Search This Blog

6.11.14

பார்ப்பனர்அறிவிலிகளா? பேராசைபிடித்த அயோக்கியர்களா?-பெரியார்

ஜாதி அல்லது வகுப்புரிமை!

நம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அறிவிலிகளா? அல்லது பேராசை பிடித்த அயோக்கியர்களா? என்பது நம் மக்களுக்கு விளங்கவில்லை.

இன்றைய நம் நாட்டு அரசியல் - இந்தப் பார்ப்பனர்களின் தொல்லையாலும், நேர்மைக் கேடான கலவரத்தாலும் - வகுப்புக் கலவரத்தையும், வகுப்பு ஆதிக்கத்தையுமே அடிப்படையாகக் கொண்டதாக ஆகிவிட்டதுடன், இந்த நிலை வெகு சீக்கிரத்தில் பலாத்காரத்தைக் கிளப்பிவிட்டு அராஜகத்திற்கு வழிகோலுவதற்கு ஏதுவாக இருந்தும் வளர்ந்தும் வருகிறது. இதற்கு ஏற்பவே இந்நாட்டின் சங்கராச்சாரியார்கள், வெறும் ஆச்சாரியர்கள், அய்யர்கள், அய்யங்கார்கள், அய்யர்களின், அய்யங்கார்களின் பத்திரிகைகள் - ஆகியவர்கள் கட்டுப்பாடாக இதே தொண்டைத் தங்கள் வேத தர்மமாகக் கொண்டு செய்து வருகின்றனர்.

வகுப்பு உரிமை கேட்பதையும், வகுப்பு நியாயம் வழங்குவதையும், பஞ்சமாப் பாதகமாகக் கருதி, வெறிக் கூச்சல் போட்டுத் தமிழ் மக்களுக்கு ஆத்திரத்தையும், உயிருக்குத் துணியும்படியான அளவுமான உணர்ச்சியையும் ஊட்டி வருகிறார்கள்.

எலெக்ஷன் நெருங்க நெருங்கப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் பேயாட்டம் ஆடத் துணிந்து விட்டனர். இருக்கும் நிலைமையில் தேர்தலுக்குள் இரு தரப்பிலும் பல என்றில்லாவிட்டாலும், சில கொலைகளாவது விழுந்து தீரும் என்றே பயப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு வெறியாட்டம் ஆடினாலும், இன்று இந்தத் தமிழ்நாட்டில் என் ஒருவனைத் தவிர கேள்வி கேட்பாட்டிற்கே இடமில்லாமல் இருப்பதால், அவர்கள் கண்களுக்கு நான் ஒருவனே எதிரியாய்க் காணப்படுகிறேன். ஆனால், மற்றவர்கள் வாயைத் திறந்தாலே பார்ப்பனர்கள் இடி முழக்கக் கூச்சல் போட்டு அவர்களை (மற்றவர்களை) அடக்கப் பாடுபட்டு அடக்கி விடுகிறார்கள்.

பார்ப்பனர்கள் "மனு" கொள்கைப்படித் தங்கள் சுக வாழ்வுக்கும், ஆதிக்கத்திற்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் என்ன காரியம் செய்தாவது பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களான தமிழர்களைத் தலை எடுக்க முடியாமல் அழுத்தவும், அவர்கள் (பார்ப்பனர்கள்) பயன்படுத்தும் ஆயுதம் (வஜ்ஜிராயுதம்) "வகுப்புவாதம்" - என்று கூறி நம் மீது எய்யும் ஆயுதமே - ஆகும். இதை யார் மீதும், நமது எந்தப் பிரச்சினை மீதும் எய்து விடுகிறார்கள். இந்த ஆயுதத்திற்கு என்னைத் தவிர இந்த நாட்டிலுள்ள எல்லோருமே பயப்படுகிறார்கள். இந்த ஆயுதம் என்னைத் தவிர வேறு எவன் மீது பட்டாலும் அவனைக் கொன்றுவிடுகிறது; அல்லது மூர்ச்சை (சரணாகதி) அடையச் செய்து விடுகிறது. "வகுப்புவாதி"களை ஒழிப்பதும், "வகுப்புவாதியாய்" இல்லாதவனை ஆதரிப்பதும், தூக்கி விடுவதும் பார்ப்பான் தனது தர்மமாகக் கொண்டிருப்பதால், வாழ வேண்டிய தமிழன் எல்லோரும் (அதாவது தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எல்லாத் தமிழர்களுமே) அந்த ஆயுதத்திற்கு நடுங்குகிறார்கள்.

இதனாலேயே பார்ப்பான் இன்று இவ்வளவு உச்சநிலைக்கு ஏறிவிட்டான். இந்த நாட்டையும் பார்ப்பானையும் எடுத்துக் கொண்டால், இந்த நாட்டைப் பற்றி ஒரு முஸ்லிமுக்கு உள்ள உரிமையைவிட, ஒரு கிறிஸ்தவனுக்கு உள்ள உரிமையைவிட ஒரு கடுகு அளவு உரிமையாவது அவனுக்கு (பார்ப்பானுக்கு) அதிகமுண்டு என்று யாராவது சொல்ல முடியுமா? என்ற பந்தயம் கட்டிக் கேட்கின்றேன்.

முஸ்லிம் 100-க்கு 5-பேர் இருப்பான். கிறிஸ்தவன் 100-க்கு 3-பேர் இருப்பான். இதில் முஸ்லிமும், கிறிஸ்தவர்களும் பரம்பரைத் தலைமுறைத் தத்துவத்தில் இந்த நாட்டு மக்கள். பார்ப்பான் அந்நிய நாட்டுப் பரம்பரை மகன் என்பதை வலியுறுத்திக் கூறுவேன். முஸ்லிமும், கிறிஸ்தவர்களும் இந்த நாட்டுத் தமிழ் மகனை - அறிவிலும், ஆற்றலிலும், தகுதியிலும், திறமையிலும் தங்களுக்குச் சரி சமமாகக் கருதிச் சம மரியாதையாய் நடத்துகிறவர்கள் ஆவார்கள்.

ஆனால் இந்த 100-க்கு இரண்டே முக்கால் வீதம் உள்ள பார்ப்பனன், மற்றத் தொண்ணூற்று ஏழே கால் விகிதம் அதிகம் உள்ள மக்களாகிய நம்மை, எப்படி நடத்துகிறான் என்பதைப் பற்றி இந்த நாட்டுத் தமிழன் (திராவிடன்) மான உணர்ச்சிக் கண் கொண்டு பார்க்காத ஒரே ஈனத் தன்மையால், ஈனப் பிறவியாகவே கருதி - தகுதி, திறமையில், பிறவியில் தன்னைவிடக் கீழான இழி மகன் என்றே கருதுகிறான். கருதுவதோடு அல்லாமல் தனக்கு இப்படிக் கருதும், நடத்தும் இந்த நிலை - உரிமை என்றே கருதி அந்த இழிவை நம் தலையில் துணிவோடு சுமத்தித் தன் நிலையை உயர்த்திக் கொண்டு இருக்கிறான். அதற்கேற்ற கடவுள், மதம், சமுதாய அமைப்பு, அரசியல் ஆகியவற்றில் ஆதிக்கம் ஆகியவற்றில் ஆதிக்கம் ஆகியவைகளையும் உண்டு பண்ணிக் கொண்டு தைரியமாய் இந்நாட்டில் இந்த 1961-லும் உலவுகிறான் (தமிழ்நாட்டில்)

இதற்குத் தமிழன் இடம் கொடுத்ததுதான் காரணமே! எதற்கெடுத்தாலும் தமிழனைப் பார்ப்பான் "வகுப்புவாதி", "பிற்போக்காளன்" என்கிறான். அரசியலில் தமிழன் (நாம்) எந்தப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் "அதற்கு ஏற்ற தகுதி, திறமை உனக்கு இல்லை" என்கிறான்.

நாம் வகுப்பு உரிமை கேட்கிறோமா? வகுப்புவாதம் செய்கிறோமா? நமக்கு உள்ள உரிமையைத்தானே கேட்கிறோம்? இதற்கு ஆகப் பார்ப்பான் நம்மை வகுப்புவாதி என்கிறான் என்றால், இப்படி நம்மை இவன் சொல்லுவதாலேயே இவன் (பார்ப்பான்) வேறு வகுப்பு - நாம் வேறு வகுப்பு என்பதை அவனே ஒப்புக் கொண்டவன் ஆகிறானா இல்லையா? இந்த நிலையில், வகுப்பு உரிமை கேட்பதை, "வகுப்புவாதம்" என்றே சொல்வதானாலும், அது எப்படித் தவறாகும்?

