Search This Blog

9.11.14

பச்சைப் பார்ப்பன அடிமை இராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க மத்தியஅரசு துடிப்பது ஏன்?


பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருந்து ஆதரவு காட்டியதால்தானே! தமிழர்கள் விழிப்போடு அடையாளம் காண வேண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்த வரலாற்றுப் பூர்வமான அறிக்கை


ராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அறிவித்ததற்கும் மத்திய பி.ஜே.பி அரசு விழா கொண்டாடத் துடிப்பதற்கும் காரணம் அவன் ஆரிய அடிமையாக இருந்து அவர்களுக்கு சேவகம் செய்ததால்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-


ராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது விழா எடுக்கப்போவதாக முதலில் அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். (ஆட்சிக்காலம் கி.பி.1012- 1044), இதற்குக் காரணம் தமிழ்ப் பண்பாட்டின் மீதோ, தமிழர்களான - ஆண்ட அரசர்கள் மீதோ கவலை, பற்று என்பதால் அல்ல. இது ஒருவகை புது மயக்க பிஸ்கட்டு. தமிழர்களுக்கு - தமிழர்களை  ஏமாற்று வதற்கு. ஆரியக் கலாச்சாரமான வைதீக வேதக்கலாச்சாரத் தினையும், அந்த வடமொழி ஆதிக்கம் பரவவும், அவனது ஆட்சியில் சமஸ்கிருதமயக் கல்வியையே பரப்பிய பச்சைப் பார்ப்பன அடிமை இராஜேந்திரசோழன்;


இவன் இதே பணியைச்  செய்து, தஞ்சையில் 300 பெண்களை தாசி களாக்கி- தேவதாசி முறையைப் பாதுகாத்து, பார்ப்பனர்கள் - வேதமோதிய வேதியர்கள் உண்டு கொழுக்க பார்ப்பனருக்கு அக்காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை (நான்கு வேதம் படித்தவருக்கு இனாம் நிலம்) - நிலத்தில் இறங்கி உழுவது பாவம் என்ற மனு தர்மத்தை, அன்று முதல் இன்று வரை கடைப்பிடிக்கும் வேதியர்களுக்கு நிலங் களை- கிராமங்களை தானமாகக் கொடுத்து, பிறகு அவர்கள் வரிகூடச் செலுத்த வேண்டியதில்லை எனும் சாசனம் செய்து கொடுத்து பெரியகோவிலைக்கட்டி, அதனைப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து, வெளியே பரிதாபமாக   நிற்கும் காவல்காரனான  இராஜராஜனுடன் போட்டியிட்டு,  கங்கை கொண்ட சோழபுரத்தில் போட்டிக் கோயில் கட்டி, பார்ப்பனப் பாரம்பரியம் கொழுக்கச் செய்தான் என்பதைத் தவிர  ராஜேந்திரசோழன் பரப்பியது திருக்குறளையோ, முற்பகுதி சங்ககால இலக்கியத்தையோ அல்ல.

வர்ணாசிரமக் காவலனுக்கு விழாவா?

எனவேதான் இந்த வர்ணாசிரமத்தின் காவலனுக்கு ஆயிரமாவது ஆண்டு என்று கொண்டாடுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களும் அதன் ஆணைக்கேற்ப மத்தியில் நடைபெறும் பிரதமர் மோடியின் ஆட்சியும் இராஜேந்திரசோழன் மீது திடீர்க் காதல் கொண்டு ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட முனைந்துள்ளது.


இது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையாகும்!
அப்பாவித் தமிழர்களும், தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற பேராசையுடன் சினிமா நடிகர்களையெல்லாம் தேடி, ஓடி, நாடிச்செல்லும் அந்த காவிக்கட்சியின் தலைமை, இத்தகைய புதிய தூண்டிலைத் தூக்கிக் கொண்டு கிளம்பியுள்ளது!


தமிழ்நாட்டின் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதப்படிப்புக்கான பல்கலைக்கழகத்தை அமைத்த பெருமை ராஜேந்திரனைச் சாரும் என்று ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவகா சுரேஷ் பையாஜி ஜோஷி  என்ற பார்ப்பனர் கூற்று நமது மேற்காட்டிய கருத்துக்கு ஆதாரமாகும்!


தந்தை பெரியாரின் பார்வை


தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே - சீரிய சிந்தனையின் சிகரம் என்பதால், இந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் எல்லாம் செய்த சாதனை பார்ப்பான் காலைக்கழுவிக் கதி மோட்சம் பெற்றால், மீண்டும் அடுத்த ஜென்மத்திலும் ராஜாவாகவே பிறந்து ஆளலாம் என்ற சுயநலப்பேராசை காரணமாகத்தானே தவிர நமது மக்களுக்கு, கல்விக்கோ, மானமீட்புக்கோ இந்த ராஜாக்கள் செய்தது ஒன்றுமில்லையே என்று தொலைநோக்கோடு கூறியது எவ்வளவு மறுக்க முடியாத உண்மை என்பது இப்போது விளங்குகிறது அல்லவா?


சோழர்களில் இவன் செய்த மிகப் பெரிய சாதனை - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். இவனது ஆயிரமாவது ஆண்டு கொண் டாடுமானால், இமயத்தில் கொடி பொறித்த இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், 2000 ஆண்டு களுக்கு முன்பே மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் கல்லணை எழுப்பிய கரிகாலன் ஆகியோரை அல்லவா போற்றி விழா எடுத்திருக்க வேண்டும்? அதைச் செய்யாமல் இதை செய்வது ஏன்?


மயக்கமுறாது, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்த நோக்கத்தைப் புரிந்து, இந்த ஆரியக் கண்ணிவெடி யை அகற்றி, திராவிட இனத்திற்குச் சரியான பார்வையை ஏற்படுத்திட  வேண்டும்.


மக்கள் வரிப்பணத்தில் பார்ப்பனர்களுக்கு வேதபாடசாலைகள்


இந்த இராஜேந்திரசோழன், சதுர்வேதி மங்கலங்களை தன் தாயார் பேரில் கொடுத்தது மாத்திரமா? ஆரியப் பார்ப்பன கலாச்சார ஊற்றுக் கண்ணான சமஸ்கிருதம் என்ற வடமொழிக் கல்வியையே தமிழ்நாட்டில் புகுத்தி, நம்மின மக்களை அடிமையாய், ஆமையாய், ஊமையாய் ஆக்கிடுவதில் வெற்றி கண்டான்.


நாகப்பட்டிணத்தில் கி.பி.1058 இல் சமஸ்கிருதக்கடிகை ஒன்று இருந்தது. இதில் 200 பிராமண மாணவர்கள் வேதம் படித்தனர். 50 பிராமண மாணவர்கள் சாத்திரம் படித்தனர் வேதங்களைக் கற்பிக்கத் தனியே மூன்று ஆசிரியர்கள், பட்ட மீமாம்சை, பிரபாகர மீமாம்சை ஆகிய சாஸ்திரங் களைக் கற்பிக்க தனியே மூன்று ஆசிரியர்கள், நூலகர் ஒருவர் ஆக 257 பேருக்கும் இலவசமாகத் தங்கவும், உண் ணவும், நல்லவசதி அரசர்களால் செய்து தரப்பட்டிருந்தன.


தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரத்தில் முதல் இராஜேந்திரசோழன் காலத்தில் ஒரு சமஸ்கிருதக் கடிகை இருந்தது. சோழ மன்னன் அனைத்து மானியங்களையும் வழங்கினான். அதில் 270 பிராமண மாணவர்கள் கற்று வந்தனர். அவர்களுள் 40 பேர் ரூபாவதாரம் எனும் நூலைப் பின்பற்றிக் கற்பிக்கப் பெற்ற அடிப்படை இலக்கணத் தையும், போதாயனர் இயற்றிய சாத்திரங்களையும் கற்றனர்.


