Search This Blog

5.11.14

சூத்திரர்கள், தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்?-பூரி சங்கராச்சாரியார்

சிறையில் இருக்க வேண்டிய சங்கராச்சாரியர்கள்


சங்கராச்சாரியார்


பூரி சங்கராச்சாரியார் பற்றி கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ஏடுகளில் பரபரப்பாக ஒரு செய்தி வெளிவந்தது.

தாழ்த்தப்பட்டவர்களும், சூத்திரர்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது. சாத்திரம் அனுமதிக்கவில்லை என்று கூறிய பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் பூரி சங்கராச்சாரியார் உருவப் பொம்மையை எரித்தனர்.

கோவில் என்பது தூய்மையாக இருக்க-வேண்டிய ஓர் இடமாகும். இங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு என்ன வேலை? வர்ணாஷ்ரமம் கூறியதைத் தெளிவாகப் பின்பற்ற வேண்டும் என்று பூரி சங்கராச்-சாரியார் பேசி உள்ளார்.

ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்தா பேசும்போது பகவத் கீதையில் 16ஆவது அத்தியாயத்தில் வர்ணாஷ்ரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர்களுக்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும். இதற்காகத்-தான் வர்ண முறையை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள். அதாவது சனாதனிகள் கோவிலுக்குள் நுழையத் தடையில்லை. ஆனால் சூத்திரர்கள், தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்? வர்ணாஷ்ரம கொள்கையின்படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும். அப்படி இருக்க தூய்மைப்-படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும். இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறியதாவது:
சங்கராச்சாரியாரின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. அவர் சாஸ்திரத்தை மேற்கோள்-காட்டிப் பேசினார் என்று முட்டுக் கொடுத்துள்ளார்.
சங்கராச்சாரியாரின் இந்தப் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் ஞாயிறு (19.10.2014) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஜார்கண்ட் காவல்துறை பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
பல்வேறு அமைப்புகள் கண்டனம்
பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், உயர் ஜாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப்பவர்களுக்குத்  துணிச்சலை ஊட்டும் செயலாக இருக்கிறது என்று பல்வேறு அமைப்புகள் சங்கராச்-சாரியாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

18.10.2014 அன்று கிழக்கு டில்லியில் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடினர். பிறகு சங்கராச்சாரியாரின் உருவப் பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது. கான்பூர் டில்லி முக்கிய சாலையில் ஒன்றுகூடிய போராட்டக்-காரர்கள் சங்கராச்சாரியாரை உடனடியாகக் கைது செய்யச் சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர் கழகம், தலித் சமூக அமைப்பு, அகில பாரதிய சபாய் மஸ்தூர் காங்கிரஸ் மற்றும் வால்மீகி மஸ்தூர் சங் போன்ற அமைப்புகள் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின.
டில்லி மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர் கழகத்தின் தலைவர் சஞ்சய் கேலத் கூறும்போது சமூகத்தில் கல்வி கற்று மருத்துவர்களாகவும், இந்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகவும் (அய்.ஏ.எஸ்.) மற்றும் அரசியல் துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கும் தலித்துகளை மிகவும் கீழ்த்தரமாக தூய்மையற்றவர்கள் என்று கூறிய சங்கராச்சாரியை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று செய்தி வருகிறது. சமூகத்தில் ஒருவர் தீண்டாமையைப் பச்சையாக ஆதரிக்கிறார், அவர் ஒரு மதத் தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்குத் தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்கள்  இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா? என்று கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அனல் கக்கப் பேசினார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
ganthi
இந்தப் பூரி சங்கராச்சாரியார் மட்டுமல்ல. இதற்கு முன்பு இருந்த பூரி சங்கராச்-சாரியார்களும் ஜாதி  தீண்டாமையைக் காப்பாற்றுவதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன தேவ திருத்தா

மணியன் கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே, அதைப்பற்றி...?

பூரி சங்கராச்சாரியார்: அர்ச்சனை நடத்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரியில்லை.
மணியன்: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்குப் பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி இவர்-களுக்கு ஏற்படலாமே?

பூரி சங்கராச்சாரியார்: அவர்களுக்குத் தகுதியில்லை, அவ்வளவுதான். மேலே இதைப்பற்றிய விவாதத்திற்கே இடம் இல்லை.
மணியன்: சாதுர்வர்ணா மய சிருஷ்டம் என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றி சுவாமிகள் என்ன கருதுகிறீர்கள்?

பூரி சங்கராச்சாரியார்: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகை-யினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

மணியன்: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றுதானே கீதாசிரியன் கூறுகிறார்?

பூரி சங்கராச்சாரியார்: இக்காலத்துக் குண கர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குண கர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குலத்தில் பிறக்கிறான். அந்தக் குலப்படி அவன் கடமை ஆற்றவேண்டும்; அதிலிருந்து தப்ப முடியாது.

             --------------------- ---------------------16.6.1974 ஆனந்த விகடனில் வெளிவந்த பூரி சங்கராச்சாரியார் - மணியன் பேட்டி.


அதற்கு முன்பும் 1965இல் இதே பூரி சங்கராச்சாரியார் எந்த மருத்துவ அறிஞரும் கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டுபிடித்து(--?) திருவாய் மலர்ந்தருளினார்.
வர்ணாசிரமம்
கேரளத்தில் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று காலடி என்ற ஊரில் நடைபெற்ற அகில இந்திய பார்ப்பனர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூரி சங்கராச்சாரி குறிப்பிட்டதாவது:

ஆண்டவன் ஒரு மனிதனுக்குச் செய்யும் உயர்ந்த சிறப்பு அவனைப் பிராமணனாகப் பிறக்க வைப்பது, அப்பெருமைக்குத் தகுந்த வகையில் நடந்துகொள்வது பிராமணர்களது கடமையாகும். (ஆதாரம்: இந்து 8.12.1965 பக்கம்: 12)

அது மட்டுமா? பச்சையான ஒரு வர்ணாசிரமவாதிதான் என்று பகிரங்கமாகக் காட்டிக் கொண்டதும் இதே பூரிதான்.

எப்போது வர்ணாசிரமம் தழைக்கிறதோ அப்போதுதான் பாரதம் க்ஷேமம் அடைய முடியம், உலகமும் க்ஷேமம் அடையும்.

எல்லோரும் சமம் என்று வாழும் பிரச்சாரம் இக்காலத்தில் பரவிக் கிடக்கிறது. ஜாதி வகுப்புகளற்ற சமுதாயம் என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்ளப்படுகிறது. சிருஷ்டியில் சமம் என்று வாதிப்பது சரியானதா? பிறக்கும்போதே ஆண் பெண் என்ற வித்தியாசத்துடன்தானே பிறக்கின்றோம்?

ஒரே சமயத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளேயே தோற்றம், குணம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே. பஞ்சேந்திரியங்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனமாகப் பார்த்தால் எத்தனையோ பேதங்கள் இருப்பது புலப்படும். இரட்டைக் குழந்தைகள் இடையே கூட பல பேதங்கள் இருக்கின்றன.

நமது தேகத்தில் ஓடும் இரத்தத்தில்கூட அல்லவா வேறுபாடுகள் காணப்படுகிறது. மேனாட்டு ரத்தப் பரிசோதனை நிபுணர்கள் மனுஷ்ய சரீரங்களில் ஓடும் ரத்தத்தை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஓ, ஓஏ, ஏபி, பி என்பவையே அவை.

இவற்றில் ஓ என்பது உயர்ந்த வகையான ரத்தம். இன்று ரத்த ஓட்டத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்பத்தான் நமது முன்னோர்கள் மனித சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்திருக்கின்றனர். இதை ஆதாரமாகக் கொண்ட வர்ணாசிரமம் தழைக்குமானால் பாரதம் க்ஷேமம் அடையும்; உலகமும் க்ஷேமமுறும் என்றார்.

பூரி சங்கராச்சாரியார் (கோவர்த்தன பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சார்யாள் நிரஞ்சனா என்ற தீர்த்த சுவாமிகள்.)
 
