Search This Blog

18.11.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 43

அயோத்தியா காண்டம் 

 

அயோத்தியா காண்டம்

பதினொன்றாம் அத்தியாயம்

 இராமன் கங்கையின் தென் கரையையடைந்து நடந்து போவதை அவன் தலை மறையும்வரை குகன் சுமந்திர னோடு பார்த்திருந்துவிட்டுச் சுமந்திரனையழைத்துக் கொண்டு தன் ஊரையடைந்தான். பின் அவன் தூதர் களையனுப்பி இராமன் பரத்துவாசனோடிருந்ததையும், அவனிடம் வழிகேட்டுத் தெரிந்துகொண்டு சித்திரகூடம் வரையிற் போனதையும் அறிந்துகொண்டு சுமந்திரனிடம் கூறினான். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டுச் சுமந்திரன் மூன்றாம் நாள் மாலையில் மனக்கவலையோடு தேருடன் அயோத்தியையடைந்தான். அவன் தசரதனை அணுகி இராமன் சொல்லியனுப்பியதைக் கூறினான். அதைக்கேட்ட தசரதன் மூச்சற்றுக் கீழே விழுந்தான். அவனைக் கோச லையும் சுமித்திரையும் வாரியெடுத்துக் கட்டிலில் கிடத்தினர். கோசலை அவனை நோக்கி, அரசே! சுமந்திரனிடம் ஏன் பேசவில்லை?


இந்த அநியாயத்தைச் செய்துவிட்டு இப்போது ஏன் வெட்கப்படுகிறீர் என்னைத் திருப்திசெய்யத் தாங்களும் துக்கப்படுவதுபோல் காட்டிக் கொண்டால் எனது துக்கம் தணியுமா? ஆகையால், இந்தப் பாசாங்கு வேண்டாம். 

துக்கப்படாமலிருந்தால் யாராவது நிந்திப்பார்களேயென்று பயந்து உலகப் பழிப்புக்கஞ்சி வருந்துகிறீரோ? அது வேண்டாம். இங்கே கைகேயி இருக்கிறாளென்று அஞ்சி இராமனைப் பற்றிய செய்தியைக் கேட்காமலிருக்கிறீரோ? அவள் இங்கே இல்லை! ஆதலின் தைரியமாய்ப் பேசும் என்று கூறி மூச்சற்று வீழ்ந்தாள்.


மூச்சுத் தெளிந்த மன்னன் சுமந்திரனையழைத்து வினாவினன். இராமன் என்னிடம் சொல்லியனுப்பியதைக் கூறுகிறேன்.


அரசனையும், கைகேயியையும், பரதனையும் மரியாதையாக நடத்த வேண்டுமென்று கோசலையிடம் சொல்லச் சொன்னான். பரதனிடத்தில் கோசலையை மரியாதையாக நடத்தும்படி சொல்லச் சொன்னான். இதைச்சொல்லும் போது இராமன் துக்கத்தால் கண்கள் சிவக்க மளமளவென்று கண்ணீர் வடித்தான். இலக்குவன் இராமனைப்போல மனத்திலிருக்கும் எண்ணங்களை மறைக்க முடியாதவன். அவன் தசரதர் மிகவும் அநியாயம் செய்து தங்களைத் துன்பத்துக் காளாக்கிவிட்டதாகவும், அநியாயக்காரராகிய தசரதரைத் தன் தந்தையாகத் தான் மதிக்கவில்லையென்றும், விவேகமற்று நீதிதிறம்புபவரைத் தள்ள வேண்டுமென்றும், இராமனைக்காட்டுக்கனுப்பி மறம்புரிந்த தசரதர் எவ்வாறு அரசராக இருக்க முடியு மென்றும் கோபத்தோடு கூறச்சொன்னான். சீதையோ மனத்தில் நிறைந்த கவலையால் பெரு மூச்சு விட்டுக் கொண்டு பிசாசம் பிடித்தவளைப்போல ஒன்றும் தோன் றாமல் திகைத்து நின்றாள். துக்கமிகுதியால் கண்ணீர் வடித்துக்கொண்டு ஒன்றும் பேசவில்லை. அழுதுகொண்டு என்னையும் தேரையும் பார்த்துக் கொண்டே நின்றாள். நான் புறப்பட்டேன். ஆனால் இராமன் மறுபடிபும் என்னை அழைப்பானே என்று எண்ணி அவனுடைய நண்பனான குகனுடன் மூன்று நாளிருந்தேன். ஊரில் எல்லோரும் இராமனை நினைத்து வருந்துகின்றார்கள் என்று கூறினான். அதைக்கேட்ட தசரதன், அறியாமல் மோசம் போனேனே, அழகிற் சிறந்த இராமனுடைய முகமண்டலத்தை நான் பார்க்காவிட்டால் கட்டாயம் இறந்தே போவேன். என் அதிகாரம் செல்லுவது உண்மையானால், இப்போதே என்னைத் தேரிலேற்றி இராமனிடம் கொண்டுபோய் விடு என்று அழுது கீழே வீழ்ந்தான். கோசலையும் தேரைத் திருப்பித் தன்னை இராமனிடம் சேர்க்க வேண்டினாள். சுமந்திரன் அவளை நோக்கி, சீதையும் இராமனும் கவலை யற்று வாழ்கின்றார்கள். கைகேயியைப் பற்றிச் சீதை ஒரு விநோதமான வார்த்தை சொன்னாள் என்றாள். உடனே அவன் என்ன காரியம் செய்தேன். சீதை கைகேயியைப் பற்றி வெகு கடுமையாகப் பேசிய சொற்களை இப்போது கூறினால் கோசலைக்குப் பிரியமாயிருக்குமென்று சொல்ல ஆரம்பித்து விட்டேனே. அதைக்கேட்டால் கிழவராகிய அரசரும் அவருடைய மனைவியும் உயிரை விட்டாலும் விடுவார்களே. இதை எப்படியாவது மறைக்க வேண்டுமென எண்ணி அது எனக்கு நினைவுக்கு வரவில்லை. கவலைப்பட வேண்டாம் என்று தேற்றினான்.


கோசலை தசரதனைப் பார்த்து, நீர் மிகவும் அபகீர்த் தியை விளைவிக்கும் செயலைச் செய்துவிட்டீர். இதுவரை யில் புதுமையான அன்னங்களையும் மாமிசங்களையும் உண்ட சீதை காட்டில் யாது செய்வாள்? அய்யோ? இராமனைக் காண்பேனோ? திரும்பி வந்தபோது பரதனாளும் நாட்டை அவன் கொடுத்தாலும் இராமன் ஏற்கமாட்டான். தம்பி ஆண்டதை அண்ணன் ஆளுவானா? வீரனாகிய இராமன் தந்தையாதலால் உம்மைக் கொல்லாது விடுத்தான். மீன் தன் குஞ்சுகளைத் தின்பது போல் உமது மூத்த மகனைக் கொன்றுவிட்டீரே, என்ன அநியாயம்? பெண்களுக்குக் கதி கணவனே. அவனில்லாவிட்டால் மகன்; அவனுமில்லாவிடில் தந்தை முதலிய சுற்றத்தார். பெண்கள் பிறர்க்கு அடங்கியிராமல் ஒருக்காலும் தம்மனப்படி நடக்கமுடியாதென்று விதியுளதன்றோ? இப்போது நீரோ என் சக்களத்தி வசப்பட்டிருக்கிறீர். ஆதலால், உம்மை இழந்தது போலாயிற்று. என் மகனோ துரத்தப்பட்டான். உறவினரோ அருகிலிலர். ஆகையால் எவ்விதத்திலும் என்னைக் கெடுத்துவிட்டீர். இத்தீச்செயலைச் செய்து நீர் அடைந்த பயனென்ன? உமது ஆசை நாயகியான கைகேயியும் பரதனும் வாழ்ந்தால் போதுமா? பிறர் எப்படியானால் உமக்கென்ன? என்று கொடிய சொற்களைக் கூறினான்.