"வகுப்புவாதம்" பேசுவதாகக் கருதப்படுகிறவன் தனது ஜாதியைச் சொல்லிச் ஜாதி எண்ணிக்கைக்கு ஏற்ப 100-க்கு 97-வீதம்தான் பதவி - உத்தியோகம் ஆகியவற்றில் ஜாதி உரிமை, ஜாதி நீதி கேட்கிறான் என்பதோடு சிறுபான்மையோன் ஆன பார்ப்பானுக்கும் 100-க்கு 3-க்கு குறையாமல் எடுத்துக் கொள்ளவும் சம்மதிக்கிறானே ஒழிய, இதற்கு விரோதமாகப் பேசுகிறானா; நடக்கிறானா? என்று கேட்கிறேன். அப்படிப் பேசினால் நடந்தால் - அதுதானே வகுப்புவாதமாகும்?  உரிமையை - நேர்மையை - நீதியை விரும்புவது வகுப்புவாதமானால், அதை வகுப்புவாதம் என்று ஒரு பார்ப்பான் சொன்னால், அதைத் தமிழன் - மனுதர்மத்தில் சொல்லப்படுவதுபோல் - ஆயுதம் கொண்டு போர் நடத்தியாவது அவனை ஒழித்துக் கட்டி - உரிமையை, நேர்மையை நிலை நிறுத்த வேண்டியதுதானே சுயமரியாதைத் தர்மம் (கடமை) ஆகும்? கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் விகிதாசாரம் கொடு என்று கேட்பது வகுப்புவாதம் ஆனால் விகிதத்துக்கு மேல் அனுபவிப்பது என்ன வாதம் ஆகும்? அது வகுப்புத் திருட்டு, வகுப்புக் குற்றம், வகுப்பு அயோக்கியத்தனம் தானே ஆகும்?

இந்தத் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் மகனின் இந்நாட்டு ஆட்சியை - பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்டு வந்த தமிழ் மகனை - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் தன் உடலுழைப்பால் இந்நாட்டையே இந்நிலைக்கு அமைத்து, இந்நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலியவற்றை உற்பத்தி செய்து மக்களுக்கு அளித்த தமிழ் மகனை - 'இந்நாட்டு ஆட்சி அமைப்பில் தன் விகித உரிமை தனக்கு வேண்டும்' என்று அவன் கேட்பது வகுப்பு வாதம் என்றால், இந்நாட்டில் அந்நியனின் வகுப்பு ஆதிக்கம் எவ்வளவு உச்சநிலைக்குப் போய்விட்டது? இந்நாட்டு மக்களின் நிலை எவ்வளவு கீழ்நிலைக்குப் போய்விட்டது என்பதைக் காட்டும் அறிகுறிதானே அது?

நான் இன்று பார்ப்பானை நேரிடையாகவே ஒரு கேள்வி கேட்கிறேன்.

ஓ பார்ப்பானே! தமிழ்நாட்டில் உனக்கு ஏது பங்கு? இந்நாட்டில் உனக்கு உரிமை ஏது? உனக்கு இந்நாட்டில் பிச்சை எடுக்கும் உரிமைதானே உண்டு? நீ பிச்சைக்காரன்தானே! அதிலும் உழைப்பு இல்லாமல் வாழும் சோம்பேறி பிச்சைக்காரன்தானே! இதுதானே உனது ஜாதி தர்மம்?

ஒரு வயலில் தானியம் விளைவித்து அறுப்பு அறுத்துக் களத்தில் போட்டு அடித்துத் தூற்றிக் குவித்தால் அந்தப் பண்டம் யார் யாருக்கு உரிமை?

நிலத்தைக் காடுவெட்டிப் பக்குவப்படுத்திய அல்லது அதைப் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொடுத்து வாங்கிய நிலச் சொந்தக்காரனுக்கு உரிமை - உழுது தண்ணீர்ப் பாய்ச்சிய உடல் உழைப்பாளிக்கு உரிமை - அவ்வளவுதானே! பயிரின் கதிரை அடிக்கும் போது பக்கத்தில் வந்து நிற்கும் பாடுபடாத சோம்பேறிப் பிச்சைக்காரனுக்கு அதிக உரிமை உண்டோ? அப்படிப்பட்டவனுக்குப் "பிச்சைக்கு உரிமை உண்டு" என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப் பிச்சைகூடப் பொருளை உடையவனது இஷ்டத்தைப் பொறுத்தது. அவனாகப் பார்த்து ஏதோ பிச்சை போடலாம். அதிலும் பொருள் உடையவன் புத்திசாலியாய் இருந்தால் "பிச்சை கொடுப்பது நாட்டில் சோம்பேறிப் பசங்களுக்கு உழைக்காமல் வயிறு வளர்க்க ஊக்கம் ஊட்டுவதாகும். ஆதலால் இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டு வா என்று சொல்ல வேண்டியதுதான் தர்மமாகும். அதுபோலத் தானே இந்தப் பார்ப்பான்?

நாட்டு அமைப்புக்கு, நாட்டு வளத்திற்கு, இந்தப் பார்ப்பான் செய்த காரிமென்ன? "பிறவியில் உயர்ந்தவன்" என்கின்ற ஓர் அயோக்கியத்தனமானதும் பித்தலாட்டமானதுமான உரிமை கொண்டாடி மக்களை ஏய்த்து நேர்மை கெட்ட தன்மையில் ஆதிக்கம் பெற்று மக்களை ஏய்த்துப் பிழைக்கிறான் என்பதைத் தவிர இந்தப் பார்ப்பானுக்கு இந்தத் தமிழ்நாட்டில் என்ன உரிமை உண்டு? யாராவது சொல்லட்டுமே - ஆதாரம் காட்டட்டுமே பார்க்கிறேன்!

இந்தப் பார்ப்பான் தன் வாயாலேயே தன்னை அந்நியன் என்பதாக அதாவது தான் வேறு ஜாதி - வேறு பிறவி என்று சொல்லிக் கொள்ளுகிறான். தனது நாடும் வேறு நாடு என்கிறான். இந்த நம் நாட்டைப் பற்றி, இந்த நம் ஜாதி - பிறப்பைப் பற்றி, நாட்டு உரிமை, ஜாதி உரிமை பற்றித் தனக்கு எந்தவிதமான கவலையும் இல்லாமல், இதை அடிமை நாடாகவும், இந்த நம் ஜாதி மக்களை அடிமை மக்களாகவும் நடத்துவதுதான் தன் ஜாதி - பிறவியின் கடமை என்கிறான்! அதற்குச் சட்டம் - சாஸ்திரம் காட்டுகிறான். இந்த நம் நாட்டு ஆட்சி உரிமையைப் பற்றித் தனக்குச் சிறிதுகூடக் கவலை இல்லை என்பதைத் தைரியமாகக் காட்டிக் கொள்வதற்கு வெட்கப்படாமல் இந்த நாட்டு நீதி, நிருவாகப் பதவிகள், இந்நாட்டு மக்களுக்குச் சிறிய உத்தியோகம் கொடுக்கும் அதிகாரம் (பப்ளிக் சர்வீஸ் கமிஷன்), ஆதிக்கம் ஆகிய உரிமைகள் எவையும் இந்நாட்டு (மாநில) ஆட்நி உரிமையாக இருக்கக் கூடாது என்கிறான். தன் ஜாதியைத் தவிர மற்ற இந்த நாட்டான் எவனுக்கும் படிப்பே கூடாது; பதவி கூடாது; மனிதத்தன்மை, மரியாதை கூடாது என்று வெளிப்படையாகவே முயற்சி செய்வதோடு பச்சை அயோக்கியத்தனமாக நமக்கு, வகுப்புரிமைக்கு - வகுப்பு நீதிக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை என்கிறான். இவற்றைக் கேட்பதையே வகுப்புவாதம் - மாபாதகம் என்கிறான். எந்த நிலையில் இந்தப்படி சொல்லுகிறான் என்பதைப் பொதுமக்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இந்த நாட்டில் நம் திராவிட இன ஜாதியைச் சேர்ந்தவர்கள், இந்தப் பார்ப்பனர்களால், "நம் ஜாதியைவிடக் கீழான 5-ஆவது ஜாதி" என்று கூறப்படும் "பார்க்கக் கூடாதவர்கள்; தொடப்படக் கூடாதவர்கள்" 100-க்கு 5- பேர்கள்கூட படித்தவர்களாக - ஆக்கப்படக் கூடாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்தவர்கள், கடை மிருகங்களின் உரிமை கூட அளிக்கப்படாமல் காட்டுமிராண்டிகளாக - இருத்தப்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இன்று - இன்றல்ல - 15-ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்நாட்டு அரசியலில் வகுப்பு உரிமை வகுப்பு விகித எண்ணிக்கைப்படி அடையும்படியான தன்மையை வலுவில் அளித்திருக்கும் நிலைமையிலும் இந்தப் பார்ப்பனர் நாம் கேட்கும் விகிதாச்சாரத்திற்கும் உள்பட்ட உரிமையை, "வகுப்புவாதம் இது - எல்லாப் பாதகங்களையும்விடக் கொடுமையான மாபாதகம். இதை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். நாம் வகுப்புரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் - நமக்குப் பதவி எப்போதோ - எந்தக் கீழான நிலைமையிலோ கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மண்டை அடி அடித்துச் சித்திரவதைச் செய்வதைப் போல், 'நமக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை' என்று சொல்லி இழிவு படுத்துகின்ற கொடுமையும், தொல்லையும் விளைவிக்கின்றனர் என்றால், இவர்களை நம் தமிழ்நாட்டில் நாம் வைத்துக் கொண்டிருப்பது, வாழ விட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு நமது கோழைத்தையும், இழிவுத் தன்மையையும் காட்டுகிறது என்பதைச் சுதந்திரா கட்சி முதல் மற்ற எல்லாக் கட்சியில் இருக்கும் தமிழ் மக்களையும் வணக்கமாகக் கேட்கிறேன்.

