Search This Blog

27.11.14

ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா?


மணமகள் பாடினியின் கொள்ளு தாத்தா மணிப்பிள்ளை ஒரு முரட்டுச் சுயமரியாதைக்காரர்
குடும்பமே கொள்கைக் குடும்பம்! மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும்
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்லத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்லத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை


கல்லக்குறிச்சி, நவ. 26- கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தியின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத் தலைமை வகித்த திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவு நெறியிலும் வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் பெயரத்தி பாடினி - பிரபாகரன் ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

அன்புச்செல்வர்கள் இராமதாஸ் - பொன்னெழில் ஆகியோரின் அன்பு மகள் இரா.பாடினி பி.இ., எம்.பி.ஏ., அவர்களுக்கும், அதேபோல, எம்.என்.குப்பம் அருமை அய்யா கண்ணப்பன் - சரசுவதி ஆகியோருடைய செல்வன் பிரபாகரன் பி.இ., எம்.பி.ஏ., ஆகியோருக்கும் நடைபெறக் கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவதில், நடத்தி வைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.

ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர்
காரணம், இந்தக் குடும்பம் என்பது அறிவுக்கரசு அவர்கள்  இங்கே குறிப்பிட்டதைப்போல, முழுக்க முழுக்க கடலூரில் என்னுடைய இளமைக் காலம் முதற்கொண்டு, அவருடைய தந்தையாரும், நானும் மிக நெருக்கமாக இருந் தவர்கள். சுயமரியாதைச் சுடரொளியாக இருக்கக்கூடிய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கக்கூடிய, உணர்வுகளில் உறைந்திருக்கக்கூடிய,  மணிப் பிள்ளை என்று அந்த வட்டாரத்தில் அழைப்பார்கள், வயதானவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அவருடைய தந்தையார் ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர். அவரிடத்தில் யாரும் பேசுவதற்குக்கூட தயங்குவார்கள், வேறு வகையான நிலையில் அல்ல, அவ்வளவு வாதப் பூர்வமாக, விவாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்து, பெரியாருடைய கொள் கையை, ஒரு மணித்துளி கிடைத்தால்கூட, அவர்களோடு உரையாடி, அவர்களைத் தன்வயப்படுத்து வார்கள்.
எங்கே இவருடைய கருத்துகளைக் கேட்டால், நாம் மாறிவிடப் போகிறோமோ என்று அஞ்சித்தான், அவரைப் பார்த்தவுடனே, பல பேர் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இன்றைய இளைய தலைமுறைகளுக்கெல்லாம், அவரு டைய தாத்தாவின் அப்பாவைப்பற்றி,  கொள்ளுத்தாத்தா வைப்பற்றி நாங்கள் சொன்னால்தான், இவர்களுக்கேகூட தெரியும். அவ்வளவு தெளிவான, அத்தனை ஆண்டுகால மாக இருக்கக்கூடிய, அவ்வளவு நெருக்கமான குடும்பம்.
இது நான்காவது தலைமுறை
இன்னுங்கேட்டால், மணமகளின் தாத்தாவாக, இன் றைக்கு நம்மையெல்லாம்  வரவேற்று இருக்கக்கூடிய, நேற்று பவழ விழா கண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தம்பி அறிவுக்கரசு அவர்கள், ஒரு இளைஞனாக இருந்த காலத்திலிருந்து, இன்றுவரையில், நான்தான் அவர்களுக்கு ஒரு பாதுகாவலன் என்பது மட்டுமல்ல, மிகப்பெரிய அள வில், எல்லா வகையிலும், அவர்களுடைய வாழ்க்கையில், இந்தக் குடும்பத்தினுடைய வாழ்க்கையில், இந்தப் பிள் ளைகளுடைய வளர்ச்சியில், மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டவனாவேன்.

எனவே, இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதில், இது ஒன்றாவது தலைமுறை, இரண்டாவது தலைமுறை, மூன்றா வது தலைமுறையை எல்லாம் தாண்டி, நான்காவது தலை முறை என்று வரக்கூடிய அந்த வாய்ப்பை இன்றைக்குப் பெற்று, அந்த நான்காவது தலைமுறையிலும் கொள்கை தேயவில்லை. கொள்கை வளர்ந்துகொண்டிருக்கிறது. கொள்கையிலே ஒத்துழைக்கக்கூடிய அருமையான சம்பந் தக்காரர்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. எனவே, முதற்கண் யாரையாவது நாம் பாராட்டவேண்டுமானால், மணமகனுடைய பெற்றோர் கண்ணப்பன் - சரசுவதி அவர்களையும், அவர்களுடைய உற்றார், உறவினர்களைத்தான் பாராட்டவேண்டும் இயக் கத்தின் சார்பிலே, காரணம், இந்தக் குடும்பத்தில் நாங்கள் வந்து மணவிழாக்களை நடத்தி வைப்பது என்பது இவர் களைப் பொறுத்தவரையில் சாதாரணம்; அதற்கு மாறாக நடந்தால்தான், அதிசயம். ஆனால், அவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் மிகுந்த தாராள உள்ளத்தோடு, பெருமிதத்தோடு இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்டு, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சிதான் மிக முக்கியம் என்பதற்கு முன்னுரிமை கொடுத்தவர்கள், ஒரு எடுத்துக்காட்டான தாய் - தந்தையர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு, மற்றவர்களுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.

நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்கள் நாம்
இங்கே, மிக அற்புதமாக சொன்னார், அறிவுக்கரசு அவர் கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண் டவர். இதைவிட பொருத்தமான மணமக்களை நாம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மணமகள் பாடினி; அவர் பொறியாளர் - மேலாண்மை படிப்புத் துறையில் எம்.பி.ஏ. என்று சொல்லக்கூடிய அந்தப் படிப்பு மிக சிறப்பு. ஒரு காலத்தில், நமக்கெல்லாம் படிப்பு வராது என்று ஒடுக்கப் பட்ட சமுதாயத்தவர்கள் நாம்.  ஆனால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் மணிமணியாகப் படிக்கிறார்கள். எல்லா ஆற்றலும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மணமக்கள் இருவரையும் பார்த்தீர்களேயானால், வங்கியில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். மணமகன் பிரபாகரன் ஆனாலும், மணமகள் எங்கள் பேத்தி பாடினி அவர்களா னாலும், அவர்கள் இருவருமே வங்கி அதிகாரிகள்.

