![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirm0SW4ifOM8al9PFm9x01S0WX74B69g1Ssr_0sEMZVi-7SRXff-F8UasikMFvceSptuGaDcGw6eZ6QWOtl2N4b-cW7M0kMZ1z8BGHHYG9yLu8LWCw1xV2rUu635_I7W-5zzoFPf4PiH8/s400/tamiloooviyaaa.jpg)
என் துணிவு
நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.
நான் கண்டதை, அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.
---------------------சாமிமலையில், 24.1.1960இல் தந்தைபெரியார் அவர்கள் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960
0 comments:
Post a Comment