Search This Blog

18.12.14

கீதையை பொது நூலாகக்கூட ஏற்க இயலாது- ஏன்?

கீதையை பொது நூலாகக்கூட ஏன் ஏற்க இயலாது?



கீதை யுத்த களத்தில் போதிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது; மீண்டும் மீண்டும் யுத்தம் செய்யவே அறைகூவல் விடு கிறது. எனவே யுத்தத்தை நியாயப் படுத்தும் நூலை; வன்முறையை நியாயப் படுத்தும் நூலை பொது நூலாக எப்படி ஏற்க முடியும்?

பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என பாஜக அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார். ஆட்டு விக்கும் ஆர்.எஸ்.எஸ் கட்டளைப் படியே அவர் பேசியிருப்பார்.பகவத் கீதை மட்டுமல்ல வேறெந்த மத நூலா யினும் அதனை படிப்பதில் தப்பில்லை. இந்நூல்களை மட்டுமல்ல வேறெந்த நூலையும் தடை செய்யவேண்டும் என் பதில் எமக்கு உடன்பாடில்லை. மத நம்பிக்கையில் மூழ்கியவர்கள் அந்த நூலைப் படிப்பது அவர்களின் தனி உரிமை.


அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது, கூடாது. அதே சமயம் அந் நூலை எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதையும் ஏற்க இயலாது. தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? தேசியம் என்பதை இவர்கள் எப்படி வரையறுக்கிறார்கள்? நமது அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? கீதை தொடர்பான கதைகளின் நம்பகத் தன்மை யாது? கீதையை ஏன் எதிர்க்கி றோம்? இப்படி அடுக்கடுக்காய் கேள்வி கள் எழுகின்றன.


முதலாவதாக இந்தியா ஒரு நாடல்ல உபகண்டம். பல மொழி, பல இனம், பலமதம், என வேற்றுமை கள் பல; ஆயினும் வேற்றுமையில் ஒற் றுமை என்பதே இதன் சிறப்பு. எனவே தான் இந்திய அரசியல் சட்டம் இந்திய ஒன்றியம் (ஹிஸீவீஷீஸீ ஷீயீ மிஸீபீவீணீ) என்றே வரையறை செய்தது.
நாட்டால் இந்தியர் எனப்பட்டாலும் மொழியால் தனித்தனி மாநிலங்கள் உரு வானது. சங்பரிவார் இந்த பன்மையை மறுதலித்து ஏக இந்தியா என ஒற்றை பண்பாட்டு ஆதிக்க மனோநிலையோடு செயல்படுகிறது. அவர்கள் குறிக் கோளும் அதுவே. இந்தி - இந்து -இந்தியா என்பதே அவர்களின் இலக்கு. அதை நோக்கிகாய் நகர்த்தலின் ஒருபடியே இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பும் பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்பதும்இன்ன பிற மதவெறி முழக்கங்களும். இவை குறித்து பிறகு விரிவாகப்பேசலாம். முதலில் பகவத் கீதையை எல்லோருக் கும் பொதுவான நூலென்றாவது சொல்ல இயலுமா? வர்ணாஸ்ரமத்தை பாதுகாக்கும் நூலை - பெண்களை இழிவு செய்யும் நூலை அறிவியலுக்கு பொருந்தா நூலை - வன்முறைக்கு தூபம் போடும் நூலை எப்படி எல்லோ ரும் ஏற்க முடியும் என்பதே கேள்வி. கீதை குறித்து தத்துவ ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் அலச முடியும்.


தேவையும்கூட; ஆயினும் கட்டுரை யின் எல்லையை இப்போது இங்கே சொன்ன நாலு அம்சத்தோடு நிறுத்திக் கொள்வோம். கீதை குறித்த புராணப் பொய்மைகளையும் கிருஷ்ணன் குறித்த ஆபாச புனைவுகளையும் இப் போது நாம் கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறோம். ஏனெனில் ஆய் வாளர்கள் எஸ்.சி.சர்தேசாயும், திலிப் போசும் குறிப்பிடுகிறார்கள், கீதை எனும் சங்கை யார் ஊதியிருந்தாலும் அவர் தான் கிருஷ்ணன். அந்தப் பாடப் பொருளை அறிவியல் பூர்வமாக ஆய்ந்திட அதுபோதுமானது இதனை கருத்தில் கொண்டு நேரடியாக விஷ யத்துக்கு சென்று விடுவோம். சதுர் வர்ணம் மயாசிருஷ்டம் அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் எனச் சொல்லும் கீதை சாதியத்தை தாங்கிப்பிடிக்கும் நூல் என்பதே நமது முதல் குற்றச்சாட்டு குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நானே நான்கு வர்ணங்களைச் சமைத் தேன். செய்கையற்றவனும் அழிவற்ற வனுமான யானே அவற்றைச் செய் தேன் கீதை 4.13 -இங்கு மேற்கோள் காட்டப்படும் அனைத்து கீதை சுலோ கங்களும் பாரதியார் மொழி பெயர்ப்பு மேலே உள்ள சுலோகத்தை மேற் கோள்காட்டி நாலு வர்ணம் குணம் என்பது சாதி அடிப்படையில் பிரிக்கப் படவில்லை. மாறாதது இல்லை. ஒவ் வொருவருடைய குணம், செய்கை இவற்றினையொட்டியே அமையும் என்று தற்போது இந்துத்வாவாதிகள் வாதிடுகின்றனர். இது வடிகட்டிய பொய் என்பதை கீதையை முழுதாக ஊன்றிப் படித்தால் உணரலாம். பரந்தாமா! பிரா மணர், ஷத்திரியர், வைசியர் இவர் களுடைய தொழில்கள் அவரவர் இயல் பில் விளையும் குணங்களின் படியும் வகுப்புற்றனவாம் (கீதை 18.41) கீதைக்கு பாஷ்யம் எழுதிய சங்கராச்சாரியார் ப்ரமஹண சத்திரியவிஸாம்என்ற பதத் துடன் சூத்ர என்பதைச் சேர்க்காமல் தனித்து நிறுத்தியிருப்பதன் காரணம் சூத்திரனுக்கு தவிஜத்துவம் (பூணூல்) வேதம் படிக்கும் உரிமையும் இல்லாதது தான் என வியாக்கியானம் செய் துள்ளார்.


அடுத்த சுலோகங்கள் அதை மெய்ப் பிக்கின்றன. நாலு வர்ணத்துக்கும் தனித் தனியே கடமைகளைத் தீர்மானித்தான் கீதாச்சாரியன். சுலோகம் 18.42 இல் பிரா மணனுக்கும் 18.43 இல் சத்திரியனுக்கும் 18.44 இல் வைசியனுக்கும் தனித்தனி யாக கடமைகள் தீர்மானித்த கீதாரியன் 18.45 இல் சூத்திரனுக்கு சொன்னது என்ன தெரியுமா? தொண்டூழியம் புரிதல் சூத்திரனுக்கு அவனியற் கையால் ஏற்பட்ட தொழில் எனக்கூறி ஏனைய நாலு வர்ணத்துக்கும் அடிமையாகவே சூத்திரன் இருக்க வேண்டும் என்கிறது கீதை. அதோடு நிற்கிறதா? பிறர் குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தாலும் நன்று. இயற்கையிலேற் பட்ட தொழிலைச் செய்வதினால் ஒருவன் பாவமடைய மாட்டான் (கீதை 18.47) கேட்டீர்களா கதையை? ஒரு அருந்ததியன் நன்றாக வேதம் ஓதி னாலும் அது நன்றாகாதாம். அவன் மலம் அள்ளு வதை அரைகுறையாய் செய்தாலும் புண்ணியமாம். ஆனால் பிராமணன் தப்பும்தவறுமாக வேதம் ஓதினாலும் புண்ணியமாம். ஆக அவர வர் குலத்தொழிலையே செய்ய வேண் டும் என்பதை மீண்டும் மீண்டும் வலி யுறுத்தும் கீதையை எல்லோரும் எப்படி ஏற்க முடியும்? பார்த்தா! பெண்களோ, வைசியரோ, சூத்திரரோ பாவயோனி யில் பிறந்தவர் யாரானாலும் அவர்கள் என்னை வணங்குவர் ஆயின் பரகதி அடைவர் பாரதியார் மொழி பெயர்ப் பில் பெண்களோ என்ற சொல் இல்லை ஆனால் மூலத்தில் ஸ்திரியோ வைஸ் யாய்ததா சூத்ரா என்ற பதம் உள்ளது. அதாவது பெண்கள், வைசியர்கள், சூத் திரர்கள் அனைவரும் பாபயோனியில் பிறந்தவரென்று சொல்வதை ஏற்க முடியுமா ?


நயத்தகு நாகரிகத்தோடு நெற்றிப் பொட்டில் அறைந்த மாதிரி என் பாட் டாளி வர்க்க கவிஞன் பட்டுக்கோட்டை 1960 ஆம் ஆண்டிலேயே பதில் கொடுத்துள்ளான்; உயிருக்கெல்லாம் ஒரே பாதை, ஒரே வாசல் ஒரே கூடு, ஒரே ஆவிபாரடி கண்ணாத்தா! ஆளுக்கொரு வீடு திரைப்படம் இனி யும் இதற்கு விளக்கம் தேவைப்படுமா? கீதாசிரியன் பெண்களின் விரோதி அல் லாமல் வேறென்னவாம். வேதியியல் அறிவியல் சொல்வதென்ன பி2ளி என்றால் தண்ணீர். அதற்கு சுவை கிடையாது . ஆனால் கீதையில்  ரஸோ ஹமப்ஸூ (கீதை 7.8) என்கிறார்; அதாவது தண்ணீரின் சுவையும் நானே என்கிறார். இது போல் நிலவின் ஒளி என்றும் கூறுகிறார். நட்சத்திரங்கள் குறித்தும் பரிணாமம் குறித்தும் அறி வியலுக்கு எதிராக கீதை பேசுகிறது. இதனை நாம் கீதையின் குற்றமாகப் பார்க்கவில்லை; மாறாக கீதை புனையப் பட்ட காலத்தின் அறிவியல் வளர்ச்சி அவ்வளவுதான் என்றே பார்க்கிறோம்.


அதே சமயம் அறிவியல் வளர்ந் துள்ள இந்த யுகத்தில் கீதையை பொது நூல் என்பதைத்தான் ஏற்க இயலா தென்கிறோம். கீதை யுத்த களத்தில் போதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; மீண்டும் மீண்டும் யுத்தம் செய்யவே அறைகூவல் விடுகிறது. எனவே யுத் தத்தை நியாயப்படுத்தும் நூலை; வன் முறையை நியாயப்படுத்தும் நூலை பொது நூலாக எப்படி ஏற்க முடியும்? இது தொடர்பாக விரிவாக எழுத இங்கு இடம் போதாது. அதுபோல் தத்துவ ரீதியாக இந்நூல் குறித்து விமர்சிக்க மேலும் பல பக்கங்கள்வேண்டும். மேலும் விரிவாக அறிய அலைகள் வெளியீடாக 2004 ல் வெளிவந்த - இந்த கட்டுரை ஆசிரியர் சு.பொ.அகத்திய லிங்கம் எழுதிய  கீதை தரும் மயக்கம் எனும் 64 பக்க நூலைப் படிக்கவும். ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவர் கோல்வால்கர் கூறுகிறார், நமது சமு தாயத்தை மிகவும் தெளிவாக வேறு படுத்திக் காட்டும் இதரப் பிரதானப் பண்புக் கூறுகள் வர்ண விவஸ்தை (சாதி அமைப்பு முறை) ஆனால் இன்று சாதிய வெறி என்று இழிவு படுத்தப்படுகிறது என்கிறார்.


அதாவது சாதியை தாங்கிப் பிடிக்க வக்கணை பேசுகிறார். இவர்கள்சாதிய சமூக அமைப்பைக் கட்டிக்காக் கவே கீதையை தேசிய நூலாக்கத் துடிக் கிறார்கள் என்பதறிக!


--------------------------- சு.பொ.அகத்தியலிங்கம் - நன்றி: தீக்கதிர், 17.12.2014

51 comments:

தமிழ் ஓவியா said...

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பெண்கள் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஆளுமைக்கும் துணை புரியும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கலைப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி யிருப்பது - கண்டிக்கத்தக்கது; பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்பது வீட்டில் வெறும் இல்லத்தரசிகளாகவும், குறைந்த நேரத்தில் சமையல் மற்றும் பணிகளைக் குடும் பத்திற்காக செய்துவிட்டு, பெரிதும் தொலைக் காட்சியில் தமது நேரத்தைச் செலவிடும் நிலையில், வசதியற்ற ஏழை, எளிய பெண்கள் - விதவைகள் மற்றும் ஆதரவு இழந்த மகளிர் - இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை யையும், தன்னிறைவு உணர்வையும், பொருளா தார மேம்பாட்டு வசதியையும், ஆளுமையையும் ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் தற்சார்புத் தன்மையையும் உண்டாக்கி, மிகவும் நிம்மதியாக மகளிர் தங்கள் வாழ்க்கையை நடத்திட வழங்கப் பட்ட அருமையான வாய்ப்பு இது!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை!

இது தி.மு.க. ஆட்சிக் காலத்தில், குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தபோது, கிரா மங்களில் உள்ள தாய்மார்கள், மகளிர் புத்தாக்கம் பெற பரவலாக ஏற்பட்ட, பயன்பெற்ற திட்டமாகும்!

இதிலும் எப்படியோ அரசியல் கண் ணோட்டம் புகுந்து, வளர்ந்துள்ள பயிர்களில் பூச்சிகள் நுழைந்ததைப்போல, முன்பே அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்தினர்; என்றாலும், அது வலிமையாக செயல்படாவிட்டாலும், தொடரவே செய்தது; பிறகு இதை அதிமுகவினர் செல்வாக்குச் சாய லுடன் இயங்கும் ஒன்றாக மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது.

இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நமது மகளிரின் ஆளுமைத் திறன் - புதைந்து கிடந்தது வெளிப்பட ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மகளிர் சுயஉதவிக் குழு அமைந்து, பல கிராமங் களில் ஒருவகை மறுமலர்ச்சி மகளிர் மத்தியில் ஏற்படவும் செய்தது!

குண்டைத் தூக்கிப் போடும் மேனகா!

இதற்கு வேட்டு வைப்பதுபோல மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள், சுயஉதவிக் குழுக்கள் கலைக்கப்படும் என்று நேற்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்!

மகளிர் முன்னேற்றப் பார்வை சிறிதுமின்றி, மேட்டுக்குடியில் வளர்ந்துள்ள சூழலில், அம்மையாருக்கு என்ன கோபமோ சுயஉதவிக் குழுக்கள்மீது என்று தெரியவில்லை!

இதற்கு முன்பு அவர் சமூகநீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிராணிகள் நலன் என்பதற்குத் திருப்பிவிட்ட திருப்பணியைச் செய்தவராயிற்றே!

வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை!

இப்போது இப்படி ஒரு தேவையற்ற - விரும்பத்தகாத - மகளிர் வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள் ளார். குறிப்பாக, இது தமிழ்நாட்டையே குறி வைத்து இறங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது!
இதில் பிரதமர் மோடி தலையிட்டு, தடுத்து நிறுத்திடவேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை அமைச்சர்களுக்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, பிரதமர் மோடியின் அவசரக் கடமையுமாகும்.

ஆறு மாத ஆட்சியின் அல்லல்!

பாஜ.க. - மோடியின் ஆறு மாத கால ஆட்சியில் அமைச்சர்களின் பேச்சும், அறிவிப்பு களும் இவருக்குப் பெருமையை சேர்ப்ப தாகவோ, மக்களுக்கு நலன் விளைவிப்ப தாகவோ அமையவில்லை என்பது சுவர் எழுத்தாகப் பளிச்சிட்டுத் தெரிகிறது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93049.html#ixzz3MFbpWeCs

தமிழ் ஓவியா said...

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்

132 பள்ளி மாணவர்களைக் கொன்ற தலிபான்களின் பயங்கரவாத செயல்!

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்;

எங்களின் அன்புக் கண்ணீர் காணிக்கை!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் அடாத செயல் காரணமாக உலகின் கறை படிந்த மதக் கொடுமைகளின் பட்டியலில் மதவெறி மற்றொரு மனிதநேயமற்ற, பச்சாதாபம் பார்க்காது, 132 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது; பலரை உயிருக்கு மன்றாடச் செய்துள்ளது.

இந்தச் செயல்களின் அடிப்படைக் காரணம் மதவெறி! மதவெறி!! மதவெறி!!!

கடவுள் கருணையே வடிவானவர்; அங்கு இங்கு எனாது எல்லா இடங்களிலும் பரவியுள்ளவர்; அவர் இல்லாத இடமே இல்லை என்று கதையளக்கும் கடவுள், மத நம்பிக்கைவாதிகளே, அப்படி ஒரு சர்வசக்தி உடைய ஆண்டவனோ, கடவுளோ இருந்தால், இந்தப் பச்சிளம் தளிர்களின் உயிர்களைக் கொன்றிட உடன்பட்டு வேடிக்கைப் பார்த்திருப்பானா?

நாட்டில் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இரத்த ஆறு ஓடுவது சகித்துக் கொள்ளக் கூடியதா?

உலகம் - மதவெறி காரணமாக - மீண்டும் காட்டுமிராண்டி யுகத்திற்கே திரும்பிச் செல்லுகிறதா? மகாவெட்கக்கேடு இது!

இதை ஒரு வன்முறைச் செயலாக மட்டும் பார்க்காமல், இதன்மூலம் - ஆணிவேர் - மதத் தீவிரவாதம் - அடிப்படை வாதம் என்ற தலிபான்கள் என்றால், அவர்களை உருவாக்கி மனிதாபிமானம் அறியாத வெறித்தனத்தை அவர்களுள் விதைத்தது எது?

கடவுளும், மதமும்தானே! அவைகளை ஏற்றுக்கொண்டே, மறுபுறம் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று உபதேசம் செய்வது அர்த்தமுள்ளதா? முரண்பாடு அல்லவா?

பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், மனிதநேயம் உள்ளவர்கள்; ஆனால், மதவெறியர்களோ சரித்திரத்தின் அந்நாள் தொட்டு, இந்நாள் வரை - அசல் காட்டுமிராண்டிகளாய், சகிப்புத்தன்மை அறியாததாக மிருக உணர்ச்சியின் பிண்டங்களாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்! இதனை மறுக்க முடியுமா?

இலங்கையில் புத்தம் என்ற மனித நேயத்தையே ரத்தத் தடாகத்தில் தள்ளி குளிக்க வைத்து மகிழும் குள்ளநரிக் கூட்டத்தின் யதேச்சாதிகார அரசு பயங்கரவாதம் - அரசே - செஞ்சோலை என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குண்டுவீசி கொன்று அழித்து, மகிழவில்லையா?

அந்த ரத்தக் கறையாளன், சட்ட புத்தகத்தையே திருத்தி, தானே மீண்டும் நாட்டை ஆளத் திட்டமிடுவதற்கு, அந்தச் சம்பவம் போன்றவற்றை - பயங்கரவாதத்தை நான் துடைத்து எறிந்துவிட்டேன் என்று கொக்கரிக்கிறாரே!

இது பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிரச்சினையாக மட்டும் உலகம் பார்க்காது; பார்க்கக்கூடாது;

மனிதநேயத்திற்கு மதவெறி விடுத்த சவால் என்று எடுத்துக் கொண்டு, அனைவரும் அந்த மதவெறிக்குச் சமாதி கட்ட முனைப்போடு, நாடு, இனம், மதம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகம் ஒரு குலம்; மானிடப் பரப்பு பரந்து விரிந்தது என்ற அணுகுமுறையில் இதற்கு முடிவு கட்டி, நாகரிகத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும்!

இளந்தளிர்களே, மொட்டுகளே, உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்! எங்களின் அன்புக் கண்ணீர்க் காணிக்கை!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
18.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93048.html#ixzz3MFbzh9JD

தமிழ் ஓவியா said...

கத்தோலிக்கப் பிரிவில் தாழ்த்தப்பட்டோரை அவமதிப்பதா? வாட்டிகன் தூதரகம்முன் போராட்டம்


புதுடில்லி, டிச.18_- பல் வேறு தமிழ் கத்தோலிக்க அமைப்புகளைச் சார்ந்த வர்கள் கத்தோலிக்க மதத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதை எதிர்த்து வாட்டிகன் தூதரக அலுவ லகம் முன்பாக போராட் டம் நடத்தியுள்ளனர்.

போராட்ட முடிவில் இந்திய, நேபாள நாடு களுக்கான தூதரக அலு வலர் சால்வடோர் பென் னாச்சியோவிடம் புகார் மனுவை அளித்தனர்.

விடுதலை தமிழ்ப்புலி கள் கட்சியைச் சார்ந்த குடந்தை அரசன் போராட் டத்தை தலைமையேற்று நடத்தி உள்ளார். சர்ச் விவகாரங்களில் தாழ்த் தப்பட்டவர்களிடம் ஏற்பட்டுள்ள மனக்குறை யைத் தீர்த்து வைக்காமல் இருப்பதுதான் தங்களைப் போராட்டத்தில் தள்ளி யிருப்பதாகக் கூறுகிறார்.

அவர் கூறும்போது, சர்ச் நிர்வாகத்தில் தாழ்த் தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படுவதில்லை. கல்லறைகள் தனியாகத் தான் உள்ளன. நாங்கள் 16 கோரிக்கை களைக் கொண்டுள்ள மனுவை அளித்துள் ளோம். கத்தோலிக்கர்கள் மத்தியில் தீண்டாமை யைக் கடைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும். நிர்வாகத் தில் 80 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர் களின் ஜாதிப் பெயர்களை நீக்குமாறு கட்டாயப்படுத் தப்படுகிறார்கள் என்று கூறினார்.

போராட்ட அமைப் பாளரான வழக்குரைஞர் ஃபிராங்க்ளின் சீசர் தாமஸ் கூறும்போது, 2011 ஆம் ஆண்டு திருச்சியில் வேத பாட சாலையிலிருந்து தாழ்த்தப் பட்டவர் என்பதால் ஜி.மைக்கேல் ராஜா என் பவர் வெளியேற்றப்பட் டார். அதிலிருந்து தென் தமிழகத்தில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அத னால், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட் டங்களில் சில சர்ச்சுகள் செயல்பாடுகளின்றி உள் ளன. ஜாதி ரீதியான வேறு பாடுகளை வாட்டிகனும் அப்படியே கையாண்டு வருகிறது. பிரச்சினை தீரும்வரையில் போராட் டம் தொடரும் என்று அவர் கூறினார்.

இவ்வமைப்பின் செய லாளர் வினோத்குமார் கூறும்பொழுது, இலங் கைக்குத் தேர்தல் நேரத் தில் போப் செல்லவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டார். பல மட்டங்களி லும் ஜாதிப் பாகுபாடுகள் கத்தோலிக்கர் மத்தியில் உள்ளன என்று கூறினார். போப் பிரான்சிஸ் இலங் கைப் பயணத்தைக் (8.1.2015) கண்டித்துத் துண்டறிக் கைகள் வழங்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/e-paper/93050.html#ixzz3MFc9N01l

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அதற்கு என்ன பலன்?

காகம் தலையில் கொத்திவிட்டால் உடனே ஸ்நானம் செய்யவேண்டும். கோயிலுக்குச் சென்று விநாயகருக்குத் தீபம் ஏற்றி வழிபட்டால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையாம். (எது நடந்தாலும், அதன் பலன் - சுரண்டல் அவாளுக்குப் போய்ச் சேரவேண்டுமே!)

தலையில் காயம் ஏற்படும் அளவுக்குக் காயம் ஏற்பட்டு, ஸ்நானம் செய்தால் செப்டிக்குத்தான் ஆகும். ஒழுங்காக டாக்டரிடம் போவதுதான் நல்லது.

சாலையோரப் பிள்ளையார் தலையில் காகம் குந்தி சிறுநீர், மலம் கழித்துப் போகிறதே, அதற்கு என்ன பலனாம்?

Read more: http://viduthalai.in/e-paper/93051.html#ixzz3MFcGygiX

தமிழ் ஓவியா said...

வனத்துறை அரசு வளாகத்தில் கோயிலா?


ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், அந்தியூர் கஸ்பாவில் பர்கூர் சாலையில் அந்தியூர் ரேஞ்சுக்கு சொந்தமான ரேஞ்சர் ஆபிஸ் (சுமார் ஒரு ஏக்கர் அல்லது கூடுதலாகவோ, குறைவாகவோ நிலப்பரப்பு கொண்ட) உள்ளது. 8.12.2014 திடீரென்று இந்த அலுவலகத்தின் வளாகத்திற்குள் புதிய வினாயகர் கோவில் கட்டி இக்கோவிலின் வழிபாட்டு துவக்கத்தை வனத்துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு செய்துள்ளனர். அரசு சார்ந்த அலுவலகங்களில் இதுபோன்ற மதம் குறித்த எவ்வித வழிபாட்டுத் தலங்களும் அமைக்கப்படுதல் இந்திய அரசியல் சட்டத்தின் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக அமையும் என்று கருதி அரசு அலுவலக வளாகங்களில் மதவழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுதல் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் ஸ்டேட் ஆப் குஜராத் க்ஷி யூனியன் ஆப் இந்தியா என்று தெளிவாக தீர்ப்புரைத்துள்ளதை அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை இது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/93052.html#ixzz3MFcPD0Mv

தமிழ் ஓவியா said...

முட்டாளும் - அறிவாளியும்!


முட்டாள்தனம் என்றாலே சுலபத்தில் தீப்பிடித்துக் கொள்ளும் வஸ்து என்று சொல்லலாம். அறிவு என்றால், சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்க முடியாத வஸ்து என்பது பொருள்.
_ (விடுதலை, 17.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/93053.html#ixzz3MFcnK0PQ

தமிழ் ஓவியா said...

எரிவாயு மானியம் பெற ஒரு படிவம் போதும் அய்.ஓ.சி. அதிகாரி பேட்டி


சென்னை, டிச.18_ சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு பல படிவங் களைக் கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் யாரும் அவதிப்பட வேண்டாம். எரிவாயு நிறுவன இணைய தளத்தில் இருந்து ஒரே ஒரு படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென் னையில் நேற்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

மாற்றியமைக்கப்பட்ட சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மறுபடியும் கொண்டு வரப்பட்டுள் ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு 2015 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத் தப்பட உள்ளது.

ஆதார் எண் இல்லாத நுகர் வோர்கள் மானியத் தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியமாகும்.
மார்ச் 31 ஆம் தேதிக்குள்

வங்கிக் கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படு கிறது. அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மூலம் மானியத்தை பெற்று கொள்ளவேண்டும். இந்தக் கால அவகாசம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.

அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஆகும். இந்த 3 மாதத்தில் அவர்கள் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளவேண்டும். இதற் கான மானியத் தொகை விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கும். அதேநேரத்தில் இம் மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய எல்.பி.ஜி. சிலிண்டருக்குரிய மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க் கப்படும்.