இதைக்கேட்டு மனமுடைந்த தசரதன் மூச்சற்றான். தெளிந்தபின் கோசலை பக்கத்திலிருப்பதைப் பார்த்து மறுபடியும் மூச்சற்றான். அப்போது அவனுக்குத்தான் முன் செய்த அறக்கொடுஞ் செயலொன்று நினைவுக்கு வந்தது.  அதனால் அஞ்சி நடுங்கி, வெட்கத்தால் தலைகுனிந்து வணக்கமாகக் கைகூப்பி, உடைந்த என் மனத்தை இன்னும் புண்ணாக்காதே; உன்னைப் பணிகிறேன். என்னை மன்னி என்றான். கோசலை, இச்சொற்களைக் கூறி என்னை மறுபடியும் கொல்லவேண்டுமா? பிள்ளையைப் பிரிந்ததால் கடுமையாகப் பேசிவிட்டேன். மன்னியும். இது இராமனைப் பிரிந்த அய்ந்தாவது இரவு என்றாள். இரவு தொடங்கிற்று. தசரதன் தூங்கினான்; பின் கொஞ்ச நேரத்தில் விழித்துக் கொண்டான். அது இராமன் காடேகிய ஆறாவது நாள் இரவு தசரதன் விழித்து, கோசலே! அநியாயமாக இராமனைக் காட்டிற்கனுப்பி விட்டேன். நான் இளவரசாக இருந்தபோது ஒரு நாள் வேட்டையாட ஆசையோடு காடடைந்தேன். சரயு நதியில் இரவில் தண்ணீர் குடிக்கவரும் மிருகங்களைக் கொல்லலாமெனக் காத்திருந்தேன். யானை தண்ணீர் குடிப்பதுபோலச் சத்தம் கேட்டது. உடனே அம்பெய்தேன். அது தண்ணீர் குடிப்பதுபோலச் சத்தம் கேட்டது. உடனே அம்பெய்தேன். அது தண்ணீர் முகந்து கொண்டிருந்த ஒரு முனிவன்மேல் பட்டு அவன் கீழே விழுந்தான். உடனே அங்கே போய்ப் பார்க்க அம்முனி பூமியிற்கிடந்து புரண்டதைக் கண்டேன். அவன், நான் உனக்கென்ன கேடுசெய்தேன்? கிழவர்களாய்க் கண் தெரியாமலிருக்கும் என் தாய் தந்தையருக்குத் தண்ணீர் கொண்டுபோக வந்த என்னைக் கொன்றாயே! இதைப்போய் என் தந்தைக்குச் சொல். அவர் உன்னைச் சுட்டுச் சாம்பலாக்காதபடி அவரை வேண்டிக்கொள். எனக்குத் துன்பத்தை உண்டுபண்ணும் இந்த அம்பைப் பிடுங்கிவிடு என்றான். மறுபடியும், என் தாய் சூத்திரப்பெண்; என் தந்தை வைசியர். ஆதலின் பிரமஹத்தி வருமோ என்று வருந்தாதே என்றான்.

                      ---------------------- தொடரும் --”விடுதலை” 18-11-2014

33 comments:

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டம் சீனிவாசய்யர்?

அய்.பி.எல். கிரிக்கெட் டில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முகுல்முட்கல் தலை மையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தன் அறிக்கையை வெளியிட் டுள்ளது. இதில், சீனிவாச னுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சீனி வாசன் உள்பட 4 பேரும் ஒரு விளையாட்டுக்காரர் நடத்தை விதிகளை மீறியதை அறி வார்கள்; ஆனாலும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறது அறிக்கை.

தெரிந்ததை மறைத்ததும் குற்றம்தானே!

சீனிவாச அய்யரின் மரு மகன் குருநாதன் மெய்யப் பன் பெட்டிங்கில் ஈடுபட் டது உறுதி செய்யப்பட்டுள் ளது.

Read more: http://viduthalai.in/e-paper/91423.html#ixzz3JZScqdaz

தமிழ் ஓவியா said...

ஓங்காரம்

என்ன ஆனது?

ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும், ஆயி ரம் இடம்புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஒரு வலம்புரிச் சங்கும், ஆயி ரம் வலம்புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஒரு சலஞ்சமும் (சங்கில் உயர்ந்த வகை) ஆயிரம் சலஞ்சமும் கூடிய இடத் தில் ஒரு பாஞ்சசன்யமும் (இதுவும் ஒரு வகை உயர்ந்த சங்கு) இருக்கும். அந்த பாஞ்சசன்யந்தான் கிருஷ்ணபகவான் கையில் இருந்த சங்கு. காரணம் அதுதான் ஓங்காரத்தின் தொனியை ஒழுங்காகக் கிளப்பவல்லதாம்.

அது சரி... அப்படிப் பட்ட அந்த உயர்ந்த சங்கு இப்பொழுது எங்கே இருக்கிறதாம்?

அந்தச் சங்கை இப் பொழுதெல்லாம் அந்தக் கிருஷ்ணன் ஊதுவதில் லையா? ஓங்காரம் என்ன ஆனது?

Read more: http://viduthalai.in/e-paper/91424.html#ixzz3JZSkte6g

தமிழ் ஓவியா said...

சர்ச்சில் பெண் பிஷப்புகள் இந்து மதம் என்ன செய்யப் போகிறது?


லண்டன், நவ.19- இங்கிலாந்தில் பெண் பிஷப்புகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்து மதம் என்ன செய்யப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

1994 ஆம் ஆண்டுமுதல் பெண் பாதிரியார்கள் இங்கி லாந்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால், தேவாலயத்தின் சீனியர் பதவி வகிக்க முடியாத நிலை இருந்தது. பிஷப் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

2012 இல் ஒரே ஒரு பெண் பிஷப் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றமும், பிஷப் பொது மன்றக் குழுவும் ஆதரவு அளித்துவிட்டனர்.

கிறித்துவ மதத்தில் ஒரு பெரிய திருப்பமாக இது கருதப்படுகிறது. இந்து மதத்தின் ஆகமங்களிலேகூட பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கூறும் நிலையில், பெண் அர்ச்சகர் பற்றி நினைத்துப் பார்க்கத்தான் முடியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/91417.html#ixzz3JZSuTHiG

தமிழ் ஓவியா said...

நன்றாகத் தெரியும்...



மகன்: அய்யப்பப் பக் தர்களுக்கு உதவி செய்ய 24 மணிநேர தொலைப் பேசி சேவை மய் யத்தை இந்து அறநிலை யத் துறை தொடங்கி யுள்ளதே, அப்பா!

அப்பா: கடவுள் காப் பாற்ற மாட்டார். அது வெறும் சிலைதான் என் பது இந்து அறநிலை யத் துறைக்கு மிக நன் றாகவே தெரியும், மகனே!

Read more: http://viduthalai.in/e-paper/91418.html#ixzz3JZT1STTc

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம், நம் உரிமைகளைப் பெற முடியும்.
_ (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/91425.html#ixzz3JZTPodlD

தமிழ் ஓவியா said...

