Search This Blog

20.12.14

சனிப்பெயர்ச்சி அறிவியல் விளக்கம்

சனிப்பெயர்ச்சி அறிவியல் விளக்கம்

சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு அணு வெடித்து (பெரு வெடிக் கொள்கை - Big Bang Theory) அதன் பின் 500 கோடி ஆண்டுகளுக்குப் பின் நமது சூரியக்குடும்பத்தின் மய்யக்களமான சூரியன் உருவாகியது. சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்து சூரியனின் ஆயுள் 500 கோடி ஆண்டுகள் என 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பித்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார் திரு.சந்திரசேகர்.


சூரியன் தோன்றி சுமார் 460 கோடி ஆண்டுகளுக்குப்பின் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி மற்றும் தற் போதைய நிலவரப்படி (கி.பி. 2006-க்குப் பின்) 8 கோள்களும் சூரியனிலிருந்து வெடித்துச்சிதறி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு (சுழற்சி) சூரியனைச் சுற்றி (பெயர்ச்சி) இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன? எல்லா கோள் களின் சுழற்சி, பெயர்ச்சி அட்டவணையும், அதனதன் துணைக்கோள்களின் (நிலவு கள்) பட்டியலும் தனியே உள்ளன.

சூரியனில் இருந்து வெடித்து வந்து கோள்கள் சுழன்று சுழன்று மேற்பரப்பு குளிர்ந்து கடினப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது இன்னும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. பூமியின் உள்ளே இருந்து அதன் வேகமான சுழற்சி யின்போது, அதன் உள் அடுக்கிலிருந்து இன்னும் எரிமலைக் குழம்புகள் இன்னும் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.


இப்படி குளிர்ந்து உருண்டு கொண்டே இருக்கும் உலகில் 200 கோடி ஆண்டுகளுக்குப்பின் ஒரு செல் உயிரியான அமீபா உருவாகிறது. அதன் பின் பலவகை விலங்குகள் உருவாகி, குரங்கினங்கள் உருவாகி, அதில் இருந்து 6 சதவீத மரபணுக்கள் மாற்றத்துடன் ஆதி மனிதன் தோன்றி (சார்லஸ் டார்வினின் உருமலர்ச்சி கொள்கை) நவீன நாகரிக மனிதன் உருவாகி 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. கற்கால மனிதர்கள் இரவில் உறங்குவதும், பகலில் உலவுவதுமாக வாழ்ந்து வந்தவன் இரவில் வானத்தில் எண்ணற்ற விண்மீன்களை தினமும், அளவு மாறுபாடுடன் விட்டுவிட்டு நிலவையும் பார்த்திருக்கிறார்கள். இரவில் வாழிடம் தேடி வேறு வேறு இடம் பெயர்ந்து (பெயர்ச்சி) இரவில் தங்கும் போது வானத்தைப் பார்த்தால் நிலவின் அளவு மாறுபாடுகளின் தோற்றம், மறுமுறை பார்க்கும் வரையிலான கால அளவுகள்தான் மாதங்கள் ஒரு முறை பார்த்து, மறுமுறை பார்க்கும் போது நிலவின் பின்புலத்தில் காணும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பு பூமியில் பார்த்த ஒரு பொருளோடு ஒப்பிட்டு அப்பொரு ளின் பெயரைச் சூட்டிக் கொண்டார்கள்.


இப்போது பல பத்திரிகைகளில் சிறுவர் களுக்கான பகுதியில் பலபுள்ளிகளை வைத்து புள்ளிகளை இணைத்தால் ஒரு உருவம் தெரியும் என்று வருகிறதே அதைப்போல் அன்று புள்ளியாக தெரியும் விண்மீன்கள் இணைத்து மாதங்களை உருவாக்கினார்கள்.


நிலவின் அளவு மாறுபாடுகளை மீண்டும் பார்க்கும் வரையான அளவை மாதம் எனவும், அதே ஒரு முறை நிலவின் பின்புலத்தில் காணும் விண்மீன் தொகுப்பை மீண்டும் பார்க்கும் அளவை வருடம் எனவும் கணக்கிட்டுக் கொண்டார்கள்.


இப்படி எல்லா கோள்களுக்குமே அதனதன் பெயர்ச்சி காலங்கள் சூரிய னுக்கும் கோள்களுக்குமான தூரத்தைப் பொறுத்து வேறுபடும், அதனதன் பின் புலமும் மாறுபடும்.

பூமியிலேயே ஒவ்வொரு நாட்டுக்கும், அந்தந்த நாடு அமைந்திருக்கும் தூரத்தைப் பொறுத்து நேரம் வேறுபடுகிறது அல் லவா? அதைப்போல ஒவ்வொரு கோளின் பின்புலமும் ஒன்றை ஒன்று கடந்து போகும் போது மாறுபடும். பூமி 3ஆவது இடத்தில் இருப்பதால் முதல் இரண்டு கோள்களும் உள்புறக்கோள்கள் 4ஆவ துக்கு மேல் உள்ளவை எல்லாம் வெளிப் புறக்கோள்கள்.


பின்புலம் என்றால் இராசி. இராசி என்றால் பின்புலம், பூமி சூரியனைச்சுற்றி வரும் 12 மாதங்களும் 12 பின்புலங்கள் தான் 12 இராசிகள் பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக்கொள்வதால் (12 ஜ் 2 = 24) மணி நேரத்திற்கொருமுறை மாறிமாறித்தெரியும்,


பூமி நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் போது அதன் ஒரே ஒரு துணைக்கோளான நிலா நொடிக்கு 1 கி.மீ. வேகத்தில் பூமி சுழற்சியின் எதிர் வாட்டத்தில் பூமியைச் சுற்றி பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.


அப்போது நிலவின் பின்புலத்தில் காணும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பை எல்லாக் கோள்களுக்கும் பின்புலத்திலும் நம்மால் பொருத்திப் பார்க்கமுடியும். ஏனெனில் நமக்குப்பிறகு உள்ள வெளிப்புறக் கோள்கள் எல்லாம் நம்மைவிட (சூரியனிலிருந்து) அதிக தொலைவில் இருப்பதால் அவை சூரியனைச் சுற்றிவர அதிக காலம் எடுத் துக்கொள்கிறது. பூமி தான் வெளிப்புறக் கோள்களைவிட குறைவான தொலைவில் இருப்பதால் 365 நாளில் சூரியனைச் சுற்றி விடுகிறது. அவ்வப்போது நாம்தான் எல்லாக் கோள்களின் பின்புலத்தையும் விரை வாகப் பார்த்து, முடித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். பூமியும் நாமும் ஒன்று தான் சுழற்சியிலும், பெயர்ச்சி யிலும்.


பூமிக்கு நான்கு பருவ காலங்கள் 1) டிசம்பர் 21-22 முதல் மார்ச் 21-22 வரை 2) மார்ச் 21-22 முதல் சூன் 21-22 வரை, 3) சூன் 21-22 முதல் செப்டம்பர் 21-22 வரை 4) செப்டம்பர் 21-22 முதல் டிசம்பர் 21-22 வரை. இதில் மார்ச் 21-22 மற்றும் செப்டம்பர் 21-22 இரவு பகல் சமநாள். பூமி 23 டிகிரி சாய்வாக சுழன்று பெயர்வதால் நமக்கு வடதுருவம், தென்துருவம் என 2 துருவ காலங்கள்.
பூமி நீள்வட்டப் பாதையில் சூன் 21 முதல் தெற்கு நோக்கி 6 மாதம் பெயர்ச்சி அடைந்து சூரியனுக்கு மறுபுறம் டிசம்பர் 21 முதல் 6 மாதம் வடக்கு நோக்கி பெயர்ச்சி அடையும். அப்போது நமக்கு சூரியன் வடக்கு நோக்கி போவதைப் போலவும் பிழையே (அவாளுக்கு இதுதான் தட்சணாயன - உத்தராயண காலம்)

பூமிக்கு ஒரு பருவகாலம் என்பது 3 மாதங்கள். நமது பூமி ஒரு மாதம் பெயர்ச்சி அடையும் தூரத்திற்கு சனிக் கோள் பெயர்ச்சி அடைய 2½ ஆண்டுகள் ஆகும் 3½2½= 7½ ஆண்டு சனி என்று பூமியின் ஒருவருட காலம் (3 மாதம்) பூமியின் நான்கு பருவகாலம் என்பது 4X7½= 30 ஆண்டுகள். சனிப்பெயர்ச்சி காலங்கள். சனிக்கு அது ஒராண்டாகும்.


2½ ஆண்டுகள் பூமி சூரியனைச் சுற்றி வரும்போது தான் சனிக்கோளின் பின்புலம் பூமியிலிருக்கும் நமக்கு மாறித்தெரிய ஆரம்பிக்கும். குறிப்பிட்ட ஒரு மாதத்தில் தொடங்கி 30 மாதங்களில் விண்மீண் தொகுப்பு காட்சி மாறித் தெரிய ஆரம்பிக்கும். அது பூமியிலிருந்து நிலவு - சனிக்கோள் - விண்மீன் தொகுப்பு என்று அமையும். நிலவு நொடிக்கு ஒரு கி.மீ. பெயர்ச்சி அடைவதால் அதன் பின் புலத்தின் ஊடாக விண்மீன் தொகுப் பினைப் பார்ப்பதால் பிற்பகல் 2.43 மணியளவில் சனிப்பெயர்ச்சி அடைகிறது (அடைகிறார்?) என குறிக்கப்படுகிறது. உண்மையில் பூமி சுழற்சி பெயர்ச்சியால் தான் இந்த காட்சி மாற்றங்கள்.


ஒருவேளை நமது சூரியக் குடும்பத் தில் முதல் கோளான புதன் என்ற அறிவன் கோளில் மனிதர்கள் இருந்தால் அக்கோள் சூரியனை 88 நாள்களில் சுற்றி வருவதால் 22 நாள்களுக்கு ஒரு முறை பூமிப்பெயர்ச்சியை கொண்டாடுவார் களோ என்னவோ? ஏனெனில் அவர்கள் தமது பூமியின் பின்புலத்தைத்தானே பின்பற்றியாக வேண்டும். ஆம் அதற்கோ அல்லது அவர்களுக்கோ நிலவே கிடையாதே.


2 ஆவது கோளான வெள்ளிக்கும் நிலவே கிடையாதே.


                -------------------------------செந்தமிழ் சேகுவேரா (பூமி சுழற்சி பெயர்ச்சி பேரவை) ----”விடுதலை” 20-12-2014

45 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்


தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்
தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் பெரியார் பவன் தொடக்கம்


கரீம்நகர், டிச.20- ஆந்திரப்பிரதேசத்தில் தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் பெரியார் பவன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் திறப்பு விழாவில் இந்திய நாத் திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜயகோபால் கூறும்போது, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில், தெலங்கானாவின் வரலாற் றில் முதல் முறையாக பவன் திறந்து வைக்கப் படுகிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் திறந்து வைப்பதில் மிக வும் மகிழ்வடைகிறோம் என்றார்.

பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் அமைப்பதற் கான இடம் மற்றும் மரச்சாமான்கள் முழுவ தும் கரீம்நகர் காவல் ஆய் வாளர் திரு. டி.பூமய்யா வழங்கி உள்ளார்.

