Search This Blog

15.11.14

பெண்கள் விஷயத்தில் சங்கராச்சாரியார் எப்படி? மற்ற மதங்களை விமர்சிப்பதில்லையா? குதிக்கிறார்கள்குருமூர்த்திகள்!

குதிக்கிறார்கள் குருமூர்த்திகள்!
-
பார்ப்பனர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம், இது ஒரு பொற்காலம் - மனுதர்மச் சிண்டை அவிழ்த்து விட்டு ஆகாயத்தில் பறக்கச் செய்யலாம், பூணூலைக் கூடக் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் தொங்க விட்டுப் பார்க்கலாம் என்ற ஆணவம் பீறிட்டுக் கிளம்பி யுள்ளது போல் தெரிகிறது; அவர்களின் நடவடிக்கைகளும், பேச்சுகளும், எழுத்துகளும் அடாவடித்தனமாகி விட்டன. திமிர் முறுக்கேறி - நல்ல பாம்பு பாட்டுக்காரனைத் தேடும்  என்பது போல நடந்து கொள்கின்றனர். கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை என்று பொதுவாகக் கூறப்படுபவரும் ஆர்.எஸ்.எஸின் ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்தி எழுதிய தினமணி கட்டுரை (8.11.2014) இதனை அப்பட்டமாக அம்மணமாகத் தெரி விக்கிறது.

தமிழக அரசியலில் பெரிய மாறு தலைக் கொண்டு வந்தது - 1960களில் அரசியல் கட்சியாக ஹிந்து ஆன்மிக விரோத, தேசிய விரோத, திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

திராவிட இயக்கம் எல்லா மதங் களையும் எதிர்க்கக் கூடிய ஒட்டு மொத்த நாத்திக இயக்கம் அல்ல. அது ஹிந்து ஆத்திகத்தை மட்டும் குறி வைத்ததே தவிர, மற்ற மதங்களை எதிர்க்காதது மட்டுமல்லாமல் அவற் றைப் போற்றி அவற்றுடன் உறவாடியும் வந்தது என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி.


திராவிட இயக்கம் மதத்தை மறுத்தது உண்மைதான். இந்துக் கடவுள்களைத் தாக்குவதும் உண்மைதான். இராமா யணத்தையும், மனு தர்மத்தையும் கொளுத்தியதும் உண்மையே! தேவைப் பட்டால் நாளைக்கும் அதனைச் செய் யும்! அதில் ஒன்றும் சந்தேகம் வேண் டாம். (அண்ணல் அம்பேத்கர்கூட அதைச் செய்தார் - அவர் என்ன திராவிட இயக்கமா?)


ஆனால், ஏன் அதனைச் செய்கிறோம்? அறிவார்ந்த முறையில் என் றைக்காவது குருமூர்த்தி கூட்டம் சிந்தித்ததுண்டா?

இந்த இந்து மதத்திலே தான் பிராமணன் பிர்மா நெற்றியிலிருந்து பிறக்கிறான் - சூத்திரன் பிர்மாவின் பாதங்களிலிருந்து பிறக்கிறான் - அப்படிப்பட்ட சூத்திரன் யார் தெ ரியுமா? விபச்சாரி மகன்! இது தானப்பா உங்கள் மனுதர்மம்?  (அத்தியாயம் 8 -சுலோகம்  415) மறுக்க முடியுமா? இதனைக் கொளுத்தா விட்டால் நாங்களும் மனிதர்கள்தான் என்று மார் தட்டிக் கொள்ள முடியுமா?


விபச்சாரி மகன் என்று ஒத்துக் கொள்ளாத ஒவ்வொருவனும் இதனைச் செய்துதானே தீர வேண்டும்.

எவ்வளவுக் கொழுப்பு மண்டைக்கு மேல் வழிகிறது என்றால், மனு தர்மத் திற்கு வக்காலத்துப் போட்டு சோ ராமசாமியின் துக்ளக்கில் இன்றைக்கும் கூட எழுதுவார்கள்?

அந்த மனு தர்மத்தை 1991 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து  எடுத்துச் செல்லவில்லையா? (Economical and Political Weekly - 6.3.1992)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருக்குறள் எங்கே? பிறப் பிலேயே பேதம் பேசும் மனுதர்மம் எங்கே?


திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றே என்று கூறும் சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு ஆரியத் திமிர் இருக்க வேண்டும்?

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதையின் தமி ழாக்கம்தான் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் (தினத்தந்தி 15.4.2004) என்று அவாள் உச்சி மோந்து தோளில் தூக்கி வைத்துக் கொஞ்சும் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியை திராவிட இயக் கத்தவர்கள் மட்டுமல்ல; அதற்கு அப்பாற்பட்டவர்களும் நார் நாராகக் கிழிக்க  தான் செய்வார்கள்.

இந்து மதத்தைப் பற்றி மட்டுமே தான் பேசுகிறார்கள் என்று வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொள்கிறார்களே -

அந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவரோ - ஏன், உயர் ஜாதி பார்ப்பனர் அல்லாதாரோ - சங்கர மடத் தில் சங்கராச்சாரியார் ஆக முடியுமா?
இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத ஒருவன் இந்து மதக்கோயிலில் அர்ச்சகராக முடியுமா? அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து அர்ச்சகப் பயிற்சியும் அளிக்கப்பட்டாலும், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று முடக்குபவர்கள் யார்? இந்தக் குருமூர்த்திக் கும்பல் தானே! இதன் பின்னணியில் சங்கராச்சாரியார் இருந்தாரே - இருக்கிறாரே - சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தாரே!

சூத்திரன் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டாகி விடும் - தோஷம் படும் என்று இந்த 2014லும் கூறும் கூட்டத்திற்கு எவ்வளவு அசட்டுத் தைரியம் இருந் தால் திராவிடர் இயக்கத்தவர் இந்து மதத்தை மட்டும்தானே விமர்சிக் கின்றனர் என்று கூப்பாடு போடு வார்கள்?


 

மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை பிரச்சாரமாக செய்து, இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மூக்கைக் கொஞ்சம் சொறிந்து விட்டுப் பார்க்கிறார்கள்.


அதாவது உண்மையா? பெரியார் சிலைகளின்கீழ் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறோமே - அது தெரியாதா?

கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று பொறித்து வைத்துள் ளோமே - அது என்ன இந்து மதக் கடவுள்களுக்கு மட்டும்தானா?


நான் ஏன் கிறிஸ்துவனல்ல? (பெட் ரண்டு ரசல்) ஜீன் மெஸ்லியர் மரண சாசனம் (3 பாகங்கள்) இங்கர்சால் தீட்டிய கடவுள் போன்ற நூல்களை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளதே - அதனை வசதியாக மறைப்பானேன்?

அதே நேரத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கும், கிறித்தவர் களுக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு தேவை என்று திராவிட இயக்கம் கூறுவது சமூகநீதி அடிப்படையில்தான்! கடவுள் மறுப்பையும் சமூக நீதியையும் ஒன் றோடு ஒன்று போட்டுக் குழப்ப முயலக் கூடாது.

1960களில் ஹிந்து ஆன்மிக விரோத திராவிட முன்னேற்றக் கழகம் என்று வருணிக்கிறாரே - திருவாளர் குருமூர்த்தி அய்யர்!

அந்த திமுகவைத் தானே 1967இல் கனம் ராஜாஜி விழுந்து விழுந்து ஆதரித்தார்? பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வைணவப் பெரு மாளாகிய கனம் ராஜாஜி பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கினாரே - அதற்கு என்ன பதில்?

அதே ஆச்சாரியார் 1971 சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. எதிர்ப்பு அணி அமைத்து, காமராசரோடு கூட்டணி வைத்து தேர்தலில் குதித்தாரே! ராமனை செருப்பாலடித்த திமுகவுக்கா ஒட்டு என்று பிரச்சாரம் செய்தாரே ஆச்சாரியார்!  பிரச்சாரம் செய்தனவே துக்ளக்குகளும், தினமணிகளும், பார்ப்பனப் பஞ்சக் கச்சங்களும்; முடிவு என்னாயிற்று?


திராவிடர் கழகம் ராமனைச் செருப் பால் அடிப்பதற்கு முன்பு திமுகவுக்கு சட்டப் பேரவையில் இடம் 138, செருப் பாலடித்தபிறகு கிடைத்த இடங்கள் 183.
அப்பொழுது கனம் ராஜாஜி கல்கியில் (4.4.1971) இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளவில்லையா?


நாஸ்திகம் - ஆஸ்திகம் பற்றி யெல்லாம் எழுதிக் கிழிக்கும் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கு ஒரே ஒரு கேள்வி.


இந்து மதத்தில் நாத்திகன் என்பான் யார்? ஆத்திகன் என்பான் யார்? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 11).

இதையேதான் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிவாளும் திருவாய் மலர்ந் தருளியுள்ளார்.


நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீஸ்வரவாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்

அப்படிப்பட்ட பல பேர் இருந் திருக்கிறார்கள். இது என்ன வேடிக் கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது எனறுதான் அர்த்தம்


வைதிக வழக்கை ஆட்சேபிப்பது தான் நாஸ்திகம், நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும், இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாம லிருப்பதால்கூட  அல்ல! (தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி - பக்கம் 407-408).

இவற்றையெல்லாம் தெரிந்து கொள் ளாமல் படித்தறியாமல் தத்துப்பித்து என்று அம்பிகள் உளறலாமா?


பெரிய படிப்பு - ஆடிட்டர் உத்தி யோகம் - பெரிய  இடத்து சகவாசம்  எல் லாம் இருந்தென்ன? புத்தி மட்டும் பூணூலுக்குள் சிக்கிக் கொண்டால் இப்படித்தான் ஏறுமாறாக எழுதச் சொல்லும்!


1971 தேர்தலின்போது  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழகாகச் சொன் னாரே!

இன்று ஆஸ்திகம் என்பது உயர் சாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம் (19.2.1971) என்று சொன்னதையும்- இந்த இடத்தில் நினைவூட்டுவது சாலப் பொருத்தமானது.

ஆன்மிகம்பற்றி அடேயப்பா தாண்டிக் குதிக்கிறாரே திருவாளர் குருமூர்த்தி!  இவர்களின் ஆன்மிக யோக்கியதைக்குக் காஞ்சி சங்கராச் சாரியார் ஒருவர் போதாதா? கொலைக் குற்றத்தில் வேலூர் சிறையில் கம்பி எண்ணியவர்தானே!


பெண்கள் விஷயத்தில் அவர் எப்படி? அனுராதா ரமணன் என்பவர் அக்ரகாரத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அல்லவா? கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் புலம்பித் தீர்க்கவில்லையா?
என்னவெல்லாம் சொன்னார் எழுத்தாளரான அந்த அக்ரகாரத்துப் பெண்மணி? பத்திரிகை ஒன்று மடத்தின் சார்பில் ஆரம்பிப்பதற்காக ஜெயேந்திரர் தன்னை மடத்துக்கு அழைத்ததாகவும், அப்படி நான் சென்ற பொழுது என் மார்பைப் பிடித்தார் சங்கராச்சாரியார் என்று சொன்னாரே! ...சே.. இப்படியும் ஒரு ஜென்மம்! இவாள்தான் அவாள் பாஷையில் ஜெகத் குரு - இதுதான் அவாள் போற்றும் ஆன்மிகத்தின் லட்சணம்!

மைதிலி என்னும் பெண்ணிடம் உடலுறவு கொண்டதை நேரில் பார்த்துத் திடுக்கிட்டேன் என்றும் - அம்மையார் அனுராதா சொன்னதற்குமேல் என்ன வேண்டும்?  ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியோடு சல்லாப மொழியில் பேசிய சங்கதிகளை யெல்லாம் அவிழ்த்துவிட வேண்டுமா?

காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்த லீலைகள் என்ன சாதாரணமானதா? சாமி கும்பிட வந்த பெண்களை மயக்கி, கோயில் கரு வறையையே கருவை உண்டாக்கும் அறையாக மாற்றவில்லையா? அந்தக் காட்சியைக் கைப்பேசியில் படம் பிடித்து அதையே திருப்பித் திருப்பிக் காட்டி அச்சுறுத்தி (Black Mail) மீண்டும் பக்தைகளை தம் காமப் பசிக்கு இரையாக்கவில்லையா?

அந்த மச்சேந்திரநாதன் கடவுள் என்னதான் பண்ணினான்? இந்த லட்சணத்தில் உள்ள ஆன்மிகத் துக்குத்தான் விட்டேனா பார் என்று வக்காலத்து வாங்கி எகிறிக் குதிக்கிறது குருமூர்த்தி கும்பல்.


-----------------------------------------------------------------------------------------------------------

என்னே ஜெயலலிதாமீதான பாசம்?



இந்த நேரத்தில் அதிகாரத்தின் உச்சியிலிருக்கும் அ.தி.மு.க.வுக்கு அந்தக் கட்சியின் தன்னிகரில்லாத் தலைவி ஜெயலலிதா வழக்கில் சிக்கியிருப்பதால் அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலும் ஒரு முடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அ.தி.மு.க. விடுபட வேண்டுமானால் கர்நாடக மாநிலத்தின் தீர்ப்பு அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைய வேண்டும். அவருக்கெதிரான வழக்கில் சாரம் இல்லை அதனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையலாம் என்றும் சில நடுநிலை ஏடு நிபுணர்கள் கருதுகிறார்களாம் எழுதுகிறார் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி ஜெயலலிதா என்றவுடன் கொண்டை ஊசி போல வளைகிறார்கள் பாரத்தீர்களா!