மதம் மாறிய இணையர் கேரள முதல்வரிடம் பாதுகாப்பு கோரினர்

கோழிக்கோடு, நவ.19- அதிகம் படித்த வர்கள் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த வர்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பொறியாளராக இருப்பவர் கவுதம்(24). இவர் பல் மருத்துவக் கல்வி பயின்றுவரும் அன்ஷிதா(21) இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால், அவர் களிருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


அவர்களின் கல்வி, மற்ற பணிகள் தொடர்வதற்காக பாதுகாப்பான சூழ் நிலைக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் உதவி கோரி உள்ளார்கள். அன்ஷிதாவின் பெற்றோர் தரப்பில் அவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித் ததால், வீட்டைவிட்டு வெளியேறி, காவல் துறையினரின் பாதுகாப்பில் திருமணம் செய்து கொண்டனர். இன்னமும் அவர் கள் வசிக்கும் வீட்டில் தொடர்ச்சியாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், இளம் தம்பதியினருக்கு நாளுக்குநாள் அச் சுறுத்தல் அதிகமாகி உள்ளது.

இரு வேறு மதங்களைச் சேர்ந்த இளம்தம்பதியருக்கு மிரட்டல் தொடரும் நிலை உள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்கிறார்கள். மதத்துக்கு எதிராக திருமணம் செய்துவிட்டதாகக்கூறி அவர் களின் வாழ்வே கேள்விக்குரியதாகி உள்ளது. எல்லா நாள்களிலும் அவர்களின் வீட்டை நோக்கி கும்பலாக திரண்டு மிரட்டலை விடுத்து முழக்கமிடுவதும், வீட்டின் சன்னல்களில் கல்வீச்சுகளுமாக இருக்கிறது. கல்வீச்சில் சன்னல்கள் உடைந்து சேதமாயின.


கவுதம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாகும். நான் எந்த மதத்தை யும் பின்பற்ற வேண்டியதில்லை என் பதைத் தேர்வு செய்துள்ளேன். இப் போதும்கூட அன்ஷிதா இசுலாமிய மதமுறையைப் பின்பற்றுகிறார். அவருக் காக குர்-ஆன் நூலை வாங்கிக் கொடுத் துள்ளேன். இதில் எதிர்ப்பு தெரிவிப்பவர் கள் ஏன் மதத்

தைக் கொண்டுவரு கிறார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை. மதத்தின்பெயரால் எங்களை தூற்றி வருகிறார்கள் என்றார்.
உள்ளூர் காவல் ஆய்வாளர் ஜோஷி ஜோஸ் தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியை ஏற் படுத்த அனைத்துவித முயற்சிகளும் எடுத்து வருகிறோம். எந்த அமைப்போ, அரசியல் தலையீடுகளோ இந்த அச் சுறுத்தலில் இருப்பதாக யாரும் பொறுப் பேற்கவில்லை என்றார்.

கவுதம் கூறுகையில் எப்போது பணிக்குச் செல்லமுடியும் என்று உறுதி யாகச் சொல்ல முடியவில்லை என்றார். அவருடைய பெற்றோர் ஆதரவில் இரு வரும் இருக்கிறார்கள். கவுதம் கூறும் போது, நாங்கள் வீட்டைவிட்டு வெளியே அடி எடுத்துவைக்க முடியவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம் என்றார்.

அவர் தந்தை சுதாகரன் கூறுமபோது, 9 மாதங்களாக தங்கள் உறவை மறைத் துக்கொண்டிருந்த அவர்கள் திருமணம் முடிந்தபின்னரும் எதிர்த்துவருவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தமடையச் செய்கிறது. அன்ஷிதாவின் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு உதவவேண்டும் என்பதே என்னுடைய முதல் குறிக்கோள். இதற்காக எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவைப்படுகிறது என்றார்.

அண்ஷிதா மீண்டும் கசர்கோட்டில் உள்ள கல்லூரிக்குச் செல்ல முடியாது. அவர்மீதான அச்சுறுத்தல் அங்கு பதட்ட மான சூழலையே முழுமையாக ஏற்படுத்தி வந்துள்ளது. அவர் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே நம்பிக்கையுடன் படித்து வருவதுடன் இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத முடியும் என்று நம்புகிறார்.

வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளவரும், மதம் மாறித் திருமணம் செய்துகொண்டவர் நலனுக் காக செயல்பட்டுவருபவருமான அஜீதா கேரளாவில் உள்ள சூழல் குறித்து கூறும் போது, மதசார்பின்மை மற்றும ஜனநாயக மதிப்புகளைக் குறைக்கும்வகையில் குறிவைத்து பாதிப்புகள் உருவாகின்றன என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/91428.html#ixzz3JZTXY3xi

தமிழ் ஓவியா said...

சாமியாரா? சண்டைக்காரரா?: அரியானாவில் வன்முறை

பர்வாலா (ஹிஸார்), நவ.19_ அரியானாவில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வ தற்காக, அவருடைய ஆசிர மத்துக்குச் சென்ற காவல் துறையினருக்கும், ராம் பாலின் ஆதரவாளர் களுக்கும் இடையே செவ் வாய்க்கிழமை ஏற்பட்ட மோதல் கலவரமாக உரு வெடுத்தது.

இதில், பெண்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் நேரில் ஆஜராகாததால், அவருக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை உத்தரவைப் பிறப் பித்தது.

மேலும், அவரை வெள் ளிக்கிழமை நேரில் ஆஜர் படுத்துமாறும் உத்தர விட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்வ தற்காக, ஹிஸார் மாவட் டம், பர்வாலாவில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு துணை ராணுவப் படை யினருடன் செவ்வாய்க் கிழமை சென்றோம்.

ராம்பாலின் ஆதரவா ளர்கள், ஆசிரமத்தின் வாயிற் கதவுகளை மூடி, எங்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தி னார்கள். உள்ளே அனு மதிக்குமாறு பல முறை கூறியும், அவர்கள் வாயிற் கதவுகளைத் திறக்கவில்லை.

இதையடுத்து, உள்ளே நுழைய முயன்ற எங்கள் மீது ஆசிரமத்துக்கு உள்ளே இருந்து ராம்பாலின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்கினர். துப்பாக்கி யால் சுட்டதுடன் பெட் ரோல் குண்டுகளையும் வீசினர்.

ஆசிரமத்துக்கு உள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்.
இதையடுத்து, ஆசிரமத் துக்கு வெளியில் திரண்டி ருந்த கூட்டத்தை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி யடித்தோம்.

நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் பெண்கள், காவல்துறையினர், செய்தி யாளர்கள் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். தொலைக் காட்சி நிறுவனங்களின் சாதனங்கள் சேதப்படுத்தப் பட்டன. காயமடைந்த வர்கள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஆயிரம் பேர் தவிப்பு: இதனிடையே, அந்த ஆசிர மத்துக்குள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இருப்பதாகவும், அவர்களை வெளியே வர விடாமல் ராம்பாலின் ஆதரவாளர்கள் தடுப்பதாக வும் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரி வித்தனர். மேலும், தங்களை பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி ராம்பாலின் ஆதரவாளர்கள் காவல் துறையினர் மீது தாக்கு தலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஆசிர மத்தில் ராம்பால் இல்லை என்றும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாகவும் ஆசிரம செய்தித் தொடர் பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலக் காவல்துறை டிஜிபி எஸ்.என்.வசிஷ்ட், செய்தி யாளர்களிடம் கூறுகையில், "எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராம்பால் இன்னமும் ஆசிரமத்தில் தான் இருக்கிறார்; நிலை மையை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கண்காணித்து வருகிறார்' என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTkgCCA

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் மீது தனிப்பட்ட விரோதமா??

