் அதிகாரியாக நியமித்தார்கள். இதற்கு தினம் 100 ரூபா. படி _- 1லு முதல் வகுப்புப்படி.
19. காங்கிரசுக்கு வந்த உடனே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியானவன்.
20. அடுத்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன் ஆனவன்.
21. தமிழ்நாடு காதி, வஸ்திராலய பவுண்டர் (துவக்கியவன்) ஆகவும், 5 வருசத்துக்குத் தலைவனாகவும் தெரிந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் சுமார் 40 கதர் கடையும், 30 ஆயிரம் முதல் 1,00,000 ரூ. வரை மாதம் கதர் உற்பத்தியும் செய்யும்படி ஏற்பாடு செய்தவன்.
22. 1924இல் நான் பார்ப்பனியம் _-பார்ப்பன ஆட்சி பிடிக்காமல் காங்கிரசிலிருந்து வெளியேறி 1926 முதல் 1936 வரை ஜஸ்டிஸ் மந்திரிகள் நண்பனாக இருந்தவன். அக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் பாடுபட்டவன்.
23. இவ்வளவு சம்பந்தத்திலும், பாட்டிலும் யாரிடமிருந்தாவது ஒரு சின்னக்காசு வரும்படியோ, பட்டமோ எனக்காவது, எனக்கு வேண்டியவர்களுக்காவது, என் குடும்பத்துக்-காவது ஒரு சிபாரிசோ, பதவி லாபமோ ஏதாவது பெற்றவனா? ஆசைப்பட்டவனா?
24. நான் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்பும்கூட காங்கிரஸ் நிர்மாணத் திட்டத்தில் கதரைத் தவிர மற்றவைகளுக்கு ஆக உழைத்தவனே தவிர எதையாவது எதிர்த்தவனா?
25. இந்தி விஷயத்திலும்கூட இந்தி பள்ளிக்கூடம் தென் இந்தியாவில் 1922இல் முதன்முதல் துவக்கத்திற்கு இலவச இடம், 15 மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுத்து வந்ததோடு, அதன் பண்டுக்கும் உதவி செய்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்து உதவி செய்தவன்.
26. அன்றியும் காங்கிரஸ் திட்டத்தில் பார்ப்பன ஆதிக்கம் தவிர மற்றபடி நான் எதற்கு விரோதி?
27. இன்றுதானாகட்டும், எனது அரசியல் கொள்கை என்பதுகூட திராவிடநாடு வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து அரசியலிலும், பொருளாதாரத்திலும் பிரிந்து பர்மா, சிலோன் போல ஒரு தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி காங்கிரஸ் அரசியல் கொள்கையில் திட்டத்தில் நான் எதற்கு விரோதி?
28. இந்தத் திட்டத்திலும் என்னிடம் ஏதாவது இரகசியமுறை இருக்கிறதா?
29. திராவிட நாடு தனியாய் பிரிந்தால் மந்திரிமார்களே! பெரிய அரசியல்வாதிகளே!! திராவிட நாட்டுக்கு என்ன கெடுதி ஏற்படக் கூடும்? என்று இதுவரை நீங்களாவது சொன்னீர்களா?
இவை நிற்க,


 இனி எனது சமுதாயத் திட்டம் தானாகட்டும், வருணாசிரம தர்மமுறை ஒழிய வேண்டுமென்பதும், பார்ப்பன சமுதாயத்துக்கு எந்தத் துறையிலும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேற்பட்ட பங்கும், எண்ணிக்கைக்கு மேற்பட்ட உரிமையும், சராசரி வாழ்க்கை முறைக்கு மேற்பட்ட தன்மையும் இருக்கும்படியான எவ்வித நடப்பும் வசதியும், சலுகையும் இருக்கக் கூடாது என்பது தானே?


சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப் பட்டு இருக்கும் திராவிட மக்களுக்குத் தனிச் சலுகை கொடுத்து கூடியவரையில் சம சமுதாயமாக்கப்பட வேண்டுமென்பதும் தானே?


சமயத் துறையில் புராணக் கடவுள்கள் பிரசாரமும், விக்கிரக ஆராதனையும் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, கோவில், மடம், வர்ணமுறை, தர்மம் என்பவைகள் பேரால் பணம் இருப்பு இருப்பதோ, சேர்ப்பதோ, செலவு செய்வதோ கூடாது என்பதும்,

தர்மம் என்பதெல்லாம் மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வும், வாழ்க்கைத் தேவையில் பெருமித உயர்வு தாழ்வும், இல்லாமல், நித்திய ஜீவனத்தைப் பொறுத்தவரையிலாவது அடிமை உணர்ச்சி தேவையில்லாத ஆண்மை வாழ்வு வாழ வகை செய்ய வேண்டுமென்பதும்தானே ஒழிய மற்றபடி எந்தத் துறையில் என்ன கெடுதி ஏற்பட நான் ஆசைப்படுகிறேன்?

கல்வியில் தானாகட்டும், 100க்கு 90 திராவிட மக்கள் கைநாட்டுத் தற்குறிகளாய் இருக்க, இதைச் சரிபடுத்தாமல் (அய்ஸ்கூல், உயர்தரப் பள்ளி காலேஜ், கல்லூரிகள், பல்கலைக்-கழகங்கள், என்னும் பேரால்) பாட்டாளி மக்களின் உழைப்பை வரியாக வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்யக் கூடாது என்பதைத் தவிர கல்விக்கு நான் எந்த விதத்தில், என்ன கெடுதி செய்கிறேன்?