அறிவியலாளர்களின் படங்கள் மற்றும் அவர் களின் சாதனைகள், புகழ் பெற்ற நாத்திகர்கள், மனித நேயம் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆகியோரின் நூல்கள் பெரியார் ஈ.வெ.இராம சாமி பவனில் இடம் பெற் றுள்ளன. பகுத்தறிவுக் கருத்து களைக் கொண் டுள்ள கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் நடத்துவ தற்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் பயன்படுத்தப்பட உள்ளது. திறப்பு விழா வின்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், தலை வர்களும் பங்கேற்றனர்.

பெரியார் பவன் திறப்பு விழாவையொட்டி செய்தி யாளர் சந்திப்பின்போது டாக்டர் டி.ஜயகோபால், டி.பூமய்யா, எஸ்.நரேந்தர், அஜய், பாலசானி மது, டாக்டர் மலையசிறீ மற் றும் பலர் பங்கேற்றனர்.

இதற்கு முன் விசாகப் பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப் பட்டுள்ளது.

தந்தை பெரியார் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலைமாறி, இந்தியாவை யும் தாண்டி, உலகம் முழுவதற்குமே தேவைப் படும் தனிப் பெரும் சிந்தனையாளராக ஒளி வீசிக் கொண்டு இருக் கிறார்கள். உலகில் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி சிறப்பாக விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அறிஞர் பெருமக்கள் அந் நிகழ்ச்சியில் தந்தை பெரி யார் தம் சிந்தனைகளை விரிவாகப் பேசுகிறார்கள்.

உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தந்தை பெரியார்பற்றி ஆய்வு செய்து பி.எச்.டி. பட்டங் களைப் பெற்றுக் கொண் டுள்ளனர். மதவாதம் மனித குலத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மதமற்ற உல கிற்கு நாட்டைக் கொண்டு செலுத்த பெரியார் தேவைப்படுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/93171.html#ixzz3MUjRro12

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொலைகாரன் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

இந்து மகாசபை மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது

புதுடில்லி, டிச. 20_ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காந்தியைக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது இந்து மகாசபை.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள் ளதாக கூறியுள்ளது இந்து மகாசபை. சென்ற வாரம் நாடு முழுவதும் கோட் சேவிற்கு சிலைகள் அமைக்கவேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந் தது. இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத் தில் சிலை அமைத்து விட்டு பிறகு மற்ற இடங் களில் அமைக்கவேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட் டுள்ளது. இதுகுறித்து நேற்று டில்லியில் பத்திரிகையா ளர்களிடம் பேசிய சந்தி ரப்பிரகாஷ் கவுசிக் கூறிய தாவது:இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசு கள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித் தரித்து வந்தன. ஆனால் கோட்சே அப்படிப்பட் டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலை காரராகப் பார்க்கக் கூடாது, ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேச விரோத சக்திகள் நம்மை அப்படி பார்க்கவைத்து விட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந் திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம், இதை மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது. பிரதமர் மோடி கூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த் நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறு வதில் தவறு என்ன என்று புரியவில்லை, மோடி ஒன்றும் பாகிஸ் தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை, இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றி பேசியிருக்கிறார்.

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நாடாளு மன்றத்தில் இருந்தே துவங்கவேண்டும். தெரு விற்கு தெரு சிலை வைக்கும் முன்பு நாடாளு மன்றத்தில் சிலை வைத் தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். இவ்விவகாரம் தொடர் பாக ஏற்கெனவே எங் களின் பிரதிநிதிகள் மத் திய அரசை அணுகியுள் ளனர். முதலில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் சிலை வைத்த பிறகு தான் மற்ற இடங் களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள் ளோம், இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறு கிறோம். சாக்சி மகராஜ் கோட்சேவைப் பற்றி கூறியது பிறகு பின் வாங்கியது பற்றி கேட்ட போது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனை வரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்று தான் பார்க்கிறார்கள். இந்துக் களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது, இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம் விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர் களுக்கு எல்லாம் இனி சுதந்திரம் தான்; இவர்கள் நினைத்தால் இந்துத் தேசத்தை முன்னேற்றத் திற்குக் கொண்டு செல்ல முடியும், அரசியல்வாதி களுக்கு அரசியல் லாபம் தான் முக்கியம்; அதனால் தான் ஆளும் பாஜக அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடி வெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப் பது இந்து அரசு ஆகை யால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை, கோடானு கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பாஜக அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93172.html#ixzz3MUjbOIYk

தமிழ் ஓவியா said...

98 ஆண்டுகளுக்கு முன்பு...


1916ஆம் ஆண்டில் இதே நாளில்தான் (டிசம்பர் 20) வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரால் ஓர் அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது; அதற்குப் பார்ப்பன அல்லாதார் கொள்கை அறிக்கை என்று பெயர்.

நமது இனத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பிரகடனம் (விணீரீஸீணீநீணீக்ஷீணீ) என்று அதனை அழைக்க வேண்டும் அந்த அறிக்கையைக் கண்டு இந்து ஏடு நடு நடுங்கித் தலையங்கம் தீட்டியது என்றால் அவ்வறிக் கையின் செழுமையைச் சிறப்பாக அறிந்து கொள்ளலாமே!

பார்ப்பனர் ஆதிக்கத்திற்குக் காரணம் கூறுபவர்கள், பார்ப்பனர் அல்லாதார்களை விடக் கல்லூரிப் படிப்புப் பெற்ற பார்ப்பனர்கள் அதிக மாக இருப்பதால்தான் அரசாங்க அலுவலகங் களிலும், பிற நிறுவனங்களிலும் அவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பர். இதை யாரும் மறுக்கவில்லை. பழங் காலந் தொட்டு அவர் களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், இந்துக் களிலே உயர்ந்த புனிதமான ஜாதி என்று கருதும் தன்மை, நிலையான நம்பிக்கை, இவற்றை நூல்கள் வாயிலாகவும், வாய்மொழியாகவும் சொல்லிச் சொல்லித் தாங்களே ஏனையோரை விட உயர்ந்தவர்கள்; தாங்களே கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர். இவை எல்லாம் ஏனைய இனத்தாரைவிட அவர்கட்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கைத் தேடித் தந்தன! ஆங்கிலக் கல்வி அறிவைத் தவிர, மற்றபடிபாரம்பரியம் நாட்டின் உரிமை, சமுதாயத்தில் உள்ள செல்வாக்கு, அமைதியான வாழ்க்கைத் தொழில் மாநில முன்னேற்றம், எண்ணிக்கை இவையெல்லாம் பயனற்றவை என்று கருதலாமா? ஆதி முதல் இவற்றிற்காக வாழ்ந்துவரும் மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஊக்கம் கொடுக்க வேண்டாமா?

வெள்ளுடை வேந்தரின் இந்த வெள்ளை அறிக்கை ஆழமானது. நுட்பமானது; பார்ப்பனர் சமுதாயத்தில் உயர்ந்து நிற்பதாலும் கல்வியில் மேனிலை பெற்ற தற்குமான காரணத்தை அறிவார்ந்த முறையில் அளவிட்டுக் காட்டி விட்டாரே! அவர்களுக்குரிய ஆங்கில அறிவு அவர்களின் மேல் நிலைக்கு முக்கிய காரணம் என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இந்த இடத்தில் இன்றும்கூட நம் தமிழர்களும், தமிழர்களுக்கான தலைவர்களும் எந்த அளவுக்குப் புரிதலோடு இருக்கிறார்கள் என்பது கேள்விக் குறியே!

ஒரு வினாவை அந்த அறிக்கையில் எழுப்பியுள் ளார் கவனமாக! அதனைக் கவனமாக எந்த அரசும் பரிசீலித்தே தீர வேண்டும்.

பெரும் எண்ணிக்கையில் உள்ள மக்களின் பாரம்பரியம், நாட்டின் உரிமை, வாழ்க்கைத் தொழில், மாநில முன்னேற்றம் இவை எல்லாம் பெரும்பாலான மக்களுக்கு முக்கியம் அல்லவா? என்ற கேள்வி எவ் வளவுப் பெரிய உண்மைகளையும், உணர்வுகளையும், உரிமைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டது. என்பதை இந்த நாளில் ஒவ்வொரு திராவிடத் தமிழனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த மக்களுக்காக அரசு என்பது உரியது செய்ய வேண்டாமா என்ற கேள்வியில் எவ்வளவுப் பெரிய நியாயமும் மனித உரிமையும் பின்னி இருக்கின்றன. 98 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு தலைவர் சிந்தித்தார், ஓர் அமைப்பு சிந்தனைக்கான அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தது என்பதை நன்றி யுணர்வுடன் இந்த நாளில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அன்றைக்கு அவர் எழுப்பிய கேள்விக்கான முழு விடையும், விடுதலையும் கிடைத்து விட்டது என்றுதான் மன நிம்மதி பெறத் தான் முடியுமா?

மிகப் பெரிய பாரம்பரியத்தைக் கொண்ட இந்த திராவிடத் தமிழினம் - ஒர் ஒன்றியத்தின் கீழ் சிறு உறுப்பினராக இருந்து தொட்டதற்கெல்லாம் விண்ணப் பம் போடும் நிலைதானே? இல்லை என்று மறுக்க முடியுமா?

தமிழ் ஓவியா said...


மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. (திமுக) அவர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைக்கு மத்திய அமைச்சரால் அளிக்கப்பட்ட பதில் என்ன?

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க முடியாது, தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு பதில் சொல்லி விட்டதே!

அப்படிப் பதில் சொல்லும் இந்திய அரசின் மனம் எதை நாடி நிற்கிறது? கீதையைத் தேசியப் புனித நூலாக அறிவிப்பதிலும், ஆரிய சமஸ்கிருதத்தின் சேய் மொழி யான இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் முடி சூட்டத்தானே மூச்சுமுட்ட எத்தனிக்கிறது.

இந்தியாவின் ஆட்சி அதிகாரம், நிருவாகப் பலம் நீதித்துறையின் கெட்டியான ஆக்கிரமிப்பு இன்றுவரை கூட பார்ப்பன மயம்தானே? மறுக்க முடியுமா?

தங்களைக் கடவுளின் நேரடிப் பிரதிநிதிகள் என்ற எண்ணத்தைப் பார்ப்பனர்கள் உருவாக்கி விட்டனர் என்று தியாகராயர் கூறியதை மறுபடியும் மறுபடியும் படித்து அதன் தகைமையை உணர வேண்டும்.

இந்துத்துவா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் எண்ணெய்ப் பலகாரங்கள் போல கொதிப்பதை எண்ணிப் பார்த்தால் இன்றைக்கு 98 ஆண்டுகளுக்குமுன் நீதிக்கட்சியின் தந்தை என்று போற்றப்படும் சர். பிட்டி தியாகராயரின் தொலைநோக்கை ஆச்சரியத்துடன் கணித்துப் பார்க்க வேண்டும்.

தந்தை பெரியார் இந்த எண்ணத்தின் முழு கொள் ளளவு கொண்டவராக முழு மூச்சில் பாடுபட்டு சிறப் பான ஓர் இடத்திற்கு நகர்த்தியுள்ளார் என்பதுதான் வரலாறு. பார்ப்பனர் அல்லாதார் கொள்கை வெளி யிடப்பட்ட இந்நாளில் இத்திசையில் மேலும், கூர்மை யாகச் சிந்திப்போம் - தீர்க்கமாகச் செயல்பட்டு உரிமையை முழு அளவில் ஈட்டுவோமாக!

வாழ்க தியாகராயர்! வாழ்க தந்தை பெரியார்!!

Read more: http://viduthalai.in/page-2/93165.html#ixzz3MUjv7XTt

தமிழ் ஓவியா said...