ஊழல் வழக்கில் சிக்கித் தண்டனை பெற்றவர் தங்கள் இனத்தவர்களாக இருந்தால்... சில நடுநிலை நிபுணர்கள் முக்காட்டில் ஒளிந்து கொள்வார்கள். திராவிட இயக்கம் ஊழல் கட்சி என்று ஒரு பக்கத்தில் குற்றஞ்சாட்டி விட்டு, ஜெயலலிதா என்று வரும்போது மட்டும் வேறு குரலில் பேசும் வேதியக்குலத்தின் பூணூல் புத்தியைக் கவனிக்க வேண்டும். ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கும் கட்சியில் திராவிட இயக்கத்தின் அடையாளம் இல்லையா? பேச நா இரண்டுடையாய் என்று ஆரியத்தை பற்றி அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
கோயில் கொள்ளை யாரால்?
தமிழக மக்கள் கோவில்களையும் தெய் வத்தையும் போற்றுபவர்கள்; இன்று ஹிந்து கோயில்கள் அரசாங்கத்தின் சொத்தாக மாறி, அரசியல்வாதிகள் கையில் சிலைகளிலிருந்து நகைகள், நிலங்கள் சிக்கிக் கொண்டு இருக் கின்றன என்று ரொம்பத்தான் விசனப்படுகிறார் ஆடிட்டர்.


ஒரு கோயிலைக்கூட சொந்த பணத்தில், சொந்த உழைப்பில் எந்தப் பார்ப்பானும் கட்டியதில்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதையாக தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்களில்  பார்ப் பனர்கள் புகுந்து கொள்ளை அடித்தனர். அதனைத் தடுக்க நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த அறநிலையத் துறை. ஆனால் இதனைத் தலைகீழாக குருமூர்த்தி அய்யர் புரட்டிப் பேசுவதைக் கவனிக்க வேண்டும்.


ரொம்ப தூரம் போக வேண்டாம். சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் கையில் இருந்த நேரத்தில் நீதி மன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை என்ன தெரியுமா?


எடுத்துக்காட்டாக 2007இல் சிதம்பரம் கோயிலுக்கு வந்த வருமானம் ரூ.37,199. செலவு ரூ.37,000. மீதி ரூ.199 என்று பேட்டா செருப்பு விலைபோல அறிக்கை கொடுத்தார்கள்.


அதே சிதம்பரம் கோயில் அரசு கைக்கு வந்தபோது நிலைமை என்ன?
அந்த இரண்டு ஆண்டுகளில் நடராஜன் கோயிலுக்குக் கிடைத்த வருமானம் ரூ.3 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 537 ரூபாய்; தங்கம் 332  கிராம் வெள்ளி 1458 கிராம் இத்தியாதி இத்தியாதி.


இப்பொழுது சொல்லுங்கள் குருமூர்த்தியாரே, கோயில் பார்ப்பான் கையில் இருந்தபோது கொள்ளை அடிக்கப் பட்டதா? அரசு கையில் இருந்தபோது கொள்ளை அடிக்கப் பட்டதா!


கோயில் சிலைகள் திருட்டில் பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்ட சங்கதியும் தெரியுமா!

---------------------------------------------------------------------------------------------------------------------------

நாத்திகம் அழிந்து ஆத்திகம் வளர்வதாகக் கூறும் குருமூர்த்திகளே! இதற்குப் பதில் என்ன?
அரசியலில் எப்படி தேச விரோத திராவிடம் மறைந்ததோ, அது போலவே சமுதாயத்தில் ஹிந்து விரோத நாத்திகம் மறைந்தது. எந்தெந்த மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று தி.க., தி.மு.க. சாடியதோ - அது  தீமிதியாக இருக்கலாம்; அல்லது அலகு குத்துவதாக இருக்கலாம் - அவை எல்லாம் முன்னை விடப் பல மடங்கு வரவேற்புடன், சமுதாயத்தில் பரவி, அவற்றில் தி.மு.க. உள்பட திராவிட கட்சியினரே பங்கேற்கிற அளவுக்குப் பிரசித்தமாயின. 50 ஆண்டுகளுக்குமுன் எந்தளவுக்குத் தெய்வ நம்பிக்கை தமிழ்நாட்டில் இருந்ததோ, அதைவிட பல மடங்கு, இப்பொழுது வளர்ந்து வந்து இருக்கின்றது. மக்களை இப்படி மாற்றியது அரசியலோ, அரசியல்வாதிகளோ அல்ல. மக்கள் தாங்களாகவே நாத்திகத்தை வெறுக்க ஆரம்பித்தனர். ஆத்திகம் தழைத்தோங்க ஆரம்பித்தது. இதனால்தான் திராவிட அரசியல் சரிந்து திராவிட இயக்கங்கள் கலகலத்துப் போயின என்று நீட்டி முழங்கி இருக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.


இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? நாட்டில் நோய்கள் ஒழிய வில்லை என்பதால் மருத்துவத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று பொருளா? மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என்று யாராவது சொல்லு வார்களா?


மூடநம்பிக்கை வெற்றி பெற்று விட்டது; பகுத்தறிவு தோற்று விட்டது என்று ஒரு பேர் வழி சந்தோஷப்படுவார் என்றால் அவரை எந்தப் பட்டியலில் வைப்பது?  மிருகத்தையும் மனிதனையும் பிரிப்பது அந்த  பகுத்தறிவுதானே? அந்தப் பகுத்தறிவைப் பழிப்பவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரி.. அவர் கூறுகிற அந்தவிவாதத்துக்கே வருவோம்; அவாளின் லோகக் குருவான சங்கராச்சாரியாரையே சாட்சிக் கூண்டில் ஏற்றுவோம்.


மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோவில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (திணீலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது

- இப்படி சொல்லியிருப்பவர் அவாளின் லோகக் குரு சாட்சாத்
சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தான். அதுவும் எங்கே சொன்னார் தெரியுமா? காஞ்சி புரத்திலேயே சொன்னார்.  எந்த நிகழ்ச்சியில் சொன்னார்? 1976 மே மாதம் நடை பெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில்தான் முழங்கினார்.


இன்னும்கூட தாராளமாக அவர் சொன்னதுண்டு.


பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது; ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவை நிறைய வர வரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதப் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங் களும் வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவுக்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன இதுவும் காஞ்சியிலே கும்பாபிஷேக நிகழ்ச்சியிலே திருவாய் மலர்ந்தருளியதுதான் (ஆதாரம்: தினமணி 7.9.1976).


இப்படிப்பட்ட பக்தி வளர்ந்ததற்குப் பெருமைப்படுகிறார் ஆடிட்டர் அய்யர் குருமூர்த்தி.. பலே! பலே!!


கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?
பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?


பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கொடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!


கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?


பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. ஆனந்த விகடனின் பேட்டியில் இந்தப் பதிலைச் சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்தவாரியார் (ஆனந்தவிகடன் 22.12.1991).


தெய்வ நம்பிக்கை பல மடங்கு பெருகி விட்டதாக அரட்டை அடிக்கும் குருமூர்த்திகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்துள்ளனர்!

   --------------------மின்சாரம்  அவர்கள் 15-11-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/91144.html#ixzz3J9C7klTp

33 comments:

தமிழ் ஓவியா said...

கடனாளியாக்கும் மதநம்பிக்கை

- மு.வி.சோமசுந்தரம்

மருள், மருட்சி, மடமை என்ற தன்மை பூண்ட மக்கும் குப்பைகளாக மனித இனம் அழிந்து போவதைக் கண்டு மனம் புழுங்கியவர் தந்தை பெரியார், பகுத்தறிவு அமுத மழை பொழியாததால் பாளம் பாளமாக வெடித்து வறண்ட நிலமாக காட்சிதரும் மனித நில பரப்பில் தமது தொண்டு கலப்பைக் கொண்டு உழுது தலை சாய்ந்த நெல்கதிர் காட்சி தரும் நிலையை ஏற்படுத்தியவர் வைக்கம் வீரவேளாளர் தந்தை பெரியார். இவரின் தொண்டின் நிழலில் சேர்ந்தோர் நிறைவாழ்வு வாழ்வதில் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நன்றி காட்டுகின்றனர். இது தமிழகத்தில் நிகழும் நிகழ்வு.
அறியாமையைத் தனது வாழ்க்கை வளத்துக்கு ஏற்ற வணிகப்பொருளாக வைத்துக்கொண்டு அறியாமை வலையில் சிக்கிய ஏனையோரை வறு மையில் வாட்டி, வாய்பூட்டிய பூச்சி களாக வைத்திருப்பவர்கள் பார்ப் பனர்கள். இவர்களின் வலையை அறுத்தெரிந்தவர்கள் தமிழகத்து தந்தை பெரியாரின் சுயமரியாதைக் காற்றை சுவாசிப்பவர்களாகத் தான் இருக்க முடியும். அந்த காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலை நம் அனுதாபத்துக்குரிய அபலைகள் அதனை விளக்கும் ஒரு செய்தி.

கட்டடக்கலைப் புகழ்பேசும் தாஜ்மகால் உள்ள நகரம் ஆக்ரா அதற்கு 100 கி.மீ.தூரத்திலுள்ள கிராமம் ஜட்டிபுரா அங்கு குழுமியிருந்தது பெருங்கூட்டம் 10000 மக்கள். அவர்களின் முகத்தில் துக்கத்தின் சாயல், அப்படி என்ன அந்த கிராம மக்களி டையான பிணைப்பு? அப்படி ஏது மில்லை. பாரம்பரிய கிராம வழக்கத்தின் காரணமாக கூடியுள்ளனர். மீருத்திய போஜ என்ற இறந்தவர்களுக்கான உணவு என்ற நிகழ்ச்சிக்காக கூட்டம் கூடியிருந்தது. இந்த கிராமத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்தார் 10000 பேருக்கு உணவு கொடுக்க வேண் டும். இந்த வழக்கத்தின் காரணமாக இந்த கிராமத்தில் பல குடும்பங்கள் கடனில் மூழ்கித்தவித்தனர். இதற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணியவருள் ஒருவர், அலிகார் சிறையின் கண்காணிப்பாளர் வீர்ஷிராஜ் சர்மா, இவர் இந்தக் கிராமத்தை சேர்ந்தவர். அந்த கிராமத்து பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு இந்த பழக்கத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று கேட்க முயன்றார். இந்த பஞ்சாயத்துக்காரர்கள் தாக்கூர் பார்ப்பனர்கள்.

இதைத்தான் கவனிக்க வேண்டிய செய்தி மக்களை ஏழ்மைப்படுத்தி கடன் தொல்லையில் தள்ளும் பழக்கத்திற்குத் தலைமை தாங்கி வருபவர் பார்ப்பனர்.

தந்தை பெரியார், பிற நாட்டினர் திங்களுக்குச் செய்தியனுப்பிக் கொண்டி ருக்க நாம் சிறந்த தந்தைக்காக பார்ப் பனனிடம் அரிசி, பருப்பு அனுப்பிக் கொண்டிருப்பது அறிவுடமையாகாது, என்றார். இந்த அறியாமை சிந்தனை வழிப்பட்டதே இந்த கிராமத்து பழக்கம்.

குல்தீப்சிங் அந்த கிராமத்து ஏழை விவசாயி. நான்கு குழந்தைகளுக்குத் தந்தை அவரின் தந்தை இறந்து விட்டார். கரும காரியமாக 20000 பேருக்கு சாப்பாடு போட வேண்டு மென்று கட்டாயப்படுத்தப் பட்டார். கிராமத்து பஞ்சாயத்து தலைவரிடம் 1.5 லட்சம் பணம் கடன் வாங்கினார். சடங்குகள் நடத்தினார். திருமணமா காத இரண்டு பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்த குல்தீப்சிங்கின் தந்தை இறந்த 13 ஆம் நாள் சடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் தந்தை பஞ்சக் என்ற சாஸ்திர கெட்ட நேரத்தில் இறந்தார் என்று பார்ப்பனர் கூறியதால் 151 பார்ப்பனர்களுக்கு துணிமணிகளை வழங்கினார்.

(Times of India 2.10.2014 இதழில் வந்தது செய்தியாகக் கூறப்பட்டுள்ளது).

Read more: http://viduthalai.in/page2/91145.html#ixzz3J9PsPWnP

தமிழ் ஓவியா said...

கடவுள் சிலையை வணங்குவோரே கருத்தில் கொள்வீர்!


கற்பூரத்தை ஒளியாக்கிக் கண்ணிரண்டில்
நீராக்கி கவலையெல்லாம் வெளிச்சொன்னால்
கேட்கக் கல்லுக்குக் காதுண்டா?
தேங்காயை உடைத்து வைத்து
தேம்பித் தெய்வமே என்றால்
தெளிவு பெறுமா? நெஞ்சம்.
மலையளவு மலர் குவித்து
சிலையருகே நின்று வணங்கினால்
நிலைத்த வாழ்வு உண்டா நவில்வீர்!
மக்களை ஆண்டவன் படைத்தான் என்றால்
மடையரை உடன் ஏன் படைத்து வைத்தான்?
மிக்க பக்தி கொண்டவர் வாழ்வார் என்றால்
மீதமுள்ள அறிஞரும் வாழ்வது ஏனோ சொல்வீர்!

