Search This Blog

3.11.14

திருமண அமைப்பைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்-பெரியார்




நான் மனித சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ஆசைப்படுபவன்; நம் சமுதாயத்தைத் திருத்த வேண்டுமென்று பாடுபடுபவன்.

உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளின் அறிவை விட மனிதனின் அறிவிற்குப் பேதம், உயர்வு இருக்கிறது. மற்ற ஜீவனை விட உயர்ந்த அறிவுப் பெற்ற மற்ற மனிதன், மற்ற ஜீவராசிகளை விட எதில் உயர்ந்தவனாக, கவலையற்றவனாக இருக்கிறான் என்று நான் சிந்திக்கும் போது - மனிதன் மற்ற ஜீவராசிகளை விடக் கீழானவனாகவே இருக்கின்றான்.

மற்ற ஜீவராசிகளிடமில்லாத கவலைகள், தன்மைகள் பல மனித ஜீவனிடத்தில் குடி கொண்டிருக்கின்றன.

மனித ஜீவனில் தான் இல்வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என்பது வேறு எந்த ஜீவனிடத்திலும் இதுபோன்ற வாழ்வு கிடையாது. இல்வாழ்விற்காக மனிதன் தன் வாழ்நாள் பூராவும் கவலை உடையவனாக இருக்க வேண்டி இருக்கிறது.

திருமண முறை என்பது மனித ஜீவனுக்குக் கேடானது. அறிவோடு சிந்தித்தால் தேவையற்றதேயாகும். மனிதன் மற்ற ஜீவன்களை விட அறிவுடைய ஜீவன். ஆனால் அதற்கேற்ப நம்மிடம் எந்த அறிகுறியும் இல்லை.

மனிதனுக்கு இல்வாழ்க்கைத் தன்மை என்பது எதற்காக? என்ன அவசியம்? மனிதனுக்குப் புத்தி இருப்பதற்கு இதுதானா பலன்? பெண்களுக்கு எதற்காக எஜமான் வேண்டும்? எஜமான் (புருஷன்) இல்லாமல் வாழப் பெண்களால் முடியாதா?

சாதாரணமாகக் கரடி, புலி, சிங்கம் இவையெல்லாம் மனிதனை விடப் பலம் பொருந்தியவை; அவற்றுக்கு இல்லாத இல்வாழ்க்கை முறை மனிதனுக்கு மட்டும் ஏன்? அதிக புத்தி இல்லாததனாலே என்று சொல்லலாம்.

அதிக புத்தி இல்லாத அவை கவலையற்று இருக்கும் போது, அதிக புத்தியுடைய மனிதன் அறிவு, மானம் இவையெல்லாம் விட்டுக் குடும்ப வாழ்வு வாழ வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன்.

இது இன்று பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் இன்னும் 30- அல்லது 50- ஆண்டுகள் போனால் இந்த நிலை ஏற்படத்தான் போகிறது. இதை யாரும் தடுக்க முடியாது.

கணவனும், மனைவியுமாக வாழ்கின்ற வாழ்க்கை தான் ஆணுக்கும், பெண்ணுக்கும். வாழ்வு என்பது எதற்காக? ஆணுக்கு மனைவியும், பெண்ணுக்குப் புருஷனும் எதற்காகத் தேவை? இவை இரண்டுமில்லாததால் என்ன கெட்டுவிடும்?

சாதாரணமாக ஆட்டை எடுத்துக் கொண்டால் ஆண் ஆடு எல்லாம் மனிதனுக்கு உணவாக வேண்டியது. பெண் ஆடெல்லாம் குட்டிப் போட்டாக வேண்டியது என்பது தானே! அதுபோலத் தானே, ஆண் உழைக்கவும், பெண் குட்டிப் போடவும், சோறு சமைக்கவு மென்றிருக்கிறது.

ஒரு பெண் எதற்காக ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டியது? உலக ஜனத் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான் அவர்கள் பகுத்தறிவு பெற்றிருப்பதற்குப் பயனா?

ஒருத்தனை ஒருத்தன் அடிமை கொண்டால் சட்டப்படிக் குற்றம் என்கின்றோம். ஒருவனை ஒருவன் தொட்டால் தீண்டாமை என்று சொல்லுவது சட்டப்படிக் குற்றமென்றிருக்கும் போது, ஒரு பெண்ணை நிரந்தர அடிமையாக்கக் கூடிய திருமணம் சட்டப்படிக் குற்றமாக்கப்பட வேண்டியதுதானே நியாயமாகும்.

இல்வாழ்க்கை குடும்பம் என்பதெல்லாம் மனிதன் காட்டு மிராண்டியாக இருந்த காலத்தில் இருந்திருக்கலாம். இன்றைக்கு ஏன் இந்தத் தொல்லை? இதை அறிவுள்ள மனிதன் சிந்திக்க வேண்டாமா?

மனிதன் ஒவ்வொரு காரியத்திலும் மேலே போக வேண்டுமென்று விரும்புகின்றான். போய்க் கொண்டிருக்கின்றான். 3,000- வருஷம் மனிதன் இருந்தும் இதுதான் வாழ்விற்கு என்றால், சோம்பேறிகள் சொல்லுகின்ற மோட்சத்திற்குப் போகலாம். சொர்க்கத்திற்குப் போகலாம் என்று மனிதன் சிந்தனையும், அறிவும் அற்று அதனை நம்பிக் கொண்டிருப்பது போலத் தானே இல்வாழ்க்கை, குடும்பம் என்பவைகளால் மனிதன் சுய சிந்தனையும், சுதந்திரமுமற்றவனாக இருக்கின்றான்.

வள்ளுவன் மேலே எனக்குக் கோபம் வந்ததற்குக் காரணமே அவன் இல்வாழ்வு வாழ வேண்டுமென்று கூறியதில் தான்! எதற்காக அறிவுடைய மனிதனுக்கு இல்வாழ்வு? அதனால் மனிதன் அடைந்த பலன் என்ன?

இல்வாழ்வு குடும்பம் என்று இப்படியே 1,000- வருஷத்திற்கு இருந்து பலன் என்ன? உன்னால் ஆனது என்ன? உன்னுடைய அறிவிற்கு என்ன பயன்? மனித ஜீவனுடைய நிலை இதுதானா?

இதற்கு மேலே போகிற அறிவு நமக்கு இல்லாதனாலே மோட்சம் தான், நரகம் தான் என்றிருப்பதாலே கோயிலைக் கட்டிக் கொண்டு போகிறான்.

மனிதன் என்றால் ஞானம், மோட்சம் வேண்டும் என்கின்றான். அவை என்னடா என்றால், அது உனக்கல்ல, ஞானிகளுக்கு என்கின்றான். உனக்குப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.

குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ வேண்டுமென்றில்லையே! பெண்ணாகப் பிறந்தால் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். குட்டி போட வேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தக் கூடாது. ஆணாகப் பிறந்தால் மனைவியை - பிள்ளைக் குட்டியைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவனுக்கு வாழ்க்கைச் சிந்தனையாக இருக்கிறது.

மதம், கடவுள், இலக்கியம், மோட்சம், இவை நம் அறிவைக் கெடுத்து விட்டன. மனித சமுதாயம் அறிவோடு வாழ வேண்டியது; சுதந்திரத்தோடு வாழ வேண்டியது; புதுவாழ்வு மலர வேண்டியது என்கின்ற எண்ணம் எவனுக்குமே தோன்றுவது கிடையாது.

மனித சக்திக்கு மேல் ஒரு சக்தி இருப்பது என்பது பித்தலாட்டம்.

இனி இந்தக் குடும்ப வாழ்வு - இல்லற வாழ்வு என்பதைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும்.

தமிழனில் வள்ளுவனுக்கு மேலே அறிஞன் இல்லை, புலவன் இல்லையே! 2,000- வருஷங்களாக வேறு எந்த அறிவாளியும் தோன்றவே இல்லையே! ஒரு தாயுமானவர், பட்டினத்தார் இராமலிங்கம் என்பரெல்லாம் பழைய குப்பையைப் பாடி விட்டு சென்றவர்களே தவிர, பகுத்தறிவுவாதிகள் அல்லவே.

நான் பகுத்தறிவுவாதி என்று யாரைச் சொல்கிறேனென்றால், நாம் சொல்வதைத் துலுக்கரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவனும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைச் சொல்பவன் தான் பகுத்தறிவுவாதி யாவான். நான் திருமணம் கூடாது என்று சொல்கின்றேன். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க நியாயமில்லையே!

எனவே, நாம் புதிய உலகத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். நாம் 3,000- ஆண்டு காலமாக ஒரே நிலையில் - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு துறையில் மட்டுமல்ல, அரசியலில் அப்படித்தான், சமுதாயத் துறையில் அப்படித்தான், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், பழைமையைத் தள்ளி விட வேண்டும். புதுமையை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.

நம் மனிதர்கள் மற்ற ஜீவன்களை விட உயர்ந்த அறிவு இருக்கிறது. அதைப் பயன்படுத்திச் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அதுதான் அறிவு பெற்றதற்குப் பயனாகும்.

         ------------------- 23.04.1969 அன்று தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 02.05.1969

38 comments:

தமிழ் ஓவியா said...