நமக்கு அரசியலுக்கோ, சமய சமுதாய இயலுக்கோ, வேறு கலை இயலுக்கோ ஆள்கள் வேண்டுமானால் வேண்டிய அளவுக்கு கிராண்டு, ஸ்காலர்ஷிப், ஸ்டைபண்டு கொடுத்து எங்காவது சென்று படித்து வரும்படிச் செய்து வேலை வாங்கலாம் என்றும், ஏராளமான பிரபுக்கள் இருக்கிற நாட்டில் பிரபுக்களுக்கு மாத்திரம் கிடைக்கும்படி கலைகளுக்கு, உயர்ந்த கல்விக்கு ஏழைகள் பணம் ஏன் செலவு செய்யவேண்டும்? என்பவை போன்ற கருத்தன்னியில் மற்றபடி நான் எந்த விதத்தில் நாட்டுக்கு, சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவனாக இருக்கிறேன்? அன்றியும், என்னிடத்தில் எங்காவது எப்போதாவது பலாத்காரத்தைத் தூண்டும் சொல்லையோ, செய்கையையோ, ஜாடையையோ கண்டீர்களா?

அல்லது என் பேச்சால், எழுத்தால், செய்கையால் எங்காவது, என்றாவது பலாத்காரம், கலகம், குழப்பம் ஏற்பட்டதா? சர்க்காரைக் கவிழ்க்கும் ஜாடையைக் கண்டீர்களா? குழப்பம், கலவரம் உண்டாகும் ஜாடையையோ, அனுபவத்தையோ கண்டீர்களா?

ஆதலால் இந்திப் போராட்டத்தை ஒடுக்குவது என்கிற சாக்கை வைத்துக் கொண்டு என் முயற்சியை, என் தொண்டை நீங்கள் அழித்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டீர்களானால் அதை உங்கள் இஷ்டத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எனது தொண்டுக்கும், முயற்சிக்கும் இந்தி ஒழிப்பது என்பது மாத்திரமே காரணமல்ல, என்பதை உணர்ந்து அடக்குமுறை துவக்குங்கள். என் முயற்சி, தொண்டு எல்லாமுமே நியாயமானது, அவை வெற்றி பெற வேண்டும் என்பதேயாகும். அதற்கு நீங்கள் எந்தவிதத் தடங்கலும், குந்தகமும் செய்யக் கூடாது என்பதற்கேயாகும்.

உங்கள் எண்ணத்தை, நடத்தையை நீங்கள் பதவிக்கு வந்த இந்த சுமார் ஓர் ஆண்டாக நான் கவனித்து வருகிறேன். என் விஷயத்தில் இதுவரை பார்ப்பன ஆதிக்க மந்திரிகளால் செய்யப்படாத காரியங்களை நீங்கள் செய்தீர்கள். அவர்கள் அனுமதித்து வந்த காரியங்களை நீங்கள் தடுத்தீர்கள். அவர் காட்டிய சலுகையைக்கூட நீங்கள் காட்ட மறுக்கிறீர்கள்.

இதற்குக் காரணம் என்ன? உங்கள் பதவிப்பித்து அல்லது பயங்காளித்தனம் தானே? இல்லாவிட்டால் நான் என்ன அயோக்கியனா? சமுதாயத்துக்கு, அரசியலுக்கு ஆபத்தானவனா? என்னமோ செய்யுங்கள்!

-------------------------------------- தந்தை பெரியார்- "குடிஅரசு", 21.08.1948

23 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரைப்போம்!

விதைத்தீர்கள், அறுக்கவில்லை;
நெய்தீர்கள், உடுக்கவில்லை;
உழைத்தீர்கள், அனுபவிக்கவில்லை;
இனி வாளையும், கேடயத்தையும்
உங்களுக்காக உருவாக்குங்கள்
வீறு கொண்ட உரிமைக் குரல்
வெளியெங்கும் சிதறட்டும்!
அடக்குமுறைச் சிம்மாசனங்கள்
அடிமைகளால் சிதையட்டும்!
இது கவிஞன் ஷெல்லியின் சிந்தனை உறைவாளிலிருந்து சிதறிய ஒளிமுத்துகள்.

முழங்கால் சேற்றினில்
முக்கி விதைத்தவன்
மூடச் சகோதரன்
பள்ளப் பயல் - அதை
மூக்குக்கும், நாக்குக்கும்
தண்ணீர் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே!
இது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் குமுறல்!

எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாகி விட்டன. இவை ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாகி விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக்கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண்வேலை யாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண் டிருக்கிறார்கள். மண்ணையும், சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாய் விட்டது.

பார்ப்பானுக்குப் பாழாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக் குள்ள கவலை அடியோடு போய்விட்டது. பணக்காரன், ஏழைகளை அடிமைப்படுத்துவது முறையாய் விட்டது.

வலிவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பது ஆட்சியாய் விட்டது. தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவது வழக்கமாய் விட்டது.

வலிவுள்ளவனோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவற்றைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலே இறங்கி இருக்கிறோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை (குடிஅரசு, 4.5.1930, பக்கம் 8).

தமிழ் ஓவியா said...


இது தந்தை பெரியாரின் போர்க்குரல்!

இந்தச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற அனைத்துத் திசுக்களையும் ஊடுருவிப் பார்த்து உண்மை நிலையை அப்பட்டமாகத் தோலுரித்துள்ளார் பகுத்தறிவுப் பகலவன்.

சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் இருக்கிறான் என்றால், அது எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம்தான் இருக்க முடியுமா? என்று தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. உலக வரலாறு எழுதிய ஜவகர்லால் நேரு முதல் எத்தனையோ பேர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும் உண்மையான சுதந்திரம் வந்த பாடில்லை.

ஆனால், ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர நாள் கொண்டாடி பிள்ளைகளுக்கு மிட்டாய்க் கொடுத்துத்தான் வருகிறோம்.

அதிர்ச்சி வைத்தியம்கூடக் கொடுத்துப் பார்த்தார் தந்தை பெரியார். மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தையும் பகிரங்கமாகவே நடத்திக் காட்டினார்.

ஒருவர், இருவர் அல்ல; பத்தாயிரம் பேர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர் கருஞ்சட்டைத் தோழர்கள்.