என்ன?


காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/93164.html#ixzz3MUk8SK4W

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்


இன்று டிசம்பர் 20 (1916)
பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்

-குடந்தை கருணா

திராவிடர் இயக்கத்தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரால் துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பார்ப்பனரல்லாதார் அறிக்கையினை, அதன் செயலாளர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள் 20.12.1916 அன்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், சென்னை மாகாணத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியோரின் பிரதிநிதித்துவத்தின் நிலைமை தெரிவிக்கப்பட்டது. சென்னை நிர்வாக கவுன்சிலின் உறுப்பினராக இருந்த சர்.அலெக் சாண்டர் கார்டியூ 1913-இல் பொது நிர்வாக ஆணையத்தின் முன், பார்ப்பனர், ஏனையோர், அரசுப் பணிகளில் எந்த அளவுக்கு வாய்ப்பு பெற்றிருந்தார்கள் என்பதைப் புள்ளி விவரங்களோடு சாட்சியம் அளித்தார்.

அந்த புள்ளி விவரங்களின்படி, 1912-ல் சென்னை மாகாணத்தில், உதவி ஆட்சியர் பதவிகள் 140 அதில் பார்ப்பனர்கள் 77 பேர், பார்ப்பன ரல்லாதார் 30 பேர், இஸ்லாமியர் 15 பேர், கிறித்துவர் 7 பேர், அய் ரோப்பியர் 11 பேர். அதே போன்று, துணை நீதிபதி பதவிகள் மொத்தம் 18, அதில் பார்ப்பனர் 15, பார்ப் பனரல்லாதார் 3 பேர். மாவட்ட முனிசிப் பதவிகள் மொத்தம் 128, அதில் பார்ப்பனர் 93, பார்ப்பன ரல்லாதார் 25, இஸ்லாமியர் 2, கிறித்துவர் 5 மற்றும் அய்ரோப்பியர் 3 பேர்.

இதனை, பார்ப்பனரல்லாதார் அறிக்கையில் தென்னிந்திய நல உரிமை சங்கம், (பின்னாளில் நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) சுட்டிக் காட்டியது.

பார்ப்பனரல்லாதாரின் உடனடிக் கடமை எனும் தலைப்பில், அந்த அறிக்கையில், பார்ப்பனரல்லாதாரில் வசதி படைத்தோர், கல்வி வாய்ப்பை இழந்து நிற்கும் பார்ப்பனரல்லா தாரின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் தங்கள் பங்களிப்பை அளித்திடவும், ஆங்காங்கே, சங்கங் களை அமைத்து இந்தப் பணியைச் செய்திடவும் வேண்டுகோள் விடுத் தது. சமூக, அரசியல் அமைப்புகள் அமைப்பதோடு, பத்திரிக்கைகளை துவங்கி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்திடவும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

பார்ப்பனரல்லாதார் அறிக் கையை தொடர்ந்து, நீதிக் கட்சி துவக்கிய முயற்சியினால், பொதுத் தொகுதியில் 65 இடங்களில், 24 இடங்கள் பார்ப்பனரல்லாத மக்க ளுக்கு என தனி தொகுதி ஒதுக்கீடு பெறும் சட்டத்தை ஆங்கிலேய அரசு 1919 சட்டத்தின்படி அளித்திட காரணமாக இருந்தது.

பார்ப்பனரல்லாதார் அறிக்கையும், நீதிக் கட்சியின் வளர்ச்சியும், பார்ப்பனர்களை அஞ்ச வைத்த நிலையில், அவாளின் தி இந்து பத்திரிகை தனது தலையங்கத்தில், இந்த அறிக்கையை மிக்க வலியுட னும் வியப்புடனும் படித்தோம்; முறையற்ற, திரித்து சொல்லப்பட்ட பல செய்திகளைக் கொண்டுள்ள இந்த அறிக்கையினால், எந்த பயனும் இல்லை; ஆனால், இந்திய சமூகத்தில் மிகப் பெரிய அளவு விரோதத்தை உண்டு பண்ணும் என எழுதியி ருந்தது என்றால், பார்ப்பனரல்லா தார் அறிக்கையின் தாக்கமும், நோக்கமும், நம் மக்களுக்கு எந்த அளவுக்கு மேம்பாடு அளித்தது என்பதை உணர முடியும்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக் கட்சியின் ஆட்சியில்தான், பார்ப்பனரல்லாத, திராவிடர் களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சிறப்பான முன்னேற் றம் அமைந்தது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்று நாம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரி மையைப் பெறுவதற்கு அடித்தள மாக அமைந்தது, நீதிக் கட்சியும், அது வெளியிட்ட நமது உரிமை சாசன மான பார்ப்பனரல்லாதார் அறிக் கையும் என்பதை இன்றைய இளைய தலைமுறை நன்றியோடு நினைவு கூர வேண்டிய நாள் டிசம்பர் 20.

Read more: http://viduthalai.in/page-2/93168.html#ixzz3MUkJWdL2

தமிழ் ஓவியா said...

காலஞ் சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரிண்டடெண்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில், சிறந்த ஆராய்ச்சி யுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார்.

இவர் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டா யிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதி யால் இறந்தது பெரும் நஷ்ட மேயாகும்.

இவரை இழந்து வருத்தமடையும், அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர் களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUlD6DKM

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ள தாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை. உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டு மானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது.

ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக் கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlMbvVW

தமிழ் ஓவியா said...

திராவிடர்களுக்கு அரசியலும் பயன்பட வில்லை; மதங்களும் பயன்படவில்லை; தர்மங்களும், மதப் பிரச்சாரங்களும் பயன்தர வில்லை. மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத தெளிவுபடாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlUbSnY

தமிழ் ஓவியா said...

திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!


திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!

ஆனந்த விகடன் தமிழ் வார ஏட்டின் நீண்ட நாள்கள் ஆசிரியராக இருந்தவரும், பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க நான் சிறை செல்லவும் தயார் என்று கூறி, தனது ஏட்டின் தலையங்கத்திற்காக தமிழக சட்டமன்றத் தலைவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் - வானளாவிய அதிகாரம் தனக்குண்டு என்று கூறி, தண்டித்த நேரத்தில், துணிந்து சிறைவாசம் ஏற்ற தீரருமான திரு.எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் துயரமான செய்தியாகும். (அன்று நாம் இதற்காக அவரை விகடன் அலுவலகம் சென்று பாராட்டி வந்துள்ளோம்).

பத்திரிகை உலகில் நீண்ட காலமாக நகைச்சுவை - அரசியல் ஏடாக திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களது சீரிய தலைமையின்கீழ் வந்த ஏடு இன்று மூன்றாவது தலைமுறையின் ஆளுமையால் நடத்தப்படுவதாகும்.

திரு.வாசன் அவர்கள் தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்பும், பற்றும் கொண்டவர்; அதுபோல், தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவரும்கூட - பச்சை அட்டை குடிஅரசு நடந்த காலம் முதற்கொண்டே!

திரு.பாலசுப்பிரமணியம் அவர்களது இல்லத்தில் ஜாதி, மத மறுப்புத் திருமணங்களும் நடைபெற்ற நிலையில், அந்த பெருந்தன்மையோடு ஏற்ற முற்போக்கு சிந்தனையாளர்.

மற்ற கொள்கைகளில் நமக்கும், விகடன் கொள்கைக்கும், மாறுபாடு உண்டு என்றாலும், மனிதநேய அடிப்படையில் அவரது மறைவு மிகப்பெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்!

நல்ல மனிதராக வாழுவது, தன் காலத்திலேயே தனக்கு அடுத்த தலைமையை உருவாக்கி செப்பனிடுவது என்ற தத்துவத்திற்கு திரு.எஸ்.எஸ்.வாசனைப் பின்பற்றி, திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஓர் நல்ல முன்மாதிரியான எடுத்துக்காட்டாவார்!
திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை குழுமத்தின் சார்பிலும், அவரது மறைவினால் வாடும் வருந்தும், அவரது மகன் சீனுவாசன் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

20.12.2014

Read more: http://viduthalai.in/page-8/93143.html#ixzz3MUmKEgxh

தமிழ் ஓவியா said...

அந்த மீனாட்சிபுரம்!

1981-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரம் எனும் ஒரு சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிர பலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறி விட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன் மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத் தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; பிறகு மதம் மாறினர்.

அவர்களை நான் அந்தப் பகுதிக்குக் கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்த சமூகப் பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்தக் கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் - பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக, அப்படியே அவர்கள் கூறியதை எந்த வித மாற்றத்துக்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.

தமிழ் ஓவியா said...

இந்தச் சந்திப்பு நிகழ்ந்த நாள்: 25.-7.-1981 ஆகும்!

அங்கேயிருந்த மொத்தம் உள்ள 300 குடும்பத்திலே 210 குடும்பங்களின் உறுப் பினர்கள் மதம் மாறியுள்ளனர். இவர் கள் 19-.2.-1981 அன்று மதம் மாறினார்கள்.

இந்த (2003)ஆண்டில் ஓரியண்டல் லாங்க்மென்ஸ் லிமிடெட் புத்தக கம் பெனியினரால் “Viswa Hindu Parishad and Indian Politics” என்ற ஓர் ஆங்கில நூல் - இதன் ஆசிரியர் மஞ்சேரி காட்ஜு என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத் தில் அரசியல் விஞ்ஞானத் துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார், இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்டி., பட்ட ஆய்வினை இத்தலைப் பில் மேற்கொண்டு செய்தார். அதுதான் மேலே காட்டிய நூலாக வெளிவந் துள்ளது.

அந்நூலில் மூன்றாவது அத்தியாயத் தில்,‘Transition to Mass Activism தீவிரத் தன்மை கொண்ட மக்கள் இயக்கமாக (வி.இ.ப.) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது.

In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1.300. almost all of whom were “untouchables”. became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organisations. the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but “a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan,” financed by petrodollars. It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to Islam, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to Islam had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other Hindu outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.

தமிழ் ஓவியா said...


The incident was communally interpreted by the RSS and VHP as “an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.” It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP’s socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste Hindus could lead to a point when untouchables would make a total break from the Hindu fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another. It is this break that a conservative upper-caste Hindu seemed unable to bear and - primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within Hindu society structured by Brahminical Hinduism (Raj 1993:233).
The Meenakshipuram episode was widely publicised by the VHP and other organisations like the Hindu Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism (Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana (Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana (Campaign for People’s Awakening) to “warm” the Hindus about “the international conspiracy to devour Hinduism.” During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However. apart from making monetary contributions people generally remained indifferent to the issue.

The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for “national integration” The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.

இதன் தமிழாக்கம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும், 1300 மக்கள் தொகை ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மய்யமாக அது ஆயிற்று.
விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்ஜாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980_-81-இல் இப் பகுதியைச் சுற்றியிருந்த சில இடங் களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந் துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங் கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மத மாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மத மாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (ஜாதிக் கலப்பு) உறவுகளும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்ஜாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர் விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக் கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர் களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர். எஸ்.எஸ், வி.இ.ப. போன்றோர் மதக் கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடு மையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இய லாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மத மாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மதமாற்றங்களுக்குப் பின்ன ணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல் திட்டம் இருட்டடிப்பு செய்யப் பட்டுவிட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகக் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்துகொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத் தினர் தாங்களாகவே இந்து மதத்தி லிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத் தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத் தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக் கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது (ராஜ்: 233).

தமிழ் ஓவியா said...