               ----------------------18.3.1965 அன்று சென்னை தியாகராயநகரில் உள்ள சிருங்கேரி சங்கரர் மடத்தில்தான் இவ்வாறு பேசினார். (ஆதாரம்: சுதேசமித்திரன், பக்கம்: 2, 22.3.1965)

சாதாரண பொதுமக்களுக்குத் தெரிந்த பொது அறிவுகூட இல்லாதவர்கள்தான் இந்த நாட்டில் ஜெகத் குருக்கள்.

இவர் சொல்லுவதைப் பார்த்தால் பார்ப்பனர்களுக்கெல்லாம் ஒரே வகையான ஓ வகையோ! தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒரே வகையான பி பிரிவோ! இந்தக் காலத்தில் எல்.கே.ஜி.யில் படிக்கும் பையனுக்குள்ள அறிவுகூட இல்லாதவர் தான் இந்து மதத்தில் லோகக்குரு! (வாயால் சிரிக்க முடியவில்லை அல்லவா!)
இன்னும் இருக்கிறது. இதே பூரி மடத்து சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தேவ் அளித்த பேட்டி ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (23.6.1988) வெளிவந்தது.

Acharya who defends Sati, Casteஎன்பது பேட்டியின் தலைப்பு. அதில் ஓரிடத்தில் கூறுகிறார்.

The Sankaracharya argued that caste was  based on “Religious principles.
He challenged anyone to point out a single harijan who could be rated equal to a brahmin.
When a reporter said that Dr. Ambedkar could be one, the acharya lashed out ‘The Constitution is full of mistakes owing to Dr. Ambedkar. One expert has pointed out 540 mistakes in the constitution.’’
ஒரு பிராமணனுக்கு இணையான ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவரைக் காட்ட முடியுமா? என்று பூரி சங்கராச்சாரியார் சொன்னபொழுது செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். ஏன் அம்பேத்கர் இல்லையா என்றதும், சீறிப் பாய்ந்த பூரி சங்கராச்சாரியார் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உண்டாக்கியதால்தான் இந்திய அரசியல் சட்டம் முழுவதுமே குறைபாடுகள் நிறைந்ததாகிவிட்டது.
540 குறைகள் இந்திய அரசியல் சட்டத்தில் இருந்ததாக ஒரு நிபுணர் சொன்னார் என்று பூரியார் சொன்னாரே! சதியை ஆதரிக்கிறேன் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார்.

பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூற விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கச் செய்தவரும் இதே பூரி சங்கராச்சாரியார்தான். தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழக மகளிர் அணியினர் பூரி சங்கராச்சாரியார் உருவப் பொம்மைகளை எரிக்கும் போராட்டத்தை நடத்திக் கைதானார்கள். (17.2.1994)

ஏதோ பூரி சங்கராச்சாரியார் தான் இப்படிச் சொன்னார். இப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்று கருதிவிடக் கூடாது. மகா பெரியவாள் என்று பார்ப்பனர்கள் புகழ்ந்து தள்ளுவார்களே _ அவர் பேசினால் தெய்வத்தின் குரல் என்பார்களே, அந்த மறைந்த  சந்திரசேகரேந்திர சரஸ்வதி எப்படிப்பட்டவர் தெரியுமா?
தீண்டாமையைப் பச்சையாக க்ஷேமகரமானது என்று கூறியவர்தான். (ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங்கள்)

தீண்டாமை ஒழிப்புக் குறித்து இந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆதரவு கோரி காந்தியார் வந்தார். அப்பொழுது பாலக்காட்டில் இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்தியாரை மாட்டுக் கொட்டகையில் வைத்து சந்தித்தார்.(16.10.1927) காரணம், காந்தியார் பிராமணர் அல்லவே, வைசியர் ஆயிற்றே!
அப்பொழுது காந்தியாரிடம் சங்கராச்சாரியர் என்ன கூறினார்?

ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது என்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.

            -------------------------(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி  பக்கம்: 575_576)

சங்கராச்சாரியாரின் கருத்துகளை தெய்வத்தின் குரல் என்ற பெயரில் தொகுத்தவரான ரா.கணபதி காஞ்சி பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வைர விழாவையொட்டி வெளியிட்ட மலரில் ஆசார சீலம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிடுவதாவது:

தீண்டாமை ஒழிப்பை ஸ்ரீசரணர் எப்படி வரவேற்கப் போகிறார் என்று உலகம் ஆர்வமுடன் நோக்கியபோது அவர் வைதேகியை எட்ட நிறுத்தி வைத்த ராகவனாகவே நடந்து கொண்டார். ஆனால் அக்னிப் பிரவேசத்தை இவரே செய்தார். தீண்டாமை ஒழிப்புக்கு இவர் இணக்கம் தந்திருந்தால் மிக மிகப் பாபுலர் ஆகியிருக்கலாம். ஆனால் தமது இளமையிலும் ஆம், அப்போது குருநாதனுக்கு யௌவன பிராயம்தான். அதற்கு ஆசை வையாமல் தமக்கு விதிக்கப்பட்ட கடமைத் தீயிலேயே குதித்தார். பழைய சமூக ஏற்பாடுகளைப் பற்றி ஒழுகுவதற்கே நாம் ஒரு பிரதிநிதி என்று புரிந்து கொண்டு செயலாற்றினார். காமகோடி பீடாதிபதிகளாகிய அவர் சொந்த விருப்புகளுக்கு இடம் தருவதற்கில்லை. நீதிபதியிடம் சட்டப்படித் தீர்ப்புத் தந்து விட்டீர்கள், ஆனால் உங்கள் சொந்தக் கருத்தென்ன? என்று கேட்பார்களா? சட்ட விஷயங்களில் சொந்தக் கருத்தையே இழந்து விடவேண்டியவரானார். குருநாதன் பழைய சாஸ்த்ரங்களில் கரைந்து விட்டவர். அதன்படியே நடக்க வேண்டியவர்; சொந்த அபிப்பிராயம் என்பதற்கு இங்கு இடமில்லை. தனி சந்நியாசியாக இருந்தால் இவர் சொந்தக் கருத்து வெளியிடலாம். ஆனால் காமகோடி பீடாதிபதிகளாக இருப்பதால் தம்மையே பழைய ஏற்பாடுகளுக்குச் சரணாகதி செய்து விட்டவர். ஆம், சரணாகதி என்பதுதான் சரியான வார்த்தை. நம்மால் இவரிடம் அடைய முடியாத சரணாகதியை இவர் தமக்கு விதிக்கப்பட்ட பூர்வீக சாஸ்திரங்களிடம் அடைந்துவிட்டார்.
தீண்டாமை குறித்துப் பழைய வழக்கங்களையே பின்பற்ற வேண்டும் என்று குருநாதன் கூறியபோது ஆதரித்தவர்களும் இருக்கத்தான் செய்தனர். எனினும் ஏமாந்தவர்கள் பலர். வருந்தியவர்கள் பலர். ஆத்திரமடைந்தவர்களும் பலர். புதிய வழியில் செல்வதற்கு இவருக்கு அதிகாரம் இல்லை என்று கண்டவர்கள் இவரது கருத்தில் மாறுபாடு கொண்டிருந்த போதிலும், தமது கடமையை இவர் ஆற்றும் செவ்வியை மதித்தனர். தீண்டாமை ஒழிப்பை எடைக்கல்லாக வைத்துக் கொண்டு இவரை நிறுத்தப் பார்க்கக் கூடாது என்று அவர்கள் உணர்ந்தனர். 1932இல் காந்தியடிகள் விருப்பப்படி ராஜாஜி, ராஜன்பாபு முதலியோர் குருநாதனுடன் சென்னையில் 2 மணி நேரம் ஆலோசனை செய்தனர். அதன்பின் ராஜாஜி இதைத்தான் கூறினார். இந்தப் பிரச்சினையில் சுவாமிகளின் கருத்து எவ்விதமிருந்த போதிலும், அவர் தபஸ்வி, ஆன்மஞானி என்பதோடு ஹரிஜனங்களின் நலனை எப்பொழுதும் கோருபவர். ஒரு விஷயத்தை மாத்திரம் மனத்தில் கொண்டு ஸ்வாமிகளைப் போன்ற பெரியவர்களின் நிலைமையைப் பற்றி ஆராய்வதால் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதிலலை என்றார். (இதில் ராஜாஜியின் தளுக்கான நழுவலையும் கவனிக்கத் தவறக் கூடாது.)