அந்தக் கடுமையான விலையைக் கொடுத்த பிறகும்கூட, ஆட்சிக்கு வந்தவர்கள், அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஜாதி பாதுகாப்புப் பிரிவை மாற்ற முன்வரவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இன்றுவரை இந்து மதத்தில் உள்ள குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும் கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதே மதத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவ்வுரிமை வேண்டும் என்று போராடினால், ஏன், சட்டமே செய்தாலும்கூட அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக்கூடிய பார்ப்பனர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சாதக மான தீர்ப்பையும் வழங்கும் அவல நிலைதான் இன்றைக்கும்.

அதற்குச் சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா? பார்ப்பனர்களைத் தவிர, அந்த மதத்தில் உள்ள மற்ற பிரிவினர் அர்ச்சகரானால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும், தோஷம் ஏற்பட்டு விடும் என்று ஆகமங்களை ஆதாரப்படுத்திக் காட்டுகின்றனர். தீட்டைக் கழிப்பதற்குப் பலவித பிராயச்சித்தங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். அதனை ஏதோ ஒரு வகையில் உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, பார்ப்பனர் அல்லாத மக்கள் மீதான இழிவு சட்டப்படி, நீதிமன்றத் தீர்ப்புப்படி நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறதா, இல்லையா?

தந்தை பெரியார் இந்த இழிநிலையை ஒழித்துக்கட்டும் போர்க்களத்தில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அந்தக் களத்தில் நின்றபடியே தான் தனது இறுதி மூச்சைத் துறந்தார்கள். தனது இறுதிப் பேருரையில்கூட உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுப் போகிறேனே! என்ற ஆதங்கத்தை மரண சாசனமாக முழங்கினார்களே! அதனை தந்தை பெரியார் அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

உச்சநீதிமன்றத்திலே தீர்ப்புக்காக இந்தச் சட்டம் காத்திருக்கிறது. இந்த நேரத்தில், திராவிடர் கழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு - தம்மைச் சூத்திரர்கள் என்று ஒப்புக்கொள்ளாத அனைவரும் தோள் கொடுப்பார்களாக!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93405.html#ixzz3Moigfcwz

தமிழ் ஓவியா said...



பெரியார் பணி முடிக்க களங்காண வாரீர்!
தந்தை நினைவு நாளில் கழகத் தலைவர் ஆசிரியர் அழைப்பு

நமது விழிகளைத் திறந்த வித்தகர் - பகுத்தறிவுப் பகல வன் - சுயமரியாதைச் சூரணகர்த்தா - அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 41 ஆம் ஆண்டு நினைவு நாள், இந்நாள்!

வரலாற்றுக் குறிப்பு நாள்!

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்! அய்யா விட்ட பணி அரும்பணிகளில் எவை எவை எஞ்சியுள்ளவை என்று எண்ணி எண்ணிப் பார்த்து, இனி அவற்றை நிறைவேற்றி வெற்றி பெற்றிட வழிவகைகளைக் காண

அவரது அருந்தொண்டர்களாக உள்ள நாம் அசை போட்டு சிந்தித்துத் திட்டம் வகுக்கும் திடசித்த நாள்!

அய்யா என்ற மாபெரும் புரட்சியாளர் - உடலால் மறைந்து, உணர்வில் நிறைந்து, லட்சியங்களாக, நம் இரத்த நாளங்களில் உறைந்து வாழுகிறார் என்பதால், எப்பணியும் நமக்கு எளிதே!

ஏனெனில், நாம் அப்பணிக்கு நம்மை அர்ப்பணித்திட, அளப்பரிய தியாகம் செய்ய என்றும் ஆயத்தமாகக் களத்தில் நிற்கும் கட்டுப்பாடு என்ற கவசம் அணிந்த கருஞ்சட்டைப் பாசறை அல்லவா நாம்! எனவே, தோழர்களே, தோழியர்களே, நல் இளம் சிங்கங்களே!

மாரத்தான் ஒட்டத்தைவிட, மரண பயத்தை வென்று, மகத்தான வரலாற்றை, இரத்தம் சிந்தாமல், வன்முறைகளை நம்பாமல், அய்யா தந்த அறிவாயுதத்தையே பயன்படுத்தி, பழைமை பஞ்சாங்கத்திற்கும், பத்தாம் பசலித்தன மதவெறிக்கும், சரிந்துவரும் ஜாதிக்கும் எதிரான களத்தில் ஒத்த கருத்துடையோரை நம் துணை இராணுவமாக்கி, தொடர் போர் செய்வோம்; ஆம், அது அறப்போர்!

படமெடுக்கும் ஆரிய நச்சரவம்!

அய்யா அவர்கள் மறைந்து 41 ஆம் ஆண்டு காலத்தில், அய்யா இல்லை என்ற தைரியத்தில் அவ்வப் போது ஆரியம் வாலாட்டிப் பார்த்துக்கொண்டே இருக் கிறது; அந்த நச்சரவம் படமெடுத்தாடிப் பயமுறுத்திடும் நிலை முன்னிலும் இப்போது அதிகம்!

என்றாலும், ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி அதற்கு மரண அடி கொடுத்துவரும் பெருமை அவர் தடிக்கே உண்டு அல்லவா!

அத்தடி நமக்கு கூரிய ஆயுதம்! அதனைப் பயன் படுத்தும் லாவகம் நமக்கு என்றும் அத்துப்படியே!

ஆரியத்தின் கனவு பலித்ததா?

சமூகநீதியை ஒழிக்க அது நடத்திய போரில், அதுவும் பெரியார்தம் நூற்றாண்டு விழாவின்போது, அதற்கு வெற்றி கிட்டியதா? விழி மூடிவிட்டார் அந்த வீரக்கோட்டத்தின் தலைவர்! எனவே, நாம் வியூகம் வகுத்து அவர் லட்சி யத்தை அழித்துவிடலாம் என்று பார்ப்பனீயம் - அதன் தரகர்கள் வடிவில் கனவு கண்டது - பலித்ததா? பலிக்கவிட வில்லையே அவர்தம் அருந்தொண்டர்களாகிய நாம்!

அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற அய்யாவின் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புத் திட்டம் சட்டமாகிய பின் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளதை முழு செயல் வடிவத்திற்குக் கொண்டு வர வேண்டிய பணி - நம்முன் உள்ள உயிர்க்கடமையாகும்!

மதவெறி - அப்பட்டமாக, நிர்வாணக் கோலத்தில் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது.

ஆட்சி - அதிகாரப் போதையினால்...

அந்த அதீதப் போதைக்கு முடிவு கட்ட

ஈரோட்டுப் பாதையால் கண்டிப்பாகவே முடியும்!

எப்பணிக்கும் முன்னர் இப்பணி இன்றைய அவசரம் - அவசியம் என்பதால், அப்பணியை நோக்கி அய்யாவின் நினைவு நாளில் சூளுரைத்து,

பெரியார் உலகமைப்போம்

பேசு சுயமரியாதை உலகமைப்போம்! என்று உழைக்கவும் உயிர் வெல்லமல்ல எமக்கு என்பதை உலகுக்குக் காட்டவும் உண்மை நெறியில் நின்று உழைக்க உறுதி கொள்வோம்!

களங்காண வாரீர்!

நமக்குப் பதவியும், புகழும் துச்சம் - சுயமரியாதை நம் பணியின் விழுமிய எச்சம்
என்று புறப்படுவோம்!

ஈரோட்டுப் பாதையில் என்றும் நடைபோட்டு, இலட்சிய வெற்றியைப் பறிப்போம்!

வாரீர்! வாரீர்! களங்காண வாரீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
24.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93396.html#ixzz3MojpePe1

தமிழ் ஓவியா said...

சூத்திரப் பட்டம் ஒழிய...

பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்.
_ (குடிஅரசு, 11.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/93400.html#ixzz3Mok5T3ea

தமிழ் ஓவியா said...

வாழ்வார்; வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்: கலைஞர்


சென்னை, டிச.24_ தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (24.12.2014) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:_ நம்முடைய அறிவு ஆசான், தந்தை பெரியார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! என்னுடைய நினைவுகள் 41ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் உட்பட நம்முடைய அரசியல் ஆசானும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும், இந்தி ஒழிப்புப் போரின் முதல் தளபதியும், பைந்தமிழ் நாட்டில் பகுத்தறிவுச் சுடர் பரப்பியவரும், கௌதம புத்தருக்குப் பின் வந்த சமுதாயச் சீர்திருத்தப் புரட்சியாளரும், தென்னகத்தில் முதன் முதலாக சமதர்மக் கருத்துகளை அறிமுகம் செய்தவரும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பாதுகாவலராக இருந்தவரும், திராவிடக்கழகத்தின் ஒப்பற்றத் தலை வருமான, பகுத்தறிவுச் சிங்கம், சமுதாயப் பணியாற்றிய சரித்திர நாயகன், நமக்கெல்லாம் தன்மானம் கற்பித்த தங்கம், தமிழ் இனத்தின் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்கள் 1973ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் நாள், காலை 7.40 மணிக்கு வேலூர் மருத்துவ மனையில் இயற்கை எய்தினார். செய்தி பரவி இயக்கத் தோழர்களும், தாய்மார் களும் நடக்கக் கூடாதது, நடந்து விட்டதே; சீர்திருத்தப் போரின் தளநாயகனது புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே என்று கதறினர். செய்தி அறிந்ததும் எனக்கு என்ன செய்வ தென்றே புரிய வில்லை. பெரியாருடைய நான் பழகிய நாள்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக என் கண்களிலே நிழலாடின. அப்போது முதலமைச்சராக நான் இருந்ததால், முதலமைச்சர் என்ற முறையில் என்னை வளர்த்த அந்த அறிவு ஆசானுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக் கடன் என்று யோசித்தேன். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி, தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், பெரியாரின் உடலை பொது மக்கள் பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடுகளைக் கவனிக்கக் கூறினேன். பெரியார் அவர்கள் அரசுப் பொறுப் பில் எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நான் கூறினேன். நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆக வேண்டும், அதனால் தி.மு. கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்று மேயானால், அதைவிட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது. எனவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், நடக்க வேண்டியதைக் கவனியுங்கள் என்றேன். அவ்வாறே ஏற்பாடுகள் நடைபெற்றன. பெரியாரின் உடலை உடனடியாகச் சென்னைக்கு எடுத்து வரச்செய்து, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் நானும், அமைச்சர்களும், பெருந்தலைவர் காமராஜர், இளவல் வீரமணி, அன்னை மணியம்மையார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மற்றும் தமிழகத் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டோம். பெருந்தலைவர் காமராஜர் என்னை அரவணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். பெரியாருடன் பழகிய பல்வேறு நினைவுகள் அடுக்கடுக்கான என் நினைவுகளில் அப்போதும் வந்தது, இப்போதும் வருகிறது.

புதுவையில் கழக மாநாடு நடத்திய போது, என்னைக் குண்டர்கள் தாக்கி, இறந்து விட்டதாகக் கருதி, சாக்கடையோரத்தில் போட்டு விட்டுச் சென்ற போது, தந்தை பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் தேடி, விடியற்காலை 4 மணி அளவில் நான் அவர்கள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்ட போது, தந்தை பெரியார் அவருடைய கையால் என் காயங்களுக்கு மருந்திட்ட நிகழ்வு மறக்கக்கூடியதா? அதன் பிறகு என்னுடன் வா, போகலாம் என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பெரியாரின் குடியரசுஅலுவலகத்திலே துணையாசிரியனாகப் பணி புரிந்த நிகழ்ச்சியைத் தான் நான் மறக்க முடியுமா? அப்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற தலைப்பிலும், தீட்டாயிடுத்து என்ற தலைப்பிலும் எழுதிய கட்டுரைகளை பெரியார் பெரிதும் பாராட்டினாரே, அதைத் தான் என்னால் மறக்க முடியுமா? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், திருச்சியில் பெரியார் கலந்து கொண்ட நாளில், நானும் அங்கே போராட்டத்தில் கலந்து கொண்டதை மறக்க முடியுமா? 1967இல் தி.மு.கழகம் பொதுத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றவுடன், அண்ணாவும் நாங்களும் திருச்சிக்குச் சென்று பெரியாரைப் பார்த்தோமே, அதைத் தான் மறக்க முடியுமா? பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்; ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் என்று நான் அப்போது எழுதினேனே, அதை மறக்க முடியுமா? இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! அந்தப் பெருமகனின் 41ஆவது ஆண்டு நினைவு நாளில் வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும் வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் - இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;
எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார், இப்போதோ
இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.
என்று நான் 1974ஆம் ஆண்டு சேலம் கவியரங்கில் எழுதியதையும் நினைவு கூர்கிறேன். அவர் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார், வாழ்வார் என்று வாழ்த்து கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/93415.html#ixzz3Mol6sxs3

தமிழ் ஓவியா said...