இத்திட்டத்தில் சேராத நுகர்வோர் களுக்கு 1.7.2015 முதல் சந்தை விலை யில் மட்டும்தான் சிலிண்டர் விநி யோகம் செய்யப்படும். எப்போது அவர்கள் மானிய திட்டத்தில் இணை கிறார்களோ அன்று முதல் மட்டும் தான் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் இணைந்தபிறகு, முதன் முதலில் ஒரு சிலிண்டருக்குப் பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கிக் கணக்கில் ரூ.568 நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்தப்படும். நுகர்வோர் தங்களது எல்.பி.ஜி. சிலிண்டரை சந்தைவிலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன்வைப்புத் தொகை உறுதி செய்கிறது.

படிவ விவரம்

நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு எல்.பி.ஜி. வாடிக்கை யாளர்கள் ஆதார் எண் இருந்தால் படிவம் 1-அய் பூர்த்தி செய்து விநி யோகஸ்தர்களிடமும், படிவம் 2அய் பூர்த்தி செய்து வங்கியிலும் கொடுக்க வேண்டும். ஆதார் எண் இல்லை என் றால் படிவம் 3 அய் விநியோகஸ்தரிட மும், 4அய் வங்கியிலும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைதான் தற்போது உள்ளது.

புதிய வழி

படிவம் 1, 2 மற்றும் 3, 4 இருப்பது நுகர்வோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனிமேல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு படிவம் வி.1.0 என் பதை மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதும். இதற்கான படிவங்கள் இல வசமாக எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும்

hp:petroleum.nic.in/dbtlform.html
www.mylpg.in

என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு இந் தப் படிவத்தை பூர்த்தி செய்து வங்கி யில் அளிக்கலாம் அல்லது எல்.பி.ஜி. விநி யோகஸ்தரிடம் அதற்கென வைக் கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம்.

எந்த நிறுவனத்துக்கு
எந்த எண்:

பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு 17 இலக்க நுகர்வோர் எண் ணுக்கு பதிலாக 16 தான் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 16 இலக்க எண்ணுடன் பாரத் நிறுவனமாக இருந்தால் முதலில் 1_ம், ஹெச்.பி.யாக இருந்தால் 2_ம், இண்டேனாக இருந் தால் 3_ம் சேர்த்துக் கொள்ள வேண் டும்.

தமிழ் ஓவியா said...

மானியம் கூடும், குறையும்!

தற்போது சந்தை விலையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.749.50. மானியம் போகரூ.404.75. இந்த மாதத்துக்கான மானியம் ரூ.345 ஆகும். இந்த மானியத்தொகை கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப கூடவும், குறையவும் வாய்ப்புள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் தாங்களா கவே முன்வந்து எல்.பி.ஜி. மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.

ரூ.133 கூடுதல்
மானியம்

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் இணைந்த வாடிக் கையாளர்களுக்கு, அவர்கள் இணைந்த பிறகு, முதல் சிலிண்டருக் குப் பதிவு செய்தவுடன் அறிவித்தப்படி நிரந்தர முன்பணம் என்று ரூ.568 ஒரு முறை மட்டுமே அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மானிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்த முன்பணமாக ரூ.435 பெற்றுள் ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த ஒரு நிரந்தர முன்பணமும் செலுத்தப் பட மாட்டாது. இது கடந்த முறையை விட தற்போதுரூ.133 கூடுதலாகும்.

Read more: http://viduthalai.in/page-2/93056.html#ixzz3MFfu1wbP

தமிழ் ஓவியா said...

மோடி தான் பதில் சொல்லவேண்டும்


- குடந்தை கருணா

பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, தாலிபான் அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டவனும் சரி, இறந்த குழந்தைகளும் சரி, ஒரே மதக் கோட் பாடு கொண்டவர்கள்தான். மதம் மனி தனை வழி நடத்துகிறதா? என்று மத குரு மார்களும், மதக் கோட்பாட்டை நம்பி பின் பற்றுவர்களும் ஆழ யோசிக்கவேண்டும்.

இந்த கொடூர சாவிற்கு உலகமே கண்டனம் தெரிவிக்கிறது. நமது பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின் செயலைக் கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளார், நல்லது.

கடந்த ஒரு மாத காலமாக, மோடியின் கட்சியிலும் அவரது கட்சியை பின்னிருந்து இயக்கும் கூட்டமும், இன்னதான் பேசுவ தென்று இல்லாமல் பேசி வருகிறதே, மோடியின் அமைச்சரவையில் இயங்கும் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்து நவோதயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை, கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 ஆம் தேதி பள்ளிகளை திறந்து, வாஜ்பாய், மாள வியா ஆகியோரின் பிறந்த நாளை கொண் டாடும் வகையில் நிகழ்ச்சி நடத்திட உத் தரவு இடப்பட்டதே, ஆக்ராவில் இஸ்லாமி யர்களை மிரட்டி மதமாற்றம் நடைபெற் றதே, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி, அலிகாரில் அதேபோன்று பெரிய அளவில் மதமாற்றம் செய்வோம் என பாஜக எம்.பி ஒருவரின் தலைமையில் உ.பி.அரசையும் மிரட்டி அறிக்கை வெளியிடப்படுகிறதே, இந்த தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்டித்து, பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டாமா? இப்படி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் பேச்சினை, செயலினை செய்யும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை; கட்சி யிலும் இடமில்லை என்று சொல்லி விட்டு, அடுத்த நாட்டில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந் தால் அதில் ஓர் நேர்மை வெளிப்பட்டிருக்கும்.

அப்படி இல்லாமல், அண்டை நாடு இஸ்லாமிய நாடு என்பதற்காக ஒரு கண் டனம் தெரிவித்துவிட்டு, உள்நாட்டில் தனது கட்சியினர் செய்யும் அடாவடித் தனத்தை கண்டுகொள்ளாமல் மவுனம் கடைப்பிடித்தால், நாளை இங்கேயும் பாகிஸ்தானில் நடைபெற்றதுபோல், தீவிர வாத நடவடிக்கைகள் வராது என்பதற்கு பிரதமர் என்ன உத்தரவாதம் வைத்துள்ளார்?

Read more: http://viduthalai.in/page-2/93057.html#ixzz3MFg2CiyU

தமிழ் ஓவியா said...

தமிழிலிருந்து...

தெய்வ மொழி சமஸ் கிருதம் என்றும், நீஷ பாஷை தமிழ் என்றும் கூறக் கூடிய மனப் பான்மை கொண்டவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரி யார்கள் இதில் அவாளுக்கு வழி காட்டிகள்!

சமஸ்கிருதத்திலிருந்து தான் அதிக சொற்களை தமிழ் கடன் வாங்கிக் கரணம் போட்டது என்று கூறும் குறுமதியினரும் உண்டு.
உண்மை என்ன வென்றால் தமிழிலிருந்து சமஸ்கிருதம் பெற்ற சொற்கள் எண்ணற்றவை.

தொல் காப்பியச் சொல் லதிகாரத்துக்கு எழுதியுள்ள ஒரு சூத்திர உரையில் சேனாவரையர் என்ன குறிப்பிடுகிறார் தெரியுமா? தமிழ்ச் சொற்கள் வட மொழியில் சென்று சேர மாட்டா எனக் குறிப்பிட் டுள்ளார். இது ஒரு வகைக் காழ்ப்பால் கதைக்கப் பட்டது - உண்மை என்ன?

அப்பா - வடமொழிச் சொல், அம்மா தமிழ்ச் சொல் என்று சிலர் கூறு வதுண்டு உண்மையில் தமிழ் அம்மா அம்மை என்ற வடிவங்கள்தாம் அம்மாள் எனத் திரிந்து, பிறகு வடமொழிக்குச் சென்று அம்பா என்ற வடிவத்தைப் பெற்றிருத் தல் வேண்டும். ஆள் ஈறு திராவிட மொழிகளில் காணப்படுகின்ற பெண்பால் விகுதி என்பது யாவரும் அறிந்ததே! அச்சொல்தான் அம்பா, அம்பாலா, அம் பாலிகை என்று சமஸ் கிருதத்திலும் காணப்படு கிறது என்ற ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பர்ரே காட் டியுள்ளார்.

தமிழில் வழங்கப்படும் கலை என்ற சொல் வடமொழியின் திரிபு என சிலர் சொல்லுவதுண்டு. ஆயினும் கல் என்ற அடிப்படையிலிருந்து இச்சொல் பிறந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளெல் லாம் அறிவது என்ற பொருளைத் தருவதற்குக் கல் என்ற அடிவேரே பயன்படுகிறது. இதனடி யாகத்தான் கலை என்ற சொல் தமிழிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதனை வடமொழியினர் கலா எனத் திரித்து வழங்க லுற்றார்கள்.

குழல் என்ற தமிழ்ச் சொல் குரால என்ற வடமொழியிற் சென்று வழங்குகிறது. கூந்தல் எனும் பொருளைக் குறிக்க மலையாளத்திலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் இதனை யொத்த சொற்கள் உண்டு; குழல்- தமிழும், மலையாள மும்; குருள் - கன்னடம், குருளு - தெலுங்கு; கோட்டை என்ற திராவிட சொல்லிலிருந்துதான் வடமொழி கோடா என்பது எழுந்துள்ளது. இதுபோன்ற ஏராளமான சொற்கள் தமிழிலிருந்து வட மொழி யால் கடன் வாங்கப்பட் டன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பர நாதன் ஆராய்ச்சிக் கட்டு ரைகள் உரைகள் (தொகுதி - 1) நூலிலிருந்து இந்தத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/93079.html#ixzz3MLwLk6W5

தமிழ் ஓவியா said...

தமிழ் ஏடுகளில் இந்தி விளம்பரமா?


டில்லியில் முக்கிய சுற்றுலாத்தளமான ரெயில்வே அருங் காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிக் காக 24 டிசம்பர் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் இந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பள்ளிமாணவ\மாணவிகள் டில்லி போன்ற நகரங் களுக்குச் சுற்றுலா செல்வார்கள்.

அப்படிச் செல்லும் போது டில்லியில் உள்ள ரெயில்வே அருங் காட்சியகமும் முக்கியமான பார்வை யகமாகும். முக்கியமான ஒரு செய்தியை ரெயில்வே நிர்வாகம் இதுவரையில் செய்திகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே விளம்பரங்களைத் தருவார்கள். ஆனால் தற்போது புதிதாக இந்தியில் கொடுத்திருப்பது யாருக்காக? தெரியாத ஒரு மொழியில் முக்கியமான செய்தியை மத்திய அரசு கொடுப்பதற்கு என்ன காரணம்?

Read more: http://viduthalai.in/e-paper/93084.html#ixzz3MLx0mbiC

தமிழ் ஓவியா said...

பயத்தால்...

அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

Read more: http://viduthalai.in/page-2/93086.html#ixzz3MLyDlRBI

தமிழ் ஓவியா said...

கோட்சேக்கு சிலை மட்டும் தானா?

- குடந்தை கருணா

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சிலையை புது டில்லியில் உள்ள மந்திர்மார்க் எனும் பகுதியில் நிறுவுவதற்கு அனுமதி கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதப் போவதாக, அகில பாரதிய ஹிந்து மகாசபையின் தேசிய தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசியல் தலைவர் நாதுராம் கோட்சே; ஹிந்துயிசத்தின் பரப்புரைக்கு ஓர் அறிவுப்பூர்வமான சொத்து அவர் என்று தெரிவித்த கவுசிக், அக்பர், அவுரங்கசீப், மகாத்மா காந்தி ஆகியோரின் பெயரில் சாலைகள் இருக்கும்போது, தேசிய தலைவர் கோட்சேக்கு சிலை நிறுவுவதில் என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடில்லி மட்டுமல்லாமல், அய்ந்து அல்லது ஆறு மிகப் பெரிய மெட்ரோ நகரங்களில் உள்ள பூங்கா, சந்தை, முக்கிய சந்திப்புகள் இங்கேயெல்லாம் கோட்சேயின் சிலை நிறுவிட ஏற்பாடு செய் யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர், கோட்சேயை, காந்தியோடு ஒப்பிட்டுப் பேசியது பிரச்சினையை உண்டாக்கியது. இப்போது, வெளியே, ஹிந்து மகாசபை, அதையே இன்னும் வேகமாகச் செய்யத் துவங்கியுள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால், கோட்சேக்கு பாரத ரத்னா வழங்கி, மகாத்மா பட்டம் வழங்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

ஏற்கெனவே, பாஜகவின் சு.சுவாமி, கொலைகாரன் ராஜ பக்சேவுக்கு, இந்தியாவில் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தவனுக்கே, பாரத ரத்னா வழங்க வேண்டும் என்கிற போது, ஒரே ஒரு கொலையைச் செய்த கோட்சேக்கு, அதுவும் ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட கொலை செய்தவனுக்கு, விருது அளித்தால் என்ன தவறு என வாதிடக்கூடும்.

காந்தியை கோட்சே கொலை செய்தாரா? என்ற கேள்வியை எழுப்பி, காந்தி, தானே தற்கொலை செய்து கொண்டார்; அந்த நேரத்தில் கோட்சே அதைத் தடுக்கச் சென்றார். ஆனால், ஹிந்து விரோத சக்திகள், கோட்சே என்ற மகா புருஷர் மீது அபாண்டமாக வழக்குப் பதிவு செய்து, அவரைத் தூக்கிலிட்டு விட்டன. ஆகவே, அந்த வழக்கை, மீண்டும் விசாரித்து, கோட்சே நிரபராதி என தீர்ப்பளிக்க வேண் டும் என ஹிந்து மகாசபை, உள் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு அப்படின்னு கேட்கவும் செய்வார்கள்.

நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சங்கர ராமன் கொலை வழக்கில், ஓடிப்போன சாமியாருக்கு நிரபராதி என தீர்ப்பு கிடைக்க வில்லையா? அப்ப, யார்தான் சங்கர ராமனை கொலை செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு நம் காலத்தி லேயே விடை கண்டு பிடிக்க முடிய வில்லை.