திரு.ரா.கணபதியின் கட்டுரை ஓர் உண்மையைத் தெளிவாக்குகிறது. தீண்டாமை க்ஷேமகரமானது என்பது ஹீமத் பரமஹம்ஸ பரிவ்ரஜாச்சார்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி என்கிற பெரியவாளின் கருத்து மட்டுமல்ல. சாஸ்திரங்கள் உள்ளவரை காஞ்சி சங்கர மடங்கள் உள்ளவரை அங்கே வருகிற எந்த சங்கராச்சாரியாரானாலும் இதைத்தான் சொல்வார்கள். செய்வார்கள். ஏனெனில்  பழைய சமூக ஏற்பாடுகளைப் பற்றி ஒழுகுவதற்கே அவர் பிரதிநிதி! இதற்கு மாறாக யாராவது எதிர்பார்த்தால் திரு.ரா.கணபதி வர்ணிப்பது போல சந்தனத்தை எதிர்பார்த்தால் செந்தணல்தான் கிடைக்கும்.
சரி, மூத்தவர்தான் அப்படி. அவரின் வாரிசாக இருக்கக்கூடிய ஜெயேந்திர சரஸ்வதி எத்தகையவர்?

சுடுகாட்டில்கூட பேதா பேதம் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டக் கூடியவர்; எல்லா ஜாதியினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் ஒரே சுடுகாடு முடியாத காரியம் என்றார். அது மட்டுமல்ல, மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று கூறியதும் அவரே! (விடுதலை 8.3.1982 பக்கம்: 1)

சமதர்மவாதி, சேரிக்குள் எல்லாம் செல்லக்கூடியவர் இந்த ஜெயேந்திரர் என்றெல்லாம் கூட விளம்பரப்படுத்தினார்கள். அது பற்றியும் தகவல்கள் உண்டு.

10.11.2002 இரவு 10.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டிக்குச் சென்றார். முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் சொந்த ஊர் இது. அங்குள்ள வீரகாளியம்மன் கோவிலைத் தலித் மக்கள்தான் நிர்வகித்து வருகின்றனர். கக்கனின் தந்தையார் பூசாரியாக இருந்த அந்தக் கோவிலுக்கு வெள்ளைச்சாமி என்ற தலித்துதான் அப்போது பூசாரி. கக்கன் அவர்களின் தம்பி விசுவநாதன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில்தான் காஞ்சி சங்கராச்சாரி அந்தக் கோவிலுக்கு வந்தார். காளியம்மன் கோவிலில் வந்து இறங்கிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கோவிலுக்குள் சென்று மணி அடித்தார்.

தமிழ்ப் பூசாரி வெள்ளைச்சாமி காட்டிய தீபாராதனையைக் கும்பிடவும் செய்தார். பரவாயில்லையே! சங்கராச்சாரியார்கள் திருந்தி விட்டார்களே என்று எல்லோரும் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்த சற்று நேரத்தில் எல்லாம் ஏமாற்றம் என்ற உருட்டுக் கட்டை அடி விழுந்தது. தலித் பூசாரி கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்த பகுதி.. யாரும் ஜெயேந்திரரைத் தொட்டுவிடக் கூடாது என்பதிலே சங்கராச்சாரியாரின் பாதுகாவலர்கள் விழிப்பாகவே இருந்தனர்.


சாமிகளை யாரும் தொட்டுக் கும்பிடக் கூடாது என்று ஒலிபெருக்கியிலே சொல்லிக் கொண்டே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரியாரைக் காலில் விழுந்து கும்பிட முனைந்தனர். அப்பொழுதுகூட தன் காலைத் தப்பித் தவறித் தொட்டுவிடக் கூடாது என்பதில் இறுக்கமாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி என்ன செய்தார்? தன் தோளில் இருந்த வஸ்திரத்தை எடுத்துக் கால்களில் சுற்றிக் கொண்டார். பிறகு பிரசங்கம் நிகழ்த்தினார்.
கக்கன் நினைவு மண்டபத்திற்குச் சென்று மாலையிடுவது என்று திட்டமும் இருந்தது. பிரசங்கத்தை முடித்தாரோ இல்லையோ காரில் ஏறி நேராக மதுரைக்குப் பறந்தார் மடாதிபதி. கக்கன் நினைவிடத்தில் காத்துக் கிடந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தச் சங்கராச்சாரிதான் தீண்டாமையை ஒழிக்கக் கூடியவராம். சேரிக்குள் எல்லாம் போகிறார் என்று தண்டோரா போட்டார்களே பார்ப்பனர்கள். அவர் சேரிக்குள் சென்ற லட்சணம் இதுதான்.


சிருங்கேரி சங்கராச்சாரியாரின் கதை என்ன? அதையும் பார்த்துவிடலாம்.
நம் நாட்டில் முற்காலத்தில் தட்டாருடைய பிள்ளை தட்டானாகவும், தச்சருடைய பிள்ளை தச்சனாகவும், சிற்பியின் பிள்ளை சிற்பியாகவும்தான் இருந்து வந்திருக்கிறார்கள். வம்ச பரம்பரையாக வரும் கல்வியைக் கற்பதிலும் தொழிலை நடத்துவதிலும் அதிக சிரமமிருக்காது. மேலும் இதனால் போட்டி குறைந்து அவரவர் பரம்பரைத் தொழிலை நடத்தி எல்லாரும் க்ஷேமமாக இருந்தார்கள். இக்காலத்திலோ அதற்கு நேர்மாறாக, யாரும் எத்தொழிலையும் செய்யலாம் என்கிற நிலையைக் காண்கிறோம். நம் ப்ராசீனர்கள் படிப்பு விஷயத்திலும் வம்ச பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்-தார்கள்.

அதைப்பற்றி இப்போது சொன்னால் அது பலருக்கு ருசிக்கிறதில்லை. ஆனாலும் ஹிதமான விஷயத்தை சொல்லத்தான் வேண்டும். தங்கத்தில் எவ்வளவு செம்பு கலந்திருக்கிறது என்பதை ஒரு கெமிஸ்ட் கூட திராவகங்களை வைத்துக்கொண்டு சோதனை செய்துதான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் பழைய காலத்தில் ஒரு தட்டாருடைய பையன்கூட லேசாகத் தட்டிப் பார்த்தோ அல்லது நிறத்தைக் கொண்டோ உடனே சொல்லிவிடுவான். அவனுக்குத் தந்தையுடன் கூட வேலை செய்யும் பொழுது பார்த்துப் பழக்கம். இது பரம்பரையாக வந்த அறிவு.

தன் பிள்ளை தன்னைவிடச் சிறந்தவனாக வருவதில் தந்தைக்கு சந்தோஷமேதான் ஏற்படும். தனக்குப் போட்டியாக வந்து விடுவானோ என்ற பயம் புத்ரன் விஷயத்தில் ஒரு தந்தைக்கும் ஏற்படாது.