90க்கு 90 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பிள்ளைகள்


பெரியார்1000 வினா விடைத் தேர்வு முடிவுகள்:
90க்கு 90 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பிள்ளைகள்

சென்னை, நவ. 3- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் - பெரியார் பிஞ்சு மாத இதழ் இரண்டும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா - விடைப்போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 9 மாணவர்கள் 90க்கு 90 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். ஏறக்குறைய எல்லோருமே முதலிடம் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடனேயே தேர்வை அணுகியிருக்கின்றனர். இதனால் மிகக்கடுமையான போட்டி நிலவியிருக்கிறது. இந்தக் கடுமையான போட்டிக்கிடையிலும் 9 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறார்கள்.

6 ஆம் வகுப்பிலிருந்து 9 ஆவது வகுப்பு வரையிலான (பிரிவு - 1) மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பெரியார் 1000 வினா - விடைத்தேர்வில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி (நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), லால்குடியைச்சேர்ந்த குமரேசன் (அரசு மேல்நிலைப்பள்ளி, சி.அய்யம்பாளையம்), திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த நசீமாபானு (தெரசா, மகளிர் மேல் நிலைப்பள்ளி), அரக்கோணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பனப்பாக்கம்) ஆகிய நால்வரும் தமிழில் தேர்வு எழுதியும், அதே போல கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மனோஜ் (வேளங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), வடசென்னையைச் சேர்ந்த பாத்திமா பர்சானா (சேவியர் மெட்ரிக் குலேசன் பள்ளி) ஆகிய இருவரும் ஆங்கிலத்திலும் தேர்வு எழுதியும் 90க்கு 90 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே போல 10 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான பிரிவு 2-இல் தேர்வு எழுதியவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜலட்சுமி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உரத்தநாடு), தர்மபுரியைச் சேர்ந்த சங்கீதா (அரசு மேல்நிலைப்பள்ளி, பெகரஹள்ளி), அரியலூரைச் சேர்ந்த கார்த்திகா (பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளி) ஆகிய மூவருமாக, மொத்தம் 9 மாணவர்கள் 90 க்கு 90 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது வெறும் பரிசு, பாராட்டு என்பதோடு மட்டுமல்ல, இந்தத் தேர்வு மூலம் பெற்றிருக்கும் அறிவு இவை எல்லாவற்றையும் விட பெரியது. அறிவினால் ஆகாததுண்டோ என்றுதானே வள்ளுவரும் கேட்கிறார். ஆகவே தேர்வு எழுதிய அனைவருமே பாராட்டுக்குரியவர்களே.

தமிழ் ஓவியா said...

இதில் வெற்றி பெற்ற 9 மாணவர்களில் திருச்சியைச்சேர்ந்த குமரேசன் அய்யம்பாளையம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி பனங்காடு எனும் கிராமத்தை சேர்ந்தவர். தஞ்சாவூரைச்சேர்ந்த ராஜலட்சுமி நட்டுவக்கோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர். அரியலூரைச் சேர்ந்த கார்த்திகா அறங்கோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர். வெற்றி பெற்ற 9 மாணவர்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இசுலாமியர் இருவர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பெரியாரால் பலன் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பெரியாரைக் கற்று தேர்வு எழுதி முதலிடத்தை பெற்றிருப்பதும் இதன் மூலமாக பெரியாரை பற்றி தெரிந்து கொண்டு இருப்பதும் பொருத்தமானது தானே!



மாவட்ட அளவிலும் சாதனை படைத்த மாணவிகள்

பெரியார் ஆயிரம் வினா-விடைத் தேர்வில் மாநில அளவில் 90க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தவர்களில் 3-இல் 2 பங்கு பெண்கள். தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களிலும் பெண்களே அதிகமாக உள்ளனர். 6 முதல் 9-ஆம் வகுப்புப் பிரிவில் 56 விழுக்காடு மாணவிகளும், 44 விழுக்காடு மாணவர்களும் முதலிடத்தில் உள்ளனர். 10 முதல் 12 ஆம் வகுப்புக்கான பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்களில் மாணவிகள் 76 விழுக்காடும், மாணவர்கள் 24 விழுக்காடும் உள்ளனர். மேலும், போட்டி நடந்த 61 மாவட்டங் களிலும் முதலிடம் பெற்றவர்களின் விவரம் மூன்றாம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

சென்னை நகரில் மாணவிகள் முதலிடம்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்போட்டியின் முடிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள் இருபாலரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையில், மாநிலம் முழுவதும் சமமாக வெற்றிபெற்றுள்ளனர். சென்னையில் தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, ஆவடி போன்ற பகுதிகளில் பங்கேற்ற மாணவர்களில் மாணவிகள் அதிக மதிப்பெண் வாங்கியுள்ளனர். கும்மிடிப்பூண்டியில் நடந்த வினாவிடைப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் முதல் மூன்று இடங்களையும் நான்கு பேர் பெற்றுள்ளனர். நால்வரும் மாணவிகளே!

தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், அறந்தாங்கி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி,சிதம்பரம், தர்மபுரி மாவட்டங்களிலும் மாணவர்களைவிட மாணவிகள் அதிக எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களைப் பெற் றுள்ளனர். போட்டியில் கலந்துகொண்ட பல்வேறு மாணவிகள் தங்களின் கருத்தைத் தெரிவிக்கும் போது பெரியாரின் சிக்கன நடவடிக்கை, மற்றும் பெண் ணடிமை ஒழிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகம் ஈர்த்ததாக தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90482.html#ixzz3I13esKCW

தமிழ் ஓவியா said...

தெற்காசிய நாடுகளில் பெரியார் வருகையினால் ஏற்பட்ட தாக்கம்!


உலகமயமாகிறார் பெரியார்

தெற்காசிய நாடுகளில் பெரியார் வருகையினால் ஏற்பட்ட தாக்கம்!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி ஆற்றிய வரலாற்று உரை

ஆற்றியது உரையல்ல ஒரு வகுப்பு!


சிங்கப்பூர், நவ.3 சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனமான தெற்காசிய நிறுவனத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் தெற்காசிய நாடு களில் தந்தை பெரியார் அவர்களின் வருகையால் ஏற்பட்ட சமுதாய, பொருளாதார, அரசியல் கலாச்சாரத் துறைகளில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் குறித்து உரையாற்றினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான தெற்காசிய ஆய்வு நிறுவனம் Institute of South Asian Studies (ISAS), தெற் காசியாவில் அதிகரித்து வரும் பொருளாதாரம், அரசியல், முக்கியத்துவம்பற்றிய ஆய்வுப் பணிகளை செய்து வருகிறது.

இந்நிறுவனம் சிங்கப்பூர் வந்துள்ள பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களை “The Impact of Periyar E.V.R ’S Visits to South East Asia” தென் கிழக்காசியாவில் பெரியார். வருகைகளின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்ற விடுத்த அழைப்பை ஏற்று, 28-10-2014 அன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் ISAS Board Roomஇல் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி ஆங்கிலத்தில் உரையாற் றினார்.

இக்கருத்தரங்கில் Senior Associate DirectorMr Johnson Paul,Assistant Director&Senior ResearchFellowDr Rajesh Rai, Dr.Ronojoy Sen, Head of Research & Honorary Senior FellowAssociate Professor Rahul Mukherji,Principal Research FellowDr Iftekhar Ahmed Chowdhury, Professor Dr SP. Thinnappan,Associate Professor ChitraSankaran, Research Associate, Sojin Shin , Ms SitharaDoriasamy Senior Manager (Corporate Communications), Mr P S Suryanarayana Editor (Current Affairs), Mr Jordan Ang Assistant Manager, Events, Mr Muhammad Yusuf Management Officer, NUS Political science & History students Mr.Irshath Mohamed, Mr.SyedAshratullah, மூத்த விரிவுரையாளர் ரத்தினகுமார், மூத்த எழுத்தாளர் ஏ.பி.இராமன் புதுமைத்தேனீ மா.அன் பழகன், ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவுத் தலைவர் அ.கமலக்கண்ணன் மற்றும் உறுப் பினர்கள், பெரியார் சமூக சேவை மன்ற தலைவர் வீ.கலைச் செல்வம், செயலாளர், க.பூபாலன். அண்ணா மலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவுத் தலைவர் பெ.மூர்த்தி, தி.மதியழகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வேந்தரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு!

கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்துத் தொடக்க உரையாற்றிய Senior ResearchFellowDr.Ronojoy Sen அவர்கள் பெரியார்மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களை வரவேற்று குறிப்பிடுகையில் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தராக, மேலும் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவராக உள்ளார். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் படிப்பில் எம்.ஏ. பட்டம் பெற்று தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார் .காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி யுள்ளது. முக்கியமாக இன்றைய கருத்தரங்கத்தில் பேச உள்ளவர் பெரியார் ஈ.வெ.ரா.வால் நிறுவப்பட்ட திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ளவர். அவர் ஒரு வழக் குரைஞர், தினசரி நாளேடு விடுதலை, மாதமிருமுறை உண்மை இதழ் மற்றும் மாத இதழ் The Modern Rationalist இன் ஆசிரியராக உள்ளார். அவர் ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்; சுமார் 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவர்சமூகநீதிக்காக தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப் பினர்கள், மற்றும் பழங்குடியினர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசமைப்பின் 76ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வந்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது விவர அட்டவணையில் சேர்க்கப் பட்டதில் முக்கிய கருவியாக இருந்துள்ளார் என்று டாக்டர் கி.வீரமணி அவர்களை பற்றி சுருக்கமான ஓர் அறிமுக உரையாற்றி “The Impact of Periyar E.V.R’S Visits to South East Asia” என்ற தலைப்பில் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களை உரையாற்ற கேட்டுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் ஆதாரபூர்வமான உரை

தமிழர் தலைவர் உரையில் தந்தை பெரியாருக்கு UNESCO அமைப்பால் கொடுக்கப்பட்ட விருதில் தொடங்கி, சமூகநீதிக்காக, மக்கள் பணிக்காக அவர் வகித்த 29 பதவி களைத் துறந்து இராஜகோபாலாச்சாரியாரின் கட்டாயத்தினால் காங்கிரஸில் இணைந்தது, பின்பு தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு இவற்றில், பெரியாரின் கருத்துக்கு காங்கிரஸ் மாறுபட்டு இருந்ததால் காங்கிரசிலிருந்து விலகியது, குடியரசு இதழைத் துவக்கியது, அந்த இதழ் தெற்காசிய நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் மியான் மாவில் பரவியது. மேலும் சுமார் 4000 பிரதிகள் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் முகவராக இருந்து சிங்கப்பூர், மலேசியாவில் பரவியது, சுயமரியாதை இயக்கத்தை தோற்று வித்தது உள்பட அதற்குரிய காரணத்தை விளக்கிக் கூறினார். தெற்காசிய நாடுகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் மியான்மாவில் பெரியார் அவர்களின் சுற்றுப் பயணத்தை விளக்கி, பெரியார் அவர்கள் தொடங்கிய கல்வி நிறுவனங் கள்பற்றிக் கூறி, பெரியார் அவர்கள் பிறந்ததிலிருந்து 95 ஆண்டுகாலம் வாழ்ந்து கடைசி மூச்சுவரை தொண்டறத் திற்காகவும், மனிதநேயத்திற்காகவும், வாழ்ந்ததை சுருக்க மாக எடுத்துரைத்து, பெரியார் என்றால் யார்? அவர் எதற் காக உழைத்தார்? என்பதை அனைவரும் தெரிந்து கொள் ளும் வகையில் சிறப்பாக விளக்கி. தெற்காசிய நாடுகளில் பெரியார் சுற்றுப் பயணத்தால் ஏற்பட்ட தாக்கத்தையும், மாற் றத்தையும் அதனால் ஏற்பட்ட பயன்களையும் ஆதாரத்து டன் எடுத்துக் கூறி, அனைவரும் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு வகுப்பு எடுப்பது போல் இருந்ததாகப் பலரும் கூறினார்கள்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர்Professor Tan Tai Yong Vice Provost (Student Life), Director Institute of South Asian Studies அவர்களுக்கும், (உடன் பேராசிரியர் சுப.திண்ணப்பன், தமிழ்முரசு இதழின் முன்னாள் செய்தியாசிரியர் சித்ரா துரைசாமி ஆகியோர் உள்ளனர்).

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ISAS பிரிவின் Senior Associate Director Mr Johnson Paul ஆகியோருக்குப் பெரியார் நூல்களை பரிசளித்தார் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...


பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுடன், கருத்தரங்கத்திற்குத் தலைமை வகித்து தொடக்க உரையாற்றிய Senior Research Fellow Dr.Ronojoy Sen அவர்கள்.



Power Point Presentation slide மூலமாக சுமார் 36- slide களில் பெரியார்பற்றியும், தெற்காசிய நாடுகளில் பெரியார் சுற்றுப் பயணத்தால் ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றியும், குறிப்பாக இருமுறை மலேசியா, சிங்கப்பூரில் பெரியாரின் சுற்றுப்பயண நிகழ்வுகளையும் ஏற்பட்ட தாக்கத்தையும் படங்களுடன், முழுக்க முழுக்க சிங்கப்பூரில் உள்ள அறிஞர் களின் புத்தகங்களிலிருந்து ஆதாரத்துடன் விளக்கினார் வேந்தர் டாக்டர் கி.வீரமணி. Presentation slide--ன் முதல் பகுதியில் பெரியார் யார்? என்பதை சுருக்கமாக, எளிமையாக About Periyar என்ற தலைப்பில் விளக்கினார்.

தமிழ் ஓவியா said...

தெற்காசிய நாடுகளில் பெரியார்

இரண்டாவதுபகுதியில் Periyar E.V.R. Visit to Malaya, Singapore and Burma (myanmar) என்ற தலைப்பில் தெற்காசிய நாடுகள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மியான்மாவில் பெரியாரின் சுற்றுப் பயணத்தைப் பற்றி படங்களுடன் பல வரலாற்றுத் தகவல்களைக் கூறி தமிழர்களின் வாழ் நிலைமை அந்த காலத்தில் எப்படி பின்னோக்கி இருந்தது என்பதை கூறி, அதற்காக பெரியார் கூறிய அறிவுரைகள் மற்றும் அப்போது இருந்த தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளை விளக்கினார்.

நான்கு வகைத் தாக்கங்கள்

கடைசியாக மூன்றாவது பகுதியில் “Impact Of Periyar’s Visit என்ற தலைப்பில் பெரியாரின் சுற்றுப்பயணத்தால் ஏற்பட்ட தாக்கத்தை தனித்தனியாக 1. சமூகத்தில் (Social Impact), 2. பொருளாதாரத்தில் (Economic Impact), 3. அரசியலில் (Political Impact), 4. சமூகக் கலாச்சாரத்தில்(Cultural Impact) என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்து பெரியார் வருகையால் இவற்றில் ஏற்பட்ட தாக்கத்தை வரலாற்று அறிஞர்கள், மாணவர் களுக்கு பயன்படக் கூடிய வகையில் வகுப்பு எடுப்பது போல் Presentation slide மூலமாக விளக்கினார்.

சிங்கப்பூர், மலேசியாவில் முக்கியமாக தமிழர்கள் கல்வியறிவு பெற பெரியார் பெயரில் பாடசாலைகள் இருந்ததை, தமிழர் சீர்திருத்த சங்கம் உருவாகி பெரியார் தொண்டர்கள் மூலமாக சீர்திருத்த திருமணங்கள் நடந்ததை, ஜாதி உணர்வு குறைந்து தமிழர்களிடம் சமூக உணர்வு வந்ததை, தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை சிங்கப்பூர், மலேசியா அரசாங்கம் அங்கீகாரம் அளித்து ஏற்றுக் கொண்டதையெல்லாம் விவரித்தார். மலேசியா-சிங்கப் பூரில் தமிழர்கள் குடியுரிமை பெற்று அரசாங்கத்தில் பங்குபெற்று முன்னேறும் நிலை ஏற்பட்டு, இன்று தமிழர்கள் வேலை வாய்ப்பில், பதவிகளில் உள்ளதையும், பொருளா தாரத்தில் உயர்ந்துள்ளதையும் இன்றைய காலத்தோடு ஒப்பிட்டு, தமிழர்கள் வாழ்வில் பெரியார் ஏற்படுத்திய மாற்றத்தை சுமார் ஒரு மணிநேரம் சுவைபட விளக்கி பல கருத்துகளுடன் வரலாற்று உரையை நிறைவு செய்தார். அதன் பின்பு பேராசிரியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுமார் 15 நிமிடம் தமிழர் தலைவர் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.

தமிழர் தலைவர் அவர்கள் ஆதாரத்துடன் விளக்கிய Power Point Presentation slide களில் சில....

இறுதியாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகப் பேராசிரியர் Senior Research Fellow Dr.Ronojoy Sen அவர்கள், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கிய உரையின்Presentation slide-யை வாங்கிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்

Read more: http://viduthalai.in/e-paper/90483.html#ixzz3I13u3z11

தமிழ் ஓவியா said...

வரவேற்கப்பட வேண்டியது இடதுசாரிகளின் பிரச்சாரம்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) பார்வேடு பிளாக் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி முக்கியமானதோர் முடிவை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மதவாத, ஜாதியவாத பிற்போக்குத்தனப் போக்குகளுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரம் - போராட்டங்களில் ஈடுபடுவது என்று முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் காரணமாகவே பிஜேபி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளதே தவிர, பிஜேபியின் மீதுள்ள நன்னம்பிக்கையின் அடிப்படையில் அல்ல.

காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் ஒரு கட்சி இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாகும். ஆட்சிக்கு வந்தால் விலை வாசியைக் குறைப்போம், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவோம் - கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் - வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து இந்தியக் குடிமகன் ஒவ்வொருவன் கணக்கிலும் 5 லட்சம் ரூபாய்க் கொடுப்போம் என்று நரேந்திரமோடி உட்பட பிஜேபி முன்னணியினர் நீட்டி முழங்கி வந்தனர். பொய்களை அள்ளி வீசி, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு, விளம்பர யுக்திகளைக் கையாண்டு மக்களை ஒரு மயக்க நிலைக்கு ஆளாக்கினர் என்று சொன்னால் அது தவறாகாது. இப்பொழுது நிலவரம் என்னவென்றால் பொருளாதார ரீதியாக பிஜேபி ஆட்சியால் எந்தவித வளர்ச்சியையும் கொடுக்க முடியவில்லை. விலைவாசிகள் விலாவை முறித்துக் கொண்டு இருக்கின்றன.

பிஜேபி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையிலே நிதி அமைச்சர் அருண்ஜேட்லி முதல் நிதி நிலை அறிக் கையை நாடாளுமன்றத்தில் படித்த போதே - ஒரு விமர் சனம் எழுந்தது; படிப்பது அருண்ஜேட்லியா காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமா என்ற விமர்சனம்தான் அது.