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்பு களால் மீனாட்சிபுரம் மத மாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக் கப்பட்டது. (கான் 1991: 49) இந்த நிகழ்ச் சிக்குப் பின் கலாச்சாரத்தைப் பாது காக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங் கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங் களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜாக்ரன் அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத் துலக சதித்திட்டத்தைப்பற்றி இந்துக் களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின்போது நன்கொடையாகப் பொதுமக்களிட மிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் இயன்றது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினைபற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலி யுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத் துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண் டது. மதமாற்றப் பிரச்சினை பெரிது படுத்தப்பட்டு, தேசிய பாது காப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறித்துவ மத அமைப்புகளின் செயல் பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சி களில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனிய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற் காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக திரிசூலம் வழங்கி, வன் முறையை வெளிப்படையான ஆயுத மாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரள வுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றா லும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்துவிட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்தவேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

விசுவ இந்து பரிஷத் ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைந்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாக்டர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகர மானது; அது மீண்டும் இரண்டாம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின் னோக்கி அழைத்துச் செல்லும் என்ப தால் அவர் அதிலிருந்து விலகிக் கொண்டார். (இவ்விவரங்கள் மேற் சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது.)

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவை மூலம்தான் பாமர மக்களுக்குப் பக்தி போதையைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!

மதம் மாறுவதற்குரிய நிர்ப்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படு கிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சி யாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - குருடர் அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களையே நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்ற வனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!

(மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? என்ற நூலுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய முன்னுரை)

Read more: http://viduthalai.in/page2/93145.html#ixzz3MUmmwpmC

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பார்வையில் பகவத்கீதையும் - திருக்குறளும்!

- கி.தளபதிராஜ்


எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண்புக்கு கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும் இருக் கிறதா என்ற பெரியார் இராமாயணம், பாரதம், பெரியபுராணம், உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் கடுமை யாக சாடினார். மதமும், மௌடீகமும் மண்டிக் கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங்களும் படைக்கப்படா மல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியா கவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஆரியத்தின் பிடியிலிருந்து நம்மக் களை மீட்க புராண, இதிகாச குப்பை களை புதை குழிக்கு அனுப்ப முயற்சித்த அதே பெரியார் 1949 ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அறிஞர் பெரு மக்களையெல்லாம் அழைத்து பெரிய தொரு திருக்குறள் மாநாட்டை நடத் தினார். அந்த மாநாட்டிற்கு விடுதலை மூலம் பெரியார் வேண்டுகோள் விடுத்தார்!

திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகிய வைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள் ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரச்சாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என்னு டைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம் மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற் கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.

ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளி பொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.

நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்த தாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற் கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.

எனவே, குறள் தத்துவத்தை விளக் கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற் காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெரு மளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.என்று எழுதினார்.

தமிழ் ஓவியா said...


பெரியார் உரை

தந்தை பெரியார் தனது மாநாட்டு உரையில் திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்ப தற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்ட தாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன். மனுதர்மம்-வரு ணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்-பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது. திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.

திருவள்ளுவர் காலம் பொது உடை மைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங் குகிறார். அதனால்தான் நம் போற்று தலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டு விட்டு இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக் குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டுமென்றும் பேசினார்.

தமிழ் ஓவியா said...

பகவத்கீதை

இன்றைய தினம் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற பாஜக தலைவர்கள் பகவத்கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று கூறு கின்றனர். இந்தியா முழுதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண் களையும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களையும் கொச்சைப்படுத்தும் ஒரு நூலை புனித நூலாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் முயற்சியை திராவிடர் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த நூலை மற்றவர்களின் மேல் திணிக்க முயற்சிப்பது அரசியல் சட்டப்படி இந்த நாட்டின் மதச் சார்பின்மை கொள்கைக்கே வேட்டு வைப்பதாகும் என்று ஒருசாரார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இப்படி சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பகவத் கீதையை பற்றி அன்றைக்கே திருக்குறள் மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார் அவர்தம் வாழ்வை நலப் படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது தான் கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமாயணங்கள், வேதங்கள் உப நிஷத்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவை. திராவிடர் வாழ்வுக்கு உண் மையில் பெரிதும் கேடு செய்து வருபவை இவையே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகு வாகக் குறைந்திருக்கும் இந்த வேளை யில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர் களுக்கும் _ எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார்.

தமிழ் ஓவியா said...


இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனீயம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற் றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கை களையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடு வார்கள்" என்றார் அண்ணா

பகவத்கீதையை எதிர்க்கும் அதே வேளையில் தேசியநூலாக்கப்படவேண் டியது திருக்குறளே தவிர கீதை அல்ல என்கிற வாதமும் இப்போது வலுத்து வருகிறது. வரலாற்றை சற்று முன்னோக் கிப் பார்ப்போமானால் இதே கருத்து நம் அறிஞர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எடுத்து வைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். 1949ல் கூட்டப்பட்ட திருக்குறள் மாநாட்டில் தமிழறிஞர் சி.இலக்கு வனார் அவர்கள் "குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக் குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப் படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க் குப் பெருமை தருவதாகும்" என்றும் எடுத்துக் கூறி, "அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டு மானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமி ழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக் காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டும்" என பேசினார்.

தமிழ் ஓவியா said...

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் "பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றிருக்கிறது." எனக் குறிப்பிட்டார். திராவிடர்க்கு ஒழுக்கநூல் குறள்தான் என ஓங்கி ஒலித்த பெரியார், பகவத்கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்கள் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவைகளெல்லாம் ஆரியர்கள் தங்களின் உயர்வுக்காக, தங்களின் மேல்சாதி தன்மையை நிலைநிறுத்தி அதனால் இலாபம் அடைவதற்காக ஏற்பட்ட வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தி எழுதி வைத்துகொண்டவை யல்லாமல் பொதுவாக மனிதர்கள், உலக மக்களின் நலனுக்கு ஏற்ற முறையில் எதையும் கூறவில்லை என்று 1950 களிலேயே பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

தற்போது மத்தியில் ஆளும் ஆர். எஸ்.எஸ், பாஜக வகையறாக்கள் ஏதோ உலகமே தங்கள் கைக்குள் வந்து விட்டதாக கருதி இந்துத்துவ ஆதிக்க சதி வேலைகளை கட்டவிழ்த்து திரி கிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

Read more: http://viduthalai.in/page4/93149.html#ixzz3MUnWLLIy

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.
மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page3/93147.html#ixzz3MUnz7N4E

தமிழ் ஓவியா said...

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!


மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது.

எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம், உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே போதும்.

தினமும் காலையில் அருந்தி வந்தால் குளற்புதுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். வயிற்றுப் போக்கு, உணவு செரியாமை, கடும் வயிற்று வலி, பெருங்குடல் வீக்கம் முதலியவைகளுக்கும் கேரட் சாறு உதவுகிறது. இரைப்பையில் புண் ஏற்படாமல் இருக்க, கேரட் ஒரு நல்ல பாதுகாவலனாய் இருந்து உதவுகிறது. மலச்சிக்கல் உடனே குணமாக 25 மில்லி அளவு கேரட்சாறு, 50 மில்லி பசலைக் கீரைச்சாறு ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சம் பழத்தைக் கலந்து குடித்தால் போதும், பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும். பல் சொத்தை ஈறுகளில் இரத்தம் முதலியவை வராமல் இருக்கவும்.

சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு கேரட்டைக் கடித்துச் சாப்பிடவும். கேரட்டை இப்படி மென்று தின்பதால் உமிழ்நீர் அதிகமாக ஊறுகிறது.. இது உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டின் தோலுக்கு அருகிலேயே சோடியம், சல்ஃபர், குளோரின், அயோடின் போன்றவை அதிகமாக இருப்பதால் கேரட்டைத் தோல் சீவாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

நன்கு கழுவினாலே போதும். சமையலில் என்றால் சற்றுப் பெரிய துண்டுகளாகச் சீவி, சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் சரிவரக் கிடைக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இவற்றுக்கு அவித்த கேரட்டைக் கொடுத்தால் அவை ஆரோக்கியமாக வளரும்.

Read more: http://viduthalai.in/page3/93148.html#ixzz3MUoFJCFt

தமிழ் ஓவியா said...

இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு?


திருவல்லிக்கேணியில் ஒரு கோயில் வளாகத்துக்கு பின்புறம் அரச மரம் உள்ளதாம். இந்த அரச மரத்தில் தொட்டில் கட்டி பெண்கள் வேண்டுதல் வைப்பார்களாம். காலம் காலமா நிக்குற அந்த மரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் தொட்டில் கட்ட வந்த போது, மரத்தில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிலை இருப்பது அவருக்கு தெரிந்ததாம்.அவர் கோவில் நிர்வாகத்தில் அறிவிக்க, அவர்கள் அதற்கு மாலை போட்டு, கம்பி வேலி அமைத்து, வரிசையில் பக்தர்களை வணங்க அனுமதி செய்கிறார்களாம்..செக்யூரிட்டி வேறு நியமித்து உள்ளார்களாம்.

உலகில் வேறு எங்கேனும் இப்படிபட்ட அதிசயங்கள்.. மரங்களில் நிகழ்கிறதா என தேடி பார்த்தபோது, அமெரிக்காவில் கூட சில மரங்கள் இப்படி இருப்பது தெரிய வந்ததது ..ஆனால் பாவம் அறிவில்லாத அமெரிக்க மக்கள் ..மரபட்டைகளில் என்னும் ஒரு திசு அதிகமாக உருவாவதால் இப்படிப்பட்ட தோற்றங்கள் உருவாகி இருப்பதாக நம்பி வருகின்றனர்.. ஆயிரம் சொன்னாலும்..நம்மோட முன்னோர்களின் அறிவு வேற எந்த நாட்டுகாரனுக்கும் வராது (?) என தெரிந்து, உணர்ந்து கொண்ட தருணம் இது.

Read more: http://viduthalai.in/page4/93150.html#ixzz3MUoOYBb2

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்


அமெரிக்கா; அங்கு அலாஸ் காவைச் சேர்ந்த நீல்ஸ் நிக்கோலஸ் வயது 75 அவர் கிராண்ட்கன் யாக ஆற்றில் கட்டு மரத்தில் சென்று குழுவுடன் குப்பையைக் கொட்டி யதால் 1½ லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

தமிழ்நாடு: கல், மண், சாமி களுக்கு புஷ்பாபிசேகம் செய்து அந்த மலர்களையெல்லாம் டன் கணக்கில் ஆற்றில் கொட்டு கிறார்களே! இதற்கு அபராதம் எப்போதோ?

தகவல்: எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page5/93151.html#ixzz3MUoakmQv

தமிழ் ஓவியா said...

மீண்டும் ஒரு செஞ்சோலையா?


