Search This Blog

20.11.14

நமது உயிரைக் கொடுத்தாலும் ஜாதியை ஒழிப்போம்





    ஜாதி ஒழிப்பைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் இராஜகோபாலாச்சாரி சொன்னார், நாயக்கரே! (திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்) இது வீண்வேலை; புத்தனெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போனான்; முஸ்லிம் 700 ஆண்டு முயற்சி செய்து தோற்றுப் போனான்; நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்றார்.


    நான் தோற்றாலும் கவலையில்லை; இது நல்ல வேலையாகத் தெரிகிறது; அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; மக்களுக்கு அறிவுவர ஆரம்பித்துள்ளது; மேலும் இன்னும் எத்தனை காலம் நாங்கள் சூத்திரராக (தேவடியாள் மக்களாக) இருப்பது என்றேன் நான்.
    பிறகு காங்கிரசை விட்டு 1925 இல் காஞ்சிபுரம் மாநாட்டிலே வெளிவந்தேன்; நான் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தைச் சூழ்ச்சியாக ஒழித்துக் கட்டினார்கள். காங்கிரஸ் ஸ்தாபனம் (கட்சி) பார்ப்பனரல்லாதாருக்குத் துரோகம் செய்து அவர்களைப் பார்ப்பனருக்குக் காட்டிக் கொடுக்கும் அமைப்பு என்பதை நன்றாக உணர்ந்தவுடன் நான் வெளியே வந்தேன். வந்தவுடன் (1925) சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தேன்; இந்த 32 வருடங்களாக ஜாதிகள் ஒழிய வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து வருகிறேன்.


    1938 ஆம் ஆண்டில் இராஜகோபாலாச்சாரியார் சென்னைக்கு முதன்மந்திரியாக வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடாமாக்கினார். அதை எதிர்த்து 2000 பேரைச் சிறைக்கு அனுப்பினேன்; எனக்கும் 2 வருட தண்டனை விதித்தார்கள். அப்போது சொன்னேன்: நான் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ் மக்களின் கைக்கு வந்து ஆகவேண்டும் என்பதை; அப்போதே நான் உணர்ந்தேன்; காங்கிரஸ்காரன்கூட விடுதலை கேட்காத காலம். ஏதோ கொஞ்சம் அதிகமான அதிகாரத்தை வெள்ளைக்காரன் கொடுத்தால் போதும் என்று சொல்லி வந்த காலம்.


    நம்முடைய இயக்கம் நாளுக்கு நாள் நல்லமுறையில் வளர்ந்து வருகிறது; நம்முடைய உண்மையான பலத்தை அறிந்தவர்கள் வடநாட்டவர்களே. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடிக்கொண்டார்கள்.

    இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைக்க வைக்க சூழ்ச்சி செய்ததுதான் இந்த அரசமைப்புச் சட்டம்! தமிழ்நாட்டைப் பற்றிப் பார்ப்பனருக்கு மிகவும் சந்தேகம்; பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இங்கு மிகுதியாக உண்டு; நாட்டு ஆட்சி தமிழர்கள் கைக்குப் போனால் தங்களை ஒழித்துக் கட்டிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே யாரை விட்டாலும் விடலாம். இந்தத் தமிழ்-நாட்டவரை மட்டும் தனியாக விடக்கூடாது. அவர்களை என்றென்றும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி விட்டார்கள்.

    பெயருக்கு ஏதோ இது கூட்டாட்சி (திமீபீமீக்ஷீணீறீ ஷிணீமீ) என்று பெயர். ஆனால் இது உண்மையல்ல. பலமான சர்வாதிகார ஆட்சியே கூட்டாட்சி என்று சொல்கிறானே ஒழிய சட்டத்தில் பிரிவதற்கு இடம் இல்லை. அந்தப் பிரச்சினைக்கே அதில் இடம் கிடையாது. சேர்வது வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். கோவாவைச் சேர்த்துக் கொள்ளலாம். பாண்டிச்சேரியைச் சேர்த்துக் கொள்ளலாம்; பாகிஸ்தான் மீதுகூட சண்டைக்குப் போகலாம்! ஆனால் நம்முடைய தமிழ்நாடு பிரிவதற்குச் சட்டத்தில் இடமில்லை; ஆகவே கூட்டாட்சி என்று சட்டத்தில் போட்டிருப்பதெல்லாம் பித்தலாட்டம்.


    ஜாதியினுடைய இழிவை மக்கள் உணர்வதில்லை; அந்த அளவுக்கு அதில் ஊறிப்போய் விட்டார்கள்; ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டுள்ளனர் நம்முடைய மக்கள். என்றைய தினம் மதம், கடவுள் இவற்றில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ அப்போதே இந்த இழிவை இவர்கள் உணராத நிலைக்கு வந்து விட்டார்கள்.


