Search This Blog

4.12.14

அண்ணாமலைக்கு அரோகரா - ஒய்யாரக் கொண்டை தாழம்பூ பட்டபாடு!




கார்த்திகைத் தீபம் - அண்ணாமலையாருக்கு என்று திருவண்ணாமலையில் பல ஆயிரம் டன் எண்ணெய் நெய், துணித் திரி கொண்டு, (3500 கிலோ) மலைமேல் தீபம் - விளக்கு ஏற்றி, ஆண்டுதோறும் திருவிழாக் கொண்டாடும் பெரியவர்களின் பிள்ளை விளையாட்டு எவ்வளவு மூடத்தனத்தின் முடைநாற்றக் கதை அடிப்படையில் எழுந்தது என்று தெரிந்தால் இந்த 21ஆம் நூற்றாண்டில் மற்ற நாட்டவர்கள்  கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?


உண்ண உணவுக்கு எண்ணெய் இல்லை; இடுப்பில் கட்டிக் கொள்ள ஒரு முழம் துணி கூட இல்லா தரித்திர நாராயணர்கள் பல கோடிக் கணக்கில் வாழும் இன்றைய நிலையில் கூட, இப்படி டின் டின்னாக எண்ணெய், நெய், குடம் குடமாக கல்லுக்குப் பாலாபிஷேகம் என்பது அறிவுடைமையா? (30 சதவீதக் குழந்தைகள் இந்தியா வில் ஊட்டச்சத்து குறைவுடையோர்)

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

என்ற பெரியார் அறிவுரைதான் எவ்வளவு அறிவுக் கருத்துப் பார்த்தீர்களா?
திருவண்ணாமலையாருக்கு ஏன் தீபம்? ஸ்தல புராணக் கதை என்ன? இதோ தமிழ் தி இந்து நாளேடு இன்று (4.12.2014) வெளியிட்டுள்ள கதையை அப்படியே தருகிறோம். படியுங்கள்: (ஆனந்தஜோதி)


........படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா, பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம்  எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.


தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல், பிரம்மாவுக்கு ஆச்சரியம். பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.


பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக, தான் கூறப் போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.


தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன். இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும், பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம் பூவை நான் தரிக்க மாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார்.  

 அக்னி ரூபமே அண்ணாமலை


அக்னி ரூபம் எடுத்த சிவனே இங்கு அண்ணா மலையாக வீற்றிருக்கிறார். அவரது ஆத்மபத்தினியாக உண்ணாமுலையார் என பெயர் பெற்ற பார்வதி. அடி முடி காண முடியாத ஜோதி ரூபமாய் சிவன் விஸ்வரூபம் எடுத்து நின்ற தலம் திருவண்ணாமலை நாள் சிவராத்திரி. இந்த நாளே கார்த்திகை தீபத் திருநாள். ஈசன் பக்தர்கள் வாழ்விற்கு ஒளியை வாரி வழங்கும் நாள் இது.


இதுதான் இந்துவில் வெளிவந்த வேடிக்கையான பகுத்தறிவு அற்ற கதை.
இக்கதையைவிட ஆபாசம் - முரண்பாடு உண்டா? கடவுளரும் ஒழுக்கம் தவறுபவர்களே - ஆசாபாசங் களுக்கு அடிமைகளே என்பது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகுமா - எங்களை நாத்திகர்கள் என்று கூறிடும் பக்த சிகாமணிகளே? பதில் கூறுங்கள்.

பொய் கூறியதால் பிரம்மா பூஜை இழந்தார்; கோயில்களில் (இன்று அந்த பக்தி  வியாபாரமும் சில ஊர்களில் நடைபெறுகிறது) பொய் சாட்சி சொல்லி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்றும் நடமாடும் தெய்வங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளை தங்களுக்குச் சாதகமாக வளைக்க முயலும் தாழம்பூக்களும் இந்த கடவுள் காட்டிய வழியில்தான் இன்னமும் இன்றும் நீடிக்கிறார்களா? மகா வெட்கக் கேடு!

                --------------------- ஊசி மிளகாய்  04-12-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

56 comments:

தமிழ் ஓவியா said...

அறவழியில், அறிவு வழியில் போராடும் திட்டங்கள் காத்திருக்கின்றன - வாரீர் தோழர்களே!


சேலத்தில் வரும் 7ஆம் தேதி திராவிடர் கழகப் பொதுக் குழு!

அறவழியில், அறிவு வழியில் போராடும்

திட்டங்கள் காத்திருக்கின்றன - வாரீர் தோழர்களே! கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் அழைக்கிறார்



வரும் 7ஆம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தின் சிறப்பும் - அவசியமும் குறித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சேலம் நமது இயக்க வரலாற்றில் தனி இடம் பெற்ற நகரமாகும்.

சேலத்தைத் தமது தாய் வீடு என்று பெருமைப்படக் கூறுவார்! நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

சேலம் ஏராளமான சுயமரியாதைச் சுடரொளிகளால் இன்றும் ஒளியூட்டப்படும் கழக ஒளி வீச்சு நகரம்!

மக்களின் பேராதரவு - என்றும் திராவிடர் கழகத்திற்கு - பெரியார் இயக்கத்திற்கு உண்டு என்ற பெருமை இன்றும் நிலைத்திருக்கிறது!

பொது மக்கள் தரும் ஆதரவு!

இளைஞர்கள், பொது மக்களிடம் பொதுக் குழு, பொதுக் கூட்டம் என்ற தகவல்களைக் கொண்டு சேர்த்தபோது அதற்காக வசூலில் ஈடுபடும் பொழுது, அனைவரும் தந்த வரவேற்பும், கொடுத்த ஊக்கமும் இயக்க இன்றைய தலைமுறைக்கு தனித்ததோர் டானிக் ஆக அமைந்தது!

மூத்தவர்கள், இளையவர்கள், முன்பு பல காலம் இருந்தவர்கள் - நேற்று புதிய வரவுகளான இளைஞர், மாணவர், மகளிர் என்ற பேதம் - தலைமுறை இடைவெளி சிறிதுமின்றி, வரும் 7ஆம் தேதி நிகழ்வுகளை - ஒரு மாநாடுபோல் நடத்திட, கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள் என்ற செய்தி நமது காதுகளில் இசையாய் நுழைந்து, இன்பத்தைப் பெருக்குகின்றது!

சேலம் செயலாற்றும் காலம்

1944-ல் சேலம் செயலாற்றும் காலம் என்று அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு வார ஏட்டில் எழுதினார்.

அய்யாவின் குடிஅரசு வார ஏடோ, திருப்பம் ஏற்படப் போகும் சேலம் நமது பாசறை வீரர்களின் பாடிவீடாக மாறி, இயக்கத்தின் பாய்ச்சலில் புதுவேகம் காணவிருக்கிறோம் என்று அன்று எழுதியது.

1944 சேலம் மாநாட்டின் காட்சிகள் இன்னமும் நம் கண்ணில் தெரியும் மாட்சிகள், என் வாழ்வில் அது ஓர் திருநாள் - பெருநாள்!

1971இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு

அதுபோலவே 1971இல் இந்தியாவையே அதிர வைத்த அய்யா நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு - இராமனைச் செருப்பாலடித்தவர்களுக்கா ஒட்டு? என்று அந்தத் தேர்தலைத் திசை திருப்பிய ராஜாஜி அணிக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் - இனஉணர்வு பொங்கு மாங்கடலாப் பொங்கி எழுந்து திமுகவுக்கு 184 இடங்களில் வெற்றி வாகை சூடிட வைத்த வரலாறு படைத்த நகரம் அல்லவா! சேலம்!!

அங்கேதான் இப்பொழுது நாம் கூடி, முக்கிய முடிவுகள் எடுக்கவிருக்கிறோம்!

களம் காண துடித்த கழகக் காளையர்களே! உங்களுக்கு வேலை காத்திருக்கிறது!

அறைகூவல்களைச் சந்திப்போம் வாரீர்!

கருஞ்சட்டை இராணுவத்தின் கட்டுப்பாடு மிக்க இருபால் தோழர்களே இன்று புதிதாய் முளைத்துள்ள ஆரிய ஆக்டோபஸ் (எட்டுக் கால் பிராணி) நம் இனத்தின்மீது திட்டமிட்டு நடத்திடும் அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க,

ஜாதி தீண்டாமையை அழிக்க,

பெண்ணடிமையை ஒழிக்க,

சுயமரியாதை உணர்வு செழித்தோங்க, அறை கூவல்களை ஏற்கும் செயல் திட்டங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

பெரியார் உலகம் பூத்துக் குலுங்க, நிதி சேகரிப்பு என்ற ஆயுதத்துடன் ஆயத்தக் களமாக இப்பொதுக் குழு அமையும்.
அறவழியில், அறிவு வழியில் போராடும் அடுக்கடுக்கான திட்டங்களை ஏற்க வாரீர்! வாரீர்!!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
4-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/92309.html#ixzz3KwmxLkox

தமிழ் ஓவியா said...

காரணமல்ல...


மறைமுகமாகச் செய்துவிட்டுத் தப் பிக்கப் பார்ப்பவர், இராமனைப்போல் பேடியும், அயோக்கியனுமே ஆவார் கள். குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்ள வசதி அளித்திருப்பதாலும், நல் வாழ்வும், சுயநலமும் பெற வசதி இருப் பதாலும் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகமாகிறார்களே ஒழிய, மனிதச் சுபாவமே காரணமல்ல.
(விடுதலை, 30.12.1965)

Read more: http://viduthalai.in/page-2/92314.html#ixzz3KwoBvkWC

தமிழ் ஓவியா said...

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் முதல் இடம் பார்ப்பனருக்கே!


சுதந்திரம் அடைந்த இந்தியாவில் தீண்டாமையின் நிலைபற்றி அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தின் சமூக பொருளாதார மய்யம், இந்திய மனிதவள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. சமூக தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வது, கணிப்பது இதன் விழுமிய நோக்கமாகும்.

அப்படி எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு என்ன கூறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் பார்ப்பனர் கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர் பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர். தீண்டாமையை அனுசரிப்பதில் உறுதியாகவே உள்ளனர். தீண்டாமையை அனுசரிப்ப தில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் கூட, பொது இடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படும் என்று கூறியதையும் கவனிக்க வேண்டும்.

மதவாரியாக எடுத்துக் கொண்டாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிக்கின்றனர். (35%) என்றும் ஆய்வு கூறுகிறது.

பார்ப்பனர்களால் பிரச்சினை ஏதும் இல்லை - பார்ப்பனர் அல்லாதார்தான் தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கின்றனர் என்று மேதா விலாசமாகப் பேசுகிறவர்களின் கண்கள் இனிமேலாவது திறக்க வேண்டும்.

அடிப்படையில் இந்து மதத்தின் ஆரிய வேராக இருக்கக் கூடியவர்கள் பார்ப்பனர்கள்தாம். மேம் போக்கில் அவர்கள் திருந்தி விட்டதாகக் வேடம் கட்டிக் கொள்கிறார்களே தவிர, உள்ளப் பாங்கில் அவர்கள் அடிப்படைவாதிகளே!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லுகிற சங்கராச்சாரியார் தானே அவர்களின் ஜெகத்குரு? தீண்டாமைபற்றி காந்தியார், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டும்கூட சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் அவர்கள் மனம் நோகும்படி தன்னால் நடந்து கொள்ள முடியாது என்று தானே காந்தியாரிடமே கூறினார்.

சாஸ்திர நம்பிக்கையாளர்கள் மனம் நோகக் கூடாது என்பதில்தான் ஜெகத் குருக்களின் எண்ணம் தோய்ந்து கிடக்கிறதே தவிர - தீண்டாமை என்னும் கொடுமையால் இழிவுபடுத்தப்படுகிற, உரிமைகள் மறுக்கப்படுகிற கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின், மனம் படும் துயரம்பற்றி ஜெகத் குருக்களுக்குக் கவலையில்லை எனபதையும் கவனிக்க வேண்டும். இன்னும் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, அதன் பொருள் என்ன? தாங்கள் துவி ஜாதியினர் - இரு பிறவியாளர்கள் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்லாமல் சொல்லுவதாகத்தானே பொருள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில்களில் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்தும், திராவிடர் கழகத்தின் முயற்சியும் - தி.மு.க. அரசின் சட்ட ரீதியான செயல் பாடுகளும் முடக்கப்பட்டு இருப்பது ஏன்?

உச்சநீதிமன்றம் சென்று அதனை முடக்கியவர்கள் யார்? பச்சைப் பார்ப்பனர்கள்தானே? சங்கராச்சாரியார் சிபாரிசும், மறைந்த ராஜாஜி அவர்களும் தானே ? இல்லை என்று மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கோயிலின் அர்ச்சகராக ஆனால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும் என்று வைகனாச ஆகமத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியவர்கள் பார்ப்பனர்கள் தானே!

சங்கர மடங்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் சங்கராச்சாரியாகும் பொழுதுதான் உண்மையான சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு நிலவுவதாகப் பொருள் என்று பார்ப்பனரான காகா கலேல்கர் கூறவில்லையா!

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரியாராக ஆவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் சங்கரமடத்தில் ஒரு பணியாளராக தாழ்த்தப்பட்ட ஒருவர் நியமிக்கப் படுவாரா என்பதை சவால் விட்டே கேட்கிறோம்.

சிறீரங்கம் கோயில் கோபுரம் கட்டப்படுவதற்கு பெரும் அளவு நன்கொடை அளித்த இசைஞானி இளையராஜாவுக்கு குட முழுக்கு விழாவில் குறைந்த பட்சம் ஒரு ஆடை போர்த்திக் கவுரவிக்கத் தவறியது ஏன்?