ஹிந்து மகாசபை, கோட்சேக்கு சிலையோடு நின்று விடாமல், பாரத ரத்னா, மகாத்மா என்ற பட்ட்த்தை வழங்கி, நாட்டு மக்களை பெருமைப் படுத்த வேண்டும்.

அண்மையில், பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தா.பாண்டியன் சொன்னது போல், பண்டாரங்கள் ஆட்சி செய்தால், மக்களுக்கு சங்கு தான்.

Read more: http://viduthalai.in/page-2/93090.html#ixzz3MLyY1d3U

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93126.html#ixzz3MLzjAZos

தமிழ் ஓவியா said...

காய்மீது காய்ச்சல்!

அத்திக் காய் கோவை தேத் தானை
ஹிலிக் காய் வெள்ளைக்
கத்தரி சோற்றுக் காந்தல்
கண்டிதை யாவரேனும்
நத்தியே யுண்பார்க் கெல்லாம்
நாரணன் தாளின் மீது
புத்திதான் வாரா தென்றும்
பரமனார் அருளினாரே. (நீதிச் சாரம்)

இதன் பொருள்: அத்திக்காய், கோவைக்காய், தேத்தரங்காய், சோற்றுக்காந்தல் இவைகளை உண்டால் நாராயணக் கடவுள் மீது பக்தி ஏற்படாது - அக்கடவுளை மறக்கச்செய்யும்.

Read more: http://viduthalai.in/page-7/93126.html#ixzz3MLzr118E

தமிழ் ஓவியா said...

வசம் கெட்டது


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு - புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1FIx5i

தமிழ் ஓவியா said...

கிறித்துவ மயக்கம்

கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிறித்தவ மதப் போதகர்களே.

1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது; நம்பினர்.

2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிறித்துவ மதப் போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.

3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் பேச்சுக்களால் கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம் (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல் களையும், கர்த்தரின் குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் சொல்லி கிறித்துவ மதத்தைப் பரப்பினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல் கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர். -பாணன்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1Nakf4

தமிழ் ஓவியா said...

கடவுளை நம்புகிறாயா?

ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1c2FsH

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்... 41 ஆண்டுகளுக்குமுன் ஒரு முழக்கம்!


பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோவிலுக்குள் வரவேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடை யாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுய ராஜ்ஜியத்திலும் நாம் சூத்திரர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.

இந்து என்றால் என்ன?

எதன்படி என்றால், சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான்.

இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால், 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2, 3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்க முடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவோ இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக் கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது;

பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக்கப்பட்டான் என்கிறான். சிந்துநதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை!

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான் மற்றவன் சூத்திரன். பார்ப்பான் என்றால் மேல் ஜாதி, சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி.

இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறதுதான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால், ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?

நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? நாம் எல்லாம் வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்பமாட்டானா? உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டி என்று சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

தந்தை பெரியார் இறுதியாக முழங்கிய நாள் இந்நாள் (19.12.1973). அந்நாளில் அறிவுலக ஆசான் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் இது.
சிந்திப்பீர், செயல்படுவீர்!

Read more: http://viduthalai.in/page-8/93121.html#ixzz3MM1pp2uu

தமிழ் ஓவியா said...

இப்படி ஓர் அமைச்சர்!!


கர்நாடக சட்ட மன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற உழைப்பவர்களுள் முக்கியமானவர் அம்மாநில அரசின் எக்ஸைஸ் அமைச்-சரான சதீஷ் ஜார்கிகோலி. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தனது மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக பேய்கள் உலவும் இடமாய் கருதப்படும் பெலகாவியில் உள்ள வைகுந்தம் எனும் சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டதுடன், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் தூங்கினார்.

இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறுகையில், முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும்.

என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார்.

நான்கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ. 600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது என்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

பெலகாவி நகராட்சியின் கீழ் வரும் வைகுந்தம் எனும் சுடுகாட்டில் அமைச்சர் இந்தக் "காரியத்தை" வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

ஓட்டினை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் அரசியல் சூழலில் இது போன்று பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கதியில் மக்கள் பிரதிநிதிகள் இறங்குவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

- இளங்கோவன் பாலகிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

இப்படியும் ஓர் அமைச்சர்?!


நாட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மனிதவளத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணியிடம் இருக்கும் போது அவர் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கையை நீட்டி நான் டில்லிக்கு முதல்வர் ஆகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள பில்வாடா என்ற ஊரில் 23.11.2014 அன்று மனிதவளத்துறை அமைச்சர் அவரது ஆஸ்தான ஜோதிடரான நதுலால் வியாஸைச் சந்தித்தார். அப்போது அவர் ஜோதிடரிடம், நான் உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பு உங்களைச் சந்தித்த போது எனது ராசிபலனின்படி நீ கேபினட் அமைச்சராவாய் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே நான் தற்போது அமைச்சராகிவிட்டேன். விரைவில் டில்லி மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு என்னை முதல்வராக்க மோடி விருப்பம் தெரிவித்திருக்கிறார். தற்போது எனது ஜாதகப்படி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுமா, நான் டில்லிக்கு முதல்வராகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட நந்துலால் வியாஸ், உடனே கையில் சிலேட்டை எடுத்து ஸ்மிருதி இராணியின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் அரைமணிநேரம் சிலேட்டில் கட்டங்களைப் போட்டு பல்வேறு கணக்குகளைப் பார்த்த வியாஸ் இறுதியாக ஸ்மிருதி இராணியின் நெற்றியில் திலகமிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நீண்ட காலமாக உனது ஜாதகத்தைக் கணித்து வருகிறேன். முதலிலேயே நீ மிகவும் உயர்ந்த பதவியை அடைவாய் என்று கூறியுள்ளேன். அதே போல் நீ கேபினெட் மந்திரியாகிவிட்டாய், உனது ஜாதகத்தில் உச்சம்தான் உள்ளது. உனது அரசியல் வாழ்க்கையில் இனி உனக்கு எதிரி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரசியல் வாழ்வில் நீ இன்னும் அதிக உயரத்திற்குச் செல்வாய், வரும் தேர்தல் உனக்கு நல்ல ஒரு செய்தியைத் தரும், தற்போது இருக்கும் பதவி இனி வரும் பதவி இரண்டுமே உனக்கு பேரும் புகழும் தரும் பதவிகள் ஆகும் என்று கூறினார்.

மேலும், தனது குடும்ப நலன் பற்றியும் ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர், குடும்ப நலத்திற்கு மஹாமிருதுஞ்சய் யாகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போது அவர் கெட்டவர்களின் பார்வை பாதிப்பிலிருந்து விலகி இருக்க, 13 தோல் நீக்காத உளுந்தை எப்போதும் அவரது ஆடையில் முடிந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர குடும்பத்தினருடன் உஜ்ஜைன் மகாபைரவர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுமார் 4 மணிநேரம் ஜோதிடரிடம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி விவாதித்தார். அதன் பிறகு பில்வாடா அனுமன் கோவிலுக்குச் சென்ற ஸ்மிருதி இராணி அனுமானுக்கு சனிதோச பூசைகள் செய்தார். ஸ்மிருதி இராணியின் பில்வாட பயணத்தின் போது அவருக்கு என சிறப்பு இசட் பிளஸ் பாதுகாப்புப் படைவீரர்களுடன் பல்வேறு வசதிகளுடனுள்ள இரண்டு அரசு வாகனங்களும் உடன் சென்றன.

விரைவில் குடியரசுத் தலைவர் ஆவாராம்

ஸ்மிருதி இராணி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போதே என்னிடம் ஜாதகம் பார்த்தார். நான் அவரது பிறந்த நாள், நேரம் பற்றித் துல்லியமாகக் கணித்து திரைப்பட உலகில் மிகவும் முக்கியமான நபராய் வருவாய் என்றேன். அதன்படி அவர் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகராக முன்னுக்கு வந்தார். நான் அவருக்கு ஜோதிடம் பார்த்த சில ஆண்டுகளிலேயே அவர் பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு மீண்டும் என்னிடம் வந்தார். அப்போது நான், நாட்டின் முக்கியத் தலைவராக 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு வருவாய் என்றேன். அதே போல் தற்போது அவர் கேபினெட் அமைச்சராகிவிட்டார். விரைவில் அவர் மீண்டும் ஒரு மிகவும் முக்கியப் பதவியை அடைய இருக்கிறார். அவருக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது என்று அவரது ராசி கூறுகிறது என்று ஸ்மிருதி இராணி சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால் ஸ்மிரிதி இராணி அரசியல் வாழ்க்கையிலும், சின்னத்திரை, பெரிய திரை நடிப்பிலும் பெரிய வெற்றிபெற்ற நபரல்ல. கல்வித் துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்மிருதி இராணியுடன் அவரது கணவரும் வந்திருந்தார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்காக ஆலோசனை பெற்றார். மனிதவளத்துறை அமைச்சர் ஜோதிடம் பார்த்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

நாட்டின் கல்வித்துறை உள்ளடக்கிய ஒரு துறையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி 5-ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரிடம் கைநீட்டி தனது எதிர்காலம் குறித்துக் கேட்பது மிகவும் கேவலமான ஓர் எடுத்துக்காட்டாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கும் அந்தப் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

உங்கள் கங்கை நதிக்கரையில்..


இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம் ரயில் நிலையம்

விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- கவிஞர் பழநிபாரதி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!



திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

கதையைப் படித்துவிட்டு இங்க வாங்க!


இந்தக் கதை நமக்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று. இதை பிரசுரத்திற்குத் தேர்ந்-தெடுத்து அச்சுக்கு அனுப்பும்போதுதான், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு ஒன்று வந்தது. கோயில் பூஜைகளில் கற்பூரம் பயன்படுத்த தடை என்கிறது அந்த அறிவிப்பு. காரணம் இதுதான், அதிலிருந்து வெளிப்படும் புகை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நுரையீரல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

இதைக் கேட்டதும், கொதித்துக் கொந்தளித்து எங்கள் பழமையைக் குலைக்கிறீர்கள். பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்... ஆகமத்தை மறைக்-கிறீர்கள்.. சாஸ்திர சம்பிரதாயங்களை.. புதைக்... என்றெல்லாம் தம் கட்டி வீராவேசம் பேசியிருப்பார்கள் அர்ச்சகர்களும், இந்துத்வா கும்பலும் என்று நீங்கள் கருதியிருப்பீர்-களேயானால், ஏமாந்துதான் போவீர்கள். அப்படி நடக்கவில்லை. கதையில் வரும் சதாசிவ அய்யர் போல இந்தத் தொழிலே வேண்டாம் என்று முடிவும் எடுக்கவில்லை.

பகுத்தறிவாளர்கள் சொன்னபோதெல்லாம் இல்லை என்று மறுத்தவர்கள் இப்போது, கற்பூரத்தால் உடல் நலம் பாதிக்கப்-படுவது உண்மைதான். அறநிலையத் துறையின் தடை வரவேற்கத்தக்கதுதான் என்று ஏற்றுக்கொண்டு மணியாட்டப் போய்விட்டார்கள்.

கற்பூர நாயகியே... கனகவல்லி... காளி மகமாயி... ஆஸ்மாக்காரி என்று இனி பாடுவார்களோ?

தமிழ் ஓவியா said...

கருத்து

கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இளைஞர்களின் கோபம் அந்தப் பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என கருப்பின இளைஞர்கள் கருதுகின்றனர். அனைவருக்கும் சமத்துவம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடு.

இருந்தும், கருப்பின இளைஞர்கள் அவ்வாறு கருதும் நிலை இருந்தால் அது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல. இந்த தேசத்தின் பிரச்சினையும் ஆகும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் கருப்புப் பணப் பதுக்கலும் பரிவர்த்தனைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.

- லினஸ் வான் காஸ்டிலின், சுவிட்சர்லாந்து தூதர்

நாட்டில் பெண்கள் பாதுகாபபு மக முககயமானது. பெண்களைக் கட்டுப்-படுத்தியோ, அல்லது அவர்களின் சுதநதரததைப் பாதிககும வகையலோ நடநது கொள்வதன் மூலம தான அவரகளன பாதுகாபபை உறுத செயய வேணடும என நனைககக் கூடாது. பாலயல வன்செயலகளுககு உரய தணடனை பெறறுத் தருவது குறததுத் தான சநதகக வேணடும.

- தத்து, உச்ச நீதிமன்ற தலைமை நதபத

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது. மனிதன் அந்தக் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்ற 300 ஆண்டுகள் ஆகும். சுனாமி ஏற்படும் சமயங்களிலும் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பும் போதும், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறையும். இது நமக்குத் தெரியாது. எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு நொடி கழிவது போல் இந்த நிகழ்வு நடக்கிறது.

- வெங்கடேஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியலாளர் (மங்கள்யான்)

தமிழ் ஓவியா said...