உத்தியோகம், பதவி என்பது இந்நாட்டு மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஆயுதங்கள் ஆகும். நல்ல சம்பளம் பெறுவதுடன் ஆதிக்கம் செலுத்துவதோடு, ஒரு தாழ்ந்த உத்தியோகத்தில் இருப்பவனும், இந்நாட்டு சராசரி மக்கள் வாழ்வைவிட இரண்டு பங்கு, மூன்று பங்கு, சில நூறு பங்கு, இரு நூறு பங்கு உயர்ந்த வாழ்வும், அந்தஸ்தும் உடைய தன்மை உடையதாகும். அதிலும் இவை பெரிதும் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாக ஆகிவிட்டதால் 100-க்கு 90-மக்களுக்கு எஜமான் ஸ்தாபனமாகவே ஆகிவிட்டன. இந்தப் பார்ப்பனர்களின் - இப்படிப்பட்ட பதவிகள் - அயோக்கியத்தனமான முயற்சியால் நமக்குக் கிடைக்காதபடி, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., எல்லாரும் வெள்ளையன் காலத்தில் சீமைக்குப் போனதுபோல் இன்று ஆரிய ஸ்தாபனமான டெல்லிக்குப் போய்விட்டன. தலைமை சுப்ரீம் கோர்ட் நாம் நெருங்க முடியாதபடி டெல்லிக்குப் போய்விட்டது. சட்டசபை மெம்பர் (உறுப்பினர்) மந்திரி நியமனம் டெல்லி தயவில் இருக்கின்றன. பொதுக் கல்வி தொழில் துறைக் கல்வி டெல்லி ஆதிக்கத்துக்குப் போக வேண்டும் என்கிறான் (பார்ப்பான்) பப்ளிக் சர்வீஸ் (அரசு அலுவலர் தேர்வாணைக் குழு) கமிஷன் நியமனம் - இரயில்வே, தபால், கங்கம் முதலிய இலாகாக்களின் பப்ளீக் சர்வீஸ் கமிஷன் - டெல்லி ஆதிக்கத்தில் இருப்பதாலேயே இந்த இலகாக்கள் பெரிய பார்ப்பன அக்கிரகாரமாகவே இருந்து கொண்டு, பியூன்கள் கீழ்த்தர வேலை ஆகியவை மட்டும் 100-க்கு 100-தமிழனுக்கு ஆகவே இருந்து இழிவுபடுத்தி வருகிறது.

உடலால் உழைத்துச் சாப்பாட்டுக்கும் போதாமல் திண்டாடும் வேலைகள் யாவும் நமக்கு; உழைப்பில்லாமல் கொள்ளை அடித்துச் சுகபோக வாழ்வு வாழும் பதவி அத்தனையும் அந்நியனான - தனக்கு - பார்ப்பானுக்குத்தான் இருக்க வேண்டுமானால், நாம் ஜனநாயகத்திலோ, சுயராஜ்ஜியத்திலோ இருக்கிறோம் என்று - பார்ப்பான் வைப்பாட்டி மகனாய் இல்லாமல் சுயமரியாதைத் தமிழ் மகனாக இருக்கும் யார் தான் சொல்ல முடியும்?

நம் தமிழ் நாட்டின் இழிநிலைமையானது (நம் தமிழ் இனத்தின் மானங்கெட்ட தன்மையானது, தமிழ்நாட்டில் - தமிழ்நாட்டு ஆட்சியில் உள்ள அரசியல் சம்பந்தப்பட்ட, அரசியல் ஆதிக்கத்திற்கு உள்பட்ட எல்லா ஸ்தாபனங்களிலும் வகுப்புரிமை, வகுப்பு விகிதப்படி இருக்க வேண்டும் என்கின்றதில் மானம் - இலட்சியம் திராவிடர் கழகத்தைவிட வேறு எந்த அரசியல் - சமுதாய - கட்சிக்கும் ஸ்தாபனத்திற்கும் இல்லாமல் இருப்பதற்கு அறிகுறியாகும்.

ஆகவே, நாம் பார்ப்பனர்களால் கூறப்பட்டு நம்மை இழிவு படுத்தப்படும் 'வகுப்பு வாதம்' என்னும் ஜாதி உரிமை வாதமானது, எல்லா சுத்தத் தமிழனுக்கும், பிறப்புரிமை என்று சொல்லுவதோடு அது இல்லாதவன் சரியான பிறப்புக்காரனாக இருக்க முடியாது என்றே சொல்லுவேன்.

குறிப்பு: அரசியல் மைனாரெட்டி வகுப்பு பாதுகாப்பு என்பது அரசியல் சம்பந்தப்பட்ட அதாவது படிப்பிலும் - உத்தியோகம், பதவி ஆகியவற்றிலும் யார் குறைந்த விகித எண்ணிக்கை உடைய மக்களாக - வகுப்பாக - ஜாதியாக இருக்கிறார்களோ அவர்களைத்தான் மைனாரெட்டி வகுப்பு என்று கூறவேண்டும் என்பதுடன், இந்த மைனாரெட்டிக்குத் தான் பாதுகாப்பும், சலுகையும் அளிக்க வேண்டும் என்றும் சொல்வேன்.

வகுப்புரிமைவாதி,
ஈ.வெ.ராமசாமி

----------------------------- 13.01.1961- 'விடுதலை' நாளிதழில் பெரியார் ஈ.வெ.ரா தலையங்கம். -”விடுதலை”', 13.01.1961

28 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிர்கள்தானே

சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண் டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90678.html#ixzz3IOF3jkAl

தமிழ் ஓவியா said...

பிஜேபி.க்கு எதிராக அணி திரள்கிறது
லாலுபிரசாத், முலாயம்சிங், நிதிஷ்குமார், தேவகவுடா ஒன்றிணைகிறார்கள்

டில்லி, நவ.7- நாடா ளுமன்றத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளாக உள்ள சமாஜ்வாடி கட்சி, அய்க் கிய ஜனதா தளம், ராஷ் டிரிய ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட் சிகள் அய்க்கிய முன்னணி என்கிற பெயரில் 6.11.2014 அன்று கைகோர்த்துள்ளன.

உணவு இடைவேளை யில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்டிரிய ஜனதாதளத் தின் தலைவர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றார். அய்க்கிய ஜனதாதளம் சார்பில் நிதீஷ்குமார், சரத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் எச்.டி.தேவகவுடா மற்றும் பலரும் கூட்டத்தில் பங் கேற்றனர்.

கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களிடையே அய்க்கிய ஜனதா தளத் தலைவரும், மேனாள் பீகார் மாநில முதல்வரு மாகிய நிதீஷ்குமார் கூறும்போது, ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வெளியே வந்த அனைத் துக் கட்சிகளையும் ஒன்று சேர்ப்பது என்கிற நோக் கத்தின்படி கூட்டம் நடைபெற்றது என்றார்.