இந்த அளவிற்கு அவர்களைப் படிக்க வைத்து அவர் களை சிறப்பான அளவிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் பகுதிக்கு வருகிறபொழுது, இது புதுச்சேரி மாநிலத்தை தாண்டி, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு கிராமப் பகுதிதான். ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு பகுதி. நான் இந்தப் பகுதிக்கு இப்பொழுதுதான் முதன்முறை யாக வருகிறேன். உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இப்படிப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய இந்தக் குடும்பத்தில், தன்னுடைய மகனை, இந்த அளவிற்கு அவர்கள் ஆளாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிட பெருமைமிக்க நல்ல குடும்பம் வேறு இருக்க முடியாது என்பதுதான் பாராட்டத்தகுந்த ஒன்றாகும்.

நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; நம் முடைய அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள், மணமக் கள் இருவரும் படிக்கும்பொழுதே, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு, கற்பனையான ஒன்று, நீண்ட காலமாக, ஆரியத்தினுடைய வருகையினால், நம் மூளை யில் விலங்கு போடப்பட்டது. அந்த விலங்கிலே இன்றைக் கும் நம்மைத் தாழ்த்திக் கொண்டிருப்பது, இந்த ஜாதி விலங்குதான். மிக முக்கியமானது.


துக்ககரமான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள்

நான் இங்கே வருவதற்கு முன்புகூட, தொலைக்காட்சி யில் செய்தி முடிந்து, கல்யாண மாலை என்ற ஒரு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையில் ஒரு பார்ப்பன நண்பர் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில், படிப்பு இவ்வளவு படித்திருக்கிறார் என்று மற்ற விவரங்களையும் போட்டுத்தான் நடத்துகிறார்.

ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். பொறியியல் படிப்பை நாமெல்லாம் முன் பெல்லாம் படிக்க முடியாது. இன்றைக்கு உள்ள இளைஞர் களுக்கெல்லாம் பழைய காலத்தைப்பற்றியெல்லாம் தெரியாது. இவர்கள் எல்லாம் இப்பொழுது சிமெண்ட் சாலையில் பயணிப்பவர்கள்.

கைநாட்டுப் பேர்வழிகள் எல்லாம் இருந்த காலம் ஒன்று உண்டு; அதுமட்டுமல்ல, கடிதங்கள் போட்டால், துக்ககர மான கடிதங்கள் என்றாலே, மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருப்பார்கள். வயதானவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இது எதற்காக என்று பல பேருக்குத் தெரியாது. அப்பொழுதெல்லாம் நம் சமுதாய மக்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாது. பெரிய மிராசுதாரராக இருப்பவர், வில் வண்டியில் போய் இறங்குவார். ஆனால், சொத்து வாங்கும்பொழுது, பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று, கையெழுத்துப் போடச் சொன்னால், அந்த மிராசு தாரர் சிரிப்பார். பிறகு, அந்தப் பதிவாளர் புரிந்துகொண்டு, அந்த மிராசுதாரரும் கட்டை விரலை உயர்த்திக் காட்டுவார். இப்பொழுதுதான் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ரப்பர் ஸ்டாம்பு பேடு உண்டு. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கட்டை வண்டி மையைத்தான் கட்டை விரலில் தடவுவார்கள். பதிவாளர் அந்தக் கட்டை விரலை உருட்டி, கையொப்பம் வாங்குவார்.

உங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல!
இப்படி இருந்த சமுதாயம்தான் நம்முடைய சமுதாயம். இந்த சமுதாயத்தில்தான், இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் மிக உயர்ந்த படிப்பை படித்திருக்கிறார்கள். இவர்கள் பொறியாளர்கள் படிப்பு படித்தது எப்படியென்றால், தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், இது நீங்கள் சரசுவதி பூஜை கொண்டாடியதினால் வந்தது இல்லை. உங்களை சங்கடப்படுத்துவது என்னுடைய கருத்தல்ல. நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த சமயத்தில் மணமக்களுக்கு அறிவுரை சொல்வது முக்கியமல்ல; மணமக்கள் இருவரும் விஷயம் அறிந்தவர் கள்; ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவர்கள். இந்த மண விழாவிற்கு வந்திருக்கின்ற தாய்மார்களாகிய உங்களுக்குத் தான் தேவை. ஏனென்றால், இவ்வளவு தாய்மார்கள் நாங்கள் பொதுக்கூட்டம் போட்டால்கூட வரமாட்டீர்கள்; ஆகை யால், உங்களை சுலபமாக அனுப்புவதாக இல்லை. உங் களுக்கு இந்தக் கருத்துகளைச் சொல்லவேண்டும்; அதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்களைப் பார்த்தவு டன், ஏதோ சொல்கிறார்களே, என்று யாரும் பயப்படக் கூடாது.

எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடிந்தது? பெரியார் பாடுபட்டார்; பெரியார் கேட்டார்; ஏனய்யா, நம் பிள்ளைகள் படிக்கக்கூடாதா? என்று கேட்டார். அதனுடைய விளைவு என்ன? நம்முடைய தாத்தா காலத்தில் கைநாட்டுப் பேர் வழிகள் நாம். அதனால்தான் துக்கரமான விஷயத்திற்கு கடிதாசியின் மூலையில் கறுப்பு மையைத் தடவி வைத்திருந்தார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் படிக்கத் தெரியாது; அப்படி கடிதாசியின் மூலையில் மை தடவியிருந்தால், இரண்டு மைல், மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு வாத்தியாரிடம் சென்றுதான் அந்தக் கடிதாசியைக் காட்டுவார்கள். அவர்தான் அந்த ஊரிலேயே படித்திருப்பார். அய்யா, ஏதோ துக்ககரமான செய்தி வந்திருக்கிறது; உடனே படித்துச் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். அவரும் அவரும் அந்தக் கடிதாசியில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவார்.
தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடை
இன்றைக்கு அதற்கெல்லாம் அவசியமே கிடையாது; அந்த அளவிற்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் ஏற் பட்டிருக்கிறது. பெண்களுடைய படிப்பு சதவிகிதம் இருக்கிறது பாருங்கள், நம் நாட்டில் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு, எல்லா தகுதிகளும் வாய்ந்தவர்களாக பெண் கள் இருக்கிறார்கள்.
பெண்களுக்குச் சம உரிமை; பெண்களுக்குச் சொத் துரிமை; பெண்களுக்குப் படிப்பு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு இவை அத்தனையும் தந்தை பெரியாரும், இந்த இயக்கமும் செய்த மகத்தான கொடையாகும். அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். அருமைத் தாய்மார்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த மண்ட பத்தைப் பாருங்கள்; ஒரு மாநாடு போல் போடப்பட்டிருக் கின்ற அத்தனை நாற்காலிகளும் நிறைந்திருக்கிறது. ஏனென்றால், இது செல்வாக்குள்ள குடும்பம்; அவர்கள்பால் அன்புள்ளவர்கள் அத்தனைப் பேரும் இங்கே வந்திருக் கிறீர்கள்.

இவ்வளவு தாய்மார்களுக்கு விளங்கும்படியாக நான் சொல்கிறேன். ஏனென்றால், இது நம்ம குடும்பம்; அதனால் உரிமை எடுத்துக்கொண்டு தாராளமாகச் சொல்கிறேன்.
இந்தப் பக்கம் பாருங்கள்; அங்கேயும் பாருங்கள்; ஆண்கள் எல்லாம் நின்றுகொண்டிருக்கிறார்கள். நம் முடைய தாய்மார்கள் எல்லாம் வசதியாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள். கூச்சப்படாமல் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
              --------------------(தொடரும்)--”விடுதலை” 26-11-2014

Read more: http://viduthalai.in/page-4/91847.html#ixzz3KAlLavLD
 ******************************************************************************************

ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா?
ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம் ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா?
பாடினி-பிரபாகரன் திருமண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கல்லக்குறிச்சி, நவ. 27- ஜாதிக்கு என்று ஏதேனும் அடையாளங்கள் உண்டா? என்றும் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், ஆதிதிராவிடர் ரத்தம் என்ற பிரிவு உண்டா? என்றும் கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


9.11.2014 அன்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் பெயர்த்தி பாடினி - பிரபாகரன் ஆகியோரின் இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ஆண்களுக்கா? பெண்களுக்கா?
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இதுபோன்ற ஒரு கிராமத்தில், ஆண்கள் எல்லாம் நின்று கொண்டிருக்க, பெண்கள் தைரியமாக நாற்காலியில் உட்காரக்கூடிய சூழ்நிலை இருந்திருக்கிறதா? என்று கேட்டால், கிடையவே கிடையாது!


ஒரு அம்மணியைக் கேட்டால், அவர் பளிச்சென்று சொல்வார், இது என்னங்க, இதைப் போய் பெரிய விஷய மாகப் பேசுகிறீங்க, நாங்கள் முன்னதாகவே வந்துவிட்டோம்; அதனால் அமர்ந்துவிட்டோம்; அவர்கள் தாமதமாக வந்தார்கள், இடமின்மையால், நின்றுகொண்டிருக்கிறார்கள்.
இன்னுங்கேட்டால், குறைவாக நாற்காலிகள் போடப் பட்டு இருந்தால், யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்று கேட்டால்கூட, பெண்களாகிய தாய்மார்களாகிய உங்களுக்குத்தான் நாற் காலிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் - நியாயப்படி!
பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்!
ஏனென்று கேட்டால், ஆண்கள் அணிந்திருக்கக்கூடிய உடைகளை மதிப்புப் போட்டால், சில ஆயிரம்தான் இருக்கும்; ஆனால், தாய்மார்கள் உடுத்திருக்கக்கூடிய பட்டுப்புடவை என்ன விலை இருக்கும்? நீங்கள் அணிந்திருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு என்னவாக இருக்கும்? எனவே, நாற்காலியில் உட்காரக்கூடியவர் களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றால், பெண்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.


அப்படி இருந்தும், நாற்காலி காலியாக இருந்தாலும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாற்காலியில் உட்காரக்கூடிய துணிச்சல் பெண்களுக்கு இல்லை.
இப்பொழுது அப்படியில்லை. நாற்காலியில் பெண்கள் உட்கார்ந்து விட்டால், அந்த நாற்காலி மற்றவர்களுக்கு சுலபமாகக் கிடைக்குமா? என்று சந்தேகம் வரக்கூடிய அளவிற்கு வந்தாயிற்று.


இந்த மாறுதல்கள் எல்லாம் எப்படி வந்தன? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம்தான் சாதித்தது!

பெரியார் கேட்டார், ஆணும் - பெண்ணும் சமமாக இருக்கவேண்டும். இரண்டு கைகளுக்கும் சமபலம் இருக்கவேண்டும்; இரண்டு கண்களுக்கும் சம பார்வை இருக்கவேண்டும்; இரண்டு காதுகளும் சரியாகக் கேட்க வேண்டும்; இரண்டு கால்களும் சரியாக இயங்கவேண்டும். ஒரு கால், ஒரு கை இயங்கினால், அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர்.


அதுபோல், ஆண் - பெண் இந்த சமுதாயத்தில் இரண்டு பேர்களும் சரி சமமானவர்கள். இரண்டு பேர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும். ஆனால், மனுதர்மம் என்ற ஆரிய தர்மம், பார்ப்பன தர்மம் இந்த நாட்டில் உள்ளே புகுந்ததினால் என்ன நடந்தது என்றால், எந்தக் காலத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று ஒரு தர்மம் ஏற்பட்டது.
சுயமரியாதை இயக்கம், திராவிடஇயக்கம்தான் அதனை உடைத்தது. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்தான் இதற்கு முன்னோடியாக இருந்தார்கள்.