ஆனால் மற்றவர் விஷயத்தில் தனக்குப் போட்டியாக வந்து விடுவாரோ என்ற பயம் ஏற்படக் கூடுமாதலால் அவருக்கு ரஹஸ்யமான விஷயத்தைச் சொல்லிக்கொடுக்க மாட்டார். ஆகையால் பரம்பரையாக வரும் வித்தையைக் கைக்கொண்டு வந்தால் எல்லாருக்கும் சிரேயஸ் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவு இருக்கும். அதை புத்ர பரம்பரையாக சொல்லிக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
----------------------------- சிருங்கேரி சங்கராச்சாரி, மங்கை ஆகஸ்ட் 80 இதழ்.
இந்த சங்கராச்சாரியார் எல்லாம் ஸ்மார்த்தர்கள். இவர்களை ஏற்றுக் கொள்ளாத ஜீயர்களின் புத்தி என்ன? கல்கி இதழிலிருந்தே ஆதாரத்தைத் தந்தால்தான் பொருத்தமாக இருக்கும்.
அகோபிலமடம் அழகிய சிங்கர் (ஜீயர்)
கேள்வி: ஹரே கிருஷ்ணா என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறதே... இந்தியாவில்கூட இவ்வியக்கத்தினர் சுற்றுகிறார்களே!
ஜீயர் பதில்: நாமம் இட்டுக்கொண்டு, குடுமி வைத்துக்கொண்டு காவி உடுத்து இங்கேயும் ஒருத்தன் வந்தான்... வாயெல்லாம் மந்திரங்கள்... பெருமாள் பெயரையே சொல்லிண்டு இருக்கான்... பூணூல்  போட்டிருக்கான்... உட்காரச் சொல்லிச் சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்டதுனால் மட்டுமே ஒருவன் பிராமணனாகிவிட மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதுனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான்...

                             --------------------------------கல்கியில் (11.4.1982) பேட்டி.
இந்திய அரசியல் சட்டம்
“Untouchability is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arrising out of “untouchability” shall be an offence punishable in accordance with law.
தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த ஒரு வழியிலும் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமை என்ற பெயரால் எந்தவித பேதத்தையும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படிக் குற்றமாகும்.
இவ்வாறு இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவு கூறுகிறது. இச்சட்டப்படி தீண்டாமையை வலியுறுத்தும் இந்தச் சங்கராச்சாரியார்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளா இல்லையா?
ஆனால் நிலைமை என்ன? சட்டத்திற்கு விரோதமாகத் தீண்டாமையை வலியுறுத்தும் இந்தக் குற்றவாளிகளான சங்கராச்சாரியார்களின் கால்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், பிரதமர் முதல் சாதாரண அதிகாரி வரை விழுகிறார்கள் என்றால் இதன் பொருளென்ன?

நடப்பது பார்ப்பன ஆட்சி. அய்யா பெரியார் அன்று 1925இல் சேலத்தில் சொன்னாரே _ அந்தக் கணிப்புப்படி இங்கு நடப்பது பிராமினோகிரஸி (Braminocracy) தான் என்பதில் அய்யம் உண்டோ! அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தீண்டாமை ஒழிப்புக்கு விரோதமாக நடந்துகொள்ளும் இந்த சங்கரமடங்களின் ஆச்சாரியார்கள் காலில் மண்டியிடாத ஆட்சித் தலைவர்கள் ஒரே ஒரு கே.ஆர்.நாராயணன் _ வி.பி.சிங் தானே?

தீண்டாமையை க்ஷேமகரமானது என்று கூறும் காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் என்ற தொகுதியை _  ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதிகளை பிரதமராக இருந்த இந்திரா காந்தி (1980) வெளியிட்ட கொடுமையை என்ன சொல்ல!
1971 ஆகஸ்ட் 24இல் சாரதா பீட மடாதிபதி துவாரகையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அன்றைய துணைக் குடியரசுத் தலைவர் ஜி.எஸ். பாடக் அவர்களையும் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீமன் நாராயணனையும் அழைத்து இருந்தார் சாரதா பீட மடாதிபதி.

தீண்டாமையை அனுசரிக்கும் ஒரு பீடாதிபதியின் விழாவில் துணைக் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கலந்து கொள்ளக் கூடாது என்று குஜராத் மாநிலக் குடியரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டது.

துணைக் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் சாரதா பீட சங்கராச்சாரியாருக்கு அதுபற்றி விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினார்கள். இதற்கு எந்தவித பதிலும் பீடாதிபதியிடமிருந்து வராத காரணத்தால் அவ்விருவரும் தீண்டாமையை ஆதரிக்கும் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட உண்மையான மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை உள்ள ஆட்சியாளர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அப்படி இல்லை என்பது வெட்கக்கேடான நிலையே.

பூரி சங்கராச்சாரியாரின் தீண்டாமைக்கு ஆதரவான குரலுக்கு அவ்விழாவில் பங்கேற்ற ஆளுநரும், ஆமாம், அது சரிதான் என்று கூறியிருக்கிறாரே! அரசமைப்புச் சட்டத்தை மாநில அளவில் காப்பாற்ற வேண்டியவரே அதனைக் கிழித்தெறியும் கேவலத்தை எது கொண்டு சாற்றுவது?

அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமாக தீண்டாமையை வெளிப்படையாக ஆதரிக்கும், பின்பற்றும் இந்த சங்கர மடங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை  எடுக்க வேண்டாமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம். சங்கர மடங்களைத் தவிர என்று எங்காவது சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சொருகி வைத்துள்ளார்களா?
ஓர் உண்மை மட்டும் வெளிப்படை _ அதுவும் சங்கராச்சாரியார் மூலம்.
யோசித்துப் பார்த்தால் நம் தேசத்தில்கூட பழைமை வர்ணதர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்த பிறகுதான், இப்படி மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி-யிருக்கிறது என்று தெரிகிறது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.
                 ------------------ காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தெய்வத்தின் குரல் -_ முதல் பாகம் பக்கம்: 162.
தந்தை பெரியார் என்ன செய்தார்? திராவிடர் கழகம் என்ன சாதித்தது? என்பதனை சாட்சாத் சங்கராச்சாரியாரே ஒப்புக்-கொண்டுவிட்டாரே!

-----------------------------------------------------------------------------------------------------------------
ஒரே நாடு - ஒரே கலாச்சாரம்
பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு அத்வானி வந்திருந்தார். அப்போது நான் தொலைக்காட்சியில் இருந்தேன். அவர் We believe in one country and one culture (நாங்கள் ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்) என்பதையே நம்புகிறோம் என்றார். உடனே நான் உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். இங்கும் சைவ வெள்ளாளர் இருக்கின்றனர். அவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியும். அவர்களும் ஆகமவிதிகளின்படி பூஜை செய்கிறார்கள் என்றேன். அவர் பூரிப்புடன் அதனால்தான் ஒரு நாடு, ஒரே கலாச்சாரம் என்கிறோம் என்றார். உடனே அவரிடம் வைத்தேன் ஒரு கோரிக்கை.

அய்யா இந்த அளவு தகுதி பெற்றிருக்கும் ஒரு வெள்ளாளர் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் ஆக முடியுமா? என்று நான் கேட்டவுடன் திணற ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட ஒரு ஆங்கிலப் பத்திரிகை அம்பி By the way.. என்று கேள்வியைத் திசைமாற்றி விட்டார்.
----------------------------  முஸ்லிம் முரசு பொன்விழாவில் சு.சமுத்திரம், (ஆதாரம்: முஸ்லிம் முரசு ஆகஸ்டு 2000)
-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!
கலேல்கர்

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்-பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத்தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போது-தான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருதமுடியும்.
- டாக்டர் கலேல்கர்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன், பக்கம்: 123.
--------------------------------------------------------------------------------------------------------------------

சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய சமுதாயக் குற்றவாளிகள்
The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style cannot remove from it its inlaid filth that has originated from the deep rooted contamination of the filthy inheredity.

பஞ்சமர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) தொடாதே_எட்டி நில்! என்று சொல்லப்படுவதற்குக் காரணம், பிறப்பின் அடிப்படையிலே அவர்களின் உடலோடு பிறந்து வந்த புனிதமற்ற தன்மையேயாகும். ஆழமாகப் பதிந்த அருவருக்கத்தக்க, தூய்மைக்கேடான தீட்டுப் பரம்பரையில் அவர்கள் வந்ததால், உலகத்தில் உயர்ந்த வகையான சோப்பினால் போட்டு அவர்களைக் குளிப்பாட்டினாலும் நவநாகரிக அணிமணிகளால் அவர்களை அலங்கரித்தாலும், அவர்கள் மீது படிந்த தீட்டைப் போக்கவே முடியாது _ முடியவே முடியாது.   
            ----------------------- சிருங்கேரி சங்கராச்சாரியார்
-----------------------------------------------------------------------------------------------------------------

காஞ்சி சங்கராச்சாரியார்
ஒரு நாள் ஆதிசங்கரர் ஸ்நானத்திற்குப் போகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவர் எதிரே வருகிறார். சங்கராச்சாரியார் எட்டிப் போ என்று சொல்லுகின்றார்.
அதற்கு அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் எட்டிப் போ என்றது ஆத்மாவையா? உடலையா? என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்.