பழைய அதிகாரத்தோடு நடமாடக்கூடாது


- கோசின்ரா

ஒளிப்பழம் பறித்து உண்போம்
மழைப்பாலை அருந்துவோம்
நிலத்திற்கும் அருந்தத் தருவோம்
இரவு குளத்தில் இறங்கி
நிலவைக் கரைக்கு இழுத்து வருவோம்
நீரின் நூலால் நெய்யப்பட்ட ஆடையணிந்து
நதிகளோடு அந்தரங்கத்தைப் பகிர்வோம்

நீங்கள் ஒளிப்பழம் உதிர்க்கும் சூரியனுக்கு
சட்டை மாட்டினீர்கள்
சமத்துவம் கசியும் நதிகளுக்கு
பெண் வேடம் கட்டினீர்கள்...
நெருப்புக்கு மழைக்கு ஆகாயத்திற்கு
மனித உடல்களை மாட்டினீர்கள்...
படைப்பு சக்திகளின் வடிவங்களான
ஆணுறுப்பிற்கு சிவனென்றும்
பெண்ணுறுப்பிற்கு சக்தியென்றும்
பெயர் சூட்டி புராணங்களில் ஏற்றினீர்கள்!
வளர் அறிவு
உங்கள் கற்பிதங்களைத் திருப்பி அனுப்பி விட்டது
அதை இழுத்து வந்து
வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் சிறுபான்மையென்று
உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கென்று பூமியில்லை
அதுவும் தெரியும்
இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது
நீங்கள் சில நூற்றாண்டுகளாக
எங்களுடன் இருக்கிறீர்கள்
இருந்துவிட்டுப் போங்கள்
உங்கள் சொற்களுக்குத் தலையாட்டிப் பொம்மைகளாய் இருந்து
மக்களை அடக்கிவைத்த மன்னர்களை
ஜனநாயகம் துரத்திவிட்டது

பூர்வீக அடையாளங்களை அழிப்பது
கைவந்த கலையாக இருக்கலாம்
எல்லாவற்றையும் கடந்துவிடுங்கள்
கடவுளின் உதடுகளில் புரண்டு
மந்திரங்களின் ஆடையை அணிந்து
மலை முகடுகளில் உங்கள் மொழி
ஆடிய ஆட்டங்களை
காலப்பருந்து தின்றுவிட்டது
முன்னொரு காலத்தில்
ஈயக்கரைசல்களின் அகழிகளுக்குள்ளே இருந்தது
சாமான்யன் தீண்டக்கூடாதவாறு
கொடிய தண்டனைகளால்
வேலியிடப்பட்டிருந்தது
கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில்
சாமன்யர்களின் தெருக்களில் நிற்கிறது
யார் பேசுவார்கள்
தீண்டிய நாவுகளை அறுத்தெறிந்த காலம்
புதைந்து போயிருக்கலாம்
அதன் வலிகள் இங்கேயே இருக்கிறது
அதிசயங்கள் நிகழட்டும்
அது பிழைக்கட்டும்
அதன் வானம் அப்படியே இருக்கிறது
சிறகு முளைத்துப் பறக்கட்டும்
என் நிலத்தில் அது படரக்கூடாது
என் வேர்களைத் தின்றுவிடக்கூடாது
என் வானத்தின் கதவுகளை அது திறக்கக்கூடாது
என் கருமேகங்களை அது கலைக்கக்கூடாது
பழைய அதிகாரத்தோடு என் தெருக்களில் நடமாடக்கூடாது
தமிழுக்காகத் தீக்குளித்தவர்கள்
ஒவ்வொரு நாளும்
சூரியனின் ஒளிக்கற்றைகளில்
இறங்கி வருகிறார்கள் தமிழ் நிலத்திற்கு
எங்கள் வரலாறுகளை உரக்கச் சொல்லிக்கொண்டு.

தமிழ் ஓவியா said...

மடச்சாம்பிராணி


- வீரன்வயல் வி.உதயக்குமரன்

சதாசிவ குருக்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கவனமாக ஆராய்ந்த டாக்டர் சீனிவாசன் நிதானமாக விளக்கினார்.

அய்யரே... உங்க நுரையீரல் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு... பீடி சிகரெட் பழக்கம் இருந்தா விட்டுடுங்க
சதாசிவ குருக்களுக்கு, கோபம் குமுறிக் கொண்டு வந்தது.

அபச்சாரம்... அபச்சாரம்.. யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க



அய்யரே கோபப்பட்டு பிரயோசனமில்ல... புகைப் பிடிக்கிற பழக்கம் இருந்தாலொழிய இந்த நோய் வர சான்சே இல்லை

நான் வேற டாக்டரைப் பாத்துக்கறேன்... எவனாவது பீடி சிகரெட் குடிச்சா பத்து அடி தள்ளியே நிப்பேன்... என்னைப் போயி...

அப்படின்னா... உங்களுக்குப் புகைப் பழக்கமே இல்லேன்னு சொல்றீங்க அப்படித்தானே

நான் மூனு வேளை செய்யுற அந்தக் கடவுள் மேல சத்தியமா கிடையாதும் ஓய்

மூனு வேளை எப்படி பூஜை செய்றீங்க

சாம்பிராணி, சூடம், பத்தி, இதெல்லாம் வச்சித்தான்

அப்ப பிரச்சினையே அதுலதான். இதையெல்லாம் நிறுத்தினா சரியாயிடும்.

பூஜையவா நிறுத்தச் சொல்றேள்? ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி செய்யிற பூஜைன்னால நோய் வரும்னு சொல்றேளா... இது அடுக்குமா உங்களுக்கு? கர்ப்பக் கிரகத்தில இருக்கிற வைப்ரேசனும், கடவுளைச் சுற்றி இருக்கிற தூய்மையும் வேற எங்க வரும்?

அய்யரே... வாசனையைக் கூட்ட கண்ட கண்ட கெமிக்கலைச் சேக்குறான்... சிகரெட் பீடி புகையைவிட மோசமாப் போச்சி இந்த சூடம் சாம்பிராணி ஊதுபத்திப் புகை... ஒரு மாதம் கடவுள் பக்கம் போகாம இருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.

அதுக்கு என் பிராணனை விட்டுடுவேன். கடவுளுக்கு ஆறது நேக்கு ஆகாதா?

இதையே தொடர்ந்து செஞ்சா விடத்தான் வேண்டியிருக்கும். கடவுளுக்கு நுரையீரல் இல்லை... அவர் சுவாசிக்கப் போறதும் இல்லை. பிரச்சினையில்லை. நீங்க கற்சிலை இல்லைல்ல... சுவாசிக்க வேண்டாமா? டாக்டரே... என் பொழப்பே அந்த பெருமானை நம்பித்தானே

ஒரு மாசம் மணி ஆட்டுனா... அஞ்சாயிரமோ பத்தாயிரமோ கிடைக்கும்... இந்த வியாதி முத்திப் போனா அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ ஆகும். செலவை உங்க பெருமான் கொடுப்பாரா ஓய்?

டாக்டரே... நீதான்யா எனக்குக் கடவுள்... இனிமே மணி ஆட்டுற தொழிலே வேண்டாம்.

சதாசிவ குருக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்... டாக்டர் சீனிவாசன்.. அறை அதிரச் சிரித்தார்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க


தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே போதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்-படுத்தியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் விரைவாகத் தேர்ந்து வருகின்றனர். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் தேர்ந்திருப்பதும் அதைக் கற்பித்தலில் பயன்படுத்துவதும் அவசியமாகும்.

- ஆர்.கோவிந்தா, துணைவேந்தர், புதுடில்லி தேசிய கல்வித் திட்டம், மேலாண்மைப் பல்கலைக்கழகம்.

இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி என கல்வி மாறிவிட்டது. இந்தியாவில் இன்று ஒரு புதிய சவால் தோன்றியிருக்கிறது. மனித குலம் இன்றைக்குப் புதிதாகக் கற்பதற்கு எதுவுமே இல்லை என்றும் பரிணாமத்தின் சிகரத்தை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து இனம் தொட்டுவிட்டது என்றும் பேசப்படுகிறது. நாம் தேடுகிற கல்வி மானுட விடுதலைக்கானது. மானிட மகத்துவத்துக்கானது. அது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளை பிறக்கும்.

- வி.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.



சொல்றேங்க....!

நல்லா சொல்லுங்கம்!
இன்னும் லட்சம் வருசங்களுக்கு முன்னாடியே இருக்காய்ங்க!

தமிழ் ஓவியா said...

வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு


- சு.ஒளிச்செங்கோ

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.



அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்

வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

தமிழ் ஓவியா said...

மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!


அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய

காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில் அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் கொண்ட பாராளுமன்றமானது. உங்கள் மொழி எதுவென்று கேட்டால், மொழிபெயர்ப்பு என்கிறார்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தினர். ஒவ்வொரு நாட்டினைச் சேர்ந்த உறுப்பினருக்கும் தன் மொழியில் பேசும் உரிமையும், அந்த நேரத்திலேயே அவருடைய உரையை மற்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் மொழியில் கேட்கும்வகையில் அதனை மொழிபெயர்க்கும் வசதியும் கொண்டதாக அந்த அவை உள்ளது. உறுப்பினர் அனைவருக்கும் தத்தமது மொழி, மத, பண்பாட்டினைப் போற்றும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உரை மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலான ஆவணங்களும் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதாகப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அக்காணொளியில்!

ம்ம்ம்ம்... அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுகின்ற இந்தியா - இதற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது மட்டுமன்று, பெரும்பான்மையான மக்கள் மீது ஹிந்தி யைத் தேசியமொழியாகவும், சமஸ்கிருதத்தைப் புனித நூலாகவும் திணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சட்டநூலிலும், பள்ளிப் பாட நூல்களிலும் மட்டும் இருக்கின்ற ஒரு சொல்லாக ஆக்கப்பட்ட அளவு, மக்கள் மனதில் - குறிப்பாக ஆதிக்க அரசியல் தலைவர்கள், பெரிய பொறுப்புகளை வகிக்கும் அரசு அதிகாரிகள் எண்ணத்தில் ஒட்டாமல் போனதுதான் அவலம்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

கட்டாயம் நான் புத்தந்தான்”

அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார்.

வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா.

புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு:

புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும். அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன்.

புத்தியை முக்கியமாகக் கொண்டது பவுத்தம்..... நான் மாத்திரம் அல்ல; புத்தியை உபயோகப்படுத்துகிற எல்லோரும் புத்தர்கள்தாம். இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுள் இல்லையென்பவன் என்றாக்கி விட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன். ..... அப்படி புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். ... ... அபிதான சிந்தாமணி, என்சைக்ளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் புத்தியைக் கொண்டு _ அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள், குருட்டுத்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். - பெரியார் புத்தநெறி ப.6

இன்று நீ பெரிய புத்தனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். மௌனமாக, அடுத்தவர் கொடுக்கும் அடியைப் பெற்றுக்கொண்டு நியாயப்படித் தேவைப்படினும் எதிர்க்காமல் நிற்பவன் என்ற அளவில் மக்கள் _ புத்தரைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே அக்கேள்வி காட்டுகிறது.

ஆனால் புத்தர், தமது வாழ்வின் இறுதி நிமிடங்கள் நெருங்கியபோதும் தம் தலைமைச் சீடரான ஆனந்தரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: நீயே உன் தீவு; நீயே உன் விளக்கு. உனக்கு வழங்கப்பட்டுள்ள தம்மத்தை (பௌத்தக் கொள்கைகளை) அறிந்து தம் வாழ்வில் ஒருவர் தானே புரிதலுடன் ஒளியேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். நான்தான் தலைவர், என் வாய்மொழியை அப்படியே ஏற்றுக்கொள், அதன்படி நட என்று கூறவில்லை.

அய்யாவும் அப்படித்தான். உலகில் தாம் கண்டது, கேட்டது அனைத்தையும் பகுத்தறிவுடன் அலசி ஆய்ந்து அவற்றின் நன்மை தீமைகளைத் தயங்காமல் சுட்டி, சுயமரியாதை நிறைந்த சமுதாய நீதியுடன் கூடிய வாழ்க்கையை மனித சமுதாயம் பெற தேவை ஏற்பட்டபோதெல்லாம் போராடினார்.

இடையில் பௌத்த மடாலயங்களில் சடங்குகள் புகுந்ததை ஏற்றுக் கொள்ளாவிடினும் புத்தர் மீது அவர் வைத்த மரியாதை இறுதிவரை நிலைத்தது. 19.12.1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் அய்யா தன் வாழ்வின் இறுதி உரையை (மரண சாசனம்) ஆற்றினார். அவ்வுரையிலும், நம்பிவிடாதீர்கள் _ சிந்தியுங்கள் என்றான் புத்தன் என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்றார். ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். முக்கியமாக அறிவுதான் இன்றியமையாதது என்றுரைத்தார். யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொன்னதால் அவரை தாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் அய்யா.

- பேராசிரியர் முனைவர்
இரா.பே.வே.இசையமுது

தமிழ் ஓவியா said...

செத்த மொழிக்கு...


தேஜ் நாராயணன் டண்டன் என்பவர் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெயகிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந் தார்கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900. மாதம் ஒன்றுக்குச் சம் பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக் கழகத் தில் சமஸ்கிருதம் படிக்க ஒரு மாணவர்கூட இல் லையாம். 12 ஆசிரியர் களும் வேலையின்றிச் சம்பளம் பெற்று வந்தனர்.

துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறு மனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே என்ன செய்ய? என்று குறைபட்டுக் கொண் டார்கள். துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல் கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூல கத்திற்குச் சென்று ஏதா வது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறி வுரை வழங்கினாராம்!

சமஸ்கிருதத்தின் நிலை இதுதான். இதனை ஏறெடுத்துப் பார்ப்பார் யாருமிலர்! இந்தியாவில் அம்மொழி தெரிந்தவர் வெறும் 0.01 சதவீதம்தான். தெரிந்தவர்களே தவிர அதனைப் புழங்குவதும் கிடையாது, தெய்வ மொழி தெய்வ மொழி என்று பரணையில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் குலாவி மற்றவர்களைப் படிக்காமல் ஆக்கி அம் மொழியை உயிரோடு பிணம் ஆக்கியவர்களே அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் அல்லவா!

ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் செத்துக் குழிக்குப் போன பிணத்திற்கு உயிரூட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கரி யாக்கத் துடிக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள வெங்க டேஸ்வரா பல்கலைக் கழக நிலை - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93170.html#ixzz3MUjJ3oIk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்


தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்
தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் பெரியார் பவன் தொடக்கம்


கரீம்நகர், டிச.20- ஆந்திரப்பிரதேசத்தில் தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் பெரியார் பவன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் திறப்பு விழாவில் இந்திய நாத் திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜயகோபால் கூறும்போது, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில், தெலங்கானாவின் வரலாற் றில் முதல் முறையாக பவன் திறந்து வைக்கப் படுகிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் திறந்து வைப்பதில் மிக வும் மகிழ்வடைகிறோம் என்றார்.

பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் அமைப்பதற் கான இடம் மற்றும் மரச்சாமான்கள் முழுவ தும் கரீம்நகர் காவல் ஆய் வாளர் திரு. டி.பூமய்யா வழங்கி உள்ளார்.

அறிவியலாளர்களின் படங்கள் மற்றும் அவர் களின் சாதனைகள், புகழ் பெற்ற நாத்திகர்கள், மனித நேயம் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆகியோரின் நூல்கள் பெரியார் ஈ.வெ.இராம சாமி பவனில் இடம் பெற் றுள்ளன. பகுத்தறிவுக் கருத்து களைக் கொண் டுள்ள கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் நடத்துவ தற்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் பயன்படுத்தப்பட உள்ளது. திறப்பு விழா வின்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், தலை வர்களும் பங்கேற்றனர்.

பெரியார் பவன் திறப்பு விழாவையொட்டி செய்தி யாளர் சந்திப்பின்போது டாக்டர் டி.ஜயகோபால், டி.பூமய்யா, எஸ்.நரேந்தர், அஜய், பாலசானி மது, டாக்டர் மலையசிறீ மற் றும் பலர் பங்கேற்றனர்.

இதற்கு முன் விசாகப் பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப் பட்டுள்ளது.

தந்தை பெரியார் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலைமாறி, இந்தியாவை யும் தாண்டி, உலகம் முழுவதற்குமே தேவைப் படும் தனிப் பெரும் சிந்தனையாளராக ஒளி வீசிக் கொண்டு இருக் கிறார்கள். உலகில் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி சிறப்பாக விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அறிஞர் பெருமக்கள் அந் நிகழ்ச்சியில் தந்தை பெரி யார் தம் சிந்தனைகளை விரிவாகப் பேசுகிறார்கள்.

உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தந்தை பெரியார்பற்றி ஆய்வு செய்து பி.எச்.டி. பட்டங் களைப் பெற்றுக் கொண் டுள்ளனர். மதவாதம் மனித குலத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மதமற்ற உல கிற்கு நாட்டைக் கொண்டு செலுத்த பெரியார் தேவைப்படுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/93171.html#ixzz3MUjRro12

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொலைகாரன் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

இந்து மகாசபை மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது

புதுடில்லி, டிச. 20_ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காந்தியைக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது இந்து மகாசபை.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள் ளதாக கூறியுள்ளது இந்து மகாசபை. சென்ற வாரம் நாடு முழுவதும் கோட் சேவிற்கு சிலைகள் அமைக்கவேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந் தது. இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத் தில் சிலை அமைத்து விட்டு பிறகு மற்ற இடங் களில் அமைக்கவேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட் டுள்ளது. இதுகுறித்து நேற்று டில்லியில் பத்திரிகையா ளர்களிடம் பேசிய சந்தி ரப்பிரகாஷ் கவுசிக் கூறிய தாவது:இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசு கள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித் தரித்து வந்தன. ஆனால் கோட்சே அப்படிப்பட் டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலை காரராகப் பார்க்கக் கூடாது, ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேச விரோத சக்திகள் நம்மை அப்படி பார்க்கவைத்து விட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந் திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம், இதை மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது. பிரதமர் மோடி கூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த் நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறு வதில் தவறு என்ன என்று புரியவில்லை, மோடி ஒன்றும் பாகிஸ் தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை, இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றி பேசியிருக்கிறார்.

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நாடாளு மன்றத்தில் இருந்தே துவங்கவேண்டும். தெரு விற்கு தெரு சிலை வைக்கும் முன்பு நாடாளு மன்றத்தில் சிலை வைத் தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். இவ்விவகாரம் தொடர் பாக ஏற்கெனவே எங் களின் பிரதிநிதிகள் மத் திய அரசை அணுகியுள் ளனர். முதலில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் சிலை வைத்த பிறகு தான் மற்ற இடங் களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள் ளோம், இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறு கிறோம். சாக்சி மகராஜ் கோட்சேவைப் பற்றி கூறியது பிறகு பின் வாங்கியது பற்றி கேட்ட போது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனை வரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்று தான் பார்க்கிறார்கள். இந்துக் களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது, இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம் விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர் களுக்கு எல்லாம் இனி சுதந்திரம் தான்; இவர்கள் நினைத்தால் இந்துத் தேசத்தை முன்னேற்றத் திற்குக் கொண்டு செல்ல முடியும், அரசியல்வாதி களுக்கு அரசியல் லாபம் தான் முக்கியம்; அதனால் தான் ஆளும் பாஜக அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடி வெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப் பது இந்து அரசு ஆகை யால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை, கோடானு கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பாஜக அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93172.html#ixzz3MUjbOIYk

தமிழ் ஓவியா said...

ஒரு பக்கம் மிரட்டல் -
இன்னொரு பக்கம் கெஞ்சலா?

ராஜபக்சே பேச்சு

கொழுப்பு, டிச. 2-0_ ஜனவரி மாதம் இலங் கையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் ராஜபக்சே முல்லைத்தீவில் தமிழர் களிடம் பேசும் போது நடந்தவைகளை கனவாக நினைத்து மறந்து விடுங் கள், எனக்கு வாக்களித்தால் உங்கள் வாழ்க்கை வளமாகும் என்று கூறினார். ஜனவரி 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெறவிருக்கும் நிலையில் அரசியல் அமைப்புச் சாச னத்தையே திருத்தி மூன் றாவது முறையாக தேர் தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வெற்றிபெற திருப்பதிக்கு வந்து சிறப் புப் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டும் வேறு வழியின்றி வெற்றிபெற மக்களையே நம்பி இருக் கிறார். இந்த நிலையில் அதிபர் பதவிக்கு ஆதர வாக தமிழர்களின் வாக் குகளைப் பெற இராணு வத்தை வைத்து மிரட்டி வருகிறார். முல்லைத் தீவில் வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரை நிகழ்த் திய ராஜபக்சே பேசிய தாவது: தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சில கசப்பான சம்பவங் களைச் சந்தித்தனர். அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களை வைத்து பலர் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நமது நாட்டிலும் அயல் நாட்டிலும் இலங்கையின் நற்பெயரைக்கெடுத்து வருகின்றனர். நான் எடுத்த நட வடிக்கை சரியானதுதான் என்று உலகம் விரைவில் உணரும், சிரியா, லிபியா, எகிப்து போன்ற நாடு களின் இன்றைய நிலை என்ன? நமது நாட்டிலும் எதிரிகளை அடக்க சில நடவடிக்கைகளை எடுக் காவிட்டால் நாமும் அந்த நாடுகளைப்போல் தான் இருந்திருப்போம். இப்போது நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையை நாம் நாட்டின் வளர்ச்சிக் காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிரட்டல்

இங்கு யாரும் மீண்டும் அரசுக்கு எதிராக ஒன்று திரளலாம் என கனவி லும் எண்ண வேண்டாம், மீண்டும் அரசுக்கு எதி ராக யாரும் ஒன்று திரள மாட்டார்கள் என்று நினைக்கிறேன், நமது நாட்டின் எதிரிகள் உல கெங்கும் உள்ளனர். அந்த எதிரிகள் மீண்டும் நாட்டின் அமைதியைக் கெடுக்க சூழ்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் பேச்சுகளைக் கேட்கவேண்டாம். அப்படி கேட்டவர்களின் நிலை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். ஆகையால் மீண்டும் அந்த வரலாறு திரும்ப நீங்களே காரண மாக இருக்கவேண்டும். நீங்கள் சிறுபான்மையினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களுக் கான அக்கறையுள்ள அரசை நான் மட்டுமே அமைக்கமுடியும், நீங்கள் நம்பி இருந்த தமிழ் அமைப்புகள் உங்களுக்குச் செய்தது, போரின் போது கூட ஓடி ஒளிந்தவர்கள் தான் உங்கள் தமிழ் அமைப்புகள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93175.html#ixzz3MUjhmzUG

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்


இன்று டிசம்பர் 20 (1916)
பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்

-குடந்தை கருணா

திராவிடர் இயக்கத்தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரால் துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பார்ப்பனரல்லாதார் அறிக்கையினை, அதன் செயலாளர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள் 20.12.1916 அன்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், சென்னை மாகாணத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியோரின் பிரதிநிதித்துவத்தின் நிலைமை தெரிவிக்கப்பட்டது. சென்னை நிர்வாக கவுன்சிலின் உறுப்பினராக இருந்த சர்.அலெக் சாண்டர் கார்டியூ 1913-இல் பொது நிர்வாக ஆணையத்தின் முன், பார்ப்பனர், ஏனையோர், அரசுப் பணிகளில் எந்த அளவுக்கு வாய்ப்பு பெற்றிருந்தார்கள் என்பதைப் புள்ளி விவரங்களோடு சாட்சியம் அளித்தார்.

அந்த புள்ளி விவரங்களின்படி, 1912-ல் சென்னை மாகாணத்தில், உதவி ஆட்சியர் பதவிகள் 140 அதில் பார்ப்பனர்கள் 77 பேர், பார்ப்பன ரல்லாதார் 30 பேர், இஸ்லாமியர் 15 பேர், கிறித்துவர் 7 பேர், அய் ரோப்பியர் 11 பேர். அதே போன்று, துணை நீதிபதி பதவிகள் மொத்தம் 18, அதில் பார்ப்பனர் 15, பார்ப் பனரல்லாதார் 3 பேர். மாவட்ட முனிசிப் பதவிகள் மொத்தம் 128, அதில் பார்ப்பனர் 93, பார்ப்பன ரல்லாதார் 25, இஸ்லாமியர் 2, கிறித்துவர் 5 மற்றும் அய்ரோப்பியர் 3 பேர்.

இதனை, பார்ப்பனரல்லாதார் அறிக்கையில் தென்னிந்திய நல உரிமை சங்கம், (பின்னாளில் நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) சுட்டிக் காட்டியது.

பார்ப்பனரல்லாதாரின் உடனடிக் கடமை எனும் தலைப்பில், அந்த அறிக்கையில், பார்ப்பனரல்லாதாரில் வசதி படைத்தோர், கல்வி வாய்ப்பை இழந்து நிற்கும் பார்ப்பனரல்லா தாரின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் தங்கள் பங்களிப்பை அளித்திடவும், ஆங்காங்கே, சங்கங் களை அமைத்து இந்தப் பணியைச் செய்திடவும் வேண்டுகோள் விடுத் தது. சமூக, அரசியல் அமைப்புகள் அமைப்பதோடு, பத்திரிக்கைகளை துவங்கி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்திடவும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

பார்ப்பனரல்லாதார் அறிக் கையை தொடர்ந்து, நீதிக் கட்சி துவக்கிய முயற்சியினால், பொதுத் தொகுதியில் 65 இடங்களில், 24 இடங்கள் பார்ப்பனரல்லாத மக்க ளுக்கு என தனி தொகுதி ஒதுக்கீடு பெறும் சட்டத்தை ஆங்கிலேய அரசு 1919 சட்டத்தின்படி அளித்திட காரணமாக இருந்தது.

பார்ப்பனரல்லாதார் அறிக்கையும், நீதிக் கட்சியின் வளர்ச்சியும், பார்ப்பனர்களை அஞ்ச வைத்த நிலையில், அவாளின் தி இந்து பத்திரிகை தனது தலையங்கத்தில், இந்த அறிக்கையை மிக்க வலியுட னும் வியப்புடனும் படித்தோம்; முறையற்ற, திரித்து சொல்லப்பட்ட பல செய்திகளைக் கொண்டுள்ள இந்த அறிக்கையினால், எந்த பயனும் இல்லை; ஆனால், இந்திய சமூகத்தில் மிகப் பெரிய அளவு விரோதத்தை உண்டு பண்ணும் என எழுதியி ருந்தது என்றால், பார்ப்பனரல்லா தார் அறிக்கையின் தாக்கமும், நோக்கமும், நம் மக்களுக்கு எந்த அளவுக்கு மேம்பாடு அளித்தது என்பதை உணர முடியும்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக் கட்சியின் ஆட்சியில்தான், பார்ப்பனரல்லாத, திராவிடர் களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சிறப்பான முன்னேற் றம் அமைந்தது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்று நாம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரி மையைப் பெறுவதற்கு அடித்தள மாக அமைந்தது, நீதிக் கட்சியும், அது வெளியிட்ட நமது உரிமை சாசன மான பார்ப்பனரல்லாதார் அறிக் கையும் என்பதை இன்றைய இளைய தலைமுறை நன்றியோடு நினைவு கூர வேண்டிய நாள் டிசம்பர் 20.

Read more: http://viduthalai.in/page-2/93168.html#ixzz3MUkJWdL2

தமிழ் ஓவியா said...

ஒலி முழக்கங்கள்!


காவேரி, முல்லைப் பெரியாறுகளுக்கு குறுக்கே அணைகள் கட்டப்படுவதை எதிர்த்தும், கீதையை இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவித்துள்ளதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

4. ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் உரிமைகள் கோரும்
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

5. புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

6. பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று பெண்கள் என்று
கூறுகின்ற கீதை கூறுகின்ற கீதை
புனித நூலா? புனித நூலா?