நம்முடைய திருமணங்களிலோ,
மற்ற நம் வீட்டு சடங்குகளிலோ,
நம்மைச் சூத்திரன் ஈனஜாதி என்று கருதி,
நம்மைத் தொடாமலும்,
நாம் தொட்டதைச் சாப்பிடாமலும்,
நம் எதிரில் சாப்பிட்டால் பாவம் தோஷம் என்று கூறி,
நம்மை இழிவு செய்யும் மனிதனை,

நம்மை விட உயர்ந்த ஜாதி என்று கருதி,
அவனை நமது சபை நடுவே,

உட்கார வைத்து பெருமைப்படுத்தி,
நாம் இழிவடைவது கூடாது என்பதற்காகத்தான்

இப்படிப்பட்ட காரியங்களில்

பார்ப்பனர்களை விலக்க வேண்டும் என்று சொல்கிறோமே, தவிர,

அவர்கள் மீது நமக்கு வெறுப்போ, துவேசமோ இல்லை,,

--பெரியார், (03.09.1941)

தமிழ் ஓவியா said...

அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு! பெருமகிழ்ச்சி - நன்றி!


அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு!
பெருமகிழ்ச்சி - நன்றி!

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடே இணைந்து குரல் கொடுத்தது -

போதை மருந்து கடத்தல் என்ற பொய்க் குற்றத்தின் பெயரில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட இராமேசுவரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தமிழர்களின் வாழ்வு மீட்கப்பட்டு விட்டது!

இதில் மோடி அரசு, தமிழ் மக்களின் உணர் வினை மதித்து செயல்பட்டுள்ளது மகிழ்ச்சிக்கும், நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது.
இதை ஒரு சாக்காக வைத்து இனி எமது தமிழக மீனவர் வாழ்வதாரமான மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை இராஜபக்சே அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது!

தமிழ்நாட்டு மக்கள் எதையும் புரியாதவர்கள் அல்ல!

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மைக்குக்கூட மறைமுக அச்சுறுத்தலை புதிய நட்புகளின்மூலம் இராஜ பக்சேக்கள் மிரட்டிவரும் போக்குகளுக்கும்கூட முற்றுப்புள்ளி வைக்க மத்திய - மோடி அரசு முன்வரவேண்டும்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

20.11.2014

Read more: http://viduthalai.in/e-paper/91478.html#ixzz3JfCTtMgU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏன்? ஏன்? ஏன்?

கேள்வி: ரமண மகரிஷி போன்ற மகான்கள் கூட கடுமையான நோயில் துன்பங்களை அனுபவிப்பது ஏன்?

பதில்: மகான்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கர்ம வினைகளை (பிராரப்த கர்மம்) அனுபவித்தாக வேண்டும்.
- விஜயபாரதம், (ஆர்.எஸ்.எஸ். இதழ்)

கர்மவினைகளை அனுபவித்துதான் தீரவேண்டும் என்றால், கடவுள் பக்தி ஏன்? பிரார்த்தனை ஏன்? பிராயச்சித்தங்கள் ஏன்? கோவில், குளங்கள் ஏன்? ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/91483.html#ixzz3JfCdRpiE

தமிழ் ஓவியா said...

முற்போக்கு வெற்றி பெற...


முற்போக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கும் நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. - (குடிஅரசு, 30.6.1929)

Read more: http://viduthalai.in/page-2/91485.html#ixzz3JfCzQi7F

தமிழ் ஓவியா said...

அரசு விதிமுறைகளை மீறி கன்னியாகுமரியில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் மதப் பிரச்சினைகளில் மிகவும் பதற்றமான மாவட்டம், மதச்சண்டைகள் எங்கு எப் போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது? இப்போதும் குமரியில் ஆங் காங்கே மதச்சண்டைகள் நடந்துதான் வருகின்றன. 1982 ஆம் ஆண்டு மண்டைக் காட்டில் மிகப்பெரிய மதக்கலவரம் இந்து - கிறிஸ்தவ மதத்தினருக்கிடையே நடந் தது. இந்நிலையில் நீதியரசர் வேணு கோபால் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் முக்கிய அம் சம் என்னவென்றால் ஒரு மத வழி பாட்டுத்தலம் இருக்கும் குறிப்பிட்ட தூரத்திற்குள் அடுத்த மத வழிபாட்டுத் தலம் அங்கு அமைக்கக் கூடாது என்பது தான். குறிப்பாக ஒரு கோவில் அருகில் அமைக்கக் கூடாது என்பதுதான். குறிப் பாக ஒரு கோவில் அருகில் ஒரு கிறிஸ் தவ தேவாலயம் அமைக்கக் கூடாது என்பதுதான்.

ஆனால் இப்போது கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிலின் கிளை (வெங்கடாஜலபதி கோவில்) அங்கு உருவாக்கப்படுகிறது ரூபாய் 22.5 கோடி செலவில் அந்தக் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே கடற்கரையில் அருகே அலங் கார உபகார மாதா கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவமத வழிபாட்டுத்தலம் இருக்கும் இடத்தில் இந்த திருப்பதி கோவில் புதிதாக அங்கு கட்டுவது சட்ட விதிமுறை மீறலாகும். நீதி அரசர் வேணு கோபால் ஆணையத்தின் பரிந்துரையின் செயலை அவமதிப்பதாகும்.

இந்த செயலை குமரி மாவட்ட நிரு வாகமும் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. மதப்பிரச்சினைகள் உள்ள இந்த மாவட்டத்தில் இந்த செயலுக்கு மதச்சார் பின்மையை விரும்புவோரும் பகுத்தறி வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.
ஒரு கோவிலுக்கு கிளை தொடங்கு வது என்பதே வியாபாரம்தானே! கோவில் ஒரு வியாபாரஸ்தலம் தானே! 5 ஏக்கர் நிலத்தையும் 22.5 கோடியையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே! இப்படி கோவிலின் பெயரில் பாழாக்கு வது எந்த வகையில் நியாயம்!

புதிதாக கோவில் கட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனு மதி வாங்கவேண்டும். இதற்கு வாங்கிய தாகக் கூடத்தெரியவில்லை. மதச்சார் பின்மைக்கும், நீதியரசரின் ஆணைக்கும் எதிராகக் கட்டப்படும் திருப்பதி கோவி லின் கட்டுமானப் பணிகளை அரசு தலை யிட்டு தடுத்து நிறுத்துமா? மதச்சார் பின்மை நிலை நிறுத்தப்படுமா? இதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

- கோ.வெற்றிவேந்தன்
திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர்

Read more: http://viduthalai.in/page-2/91491.html#ixzz3JfDsDGfo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நெய் விளக்கு

வீட்டில் ஒவ்வொரு வரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் அய்ந்து முக விளக்கேற்றி அதில் அய்ந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட் களில் வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக் கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முகதீபம் ஏற்ற வேண்டும். ஜோடிதீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதி யரின் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த விளக்கைத் துலக்குவ தற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் விளக்கைத் துலக்கக் கூடாது. விளக் கில் குபேரனும், லட்சுமி யும் குடியிருப்பதாக அய்தீகம். திங்கள் அல் லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு விளக் கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். ஓர் ஆன்மிக இதழில் கைச் சரக்கு இது.

