Search This Blog

9.12.14

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும் வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல!


திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்
வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல!

குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம்.


அதேநேரத்தில் திராவிட உணர்வுகளை அழிப்பதற்காக இப்போது பல சக்திகள் ஒன்று சேருகிற இந்தக் காலக் கட்டத்திலே வைகோ போன்ற கொள்கை தெளிவாளர்கள் அடுத்து எடுக்கக்கூடிய முடிவு என்பதை முன்புபோலவே அவசரப்பட்டு எடுக்காமல் இன உணர்வு, மொழி உணர்வு, திராவிட பாரம்பரிய  வரலாறு இவைகளோடு ஒத்துப் போகக்கூடிய சிறந்த முடிவை அவர் சுதந்திரமாக எடுத்து, அதன்மூலமாக காலங்காலமாக அவர் கூறி வருகின்ற பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு என்றைக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தப் பயணத்தில் உறுதுணையாக அமைய வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகவத் கீதை புனித நூலா!


கேள்வி: பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்போவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது குறித்து?


பதில்: அரசியல் சட்டத்தின்மீது பிரதமர் மோடி, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நேர் எதிரான செய்கை இந்த பகவத் கீதையை தேசிய நூலாக ஆக்குவோம் என்று கூறியிருப்பது. பகவத் கீதை என்பது ஜாதியை, பெண்ணடிமையை, பெண்களைக் கொச்சைப் படுத்துகின்ற பல்வேறு ஒவ்வாத கருத்துகளைக் கூறுகின்ற ஒரு நூலாகும். இதை நீண்ட காலத்துக்கு முன்னால் கீதையின் மறுபக்கம் என்கிற தலைப்பில் ஆதாரபூர்வமாக ஒரு நூலாக, ஆய்வு நூலாக, ஆராய்ச்சி நூலாக இதை நான் தெளிவு படுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் திருக்குறள் போன்றமதங்களுக்கு அப்பாற்பட்ட  அனைவருக்கும் அறநெறியைக் கூறக்கூடிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறக் கூடிய வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டோம் என்று பெருமைப்படத்தக்க ஒரு திருக்குறள் போன்ற நூலை வைக்க வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் பலரும் கலைஞர் முதல் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பலரும் கூறுகின்ற காலத்தில், திட்டமிட்டே இந்துத்துவாவைப் பரப்ப வேண்டும் என்ற அஜெண்டாவின் இன்னொரு நிகழ்ச்சியாக இதை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அவர் தனிப்பட்ட நிலையில் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத்திய அரசாங்கத்தை நடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இப்படிச் செய்தால் இந்தியாவை மதரீதியில் அவர்கள் துண்டு போடுகிறார்கள் என்று பொருள். மதச் சார்பின்மை என்ற கொள்கையை  குழிதோண்டிப் புதைக் கிறார்கள் என்று பொருள். எனவே, வன்மையான கண்டனத்துக்குரியது. இதை நான் சேலத்திலேயே 2 நாள்களுக்கு முன்னால் பேசும்போது உடனடியாகச் சொல்லியிருக்கிறேன்.


சமஸ்கிருதம் கட்டாயமாம்

கேள்வி : கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சமஸ் கிருதம் கட்டாயப்படுத்தும்போது தமிழ் வெளியே துரத்தப்படுகிறதே?


பதில் : ஆர்.எஸ்.எஸ்சினுடைய கொள்கைகளிலே முதல் கொள்கை இந்தியா முழுவதும் சமஸ்கிருதமயமாக் கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, பிள்ளைகளுக்குக் கட்டாயமாக சமஸ்கிருதத்தைப்படிக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு என்பது பல கட்சிகளிடமிருந்து உடனடியாக வந்துவிட்டது. மோடி வந்தால், அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றால் இந்தியாவைத் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போன்று தேர்தல் நேரத்திலே அப்பாவி இளைஞர்கள் இணையதளத்தைப் பார்த்து ஏமாந்து, வளர்ச்சி என்ற முகமூடியைக் காட்டி வந்தார்கள். இப்போது வளர்ச்சி யாருக்கு? எப்படிப்பட்ட வளர்ச்சி? ஆர்.எஸ்.எஸ்சுக்கு வளர்ச்சியா?அகில இந்தியாவினுடைய வளர்ச்சியா? என்பது இப்போது புரிந்து விட்டது.மோடியினுடைய முகமூடி கிழிகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை ஆளுகிறது என்பதற்கு இது அடையாளம். எவ்வளவு வேகமாக அவர்கள் செய் கிறார்களோ, அவ்வளவு வேகமாக அதனுடைய விளை வுகளும் இருக்கும்.


கேள்வி: ராஜபக்சே திருப்பதி வருகை...?


பதில்: ராஜபக்சேவை அவருடைய நாட்டில் அவர் தேர்தலில் நிற்பதற்கு அங்கேயே எதிர்ப்பு இருக்கிற நிலையில், வேறொரு நிகழ்ச்சியிலே சந்திக்கிறபோது, அவருக்கு வெற்றி வாய்ப்பு வரவேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி விரும்புவது என்பது இவர்கள் இருவருடையஎண்ணங்களும், அணுகுமுறைகளும் எப்படி இருக்கின்றன என்பதை அதுவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, அவர் திருப்பதிக்கு வருவதோடு அவருக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து ஏற்கெனவே அவரைப் பதவி ஏற்புக்கு அழைத்ததைப்போல, குடியரசு நாளுக்கும் தலைமை விருந்தினராக அழைக்காமல் இருந்திருக்கிறார். அதுவரையிலும் மகிழ்ச்சி. பரவாயில்லை அதற்கு ஒபாமா கிடைத்திருக்கிறார்.


கேள்வி: கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றுள்ளார்களே?


பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருப்ப தாலே எந்தக்கருத்தையும் சொல்வ தற்கில்லை.

நிழல் முதல் அமைச்சரா?

கேள்வி: நிழல் முதல் அமைச்சர் என்று ஓ.பன்னீர் செல்வத்தைக் கூறு கிறார்களே, தமிழக அரசுடைய நிலை என்ன? சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் சரியாக உள்ளதாக கூறியுள்ளாரே?


பதில்: பரவாயில்லை. அவர் முதலமைச்சர் என்று நினைத்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிக்குரியது.


கேள்வி: அரசு எந்திரமே முடக் கப்பட்டிருப்பதாக ஒரு புகார் உள்ளது. அவர் சொன்னால்தான் நடக் கும், அவர் படம் கணினி உள்பட பல இடங்களிலும் உள்ளது. இதுகுறித்து கலைஞரும் வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு தாங்கள் என்ன கருத்து கூறுகிறீர்கள்?


