Search This Blog

10.3.09

ஈழத் தமிழர்களுக்காக பார்ப்பனர்கள் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை


"தினமணி" அழுகிறதோ!


"தினமணி" ஏட்டின் இன்றைய தலையங்கத்தின் ஒரு பகுதி:

"ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நார்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்கா வது உண்மையான அக்கறையுடன் நாம் செயல் பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அர சியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால், வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்."

"தினமணி" தலையங்கத்தின் ஒரு பகுதி இது.

கார்ட்டூன்

இன்றைய "தினமணி" இன்று வெளியிட்ட கார்ட்டூன் என்ன கூறுகிறது? இரு முதலைகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

அ.தி.மு.க. முதலை: நானும் அழுகிறேன்.

தி.மு.க. முதலை: நான் ரொம்ப நாளாவே அழறேன்.


பொதுவாக ஈழத் தமிழர்களுக்காகத் தமிழர்கள் நீலிக் கண்ணீர் வடிப்பதாக தினமணி கூறுகிறது.

"தினமணி" இது வரை என்ன கண்ணீர் வடித்திருக்கிறது?

கிளிசரின் கண்ணீரா?

ஒன்று மட்டும் உண்மை. எந்தப் பார்ப்பனரும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவில்லை என்பதுதான் அது.

"இந்து", "துக்ளக்", "கல்கி" வகையறாக்கள் ஆனந்தக் கண்ணீர்தானே வடித்துக் கொண்டு இருக்கின்றன.

ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்காக அ.தி.மு.க.வையும், தி.மு. க.வையும் சம நிலையில் நிறுத்தி, அதேநேரத்தில், தன் வயிற்றெரிச்சலையும் கொட்டும் வகையில் விஷமத்தோடு இந்தக் கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

-------------------நன்றி:-"விடுத்லை" 9-3-2009

6 comments:

வால்பையன் said...

அப்போ கண்ணீர் வடிக்காதவனெல்லாம் பார்ப்பனர்களா?
சும்மா ஒரு டவுட்டு தான்!

தமிழ் ஓவியா said...

விஷமத்தோடு தினமணி கார்ட்டூன் போட்டுள்ளதை சுட்டிக்காட்டினால்.

விஷமத்தனம் செய்யும் பார்ப்பனர்களுக்கு வால்பையன் வக்காலத்து வாங்குவது எந்த வகையில் சரியானது"

வால்பையனுக்கு ஒருவேளை அனுமாருக்கு (குரங்கு) இருப்பது போல் வால் இருக்குமோ?

இதுவும் ஒரு அய்யப்பாடுதான்

(உங்கள் பாணியில் சும்மா கேட்டுள்ளேன்)

வால்பையன் said...

//வால்பையனுக்கு ஒருவேளை அனுமாருக்கு (குரங்கு) இருப்பது போல் வால் இருக்குமோ?//

அனுமார் என்பது கற்பனை பாத்திரம் ராமரை போலவே!
அப்படியே என்னை எதாவது கற்பனை பாத்திரத்துடன் ஒப்பிடவேண்டுமென்றால் hellboy படத்தில் வரும் கதாபாத்திரத்துடன் ஒப்பிடுங்கள்.

ரெண்டு கொம்புடன் வாலும்!
சேட்டையும் அதிகம்!

தமிழ் ஓவியா said...

//அனுமார் என்பது கற்பனை பாத்திரம் ராமரை போலவே!///

நன்றி வால்பையன்.

//ரெண்டு கொம்புடன் வாலும்!
சேட்டையும் அதிகம்!//

அது விலங்கினமா? மனித இனமா?

( சும்மா அய்யப்பாடுதான் )

வால்பையன் said...

//அது விலங்கினமா? மனித இனமா?//

மனிதனையும் விலங்கையும் பிரிக்க முடியாதே!

மனிதனாக மாற முயற்சிக்கும் மற்றவர்களை போலவே உள்ள விலங்கினம் என்று வேணுடுமானால் வைத்து கொள்ளுங்களேன்

தமிழ் ஓவியா said...

//மனிதனையும் விலங்கையும் பிரிக்க முடியாதே!

மனிதனாக மாற முயற்சிக்கும் மற்றவர்களை போலவே உள்ள விலங்கினம் என்று வேணுடுமானால் வைத்து கொள்ளுங்களேன்//

உங்களைப்பற்றிய உண்மையான சுயவிமர்சனத்திற்கு மிக்க நன்றி வால்பையன்