ஏனையோர் நான்கு வேதங்களையும் மனப்பாடம் செய்தனர். அவர்களுள் மூத்த மாணவர் 70 பேர், 10 பேர் வேதாந்தமும் 25 பேர் வியாகரணமும் ஏனையோர் பிரபாகர மீமாம்சையும் கற்றுத் தேர்ந்தனர். 14 ஆசிரியர் பணியாற்றினர்.


எண்ணாயிரத்திற்குப் பக்கத்தில் திருபுவனை (புதுவையிலுள்ளது) என்னும் இடத்தில் சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அதில் 260 பிராமண மாணவர்களும், 12 ஆசிரியர்களும் இருந்தனர். செங்கற்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் வீர இராஜேந்திரசோழர் காலத்தில் (1067) சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அங்கு ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து உறையவும், உண்ணவும் அனைத்து ஏற்பாடுகளும் அரசரால் செய்யப்பட்டிருந்தன.


திருவாவடுதுறையில் ஒரு மருத்துவப் பள்ளி இயங்கியது. சமஸ்கிருத நூல்களான அஷ்டாங்க கிருதயமும், சாரக சம்ஹிதயும் அங்கே கற்பிக்கப்பட்டன. திருவொற்றியூரில் இருந்த கடிகையில் பாணினி இலக்கணம் கற்பிக்கப்பட்டது. சேரநாட்டில் நம்பூதிரிப் பிராமணர்கள் கல்வி கற்கப் பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நம்பூதிரி மரபுப்படி ஆண்மக்களில் மூத்தவர் மட்டுமே நம்பூதிரி பிராமணக் குடும்பத்திற்குள்ளே திருமணம் செய்து கொள்ளுவார். ஏனைய தம்பிமார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.


மாறாக நாயர் முதலான ஏனைய குலப்பெண்களோடு உறவு வைத்துக் கொள்வார்கள். எனவே, அவர்களுக்குக் குடும்பம் பற்றிய கவலை இல்லை; நிறைய நேரம் கிடைத்தது.


அந்த நேரத்தை சமஸ்கிருத வேதம் முதலானவற்றைக் கற்பதில் செலவழித்தனர் (டாக்டர் க.ப.அறவாணன் எழுதிய தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம் என்ற நூலிலிருந்து) - இதுதான் ராஜேந்திரசோழன் செய்த தமிழின விரோத - பார்ப்பன வருணாசிரமக் கல்வி பரப்பிய திருப்பணி. நம்மவர்கள் அடிமைகள் அப்படித்தான் இருந்தனர்.


மேலும் படையெடுப்புக்காக பாராட்டுவது அகண்ட இந்துஸ்தானத் தத்துவத்தை மறைமுகமாக நினைவூட்டுவது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தை உடனடியாக அரசின் கப்பற்படை தமிழ்நாடு - புதுச்சேரி பொறுப்பாளர் கமாண்டர் அமர்.கே.மகாதேவன் கூறியிருக் கிறார்- கொண்டாட்டம் நடத்தப் போவதாக! இந்தக் கொண்டாட்டத்தில் என்.எஸ்.சுதர்ஷினி என்ற கப்பல் பங்கேற்குமாம்!


இப்போது அது உலகைச் சுற்றி வருகிறது; பழங் காலத்திலேயே நமது எல்லைகளைத் தாண்டி கடற்படை நடத்திய ராஜாவுக்கான கொண்டாட்டத்தில் அது பங்கேற் பது பொருத்தமானது - இப்படி கமாண்டர் அமர் மகா தேவன் அவர்கள் கூறுகிறார் (பிசினஸ் லைன் ஏடு 3.11.2014)
இப்போது இது பொருந்தும் என்றால், நமது இராமேஸ்வர, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துப் பொய்வழக்குப் போட்டு தூக்குத் தண்டனை கொடுக்க வைத்து மிரட்டுவது எவ்வகையில் சரியானது என்று உலக நடுநிலையாளர்கள் கேட்க வேண்டாமா? கேட்கமாட்டார்களா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கேற்ப, ஆர்.எஸ்.எசு-க்கு இராஜேந்திர சோழன் மீது வந்த திடீர் பாசம். பல மாங்காய்களை இந்தக் கல்லைக் கொண்டே அடித்து, காரியம் சாதிக்கக் கனவு காண்கிறது ஆர்.எஸ்.எஸ்.
தமிழர்கள் அவ்வளவு எளிதில் ஏமாற மாட்டார்கள். ஏமாறவும் விடமாட்டோம், எனவே இந்த டிரோஜன் குதிரையை சரியாக அடையாளம் காணத் தமிழர்கள் தக்க விழிப்போடு இருக்க வேண்டும்.


பக்தி முலாம் பூசி, இந்த அபாயம் - பண்பாட்டுப் படையெடுப்பாக வருகிறது.
எச்சரிக்கை! எச்சரிக்கை!

                        ------------------------------------கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் சென்னை--”விடுதலை” 8-11-2014

26 comments:

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவே விடுதலை (அல்லது) ஜீவாத்மா இல்லை

பகுத்தறிவே விடுதலை (அல்லது) ஜீவாத்மா இல்லை என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப் பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த்தோம்.


இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில், பகுத்தறி வையே பிரதானமாய் வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமையான கருத்து களடங்கிய புத்தக மாகும் என்பது நமது அபிப்பிராயம்.

இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப் படும்படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக் கின்றது.

பொதுவாகவே மக்களுடைய மூட நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம் முன்பின் ஜன்மம் ஆகியவை களைப் பற்றியும், மற்றும் கடவுள் வணக்கம் விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானது மான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப்பட்டிருக்கின்றது.

மேலும், இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம், வருணாசிரம தர்மம் முதலிய விஷயங்களும் கண்டிக்கப் பட்டிருப்பதுடன் இவைகள் உண்டாக்கப்பட்டதின் உள் எண்ணங்கள் முதலியவைகளையும் விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றன.

இந்தப்படி காட்டப்பட்ட இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகச் சித்தர்கள் வாக்கியங்கள் முதலிய பல மேற்கோள்களைக் குறிப்பிட்டிருப்பதுடன், விளக்கச் சித்திரங்களையும் யாவரும் உணரும்படியாக வரையப் பட்டிருக்கின்றன. பொதுவாகக் கூறுமிடத்து, இந்தியாவின் இன்றைய அரசியல், சமுக இயல், அறிவு இயல் முதலாகியவைகளின் நிலைமைக்கு முக்கிய காரணம் மதம் என்பதைக் குறிப்பிட்டு சிறப்பாக தீண்டா மையும், பெண் அடிமையுமே முக்கிய காரணம் என்பதையும் சொல்லிக் காட்டி, இவைகள் எல்லாம் ஒழிந்தால் அல்லது இந்தியா விடுதலையை அடைய முடியாது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவோம்.

இப்புத்தகத்தை வாசித்துப் பார்த்தவர்கள் ஒவ்வொரு வரும் இதிலிருந்து அநேக அரிய கருத்துக்களையும், புதிய எண்ணங்களையும் அடைந்தே தீருவார்கள். ஆகவே, இவ்வரிய வேலையை மேற்கொண்டு உண்மைத் தொண் டாற்றிய உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களுக்கு பகுத்தறிவு பெற்றுத் தீர வேண்டிய இந்திய மக்கள் சார்பாக நமது நன்றியறிதல் உரித்தாகுவதாக.
குடிஅரசு - நூல் மதிப்புரை - 14.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90758.html#ixzz3IWvdBuAO

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ் தினசரி பத்திரிகை


லால்குடி தாலுகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப் பற்றி நெடுநேரம் பேசினார்கள்.

திரு.ஈ.வெ. இராமசாமி தினசரி அவசியமில்லை என்றும், தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆக வேண்டுமென்றும், நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதைத் தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப் பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின்பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆட்சேபணையில்லையென்றும் சொன்னார்.

அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட 50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது. பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மற்றும், இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதரவளிக்க முன் வந்தார்கள்.

சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000 ரூ.க்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும், அடுத்த வாரம் போல் கொடைக்கானலில் நடைபெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90763.html#ixzz3IWvp3C1C

தமிழ் ஓவியா said...

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென்னவென்றால்,
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கி றேனேயொழிய ராஜியைக்காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை என்று பேசியிருக்கின்றார்.

ஆகவே, சமாதானப் பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனேயானால் ராஜியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத் திற்காக எந்த முறையையும் அனு சரிக்க வேண்டிவரும் என்று சூசனை காட்டி இருக்கின்றார்.

அதோடு ராஜி விஷயத்தைப் பற்றியும் பேசும் போது காங்கிரசுக் காரர்கள், ராஜியை ஒரு சமாதான அறிகுறி யென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்குத் தயார் ஆவதற்கு ஏற்படுத்திக் கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள் என்றும் இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய் சொல்லுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவ்வளவும் போதாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு.காந்தியவர்கள்தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தைனை கேட்டு முடியாமல் போயிற்றோ.

அதாவது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ, அந்தப் போலீசுக்காரர் களையே லார்ட் வில்லிங்டன் நன்றாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றி புகழ்ந்து இருக்கின்றார். அதோடு இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.

இதன் கருத்து முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்துகொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னும் இருக்கின்றது என்று சூசனை காட்டுவதேயாகும்.

இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணயம் எப்படி இருக்கின்ற தென்பதையும் சர்க்காராரும், காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணயமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த இராஜியின் பயனாய் இந்திய மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகும். கள்ளுக்கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த் துக்கொண்டால் நாணயத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும். குடிஅரசு - கட்டுரை - 05.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90764.html#ixzz3IWvxeUj6

தமிழ் ஓவியா said...

நவம்பர் 8: எக்ஸ்ரே கதிர் கண்டுபிடிப்பு நாள்


ரோண்ட்கென் தனது கண்டுபிடிப்பு களுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை ஹூட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார்.

தனக்காக எந்த ஒரு சொத்தையும் சேர்க்காத வில்ஹம் கொன்ராடு ரோண்ட்கன் முனிச் நகரின் புறநகர் பகுதியில் மாட்டுக்கொட்ட கையில் வாழ்ந்து உடல்நலமின்றி உயிரிழந்தார். ரோண்ட்கென் கண்டறிந்த எக்ஸ்ரே கதிரின் மூலம் இதுவரை பலகோடி உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.

மேலும் இக்கதிரின் மூலம் நமது பால்வெளிமண்டலத்திற்கு அருகில் உள்ள பல்வேறு பால்வெளி மண்டலங்களின் இயற்பண்புகளை தெரிந்துகொண்டோம். வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) என்ற ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர் ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் தொடந்து நடத்திக்கொண்டு இருந்தார்.

1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டி ருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர் தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார்.

எனினும் அதன் பண்புகள் தெரியாத தால் அதற்க்கு எக்ஸ் (X Ray) கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார்.

இந்தக்கதிர் மூலம் மனித இனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பல்வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது மனைவியை எக்ஸ்ரே கதிர் முன்பு நிற்கவைத்து படமெடுத்து உலகிற்கு உன்னதமான கண்டுபிடிப்பை தந்தார். இதற்காக அவருக்கு முதல்முலாக இயற்பியலுக்கான நோபல்பரிசு கிடைத்தது.மனித குலம் இதுவரை 10 முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் எல்லாத் துறையிலும் முன்னேறி இன்று 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

முதல் கண்டுபிடிப்பு ஏர் கலப்பை, இரண்டாம் கண்டுபிடிப்பு சக்கரம், மூன்றாம் கண்டுபிடிப்பு நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் இனிவருங் காலத்தில் இவை அடுக்கிக்கொண்டே போகலாம், அதாவது மனித குலத்தின் பசியற்ற நோயற்ற எதிர்காலம் இந்த கண்டுபிடிப்புகளால் நவீன உலகில் எவ்வித சிக்கலுமின்றி பீடுநடை போடுகிறது.

அந்த நோயற்ற மனித குலக்கண்டு பிடிப்பிற்கு உற்றதுணையாக இருக்கும் பல்வேறு கருவிகளில் எக்ஸ்ரே கருவி என்னும் உடற்கூற்று பகுப்பாய்வு கருவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Read more: http://viduthalai.in/page-3/90737.html#ixzz3IWwJpwJC

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்ற சக்திகள் இணையட்டும்!

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் அய்க்கிய ஜனதாதளத்தின் சார்பில் நிதிஷ்குமார் (பிகார் முன்னாள் முதல்வர்) சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவேகவுடா (முன்னாள் பிரதமர்) ஆகியோர் டில்லியில் கடந்த 6ஆம் தேதி கூடியுள்ளனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார் கூறியதாவது: நாங்கள் அரசியல் சூழ்நிலைகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். எங்கள் கருத்துகள் ஒன்றாகவே இருந்தன. நாடாளு மன்றத்திற்குள் நாங்கள் அய்க்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ளோம். எங்கள் எண்ணத்துக்கு இணைந்து வரும் பிற கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்வோம்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் எங்களுக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது. பிரச்சினை களுக்கு ஏற்ப இடதுசாரிகளோடும் தொடர்பு கொள் வோம் என்று இந்தக் கால கடடத்திற்குத் தேவையான முடிவையும், கருத்தையும் வெளிப்படுத்தினர்.

16ஆம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால், வேறுவிதமான முடிவு வந்திருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. காலந் தாழ்ந்தாலும் பரவாயில்லை; நல்லதோர் முடிவை - தேவையான முடிவை முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் எடுத்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி சமூகநீதி - மதச் சார்பற்ற தன்மையில் ஆர்வமும் அக்கறையும் கொண் டவர்கள் அடைவார்கள் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

மதவாத பிஜேபி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் இடதுசாரிகளும் தெளிவாக உள்ளவர்கள் ஆயிற்றே! அவர்களையும்கூட அழைத்துப் பேசி யிருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்களுக்கு அழைப்பு இல்லையே என்று இடதுசாரிகள் கருத்துத் தெரிவித்திருப்பது - அப்படி ஓர் அழைப்பை அவர்களுக்குக் கொடுத்திருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்குமே!

இடதுசாரிகளும் இந்த அய்க்கிய முன்னணியில் இருந்தார்கள் என்று செய்தி வெளிவந்த மாத்திரத்தில் மிகப் பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் கிளர்ந்திருக்கும் என்பதில் அய்யமில்லை - இப்பொழுது ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடவில்லை; நாளையோ நாளை மறுநாளேகூட அத்தகு அரிய வாய்ப்பு மலரக் கூடும்.

நெருக்கடி நிலை என்னும் அழுத்தம் ஜனதா என்ற கட்சியைப் பெற்றெடுத்துக் கொடுத்தது. அந்தக் கூட்டைக் கலைத்ததில் முதல் பங்கு ஜனசங்கத்துக் காரர்களுக்குத் (இன்றைய பாரதிய ஜனதா)தான் உண்டு.

நாங்கள் ஆர்.எஸ்.எஸில் இருப்போம் - ஜனதா விலும் இருப்போம் - (இரட்டை வேடம் போடுவோம்! என்று பொருள்!) என்று அடம் பிடித்து, அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வெளியேறினார்கள். அதற்குப் பின்னாலே ஜனதாவுக்குள் ஒற்றுமையில்லாத நிலையில் அந்த ஆட்சி கருச் சிதைவுக்கு ஆளானது.