ஆதிசங்கரர் அதிசயப்பட்டார் நீ தாழ்த்தப்பட்டவனல்ல, என் ஞானாசிரியன் என்றார்.
இந்த சுலோகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆச்சாரியார்கள் (ஆதிசங்கரர்) தீண்டாமையை ஒழித்துவிட்டதாகச் சிலர் அர்த்தம் சொல்லுகிறார்கள். சுலோகம் தீண்டாமையை ஸ்தாபிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. எந்த சித்தாந்தத்தில் ஒருவருக்கு முன்பாக ஆசை இருக்கிறதோ, அதற்குத் தகுந்தபடி அவர்கள் ஸ்லோகங்களுக்கு வேறு அர்த்தம் செய்து கொள்வார்கள். தீண்டாமை க்ஷேமகரமானது என்ற எண்ணம் நமக்கு இருப்பதால் அநாதியாக நாம் இப்படி அதற்கு அர்த்தம் செய்கிறோம். 

------------------------------ (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள் 2ஆம் பாகம்)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------



------------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ”உண்மை” நவம்பர்
 1-15 2014  இதழில் எழுதிய கட்டுரை

20 comments:

தமிழ் ஓவியா said...

புத்தன்



புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக்கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை.
_ (விடுதலை, 16.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/90573.html#ixzz3IFUba4ww

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?


மாற்றுத் திறனாளிகளுக்கு
இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 5_ உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத் தரவுகளின்படி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத் திறனாளி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1107 பின்னடைவு காலி இடங்களை முதலில் நிரப்ப வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு திங்களன்று (நவ.3) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத் தியநாராயணா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டப்படி, அரசு துறைகளில் உள்ள மொத்த பணியாளர் எண் ணிக்கை அடிப்படையில் 3 சதவீத இடங்களை உறுதி செய்ய வேண்டு மென்றும், 3 மாதங்களுக்குள் பின்ன டைவு காலி பணியிடங்களை கண் டறிந்து நிரப்ப வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013 அக்.8 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன் றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி இடங்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனை யடுத்து, பெயரளவிற்கு ஒரு சில துறை களை மட்டும் குறிப்பிட்டு, அத் துறைகளில் இருக்கும் மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை சுட்டிக்காட்டி, மாற்றுத் திறனாளி நலத்துறை அரசாணை எண் 10 அய் மார்ச் மாதம் வெளி யிட்டது.

ஆசிரியர் பணி நியமனத்தில் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அரசாணையில் உத்தர விடப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற உத்தரவுகளின்படியும், அர சாணைப் படியும் 1107 மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை நிரப்பாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 9000 ஆசிரியர் பணி இடங்களை சமீபத்தில் நிரப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டது.

இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் என அனைவரின் சார்பில் மாற்றுத் திறனாளி துறை செயலாளர் பி.சிவ சங்கரன் ஏற்கனவே பதில் மனு தாக் கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணா முன்னிலையில் இவ் வழக்கு திங்களன்று (நவ. 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளி துறை செயலாளருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என கூறி, அதில் திருப்தி அடையாத நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமலாகிறதா? என்பதை முழுமை யாக ஆராய்ந்து 19.01.2015- ஆம் ஆண்டிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.சி.காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதாடினார்.

Read more: http://viduthalai.in/page-2/90576.html#ixzz3IFV9MVBK

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிர்கள்தானே

சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண் டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90678.html#ixzz3IOF3jkAl

தமிழ் ஓவியா said...

சொல்கிறார் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத் துவதிலும், ஆக்ரமிப்புகளை அகற்றுவதிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசு, ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், தமிழக சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு

என்ன செய்யப் போகிறது அதிமுக அரசு?

இந்தப் பேச்சில் ஒரு சொடுக்குவைத்துள்ளார் மத்திய அமைச்சர். மாநில அமைச்சர் ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில்... என்பதுதான் அந்தச் சொடுக்கு!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்மீது பொதுவாக இந்த வகையான குற்றச்சாட்டு உண்டு. எடுத்துக்காட்டு மதுர வாயல் - துறைமுகம் பறக்கும் பாலம்; சாலைப் போக்கு வரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கத் தயார் என்கிறது மத்திய அரசு - மாநில அரசு என்ன செய்யப் போகிறது.?

Read more: http://viduthalai.in/e-paper/90685.html#ixzz3IOFG4ged

தமிழ் ஓவியா said...

தென்னக ரயில்வேயில் குரூப் டி பணிகளுக்கு, தமிழர்கள் நிராகரிப்பா?

தென்னக ரயில்வேயில் 5430 குரூப் டி பணிகளுக்கு விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பதவிகளுக்கு, விண்ணப்பிப்போர், அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களை (Attested Copy) இணைத்திட வேண்டும் என தென்னக ரயில்வே, ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்தது. ஆனால், தமிழ் நாளிதழில் வெளியிட்ட விளம்பரத்தில், இந்த அத்தாட்சி முறை தேவையில்லை என செய்தி வெளியிட்டது. இதனை நம்பி, எந்த அத்தாட்சி பெற்ற சான்றிதழும் இணைக்காத ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆன்லைன் மூலமாக விண்ணப் பித்தவர்களுக்கு, இந்த அத்தாட்சி பெற்ற சான்றி தழ்கள் இணைக்காத நிலையில், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகு அத்தாட்சி முறை இனி தேவையில்லை என்று மத்திய அரசே இதற்குமுன் அறிவித்து விட்ட நிலையில் இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?

பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் தமிழ் நாட்டில் உள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து, அவர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் பதினோரு லட்சம்பேர், இந்த பதவிக்கு நாடு முழுவதும் விண்ணப்பித்த நிலையில், இந்தத் தேர்வுகள் அய்ந்து நாட்கள் நடைபெறுகின்றன. முதல் தேர்வாக, திருச்சியில் 2.11.2014 அன்று தேர்வு நடைபெற்று, ஆயிரக்கணக்கான பீகாரிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
குரூப் டி பதவிகளில் டிராக்மேன், போர்ட்மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகள் பல ஆண்டு களாக அந்தந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்படுவர். மாநில மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு அடிப்படை சம்பளம் ரூ.1800. ஆனால், இந்த பணிகளுக்கு, வட மாநிலத்தவர்களை, அனுமதித்திருக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் செயல், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

இது வேலை வாய்ப்புப் பிரச்சினை என்பதையும் தாண்டி, ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர், தமிழகத்தில் கடை நிலை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதால், சமூக, மொழி பிரச்சினையையும் உருவாக்குவது நிச்சயம்.

தமிழ்நாடு அரசும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனே தலையிட்டு தவறான காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட இரண்டரை லட்சம் தமிழர்கள் மீண்டும் தேர்வு எழுதிட அனுமதிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
7-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/90684.html#ixzz3IOFYz9iu

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதமானதாம் - உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

டில்லி, நவ.7 ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத் திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்புக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கும் அது இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அனுமதி வழங் கியது.

சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல் களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு உதவும். கடந்த 2010 ஆம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. 2012ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கணக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் (கிருஷ்ணமூர்த்தி என்பவர்?) வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பல மாநிலங்களில் இன்னும் நடத்தப் படவே இல்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

(ஜாதிகள் உள்ளன அரசியல் சட்டப்படி என்ற நிலையில் இத் தடை விசித்திரமானது என்பது சட்ட நோக்கர்கள் கருத்து).