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் நடந்த தாக்குதலில் 120க்கும் மேற் பட்ட குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொல் லப்பட்டனர், பள்ளிக்கூடத்தில் நடந்த இந்தத்தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரி வித்திருக்கிறது. பள்ளியில் தாக்குதல் நடத்துவது என்பது இன்றல்ல நேற்றல்ல பள்ளிக்கூடத்தாக்குதலில் தமிழர்கள் அடைந்த வேதனையை இந்த நிமி டத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் சிங்களப்படையினரின் தாக்கு தலில் பெற்றோரை இழந்த சுமார் 300 குழந்தைகள் ஈழத்தில் செஞ் சோலை என்னும் அழகிய காப் பகத்தில் தங்கி பயின்று வந்தனர். அங்கு 3 மாதக் குழந்தை முதல் 15 வயது குழந்தைகள் வரை தங்கி பயின்று வருகின்றனர். இது குறித்து நார்வே தூதர் இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (8 ஜூலை 2006) கொழும்பில் நடந்த ஒரு பத் திரிகையாளர் சந்திப்பில் செஞ் சொலைக் காப்பகம் மற்றும் அங்கு படிக்கும் குழந்தைகள் பற்றிக் கூறினார். அப்போது செஞ்சோலை நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.

இயற்கையான சூழ்நிலையில் அமைதியாக தங்கி பயின்றுவரும் அப்படங்களில் உள்ள காட்சிகள் கண்களைவிட்டு அகலும் முன்பே ஆகஸ்ட் 15 தேதி ஒரு துயரமான செய்தி ஒன்று படங்களுடன் வெளி வந்தது. செஞ்சோலை காப்பத்தை குறி வைத்து சிறீலங்க விமானப்படை குண்டுவீசியது. சுமார் 3 ஏக்கர் பரப் பளவுள்ள அந்த காப்பகத்தின் மீது மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காப்பகம் முழுவதும் அழிந்தது. சிங்கள பத்திரிகைகள் 61 குழந்தைகள் மற்றும் 25 காப்பகப் பணியாளர்கள் மரணம் மற்றும் 110 பேர் படுகாயம் என்று எழுதியிருந்தது. புலிகளின் குரல் என்ற பத்திரிகை 110 குழந்தைகள் 17 காப்பகத்தினர் மரணம் என்று கூறினர். ஆனால் ஒன்று மட்டும் உண்மை; இரண்டு சிங்கள விமானப்படை விமானங்கள் காப்பகத்தை துல்லியமாக குறிவைத்து தொடர்ந்து 6 குண்டுகளை வீசியது.

காப்பகத்தின் மீது குண்டுகள் வீச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு பதுங்கு குழிகள் அமைக்கப் படவில்லை, காப்பகத்திற்கு வெளியே இருந்த பதுங்கு குழிகளில் அருகில் உள்ளவர்கள் பதுங்கியதால் தப்பித் தனர். மனித குலமே தலைகுனிந்த இந்த சம்பத்திற்கு உலக நாடுகள் எல் லாம் அமைதிகாத்தன. இந்த சம்பவம் குறித்து அன்றைய தமிழக பத்திரி கைகள் கூட தலைப்புச்செய்தியாக இல்லாமல் பொத்தாம் பொதுவாக எழுதியிருந்தன.

இன்று பாகிஸ்தானிலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கிஞ்சிற்றும் மனிதாபிமானற்ற இச்செயல் பேரினவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் என்ற பெயரில் நடைபெறு கிறது, அன்று செஞ்சோலை நிகழ்வை உலக நாடுகள் கடுமையாக கண்டித்து சிங்களப் பேரினவாத அரசின்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று பாகிஸ்தானில் குழந்தைகள் மீது தாக் குதல் நடத்த துணிந்திருப்பார்களா?

Read more: http://viduthalai.in/page8/93154.html#ixzz3MUp0XFcC

தமிழ் ஓவியா said...

திருமதி தயாசின்கின்

திருமதி தயாசின்கின்

நவம்பர் 26 (1949) இந்திய வரலாற்றில் - அரச மைப்புச் சட்டம் இறுதியாக் கப்பட்ட நாள் என்றால், அதே நவம்பர் 26 (1957) அரசமைப்புச் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி அந்தப் பகுதியைப் பகிரங் கமாக எரிப்பதற்குத் தந்தை பெரியாரால் ஆணை யிடப்பட்ட வரலாற்றுக் குறிப்பு நாள் நமக்கு. அந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் 10 ஆயிரம்பேர் பங்கு கொண்டனர் என்ற வரலாறு கேட்டால் மெய்ச் சிலிர்த்து விடும்.

இவ்வாண்டு அந்த நவம்பர் 26 அன்று தாம் பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிக வும் பொருத்தமாக ஒரு நூலை எடுத்துக்காட்டிப் பேசினார். அந்த நூலின் பெயர் ‘Caste to Day’ (1962) அதன் - ஆசிரியர் தயாசின் கின்(Tayazin kin) என்ற அம்மையார். இவர் யார்?

இலண்டன்லிருந்து வெளிவந்த தி எக்னா மிஸ்ட் மற்றும் சார்டியன் இதழில் செய்தியாளராக இந்தியாவில் சிறப்பாகப் பணி புரிந்தவர். அந்த நூலி லிருந்து சில பகுதிகளை ஆசிரியர் அவர்கள் அழ காக எடுத்துக் காட்டி யிருந்தார்.

அதில் இன்னும் சில கற்கண்டு துண்டு போல சில உண்டு.

சராசரி இந்து ஒருவர் சாதியைக் கடைப்பிடிப்ப தன் நோக்கம் என்னவென் றால், அவரது மதம் அவரை அவ்வாறு செய்யச் சொல் கிறது என்று நம்புவதன் காரணமேயாகும்.

சாதிக்கு முழு ஆதா ரம், பார்ப்பனர் என்பது மலை போன்ற உண்மையா கும். வாழ்க் கையில் புதிர் போன்ற அறிவு, மந்திர தந்திர சாவி களை எல்லாம் வைத் திருப்பது பிரா மணன்தான். வெறும் மதவாதியாகக் குடியேறிய அவர்களின் ஆதிக்கம் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் அசைக்க முடியாததாக இருக்கிறது. மத்திய கால ஜெர்மனியில் சர்ச்சுக்கு இருந்த ஆதிக் கத்தை இத்துடன் ஒப் பிடலாம்.

சாதி மனிதனின் வாழ்க்கையை ஆள்வது மட்டுமல்ல; அவன் வாழும் சமுதாயத்தில் அவனது இடத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது (பக்.6). கல்வி என்பது தங் களுக்குரிய ஒன்றே என்று பிராமணன் பரம்பரை பரம்பரையாக நினைத்துச் செயல்பட்டானே தவிர, ஜன சமுதாயத்தின் மற்ற பகுதி யினருக்கு மறுத்து, மற்றவர் களும் கல்வி தங்களுக்குரியது ஒன்று நெடுங்காலமாக ஆழமாக எண்ணி ஏற்கும் படிச் செய்யாததே நாட்டில் எழுத்தறிவு பரவுவதற்குப் பெருந் தடையாக உள்ளது (பக்.63). இந்துத்துவா பேசும் வெறி யர்களின் கண்கள் திறக்குமா? வெளி நாடு களில் இந்தியர்களின் மானம் கப்பலேறுவது பற்றி காவிக் கூட்டம் எங்கே கவலைப்படப் போகிறது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93221.html#ixzz3MX1eEor3

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் வீராங்கனை மறைவுற்ற ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் உடலுக்கு கழகத் தலைவர் தலைமையில் வீரவணக்கம் மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பு


சென்னை, டிச. 21_ கழக பொதுக்குழு உறுப்பினர் மறைவுற்ற தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் திரளான வர்கள் கூடி வீரவணக்கம் செலுத்தி பின்னர் அரசு மருத்துவமனைக்கு அவரின் விருப்பப்படி உடல் கொடை அளிக்கப் பட்டது.
திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவ ரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தோழி யர் மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் (வயது 81) அம்மையார் அவர்கள் 19.12.2014 அன்று இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மறை வுற்றார்.

அவரது உடல் இன்று (21.12.2014) காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு எடுத்து வந்து வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கழகத் தோழியர்கள், தோழர்கள் மற்றும் பொது மக்கள் என திரளானோர் கூடி கண்ணீர் மல்க வீரவணக் கம் செலுத்தி, பின்னர் அவரின் விருப்பப்படியே சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட் டது.

முன்னதாக பெரியார் திடலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மறைவுற்ற கழக வீராங் கனை ஏ.பி.ஜே. மனோ ரஞ்சிதம் அம்மையார் படத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த் தினார்.

Read more: http://viduthalai.in/page-3/93253.html#ixzz3MX2Myejs

தமிழ் ஓவியா said...

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் விரும்பியபடி...

திராவிடர் கழக வீராங்கனை ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனப்படி அவரின் உடலுக்கு யாரும் மலர்மாலை வைக்கவில்லை; மாலை வாங்கி வந்தவர்களும் கட்டுப்பாடு காத்து அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலைக்கு அணிவித்தனர். அம்மையார் அவர்களின் விருப்பப்படி மாலைகளுக்குப் பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை அளிக்கும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் தோழர்கள் அளித்த நன்கொடை ரூ.25,021.

Read more: http://viduthalai.in/page-3/93256.html#ixzz3MX2VDSRS

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில்
மத்திய அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதையும், வருணாசிரம நூலான பகவத் கீதை, இந்திய தேசியப் புனித நூலாக அறிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்தும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாள்: 22.12.2014 (திங்கள் கிழமை) நேரம்: காலை 11 மணி

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தலைமை: க.பார்வதி

முன்னிலை: க.திருமகள், கு.தங்கமணி, உமா, ராணி ரகுபதி, வனிதா

தொடக்கவுரை: வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி

கருத்துரை: மேரி அக்சீலியா

முழக்கம்: இறைவி

Read more: http://viduthalai.in/page-3/93261.html#ixzz3MX2dLgXO

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவுத் தெளிவை ஏற்படுத்தியவர் பெரியார் கவிஞர் நந்தலாலா புகழாரம்

திருச்சி, டிச. 21- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணியாளர் கூட்டமைப்பின் நான் காவது கூட்டம் நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்ய அரங்கில் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 12-12-2014 வெள்ளி மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங் கிணைப்பாளர் பேராசி ரியர் ப.சுப்பிரமணியம் அவர் கள் அறிமுக உரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினராய் வருகை புரிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செய லாளர். கவிஞர் நந்தலாலா அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர 15.-11-.2014 முதல் 12.-12.-2014 வரை உள்ள நாட்களில் பிறந்தநாள் கொண்டாடிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமி ழாசிரியை திலகவதி, நடன ஆசிரியை பிரான்ஸிட்டா, முதுகலை பொருளியல் ஆசிரியை இருதய இச பெல்லா, பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியை லெட்சுமி,

அலுவலக உதவி யாளர் செல்வி. யாழினி, பெரியார் மருந்தியல் கல் லூரியின் ஆய்வக உதவி யாளர் தனலட்சுமி, சின் னப் பொண்ணு, மகேஸ்வரி. பெரியார் சமூகதொடர் கல்வியியல் கல்லூரியின் அலுவலக உதவியாளர் கீதா, நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்யத்தின் பணியாளர் சரஸ்வதி ஆகியோர் தங்கள் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக் காகவும் பிறந்த நாள் கேக் வெட்டி பயனாடை அணி வித்து சிறப்பு செய்யப் பட்டது.

நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடிய பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை திலகவதி பேசிய பொழுது தினமும் பல்வேறு பணிகளுக் கிடையே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது போன்ற கொண்டாட்டங் களும், நிகழ்ச்சிகளும் உறு துணை செய்வதாகக் கூறினார்.