அதற்குப் பிறகு ஜனதாதளம் உருவானது. வாராது வந்த மாமணியாகக் கிடைத்த வி.பி.சிங் தலைமையில் ஓர் அருமையான ஆட்சி அமைந்தது.

அதனையும் கவிழ்த்தவர்கள் இந்தப் பாரதிய ஜனதா கட்சியினர் தாம். வெளியிலிருந்து வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக வாக்களித்தவர்கள், மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங் அறிவித்த காரணத்தால் சமூக நீதிக்கு எதிரான கொள்கையுடைய உயர் ஜாதிக் கட்சியான பிஜேபி ஆதரவை விலக்கிக் கொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டது.

சமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று அறிவித்தார் அந்த மாமனிதர். சந்திரசேகர் போன்றவர்கள் உள்ளிருந்து குழி பறிக்கும் நோயாக இருந்ததும் இன்னொரு வகையான காரணமாகும்.

காங்கிரசுக்கு எதிராக ஓர் அமைப்பு அகில இந்திய அளவில் வலிமையாக இல்லை என்ற சூழ்நிலையில் தான் மதவாத அடிப்படைவாத அமைப்பான பிஜேபி எல்லா வகையான தில்லுமுல்லுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் செய்து மக்களை மயக்கி அதிகாரத்தில் அமர்ந்து விட்டது.

அதிகாரத்தில் அமர்ந்த கட்சி மக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததா? வேலையின்மையைப் போக்கும் திட்டம் உண்டா? விவசாயத்தை வளர்க்கும் மனப்பான்மை உண்டா?

அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, கிடந்தது கிடக்கட்டும் - கிழவியைத் தூக்கி மனையில் வை என்பதுபோல ராமன் கோயில் கட்டுவோம் ராம ராஜ்யம் அமைப்போம் கங்கையைத் (கங்கை தேவியை) தூய்மைப்படுத்துவோம் - கல்வியில் மதவாதத்தைத் திணிப்போம் என்று சமூக வளர்ச்சிக் கேடான மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்திக் கலவரத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகு சூழ்நிலையில் மதச் சார்பற்ற சக்திகளும் சமூக நீதியாளர்களும் கைகோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கணக்கில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் மதவாத சக்திகள் தூள் தூளாகி விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/90782.html#ixzz3IWwgccqs

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.

(குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/90787.html#ixzz3IWwoPt2a

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கு எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை அது அரசின் கொள்கை முடிவு - நீதிமன்றம் தலையிட முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு


அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது இடஒதுக்கீடுக்கு ஜாதி புள்ளி விவரம் அவசியமே!

புதுச்சேரி, நவ.9- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிட்டு, இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தர விட முடியாது என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


கடலூரிலும், புதுச்சேரியிலும் நேற்று (8.11.2014) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கூறி பரபரப்பாக நாளேடுகளில் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்ற நீதிபதிகள் சொன்னதாக சில ஏடுகள் தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தவறு - அது கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதுபற்றிய கொள்கை முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். இதில் இப்படித்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முடியாது; காரணம் இது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்களுக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுதான் வருகிறது. இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்ற நிலையில், அவர்களுக்கான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தான் வற்புறுத்திக் கொண்டு வருகிறோம்.

பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தியும் வருகின்றன.

நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட ஒன்றே!

2011இல் இத்தகைய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுப்பது என்று அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக சொன்ன நிலையில், மத்திய அரசும் அதனை ஏற்றுக் கொண்டது.

தமிழ் ஓவியா said...

சென்னை உயர்நீதிமன்றம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறி, அதனை நாடாளுமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மத்திய அரசுக்கோ, மக்கள் கணக்கெடுப்புத் துறைக்கோ என்ன அவசியம் வந்தது என்பதுதான் கேள்வியாகும்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இன்றைய பிஜேபி அரசின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ஆர்.எஸ். சூரி, ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஏன்? 2011இல் நாடாளுமன்றத்தில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டே தீர வேண்டும் என்று இதே பிஜேபியும் கருத்து தெரிவித்த நிலையில், அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் அதனை ஏற்றுக் கொண்ட தன்மையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு முரணாக பிஜேபி செயல்படுவது - ஏன்? ஏனிந்த குழப்பம்? முரண்பாடு?

அன்று உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லையென்றால் பிற்படுத் தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு என்பதை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது, அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட (Constituent Bench)அமர்வு கேட்ட கேள்வி என்ன? 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வது சரியானதல்ல - தற்போதுள்ள எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதா இல்லையா? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்படி சொன்ன பிறகு இரு நீதிபதிகளோ, மூன்று நீதிபதிகளோ அதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லையே!

திட்டக் குழுவும் சொன்னது என்ன?

திட்டக்குழு (Planning Commission) இதர பிற்படுத்தப் பட்டோர் துறைக்குக் குறைவான நிதியை ஒதுக்கியபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது திட்டக் குழு என்ன சொன்னது? இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் (Data) எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று சொன்னதற்கு என்ன பொருள்?

ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தானே திட்டக் குழுவுக்கு விவரங்களைத் தெரிவிக்க முடியும்?
இந்தப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினை - சமூக நீதிப் பிரச்சினை! இதில் மாநில அரசும் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறைக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு சமூக நீதியைக் காப்பாற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல கூப்பாடு போடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் புரிந்து கொள்ளாமல் திசை திருப்பும் நோக்கத்துடனும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று எங்கும் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டு இருந்தால் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதோ, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதோ தவறு - குற்றம் என்று சொல்லலாம்.

18 இடங்களில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி என்ற சொல் கையாளப்பட்டுள்ளதே! ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்; இல்லையேல் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்பட்டு நாடு தழுவிய அளவில் வெகு மக்களின் பெருங் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனையால்தான் வெற்றியா?


கிரிக்கெட் மட்டையைப் பிடித்து கோடி கோடியாக சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தன் வரலாறு எழுதி யுள்ளாராம். ஏடுகள் பக்கம் பக்கமாகசெய்திகள் வெளி யிடுகின்றன.

அதில் ஓரிடம் : 2011ஆம்ஆண்டு உலகக் கோப் பையை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஆட்டமிழ்ந்து நான் வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை.

ஸ்டேடியத்தின் உள்ளே இருந்த நான் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் வெற்றிபற்றி எனக்குத் தெரிய வந்ததும் துள்ளிக் குதித்தேன் அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

என் வாழ்க்கையில் இது பெருமையளிக்கக் கூடியதாகும் என்கிறார்.
விளையாட்டு என்பது திறமைக்கான களம்! இதில் கடவுளுக்கும், பிரார்த்தனைக்கும் ஏது இடம்?
பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு? இந்த இந்துத் துவா வாதம் எவ்வளவு முறைகேடானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? டெண்டுல்கரின் பிரார்த்தனை யால்தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதா? இவ்வளவுக்கும் இவர் இந்த இறுதிப் போட்டியில் அடித்துக் கிழித்த ஓட்டங்கள் வெறும் 18 தான்.

இந்தக் கேவலத்தில் இவர் பிரார்த்தனையால்தான் இந்தியா ஜெயித்ததாம். ஹி... ஹி...

Read more: http://viduthalai.in/e-paper/90815.html#ixzz3Ia0NGRdZ

தமிழ் ஓவியா said...

பிபிசி தமிழ்ச் சேவை: தமிழர் தலைவர் கருத்தை வரவேற்று திமுக தலைவர் கலைஞர் கருத்து


லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பி.பி.சி.யின் தமிழ்ச் சேவையை புதுடில்லிக்கு மாற்றி இந்தியுடன் இணைப்பதை எதிர்த்து விடுதலை (5.11.2014)யில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையை வரவேற்று, வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.11.2014) எழுதியிருப்பதாவது:

கேள்வி :- பி.பி.சி.யின் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை இந்திச் சேவை யுடன் இணைத்த நிலையில், டெல்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதிலே தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், தமிழக அரசும் கருத்தைச் செலுத்த வேண்டுமென்று திரு. கி. வீரமணி அறிக்கை விடுத் திருக்கிறாரே?