    இந்த ஜாதி முறையைக் கண்டித்தவர்கள்  இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டைவிட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர்! உடனே அரசாங்கம் புத்தக் கொள்கையில் சேர்ந்தவர்-களுக்குச் சலுகையில்லை; வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லி-விட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவனும் இப்போது திரும்பி வரப் பார்க்கிறான்.


    புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்று போட்டு ஒழித்து விட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றைய தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்து மணிவரை படித்துக் கொண்டிருந்தார்; படுக்கைக்குப் போனார்; பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்றுபோட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக்கூட இன்று நாதி இல்லையே?


    வெள்ளைக்காரனுக்கு இந்த நாட்டில் ஆதிக்கத்திற்கு  வசதி செய்து கொடுத்தவன் பார்ப்பனன். நீங்கள், காங்கிரஸ் சரித்திரம், என்ற புத்தகத்தை வாங்கிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்; காங்கிரசின் முதல் தீர்மானமே வெள்ளைக்காரன் ஆட்சி என்றென்றைக்கும் நீடிக்க வேண்டும் என்பதுதான். வெள்ளைக்காரனுக்கு உதவி செய்து தங்களுக்கு வேண்டியபடி அவனுடைய காலத்திலேயே சட்டத்தை ஏற்பாடு செய்து-கொண்டுவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

    நம்மை இன்று ஆள்கின்ற இந்து லாவை (இந்து சட்டம்) வாங்கி அதன் முதல் பக்கத்தை முகவுரையைப் படித்துப் பாருங்களேன்.

    இந்து லாவானது இந்துமத வேதசாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. பராசரர், நாரதர், யாக்ஞயவல்கியர் மனு ஆகியவர்களுடைய ஸ்மிருதிகளை (கருத்துகளை) அடிப்படையாகக் கொண்டது; வருணா-சிரமத்தை அடிப்படையாகக் கொண்டது; இந்து லாவில் ஏதாவது சந்தேகம் வந்தால் சொந்தப் புத்தியை உபயோகப்படுத்தக்கூடாது. சாத்திரங்-களில் வல்லவர்களைக் கூப்பிட்டுத்தான் சந்தேகம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே போட்டிருக்கிறது இந்து லாவில்? யாராவது இல்லை என்று சொன்னால் நான் மாற்றிக் கொள்ளுகிறேன்; கொஞ்ச நாள்களுக்கு முன் சுயமரியாதைத் திருமணம் சம்பந்தமாக அய்கோர்ட்டில் (உயர் நீதிமன்றம்) வழக்கு  ஒன்று வந்தபோது வேத சாஸ்திர அடிப்படையில்தானே தீர்ப்புக் கூறப்பட்டது? வேதத்தின் சூத்திரத்தையல்லவா ஜட்ஜ்-மெண்டில் (தீர்ப்பில்) எடுத்துக்காட்டி அதன் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவதாக எழுதியிருக்கிறார் நீதிபதி.
    -ஜாதிப் பிரிவினையால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன?
    இருக்கவேண்டிய அவசியமென்ன? வேண்டுமானால் இந்தப் பார்ப்பான் பாடுபடாமல், உடம்பை வளைக் காமல் வாழமுடிகிறது. மற்றவர்கள் அடைந்த, அடைகின்ற இலாபம் என்ன?


    நம்முடைய மக்கள் பிறவித் தொழிலாளர் களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்க நாம் முயற்சிகள் செய்துள்ளோம். எங்களுடைய முயற்சிகள் போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் குறுக்கே நிற்கிறதுதான்.


    உயிருக்கு நாங்கள் துணிந்துவிட்டோம். முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப்போகிறோம். இந்தச் சட்டத்துக்குக் காரணமான காந்தியை அடுத்தபடியாக ஒழிக்கப்போகிறோம், பிறகு உயிரைக் கொடுப்போம்.
    ---------------------23.10.1957 அன்று நெல்லை மாவட்டம் ஏரலில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 4.11.1957

    48 comments:

    தமிழ் ஓவியா said...

    1923-1926

    1923-1926 காலகட்டம் - சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சி என்னும் பொற்கொடி ஒளிவீசிய காலகட்டம். பார்ப்பனர்களால் மகாமகா சாணக்கியர் என்று வரு ணிக்கப்பட்ட பனகல் அரசர் (ராமராயநிங்கர்) பிரதமராக இருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் நெஞ்சமெல்லாம் பால் வார்த்த பண்பாளர்.