மேலும், நிதீஷ்குமார் கூறும்போது,நாங்கள் முழுமையாக அரசியல் சூழ்நிலைகள்குறித்து விவாதித்தோம். எங்கள் கருத்துகள் ஒன்றாகவே இருக்கின்றன. நாடாளு மன்றத்துக்குள் நாங்கள் அய்க்கிய முன்னணி அமைக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளிலும் ஒரு மித்த கருத்தைக் கொண் டுள்ளோம். நாங்கள் எங்கள் எண்ணத்துடன் உள்ள பிற கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் என்று கூறினார்.

நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தலைத் தொடர்ந்து காங்கிரசு மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கி ணைப்பதில் ஒரு மாத முயற்சிக்குப்பின்னர் இக் கூட்டம் நடந்துள்ளது.

இடதுசாரிகள் பிரச் சினைகளுக்கேற்ப உரிய நேரத்தில் பங்கேற்பர். இந்தக் கூட்டத்துக்கு அவர்களை அழைக்கவில்லை.

மேலும் அவர்கூறும் போது, இடதுசாரிகள் இதே போன்று மற்ற கட் சிகளை ஒருங்கிணைக்க அணுகினார்கள். ஆனால், அவர்களால் சாதிக்க முடியவில்லை.

சமாஜ்வாடி கட்சிக்கு நாடாளுமன்றத்தில், அய்ந்து மக்களவை உறுப் பினர்கள் உள்ளனர். ராஷ் டிரிய ஜனதாதளத்தில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். அய்க்கிய ஜனதாதளம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு முறையே 2 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90680.html#ixzz3IOFQmOE4

தமிழ் ஓவியா said...

தென்னக ரயில்வேயில் குரூப் டி பணிகளுக்கு, தமிழர்கள் நிராகரிப்பா?

தென்னக ரயில்வேயில் 5430 குரூப் டி பணிகளுக்கு விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பதவிகளுக்கு, விண்ணப்பிப்போர், அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களை (Attested Copy) இணைத்திட வேண்டும் என தென்னக ரயில்வே, ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்தது. ஆனால், தமிழ் நாளிதழில் வெளியிட்ட விளம்பரத்தில், இந்த அத்தாட்சி முறை தேவையில்லை என செய்தி வெளியிட்டது. இதனை நம்பி, எந்த அத்தாட்சி பெற்ற சான்றிதழும் இணைக்காத ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆன்லைன் மூலமாக விண்ணப் பித்தவர்களுக்கு, இந்த அத்தாட்சி பெற்ற சான்றி தழ்கள் இணைக்காத நிலையில், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகு அத்தாட்சி முறை இனி தேவையில்லை என்று மத்திய அரசே இதற்குமுன் அறிவித்து விட்ட நிலையில் இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?

பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் தமிழ் நாட்டில் உள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து, அவர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் பதினோரு லட்சம்பேர், இந்த பதவிக்கு நாடு முழுவதும் விண்ணப்பித்த நிலையில், இந்தத் தேர்வுகள் அய்ந்து நாட்கள் நடைபெறுகின்றன. முதல் தேர்வாக, திருச்சியில் 2.11.2014 அன்று தேர்வு நடைபெற்று, ஆயிரக்கணக்கான பீகாரிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
குரூப் டி பதவிகளில் டிராக்மேன், போர்ட்மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகள் பல ஆண்டு களாக அந்தந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்படுவர். மாநில மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு அடிப்படை சம்பளம் ரூ.1800. ஆனால், இந்த பணிகளுக்கு, வட மாநிலத்தவர்களை, அனுமதித்திருக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் செயல், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

இது வேலை வாய்ப்புப் பிரச்சினை என்பதையும் தாண்டி, ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர், தமிழகத்தில் கடை நிலை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதால், சமூக, மொழி பிரச்சினையையும் உருவாக்குவது நிச்சயம்.

தமிழ்நாடு அரசும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனே தலையிட்டு தவறான காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட இரண்டரை லட்சம் தமிழர்கள் மீண்டும் தேர்வு எழுதிட அனுமதிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
7-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/90684.html#ixzz3IOFYz9iu

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதமானதாம் - உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

டில்லி, நவ.7 ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத் திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்புக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கும் அது இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அனுமதி வழங் கியது.

சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல் களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு உதவும். கடந்த 2010 ஆம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. 2012ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கணக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் (கிருஷ்ணமூர்த்தி என்பவர்?) வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பல மாநிலங்களில் இன்னும் நடத்தப் படவே இல்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

(ஜாதிகள் உள்ளன அரசியல் சட்டப்படி என்ற நிலையில் இத் தடை விசித்திரமானது என்பது சட்ட நோக்கர்கள் கருத்து).

Read more: http://viduthalai.in/e-paper/90681.html#ixzz3IOFyzoAy

தமிழ் ஓவியா said...


வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இப்பொழுது மழைக் காலத்திலும் தொற்றி யுள்ளது. வழக்கமாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும் இந்த நோய், இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் பாதிப்பதாக அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நமிதா புவனேஸ்வரி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/90686.html#ixzz3IOGSxVQJ

தமிழ் ஓவியா said...

முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

- (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/90694.html#ixzz3IOH3rPFW

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக் கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத் தான் நடத்து கிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தி னராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணரு டனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் ஜாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
ஜாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLLO6k7

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள் களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!a

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLVRYWk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLtZWFj

தமிழ் ஓவியா said...

மகாராட்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களே அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்களாம்!


மும்பை, நவ.7- ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்களையே மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாக ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரதமருடன் இரண்டு முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுடன் பத விக்கு வந்துள்ளார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இதுவரை எதுவும் செய் யாமல் இருந்துவந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர் களை மாநில அரசின் அதிகாரம் உள்ள துறைகளில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு வார கால பயிற்சி....

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (ஆர்.எம்.பி.) என்கிற அமைப்பு இந்த ஒரு மாதத்துக்குள் ஒரு வார கால பயிற்சியை அளிக்கிறதாம்.

அந்த அமைப்பின் நிர்வாக இயக்கு நரும், பாஜகவின் தேசிய துணைத்தலை வருமாகிய வினய் சகஸ்ரபுத்தே கூறும் போது, அலுவலக ஊழியர்கள் ஒப்பந்ததாரர் களுடன் உள்ள உறவை துண்டிக்கவேண் டும் என்கிற எண்ணத்தால் இத்திட்டம் ஏற்பட்டது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, புதிதாக அலுவலகப் பணிகள் குறித்த விவரங்கள் தெரிந்த அலுவலக ஊழியர் களை நியமிப்பதன்மூலம், முறைகேடுகள் மற்றும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

பெரும்பாலான நேரங்களில் அமைச்சர்கள் மாறினாலும், கீழ்நிலை ஊழியர்கள் மாறாமல் பணியில் தொடரு கின்றனர். தொடர்ச்சியாக உள்ள தீமையை இதன்மூலம் களைய விரும்பு கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/90708.html#ixzz3IOMCXMlg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவதாரம்

பொறுமையின் மறு வடிவமான பூமாதேவி உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமா ளும் உலகில் உள்ள அசுரர் களால் மக்களுக்கு ஏற் படும் அநீதிகளை அழிக்க அவதாரம் எடுத்து வரு வேன் என்று அருள் புரிந்தாராம்.

உலகில் இப்பொழுது அநீதிகளே நடைபெற வில்லையா? குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசு துணை யுடன் படுகொலை செய்யப்படவில்லையா? இலங்கையில் மண்ணுக் குள் பல்லாயிரவர் கொல் லப்படவில்லையா?

ஏன் பெருமாள் அவ தாரம் எடுக்கவில்லை? அவதாரம் எல்லாம் இந் தியாவில் மட்டும்தானா? இங்கிலாந்தில் ஏன் எடுக்கவில்லை - இவை எல்லாம் பிராந்திய கட வுள்கள் மட்டும் தானா?

Read more: http://viduthalai.in/page1/90610.html#ixzz3IONf38AK

தமிழ் ஓவியா said...

ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?


ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டில்லி, நவ.6-_ இந் தியத் திரைப்படத் துறை யில் பெண் ஒப்பனைக் கலைஞர்களுக்கு இருந்து வரும் தடை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெண்கள் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் ஆவதை பாலிவுட்டிலுள்ள சக்தி மிக்க தொழிற்சங்கங்கள் தடுத்து வந்தன. ஆண்க ளுக்கு இந்தப் பணி தேவை என அவர்கள் வாதிட்டனர். ஆனால் பாலின ரீதி யான பாரபட்சம் அரசி யல் சாசனத்துக்கு முர ணானது என்பதை சுட் டிக்காட்டி நீதிபதிகள் தடையை நீக்கியுள்ளனர். நடிகர், நடிகைகளுக்கு சிகையலங்காரம் செய்ய பெண்கள் இதற்கு முன் னர் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒப்பனை செய்ய பெண்கள் முயன்றால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டும், சில நேரங்களில் தாக்கப்பட் டும் இருந்தனர்.