போராட்டமே வாழ்க்கை!

சிலருக்கு வாழ்க்கையே போராட்டம் பல காரணங்களால்! மாட மாளிகையுடன் செல்வச் செழிப்பில் வாழவேண்டிய வாழ்வை உதறிவிட்டுப் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் நமது ஈடு இணையற்றத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனது மக்கள் மானமும் அறிவும் உள்ளவர்களாக வாழவேண்டும். எவ்வளவோ படித்த அறிஞர்கள் இருந்தும் யாரும் முன் வரவில்லை என்ற ஒரே தகுதி தான் எனக்கு. கொள்கைகள் மிகவும் கடினமானவை, யாரும் வரமாட்டார்கள் என்று நெருங்கிய நண்பர்களே சொன்னபோது அதைப்பற்றிக் கவலையில்லை என்று சொன்ன துணிச்சல்காரர். சொன்னது அனைத்தையும் செய்து காட்டிய வெற்றி வீரர்.

உடலைப் பற்றிக் கவலைப்பட வில்லை. கடும் எதிர்ப்பு ,நண்பர்களின் துரோகம், இழப்பு கண்டு தளரவில்லை. ஒவ்வொரு மணித்துளியையும், ஒவ் வொரு காசையும் தன் இனத்திற்கான அடித்தளமாக் கியவர். அந்த அடித்தளம் நன்றாக அமைந்ததின் வெளிப்பாடுதான் அன்னை மணியம்மையாரும் அதன் பின்னர் நமது ஈடில்லா ஆசிரியப் பெருந்த கையும். கருஞ்சட்டைப் படை என்றாலே தமிழ், தமிழினம் அதற்கான அறவழிப் போராட்டம் என்பது தான் மக்களின் கண் முன்னரே வருமாறு தொடர்ச்சி யானப் போராட்டங்கள் தான். அறிவு ஆசான் வழியிலேயே தலைமை! உடலைப்பற்றிய கவலை இல்லை! உள்ளமெல்லாம் தொண்டர்களின் உற்சாகம்! பெரியார் தொண்டு செய்யாத மணித்துளி வீண்! இளைஞர் படையின் உற்சாகம். உள்ளத்தில் இளமை யுடன் உற்சாகமாகப் பங்கேற்கும் என்பதும் தொன் னூறும் கண்ட பெரியார் பெருந்தொண்டர்கள்! பல்துறை வல்லுநரின் பங்கேற்பு! தமிழரின் போர்க்க வசமாகத் திகழும் கருஞ்சட்டைப் படையின் நன்றியோ, பதவியோ, புகழோ தேடாத ஒரே முழக்கம் "போராட் டமே வாழ்க்கை!"

ஆம்! ஜாதி ஒழிய வேண்டும். மதங்கள் மாய வேண்டும். மனித இனம் பகுத்தறிவுடன் தன்மானத் துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்! அதற்கு இன்றைய கணினி வழி எளிய சிறந்த வழி. அனைவரும் கற்று செயல் பட வேண்டிய வழி. கற்போம். செயல் படுவோம்.
தந்தை பெரியாரின் தொண்டன், ஆசிரியரின் மாணவன், போராட்டமே எங்கள் வாழ்க்கை என்ற உறுதியுடன் உழைப்போம். உலகே பெரியார் வழி வாழ்ந்து மகிழட்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சோம.இளங்கோவன்

Read more: http://viduthalai.in/page-3/93417.html#ixzz3MoljPygY

தமிழ் ஓவியா said...



மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது!

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை



நடந்து முடிந்த காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் மூலம், மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தை யின் மவுசு குறைகிறது. ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்? என திரா விடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது; நாளும் மங்கி வருகிறது. பிரச்சாரப் புகைமூட்டத்தால் மூடப்பட்ட உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்கும் நிலை - நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே நாட்டில் நடந்து கொண்டுள்ளது!

எப்போதுமே வித்தைகள் சில நேரங்கள் வரைதான் பார்க்க ரசனையாக இருக்கும். அந்த மேஜிக் 24 மணி நேரம் நீடித்தால் அதன் குட்டு உடைந்துவிடும் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

நடந்து முடிந்த தேர்தலில், காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தனித்த ஆட்சியாக அமைக்காது என்பது அடிப்படையில் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய நிலை!

- இத்தனைக்கும் அங்கே தேர்தலில் சண்டமாருதப் பிரசங்கங்கள் செய்த பா.ஜ.க. பிரதமர் மோடியும் அவரது கட்சியும், இந்துத்துவா கருத்துக்களை அழுத்தமாக - இராமனுக்குக் கோயில் கட்டுவோம் - 370ஆவது பிரிவு - காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் பிரிவை ரத்து செய் வோம் என்பது போன்ற பிரச்சாரங்களை அங்கு செய்யவில்லை. வாக்கு வங்கி எதிர்பார்ப்பு காரணமாக.

9 சதவிகித வாக்குகள் சரிவு

அப்படியிருந்தும் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் (2014) பா.ஜ.க. பெற்ற வாக்குகளைவிட 9 சதவிகித வாக்கு களை இழந்து, சரிவை நோக்கியுள்ளது!