    இவர் பிரதமராக (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) இருந்த காலத்தில்தான் அது வரை ஆங்கிலேயர் வசமே இருந்து வந்த சென்னை மாநில மருத்துவத் துறை, இந்தியர் கைக்குள் வருவ தற்கான சட்டம் இயற்றப் பட்டது.

    (ஜஸ்டிஸ் கட்சியினர் வெள்ளைக்காரர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் என்று வாய்ச் சுளுக்கேறிப் பேசிய - பேசுகிற பார்ப்பனக் கொழுந்துகளுக்கு இது அர்ப்பணம்!).

    எதிர்ப்பு எந்தப் பக்கத் தில் இருந்து வந்தாலும், அது இந்த நாட்டிற்கு நன் மையை விளைவித்தால் அதை வரவேற்கத் தயா ராய் இருக்கின்றேன். தீமை விளைவிக்குமானால், அதை எதிர்த்து முறியடிப் பேன் என்று சட்டமன்றத் தில் பனகல் முழங்கினார். வெள்ளையர்கள் பனகலை விழுந்து குதறாமல் இருந் ததுதான் பாக்கி.

    மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித் திருக்கவேண்டும் என்று இருந்த நிபந்தனையை நெட்டித் தள்ளி, பார்ப்பனர் அல்லாதாரும், மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் கதவைத் திறந்து விட்ட கண்ணியம்மிக்க கல்விக் காவலரும் அவரே!

    இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் இந்தப் பெருமகன் காலத் தில்தான் பந்தற்கால் நாட் டப்பட்டது. அதுவரை அக் ரகாரத்தில் படுத்துறங்கிய வைக்கோல் போராகத்தான் கோவில்கள் குவிந்து கிடந் தன.

    கடவுளச்சி அபிராமி யின் காதில் ஒரு நாள் மின்னிய கம்மல் மறுநாள் கோவில் குருக்கள் அப்பா சாமி பட்டரின் பாரியாள் காதுகளிலும் கண்ணடிக்கும்.

    யார் கேட்க முடியும்? கர்ப்பக் கிரகத்துக்குள்ளி ருந்தாலும் சாமி பக்தர் களுக்கும், சாமிக்கும், தரகு வேலை பார்க்கும் ஆசாமி யும் சாமி!! சாமிக்கும், சாமிக்கும் பரிவர்த்தனை நடந்தால் யார்தான் மூக்கை உள்ளே நுழைக்க முடியும்?

    திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது முழங்கினாரே பார்க்கலாம்:

    நீதிக்கட்சியினர் பிரா மணர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பிவிட் டார்கள், மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.

    மதத் தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒரு மனதாக எதிர்க்கவேண்டும் என்று கொட்டித் தீர்த்தார்.

    1923-1926 காலகட்டத் தில் இரண்டாவது நீதிக்கட்சி யின் சாதனைகள் விரிவா னவை. - மயிலாடன்

    குறிப்பு: நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இப்பொன்னாள் (19.11.1923).

    Read more: http://viduthalai.in/e-paper/91413.html#ixzz3JZSHHBbb

    தமிழ் ஓவியா said...

    பெரியாரின் திராவிட இயக்க மண்ணில்

    ஆரிய பி.ஜே.பி. காலூன்ற சூழ்ச்சிகள்-திட்டங்கள்!

    அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா


    சென்னை, நவ.19_ தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் இவற்றால் பக்குவப்படுத்தப்பட்ட திராவிட இயக்க மண்ணில் ஆரிய பி.ஜே.பி. தன் கால் பதிக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு (18.11.2014) அம்பலப்படுத்தியுள்ளது.

    பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு ஆங்கிலே யர்கள் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். இப்பிரிவினைக் கோட்பாட்டின் மூலம் தற்போதைய பா.ஜ.க. அரசு, மத ரீதியாக மக்களைப் பிரித்து ஒற்றுமையைச் சிதைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. தற்போது சமூகநீதிக் களமான தமிழகத்தில் கால் பதிக்க கங்கணம் கட்டிக்கொண் டிருக்கிறது. தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தின் வலிமையால், சுதந்திரத்திற்குப் பிறகு மதவாத சக்திகளை வேரோடு பிடுங்கி எரிந்ததுமல்லாமல், திராவிட கட்சிகளின் தாக்கம் இன்னும் நூற்றாண்டு வரை இருக்கும்படி செய்துவிட்டது. ஆனால், மத்தியில் பிரித்தாளும் கொள்கையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜக, தற்போது தமிழகத்திலும் தனது பிரித்தாளும் கொள்கையை களமிறக்கத் தொடங்கியுள்ளது.