அமெரிக்காவில் ஒப்பனைப் பயிற்சி பெற்ற ஒரு பெண், இந்தியாவில் தன்னால் வெளிப்படை யாக ஒப்பனை நிபுணர் பணி செய்ய முடியாமல் போகவே உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத் திருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த உச்சநீதிமன்றம், இந் திய திரைப்படத்துறையில் பெண் ஒப்பனைக் கலை ஞர்களுக்கு இருந்துவரும் தடை சட்டவிரோத மானது என்று தெரிவித் துள்ளது. இதனால் அறுபது ஆண்டுகளாக சுதந்திரமாக பணிபுரிய இயலாமல் இருந்த ஒப் பனைக் கலைஞர்களுக்கு வெளிச்சம் பிறந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page1/90611.html#ixzz3IONur8Gf

தமிழ் ஓவியா said...

ஆட்சி செயல்படுகிறதா?

2011ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. தொடக்க நிலையிலேயே மூன்று முக்கியமான மக்களின் இன்றியமையாத அன்றாடத் தேவைகளின் தலையின்மீது கை வைத்தது.

மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என்ற உயிர் மூச்சுப் பிரச்சினைகளில் கை வைத்து மக்களுக்கு மிகப் பெரிய மூச்சுத் திணறலை உருவாக்கிற்று.

இப்பொழுது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு முறை பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்ற அடியைப் பரிசாக மக்களுக்குக் கொடுக்கிறது.

தி.மு.க. ஆட்சியிலிருந்து இன்றியமையாத இந்த பொருள்களின் விலையை உயர்த்தியிருந்தால் அ.இ.அ.தி.மு.க. என்ன செய்திருக்கும்?

சபாஷ்! சரியான நடவடிக்கை என்று திமுக ஆட்சியின் முதுகைத் தட்டிக் கொடுத்திருக்குமா?

சாலையில் ஏதோ ஓர் இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தாலோ, எங்கோ ஓரிடத்தில் கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, குடிநீர்க் குழாய் உடைந்திருந்தாலோ - உடனே அங்கெல்லாம் கொடி தூக்கிப் போராட்டம் நடத்துவதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க.தானே இப்பொழுது ஆட்சிப் பொறுப் பில் இருக்கிறது?
எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை; ஆளும் கட்சியாக இருந்தால் வேறொரு நிலை என்பது ஏன்? என்று கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்கள்; வெகு மக்கள் வைக்கும் கேள்விக்கு விடை எங்கே?

அ.இ. அ.தி.மு.க. 2011இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாமர மக்களை மயக்கும் மலிவான தந்திரத்தில் சில திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறதே தவிர, நிரந்தரத் தீர்வை நோக்கி கால் அங்குலம்கூட - அடி எடுத்து வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை யாகும். தானாக உருப்படியான ஆக்கப் பூர்வமான திட்டங்களைச் செய்யாததோடு நின்றுவிடக் கூடாதா?

நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன? விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்ற சொலவடை நாட்டில் உண்டு.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை தன்னாலும் ஒன்றும் சாதிக்க முடியாது; அதே வேகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நல்ல திட்டங்களை யாவது அனுமதிக்க வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்ட சென்னைக் கோட்டூர்புரத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது; சங்கராச்சாரியாரை அழைத்து வந்து யாகம் எல்லாம்கூட நடத்தப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

ஆனால், தி.மு.க. ஆட்சியில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தலைமைச் செயலகத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் போனது ஏன்?

ஓர் ஆட்சி போகும். இன்னொரு ஆட்சி வரும்; ஆனால் நிருவாகம் என்பதும், ஆட்சி முறை என்பதும் தொடரக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க. அப்படியல்ல; நானும் எதையும் செய்ய மாட்டேன்; மற்றவர் செய்திருந்ததை யும் செயல்பட விட மாட்டேன் என்கிற - ஆட்சி முறைக்குச் சற்றுமே பொருத்தமில்லாத வன்மத்தோடு செயல்படுகிறதே!

சென்னை துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை பறக்கும் பாலம் மத்திய அரசின் உதவியோடு நடைபெறக் கூடியது. அந்தத் திட்டப் பணிகளும் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது அ.இ.அ.தி.மு.க. அரசு.

ஓர் அரசு என்றால் மக்கள் நல அரசாக (Welfare State) இருக்க வேண்டும் என்பது ஆட்சிக்குரிய இலக்கணம் ஆகும். அ.இ.அ.தி.மு.க. அரசோ மக்கள் நல அரசாக செயல்படவில்லை என்பது வெளிப்படை!

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் மிகப் பெரிய திட்டம்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பெற்று, அதன் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் அது திமுகவுக்கு சாதகமாகப் போகும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டத்தை முடக்க உச்சநீதிமன்றம் சென்றதை என்னவென்று சொல்லுவது!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது அரசு என்ற பதத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகவே ஆகி விட்டது.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அவர் உருவத்தைக் கட்சியின் கொடியிலும் பொறித்துக் கொண்டு பகுத்தறிவு முதற்கொண்டு மக்கள் நலம் ஈறாக உள்ள அனைத்திலுமே அண்ணாவின் கண் ணோட்டத்தை, கருத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, ஏட்டிக்குப் போட்டி என்றும் சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக நடந்த கொண்டுள்ளது என்பது பெரிதும் வருத்தத்திற்குரியது ஆகும்.

மத்தியிலே ஒரு மதவாத ஆட்சி; தமிழ் மாநிலத்தி லும் அத்தகைய ஓர் ஆட்சி என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தந்தைபெரியார் மண் இவற்றையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/90615.html#ixzz3IOOMel7L

தமிழ் ஓவியா said...

பார்ப்பனன்


செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட் டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான். - (விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/90614.html#ixzz3IOOXbJp3

தமிழ் ஓவியா said...

பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்கல்ல, ஆஸ்திரேலியாவில்


சிட்னி, நவ.6- ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் குழந்தைகளை பர்தா அணியக் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களாக இருந் தாலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 68 ஆயிரம் (ரூபாய் மதிப்பில் 36 இலட்சத்து 63 ஆயிரத்து 308) தண்டத்தொகையாக விதிக்கப் படும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் கூறியுள்ளார்.

டாஸ்மேனியாவின் செனட்டர் ஜாக்குய் லாம்பி பால்மர் அய்க்கிய கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பர்தா எனும் பழக்கத்தில் உள்ள முகத்தை முழுவதுமாக மூடும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்ட வரைவு குறித்து பேசும்போது இசுலாமியர்கள் வழக்கத்தில் கொண்டுள்ள பர்தா முறையைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளார்.

பர்தா அணிவது அல்லது பொது இடத்தில் முகத்தை முழுவதுமாக மூடுவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகி யோரை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று விதங்களில் குற்றமாக உள்ளது.

தனிநபர் மசோதாகுறித்து லாம்பி கூறும் போது, பிரெஞ்ச் அரசில் உள்ளவாறு அதை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறைப் படுத்துவது எளிமையானதே என்றார்.

சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு நபர்மீதும் காவல் அலுவலர்கள் அதே இடத்திலேயே தண்டத்தை விதிக்கலாம். தண்டத் தொகை 3,400 ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப்படும்.

பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு வயதில் முதிர்ந்த பருவத்தினரிடையே பர்தா வைக் கட்டாயப்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத்தொகையாக 34ஆயிரம் ஆஸ்திரே லிய டாலர் விதிக்கப்படுவதுடன் 6 மாத சிறைத்தண்டனை அளிக்கப்படும். அதேபோல், குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே பொது இடத்தில் முகத்தை மூடுவதற்குக் கட்டாயப் படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத் தொகை யாக 68 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப் படுவதுடன் 12 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

எந்தவகையிலும் அச்சுறுத்தலின்மூல மாகவோ, திணிக்கப்படுவதன்மூலமாகவோ அல்லது வேறு எந்த உறுதியளிப்பின் வாயிலா கவோ இருக்கக்கூடாது என்று சட்டமுன் வரைவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறை மிக எளிமையானது.

போக்குவரத்து விதிமீறல்களின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும். எந்தப் புனித நூலிலும் முகத்தை முழுமையாக மூடுமாறு குறிப்பிடப் படவில்லை. அதற்காக மதத்தை சாக்காகக் கொண்டோ, விதிவிலக்கு கோருவதையோ, சட்டப்பாதுகாப்பு உள்ளதாகக் கூறுவதையோ ஏற்கமுடியாது என்று லாம்பி கூறினார்.