- அன்புமணி, சித்தார்த்தன், சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page2/91147.html#ixzz3J9QCFOP4

தமிழ் ஓவியா said...

மோடியின் இரட்டை நாக்கும் இதயமற்ற போக்கும்

- பரமத்தி சண்முகம்
(தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர்)

நரேந்திரமோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகி விட்டார். உலக நாடுகள் எல்லாம் உலா வருகிறார். உத்தமர் போல வேடமிட்டு ஊர் சுற்றித் திரிகிறார்.

பத்தாண்டு காலத்துக்கு முன்பு இவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நடந்த குஜராத் கலவரம் பற்றி அனைவரும் அறிந்த செய்திகள் இன்று மக்களால் மறைக்கப்பட்டு விட்டன. அல்ல அல்ல மறக்கப்பட்டு விட்டன. பழுத்த ஆர்.எஸ்.எஸ்.காரரான இவர் இந்து மதத்தைப் பரப்புவதற் காகத் தன்னால் இயன்ற அனைத்தும் செய்து வருகிறார்.

இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமர் என்கிற காரணத்தால் உலக நாடுகளும் ஊடகங்களும் பெருமளவில் விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மோடி ஓர் உலகப் பெரும் வர்த்தகர் களின் செல்லப் பிள்ளை. உலக கார்ப் பரேட் நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறார்.

ஒரு பத்தாண்டு காலத்துக்கு முன்பு நரேந்திரமோடி குஜராத் கலவரத் தினைத் தூண்டி விட்டு கொழுந்து விட்டு எரிந்த கலவரத் தீயில் சிக்கி மாண்டவர்கள் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருக்கும்.குறிப்பாக இஸ் லாமிய மக்களையும், கிறித்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களையும் சித்ரவதைக்கு உள்ளாக்கி சீரழித்துச் சின்னாபின்னமாக்கிய வரலாறு கொடுமையானது.

குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத் தையே பூண்டோடு ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் இரத்தக்கறை படிந்த நெடிய வரலாறு இன்னமும் மறைக்க முடியாத களங்கமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. குருதிச் சகதியில் குதித்து விளையாடிய மோடியின் கொடூரத் தாண்டவம்பற்றி ஒரு நூலாகவே வெளி வந்துள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற கொடூர மான கலவரங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் நூலாகவே வெளி வந்துள்ளது. அதனைப் படித்து பார்த்தால் நம் இரத்தமே உறைந்து விடும் என்று கருத வேண்டி யுள்ளது. குஜராத்தில் இஸ்லாமியர்களே இல் லாமல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்ட முதல்வர் நரேந் திரமோடி நடத்திய நர வேட்டை ஒரு நூலாகவே வந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பெண்கள், குழந்தைகளுக்கெதிராக நரேந்திரமோடி நடத்தியுள்ள கொடூரச் செயல்களைப் பற்றி உயிர் தப்பிப் பிழைத்தவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் தேதி வாரியாக இட வாரியாகத் தந்துள்ள விவரங்கள் படிக்கும் போதே நமக்கு குலை நடுக்கமெடுக்கிறது.

அந்த ஆள் நரேந்திரமோடி தான் இதையெல்லாம் செய்தது எங்களுடைய வாழ்க்கையைப் பாழாக்கியது அவன் தான் என்று குஜராத் கலவரங்களை ஆராய்ந்து அறிக்கை கொடுத்த பெண்கள் குழு தெரிவித்துள்ளது மேலும் தங்கள் வாழ்க்கையை என்றைக் கும் பாழாக்கியது அவன் (நரேந்திர மோடி) தான் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இவ்வளவு கொடூர மனங்கொண்ட மனிதர் தான் இன்று இந்தியாவின் பிரதமர் நம்மையெல்லாம் ஆளுகின்ற தகுதி மிக்க? மனிதர்.

உலகக் கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளை, வர்த்தக உலகம் வளர்த்து எடுத்து வரும் வளர்ப்புப் பிள்ளை நரோடாபாட்டியாவிலும், குல்பர்க் சொசைட்டியிலும் நடைபெற்ற கொடூரங்கள் நினைத்தாலே குலை நடுங்கச் செய்யும் நிகழ்வுகளாகும். எடுத்துக்காட்டுக்கு ஒரே ஒரு சம்பவம்:

நரோதாபாட்டியா, அகமதாபாத், பிப்ரவரி 28, 2002.

கங்கோத்ரி குடியிருப்பிலிருந்து எங்களை வெளியேற்றிய பிறகு எரியும் டயர்களோடு ஒரு கும்பல் எங்களைத் துரத்த ஆரம்பித்தது. அப்போது தான் பல சிறுமிகளை அவர்கள் கற்பழிப்புச் செய்தார்கள். நாங்கள் 8-_10 சம்பவங் களை, 16 வயது மெஹ ருன்னிசாவின் ஆடை களை உரித்ததை நாங்கள் பார்த்தோம். தங்களின் ஆடைகளை அவிழ்த்து விட்டு அவர்கள் பெண் களை நோக்கி அழைத் தார்கள். அதன் பிறகு ஆங்காங்கே தெருவி லேயே அவர்கள் பெண் களைக் கற்பழிப்பு செய் தார்கள். ஒரு சிறுமியுடைய பெண் உறுப்பு வெட்டிப் பிளக்கப்பட் டிருந்ததைக் கண்டோம். பிறகு எல்லோரையும் எரித்து விட்டார்கள் எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்கவில்லை. கூறியவர் குல்கம்பீவி, ஷா ஆலம், முகாம் மார்ச் 28,2002.

குட்டுசாரா ஃபர்சனாவை வன் புணர்ச்சி செய்ததை நான் பார்த்தேன். ஃபர்சனாவுக்கு 13 வயதிருக்கும் அவள் ஹீஸ்ஸிங் நகரில் வசித்து வந்தவள் ஃபர்சனாவின் வயிற்றுக்குள் ஒரு இரும்புக் கம்பியை திணித்தார்கள். பிறகு அவளை எரித்து விட்டார்கள். 12 வயது நூர்ஜஹானும் உடன் கற்பழிப்புச் செய்யப்பட்டார். கற்பழித்தவர்கள் குட்டு, சுரேஷ், நரேஷ் - சாரா, ஹரியா.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்க்கும் பவானிசிங் அய்ந்து ஆண்களையும் ஒரு சிறுவனையும் கொலை செய்வதையும்கூட நான் பார்த்தேன். கூறியவர் 13 வயது அசாருதீன்
கங்கோத்ரி குடியிருப்பு மாடிமீது ஒளிந்திருக்கும்போது இவற்றையெல் லாம் பார்த்திருக்கிறேன்.

சாரா நகரிலிருந்தும், குபேர் நகரி லிருந்தும், வந்த கும்பல் மாலை 6 மணி யளவில் கண்ணில் கண்ட ஆட்களை யெல்லாம் பிடித்து எரிக்க ஆரம்பித் தார்கள். எங்கள் பகுதியைச் சார்ந்த எல்லாப் பெண்களையும் என் இருபத் திரண்டு வயது மகள் உட்பட எல் லாரையும் நிர்வாணப்படுத்திக் கற்பழித் தனர். என் பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. என் மனைவி வயது 40, எனது மகன்கள் 18,14,7 வயதுள்ளவர்கள். என் மகள்கள் 22,4,2 வயது நிரம்பியவர்கள். உட்பட அனை வருமே கொலை செய்யப்பட்டனர்.

இத்தனை கொடூரச் செயல்களும் குஜராத்தில் நடைபெற்றன. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது நடந்ததுதான் இவை நடக்கும் போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திரமோடி தான் முதல்வராக இருந்தார்.

இன்னும் சொல்லப் போனால் நரேந்திரமோடியின் ஆசியோடுதான் இந்த கொடூரங்கள் நடைபெற்றன. இஸ்லாமியர்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டமிட்டே நடந்தது. ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் நடத்திய நர வேட்டை நரேந்திரமோடியும் அவரது நண்பர் அமித்ஷா ஆகியோரின், அதாவது ஆளும் கட்சியும் அரசாங்கமுமே இணைந்து நடத்திய அராஜகச் செயல்களாகும்.

ஆனால் கெட்ட வாய்ப்பு, ஜனநா யகத்தின் மற்றொரு பக்கமான செயல் பாடுகள் இஸ்லாமியர்களை வேரும் வேரடி மண்ணும் இல்லாமலே செய்து விட நடத்திய கொடூரச் செயல்கள் எல் லாம் மறக்கப்பட்டோ அல்லது மறைக் கப்பட்டோ மோடியை உத்தமன் போலாக்கியுள்ளது.

குஜராத்தின் ஆட்சியும், நரேந்திர மோடியின் கையில் நடைபெற்ற அத்தனை அட்டூழியங்களும் மோடியின் அனுமதியோடு தான், அவர் தான் குஜராத்தின் முதலமைச்சர், யார் எந்த ஆயுதத்தை வேண்டுமானாலும் கையிலெடுத்துக் கொள்ளலாம். அது இஸ்லாமியர்களை ஒழிப்பதாக அமைய வேண்டும் என்ற உறுதி மொழியோடு மோடியின் கொடுங்கோலாட்சி நடைபெற்றது.

இன்று பேசுகிறார் இஸ்லாமியர் கள்பற்றி இந்திய நலனில் இஸ்லாமி யர்கள் பங்கு பற்றியும் அவர்கள் கொண்டுள்ள நாட்டுப் பற்று பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளார். இரட்டை நாக்கும், பல நோக்கமும் கொண்ட மனிதர்தான் நரேந்திரமோடி.

Read more: http://viduthalai.in/page3/91149.html#ixzz3J9QOWRXA

தமிழ் ஓவியா said...

தீபாவளி பின்புலம்

விடுதலை (17.10.2014 பக்.1 திருச்சி பதிப்பு)

நாளிதழில் இன்றைய ஆன்மிகம்? என்னும் பெட்டிச் செய்தியில் ஏனிந்த குழப்பம் -_ என்பது குறித்த தகவலைப் படித்தேன்.

அதில்,தீபாவளிக்கான காரணம் இடத்திற்கு இடம் வேறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் இந்துத்துவாவின் சூழ்ச்சியேயாகும்.

பாவாபுரி அரசனுடைய அரண்மனையில், மகாவீரர் ஒரு நாள் தங்கி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார். விடியற் காலையில், அரண்மனையிலேயே அவர் உயிர் துறந்தார். சமண சமயத்துறவிகள் மரணமடைவதை அச்சமயம் வீடு பேறு அடைவதாகக் கூறுகிறது. இனி பிறவியில்லை என்பதன் பொருளே வீடு பேறு என்பதாகும்.

மகாவீரரின் இறுதி ஊர்வலத்தின்போது, வீடுதோறும் விளக்குகளை வரிசையாக வைக்குமாறு அரசர் மக்களைக் கேட்டுக் கொண்டார். இதை மகாவீரரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் பின்பற்றுவதை மக்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கலாயினர். விளக்கு = தீபம், வரிசை = ஆவளி என்பது தீபாவளி சொல்லுக்கான இலக்கணமாகும் தமிழர்களிடம் மகாமுனி என்னும் பெயர் சூட்டப்படுவது மகாவீரரைக் குறிப்பதாகும். என் மருமகளின் சொந்த பாட்டியின் பெயர் ஆவளி என்பதும் உணரத்தக்கதாகும்.

(ஆதாரம்: சமணமும் தமிழும் (முதற்பகுதி) பக்.80
ஆசிரியர் திருமயிலை சீனி. வேங்கடசாமி

சமண சமயம் இந்துக்களின் வன்முறையால் வீழ்ச்சியடைந்த பிறகு, அச்சமயத்தினர் உயிர் பிழைக்க இந்துக்களாயினர். என்றாலும் தாங்கள் கொண் டாடி வந்த தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாடுவதைப் பின்பற்றலாயினர். இதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இந்துக்கள் இதன் உண்மைக் காரணத்தை மறைத்து புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைகள்தான் இடத்திற்கு இடம் வேறுபடுவதற்குக் காரணமாகும்.

இதிலும், ஓர் உள்குத்து என்னவெனில், சமணர்கள் கொண்டாடும் உண்மை தீபாவளிக்கு முதல் நாள்தான் இடத்திற்கு இடம் கட்டுக் கதைக் கட்டிக் கொண்டாடும் இந்துக்களின் தீபாவளியாகும்.

- சி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page3/91150.html#ixzz3J9QerLF1

தமிழ் ஓவியா said...

தேவன் சொல்வதெல்லாம் சரியா?

- மா.பால்ராசேந்திரம்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்பார் திருவள்ளுவர்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்பார் அறிவாசான் தந்தை பெரியார்.

எல்லார்க்கும் பகுத்தறியும் ஆற்றல் உண்டு. அதில் அய்யத்திற்கிடமில்லை. மதத்தைத் தழுவிடும் மாந்தரோ பகுத்தறிவதே தவறான நிலைப்பாடென எண்ணுகின்றனர். மதக்கட்டில் கிறித்தவராய் உருமாறிய தமிழரோ, சுயசிந்தனையே தேவையற்ற ஒன்றென மதிமயங்கி, மனநிலை பாதித்தவர் போல் வாழும் சூழலை நாம் காண முடிகிறது. மழலையரையும், கதை கொண்ட துண்டறிக்கைகள் மூலம் மூளைச் சிதைவுக்குக் கொண்டு செல்கின்றனர்.