கலைஞர் :- தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித் திருப்பது போல, பி.பி.சி., தமிழ்ச் சேவையை புதுடெல்லிக்கு மாற்றி, இந்தியுடன் அதனை இணைப்பது தமி ழர்களுக்கு இழைக்கப்படும் கேடாகும். பி.பி.சி. தமிழோசை என்பது, பி.பி.சி. உலக சேவை வானொலியின் தமிழ்ச் சேவையாகும்.

பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இதனை டெல்லிக்கு மாற்றினால், இந்தி மொ ழியின் ஆதிக்கம், தமிழோசை யிலும் மேலோங்கும். இந்திய-இலங்கை அரசு களின் நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும்.

எனவே இதிலே உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு, இதுவரையில் இருந்த நடை முறையைப் போல பி.பி.சி. தமிழ்ச் சேவையை இலண்டனில் இருந்தே தொடர மத்திய, மாநில அரசுகள் உட னடியாகத் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்துகிறேன். (முரசொலி 9.11.2014)

Read more: http://viduthalai.in/e-paper/90814.html#ixzz3Ia0s0tg5

தமிழ் ஓவியா said...

புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு

பகவான் (?) பாபா சக்தி எங்கே?

புட்டபர்த்தி, நவ.9 ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய மூதாட்டி கொன்று புதைக்கப்பட் டார். இதுதொடர்பாக காவலாளி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் லுட்கேட் டோனி பெர்லி ஆன்னி (வயது 75). புட்டபர்த்தி சத்யசாய் பாபா பக்தை யான இவர், கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரே லியாவில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்ட பர்த்தி சாய்பாபா ஆசிர மத்திற்கு வந்தார். அங்கு உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் தங்கி ஆசிரம பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதியில் இருந்து அவரை திடீ ரென காணவில்லை. இதுகுறித்து அந்த குடியி ருப்பின் காவலாளி பகவன் துடு என்பவர் கடந்த 24-ஆம் தேதி காவல் துறையில் புகார் செய்தார்.

உடனே காவலர் ஆஸ்திரேலியாவில் உள்ள டோனியின் உறவினர்களி டம் கேட்டபோது, டோனி ஆஸ்திரேலியா விற்கு வரவில்லை என்று தெரிவித்தனர். காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் புகார் அளித்த காவலாளி பகவன்துடுவை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பகவன்துடு பணத்துக்காக நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து பிணத்தை ஊருக்கு வெளியே புதைத்ததை ஒப்புக்கொண்டார். வீடு பார்ப்பதற்காக டோனி, காவலாளியிடம் பணம் கொடுத்துள்ளார். வீடு சரியில்லாததால் அந்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பகவன்துடு தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்து விட்டு மாயமாகி விட்டதாக காவல்துறை யில் புகார் செய்து நாடக மாடியது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக காவலாளி பகவன்துடு, போட்ட லய்யா மற்றும் கார் டிரை வர் நாகராஜூ ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90811.html#ixzz3Ia0z5COK

தமிழ் ஓவியா said...

அறிவியல்கதிர் - அறிவியலாளர்களும் அறிவியல் பார்வையும்

மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்பதை வைத்து மரபணு விஞ்ஞானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது என்றும் விநாயகரின் வடிவத்தை வைத்து அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் முன்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருக்கிறார். அதுவும் ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில்!புராணங்களை இப்படி அறிவியல் முன்னேற்றத்துடனும் சாதனங்களுடனும் இணைப்பது கேலிக்குரியது. இப்படிப்பட்ட சிந் தனைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஆனால் இதைத்தான் குஜராத்தில் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.

பிரதமரின் பேச்சு ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றும் எந்த விஞ்ஞானியும் மோடியினது கருத்துக்களை மறுக்கவில்லை என்றும் ஒரு கட்டுரை எழுதி (நவம்பர் 1) ஆங்கில இந்துவில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் கரன் தப்பார்.

அவரது கட்டுரையை ஒட்டி இந்துவில் 13 கடிதங்கள் வெளியாகின. அதில் இரு கடிதங்கள் மட்டுமே மோடியின் கருத் துக்கு எதிர்க்கருத்தைப் பதிவு செய் திருந்தன. மீதி 11 கடிதங்களும் மோடியின் கருத்தை ஏற்று, தங்கள் வழிகளில் வியாக்கியானம் செய்தவைதான்! அவற் றில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு விஞ்ஞானியின் கடிதம் நமது பரிசீலனைக்குரியது. அவர் விநாய கக் கடவுள் இருப்பதையும் கைலாயத்தில் எருதின் மீது சவாரி செய்து வரும் சிவபெருமானையும் நம்புபவராம்.

அவரது நம்பிக்கையில் நாம் குறுக்கிட முடியாது. ஆனால் இன்றுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே முன்பு இந்தியாவில் இருந்தவைதான் என்று அவர் ஒரே போடாகப் போடுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? விஞ்ஞானிகளுக் கெல்லாம் அறிவியல் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அறிவியல் பார்வையைப் பெறு வதற்கு ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து கவனிப்பவராக ஒருவர் இருந்தாலே போதுமானது. கல், வில், அம்பு, சக்கரத்திலிருந்து தொடங்கி அறிவியல் எப்படி வளர்ந்தது - விவசாயமும் தொழில் களும் எப்படி முன்னேறின - எந்தெந்த காலக்கட்டங்களில் எந்தெந்த கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன - என்ற வரலாறு தெரிந்தவர்கள்... எந்த ஒரு நிகழ்வையும் அதன் காரண காரியத்தோடு பொருத்திப் பார்த்து சிந்தித்து சுயமுடிவுக்கு வருபவர்கள்... ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது என்ற ஒரு காரணத்திற்காகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதவர்கள்... ஆகியோருக்கெல்லாம் அறிவியல் பார்வை கிடைப்பது எளிதாகி விடும். உதாரணமாக, சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பது ஆதிகாலத் திலிருந்து இருந்து வந்த ஒரு நம்பிக்கை.

இந்த நம்பிக்கை எதுவரை கோலோச்சிக் கொண்டிருந்தது? ஒரு கோபர்னிக்கஸ் வந்து அதை மறுக்கும் வரை.. ஒரு ஜார்டானோ ப்ரூனோ, கோபர்னிக்கஸ் கருத்தை ஏற்றதற்காக எரிக்கப்படும் வரை... ஒரு கலீலியோ அதே காரணத்திற்காக சிறைப்படும் வரைதான். உயிரினங்களின் தோற்றம் பற்றி சார்லஸ் டார்வினின் ஆய்வு படைப்புக் கோட்பாட்டினைப் புரட்டிப் போடவில்லையா? மின்சார பல்பு, ரயில், விமானம், ஏவுகணை, செயற் கைக்கோள், தொலைபேசி, அலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி என்று எத்தனையெத்தனை அறிவியல் சாதனங்கள்! இவையெல்லாம் ஆதிகாலத்திலேயே எங்களிடம் இருந்தன என்று கூறுவது எத்தகைய பேதைமை! சித்த மருத்துவம், யோகப் பயிற்சி, உணவே மருந்து என்ற அடிப்படையிலான நமது சமையல் கலை, கணிதவியலில் நாம் காட்டிய நிபுணத்துவம் போன்ற உண்மை யிலேயே போற்றத்தக்க நமது பாரம் பரியப் பெருமைகளுக்காக மட்டும் நெஞ்சை நிமிர்த்துவோம். வீண் பெருமை பேசி எண்ணற்ற விஞ்ஞானி களின் உழைப்பைச் சிறுமைப்படுத்து வதைத் தவிர்ப்போம்!