நான்கு முக விளக் கேற்றினால் நல்லது நடக்கும். அய்ந்து முக விளக்கேற்றினால் அபாயம் காத்திருக்கிறது. ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி கள் பிரியும். ஒரு முக திரி ஏற்றினால் ஒற்றுமைப் பலனாகும் என்று நாம் எழுதினால், அது தவறு என்று நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/91635.html#ixzz3JngavGwX

தமிழ் ஓவியா said...

கோவிலில் பூஜை செய்ய ஒரு சமூகத்தார் மட்டும்தான் குத்தகைக்காரர்களா?


பார்ப்பனர்களை நோக்கி பிகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி வீசிய வெடிகுண்டு!

பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார். பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.

ஜாதியின் பெயரால் பிளவு

இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர். கோவில் பெயரால் சுரண்டல்!

ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர். கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?

எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும் இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட் பாட்டை நான் பின்பற்று வதும் கிடையாது; அம் மதத்தின் அடையாள மான சாமிகளை நான் வீட்டில் வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட் டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் படம் மாத் திரமே இருக்கிறது என்று பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/91626.html#ixzz3Jngm7L6W

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்................

1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்


கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிடண்டும் அடிஷனல் ஜில்லா மாஜி திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.

ரெவன்யூ உத்தி யோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன.

கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும் என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத் தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீ டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோ கஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை.

சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்திலேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப் பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார்.

இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன.

கோர்ட்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள்.

வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

குடிஅரசு - செய்திக்கட்டுரை - 11.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlFjt00

தமிழ் ஓவியா said...

புரட்டு! சுத்தப்புரட்டு!!

நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப் பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல.

நம்மைக் கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 25.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlQKiRL

தமிழ் ஓவியா said...

சி.இராஜகோபாலாச்சாரியின் ஜாதிப் பிரச்சாரம்


உயர்திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி இந்து பத்திரிகையில் ஜாதிக் கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதைச் சர்க்காரார் ஆட்சேபிப்பதற்குச் சமாதானம் எழுதும் முறையில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப்பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

உண்பது, பருகுவது, மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப்படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும் வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாய மென்றும் வற்புறுத்துகிறார்.

மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். காங்கிரஸ் வருணாசிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபனமென்று நாம் கூறி வருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச் சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப்பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசியமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழு தாவது பொது ஜனங்கள்கண்டு கொள்வார் களென்று நம்புகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாதென்றும் பறையடிப் பவர்கள் ஜாதிப்பஞ்சாயத்துகள் மூலம் பலவந்தத்தை உபயோகிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணயமுண்டா?

ஜாதிக் கட்டுப் பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா? தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத் திற்கும், பெண்ணடிமைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டுமென்று கருதுகின்றோமோ அதைக் காப்பாற்ற வேண்டும்,

என்பதும், அதன்மூலம் செய்யப்படும் கொடுமையாலும், பலாத்காரத் தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டுமென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.

குடியரசு - கட்டுரை - 13.09.1931.a

Read more: http://viduthalai.in/page-7/91615.html#ixzz3Jnlb8Hvj

தமிழ் ஓவியா said...

விபரீதப் படைப்பு

- கவிவேந்தர் கா. வேழவேந்தன்

அன்றொரு நாள் சாய்மாலை, கடலோரம் நடந்தேன்!
அலைகள்வந்து கால்வருடத் தனிமையிலே அமர்ந்தேன்!
தென்திசையின் மென்காற்றால் கண்ணயர்ந்து போனேன்!
திடீரென்றே எங்கிருந்தோ பேரொளியைத் தேக்கிப்
பொன்வடிவில் ஒருமங்கை என்எதிரில் நின்றாள்!
பூவையவள் யாரென்றே ஆவலுடன் கேட்டேன்.
இன்றுள்ள வையகத்தைப் படைத்தவள்நான்! என்றாள்.
ஏகடியம் இழைந்தோட வினாக்கணைகள் தொடுத்தேன்:
படைத்தஇக் கோளத்தில் மூன்றிஇரு பகுதி
பயனில்லா உவர்நீரால் நிறைத்ததுமேன்? கடலால்
உடைத்திட்டக் கண்டங்கள் சரிசமமாய் இன்றி,
உருவத்தால், உளவளத்தால் வேறுபடல் நன்றா?
வடதுருவத் தென்துருவப்ப் பகுதிகளில் எல்லாம்
வசிப்பதற்கே இயலாமல் பனிஉறையச் செய்தாய்!
சுடுநெருப்பை நிதம்உமிழும் எரிமலை ஓர் பக்கம்;
துயர்கூட்டும் கடும்பாலை மறுபக்கம்! ஏன்? ஏன்?
நெல்லூரைக் கரும்பூரை நீ படைத்தாய் என்றால்,
நெருஞ்சியூர் கள்ளியூர் ஏனிங்கே படைத்தாய்?
நல்லசுவை மாங்கனியைப் பலாக்கனியைப் படைத்தாய்;
நச்சுமிழும் எட்டியினை உடன்படைத்த தேன், நீ?
கொல்லைமலர் முல்லையினால் கொள்ளைமணம் தந்தாய்:
கூடஇங்கே எருக்கம்பூ பூப்பதனால் பயன்ஏன்?
நல்லவர்கள் சிலர் படைத்து நலம் தழைக்கச் செய்தாய்!
நஞ்சுநெஞ்ச வஞ்சகரை உடன்படைத்த தேன்? ஏன்?
விதம்விதமாய் மதங்களினைச் சாதிகைளப் படைத்து,
விபரீதம் விளைவித்தாய்! எரிகிறதே பூமி!
நிதம்நிதமும் மதவெறியர் பிணவாடை பிடிக்க,
நிணச்சேற்றில் ஆடுகின்ற வெறிக்கூத்தும் ஒன்றா?
மதிகெட்ட சதிகாரி நீ செய்த செயலால்
மண்வையம் குருதியினால் சிவக்கிறதே! என்றேன்!
அதுதானே என்பொழுது போக் கென்றே கூறி,
அவள்மறைந்தாள்! அலைக்கரங்கள் எழுப்பியதே என்னை!

Read more: http://viduthalai.in/page2/91587.html#ixzz3JnmGPEuU

தமிழ் ஓவியா said...

எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் இட மதிப்பு ரூ. ஒரு லட்சம் உண்மைதான்

- மு.வி.சோமசுந்தரம்

இடம் தேவை

தமிழகத்தின் தலைநகரில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடம் எழும்பூர் தொடர் வண்டி நிலையம். இந்த கட்டடத்தைக் கட்ட இந்த இடம், அன்று தென்னிந்திய ரயில் நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த அமைப் புக்குத் தேவைப்பட்டது.
110 ஆண்டுகளுக்குமுன் மதராஸ் இணை ஆட்சியர், ஜே.ஆர்.கூம்பஸ் J.R.Coombes
இந்த இடத்தின் உரிமை யாளருக்கு 1894, சட்டப்பிரிவு 1 இன் அடிப்படையில் அவரின் இடத்தை விற்பதற்குத் தடையேதும் உள்ளதா என்று கேட்டுக் கடிதம் எழுதினார்.