காஞ்சி சங்கர மடத்தில் சரிக்குச் சமமாக நாற்காலி போட்டு சுப்பிரமணிய சாமிகள் உட்காருவதும், மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தரையில் உட்கார வைக்கப்படுவதும் ஏன்?

சங்கரமடத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; பார்ப்பனர் அல்லாதவர்கள் அத்தனைப் பேரும் தீண்டத்தகாதவர்கள் தான் என்பது இதன் மூலம் தெற்றென விளங்கவில்லையா?

ஒரு பல்கலைக் கழகமே ஆய்வு செய்து வெளிப்படுத்திய தற்குப் பிறகும்கூட, பார்ப்பனர்கள் நல்லவர்கள், அவர்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று பம்மாத்துப் பேசுவதைப் பார்ப்பனர் அல்லாதார் கைவிட வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

பார்ப்பனர் அல்லாதார் தீண்டாமையைக் கடைப் பிடித்தால் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திராவிடர் கழகத்துக்கு மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது.

Read more: http://viduthalai.in/page-2/92317.html#ixzz3KwoNcWeG

தமிழ் ஓவியா said...

பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? மத்திய, மாநில அரசுகளிடம் உயர்நீதிமன்றம் கேள்வி



சென்னை, டிச.4_ மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற் காக, நாடு முழுவதும் பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய, மாநில அரசு களிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாறில் சென்னை மாநகர அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற பி.அருண்குமார், பி.ராம்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

இவர்களின் உறவினர்கள் இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரணை செய்யும் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்தத் தீர்ப்பாயம் அருண்குமார் குடும்பத்தி னருக்கு ரூ.9.25 லட்சமும், ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.11.34 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் இழப்பீடு கோரி இருவரின் உறவி னர்கள் மான்விழி, பாலு உள்பட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

தமிழ் ஓவியா said...


நமது நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், மற்றொரு நீரான மதுபானம் மூலை முடுக்கெல்லாம் பாய்கிறது. இதனால், பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன.

இவை சமுதாயத்தின் விஷமாகும். சமுதாயத்தில் நடைபெறும் பல தீமைகளுக்கு மதுபானமே அடிப் படைக் காரணமாக உள்ளது. இருந்த போதிலும், வருவாய் ஈட்டுவதற்காக அரசாங்கங்கள் மதுபானக் கடைகள், பார்களை திறந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 6,850 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம், ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப் படுகிறது.

இந்த வழக்கில், அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது எந்தத் தவறும் இல்லை என போக்குவரத்து கழகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், மோட் டார் சைக்கிளில் வந்தவர்கள்தான் அதிகமாக மது அருந்தியிருந்தனர். அதனால்தான் அவர்களால் வாக னத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

யார் மீது தவறு என்பது வழக்கின் இறுதியில் முடிவு செய்யப்படும். மது போதையில் வாகனம் ஓட்டியதால், விலை மதிப்பில்லாத இரண்டு உயிர் இறந்துள்ளன. ஆண்டு தோறும் மது போதையில் வாகனம் ஓட்டி இறப்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு மது போதையில் வாகனம் ஓட்டி 6,463 பேர் இறந்துள்ளனர். 20 ஆயிரத்து 81 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமே மது போதைதான். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு 62 லட்சத்து 9 ஆயிரத்து 37 வாகனங்களாக இருந்த எண்ணிக்கை, 2014 ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு கோடியே 8 லட்சத்து 86 ஆயிரத்து 774 -ஆக உயர்ந்துள்ளது.

மது போதையில் வாகன விபத் துக்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் அய்ந்தாம் இடத்தில் உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2002-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு ஜூன் வரை மது போதையில் வாகனம் ஓட்டியதாக 95,365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து 515 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மது போதை யில் வாகனம் ஓட்டி நடைபெறும் விபத்துக்களில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறக்கின்றனர். 5 கோடி பேர் படுகாய மடைகின்றனர்.

கேரள மாநிலத்தின் மது போதை கட்டுப்பாட்டுத்துறை மய்யம் நடத்திய ஆய்வில், 40 சதவீதம் சாலை விபத் துக்கள் மது போதையில் வாகனம் ஓட்டுவதால் நடைபெறுவதாகத் தெரிய வந்துள்ளது.

அதனால், இந்த வழக்கில் மத்திய அமைச்சகச் செயலர், தமிழக வருவாய் துறைச் செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், டி.ஜி.பி. ஆகியோரை எதிர் மனுதாரராக தாமாகவே முன்வந்து சேர்த்துக் கொள்கிறேன்.

இவர்கள் அனைவரும், நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவ தற்கு தடை விதித்திருக்கும் போது, அரசு மதுபானக் கடைகள், பார்கள் நடத்தலாமா?

மதுபானக் கடைகள் திறப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்திருந்தால், அது அரசியல் சட்டப் பிரிவு 21 (தனிநபர் வாழ்வுக்கு வழங்கும் பாதுகாப்பு மற்றும் தனி நபர் உரிமை), மோட்டார் வாகனச் சட்டம் ஆகிய வற்றுக்கு எதிரானது இல்லையா?

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக் கூடாது?, மது விலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தி, மது விற்பனை மூலம் கிடைத்த வருவாயை வேறு வழிகளில் உருவாக்க அரசு ஏன் முயற்சிக்கக் கூடாது? இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/92320.html#ixzz3KwovvQqL

தமிழ் ஓவியா said...

நிலவைப்பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்

1. சந்திரனில் ஒரு முழு நாள் என்பது அதாவது ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரைக்கும் நம் பூமியின் நாட்கள் கண்க்குப்படி 29.5 நாட்கள் ஆகும். சுருக்கமாக சந்திரனில் ஒரு நாள் என்பது நமது பூமியின் நாட்கள் கணக்குப்படி 29.5 நாட்கள் ஆகும்.

2. கடந்த 41 ஆண்டுகளாக சந்திரனுக்கு எந்த மனிதனும் செல்லவில்லை ( அதற்கு முன் மனிதன் கால் தடம் பதித்தது உண்மை என்றால் ?!) 3. சந்திரன் நம்மைவிட்டு அதாவது பூமியை விட்டு ஆண்டிற்கு 3.78 சென்டி மீட்டர் (1.48 இஞ்ச்) தூரம் விலகிச் செல்கிறது.

4. அப்போலோ 11 சந்திரனில் இறங்கியபோது பிடிக்கப் பட்ட ஒரிஜினல் வீடியோ படம் கவனக்குறைவாக அழிக் கப்பட்டு அதில் வேறு வீடியோ படம் பதிவு செய்யப் பட்டுவிட்டதாம் !

5. சந்திரனில் இறங்கிய அப்போலோ 11 இல் பயன் படுத்தப்பட்ட கம்ப்யூட்டரின் சக்தியை விட தற்போது உங்கள் கைகளில் தவழும் செல்ஃபோன்கள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர்கள் சக்தி அதிகம்!

6. காரை மேல்நோக்கி மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச்சென்றால் நீங்கள் நிலவை அடைய ஆறு மாதங்களாகும்!

7. முழு சந்திரகிரகணம் ஏற்படும்போது தெரியும் அந்த அற்புதமான காட்சிக்கு காரணம் என்ன தெரியுமா ? சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாகும் அதே வேளையில் சூரியன் பூமியில் இருந்து 400 மடங்கு தூரத்தில் இருப்பதால் இரண்டும் ஒரே அளவில் தோன்றி நம் கண்களுக்கு அந்த அற்புதமான காட்சியை தருகின்றன.

8. நிலா நாம் பார்ப்பது போல் அல்லது நினைப்பது போல் வட்டமாக இல்லையாம் ! சிறிதளவு கோணலாக அதாவது முட்டை வடிவமாகத்தான் இருக்கிறதாம் !

Read more: http://www.viduthalai.in/page-7/92344.html#ixzz3KwqGYElk

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் 82ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் வாழ்த்து


திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், அருமை இளவல் கி. வீரமணி அவர்களின் 82வது பிறந்த நாளையொட்டி என் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது பிறந்த நாளை தற்போது நினைவு கூர்ந்திடும்போது எத்தனையோ பசுமையான நினைவுகள்! தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது, திராவிடர் கழகம் இனியும் என்னவாகுமோ என்ற நினைப்பு ஒரு சிலருக்கு ஏற்பட்டது உண்டு.

அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை, இலட்சியத்தை, பகுத்தறிவு பிரச்சாரத்தை, சமுதாய எழுச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் உயர்த்திப் பிடித்து, அதை அவனி யெங்கும் பரப்புகின்ற பணியில் அயராது தொண்டாற்றி வரும் இளவல் வீரமணி அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் நல்ல உடல் நலத்தோடு பணியாற்றிட அவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/page1/92198.html#ixzz3Kwql3GL5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அருகம்புல்

சிவாலயத்திற்குச் சென்று அருகம்புல் மாலை கட்டி ஆனை முகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள் - எதிர்பார்ப்புகள் நிறை வேறுமாம்.

சரி. அருகம்புல்லை மேயும் ஆட்டுக்கும் மாட் டுக்கும் மனிதர்களைவிட அதிக பலன் கிட்டுமோ!

Read more: http://viduthalai.in/page1/92200.html#ixzz3KwqxXxcE

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தானேஸ்வர் சாகு

சென்னை, டிச.2-_ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2014) கழகத் தோழர்களால் தமிழ்நாடெங்கும் சமூக நலப் பணிகள் -குருதிக் கொடை - மருத்துவ முகாம் நடத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கண்டு பிடித்த அறிவுச் சுரங்கம், உலகில் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருந்து தொண்டாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (2.12.2014) உலகமெங்கும் உள்ள கழகத் தோழர்களால், பகுத்தறிவாளர்களால் சுயமரியாதை நாளாக கொண்டாடப்படுகிறது.

அய்யா - அம்மா சிலைகளுக்கு மாலை

தமிழர் தலைவரின் பிறந்த நாளையொட்டி இன்று (2.12.2014) காலை 10 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழகத்தின் தலைமையகமான பெரியார் திடலில் உள்ள, தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்பட் டது. அதே போன்று பெரி யார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டது. பெரியார் நினைவிடத்தில் உள்ள அய்யா -_ அம்மா நினைவி டங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இலவச மருத்துவ முகாம்

தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. இதில் பொது மருத்துவம், தாய் -_ சேய் நலம், நீரிழிவு நோய், கண், காது-மூக்கு-தொண்டை, பல் மருத்துவம், சிறுநீரகம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டும் மருத்துவ ஆலோசனைகளும் வழங் கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

முன்னதாக இம்மருத் துவ முகாம் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் முன்னிலை யில் முன்னாள் மத்திய அமைச்சர் க.வேங்கடபதி (திமுக) அவர்களின் தலை மையில், மத்திய அரசின் முன்னாள் மருத்துவ தேர்வாணைக்குழுவின் துணைத்தலைவரும் இருதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் எம்.எஸ்.இராமச் சந்திரன் அவர்கள் இம்ம ருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இம்மருத்துவ முகாமில் டாக்டர் சி. மீனாம்பாள் MBBS DMCH (மகளிர் மருத் துவம்), டாக்டர் லலிமாய், MBBS DLO (காது, மூக்கு, தொண்டை நிபுணர்), டாக்டர் J.L. சாரதா MBBS DGO (மகளிர் மருத்துவம்), டாக்டர் பிரபு பொது மருத்துவம் மற்றும் அணு ஆற்றல் மருத்துவம், டாக்டர் பட்டாபிராமன் (மனநல மருத்துவர்), டாக்டர் சாமூண்டீஸ்வரி BDS (பல் மருத்துவர்), டாக்டர் டான் பாஸ்கோ R.G. Stone (சிறுநீரகப் பிரிவு மருத்துவர்) டாக்டர் இ. தேனருவி (MDS) டாக்டர் செல்வி அபர்னா (வாசன் கண் மருத்துவ குழுமம்), மார்க்கெட்டிங் மேலாளர் திரு. யூசுப் (வாசன் கண் மருத்துவமனை), டாக்டர் காயத்ரி (மருத்துவ அதி காரி, பெரியார் மணி யம்மை மருத்துவமனை), டாக்டர் சந்தியா சதன் (மருத்துவ அதிகாரி) (பெரி யார் நகர குடும்ப நல மய்யம்), மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் சார்பில் மேலாளர் ஜி குணசேகரன், கோ. தயாளன், செவிலி யர்கள் மேரி புஷ்பம், காயத்ரி, பவித்ரா, உமா லூசி, ஆக்ன்ஸ் லேப் டெக்னீசியன் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண் டனர். இம்மருத்துவ முகா மில் பங்கேற்று நோயா ளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும், மருத்துவ சிகிச்சை ஆலோசனை களையும் வழங்கிய மருத் துவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ் ஓவியா said...


இந்நிகழ்வுகளில் திரா விடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலச் செய லாளர் பன்னிர்செல்வம், தொழிலாளரணி துணைச் செயலாளர் செல்வராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், செயலாளர் மோகன், வழக் குரைஞர் குமாரதேவன், வழக்குரைஞர் சென்னி யப்பன்.