மேலும் முது கலை பொருளியல் ஆசிரியை திருமதி இருதய இச பெல்லா பேசுகையில், வயிற்றுக்கும், சிந்தைக்கும் விருந்தளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருப்பதாகக் கூறியதோடு இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவ தற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று வளாக ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசி ரியை லெட்சுமி தனது மலரும் நினைவுகளை எடுத்துக்கூறி நமது கல்வி வளாகம் தம்மை குடும் பத்தில் ஒருவராக நினைத்து சுக துக்கங்களில் அரவ ணைத்து நடத்தியதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரி அலுவலக உதவி யாளர் சின்னபொண்ணு பேசுகையில்:_

இப்பிறந்தநாள் கொண் டாட்டம் ஒரு புதுவித அனுபவம் என்று கூறி இவ்வாய்ப்பை ஏற் படுத்தித் தந்த பணியாளர் கூட்ட மைப்பு மற்றும் ஒருங்கி ணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ் ணன் வரவேற்புரை நிகழ்த் தினார். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் நந்தலாலா சமூகம் உயர்த்திப் பிடித்த விசயங் களைப் போட்டு உடைத்து மக்களுக்கு அறிவுத் தெளி வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர் தான் பெண்களுக்கு முழு உரிமை யும் பெற்றுத்தர போராடி வென்றவர்.

அத்தகைய பெரியாரைப் பற்றி படிப் பவரும் பின்பற்றி நடப்ப வரும் தன்னை சரி செய்து கொள்கின்றனர் என்று கூறி ஆசிரிய மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும், வகுப்பறை நிர்வாகம் குறித்த தகவல்கள் பகுத்தறிவு சிந்தனையின் அவசியம் போன்றவற்றைத் தமக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு எடுத்துரைத் தார்.

நிகழ்ச்சியின் இறுதி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் துணை முதல்வர் வி.திலகம் நன்றி கூற விழா இனிதே நிறை வுற்றது. நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளா கத்தில் உள்ள கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் தலை மையாசிரியர்கள், பேராசி ரியர்கள், ஆசிரிய, ஆசிரி யைகள், அலுவலகப் பணி யாளர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண் டனர்.

Read more: http://viduthalai.in/page-7/93230.html#ixzz3MX33u9ex

தமிழ் ஓவியா said...

நதி நீர்ப்பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுப்போம்

வர்ணாசிரம நூலான - பெண்களை இழிவுபடுத்தும் கீதையை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியவே முடியாது!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

சென்னை, டிச.22- நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! இந்து மத நூலான வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் பெண்களை இழிவுபடுத்தும் கீதை புனித நூலாக தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க மாட்டோம். இது தொடக்கம்தான் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும், நியாய விரோதமாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கொடுத்த சிறப்பான அம்சங்களை தீவிரமாக விடைகொடுத்து அனுப்பக்கூடிய வகையிலும், கேரள அரசு மிகத் தீவிரமான ஒரு முறையிலே அணையை உயர்த்துவதற்கு குறுக்கே தடையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதற்கு எவ்விதத்திலும் உச்சநீதிமன்றத்தினுடைய ஆதரவு, நியாயமான தீர்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று சொன்ன உடனே, குறுக்குசால் ஓட்டுவதைப்போல, அவர்கள் வேறுவகையிலே அவர்கள் காட்டு வனப் பகுதியிலே நாங்கள் சுற்றுசூழலுக்கு ஆராய்வு செய் கிறோம் என்று அனுமதி கேட்டு, வழங்கி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் போக்கு

அந்த அனுமதியை வழங்கிய மத்திய அரசினுடைய வன இலாகா, சுற்றுசூழல்துறையினுடைய போக்கை வன்மையாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிக்கிறது. இரண்டாவதாக காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்போகிறோம் என்று கர்நாடகா தீவிரமான முடிவு களைச் செய்திருக்கிறது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தினுடைய ஆணைப்படி சிறப்பாக காவிரி நதிநீர் ஆணையத்தினுடைய மேலாண்மைக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தால், இந்தப்பிரச்சினையிலே, இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளிலே கர்நாடக அரசு இறங்குவதற்கு அதற்கு துணிவு வந்திருக்காது. மாறாக, மத்தியிலே இருக்கிற மோடி அரசு ஏற்கெனவே இருந்த காங்கிரசு அரசு வஞ்சித்தது என்று சொல்லிக்கொண்டு இந்த மக்களுடைய வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதற்கு அண்ணனாகத்தான் இதிலே நடந்து கொள்ளுகிறது என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.

தமிழ் ஓவியா said...

எனவே, காவிரி ஆற்றில் ஏற்கெனவே வறண்ட காவிரிப்பகுதியில், டெல்டா பகுதியில் விவசாயிகள் டில்லியிலேகூட சென்று ஆர்ப் பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த விவசாயி களைக்கூட சந்திக்க மோடிக்கு நேரமில்லை. பிரதமர் சந்தித்திருக்க வேண்டாமா? பிரதமர் அவர்களிடத்திலே வாக்குகளை வாங்குவதற்காக தமிழ்நாட்டுக்கு மற்ற இடங்களில் ஓடோடி வரு கிறாரே, அதே நேரத்தில் விவசாயிகளுடைய நலனைப் பாதுகாக்கிற அரசு மத்திய அரசு என்று சொன்னால், அவர்களுடைய கோரிக்கைகள் என்னவென்று சொல்லி டில்லியிலே அவர் வந்திருக்க வேண்டாமா? அதுமட்டுமல்ல, தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித ஆட்சே பணையும் அவர்கள் செய்வதற்குத் தயாராக இல்லை. மாறாக அதற்குத் தாங்கள் பச்சைக் கொடி காட்டுவதைப்போல நடந்துகொள்கிறது மத்திய அரசு. எனவே, அதை வன்மையாகக் கண்டிக்கக்கூடிய நிலையிலே, ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புப்படி காவிரி ஆணையத்தினுடைய மற்றொரு பகுதியை மேலாண்மைக் குழுவை அவர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாமல், கர்நாடகத்திலே மீண்டும் பாஜக ஆட்சி ஏற்ப டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

கீதை புனித நூலா?

அதேபோல, முழுக்க முழுக்க இந்துத்துவா ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இந்து மதத்திலேயே ஒரு பிரிவினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கக் கூடிய பகவத்கீதை என்கிற நூல் இருக்கிறதே - அது சாதாரணமாகவே பல்வேறு மக்களைக் கொச்சைப்படுத்துகிற ஜாதியை நிலைநாட்டுகிற சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று இழிவு படுத்துகின்ற ஒரு நூலாகும். எனவே அதற்குச் சரியான நல்ல நூல் என்கிற தகுதி கூட இல்லாத நேரத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் புறக்கணித்துவிட்டனர். நாட்டிலே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் யாருடைய சொல்லைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம், எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற சர்வாதிகார மோடி அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமே அல்ல. நேற்று வந்திருக்கிற இன்னொரு செய்தி - இந்தப் போராட்டம் அறிவித்தபிற்பாடு இந்தித்திணிப்பிலே அவர்கள் இன்னும் தீவிரமாக, ஏடிஎம் பணம் எடுக்கின்ற இடத்திலே அத்தனை படிவங்களையும் இந்தி யிலேதான் அமைக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தித்திணிப்பை இன்னும் வேகமாக வங்கித்துறைகளிலே மற்றவைகளிலே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு பிரச்சினைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்களுடைய உரிமைகள் பறிபோகின்றன.

தமிழ் ஓவியா said...

எனவே, இவைகளை வலியுறுத்தித்தான் பெண்கள் விழிப்புணர்வோடு வருகிறார்கள் தமிழ்நாட்டில் என்பதற்கு அடையாளமாகத்தான், திராவிடர் கழகத்தினுடைய மகளிரணி இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. இது இங்கே மட்டும் நடைபெறக்கூடிய போராட்டம் அல்ல. ஒவ்வொரு மாவட்டத் தலைவநகரங்களிலும் இதே நேரத்திலே தமிழ்நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. மகளிரே தலைமைத் தாங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்தக் காலத்திலே, 1938இலே வெற்றி பெற்றதற்கும் மகளிர் முன்னாலே நின்றதுதான் அடிப்படையான காரணமாக இருந்தது.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் மகளிர் ஈடுபட்டால், அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியைத்தான் தரும் என்பது இருக்கிறதே, அது நடைமுறையிலே நாம் பார்த்த ஒன்று. அந்த வகையிலே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்தை ஈர்ப்பது என்பது மட்டுமல்லஅரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம்முடைய மாநில அரசைப் பொருத்தவரையிலே எவ்வளவுப் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் , மற்ற மாநிலங்களிலே அனைத்துக் கட்சியைக் கூட்டுகிறார்கள். அவர்களுடைய கருத்து களைக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்று பிரத மரைச் சந்திக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே இருக்கிற அரசோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தங்களை அரசு இருக் கிறது என்று வலியுறுத்திச் சொல் வதற்குக்கூடத் தயங்கி தயங்கிச் செய்யக்கூடிய பரி தாபமான ஒரு நிலையிலே இருக்கிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வரவேண்டும். அவர்களடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். எனவே, இது ஒரு முதல் கட்டம்.

உரிமைகளைக் காப்போம்!

தமிழ்நாட்டிலே இந்தப் பிரச்சினைகள் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பல்வேறு வடிவமாக போராட்டங்களை அரசுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை திராவிடர்கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, தமிழ் இன உணர்வாளர்களின், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற உணர்வாளர்களின்சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93279.html#ixzz3MeFbIsHf

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் உங்களை அழைக்கிறது



இளைஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே, மாணவர்களே, இளைஞர்களே, இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அழைப்பு! எதற்கு? அறிவு விருந்துண்ண!

ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காத்திருக்கிறது.

டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களிலும் ஒப்புயர்வற்ற உலகத் தலைவரான சிந்தனச் சீலரான தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அது.

திராவிடர் இயக்கத்தில் பிற்காலத்தில் சுடர்விட்ட தலைவர்கள் சிந்தனையா ளர்கள், எழுத்தாளர்கள் சொற்பொழி வாளர்கள் எல்லோரும் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களே முன் னின்று நடத்திட்ட இத்தகு பயிற்சிப் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!

பயிற்சிப் பட்டறை நடத்துவது என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனிச் சிறப்பான முத்திரையுமாகும்.

திராவிட தமிழ் மண்ணில் காவிக் கூட்டம் கால் வைத்து பார்க்கலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழின இளைஞர்கள், மாணவர்கள் வார்த்தெடுக்கப்பட்ட போர்க் கருவி களாக உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, அருமை இளைஞர்களே, மாணவர்களே! இந்த மூன்று நாட் களிலும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஒகேனக்கல்! ஒகேனக்கல்!! ஒகேனக்கல்!!!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மூன்று நாட்களும் தங்கி வகுப்புகளை எடுக்க இருக்கிறார். இது ஓர் அரிய வாய்ப்பு! கழக முன்னணியினரும் பேராசிரியர் களும் தொடர்ந்து வகுப்புகளை, பல முக்கிய தலைப்புகளில் நடத்துவார்கள்; உங்களுக்கு ஏற்படும் அய்யங்கள் எல்லாம் அவ்விடத்திலேயே களை யப்படும்.

தருமபுரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் விரிவான முறையில் ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். மாலை நேரங்களில் அருகில் உள்ள ஊர்களில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் வேறு.
குறும்படங்கள் உண்டு; களப் பணிப் பயிற்சிகளும் உண்டு. இந்த மூன்று நாட்களும் உங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமையும் -

இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருப் பத்தூர், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியினர், கழகப் பொறுப்பாளர்கள் இளைஞர் களை, மாணவர்களை அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93295.html#ixzz3MeG3qwRu

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆத்மா

பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் ஏன் தெரியுமா? அது விதை போடாமல் வளரக் கூடியது. இதுபோலவே மனிதனின் ஆத்மா வுக்கும் விதை கிடையாது என்கிறது ஓர் ஆன்மிக இதழ்.