    ஆரியர்களின் வருகை

    ஆரியர்கள் வந்த பிறகு, வட இந்தியாவில் பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தினார்கள். தென் இந்தியாவிலும் தங்கள் பலத்தைக் காண்பித்து வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்கள். இதற்கான எதிர்ப்பு வடக்கில் தொடங்கினாலும், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களின் மறைவிற்குப் பிறகு ஆரிய எதிர்ப்பு வலுவிழந்து விட்டது அல்லது அந்த எதிர்ப்பு சக்திகள் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு அடிபணிந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் அப்படி அல்ல; பெரியாரின் திராவிடர் கழகத்தின் தாக்கம் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக நீடித்து வருகிறது,

    தமிழ் ஓவியா said...

    முக்கியமாக திராவிட கருத்தாழமிக்க தமிழகத்தை மத்தியில் பலம் வாய்ந்த ஆரியக்கூட்டம் ஒரு வகை பகைமைப் பார்வையே பார்த்து வந்தது. இதன் கார ணமாகத்தான அறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்றார். இதற்குக் காரணமும் உண்டு. ஆரியர்களின் விரோத மனப்பான்மை எந்த அளவிற்கு ஊறிவிட்டது என்றால், தமிழ் மொழியை ஒழிக்கக் கங்கணம் கட்டி, இந்தியை முழுமையாகத் திணிக்கும் சூழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வந் தார்கள். பாஜகவின் ஆட்சியில் இந்தி மொழித் திணிப்பு மேலும் தீவிரமாகியுள்ளது.

    இடையில் புகுந்தது ஆரிய இனம்!

    இந்துத்துவ சக்திகளின் கூறான வேதங்கள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப் பட்டவை என்ற கட்டுக்கதைகள் செல்லுபடியாக வில்லை. சமீபத்திய மனித இன இடப்பெயர்வு குறித்த ஆய்வு ஒன்றில் இந்திய தீபகற்பத்தில் 2000 ஆண்டுகளுக்கு இடையே பெரிய அளவில் அந்நிய இனம் புகுந்தது. இதற்கு முன்பே பன்னெடுங்காலமாக இந்திய தீபகற்பத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு ஓர் இனம் வாழ்ந்து வந்தது என்ற உண்மை ஆரியர்கள் சமீபத்தில் இந்தியாவிற்குள் புகுந்த வந்தேறிகள்தான் என்பதை உறுதி செய்துள்ளது. இதிலிருந்தே வேதங் கள் என்னும் கட்டுக்கதைகள்மூலம் தன்னை இந்த மண்ணிற்குச் சொந்தகாரர்கள் என்று போலியான ஒரு தோற்றத்தை ஆரியக் கூட்டம் உருவாக்கிய சூழ்ச்சி தெரிய வரும். அதேநேரத்தில், இப்பொய்யை தற் போதைய அரசு வரலாற்றுப் பாடங்களில் மாற்றங்களைச் செய்து உண்மையாக்க முயல்கிறது.

    வட மற்றும் தென்மாநிலங்களில் பாஜகவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு நடைமுறை அனுபவம் கிடைத்தது. அதாவது வடமாநிலங்களில் எளிதில் மத ரீதியாக மக்களை ஏய்த்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்களுக்குத் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது செல்லுபடியாகாது. ஆகவேதான், மோடி ஊழல் அற்ற என்ற ஒரு பிரம்மையை தமிழகத்தை மனதில் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    திராவிட கட்சிகள்மீது அவதூறு பரப்புதல்

    தமிழ் ஓவியா said...

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியைக் குறித்து முதலில் மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், தமிழக பாஜகவினருக்கு கடுமையான சில உத்தரவுகளைப் போட்டிருக்கின்றனர் மோடியும், அமித்ஷாவும்.

    முக்கியமாக தற்போது முதல் குறி திராவிட சிந்தனையை உடைப்பது தான் அவர்களின் பணி. இதற்காகவே முதலில் ஆரிய_ திராவிட என்னும் கோட்பாட்டை உடைத்து திராவிட சிந்தனைமீது பழிதூற்றும் வகையில் பல்வேறு கட்டுக்கதைகளைத் தயார் செய்து, மக்களிடையே பரப்புவது, அதாவது பாரம்பரிய இந்திய மரபை ஆங்கிலே யர்கள் சிதைத்தனர். அதைத் திராவிட சிந்தனை கொண்டு கட்சிகள் இன்றும் காப்பாற்றி வருகின்றனர் என்ற பொய் யான பிரச்சாரம் உள்ளூர மேற்கொள் ளப்படுகிறது.