பதில்: ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் போய் இன்னொரு முதல்வர் வரும்போது இயல்பாகவே இருக்கைகள் மாறும். படங்கள் மாறும். ஆட்சிகள் மாறியிருக் கிற காரணத்தால். ஆனால், இங்கே காட்சிகள் அதேபோல இருக்கின்றன. ஆட்சிகள் மாறிவிட்டன என்று சொல்லப் படுகின்றன என்று சொல்லுவது உலக ஜனநாயகத்தில் விசித்திரமாக நம் முடைய நாடு இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


கேள்வி: இன்றைக்கு இங்கே (குன்னூர்) என்ன நிகழ்ச்சி?


பதில்: பெரியார் 1000 என்று சொல்லி பெரியாருடைய வாழ்க்கை வரலாறு இவைகளைப்பற்றி ஒரு புத்தகம். மாணவ உள்ளங்களிலே சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெரியாருடைய தொண்டு இவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் 1000 வினா விடை என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரையிலே 1 இலட்சம் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் விரும்பி தேர்வு எழுதி பரிசு பெற்றிருக்கிறார்கள். நாடுபூராவும் 1 இலட்சம் மாணவர்கள் அதிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் பல மாவட்டங் களில் இருக்கிறார்கள். அதிலே இந்த நீலகிரி மாவட்டத்திலே இங்கே நம் முடைய மாவட்ட செயலாளர் முபாரக் போன்றவர்கள், நம்முடைய தோழர்கள் பலரும் உதவி செய்து, அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய பரிசுகள் மற்றவைகள்கொடுத்து உதவ முன் வந்திருக்கிறார்கள்.எனவே, இந்த பரி சளிப்பு விழாவுக்காக மாணவர்கள், பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். இந்த நீலகிரி மாவட்டத்திலே இந்த அளவுக்கு சிறப்பாக மாணவர்கள் வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இது மேலும் வளர வேண்டும். காரணம் பெரியார் அனை வருக்கும் உரியார்.

மது விலக்கு!

சேலம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மிக முக்கியமான ஒரு தீர்மானமாக பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் மத்திய அரசாலும், மாநில அரசாலும்கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக் கிறோம். இதைத் தீவிரமான பிரச்சாரம், சட்ட நடவடிக்கைகள் இவற்றின்மூலமாக உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தற்போதைய இளைய சமுதாயம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்கூட இந்த குடிப்பழக்கத்துக்கு ஆளாகி பெண்கள், குடும்பங்களிலே மிகப்பெரிய அவதியை உருவாக்கக்கூடிய அளவுக்கு, அனுபவிக்கக்கூடிய அளவுக்கு கொடு மைகள் பரவலாக ஓங்கிக் கொண்டி ருக்கின்றன. எனவே, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இந்த மதுவை ஒழித்து, வேறுவகையில் வருமானங்களை உருவாக்குவதில் திட்டமிட வேண்டும்.

கேள்வி
: சட்டசபையில் கலைஞருக்கு போதிய வசதி, இருக்கை அமைக்க படாமல் இருந்ததுகுறித்து? ஆனால், ஏற்கெனவே சபாநாயகர் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தாரே...உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் 2 நாள்களுக்கு முன் னாலே ஏற்கெனவே அறிக்கை கொடுத் திருக்கிறேன். கலைஞரை அழைத்தவர் அவருக்கு வேண்டிய இருக்கையை ஏற்பாடு செய்யவில்லையானால், அவர் அழைப்பு உண்மையானதுதானா என் பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  இதுவே ஒரு நல்ல சந்தர்ப்பம்.

                   --------------------”விடுதலை” 9-12-2014

27 comments:

தமிழ் ஓவியா said...

ஆன்மீகவாதிகளே அறிவியலைப் பாரீர்!


இங்கிலாந்தில் உள்ள நாட் டிங்காம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும வானியல் துறையின் பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரோஜர் பவ்லே தம்முடைய தலைக்கு (திஷீக்ஷீமீலீமீணீபீ-நெற்றிப் பொட்டுக்கு) அருகில் ஒரு சாவியைக் கொண்டு செல்கிறார். அவர் மூளை இடும் கட்டளையை அச்சாவிமூலமாக காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி யுடன் தொடர்புகொண்டு அந்தக் காரைத் திறக்கச் செய் கிறது. சாவியை மார்புப்பகுதி வரையிலும் கொண்டு சென்றாலும் மூளையின் கட்டளையை ஏற்று செயல்படுகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் பணி ஓய்வு பெற்ற இயற்பியலாளர் ரோஜர் பவ்லே இத்தொழில்நுட் பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

ஏற்கெனவே ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் முறையில் தனியே சாவிக் கொத்துடன் உள்ள கருவியைக் கொண்டு வாகனங்களின் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டைத் திறக்கவும், மூடவும், அந்நியர் எவரும் வாகனங்களை நெருங்கி அசைத்தால் ஒலி எழுப்பவும், விளக்குகளை இயக் கவும் மற்றும் காரை இயங்க (ஸ்டார்ட்) செய்யவும் என பல்வேறு செயல்களை குறிப்பிட்ட தொலைவிலிருக்கும் போதே செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தற்போது அதன் வளர்ச்சியாக மூளையின் கட்டளையை மின்காந்த அலைகளாக காருக்குள் பொருத்தப்பட் டிருக்கும் கருவிக்கு செலுத்தி அதன் மூலம் மூளையின் கட்டளைக்கிணங்க செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே உள்ள வாய்ப்புகளைவிட பல்வேறு தொலைவுகளில் இச்செயல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

மூளையின் திறனைக்கொண்டு ரேடியோ டிரான்ஸ்மிட்டராக செயல் பட்டு தொலைவிலிருந்தே இயக்கு வதற்கு மின்காந்தஅலைகள்மூலமாக சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு காரில் உள்ள கருவிமூலம் கட்டளையைப் பெறுகிறது. அதன்மூலம் பூட்டப்பட்ட கார் திறக்கப்படுகிறது. இந்த ஆய்வை பேராசிரியர் ரோஜர் பவ்லே இணையத்தில் யூ-டியூப்பில் வீடியோ காட்சியாகப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் ரோஜர் பவ்லே கூறும் போது, காரைவிட்டு விலகி நீண்ட தொலைவுக்கு செல்லும்போது படிப் படியாக சமிக்ஞை பலவீனமடைகிறது என்கிறார்.

தண்ணீர் மின்காந்த அலையை அதிக தூரத்துக்கு எடுத்தும் செல்லும் ஆற்றல் உள்ளது. மூளையும் முழு மையாக நீர்மத்தைக்கொண்டுள்ளது.