அவ்வாறு கிடைத்த சிறுவெளியீடு பற்றியதோர் கருத்துப் பரிமாற்றமே இக்கட்டுரை.

நீ! தேவனைப் பார்க்க முடியாது. ஆனால், அவரைப்பற்றி அநேக காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம். நீ ஜெபிக்கும் போது தேவனோடு பேசமுடியும். தேவன் என ஆண்பால் பெயர்ச் சொல்லாய்க் கூறிவிட்டுப்பின் பார்க்க முடியாதவரிடம் எப்படி அநேக காரியங்களைக் கற்றுக் கொள்ள முடியும்? கற்றுத் தருபவராய் ஒருவரிருந்தால் தானே அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள முடியும். ஜெபிக்கும் போது அவரோடு பேச முடியுமென்றால், விவிலியம் கூறுவது போல, மிதியன் மக்களைத் தாக்குமாறு மோசசுக்குக் கட்டளையிட்டதால் தானே சிறு குழந்தைகளான ஆணி னமே கொல்லப்பட்டது? அவர்க ளெல்லாம் உயிர்ப்பலிக்கு அஞ்சி தேவனே! எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தேவனோடு பேசியிருப்பார்களே! அவரேன் இரக்கப்படவில்லை? கேட் கும் செவியுடையவர் தானே தேவன். அப்படிப்பட்டவர் எப்பொழுதும் தன்னைக் காட்டிக் கொண்டே, உலக மக்களோடு உரையாடிக்கொண்டே, ஜீவித்திருக்கலாமே! தேடுகிற ஜீவனாய், ஏமாற்றுவோர்க்குத் துணையாளாய் இருந்திடலாமா? ஏழாம் நாளில் தேவன் ஒய்வெடுத்தார். ஏழாம் நாள் சனியா? ஞாயிறா? குழப்பத்தில் கும்மாளமிடுகின்றனரே! உருவமில் லாதவருக்கு எந்த உறுப்புச் சோர் வடையும்? உறுப்புகளில் நோவிருந்தா லொழியக் களைப்புக்கு வழியில்லையே! ஓய்வு எடுப்பவரெனில் எங்கே சோர்வைக் குறைத்துக் கொண்டி ருக்கிறார்? சொல்லலாமா?.

மக்கள் அனைவரும் பாவம் செய் தார்கள், பாவம் என்றால் என்ன? அதனை உருவாக்கியவர் யார்? பாவ மென்பதே உலகில் இல்லாதிருந்தால் மக்கள் அதனைச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லையே! நஞ்சு உலகில் இல்லையாயின் உண்பதும் இருந்தி ருக்காதே! தவறான கற்பித்தலால் தானே மாணவரும் தவறிழைக்கும் நிலைக் காளாவர். தேவன், படைத்த முதல் மனிதன் பாவியானதால் அவரின் பின் சந்ததியினரும் பாவிகளாகவே பிறந் தனர். இஃது என்ன நியாயம்? குப் பையில் குன்றிமணியும், சேற்றிலே செந்தாமரையும், அழுக்கான சிப்பிக்குள் முத்தும். கரிக்கட்டையில் வைரமும் அழகுடன் பிறப்பதில்லையா? பாவிகள் நரகத்தீயில் உழல்வர். நரகத்தீ என்னும் நம்பிக்கை இலண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பினால் ஒழிந்தது தெரியுமா? என்றார் அன்றே ரசல். இன்று ஏன் பாவம், நரகம் மூடப்பிதற்றல்?

தமிழ் ஓவியா said...

தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுப்பதின் மூலமாகத் தேவனுக்குக் கீழ்ப்படிந்தது, அவருக்குப் பிரியமானபடி வாழப்போவதாக வெளிப்படுத் தினார்கள்.

நாளும் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் தவளை இன்றளவும் ஞானம் பெற்றுப் பேராசிரியராக ஆகிவிடவில்லையே! அதுவும் தேவனின் படைப்புத்தானே! நுணலும் தன் வாயால் கெடும் என்கின்ற அறிவிலிப்பட்டத்தை யல்லவா உலகோரால் பெற்றுள்ளது. நீரில் மூழ்கினாலே ஞானம் கிடைக்கு மென்றால், கல்வித்துறை, கல்விக்கூடம், கற்பிப்போர் ஏன்? எதற்கு? குளம், குட்டை, ஏரிகளில் நீரைப்பெருக்கிக் குறைந்த செலவில் நிறைவான அறி வினை நாடே பெறலாமே!

எவ்வளவுக்கெவ்வளவு மத உணர்ச்சி அதிதீவிரமாகவும், மதத்தில் மக்களின் பிடிவாதமான நம்பிக்கை அதிகமாகவும் இருந்ததோ, அவ்வளவுக் கவ்வளவு உலகில் கொடுமையும், அக்கிரமமும் நிறைந்திருந்தன என்பது மறக்க முடியாத சிறந்த உண்மை என்பது பெட்ரண்ட்ரஸலின் மதம் பற்றிய கருதுகோளாகும்.

தமிழ் ஓவியா said...

மதத்தால், நிரபராதிகளான லட் சக்கணக்கான பெண்கள் துஷ்ட தேவதைகள் என்று தீயிட்டுக் கொளுத் தப்பட்டனர். கிரந்திப் புண்ணுடை யோனுக்கு, அந்நோயுடனே குழந்தை பிறந்தால், அந்நோயைப் போக்கிக் கொள்ளக் கூடாதென்பது தான் கிறித்தவ மதம், தந்தை பெரியாரும், மதம், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. சையின்சுக்கும், மதத்துக்கும் சம்பந்தம் பார்க்கக் கூடாது. பகுத்தறிவு வேறு, மதம் வேறு, ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்பது போன்று எல்லா மதக்காரர்களும் சொல்லி விடுவதால், உலகில் எந்தமூடனும் எதையும் சொல்லித் தப்பிக்கலாம் என்ற தைரியத்தின் மீதே மதத்தின் ஆபா சங்கள் உலகில் நிலைத்து வருகிறது என்பார்கள். அதுதானே நிலைத்த உண்மை. கிறித்துவப் போதகர்களும் பொய்யுரைகளைத் தானே இளம் பிஞ்சுகளின் மனதில் திணிக்கின்றனர்.

அவரும் (தேவன் - இயேசு) தீமையான காரியங்களைச் செய்யுமாறு சோதிக் கப்பட்டார்,

கர்த்தரே இயேசு என்கின்றனர். தீமையைச் செய்ய வைத்தவன் சாத் தானாம். சாத்தான், எவ்வளவு வலிமை யுடையவனாகிறான்! அவ்வாறாயின் இயேசுவையே பணியவைத்த சாத்தானை எதிர்த்துச் சாமானிய மனிதன் செய்கின்ற எந்தத் தில்லாலங்கடி ஜெபமும் வேலைக்காகாதுதானே! அதனால்தான் வெள்ளாடுகளைப் பார்த்துப் பாவ ஜென்மங்களே! மீளா நரகத்தீயில் கிடந்து வேதனைப்படுங்கள் என் றாரோ? பன்றியின் உடலில் பிசாசை நுழைத்து மலையுச்சியிலிருந்து, சமுத்திரத்தில் விழச்செய்தாரோ? பருவ மற்ற காலத்தில் கனியாத அத்திப் பழத்தால் மரத்திற்குச் சாபமிட்டு ஒருவரும் சாப்பிடாது போகட்டும் என்றாரோ? இதுவெல்லாம் அறிவு டையோர் செயலா? சிந்தித்ததைச் சிந்தித்தபடிச் சிந்தாமல் சமுதாயத்திற்கு விருந்தாக்குபவனே மாமேதை என்பார் ரூசோ.

போப் கரோல்ஓஜ்டைலர் ஜான்பால் மிமி என்பவரே 450 ஆண்டுகளுக்குப் பின் கோபர்நிக்கஸ், கலிலியோ, டார்வினின் வானியல் இயக்க, பரிணாம மாற்றத்தை ஒத்துக்கொண்டு திருச்சபை வழங்கிய கடந்தகாலத் தண்டனைகளுக்கு மன் னிப்புக்கோரிய பின்னரும் பழைய பல்ல வியையே இன்றும் அச்சேற்றி இளைய தலைமுறைகளைக் கெடுக்கலாமா?

தமக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தன் நாட்குறிப்பேட்டில் எழுதித் தானே சமூகப்பணியாற்றி இன்றும் புகழோடு விளங்குகிறார் அன்னை தெரசா.

மதம் முன்னேற்றத்தின் முட்டுக் கட்டை என்றார் பெரியார். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார் வள்ளலார். பயமென்ற அஸ்திவாரத் தின் மீது கட்டப்பட்டதே மதம் என்கிறார் ரசல். மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி தோழி? முன்பு வெம்மை கொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா! என்னும் புரட்சிக் கவிஞரின் எண்ணப்படியும் மக்கள் சீரான வாழ்வை இன்னமும் எய்திடவில்லையே!

மதம், பிரிவினையையே உருவாக்கி வருகிறது இன்றளவும், மதம் பிடிக்காத மக்களாய் வாழ்வதே நல்வாழ்வாகும். பயம் வந்த வேளை பக்குவமாய் விடுதலை ஏட்டைப் புரட்டுங்கள் ஒழிந்திடும் பயமும் அதனிணைப் பக்தியும். அடுத்த நொடி புத்தியுள்ள மனிதராய் மாறிடுவீர்! உண்மை இது.

Read more: http://viduthalai.in/page4/91151.html#ixzz3J9QvZnZM

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாள் பாமாலை

தரணி போற்றும் தந்தை பெரியார்
தமிழினக் காவலர் பெரியார்
வெண்தாடி வேந்தர் பெரியார்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
ஈரோட்டுச் சிங்கம் பெரியார்
சுய சிந்தனையாளர் பெரியார்
சுயமரியாதையே சுக வாழ்வு என்ற பெரியார்
வகுப்புரிமையை வகுத்த பெரியார்
பொதுவுடைமையை புகுத்திய பெரியார்
பெண்ணுரிமைப் போராளி பெரியார்
சாதி, மதம் சாய்த்த பெரியார்
கடவுளை எதிர்த்த பெரியார்
பார்ப்பனீயத்தைத் தோலுரித்த பெரியார்
சங்கராச்சாரிகளின் ஆணவத்தை அடக்கிய பெரியார்
மனிதனை மனிதனாக்கிய பெரியார்
தொழிலாளர் தோழர் பெரியார்
வைக்கம் வீரர் பெரியார்
தாழ்த்தப்பட்டோர் உரிமைக் காவலர் பெரியார்
குழந்தை திருமணத்தை குழி தோண்டிப் புதைத்த பெரியார்
வருணாசிரம சூழ்ச்சியை வாட்டிய பெரியார்
தேவதாசி முறையை ஒழித்த பெரியார்
சதியை சட்டத்தின் மூலம் முறியடித்த பெரியார்
ஆண், பெண் சமத்துவம் சமைத்த பெரியார்
ஆணாதிக்க ஆணவத்தை அழித்த பெரியார்
தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார்
இந்திய சட்டத்தை முதன் முதலில் திருத்திய பெரியார்
தமிழ்மொழிக் காவலர் பெரியார்
எழுத்துச் சீர்த்திருத்தச் செம்மல் பெரியார்
திருக்குறள் வாழ்வியல் என்ற பெரியார்
வடலூர் வள்ளலாரை ஆதரித்த பெரியார்
புத்தரின் போதனையைப் போதித்த பெரியார்
பார்ப்பனரின் சூழ்ச்சியை அம்பலப் படுத்திய பெரியார்
கல்வியின் அவசியம் கருதி கல்விச் சோலையமைத்த பெரியார்
குலக்கல்வித் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்த பெரியார்
குருகுலப் போர் புரிந்த படைத்தளபதி பெரியார்
முதலில் குடும்பக் கட்டுப்பாட்டை முன்மொழிந்த பெரியார்
அம்பேத்காரின் அருமை நண்பர் பெரியார்
மானமும் அறிவும் மனிதனுக்கழகு என்ற பெரியார்
கருப்புச் சட்டைக் காவலர் பெரியார்
புராண ஆபாசங்களைப் புரட்டிப் போட்ட பெரியார்
சமுதாய இயக்கம் கண்ட பெரியார்
வேதத்தை வேரோடு சாய்த்த பெரியார்
இந்துமத இழிவை எடுத்துரைத்த பெரியார்
உண்மை வரலாற்றை உணர்த்திய பெரியார்
திராவிடர் நாகரிகம் விளக்கிய பெரியார்
ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார்
மத வெறியை மாய்த்த பெரியார்
தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்
தூய தாடி மார்பில் விழுந்த பெரியார்
உலகு போற்றும் உத்தமர் பெரியார்
சாதிமறுப்புத் திருமணம் சாதித்த பெரியார்
விதவை மறுமணத்திற்கு வித்திட்ட பெரியார்
மணவிலக்குப் பெற்றோரின் மறு வாழ்வுக்காக போராடிய பெரியார்
வரதட்சணை வன்கொடுமை எதிர்த்த பெரியார்
சமூக சிந்தனைக் காவலர் பெரியார்
கடவுளை மற மனிதனை நினை என்ற பெரியார்
சமத்துவ சமுதாயம் காண விரும்பிய பெரியார்
சித்திர புத்திரன் புனைப் பெயரில் சிந்திக்க வைத்த பெரியார்
சுயமரியாதைத் திருமணத்தைத் தூண்டிய பெரியார்
புரோகித திருமணத்தைப் பூண்டோடு ஒழிக்க நினைத்த பெரியார்.
பண்பாட்டு படையெடுப்புகளை பாடையில் ஏற்றிய பெரியார்
இனத்தின் மீட்புக்கான இரட்சகர் பெரியார்
தலைவிதித் தத்துவத்தைத் தகர்த் தெறிந்த பெரியார்
சொர்க்க, நரக பித்தலாட்டங்களை மாய்த்த பெரியார்
பாவ, புண்ணியப் பசப்புகளை வெளிப்படுத்திய பெரியார்.
பழைய பஞ்சாங்கம் பார்ப்பன பித்தலாட்டம் என்ற பெரியார்
சகுனத்தை சாட்டையால் அடித்த பெரியார்
நல்ல நேரம், கெட்ட நேரம் நெருப்பி லிட்ட பெரியார்
திதி, திவசமெல்லாம் திருடன்கள் திட்டம் என்ற பெரியார்
கிரகப்பிரவேசம் எல்லாம் பார்ப்பன மோசம் என்ற பெரியார்
சாணிப் பிள்ளையாரைச் சாடிய பெரியார்
பகுத்தறிவு பாதையினை வகுத்த பெரியார்
பகுத்தறிவு சுடர் ஏந்தி நின்ற பெரியார்
பகுத்தறிவு தீ பரவட்டும் என்ற பெரியார்
தமிழ்நாடு தமிழருக்கே என்ற பெரியார்
ஏன், எதற்கு, எப்படி என கேள்வி எழுப்பிய பெரியார்
பேய், பில்லி, சூன்யம் பித்தலாட் டத்தை புரட்டியெடுத்த பெரியார்
பெண் ஏன் அடிமையானாள் என வினவிய பெரியார்
பெண்களுக்கு சொத்துரிமையைப் பெற்றுத்தந்த பெரியார்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்ட பெரியார்
இனி வரும் உலகம் பற்றி இயம்பிய பெரியார்.
தமிழா! இனவுணர்வு கொள் என்ற பெரியார்
கோயில் நுழைவு உரிமை அறப்போர் அறிவித்த பெரியார்
இந்தி என்ற மந்தியை விரட்டிய பெரியார்