நன்றி: தீக்கதிர் 10.11.2014

Read more: http://viduthalai.in/page-2/90912.html#ixzz3IfJIhPma

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/90910.html#ixzz3IfJucZUB

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மொட்டை!

கேள்வி: திருப்பதி மொட்டை திருத்தணி மொட்டை இதில் எது தலை சிறந்த மொட்டை?
பதில்: நம்பி வந்த வனை நம்பி வந்தவளை மொட்டை அடிக்காமல் இருப்பதே சிறந்தது.
- தினமலர் வார மலர் 9.11.2014

இதன் மூலம் மொட்டை அடிக்க வந்தவர்களை மொட்டை அடிப்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். முடி யைக் கொடுப்பதுமல்லா மல் அதற்குக் கட்டண மும் கொடுக்க வேண்டு மாம். அத்தோடு நின்றதா? அந்த முடியை ஏற்றுமதி செய்து கோடிக் கோடி யாகக் கொள்ளையும் அடிக்கிறார்களே! ஆக பக்தர்களை மொட்டை அடித்துப் பணத் தையும் குவிக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/90916.html#ixzz3IfK6IH8O

தமிழ் ஓவியா said...

புரிந்து கொள்ளுங்கள்:
ஒரு முஸ்லீம் கூட இல்லாத கிராமத்தைத் தத்தெடுத்த மோடி!

பிரதமர் மோடி தத் தெடுத்த கிராமத்தில் முஸ்லீம் மதம் உள் ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநி லத்தில் உள்ள இந்துக் களின் புனித நகரமான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.

அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற் றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும். குழந்தை களுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்த கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும். ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செய லாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார். இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும். இது தொடர்பாக, பாஜகவினர் கூறுகையில், முஸ் லீம்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90920.html#ixzz3IfKNpXcM

தமிழ் ஓவியா said...

நோயற்ற நல வாழ்வு பெற...


நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

கல்லீரல் பலப்பட ...

தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

ரத்த அழுத்தம் சரியாக....

தேநீர், காபிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்திற்கு பலம் கிடைக்க:

மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். செரிமான சக்தி அதிகரிக்கும். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சினை வயிற்று வலிகுறையும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும்.

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும்.கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.

வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/90870.html#ixzz3IfLSJ4Jl

தமிழ் ஓவியா said...

குழந்தைகளையும் தாக்குது சிறுநீரகக் கல்!


உங்கள் குழந்தைகள் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லையா?
பள்ளிக்குக் கொண்டு செல்லும் தண்ணீர் புட்டிகள் அப்படியே குறையாமல் திரும்பி வருகிறதா? நொறுக்குத்தீனிகளை மட்டுமே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்களா?
தண்ணீருக்குப் பதிலாக கேன்களில் வரும் பானங் களை பருகுகிறார்களா?
சரியாக சிறுநீர் கழிக்காமல் கஷ்டப்படுகிறார்களா?
அப்படியானால்... உங்கள் குழந்தைகளுக்குசிறுநீரகக் கல் பிரச்னை வரும் நாள் மிக அருகில் இருக்கக்கூடும்.

சிறுநீரகக்கல்லா..? அதெல்லாம் வயசானவங் களுக்குத்தானே வரும்? என்கிறீர்களா? அதுதான் இல்லை.

கல்லைத் தின்றாலும் கரையும் வயதிலும் இந்தக் கல் பிரச்னை வரும். பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக் கல் பிரச்சினை இப்போது குழந்தை களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன.

பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை என்கிறார் குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவர் பிரஹலாத்.
நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப் போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன.

இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறு களிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

அதை பெரும் பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்கிறார் டாக்டர் பிரகலாத், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சில உணவுப் பழக்கங் களையும் வலியுறுத்துகிறார். உப்பின் அளவை குறைப்பது முக்கியம்.

டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற் றையும் தவிர்ப்பது நல்லது.

பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது.

கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.
அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம்.

இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது... என்கிற டாக்டர், இதன் அறிகுறி களையும் பட்டியலிடுகிறார்.

சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தன மாக இருக்கக் கூடாது.
உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால் தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும்.

கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், லித்தோட்ரிப்ஸி முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. யூரிட்ரோஸ்கோபி முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...

Read more: http://viduthalai.in/page-7/90871.html#ixzz3IfLaOkls

தமிழ் ஓவியா said...

நுரையீரல் பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் பீன்ஸ்


மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம் தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது.

இயங்குவதற்காக காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.

பொதுவாக புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றாலேயே நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 60 விழுக்காடு பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சு சளி, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.

இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறையில் மருந்துகள் இருந்தாலும் வருமுன்காப்போம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர்.

இதன் முடிவில் பீன்ஸ், கலந்த உணவை தினமும் 75 முதல் 100 கிராம் வரை சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும்போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது. தினமும் சுமார் 50கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/90872.html#ixzz3IfM5vtm3

தமிழ் ஓவியா said...

ஆந்திர மாநில பகுத்தறிவு எழுத்தாளர், ஆய்வாளர்களுக்குத் தமிழர் தலைவர் பாராட்டு



சித்தார்த்தா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) முனைவர் விஜயா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆய்வாளர்) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மண்டபேட்டாவில் வசித்து வருகின்றார்கள்.

நாத்திக மய்ய நிறுவனர் நாத்திகர் கோரா மற்றும் எம்.வி. இராமமூர்த்தி ஆகியோர், இவ்விருவருடைய (சித்தார்த்தா பக்ஷ் இசுலாமியர், விஜயா அம்மையார் பார்ப்பனர் சமுதாயத்தவர்) திருமணத்தை 1972 ஆம் ஆண்டில் சுயமரியாதைத் திருமணமாக, பதிவுத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

முனைவர் விஜயா பக்ஷ் ஒரு எழுத்தாளர் ஆவார். பகுத்தறிவு செயல்பாடுகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர் ஆவார். திரு.பக்ஷ் அவர்கள் 1965ஆம் ஆண் டிலிருந்து இன்றுவரையிலும் தொடர்ந்து பகுத்தறிவு செயல்பாடுகளிலும், மனிதநேயப் பணிகளிலும் ஈடுபட்டுவருபவர் ஆவார். மாநில பகுத்தறிவாளர் சங்க செயலாளராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார்.

இருவருமே பகுத்தறிவு மற்றும் மனிதநேயச் செயல் பாடுகளுடன் செயல்பட்டு வருவதோடு, முற்போக்கு கருத்துகளைக் கொண்டுள்ளவர்கள்.

ஜாதியற்ற சமுதாயத்துக்காகப் பாடுபட்டு வருப வர்கள். முனைவர் விஜயா பக்ஷ் அய்தராபாத் தெலுங்கு பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் பகுத்தறிவுக் கருத்துகளின் தாக்கம் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதோடு, அந்த ஆய்வுக்காக தங்கப்பதக்கமும் பெற்றவர் ஆவார்.

பெண்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் தெலுங்கு மொழியில் எழுதி, ஏழு நூல்களை அவரே பதிப்பித்தும் உள்ளார்.

அவர் எழுதிய நூலான பைபிள் புசாரி (பைபிள் பேசுகிறது) என்கிற தெலுங்கு மொழி நூலை ஆந்திர அரசு தடை செய்தது. உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடி, நூலுக்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையொட்டி நூலுக்கான தடை நீங்கி ஏராளமான நூல்கள் மக்களிடம் சென்றடைந்தன.

இத்தகைய சிறப்புமிகுந்த இணையர் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தாங்கள் வெளியிட்ட தெலுங்கு நூல்களை வழங்கி மகிழ்ந்தனர். இணையருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்து மிகுந்த பாராட்டு களைத் தெரிவித்தார். அப்போது மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி உடனிருந்தார் (11.11.2014).