பேராசிரியர் பு.இராச துரை, பேராசிரியை இசையமுது மயிலாடுதுறை கழக மாவட்டச் செய லாளர் கி.தளபதிராஜ், ஆவடி மாவட்டச் செய லாளர் தென்னரசு, பெரி யார் திடல் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் சரவணன், தலைமை கணக்குப் பிரிவு அதிகாரி முத்துக்கிருஷ்ணன், பெரியார் களம் இறைவி, கு.தங்கமணி, சி.வெற்றிச் செல்வி, சந்திரா, பசும் பொன், மோகனபிரியா, மரகதமணி, மீனாட்சி, சுமதி, பாலகிருஷ்ணன், அம்பத்தூர் நடராசன், பெரியார் மாணாக்கன், புரசை அன்புச்செல்வன், பூவை செல்வி, மாட்சி மற்றும் திரளான கழகத் தோழர், தோழியர்களும், பெரியார் திடல் தோழி யர்கள் விடுதலைப் பணியாளர்கள், திராவிடர் நலநிதித் தோழர்கள் என அனைத்து தோழர்களும் தமிழர் தலைவர் அவர் களின் பிறந்த நாள் நிகழ் வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page1/92196.html#ixzz3KwrQo8Hd

தமிழ் ஓவியா said...

ஆலயத்தை மூடுங்கள் உயர்நீதிமன்றம்


சென்னை, நவ.2_ கோவில் என்பது மக்கள் அமைதியாக வழிபாடு நடத்துவதற்காகத்தான். ஆலயத்தில் மக்கள் அமை தியாக வழிபட முடிய வில்லையெனில், அதை இழுத்து மூடுவதில் தவ றில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யாருக்கு முதல்மரியாதை கொடுப் பது என்பது தொடங்கி, தேர் இழுப்பது வரை சிக் கல்தான். இரு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது.

இதேபோல ஒரு பிரச்சினை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலைப் பூட்டி, வரு வாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். எனவே இந்த கிரா மத்தைச் சேர்ந்த இ.சமன் என்பவர் உயர் நீதிமன்றத் தில் இது தொடர்பாக பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்களது கிரா மத்தில் இரண்டு கங்கை யம்மன் கோயில்கள் உள்ளன. ஊரில் இரண்டு குழுக்களுக்குள் பிரச் சினை ஏற்பட்டதால், கோயிலைப் பூட்டி, வரு வாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். அதனால், வழிபட முடி யாமல் மக்கள் சிரமப்படு கின்றனர். கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற் றக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, கங்கையம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட் சியர், வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராய ணன் ஆகியோர் அடங் கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் தங்களின் உத்தரவில், கோயில்களில் வழிபடுவதில் சண்டை யிட்டுக் கொள்ளும் அள வுக்கு இந்த சமுதாயத்தில் பிரிவினை உள்ளது. இது வருத்தமளிப்பதாக உள் ளது. கோயிலைப் பூட்டி, வழிபாட்டு உரிமையில் குறுக்கிட்டனர் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களால் அமைதியாக வழிபட முடியவில்லையெ னில், கோயிலை இழுத்து மூடலாம். கோயிலை மூடி, அதிகாரிகள் சீல் வைத்தது சரியான முடிவுதான் என்று கூறினார். மேலும், இந்த மனுவை பொது நல வழக்காகக் கருத்தில் கொள்ள முடியாது. என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

பலே அரியானா பெண்கள்!


அரியானா மாநிலம் ரோட்டக் நகரில் ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் களை இரு பெண் சகோதரிகள் எதிர்த்துத் தாக்குதலைத் தொடுத்த தகவல் இந்தியா முழுமையும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆர்த்தி, பூஜா என்ற சகோதரிகளுக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் பாலியல் தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்கள் ஒரு கட்டத்தில் அத்துமீறி அந்த இரு தடிப் பயல்களும் நடந்தபோது, தம் வசமிருந்த பெல்டுகளைக் கழற்றி அந்த இரு தடியன்களையும் தாக்கத் தொடங்கினர். இதில் என்ன கொடுமையென்றால் பேருந்தில் பயணித்த யாரும் உதவிக்கு முன்வரவில்லை; நடத்துநரும், ஓட்டுநரும்கூட தலையிடவில்லை. மாறாக சண்டையிட்டுக் கொண்டிருந்த பெண்களையும், பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களையும் பேருந்திலிருந்து இறக்கி விட்டனராம்.

வெளியிலும் அந்த இளைஞர்கள் அந்தப் பெண் களைத் தாக்கத் தொடங்கியபோது செங்கற்களைக் கையில் எடுத்து இரு பெண்களும் அந்தத் தடியர்களின்மீது வீசத் தொடங்கவே - தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த ஆண்களின் செயல் பாடுகளை ஒரு பெண் கைப்பேசி மூலம் படம் எடுத் துள்ளார். காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டது - கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இரு சகோதரிகளுக்கும் இப்பொழுது பாராட்டுகளும், அன்பளிப்புகளும் குவியத் தொடங்கி விட்டன. ஆனால், இதில் இன்னும் மோசமானது என்ன தெரியுமா? அந்த சகோதரிகளின் தந்தையார் ராஜேஷ் குமார் சொன்ன தகவல்தான் அது! இந்தச் சம்பவத்தில் சமாதானமாக செல்லுமாறு காவல்துறையினர் நிர்ப்பந்திக்கிறார்களாம் - என்ன கொடுமையடா இது!

இப்பொழுது காவல்துறையிலிருந்து, நீதிமன்றம் வரை கட்டப் பஞ்சாயத்துதான் நடக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாடு காடாகி விடும் என்று எச்சரிக்கின்றோம்.

பெண்கள் என்றால் போகப் பண்டம் என்று கருதுகிற அகம்பாவமும், வெறியும், அநாகரிகக் குரூர வக்கிரப் புத்தியும்தான் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்குக் காரணம்.

இதனை வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதுகிற பெண்களின் மனப்பான்மைதான் அவர்கள். மேலும் மேலும் பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்கு முக்கிய காரணமாகும்.

அந்த நிலையிலிருந்து விடுபட்டு, அரியானாவில் ஆர்த்தியும், பூஜாவும் எப்படி துணிந்து இறங்கினார் களோ, அந்த நிலைக்குப் பெண்கள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி பரவும் மாத்திரத்திலேயே ஆண்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கி, ஒதுங்கிப் போய் விடுவார்கள்.

அரசுகளும், காவல்துறையும், நீதித்துறையும் ஒரு சார்பாக நடந்து கொள்ளும் நிலையில், தன் கையே தனக்கு உதவி என்ற முறையில் பெண்கள் வீதியிலே இறங்கும் பொழுதுதான் ஆண்களின் அயோக்கியத் தனமான அநாகரிகங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட முடியும்.

பெண்களுக்குக் கோலாட்டம், கோலம் போடுதல் இவற்றைச் சொல்லிக் கொடுக்காமல், கைக் குத்து, குஸ்தி போன்றவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தந்தை பெரியார் கொள்கை, காலந் தாழ்ந்தாலும் அரியானாவில் செயல்பாட்டுக்கு வந்தது வரவேற்கத் தக்கதாகும்.

இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் நடந்து கொண்ட விதமும், காவல்துறை நடந்து கொண்ட போக்கும் வெட்கித் தலைகுனியத் தக்கதாகும். இவர்கள் அரசுப் பணியாளர்கள் என்ற முறையில் உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த இரு பெண்களையும், ஊருக்கு ஊர் அழைத்து வரவேற்பு கொடுக்க வேண்டும், பாராட்டுத் தெரி விக்கவும் வேண்டும்.

காதல் திருமணத்தால் ஒழுக்கம் கெட்டுப் போகும் என்று கர்ச்சிக்கும் கனவான்கள் இப்படி ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் அநாகரிகம் பற்றிக் குரல் உயர்த்துவதில்லையே ஏன்?

காலம் காலமாக ஆண் என்றால் எஜமான், பெண் என்றால் அடிமை என்ற மனப்பான்மை சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது.

அதிலிருந்து அவ்வளவு எளிதாக அவர்களால் வெளியில் வர முடியாது. இந்த நிலையில் பெண்களே தனிச் சங்கங்களைக் கூட ஏற்படுத்திக் கொண்டு, அடிக்கடி கூடிக் கலந்தாலோசித்து அந்தந்தப் பகுதி களில் நடைபெறும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும்.

குற்றம் புரியும் ஆண்களைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இயற்றப்பட வேண் டும் என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/92204.html#ixzz3Kws8564l

தமிழ் ஓவியா said...

ஆன்மிக வியாபாரத்தின் செழுமை! ஓர் நிகழ்வு

திரும்பவும் சொல்லுங்கள்; கேட்க விரும்புகிறோம் என்பதைத்தான் அந்தக் காலத்து நாடக மேடைகளில், மக்களை ஈர்த்த பாட்டுக்களையும், வசனங்களையும் கேட்க விரும்பியவர் களின் குரல்தான் ஒன்ஸ்மோர் (Once More) என்ற ஆங்கில மொழிக் குரல்.

அத்தலைப்பில் இவ்வார தினமணி கதிரில் (30.11.2014) வெளியிடப்பட்ட ஒரு அருமையான நிகழ்வு. (கண்ணா வருவாயா) என்ற நூலில் திரு. வர லொட்டி ரெங்கசாமி என்பவர் எழுதி - கேசியால் தொகுக்கப்பட்டதை அப்படியே குறைக்காமல், கூட்டாமல் தருகிறேன்.

இன்றைய ஆன்மிகத்தின் கசப் பான யதார்த்தம் இதுதான். அந்த இறைவனையே இவர்களுடைய இன்ப வாழ்க்கைக்கு ஒரு கருவி யாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிகப் பத்திரிகைகளைக் கொஞ் சம் பாருங்களேன்.
"கடன் தொல்லை தீர யாரை வணங்க வேண்டும்?''

"நீண்டநாள் நோய் தீர எந்தத் தெய்வத்திடம் முறையிட வேண்டும்?''

"ஆதித்ய ஹ்ருதயம் சொல்வதால் உண்டாகும் நன்மைகள்?''

இப்படித் தலைப்புகள் இருந்தால் தான் ஆன்மிகப் புத்தகங்கள் விற் கின்றன. இந்த வார்த்தைகளுடன் இருக்கும் பத்திரிகையைக் கண்டால் அவை கயிற்றில் தொங்கிக் கொண் டிருப்பதாகத் தெரியவில்லை. ஆன் மிகமே தூக்கில் தொங்கிக் கொண்டி ருப்பதுபோல் தோன்றுகிறது.

இன்று நம்மிடையே அட்டவணை ஆன்மிகம் வந்துவிட்டது! ஆம்... கடன் தொல்லை தீர ஒரு கடவுள்; காதல் கைகூட மற்றொரு கடவுள்; மகளுக்குத் திருமணமா மற்றொரு தெய்வம்; பதவி உயர்வுக்கு ஒன்று, பந்தயத்தில் ஜெயிக்க வேறொன்று, நோயில்லாமல் வாழ ஒரு தெய்வம், வம்பு வழக்கில்லாமல் வாழ ஒரு தெய்வம்!

இப்போதெல்லாம் கடவுளின் சட்டையைப் பிடித்துக் கேட்கத் தொடங்கி விட்டோம். உன்னை வணங்கினால் எனக்கு என்ன தருவாய்? நம் அறியா மையை நினைத்து ஆண்டவன் சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இடையில் இருக்கும் சில ஆன்மிகத் தரகர்கள் நம் அறியாமையையும் அன்பின்மையையும் வைத்துத் தொழில் செய்து கொண்டு பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! இதுதான் இன்றைய அவல நிலை.

தமிழ் ஓவியா said...


என் நண்பர் ஒருவர் - அமெரிக்கா வில் ஒரு பெரிய கார் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்தி யாவை விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. திடீரென்று ஒருநாள் தனது 14 வயது மகனுடன் சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் ஏதோ நேர்த்திக்கடன் பாக்கியாம் ரொம்ப நாளாய். அதை நிறைவேற்ற வந்திருந்தார். கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்துகொண்டு வெளியே வந்தோம். இவர் தனது மகனிடம் ஒரு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து வாயில் உண்டியலில் போட்டுவிட்டு வரச் சொல்லிவிட்டு என்னுடன் வெளியே பேசிக் கொண்டிருந்தார். நெடுநேரம் ஆயிற்று. பையனைக் காணவில்லை. உள்ளே சென்று பார்த்தால் உண்டியலின் எதிரே அதையே உற்றுநோக்கியபடி நின்று கொண்டிருந்தான். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, "அமெரிக்காவில் இயந்திரங்களில் பணம் போட்டால் ஒரு கோகோ கோலா வரும். ஒரு பர்கர் வரும். குறைந்தபட்சம் ஒரு சின்ன சாக்லேட் டாவது வரும். இந்தியாவில் 100 ரூபாய் போட்டும் ஒன்றும் வரவில்லையே. இந்த இயந்திரம் பழுது ஆகியிருக்கிறது என்று நினைக்கிறேன். என் நண்பன் சொன்னது சரிதான். இந்தியாவில் இயந்திரங்கள் எல்லாம் பழுதான நிலையில்தான் இருக் கும் என்று. அது ரொம்ப சரி. இண்டியா இஸ் எ பேட் கன்ட்ரி'' என்றான்!

அவன் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரித்து விட்டோம். அதன்பின் உண்டி யலைப் பற்றியும் இந்திய வழிபாட்டு முறைகளையும் விளக்கினோம். ஆனால் உண்மையில் கோயில் உண்டியலில் பணம் போட்டு கோக்கோ கோலாவை எதிர்பார்ப்பதற்கும், உண்டியலில் பணம் போட்டதால் புண்ணியத்தை எதிர்பார்ப் பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!