Read more: http://viduthalai.in/e-paper/90681.html#ixzz3IOFyzoAy

தமிழ் ஓவியா said...


வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இப்பொழுது மழைக் காலத்திலும் தொற்றி யுள்ளது. வழக்கமாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும் இந்த நோய், இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் பாதிப்பதாக அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நமிதா புவனேஸ்வரி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/90686.html#ixzz3IOGSxVQJ

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தைப் பாரீர்!

கருநாடக மாநில ஆட்சிப் பக்கத்திலிருந்து - குறிப்பாக அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா அவர்களிடமிருந்து பாராட்டத்தக்க கருத்துகளும், அறிவிப்புகளும் நாளும் வந்து கொண்டுள்ளன.

கருநாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகருக்கு எந்த முதல் அமைச்சர் செனறு வந்தாலும் மூன்று மாதங்களில் அவர் ஆட்சியை இழந்து தவிப்பார் என்ற மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறித்துக் காட்டினார்.

ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடாது - பரப்பக் கூடாது; மாறாக பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15ஆம் ஆண்டு விழாவில் பேசுகிறார்.

அதே நேரத்தில் நம் தமிழ்நாட்டின் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்? மூடநம்பிக்கையின் மொத்த குத் தகைக்காரர்களாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்.

மண் சோறு சாப்பிடும் அளவுக்கு அல்லவா மவுடீகத்தின் மடியில் தவழுகிறார்கள். யாகம் நடத்தினால் வழக்கில் வெற்றி பெறலாம் என்று யாகங்களை நடத்திக் கொண்டு திரிகிறார்களே! திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள் கிறார்களே! இவ்வளவுக்கும் அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் - கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவத்தைப் பொறித்துள்ளார்கள் (அண்ணாவின் கொள்கை காற்றில் பறக்கிறது என்று இதன் மூலம் சொல்லாமல் சொல்லு கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்).

இதில் திராவிட இனக் கலாச்சாரத் தொக்கு வேறு. கட்சியின் பெயரிலிருக்கும் பொருள் கூடப் புரியாமல் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்களே என் சொல்ல!

இன்னொரு செயலையும், பண்பாட்டுத் தளத்தில் சாதனை ஒன்றினை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.

கன்னட மொழியில் இருந்த ஊர்களின் பெயர்கள் வேற்று மொழியில் மாற்றப்பட்டு உரு திரிந்தன - இது ஒரு மொழி வழி பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

இதனை நன்குணர்ந்த கருநாடக முதல் அமைச்சர் 12 மாநகரங்களின் பெயர்களை மீண்டும் கன்னட மொழியில் மாற்றம் செய்துள்ளார்.

பெங்களூர், மங்களூர், மைசூர், பெல்லாரி, ஹூப்ஸி தும்குர், பிலூப்பூர், விஜயபுரா, சிம்கரூர், குல்பர்கா ஹோஸ்கேட், ஷிமோகா என்று உருமாற்றப்பட்ட பெயர்களை முறையே பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பல்லாரி, ஹுப்பள்ளி, தும்கூரு, விஜயபுரா, சிம்மகளூரு, கல்புர்கி, ஹொசப்பேட்டே, சிவமெக்கா என்று மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு எழுதி அதற்கான அனுமதியையும் முறைப்படி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருமுதுகுன்றம் -விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை - கபிஸ்தலம் என்றும், திருமரைக்காடு - வேதாரண்யம் என்றும், புளியந்தோப்பு -திண்டிவனம் என்றும், சிற்றம்பலம் - சிதம்பரம் என்றும் குடமூக்கு - கும்ப கோணம் என்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள் ளனவே, எடுத்துக்காட்டுக்குத்தான் இவை; விரித்தால் பெருகும் என்ற நிலையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாயூரம் - மாயவரம் என்று இடைக்காலத்தில் மாற்றப்பட்டது; ஊர் மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும் சட்டப் பேரவை உறுப்பினராகவிருந்த சுயமரியாதை வீரர் மானமிகு ந. கிட்டப்பா அவர்களின் தொடர் முயற்சியாலும் மீண்டும் மயிலாடுதுறை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட எண்ணிறந்த ஊர்களின் பெயர்களையும், தமிழில் கொண்டு வர தமிழ்நாடு அரசு தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதற்கு எடுத்துக்காட்டாக கருநாடக மாநில அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றனவே - அதனைச் சுட்டிக் காட்டி நம் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து விடலாமே!

இன்றைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் பொருளாதார ரீதியாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்றாலும், பண்பாட்டு ரீதியில் இதனைச் சாதிக்கலாமே! இதற்கென்று எந்த செலவும் கூடக் கிடையாதே! மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எழுதினால், எளிதாகவே பெயர் மாற்ற உரிமைகளைப் பெற்று விடலாமே! முடியுமா என்று தயங்க வேண்டியதில்லை நமது அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் இது நடந்திருக்கிறது.

இதனைச் சாதித்துக் காட்டுவதன் மூலம் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் அவர் பெயர் ஒலித்துக் கொண்டு இருக்குமே! எங்கே, முயலட்டும் பார்க்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டுவாரேயானால், எந்தவிதத் தயக்கமும் இன்றி மனந் திறந்து பாராட்ட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கும். தமிழ் உணர்வாளர்களும், இனவுணர் வாளர்களும் கட்சிகளை மறந்து மனம் நிரம்பி நன்றி கூறுவார்கள் - பாராட்டு மாமழையையும் பொழி வார்கள்.

ஓ.பி.எஸ். அவர்கள் துக்கத்தைத் துரத்தி விட்டு துரிதமாக இந்தப் பணியைச் செய்து காட்டட்டும் பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/page-2/90695.html#ixzz3IOGucuvN

தமிழ் ஓவியா said...

முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

- (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/90694.html#ixzz3IOH3rPFW

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள் களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!a

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLVRYWk

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத் திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLmBg5N

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLtZWFj

தமிழ் ஓவியா said...

மகாராட்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களே அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்களாம்!


மும்பை, நவ.7- ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்களையே மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாக ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரதமருடன் இரண்டு முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுடன் பத விக்கு வந்துள்ளார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இதுவரை எதுவும் செய் யாமல் இருந்துவந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர் களை மாநில அரசின் அதிகாரம் உள்ள துறைகளில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு வார கால பயிற்சி....

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (ஆர்.எம்.பி.) என்கிற அமைப்பு இந்த ஒரு மாதத்துக்குள் ஒரு வார கால பயிற்சியை அளிக்கிறதாம்.

அந்த அமைப்பின் நிர்வாக இயக்கு நரும், பாஜகவின் தேசிய துணைத்தலை வருமாகிய வினய் சகஸ்ரபுத்தே கூறும் போது, அலுவலக ஊழியர்கள் ஒப்பந்ததாரர் களுடன் உள்ள உறவை துண்டிக்கவேண் டும் என்கிற எண்ணத்தால் இத்திட்டம் ஏற்பட்டது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, புதிதாக அலுவலகப் பணிகள் குறித்த விவரங்கள் தெரிந்த அலுவலக ஊழியர் களை நியமிப்பதன்மூலம், முறைகேடுகள் மற்றும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

பெரும்பாலான நேரங்களில் அமைச்சர்கள் மாறினாலும், கீழ்நிலை ஊழியர்கள் மாறாமல் பணியில் தொடரு கின்றனர். தொடர்ச்சியாக உள்ள தீமையை இதன்மூலம் களைய விரும்பு கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/90708.html#ixzz3IOMCXMlg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவதாரம்

பொறுமையின் மறு வடிவமான பூமாதேவி உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமா ளும் உலகில் உள்ள அசுரர் களால் மக்களுக்கு ஏற் படும் அநீதிகளை அழிக்க அவதாரம் எடுத்து வரு வேன் என்று அருள் புரிந்தாராம்.

உலகில் இப்பொழுது அநீதிகளே நடைபெற வில்லையா? குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசு துணை யுடன் படுகொலை செய்யப்படவில்லையா? இலங்கையில் மண்ணுக் குள் பல்லாயிரவர் கொல் லப்படவில்லையா?