ஆகவே, இன்றைக்கு அதனுடைய விளைவுதான்; அந்தத் தொண்டினுடைய கனிந்த கனிகள்தான் இவர்கள் எல்லாம் இன்றைக்குப் பிடித்த மணமக்களாக இருக் கிறார்கள்.


ஆகவே, இந்த அற்புதமான வாய்ப்பில் உங்களை யெல்லாம் இந்தச் சந்திப்பதில், இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டு கிறேன்.


அடுத்தபடியாக, திருமணம் - வாழ்க்கை இணையேற்பு விழா. ஒருவர் எஜமானர் அல்ல; மற்றொருவர் அடிமை அல்ல. இரண்டு பேரும் நண்பர்கள். அவர்கள் சொன்னது போல், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் நண்பர்களாக இருந்துகொண்டு, ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் நல்லது.
நான் ஏன் மணமகனுடைய பெற்றோரை, அந்தக் குடும்பத்தினரை வெகுவாகப் பாராட்டுகிறேன் என்றால், ஜாதி என்பதற்கு ஒன்றும் அடையாளம் கிடையாது; அது இடையில் ஏற்பட்ட ஒரு கற்பனை. ஆதியில் ஜாதி கிடையாது. வள்ளுவருடைய குறள் என்ன?

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
அதுமட்டுமல்ல,

நமக்கு அனைத்துயிரும் ஒன்று என்று எண்ணித்தான் நம்முடைய சமுதாயம் வாழ்ந்திருக்கிறது.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

எல்லாமே நமக்கு ஊர்தான்; எல்லாருமே நமக்குச் சொந்தம்தான். யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வாழ்ந்தவன்தான் தமிழன்.


எப்படி ஜாதி நுழைந்தது? ஜாதிக்கு என்ன அடையாளம்?

அவனுக்கு அவ்வளவு பெரிய விரிந்த மனப்பான்மை, பரந்த மனப்பான்மை இருந்த இடத்தில் எப்படி ஜாதி நுழைந்தது? அந்த ஜாதிக்கு என்ன அடையாளம்? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


ரு உதாரணம் சொன்னால், உங்களுக்கு நன்றாக விளங்கும்.

அறிவியல் ரீதியாக ஜாதிக்கு ஆதாரம் உண்டா? தேர்தல் நேரங்களில் ஜாதி பயன்படுகிறது; மற்ற மற்ற இடங்களில் ஜாதி பயன்படுகிறது. ஆனால், அறிவியல்  ரீதியாக, கற்பனை என்று சொன்னாலும், அதன் காரணமாக படிக்காதவர்களாக, உத்தியோகம் மறுக்கப்பட்டவர்களாக, சமூகநீதி மறுக்கப்பட்டவர்களாக இருந்ததினால்தான், நாம் அந்த அடிப்படையை சொல்கிறோம்.

ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது

ஆனால், அதேநேரத்தில் நீங்கள் நன்றாக எண்ணிப் பாருங்கள்; அண்மைக்காலத்தில், ஒரு நல்ல மனிதநேயம் நம் நாட்டில் எத்தனையோ சங்கடங்கள் இருந்தாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

அந்த உதாரணத்தை உங்களுக்குச் சொன்னால், ஜாதி என்பது கற்பனை; ஆதாரமில்லாதது என்பது நன்றாக விளங்கும்.

அது என்னவென்றால்,

விபத்து நடக்கின்ற நேரத்தில், ஒரு சிலருக்கு மூளைச் சாவு ஏற்படுகிறது. அவர்கள் எல்லாம் கட்சிக்காரர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது;  பகுத்தறி வாளர்களாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மனிதநேய சிந்தனையாளர்களாக இருந்தால் போதும்.
மூளைச்சாவு அடைந்தவரின் பெற்றோர்களிடம், மருத்துவர்கள் சொல்கிறார்கள், என்ன செய்யப் போகிறீர் கள் என்று?

உடல் உறுப்புக் கொடை

அந்தப் பெற்றோர்கள் சொல்கிறார்கள், எங்களுடைய மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படட்டும்; அவன் உயிரோடு இல்லை என்பது எங்களுக்கு இழப்பு தான். இருந்தாலும், அவன் உறுப்புகளாவது மற்றவர்களுக் குப் பயன்படட்டும். ஆகவே, அவனுடைய உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாக அளிக்க சம்மதிக்கின்றோம் என்று சொல்கிறார்கள்.

உடல் உறுப்புக் கொடை என்பதிருக்கிறதே, இப் பொழுது பெரிய அளவில் மனிதநேயத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் ஒரு செய்தியை நீங்கள் பார்த்திருப் பீர்கள்; ஏனென்றால், தொலைக்காட்சி, பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிறைய இங்கே இருக்கிறீர்கள். அந்த செய்தி என்ன செய்தி என்றால், பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து, விமானம் மூலமாக சென்னைக்குக் கொண்டு வருகிறார்கள். காவல்துறை யினரின் உதவியால், போக்குவரத்திற்கு இடையூறின்றி, விமான நிலையத்திலிருந்து சென்னை அடையாறு மருத் துவமனைக்கு வருகிறது. அங்கே இதயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறிப்பிட்ட நேரத்திற்குள் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து,  அவருக்குப் புது வாழ்வு கொடுக்கிறார்கள்.


அதேபோல, கண் கொடை அளிக்கிறார்கள்; குருதிக் கொடை அளிக்கிறார்கள். தலைவர்கள் பிறந்த நாளில், நம்முடைய இளைஞர்கள் குருதிக் கொடை அளிக்கிறார் கள். நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அங்கே எங்காவது ஜாதிக்கு இடம் உண்டா? ஜாதி என்பது கற்பனை என்பது நிரூபணமாகிறது அல்லவா!


நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டால், நம்மாள் உடனே பதில் சொல்வான். சரி, உங்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று கேட்டால், தெரியாது என்று சொல்வான். பல பேருக்கு அவர்களுடைய குருதிப் பிரிவு என்னவென்று தெரியாது.