மின்காந்த அலைகள் நீரின்மூலம் செல்லும்போது நேர் மின்சாரமாக ஹைட்ரஜன் அயனிகள்மூலம் மாற்றப் படுகிறது. ஆக்சிஜன்அயனிகள்மூலம் எதிர் மின்சாரமாகவும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் மேலும், கீழும் தள்ளப்படுவதுமாக இருக்கிறது என்று பாவ்லே கூறுகிறார்.

சாவி மின்காந்த அலைகளை காருக்கு அனுப்புகிறது. அதாவது, மூளையும், சாவியும் ரேடியோ டிரான் மிட்டர்கள்போல் செயல்படுகின்றன. மின்காந்த அலைகளை மேலும், கீழுமாக தொடர்ந்து அனுப்புவதன்மூலம் ஆற் றலை மிகைப்படுத்தியவண்ணம் உள்ளது.

தலையில் உள்ள நீர்மங்கள் மின் காந்த அலைகளைக் கொண்டு செல் கின்றன. அவை ஒரே அலைவரிசையில் நீண்ட தொலைவுக்குக் கொண்டு செல் கின்றன. அதன்படியே காரில் உள்ள சாவிவரையிலும் மின்காந்த அலைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

மின்காந்த அலைகளை ஒரு குவ ளையில் உள்ள தண்ணீர் தொலை வினை அதிகப்படுத்துகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறையில் தம்முடைய ஆய்வை பவ்லே விளக்கிக் கூறும்போது, இணையத்தில் தம்முடைய யூ-டியூப் வீடியோ பதிவின்மூலமாக தம்முடைய கார் இருக்கும் பகுதியில் தொலைவில் சாலையிலிருந்து காருக்கு கட்டளைப்பிறப்பித்து அதன் செயல்பாட்டை நிரூபித்து விளக்கினார்.

இத்தொழில் நுட்பத்தை பயன்படுத் தும் ஒருவர் கூறும்போது, நான் முதலில் நம்பவே இல்லை. நான் என்னு டைய காருக்குத் தொலைவில் இருந்த போது காரின் பூட்டைத் திறக்க வேண் டியிருந்தது. அப்போது என் நண்பர் ஒருவர் டிரான்ஸ்மிட்டர் ஒன்றை தலைக்கு அருகில் கொண்டு செல்லு மாறு கூறினார். அதன்படி நான் செய்த போது அதன் வேலையை செய்தது.

காருக்கு தொலைவில் இருந்தபோது சாவியை என் தலைக்கு அருகில் கொண்டு சென்றபோது வேலை செய்தது. மார்பருகே கொண்டு சென்ற போதும் சாவி வேலை செய்தது. கால்பகுதிக்கு கொண்டுசென்றபோது சாவி வேலை செய்யவில்லை. ஆகவே, உயரத்தின் அடிப்படையிலேயே செயல்படுவதாக முதலில் நினைத்தேன். ஆனால் சாவி இயங்குவதற்கு உயரம் ஒரு பொருட்டாக இல்லை. என்னுடைய உடல் ஒட்டுமொத்தமாகவே ஆன்ட னாவாக செயல்படும்போது நான் சாவியை எங்கு வைத்திருப்பது? கை களில் வைத்திருப்பதைவிட தலைக்கு அருகில் வைத்துக்கொண்டால்தான் என்ன? என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page8/92785.html#ixzz3Ls1rEouY

தமிழ் ஓவியா said...

ஒரு வித்தியாசமான தலைவர் - எப்படி?

2013 தஞ்சையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா. வழக்கமாகப் பிறந்த நாள் என்றால் எவ்வித ஆர்ப்பாட் டங்கள், ஆடம்பரத்திற்கும் இடம் கொடாத தமிழர் தலைவர் இரண்டு முறை அன்புக் கட்டளைகளுக்குப் பணிந்து அன்பு விலங்கில் சிக்கிக் கொண் டது உண்டு. அதில் ஒன்று தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள். சிக்க வைத்தவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் வாடிக்கையில்லாத பெருவிழா. ஆசிரியர் வீரமணியின் 75-ஆம் ஆண்டுப் பிறந்த நாள். அது மட்டுமல்ல. ஆசிரியரை மட்டும் சிறப் பிக்கவில்லை. முத்தமிழ் அறிஞர், ஆசிரியரைப்போலவே தன்னைச் சற்றும் எந்த விழாவிலும் முன்னிறுத்திக் கொள்ளாத மோகனா வீரமணி அம்மையாரையும் கலைஞர் அழைத்து மேடையில் வைத்துச் சிறப்பித்தது பசுமையாக இருக்கிறது.

அடுத்து 2013ல் தமிழர் தலைவரின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலையை பெரியார் உலகத் திற்கு நிதியளிப்பு விழா திராவிடர் கழகக்கூட்டம் அன்று காலையில் தஞ்சை பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பான கூட்டம். அதுவும் நிதியளிப்புக் கூட்டம் தான். ஆசிரியர்கள், மாணவர்கள், கழகத்தவர் என்று வரிசை வரிசையாக நிதியளிக்கக் கூடிச் சென்று விழா முடியவே மதியம் 2 மணி ஆகிவிட்டது.

அதன்வின் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்ட பிறந்த நாள் பெருமங்கலம். அதிலும் ஒரு சிறப்புக் கூறு அந்த விழாவில் திராவிட முன் னேற்றக்கழகப் பொருளாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று வாழ்த்த வருகைப் புரிந்தார். அத்தோடு விடுதலைச் சிறுத்தைகளின் வீரம் மிகு தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இவர்கள் வாழ்த்த வந்ததைக்காண விண்ணிலிருந்து மழைத்துளி துளிதுளியாக விழுந்தது கொட்டும் மழையாய்க் கொட்டிய போதும் கூட்டம் கலைந்து விடவேண்டுமே. கலைந்து நகர வேண்டுமே அதுதான் இல்லை. நின்ற இடத்திலேயே உட்கார இருந்த நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு மழையிலிருந்து தலைமைய மட்டுமே காத்து நின்ற காட்சி மறக்கமுடியாத காட்சி. இப்படிக் கொட்டும் மழையில் கூடியது 1949-இல் ஜூலை 18 இல் திமுக தொடக்க விழாக் கூட்டம் இராபின்சன் பூங்காவில் கூடியபோது இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


இந்த நேரத்தில் கொட்டும் மழையில் நன்றியுணர்வு மிக்கத் தமிழர் கூட்டம் கூடியது தஞ்சையில். ஆனால் தமிழர் தலைவர் வாழ்க்கையில் அவராலேயே மறக்கமுடியாத மழை நாள் கூட்டம் ஒன்று இந்தத் தமிழ் மண்ணில் அல்ல - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களுக்கு அப்பால் பீகார் மண்ணில் கூடியதை இந்த பிறந்த நாள் சிந்தனையாக நினைத்துப் பார்ப்பதோடு பதிவு செய்திட வேண்டும்.