அமெரிக்க நண்பனோ தனது பழைய நேர்த்திக்கடனைச் செலுத்தாததால் தன் பதவி உயர்வு தள்ளிப் போகிறதோ என்று சந்தேகித்து சில லட்சங்களைச் செல வழித்துக் கொண்டு டெக்ஸாசில் இருந்து திருவல்லிக்கேணி வந்திருக்கிறான்! நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டு இறை வனிடம் பதவி உயர்வு தர வேண்டு கிறான். பிள்ளையோ உண்டியலில் போட்ட நூறு ரூபாய்க்கு கோகோ கோலா போன்ற பொருளை எதிர் பார்க்கிறான்! இதில் எந்த வித்தி யாசமும் இல்லைதானே!

"தனக்குத் தர வேண்டிய நேர்த் திக் கடனை நிர்த்தாட்சண்யமாக வசூல் செய்யும் கந்துவட்டிக்காரனாக நீ பார்த்தசாரதியைப் பார்த்தாய், உன் மகன் கண்ணனை ஒரு வியா பாரியாகப் பார்த்தான். எனக்கு என் னவோ உன்னைவிட உன் மகன் பரவாயில்லை என்றுதான் தோன்று கிறது!'' என்றேன் நண்பனிடம்.

நண்பனுக்குப் பேச்சு வரவில்லை. அவன் பார்வையில் இப்போது ஒரு புரிதல் உணர்வு இருந்தது!

(கண்ணா வருவாயா!' என்ற நூலில் வரலொட்டி ரெங்கசாமி).

தொகுப்பு: கேசி

இதிலிருந்து புரிவதென்ன? எழுதி யவர் பக்தர் - ஆன்மிக வியாபாரி களின் முகமூடியைக் கழற்றிக் காட்டுகிறார்!

நம் நாட்டுப் பக்தி வியாபாரம் எப்படி கடவுளரிடமும் பேரம் பேசு வதாக அமைந்துள்ளது என்பதற்கு இதைவிட நல்ல சான்று வேறு வேண் டுமா? புது வகை மூலதனம் ஆன் மிகம் - ஆன்மிக சாமியார்கள்; எனவே, அறிவை விரிவு செய்யுங்கள் - சிந்தியுங்கள்.
--veramani
Read more: http://viduthalai.in/page1/92205.html#ixzz3KwsRvAha

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் ஆசிரியர் அகர வாழ்த்து!

- புலவர் குறளன்பன், கோவை

அறிவுப் பெரியார் உலகம் அமைக்கும் அறிவினாய் வாழி!
ஆரியப் பார்ப்பு அலறப் பணிபுரி ஆர்வினாய் வாழி!
இனநலப் போரில் இடையறா தியங்கும் இன்பினாய் வாழி!
ஈ.வெ.ரா. கொள்கை ஏந்தி நிலனாள் ஏறினாய் வாழி!
உண்மை உலகில் ஓங்க ஒலிக்கும் உரையினாய் வாழி!
ஊரும் உலகும் விருதினால் ஊக்கும் உழைப்பினாய் வாழி!
எழுகதிர் போல் எழும் எழுச்சிப் பெரியார் இயல்பினாய் வாழி!
ஏய்க்கும் மூட இயக்க மடமை எதிர்ப்பினாய் வாழி!
ஐயம் நீக்கி அறிவறம் கூறும் அழகினாய் வாழி!
ஒழுக்கம் எவர்க்கும் உயிரெனும் கொள்கை உணர்வினாய் வாழி!
ஓதிய வாறே ஒழுகும் வாழ்க்கை ஒளியினாய் வாழி!
ஓளவியம் அறியா அழகிய மனநல அன்பினாய் வாழி!
அஃகா வீரமணி அருங்குணம் பாடி ஆடுவோம் வாழி!

Read more: http://viduthalai.in/page1/92213.html#ixzz3Kwsf2ZiD

தமிழ் ஓவியா said...

ஆர்க்கும் போர் முரசு

நாவை ஆசிரியர் அசைக்கும்போது
நடப்பது எப்படி என்று நதிகள் குறிப்பெடுத்துக் கொள்ளும்
நட்சத்திரங்களுக்கு
வகுப்பு திறக்கும்
அவருடைய
ஒவ்வொரு எழுத்திலும்
ஈரோட்டு வெளிச்சம்
இல்லாமல் இருக்காது!
சூரிய முகவரியில்
தமிழனை நிறுத்திச் சென்ற
அய்யா கொள்கையை
ஆர்க்கும் போர்முரசு
ஆசிரியர் வீரமணி

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்

Read more: http://viduthalai.in/page1/92211.html#ixzz3Kwso08Jw

தமிழ் ஓவியா said...

கடலூர் முதல் கருப்பூர் வரை...


கண் உறங்கா கடலலையாய்!

காலமெல்லாம் உழைக்கின்றார்!

புண் படுத்தும் சாதி மத புரட்டுகளை.

புறம் தள்ளி எதிர்க்கின்றார்! மண் மணக்க மனிதத்தை ,

மாண்புடனே உரைக்கின்றார்! பெண் இனத்தின் விடுதலைக்கு,

பெரியார் ஒருவரே வழி என்றார்! வன்கொடுமை சட்டத்துக்கே,

வரிந்து குரல் கொடுக்கின்றார்! கண் விழியை இமை மூடி காப்பது போல்,

கருத்துடன் நம்மை காக்கின்றார்! வெண்முத்து நிகர்த்த பொன் சிரிப்பால்,

வித்தகர் நம்மிடை விதைக்கின்றார் பண்பாட்டுப் படையெடுப்பின் பாதகங்கள்,

பக்குவமாய் எடுத்து உரைக்கின்றார்!

பொன் நிகர்த்த தாய் மடியில் பிறந்திட்ட கடலூர்!

புரட்சி மிக்க நடை போட்டு, சேர்ந்திட்ட கருப்பூர்! எண்திசையும் பெரியாரின் புகழ் பரப்பும் ஏற்றமிகு பணியினை

செய்கின்றார்! விண்முட்டும் பாசம் மிக்க எங்கள் அய்யா,

வீரமணி ஒருவர் தானே நம் தலைவர்! தண்கடல் அழியினும், அழியா தந்தை கொள்கை,

தன் மூச்சாய் கொண்ட தமிழர் தலைவர்,

வாழ்க! வாழ்கவே!!


- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://www.viduthalai.in/page1/92223.html#ixzz3KwtCrjCf

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியைப் புரிந்துகொள்ளுங்கள்!

- ஊசிமிளகாய்

டில்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் -இரு அவைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அங்கே மாநிலங்களவையில் பேசிய இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கிய கருத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அவைக்குக் கொண்டு வாருங்கள் என்று கூறியதேயாகும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், யார் யாரையோ அழைத்து வருகிறார்கள் நம் நாட்டுக்கு, தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு நமது பிரதமர் மோடி அவர்களை அழைத்து வாருங்கள்; அதற்கான ஏற்பாட்டினைச் செய்யுங்கள் என்று சிரிப்பொலிக்கிடையே கூறினார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., திரு.டெரெக் ஓ பிரியென் அவர்கள் பேசுகையில், நமது பிரதமர் மோடி அவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்க முதலாளிகளையெல்லாம் நம் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார்; விசாவை தங்கு தடையின்றி வழங்குவோம் என்றெல்லாம் கூறியுள்ளார்.

தயவு செய்து அவைக்கு வருவதற்கு தலைவர் அவர்களே அவருக்கு விசா வழங்கி உள்ளே இந்த அவையில் அமர வைத்து எங்களது கேள்விகளுக்கு பதில் கூறிட வாய்ப்பளித்தீர்களேயானால், நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறுவோம் என்று பேசி, அங்கே பதிவாகி இருக்கிறது!

உலகில் எந்த நாட்டு நாடாளுமன்றத்திலாவது இப்படித் தங்கள் பிரதமர்கள்பற்றிப் பேசியுள்ளனரா என்று அரசியல் நோக்கர்கள் ஆய்ந்து கொண்டுள்ளார்கள்!

பொதுவாக பிரதமர் நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு முதல் முன்னுரிமை தருவதுதான் சரியான நடைமுறையாக இருக்கவேண்டும் - பார்லிமெண்டரி ஜனநாயகத்தில்.

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ நடைபெறுகையில், முக்கிய அரசு அறிவிப்புகளைக்கூட முதலில் அங்கேதான் அறிவிக்கவேண்டுமே தவிர, வெளியிலோ, வேறு பொதுக்கூட்ட விழாக்களிலோ அறிவிக்கக்கூடாது; பிரதமர் மோடி அதையும்கூட லட்சியம் செய்யாது அறிவிப்புகளை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் புதுவை நாராயணசாமி அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்வது தவறல்ல. ஆனால், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதுபோல அடிக்கடி அவை கூடிடும்போது செல்வது விரும்பத்தக்கதா? மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் அளிக்கவேண்டாமா?

#######

அண்மையில், ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி புதிதாகக் கூடுதலாக மோடி அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட, இந்துத்துவா கதாகாலட்சேப பெண் அமைச்சர் ஒருவர் டில்லி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு, மிகவும் தரக்குறைவானதும், மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலும் அமைந்தது குறித்து நாடாளுமன்ற அவைகளில் அத்துணை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, அவைகளை நடக்கவிடாமல் ஒத்தி வைக்கும் சூழ்நிலை உருவாகியது.

இப்படி ஒரு மத்திய அமைச்சர், அதுவும் ஒரு பெண் அமைச்சர் பேசலாமா?

மத்திய பெண் அமைச்சரின் செங்காங்கடைப் பேச்சு

டில்லியில் பா.ஜ.க.வுக்கு வாக்கு அளித்தால் அவர்கள் இராமனுக்குப் பிள்ளைகள்; இன்றேல் அவர்கள் தவறான வழியில் பிறந்த பிள்ளைகள் என்று பேசியுள்ளார்.

கையால் எழுதவே கூசுகிறதே! எவ்வளவு மோசமான, மற்றவர்களை அசிங்கப்படுத்தும் - மற்றவர்களின் தன்மானத்திற்கு சவால்விடும் கேவலமான சவடால் பேச்சு இது!

மோடியை எதிர்க்கிறவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவர் என்று உளறிக்கொட்டிய திமிர்ப் பேச்சுப் பேசிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர் பாட்னாவைச் சார்ந்த பிகார்காரர் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் - பரிசு கொடுப்பதுபோல!

இதுவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் சாதனைதான்!

பஞ்ச பாண்டவர், குந்தியின் பிள்ளைகள் என்ற மகாபா(தக)ரதக் கதையில்,

அய்வரும் ஒரே தகப்பனாருக்கு முறைப்படி திருமணம் செய்த பிறகுதான் பிறந்தவர்களா?

இந்த அமைச்சரான கதாகாலட்சேப ஆர்.எஸ்.எஸ். சேவகி அம்மாள்தான் பதில் கூறவேண்டும்!

மகாபாரதக் கதையில், விபச்சாரத்தால் பிறந்த பிள்ளைகளைப் பட்டியலிட்டால், இவர்கள் முகத்தைத் தொங்க விட்டுக் கொள்ளமாட்டார்களா?

இராமர் பிள்ளைகள் - லவ; குசா கதைப்படி - எங்கே பிறந்தனர்? காட்டில். ஏன் காட்டுக்கு சீதை அனுப்பப்பட்டாள்?

இராமனின் சந்தேகம்தானே காரணம்!

அட வெட்கங்கெட்ட மூளிகளே, இப்படி ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள்வது ஏன்?

மோடியின் அமைச்சராக இப்படிப்பட்டவர் இருந்தால், அதைவிட பிரதமர் மோடிக்குக் கேவலம் உண்டா?

நாட்டுக்கு அவலம், அசிங்கம் வேறு உண்டா?

சிந்தியுங்கள்!

தெருக் குப்பையை அள்ளிக் கொட்டுமுன், இந்த அமைச்சரவைக் குப்பைகளை அள்ளி வெளியே கொட்டுங்கள் மோடிஜி!

டில்லி வாக்காளர்கள் இதற்கு தக்க பதிலடி தரவேண்டும் - தேர்தலில்!

Read more: http://viduthalai.in/page1/92268.html#ixzz3KwuPQrWE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

எப்படிக் குற்றமாகும்!

இந்து மதத்தில் கடவுள் கள் சண்டை போட்டு அசுரனை அழிப்பதாகப் புராணங்களில் எழுதி வைத்துள்ளார்களே - சர்வசக்தி வாய்ந்த கட வுள்கள் சூலத்தால் குத் திக் குடலைக் கிழித்துத் தான் எதிரிகளை அழிக்க வேண்டுமா? தீயவர் களை நல்வழிப்படுத்தும் பண்பும், தன்மையும் சர்வ சக்தியுள்ள கடவுள் களிடத்தில் கிடையாதா?

கடவுள் பக்தர்கள் தாங்கள் வணங்கும் கட வுள்கள் போல சண்டை போட்டால் அவை எப்படிக் குற்றமாகும்?

Read more: http://viduthalai.in/page1/92263.html#ixzz3KwuZc9Ia

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்: ஆய்வு முடிவு

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்:

முதலிடம் பார்ப்பனர்களுக்கே!