ஒவ்வொருவருக்கும் தங்களுடைய குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்

எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். குருதிப் பிரிவை முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், நமக்கு ரத்தம் வேண்டும் என்றாலும், குருதிப் பிரிவு தெரிந்திருக்கவேண்டும்; அவசரத்திற்கு நாம் ரத்தம் கொடுக்கவேண்டும் என்றாலும், நம்முடைய குருதிப் பிரிவைத் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.


அதனால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், மாணவர்கள் யார் சேர்ந்தாலும், முதலில் நாங்கள் செய்வது, அவர்களுடைய குருதிப் பிரிவு என்ன? என்று கேட்டு, அதனைப் பதிவு செய்து ஒரு அடையாள அட்டையைக் கொடுப்போம்.


ஆனால், இங்கே அமர்ந்திருப்பவர்களில் பல பேருக்கு தங்களுடைய குருதிப் பிரிவு தெரியாது. ஆனால், ஜாதியைப்பற்றி கேளுங்கள், நான் செட்டியாருங்க; என்ன செட்டியார் என்று கேட்பான்; செட்டியாரில் பல பிரிவு இருக்கும்; பிரிவுக்குள் பிரிவு என்று அது நீண்டுகொண்டே போகும். ஆகவே, ஜாதிக்கு எங்கேயாவது அடையாளம் இருக்கிறதா? கிடையவே கிடையாது!
உதாரணத்திற்கு, ஒரு அய்யங்கார் அடிபட்டு விட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; ரத்தம் தேவைப்படுகிறது.  அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ்.  உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்.


டாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான் தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.


உடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார், நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.


அய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்கிறார்.


டாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத் தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்களு டைய உடம்பில் ஏற்றவேண்டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும் அல்லவா? நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்கமாட்டீர்களா? என்று சொல்கிறார்.


பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று!

இப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷன்ட்டான அய்யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்; நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா?


என்ன டாக்டர் நீங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள்? உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத் தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.


அப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு, தாழ்த்தப்பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று சொன்னால், இது செயற்கையானது அல்லவா? இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா? இயற்கையானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.


செட்டியார் ரத்தம் செட்டியாருக்கு இல்லை; வன்னியர் ரத்தம் வன்னியருக்கு இல்லை; முதலியார் ரத்தம் முதலியா ருக்கு இல்லை; நாடார் ரத்தம் நாடாருக்கு இல்லை.


ஆகவேதான், நன்றாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதி என்பது கற்பனை; எனவே, இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே மணமக்கள் இரண்டு பேரும் மிகவும் மகிழ்ச்சியாக அதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் - பாடினி ஆகிய இருவருக்கும் ஏற்பட்டிருக் கின்ற மிகத்தெளிவான இந்த வாய்ப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.


எனவேதான், இந்தக் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்த மணமக்கள் அருமையான ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.


ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும்
ஆகவேதான், இந்த நிலையில், இவர்கள் இந்த ஏற்பாட்டினை செய்தது, பாராட்டத்தக்கது என்று சொல்லி, இந்த மணமக்கள் இருவருமே சிறப்பாக வாழவேண்டும், சிக்கனமாக வாழவேண்டும், மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழவேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி,
மணமக்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக  இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லி, சிறப்பான வகையில் இவர்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, புரிந்துணர்வோடு வாழவேண்டும் என்று சொல்லி,
இந்த மணமுறையைப் புகுத்தியவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார்; இம்மணமுறைக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். ஆகவே, அந்த இருபெரும் தலைவர்களுடைய தொண் டுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                                                    ----------------------”விடுதலை” 27-11-2014


20 comments:

தமிழ் ஓவியா said...

விவசாயிகள் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு



காவிரியின் குறுக்கே கருநாடகத்தில் அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவளிக்கிறது. விவசாய அணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்பர். காலம் கருதி நடைபெறும் இப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.

- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/91938.html#ixzz3KK8urrwG

தமிழ் ஓவியா said...



நேரு குடும்பத்துக்குப் பெண் கொடுக்க மாட்டோம்!

வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் கூறுகிறார்

இலண்டன் தயாசின்கின் அம்மையார் 1962ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகம் CASTE TODAY.
. வெளி நாட்டவருக்கு ஜாதி முறை தெரியாது. தொடக் கூடாத வர்கள் என்று உண்டா? எங்கள் நாட்டில் மின்சாரத்தைத் தான் தொடக்கூடாது என்று இருக்கிறது என்பார்கள். பாபாகேப் அம்பேத்கர் ஜாதி பேதம்குறித்துக் கூறும் போது, Graded inequality அடுக்குமுறை ஏணிப் படிக்கட்டு முறைப் பேதம் என்று கூறுவார்கள். அடுக்கு முறைப் பேதத்தில் பெண்கள் எல்லாருக்கும் கீழாக உள்ளார்கள். ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தபோது பெண்களை அழைத்துக்கொண்டு வர வில்லை. ஆகவே, பெண்களை அடிமைகளாகவே கருதி னார்கள்.CASTE TODAY எனும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

Eating meat ia considered polluting, yet all kshatryas-and they come next to the Brahmins-eat meat. There are even Brahmins, the Pandits of Kashmir, who not only eat meat but eat it in the company of Muslims; they continue to be Brahmins and remain entitled to look upon all non-Brahmins as inferior.

But Brahmins who observe vegetarianism look on Kashmiri Pandits with a disgust reminiscent of what many Britons would feel if a frog was served on their plate. The late Sir Girija Shankar Bajpai, Secretary General for Foreign Affairs, once told me that it was only because he was truly westenised that he could bring himself to eat at the same table as the Prime Minister. ‘But you are both Brahmins’, I ventured, ‘so what is the difficulty?’ ‘He is a Kashmiri Pandit. I am a Kanya Khubja, I belong to the highest hierarchy of Brahmins, the ones who are Chaturvedis (of the four Vedas), we are strict vegetarians by caste, atleast at home; but Nehru is a Kashmiri Pandit, his ancestors were reared on meat and fish... I would not wish a girl of my family to marry into his although I have the highest regard for him as Prime Minister.’