    ரஜினியை இழுக்க முயற்சி

    அதற்கேற்றாற்போல் பிரபல திரைப்பட நடிகர்களைத் தங்களின் பக்கம் இழுக்க முயற்சி செய்து வரு கிறது. இதன் முதல்படியாக ரஜினி காந்தை தங்கள் வலையில் சிக்க வைக்க முழு முயற்சி எடுத்து வருகிறார்கள். பாஜக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதிக்க முடியாது. இதன் காரணமாக, 2014 இல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பார்த்தது, இருப் பினும் அதன் வாக்கு வங்கி எதிர் பார்த்த அளவிற்குக் கூடவில்லை. தற்போது முக்கியப் பிரச்சினை யான மீனவர் சிக்கலை பாஜக கையில் எடுத்துள்ளது. ஒருபுறம் ராஜபக்சே விற்கு மத்திய அரசு முழுமையாக ஆத ரவு தரும் நிலையில், தமிழக மீனவர் களின் சிக்கலை எப்படி தீர்க்கப் போகி றார்கள் என்பது தமிழக மக்களின் மத்தியில் மிகப்பெரும் கேள்வியாக எழுகிறது. அதேநேரத்தில், ராஜபக்சே வுடன் சுமூகமாகப் பேசி, மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது போன்ற ஒரு மாயையையும் தமிழக பாஜக கிளப்பி வருகிறது.

    அதேநேரத்தில், தமிழகத்தில் திராவிட சிந்தனையை ஒழிக்க பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டே எதிர்ப்பு அலையை உருவாக்கி வருகிறது. இதன் முன்னேற்பாடாகத்தான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முக்கிய பதவியில் அமர வைத்து, சமூகநீதிக்கு ஆதரவான அதேநேரத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உண்மையான எதிரிகள் நாங்கள்(பாஜக) அல்ல என்று காட்டுவது போன்ற ஒரு மாயையை உருவாக்கிவிட்டது.

    மாயை உருவாக்குகிறார்கள் மேலும் பாஜகவின் இந்துத்துவா சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோன்ற ஒரு மாயையை உருவாக்க தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர், காஞ்சி சங்கராச்சியாருடன் நல் லுறவை ஏற்படுத்திக் கொண்டது போன்ற ஒரு போலியான மாயையை உருவாக்குவது மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூடாரத்தில் அதிகப்படியான பிற் படுத்தப்பட்ட மக்களை இணைக்கச் செய்வது போன்ற சூழ்ச்சிகள் அரங் கேறிவருகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா (18.11.2014) செய்தி வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் ரகசியமாகத் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா தியாகராயர் நகரில் மதம் தொடர்பான மடம் ஒன்றிற்குச் சென்று வந்தார். அங்கு ஆர்.எஸ்.எஸ் தமிழகப் பிரமு கர்கள் பலர் அவரைச் சந்தித்தாக தெரிகிறது. அமித்ஷா வந்து சென்ற பிறகு, நடந்த சம்பவங்கள் பாஜகவின் சூழ்ச்சியை விரைவில் வெளியே கொண்டு வந்துவிட்டன. அமித்ஷா சென்னை வந்து சென்ற சில நாள்களில், ஆர்.எஸ்.எஸ். தமிழ கம் முழுவதும் ஊர்வலம், போராட் டம், பொதுக்கூட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை தமிழகத்தில் மறைமுகமாக இயங்கிக்கொண்டு இருந்த ஒரு சக்தி தற்போது வெளிப் படையாகக் களமிறங்கியுள்ளது _ தமி ழகத்தில் திராவிட சிந்தனையை வேரில் இருந்து அழித்தொழிக்கும் வகை யில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பதவிகளைக் கொடுத்து, அவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி களமிறங்கும் பாஜகவின் சூழ்ச்சி எந்த அளவிற்கு பலன் தரும் என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

    Read more: http://viduthalai.in/e-paper/91414.html#ixzz3JZSQgNeH

    தமிழ் ஓவியா said...

    கிரிக்கெட் சூதாட்டம் சீனிவாசய்யர்?

    அய்.பி.எல். கிரிக்கெட் டில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முகுல்முட்கல் தலை மையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தன் அறிக்கையை வெளியிட் டுள்ளது. இதில், சீனிவாச னுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சீனி வாசன் உள்பட 4 பேரும் ஒரு விளையாட்டுக்காரர் நடத்தை விதிகளை மீறியதை அறி வார்கள்; ஆனாலும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறது அறிக்கை.

    தெரிந்ததை மறைத்ததும் குற்றம்தானே!