7. பிறப்பில் பேதம் கற்பிக்கும்
பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா? கீதை புனித நூலா?

8. கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை, பிஜேபி அரசை
கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்

9. வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!
மீட்டெடுக்கும் போராட்டம்!

10. காவிரியாற்றின் குறுக்கே
காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க - தமிழ்நாட்டை வஞ்சிக்க
தரைமட்டமாக்கும் தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

11. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும் தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

12. சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது, தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம் - சட்ட விரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

13. வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே! கருநாடக அரசே!
கேரள அரசே, கேரள அரசே
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

14. மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத சட்டவிரோத
கருநாடக அரசின் கருநாடக அரசின்
கேரள அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

15. போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!
போராடுவோம்! போராடுவோம்!

16. குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! குரல்கொடுப்போம்!

17. உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோரிக்கைகள் நிறைவேற
உயரட்டும்! உயரட்டும்!
கோடிக் கைகள் உயரட்டும்!

18. தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

19. வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. போராடுவோம்! போராடுவோம்!
தமிழர் தலைவர் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே தலைமையிலே
போராடுவோம்! போராடுவோம்!

வெற்றி பெறுவோம்! வெற்றி பெறுவோம்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-3/93161.html#ixzz3MUkZPKDD

தமிழ் ஓவியா said...

பெண் போலீஸ்


இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரீட்சார்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப் படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தி யோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்களென்பதே.

போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்

என்று போலீஸ் தலைமை சூப்பிரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-01-1932 தேதி வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது.

இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சியையும் பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்குமென்பதில் சிறிதும் அய்யமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம்.

ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கியவர்கள், அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள், என இதுவரை மதம், கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவைகளின் பேரால் அடக்கி, ஒடுக்கி, மிதித்து, ஆழ்த்திக் கொண்டிருக்கும் சுயநலக் கூட்டத்தார்களுக்கு, வைதிக வெறியர்களுக்குத் தலையில் இடி விழுந்தாற் போல் தோன்றலாம்.

தங்கள் மதமே அழிந்து விட்டதாகக் கருதலாம். ஆனால் கால மாறுதலையும், உலக முற்போக்கையும், பெண்களது அதி தீவிர உணர்ச்சிகளையும், ஒருக்காலும், யாராலும் தடுக்க வியலாது என்பதை அவர்கள் அறியவேண்டும்.

அடுப்பங்கரையே கைலாசம், ஆம்படையானே சொர்க்க லோகம் என்ற எண்ணத்தில் பெண்களை வைத்திருந்த காலம் போய் இன்று பெண் உலகம் தனக்கு ஆடவரைப் போல எல்லா உரிமைகளும் வேண்டும், தாங்கள் எவ்வகையிலும் ஆடவரினும் தாழ்ந்தவரல்லர் இயற்கையாய் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுதந்திரங்களை நல்கவேண்டுமென வீரமுழக்கம் செய்கிறார்கள்.

பெண்கள் உரிமை இயக்கம் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்று வருகின்றது, பெண்கள் படிக்கலாகாது, படித்தால் கெட்டு விடுவார்கள் என்று வாய் வேதாந்தம் பேசிய சோம்பேறிக் கூட்டத்தார் பெண்கள் படித்துப் பட்டம் பெற்று டாக்டர்களாகவும், உபாத்தியா யினிகளாகவும், தாதிகளாகவும், வக்கீல்களாகவும் இருப்பதைக் கண்டு என்ன செய்து விட்டார்கள்.

அஃதே போல் சாரதா சட்டமோ இளமை மண தடுப்புச் சட்டமோ பிரஸ்தாபத்திற்கு வந்தபோது மதம்போச்சு என்று கத்தியது தவிர கண்ட பலன் ஒன்று மில்லை. அது போலவே இன்றும் பெண்களாவது போலீசில் சேரவாவது என்றும் சொல்லலாம். ஆனால் பெண்கள் அவர்களது சுயநல எண்ணத்தை மெய்ப்பிக்கத் தக்கவாறு நடந்து கொள்ளல் வேண்டும்.

சுமார் 2 வருஷ காலத்திற்கு முன்பிருந்த அகில இந்திய மாதர் சங்கத்தார் பெண்கள் போலீசில் சேர்க்கப்படல் வேணடுமென வற்புறுத்தி வருகிறார்கள். மேல் நாடுகளில் பெண் போலீசார் துப்பறிவதிலும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் அதிக சாமர்த்தியம் வாய்ந்திருக்கிறார்களென்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையால் இன்று தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற பெண் மக்கள், தங்கள் சுதந்திரத்திற்காக வாதாடும் பெண்மக்கள், தங்கள் சமத்துவத்திற்காக விழையும் பெண்மக்கள் சர்க்காரால் கொடுக்கப்பட்ட இவ்வரிய சந்தர்ப்பத்தை என்ன செய்யப் போகின்றார்கள்?

சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினிலே பெண்கள் செய்ய வந்தோம் என்ற கவி பாரதியாரின் வீர மொழிகளை மெய்ப்பிப்பார்களா?

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 24.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUl1w8OK

தமிழ் ஓவியா said...

காலஞ் சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரிண்டடெண்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில், சிறந்த ஆராய்ச்சி யுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார்.

இவர் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டா யிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதி யால் இறந்தது பெரும் நஷ்ட மேயாகும்.

இவரை இழந்து வருத்தமடையும், அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர் களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUlD6DKM

தமிழ் ஓவியா said...

திராவிடர்களுக்கு அரசியலும் பயன்பட வில்லை; மதங்களும் பயன்படவில்லை; தர்மங்களும், மதப் பிரச்சாரங்களும் பயன்தர வில்லை. மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத தெளிவுபடாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlUbSnY

தமிழ் ஓவியா said...

தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் மறைவு! கழகத் தலைவர் இரங்கல்


திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளர் - எழுத்தாளருமான தோழியர் மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் (வயது 81). நேற்றிரவு சென்னை பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை நமக்குக் கிடைத்தது.

தாங்கொணாத வேதனையையும், துன்பத்தை யும் இதன்மூலம் அனுபவித்து ஆறுதல் கிடைக் காத நிலையில், துயரம் நம்மைத் துளைக்கிறது.

இருமுறை வீட்டில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், அவரை எப்படியும் குணமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சிகளில் முதல்முறை வெற்றி கிடைத்தது; இரண்டாம் முறை தோல்வி அவரது மரணத்தை நம் இயக்கக் குடும்பத்தின்மீது விழச் செய்தது!

கொஞ்ச காலமாகவே அவரது உடல்நலம் குறைந்த நிலையிலும் அவர் இயக்கப் பணிகளி லிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு, ஓய்வெடுக் கிறேன் என்று சொன்னது கிடையாது. வழக்கம் போன்ற உற்சாகம், எவரையும் பாராட்டிடும் பண்பு - மேடைகளில் ஆற்றொழுக்காகப் பேசிடும் அவர், இளவயதிலேயே மேடை ஏறிய பயிற்சி பெற்றவர். இதற்குக் காரணமானவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அவரது அருமைத் தந்தை கேளம்பாக்கம் மானமிகு பொன்னுசாமி அவர்கள்.

டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களின் வாழ்விணையராக தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வாழ்க்கை ஒப்பந்த விழா அவருடையது. திருமணமான நிலையிலேயே தமது துணைவர் ஏ.பி.ஜே.யுடன் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்ற கொள்கை வீராங்கனையாவார்.

அவரது வாழ்விணையர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்த போதுகூட, இவர் திராவிடர் கழக உணர் வாளராகவே தொடர்ந் தார். தனது வாழ் விணையரையும் நன்கு கவனித்துக் கொண்டார்.

அவரது கொள்கை உறுதி, சாவைக் கண்டு ஒருபோதும் கலங்காத துணிவு, மகளிரிடத்தில் சலிப்பில்லாது கொள்கைப் பிரச் சாரம், எவரிடத்திலும் எதையும் கேட்காத பெருந் தன்மை, இனிய சுபாவம் - எல்லாவற்றிற்கும் மேலாக அடக்க சுபாவம் - இவை நம்மால் என்றும் மறக்க இயலாத ஒன்று.

அவரது மரண சாசனத்தை அவர் முன் கூட்டியே தயாரித்து வைத்தார்.

அதில் திட்டவட்டமாக சில செய்திகளை அன்புக் கட்டளையாக வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனைக்குத் தனது உடல் கொடை யாக அளிக்கவேண்டும் என்றே ஆணையிட்டார்.

எனவே, அவரது பெருவிருப்பத்தை நிறை வேற்றி வைப்பது நமது கடமை.

மகளிரில் இப்படிப்பட்ட ஒரு மாணிக்கம் கிடைப்பது அரிது! அரிது!

அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்!

தஞ்சை
20.12.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/93198.html#ixzz3MUluxtnV

தமிழ் ஓவியா said...

சென்னை பெரியார் திடலில் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாரின் உடல் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது!


திராவிடர் கழக மகளிர் அணியின் மூத்த வீராங்கனையாகத் திகழ்ந்த ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் உடல் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு 21.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு வைக்கப்படும். முற்பகல் 11.30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவமனைக்கு மறைந்த அம்மையாரின் மரண சாசனப்படி அவரது உடல் ஒப்படைக்கப்படும்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/93197.html#ixzz3MUmAkpET

தமிழ் ஓவியா said...

திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!


திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!

ஆனந்த விகடன் தமிழ் வார ஏட்டின் நீண்ட நாள்கள் ஆசிரியராக இருந்தவரும், பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க நான் சிறை செல்லவும் தயார் என்று கூறி, தனது ஏட்டின் தலையங்கத்திற்காக தமிழக சட்டமன்றத் தலைவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் - வானளாவிய அதிகாரம் தனக்குண்டு என்று கூறி, தண்டித்த நேரத்தில், துணிந்து சிறைவாசம் ஏற்ற தீரருமான திரு.எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் துயரமான செய்தியாகும். (அன்று நாம் இதற்காக அவரை விகடன் அலுவலகம் சென்று பாராட்டி வந்துள்ளோம்).

பத்திரிகை உலகில் நீண்ட காலமாக நகைச்சுவை - அரசியல் ஏடாக திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களது சீரிய தலைமையின்கீழ் வந்த ஏடு இன்று மூன்றாவது தலைமுறையின் ஆளுமையால் நடத்தப்படுவதாகும்.

திரு.வாசன் அவர்கள் தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்பும், பற்றும் கொண்டவர்; அதுபோல், தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவரும்கூட - பச்சை அட்டை குடிஅரசு நடந்த காலம் முதற்கொண்டே!

திரு.பாலசுப்பிரமணியம் அவர்களது இல்லத்தில் ஜாதி, மத மறுப்புத் திருமணங்களும் நடைபெற்ற நிலையில், அந்த பெருந்தன்மையோடு ஏற்ற முற்போக்கு சிந்தனையாளர்.

மற்ற கொள்கைகளில் நமக்கும், விகடன் கொள்கைக்கும், மாறுபாடு உண்டு என்றாலும், மனிதநேய அடிப்படையில் அவரது மறைவு மிகப்பெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்!

நல்ல மனிதராக வாழுவது, தன் காலத்திலேயே தனக்கு அடுத்த தலைமையை உருவாக்கி செப்பனிடுவது என்ற தத்துவத்திற்கு திரு.எஸ்.எஸ்.வாசனைப் பின்பற்றி, திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஓர் நல்ல முன்மாதிரியான எடுத்துக்காட்டாவார்!
திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை குழுமத்தின் சார்பிலும், அவரது மறைவினால் வாடும் வருந்தும், அவரது மகன் சீனுவாசன் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

20.12.2014

Read more: http://viduthalai.in/page-8/93143.html#ixzz3MUmKEgxh

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.
மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page3/93147.html#ixzz3MUnz7N4E

தமிழ் ஓவியா said...

இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு?


திருவல்லிக்கேணியில் ஒரு கோயில் வளாகத்துக்கு பின்புறம் அரச மரம் உள்ளதாம். இந்த அரச மரத்தில் தொட்டில் கட்டி பெண்கள் வேண்டுதல் வைப்பார்களாம். காலம் காலமா நிக்குற அந்த மரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் தொட்டில் கட்ட வந்த போது, மரத்தில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிலை இருப்பது அவருக்கு தெரிந்ததாம்.அவர் கோவில் நிர்வாகத்தில் அறிவிக்க, அவர்கள் அதற்கு மாலை போட்டு, கம்பி வேலி அமைத்து, வரிசையில் பக்தர்களை வணங்க அனுமதி செய்கிறார்களாம்..செக்யூரிட்டி வேறு நியமித்து உள்ளார்களாம்.

உலகில் வேறு எங்கேனும் இப்படிபட்ட அதிசயங்கள்.. மரங்களில் நிகழ்கிறதா என தேடி பார்த்தபோது, அமெரிக்காவில் கூட சில மரங்கள் இப்படி இருப்பது தெரிய வந்ததது ..ஆனால் பாவம் அறிவில்லாத அமெரிக்க மக்கள் ..மரபட்டைகளில் என்னும் ஒரு திசு அதிகமாக உருவாவதால் இப்படிப்பட்ட தோற்றங்கள் உருவாகி இருப்பதாக நம்பி வருகின்றனர்.. ஆயிரம் சொன்னாலும்..நம்மோட முன்னோர்களின் அறிவு வேற எந்த நாட்டுகாரனுக்கும் வராது (?) என தெரிந்து, உணர்ந்து கொண்ட தருணம் இது.

Read more: http://viduthalai.in/page4/93150.html#ixzz3MUoOYBb2

தமிழ் ஓவியா said...