அதன் தமிழாக்கம் வருமாறு:

இறைச்சியை உண்பது இழிவானது. இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சத்திரியர்கள் இறைச்சியை உண்கிறார்கள். பார்ப்பனர்களிலேயேகூட, காஷ்மீர் பண்டிட்டுகள் இறைச்சியை உண்பதுமட்டுமன்றி முசுலீம்களுடன் சேர்ந்தே உண்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பார்ப்பனர்களாகவே தொடர்ந்து இருப்பதுடன் பார்ப்பனர் அல்லாதவர்களை இழிவாகவே கருதி வந்துள்ளார்கள்.

ஒரு தட்டில் தவளைக்கறியை வைத்திருக்கும்போது பிரிட்டானியர்கள் முன்னிலையில் சைவர்கள்போல் காஷ்மீர் பார்ப்பனர்கள் தோற்றம் அளிப்பார்கள். மேனாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் மறைந்த சர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் ஒருமுறை கூறும்போது, பிரதமராக இருந்த நேருவுடன் மேற்கத்திய கலாச்சாரத் தின்படி ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்போம் என்றவரிடம் நீங்கள் இருவரும் பார்ப்பனர்கள்தானே? அதில் என்ன கஷ்டம்? என்று கேட்டபோது, நேரு காஷ்மீர் பண்டிட். நான் கன்யா குப்ஜா, பார்ப்பனர் களிலேயே நான் உயர் ஜாதியைச் சேர்ந்தவர் ஆவேன். ஒரு காலத்தில் நான்கு வேதங்களையும் கற்ற சதுர் வேதிகள். நாங்கள் ஜாதியால் சைவத்தில் குறைந்தபட்சம் வீட்டிலாவது கடுமையாக இருப்போம். ஆனால், நேரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனர் அவர்களின் மூதாதையர் இறைச்சி மற்றும் மீனை சாப்பிடுபவர்கள். நேரு பிரத மராக என்னால் அதிக அளவில் மதிக்கப்பட்டாலும், எங்கள் குடும்பத்திலிருந்து பெண்ணை, அவர் குடும் பத்தில் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறினார், பார்ப்பனரான மேனாள் வெளியுறவுச் செயலாளர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய்.

தாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 26.11.2014

Read more: http://viduthalai.in/e-paper/91943.html#ixzz3KK943j2p

தமிழ் ஓவியா said...

சொல்ல வேண்டும்


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/91917.html#ixzz3KK9HZlkF

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மார்க்கண்டேயன்

திருக்கடவூரில் குடி கொண்ட மார்க்கண்டே யனின் மரணம் நெருங் கியதால் எமதர்மன் அவனை நெருங்கிய போது, மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். எமன் அப்போதும் தன் பாசக் கயிற்றினை மார்க் கண்டேயன் மீது வீசி னான். அப்பொழுது சிவன் வெளிப்பட்டு மார்க்கண்டேயா அஞ் சாதே! என்று கூறி தன் இடது பாதத்தைத் தூக்கி எமதர்மனை உதைக்க எமன் தன் பரிவாரங் களுடன் உயிர் துறந்தான் என்று இன்றைய தினமணி கூறுகிறது.

எமதர்மன் செத்துப் போனது உண்மையா னால் இப்பொழுதெல் லாம் பாசக் கயிற்றினை வீச ஆள் இல்லாமல் போய்விட்டதா?

இன்னொரு கேள்வி யுண்டு. மார்க்கண்டே னுக்கு என்றும் பதினாறு வயது (அந்தமிலா வாழ்வு) என்ற வரம் கொடுத்தானே சிவன் -அந்த மார்க்கண்டேயன் இப்பொழுதும் உயிரோடு இருக்க வேண்டுமல்லவா? இப்பொழுது தேடிக் கண்டுபிடித்து நாத்தி கர்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவார்களா ஆன்மிகவாதிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/91975.html#ixzz3KNnF6DSk

தமிழ் ஓவியா said...

இனி ஜாதி, மத அடிப்படையில் வீடு விற்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது மும்பை மாநகராட்சி

மும்பை, நவ.28- மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ கூடாது என்று மும்பை மாநக ராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன, விற்பனை செய்யப்படு கிறது. முஸ்லீம்கள், அசைவ பிரியர்களுக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பாலிவுட் முஸ்லீம் பிரபலங்களுக்குக் கூட மும்பையில் வீடு கிடைப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.

இந்நிலையில் ஜாதி, மத, உணவு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடுவது, விற்பனை செய்வது கூடாது என்று மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கவுன்சிலர் சந்தீப் தேஷன்பாண்டே கொண்டு வந்தார். இதற்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. ஆனால் ஆளும் பாஜகவோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் செயல்வடிவம் பெறுவதும், பெறாமல் போவதும் மாநில அரசின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/91971.html#ixzz3KNnMAy3p

தமிழ் ஓவியா said...

சேவை என்பது...

சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.
(குடிஅரசு, 17.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/91959.html#ixzz3KNnWbqr6

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்ப்பு



புதுடில்லி, நவ.28_ தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் மேலும் சில இனங் களைச் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. கேரளா, ம.பி., திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில இனங்கள் தாழ்த்தப்பட்டடோர் பட் டியலில் சேர்க்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி மக்களவையில் நடைபெற்ற குரல் வாக் கெடுப்பு மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதே நேரத்தில் மதம் மாறி வந்த தலித் இனத் தவர்களையும் தாழ்த் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேசிய அதிமுகவின் கோபால கிருஷ்ணன், ஏஅய்எம் அய்எம் கட்சியின் அசாது தீன் ஓவைசி ஆகியோரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/91967.html#ixzz3KNnhp8dl

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக் கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/92008.html#ixzz3KNoWeGN3

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை. - நேரு

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்

Read more: http://viduthalai.in/page-7/92008.html#ixzz3KNoevLAE

தமிழ் ஓவியா said...