முழுமையாக முகத்தை மூட விதிக்கப்படும் தடைக்கு விதிவிலக்காக தனியார் வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் அளிக்கலாம் என்னும் கான்பெர்ரா சாரா பாலின் கூற்றையே லாம்பியும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,

முகத்தை முழுவதுமாக மறைப்பது என்பதை தடுப்பதுடன் நோக்கம் நிறைவடையவில்லை. தடுப்பதற்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுகாதார காரணங்கள், தொழில்முறை காரணங்கள் மற்றும் கலை மற்றும் பாரம்பர்ய விழாக்களில் முழுவதுமாக முகம் மூடப்படுவதை தடுப்பது பொருந்தாது என்றார்.

சட்ட முன்வரைவில் லாம்பி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிராக உள்ள எதிர்ப்பாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குள் நுழை யும் போராட்டத்தை நடத்தினார்கள்.

கூ குக்ஸ் கிளான் அமைப்பை அட்டைகளை அணிந்த வாறு, மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் முகமூடிகளை அணிந்து பர்தாவை எதிர்ப்பவர் களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90625.html#ixzz3IOP55FOt

தமிழ் ஓவியா said...

லவ் ஜிஹாத் - உண்மை என்ன பிஜேபியின் ஜோடனை அம்பலம்!

இளம் பெண்ணின் தாயிடம் பணம் அளிக்கும் பிஜேபி தலைவர் வினீத் அகர்வால் சார்தா

பாரதிய ஜனதாவின் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தின் பொய்க் கதைகளை வெட்ட வெளிச்சமாக்கும் ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே மதரஸாவில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டேன் என பொய்யான புகார் அளித்ததாக நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்த, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பா.ஜ.க தலைவர் பணம் அளிக்கும் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் மூத்த பா.ஜ.க தலைவர் வினீத் அகர்வால் சார்தா, இளம்பெண்ணின் தந்தையிடம் பணம் அளிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. உ.பியில் பா.ஜ.கவின் வர்த்தகர் பிரிவு மாநிலத் தலைவராகவும் வினீத் அகர்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்ததை வினீத் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அது லவ் ஜிஹாத் விவாதத்துடன் தொடர்பில்லை என்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். லவ் ஜிஹாத் விவாதத்தை பரப்புரைச் செய்ய தனது தந்தையும், குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து காதலரான கலீம் என்ற இளைஞர் மீது புகார் அளித்ததாக நேற்று முன் தினம் சம்பந்தப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், காதலருடன் சுய விருப்பப்படியே சென்றேன். ஆனால், பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பொய்யான புகாரை அளிக்குமாறு தந்தையும், வீட்டாரும் கட்டாயப்படுத்தினர். எனது தந்தைக்கு வினீத் அகர்வால் ரூ.25 ஆயிரம் வழங்கினார். அடித்து உதைத்ததால் இளைஞரும், அவரது சகாக்களும் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி புகார் அளித்தேன். இக்காரியங்களையெல்லாம் வெளியில் கூற முயன்ற என்னை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். என்று அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவருடைய தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மீரட் காவல்துறைக் கண் காணிப்பாளர். ஓம்கார் சிங் தெரிவித்தார். அதேவேளையில் ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணின் புகாரை தொடர்ந்து கைதான கலீம் மற்றும் எட்டுபேர் இன்னமும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை.

வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பா.ஜ.கவிற்கு எதிராக கடும் கண்டனத்தை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளி யிட்டுள்ளன. லவ் ஜிஹாத் பா.ஜ.கவின் பிரச்சார ஆயுதம் மட்டுமே என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. லவ் ஜிஹாத் என்பது அவதூறுப் பிரச்சாரம் என்பது தெளிவானதை தொடர்ந்து அதனை உபயோகித்து வகுப்புவாத மோதல்களை உருவாக்கிய பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Read more: http://viduthalai.in/page2/90740.html#ixzz3ITW4UuvP

தமிழ் ஓவியா said...

பாரத புண்ணிய பூமியின் கதையைக் கேளீர்! இந்தியத் துணைக் கண்டத்தில் பெண்களுக்கெதிரான கொடுமைகள்

சமீபத்தில் நடத்திய ஒரு கள ஆய்வின் படி இந்திய பெண்கள் ஐந்துவகையான வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவண்ணமே உள்ளன.

2013 ஆம் ஆண்டில் வன்முறை எண்ணிக்கை

1. குடும்ப வன்முறை -கணவன் /உறவுகள் 18,866

2. உடல்ரீதியான கொடுமை 70,739

3. ஆள் கடத்தல் 51,881

4. வன்புணர்ச்சி 33,707

5. வேறு தீங்குகள் 34,353

மொத்தம் 309,546

இவை 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டவை

பதிவு செய்யப்படாத குற்றங்கள் எத்தனையோ யாமறியோம்.

2003 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறைக் குற்றங்கள் 50,703 ஆகும். ஆண்டு 2013ல் பதிவு செய்யப்பட்டவை 118,866. ஒவ்வொரு ஆண்டும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலும் ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.

அந்த திருமதி புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் கொடுமை இந்த நாட்டிலேதான்.

Read more: http://viduthalai.in/page3/90731.html#ixzz3ITWNIDAt

தமிழ் ஓவியா said...

பாரதியின் சூத்திர தர்மம்!


ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண் மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் பாரதி (ஞான ரதம் பக்.88)

இந்து தர்மத்தின்படி மனுவில் கூறப் பட்டுள்ள சூத்திரத் தன்மை ஏழு வகைப் படுமாம்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன். 3. பிராமணனி டத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப் பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலை முறை தலைமுறையாக ஊழி யஞ் செய்பவன் (மனு அத்.8, சு. 415).

மேலும், சூத்திரன் படிக்கக் கூடாது, வேதம் ஓதக்கூடாது, அப்படி அவன் படித்தால் நாக்கை அறுக்கவும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும் வேண்டும் என்றும்,
சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தர்மமாகக் கொள்ளல் வேண்டும். இவன் பிரா மணனை அடுத்த சூத்திரன் என்று ஒரு வனுக்குப்பெயர் வந்தால் அதே அவ னுக்குப் பாக்கியம்.

சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார்.

சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தன்மைகளில் பாரதி சூத்திரத் தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்று கூறுவது நோக்கத்தக்கது.

Read more: http://viduthalai.in/page3/90732.html#ixzz3ITWW9Doq

தமிழ் ஓவியா said...

தங்கம் விற்போரின் தகிடுதத்தங்கள்!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாள ருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும்.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தண்டம்?

பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணு வார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். . அதாவது எந்தப் பொருளையும் கொடுக் காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள் ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்கவேண்டுமென்று உத்தரவிட்டி ருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடை களுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விடமோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

Read more: http://viduthalai.in/page6/90745.html#ixzz3ITXhLgki

தமிழ் ஓவியா said...

தங்கம் விற்போரின் தகிடுதத்தங்கள்!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாள ருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும்.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தண்டம்?

பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணு வார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். . அதாவது எந்தப் பொருளையும் கொடுக் காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள் ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்கவேண்டுமென்று உத்தரவிட்டி ருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடை களுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விடமோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

Read more: http://viduthalai.in/page6/90745.html#ixzz3ITXhLgki

தமிழ் ஓவியா said...

களப் பலியாகும் சமூகநீதி!


பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் செல்லும் பொழுது ஏற்படும் இழப்புகள், இடர்ப்பாடுகள் பற்றி ஒரு பக்கத்தில் பெரும் அளவில் பேசப்படுவது நியாயமே!

அதில் இன்னொரு பேராபத்து இடஒதுக்கீடு - சமூகநீதி - சவக் குழியில் தள்ளப்படுவதாகும். ஆனால் இதைப்பற்றி இடதுசாரிகள் உட்பட யாரும் பேசுவதில்லையே.

பார்ப்பனர்கள், பார்ப்பனர்களின் ஊடகங்கள், பொதுத்துறை குன்றி, தனியார்த்துறை வளர வேண்டும் என்பதில் வானம் வரை வாயைக் கிழித்துப் பேசுவதற்கு முக்கிய காரணம் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு இல்லை என்பதால் தான்.