தமிழ் ஓவியா said...

பச்சை தமிழர் காமராசரை ஆதரித்த பெரியார்
உற்ற நண்பர் இராசாசியை உருக் குலைத்த பெரியார்
எளிமையின் எடுத்துக்காட்டு பெரியார்
அஞ்சா நெஞ்சன் தந்தை பெரியார்
பெண்களால் பெரியார் பட்டம் பெற்ற பெரியார்
சொல், எண்ணம் செயல்படுத்திய பெரியார்
கடவுள் இல்லவே இல்லை என்ற பெரியார்
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற பெரியார்
கடவுளைப் பரப்பியவன் அயோக் கியன் என்ற பெரியார்
கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்ற பெரியார்
ஆரிய மாயையை அம்பலப்படுத்திய பெரியார்
தீண்டாமையைத் தீயிட்டுப் பொசுக் கிய பெரியார்
தாலி தான் பெண்களுக்கு வேலியா? என்ற பெரியார்
மனுதர்ம சாஸ்திரத்தை அணு அணு வாகப் பிளந்த பெரியார்
கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் என்ற பெரியார்
சாமியார்களின் சல்லாப உல்லாசத்தைச் சாடிய பெரியார்
பேதம் கற்பிக்கும் பிராமணாள் கபே ஒழித்த பெரியார்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக் கலம் தந்த பெரியார்
கைவிடப்பட்ட மூத்தோர்களுக்கு முகவரியான பெரியார்
சாதனைகள் பல பல படைத்திட்ட பெரியார்
சரித்திரம் பல கண்ட நாயகன் பெரியார்
தள்ளாத வயதிலும் தொண்டு செய்த பெரியார்
தடம் புரண்ட கொள்கைகளை தடி கொண்டு விரட்டிய பெரியார்
தான் கொண்ட கொள்கை சரியே என பறைசாற்றிய பெரியார்
அழுக்குருண்டை பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார்
பார்ப்பன ராமனைச் செருப்பாலடித்த பெரியார்
மூடநம்பிக்கையின் முடைநாற்றம் போக்கிய பெரியார்
அறிவிலிகள் கூறிய ஆபாச புராணத்தை கிளறிய பெரியார்
நெஞ்சுரம் கொண்ட நேர்மையாளர் பெரியார்
தன் பட்டறிவால் மக்களைப் பண் படுத்திய பெரியார்
புரையோடிய அநாகரிகத்தை புதைத்த பெரியார்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு ஊக்கம் தந்த பெரியார்
கேள்விக் கணைகளுக்கு அய்யம் நீங்க பதில் தந்த பெரியார்
மாற்றுக் கருத்தாரும் மதிக்கத் தகுந்த பெரியார்
எதிரிகளும் ஏற்கும் வண்ணம் தெளிவுபடுத்திய பெரியார்
அயராது உழைத்து அரும்பாடுபட்ட பெரியார்
பூணூலார் புரட்டை பூண்டோடு ஒழிக்க பாடுபட்ட பெரியார்
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார்
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற பெரியார்
சமூக நீதி சமத்துவம் காண களம் கண்ட பெரியார்
சாதி ஒழிப்புச் சட்டஎரிப்புப் போர்ப் படைத்தளபதி பெரியார்
தை முதல் நாள்தான் தமிழர் புத் தாண்டு என்ற பெரியார்
பார்ப்பனியத்தை சமஸ்கிருதத்தை சம்காரம் செய்த பெரியார்
அன்னை மணியம்மையாரின் மணி மகுடம் பெரியார்
நாகம்மை, கண்ணம்மாள் நானிலம் அறியச் செய்த பெரியார்
வெங்கட்டப்பரும், சின்னத்தாயம் மையும் விதைத்த வித்து பெரியார்
வள்ளுவன் வகுத்த 133 அதிகாரம் போல் வாழ்ந்த பெரியார்
சமத்துவபுரம் சாதனைக்கலைஞர் கருணாநிதி கண்ட பெரியார்
பாவேந்தர், அறிஞர் அண்ணாவின் ஆசான் பெரியார்
ஆல மர விழுதுகளில் வீரமணியைக் கண்ட பெரியார்

- ப. முனுசாமி, நகரத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், ஓசூர்

Read more: http://viduthalai.in/page5/91153.html#ixzz3J9RAkZGr

தமிழ் ஓவியா said...

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்கள்?

இணையமைச்சர் கிரிராஜ் கிஷோர் சிங்குக்கும் 500க்கும் மேற்பட்ட தலித்துகளை கூட்டமாக வெட்டிக் கொலை செய்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு.

பிகார் மனித உரிமைகள் கழகத்தின் அதிர்ச்சி அறிக்கை பிரதமர் மோடியின் அமைச்சரவை யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங் என்ற பிகார் மக்களவை உறுப்பினர் யார் தெரியுமா? பிஜ்பூர் மாவட்டத்தில் லக்மிபூர் என்ற தலித்துகள் வாழும் கிராமத்தை தாக்கி 60க்கும் மேற்பட்டோர் ரன்வீர் சேனா என்ற நில உடமையாளர் கைக்கூலி அமைப்பால் வெட்டிக்கொலை செய்யப் பட்டனர் அல்லவா! அந்தக் கொலை காரக் கும்பலான ரன்வீர் சேனாவிற்கும் கிரிராஜ் சிங்கிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிகார் மனித உரிமைக்கழக ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிகார் மனித உரிமைக்கழக ஆணை யர் எஸ்.பி அமிதாப் தாஷ் மாநில தலைமைக் காவல்துறை ஆணையருக்கு பிகாரில் மனித உரிமைமீறிய செயலில் ஈடுபட்ட ஒரு அமைப்பிற்கு நெருங்கிய தொடர்புள்ள கிரிராஜ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் அதில் எழுதியுள்ள தாவது: ரன்வீர் சேனா அமைப்பு பயங் கரவாத செயல்களில் ஈடுபட்ட ஒன் றாகும், இவ்வமைப்பு நில உடமை யாளர்களின் கூலிப்படை போன்று செயல்பட்டு பிகார் ஜார்கண்ட் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட தாழ்த் தப்பட்ட ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது. இதில் ஜஹனாபாத்தில் உள்ள லக்ஷிமிபூர் என்ற தலித்துகள் கிராமத்தை 1997-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு அன்று 500க்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா வினர் சூழ்ந்தனர். தூங்கிக்கொண்டு இருந்த அனைவரையும் வெட்ட வெளியில் நிற்கவைத்து கத்தியால் வெட்டியும், ஈட்டிகொண்டு குத்தியும் கொலை செய்தனர். இதில் 16 குழந்தைகள் 27 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் கொலை செய்யப்பட்டனர். கொலைசெய்யப்பட்ட பெண்களில் 8 பேர் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர். இவ்வளவு படுபாதகச் செயலைச் செய்த ரன்வீர் சேனா இதற்குக் கார ணம் கூறும்போது இவர்கள் நக்சலைட் டுகளாக வளருவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நக்சலைட்டுகளை பெற்று வளர்ப்பார்கள் ஆகையால் அவர்களைக் கொலை செய்தோம் என்று அறிக்கை விடுத்திருந்தனர்."We kill children because they will grow up to become Naxalites. We kill women because they will give birth to Naxalites." மனிதத்தன்மையற்ற இச்செயலைச்செய்த கிரிராஜ் சிங்கிற்கும் இந்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. ரன்வீர் சேனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கிரிராஜ் சிங் பங்கெடுத்துள்ளார்.

மேலும் இந்திய உளவு நிறுவனமான இண்டலிஜெண்ட் பீரோவிடமும் கிரிராஜ் சிங்கிற்கும் தேசவிரோத நடவடிக்கை பெயரில் தடைசெய்யப்பட்ட ரன்வீர் சேனாவிற்கு முள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன. மேலும் ரன்வீர் சேனா தலைவர் பரமேஷ்வர் சிங்கிற்கான இறுதி இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்வீர் சேனாவிற்கு ஆதரவான பேச்சுக்களைப் பேசினார். இந்த நிலையில் அவர் மத்திய அமைச்சர் ஆனவிவகாரம் ரன்வீர் சேனாவின் நட வடிக்கைகளை மேலும் ஊக்கப்படுத் துவதாகும். ஆகவே இவர் மீது காலதாமதம் செய்யாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக்கடித்ததில் கூறியிருந்தார்.

கிரிராஜ் சிங் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பிரதமர் ஆனால் முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தான் சென்றுவிடவேண்டும் என்று பேசி பிரபலமானவர். கடந்த ஜூலை மாதம் இவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.4 கோடி கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சேனையால் படுகொலை செய்யப்பட்டோர்:

1996 - 42 பேர்
1997 - 101 பேர்
1999 - 85 பேர்
2000 - 46 பேர்
2003 - 13 பேர்
2004 - 8 பேர்

Read more: http://viduthalai.in/page8/91155.html#ixzz3J9Raozld

தமிழ் ஓவியா said...

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டாம்!

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவித் திருப்பதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நவம்பர் 20ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவிப்பதோடு, சில பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்திருந்த மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு - மறுக்கப்படுவதோடு அவர்கள் விரும்பினால், ஜெர்மன் மொழியையோ அல்லது ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரின் - சீனமொழியையே (4ஆவது மொழியாக) படித்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு கூற்று வேடிக்கை யானது.

ஏற்கெனவே ஜெர்மன் அரசோடு மத்தியக் கல்வித் துறையின் சார்பில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது கூட ஏற்கத்தக்கது அல்ல என்று மத்தியக் கல்வி அமைச்சர் கூறியுள்ளதோடு, மற்றொரு உறுதி செய்யப்படாத தகவலும்கூட செய்தியாக வந்துள்ளது.

அதன்படி இந்த ஜெர்மன் அரசோடு ஜெர்மன் மொழி சம்பந்தமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கான கமிஷனர் அவினாஷ் தீட்சித் என்பவரை விடுமுறையில் செல்லுமாறு பணித்துள்ளார்கள் என்றும்கூட கூறப்படுகிறது.

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5,6 மாதங்களில் சமஸ்கிருத மொழிக்கே முன்னுரிமை தந்து அதனை எப்படியும் சிம்மாசனத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடாப் பிடியாக உள்ளது.