அமெரிக்காவின் மேரிலேண்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவு


புதுடில்லி, டிச.3_ தீண் டாமையைக் கடைப் பிடிப்பதில் பார்ப்பனர்கள் தான் முதலிடத்தில் உள் ளனர். இந்தியா சுதந்திர மடைந்து 64 ஆண்டுகள் ஆனபிறகு தீண்டாமை குறித்த ஒரு கணக்கெ டுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூகப்பொருளாதார ஆய்வு மய்யம் இந்திய மனிதவளமேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் பல்வேறு இன மொழி மத மக்கள் வாழும் நாடான இந்தி யாவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இன் றும் தீண்டாமைக் கொடுமை நாடெங்கிலும் தலைவிரித்தாடுகிறது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், என்று குறிப்பிட்டு இருப்பினும் அந்தப்பாவச்செயலை நான்கில் ஓர் இந்தியன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல் வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த ஆய்வை நடத்தினர். இந்த ஆய் வின் முடிவில் தீண்டா மையை அதிகம் இன்றள வும் கடைப்பிடிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தீண் டாமை இதர மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கிய மதங்களைவிட இந்துமதத்தில்தான் அதிகம் இருக்கிறது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் தனது மதத்தைச் சார்ந்தவர்களையே தாழ்த் தப்பட்டவர்கள் என்று கூறி ஒதுக்கிவைத்துள்ள னர். முக்கியமாக பார்ப்ப னர்களிடம் இந்த தீண் டாமைத் தொடர்பான கண்ணோட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆய்வின்போது கேட் கப்பட்ட நீங்களும், உங் கள் குடும்பத்தினரும் தீண் டாமையைக் கடைப்பிடிக் கின்றீர்களா? என்ற கேள்விக்கு பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர் ஆம் என்றே கூறியுள்ளனர்.

இல்லை என்று கூறிய பார்ப்பனர்களில் பொது இடங்களில் தீண்டாமை யைக் கடைப்பிடிப்ப தில்லை என்றாலும் எனது வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதர சாதியினரை எங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று பதிலளித்துள்ளனர். இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாழ்த்தப்பட்டவனாக இருப்பின் நாங்கள் முற்றி லும் அனுமதிக்கவே மாட் டோம் என்று கூறியுள்ள னர். இதே வேளையில் மற்ற மதத்தவர்களிடம் தீண்டாமையைக் கடைப் பிடிக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயின் சமூகத்தினர் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒரு வரான அமித் தோராட் என்பவர் கூறும்போது ஜெயின் சமூகத்தினர் மிகவும் குறைந்த அள விலேயே உள்ளனர். ஆனால் அவர்களில் முக் கால் பங்கினர், நாங்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பவர்கள் என்று கூறியுள்ளனர்.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லீம் களும் கூட அடங்குவர். இந்தியாவில் மட்டுமே இந்த மதத்தவர்களிடம் தீண்டாமை நிலவி வரு கிறது. இவர்கள் இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற காரணத்தால் இப் பழக்கம் இவர்களிடையே தென்படுகிறது. பார்ப்பனர் வீட்டில் பிறக்கும் ஒருவனுக்கு அவனை வளர்க்கும் முறை யிலேயே தீண்டாமை மனதளவில் உடன் பிறந்த ஒன்றாகிவிடுகிறது, இக் காரணத்தால் அவன் பொதுவிலும் தீண்டா மையைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. தென் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் உயர்சாதி யினருக்கென தனி வழி பாட்டு இடங்களும் அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனி வழிபாட்டு இடங்களும் உள்ளன.

இந்துமக்களிடையே தீண்டாமை வடமாநிலங் களில் அதிகம் காணப்படு கிறது. இதில் அதிகம் மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு 57 விழுக் காட்டு மக்கள் தீண்டா மையைக் கடைப்பிடிக்கின் றனர். அதாவது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து உயர்சாதியி னருமே தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் வருந்தவில்லை. மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து இமாச்சலப்பிரதேசம் 50 விழுக்காடு, சத்தீஷ்கர் 48, ராஜஸ்தான் பிகார் 47, உத்தரப்பிரதேசம் 43, உத் தரகண்ட் 40 குஜராத் 39, தமிழகத்தில் 27 விழுக் காட்டினர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் ஒரு விழுக்காட்டினரும், கேர ளாவில் இரண்டு விழுக் காட்டினரும், மகாராஷ் டிராவில் 4 விழுக்காட்டி னரும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறி யுள்ளனர்.பார்ப்பனர்களில் அதிகம்பேர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதை தவறாகக் கருதவில்லை அது எங்களது உரிமை எங் களது சொந்த விருப்பம் என்று பதிலளித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/92265.html#ixzz3Kwuff6EL

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்கு இனமானப் பேராசிரியர் வாழ்த்து!

எனது பேரன்புக்கும், மதிப்புக்கும் உரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கட்கு எனது வணக்கம்.

தங்களின் 82ஆவது பிறந்த நாள் இன்று என்பதை முன்னதாக அறியத் தவறினேன். பகல் 1 மணி அளவில்தான் அறிந்தேன். தவறு இழைத்தாலும், என்றுமுள வாழ்த்து நாளும் உண்டு என்ற முறையில் வாழ்த்துகின்றேன்.

தாங்கள் நோய்நொடிக்கு ஆளாகாது உடல் நலம் காத்து, பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து, தந்தை பெரியார் தொடங்கிய இனமானம் காக்கும் தொண்டினை, அவரது அடியொற்றி, அவரது மறையாத நெஞ்சம் உவக்குமாறும், குறிக்கோள் வெற்றி பெறுமாறும் தொடர்ந்து - தொடர்ந்து - தொடர்ந்து நடத்துமாறு உள்ளம் உவந்து வாழ்த்துகின்றேன்.

தன்மானம் மீட்போம்!
தமிழ்மானம் காப்போம்!

இனமானம் நாட்டுவோம்! என்று தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/92267.html#ixzz3Kwuyo4PI

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வாழ்த்து



அன்புள்ள நண்பருக்கு..

வணக்கம். நலம். நலமே நாடுகிறேன். 82ஆம் ஆண்டில் தாங்கள் அடியெடுத்து வைத்துள்ளதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பெரியார் அவர்களின் பெருந்தொண்டினைத் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறி வாழ்த்துகிறேன்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

அய்ந்துசால்பு ஊன்றிய தூண்

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் அய்ந்து பண்புகளும் நிறைந்துள்ள தாங்கள் வள்ளுவர் கூறியதுபோல சால்பு என்பதை தாங்கி நிற்கும் தூணாக திகழ்கிறீர்கள். மீண்டும் தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/e-paper/92399.html#ixzz3L20ZDjnU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிரற்றதற்கு ஏது உணர்வு?

புழுவானாலும், பறவையானாலும், கொசு, மரம் என்றாலும், உயிரற் றதாக இருந்தாலும், நீர், நிலம் என எங்கும் வாழ் கின்ற அனைத்து உயிர் களும், மனிதர்களும், யாரானாலும், எதுவானா லும் இந்த தீப ஒளியைப் பார்த்து விட்டால் அந்த உயிரின் சகல பாவத்தை யும் போக்கி இன்னொரு பிறவி எடுக்காமல் நிலை யான இன்பத்தில் சென்று சேரட்டும்'' என்பதாகும்.

விளக்கேற்றி இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கிய பின், "அண்ணாமலையாருக்கு அரோஹரா'' என்று மூன்று முறை சொல்லி திருவண்ணாமலை தீபத்தை மனதார நினைத்து வணங்க வேண்டும். இவ் வாறு செய்தால் அண்ணா மலை மகாதீபத்தை நேரில் தரிசித்த பலன் உண்டாகும். என்கிறது தினமலர் ஆன்மிக மலர்.

உயிரற்றதாக இருந்தா லும் கொசுவானாலும் பிறவி எடுக்காமல் நிலை யான இன்பத்தைப் பெறு மாம்?

வாயால் சிரிக்க முடி யுமா? உயிரற்றதற்கு ஏது உணர்வு?

Read more: http://viduthalai.in/e-paper/92401.html#ixzz3L20lf1pB

தமிழ் ஓவியா said...

நெல்சன் மண்டேலா மறையவில்லை - நிறைந்து விட்டார்!

இன்று (5.12.2014) மாபெரும் மனிதகுலப் போராளி நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!

அண்மையில் பாலி - (இந்தோ னேஷியாவின் பகுதி) - சென்று சிங்கப் பூருக்குத் திரும்பினோம். விமான நிலையப் புத்தகக் கடையில், நெல்சன் மண்டேலா பற்றிய அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அரிய மாயா ஆங்கேலூ (Maya Angelou) என்ற பிரபலமான பெண் கவிஞர் - எழுத் தாளர் இயக்குநர், ஆசிரியர், செயல் வீராங்கனை என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட அம்மையார் இவர் - எழுதிய அமெரிக்க அரசின் வேண்டு கோளுக்கிணங்க எழுதி அஞ்சலி வீர வணக்கம் செலுத்திய ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங் கினேன்.

விமான நிலையத்திலேயே - நேரம் இருந்ததால் படித்து முடித்தேன். சுவைத்தேன்.

நெல்சன் மண்டேலாவின் அரிய கருத்தாக அவ்வெளியீட்டில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்ட கருத்து - அறிவுரை இதுதான்.

“Education is the most powerful weapon you can use to change the World”
- Nelson Mandela

உலகை நீங்கள் மாற்றிடுவதற்கு கல்வி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை - நெல்சன் மண்டேலா என்பதே அதன் கருத்து.

இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் ஆன தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்கு கல்விதான் சிறந்த ஆயுதம் ஆகும் என்றார்.

பெரிய சிந்தனையாளர்கள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா!

நெல்சன் மண்டேலா (1918-2013) ஒரு யுகப் புரட்சியாளர்.

உறுதிகொண்ட நெஞ்சத்தவர். 27 ஆண்டுகள் ரோபன் தனிமைத் தீவு அறை சிறை - அவரது உறுதியை மேலும் பலமாக்கியதே தவிர, தன் விடுதலைபற்றி எண்ணாது, தன் சமுதாய மக்களின் அடிமை வாழ்வுக்கு எப்போது விடுதலை என்றே ஏங்கினார்; சிந்தித்தார்; செயல் பட்டார்! வென்றார்!

அடக்குமுறைகள் அவரை மேலும் மேலும் தலை நிமிரச் செய்தனவே தவிர கூனிக்குறுகி, மண்டியிடும் மனோ நிலைக்குத் தள்ளவே இல்லை.

தணலில் இட்ட தங்கம் கரைந்தா விடும்?

தகத்தகாய ஒளியுடன் அல்லவா பிரகாசிக்கும்!
உணர்ச்சியூட்டும் அவரை
வழியனுப்பி இறுதி மரியாதை
செய்தஅவ் வீரமும்
உணர்வும் கொப்பளித்த
ஆங்கிலக் கவிதை வரிகளில் சில.
(முழுவதும்கூட பிறகு வெளிவரும்)

“We will not forget you
We will not dishonor you
We will remember and be glad
That you lived among us.’’

உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்
உங்களை என்றும் நினைவில் நிறுத்தி மகிழ்வோம் (மறவோம்)
நீங்கள் எங்களுடன் வாழ்ந்தவர்!

“That you taught us
And
That you loved us
All!”

நீங்கள் எங்களின் ஆசானாக இருந்து போதித்தீர்!

மேலும்
நீங்கள் எங்களை எல்லாம் நேசித்தீர்!

நமது உணர்வுகள்:

(எங்களுக்காகவே நீங்கள் வாழ்ந்தீர் - விடுதலை துறந்தீர்) என்பதே அவர்தம் உள்ள விழைவு அல்லவா!

நெல்சன் மண்டேலா மறைய வில்லை! மறையவில்லை!!

நிறைந்து விட்டீர், நிறைந்து விட்டீர்! உலக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வில் உறைந்து கிடக்கிறீர்! என்றும் நின் பணி தொடர்வோம். - நம் உணர்வு இது.
veeramani
Read more: http://viduthalai.in/page-2/92404.html#ixzz3L21HNyxT

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்கா விட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்க தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து

Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23Fk42A

தமிழ் ஓவியா said...

திருடியவன் யார்?

ஒருவர்: அய்யா சாமியாரே! என் வீட்டில் ஒரு மாடு திருட்டு போய்விட்டது. அது இப்பொழுது எங்கே இருக்கிறது என்று சரியாக சொல்லமுடியுமா?

சாமியார்: அப்பனே எல்லாம் இறைவன் செயல். இதை எப்படி நான் சரியாகச் சொல்லமுடியும்?

ஒருவர்: அப்படியானால் என் மாட்டைத் திருடிக் கொண்டு போனது உங்கள் இறைவன்தானா?

-எம்.ஆர்.ஓம்பிரகாஷ், சி.மெய்யூர்

Read more: http://viduthalai.in/page-7/92383.html#ixzz3L23NrCVZ

தமிழ் ஓவியா said...

கோயிலில் தமிழில்லை! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற் கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L23VYbuN

தமிழ் ஓவியா said...

சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!

இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.

பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளறும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.

திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.

காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!

தகவல்: சங்கை வேலவன்

Read more: http://viduthalai.in/page-7/92385.html#ixzz3L24ghVlZ

தமிழ் ஓவியா said...

ஜீவாவின் பாடல்

கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்
குழவிக்கல் சாமியென்று கும்பிட்டபோது
பிள்ளைவரம் பெற்றிட வென்று - வள்ளி
பேரரசு வேப்பமரம் சுற்றியபோது
கள்ளை மொந்தையாக குடித்து - சுப்பன்
காட்டேரி ஆடுதென்று கத்தியபோது
சள்ளைதரும் பாவம் தொலைக்க - பொன்னி
சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கியபோது
-கொள்ளைச் சிரிப்பு
கொள்ளைச் சிரிப்பு வந்ததே - ராமன்
கோவிலுக் கழுதுபாப்ப ராகியபோது
எள்ளும் நீரும் வாரியிறைத்து - கண்ணன்
எத்துவாளிப் பார்ப்பானை வந்தித்தபோது
புள்ளினக் கருடனைக் கண்டு- சீதை
பூமியில் விழுந்து கிருஷ்ணா என்றிட்ட போது
கள்ளக்காவி வேடதாரிக்கே - லீலா
கடவுள் பணிவிடைகள் செய்திட்ட போது
-கொள்ளைச்சிரிப்பு

ப.ஜீவானந்தம்
ஆதாரம்: ஜீவாவின் பாடல்கள்

Read more: http://viduthalai.in/page-7/92388.html#ixzz3L24xLrDp

தமிழ் ஓவியா said...