2012ஆம் ஆண்டு கணக்கின்படி தனியார்த் துறைகளில் இயக்குநர்களுள் பார்ப்பனர்கள் மட்டும் 92.6 சதவீதமாகும் பிற்படுத்தப்பட்டோர் 3.8 சதவீதமாகும். தாழ்த்தப்பட்டோர் 3.5 சதவீதமாகும். (Economic and Political Weekly 11.8.2012).

இந்த இயக்குநர்கள்தாம் பணி நியமனம் செய்யும் இடத்தில் குளிர்சாதன அறைகளில் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் முதுகில் பூணூலைத் தடவிப் பார்த்து நியமனம் செய்யும் இயல்பினர் என்பதற்கு ஆய்வுகள் ஏதும் தேவைப்படாது; கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல், புனியா மிகவும் கவலையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், கடமையுணர்ச்சியுடனும் கூறியது -கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

தனியார் துறைகளில் ஒரு திடமான ஒழுங்குமுறைச் சட்டங்கள் இல்லை; தற்போது பெருகி வரும் தனியார்த் துறை நிறுவனங்களை இடஒதுக்கீட்டு விதியின்கீழ் கொண்டு வந்து கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி நிலைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

இனி சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதை பொருத்ததே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அழுத்தமாகவே சொல்லி வருகிறார்கள். அதற்காகத் திராவிடர் கழகம் களத்தில் இறங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவர் கூறியதாவது, தனியார் துறையில் இடஒதுக்கீடு தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆனால் தனியார் துறைகள் இடஒதுக்கீட்டை வழங்க மறுத்துவருகின்றன. இதன் காரணமாக தனியார் துறையில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். இதை முக்கிய பிரச்சினையாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணையம் எடுத்துக்கொள்ளவேண்டும். தனியார் அமைப்புகள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளிலும் அரசு மானியம் பெறும் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறினார்.

அரசுத்துறை பல்வேறு பிரிவுகளை தனியார் மயமாக்கி வருவதால், இட ஒதுக்கீட்டின் பலன் குறைந்துகொண்டு வருகிறது. சில மாநிலங்கள் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை வைத்திருந்தாலும், அங்குள்ள தனியார் நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு விதியை விரிவுபடுத்தி, தனியார் துறையிலும் கொண்டுவரும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் காரணமாக ஏற்பட்ட மாற்றம் மிகவும் மெதுவாகத்தான் இருந்து வந்தது, தற்போது பொருளாதார மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணிகளால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பொருளாதார சமநிலை உருவாக வேண்டுமென்றால் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். இல்லையென்றால் இனிவரும் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு சமூகப்பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்றார் பி.எல். புனியா.

Read more: http://viduthalai.in/page6/90750.html#ixzz3ITYM5Kr7

தமிழ் ஓவியா said...

தேவையா செயலற்ற மடங்களும் திருட்டு ஜீயர்களும்!


ஸ்ரிய: பதியினுடைய க்ருபையில் -ஸ்ரீவைட்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்த கோட்பாடுகளை நாடும் நகரமும் நன்கறியச் செய்வதற்காகவும், அனைவருக்கும் பரப்ரம்மத்தை அடை வதற்கான சுலபமான பக்தி ப்ரபத்தி மார்க்கத்தை பரப்பிடவும் சந்யாசிகளான ஜீயர்கள் உருவானார்கள்.

மேலும் உலகத்தில் உள்ள எந்த வஸ்துக்களிலும் பற்று வைக்காமல் எனக்கு எதுவுமே தேவையில்லை எல்லாவற்றையும் துறந்து மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் சொத்து, சுகம், துக்கம், வேண்டியவர், வேண்டா தவர் என்று இல்லாமல் எல்லாவற் றையும் வெறுத்து ஒதுக்கி அதாவது

ஸந்யாஸி ஸர்வதா ஸூகம் என்று புராணத்தில் சொல்லப்பட்டபடி அனைத்தையும் வெறுத்து இறைவனடி சேர்வது ஒன்றே குறிக்கோள் வீடுபேறான மோட்சத்தில் இச்சை பிறந்தவன் ஸந்யாசி ஆச்ரமம் ஏற்றுக்கொண்டு துறந்து வாழ்ந்தார்கள். இது உண்மை யான சந்யாஸியின் நிலை ஆனால் தற்போது உள்ள நிலையே வேறு.

கோயில் மடத்து சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவும் பலநூறு ஏக்கர் கோயில் நிலங்களை தனக்கு வேண்டியவர்களுக்கு விற்றும் கொள்ளை அடிப்பதற்காகவே தற்போது ஜீயர்களாக போலி ஸந்யாஸிகளாக மடத்துக்கு வருகிறார்கள்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள், படித்தவர்கள் வேதப்ரபந்தம் நன்றாக வாசித்தவர்கள் நல்ல குணமுடைய வர்கள் இளைஞர்கள் சமயத்தை வளர்க்கும் எண்ணமுடையவர்கள் யாரும் சந்யாசியாக வருவதில்லை. 60 ஆண்டுகள் வேலை செய்து சம்பாதித்து சேர்த்து வைத்து விட்டு மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத் தில் ஓய்வு பெற்ற திருட்டு ஆசாமிகள் தான் ஜீயர்களாக வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் ஜீயர் என்று சொல்லிக் கொள்ளும் சீனிவாசாச்சாரி என்பவர் கோயில் மடத்து சொத்துக்களை விற்று பிறகு அரசு அதிகாரி வந்து சொத்து வாங்கியவர்களை காலி பண்ணச் சொல்ல சொத்துக்கு பணம் கொடுத்து வாங்கியவர்கள் திருக்கோவிலூர் சீனி வாசாசசாரியை மிரட்ட பின் அரசு தலையிட்டு பல லட்ச கொள்ளை யிலிருந்து காப்பாற்றியது சீனிவாசாச் சாரியை அதுவும் ஒரு பாகவதனுடைய தயவால்.

சென்ற ஆண்டு திருக்குறுங்குடி ஜீயர் அட்டகாசம் கோயில் மடத்து சொத்துக்களை விற்று தன்னுடைய வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது பல நூறு ஏக்கர் விளைநிலைத்தை அதிக பணம் பெற்று வேற்று மதத்தவருக்கு விற்றது என்று ஊரை சூறையாடிய திருக்குறுங்குடி ஜீயர் சந்யாஸி இவருக்கு முக்கோல் இவரும் ஒரு ப்ராஹ்மண ஜீயர்.

தற்போது பெரிய மடம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள வான மாமலை மடம் கலியன் வானமாமலை ஜீயர் குறித்து பத்திரிகையில் வந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியடைந்து ஸ்ரீவைட்ணவ உலகம்.

ஆம் பல கோடி ரூபாய் சொத்துக் களை விற்று கையாடல் செய்துள்ளார். நான்குநேரி வானமாமலை ஜீயர் நாங்கள் கேட்டதற்கு உன்னால் முடிந்ததை செய்து கொள் என்றார். அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் களும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வான மாமலை ஜீயர் கையாளாகிவிட்டனர்.

எனவே நீதிமன்றம் தலையிட்டு பல கோடி ரூபாய் கையாடல் செய்துள்ள ஜீயரை கைது செய்து பணத்தை மீட்டெடுத்து கோயில் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட் டத்தில் இயங்கும் தேசிய இந்து சமய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சசிகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறீமணவாளமாமுனிகளால் உருவாக்கப்பட்ட மடம் அதன் ஜீயரே கொள்ளைக்காரர் என்றால் இவர்கள் சம்ப்ரதாயத்தை வளர்ப்பவர்களா அழிப்பவர்களா? சிந்தியுங்கள்! தேவையா இந்த மடங்களும் ஜீயர் போர்வையில் திருடர்களும். திருட்டு கொள்ளைக்காரர்கள் எங்கள் ஆசார்யர்கள் என்று சொல்லிக் கொள்வது இது வேதனையிலும் வேதனை. மீண்டும் மீண்டும் ஜாதிப் பெயரைச் சொல்லி ஏமாற்றி போலி ப்ராஹ்மணர் களை ஆசார்யன் என்று சொல்வதை வெறுத்து ஒதுக்குங்கள்.

மேலும் பாகவத ப்ராஹ் மணோத் தமர்களே சிந்தித்துப் பாருங்கள்

- நன்றி (ஸ்ரீஹரி ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page6/90751.html#ixzz3ITYsVyDV

தமிழ் ஓவியா said...

விருதுநகர் மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8.9.தேதிகளில் திருவாளர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தலைமையில் நடத்தத் தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்முரமய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம் இம்மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவைகள் தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர்பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது.