ஜம்மு - காஷ்மீர் என்பதில், ஜம்மு பகுதியில்தான் தாங்கள் பெற்ற அனைத்து இடங்களும் உள்ளதே தவிர, இஸ்லாமியர்கள் வாழும் மற்ற பகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று இவர்கள் அப்பகுதி தோல்விக்கு சமாதானம் கூற முற்படலாம். ஜார்க்கண்ட், மாநிலத்தில் அதிகம் ஹிந்துக்கள் தானே உள்ளனர்? அங்கேயும் 20 தொகுதிகளை இழந்து 10 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு அடுத்தபடி நடைபெற்ற இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வில்லையே - (இதை நாடு மறந்திருக்கலாம்)

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்

ஹிந்துத்துவ அஜெண்டாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றும் வகையில், சமஸ்கிருதப் பண்பாட்டை நாடு தழுவிய அளவில் திணிக்கவும், ஹிந்தி மொழி ஆதிக்கத்தையும், மத மாற்றம் என்ற சிறுபான்மையினரை அச்சுறுத்தல் தந்திரங்களையும், ஆர்.எஸ்.எஸ். முன்பு போட்ட தீர்மானமான பண்டிட் மதன்மோகன் மாளவியா போன்ற இந்து மஹாசபை தலைவருக்கு புதை பொருள் கண்டெடுப்பு போல பாரத ரத்னா பட்டம் தருவது, ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

காங்கிரசை எந்தக் காரணம் கூறி, குறை கூறி குற்றம் சுமத்தினார்களோ, அதைத் தானே இப்போது கூச்ச நாச்சமின்றி அவசர அவசரமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் பெயர் சூட்டல் முதல் பல முறைகளில் செய்கின்றனர்.

நல்ல ஆளுமை என்பது இதுதானா?

பண வீக்கம் குறைந்துள்ளது என்பது மோடி ஆட்சியின் சாதனையா? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude oil) விலை மளமளவென்று வீழ்ச்சி அடைந்ததன் இயல்பான விளைவுதானே அது? மறுக்க முடியுமா?

உண்மை ஒரு நாள் வெளியாகும்

மோடியின் ‘Make in India’ என்ற உற்பத்தித் திட்டம் வெற்றியாக அமையாது; என்று ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளாரே அதற்கு என்ன பதில்?

காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு சரிந்ததை நாங்கள் வந்து சரிக் கட்டுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார்களே! இன்று நடந்ததா ஒரு டாலருக்கு 63.8 ரூபாய் என்ற நிலைதானே!

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் துவக்கப்படுகிறது.

சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் நலவாழ்வு - சுகாதாரத் துறையில் மோடி அரசு குறைத்துள்ளது என்று இன்று செய்திவந்துள்ளதே!

உண்மை ஒரு நாள் வெளியாகும் ஊருக்கு எல்லாம் தெளிவாகும் என்ற நிலை விரைந்து வருகிறது!

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரை யும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது வரலாறு.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
25-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93440.html#ixzz3MuOpThYp

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்

தினமணி 24.12.2014

ஓ, பகுத்தறிவுன்னாலே குமட்டிக் கொண்டு வருகிறதோ! எந்தப் பண்டிகையையும் திராவிடர் கழகம் கொண்டாடுவதில்லை.

தினமணிக்கு ஒரே ஒரு கேள்வி. கிருத்தவர்களோ, முசுலிம்களோ தங்கள் மக்களில் ஒருபகுதியினரை சூத்திரன் (வேசிமகன்) என்று சொல்லுவதில்லை.

ஆனால் உன் கொழுப்புத் திமிர் ஏறிய இந்து மதம் தானே பார்ப்பனர்களைத் தவிர மற்ற வர்களை (நடைமுறையில்) சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறது சொல்லு கிறது.

உன் பண்டிகையைத் கொண்டாடி வேசிமகன் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/93438.html#ixzz3MuP9mQbe

தமிழ் ஓவியா said...

நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன


அன்புள்ள தோழர் அ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம் 15.12.2014 அன்றைய விடுதலை நாளிதழில் 4 மற்றும் 5-ம் பக்கங்களில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் பேசிய ஒரு அருமையான சொற்பொழிவு இடம் பெற்றுள்ளது. விஜய பாரதத்தின் திரிபு வாதம் என்ற தலைப்பில் அதனை துண்டு பிரசுரமாக / ஆறு பக்க நூலாக அச்சடித்து வெளியிட வேண்டுமென்று விரும்புகின்றேன். அதில் நாம் படிக்க வேண்டிய ஏராளமான விசயங்கள் இருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணிகளும் ஏராளம் இருக்கிறது என்பதை அந்த உரை நம்மக்கு உணர்த்துகிறது. குரங்கின் கைபட்ட பூமாலை போல் நம்நாடு சின்னா பின்னமாக சிதைவதை தடுத்தாக வேண்டும். ஏற்கெனவே அய்யா எஸ்.எஸ். அன்பழகன் அவர்களோடு இணைந்து 17.04.2013 அன்று விடு தலையில் வெளிவந்த அய்யா கி. வீரமணி அவர்களின் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் களோடு கூட்டாக அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகித்ததைப் போல் இதனையும் விநியோகிக்க வேண்டும் . அதற்கான செலவுகளை நாம் பகிர்ந்து கொள்ளுவோம்.

தோழமையுள்ள
- ஞான. அய்யாபிள்ளை,
மும்பை கவுன்சில் உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Read more: http://viduthalai.in/page-2/93435.html#ixzz3MuR2lTdZ

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

காரணம்

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.
(குடிஅரசு, 4.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/93491.html#ixzz3N0OE3fBQ

தமிழ் ஓவியா said...

காலத்தின் கட்டாயம்

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட (23.12.2014) ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த - அறிவித்த கருத்து இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது.

அது - சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் - ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்குகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான் திராவிடர் கழகத் தலைவர் மதச் சார்பற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற ஓர் அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் தமிழர் தலைவர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் ஆசிரியர் அவர்களின் கருத்தினை, அறிவிப்பினை வழிமொழிகின்ற வகையில் பேசியது வரவேற்கத்தக்கது.