அதனைத் தொடர்ந்து தனக்கென்று எந்த ஒரு வழிமுறையையும் வைத்துக் கொள்ளாமல், காங்கிரசின் நகலாக (சிஷீஜீஹ்) செயல்பட்டு வருகிறது.

பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை யில் காங்கிரசை பின்பற்றிக் கண்ணை மூடிக் கொண்டு தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை முன்னெடுத்துச் செல்வதில் மட்டும் தீவிரம் காட்டி வருகிறது. வரலாற்றுத் துறைக்குக் கடைந்தெடுத்த இந்துத்துவாவாதியைத் தலைவராக நியமித்துள்ளது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சரைச் சந்தித்து கல்வித் திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது மட் டுமல்ல; முன்பு பிஜேபி ஆண்ட மாநிலங்களில் கல்வியைக் காவிமயமாக்கும் வேலை மேற்கொள்ளப்பட்டது என்பது தான் உண்மை.

ஃபிரண்ட் லைன் இதழ் (20.11.1998) இவ்வாறு குறிப்பிட்டது.

இந்த வரலாற்றுத் தவறுகள் ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத்தால் உண்மைக்குப் புறம் பானவை என்று எடுத்து வீசப்பட்டவை. கோட்பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக் கப்படவில்லை; பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவை அவ்வப்போது அதிகப் பொய்களைக் கொண்டு வலுவூட்டப்பட்டன என்று இந்து ஏட்டின் குழுமத்திலிருந்து வெளிவந்த ஃபிரண்ட்லைனே வேதனைப்பட்டு வெளியிட்டது என்றால் பார்த்துக் கொள்ளலாமே!

தமிழ் ஓவியா said...

அந்தக் கால கட்டத்தில் பிஜேபி ஆண்ட மத்தியப் பிரதேசத்தில் அதன் கல்வி அமைச்சர் விக்ரம்வர்மா என்ன சொன்னார்?yhy676y76

வரலாற்றை எழுதும் பொழுது அக்கால சமூக, பொருளாதார நிலைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமே தவிர, ஆளுகிற மனிதர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிப்படையாக கொண்டு கருத்தை உருவாக்கக் கூடாது என்ற கருத்தை ஏற்க முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதுவது, இந்திய வரலாற்றுக்கும் பெருமை சேர்ப்பது ஆகாது. ஓர் இந்து அரசரை மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்றோ ஒழுக்க குறைக்காரர் என்றோ குறை சொல்லக் கூடாது என்று இவ்வளவுப் பச்சையாக வரலாற்றைப் பச்சையான பொய்யால் நிரப்புங்கள் என்பதற்குப் பச்சைக் கொடி காட்டியதையும் இந்த இடத்தில் நினைவூட்டுவதும் பொருத்தமும் அவசியமுமாகும். பிஜேபி ஆட்சியின்போது உத்தரப்பிரதேச பாடத் திட்டத்தில் முலாயம் சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்பட்டார்?
பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்?

(அவுட் லுக் 10.5.1999)

மாநில அளவில் அதிகாரத்தில் இருந்தபோதே இப்படி பாசிச முறையில் பிள்ளைகளுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. பி.ஜே.பி. ஆட்சியில் மேற்கொள்ளப் பட்ட இத்தகைய மதவெறிக் கல்வித் திட்டம் குறித்து ஃபிரண்ட் லைன் இதழில் பார்வதிமேனன், டி.கே. ராஜ லட்சுமி ஆகியோர்கள் இணைந்து எழுதிய கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் வளமானவை.

இத்தகைய கருத்துக்களைக் கொண்ட நூல்கள் பள்ளி களிலும், கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுமே யானால் நம் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்து போய் விடும்; நாடு பேரழிவைச் சந்திக்க நேர்ந்திடும் என்று எச்சரித் ததோடு,

இந்திய வரலாறு தலை முறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டு விட்டது - பிஜேபி ஆட்சியில் என்பதைவிட வேறு எந்த வகையில் பிஜேபி பாசிசக் கல்வி முறையைப் படம் பிடித்துக் காட்ட முடியும்?

அதுவும் மோடி போன்ற முரட்டு இந்துத்துவாவாதிகள் பிரதமராக வந்துள்ள சூழ்நிலையில், மிகவும் அடிப் படையான ஆதார சுருதியான மனிதவள மேம்பாட்டுத் துறை அபாயகரமாக செயல்படும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் இடதுசாரிகள் ஒரு பிரச்சாரத் தட்டத்தை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள இருக் கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது. திராவிடர் கழ கத்தைப் பொருத்தவரை அதன் பிரச்சாரம் இந்தத் திசை யில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மையாகும்.

Read more: http://viduthalai.in/page-2/90472.html#ixzz3I14MinOl

தமிழ் ஓவியா said...

ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கை யெல்லாம், எல்லாம் தனக்கே வரவேண்டும். தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக் கூடாது - கீழே கொட்டிவிடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என் பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/90470.html#ixzz3I14YgJTt

தமிழ் ஓவியா said...

சபாஷ் - வரவேற்கத் தகுந்தது!


மூன்றாம் பாலினத்தவர் ஆட்டோ ஓட்டுநர் - செய்தி வாசிப்பாளர்! மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் அயராத முயற்சியால், தடைகளைக் கடந்து பலதுறைகளி லும் துணிந்து அடி எடுத்து வைத் துள்ளார்கள்.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந் தவரான வைஷ்ணவி, வட சென் னைப் பகுதியைச் சேர்ந்தவர். தன் னுழைப்பால் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்.

சென்னையில் உள்ள தாய்-வி.எச்.எஸ் அமைப்பில் இணைந்து மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் எச்.அய்.வி தடுப்புப் பணி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் பொரு ளாதார மேம்பாட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட் டுநராக இருக் கும் வைஷ்ணவி "சில மக்கள், ஆட்டோ ஏற வந்து விட்டு, நான் திரு நங்கை என தெரிந்தவுடன் ஆட்டோவில் கூட ஏறாமல் சென்று விடு வதும், சில சமயம் சந்திக்கும் கேலி, கிண்டல்கள்தான் மன வருத்தமாக இருக்கிறது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், உழைக்க வந்தால், இப்படி கேலி கிண்டல் இருக்கிறது. ஆனாலும் என் தொழிலை நான் விட மாட்டேன். இந்தத் தொழிலை இன்னும் விரிவுபடுத்துவேன் என நம் பிக்கையுடன் கூறுகிறார் வைஷ்ணவி.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் தமிழகத்தில் இயங்கக் கூடிய தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசிப் பாளராக திருநங்கையான பத்மினி பிரகாஷ் பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, மூன்றாம் பாலினத் தவரான ரோஸ், தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப் பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தின் மேற்கு மாவட் டமான கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மினி பிரகாஷ், கல்லூரியில் வணிகவியல் துறையில் சேர்ந்து முத லாம் ஆண்டோடு படிப்பை நிறுத் தியவர்.

'ஊடகங்கள் மூலம் செய்திகள் மட்டும் போய்ச் சேருவதில்லை. செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர் களும் மக்களை எட்டுகிறார்கள். ஆகவே தான், ஊடகத் துறையை விரும்பினேன்' என்கிறார் பத்மினி.

மூன்றாம் பாலினத்தவர்களின் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல நல்வாழ்வுத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவினருக்கென நல வாரி யமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள் வழங்கல் அட்டைகளில் (குடும்ப அட்டை), வாக்காளர் அடையாள அட்டைகளில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடப்படுகிறார்கள். கல்லூரி களிலும் தனிப் பிரிவினராக அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் பாலினம் என் கிற அங்கீகாரத்தை வழங்கி உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/90475.html#ixzz3I14pevn9

தமிழ் ஓவியா said...

இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பூண்டு


கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புத மான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

பூண்டின் மருத்துவக் குணங்களால் ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள் வோருக்கு பலவித நோய்கள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர்.

நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும். பூண்டு இருக்கும் போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது. இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் உண்ணும்போது செரிமான சக்தியைத் தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. இது வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிடவேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.

இதன் தோலில் அல்லிசின் என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும் போது நமக்கு முழுமையான பலனைத் தரும். கொழுப் பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லை எனலாம். அதனால் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும் இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும் படியும் கிடைக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/90445.html#ixzz3I15YXi98

தமிழ் ஓவியா said...

காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்பு கிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகி விடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்து விடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்குப் பசி அதிகமாகும்.

காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் அதிகமாகும்.

தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக் குத்தீனிகளால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்ட காலை உணவை தவிர்க்காதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15hAQiz

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் நிறைந்த மிளகு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

இது காரமும், மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க உதவுகிறது. விட்டுவிட்டு வருகின்ற முறை காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் நாள்தோறும் இரண்டுவேளை சாப்பிடவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்துத் தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும். சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.

இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம் புல்லையும், பத்து மிளகையும் பொடியாக இடித்து கசாயம் போட்டு அருந்தி வந்தால் எல்லாவித விஷக்கடிகளும் முறியும்.

சாதாரண காய்ச்சலுக் கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒருவேளை சாப்பிட்டுவர நல்ல பலன் தரும். சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும், சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல் வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 23 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும். 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன், 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு ஆண்டில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும், மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட, கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15roVgo

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது


நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம் என மருத்துவத்துறை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வுகளை ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின், சுகாதாரப் பிரிவு விஞ்ஞானிகள் நடத்தினர்.