பீகாரில் கர்ப்பூரி தாகூர் - முடி வெட்டும் மருத்துவர் குலத்தில் பிறந் தவர். மக்கள் தொண்டினால் அந்த மண்ணின் முதல்வராக உயர்ந்தவர். அவர் முதலமைச்சர், அவருடைய தந்தை, மகன் முதலமைச்சர் என்பதற் காகத் தாம் செய்து வந்த முடிதிருத்தும் தொழிலை சாகும் வரை விடாமல் செய்து வந்தவர். மகன் தாகூரின் முதலமைச்சர் கார் அந்தப் பக்கம் செல்லும். தந்தை அப்போதும் தன் தொழிலை விடாமல் செய்து வந்தார்.

அப்பேர்ப்பட்ட கர்ப்பூரி தாகூர் தம் மாநிலத்தில் தமிழர் தலைவரை அழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் என்றால் அந்த மண்ணில் அவ்வளவு கூட்டம் கூடியது ஜே.பி. பேசும் போது மட்டும் கூடியது என்பர்.

அவ்வளவு சிறப்பு மிக்க மரியா தையைத் தமிழர் தலைவருக்குக் கொடுத் துக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். பலரும் பேசுவதாக ஏற்பாடு கூட்டம் தொடங்கியது. வரவேற்றுப் பேசிய கர்ப்பூர் தாகூர் மற்றவர்கள் எல்லாம் பேசவேண்டாம் - வீரமணிஜி மட்டும் பேசி னால் போதும் என்று கூறிவிட்டார்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தவுடன் இவருடைய சொற்பொழிவு மழை தொடங்கியதும் மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு கொட்டத் தொடங்கியது. கூட்டம் அப்படி இப்படி நகர வேண்டுமே. நகரவேயில்லை. ஆசிரியருக்குக் குடை பிடிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நனையும்போது எனக்கு மட்டும் குடை வேண்டாம் என்று மழையில் நனைந்தவாறே ஒன்றரை மணிநேரம் சொல்மாரி பொழிய மக்கள் கூட்டம் கலையாது கேட்ட அற்புதம் அயல் மண்ணில் நிகழ்த்தியிருக்கிறார், பேசி முடிக்கவில்லை. பேசிக்கொண்டேயி ருக்கிறார். துண்டுச் சீட்டு ஒன்று வருகிறது. விமானத்திற்கு தாமதமா கிறது என்று தகவல் இருந்தது துண்டுச் சீட்டில். ஆசிரியர் பேச்சை முடித்து ஈர ஆடையைக் களைந்து ஆடையை மாற்றி விமானத்தில் வர நேரம் சரியாக இருந்திருக்கிறது. விமானத்தில் ஏறி விட்டார் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன.

மறுபடியும் விமானம் புறப்படுவதற்கு முன் விமானக் கதவுகள் திறக்கின்றன. விமானத்தில் ஏறும் ஏணி இறக்கப் படுகிறது. கர்ப்பூரிதாகூர்தான் நனைந்த ஆடையுடன் வருகிறார். கட்டித்தழுவி வீரமணிஜி இதற்கு முன் அந்த மைதானத்தில் லோக்நாயக் ஜே.பி.ஜி. பேசும்போதுதான் மக்கள் அப்படி அசையாமல் இருந்திருக் கிறார்கள். இப்போது அப்படி எங்கள் ஊர் மக்களை ஒன்றரை மணி நேரம் மழையிலும் கட்டிப்போட்டுவிட்டீர்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியி ருக்கிறார்.

ஆசிரியர் அவரிடம் இந்தப் பாராட்டை என் பேச்சை மொழி பெயர்ப்புச் செய்தாரே அவருக்குத் தெரிவியுங்கள் என்று அடக்கமாகக் கூறி விட்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தார்.

இதுபோல் தமிழர் தலைவரைப் பாராட்டிய வடநாட்டுத் தலைவர் களில் ஒருவர் ஒரிசாவின் முதலமைச்சர் பிஜூபட்நாயக். இப்போதைய பட்நாயக்கின் தந்தை. ஒரிசாவில் அவர் ஒரு பார்ப்பன எதிரி. அவர் வீட்டினுள் பார்ப்பனரை நுழைய விடமாட்டாராம். வீட்டில் வாசலில் கோலமா போடுவது, மாடு குளிப்பாட்டுவது என்று வேலை களுக்கு அவர்களை வைத்திருப்பவர். அவர்களை வீட்டிற்குள் விடமாட் டாராம். அவருடைய இந்தப் பாப் பனரல்லாதார் பற்றுதான், எம்.ஜி.ஆர். திட்டமிட்டுத் திமுகழகத்தைப் பிளந்தபோது, திராவிட இயக்கம் பிளவு படக்கூடாது என்று சமரசம் செய்ய முன் வந்தது. அத்தகைய முதல்வரின் பாராட்டும் பெற்றவர் தான் தமிழர் தலைவர்.

இப்போது மூன்றாம் முறையாகப் பிறந்த நாள் விழாவில் மக்கள் அன்புக் கட்டளைக்குப் பணிந்து அதற்குச் சம்மதித்திருக்கிறார். அதுவும் கூட அவருடைய கனவுத் திட்டமான 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலை - பெரியார் உலகம் உருவாக்கும் திட்டத்தின் பொருட்டுத் தான் சம்மதித்திருக்கிறார். உண்மை யாகவே ஆசிரியர் ஒரு வித்தியாசமான தலைவரே!

Read more: http://viduthalai.in/page5/92780.html#ixzz3Ls2SiW23

தமிழ் ஓவியா said...

மதம் சாராத நாத்திகர் என அறிவித்துள்ள கருநாடக அமைச்சர்


ஒருவர் எந்த மதத்தில் இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையில் எவரும் தலையிட முடியாது என்று கூறியுள்ள கருநாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச னேயா, 80 ஆண்டுகளுக்குப் பின் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பில் மக்கள் எந்தவித அச்சமும் சார்புநிலைகளும் இல்லாமல் பங்கெடுக்க வேண்டு மென்று கூறியுள்ளார். இந்தக் கணக் கெடுப்பால் உண்மையான இடஒதுக்கீட்டுப் பலனுக்கு உரியோர் யாவர் என்பது உறுதியாவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என்ப தாலும் மதம் அதற்குக் குறுக்கே நிற்காது என்பதாலும் இந்தக் கணக் கெடுப்பை, பாரதீய ஜனதா எதிர்க் கின்றது. இந்தக் கணக்கெடுப்பு தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதற்கு வழி வகுக்கும் என்னும் பி.ஜே.பி.யின் கருத்து உடை படும். என்று அமைச்சர் கூறினார்.