மீண்டும் ஒரு செஞ்சோலையா?


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் நடந்த தாக்குதலில் 120க்கும் மேற் பட்ட குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொல் லப்பட்டனர், பள்ளிக்கூடத்தில் நடந்த இந்தத்தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரி வித்திருக்கிறது. பள்ளியில் தாக்குதல் நடத்துவது என்பது இன்றல்ல நேற்றல்ல பள்ளிக்கூடத்தாக்குதலில் தமிழர்கள் அடைந்த வேதனையை இந்த நிமி டத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் சிங்களப்படையினரின் தாக்கு தலில் பெற்றோரை இழந்த சுமார் 300 குழந்தைகள் ஈழத்தில் செஞ் சோலை என்னும் அழகிய காப் பகத்தில் தங்கி பயின்று வந்தனர். அங்கு 3 மாதக் குழந்தை முதல் 15 வயது குழந்தைகள் வரை தங்கி பயின்று வருகின்றனர். இது குறித்து நார்வே தூதர் இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (8 ஜூலை 2006) கொழும்பில் நடந்த ஒரு பத் திரிகையாளர் சந்திப்பில் செஞ் சொலைக் காப்பகம் மற்றும் அங்கு படிக்கும் குழந்தைகள் பற்றிக் கூறினார். அப்போது செஞ்சோலை நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.

இயற்கையான சூழ்நிலையில் அமைதியாக தங்கி பயின்றுவரும் அப்படங்களில் உள்ள காட்சிகள் கண்களைவிட்டு அகலும் முன்பே ஆகஸ்ட் 15 தேதி ஒரு துயரமான செய்தி ஒன்று படங்களுடன் வெளி வந்தது. செஞ்சோலை காப்பத்தை குறி வைத்து சிறீலங்க விமானப்படை குண்டுவீசியது. சுமார் 3 ஏக்கர் பரப் பளவுள்ள அந்த காப்பகத்தின் மீது மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காப்பகம் முழுவதும் அழிந்தது. சிங்கள பத்திரிகைகள் 61 குழந்தைகள் மற்றும் 25 காப்பகப் பணியாளர்கள் மரணம் மற்றும் 110 பேர் படுகாயம் என்று எழுதியிருந்தது. புலிகளின் குரல் என்ற பத்திரிகை 110 குழந்தைகள் 17 காப்பகத்தினர் மரணம் என்று கூறினர். ஆனால் ஒன்று மட்டும் உண்மை; இரண்டு சிங்கள விமானப்படை விமானங்கள் காப்பகத்தை துல்லியமாக குறிவைத்து தொடர்ந்து 6 குண்டுகளை வீசியது.

காப்பகத்தின் மீது குண்டுகள் வீச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு பதுங்கு குழிகள் அமைக்கப் படவில்லை, காப்பகத்திற்கு வெளியே இருந்த பதுங்கு குழிகளில் அருகில் உள்ளவர்கள் பதுங்கியதால் தப்பித் தனர். மனித குலமே தலைகுனிந்த இந்த சம்பத்திற்கு உலக நாடுகள் எல் லாம் அமைதிகாத்தன. இந்த சம்பவம் குறித்து அன்றைய தமிழக பத்திரி கைகள் கூட தலைப்புச்செய்தியாக இல்லாமல் பொத்தாம் பொதுவாக எழுதியிருந்தன.

இன்று பாகிஸ்தானிலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கிஞ்சிற்றும் மனிதாபிமானற்ற இச்செயல் பேரினவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் என்ற பெயரில் நடைபெறு கிறது, அன்று செஞ்சோலை நிகழ்வை உலக நாடுகள் கடுமையாக கண்டித்து சிங்களப் பேரினவாத அரசின்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று பாகிஸ்தானில் குழந்தைகள் மீது தாக் குதல் நடத்த துணிந்திருப்பார்களா?

Read more: http://viduthalai.in/page8/93154.html#ixzz3MUp0XFcC

தமிழ் ஓவியா said...

திருமதி தயாசின்கின்

திருமதி தயாசின்கின்

நவம்பர் 26 (1949) இந்திய வரலாற்றில் - அரச மைப்புச் சட்டம் இறுதியாக் கப்பட்ட நாள் என்றால், அதே நவம்பர் 26 (1957) அரசமைப்புச் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி அந்தப் பகுதியைப் பகிரங் கமாக எரிப்பதற்குத் தந்தை பெரியாரால் ஆணை யிடப்பட்ட வரலாற்றுக் குறிப்பு நாள் நமக்கு. அந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் 10 ஆயிரம்பேர் பங்கு கொண்டனர் என்ற வரலாறு கேட்டால் மெய்ச் சிலிர்த்து விடும்.

இவ்வாண்டு அந்த நவம்பர் 26 அன்று தாம் பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிக வும் பொருத்தமாக ஒரு நூலை எடுத்துக்காட்டிப் பேசினார். அந்த நூலின் பெயர் ‘Caste to Day’ (1962) அதன் - ஆசிரியர் தயாசின் கின்(Tayazin kin) என்ற அம்மையார். இவர் யார்?

இலண்டன்லிருந்து வெளிவந்த தி எக்னா மிஸ்ட் மற்றும் சார்டியன் இதழில் செய்தியாளராக இந்தியாவில் சிறப்பாகப் பணி புரிந்தவர். அந்த நூலி லிருந்து சில பகுதிகளை ஆசிரியர் அவர்கள் அழ காக எடுத்துக் காட்டி யிருந்தார்.

அதில் இன்னும் சில கற்கண்டு துண்டு போல சில உண்டு.

சராசரி இந்து ஒருவர் சாதியைக் கடைப்பிடிப்ப தன் நோக்கம் என்னவென் றால், அவரது மதம் அவரை அவ்வாறு செய்யச் சொல் கிறது என்று நம்புவதன் காரணமேயாகும்.

சாதிக்கு முழு ஆதா ரம், பார்ப்பனர் என்பது மலை போன்ற உண்மையா கும். வாழ்க் கையில் புதிர் போன்ற அறிவு, மந்திர தந்திர சாவி களை எல்லாம் வைத் திருப்பது பிரா மணன்தான். வெறும் மதவாதியாகக் குடியேறிய அவர்களின் ஆதிக்கம் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் அசைக்க முடியாததாக இருக்கிறது. மத்திய கால ஜெர்மனியில் சர்ச்சுக்கு இருந்த ஆதிக் கத்தை இத்துடன் ஒப் பிடலாம்.

சாதி மனிதனின் வாழ்க்கையை ஆள்வது மட்டுமல்ல; அவன் வாழும் சமுதாயத்தில் அவனது இடத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது (பக்.6). கல்வி என்பது தங் களுக்குரிய ஒன்றே என்று பிராமணன் பரம்பரை பரம்பரையாக நினைத்துச் செயல்பட்டானே தவிர, ஜன சமுதாயத்தின் மற்ற பகுதி யினருக்கு மறுத்து, மற்றவர் களும் கல்வி தங்களுக்குரியது ஒன்று நெடுங்காலமாக ஆழமாக எண்ணி ஏற்கும் படிச் செய்யாததே நாட்டில் எழுத்தறிவு பரவுவதற்குப் பெருந் தடையாக உள்ளது (பக்.63). இந்துத்துவா பேசும் வெறி யர்களின் கண்கள் திறக்குமா? வெளி நாடு களில் இந்தியர்களின் மானம் கப்பலேறுவது பற்றி காவிக் கூட்டம் எங்கே கவலைப்படப் போகிறது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93221.html#ixzz3MX1eEor3

தமிழ் ஓவியா said...

ஒரு முக்கிய வேண்டுகோள்


கழகத் தோழர்களுக்கும், கழகக் குடும்பத்தவர்க்கும், பகுத்தறிவாளர்களுக்கும், சுயமரியாதை உணர்வாளர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 41ஆம் ஆண்டு நினைவு நாளை (24.12.2014) யொட்டி, சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து சரியாக காலை 8.30 மணிக்கு கருஞ்சட்டைத் தோழர்களும், பகுத்தறிவாளர்களும், இன உணர்வாளர்களும், ஒரு பேரணி யாகப் புறப்பட்டு - ஓர் அமைதி ஊர்வலமாக பெரியார் திடலுக்கு வருகின்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் குடும்பம் குடும்பமாக இருபாலரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

ஊர்வலம் கட்டுப்பாட்டுடன் அமைதிப் பேரணியாக நடைபெறும்.

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93231.html#ixzz3MX1qm64K

தமிழ் ஓவியா said...

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் விரும்பியபடி...

திராவிடர் கழக வீராங்கனை ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனப்படி அவரின் உடலுக்கு யாரும் மலர்மாலை வைக்கவில்லை; மாலை வாங்கி வந்தவர்களும் கட்டுப்பாடு காத்து அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலைக்கு அணிவித்தனர். அம்மையார் அவர்களின் விருப்பப்படி மாலைகளுக்குப் பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை அளிக்கும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் தோழர்கள் அளித்த நன்கொடை ரூ.25,021.

Read more: http://viduthalai.in/page-3/93256.html#ixzz3MX2VDSRS

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில்
மத்திய அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதையும், வருணாசிரம நூலான பகவத் கீதை, இந்திய தேசியப் புனித நூலாக அறிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்தும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாள்: 22.12.2014 (திங்கள் கிழமை) நேரம்: காலை 11 மணி

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தலைமை: க.பார்வதி

முன்னிலை: க.திருமகள், கு.தங்கமணி, உமா, ராணி ரகுபதி, வனிதா

தொடக்கவுரை: வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி

கருத்துரை: மேரி அக்சீலியா

முழக்கம்: இறைவி

Read more: http://viduthalai.in/page-3/93261.html#ixzz3MX2dLgXO

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவுத் தெளிவை ஏற்படுத்தியவர் பெரியார் கவிஞர் நந்தலாலா புகழாரம்

திருச்சி, டிச. 21- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணியாளர் கூட்டமைப்பின் நான் காவது கூட்டம் நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்ய அரங்கில் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 12-12-2014 வெள்ளி மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங் கிணைப்பாளர் பேராசி ரியர் ப.சுப்பிரமணியம் அவர் கள் அறிமுக உரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினராய் வருகை புரிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செய லாளர். கவிஞர் நந்தலாலா அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர 15.-11-.2014 முதல் 12.-12.-2014 வரை உள்ள நாட்களில் பிறந்தநாள் கொண்டாடிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமி ழாசிரியை திலகவதி, நடன ஆசிரியை பிரான்ஸிட்டா, முதுகலை பொருளியல் ஆசிரியை இருதய இச பெல்லா, பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியை லெட்சுமி,

அலுவலக உதவி யாளர் செல்வி. யாழினி, பெரியார் மருந்தியல் கல் லூரியின் ஆய்வக உதவி யாளர் தனலட்சுமி, சின் னப் பொண்ணு, மகேஸ்வரி. பெரியார் சமூகதொடர் கல்வியியல் கல்லூரியின் அலுவலக உதவியாளர் கீதா, நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்யத்தின் பணியாளர் சரஸ்வதி ஆகியோர் தங்கள் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக் காகவும் பிறந்த நாள் கேக் வெட்டி பயனாடை அணி வித்து சிறப்பு செய்யப் பட்டது.

நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடிய பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை திலகவதி பேசிய பொழுது தினமும் பல்வேறு பணிகளுக் கிடையே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது போன்ற கொண்டாட்டங் களும், நிகழ்ச்சிகளும் உறு துணை செய்வதாகக் கூறினார்.

மேலும் முது கலை பொருளியல் ஆசிரியை திருமதி இருதய இச பெல்லா பேசுகையில், வயிற்றுக்கும், சிந்தைக்கும் விருந்தளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருப்பதாகக் கூறியதோடு இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவ தற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று வளாக ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசி ரியை லெட்சுமி தனது மலரும் நினைவுகளை எடுத்துக்கூறி நமது கல்வி வளாகம் தம்மை குடும் பத்தில் ஒருவராக நினைத்து சுக துக்கங்களில் அரவ ணைத்து நடத்தியதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரி அலுவலக உதவி யாளர் சின்னபொண்ணு பேசுகையில்:_

இப்பிறந்தநாள் கொண் டாட்டம் ஒரு புதுவித அனுபவம் என்று கூறி இவ்வாய்ப்பை ஏற் படுத்தித் தந்த பணியாளர் கூட்ட மைப்பு மற்றும் ஒருங்கி ணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ் ணன் வரவேற்புரை நிகழ்த் தினார். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் நந்தலாலா சமூகம் உயர்த்திப் பிடித்த விசயங் களைப் போட்டு உடைத்து மக்களுக்கு அறிவுத் தெளி வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர் தான் பெண்களுக்கு முழு உரிமை யும் பெற்றுத்தர போராடி வென்றவர்.

அத்தகைய பெரியாரைப் பற்றி படிப் பவரும் பின்பற்றி நடப்ப வரும் தன்னை சரி செய்து கொள்கின்றனர் என்று கூறி ஆசிரிய மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும், வகுப்பறை நிர்வாகம் குறித்த தகவல்கள் பகுத்தறிவு சிந்தனையின் அவசியம் போன்றவற்றைத் தமக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு எடுத்துரைத் தார்.

நிகழ்ச்சியின் இறுதி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் துணை முதல்வர் வி.திலகம் நன்றி கூற விழா இனிதே நிறை வுற்றது. நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளா கத்தில் உள்ள கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் தலை மையாசிரியர்கள், பேராசி ரியர்கள், ஆசிரிய, ஆசிரி யைகள், அலுவலகப் பணி யாளர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண் டனர்.

Read more: http://viduthalai.in/page-7/93230.html#ixzz3MX33u9ex