ஏன் பெருமாள் அவ தாரம் எடுக்கவில்லை? அவதாரம் எல்லாம் இந் தியாவில் மட்டும்தானா? இங்கிலாந்தில் ஏன் எடுக்கவில்லை - இவை எல்லாம் பிராந்திய கட வுள்கள் மட்டும் தானா?

Read more: http://viduthalai.in/page1/90610.html#ixzz3IONf38AK

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனையும், அரசியலும்


மும்பை, நவ.5- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா மற்றும் 63 விசேனா சட்டமன்ற உறுப்பினர் களுடன் பெஹெர்கான் கர்லா பகுதியில் உள்ள ஏக்வீரா கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்காலத்தில் 180 சட்டமன்ற உறுப்பினர் களுடன் வருவதாக கடவுளிடம் உறுதி அளித் துள்ளதாகவும், மாநிலத்தில் மக்களின் ஆட்சியைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
லோனவாலாவை அடுத்த கர்லா குகையில் உள்ள ஏக்வீரா கோயிலில் வழிபடுவது அவர்கள் குடும்பத்தின் வழமையாம். அரசியலில் முடி வெடுப்பதற்கு முன்பாக இக்கோயிலில் வழிபட்டு கடவுளின் அருளைப் பெறுவாராம் உத்தவ். அதெல்லாம் இருக்கட்டும் நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தலில் ஆசை நிறைவேறவில்லையே! அப்படியானால் கடவுளுக்கு சாபம் விட வேண்டியது தானே!

Read more: http://viduthalai.in/page1/90613.html#ixzz3IOOAbuPU

தமிழ் ஓவியா said...

ஆட்சி செயல்படுகிறதா?

2011ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. தொடக்க நிலையிலேயே மூன்று முக்கியமான மக்களின் இன்றியமையாத அன்றாடத் தேவைகளின் தலையின்மீது கை வைத்தது.

மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என்ற உயிர் மூச்சுப் பிரச்சினைகளில் கை வைத்து மக்களுக்கு மிகப் பெரிய மூச்சுத் திணறலை உருவாக்கிற்று.

இப்பொழுது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு முறை பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்ற அடியைப் பரிசாக மக்களுக்குக் கொடுக்கிறது.

தி.மு.க. ஆட்சியிலிருந்து இன்றியமையாத இந்த பொருள்களின் விலையை உயர்த்தியிருந்தால் அ.இ.அ.தி.மு.க. என்ன செய்திருக்கும்?

சபாஷ்! சரியான நடவடிக்கை என்று திமுக ஆட்சியின் முதுகைத் தட்டிக் கொடுத்திருக்குமா?

சாலையில் ஏதோ ஓர் இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தாலோ, எங்கோ ஓரிடத்தில் கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, குடிநீர்க் குழாய் உடைந்திருந்தாலோ - உடனே அங்கெல்லாம் கொடி தூக்கிப் போராட்டம் நடத்துவதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க.தானே இப்பொழுது ஆட்சிப் பொறுப் பில் இருக்கிறது?
எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை; ஆளும் கட்சியாக இருந்தால் வேறொரு நிலை என்பது ஏன்? என்று கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்கள்; வெகு மக்கள் வைக்கும் கேள்விக்கு விடை எங்கே?

அ.இ. அ.தி.மு.க. 2011இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாமர மக்களை மயக்கும் மலிவான தந்திரத்தில் சில திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறதே தவிர, நிரந்தரத் தீர்வை நோக்கி கால் அங்குலம்கூட - அடி எடுத்து வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை யாகும். தானாக உருப்படியான ஆக்கப் பூர்வமான திட்டங்களைச் செய்யாததோடு நின்றுவிடக் கூடாதா?

நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன? விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்ற சொலவடை நாட்டில் உண்டு.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை தன்னாலும் ஒன்றும் சாதிக்க முடியாது; அதே வேகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நல்ல திட்டங்களை யாவது அனுமதிக்க வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்ட சென்னைக் கோட்டூர்புரத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது; சங்கராச்சாரியாரை அழைத்து வந்து யாகம் எல்லாம்கூட நடத்தப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

ஆனால், தி.மு.க. ஆட்சியில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தலைமைச் செயலகத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் போனது ஏன்?

ஓர் ஆட்சி போகும். இன்னொரு ஆட்சி வரும்; ஆனால் நிருவாகம் என்பதும், ஆட்சி முறை என்பதும் தொடரக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க. அப்படியல்ல; நானும் எதையும் செய்ய மாட்டேன்; மற்றவர் செய்திருந்ததை யும் செயல்பட விட மாட்டேன் என்கிற - ஆட்சி முறைக்குச் சற்றுமே பொருத்தமில்லாத வன்மத்தோடு செயல்படுகிறதே!

சென்னை துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை பறக்கும் பாலம் மத்திய அரசின் உதவியோடு நடைபெறக் கூடியது. அந்தத் திட்டப் பணிகளும் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது அ.இ.அ.தி.மு.க. அரசு.

ஓர் அரசு என்றால் மக்கள் நல அரசாக (Welfare State) இருக்க வேண்டும் என்பது ஆட்சிக்குரிய இலக்கணம் ஆகும். அ.இ.அ.தி.மு.க. அரசோ மக்கள் நல அரசாக செயல்படவில்லை என்பது வெளிப்படை!

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் மிகப் பெரிய திட்டம்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பெற்று, அதன் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் அது திமுகவுக்கு சாதகமாகப் போகும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டத்தை முடக்க உச்சநீதிமன்றம் சென்றதை என்னவென்று சொல்லுவது!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது அரசு என்ற பதத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகவே ஆகி விட்டது.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அவர் உருவத்தைக் கட்சியின் கொடியிலும் பொறித்துக் கொண்டு பகுத்தறிவு முதற்கொண்டு மக்கள் நலம் ஈறாக உள்ள அனைத்திலுமே அண்ணாவின் கண் ணோட்டத்தை, கருத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, ஏட்டிக்குப் போட்டி என்றும் சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக நடந்த கொண்டுள்ளது என்பது பெரிதும் வருத்தத்திற்குரியது ஆகும்.

மத்தியிலே ஒரு மதவாத ஆட்சி; தமிழ் மாநிலத்தி லும் அத்தகைய ஓர் ஆட்சி என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தந்தைபெரியார் மண் இவற்றையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/90615.html#ixzz3IOOMel7L

தமிழ் ஓவியா said...

பார்ப்பனன்


செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட் டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான். - (விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/90614.html#ixzz3IOOXbJp3

தமிழ் ஓவியா said...

பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்கல்ல, ஆஸ்திரேலியாவில்


சிட்னி, நவ.6- ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் குழந்தைகளை பர்தா அணியக் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களாக இருந் தாலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 68 ஆயிரம் (ரூபாய் மதிப்பில் 36 இலட்சத்து 63 ஆயிரத்து 308) தண்டத்தொகையாக விதிக்கப் படும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் கூறியுள்ளார்.

டாஸ்மேனியாவின் செனட்டர் ஜாக்குய் லாம்பி பால்மர் அய்க்கிய கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பர்தா எனும் பழக்கத்தில் உள்ள முகத்தை முழுவதுமாக மூடும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்ட வரைவு குறித்து பேசும்போது இசுலாமியர்கள் வழக்கத்தில் கொண்டுள்ள பர்தா முறையைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளார்.

பர்தா அணிவது அல்லது பொது இடத்தில் முகத்தை முழுவதுமாக மூடுவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகி யோரை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று விதங்களில் குற்றமாக உள்ளது.

தனிநபர் மசோதாகுறித்து லாம்பி கூறும் போது, பிரெஞ்ச் அரசில் உள்ளவாறு அதை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறைப் படுத்துவது எளிமையானதே என்றார்.

சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு நபர்மீதும் காவல் அலுவலர்கள் அதே இடத்திலேயே தண்டத்தை விதிக்கலாம். தண்டத் தொகை 3,400 ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப்படும்.

பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு வயதில் முதிர்ந்த பருவத்தினரிடையே பர்தா வைக் கட்டாயப்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத்தொகையாக 34ஆயிரம் ஆஸ்திரே லிய டாலர் விதிக்கப்படுவதுடன் 6 மாத சிறைத்தண்டனை அளிக்கப்படும். அதேபோல், குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே பொது இடத்தில் முகத்தை மூடுவதற்குக் கட்டாயப் படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத் தொகை யாக 68 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப் படுவதுடன் 12 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

எந்தவகையிலும் அச்சுறுத்தலின்மூல மாகவோ, திணிக்கப்படுவதன்மூலமாகவோ அல்லது வேறு எந்த உறுதியளிப்பின் வாயிலா கவோ இருக்கக்கூடாது என்று சட்டமுன் வரைவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறை மிக எளிமையானது.

போக்குவரத்து விதிமீறல்களின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும். எந்தப் புனித நூலிலும் முகத்தை முழுமையாக மூடுமாறு குறிப்பிடப் படவில்லை. அதற்காக மதத்தை சாக்காகக் கொண்டோ, விதிவிலக்கு கோருவதையோ, சட்டப்பாதுகாப்பு உள்ளதாகக் கூறுவதையோ ஏற்கமுடியாது என்று லாம்பி கூறினார்.

முழுமையாக முகத்தை மூட விதிக்கப்படும் தடைக்கு விதிவிலக்காக தனியார் வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் அளிக்கலாம் என்னும் கான்பெர்ரா சாரா பாலின் கூற்றையே லாம்பியும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,

முகத்தை முழுவதுமாக மறைப்பது என்பதை தடுப்பதுடன் நோக்கம் நிறைவடையவில்லை. தடுப்பதற்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுகாதார காரணங்கள், தொழில்முறை காரணங்கள் மற்றும் கலை மற்றும் பாரம்பர்ய விழாக்களில் முழுவதுமாக முகம் மூடப்படுவதை தடுப்பது பொருந்தாது என்றார்.

சட்ட முன்வரைவில் லாம்பி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிராக உள்ள எதிர்ப்பாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குள் நுழை யும் போராட்டத்தை நடத்தினார்கள்.

கூ குக்ஸ் கிளான் அமைப்பை அட்டைகளை அணிந்த வாறு, மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் முகமூடிகளை அணிந்து பர்தாவை எதிர்ப்பவர் களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90625.html#ixzz3IOP55FOt

தமிழ் ஓவியா said...

அந்தோ, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி மறைந்தாரே! அவருக்கு நமது வீரவணக்கம்!


குடந்தை - வலங்கைமான் பகுதியில் உள்ள கோவிந்தக்குடியைச் சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி அவர்கள் நேற்றிரவு (5.11.2014) மறைந்தார் என்ற செய்தி, மாவட்டச் செயலாளர் மானமிகு குருசாமி மூலம் கிடைக்க, அது ஆற்றொணாத் துயரத்தை யும், துன்பத்தையும் தந்தது. அவருக்கு வயது 85.

அவர் ஒரு எடுத்துக்காட்டான முதுபெரும் லட்சிய வீரர்; கொண்ட கொள்கைக்கும், இணைந்த இயக்கத்திற்கும், ஏற்றுக்கொண்ட தலைமைக்கும் என்றும் மாறாத கட்டுப்பாட்டுடன் செயலாற்றிய செம்மல்!

கோவிந்தக்குடியில் அவரும், அவரது குடும்பமும் - பல தலைமுறைகள் - இயக்கக் கொள்கைக் குடும்பமான பெரியார் குடும்பத்தினர் ஆவார்கள். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். கோவிந்தக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்; அவ்வட்டாரத்தில் அனைத்துக் கட்சி - பொது அமைப்பின் பொறுப்பாளர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட மரியாதைக்குரியவராக இறுதிவரை திகழ்ந்தவர்.

சுமார் 50 ஆண்டுகாலமாகவே எனக்கு அறிமுகமான அருமையான கொள்கைத் தோழர், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

முன்பு அவரையும், அவருடைய ஆசிரிய நண்பர்கள் மாசிலாமணி, ஜம்புநாதன் மற்றும் சிலருடன் எப்போதும் இணைந்தே பார்த்து உரையாடுவோம்.

பண்ருட்டி கழகப் பொறுப்பாளர் தோழர்கள் புத்தன் - கோவிந்தசாமி குடும்பத்தின் உறவுக்காரர்; இவரது மறைவு இவரது நான்கு மகள்கள் - அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வளவு இழப்போ, அதைப் போன்றே இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரது உடல், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு - உடற்கொடை செய்யப்படுவதன்மூலம், அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி என்றும் வாழுபவராக - வரலாற்றில் திகழ்வார் என்பது உறுதி!

அவருக்கு நமது வீரவணக்கம்! அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று (6.11.2014) மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடையின்போது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாக உறுப்பினர் (டிரஸ்டி) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்கள், தலைமைக் கழகத்தின் சார்பில் கலந்துகொள்வார்.


6.11.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/90631.html#ixzz3IOPM16Kj

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்கள் தூக்கு! ஏனிந்த இரட்டை வேடம்!


கொழும்பு, நவ. 6- கொழும்பில் தமிழக மீன வர்கள் தூக்கு தொடர்பாக தனது கருத்தை அதிபர் ராஜபக்சே வெளியிட்டார். இதுகுறித்து இலங்கை பத்திரிகையாளர்கள் இணையதளத்தில் அதிபர் தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம் இலங்கை சட்டம் தொடர் பானது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியிருந்தார்.

ஆனால் மாலையில் டில்லி வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா வேறு மாதிரி அறிக்கையை விட்டிருந்தார். இலங்கைக்குப் போதை பொருள் கடத்தி வந்ததாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக் குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், இயக்கங்களுக்கும், மீனவர்கள் அமைப்புகளும் போராடி வருகின்றன.

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண் டனையை எதிர்த்து இலங்கையில் உள்ள இந்தி யத் தூதரகம்மூலம் மேல்முறையீடு செய்வதற் கான நடவடிக்கையில் மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. செவ்வாயன்று அய்ந்து மீனவர்களை யும் இந்திய தூதர் சந்தித்து வந்ததாகச் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் புதன் காலை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர் பாக தனது கருத்தை முதல்முதலாக வெளியிட்ட அதிபர் ராஜபக்சே, இலங்கையின் சட்ட விதிகளில் அரசியல் தலையீடு எதுவும் இருக் காது. மேலும் இலங்கை சட்டம் என்பது இலங் கையில் இறையாண்மை அதில் வேறு எந்த ஒரு சக்தியும் தலையிட்டு களங்கம் ஏற்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதை இலங்கையில் பல்வேறு செய்தி இணையதளங்கள் உடனடியாக வெளிட்டிருந் தன.

இந்த நிலையில், டில்லியில் தெற்காசிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண் டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. எனவே இதனை அழிக்கும் விதமாக எதுவும் நடந்து விடாது. நல்லதோ, கெட்டதோ, கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினையில் இலங்கை அரசு யாருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது இல்லை.

எனவே, இந்த வழக்கிலும் கவலைப்படுவதற்கு எதுவும் கிடையாது என்று பேசியுள்ளார். இலங்கையில் இருக்கும்போது, அதிபர் மிரட்டலான அறிக்கையும் இந்தியாவிற்கு வந்த பிறகு மத்திய அரசின் ஆலோசனையில் வேறு அறிக்கையும் விட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது ஏன், மேலும் அதிபரின் அறிக்கை ஏன் செய்திதளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசும், இலங்கை அரசும் சேர்த்து இந்த இரட்டை நாடகம் நடத்துவது ஏன்?

தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையி லிருந்து காப்பாற்றப்படவில்லையானால்... நாடே எரிமலையாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Read more: http://viduthalai.in/page1/90623.html#ixzz3IOPVVoQh