ஏழு மொழிகள்


1. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்

2. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

3. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. தேசியம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

Read more: http://viduthalai.in/page-7/92009.html#ixzz3KNomM5CB

தமிழ் ஓவியா said...

போ நரகத்துக்கு!


பெண்களுக்கு 16 வயதுக்குப்பின்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களை 10 வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்காத தந்தை நரகத்துக்குப் போவான் என்று சாஸ்திரம் கூறுகிறது!

8 வயது பெண்ணை கன்னி என்றும், 9 வயது பெண்ணை ரோகினி என்றும், 10 வயது பெண்ணை கவுரி என்றும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை ராஜஸ்வலை (தீண்டத்தகாதவள்) என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது.

பெண்ணுக்கு 10 வயதில் திருமணம் நடத்துபவன் சொர்க்கத்துக்கு போவான். 9 வயதில் திருமணம் செய்பவன் வைகுண்டம் போவான். 8 வயதில் திருமணம் நடத்தினால் பிரம்மலோகம் போவான், 10 வயதுக்கு மேற்பட்டால் நரகம் போவான் என்கிறது, சாஸ்திரம்.

கவுரீம் ததந் நாகப்ருஷ்டம் வைகுண்டயாதி ரோகிணீம்

காந்யம் ப்ரஹ்ம லோகம் கவுரவம் துரஜ்வலாம்.

தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத்

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp1lNtQ

தமிழ் ஓவியா said...

மேயோ கூற்று!

இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண் டவாறு குறிப்பிடுகின்றார்:

புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.

புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண் ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று!

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp9pI6z

தமிழ் ஓவியா said...

இதுவும் செய்யமுடியுமா?

நோயென வந்த போது திருநீறு
கொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்
மானிடனை வாட வைக்கும்
பசிப்பிணியைத் தீர்க்க முடியுமா?
காற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு
ஒட்டும் கேடுகெட்ட சாமியார்கள்
மானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா?

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNpFPJTj

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்? - சனிப்பகவான்



சனிப்பகவான் பெயர்ச்சியையொட்டி விசேஷ யாகம், ஜெபம், ஹோமம், சிறப்பு முறை யில் பூஜைகள் சென் னையில் நடைபெறும் என்பது ஒரு செய்தி.

சனிக்கோளின் ஆரமே 142கோடியே 67 லட்சத்து 25400 கி.மீ. பூமியைவிட 764 மடங்கு பெரியது. இது பெயர் கிறதா? பெயர்ந்து யார் தலையில் விழ வேண் டுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/92040.html#ixzz3KTI18Kky

தமிழ் ஓவியா said...

ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? : பாரதிராஜா

சென்னை, நவ.29_ நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்?. அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டி யளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படை யான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டி விட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது.

சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக் கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத் துவமும் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க.

வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா? சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''. சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமா வில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்! நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட் டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபா லிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!". இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/92033.html#ixzz3KTJFElxK

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை பண்ணும் அந்தணனுக்கும்
பஞ்சாங்கப் பார்ப்பானுக்கும் சம்பாஷணை

வந்ததே மோசம்
(உற்றுக்கேட்டவன்)

பஞ்சாங்கப் பார்ப்பனன்:- டே! ஊருமொதுலு சுப்பு! எங்கு செல்கிறாய்? இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி? எங்கே?

அர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்துவிடும். நீவண்னா மணக்குறாயோ, நானாவது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத்துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.

ப-பா:- எதற்கு வீண் சண்டை? எங்கு செல்கிறாய்? என்ன விசேஷம்.

அ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத்திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.

ப-பா:- ஆனால் நானும் அங்குவரலாமோ! தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ? அந்த இடம் தாராள கைகள் தானே? எத்தனை மணிக்குப்போக வேண்டும்?
அ-அ:- ஆஹா! அவன் பெரும்பணக்காரன். கைவீச்சு ஜாதிதான், வாநீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.

ப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டுவிட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.

அ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன். அப்படியானால் இன்னும் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா?
ப-பா:- சரி போகலாம்.

அ-அ:- டே, சுப்பு! ஒரு செய்தி கேட்டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.

ப-பா:- என்ன! உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன? அ-அ:- இது தெரியாதா? இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக்கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட்டிருக்கு.

ப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.

அ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித்தனமாய் பேசி னாரே என்ன சொல்வது?

ப-பா:- என்ன அதிகப் பிரசங்கித்தனம்?

அ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப்போவேணும் என்று பேசியிருக்கிறான்.

ப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண்டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனியாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசியத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதையைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.

அ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.
ப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்சமாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா? நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன? யோசிக்கிறாய்.

அ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிராயத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப்படக்கூடாது.

பிறகு இவ்விருவரும் குளித்துக்கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 27.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTJnFXdC

தமிழ் ஓவியா said...

தீண்டாதார் கல்வி

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதி களும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப் பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளி யிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத் தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர்.

ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங் களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.11.1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTK37yFD

தமிழ் ஓவியா said...

இதுதான்பிஜேபிஆளும்டிஜிடல்குஜராத்!

பணத் தேவைக்காக பெண்கள் சமூகவலைதளம் மூலம் உடலை விற்கும் கொடுமை!