ஜஸ்டீஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவு கழகத் தலைவர் இரங்கல்


கடந்த 20 நாள்களுக்கு முன் 100 வயது நிறைவடைந்த புகழ் வாய்ந்த நீதிபதியான ஜஸ்டீஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் நேற்று (4.12.2014) கேரளாவில் காலமானார் என்பது மிகவும் துயரம் தரும் செய்தியாகும்.

சிறந்த நீதிபதியாக அவர் கேரள உயர் நீதிமன்றத்திலும், பிறகு உச்சநீதி மன்றத்திலும் அவர் தந்த தீர்ப்புகள் வரலாற்றுப் புகழ் வாய்ந்தவை. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அவர் அளித்த முதல் தீர்ப்பு - 50 விழுக்காட்டிற்கு மேலும் இட ஒதுக்கீடு இருக்கலாம்; அரசியல் சட்டத்தில் உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்ற முக்கியத் தீர்ப்பாகும்.

அதுபோலவே, நெருக்கடி காலத்தில் அவர் துணிச்சலுடன் தந்தை பெரியார் எழுதிய உண்மை இராமாயணம் - சச்சி இராமாயண் என்ற வால்மீகி இராமாயணம்பற்றி இந்தி மொழி பெயர்ப்பு நூலுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்ததை எதிர்த்து, வெளியீட்டாளர் தொடர்ந்த வழக்கில் (1976 இல்) அத்தடை செல்லாது என்றும், இராமாயணங்கள் பல உள்ள நிலையில், தந்தை பெரியார் அவர்களுடைய மாறுபட்ட சிந்தனை - ஆய்வு தவறு அல்ல; ஆயிரம் எண்ணங்கள் மலரட்டும் என்று ஒரு தீர்ப்பு வழங்கினார் (அதை மற்ற சட்ட ஊடகங்கள் - Law Reports
இல் பதிவு செய்யாது இருட்டடித்தனர்).

சுதந்திரம் நள்ளிரவில் - ஆகஸ்டு 15 அன்று நடுநிசியில் பதவியேற்றது ஜோதிடர் குறித்தது என்று கூறி, மூட நம்பிக்கையோடு இந்த நாட்டின் சுதந்திரம் பிறந்தது; இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து திராவிடர் கழகம் போன்ற சமூக அமைப்புகள் தொடர் பிரச்சாரம் செய்வது பாராட்டத்தகுந்தது என்று சில கட்டுரைகளில் எழுதி, அது மதச்சார்பின்மை தலைப்பில் வெளிவந்துள்ளது.

அத்தகைய சமூகநீதிப் பார்வையுள்ள முற்போக்குச் சிந்தனையாளர் மறைவு சட்ட உலகத்திற்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காகப் போராடும் உலகினருக்கும் மிகப்பெரும் இழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



5.12.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/92396.html#ixzz3L25C8BrX

தமிழ் ஓவியா said...

அறிவுச்செல்வி.... அன்புச்செல்வன்...


அண்மையில் சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தன் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட, தலைவரும் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். உடனே அங்கு அமர்ந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்களிட-மிருந்து பலத்த கரவொலி எழுந்தது. அருகில் அமர்ந்திருந்த தோழர் ஒருவர் இந்த மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்குக் காரணம் என்ன என்று வினவினார்.

அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்றும், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்றும், ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்றும் ஏதோ பெண் என்பவள் அறிவு என்பதற்குச் சற்றும் தொடர்பில்லாதவள் போன்றும், அன்பினைத் தருவது மட்டும்தான் அவள் கடமை என்பது போன்றும், ஆண் என்றால் அறிவினைத் தருபவர் என்றும், அன்பு செலுத்துவது என்பது அவனுக்குத் தொடர்-பில்லாத துறை என்பது போன்றுமே சொல்லப்பட்டு வந்த, இன்றும் பெரும்பகுதி மக்களால் எண்ணப்படுதல் காணலாம். பெண்குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயர் சூட்டலின் மூலம் மாற்றியமை பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றி, அவர் சிந்தனைகளி-லிருந்து சிறிதும் பிறழாத திராவிடர் கழகத் தலைவரின் சிந்தனையினைத் தெள்ளத்-தெளிவாகக் காட்டியது.

மேலும், அங்கு நிகழ்ந்த சமூக மாற்றமும், ஊடகங்களும் என்ற கருத்தரங்கத்தில் பல்வேறு ஊடகங்களிலும் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற நம் இளைஞர்கள் கலந்துகொண்டு திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கநிலை, செயல்கள், ஊடகங்களின் புறக்கணிப்பு போன்றவை குறித்து கவலை தெரிவித்து பேசியவற்றிற்குப் பதில் அளிக்கும்விதமாக அவர் உரையில் திராவிடர் கழகம் ஊடகங்களை நம்பி இல்லை. எந்தவொரு ஊடகமும் ஆதரவு தராதபோதும் தனியாக நின்று சமுதாயப் பணிகளை எந்தத் தொய்வும் இல்லாமல் செய்து முடிக்கும் என்று முழங்கியபோது எதிர்ப்பைத் தாண்டி, புறக்கணிப்புகளை மீறி, ஊடக மறைப்புகளைக் கடந்து வளர்ந்த இயக்கம் இது; எல்லாவற்றையும் கடந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்புள்ள இயக்கம் இது. அதைத் தொடர்ந்து செய்வோம் என்று சொன்ன துணிச்சல், தந்தை பெரியாரை நம் கண்முன்னே நிறுத்துவதாக இருந்தது.

- இறைவி

தமிழ் ஓவியா said...

ஆறறிவுப் போர்வாள்!


மாணவர்களை உருவாக்குபவர் ஆசிரியர்!
நீங்களோ பேராசிரியர்களை
உருவாக்கும் ஆசிரியர்!

தன் முதுகெலும்பை
பெரியாரின்
கைத்தடியாய்க் கொண்டவர்!

உடலுக்குள் இருக்கும் உயிர்போல
திடலுக்குள் இருக்கும்
அய்யாவின் கொள்கைக்காகக்
கொடி பிடிப்பவர்!

வெய்யிலிலும், மழையிலும்
தமிழர்களைக் காக்க
பெரியாரின்
கருப்புச் சட்டையில்
குடை பிடிப்பவர்!

சூத்திரனுக்குச் சூரியனாய்
பஞ்சமனுக்குப் பகலவனாய் இருந்து அவன் வீட்டுக்கு
வெளிச்சம் கொடுப்பவர்!

இனத் தொழிலை எதிர்க்கும் இளம் பெரியார்!
அவாளுக்குச் சவால் விடும்
ஆறறிவுப் போர்வாள்!
ஆத்திக நெறிகளை
விரட்டிட வந்த
பகுத்தறிவுப் பறை இசை!
கர்ம வினைகளுக்கு
எதிரான உயர்திணை!
காவித் துணியைப்
போகிக்குக் கொளுத்திய
கருப்பு நெருப்பு!
அம்பேத்கர் ஈன்ற
இடஒதுக்கீட்டுக் குழந்தையை
ஓர் தாயாய் இருந்து
தாலாட்டுபவர்!
எல்லோரும் தாயின்
தொப்புள் கொடியில்தான்
பிறந்தவர்கள்!
நீங்களோ தந்தையின்
தொப்புள் கொடியில்
பிறந்தவர்!
கருவை, காதலை கலைக்கும் மருத்துவர்களிடையே
ஜாதி வெறி எதிர்த்து
நீதி நெறி காக்கும்
உண்மையான மருத்துவர்!
நீங்கள் தான்
சமூகநீதி மருத்துவர்!
வாழ்க பல்லாண்டு!

- வன்னிஅரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்ற +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது வழமை. அதை மாற்றி சி.பி.எஸ்.இ முடிவுகளைத் தள்ளிவைத்து, தமிழக மாணவர்களின் மதிப்பெண்ணை விடக் கூடுதலாக மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இடங்களைப் பறிக்க முனைந்த சதிச் செயலைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் போராடி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய உண்மையை வெளிக்கொணர்ந்து அந்தச் சதியை உடனடியாக முறியடித்தவர் தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

உலகம் இருளில் மூழ்குமா?

- சரவணா ராஜேந்திரன்

அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது. சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியும் என்பதும் நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எல்லா செயற்கைக் கோள்களும் சில வினாடிகள் செயலிழந்துவிடுமாம். இவை போன்ற மூடநம்பிக்கைகள் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளியிட்டு வந்துள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி
"2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்?

கிறித்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வியாபாரத்திற்கு நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 'உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்-படுவார்கள்' என்பது கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவினரது நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக்கதையை விட்டு மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்குக் காரணம் என நாசா கூறிவிட்டது என்ற அறிவியல் கதையை விட்டுக் குழப்பியுள்ளார்கள்.

எப்போதும் போல் இது போன்ற மடமைத்தனமான செய்திகள் மேலும் பரவிவிடாமல் இருக்க நாசா முன்-னெச்சரிக்கை-யாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாள்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்-கதைகள் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், உலகம் பாதி நாள் இருளிலும் பாதி. நாள் பகலிலும் உள்ளது.

இருளை மனித இனம் விளக்குகளின் வெளிச்சத்தில் வென்றுவிட்டது. தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி மின்சாரம் தடைபட்டால்தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு-மல்ல, எந்த ஒரு இயற்கைக் காரணத்தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தடைசெய்ய முடியாது. பருவநிலை மாற்றங்களான மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது அந்த அந்தப்பகுதியில் மாத்திரமே நிகழும். அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் அதீத அறிவியல் வளர்ச்சி பெற்று முன்னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது. மேலும், அந்தப் பொய்யான இணைய-தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின்புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை.

சூரியப்புயல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்புவரை வந்து செல்கிறது. இதை, புவியின் மேலடுக்கில் உள்ள வளிமண்டலம் தடுத்து மீண்டும் வானவெளிக்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையைப் பரப்ப நினைக்கும் மதவாதிகளும், இதைக் கடவுள் வந்து சொன்னார் என்று சொல்வதில்லை. உலகம் இருளில் மூழ்கும் என்று கடவுள் சொன்னதாகச் செய்தி பரப்பினால், கக்கத்தில் கைவைத்து கேலிச் சிரிப்பே பரிசாகக் கிடைக்குமென்பதால் அறிவியல் மய்யமான நாசாவைப் பயன்படுத்துகிறார்கள் நாசக்கார மதவாதிகள். ஆனால் பொய்கள் பரவும் வேகத்தில் நாசாவின் உண்மை பரவுவ-தில்லை. ஊடகங்களும் பொய்க்குத் தரும் முக்கியத்துவத்தை உண்மைக்குத் தருவதில்லை.

தமிழ் ஓவியா said...

கருஞ்சட்டை தபால்காரர்


பகுத்தறிவு பரப்பும்
தொடர் ஓட்டத்தில்...
அய்யாவும் அம்மாவும்
ஏந்திய சுடர்
இப்போது ஆசிரியர் கையில்! இச் சுடரோடு
வெகுகாலம் தொடர்கிறது
இவரின்
ஓய்வற்ற பயணம்! ஆரிய நரிகளின்
ஆதிக்க ஊளைகளுக்கு...
அவ்வப்போது இருக்கும்
இவரின் பதிலடி!
அவையத்தனையும் தடாலடி! ** **
வயது ஏற ஏற
இவரின் சுறுசுறுப்பு
ஏறிக் கொண்டேயிருக்கிறது
உடலியல் இயல்பின் விதிவிலக்காய்! புத்தக வாசிப்பும்
மானுட நேசிப்பும்
வைத்திருக்கிறது இவரை
இன்னும் இளமையாய்! ** **
இன்று தஞ்சை
நாளை மராட்டியம்
நாளை மறுநாள் மலேசியா
ஒளியின் வேகத்தை விஞ்சும்
இவரின் தொடர் பயணங்கள்! ** **
மேடையிலே
இவர் முழங்குகையில்
நாகரிகம் தங்கியிருக்கும்
ஆதாரம் பொங்கியிருக்கும்! ** **
அய்யாவின் சிந்தனைகளை
அகிலம் எங்கும்
கொண்டு சேர்க்கும்
கருஞ்சட்டை தபால்காரர் சொந்தபுத்தி தேவையில்லை
அய்யா தந்தபுத்தி போதுமென
சுய அடையாளம் தேடாத
கடலூர் கருப்பு மெழுகுவர்த்தி சரி, யாரை ஏற்பது
பெரியாருக்குப் பின் என
வாடிக் கிடந்தவர்க்கு - காலம்
தேடித் தந்தது சரியாரை!

பெரியாரைக் கண்டிராத
என் வயதொத்தோர்
காண்கிறோம் இவர் உருவில்
தாடி- தடியற்ற பெரியாரை!

- பாசு ஓவியச்செல்வன்

தமிழ் ஓவியா said...

கருத்து


பாதிக்கப்பட்டவர்கள் அய்.நா.விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதை இலங்கை அரசு தடுக்கிறது. விசாரணையைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் எதற்காக விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டும்.

- சையத் அல் ஹுசைன், தலைவர், அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில்

உயர் வகுப்பினர் எல்லோருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங்குடியினர் மற்றும் தலித்களும்-தான் மண்ணின் மைந்தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றுவார்கள்.

- ஜிதன்ராம் மாஞ்சி, முதல் அமைச்சர், பிகார்

குரல் ஓட்டு மூலம் நம்பிக்கை ஓட்டில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்-பட்டுள்ளதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ. அரசு நசுக்கியுள்ளது. சட்ட-விதிகளின்படியும் ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.