Read more: http://viduthalai.in/e-paper/90994.html#ixzz3IuOYSpdC

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பார்ப்பான் வயிற்றில்....

என் கண் முன்னால் ஜீவன்கள் படும் அவஸ் தையைக் கண்டால் என் நிம்மதியே போய்விடு கிறது.

பெரிய பார வண் டியை இழுக்கும் காளை களைப் பார்த்தால், நான் அழுதுவிடுவேன் என்று பக்தர் ஒருவர் எழுது கிறார்.

அதற்கு ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?

ஒரு தடவையாவது கன்றுடன் கூடிய பசு வைத் தானம் செய்யுங்கள் என்று பதில் எழுதியுள் ளார் - ஓர் ஆன்மிக மலரில்.

எது செய்தாலும் அது பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டுவதுதானா ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/90997.html#ixzz3IuOwX38P

தமிழ் ஓவியா said...

10 ஆண்டு விஞ்ஞான முயற்சிக்குப் பெரும் வெற்றி!
உலகின் ஆரம்பம் அறியப்படுகின்றது!

நவம்பர் 12 பொன்னேட்டில் பதிக்கப்படும் நாள்களில் ஒன்று

2004 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்து பிரஞ்சு குனியா கொவரு விலிருந்து ஒரு விண்கலத்தை அனுப்பினர். அதன் பெயர் ரோசட்டா. எகிப்து நாகரிகத்தைக் கண்டறிய உதவிய ரோசட்டாகல்லின் நினைவாகப் பெயரி டப்பட்டது.

இதன் முக்கிய குறிக்கோள் வால் நட்சத்திரத்தைத் தொடர்ந்து சென்று ஆராய்வது. அந்த வால் நட் சத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதை ஆராய்ந்து அதில் 220 பவுண்டு எடையுள்ள ரோபாட் கருவியை அந்த வால் நட்சத்திரத்தில் இறக்கி ஆராய்ச்சி செய்வது!

வால் நட்சத்திரம் பெரிய பனிப்பாறைகளாக இருக்கும். அது சூரியனின் அருகே வரும்போது, அதிலிருந்து புகை மண்டலம் பெரிய வால்போல் 60 மைல் நீளங்கூடத் தெரியும். அந்த வால் நட்சத் திரத்தின் பனிக்கட்டி மூலமே பூமிக்குத் தண்ணீர் வந்திருக்க முடியும் என்று நம்பப்படுகின்றது. அதி லுள்ள மற்ற வாயுக்களும், தாதுக்களுமே பூமி உண்டாக ஆரம்பகாலத் தோற்றமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

ஆகவே, அதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படலாம். இதுதான் திட்டம்.

ரோசட்டா தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவரும் 67_பி என்ற வால் நட்சத்திரம் மிகவும் பொல்லாதது. ஒரு பெரிய மலை; ஆனால் பார்ப்பதற்கு உரிக்காத வேர்க்கடலை போன்று இருக்கின்றது. துப்பாக்கியி லிருந்து வரும் குண்டைவிட முப்பது மடங்கு விரைவாகச் சுற்றுகின்றது. இதிலே பிலே என்ற பல கருவிகள் அடங்கிய பெரிய குளிர்பதனப் பெட்டிபோல உள்ள ஆராய்ச்சி இயந்திரம் தரை இறக்கப்பட உள்ளது. ஒரு சிறு மில்லி மீட்டர் தவ்றினாலும் இறங்கும் இடம் ஆயிரம் மீட்டர்கள் தவறி வீணாகி விடும். ரோசட்டாவிலி ருந்து பிலே தள்ளப்பட்டு அது 67_பி இல் இறங்கு வதற்கு ஏழு மணி நேரம் ஆகும், புவி ஈர்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால். தள்ளி விட்டபின் அதை மாற்ற முடியாது. மூன்று கால்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதை ஆணி அடித்தால் போல இறக்குவதற்கு சின்ன ராக்கெட் அதி லேயே உள்ளது. பன்னி ரண்டு ஆராய்ச்சி இயந் திரங்கள் பொருத்தப்பட்டு வால் நட்சத்திரத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்து படங்களும் செய்திகளும் அனுப்பப்படும். வந்து சேர்வதற்கு அரை மணிநேரம் ஆகும்.

இந்த அற்புதம் 300 மில்லியன் மைல் தொலை விலே மணிக்கு 37,000 மைல் வேகத்திலே செல்லும் வால் நட்சத்திரத்தில் நடக்கவுள்ளது. அதை நாம் இணையத்தில் பார்க்க வசதிகள் செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90993.html#ixzz3IuP95kFj

தமிழ் ஓவியா said...

பாம்பாற்றில் தடுப்பணையா?


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிறந்தாலும் தன்னுடைய பாதை முழுவதும் மலைப்பள்ளத்தாக்கு ஊடாகப் பயணித்து இறுதியில் தமிழக எல்லையில் தரையைத் தொடுகிறது பாம்பாறு. தமிழகத்திற்குள் வந்த பிறகு பாம்பாறு அமராவதி என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களுள் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள தூவானம் அருவியும், கும்பக் கரை அருவியும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

உடுமலைப் பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன் சத்திரம், பழனி, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என சுமார் 60,000 ஏக்கர் நிலம் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறுகிறது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர்த்தேவையை முழுமையாகத் தீர்க்கும் நன்னீர் வளமாகும். திருப்பூரில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டம், கரூரில் 8, பழனி ஒட்டன்சத்திரத்தில் 7 மற்றும் பொள்ளாச்சி என 30-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக அமராவதி ஆறு திகழ்கிறது, அமராவதி அணைக்கு பாம்பாறு,தேனாறு, சிற்றாறு மூலம் நீர் வந்து சேர்ந்தாலும் பாம்பாற்றில் இருந்துதான் அமராவதி ஆற்றுக்கு ஆண்டு முழுமையும் நீர் கிடைக்கிறது. தமிழகத்தின் தொழில்வளம் வியாபாரப் பயிர்வளம் மிகுந்த திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டங் களில் வாழும் மக்களுக்கு உயிர்நாடியாகத் திகழும் பாம்பாற்றின் குறுக்கே தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் ரூ.26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 3.11.2014 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அடிக்கல் நாட்டினார். பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நதிநீர் பாசன அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்படுமாம். இதன் மூலம் அமராவதி ஆற்றிற்குவரும் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும்; காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் வருகிறது. காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல் துறை, நீர்வளம், மின்சாரத் துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலைப் பெறாமலேயே தடுப்பணையைக் கட்ட முடிவு செய்துள்ளது கேரள அரசு. அணையினால் பாசன வசதிபெறும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும். கேரள அரசின் இந்தத் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூடவேண்டிய நிலைதான். தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறில், பென்னிகுக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப் போன கேரள அரசு, தற்போது மேற்கு தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்டி தமிழகத்திற்கு நெருக்கடி தரப் பார்க்கிறது. திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் மக்கள் முழுக்க முழுக்க அமராவதி ஆற்றை நம்பியுள் ளனர்.

அதே நேரத்தில் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 30 லட்சம் பேர் நேரடியாக அமராவதி ஆற்றையே நம்பி வாழ்கின்றனர். அமராவதி ஆற்றின் நீராதாரமான பாம்பாற்றில் அணைகட்டும் போது மேற்கு தமிழகம் வறட்சியைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே காவிரி பிரச்சனையால் வட மற்றும் கிழக்கு மாவட்டங்கள் கோடையில் வறட்சியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் போது தற்போது அமராவதி ஆற்றிலும் தண்ணீர் வராத நிலையில் தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரஸ்தான் கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஆனால், நடைமுறை யில் அது உதட்டளவில் பேசப்படுவதே தவிர, செயல் பாட்டில் கிஞ்சிற்றும் காண முடிவதில்லை. கருநாடகத்தில் காவிரிப் பிரச்சினையிலும் இதே நிலைதான்.