அப்படியா! மனி தனுக்குத்தானே ஆத்மா? அந்த மனிதன் விதை யில்லாமலா தானாகத் தோன்றினான்?
செத்த உடலை உயி ரில்லை என்கிறோம் - அதன்பின் ஆத்மா எங்கே வந்து குதித்தது?

Read more: http://viduthalai.in/e-paper/93296.html#ixzz3MeGdOq2a

தமிழ் ஓவியா said...

வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவை களுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
(விடுதலை, 13.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/93297.html#ixzz3MeHNAfwU

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலா?

மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 22- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதோடு, வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், வங்கித்துறையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் இன்று (22.12.2014) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

கருநாடகத்திலும், கேரளாவிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும் வருணாசிரம நூலான கீதை இந்திய தேசிய புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் டிசம்பர் 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 16.12.2014 அன்று அறிக்கை விடுத்தார்.

தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதன்படி இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலை நகரங் களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.12.2014) காலை 11 மணிக்கு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டக் கண்டன உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று சிறப்பித்தார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.திருமகள் மற்றும் மகளிரணி தோழியர்கள் உமா, ராணி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக் குரைஞர் தெ.வீரமர்த்தினி தொடக்கவுரையாற்றினார். பெரியார் களம் இறைவி மற்றும் மகளிரணி தோழியர்கள் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கு.தங்கமணி குணசீலன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், கழக வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், மடிப்பாக்கம் ஜெயராமன், பேராசிரியர் பெரியாரடியான், வழக்குரைஞர் சென்னியப்பன், பெங்களூரு கழகத் தோழர்கள் அரங்கநாதன் தோழியர் சொர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் ஆர்ப்பாட்டம்!

புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று கூறுகின்ற கீதை புனித நூலா?

பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா?

கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை
கண்டிக்கிறோம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!

காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க,
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா?

சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே!
கேரள அரசே
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத
கருநாடக அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! ர் உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் உயரட்டும்!
ர் தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

Read more: http://viduthalai.in/page-3/93278.html#ixzz3MeHor8Vs

தமிழ் ஓவியா said...

கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்


கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால் தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி என்று அழைக்கப் படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கருநாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவல்லி இலைகளை காய வைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தை களுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும்.

சளியின் அபகாரம் குறையும். கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும்.

கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/93294.html#ixzz3MeIDgs25

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)


மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

50. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமானமின்மை மாறும்.

51. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

52. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

53. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

54. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

55. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

56. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

57. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

58. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

59. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தை களுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

60. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

61. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். 62. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

63. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

64. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

65. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

66. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

67. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

68. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

69. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

70. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்த வும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த முன்னோர் கூறியது இது.

71. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

72. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத் தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

73. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

74. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/93298.html#ixzz3MeINE7Hz

தமிழ் ஓவியா said...

ஒரு கொள்கை வீராங்கனையின் வீரஞ்செறிந்த இலட்சியப் பயணம் - நமது சிறப்பு செய்தியாளர்

சென்னைப் பெரியார் திடலில் நேற்று (21.12.2014) முற்பகல் நடைபெற்ற அந்த நிகழ்வு இப்பொழுது நினைத்தாலும் அதிசயமானதாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.

திராவிடர் கழக மூத்த இலட்சிய வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் மறைவையொட்டி நடைபெற்ற அந்த நிகழ்வுதான் அது.

மரணம் அடைவதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்தார் ஒப்பில்லா மரண சாசனம் ஒன்றை. உயிருடன் இருக்கும்போதே மரணத்தைப் பற்றி நினைப்பதே கூட அமங்கலமானது என்று கருதக்கூடிய அல்லது அச்சத்தின் காரணமாக அப்படி நினைக்கத் தயங்குகின்ற ஒரு சமூக அமைப்பில், இப்படியும் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் உள்ள தனிச் சிறப்பு.

நேற்று காலை 10.30 மணியளவில் பொது மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் திடலுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் வீராங்கனையின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டது.

அம்மையாரின் உடலுக்குக் கழகக் கொடியைப் போர்த்தி, இலட்சிய முத்திரையுடன் தன் வீரவணக்கத்தைச் செலுத்தினார் கழகத் தலைவர். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் நன் கொடையையும் செலுத்தினார்.

தனது உடலுக்கு மாலைகளை அணிவிக்கச் செய்யாமல், அதற்குப் பதிலாக மாலைக்கு ஆகும் அந்தத் தொகையை திருச்சி - நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக அளியுங்கள் என்ற அம்மையார் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டு இருந்த வேண்டுகோளும் காப்பாற்றப்பட்டது. இந்தத் தகவல் தெரியாமல் மாலை வாங்கிவந்தவர்கள் கூட, கட்டுப்பாடு காத்து, அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலை, நினைவிடங்களில் வைத்தனர்.

நாகம்மையார் இல்லத்துக்காக நன்கொடைக்கான உண் டியல் ஒன்று வைக்கப்பட்டது. மாலைக்குப் பதில் நன்கொடை அளித்தனர். அந்தத் தொகை மட்டும் ரூ.25,021 ஆகும்.

நாம் எதைச் செய்தாலும் அது யாருக்காவது பயனுள்ள தாக இருக்க வேண்டுமே! மாலை வைத்தால் சிறிது நேரத்தில் குப்பைத் தொட்டிக்குத்தானே போகும். என்னே சிந்தனை! எத்தகைய அறிவுத் துடிப்பை இயக்கத் தோழர்கள் மத்தியிலே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்துச் சென்றுள்ளார்.

இயக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகவும், பல தரப்புப் பெருமக்கள் சாரை சாரையாகவும் அம்மையாருக்கு வீர வணக்கம் செலுத்தி, நாகம்மையார் இல்லத்துக்கு நன்கொடையையும் அளித்தனர்.இரங்கல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அம்மையாரின் மரணசாசனத்தை கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் படித்தார், தொடர்ந்து கழக வழக்குரைஞர் அருள்மொழி வீரமர்த்தினி, கழகத் தலைவர் இரங்கல் அறிக்கையினைப் படித்தார்.

இரங்கல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அருள்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, ஆனூர் செகதீசன், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், நக்கீரன் இதழ் துணை ஆசிரியர் லெனின், வழக்குரைஞர் விஜயகுமார் (கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி) ஆகியோர் உரைக்குப் பிறகு, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் பெயர்த்தி ஆனி கிரேஷ் நன்றி உரையாற்றினார்.

இலட்சிய வீராங்கனையின் உருவப்படத்தைத் திறந்து வைத்து நிறைவுரையாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை, இலட்சிய தீபத்தின் சுடராக வும், கழகத்தின் பீடு நடையை முரசடித்து வெளிப்படுத்தும் கம்பீரமாகவும், பெருமிதம் பீறிடும் உரையாகவும் வளமான சொல்லாக்கத்துடன் பெருகி வந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு துக்க நிகழ்ச்சியைக் கொள்கை விழாவாக திராவிடர் கழகத்தவரைத் தவிர வேறு யாரால் நடத்த முடியும்? என்ற தலைவரின் கேள்வி அர்த்தம் மிக்கது.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேள்வி கேட்டவர்கள் உண்டு. இருக்கக் கூடாது என்று எண்ணிய எதிரிகள் உண்டு. இயக்கம் எப்படி இருக்கிறது - எந்த அளவு கொள்கை நேர்த்தியுடன் ஒளிவீசுகிறது - மிளிர்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதாதா?

தமிழ் ஓவியா said...

மரண பயம் என்பது மத நம்பிக்கையாளர்களுக்கு உண்டு. காரணம் நரகம் நம்பிக்கைகளால் ஏற்படுத்தப்பட்ட பயமே! இவற்றில் எள் மூக்கு முனை அளவும் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு எனும் பலமும் செறிவும் கொண்ட வர்கள் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டார்கள் - என்பதற்கு மனோரஞ்சிதம் அம்மையாரின் மரண சாசனம் தலைசிறந்த எடுத்துக்காட்டு.

சொல்லுவதுபடி வாழ்வதும் - வாழ்வதுபடி சொல்லு வதும் என்பதுதான் தந்தை பெரியார் ஈன்றெடுத்த இந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவு நாணயம் கமழும் பாலபாடமாயிற்றே.

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் திராவிடர் மாணவர் கழகத் தலைவர்; நான் அதன் செயலாளர் பொறுப்பாளர்களாகிய நாங்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோம் என்று தீர்மானம் போட்டோம். தந்தை பெரியார் அவர்கள் கூட என்ன இப்படி உணர்ச்சி வயப் பட்டு தீர்மானம் நிறைவேற்றி விட்டீர்களே - தீர்மானத் தின்படி நடந்து கொள்வது எளிதானதா?

சொல்லாமல் செய்து காட்டும்வரை பொறுமை காட்டி இருக்கலாமே! யோசிக்க வேண்டாமா என்று ஒரு தந்தையின் இடத்தி லிருந்து கேட்டபோது எங்கள் முடிவில் தீர்மானமாகத்தான் இருக்கிறோம் - செய்து காட்டுவோம் என்று தந்தை பெரியார் அவர்களிடம் சொன்ன பொழுது, பெரிதும் மகிழ்ந்தார்கள்.

நம் முன் பல தளங்கள் - களங்கள் உள்ளன; இந்தக் காலகட்டத்தில் நல்ல தளபதிகளை இழந்து வருவதைக் கண்டு திடுக்கிடும் நிலை என்றாலும், நம் பயணம் தொய்வின்றித் தொடரும்!

நம் பாதை பெரியார் பாதை - பெரியார் பாதை என்பது நாளை உலகப் பாதை - அதில் பீடு நடைபோடுவோம் என்று சூளுரைத்தார்கள்.

மிகப்பெரிய அளவில் கூடியிருந்த பெருமக்கள் ஆசிரியர் அவர்களின் உரையை உள்வாங்கியிருந்த நிலையில் உறைந்து காணப்பட்டனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக அமைந் திருந்தது.

இலட்சியப்படி வாழ்ந்தால் இந்த இயக்கத்தில் சமூகத்தில் எத்தகைய மரியாதை காத்திருக்கிறது என்ற கொள்கை ஓட்டமும் அவர்களுக்குள் இருந்திருக்கலாம்.

சென்னைப் பொது மருத்துவமனையில் அம்மை யாருக்கு மிகுந்த மனிதநேயத்துடன் கவலை எடுத்துக் கொண்டு கடமையாற்றிய மருத்துவர் ஆனந்த் அவர்க ளுக்கும், உடல்நிலை குறித்துத் தகவல்களைத் தந்து கொண் டிருந்த மருத்துவர் சத்தியராஜ் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! கொள்கை வீராங் கனைக்கு வீரவணக்கம்! என்று கழகத் தலைவரே உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட, அதனைத் தொடர்ந்து அம்மையாரின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொடையளிக்கப் புறப்படத் தயாரானது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! இயக்க வீராங்கனைக்கு வீரவணக்கம்! கொள்கைப் போராளிக்கு வீரவணக்கம்! என்று தோழர்கள் முழக்கமிட்ட வண்ணம் ஆம்புலன்சும் நகர ஆரம்பித்தது. பெரியார் திடல் நுழைவு வாயில் வரை கழகத் தலைவர் அவர்களுடன், தோழர்கள் அணிவகுத்து வந்து அந்தக் கொள்கை வீராங்கனைக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப.சீத்தாராமன், அம்மையாரின் பெயரன், பெயர்த்தி ஆகியோர் சென்னைப் பொது மருத்துவ மனைக்கு உடன் சென்று, உரிய வகையில் இலட்சிய வீராங்கனை ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் உடலை ஒப்படைத்தனர்.