- ஏக்நாத் ஷிண்டே, எதிர்கட்சித் தலைவர், சிவசேனா

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் விதமாக அவரைக் கொலை செய்கிறார். அதற்கு ஈடாக அரசு அவரை மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது ஆபத்தானது மட்டுமல்ல; அது எந்த வகையிலும் அறிவுப்பூர்வமானது அல்ல. மரண தண்டனை என்பது அடிப்படையிலேயே தவறான கருத்தியலாகும்.

- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்

தமிழ் ஓவியா said...



டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :

“பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே!

அய்யாவின் கொள்கைகளை
அடுத்த தலைமுறைக்கும்
அப்படியே கொண்டுசெல்லும்
அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;
அவரது தத்துவப் பிள்ளை நீ!

உன் கையளவு இதயத்தில்
உலகளவு விரியும்;
வழியும் சிந்தனையால்
விழிமூட மறக்கின்றோம்!
தத்துவம் முகிழ்க்கும்
புத்தாக்கப் புதுஉலகில்...

அறிவியல் கண்காட்சி
ஆய்வரங்கம்
கோளரங்கம்
மெழுகுச் சிலையரங்கம்
மாநாட்டு மண்டபம்
மழலையர் பூங்கா

மண்ணில் மனிதம் தழைக்க
தன்னையழித்துக் கொண்ட
தலைவனின் இணையில்லாப் புகழை
இளைய தலைமுறையும்
இன்புற்றுக் காணவேண்டி
உலகமகா புருஷரின்
உன்னத வாழ்க்கையை
ஒலி-ஒளி காட்சியாய்
அகலத்திரையில் விரியும் மாட்சி!

சிந்துச் சமவெளியின்
சிம்மாசனமாயிருந்த
திராவிடத் தமிழினத்தை
பெரியாருக்கு முன் -
பெரியாருக்குப் பின் என
வகைப்படுத்தும்
வண்ணமிகு
எண்ணக் குவியல்கள்!

வேடந்தாங்கல் பறவையாய்
வந்து குவியும்
வெளிநாட்டுப் பயணியரின்
சிந்தையைக் குளிர்விக்கும்
சங்கதிகள் நிறைந்திருக்கும்!
நிறைகுடமாய் உந்தனுழைப்பும்
உறைந்திருக்கும்; கலந்திருக்கும்!

விழிமலரின் பாவைகளை
விரியவைக்கும் பிரமிப்பு!
குருதியின் உயிரணுக்களை
உசுப்பிவிடும் பரவசம்!
இப்படியொரு அதிசயமா?
இதுவும் சாத்தியமா!
எப்படி முடியும் - இது
யாரால் நடக்கும்!

வெண்மேகங்கள் விளையாடும்
வானத்தைத் தொட்டுவிடும்
பிரமாண்டத்தின் எல்லையாய்
புத்தருக்கும், ஏசுவுக்கும்
பேருருவச் சிலைகளைப் படைத்து
புகழேணியின் உச்சியில்
அரச குடும்பத்தினரும்; ஆட்சியாளர்களும்
அயல்நாட்டில்!

மரபுவழி ஆட்சிகளே - இந்த
மண்ணை ஆண்டுவந்தும் - தமிழ்
மண்ணை மணந்த
மணாளரின் மாப்புகழை
விண்ணும் மண்ணுமாய்
நீடித்து நிலைத்திருக்க;
நிலையான நினைவுபோற்ற
மனமில்லையோ மார்க்கம் தேட!

சாமானியன் உன் கரம்பட்டே
சாசுவதமாகப் போவுது
பெரியார் புது உலகம்
உருபெற்று; மாசுமருவற்று!
சாதனைச் சரிதம் காணும்
வரலாறாய் மாறினாய்!
மாரிக்காலத்து
மழைமேகமாய் நீ ஆனாய்!

அய்யாவின் மண்டைச் சுரப்பை
அகிலம் தொழச் செய்யும்
உந்தன் மண்டைச் சுரப்பால்
உலகத் தமிழரெல்லாம்
உன்னிடம் புகலிடம்!

எண்ணியதை எண்ணியாங்கு
திண்ணியமாய் செய்துமுடிக்கும்
தேனீயொத்த தொண்டர்களைத்
தன்னகத்தே கொண்டவரே!
செவ்வாயில் கால்பதித்தாலும்
அய்யாவைப் பரப்பத்தான்
செல்வாய் நீ!

நாளைய உலகின்
வரலாறு சொல்லும்
பொன்னேட்டில்
உன் பெயரும்
வைரமாய் மின்னும்!
இப்புவியில் பெரியார் புகழ்
இருக்கும் மட்டும்
இணைந்து நீயும்
இறவாமல் இருந்திடுவாய்!

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

ராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...


1. 1944 - திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அண்ணாவின் பாராட்டு.

2. 1950 - இளம் பேச்சாளி பொதுமக்கள் பாராட்டு.

3. 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி என்ற தந்தை பெரியார் பாராட்டு.

4. 1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் இனமானப் போராளி பட்டம் அளிக்கப்பட்டது.

5. 1996 - தந்தை பெரியார் சமூக நீதி விருது தமிழக அரசு (ஜெ.ஜெயலலிதா) வழங்கியது.

6. 2000 - புதுதில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் பாரத் ஜோதி விருது வழங்கியது.

7. 2003 - மியான்மரில் பேரளிவாளர் விருது வழங்கியது.

8. 2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், ஆக்சுபோர்டு தமிழ் விருது வழங்கி பாராட்டியது.

9. 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பெரியார் ஒளி விருது.

10. 2010 - கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டது.

11. 2011 - ஆந்திர மாநிலத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கப்பட்டது.

12. சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

13. 2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

14. மலேசிய திராவிடர் கழகம் கருத்துக்கனல் என்ற பட்டத்தை வழங்கியது.

15. 2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கியது.

16. 2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?
வீரமணி

தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியை முழுமையாக வழிநடத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரியக் கலாச்சாரப் போர்வையில் அரசியல் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் ஆவார்கள்.

அவர்களது கொள்கையைத் திணித்து, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் என்ற தத்துவங்களை கரையான்கள் எப்படிப் புகுந்து அமைதியாகவே புத்தகங்களை அரித்துத் தின்று விடுகின்றவோ அதேபோல், பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புல்லட் ரயில் வேகத்தில் செய்துவிட ஆங்காங்கே முக்கியப் பதவிகளில் எல்லாம் அமைச்சரவை தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். மயமாகி அதன்மூலம் பச்சையாக ஹிந்துத்துவாவை ஆட்சிப் பீடமேற்றிட ஆலாய்ப் பறக்கின்றனர்!

ஹிந்துத்வா என்பதை உருவாக்கிய வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமான கோல்வால்கர் போன்றவர்களின் தத்துவங்களை ஆட்சியின்மூலம் அமலாக்கிட அதிவேக அவசரம் காட்டுகின்றனர்.

அதற்கான முன்னேற்பாடாக, முக்கிய அறிவியல், வரலாறு, கல்வி போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொணர்ந்து அமர்த்தி, அதை நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கின்றனர்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பிற்கு வி.சுதர்சனராவ் என்ற ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்து அவர் புராணங்கள், இதிகாசங்கள் இவைகளை, வரலாறுகளாக மாற்றிடத் திட்டமிட்டு, பிரச்சார திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களையே புரட்டிப் போட்டு ஹிந்துத்வாவின் கையேடுகளாக்கிட முனைப்புடன் செயலாற்றி முனைந்து நிற்கின்றனர்.

நாட்டின் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்றவர்களுக்கு மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திவிட்டு, தமது கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் கூச்சநாச்சமின்றி ஈடுபட்டுள்ளனர்!

ஹிந்துத்துவா கருத்தியலையும் சொல்லையும் உருவாக்கிய வி.டி.சாவர்க்கர் அவரது நூலில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

‘Hinduise Military
Militarise Hindus’

இராணுவத்தை ஹிந்து மயமாக்கு
ஹிந்துக்களை இராணுவமாக்கு
என்பதே அவ்விரு கட்டளைகள். அதுபோலத்தான் இப்போது,
வரலாற்றைக் காவிமயமாக்கு

காவி(இந்து)_புராண இதிகாசங்களை வரலாறாக்கு என்ற முயற்சியோடு முன்பு வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் முயன்றதைத் தொடருகிறார்கள்.

அதிகப் பெரும்பான்மை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குமேல் ஒருபடி சென்று, இப்போது, ஹிந்துத்துவ புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகளை அறிவியலுக்கு முன்னோடி என்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுதர்சன ராவ் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள்வரை கட்டவிழ்த்துவிட்டு நடத்தி வருகின்றனர்.
இராமாயணம் நடந்த கதை என்கிறார்கள்.

மரபணு ஆராய்ச்சி மஹாபாரதத்திலேயே உள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி - (Transplantation) உறுப்பை வெட்டி இணைத்தல் வினாயகர் கதை மூலம் நமது பரமசிவனே செய்துள்ளார்.

ராக்கெட்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானம் _ இராமாயணத்திலேயே உள்ளது என்று கூறி கொயபெல்ஸின் குருநாதர்களாக ஆகியுள்ளன!.

இதை எதிர்த்து கரன் தாப்பர் போன்ற விமர்சகர்கள் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர்.

ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்துக் கூறுகின்றனர்.

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றாளர்களுக்கே அதிக அறிமுகமில்லாத ஆர்.எஸ்.எஸ். நபரான ஆந்திரத்து சுதர்சனராவ் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து, தாப்பர் போன்றோர்மீது மார்க்சிஸ்டுகள் என்று சாயம் பூசுவதோடு, வெள்ளைக்காரர்கள் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறிவிட்டனர். இதனை மாற்றி 'விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ' இந்தியாவின் வரலாறு இதிகாச புராணங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று மனம் போனபடி பேசியுள்ளார். எப்படி இனி செய்யப் போகிறார்கள் என்பதற்கான மணியோசை இது. இதனை அத்தனை முற்போக்கு சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்த பத்தாம் பசலித்தன புதுப்பித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்காங்கு கருத்தரங்கங்களை நடத்திட முன்வர வேண்டும்.

இந்நாட்டு அறிவியலாளர்கள் (Scientists) ஏன் மறுத்து அறிக்கைகள் விடவில்லை என்றுகூட கரன் தாப்பர் போன்றவர்கள் கேட்கின்றனர்.

அதற்கு விடை வெளிப்படையானது. பெரும்பாலான விஞ்ஞானிகள் மத்திய அரசு ஊழியர்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இப்படி அபத்தமான கருத்துகளைக் கூறும்போது அவர்களால் மறுத்துப் பேச முடியாதே; தனியார் துறை விஞ்ஞானிகளும்கூட, பல முதலாளிகளின் அமைப்புகளில் அல்லவா பணிபுரிகிறார்கள்? இவர்கள் அதனால் வாய்மூடி மவுனத்தில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியும் துயரமும்
மகிழ்ச்சியும் துயரமும்

Print
Email

வீரமணி

கேள்வி : தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் திளைத்த தருணம் எது? துயரத்தில் துவண்டுபோன தருணம் எது? - - நா.இராமண்ணா, சென்னை

பதில்: மகிழ்ச்சியில் திளைத்த நேரம். அறக்கட்டளை என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை, வருமான வரித்துறை டிரிபியூனல் அறிவித்து, 80 லட்ச ரூபாய் அறியா வரியைத் தள்ளுபடி செய்து அறிவித்ததைக் கேட்ட-போது.

துன்பம், நம் அய்யா - அம்மா மறைவின்போது.

தமிழ் ஓவியா said...

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14. நான் பொய் சொல்லமாட்டேன்.

15. நான் திருட மாட்டேன்.

16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

- “விடுதலை” 16-2-2012

தமிழ் ஓவியா said...

இந்த நினைவு நாளில்...

அண்ணல் அம்பேத்கர் பிம்பமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்!

சமூகப் புரட்சியா ளரும், தலைசிறந்த சிந்தனையாளருமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. வரலாற்றுச் சுவடான இந்த நாளைத்தான். சங்பரிவாரக் கும்பல், 450 ஆண்டு பழைமை வாய்ந்த பாபர் மசூதியை, இராமன் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டலாமா? என்று பொய்யுரை புகன்று, அன்றைய மத்திய - மாநில ஆட்சிகளின் கண் ஜாடையோடு, இடித்து, இந்தியாவில் மதக் கலவரத்திற்கு வித்தூன்றினர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த அந்தக் குற்றத்தினைச் செய்தவர்கள் இன்றும் மார்தட்டி நிற்கின்றனர். சட்டம் ஊமையாக, ஆமையாக உள்ளது!

எத்தனையோ கமிஷன்களும், வழக்குகளும் மவுன ராகங்கள் வாசிக்கின்றன! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அறிவுரைகள் ஒரு புறம் - இந்த லட்சணத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை (டிச.6) அவர்கள் தேர்வு செய்ததே, அவரின் நினைவை திசை திருப்பவே.

இன்றோ அதே கூட்டம் அம்பேத்கரையும் முகத்திரையாக வாக்கு அறுவடைக்குப் பயன்படுத்த திட்டமிடுகின்றனர்!

இந்துமதம்தான் ஜாதி - தீண்டாமையின் ஊற்று - பாதுகாவல் அரண் என்ற அவரது கருத்துக்கு நேர் எதிரானவர்கள் அவரைத் தங்கள் முகபடாமாக அணிந்து பவனி வந்து அப்பாவி தாழ்த்தப்பட்டோரை ஏமாற்றிட முயலுகின்றனர்!