நேற்று (25.12.2014) நாகப்பட்டிணம் மாவட்டம் கீழவெண்மணியில் சுயமரியாதையை உயர்த்திப் பிடிப்போம்! எனும் தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (ஞிசீதிமி) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

அந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்திற்குச் சிறப்பு அழைப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றார். இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது நிறைவு உரையில் முக்கியமாக இதே கருத்தினை வலியுறுத்தினார்.

இந்துத்துவா - பாசிச சக்திகள் கொடும் மூர்க்கத் தனத்துடன் தமது மதவாதக் கோட்பாடுகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்ல துடிதுடித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், இந்த அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு அவசியம் தேவை என்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் கண்டிப்பாகவே இருக்காது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது - இந்தியாவில் ஓர் இந்து ஆட்சி வந்தால் என்ன தவறு? என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்துத்துவா கொள்கையை மூச்சாகக் கொண்டவர் களும், சங்பரிவார் வட்டாரங்களுக்குச் சொந்தக்காரர் களுமான தலைவர்களுக்குப் பாரத ரத்னா அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண் விழி எனப் போற்றப்படும் கல்வியையே காவி மயமாக்குவதற்கான முயற்சிகளில் மனிதவள மேம் பாட்டுத் துறை இறங்கிவிட்டது; பார்ப்பனீய கலாச் சாரத்தின் சின்னமான சமஸ்கிருத மொழியை திணிக் கவும் முண்டாசு கட்டி முயலுகிறது.

இந்துக்களாக மாற மனமில்லை என்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடலாம் என்று பொருளில் பிஜேபியின் முன்னணித் தலைவர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.


தமிழ் ஓவியா said...

மதமாற்றம் என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், சலுகை களை முன் வைத்துப் பணம் கொடுத்தும், பொருள்களை வழங்கியும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களை இந்து மதப் பட்டியலில் அடக்கும் விபரீதமான வேலையும் வாயு வேகத்தில் நடந்து கொண்டுள்ளது.

இவையெல்லாம் பாசிசத்தின் அப்பட்டமான சிந்தனையும், செயல்பாடுகளும்தான் என்பது வெளிப் படை. இவர்களின் ஆட்சிக் காலத்தில், வேறு எந்த காலத்தையும்விட மதக் கலவரங்கள் வெடித்துக் கிளம் புமோ என்ற பீதி, மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக - அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பதவி நாற்காலிகளில் உட்கார்ந்தவர்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, அதன் ஆணி வேரை அடியோடு வெட்டுகிறவரை - இவ்வளவுப் பச்சையாக இந்தியாவை இந்து மயமாக்கும் ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள் என்கிறபோது - மதச் சார்பற்ற சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!

மதச் சார்பற்ற சக்திகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், குறிப்பாக அரசியல் அடிப்படையில் சிதறுண்டு கிடப்பது - இந்துத்துவா சக்திகளுக்கு கொழுத்த தீனியாகி விட்டது. மத அடிப்படையில் வாக்கு வங்கிகளை உருவாக்கி, எளிதில் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற அவர்களின் திட்டம் எளிதாகவே நிறைவேறி விடுகிறது.

அரசியலில் ஆழமான அனுபவமும், புரிதலும் உள்ள தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்வதில் ஒன்றும் சிரமம் இருக்கப் போவதில்லை.

வட மாநிலங்களில் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும், நிதிஷ்குமாரும் ஒரு கட்டத்தில் எதிர் எதிராக இருந்தாலும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள காவி மதவாதஅச்சுறுத்தல் பூகம்பத்தை எதிர் கொள்ள வேண்டியது - காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்து கொண்ட நிலையில், தங்களுக்கிடையே இருந்த மாச்சரியங்களை மரண குழியில் தள்ளி விட்டு ஒன்றிணைந்து உயரே கைகளை உயர்த்தியுள்ளனர்.

மற்ற மாநிலங்களைவிட சமுதாய விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இந்தப் புரிதல் என்பது எளிதானதே! இன்னும் சொல்லப் போனால் இதனை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்பதற்கான சகல தகுதிகளும் உண்டு.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஆராய்ச்சி யில் ஈடுபடாமல், உரிய காலமான இந்தத் தருணத் திலேயே மதச் சார்பற்ற சக்திகள் - சமூகநீதி அமைப் புகள் முனைய வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்! விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் - இதற்கு உதவிடத் தயார் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள் ளார். தேர்தலில் ஈடுபடாத அமைப்புஎன்ற கூடுதல் தகுதியும் திராவிடர் கழகத்துக்கு உண்டே!

Read more: http://viduthalai.in/page-2/93492.html#ixzz3N0OMtxeK

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அரசு அலுவலகத்தில் கோயிலா? கழகம் நடவடிக்கை


விருத்தாசலம், டிச. 26_ விருத்தா சலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத் தக்கோரி விருத்தாசலம் மாவட்டம் தி.க. சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில், இந்து மதக் கோயில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஆண்டு அலுவலக செயற் பொறியாளர் மற்றும் கோட்டாட்சிய ரிடம் முறையிடப்பட்டது. அப் போதைய கோட்டாட்சியர் ஆனந்த குமார் கோயில் கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், அதே அலுவலக்தில் மீண்டும் கோயில் கட்டுமானப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதை அறிந்த கழகத் தோழர்கள், நீர்வள ஆதா ரத்துறை அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, விருத் தாசலம் கோட்டாட்சியர் ப.மு.செந் தில் குமாரை சந்தித்து, விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் மனு அளித்தார். அப்போது, மாவட்ட செயலர் முத்து. கதிரவன், மாநில மாணவரணி இணைச் செயலர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன், மண்டல இளைஞரணி செயலர் ப.வேல்முருகன், மாவட்ட இளை ஞரணி செயலர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.ராமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.குமரேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் இந்துக் கடவுள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் விதி முறையை மீறிய செய லாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு அரசு பொது இலாகா, நாள் 29.04.1968, நினைவுக் குறிப்பு எண் 7553-_6-2 இல் மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத் தைச் சார்ந்த சாமியார்கள், கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரஸி அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கக்கூடாது எனவும், இவை இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் ஆணை பிறப் பித்துள்ளது. இதே போல், 17.03.2010 அன்று, அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித் துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் ஆணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மேற்கண்ட அலுவலகத்தில் நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/93493.html#ixzz3N0PGwJuA

தமிழ் ஓவியா said...