மாரடைப்பால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கும் அபாயம் உள்ளவர்கள் மற்றும் சாதாரண மனிதர்கள் என 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் பல தரப்பட்ட ஆய்வுகளை நடத்தினர்.

அவர்களின் உணவு முறை, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் அதிக நாள்கள் உயிர்வாழ ஏதுவான காரணிகள் நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்களில் இருந்தது. பொதுவாகவே நார்ச்சத்து அதிகமாக காணப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை மனித குடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் சுவை விரும்பி களாக உள்ளதால் இவ்வுணவுகளை அதிகம் உட்கொள்வது கிடையாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பு நோய் பாதிப்புள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்கள் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.

இது குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்து வர்களின் ஆலோசனைப்படி நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அளவாக எடுத்துக்கொள்வதின்மூலம் மாரடைப்பு நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/90447.html#ixzz3I15xjKAC

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை!


மூடநம்பிக்கை, பெண் ணடிமைத்தனம் பற்றி யெல்லாம் படித்திருப் போம். ஆனால் இராக் - சிரியாவில் இரண்டும் இணைந்த ஒரு கலவை யாக உள்ளது.

அய்.எஸ். தீவிரவாதி களாக இருக்கக் கூடிய வர்கள் அஞ்சி நடுங்கி ஓடக் கூடிய ஓர் இடம் இருக் கிறது என்றால் ஆச்சரி யம்தானே!

குர்திப் படைப் பிரிவில் உள்ள பெண் வீராங்கனை களைக் கண்டால் அந்த அய்.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடிக்கிறார்களாம். என்ன காரணம் தெரியுமா?

பெண்கள் கையால் (துப்பாக்கிப் பிரயோகத் தால்) ஆண்கள் உயிரிழந் தால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாதாம்!

எப்படி இருக்கிறது? தங்கள் உயிரையே திரண மாக மதித்துத் தீவிர வேலைகளில் ஈடுபடும் ஆண்கள்கூட இப்படி இருக்கிறார்கள் என்றால் இதன்பொருள் என்ன? உடல் வலிமை இருந்தாலும் மூளையில் குடியேறிய மத மூடநம்பிக்கை அவர் களைக் கோழைகளாக்கி விடுகிறதே!

இன்னொரு செய்தி ஈரானிலிருந்து வெளி வந்துள்ளது. ரேஹானே என்ற பெண்மணி தன் னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு புலனாய்வுத்துறை அதிகா ரியைக் கொலை செய்து விட்டார் அந்தப் பெண்மணி.

அந்தப் பெண்ணின் நோக்கம் அந்த அதி காரியைக் கொலை செய் வதல்ல; தன்மீது பாலியல் வன்முறையை மேற் கொண்ட பொழுதுதான் அந்தக் கொலை நடந்திருக் கிறது. (கொலையும் செய் வாள் பத்தினி என்பது நம் நாட்டுப்பழமொழி!) ஆனால் ஈரானில் தீர்ப்பு என்ன தெரியுமா? அந்தப் பெண் குற்றவாளியாக்கப் பட்டுத் தூக்குத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளார் என்னே கொடுமை!

அந்தப் பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

தாயே உனக்கு என் னைப் பற்றி நன்கு தெரியும். நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்றதில்லை. கரப்பான் பூச்சிகளைப் பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றியிருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக் கிறேன். இறப்பதற்கு முன் ஒரு வேண்டுகோள்.

தூக்குத் தண்டனைக் குப் பிறகு என் உடல் மண் ணுக்கு இரையாக வேண் டாம்; எனது உடலிலிருந்து பிறருக்குப் பயன்படும் அனைத்து உறுப்புகளை யும் அகற்றி அவற்றைத் தேவைப்படுபவர்களுக்குப் பரிசாக அளித்து விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள் கிறேன். எனது உறுப்பு களைப் பெற்றவர்களுக்கு நான் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரிய வேண்டாம்.

எனக்குப் பூச்செண்டும் கொடுக்க வேண்டாம். பிரார்த்தனை யும் செய்ய வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் அந்த ஈரானியப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபக்கம் மத மூட நம்பிக்கை இன்னொரு பக்கம் அதையும் கடந்த மனிதத் தன்மை! அசை போட்டுப் பாருங்கள் புரியும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/90433.html#ixzz3I16HqPTo

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்குக


விடுதலைப்புலிகள் அமைப்பு ஒன்றும் பயங்கரவாத ஒன்றல்ல; எனவே, பயங்கரவாத அமைப்புப் பட்டியலி-லிருந்து நீக்கி அந்த அமைப்பை விடுதலை செய்ய வேண்டும் என்று அய்ரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன் வைக்கப்படுகிறது.

நம்மைப் பொறுத்தவரையில் இந்தியாவில் விடுதலைப்-புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது நீக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டோம் (7.10.2010) அந்த அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமைப் பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர் பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங்-களாக்கப்-படும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

இலங்கை அரசே இங்கே விடுதலைப்-புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படை-யிலோ என்று நமக்குப் புரியவில்லை.
காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சலைட்கள் பெருகிய பல வடமாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்-கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினைத் (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுக வேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிட வேண்டும் _ முன்னுரிமை அதற்குத் தான் தரப்பட வேண்டும் என்று இன்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

தமிழ் ஓவியா said...

இந்த நியாயத்தை, சட்டப்படியான நிலையை இந்திய அரசு கவனம் செலுத்தத் தவறினாலும், அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருப்பது _- வரவேற்கத்தக்க-தாகும்.

இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அந்த அமைப்பைப்பற்றி தவறான புரிதல் இருந்திருக்குமேயானால், அதிலிருந்தும் விடுபட இத்தீர்ப்புப் பெரிதும் பயன்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் திடீரென்று ஒரு நாள் காலையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுவிடவில்லை.

ஈழத் தமிழினமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இனப்படுகொலையில் ஈடுபட்டது சிங்கள அரசு.

தமிழீழப் பெண்களைக் கதறக் கதறப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்களே சிங்கள இனக் காடையர்கள்! தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகளைத் தொங்க விடவில்லையா சிங்கள வெறியர்கள்?

தந்தையின் முன் மகளையும், அண்ணன் முன் தங்கையையும், மகன் முன் தாயையும் நிர்வாணப்-படுத்தி வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டதைப் பார்த்த பிறகும் மானமுள்ள எந்த மனிதன்தான் ஆயுதம் தூக்காமல் அமைதியாய் -_ சோற்றாலடித்த பிண்டமாய் இருப்பான்? அதுதானே ஈழத்தில் நடந்தது!

காலங் கடந்தாலும் விடுதலைப்புலிகளின் உண்மையான போராட்டம் என்ன என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!

இந்த நேரத்தில் இந்திய அதிகாரிகள் வர்க்கம்பற்றி அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது -_ சரியானது!

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான மோதல் பிரச்சினையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக இந்தியத் தரப்பிலான தகவல்கள் நம்பத் தகுந்ததாகக் கருத முடியாது என்ற அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் கருத்தும், கணிப்பும் சாதாரண-மானதல்ல!

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பு எந்த வகையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்று சொல்லத் தேவை-யில்லை.

அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாக, இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகு-முறையில் புதிய மாற்றம் வருமேயானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.

- அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்

-----------

பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

-----------

தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்

-----------

பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.

- டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்

-------

ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.

- ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவி

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!

தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.

- மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்

----------

ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.

- சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

-----------

சொல்றேங்க!

ஓ... இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?

ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஜீவகாருண்யம் படும்பாடு!

ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?

அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!

காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?

காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்... அதுவல்லவோ உயிர் வதை!

சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...

புரட்டுக்கு மறுப்பு


முன்னோடி. . .

பின்னோடி....?

- கி.தளபதிராஜ்

'

தமிழ்நாடு தமிழருக்கே' கோரிக்கையை முதலில் எழுப்பியவர் மறைமலையடிகள் தான். தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன் எழுப்பியவர் பெரியார் இல்லை என்கிறார் மணியரசன். வழக்கமான அவரது புரட்டுக்கு மறுப்பு.

இந்தியா ஒரு நாடா? என 1930களிலேயே வினா எழுப்பியவர் பெரியார்.

இந்தியா ஒரு நாடு ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இந்தியா ஒரு நாடாகியிருக்கின்றதா? இந்தியா, ஜாதிகள் காட்சிசாலையாக, சாமிகள் காட்சிசாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கிறது? இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்ந்து கொள்வதென்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

(சேலத்தில் பெரியார் உரை -'குடிஅரசு' 1.6.1930) இந்தியா நம் தாய்நாடு என்று சொல்வதற்குத்தான் என்ன ஆதாரம் இருக்கிறது? இந்தியா என்கிற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா சென்ற ஆண்டு பிரிந்துவிட்டது. அதற்குமுன் நேபாளம், பூடான் பிரிந்துவிட்டன. அதற்குமுன் காந்தாரம், காபூல் பிரிந்துவிட்டன. இப்படியே எவ்வளவோ பிரிந்தும், சேர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராண காலத்தில் 56 நாடுகள் இருந்தனவே, அப்போது ஒரு நாட்டுக்காரன் இன்னொரு நாட்டைத் தாய்நாடு என்று கருதினானா?