ஆனாலும் இப்போது முன்நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதைவிட பன்மடங்கு விசேஷமாக நடந்தேற காரியங்கள் நடந்து வருவது ஆனது தலைவர் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப் பிரயாணம் முதலியவைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால, நிலைமையும் முன்பைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப் படுவது மற்றொரு விசேஷமாகும், அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று.

தண்ணீர் சௌகரியத் திற்குச் சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ்விரண்டையும்விட சுயராஜ்யம் என்னும் அரசியல் கிளர்ச்சி என்பதின் ரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால் ஒரு வகையில் வெளியானதன் பயனாய் சுயமரியாதை இயக்கத்தின் அவசியத்தை அதைக் குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மக்கள் முதல்யாவரும் அறிய நேர்ந்தது மூன்றாவதாகும். இப்படியாக இன்னும் பல நன்மைகள் ஏற்பட்டது முக்கிய அனுகூலங்களாகும்.

இந்த மகாநாடானது முன்னைய இரண்டு மகாநாடு களைவிட சற்று முக்கியமான தென்றே சொல்லுவோம். சுருக்கமாய் சொல்லுவதானால் இம்மகாநாட்டில் இயக்கத்தின் முற்போக்கை ஒருவிதம் நிர்ணயிக்க கூடியதாகயிருக்கும்.

வரவேற்பு கமிட்டியார் அறிக்கைகளிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் வருவதாய் தெரிவித்துக் கொண்டிருக் கின்றதாய் தெரியவருகின்றதானாலும் எல்லா பாகங்களிலிருந்தும் வாலிபர்கள் தாராளமாய் வந்து சேர வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

மற்றும் மகாநாட்டிற்கு விஜயமாகும், பிரதிநிதிநிகள் அவசியம் தங்கள் தங்கள் வீட்டுப் பெண்மக்களையும் அழைத்து வரவேண்டியது மிகவும் அவசியமென வேண்டிக்கொள் கின்றோம். பெண்கள் வருவதன் மூலமும், அவர்கள் உணர்ச்சிபெறுவதன் மூலம்தான் நமது கொள்கைகள் வீரிட்டெழமுடியுமேயொழிய ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம் காரியங்கள் சாத்தியமாகிவிடாது. ஆதலால் பெண்மணிகளும் தாராளமாய் விஜயம் செய்யவேண்டு மென்று ஆசைப்படுகின்றோம்.

பெண் மக்களுக்குச் சாப்பாடும், பிரவேசமும் இலவசமென்று வரவேற்புக் கமிட்டியார் தீர்மானித்திருப்பது போற்றக் கூடியதாகும். பெண்கள் மகாநாட்டுக்குத் திருமதி. இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மாள் அவர்களும், வாலிபர்கள் மகாநாட்டிற்கு திரு. நாராயணப் பெருமாள் எம்.எல்,சி. (திருவனந்தபுரம்) அவர்களும் தலைமை வகிப்பார்கள். குடிஅரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90753.html#ixzz3IWvUOnVt

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ் தினசரி பத்திரிகை


லால்குடி தாலுகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப் பற்றி நெடுநேரம் பேசினார்கள்.

திரு.ஈ.வெ. இராமசாமி தினசரி அவசியமில்லை என்றும், தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆக வேண்டுமென்றும், நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதைத் தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப் பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின்பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆட்சேபணையில்லையென்றும் சொன்னார்.

அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட 50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது. பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மற்றும், இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதரவளிக்க முன் வந்தார்கள்.

சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000 ரூ.க்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும், அடுத்த வாரம் போல் கொடைக்கானலில் நடைபெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90763.html#ixzz3IWvp3C1C

தமிழ் ஓவியா said...

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென்னவென்றால்,
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கி றேனேயொழிய ராஜியைக்காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை என்று பேசியிருக்கின்றார்.

ஆகவே, சமாதானப் பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனேயானால் ராஜியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத் திற்காக எந்த முறையையும் அனு சரிக்க வேண்டிவரும் என்று சூசனை காட்டி இருக்கின்றார்.

அதோடு ராஜி விஷயத்தைப் பற்றியும் பேசும் போது காங்கிரசுக் காரர்கள், ராஜியை ஒரு சமாதான அறிகுறி யென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்குத் தயார் ஆவதற்கு ஏற்படுத்திக் கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள் என்றும் இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய் சொல்லுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவ்வளவும் போதாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு.காந்தியவர்கள்தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தைனை கேட்டு முடியாமல் போயிற்றோ.

அதாவது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ, அந்தப் போலீசுக்காரர் களையே லார்ட் வில்லிங்டன் நன்றாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றி புகழ்ந்து இருக்கின்றார். அதோடு இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.

இதன் கருத்து முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்துகொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னும் இருக்கின்றது என்று சூசனை காட்டுவதேயாகும்.

இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணயம் எப்படி இருக்கின்ற தென்பதையும் சர்க்காராரும், காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணயமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த இராஜியின் பயனாய் இந்திய மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகும். கள்ளுக்கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த் துக்கொண்டால் நாணயத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும். குடிஅரசு - கட்டுரை - 05.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90764.html#ixzz3IWvxeUj6

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.

(குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/90787.html#ixzz3IWwoPt2a

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கு எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை அது அரசின் கொள்கை முடிவு - நீதிமன்றம் தலையிட முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு


அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது இடஒதுக்கீடுக்கு ஜாதி புள்ளி விவரம் அவசியமே!

புதுச்சேரி, நவ.9- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிட்டு, இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தர விட முடியாது என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


கடலூரிலும், புதுச்சேரியிலும் நேற்று (8.11.2014) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கூறி பரபரப்பாக நாளேடுகளில் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்ற நீதிபதிகள் சொன்னதாக சில ஏடுகள் தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தவறு - அது கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதுபற்றிய கொள்கை முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். இதில் இப்படித்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முடியாது; காரணம் இது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்களுக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுதான் வருகிறது. இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்ற நிலையில், அவர்களுக்கான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தான் வற்புறுத்திக் கொண்டு வருகிறோம்.

பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தியும் வருகின்றன.

நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட ஒன்றே!

2011இல் இத்தகைய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுப்பது என்று அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக சொன்ன நிலையில், மத்திய அரசும் அதனை ஏற்றுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறி, அதனை நாடாளுமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மத்திய அரசுக்கோ, மக்கள் கணக்கெடுப்புத் துறைக்கோ என்ன அவசியம் வந்தது என்பதுதான் கேள்வியாகும்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இன்றைய பிஜேபி அரசின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ஆர்.எஸ். சூரி, ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஏன்? 2011இல் நாடாளுமன்றத்தில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டே தீர வேண்டும் என்று இதே பிஜேபியும் கருத்து தெரிவித்த நிலையில், அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் அதனை ஏற்றுக் கொண்ட தன்மையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு முரணாக பிஜேபி செயல்படுவது - ஏன்? ஏனிந்த குழப்பம்? முரண்பாடு?


தமிழ் ஓவியா said...

அன்று உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லையென்றால் பிற்படுத் தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு என்பதை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது, அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட (Constituent Bench)அமர்வு கேட்ட கேள்வி என்ன? 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வது சரியானதல்ல - தற்போதுள்ள எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதா இல்லையா? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்படி சொன்ன பிறகு இரு நீதிபதிகளோ, மூன்று நீதிபதிகளோ அதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லையே!

திட்டக் குழுவும் சொன்னது என்ன?

திட்டக்குழு (Planning Commission) இதர பிற்படுத்தப் பட்டோர் துறைக்குக் குறைவான நிதியை ஒதுக்கியபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது திட்டக் குழு என்ன சொன்னது? இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் (Data) எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று சொன்னதற்கு என்ன பொருள்?

ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தானே திட்டக் குழுவுக்கு விவரங்களைத் தெரிவிக்க முடியும்?
இந்தப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினை - சமூக நீதிப் பிரச்சினை! இதில் மாநில அரசும் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறைக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு சமூக நீதியைக் காப்பாற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல கூப்பாடு போடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் புரிந்து கொள்ளாமல் திசை திருப்பும் நோக்கத்துடனும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று எங்கும் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டு இருந்தால் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதோ, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதோ தவறு - குற்றம் என்று சொல்லலாம்.

18 இடங்களில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி என்ற சொல் கையாளப்பட்டுள்ளதே! ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்; இல்லையேல் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்பட்டு நாடு தழுவிய அளவில் வெகு மக்களின் பெருங் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று கூறினார்.