தான் இன்று எந்த மதத்தையும் சாராதவனாகவும் நாத்திகனாகவும் இருந்தாலும் எதிர்காலத்தில் தான் விரும்பினால் எந்த மதத்தையும் தழுவிடும் உரிமை தனக்குண்டு; அதில் எவரும் தலையிட முடியாது என்றும் கூறிய அமைச்சர், நமது நாட்டில் நாய், நரிகளுக்குக் கூட உரிய மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் தீண்டாமையைக் காரணம் காட்டி விலங்குகளைவிடக் கீழ்த்தர மாக நடத்தப்படுகின்றனர். பெங் களூரு போன்ற மாநகரங்களிலும் கூட, மாதிகா, தண்டோரா போன்ற வர்கள் கீழ்ழ்ச்சாதியினர் என்று காரணம் காட்டி வீடு கொடுக்கத் தயங்கும் நிலை உள்ளது. இதனால் மன வெறுப்படையும் மக்கள் தங்கள் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள் வதற்காக, கிறித்துவம் உட்பட வேறு மதங்களுக்கு மாறிவிடுகிறார்கள். அதில் என்ன தவறுள்ளது? என்று கேட்டுள்ளார்.

அண்மையில், சாதிவாரிக் கணக் கெடுப்புப் படிவத்தில் கிறித்துவர் களும் கொள்ளா, குருபா, கவுடா. கிறித்துவர்கள் என்று குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கணக்கெடுப்பை எதிர்ப்பதாக பி.ஜே.பி. அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

நன்றி: தினகரன் 5.12.2014 பெங்களூரு பதிப்பு; 05.12.2014 கருநாடகத்தில் நடைபெறவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நாத்திகர்கள் தங்களை நாத்திகர்கள் என்றும் மதம் சாராதவர்கள் என்றும் பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/92777.html#ixzz3Ls403gTN

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டாம்?

மூடநம்பிக்கை வேண்டாம்
மூலகாரணமானவர்கள் வேண்டாம்
தப்பு அடிக்க வேண்டாம்
தறிகெட்டுப் போக வேண்டாம்
வண்ணான் வேண்டாம்
வாய்க்கரிசி வேண்டாம்
பரியாரி வேண்டாம்
பாடை கட்ட வேண்டாம்
கோடி வேண்டாம்
வெடி வேண்டாம்
குளிப்பாட்ட வேண்டாம்
கொள்ளிச் சட்டி வேண்டாம்
பால் தெளிக்க வேண்டாம்
படத் திறப்பு விழா வேண்டாம்
கண்தானம் வேண்டும்
குளிர் பெட்டியில் வைக்க வேண்டும்
ஊர்வலம் ஊர்தியில் போக வேண்டும்
தீ குச்சியால் தீ மூட்ட வேண்டும்
நினைவு நாள் வேண்டும்
பெரியார் கொள்கை பரவிட வேண்டும்
- கோபால கிருஷ்ணன் (கோகி)
திராவிடர்கழகம், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page3/92776.html#ixzz3Ls4Zk5d1

தமிழ் ஓவியா said...

இதுதான் மனுதர்மம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
_ அத்தியாயம் 1, சுலோகம் 87

பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ்செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ அத்தியாயம் 1, சுலோகம் 88

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91

பிராமணன் முதல் வருணத்தானான தாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100

பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-அத்தியாயம் 8, சுலோகம் 413

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417

பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73

ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83

சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்தி லேயுடைய கலப்பையும், மண்வெட்டி யும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?
அத்தியாயம் 10, சுலோகம் 84

பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14

மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால், கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

அத்தியாயம் 9, சுலோகம் 15

தமிழ் ஓவியா said...

மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் , சுலோகம் 16

படுக்கை,ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17

மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால், தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.

அத்தியாயம் 2, சுலோகம் 213

ஜிதேந்திரியனாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214

தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215

தானியம், லோகம், பசு, இவைகளைத் திருடுதல், குடிக்கிற மனையாளைப் புணர்தல், ஸ்திரி, சூத்திரன், வைசியன், சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.

இந்துலா என்ற இந்துச் சட்டத்தை, இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படி, சட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி

இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்

எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

Read more: http://viduthalai.in/page2/92771.html#ixzz3Ls4mxi5i

தமிழ் ஓவியா said...

வெங்காயம்


* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காயத்தை வதக்கி சாப்பிட் டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்த நாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page2/92772.html#ixzz3Ls5LrQ00

தமிழ் ஓவியா said...

ஒரு சுயமரியாதை வீரரின் கடைசி விருப்பம்! ஆணை!


உயிர் பறந்து உடல் சரிந்தால் உதிர்ந்த சருகு!
எனது இறந்த உடலுக்கு எந்த விதச் சடங்கும் வேண்டாம்.
முதலில் அரசு பொதுமருத்துவமனைக்குத் தகவல் தந்து
உடல் உறுப்புகள் தேவைப்படுவன எடுத்துக் கொள்ளுமாறு
கூறி, அதற்காவன செய்ய வேண்டும்.
நீராட்டு! பூ மாலை, புத்தாடை எதுவும் வேண்டாம்.
சங்கு ஊதிச் சத்தமிடும் மணியோசை, எதற்கு?
போகும் வழி எங்கும் பூப்போட்டுப் புதுக்குப்பை சேர்க்காதீர்!
எளியமுறையில் எடுத்துச் சென்று எரியூட்டல் வேண்டும்.
தொலைவில் உள்ளோர்க்குத் தெரிவித்துக் காத்திருக்க
வேண்டாம். பின்னர் அறிவிக்கலாம்!
அண்டையில் இருப்போர்க்கு மட்டும் அறிவித்தால் போதும்.
யாருக்கும் இடர் இன்றி, உடனே எரித்துவிட வேண்டும்.
மரணச் சடங்கு, மற்றவர் செலவு, சுற்றச் சடங்கு
எதுவும் வேண்டாம். காரியம் சம்பந்திகள் தலைக்கட்டு
மரியாதையும் வேண்டாம்.
நீத்தார் நினைவு நாள் நடத்தலாம்; ஆனாலும்
படையலிடும் பழக்கம் தேவையில்லை.
மரணம் உறுதி என்பதால் துயரமும் தேவையில்லை.
என் மனைவிக்கு எந்தக் குறைவும் ஏற்படுத்தக் கூடாது;
இப்போது இருப்பதுபோல் எப்போதும் இருக்க வேண்டும்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம்
சென்னை- 78

Read more: http://viduthalai.in/page2/92773.html#ixzz3Ls5TDABD

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முரண்பாடே உன் பெயர்தான் ஜோதிடமா?