மாகாண சுதந்திரம் கொடுத்து மாகாணத்துக்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன்தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு, அய்ரோப்பா தேசத்தைப்போல மொழிவாரியாக தனித்தனி நாடாகப் பிரித்துக்கொண்டபின் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்? நேபாளம் நம் ஒரு ஜில்லாவைப்போல் உள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா? சயாமில் பெரிதும் இந்து மதம்தான். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?

அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலெண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டைத் தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய்-நாடென்-பார்களா?

ஆகவே, தமிழ்நாட்டவர்கள், திராவிட மக்கள், எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூறவேண்டுமென்பதும், எதற்காக இந்தியா முழுவதும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.
(ஈரோடு கொல்லம்பாளையத்தில் பெரியார் உரை -'குடிஅரசு' 26.9.1937)

1937லேயே நாடு பிரியவேண்டுமென்றேன். இதை அன்றிருந்த வடநாட்டார் தெரிந்துதான் இருக்கிறார்கள். பதவி ருசியைக் காட்டி நம்மவர்களை ஏய்த்து விடுகிறார்கள்.
(விடுதலை 25.7.1957)

நாட்டுப்பிரிவினை என்னும் விஷயத்தை 1938லேயே முதன்முதலாக நான் துவக்கினேன். பிறகு ஜஸ்டிஸ் கட்சித் தலைவனானவுடன் அப்பிரச்சினை ஜஸ்டிஸ் கட்சி பிரச்சினையாகி பிரபலம் பெற்று, ஜின்னா சாயபு, அம்பேத்கர் ஆகியவர்களுடைய ஆதரவும் பெற்று, யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டீஷ் அரசாங்கத்திடமும் அது சமர்ப்பிக்கப்பட்டது. இதை(பிரிவினையை)ப் பற்றிப் பல திட்டங்கள் பிரிட்டீஷாரிடமே கொடுக்கப்பட்டன. அத்திட்டங்களில் ஒன்றுதான் பாகிஸ்தான் பிரச்சினையாகவும் முளைத்தது. - (விடுதலை தலையங்கம் 30.3.1967)

தமிழ் ஓவியா said...

1930களில் துவங்கி தன் இறுதி மூச்சு அடங்கும் வரை பல்வேறு காலகட்டங்களில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த பெரியாரை மறுத்து 11.9.1938இல் சென்னையில் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் மறைமலையடிகள் 'தமிழ்நாடு தமிழருக்கே' தீர்மானத்தை முன்மொழிந்ததாகவும் அவரே அதற்கு முன்னோடி எனவும் மணியரசன் வாதிடுவது சரியா?

ஒரு மாநாட்டில் ஒரு தீர்மானத்தை ஒருவர் முன்மொழிவதாலேயே அவர் அந்தத் தீர்மானத்தின் காரணகர்த்தா ஆகிவிடுவாரா என்பது பொதுவாழ்வில் ஈடுபடுவோர் அறியாததல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தத் தீர்மானத்தின் நோக்கம் பெரியார் கேட்ட இந்திய அமைப்பிலிருந்து விடுபட்ட தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தா? 11.9.1938இல் நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி 25.9.1938இல் வெளியான குடிஅரசு கட்டுரை கூறுவது என்ன? தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்திற்கு முதல்படியே.........

தமிழ் ராஜாங்கப் பாஷையாகித் தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. மணியரசன் வலியுறுத்தும் தமிழ்த்தேசியம் இதுதானோ? இதற்குத்தான் மறைமலையடிகள் முன்னோடி என்று சொன்னால் அதுவும் உண்மையல்லவே!

1926இல் ஒன்றுபட்ட சென்னை மாநிலத்திலிருந்த பத்து தமிழ் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தவர் சர்.சி.சங்கரன் நாயர் என்ற மலையாளியாயிற்றே!

பெரியாரைக் கொச்சைப்படுத்தி நீங்கள் சாதிக்கப்போவதுதான் என்ன? என்ன?

தமிழ் ஓவியா said...

மூளை to மூளை தகவல் பரிமாற்றத்தில் புதிய புரட்சி!


- செமல்விஸ்

ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும்

1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 சைகை காட்ட வேண்டும்

3. நபர் 1 காட்டும் சைகைகளை நபர் 2 பார்க்க வேண்டும்

4. நபர் 2 பார்ப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடன் சேர்ந்து பேச்சும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறியபோது ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 பேச வேண்டும்

3. நபர் 1 பேசுவதை நபர் 2 கேட்க வேண்டும்

4. நபர் 2 கேட்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைகையுடனும், பேச்சுடனும் சேர்ந்து எழுத்தும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியது. மனித குலம் இந்த நிலைக்கு முன்னேறிய போது ஒருவர் (நபர் 1) நினைப்பதை அடுத்தவர் (நபர் 2) புரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் 1. நபர் 1 சிந்திக்க வேண்டும் 2. நபர் 1 எழுத வேண்டும்

3. நபர் 1 பேசுவதை நபர் 2 வாசிக்க வேண்டும்

4. நபர் 2 வாசிப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எழுத்து என்பது பாறைகளில் எழுதுவது, களிமண்ணில் எழுதுவது, ஓலைகளில் எழுதுவது, செப்புப் பட்டயங்களில் எழுதுவது, காகிதங்களில் எழுதுவது, அச்சிடுவது என்று மாறி வந்த நேரத்தில், 1875ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வசித்த இரிச்சர்டு கால்டன் என்ற மருத்துவர் தனது ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் எழுதினார். குரங்குகள் மற்றும் முயல்களின் கபால எலும்பினை அகற்றி விட்டால், மூளையில் இருந்து மின்னலைகள் வருகின்றன என்பதுதான் அவரது கண்டுபிடிப்பு.

15 ஆண்டுகள் கழித்து 1890இல் போலந்தைச் சேர்ந்த அடால்ப் பெக் என்பவர், முயல்கள் மற்றும் நாய்களின் மூளையில் இருந்து பெறப்படும் மின்னலைகள் மாறுகின்றன என்றும், இந்த மாற்றத்திற்கு அந்த உயிரினங்களின் கண்களில் விழும் ஒளி ஒரு முக்கியக் காரணியாக உள்ளது என்றும் கண்டுபிடித்தார். 1912ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த விளாடிமிர் விளாடிமிரொவிச் ப்ரவ்திச் நெமின்ஸ்கி என்பவர் ஒரு நாயின் மூளையின் மின்னலைகளைக் காகிதத்தில் பதிந்தார். 1924ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் பெர்கர் மனிதனின் மின்னலையைப் பதிந்தார். இதுவே மூளை மின்அலைப்பதிவி (Electroencephalography EEG) கடந்து வந்த வரலாறு ஆகும்.

அதன் பிறகு மூளை மின்அலைப்பதிவில் பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. மூளை மின்அலைப்பதிவி மூலம் வலிப்பு நோய் உட்பட பல நோய்களைக் கண்டறிய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்கள். இது போல் பல கருவிகள் பயன்பாட்டிற்கு வந்தன. ஒளிவரைவி (VEP - Visual Evoked Potential) என்ற முறையின் மூலம் பார்வைக்கான நரம்புகளைப் பரிசோதனை செய்ய முடிந்தது. கேளலை வரைவி (Audiogram) மூலம் காதில் இருந்து ஒலிகள் மூளைக்குச் செல்லும் பாதையைப் பரிசோதனை செய்ய முடிந்தது

தமிழ் ஓவியா said...

இவை அனைத்தையும் மூளைக்-கணினி இடைமுகம் (Brain Computer Interface) என்று அழைத்து வந்தனர். அதாவது மூளையில் (அல்லது நரம்புகளில்) ஏற்படும் செயல்-பாடுகளை கணினி மூலம் கண்டுபிடிப்பது, அதாவது மூளை செயல்படும் போது ஏற்படும் மின்னலைகளை கருவியை வைத்துக் கண்டறிந்து, அதன் மூலம் செயல்பாட்டினை அறிவது. இதற்கு அடுத்த கட்டமாக கணினி- மூளை இடைமுகம் (Computer Brain Interface) வந்தது. முதலில் மூளையில் நடைபெறும் செயல்-பாடுகளைக் கண்டு கொண்டிருந்தோம் அல்லவா. இது அதற்கு அடுத்த நிலை. மூளைக்கு அல்லது நரம்புகளுக்கு மின்னலைகளை அளித்து அதன் மூலம் மூளையை உணர வைக்க முடியுமா என்ற சோதனை. இதில் பல விஷயங்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. அதே நேரம் செயற்கை உட்செவிச் சுருள் (Cochlear Implant) போல் சில விஷயங்களில் முன்னேறி உள்ளோம். வெளியில் இருந்து வரும் ஒலி அலைகளை உள்வாங்கி, அதை மின்னலைகளாக மாற்றி நேரடியாக மூளைக்கு இக்கருவி அனுப்புகிறது. காதில் நடுச்செவியில் பிரச்சினை இருந்தால் செவிப்புலன் உதவிச் சாதனம் (hearing aid) மூலம் அந்த நபர் கேட்கலாம். ஆனால் உட்செவி பிரச்சினையால் காது கேளாமை என்றால் சில ஆண்டுகளுக்கு முன்வரை அதற்கு சிகிச்சை இல்லாமல் இருந்தது. தற்சமயம், அதற்கு செயற்கை உட்செவிச் சுருள் மூலம் தீர்வு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது கணினி- மூளை இடைமுகத்திற்கு ஓர் உதாரணம் ஆகும்.