சமஸ்கிருத வாரம்

அதனால்தான் சமஸ்கிருத வாரம் என்று கொண்டாட வேண்டும் என்று கூறிய திணிப்பு முயற்சியை, தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து நின்றதால், கூடாரத்துக்குள் நுழைந்து தலையை நீட்டி, பிறகு முழுவதும் உள்ளே வந்து, கூடார உரிமையாளனைத் துரத்திய கதைபோல முயற்சிகள் அவ்வப்போது தொடர் முயற்சியாக நடைபெற்று வருகிறது!
1938இல் ஆச்சாரியார்கூட, முதலில் ஹிந்தி கட்டாயம் என்று துவங்கி, சமஸ்கிருதம் என்றால் ஆரிய ஆதிக்கம் என்பது பளிச் சென்று தமிழ் நாட்டு மக்களுக்குப் புரியும் என்று கருதியே ஹிந்தி மூலம் - முதற்படியாக அதனைச் செய்யும் நிலை இருந்தது. இப்போது நேரடியாகவே இதனை வாய்ப்பு நேரும் போதெல்லாம், புற்றுக்குள்ளிருந்து பாம்பு தலை நீட்டுவதும், எதிர்ப்புக் குரல் - என்ற தடியைக் கண்டதும், தலையைப் பின் வாங்கிக் கொள்வதுமான ஆதிக்கப் போரில் ஈடுபட்டுள்ளனர்!

இது ஒரு வெறும் மொழிப் படிப்புப் பிரச்சினை அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு முக்கிய கட்டம்; ஆரியக் கலாச்சாரத் திணிப்பிற்கு அப்பட்டமான முகவுரை நுழைவு வாயில்.
இப்படி கல்வியில் மத்திய ஆட்சி அடிக்கடி பல்வேறு சமஸ்கிருத சித்து வேலைகளில் ஈடுபடுவதை மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கைகட்டி, வாய் பொத்தி இருக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டு வருதலேயாகும்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் உரிமையைக் காப்பாற்ற அறவழியில் போராடுவது அவசரம் - அவசியம்!

இதற்காக திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 20ஆம் தேதி காலை மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இணைச் செயலாளர்கள் இளந்திரையன், அஜீத்தன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
15-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91158.html#ixzz3JC03aftl

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி

விரதம் இருப்பவர்கள் மட்டுமே இரு முடி அணிந்தவர்கள் மட்டுமே பதினெட்டுப்படி ஏறித் தரிசிக்க வேண்டும். அப்படி இருமுடி அணி யாமலேயே அய்யப் பனைத் தரிசிக்கலாம்; பக்க வழியில் சென்று தரிசிக்கலாம். கார்த்திகை யில் மாலை அணிந்து சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்பதில்லை நடை எப்பொழுது திறந் திருக்குமோ அப்பொழு தெல்லாம் சென்று தரி சிக்கலாமாம் - எப்படி இருக்கு? எல்லாவற்றுக் கும் ஆகமம், சம்பிரதா யம், சாஸ்திரம் என்று அடுக்குவார்கள் - இதில் மட்டும் ஏன் விதிகள் கறாராக இல்லை?

எப்படியோ உண்டி யல் நிரம்பினால் சரி அதற்குத்தான் இந்த நழுவல்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/91162.html#ixzz3JC0G9g6d

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்கள்!

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரப் பார்வை மிகவும் பிற்போக்குத் தன்மை வாய்ந்ததாகவும், வெளி நாடுகளிலிருந்து முதலீடுகளைக் குவிக்கிறோம் என்ற போர்வையில், அந்நிய முதலாளிகளுக்கு தடபுடலான சலுகைகளை வாரி இறைப்பதில் அதிமும்முரம் காட்டுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

ஏராளமான தொழிற்சாலைகள் வந்து குவியப் போகின்றன; உற்பத்திகள் கிடுகிடு என்று உயரப் போகின்றன, ஏராள வேலை வாய்ப்புகள் குவியப் போகின்றன என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தைத் தண்டோரா போட்டு அறிவிப்பது போல செய்து வருகிறது.

இந்தத் தாராளச் சலுகைகள் என்ன என்பதுதான் மிக முக்கியமானது. இதற்கு முன் குஜராத் முதல் அமைச்சராக அவர் இருந்தபோது முதலாளிகளுக்கு அவர் கொட்டிக் கொடுத்த சலுகைகள் அசாதாரண மானவை. அம்பானிக்கு ஆயிரம் ஏக்கர், டாடாவுக்கு 1100 ஏக்கர், சந்தை விலையைவிட அடி மட்ட விலைக்குத் தூக்கிக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 0.1 சதவீதம்தான் 20 ஆண்டுகளுக்குப்பின் கடனைத் திருப்பி செலுத்தினால் போதும். விற்பனை வரி கிடையாது, தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகை.

ஆன்லைனிலேயே 1000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை டாட்டாவுக்கு அளித்த புண்ணியவான் தான் மோடி. ரூ.2900 கோடி முதலீட்டுத் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.9570 கோடியாம். வெங்காய விவசாயிகளிடமிருந்து 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தூக்கிக் கொடுத்தார்.

முதல் அமைச்சராக இருந்த அன்று குஜராத்தில் செய்ததையே, இந்தியாவின் பிரதமராக இருந்து அந்நிய நிறுவனங்களுக்குச் செய்யப் போகிறார் அவ்வளவுதான்.

இந்தியாவின் தொழில் சம்மேளனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் தொழிலாளர் நலச் சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.

பல சட்டங்கள் 40 தொழிலாளர்களுக்குக் குறை வாக உள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாதவை என்று ஆக்கப்படும்.

240 நாள்கள் வரை பணியாற்றினால் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் இப்பொழு துள்ள சட்டம். ஒரு மாத முன் அறிவிப்புடன் தொழிலாளர்களை வெளியேற்றலாம் என்ற சரத்து சேர்க்கப்பட உள்ளது.

தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நேரமும் அதிகரிக்கப்படும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று போராடிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைக்கப்பட உள்ளது. அது பத்தரை மணி நேரம் ஆக்கப்படுமாம்.

நூறு பணியாளர்கள் பணியாற்றும் ஆலையையோ, தொழிற்சாலையோ மூட வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது இப்பொழுது நடைமுறையில் உள்ள சட்டமாகும். இது 300 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் என்று மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக 77 சதவீத நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கழுத்துகளுக்கு மேல் கொலை வாள் தொங்குகிறது.

தொழிலாளர் துறை ஆய்வாளர் திடீர் பார்வை செய்து தொழிலாளர் சட்டங்கள் சரி வரப் பாதுகாக்கப் படுகின்றனவா என்று சரி பார்க்கும் நிலை இருந்தது; இனிமேல் அந்த அதிகாரத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் விதி முறைகள் திணிக்கப்பட உள்ளன.

இன்னும் ஒரு பெரிய ஆபத்து - அரசுத்துறைகளும், பொதுத் துறைகளும், கூட்டுறவுத் துறைகளும் அருகி தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெருகிப் பிரவாகிக்கும் நிலையில் இடஒதுக்கீடுதான் முதல் பலி என்பதை மறந்து விடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னதாகவே பிஜேபி ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களில் முன்னோட்டமாக தொழிலாளர்களின் கழுத்தறுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
மதவாதமும், முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தைத் துவம்சம் செய்தே தீருவது என்ற வெறியில் ஓர் ஆட்சி இறங்கி விட்டது.

உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்பது போல, வாக்களித்த மக்கள் அதன் பலா பலனை அனுபவிக்கட்டும் என்று பொறுப்பு வாய்ந்த பொது நலக்காரர்கள் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியாது.

எல்லா மன்றங்களையும்விட அதிக சக்தி வாய்ந்தது - மக்கள் மன்றமே! மக்களைச் சந்திப்போம். மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டி, மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தயாரிப்போம்.

மாற்றம் வரும் என்று ஏமாந்த புதிய வாக்காளர் களான இருபால் இளைஞர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு களமாடத் தயாராக வேண்டும் - நாட்டை தாக்க இருக்கும் புயலைத் தடுத்து நிறுத்த இதுதான் சரியான வழி!

Read more: http://viduthalai.in/page-2/91168.html#ixzz3JC0YTE4l

தமிழ் ஓவியா said...

விழிப்புணர்வு இயக்கம் தேவை! தேவை!!

மக்களது நல்வாழ்வு - நல வாழ்வாக அமைவது என்பது மிக மிக அவசியமாகும்.

பெறற்கரிய செல்வம், நோயற்ற வாழ்வுதான்! வாழ்க்கையில் யார் எவ்வளவு பெரும் பதவிகளிலோ, பெரும் அறிவு ஜீவியாகவோ இருக் கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர் களது உடல் நலம் செம்மையாக, செழு மையாக - உள்ளதா என்பதே முக்கியம். அதிலும் குறிப்பாக, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களது உடல் நலம் பொதுச் சொத்தாகக் கருதப்படல் வேண்டும்; உண்மையான தொண்டறத் தில் ஈடுபட்டுள்ள அவர்களது ஆற்றல், அனுபவம், உழைப்பு - இவைமூலம் சமூக மாற்றம், வளர்ச்சி ஏற்பட வேண்டிய நிலையில், அவர்களது நீண்ட கால நலவாழ்வுதான் அதற்கு அடிப்படையாகும்!

ஆண்டுதோறும் வயது 50க்கு கீழே உள்ளவர்கள், உடல் மருத்துவப் பரிசோ தனைகளை நடத்தி, தத்தம் மருத்து வர்களின் அறிவுரையை ஏற்று உடல் நலம் பேணி வாழ வேண்டும். இப்போ துள்ள வேக உணவு (Fast Foods)ப் பழக்கம் காரணமாக, இளைஞர்களுக்கு கூட, சர்க்கரை நோய், உடற்பருமன், மாரடைப்பு போன்ற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. வயதான முதியவர்கள் ஆண்டுக்கு இரு முறையாவது தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

அரசு பொது மருத்துவமனைகளில்கூட கட்டாயம் இலவசமாகவோ, அல்லது குறைந்த கட்டணத்தினைச் செலுத்தியோ, மருத்துவப் பரிசோதனை செய்து கொள் ளும் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

நன்கு படித்த உயர் பொறுப்பில் உள்ளவர்கள்கூட தங்களது உடற்பரி சோதனையை நடத்திக் கொள்ளாது அலட்சியப்படுத்தி வருகின்றனர். அதன் விளைவு இள வயதிலேயே மறைந்து விடும் கொடுமைக்கு ஆளாகி விடும் அபாயம் உள்ளது!

மருத்துவமும் அதில் இணைந்த தொழில் நுட்பமும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத் தில், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நோய் நாடி - நோய் முதல் நாடி அதற் கேற்ற மருத்துவமும் செய்து கொண்டு மேலும் நம் வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள் (Senior Citizens) தொகை மிகவும் அதிகம் பெருகும் என்பதே பல நாடுகளின் சமூகப் பிரச் சினை - நிதித் தட்டுப்பாடு பிரச்சினை என்றாலும் மனிதநேய அடிப்படையில், நோயற்ற வாழ்வுடன்கூடிய மக்கள் தானே மிகப் பெரிய, அரிய செல்வம் ஒரு நாட்டிற்கு!

எனவே மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

இளம் வயதில் இளையர்கள் நோய்களால் தாக்கப்பட்டு, உயிரிழப் புக்கு ஆளாகி வீணே தங்களின் வாழ்வைக் குறுக்கிக் கொள்ளுதலை விடக் கொடுமை - குறிப்பாக அவர் தம் பெற்றோர்களுக்கு வேறு உண்டா? இல்லையே!
எனவே

உணவுப் பழக்கம்
மருத்துவப் பரிசோதனையின்மை
புகைத்தல், மதுகுடித்தல்
புகையிலைப் பயன்பாடு
ஆகிய தீமைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட இதுவே சரியான தருணம்.

நல்ல சமயம் இது - அதை நழுவ விடக் கூடாது. என்பதைப் புரிந்து ஊருக்கு ஊர் விழிப்புணர்வுப் பிரச் சாரம் செய்வோமாக!

தமிழ் ஓவியா said...

விருதுநகர் விருந்து

கனவான்களே!

திரு.வி.வி. இராமசாமி அவர்கள் சுயமரியாதைக் காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியாகும்.

நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4.5 வருடம் தேவஸ்தான கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும், இருந்தேன். தேவஸ்தானச் செல் வங்களைப் பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால். அது நல்ல வேலைதான், அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே நான் இராஜினாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன் னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப்படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான்.

இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கின்றார்கள். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற் சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக் காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தம் இல்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை.

ஆகையால் இந்த வித அபிப்பிராயமுள்ள திரு. இராமசாமியைத் தெரிந்தெடுத்த வர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத் திருப்பார்கள். ஏனென்றால் திரு. வி.வி. இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு. இராமசாமி தனது கடமைகளைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

இது போலவே, கல்வி இலாகாவுக்கும் திரு.கந்தநாடார் பி.ஏ.பி.எல் அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு, இலாபமேயாகும் கல்வி இலாகா பார்ப்பனியமயமாய் இருக்கின்றது. கல்வி வருணாசிரமக் கல்வியாய் இருக் கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக் கின்றன. இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இன்று இந்தியாவின் இழிநிலைமைக்குக் காரணம் மதமும், கல்வியுமே யாகும். பழைய கால கல்வியைச் சங்கத்தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனியத்திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து விட்டார்கள். புத்தகங்களை அரங்கேற்றுவது என்பதே கட்டுப்பாடாகும் என்பதுதான் அர்த்தம் இப்போதைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அரங்கேற்றுவது டெக்ஸ்ட்புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்கின்றது.

அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள் இருக்க வேண்டும். நமது யூனிவர்சிட்டி படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்துவ தாகும். இதிலிருந்து யாரும் அறிவு பெற்று விட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆகலாம். ஆதலால், அத்துறைகளில் சுயமரியாதைக்காரர்கள் புகுந்து முதலாவது உபாத்தியாயர்களை வகுப்புவாரிப் பிரதி நிதித்துவப்படி நியமிக்க வேண்டும்.

உபாத்தியாயர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதாரமாக புத்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் . இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேரிடுவது நன்மையேயாகும். ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்றுகின்றீர்கள் என்று நினைக் கின்றேன்.

(06.07.1931 ஆம் தேதி விருதுநகர் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 19.07.1931

Read more: http://viduthalai.in/page-7/91191.html#ixzz3JC1qhFOK

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சொத்துரிமை


மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச்சட்டம்

1931 வருடம் அக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்தமான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதன்மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக்கொண்டு வரப்படும்.

அவையாவன:- பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்தகாரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக் கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் சுயராஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.

பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமைகளிலும்கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதைத் தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்; ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்கு கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.

பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக்குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்பசொத்தில் கணவனுக்குள்ளபாகம் சர்வ சுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். குடும்ப சொத்துக்கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்ட காலங்களிலும் அச்சொத்துகளின்மீது பெண்களுக்கு ஜீவனாம்சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.

- குடிஅரசு செய்திக் கட்டுரை 04.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91192.html#ixzz3JC26eDVz

தமிழ் ஓவியா said...

குத்தும், கொலை முயற்சியும் பம்பாய் கவர்னர் சுடப்பட்டார்

இவ்வாரத்தில் அரசியல் சம்பந்தமாய் குத்தும், கொலைமுயற்சியும் கலகமும் நடைபெற்றிருப்பதாகப் பல இடங்களிலிருந்து செய்திகள் கிடைத்திருக்கின்றன. பம்பாய் கவர்னரைப் பூனாவில் ஒரு வாலிபன் ஒரு புத்தக சாலையைப் பார்வையிடும்போது அவரைக் கொல்லக் கருதி துப்பாக்கியால் சுட்டிருக்கின்றான். ஆனால், அக்கவர்னர் அதிசயமாய் தப்பித்துக்கொண்டிருக்கின்றார்.

அதாவது அவரது சட்டைப் பையில் இருந்த ஒரு தினக்குறிப்புப் புத்தகத்தின் மூடிப் பொத்தானின் பேரில் அக்குண்டு பட்டதால் அது உடலில் பாயாமல் சட்டைப் பையிலேயே அக்குண்டு தாங்கிவிட்டது.

மற்றொரு தரம் சுட்டும் அது அவர்மீதுபடவில்லையாம். ஏனெனில், அவன் குறி பார்க்கும்போதே கவர்னர் அந்த வாலிபனைப் பிடிக்கப் போனதால் வாலிபனின் குறி தவறி குண்டு அவர் மேலே படாமல் போய் விட்டது. பிறகும் கவர்னரேதான் அந்த வாலிபனை எட்டிப் பிடித்தாராம்.

இந்த மாதிரி மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் கடவுளே அந்தச்சட்டப் பைக்குள் வந்து இருந்து கொண்டு குண்டைப் பிடித்து கொண்டார் என்று தான் சொல்லுவார்கள். ஆன போதிலும் இந்தக் கவர்னருடைய தைரியத்தையும் அவருடைய மன உறுதியையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். அவர் தப்பித்துக் கொண்டதைக்கூட நாம் அவ்வளவு பாராட்ட வில்லை.

என்றைக்கிருந்தாலும் ஏதோ ஒருவகையில் செத்துத் தீரவேண்டிய அந்தக் கவர்னர் இந்த வாலிபன் குண்டினால் செத்திருந்தால் உலகம் ஒருபுறம் தாழ்ந்து போய்விடாது. ஆதலால் கவர்னர் தப்பித்துக் கொள்வதும் இறந்துபோவதும் ஒன்று என்றேதான் கருதுகின்றோம். ஆனால் அகிம்சை அகிம்சை என்று பல்லவி பாடுவதின் தத்துவம் என்ன ஆயிற்று என்றுதான் கேட்கின்றோம்.

இதுபோலவே பஞ்சாபிலிருந்து வந்த இரண்டு இராணுவ அதிகாரிகளையும் யாரோ ஒருவன் குத்திவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரியவருகின்றது. இவர்களும் இருவரும் கூட பிழைத்துக் கொண்டார்களாம். இதனாலும் நாம் ஒன்றும் மகிழ்ச்சியடைவில்லை. ஆனால் அகிம்சை போரால் விளையும் பயன் என்ன என்பதை மக்கள் அறிய இதையும் ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றோம். அபிப்பிராயப் பேதப்பட்டவர்களையும் தங்கள் நன்மைக்கு விரோதமாக இருப்பவர்களையும் கொல்லுவதோ, கொல்ல நினைப்பதோ மனித இயற்கைதானேயொழிய வேறில்லை. கொல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

அதற்காகத்தான் அரசாங்கம், சட்டம், தண்டணை ஆகியவைகள் இருக்கின்றன. ஆதலால் அதிலும் ஆச்சரியப்பட இடமில்லை என்றாலும் தன் உயிருக்கும் துணிந்த ஒருவன் மற்றவனைக் கொல்ல நினைத்தால் அதற்கு யார்தான் என்ன செய்யமுடியும்? ஆனால் இந்த உணர்ச்சியை தப்பான வழியில் கிளப்பி விடுவது என்பது மாத்திரம் பிசகு என்பதைநாம் ஒப்புக் கொள்கின்றோம். ஏனெனில் இச்சம்பவத்திற்கு அதாவது அவரைச் சுட்டதற்கு அச்சிறுவன் பொறுப்பாளியல்ல.

மற்றபடி, யார் என்றால் அவ்வுணர்ச்சி அவனுக்கு உண்டாகும்படி நடந்து கொண்டவர்களே உண்டாவதற்குக் தகுந்தபடி பிரச்சாரம் செய்தவர்களேதான் பொறுப்பாளியாக வேண்டும். சுடப்பட்ட கவர்னர் இதையறிந்து அந்த வாலிபனைப் பார்த்து இந்த முட்டாள் தனமான காரியம் செய்ய உன்னைத் தூண்டியவர்கள்யார்? என்று கேட்டிருக்கிறார்.

எப்படியிருந்தாலும் இம்முறைகள்தான் எல்லா நிலைகளிலும் சகஜமாக இருக்கப்போகின்றது என்பது மாத்திரம் நமது உறுதி. இந்தப்படி, இனி நடப்பதிற்கில்லாமல் இருக்க வேண்டுமானால் உலக வாழ்க்கைப் பத்தியானது அடியோடு திருத்தியமைக்கப்பட வேண்டும். -

குடிஅரசு - கட்டுரை - 26.07.1931

Read more: http://viduthalai.in/page-7/91190.html#ixzz3JC2K9zUh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்களுக் குத் தானே பலன் சொல் லிக் கொண்டு திரிகி றார்கள். மீதி லட்சக்கணக் கான நட்சத்திரங்களுக் குப் பலன்களே கிடை யாதா?

அவர்களுக்கு இருந்த அறிவு அவ்வளவு தான். இன்றைக்கும் அதே 27 நட்சத்திரங்கள் பற்றிப் பலன் சொல்லுவது அடி முட்டாள்தனம்என்றால் நம்புவதோ கோடிக் கோடி பரம முட்டாள்தனமே!

Read more: http://viduthalai.in/e-paper/91241.html#ixzz3JHmGHThq

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள்தான் பார்ப்பனர்களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்

--------------

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் சாமியார்கள், துறவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி ஏற்க முடியும்? பா.ஜ. தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

- அசோக் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர்

--------------

புதிய எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளில் உளவியலைக் கொண்டுவர வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் மன ஓட்டங்களை எழுத்தைத் தவிர வேறு எதிலும் பதிவு செய்துவிட முடியாது. வாழ்வில் வெளிச்சம் படாத பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வருவது எழுத்தாளனின் கடமை.

- கவிப்பேரரசு வைரமுத்து

--------------

ஆந்திரத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 54 விழுக்காடு தெலங்-கானாவுக்குத் தரப்பட வேண்டும். அதைத் தர ஆந்திர முதல்வர் மறுக்கிறார். இது தெலங்கானா மக்களுக்கு சந்திரபாபு நாயுடு இழைக்கும் அநீதியாகும்.

- சந்திரசேகர் ராவ்,
தெலங்கானா முதல் அமைச்சர்

--------------

கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்-துள்ளது. வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்சரிவு குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, வாக்கு சேகரிக்கச் சென்ற அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட உயிர்ப் பலிகளைத் தடுத்திருக்க முடியும்.

- விக்னேஸ்வரன், முதல் அமைச்சர், இலங்கை வடமாகாணம்

தமிழ் ஓவியா said...

காட்டிக் கொடுக்கும் புளூ-டூத்

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது மழை பெய்தால் எடுத்துச் செல்லப்படும் குடை, அங்கிருந்து திரும்பும்போது மழை பெய்யவில்லை என்றால் குடையை எடுத்துவர நிறையப் பேர் மறந்து விடுவ துண்டு. அப்படி மறந்துபோன குடையை அல்லது பிறரால் திருடப்படும் குடை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்தாள் குடையில் செல்பேசியில் பயன்படுவதைப் போல நவீன புளு_டூத் கருவி ஒன்று இணைக்கப்-பட்டிருக்கும். இது ஸ்மார்ட் போனுடன் இணைந்திருக்கும். குடை திருடப்-பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ நுட்பமான வரைபடத்தின் மூலம் குடை இருக்கும் இடத்தினை இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!


பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா அல்லது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுடன் பேச விரும்புகிறதா? இதுபற்றிய தெளிவான முடிவை எடுக்காதவரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை.

- அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்

காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது அய்.நா.தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்-பட்டது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தான் ஒருதரப்புவாதி. எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

- தஸ்னிம் அஸ்லாம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

சொல்றேங்க....!

நீங்க ரெண்டு பேரு சொல்றதைவிட காஷ்மீர் மக்கள் என்ன விரும்புறாங்கங்கறது தான் முக்கியம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் நிசாமி போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சசேனா அக்டோபர் 29 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

அய்.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

காணாமல் போன நபர்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம் பெறும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 3 அன்று நிராகரித்தது.

தந்தை மரணத்திற்குப் பின் விவாகரத்துப் பெற்ற மகளுக்கு தந்தையின் வேலையை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பகவான் பிரசாதம் (லட்டு) தொடர்பான விளம்பரத்தில் மறைத்தது ஏன்?

திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை.

100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 லிட்டர் வாசனைப் பன்னீர் மற்றும் ரோஜாச்சாறு சேர்க்கப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரு நாளில் தயார் செய்து உங்கள் கைக்கு பகவானின் பிரசாதமாக கொடுக்கிறோம் என்கிறது அந்த விளம்பரம்.

அது சரி, இவற்றுடன் கல், நட்போல்ட், பறவைக் கழிவு, இரும்புத்துரு, தலைமுடி, நகத்துண்டு இவையெல்லாம் எத்தனை கிலோ எத்தனை டன் சேர்ப்பீர்கள் என்று கூறவில்லையே! (சில நேரங்களில் வேறு சில உயிரினங்களும் வறுவலாக சேர்க்கப்-படுகிறது என்றும் சொல்கிறார்களே(?).

- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்ணடிமை

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் 20ஆம் நாள் ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய ஆண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியைக் காண இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்த இங்கிலாந்து_ஈரானிய சமூக ஆர்வலர் கோன்சே கவாமி ஒரு குழுவாகச் சென்றார். அந்தக் குழுவினரைக் காவல் துறையினர் அடித்து கைது செய்து விடுவித்தனர்.

கோன்சே கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைப்பந்துப் போட்டியைக் காண முயன்றதற்காக கவாமிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கைப்பந்துக்குத் தடை போட்டது ஈரான். அந்த தொந்தரவெல்லாம் எதற்கு? கண்ணிருந்தால் தானே கண்டதையும் பார்ப்பதற்கு! போடு தடை கண்களுக்கு என்று ஒருபடி மேலே (?!) சென்றிருக்கிறது சவுதி அரேபியா. பெண்களின் கண்களைக் காவியங்-களில் வர்ணித்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்-குறைக்கு, இந்தப் பொண்ணுங்களே இப்படித்-தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா என்கிறார்கள் திரைப்படக் கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கல்லறையே பெண்களின் கவர்ந்திழுக்கும் கண்கள் என்று யோசித்து இதுவரை புர்காவில் கண் மட்டும் தானே தெரிந்தது. அதையும் தடை செய்துவிடலாமே என்று முடிவு செய்திருக்கிறது சவுதி அரேபியா. சபலத்தைத் தூண்டும் கண்களை உடையவர்கள் அவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். நாங்கள் அவர்களின் கண்களை மறைக்கச் சொல்லி வலியுறுத்து-வோம். அப்படிச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் தீயொழுக்கத்தைத் தடுக்கும் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லப் அல் நபெத். அது என்ன சபலத்தைத் தூண்டும் கண் என்றால் எது?

