Search This Blog

1.5.09

மருத்துவர் இராமதாசு அவர்களின் "வீர தீரப் பராக்கிரமம்"

மருத்துவரின் "வீர தீரப் பராக்கிரமம்"

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் என்ற வரிகளைச் சுட்டிக்காட்டிய பா.ம.க. நிறுவனர், தி.மு.க. தலைவரும், நடுவண் உள்துறை அமைச்சரும் கூட்டாக நடத்தி முடித்திருக்கும் இந்த உண்ணாநிலை நாடகம் இந்த வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது" என்று கூறினார்.

காலை 6 மணிக்கு காலை உணவுக்குப் பிறகு உண்ணாநிலையை தொடங்கிய தி.மு.க. தலைவர், நண்பகல் உணவு நேரத்தின்போது உண்ணாநிலையை முடித்துக் கொண்டி ருக்கிறார். இலங்கையில் போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்ற பொய்யான அறிவிப்பை வெளியிட்டு தனது உண்ணாநிலையை அவர் முடித்துக் கொண்டிருக்கிறார்.

-------------------"தமிழ்ஓசை", 28.4.2009, முதல் பக்கம்

85 வயதைக் கடந்த பெரிய அறுவை சிகிச்சை நடைபெற்று, முழு குணம் அடையாத நிலையில் ஈழத் தமிழர்களுக்காக காலவரையற்ற உண்ணா விரதத்தை மேற்கொண்ட ஒரு தலைவரைப்பற்றி இவ்வளவுக் கிண்டல்!

காலை உணவுக்குப் பின் வந்து நண்பகல் உணவு நேரத்தின்போது உண்ணா நிலையை முடித்துக் கொண்டுவிட்டாராம் முதலமைச்சர் கலைஞர்.

போராட்டம் நடத்துவதிலும், அதற்காகச் சிறைக் கொட்டடியில் உழல்வதிலும் அசகாய சூரர் மருத்துவர் இராமதாசுதான் இவ்வாறு கூறுகிறார்.

இவரது வீர தீர பராக்கிரமமான, போர்க் குணமும், சிறையேகும் தியாகத் தீபமும் எத்த கையது? எப்பொழுது நினைத்தாலும் உடம்பின் அணு ஒவ்வொன்றும் அப்படியே சிலிர்த்துப் போய்விடும் - போங்கள்!

மருத்துவரின் ஆருயிர் சகோதரி வாயிலாகவே அந்த வீர தீர பராக்கிரமத்தைப் பறைசாற்றுவோம்.

ராமதாசுக்குப் புரியும்படி சொல்லவேண்டுமென்றால், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் டாக்டர் ராமதாசு ஒருமுறை கைது செய்யப்பட்ட போது ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கை வருமாறு:

ஒரு சில தலைவர்களுக்குக் கூட்டம் போடத் தெரியும். ஊர் வலம் நடத்தத் தெரியும். தொண் டர்களைத் தூண்டிவிட்டு வன்முறையிலே ஈடுபடச் செய்து, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவும் தெரியும். ஆனால், காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டால், அவர்கள் பேசிய வசனங்கள் காற்றில் பறந்தோடிவிடும். தொண்டர்களின் நினைவு மறந்துவிடும். சிறையின் சவுகரியங்களை சிறிதுநேரம்கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், எப்படியாவது வெளியே வந்துவிடத் தோன்றும். அதற்குத் தயாராக இடுப்பு வலி, தலைவலி, திருகு வலி, நெஞ்சு வலி என்று இதுவரையில்லாத வலிகள் எல்லாம் திடீரென முளைத்துவிடும். டாக்டர் ராமதாசை கைது செய்து ரிமாண்டு செய்யும்பொழுது, அதை எப்படியும் தடுக்கவேண்டுமென்ற எண்ணத்தில் திடீரென இடுப்பு வலி, நெஞ்சு வலி என்று மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அங்கு மருத்துவப் பரிசோதனையிலே அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்பு காவலர்கள் அவரை ரிமாண்டு செய்ய முற்பட்டவுடன், வேறு வழியின்றி சிறையில் உள்ள சவுகரியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும், பழகிப் போன சுகங்களை விட்டுக் கொடுக்க முடியாமலும் தன்னை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி தனது மனைவி மூலமாக எனக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறார். டாக்டர் ராமதாசின் மனைவி எனக்கு அளித்துள்ள வேண்டுகோளையேற்று, ஒரு பெண்மணியின் துயரை இன்னொரு பெண்மணியால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதால், டாக்டர் ராமதாசை உடனடியாக வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளேன் என்றாரே - மருத்துவரின் அன்புச் சகோதரியும், அன்றைய முதலமைச்சருமான மாண்புமிகு ஜெயலலிதா.


வீராதிவீர ராஜமார்த்தாண்ட பூபதியின் வாய் வீச்சுக்கும், செயலுக்கும் இடையில் உள்ள தூரம் திண்டிவனத்துக்கும், கொடநாட்டுக்கும் இடையில் உள்ள அளவு இருக்குமோ!

(மேலும் பல சுவையான தகவல்களுக்கு "மருத்துவருக்கு (டாக்டர் இராமதாசுக்கு) தேவை மருத்துவம்" என்ற நூலை வாங்கிப் படியுங்கள். நன்கொடை ரூபாய் வெறும் 5 மட்டும் தான்).