இவ்வாறு அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கும் போதுதான் அடுத்த கட்டப் பரிசோதனை நடந்தது. இதே கணினி மூளை இடைமுகம் மூலம் _- ஒருவரது மின்னலைகள் மூலம் ஒருவரது மூளைக்கு நேரடியாக ஏதாவது செய்தி சொல்ல முடியுமா என்ற பரிசோதனை தான் அது. எசுபானியம் மற்றும் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த சில அறிஞர்கள் திருவனந்தபுரத்தில் ஆய்வகத்தில் இருக்கும் ஒருவரின் மூளையில் இருந்து வெளிவரும் மின் அலைகளை மூளை கணினி இடைமுகம் மூலம் உள்வாங்கி, அதைக் கணினி மூலம் பதப்படுத்தி, அந்தக் குறியீடுகளை தொலைபேசி மூலம் பிரெஞ்சு நாட்டின் ஆய்வகத்திற்கு அனுப்பி, அங்கு கணினி மூலம் அதைப் பதப்படுத்தி, அங்கு கணினி மூளை இடைமுகம் மூலம் மூன்று நபர்களின் மூளைக்குள் அனுப்பி, இவர் நினைத்ததை அவர்களால் அறிய முடிகிறதா என்று சோதனை செய்துள்ளார்கள். ஆரம்ப கட்டப் பரிசோதனையில் சில செய்திகளை இம்முறையில் கடத்த முடிகிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர் .

இக்கண்டுபிடிப்பினை நாளையே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும் இதில் வருங்காலத்தில் பயன்படும் சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

முக்கியமாக, விபத்து அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்-.



இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள்:

Carles Grau
Neurodynamics Laboratory, Department of Psychiatry and Clinical Psychobiology, Psychology and Medicine Faculties, University of Barcelona, Barcelona, Spain

Romuald Ginhoux, Thanh Lam Nguyen, Hubert Chauvat, Michel Berg
Axilum Robotics, Strasbourg, France

Alejandro Riera, Giulio Ruffini
Neuroelectrics Barcelona, Barcelona, Spain

Julià L. Amengual
Cognition and Brain Plasticity Unit, Department of Basic Psychology, University of Barcelona, Barcelona, Spain

Alvaro Pascual-Leone
Berenson Allen Center for Noninvasive Brain Stimulation, Beth Israel Deaconess Medical Center, Harvard Medical School, Boston, Massachusetts, United States of America

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைகளின் அடிப்படையில்....


நம்பிக்கைகள் பிறக்கின்றன
நம்பிக்கைகள் சாகின்றன
நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்

ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது
இன்னொருவனின் நம்பிக்கை
ஒருவனின் கழுத்தை அறுக்கிறது
ஒரு நம்பிக்கை
அசுரனைக் கொல்கிறது
இன்னொன்று அந்தணன் கொன்றால்
அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது

நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்
அவைகளுக்குப் பெயரிடுகிறோம்
ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி
இன்னொன்றின் பெயர் கட்சி
நம்பிக்கை மதமாகிறது
சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன
சில தன்னை மாற்றிக்கொள்கின்றன

கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை
செத்து சுண்ணாம்பாகிவிட்டது
கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது
ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை
உலகத்தை விட்டு ஓடிவிட்டது
என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!

நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்
இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை
எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை
உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்...?

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...

காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு

காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்... என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.

கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.

விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்

என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.

இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?

நன்றி: வினவு

தமிழ் ஓவியா said...



என்றும் பெரியார்தான் தலைவர்

{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}

வீர வணக்கம்!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.

கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.

இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

*****

பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.

அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க... போங்க... என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.

*****

சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.

*****

மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.

தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.

*****

என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

நேர்காணல்: மணிமகன்
தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சக்தியற்றவர்

சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்த ரோடிருந்தால் அவர் உங் களோடு இருப்பார் நீங்கள் அவரைத் தேடினால், உங் களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டு விட்டீர் களேயானால், அவர் உங் களை விட்டு விடுவார்! என்கிறது பைபிள்.

விரும்புபவர்களைக் காப்பாற்றுவதும் விரும் பாதவர்களைக் கை விடுவதும் உயர்ந்த பண்பாடா? கடவுளுக்கு இது அழகா? அப்படியானால் சராசரி மனுசனுக்கும் இந்தக் கர்த்தருக்கும் தான் என்ன வேறுபாடு? கர்த்தர் ஆசா பாசம் உள்ள சாதாரண மனிதர் போன்றவர் தானா? தன்னிடம் அடைக்கலம் ஆகுமாறு கர்த்தர் மக் களை மாற்றிட சக்தியற்றவர் தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90498.html#ixzz3I6hpnhqh

தமிழ் ஓவியா said...

யார் பொறுப்பு?



கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 23) அர்மேனியாவில் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்தார். முதலாண்டுக்கான கல்விக் கட்டணம் நிலத்தை விற்று சரி செய்யப்பட்டது.

இரண்டாம் ஆண்டுக் கட் டணத்தைக் கட்ட முடியாத நெருக்கடி. ஒன்றரை ஆண் டுக்குமுன் போச்சம்பள்ளி யில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கேட்டாராம். வங்கி விண்ணப்பமே தரவில்லையாம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரூ.20 லட்சம் கடன் தர நீதிமன்றம் உத்தர விட்டும் கடன் தராததால், மாணவன் கண்ணதாசன் அர்மேனி யாவிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? பெரும் பண முதலைகள் வாங்கிய கட னைத் திருப்பிக் கொடுப்ப தில்லை; தள்ளுபடி செய்யும் வங்கி கல்விக் கடனைக் கொடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம்?

Read more: http://viduthalai.in/e-paper/90496.html#ixzz3I6iJ6u3p

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் பரப்பக் கூடாது கருநாடக முதல்வர் வேண்டுகோள்

பெங்களூரு, நவ.4- கருநாடக மாநில முதல் வர் சித்தராமையா ஊட கங்கள் மூடநம்பிக்கை களைப் பரப்பக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின்னணு ஊடகங்கள் பல்வேறு வகையிலான மூடநம்பிக்கைகளைப் பரப் புவதிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விஜய கருநாடகா 15ஆம் ஆண்டு விழாவில் கரு நாடக முதல்வர் சித்தா ராமையா கலந்துகொண்டு பேசும்போது, ஊட கங்கள் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புவதில் கவனம் கொள்ளவேண்டும் என்று பேசினார்.

கெட்ட வாய்ப்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஜோதி டம் மற்றும் வாஸ்து, அற்பமான குடும்பப் பூசல் கள் குறித்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக ஒளி பரப்பிக் கொண்டிருக்கின் றன. இடைக்காலத்தில் நவீன, அறிவியல் காலத்தை நோக்கிய பார்வை ஊட கங்களுக்கு இருக்க வேண் டும் என்றார்.

அவர் கூறும்போது, குறைந்தது ஒரு மணி நேரம் முக்கிய செய்தித் தாள்களை வாசிப்பதிலி ருந்தே அந்த நாளுக்குரிய பணிகளைதான் தொடங் குவதாகக் கூறினார். உண்மையான பிரச்சி னைகளில் ஊடகங்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மற்றும் முதிர்ச்சியுடன் வளரும் உணர்வு மற்றும் தங் களையே உள்ளாய்வு செய்துகொள்ளவும் வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/90495.html#ixzz3I6idz700

தமிழ் ஓவியா said...

கூட்டு முயற்சியாம்

இலங்கை - இந்தியா இராணுவங்களுக்கிடையே கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் யுவா - குடோயா ராணுவ முகாமில் தொடங்கியது. நவம்பர் 22 வரை நடைபெறுமாம்.

இந்தியாவில் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று இலங்கையில் இந்தப் பயிற்சி நடந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். இலங்கைக்குச் செய்யப்படும் தூசி அளவு உதவியாக இருந்தாலும் அது ஈழத் தமிழர் ஒழிப்புக்கே பயன்படும் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-----------

விளையாட்டைப் பார்ப்பது குற்றமா?

இரானில் வாழும் கலானி என்ற பெண்மணி, இரானில் உள்ள ஆஸாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியைக் காணச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார்.
கைப்பந்துப் போட்டியை ஒரு பெண் பார்ப்பது கூடக் குற்றமா? இதில்கூடவா மதம்?

-----------

தந்திரம்!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாத பி.ஜே.பி. காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் 11 முசுலிம் வேட்பாளர்களை நிறுத்துகிறதாம். வேறு வழியில்லை என்கிற பட்சத்தில்தான் இந்த முடிவு என்பதை மறந்து விடக் கூடாது.

Read more: http://viduthalai.in/e-paper/90499.html#ixzz3I6inRVKX

தமிழ் ஓவியா said...

நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்


தமிழ்நாட்டில் இவ்வாண்டு அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுக் காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலை. இவ்வாண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டாலும், தண்ணீர் கடைமடை போய்ச் சேரவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.

ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்படாதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பாக பொதுப் பணித்துறை மீது விவசாயிகள் ஒரு மனதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

விவசாயம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையாக இருக்கும் பொழுது, அதற்கான முன் கூட்டியே செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி களைச் செய்வதைவிட அரசுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? அதுவும் அதற்கென்றே ஒருதுறை இருக்கும் பொழுது திட்டமிட்ட வகையில் செயல்பாடு இல்லை என்பது எந்த வகையிலும் மன்னிக் கப்படவே முடியாத குற்றமாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஏன் உறக்கமோ தெரியவில்லை.