    சீனிவாச அய்யரின் மரு மகன் குருநாதன் மெய்யப் பன் பெட்டிங்கில் ஈடுபட் டது உறுதி செய்யப்பட்டுள் ளது.

    Read more: http://viduthalai.in/e-paper/91423.html#ixzz3JZScqdaz

    தமிழ் ஓவியா said...

    நன்றாகத் தெரியும்...



    மகன்: அய்யப்பப் பக் தர்களுக்கு உதவி செய்ய 24 மணிநேர தொலைப் பேசி சேவை மய் யத்தை இந்து அறநிலை யத் துறை தொடங்கி யுள்ளதே, அப்பா!

    அப்பா: கடவுள் காப் பாற்ற மாட்டார். அது வெறும் சிலைதான் என் பது இந்து அறநிலை யத் துறைக்கு மிக நன் றாகவே தெரியும், மகனே!

    Read more: http://viduthalai.in/e-paper/91418.html#ixzz3JZT1STTc

    தமிழ் ஓவியா said...

    முல்லைப் பெரியாறு - பாடம் பெறுமா கேரளா?

    முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது; அப்படித் தேக்கினால் அணை உடையும், இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கும்; இலட்சக்கணக்கான மக்கள் மடிவார்கள் என்று பெருங்குரல் கொடுத்தது கேரள அரசு.

    999 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பது சட்டப்படி யான நிலை; 1885 இல் போடப்பட்ட ஒப்பந்தம் இது. சட்டமாவது - ஒப்பந்தமாவது - தூக்கி எறியுங்கள் என்ற மனப்பான்மையில் ஆட்டம் போட்டது கேரள அரசு.

    கேரள மாநில அரசின் கூச்சல், அடாவடித்தனமாக இருந்ததன் விளைவாக 152 அடி தண்ணீர்த் தேக்க வாய்ப்பு இருந்தும் 136 அடி அளவில் நீர்மட்டம் குறைக்கப்பட்டது.

    கேரள அரசு சொல்கிறபடி அணை பலமாக உள்ளதா இல்லையா என்று கண்டறிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

    மிட்டல் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 136-லிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்தது (27.2.2006).

    அந்தத் தீர்ப்பினை முடக்கிட தனிச் சட்டம் ஒன்றையும் கேரள அரசு கொண்டு வந்ததுண்டு (18.3.2006).

    2006 இல் தீர்ப்பு வழங்கியும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன என்பதைக் கவனிக்கவேண்டும் - அதுவும் உச்சநீதி மன்றம் காதைத் திருகித் தீர்ப்பை அளித்ததற்குப் பிறகு.

    8000 ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த முல்லைப் பெரியாறு 4000 ஏக்கருக்குச் சுருக்கப்பட்டது. இந்தத் தேக்கடிப் பகுதிகள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளிடம் வியாபாரம் நடத்தும் வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்பட்டது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் 5 நட்சத்திர விடுதிகள் எழிலாக உருவாக்கப்பட்டன.

    தண்ணீரை 136 அடியிலிருந்து 142 அடி ஆக்கினால், 152 அடியாக உயர அனுமதித்தால், இந்த அய்ந்து நட்சத்திர விடுதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

    இப்பொழுது 142 அடி தண்ணீர் உயர்ந்துள்ள நிலையிலேயே, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் மூழ்க ஆரம்பித்துவிட்டன என்ற செய்தி வெளிச்சத் துக்கு இப்பொழுது வந்துவிட்டன. இதற்குப் பிறகாவது கேரள அரசு புத்தி கொள்முதல் பெறுமா என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

    1979 முதல் 35 ஆண்டுகாலமாக கேரள அரசின் சட்ட விரோதமான - நியாய விரோதமான - மக்கள் விரோதமான நடவடிக்கையால் தென்மாவட்டங்களில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகின. 86 ஆயிரம் இரு போக சாகுபடிகள் ஒரு போகச் சாகுபடியாக பின்னுக்குத் தள்ளப்பட்டன.

    இப்பொழுதுகூட கேரள அரசு திருந்தியபாடில்லை. முல்லைப் பெரியாறு பாதையில் புதிய அணை கட்டும் திட்டத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.

    கருநாடகமும், இதே வேலையில் இறங்கியுள்ளது. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகளை - உச்சநீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கிப் போடும் நீதிமன்ற அவதூறுகளையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதேயில்லை. சட்டத்தின் ஆட்சி எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இவையெல்லாம் கற்றூண் போன்ற சாட்சியங்களே!