இப்படி அடாவடித்தனமாக, சட்ட விரோதமாக நடந்து கொள்வதற்குக் காரணம் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே!

தமிழ் ஓவியா said...


சர்வதேச சட்டமாக இருந்தாலும் சரி, இந்திய அளவில் உள்ள சட்டமாக இருந்தாலும் சரி, நதிநீருக்கான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.

ஓர் நதியில் அணை கட்டப்படவேண்டுமானால், கீழ்ப் பகுதியில் உள்ள அரசின் அனுமதி கண்டிப்பாகத் தேவை. மாநிலத்தில் உள்ள அரசுகள் இதனை மீறும்போது மத்திய அரசு கண்டுகொள்ளாதது - ஏன்? அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதுண்டு.

கருநாடகம், கேரளாவில் எப்படிப்பட்ட அரசியலை வளர்த்து வைத்துள்ளார்கள் தெரியுமா?

சட்ட விரோதமாக நதிநீர்ப் பிரச்சினையில் தங்களின் மாநில அரசு நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு வெறியூட்டி மக்களை வளர்த்துள்ளனர்.

நீரோட்டம் சரியில்லை என்றால், தேசிய நீரோட்டமும் ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாகிவிடும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/91003.html#ixzz3IuPobJx3

தமிழ் ஓவியா said...

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்

கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)

Read more: http://viduthalai.in/e-paper/91002.html#ixzz3IuQ0UAvt

தமிழ் ஓவியா said...

பெரியாரை உலகமயமாக்குவோம்

அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயங்கும் தெற்காசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் - பல்துறை அறிஞர்கள் இடையே வகுப்பு எடுப்பதுப் போல உரையாற்றிய நமது கழகத் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர். ஆசிரியர் கி.வீரமணியார் அவர்கள், சிங்கப்பூர், மலேசியா மியான்மா ஆகிய 3 நாடுகளிடையே பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட தாக்கத்தையும், அதைத் தொடர்ந்து பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கான அற்புத விளக்கத்தையும் தந்துள்ளார்கள். தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் உரை யாற்றிய காரணத்தால் அந்த எல்லையோடு உரையை முடித்துக் கொண்டார் எனக் கருதுகிறேன். எப்போதும் எவற்றிலும் எல்லைத்தாண்டாத ஆசிரியர் அவர்கள் நாகரிகமாக அவ்வாறு நடந்துக் கொண் டதை யான் பாராட்டுகிறேன்.

அதே சமயம் ஆசிரியர் அவர்களின் உழைப்பால் - அமெரிக்காவில் - கனடா வில் - இங்கிலாந்து மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல. தென்ஆப்பிரிக்கா - தென் அமெரிக்கா ஏன் ஆஸ்திரேலி யாவில் கூட பெரியாரின் தாக்கம் அங் குள்ள திராவிட மக்களின் ஈடுபாட்டோடு ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பாரில்லை.

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கு உண்மையான திராவிட இயக்கத்திற்கு பன்முகத் தோற்றம் கொண்ட உன்னத செயல்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளார். திராவிடர் இனப்பற்று, தமிழ்பற்று, அதே போன்று திராவிட மொழிகள்பால் பற்று - கடவுள் மறுப்பு - ஏற்றத்தாழ்வற்ற சமுதாய அமைப்பு - நேர்மையான அரசு அமைவதற்கான ஒத்துழைப்புகள் என்று எவ்வளவோச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டியலிடலாம் இன்னும் உலக சமுதாய நன்மைக்கு என் னென்ன வழி முறைகள் உள்ளனவோ அத் தனையும் குறிப்பிட்டு அடையாளப்படுத்திய வர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

உலகில் எவ்வளவோ வகையான மதவேற்றுமைகள் - சாதி வேற்றுமைகள் - நிற வேற்றுமைகள் - பண்பாட்டு வேற்று மைகள் இன்ன பிற வேற்றுமைகள் இருப் பினும், பெரியாரின் அளவுகோலால் அளந் தால் கடவுள் ஏற்பாளர் - கடவுள் மறுப்பாளர் என்ற இரண்டே நிலைகளில் அடங்கிவிடும். இதில் ஆதிமனிதகுலம் ஏற்றது. கடவுளைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்த நிலை தான். பிற்காலத்தில் கடவுள்கள் ஏற்பட்டு பல்கிப்பெருகி நாட்டிற்கும் - மக்களுக்கும் ஏற்ற வகையில் பெருக்கம் கண்டது. எனவே கடவுள் மறுப்பு ஒன்று மட்டுமே - பகுத்தறிவு ரீதியான உண்மைநிலை. அந்த உண்மை நிலை ஏற்பட உலகிலேயே ஓர் இயக்கம் கண்டு, அது எப்போதும் தொய்வில்லாமல் செயல்பட ஏற்பாடுகள் செய்து - வெற்றி கண்ட ஒரே மாமேதை பெரியார் மட்டுமே.

பல சந்தர்பங்களில் _ பல நாடுகளில் பலபேர் கடவுள் மறுப்பு பற்றி குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆணித்தரமாக வாதிட்டும் உள்ளார்கள். அவர்களுக்குப் பின்னர் அக்கருத்துகள் செயல்பட ஏற்பாட் டினை செய்யவில்லை. பின் தொடர முயற்சித்த சிலரும் தோல்விகண்டு துவண்டு போனதுண்டு. இன்று உலகிலேயே பெரியார் ஒருவர் மட்டுமேதான் கடவுள் மறுப்புக் கொள்கையை எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டிற்கும் உகந்தவகையில் ஏற்பாடு செய்து சென்றுள்ளார் என துணிந்து கூறுவேன்.

உலக அளவில் நாம் நம் கொள்கை வீச்சை செயல்பட முனைவதால் நம் திராவிட இனப்பற்றை விட்டுவிடவில்லை. ஆரிய மதப்பித்தலாட்டத்தை வெளிப்படுத் திட தயக்கம் கொள்ளவில்லை. தமிழ் மொழிப்பற்றை விட்டுவிடவில்லை. இந்திய நாட்டிற்கு ஏற்ற அரசை வலியுறுத்துவதிலே தயக்கம் காட்டவில்லை. நெறிதவறிப் போகும் அரசுகளை. உலக மன்றத்தை கண்டிக்கத் தவறவில்லை. வேற்று இனத் தவர் - நாட்டிற்கு செய்யும் நல்லவைகளை போற்றாமல் இருக்கவில்லை. என்றும் நம்பாதை தெளிவானது. தற்போதைக்கு பயணம் கடுமையானதுதான். எனினும் உலகளாவிய தாக்கம் கொண்டது என்பது மட்டும் மிகவும் உண்மை. வாழ்க பெரியார்! வாழ்க வையகம்!!

- வேலை பொற்கோவன் (முன்னாள் திமுக அவைத்தலைவர், வேலம்பட்டி, கிருட்டிணகிரி மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/91011.html#ixzz3IuQbjFNq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வாஸ்து தோஷம்

கேள்வி: வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல் லுங்கள்?

பதில்: வாஸ்துதோ ஷம் ஒன்றே இல்லை, அதனால் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை என் னும் இரண்டு வரிகளை முழுமையாக நம்பி, தினமும் 16 முறை ஜபம் செய்யுங்கள், இதுதான் எளிய பரிகாரம். - தினமலர் ஆன்மிக மலரின் கேள்வி பதில்தான் இது கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று நாள் ஒன்றுக்கு 16 முறை எழுதுங்கள். அப்பொ ழுதுதான் கடவுள் கடாட் சம் கிடைக்கும் என்று அடுத்து அவரே எழுது வார் என்று எதிர்ப்பார்க் கலாம்.

Read more: http://viduthalai.in/page1/90930.html#ixzz3IuTeng9h