செய்தி: துலாம் ராசியில் பிறந்தவர். ஜென்ம சனி விலகி, பாதச் சனி துவங் குகிறது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ் சரிக்கும், இக்கால கட்டத்தில் புதிய கட்சியை உரு வாக்குவார்.

தினமலரில் வெளிவந்த சனி பெயர்ச்சி பலனில் ஜி.கே.வாசனுக்கு ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சிந்தனை: கடந்த நவம்பர் 28 ஆம் தேதியே ஜி.கே. வாசன் திருச்சியில் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். ஆனால், இப்பொ ழுதுதான் அவர் புதிய கட்சியை உருவாக்குவார் என்று சனி பெயர்ச்சி கணிப்பில் பரணிதரன் என்ற ஜோதிடர் கண்டு பிடித்திருக்கிறார்; முரண் பாடே, உன் பெயர்தான் ஜோதிடமா?

Read more: http://viduthalai.in/page1/92832.html#ixzz3Ls6wviBf

தமிழ் ஓவியா said...

நோய் நொடி நீங்குமாமே!

இன்றைய ஆன்மிகம்?

நோய் நொடி நீங்குமாமே!

சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். அபி ஷேகப் பொருள்களைத் தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டா குமாம்!

ஓ, புதிய கண்டு பிடிப்போ! தலையில் வைத்தால் உடல் முழு வதும் எப்படி பரவும்! அது என்ன அப்படிப்பட்ட சக்தி? நோய் நொடி நீங்கு மாமே - அப்படியானால் ஆஸ்பத்திரி எதற்கு? சங்கரராச்சாரியாரே இந்து மிஷன் ஆஸ்பத்திரி நடத் துகிறாரே!

Read more: http://viduthalai.in/page1/92833.html#ixzz3Ls77V8Pf

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல; துயரம், துன்பம் என்பதும் நிரந்தர மல்ல. நிரந்தரமாக அவை இருந்திடின், இரண்டின் தனித் தன்மை நமக்குத் தரும் அனுபவங்கள் காணாமற் போய்விடும்.

மகிழ்ச்சியின்மை - ஒவ்வொரு வரது வாழ்விலும் ஏற்படுவது இயற் கையே - தவிர்க்க முடியாததும்கூட.
சில நேரங்களில் மகிழ்ச்சிக்கு விலை கிடைக்காமலே அது நமக்குக் கிடைக்கிறது.

பல நேரங்களில் அதிக விலை கொடுத்துத்தான் அதைப் பெற்றாக வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை என்று ஒரு தீர்ப்பு வந்து அவர்களது சிறைக் கதவுகள் திறக்கும்போதும், 10 மாதம் சுமந்து பெற்று, தனக்காக இல்லா விடினும் தனது கருவினுள் உள்ள குழந்தைகளுக்காக எல்லாவித பத் தியங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பிரசவ வேதனை - அறுவை சிகிச்சை வரை சென்றும், குழந்தையின் நலன் காக்கும் தியாகம் - துன்பத்தைத் துடைத் தெறிந்து, மகிழ்ச்சியை, பிறந்த குழந்தையின் உச்சி மோந்து முத்தம் தருகின்ற போது, விலை கொடுத் தாலும் நல்லதைப் பெற்றோம் என்ற தாயின் மகிழ்ச்சியையும் அளவிட அளவுகோல்தான் உண்டா?

மகிழ்ச்சி ஏற்பட்டாலும், துன்பம் துயரம் நம்மைத் தாக்கினாலும்கூட, அதை நம்மில் சிலர் மறைத்து வைத்துக் கொள்ள முயலுகிறார்கள்; அது தேவையற்ற ஒரு தவறான அணுகு முறையாகும். எதையும் வெளிப்படையாக்கிக் கொண்டால் தான் கனத்த இதயம் லேசாகி நமக்கு நிம் மதியைத் தரும்! விரைந்து அது அகல வாய்ப்பு ஏற்படும்.

மகிழ்ச்சியைக் கண்டபோது சிலர் அளவு கடந்த துள்ளல், ஆட்டம், பாட்டம் போட்டு ஊரையே துவம்சம் செய்து விடுவார்கள். அதுபோலவே ஒரு சிறு அளவுக்குத் துன்பமோ, துயரமோ வந்தால் அதைத் தாங்கும் மன வலிமை இல்லாது மனந்தளர்ந்து, மூலையில் ஒடுங்கிக் கிடப்பர்.

இரண்டு எல்லை தாண்டிய நிலைப் பாடும் மகிழ்ச்சியான சராசரி பக்குவம் கொண்ட மனிதருக்குத் தேவையில்லை.
மகிழ்ச்சியை, எப்படிப் பெறுவது என்று ஏராளமான ஹிதோபதேசங்களும் - அறிவுரைகளும் - ஒலி நாடாக்களும், புத்தகங்களும் வியாபாரப் பொருள்களாகி சந்தையில் மலிந்து கிடக்கின்றன.

விற்றவருக்கு மகிழ்ச்சி - அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு. மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் சரக்கல்ல. நம் மனதில் நமக்குள்ள பக்குவத்தின் முதிர்ச்சி, முனைப்பு. அவ்வளவுதான்.

மகிழ்ச்சி என்பது தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்றதாக அமைய வேண்டும். அதை நாமே நமது ஏகபோகச் சொத்தாக்கி மகிழ்வதில் உண்மை இன்பம் இல்லை. மகிழ்ச்சியை நாம் மற்றவர் களுக்கு - அது தேவைப்படும் நிலையில் நமது உற்றார், நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கும்போதுதான் நமக்கு அது ஊற்றாக சுரக்கிறது! வற்றாத ஜீவ நதியாக என்றும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

அடுத்தவருக்குப் பயன்படாது அணை கட்டிக் கொண்டு இயற்கையைப் பங்கு போடும் ஈன புத்தியாளர்களைப் போல, பலர் மகிழ்ச்சியைக்கூட அணை கட்டித் தேக்கினால், அது அதன் இயல்பை இழந்து விடுவது உறுதி. மகிழ்ச்சிக்கும் நம் உடல் நலத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவு உண்டு. மறந்து விடாதீர்!

எதற்காகவும் கவலைப்படாமல், ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதை, விருப்பு, வெறுப்பற்ற முழுப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும்போது விடையும் கிடைக் கும், தடையும் நீங்கும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளே இல்லை. அறிவால், அனுபவத்தால் - பிறரின் உதவியால் தீர்க்கப்படலாம். துணி வுடன் அணுகுங்கள் - மீறி தோல்வி ஏற்பட்டாலும் அதையும் ஏற்று சுவைத்து அனுப விக்கப் பழகுங்கள் - பரங்கிக் காய் இனிப்புடன் உள்ள கறி ; எனவே இனிக்கிறது.