நல்லதோர் கருத்துப் பரிமாற்றம்


நல்லதோர் கருத்துப் பரிமாற்றம் என்ற தலைப்பில் விடுதலையில் 03.12.2014 அன்று வெளிவந்த தலையங்கம் அருமை. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் செய்தியில் பெரியார் தொலைக்காட்சி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும். பெரியார் தொலைக் காட்சியின் வரவை ஆவலுடன் எதிர்பார்கிறோம். ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர் என்ற தலைப்பில் விடுதலையில் 04.12.2014 அன்று வெளிவந்த ராசி பலன் முரண் பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்பதை இதைவிட யாரும் விளக்க முடியாது.

- ஞான. அய்யாப்பிள்ளை, செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தாராவி கிளை, மும்பை 400017.

Read more: http://viduthalai.in/page-2/93519.html#ixzz3N0Pavirb

தமிழ் ஓவியா said...

உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க, ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற ஆராய்ச்சி விசயமுங்க... மூளை ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரச மரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில் குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக் கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்! முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க!

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கை யெங்குறாங்க - இனிமேல் இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம். இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981)

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rb3bIJ

தமிழ் ஓவியா said...

காஞ்சி முனிவரே, ஒரு சந்தேகம்!

முற்காலத்தில் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்தார்களாம். அதற்கு காரணம் ஜனங்கள் எல்லாம் கோயிலுக்குப் போனார்களாம். கோயிலில் மகாபாரதம் போன்ற சத் கதைகள் நடைபெற்றனவாம். அதனால்தான் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகந்திர சரஸ்வதி கூறியதாக, அவரது படத்தையும் போட்டு கல்கி (26.7.1981) வெளியிட்டுள்ளது.

நமக்கொரு சந்தேகம்! அதைக் காஞ்சி முனிவரிடமே கேட்போம் அக்காலத்தில் மக்கள் யோக்கியர்களாக இருந்தனர் என்பது உண்மை என்றால், பகவான் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்ததாகக் கூறுகிறீர்களே... அது என்னது? உங்கள் கூற்றுப்படியே ராட்சதர்கள், அரக்கர்கள் இருந்தனர் என்று அளக்கின்றீர்களே, அது எப்படி? 60 ஆயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியது எதற்கு?

மகாபாரதம் போன்ற சத்கதைகள் கூறப்பட்டதாக சொல்கிறீர்களே... அந்த மகாபாரதமே தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த போர் என்றுதானே சொல்லு கின்றீர்கள்! அதெப்படி அந்தக் காலத்தில் அதர்மம் வந்தது?

இன்னொரு சந்தேகமும் கூட... இந்தக் காலத்தில் கோயில்கள் இல்லையா? இந்தக் கோயில்களால் மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லையா?

அப்படியானால் வெட்டித்தனமாக இந்தக் கோயில்கள் இருப்பதை விட. அவற்றில் உள்ள குழவிக்கற்களை (சாமிகளை ) அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடங்களை வேறு உருப்படியான காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள் ளலாமா?

தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள். கதைப் புத்தகங்கள் எல்லாம் அதிகமானதும், இக்கால ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணம் என்று சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இதயம் பேசுகிறது, கல்கி, சாவி போன்ற உங்களவாள் ஏடுகளின் அட்டைப் படங்கள், கதைகள் இவற்றைக் கொண்டு சொல்லுகின்றீர்களா? கண்ணதாசன் என்ற ஒழுக்க சீலர் கல்கியிலே மனவாசம் எழுகின்றாரே... அது ஒன்று போதாதா ஒழுக்கக் கொழுந்துகளுக்கு?

இன்னொரு சந்தேகமும் வந்து தொலைக்கிறது!

காஞ்சிபீடம், துவாரகா பீடம், சிருங்கேரி பீடம் என்று பீடங்களை வைத்துக் கொண்டு, அதில் உங்களை நீங்களே சங்கரனின் மறுவடிவம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்றீர்களே, உங்களால் இந்த மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டீர்களே... வெட்டித்தனமான இந்த மடவேலையை விட்டு விட்டு மடப்பள்ளி வேலைக்காவது போகக்கூடாதா?

உண்மை, 1.8.1981

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rkueee

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

அந்தோ பரிதாபம் - அய்யப்ப பக்தர் பலி

பாலையம்பட்டி, டிச.26_ திருவண்ணா மலை மாவட்டம் பேரூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவரது மகன் பாலாஜி (28). இவர்கள் சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர்.

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் (28), முனியாண்டி (22), சத்திய ராஜ் (21), ரமேஷ் (45), மும்மூர்த்தி (40), முருகன் (33) ஆகியோரும் மாலை அணிந்து வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரி சனம் முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட் டனர்.

நேற்று நள்ளிரவு அந்த வேன் அருப்புக் கோட்டை 4 வழிச்சாலையில் ராமநாயக் கன்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது.

இதனை தொடர்ந்து மாற்று டயர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப் பொழுது அய்யப்ப பக்தர்களில் சிலர் வேனுக்கு வெளியேயும், சிலர் வேனின் உள்ளேயும் இருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த டாரஸ் லாரி வேகமாக வந்து பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில் அய்யப்ப பக்தர் சுப்பிரமணி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து பந்தல்குடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சத்தியநாராயணன் (30) என்பவரை கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் தும்மல் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0Snon2H