    தேசியத்தை உடைக்கப் போவது தேசியத்தை எதிர்க்கும் கட்சிகளல்ல; தேசியம் பேசும் கட்சிகளும் - ஆட்சிகளுமே!

    Read more: http://viduthalai.in/page-2/91426.html#ixzz3JZTIXfEL

    தமிழ் ஓவியா said...

    உரிமையைப் பெறும் வழி


    நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம், நம் உரிமைகளைப் பெற முடியும்.
    _ (விடுதலை, 30.5.1951)

    Read more: http://viduthalai.in/page-2/91425.html#ixzz3JZTPodlD

    தமிழ் ஓவியா said...

    மதம் மாறிய இணையர் கேரள முதல்வரிடம் பாதுகாப்பு கோரினர்

    கோழிக்கோடு, நவ.19- அதிகம் படித்த வர்கள் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த வர்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பொறியாளராக இருப்பவர் கவுதம்(24). இவர் பல் மருத்துவக் கல்வி பயின்றுவரும் அன்ஷிதா(21) இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால், அவர் களிருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


    அவர்களின் கல்வி, மற்ற பணிகள் தொடர்வதற்காக பாதுகாப்பான சூழ் நிலைக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் உதவி கோரி உள்ளார்கள். அன்ஷிதாவின் பெற்றோர் தரப்பில் அவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித் ததால், வீட்டைவிட்டு வெளியேறி, காவல் துறையினரின் பாதுகாப்பில் திருமணம் செய்து கொண்டனர். இன்னமும் அவர் கள் வசிக்கும் வீட்டில் தொடர்ச்சியாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், இளம் தம்பதியினருக்கு நாளுக்குநாள் அச் சுறுத்தல் அதிகமாகி உள்ளது.

    இரு வேறு மதங்களைச் சேர்ந்த இளம்தம்பதியருக்கு மிரட்டல் தொடரும் நிலை உள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்கிறார்கள். மதத்துக்கு எதிராக திருமணம் செய்துவிட்டதாகக்கூறி அவர் களின் வாழ்வே கேள்விக்குரியதாகி உள்ளது. எல்லா நாள்களிலும் அவர்களின் வீட்டை நோக்கி கும்பலாக திரண்டு மிரட்டலை விடுத்து முழக்கமிடுவதும், வீட்டின் சன்னல்களில் கல்வீச்சுகளுமாக இருக்கிறது. கல்வீச்சில் சன்னல்கள் உடைந்து சேதமாயின.


    கவுதம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாகும். நான் எந்த மதத்தை யும் பின்பற்ற வேண்டியதில்லை என் பதைத் தேர்வு செய்துள்ளேன். இப் போதும்கூட அன்ஷிதா இசுலாமிய மதமுறையைப் பின்பற்றுகிறார். அவருக் காக குர்-ஆன் நூலை வாங்கிக் கொடுத் துள்ளேன். இதில் எதிர்ப்பு தெரிவிப்பவர் கள் ஏன் மதத்

    தைக் கொண்டுவரு கிறார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை. மதத்தின்பெயரால் எங்களை தூற்றி வருகிறார்கள் என்றார்.
    உள்ளூர் காவல் ஆய்வாளர் ஜோஷி ஜோஸ் தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியை ஏற் படுத்த அனைத்துவித முயற்சிகளும் எடுத்து வருகிறோம். எந்த அமைப்போ, அரசியல் தலையீடுகளோ இந்த அச் சுறுத்தலில் இருப்பதாக யாரும் பொறுப் பேற்கவில்லை என்றார்.

    கவுதம் கூறுகையில் எப்போது பணிக்குச் செல்லமுடியும் என்று உறுதி யாகச் சொல்ல முடியவில்லை என்றார். அவருடைய பெற்றோர் ஆதரவில் இரு வரும் இருக்கிறார்கள். கவுதம் கூறும் போது, நாங்கள் வீட்டைவிட்டு வெளியே அடி எடுத்துவைக்க முடியவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம் என்றார்.

    அவர் தந்தை சுதாகரன் கூறுமபோது, 9 மாதங்களாக தங்கள் உறவை மறைத் துக்கொண்டிருந்த அவர்கள் திருமணம் முடிந்தபின்னரும் எதிர்த்துவருவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தமடையச் செய்கிறது. அன்ஷிதாவின் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு உதவவேண்டும் என்பதே என்னுடைய முதல் குறிக்கோள். இதற்காக எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவைப்படுகிறது என்றார்.