காலந் தாழ்ந்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு அறுவடை செய்யப்படும் கால கட்டத்திலோ கன மழை பொழிந்து பயிர்கள் நீரில் மிதந்து அழுகும் நிலைக்கு ஆளாகி விட்டன. போதிய வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். இந்த விவசாயத் தொழில் என்ன பாவம் செய்ததோ என்று விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் புலம்பி வருகின்றனர்.

கருநாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அதனால் விவசாய தொழில் தமிழ்நாட் டில் நசிந்து விட்டது என்று நியாயமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம். ஆனால், தமிழ்நாடு அரசோ, அந்த விவசாயம் நிமிர்ந்து நிற்பதற்கான வழிமுறை களை, திட்டங்களைச் செயல்படுத்துவதில்லையே இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?

ஒன்று காஞ்சி கெடுக்கும் அல்லது பெய்து கெடுக் கும் இயற்கை என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாகும்.

விவசாயத்தையே தம் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இயற்கையின் உற்பவத்தின்மீது இத்தகு நேரத்தில் கோபம் கொள்வதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நமது கவலையெல்லாம் பருவ காலச் சூழலுக்கு ஏற்ப அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஏன் சோம்பிப் போயின என்பதுதான்!

இது ஒருபுறம் இருந்தால், கன மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அவலம் - குறிப்பாக தலைநகரமாகிய சென்னையோ அவலத் தின் உச்சமாகும். இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஒரு தலைநகரம் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தால் அதனைத் தாக்குப் பிடிக்கும் வலுவில் இல்லை; பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு!

எப்படியோ சமாளித்து பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்றாலும் பள்ளிகளைச் சுற்றியே குளம் மாதிரி தண்ணீர்த் தேக்கம்.

வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்து ஏழை எளிய மக்கள் அல்லாடும் அவலத்தைத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

பாம்புகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் விருந் தினர்களாக வரும் கொடுமை! வறுமைதான் எவ்வளவு பெரிய கொடிய நோய்!

தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் அதன் காரணமாக தொற்று நோய்கள், டெங்குக் காய்ச்சல் பரவி வருவதாக அபாய அறிவிப்பு. மாநகராட்சி நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பஞ்சம் என்ற நிலைமை.

கிபீமீஹ் கிமீரீஹ்ஜீவீ வகைக் கொசுக்களால் டெங்கு பரவுகிறது வீட்டைச் சுற்றி நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஏடுகளிலும் அந்த அறிவிப்பு வந்து கொண்டுதானிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குவதற்கு அங்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களா பொறுப்பு? அவர்களால் என்னதான் செய்ய முடியும்? தேங்கிய தண்ணீரை இறைக்கும் வேலையையும் மாநகராட்சி தானே செய்ய வேண்டும்?

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் முதன்மையான இடம் கோயில்களுக்குதான் ஆக்கிர மிப்புகளால் வடிகால் அடைபட்டுப் போகும் நிலையில் தண்ணீர் வெளியேற வாய்ப்பு எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எல்லாம் அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?

ஓர் ஆண்டு ஏற்படும் அவலங்களைக் கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டிலாவது அந்தக் குறை பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திட முன் கூட்டியே திட்டமிட்டு தேவையான பணிகளைச் செய்து முடிக்க வேண்டாமா?

கடும் மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளான நிலை யில் கடுமையான பணிகளைப் போர்க்கால அடிப் படையில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ சொந்த கட்சிப் பிரச்சினை என்னும் சூழலில் சிக்கிச் செயலிழந்து கிடக்கிறது!

எத்தனை நாட்கள் தான் துக்கத்தை அனுசரித்துக் கொண்டு இருக்க முடியும்? அதிலிருந்து விடுபட்டு, அரசு தன் கடமையைச் செய்ய முன் வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வேண்டுகோள்!

Read more: http://viduthalai.in/page-2/90503.html#ixzz3I6j0CFb6

தமிழ் ஓவியா said...

நமது பணி...

மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

Read more: http://viduthalai.in/page-2/90502.html#ixzz3I6jCq4au

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஷாகா பஞ்சாபில் எதிர்ப்பு


சண்டிகர், நவ. 4- காங்கிரசு கட்சியின் மக்களவைத் துணைத்தலைவர் அமரீந்தர்சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகாக்கள் பயிற்சி நடைபெறுவதன்மூலம் மதவெறிக்கே இடம் ஏற்படும். அதன் எதிர்விளைவாக சில இடங் களிலும் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
கேப்டன் சிங் தொகுதியான அமிர்தசரசில் தொண்டர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையில் உள்ளவர்கள் ஷாகாக் களை கிராமப்புறங்களில் நடத்த முடிவு செய்து உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சியான ஷாகாக்கள் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அகாலிதளம் மற்றும் பாஜகவினரிடையே உள்ள வேற்றுமைகள்குறித்து கேப்டன் சிங் கூறும்போது, பஞ்சாப் மக்கள் பாஜகவிடம் எந்த அளவில் ஏமாற்றமடைந்தார்களோ அதே அளவில் அகாலி தளம் கட்சியிடமும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாஜக அல்லது அகாலிதளம் சேர்ந்தோ அல்லது தனித்தோ களம்காண்பார்களா என்பது முக்கிய மல்ல. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

மேலும் கேப்டன் சிங் கூறும்போது, பஞ்சாபில் உள்ள பாஜக இப்போதுள்ள நிலையில் அகாலி தளத்துடன் இணைந்திருக்கிறது. அதன் பங்காக குற்றங்களிலும் கூட்டாக இருப்பதிலிருந்து விடுபட முயன்றாலும், அதன் பயனை அனுபவிப்பதாக இருந்தாலும் பாஜக இந்த காலகட்டத்தில் அகாலி தளத்துடனான உறவிலிருந்து விடுபட முடியாது. ஆளும் அரசில் கூட்டணியாக இருப்பதிலிருந்து மூட்டைகட்டிக்கொண்டு செல்ல வேண்டியதுதான். பஞ்சாபில் ஊழல்குற்றத்தில் அதிகம் உள்ளவர் களாக அதன் அரசும், அதன் தலைவர்களும் உள்ளனர். 1984ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத் தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணம் என்னும்போது, பஞ்சாபில் தீவிரவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கேப்டன் சிங் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/90516.html#ixzz3I6kr95Dm

தமிழ் ஓவியா said...

பக்தி சேற்றில்...

திருப்பதி ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடத்து வதற்காக 8 டன் மலர்களாம்.

பொருளாதாரத்தில் உற்பத்தி நாசம் என்பார்களே - அது பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் அன்றாடம் நடந்து கொண்டு வருகிறதே! எந்தப் பொருளாதாரப் புள்ளிகளும் இதுபற்றி எல்லாம் பேசமாட்டார்கள்.

காரணம், பெரும்பாலும் அவர்கள் பக்திச் சேற்றில் மூழ்கிக் கிடப்பவர்கள்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90565.html#ixzz3IFUD7sst

தமிழ் ஓவியா said...

புத்தன்



புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக்கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை.
_ (விடுதலை, 16.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/90573.html#ixzz3IFUba4ww

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?


மாற்றுத் திறனாளிகளுக்கு
இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 5_ உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத் தரவுகளின்படி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத் திறனாளி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1107 பின்னடைவு காலி இடங்களை முதலில் நிரப்ப வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு திங்களன்று (நவ.3) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத் தியநாராயணா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டப்படி, அரசு துறைகளில் உள்ள மொத்த பணியாளர் எண் ணிக்கை அடிப்படையில் 3 சதவீத இடங்களை உறுதி செய்ய வேண்டு மென்றும், 3 மாதங்களுக்குள் பின்ன டைவு காலி பணியிடங்களை கண் டறிந்து நிரப்ப வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013 அக்.8 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன் றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி இடங்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனை யடுத்து, பெயரளவிற்கு ஒரு சில துறை களை மட்டும் குறிப்பிட்டு, அத் துறைகளில் இருக்கும் மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை சுட்டிக்காட்டி, மாற்றுத் திறனாளி நலத்துறை அரசாணை எண் 10 அய் மார்ச் மாதம் வெளி யிட்டது.

ஆசிரியர் பணி நியமனத்தில் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அரசாணையில் உத்தர விடப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற உத்தரவுகளின்படியும், அர சாணைப் படியும் 1107 மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை நிரப்பாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 9000 ஆசிரியர் பணி இடங்களை சமீபத்தில் நிரப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டது.

இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் என அனைவரின் சார்பில் மாற்றுத் திறனாளி துறை செயலாளர் பி.சிவ சங்கரன் ஏற்கனவே பதில் மனு தாக் கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணா முன்னிலையில் இவ் வழக்கு திங்களன்று (நவ. 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளி துறை செயலாளருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என கூறி, அதில் திருப்தி அடையாத நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமலாகிறதா? என்பதை முழுமை யாக ஆராய்ந்து 19.01.2015- ஆம் ஆண்டிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.சி.காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதாடினார்.

Read more: http://viduthalai.in/page-2/90576.html#ixzz3IFV9MVBK