உரிமையாளர்

1.83 ஏக்கர் நிலப்பரப்பு இடத்தில் பல கட்டிடங்களுடன் கூடிய இடத்தின் உரிமையாளர் மருத்துவர் புளுனே ஆன்டே (Dr.Pluney Andey) இவர், திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் சிறப்பான மருத்துவசேவை 30 ஆண்டுகள் செய்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார். அவர் பணியில் இருக்கும் போது, அவரின் மனைவியின் வடிவ மைப்பிலும் மேற்பார்வையிலும் கட்டப் பட்ட வீட்டில் மருத்துவர் புளுனே அவரின் மனைவி திருவிதாங்கூரில் இறந்த பிறகு தங்கி வசித்து வந்தார்.

மதராஸ் இணைஆட்சியரிடமிருந்து அவரின் இடத்தை விற்பனைக்குக் கேட்டு வந்த கடிதத்துக்கு மருத்துவர் புளுனே ஆன்டே தன் சொத்தை விற்ப தற்கான தயக்க மனநிலையை விளக்கி 15, பிப்ரவரி 1904 இல் கடிதம் எழு தினார்.

தயக்கத்தின் காரணம்

அந்தக் கடிதத்தில் அவரின் இடத்தை விற்பதற்குத் தயங்கும் காரணங்களையும், அவரின் முடிவையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய உடல் நலம் பேணவும், பணியில் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ அந்த இடத்தில் வசிப்பதாகக் கூறினார். மேலும், என் மனைவி விரும்பிக் கட்டிய வீட்டில், அவர் நினைவாக வாழ விரும்புகிறேன். நான் கட்டடத்தை விரி வாக்கி, பழத்தோட்டம் அமைத் துள்ளேன். நான் இந்திய தேசிய கிறித் தவ சபையை நிறுவி அதன் தலைவராக உள்ளேன். நான் பணி ஒய்வு பெற்ற பிறகு, இந்திய கிறித்துவ தேவால யத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எழும்பூரில் உள்ள என் வீடு என் நிறுவனத்தின் தலைமையகம், இங்குள்ள என் கட்டிடம் ஒன்று வழி பாட்டுக் கூட்டம் நடத்த பயன்படுத்தப் படுகிறது. கடந்த காலத்தில் இரண்டு மத அமைச்சர்கள் சபையில் சேர்க்கப் பட்டுள்ளனர், மய்யப்பகுதியில் அமைந் துள்ள இந்த இடத்தில், பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் கோயில் அமைய பல கட்டிடங்கள் கட்ட உள் ளேன். இவை கிறித்துவ சமுதாயத்துக் கான ஏற்பாடு, இத்தகைய விசாலமான இடம் மய்யப்பகுதியில் கிடைக்குமா? வேறு தூரமான இடத்துக்கு மாற்றப் பட்டால், வழிபாட்டுக்கு வரும் மக் களுக்கு வசதிக் குறைபாடு ஏற்படும்.

ரயில் நிலையம் அமைக்க என் சொத்து கட்டாயம் தேவை என்று கருதினாலும், சட்டவிதிப்படி அரசு என்னை கட்டாயப்படுத்தினாலும், என் சொத்துக்கான இழப்புத் தொகையாக ஒரு லட்சத்துக்குக் குறையாமல் வழங்குவதோடல்லாமல். இடத்தை காலி செய்ய போதுமான கால அவகாசமும் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

போட்மெயில் புறப்பட்டது

மருத்துவர் புளுனே ஆன்டேயின் வேண்டுகோள் விரைவாகவும், மகிழ்ச்சி யாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தகைமையுடனும் அலட்சியப் படுத்தாமலும், விரைவாக சொத்து ஒப்படைக்கப்பட்டது. ரயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கிருந்து முதல் தொடர்வண்டி - (நீராவி இன்ஜின் இழுத்து செல்ல) போட் மெயில் (BOAT MAIL)ஜூன், 11, 1908இல், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, மக்களுக்கு களிப்பை யும், பூரிப்பையும் ஏற்படுத்தி உருண்டு சென்றது.

(தி இந்து 20.10.2014 இதழில், சென்னை நகர் தொடர் வரலாறு வழங்கும் திரு எஸ்.முத்தையா அவர்கள் வழங்கிய செய்தித் தமிழாக்கம் - நன்றி)

இந்த பழைய போட்மெயில், தூத்துக்குடி வரை சென்று, அங்கிருந்து கொழும்புக்குச் செல்ல (நீராவிக்கப்பல் மூலம்) வசதி செய்து தந்தது. 1914 இல் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு, போட்மெயில் தனுஷ்கோடி வரை சென்றது. 1964 இல் ஏற்பட்ட புயலால், போட்மெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது முத்து விரைவுத் தொடர் வண்டி, தூத்துக்குடி செல்கிறது.

Read more: http://viduthalai.in/page2/91586.html#ixzz3JnmQmRXQ

தமிழ் ஓவியா said...

டாக்டர் இஸ்லாம் கணிப்பு


வரலாற்றின்படியும், மொழி அடிப்படையிலும் தமிழ்மொழியானது. இந்தியாவிலேயே மிகத் தொன்மையானது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் பொறுத்தமட்டிலும்கூட இது உண்மையேயாகும். ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தமிழர்களின் மூதாதையர்கள் இங்கு நிலைத்து வாழ்ந்துவந்தனர். சிறந்த கலாச்சாரத்தை வளர்த்து வந்தனர். ஆரியர்கள் உட்பட இந்தியாவில் குடியேறிய அனைத்து மக்களிடையிலும் தமிழர்களுடைய கலாச்சாரத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்தது.

- ஆதாரம்: டாக்டர் இஸ்லாம் - (பங்களாதேஷ் அறிஞர் இந்து 30.1.1981

Read more: http://viduthalai.in/page3/91590.html#ixzz3JnnFW3Y8

தமிழ் ஓவியா said...

மொழியறிவால் மூளை கூர்மையாகும்


ஒரு மொழியை மட்டுமே பேசுபவர் களைக் காட்டிலும் இரு மொழிகளைப் பேசுபவர்களின் தகவல்பரிமாற்றம் திறனுள்ளதாக இருப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுத்தகவல் கூறுகிறது.

நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஹோஸ்டன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு மொழி பேசுபவர்களைவிட இரண்டு மொழி பேசுபவர்களுக்கு புரிதல் திறன் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரு மொழிக்கும் மேலாக பேசுபவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, தேவை யற்ற சொற்களைத் தவிர்த்து பேசுவதையும், அவர்களின் மூளை அதே பணியை முடிக்க கூடுதலாக பணிசெய்வதாகவும் செயல் பாட்டு காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (functional magnetic resonance imaging -FMRI) முறையில் ஆய்வை மேற் கொண்டு கண்டறிந்துள்ளனர்.

உலகின் மாபெரும் மருத்துவம் மற்றும் அறிவியல் நூல்களுக்கான பதிப்பகமாக உள்ள எல்வெவியர் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரக்கூடிய மொழிக்கான நரம்பு உயிரியல் இதழான மூளை மற்றும் மொழி இதழ் (The journal Brain and Language) இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.

மூளையின் இருவேறு செயல்களான செயல்படுதலும், செயல்பாட்டைத் தடுத் தலும் ஆகிய இருவகை செயல்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கேட்கும்போது, சரியானதை தேர்வு செய்து கேட்கச் செய்கிறது.

ஆய்வாளர்கள் இரண்டு மொழிகளை (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்) பேசக் கூடியவர்களான 17பேரையும், ஒரே மொழியை மட்டுமே அறிந்து பேசக்கூடிய 18 பேரையும் தேர்வு செய்து ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் இரு மொழியில் ஆற்றல் உள்ளவர்களின் மூளை தேவையற்ற சொற்களை தாமாகவே நீக்கிக்கொள்வதையும் கண்டறிந்தனர்.