வாழ்க வீராங்கனை மனோரஞ்சிதம்! வாழ்க தந்தை பெரியார்!! வெல்க திராவிடர் கழகம்!!!

Read more: http://viduthalai.in/page-8/93318.html#ixzz3MeIrUXac

தமிழ் ஓவியா said...

தச்சார்பற்ற - சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி, தீண்டாமையை ஒழிக்கின்ற அணியை உருவாக்குவோம்!

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு


சென்னை, டிச.23- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நல்லிணக்கத்திற்கு அச் சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் தலைமையில் இன்று (23.12.2014) நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:

சரியான நேரத்தில்

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. ஏதோ விடுதலை சிறுத்தைகள் மட்டும் இயங்குகிறார்கள் என்று யாரும் கருத வேண்டாம். இந்த மேடையிலே உயர்த்தப் பட்ட கைகள் எப்போதும் தாழாது, எப்போதும் ஓயாது. எப் போதும் வீழாது. இந்தக்கைகள் பதவிக்காக உயர்த்தப்பட்ட கைகள் அல்ல. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக, இந்த நாட்டின் மனிதநேயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒரு புது உலகத்தை உருவாக்குவதற்காக, அதோடு பாய்ந்து வரக்கூடிய கொடுமைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவ தற்காக இந்தக் கைகள் எந்த நேரத்திலும் எந்தக் கருவி களை வேண்டுமானாலும் ஏந்தக்கூடிய கைகளாகவும் ஆகும் என்பதுதான் மிக முக்கியம்.

தமிழகத்திலே அமைதிப்பூங்காவாக இருக்கிற இந்த இடத்திலே இருந்து கிளம்ப வேண்டும். தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழகத்தையே பெரியார் மண்ணாக இருக்கக்கூடிய இந்த மண்ணை பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கைக்கு இதுதான் தலைசிறந்த விளைநிலம் என்று சொல்லக் கூடிய இந்த மண்ணை, அதுபோலவே புரட்சியாளர்களுக்கெல்லாம் இதுதான் தலைசிறந்த மண் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை காவி மண்ணாக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒருபக்கத்திலே தீவிரமாக பல வடநாட்டுத்தலைவர்களைக் கொண்டுவந்து, இறக்குமதி செய்து, இங்கே யாராவது கிடைப்பார்களா என்று தேடித்தேடிப்பார்த்து, யார் கிடைப்பார்கள் என்று ஓடிப்பார்த்து அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலே அவர்கள் ஆட்சியிலே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். நாம் இங்கிருக்கக்கூடிய அணியினர் அன்றைக்கே எச்சரித்தோம். ஆனாலும் ஏமாந்தார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலி வேஷம் போட்டு ஆடுகிறான்; புல் அளவேனும் பொதுமக்களுக்கு மதிப்பேனும் தருகின் க்ஷறானா? என்று புரட்சிக் கவிஞர் கேட்டார். 6 மாதத்தில் அவர்களின் மறைமுகத் திட்டங்களை வெளிப்படையாகச் செய்வதற்குத் திட்டமிட்டு செய்கிறார்கள்.

மத சார்பற்ற புதிய அணி

திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகள், இடது சாரிகள், முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கின்ற மற்ற சிறு பான்மை மக்கள் அத்தனைப்பேரையும் ஒருங்கிணைத்து மதசார்புக்கு அப்பாற்பட்ட மதசார்பற்ற ஒரு அணி, மத வெறியை மாய்த்து மனித நேயத்தைக் காக்கக்கூடியவகையிலே ஒரு சிறப்பான Secular, Social Justice, Caste and Untouchability Eradication Front
என்று சொல்லக் கூடிய மதச்சார்பற்ற, சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற ஜாதியை தீண்டாமையை ஒழிக்கின்ற ஒரு மகத்தான அணி ஒன்றை விரைவில் ஏற்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதைக் கூட்டு வதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக அச்சாரமாகத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.

உயர்த்தப்பட்ட இந்தக் கைகள் உரிமைகள் கோரும் கைகளாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கோரிக்கைகள் ஒன்று தான். கோடி கைகள் பலவாக இருந்தாலும்!

இந்தக்கூட்டம் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கும் கூட்டம். - இவ்வாறு தமிழர் தலைவர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93358.html#ixzz3MjJlLrzG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

லட்சுமி

சுடுசொல் பேசுபவர் கள் போன்றோரிடம் லட்சுமிதேவி ஒரு போதும் தங்கி இருக்க மாட்டாளாம். அப்படியா? சுப லட்சுமி என்றும், தன லட்சுமி என்றும், வெறும் லட்சுமி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளவர் களே எரிந்து எரிந்து விழுகிறார்களே அது எப்படி?

Read more: http://viduthalai.in/e-paper/93365.html#ixzz3MjJtzGrS

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் கோயில் நுழைவு வெற்றி


பெங்களூர், டிச.23-_ கருநாடகத்தில், மாநில அர்சின் அறநிலையத் துறையின் (முஜ்ராய் துறை) கட்டுப்பாட்டில் உள்ள சில கோயில்களில் கூடத் தாழ்த்தப்பட்டோர் நுழையமுடியாத நிலை இன்றும் நீடித்துவருகின் றது. ஆங்காங்கே தாழ்த் தப்பட்டோர் கிளர்ந் தெழுந்து கோயில் நுழை வுப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோலார் மாவட்டத் தில் உள்ள முல்பாகல் வட்டத்தில் கதனஹள்ளி என்னும் ஊர் உள்ளது. கோலார் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள் ளது.அந்த ஊரில் உள்ளசிறி சவுடேசுவரி கோயில் அறநிலயத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரையில் இந்தக் கோயிலுக்குள் செல்லத் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லை.

கருநாடகத்தில் இயங்கிவரும் தலித்தர க்ருஹப்ரவேச ராஜ்ய சமிதி (மாநில தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு சங்கம்)என்னும் அமைப்பு, தீண்டாமை இல்லாத இந்தியாவை நோக்கி நடையிடுவோம் என்னும் முழக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் ஏற் பாட்டின் கீழ் அந்தப் பகுதியைச் சேர்ந்த தாழ்த் தப்பட்டோர் பலர் 21_12_2014 ஞாயிறன்று மேற்சொன்ன கோயிலுக் குள் நுழைந்தனர்.

பாராட்டத்தக்கச் செய்தியாக, இந்த கோயில் நுழைவுப் போராட்டத் திற்கு அரசின் ஆதரவு கிடைத்துள்ளது. அற நிலையத்துறையின் துணை ஆணையர் கே.வி. திரிலோக்சந்திரா உட்பட பல அதிகாரிகளும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.என். சீனிவாசாச்சார்யா, கருநாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.என். நாகமோகன் தாஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

75 அகவை நிரம்பிய நாராயணம்மா என்பார் தன்னுடைய வாழ்நாளில் முதல் முறையாக இந்தக் கோயிலில் நுழைந்திருப்ப தாகவும் இது அறநிலையத் துறை துணைஆணை யரின் ஆணையினால் தான் சாத்தியமாயிற்று என்றும் கூறியுள்ளார். இந்த அம்மையாரும் அந் தப் பகுதியின் பஜனை மற்றும் கோலாட்டக்குழு கலைஞர் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தக் கோயில் நுழைவு மட்டுமே அந்தப் பகுதி தாழ்த்தப்பட்டோர் எதிர்கொள்ளும் சிக்கல் களுக்குத் தீர்வாகிவிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் மிகப் பெரிய அறிவியல் சாதனைகளைப் படைத் திருந்தாலும் பல துறை களில் முன்னேற்றம் கண்டி ருந்தாலும் நாட்டில் தீண்டாமைக் கொடுமை இன்னும் நிலவுவது மிக வும் வேதனைக்குரியது என்றும் சமூகக் கொடு மைகளுக்கு வெறும் சட் டங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி நாக மோகன்தாஸ் கூறினார்.. மக்கள் மனதில் இதற் குரிய மாற்றம் வர வேண்டும் என்றும் கல் வியும் அறிவியல் மனப் பான்மையுமே புத்தர், பசவேசுவரா போன்றவர் களின் கனவுகளை நன வாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93361.html#ixzz3MjKO84Vt

தமிழ் ஓவியா said...

மேட்டுக்குடியினர் பண்பாடே வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது
வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் பேச்சு

சென்னை, டிச. 23-_-- இந்தியாவின் வரலாறும் பாரம் பரியமும் பன்முகத் தன்மை கொண்டது; இந்நிலையில் ஆதிக்கம் செலுத்திய மேட் டுக்குடி பண்பாட்டை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் வரலாறு முழுமை யற்றதாகி விடும் என்று நாட்டின் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பேராசிரியை ரொமிலா தாப்பர் கூறினார்.சென்னையில் உள்ள கலாச்சேத் திரத்தில் ருக்மணிதேவி நினைவு சொற்பொழிவை ரொமிலா தாப்பர் ஆற்றினார்.அப்போது அவர் கூறியதாவது -நமது பாரம்பரியத்தை புதிய அர்த்தத் துடன் புரிந்து கொள்ள புதிய தேடல்களை மேற்கொள்ள வேண்டும்.

இதில் மேட்டுக்குடி அல்லது மத ரீதியான பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் நமதுதேடல் முழுமையடை யாது. இந்தியாவின் பாரம்பரியத்தின் செழுமையை நாம் உண்மையாக்க வேண்டும் எனில், நமது பன்முகத்தன்மை வாய்ந்த பண்பாடுகளின் பல விசயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.நமது வரலாற்றில் பாரம்பரியம், மரபு மற்றும் பண்பாடு குறித்த சொல்லாடல் களின் பொருளை நுட்ப உணர்வுடன் புரிந்து கொண்டோமானால் எப்படி மேட்டுக் குடியினரின் பண்பாடு வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய வரலாறு அப்படி கூறப்படுவது போல ஒன்றும் சுகமானதோ அல்லது எளிமையானதோ அல்ல. மரபு என்பது கடந்த காலத்தில் இருந்ததற்கும் நிகழ்கால அபிலாஷைகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவுகளின் விளைவாகும். மதச்சடங்குகளை ஆராயும்போது அவை பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கம் பெற்றவை என்பது தெளி வாகிறது. தற்போதைய நமது நட வடிக்கைகளை நியாயப்படுத்திட, அதற்கேற்ப கடந்த காலம் என்பது திட்டமிட்டு உரு வாக்கப்பட்டுள்ளது.

தேசியப் பண்பாடு என்பது எப்படி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? பன்முகத்தன்மை வாய்ந்த நமது பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குவது, நமது மரபுரீதியான சின்னங்களை (மதச்சகிப்புக் கானவை) அழிப்பதில் கொண்டுபோய் விடும். பாபர் மசூதியை இடித்தது போல சில அரசியல் கார ணங்களுக்காக அவை நடைபெறலாம். இவ்வாறு ரொமிலா தாப்பர் உரையாற் றினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93359.html#ixzz3MjKYkb4R