---------------- "விடுதலை" 30-4-2009

6 comments:

bala said...

//மருத்துவரின் "வீர தீரப் பராக்கிரமம்"//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

மருத்துவரின் வீரம் புல்லரிக்க வைக்கிறது.ஆனால் அதைவிட தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ,காலை உணவுக்கும்,மதிய உணவுக்கும் இடையில் இது வரை, எட்டு முறை தலா 3 மணி நேரம் உண்ணவிரதம் இருந்து பார் வியக்கும் வண்ணம் பராக்கிரம செயல்கள் பல புரிந்த மஞ்ச துண்டு,அந்த மூஞ்சிக்கு விளக்கு புடிக்கும் வீரச் செயலை சளைக்காமல் செய்து வரும் சூரமணி அய்யா,மற்றும் சூரமணி பாசறை பிரியாணிக்காக கோரமாக குரைத்து வரும் மின்சாரம்,தமிழ் ஓவியா போன்ற தூய திராவிட வீர நாய்களின் முன்னால் மருத்துவரின் வீரம் கால் தூசு பெறாது.கவலை வேண்டாம் பாசறை நாய்களே.நீங்கள் வீரத்தோடு குரைத்துக் கொண்டிருங்கள்.

ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம்.தமிழகத்தில் "திராவிட" என்ற கீழ்த்தரமான சொல் இல்லாமல் கட்சி ஆரம்பித்து ஓரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றது அஞ்ச நெஞ்சன் மருத்துவர் அய்யா தான். அதைப் பாராட்டலாம்.

பாலா

அது சரி பாசறை நாய்களே.அது ஏன் தாடிக்கார தீவிரவாதி அய்யா, மஞ்ச துண்டு அய்யாவின் கனவில் மட்டும் வந்து அவ்வப்போது ஏதாவது உளறி விட்டுக் போகிறார்,சூரமணியின் கனவில் ஏன் வருவதில்லை?கேள்விக்கு தவறாமல் பதில் குரைக்கவும்.

அறம் செய விரும்பு said...

"இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகின்றன. இலங்கை பிரச்சினை வெளிநாட்டு பிரச்சினை. அந்த பிரச்சினையை மாநில அரசால் தீர்க்க முடியாது. அதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஈழப்பிரச்சினை ஒரு இனத்தின் வாழ்வுரிமை பிரச்சினை. இதில் அக்கறையோடு இருக்க வேண்டும். இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி புரிந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசு ராணுவ உதவி செய்தது என்று இலங்கை கூறுவது அந்த அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை காட்டுகிறது.'' ---திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி


///இனப்படுகொலை நடத்தியது நாங்கள் தான், பிரணாப் ஒப்புதல் வாக்குமூலம்
சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு
பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,
கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.
ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.
இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது. இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.
இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?
இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.////http://jothibharathi.blogspot.com/2009/05/blog-post.html

Thamizhan said...

ராமதாசின் சூழ்ச்சிக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போகிறார்கள்.அவருடைய கதை முடிவடையப் போகிறது.

கீழ்ப்பாக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ள கூழைக்கும்பிடு தனது நரித்தனத்தில் ந்டுத் தெருவில் மீண்டும் அசிங்கம் செய்ய வந்துள்ளது பரிதாபம்.

இந்திய மக்கள் மன்றத்திலேயே பல முறை நாங்கள் ராணுவ உதவி செய்யவில்லை என்று உறுதி அளித்த மேதை மன்மோகனும்,பிரணாபும் மக்களால் காரித்துப்பி அனுப்பப்படப்
போகிறார்கள்.

bala said...

//என்று உறுதி அளித்த மேதை மன்மோகனும்,பிரணாபும் மக்களால் காரித்துப்பி அனுப்பப்படப்//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழன் அய்யா,

ஆனாக்க மஞ்ச துண்டு மாமன்னன்,மற்றும் மன்னனுக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைக்கும் முண்டம் சூரமணி போன்றவர்கள் மேல் மக்கள் காறித் துப்பமாட்டார்கள், கரெக்ட்?அடேங்கப்பா.

பாலா

கரிகாலன் said...

மருத்துவரின் வீரம் ஒரு பக்கம் இருக்கட்டும். கைதுக்கு அஞ்சாத அஞ்சாநெஞ்சன் கருணாநிதியை செயலலிதா அரசு கைது செய்தபோது “அய்யோ கொல்றாங்கப்பா!” அப்படின்னு டிப்பிங் கொடுத்து சன் டி.வியில நால்முழுவதும் ஒப்பாரி வைத்தார்களே! அது என்ன சூராதி சூரர்களின் மேன்மையான செயலா?

கருணாநிதியை கைது செய்த முறையை நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் கண்டித்தபோதும், புரவலர் வீரமணியார் மட்டும்தான் அதற்காக வக்காலாத்து வாங்கி பேசினார். கருணாநிதியையும் கிண்டலடித்தார். யோவ்! உன் மானமே ஒட்டுத்துணியில்லாம அந்தரத்தில் பறக்குது இதுல அடுத்தவங்கள குறைசொல்ல வந்துட்டியா?

தமிழ் ஓவியா said...

கரிகாலன் சரியாக ஆஜர் ஆகிவிட்டார்