அகமதாபாத், நவ.30_ இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொய்ப்பிரச் சாரம் செய்யப்பட்ட மாநிலத்தில் தான், ஆங்கி லேய இணையரின் கருவை சுமந்து குழந்தைப் பெற்றுத்தரும் வாட கைத்தாய் அதிகம் உள் ளனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இது ஓர் அறிவியல் வளர்ச்சியின் ஒருபடி என் றாலும் இந்துத்துவாக் களின் பார்வையில் இது எப்படித் தெரிகிறது என் றும் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். இது தான் குஜராத் தின் வளர்ச்சியோ என் னவோ! ஆனால், இதை விட ஒரு சம்பவம் அரங் கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ஒரு 18 வயது பெண் முகநூலில் தகவல் ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் என் பெற் றோர் உடல்நிலை சரி யில்லை, தொடர்ந்து எனக்கு செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் எனது உடலை நான் விற் பனைக்கு விட்டிருக்கி றேன். ஓர் இரவுக்கு இவ்வளவு இதில் யார் அதிகம் தருகிறார்களோ அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முன் பணம் கொடுத்துவிட்டு வரலாம், என்று தனது எண்ணுடன் பதிவு செய் துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் உள்ளூர்ப் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கு வேலை யில்லை, ஆங்காங்கே கிடைக்கும் கூலித் தொழில் தான் செய்துவந் தார். இந்த நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி வேலைக்கு செல்ல இயலாத நிலை ஆகிவிட்டது. என் அம்மாவின் நிலையும் அதே தான் தற் போது இருவருமே நட மாட இயலாத நோயாளி யாகி விட்டார்கள். அவர் களுக்கு மருத்துவச் செலவே ஒருநாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. இருவருமே நோயாளி களாகி விட்டதால் வறு மையின் காரணமாக நான் எனது கல்வியைப் பாதியில் நிறுத்திவிட் டேன். சிலர் என்னை மாடலிங் வேலை தருகி றேன் என்று சொல்லி அழைத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் அனை வரும் என்னிடம் தவறாக நடக்கப் பார்த்தார்கள். வீடுகளில் வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொல்லை

சில வீடுகளில் வேலைக் குச் சென்றேன் அங்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள், அந்த வீட்டுப்பெண்களிடம் புகார் செய்தால் என்மீதே குற்றம் சுமத்தி விரட்டி விட்டார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுத்தேன். இங்கு வறுமையில் சிக்கி இருக்கும் பலர் வெளியில் தெரியாமல் தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் பார்க்கின்றனர். எனக்கு யாரும் தெரியாது, மேலும் நான் வேலைக்குச் சென்றாலும் யாரிடம் உதவிகேட்டாலும் உடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். எனக்குப் பணம் தேவை ஆகவே தற்போது நானே சமூக வலைதளங்கள் மூலம் எனது உடலை விற் கும் முடிவிற்கு வந்து விட் டேன் என்று கூறினார். இதுகுறித்து வதோ தரா சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, குஜராத்தில் வேலையில் லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை தலைவிரித்தாடுகின்றன. குஜராத் அரசின் தொழி லாளர் கொள்கையின் காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்குத் தொழி லாளர்களை உடனடி யாகப் பணி நீக்கம் செய் வது அதிகமாகிக்கொண்டு வருகிறது, ஆகையால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தாங்கள் எப்போது பணி யில் இருந்து நீக்கப்படு வோம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அப்படி நீக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லாத நிலையில் வய தானவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் முழுவதுமே வறுமையி ருள் சூழ்ந்துவிடுகிறது. இந்த நிலையில், பல் வேறு குடும்பப்பெண்கள் தங்கள் உடலைவிற்க முன்வந்துவிடுகின்றனர். தானாக முன்வந்து விலை மாதர்களாக...

காரணம் அவர்கள் தனியாக பணிக்குச் செல் லும் நேரத்தில் அவர் களை ஆண்கள் தவறாக பயன்படுத்த முனைகின் றனர். இதனால் சில பெண்கள் தாங்களாகவே விலைமாதர்களாக மாறிவிடும் அவலம் நிகழ் கிறது. இந்தப்பெண் சமூக வலை தளத்தில் வெளி யிட்டதாக பத்திரிகையில் வந்துள்ளது. அப்படி வெளியிடாத ஆயிரக் கணக்கான குஜராத்திப் பெண்களின் நிலை பரிதா பத்திற்குரியது என்று கூறினார். தேர்தல் காலத்தில் குஜராத் மாடல், டிஜிடல் குஜராத் என்று நாடெங் கும் கூறி வாக்குக் கேட் டனர்; ஆனால், ஒரு மாடல் அழகி வறுமை யின் காரணமாக டிஜிடல் விலைமாதராக மாறும் சூழலில் தான் குஜராத் உள்ளது. இந்த வதோ தரா தொகுதி மோடி போட்டி யிட்டு வென்ற பிறகு கழற்றி விடப்பட்ட தொகுதியாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/92055.html#ixzz3KYErHfgI

தமிழ் ஓவியா said...

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது


எச்.ராஜாவின் பேச்சு
கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது
தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

மணப்பாறை, நவ.30- மணப்பாறையில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (30.11.2014) பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: வைகோ அவர்களுக்கு எச்.ராஜா மிரட்டல் விடுத்ததுபற்றி தங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், எச்.ராஜா பேசியுள்ளது கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்கவேண்டிய கடமை வைகோவிற்கு உண்டு.

செய்தியாளர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து, இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று கூறியிருப்பது பற்றி....?

தமிழர் தலைவர்: திருக்குறள் ஒரு மத நூலாக ஆக்கிவிடக்கூடாது; தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இதை வைத்து காலூன்ற முனைகிறார்கள். அது நடந்துவிடக்கூடாது.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/92057.html#ixzz3KYF0e7Xf

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆத்மா

நாம் மரண இருளின் பள்ளத் தாக்கிலே செல்லாதபடிக்கு தேவன் தம்முடைய ஒரே பேரான இயேசு கிறிஸ்துவை இவ் வுலகத்தில் உள்ளோர்க் குத் தந்து நம்மை அழி வினின்று மீட்டெடுத்தார். இது தேவன் நம்மீது கொண்ட அளவில்லாத அலாதி அன்பாகும். மீட் கப்படாதவர்கள் அக்னி கடலுக்குத் தள்ளப்படு வார்கள் இதுவே நம் ஆத் மாவின் பயணமாகும் என்கிறது கிறித்துவம். இதன்படி மரணத்திலி ருந்து மீட்கப் பட்டவர்கள் யாரேனும் உண்டா? இருந் தால் சொல்லட்டுமே பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/92058.html#ixzz3KYFEzYk6