சில இளைஞர்களை - அவர்தம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பசப்பு மொழிகளால் ஈர்க்க முயலும் கொடுமை, பக்தி மயக்க மருந்து மூலம் நடைபெறுகிறது.

ஒடுக்கப்பட்டோர் உரிமை அமைப்புகள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய முக்கிய தருணம் இது!

இராமனையும், கிருஷ்ணனையும், மனு தர்மத்தையும், ஏற்காதவர் அம்பேத்கர்.

அவரை வெறும் படமாக்கி - பிம்பமாக்கி - பெருத்தமாலைகள் சிலைகளின் முகத்தை மறைப்பது போல், அணிவித்து, போலிப் பாராட்டுகளால் அவரது கொள்கையை மறைத்து அழித்து விட முயலு கிறார்கள்!

அண்ணல் அம்பேத்கர் வெறும் சிலை அல்ல. சீலத்தைத் தந்தவர் அவர் பிம்பமல்ல - பின்பற்றப்பட வேண்டியவர்!

மறவாதீர்!


சென்னை
6-12-2014

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/92474.html#ixzz3L83SUfgU

தமிழ் ஓவியா said...

பிஜேபியின் ஒழுக்கம் - பாரீர்!


டில்லியில் ஆளப் போவது ராமன் மகனா - முறை கேடாகப் பிறந்தவரின் மகனா?

என்று பேசிய மத்திய பிஜேபி அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிபுள்ள நிலையில், அந்த மத்திய அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் - அவர் பிரச்சாரத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இட மில்லை என்று பிஜேபி அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.

இதன் பொருள் என்ன? இதைவிட மோசமாகப் பேசுக என்று தூண்டி விடுவதுதானே! இது தான் பிஜேபியின் ஒழுக்கமா!

Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L83tonzA

தமிழ் ஓவியா said...

மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும், தலைப்பு எழுத்து களிலும் எழுத வேண் டும் என்று மருத்துவர் களுக்கு உத்தரவிடும் வகையில், இந்திய மருத் துவக் கவுன்சில் விதி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L846iYY6

தமிழ் ஓவியா said...

சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கிய னாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

(விடுதலை, 11.11.1968)

Read more: http://viduthalai.in/page-2/92465.html#ixzz3L877F5gM

தமிழ் ஓவியா said...

பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர் 6


அண்மையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலை வரும், பால் தாக்கரேயின் தம்பியின் மகனுமான ராஜ்தாக் கரேயின் மகள் ஊர்வசி தாக்கரே, தனது டிவிட்டரில் பாபாசாகிப் அம்பேத்கரைச் சிறுமைபடுத்தி, கருத்து தெரிவித்திருந்தார்.

தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பங்கி அதாவது தோட்டி சமுதாயத்தைச் சேர்ந்த அம்பேத்கருக்கு நினைவகம் இருக்கும்போது, பால் தாக்கரே போன்ற மிகப்பெரிய தலைவருக்கு ஏன் நினைவகம் அமைக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.

இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத் கரை, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரை, பொருளாதாரத் துறையில் எனது தந்தை என நோபல் பரிசு பெற்ற அமர்தயா சென்னால் போற்றப்பட்ட அம்பேத்கரை, பழமைவாதிகளான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் பேச்சைக் கேட்டு, இந்து சட்ட திருத்த மசோதாவை அம்பேத்கர் விரும்பியபடி கொண்டு வர மறுத்த நேரு அமைச்சரவையிலிருந்து கொள்கைக்காக விலகிய அம்பேத்கரை, 1935இ-ல் உருவான ரிசர்வ் வங்கி அமைவதற்கு காரணமான அம்பேத்காரை, தாமோதர் பள்ளத்தாக்கு, ஹிராகுட் திட்டம் அமைவதற்கு அடித்தளம் இட்ட அம்பேத்காரை, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேர வேலை என மாற்றப் படுவதற்குக் காரணமான அம்பேத்கரை விட, மக்களிடையே மத வெறியைத் தூண்டி அரசியல் செய்த பால் தாக்கரே சிறந்த தலைவர் என மராட் டியத்தில் இன்று கூற முடிகிறது என்றால், மதவெறி ஆட்சிகள் அமைந்தது தானே காரணம்.

ஆனால், அம்பேத்கர் மறைவு குறித்து, தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கரின் சிறப்புகளை எவ்விதம் கூறியுள்ளார் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரின் அறிக்கை 8.12.1956-இல் விடுதலையில் வெளியானது. அந்த அறிக்கையில், இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளாமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.

உண்மையில் சொல்ல வேண்டு மானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங் கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத்தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்த தோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.

இந்துமதம் என்பதான ஆரிய ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சி யமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார்.

உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுண ரும், சீர்திருத்தப் புரட்சிவீரருமான டாக்டர் அம் பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும். அண்ணல் அம்பேத்கரின் மறைவு நாளில், பெரியார் சுட்டிக்காட்டியபடி, பாசிச இந்துக் கும்பல் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களை நெஞ்சில் ஏந்தி போராட உறுதி ஏற்போம்.

-_-குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-3/92439.html#ixzz3L87JBL51

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை


மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து

பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணே 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்ட மில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ள வர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87d8bd1

தமிழ் ஓவியா said...

"என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடையவேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுயநலம் என்ன?"

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87r6xWj

தமிழ் ஓவியா said...

யார் செயல்? யாருக்கு நன்றி!

காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாசிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண்திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூட நம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

தென்னாட்டுக் காந்தி எனக் காங்கிர கூலிகளால் கொண்டாடப்படும் திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் அவர் களைப் பற்றி நாம் ஒன்றும் அதிககமாகக் கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாசிரம தருமவாதியாகிய கடவுள் பக்தர் ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பை யையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத்துணியையும் சுமந்து கொண்டு போவதைப்போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும் புராணங்களைப்பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரச்சாரத்துடன் கூடவே கடவுள் பிரச்சாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம்மாதிரியே பிரச்சாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு:-

நாளது டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றையதினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். அன்று மாலை ஜாதி, மத கட்சி பேதங்கள் எல்லா வற்றையும் மறந்து, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தில் கூட வேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்யவேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் தேசியக்கொடி பறக்க விடண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். (இந்தியா) என்பது அவ்வறிக்கையாகும். இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, திரு. காந்தியவர்கள் பிரயாணஞ் செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ் செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங்களைச் செய்து விட்டார். இதற்காக ஆண்டவன் என்பவனுக்கு நன்றியும் பிரார்த்தனையும் செய்வது ஒன்று, தேசியக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாகும்.

தமிழ் ஓவியா said...

உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக்காரணம் ஆட்டுப்பாலும் பேரீச் சம்பழங்களும், நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக்கெனத் தனியாகப் பாதுகாப்புக் கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.

இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப்பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக்காரணம் ரயில், கப்பல், மோட்டார் முதலியவைகளேயாகும்.

ஆகவே திரு. காந்தி அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்த வேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார் போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார் ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப்பால் சப்ளை செய்த ஆடுகளுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக்கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும், இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசியக்கொடி பறக்கவிடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுகவைக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

தேசியக்கொடி பறக்கவிடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கி யிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். சொந்த வீடுகளில் தேசியக்கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்று மைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக்கூடும் என்பதும் நிச்சயம்.

அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசியக்கொடி பறக்க விடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திரு விழாவாகவும், கொண்டாடப்பட வேண்டுமென்பதும் திரு. ராஜகோபாலாச் சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திருவிழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிர பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக்காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாம லிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92444.html#ixzz3L881Kdrg

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு.

பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/92445.html#ixzz3L88d2hmu

தமிழ் ஓவியா said...

பெரியார் - அண்ணா மண்ணில் மதவாதம் எடுபடாது கோவையில் வைகோ பேச்சு

கோவை, டிச.6_ தந்தை பெரியார் _அறிஞர் அண்ணா மண்ணில் உங்கள் மத வாதம் செல்லாது என்று ஆவேசமாக பேசினார் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ.
மதிமுக சார்பில் பினாங்கு (மலேசியா) பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம் கோவை, பீளமேடு புதூரில் 2.12.2014 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் போது இலங்கையில் நடை பெறவிருக்கிற அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

120 கோடி இந்திய மக்களின் பிரதிநிதி ஒரு இனப்படுகொலையாள னுக்கு வாழ்த்துத் தெரி விப்பதா? என்று கண்டனம் தெரிவித்தேன். பிரதமர் பதவியையே தாழ்த்தி விட்டீர்கள் என்று சொன் னேன்.

எதற்கு வாழ்த்து? தமிழின அழிப்பை வேக மாக செய்வதற்கா? தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்க வா? கோயில்களை இடிக் கவா? தமிழர்களின் நிலங் களைப் பறிக்கவா? நெஞ்சம் கொதித்துத்தான் பேசு கிறேன். பெயரைச் சொன் னால் ஒருமையா?

தூசிக்குச் சமமானவர் களுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். நான் மதயானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து அடிப்பவன். பாரத ரத்னா விருது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு வழங்கப் பட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சுப்பிரமணியசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்கள் நாளை, காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்கச் சொல்வார்கள். இது நாதி இல்லா நாடா? தமிழர்களுக்கு நாதி இல் லையா?

நான் இரண்டு நாட்டு ராணுவத்துக்குள் போய் வந்தவன்! என்னை வீட்டுக்கு திரும்ப முடியாது என்று சொல்வதா? இதைக் கட்சி மாச்சரியங் களுக்கு அப்பாற்பட்டு கண்டித்த வர்களுக்கு நன்றி! நன்றி! இவன் தமிழினத்திற்கு தேவை என்று நினைக்கும் அளவுக்கு நான் தலைவர் களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்.ன் கொள் கைகள் அடங்கிய புராணப் பாடத்திட்டத்தை குஜராத் தில் கொண்டு வந்துவிட் டார்கள். இந்தியாவின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த ஆக்டோ பஸ் முயற்சிதான் பெரியார், அறிஞர் அண்ணா மண் ணான தமிழ்நாட்டில் நடக்காது.

கூட்டுக் குற்றவாளிகள்

ராஜபக்சேவுடன் உறவு கொள்ளும் ஏற்பாடு எதற்கு எதிர்காலத்தில் நீங்களும் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக மாறப்போகிறீர்களா? மோடி அவர்களே நட வடிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.

இலட்சியத்தைக் காக்க வாருங்கள் என்று இளை ஞர்களை அழைப்பேன். உலக மக்களிடையே பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தனி ஈழ ஆதரவைத் திரட்டுவேன். ஈழப்பிரச் சனையில் நியாயம் நம்மிடம் இருக்கிறது. பொது வாக் கெடுப்பை யாரும் கூடாது என்று சொல்ல முடியாது. இளைஞர்களே சிந்தி யுங்கள்! மாணவர்களே சிந்தியுங்கள்! என்று பேசிய தோடு, பினாங்கில் தான் கலந்து கொண்ட கூட்டத் தின் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-7/92446.html#ixzz3L88kFp3p

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் வாழிய நீடு!


அய்யா அடிச்சுவடே ஆயுளுக்கும் நெஞ்சினிலே
பொய்யா அரிச்சுவடி என்றிட்டீர்! - மெய்ம்மை
வகுத்த நெறிகளை வாழ்விக்க வந்த
பகுத்தறிவே! வாழிய நீடு!
திருவள் ளுவரின் குறள்போல் புவியில்
பெரியார் குரலாய் ஒலித்தீர் - வரிப்புலியுன்
வேட்டையில் வீழும் விலங்காய் மடமையிருள்
ஓட்டிடவே வாழிய நீடு!
சுமையாம் மடத்தைச் சுடும்நின் அறிவே;
இமய மனமும் இறங்கும் - உமதாம்
அறிவுச் சுரங்கத்தை ஆளுகின்ற தந்தை
பெரியார் ஒளிவாழி நீடு!
மண்ணையும் மண்ணின் மொழியையும் காத்திடும்
திண்தோள் தமிழர் தலைவரே! - கண்ணை
இமையெனக் காக்கும் இனமானச் சிங்கத்
தமிழுணர்வே! வாழிய நீடு!
அறிவுலக மேதை பெரியார் தமக்குப்
பெரியார் உலகமொன்று கண்டீர்! - நிறைநிலா
மண்வந் திறங்கி மதிஒளி தந்து வாழ்த்தும்
நின்பெயர் நிற்கும் நிலைத்து

Read more: http://viduthalai.in/page3/92418.html#ixzz3L8A1BvLC

தமிழ் ஓவியா said...

புராணம் என்றால் புருடா என்று பொருள்


860,00,00,000 (860 கோடி) ஆண்டு களுக்கு ஒரு முறை எந்த நோக்கத் திற்காக பகவான் சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்கு சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக, பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்த செய்தி, பகவத் கீதை உண்மை யுருவில் என்ற; பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ் கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது. சத்ய யுகம் 172800ஆண்டுகள் திரேதாயுகம் 1296000ஆண்டுகள் துவாபரயுகம் 864000ஆண்டுகள் கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860 கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படி சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?!

- க.அருள்மொழி குடியாத்தம்

Read more: http://viduthalai.in/page3/92419.html#ixzz3L8A9fihR

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்

குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காம ராஜ்தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல் கின்றான். அவன்தான் அதிலே தீவிர மாக இருக்கின்றான் என்று நினை கின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக் கின்றான். ஆனால் நான் இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்....

- 11.12.1966 சேலம் பேருரையிலிருந்து நவசக்தி - 15.12.1966

Read more: http://viduthalai.in/page3/92420.html#ixzz3L8AJ2BSt