உதாரணத்துக்கு கிளவுட் என்கிற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களைக் கேட்கச்செய்தபோது, உடனடியாக திரையில் மூளையின் செயல்களைக் காட்டும் நான்கு படங்கள் தோன்றின. அதேபோன்று அதே ஒலி அமைப்புடன் உள்ள கிளவுன் எனும் சொல்லைக் கேட் கும்படி செய்யப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில், சரியான சொல்லுடன் மூளை எவ்வளவு விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது என்று கண் காணிப்பதே ஆகும். இந்த ஆய்வின்போது, இரு மொழி அறிந்தவர்கள் விரைவாக சரியாக செயல்பட்டார்கள்.

முடிவானது கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதுபோல் தோன்றுகிறது. இரண்டு மொழியில் திறன் உள்ளவர்கள் இரண்டு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருப்பதால் சரியானவகையில் பணிகளை முடிப்பதில் வல்லவர்களாக அல்லது மற்ற வர்களைவிட அதிக புரிதல் அறிவுடன் பல மொழிகளைக் கற்றவர்களாக இருப்பதால் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக் கிறார்களா? என்றால், இரண்டும் சேர்ந்த கலவையாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து கண்ட றிந்துள்ளது என்னவெனில், மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் எனும்போது, சுடோகு போன்ற குழப்பத்தி லிருந்து (Puzzle)
விடுவிப்பதற்குப் பதிலாக, புதிதாக ஒரு மொழியை ஏன் அளிக்கக் கூடாது? மூளைக்கு சவாலாக அதைத் தவிர வேறு உண்டா? என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page4/91592.html#ixzz3Jnngokpg

தமிழ் ஓவியா said...

குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு


ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்களின் முன்னால் நிற்க வைப்பதும், அணி வகுப்பு நடத்துவதும் அவர்களை காயப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக்கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வின் தலைமையில் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின் டன் நாரிமேன் ஆகிய மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதி பதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப் படும் வரைஅவர் அப்பா வியே; ஆனால் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை ஊடகங்களின் முன்னால் நிறுத்தி பேட்டி அளிப்பதும், அணிவகுப்பு நடத்துவதும் அவரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். விசாரணை நடக்கும் போதே ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது இனியும் நடக்கக்கூடாது.

இது ஒரு கடுமையான விசயமாகும். இப்பிரச்சினை அரசியல் சட்டப்பிரிவு 21இன் கீழுள்ள உயிர்வாழும் உரிமை மற்றும் சுதந்திரத் திற்கும் சுதந்திரமான விசாரணை உட்பட அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சாட்சி களின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையை பாதிப்பதாகும். அவருக்கு எதிரான களங்கத்தை உருவாக்கவே அது பயன்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் அதற்கு இணையாக ஊடகங்கள் வழக்குப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வழக்கின் முடிவில் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாதுகாக்க மற்ற நாடுகளில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page5/91595.html#ixzz3JnoKz6Rp

தமிழ் ஓவியா said...

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
- குபேரன்

உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

தமிழ் ஓவியா said...

தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும். இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!

தமிழ் ஓவியா said...

நீங்களும் அம்பானி ஆகணுமா? மோடியின் பிரிமியம் திட்டம்


அம்பி: கிட்டு மாமா, பக்கத் தாத்து பாச்சா, நேத்து வரைக்கும் நம்மளை, நிமிர்ந்து பாக்காம போயிண்டுருந்தான். இன்னைக்கு என்னைப் பார்த்து, விரைச்சுண்டு நடக்குறான். ஏன் மாமா? அவ னுக்கு என்னாச்சு?

கிட்டு மாமா: அது ஒன்னும் இல்லைடா அம்பி. பாச்சா, பண்டி கைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னானோல்லியோ, அதுக் கொசரம், பிரிமியம் ரயில்ல டிக்கெட் எடுத்துட்டான்னு, இம்புட்டு அலட்டிக்கிறான்.

அம்பி: அப்படியா மாமா, அது என்ன பிரிமியம் ரயில் டிக்கெட்.

கிட்டு மாமா: அது வேற ஒன்னும் இல்லைடா, நம்ம மோடி இருக்காருல்ல.

அம்பி: யாரு, நம்ம பிரதமர் மோடியா மாமா.

கிட்டு மாமா: அம்பி, அவரை பிரதமர்னு சொன்னா அவருக்கு பிடிக்காது. நான் டீ ஆத்துனவன், கீழே இருந்து மேலே வந்தவன், மக்களையெல்லாம், அம்பானி ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறேன்னு, தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்ல, அவருதான். அவர் அறிவிச்ச, புதுத் திட்டம் தான் இந்த பிரிமியம் ரயில் திட்டம்.

அம்பி: அவ்வளவு கஷ்டமா மாமா, பிரிமியம் டிக்கெட் எடுக்கறது.

கிட்டு மாமா: பின்ன என்னடா, அம்பானி, அதானியெல்லாம், பிரிமி யம் ரயில்ல டிக்கெட் எடுக்கறதுக்கு பதிலா, பேசாம, தனி விமானத் துலேயே, போயிடலாம்னு பேசிண்டு ருக்காள்னா பாத்துக்கேயேன். அதான், நம்ம கிச்சா இப்படி விரைச்சுக்கிட்டு நடக்குறான்.

அம்பி: எனக்கும் பிரிமியம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுங்கோ, மாமா. ஆசையாயிருக்கு.

கிட்டு மாமா: உன் ஆசையிலே, தீயை வைக்க, ஏண்டா அம்பி, நமக்கு இருக்குறது ஒரு வீடுதாண்டா. அதை வித்துகூட, டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கு.

இந்த பிரிமியம் ரயில்ல போறவாள் லிஸ்டை, வருமான வரித்துறையே கண்காணிக்கும் போலடா, ஏன்னா, இம்புட்டு காசு கொடுத்து, போறாளே, இவா எல்லாம் வரி கட்டிருக் காளான்னு, செக் பண்ணுவா போல இருக்குடா அம்பி.

அம்பி: அப்பா, நாம அம்பானி ஆக முடியாதா மாமா.

கிட்டு மாமா: அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்டா அம்பி. எதுக்கும் நம்ம பாச்சாவை சேவிச் சுட்டு, அவன் ஜோபியிலே இருக்குற, பிரிமியம் ரயில் டிக்கெட்டை, கையில் எடுத்து ஒத்திக்கோ, அது தாண்டா, இப்பதைக்கு நம்மால முடியும். பகவான், நம்ம தலையிலே, அம்புட்டுதாண்டா எழுதியிருக்கான். ஆனா, கவலைப்படாதேடா, அம்பி அம்போ நீ அப்படின்னு திட்டம் ஏதாவது மோடி கொண்டு வரு வார். அதுல நாம சேர்ந்திடுலாம். இப்ப புரியுதா அம்பி, நோக்கு.

அம்பி: இது தானா மாமா, மோடி கொண்டாந்த, அம்பானி ஆகற. பிரிமியம் திட்டம் ரயில் கூட்டத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு. ஏறுன எல்லாரையும் அம் பானி ரேஞ்சுக்கு ஆக்கினது மாதிரியும் ஆச்சு. பேஷ், பேஷ், நேக்கு நன்னா புரியுது.

Read more: http://viduthalai.in/page7/91601.html#ixzz3JnpxorN2

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்) ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnqkimUm

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி....