பாகற்காய் கசப்புடன் உள்ளது. பலருக்கு உட்கொள்ளவே தயக்கம் - ஆனால் அது தரும் சுக கசப்பு போல் பரங்கியின் இனிப்பு தருவ தில்லையே!

இனிப்பின் பெருமை - அருமை கூட கசப்பு என்று ஒன்று ஒன்பான் சுவையில் ஒன்றாக இருப்பதால் தானே! எண்ணுவீர்!

எனவே மகிழ்ச்சியை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் - நமது மூச்சை நாமே (சுவாசித்து) உள்ளே இழுத்து வெளியே தள்ளுகிறோமே அதுபோல; மகிழ்ச்சியை உள்ளே இழுத்து, துன்பத்தை வெளியே தள்ளுங்கள். இரண்டும் வாழ்வின் இரு இன்றியமையாக் கூறுகள் - தேவைகள் - மறவாதீர்!

Read more: http://viduthalai.in/page1/92676.html#ixzz3Ls7yaDgW

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

புனிதமாம்

அய்யப்பன் கோயில் பம்பை நதியில் குளித் தால் எல்லாப் பாவங் களும் நீங்குமாம். உண்மை நிலை என்ன? இந்தியா டுடே ஏடு (19.12.2007) அளிக்கும் விவரம் இதோ:

பம்பை நதியில் 100 மி.லி தண்ணீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள், 1995-1996இல் 9500 என்பதாக இருந்தது. இந்தப் பாக்டீரி யாக்கள் 500அய்த் தாண் டினாலே ஆபத்து என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இந்த லட்ச ணத்தில் பம்பை நதி புனிதமாம்.

Read more: http://viduthalai.in/page1/92758.html#ixzz3Ls9iQBXd

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

வெளியூர் 2..12.2014-ல் வெளிவந்த மானமிகு அய்யா தோழர் வீரமணி அவர்களின் விடுதலை மலர் படித்தேன். அது அறிவியல் பெட்டகமாக அமைந்து விட்டது.

ஒரு பெரிய லட்சியத்தில் வாழ்ந்த பெரியார் அவர்களின் தத்து பிள்ளையாக, தேர்தலையும் வாக்குச் சாவடிகளையும் சந்திக்காமல் லட்சியத்தை மனதில் நிறுத்தி செயல்படுகின்ற செயல்பாடு என்னையே பிரமிக்க வைத்தது.

நான் பொதுவுடைமை தத்துவத்தில் வளர்ந்தவன், திராவிடர் கழக கொள்கை, செயல்பாட்டால் வீரமணி அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எத்தனை தத்துவத்தைப் பேசினாலும் சூழ்நிலையை ஒத்து நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி பெறும். அதைத்தான் லெனின் கூறுகிறார்.

அதில் திராவிடர் கழக இயக்கம், செயல்பாடு, நடைமுறைகள் விடுதலை பத்திரிகை வாயிலாக அன்றாடம் வாசிப்பவன். தோழமை என்பது தங்கள் இயக்கத்தை தவிர வேறொரு இயக்கத்தில் இல்லை என்பதை நடைமுறை வாயிலாக கண்டு கொண்டவன்.

விடுதலையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் மலரில் பார்ப்பனியத்தைப்பற்றி 1978-ல் நெல்லையில் பேசிய செய்தியை படித்தவுடன் எவ்வளவு தீர்க்கமாக பேசி உள்ளார் என்று அறிந்தேன்.

விடுதலை பத்திரிகையில் வரும் செய்திகளை பார்த்தவுடன் எதிர் காலத்தில் ஒரு மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. அரிய முத்துக்களாக 82 வாக்கியங்கள் மனதை ஈர்த்து விட்டன.

வைகோ அவர்களை பாரதிய ஜனதா தலைவர் ராஜா பேசிய பேச்சிற்கு துணிந்து பதில் சொன்ன ஒர் ஒப்பற்ற தோழர் எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்பதை எதிர்கால சிந்தனையுடன் கூறிய வாசகம் சிறப்பு. இயக்கத்திற்கு அப்படியொரு தலைவர் தேவை. பெரியாரின் லட்சியத்தை அடி பிறழாது. இளமைத் துடிப்போடு செயல்படுத்துவதைப் பார்த்து, நானும் அதை விட ஒரு படி தாண்டி செயல்படுவேன்.

நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என்ற கட்டுரை தோழர் திருநாவுக்கரசு சிறந்த கண்ணோட்டதோடு எழுதியுள் ளார்கள். பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகம் என்ற தலைப்பில் ஜே.வி. கண்ணன் கட்டுரை ஓர் ஆய்வுரையாக செய்துள் ளார்கள்.

தோழர் அறிவுக்கரசு கவிதை ரொம்ப சிறப்பு. இறுதி மூச்சுவரை இந்தப் பணியை விட்டால் எனக்கு வேறு பணி ஏது? என்ற தலைப்பை படித்தவுடன் எனக்கே ஓர் உத்வேகம் பிறந்து விட்டது.

ஒவ்வொரு தோழரும் எழுதிய கட் டுரைகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பெட்டகம். சிவப்பாக இருந்த வனை கருப்பாக மாற்றிய பெருமை தலைவர் வீரமணிக்கு உண்டு. இறுதி வரை பெரியாரை நேசிப்பேன். மானமிகு தலைவரை நேசிப்பதோடு மறக்கவும் முடியாது.

தோழன் இரா. சண்முகவேல்,

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல் - 627860

Read more: http://viduthalai.in/page1/92752.html#ixzz3LsAW9DD8

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியா விலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.
- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBpBgoM

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBxniKy

தமிழ் ஓவியா said...

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை


கிரேக்கப் புராணத்தின்படி குரோணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால் தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்
பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsC6B23o

தமிழ் ஓவியா said...

ஆன்மா பற்றி மொக்கலவாத கருத்து

கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.
ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)
இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம். - சேலம் ர.ஒந்தாட்சி

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCE28Ci

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?
அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடை மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
தி இண்டு, 30.11.2002

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCKTZ9G

தமிழ் ஓவியா said...

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம்

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதி மன்றம் தீர்ப்பு அளித் திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடு என்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன் படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?
(ராணி, 3.1.1991)

Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCbd8dV

தமிழ் ஓவியா said...