அதற்கென்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கான ஸ்கேலையும் கையில் வைத்திருக்கிறார்கள் இந்த ஒழுக்க வாத்தியார்கள். மூடப்படாத அழகான வடிவம் கொண்ட, ஒப்பனை செய்யப்பட்ட கண்கள், ஒப்பனை செய்யப்படாவிடினும் அழகான கண்கள் என்கிறது அந்த ஸ்கேல். சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லா-வுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருக்கும் இளவரசர் நயிஃப் காலத்திலாவது இத்தகைய நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூடுதலாக ஏமாந்திருக்கிறார்கள்.

அவர், இது இஸ்லா-மின் தூண்களுள் ஒன்று. இந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். எதற்கு பாஸ், பெண்களிடம் தலையை மூடு, காலை மூடு, கையை மூடு, வாயை மூடு, முகத்தை மூடு, கண்ணை மூடு என்று பார்ட் பார்ட்டாக தடை செய்கிறீர்கள்? மொத்தமாக பெண்களையே தடை செய்துவிட்டால் ஒரே வேலையா முடிஞ்சுடுமே! அவங்களையெல்லாம் விரட்டி வெளியில அனுப்பிட்டா ஒரேடியா ஒழுக்கம் நட்டுக்கிட்டு நிற்கும். தீயொழுக்கம் இல்லாமல் போகும். அவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு எதுக்கு அவங்களை நாட்டுல வச்சிக்கணும்? அடுத்தடுத்த தலைமுறை இல்லாமல், நீங்களும் அழிஞ்சிடு-வீங்க... நாடாவது நல்லா இருக்குமே! என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் குறைந்தபட்ச மனிதநேயம் உள்ளவர்கள்!

தமிழ் ஓவியா said...

ராஜம் கிருஷ்ணன்


ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட,

அவள் தன் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன (அவள் விகடன்) என்றவர் அவர். தனது எழுத்துகளில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தி, பெண்ணுரிமைக் காகக் குரல்கொடுத்தவர். கடந்த மாதம் அவர் தனியார் முதியோர் காப்பகம் ஒன்றில் மறைவுற்றார் என்ற செய்தி மூலம் கவனத்தில் கொள்ளவேண்டிய சமூகப் பிரச்சினை ஒன்றை தன் வாழ்க்கை மூலம் எழுதிச் சென்றுள்ளார்.

தமிழ் ஓவியா said...

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

உலகைச் சுற்றி....

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.



இதோ 21 ஆம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் தாய்மார்கள் சிலர் வித்தியாசமான-தொரு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்-கிறார்கள். ஒருவகையில் இதுவும் தோள்சீலைப் போராட்டம் தான். இந்தியாவின் தமிழ்நாட்டுப் பெண்கள் மார்புகளை மறைக்க தோள்சீலையை அணிவதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்றால், லண்டன் தாய்மார்களோ பொது இடங்களில் தங்களின் மார்பு தெரிய குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு தமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காக இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.

லண்டன் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் (உணவுடன் கூடிய மதுபானச்சாலை) தன் குழந்தைக்குப் பால் கொடுத்த ஒரு தாய் தனது மார்புகளை மூடவில்லை என்று அந்தக் கடையின் பணியாள் அந்தப் பெண்ணிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்தத் தாய் புகார் தெரிவித்திருக்கிறார். கடையில் இருந்த ஒரு (அழுக்கு துடைக்கும்) துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து மார்புகளை மூடச்-சொல்லி அந்தப் பணியாள் வலியுறுத்திய செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணியாளரின் வார்த்தைகளும் அவர் அழுக்குத்துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்த செயலும், ஒரு தாய் என்கிற முறையில் தனது பால் கொடுக்கும் உரிமையையும், பெண் என்கிற முறையில் தனது சுயமரியாதையையும் பாதித்ததாக அந்தத் தாயார் உள்ளூர் பத்திரிகையில் புகார் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட உள்ளூர்த் தாய்மார்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அந்த பப்புக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்துவிட்டு, அந்த நாளில் தத்தம் குழந்தைகளுடன் அந்த பப்புக்கு வந்த தாய்மார்கள் எல்லோரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்பு மூடாமல் பாலூட்டியுள்ளனர். அந்தத் தாய்மார்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக குழந்தை இல்லாத பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்தச் செய்தியின் முழுமையான தகவல்-களை கீழ்கண்ட இணைப்புகளில் சென்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்.

இந்தப் போராட்டத்தை ஆதரித்த பெண் ஒருவர் தெரிவித்த காட்டமான கருத்து இது: Barbara Tanner, 76, also from Bexleyheath added: "Most of the men in this pub have seen breasts before, they’re groping them all the time".

தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் இடையில் எத்தனையோ ஆயிரம் மைல் இடைவெளி இருக்கிறது. தமிழ்நாட்டின் தோள்சீலைப் போராட்டத்துக்கும் லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்துக்கும் இடையில் 200 ஆண்டு கால வித்தியாசமும் இருக்கிறது. ஒன்று, இந்தியாவின் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும்கூட. மற்றதின் பின்னணியில் வர்க்கப்பார்வையும் இருக்கக்கூடும். ஒன்று, தமது மார்புகளை மறைக்க உரிமை கோரி நடந்த போராட்டம். மற்றது, மார்புகளைத் திறந்து காட்டியபடி பாலூட்ட நடந்த போராட்டம்.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தும் இரண்டிலும் வெளிப்பட்ட குரல் ஒன்றே. அது பெண்ணியக் குரல். பெண்ணின் உடல் என்பது அடிப்படையில் அவளுடைய உடைமையே தவிர ஆணின் உடைமை அல்ல என்கிற அடிப்படை உரிமைக்கான குரல். பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கே. ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் பேசும் காலகட்டத்தில், தங்கள் உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியலாம் அல்லது தெரியக்கூடாது என்கிற மிகச்சிறிய உரிமைக்காகக்கூட பெண்கள் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கான மற்றும் ஓர் எடுத்துக்காட்டே லண்டனில் நடந்த இந்த வித்தியாசமான 'boob and bottle feed-in'என்கிற 21 நூற்றாண்டின் தோள்சீலைப் போராட்டம்.

- ஜெகதீசன்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி என்பது என்ன?

சபரிமலை செல்லும் அய்யப்ப மார்கள் தலையில் சுமந்து செல்லும் பொருட்களை இருமுடியாகக் கட்டி சுமந்து செல்வார்கள். இரண்டு முடிகளில் முன்முடி புண்ணியம், பின்முடி பாவம் என்பதைக் குறிக்கும், புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் இரு முடிகளாக் கித் தலையில் சுமந்து செல்வதாக அய்தீகம்.

அய்யப்பனைத் தரிசித்துப் பின் இல்லம் திரும்புகையில், பாவம் எனும் பின் முடியை விட்டு விட்டுப் புண்ணியம் எனும் அய்யப்பனின் பிரசாதம் நிரம்பிய ஒரு முடியோடு திரும்பு கிறோம். முன் முடியில் உள்ள தேங்காயில் எடுத்துச் செல்லப்படும் நெய்யே அய்யப்பனுக்கு அபிஷேகம் ஆகிறது. தேங்காய் சிவபெருமான் எனவும் நெய் திருமாலாக வும் கருதப் பெறுகிறது என்று கூறு கிறார்கள்.

இந்த முன்முடி, பின் முடி வியாபாரம் இப்பொழுது மற்ற கோயில்களையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. எல்லாம் பிசினஸ்தான் அதுசரி, முன்முடி புண்ணியம் பின் முடி பாவம் என்று கதை விட்டவர்கள் யார்? எந்தக் காலத்திலோ எந்த ஒரு கிறுக்கனோ உளறியது எல்லாம் பக்தியாகி விட்டது என்பது தானே உண்மை?

பாவத்தை இறக்கி வைத்துத் திரும்பும் அய்யப்பப் பக்தர்கள் சாலை விபத்து களில் பலியாவது ஏன்? இது புண் ணியமா? அல்லது பாவமா?

Read more: http://viduthalai.in/e-paper/91322.html#ixzz3JKrRTYPO

தமிழ் ஓவியா said...

செத்தவர் - பிழைத்தார்! அலட்சிய நீக்கத்தால்!

செத்தவர் பிழைப்பரோ என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. ஆனால் இப்போது செத்தவர் பிழைக்கவும் செய்கின்றனர் என்பது அதிசயமான செய்தி அல்லவா? இன்று ஒரு நாளேட்டில் (17.11.2014) வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.

11 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் எழுந்த பாட்டி

இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு, பிணவறையில் வைக்கப்பட்ட 91 வயது பாட்டி, 11 மணி நேரத்திற்கு பின், எழுந்து டீ கேட்டதால், பிண வறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலந்து நாட்டின், ஆஸ்டிரோ லுபெலஸ்கி நகரை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் 91. கடந்த 6ஆம் தேதி காலை, ஜெனினாவின் இல்லத்தில், அவரை பரிசோதித்த டாக்டர் வைஸ்லாவா, அவர் இறந்து விட்டதாக சந்தேகமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பினார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவமனை டாக்டர்கள், ஜெனினா இறந்து விட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஒரு பையில் வைத்து மூடிய ஊழியர்கள், பிண வறையில் வைத்தனர்.

ஏறக்குறைய, 11 மணி நேரத்திற்குப் பின், மற் றொரு உடலை, பிணவ றையில் வைப்பதற்காக வந்த ஊழியர்கள், ஜெனி னாவின் உடல் அசை வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பையை திறந்து பார்த்தனர்.

இவர்களைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்த ஜெனினா, குடிப்பதற்கு சூடாக டீ கேட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்து மருத்துவ மனை டாக்டர்கள், ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

- இப்படியும் நடைபெறுகிறது. சாகாதவரைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கிய காரணமாகும்!

முதல் டாக்டருக்கு சந்தேகம் வந்ததால் தான் அவர் அந்த 91 வயது பாட்டியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்; ஆனால் அந்த மருத்துவ மனை டாக்டர் பொறுப் புணர்ச்சியுடன் தனது கடமையைச் செய்ய வில்லை என்பது புரிகிறது!

பையில் வைத்து மூடப்பட்டு 11 மணி நேர வாசம் பிணங்களுடன் - பிணவறையில் வாழ்ந்துள்ளார் அந்த வார்சா- போலந்து பாட்டி!

கால் அசைவைக் கண்டு அறிந்த பிணவறை ஊழியர் கவனம் பாராட்டத் தகுந்தது! அவர் அலட்சியம் காட்டி யிருந்தால், இந்த வார்சா பாட்டி திரும்பி இந்த பூவுலகத்திற்கு புறப்பட்டிருக்க முடியாதே!

சில டாக்டர்களின் அலட்சியத்தால் இப்படி பலப்பல நேர்ந்து விடுகிறது!

அறுவை சிகிச்சை செய்து கத்தியையோ, கத்திரிக்கோலையோகூட உடலுக்குள்ளேயே வைத்து தைத்து விட்ட மறதி நாயகர்களும் உண்டே! மறதியில்லை என்றால் அலட்சியம் தானே காரணம்! இப்படிப்பட்டவர் களை மன்னிக்கக் கூடாது. தண்டனை வழங்கவே செய்ய வேண்டும்.

மாரடைப்பால் இறந்தவரைக்கூட மீண்டும் உயிர்த்து எழ, மார்பில் குத்திக் குத்தி, அல்லது வாயில் வாயை வைத்து மூச்சுக் கொடுத்து முயற்சிகள் செய்வதும், அதன் மூலம் நின்று போன இதயத் துடிப்பு மீண்டும் இயங்கத் தொடங்குவதும் (10 ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும் கூட) மருத்துவர்களின் தொண்டற மாகக் கருதப்படும் நிலையில், இப் படியும் சில அலட்சியங்கள் அக்கிர மங்கள் நடைபெறவே செய்கின்றன

இதனைத் தடுக்க அத்தகைய டாக்டர்களை சில ஆண்டு காலம் மருத்துவத் தொழில் புரியாமல் தடுத்து வைத்து தண்டனை தந்தே ஆக வேண்டும்.

எற்றென்று இரங்குவ செய்யற்க - செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - குறள் (655)



- ஆசிரியர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91304.html#ixzz3JKsA0j4g

தமிழ் ஓவியா said...

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?

சென்னை, நவ.17:தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப் பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத் தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலை வர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத் தலாம்.

இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை காவல்துறை டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், அய்.ஜி.க்கள், டி.அய்.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக் குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சி யர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங் களின் தலைவர்கள், மாவட்ட நீதி பதிகள், பெருநகர முதன்மை நீதிபதி கள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநக ராட்சி மேயர்கள், மாவட்ட பஞ் சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/91305.html#ixzz3JKsZhFpB

தமிழ் ஓவியா said...

உடல் எடையை குறைக்கும் பழச்சாறு

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட் களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை சாறு: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை சாறில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி சாறு: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ சாறு: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை சாறு: திராட்சைப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறு எடுத்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யாப்பழச் சாறு: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதில் சாறு எடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழச்சாறு: ஆரஞ்சு பழ ஜூஸை குடித் தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச் சாறில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி பழச்சாறு: அன்னாசியை மட்டும் அரைத் தால், அது கெட்டியாக சாறு போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/91346.html#ixzz3JKtrZKPJ

தமிழ் ஓவியா said...

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்


நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

கண் வெப்பம் குறைய

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் வெப்பம் குறையும்.

கண் நோய்கள் குறைய

புளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

மூக்கடைப்பு குறைய

லவங்கப்பட்டைத் தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/91348.html#ixzz3JKu0Qruf