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்

தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப் படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க. (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnquMVUV

தமிழ் ஓவியா said...

காந்தியார் புகுத்திய குழப்பம்

ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை.

மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம். பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

(நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3JnrDjgyc

தமிழ் ஓவியா said...

காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம் திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது


காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம்
திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது
கழகத் தலைவர் அறிக்கை

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை களைக் கட்டுவதை தடை விதிக்கக் கோரி காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற் கின்றனர். கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் விவசாயிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தஞ்சை யிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகம் ஆர்ப் பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள் ளனர். காவிரி ஆற்று பாதுகாப்பு விவசாயத் தலைவர் தனபால் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது - அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் கட்சியில்லை பேதமில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்நாட்டின் நலன் தான் இதில் மய்யப் புள்ளி! இந்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடுவோம் - வெற்றி பெறுவோம்! நமது வாழ்வாதாரப் பிரச்சினையில், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21-11-2014

Read more: http://viduthalai.in/page1/91545.html#ixzz3JoEDkg5A

தமிழ் ஓவியா said...

நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்

மனிதன் வன விலங்குகளை வேட் டையாடிக்கொண்டு இருந்த போது கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீன்பிடித்தொழிலை வேட்டைத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர்.

நாம் வாழும் பூமி 71 விழுக்காடு ஆனது பெருங்கடல் நீரால் மூடப்பட் டுள்ளது. இதற்கு பெருங்கடல் பெரிதும் உதவியாக இருந்தது. மீன்கள் உணவிற் காக மாத்திரம் அல்ல கடலைச் சுத்தப் படுத்தும் பணியிலும் நமது பூமியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கடல் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்கள் பல்வேறு அரிதான செயல்களைச் செய்து வருகின்றன

மீனினங்களின் இத்தகைய பணியைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மீன்வள நாள் கொண்டாடப்படுகிறது

உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்கள் மீன்களின் மூலம் பெறப்படும் புரதச்சத்தை நம்பி உயிர்வாழ்கின்றனர். ஒரு ஆண்டிற்கு உலக மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமா னோர் (அதாவது) உலக மக்களில் 8 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்வா தாரத்திற்கு மீன்பிடித் தொழிலை நம்பி யுள்ளனர் உலகில், மீன்களில் 90 விழுக்காட்டிற் கும் அதிகமானவை பெருங்கடல் மற்றும் வளைகுடாக்களிலும் பிடிக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் சிலிநாட்டின் பெருஎல்லைக்கருகில் உள்ள கடற்கரை மீன் பிடி நிலையமான ஏஞ்சோல் மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும். கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன் பிடியானது 4 மடங்காக அதிகரித் துள்ளது. 1950ஆம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த மீன்பிடியானது 1992ஆம் ஆண் டளவில் 82.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

அய்.நா சபையின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சி யடைந்துள்ளது அல்லது அளவுக் கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப் படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழி லானது மீனின் வாழிடங்கள் அழிக்கப் பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அய்.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70 விழுக்காடு மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட் டினால் பிடிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/91539.html#ixzz3JoFRNlM4

தமிழ் ஓவியா said...

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்...

-குடந்தை கருணா

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென் றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.

இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் Carmichael (Queensland) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத் திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு பில்லியன் அமெ ரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியா விற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் ஒரு பில்லி யன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -

1 billion US dollars are equal to how many Indian rupees அதிர்ச்சியளிக் கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees. அதாவது ரூ.6000 கோடி ரூபாய்.

இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல - ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவி ருக்கும் துறைமுகம் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து துறை முகம் வரையிலான 400 கி.மீ. தூரத் திற்கு அதானி கம்பெனியே ரயில் பாதையும் போடப் போகிறது. இந்த ஷரத்தும் இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி??? ஒன்றுமே புரியவில்லை. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு/தொழில் நிறுவனத் திற்கு கடனாகக் கொடுக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore (இதற்கு ஆஸ்திரேலியாவி லேயே 13 சுரங்க கம்பெனிகள் உள் ளன ) தற்போது அதன் 8000 ஊழி யர்களுக்கு வேலையின்மை/நஷ்டம் காரணமாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக் கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா ?

இந்த கடன் கொடுக்கப்படுவதற் கான காரணம் யார் ??? Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயை யும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது..???
முட்டாள் இந்தியன் தலையிலா.?

இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்கங்களில் மேற் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்..?

ஆமாம் _ பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல _- அரசு வங்கிப் பணம் _ இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா ?

Read more: http://viduthalai.in/page1/91542.html#ixzz3JoFfJgEq

தமிழ் ஓவியா said...

கருநாடகக் கோவில்களில் தீண்டாமை


கோலார், நவ.21_ கரு நாடகத்தின் இந்து அறநிலையத் துறை முஸ் ராய் என்றழைக்கப்படும். இந்தத் துறையின்கீழ் நூற் றுக்கணக்கான கோவில் கள் உள்ளன. அவற்றுள் கோலார் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

அதுகுறித்துக் கருத்தறி வித்துள்ள முஸ்ராய்த் துறை துணை ஆணையர் திரிலோகசந்திரா, இதுகுறித்துக் குற்ற சாட்டுகள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள் ளார். மேலும் அவர், தாழ்த் தப்பட்டோருக்குக் கோவில்களில் அனுமதி மறுப்பது மிகவும் கேடான நடவடிக்கை ஆகும்.

தீண் டாமையைக் கடைப்பிடிப் பவர்கள்மீது குற்றசாட்டு களைப் பதிவு செய்திடுவீர் என்று தாழ்த்தப்பட் டோர் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அவர் குறிப்பாக முஸ் ராய் துறையின்கீழ் வரும் கோவில்களைப்பற்றி மட் டுமே இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலார் மாவட்டத் தில் இயங்கும் தாழ்த்தப் பட்டோர் அமைப்பைச் சார்ந்தவர்கள் உயர் ஜாதி யினர் வீடுகளில் நுழையும் நிகழ்ச்சியை, கிரகப் பிர வேசம் என்னும் பெயரில் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோவில் களில் மட்டுமல்லாது எந்த இடத்திலுமே தீண் டாமை கடைப்பிடிக்கப் படக் கூடாது; அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டால், யார்? எவர்? என்று பார்க் காமல் தீண்டாமை ஒழிப் புச் சட்டம் பாயவேண் டும். குற்றம் புரிவோர் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத் தாகும்.

முஸ்ராயின்கீழ் வரும் கோவில்களுள், மங்களூரு மாவட்டத்தில் உள்ள குத் ரோலி கோகர்ணானந்த் கோவிலில் கைம்பெண் கள் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டதும், அத னையே முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடகத்தில் உள்ள மற்ற முஸ்ராய் கோவில்களிலும் எதிர்ப் பில்லை என்றால் பெண் அர்ச்சகர்கள் அமர்த்தப் படுவார்கள் என்றும் மாநில முதல்வர் சித்தரா மையா கூறியதும் குறிப் பிடத்தக்கன.

எனவே, கருநாடக மாநிலத்தின் அறநிலையத் துறையான முஸ்ராய்த் துறையே, குற்றச்சாட்டு களுக்காகக் காத்திராமல் தானே முன்வந்து புல னாய்ந்து எந்தக் கோவில் களில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது என் பதை ஆய்ந்து தக்க நட வடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/91576.html#ixzz3JoH4OohT