அம்பலமாகும் இந்திய தேசியமும், இந்து புனிதமும்


- குடந்தை கருணா

நாட்டின் வெளிவிவகாரங்களை சமன் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள் விவகாரத்தை கிளப்புகிறார். டில்லி யில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார். மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சட்டத்தில் பிரகடனப்படுத்திய ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கான நூலை, எல்லா மக்களுக்குமான நூலாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்வியோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் பணியை முடித்துக் கொண்டன. அதனைக் கடந்து, பகவத் கீதை ஒரு புனித நூலா? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் தமிழ் நாட்டில் பெரியார் பிறந்த மண்ணில் மட்டும் தான் எழுந்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் நேற்று (12.12.2014) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் தேசியத்தை யும், புனிதத்தையும் அறுவை சிகிச்சை செய்து காட்டினர்.

பகவத் கீதை, நால்வகை வர்ணத்தை நிலை நாட்டும் ஒரு பிற்போக்கான வன்முறையைத் தூண்டும் நூல் என்பதுதான் சாராம்சம். ஆனால், அதன் உள்ளே சென்று ஆராய்ந்தால், இந்த நூல், பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற் கான அத்தனையும் சொல்லப்படும் நூல் என்பது விளங்கும்.

கடமையைச் செய்; பலனை எதிர் பாராதே என்ற வாசகத்தை, கீதை சொல்கிறது என இன்றும் பலராலும் சொல்லப்படும் நிலையில், நால்வகை வர்ணத்தில் கடைநிலையில் இருக்கும் சூத்திரர்கள், பார்ப்பனர்களுக்கு ஏவல் செய்வதை தங்கள் கடமையாக செய்ய வேண்டும்; அதற்கு எந்தப் பலனையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியும், உரிமையும் இல்லை என்பதுதான் பொருள் என்பது இன்று எத்தனைப் பேருக்கு தெரியும்?

நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திர மக்களை மீண்டும் பார்ப்பனர் களுக்கு ஏவல் செய்வதை கடமையாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியோடு அரங்கே றும் இந்த பகவத் கீதை நாடகம், அதை தேசிய நூலாக ஆக்கிடத் துடிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தேசியம் என்பதே, பார்ப்பன தேசியம் தான். அவர்களுக்கான அமைப்புகளை கட்ட மைப்பதுதான். அதற்கு பகவத் கீதை வழி செய்கிறது. ஆகவே, அது தேசிய நூல்.

பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பான அத்தனையும் புனிதம் நிறைந்தது. மாட் டில் பசு மாடு புனித மாடு, உலகிலேயே அதிக மாசு கொண்டுள்ள கங்கை, புனித கங்கை. அதை சுத்தப்படுத்துவதற்கு மோடி அரசு ஆயிரக்கணக்கான கோடி செலவிடுவதாகச் சொன்னாலும், அப் போதும் அந்த மாசு படிந்த ஆறு, புனித ஆறு. அது போலத்தான் பகவத் கீதை புனித நூல்!

அரசமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதில் சமஸ்கிருதம் தவிர, மீதம் உள்ள அனைத்து மொழி களும், ஏதேனும் ஒரு மா நிலத்தில் அந்தப் பகுதி மக்களால், பேசப்படுகிறது. ஆனால், எந்த மாநிலத்திலும், எந்த மக்களாலும், பேசப்படாத மொழியான சமஸ்கிருதம் எப்படி தேசிய மொழி யாகும்? சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழி. ஆகவே அது தேசிய மொழி, அது தேவ பாஷை, அப்படித்தானே?

தமிழ் ஓவியா said...

இந்த பார்ப்பன மேலாதிக்கத்தை தோலுரித்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான். ஆனால், அம்பேத்கரின் சிந்தனையை கொண்டு செல்ல ஓர் இயக்கம் இல்லாத நிலையில், பெரியாரின் இயக்கம் அந்த பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய தேவை இன்று அதிகம் ஆகியிருக்கிறது.

பார்ப்பனர்களுக்கே உரிய கிரிமினல் புத்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு விஷயத்தை இங்கே செய்து கொண்டே, இன்னொரு பக்கம் வேறொரு விஷ யத்தை சன்னமாகச் செய்வதுதான். அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக் கிறார்கள். ஒருபக்கம், சமஸ்கிருதம் கட்டாயம், பகவத் கீதை தேசிய நூல், காந்தியைவிட கோட்சே ஒரு தேசபக்தன், ராமனுக்கு கோவில் கட்டவேண்டும் என கோரிக்கை என நம்மை திசை திருப்பி விட்டு, இன்னொரு பக்கத்திலே, சத்த மில்லாமல், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் பணியையும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தில் அவர்களுக்கு விரோதமான, பனியா கும்பலுக்கு சாதகமான பல அம்சங்களை (ஷரத்து)களை சேர்க்கும் பணியையும் துவக்கி உள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை ஓசையின்றி ஒழித்துக் கட்ட, வளர்ச்சி, தூய்மை என மயக்க பிஸ்கெட்டு கொடுத்து, தனியார் மயமாக் கும் போக்கை இந்த மோடி அரசு செய்து வருகிறது.

இந்த பார்ப்பன பனியா கதியைத் தான், தன் ஆயுள் முழுவதும் தந்தை பெரியார் எதிர்த்து வந்தார். பார்ப்பனர் களை இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிர்ப்பது, தங்கள் வீட்டு அத்தனை சடங்குகளையும் அவர்களைக் கொண்டு நடத்துவது, சரிப்பட்டு வராது. பார்ப்பனர் களை நம்முடைய அத்தனை நிகழ்வு களிலும், பிறப்பு முதல் இறப்பு வரை, அவர்களின் மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

அதனால்தான், இன்று பகவத் கீதை ஒரு புனிதமும் இல்லை; தேசியமும் இல்லை என்று துணிந்து தமிழ் நாட்டில் சொல்ல முடிகிறது கட்சிகளுக்கு அப்பாற் பட்டு அந்த சிந்தனையை ஒன்றுபடுத்த முடிகிறது.

இந்தப் பணியை பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு யாரும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. முனைப்புடன் செயல்பட்ட ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாராட்ட வேண் டும் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லா தாரும். ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்து, சர்வாதிகாரமாக ஆட்சி செய்வது ஹிட்லர் பாணி; அதைத்தான் இன்றைய மோடி அரசு செய்து கொண்டு வருகிறது. ஆபத்தை புரிந்தவர்கள், புரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சொல்வ தற்கு, நேற்றைய கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தி உள்ளனர், பயன்படுத்திக் கொள்வோம். பார்ப்பன பனியா சதிகளை அம்பலப்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page1/92799.html#ixzz3LsDg44r7

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/92788.html#ixzz3LsDpHqs2

தமிழ் ஓவியா said...

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே...!

பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ''இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்'' என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.

அதெல்லாம் இருக்கட்டும், ''யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?'' என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்.......

... மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது..........

இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.

சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.

இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!

- க.அருள்மொழி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!


திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?