    அண்ஷிதா மீண்டும் கசர்கோட்டில் உள்ள கல்லூரிக்குச் செல்ல முடியாது. அவர்மீதான அச்சுறுத்தல் அங்கு பதட்ட மான சூழலையே முழுமையாக ஏற்படுத்தி வந்துள்ளது. அவர் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே நம்பிக்கையுடன் படித்து வருவதுடன் இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத முடியும் என்று நம்புகிறார்.

    வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளவரும், மதம் மாறித் திருமணம் செய்துகொண்டவர் நலனுக் காக செயல்பட்டுவருபவருமான அஜீதா கேரளாவில் உள்ள சூழல் குறித்து கூறும் போது, மதசார்பின்மை மற்றும ஜனநாயக மதிப்புகளைக் குறைக்கும்வகையில் குறிவைத்து பாதிப்புகள் உருவாகின்றன என்றார்.

    Read more: http://viduthalai.in/page-2/91428.html#ixzz3JZTXY3xi

    தமிழ் ஓவியா said...

    சாமியாரா? சண்டைக்காரரா?: அரியானாவில் வன்முறை

    பர்வாலா (ஹிஸார்), நவ.19_ அரியானாவில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வ தற்காக, அவருடைய ஆசிர மத்துக்குச் சென்ற காவல் துறையினருக்கும், ராம் பாலின் ஆதரவாளர் களுக்கும் இடையே செவ் வாய்க்கிழமை ஏற்பட்ட மோதல் கலவரமாக உரு வெடுத்தது.

    இதில், பெண்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.
    இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் நேரில் ஆஜராகாததால், அவருக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை உத்தரவைப் பிறப் பித்தது.

    மேலும், அவரை வெள் ளிக்கிழமை நேரில் ஆஜர் படுத்துமாறும் உத்தர விட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்வ தற்காக, ஹிஸார் மாவட் டம், பர்வாலாவில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு துணை ராணுவப் படை யினருடன் செவ்வாய்க் கிழமை சென்றோம்.

    ராம்பாலின் ஆதரவா ளர்கள், ஆசிரமத்தின் வாயிற் கதவுகளை மூடி, எங்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தி னார்கள். உள்ளே அனு மதிக்குமாறு பல முறை கூறியும், அவர்கள் வாயிற் கதவுகளைத் திறக்கவில்லை.

    இதையடுத்து, உள்ளே நுழைய முயன்ற எங்கள் மீது ஆசிரமத்துக்கு உள்ளே இருந்து ராம்பாலின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்கினர். துப்பாக்கி யால் சுட்டதுடன் பெட் ரோல் குண்டுகளையும் வீசினர்.

    ஆசிரமத்துக்கு உள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்.
    இதையடுத்து, ஆசிரமத் துக்கு வெளியில் திரண்டி ருந்த கூட்டத்தை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி யடித்தோம்.

    நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் பெண்கள், காவல்துறையினர், செய்தி யாளர்கள் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். தொலைக் காட்சி நிறுவனங்களின் சாதனங்கள் சேதப்படுத்தப் பட்டன. காயமடைந்த வர்கள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    ஆயிரம் பேர் தவிப்பு: இதனிடையே, அந்த ஆசிர மத்துக்குள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இருப்பதாகவும், அவர்களை வெளியே வர விடாமல் ராம்பாலின் ஆதரவாளர்கள் தடுப்பதாக வும் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரி வித்தனர். மேலும், தங்களை பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி ராம்பாலின் ஆதரவாளர்கள் காவல் துறையினர் மீது தாக்கு தலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக, ஆசிர மத்தில் ராம்பால் இல்லை என்றும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாகவும் ஆசிரம செய்தித் தொடர் பாளர் தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில் மாநிலக் காவல்துறை டிஜிபி எஸ்.என்.வசிஷ்ட், செய்தி யாளர்களிடம் கூறுகையில், "எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராம்பால் இன்னமும் ஆசிரமத்தில் தான் இருக்கிறார்; நிலை மையை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கண்காணித்து வருகிறார்' என்றார்.

    Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTkgCCA

    தமிழ் ஓவியா said...

    யாரிந்த ராம்பால்?

    ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8இல் ராம் பால் பிறந்தார். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த அவர் அரியானா மாநில நீர்ப்பாசனத் துறையில் 2000ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றினார்.
    அனுமாரின் தீவிர பக்தரான ராம்பால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பூஜித்து வருகிறார். 1999இல் சட்லக்கில் அவர் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா ஆகிய பகுதிகளிலும் ஆசிரமத்தை தொடங்கினார். பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ராம்பால் அதிக ஆர்வம் கொண்டவர். யு டியூபில் அவரை ஆயிரக் கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

    சட்டத்துக்கும் ராம்பாலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். 2000ஆம் ஆண்டில் ஆர்ய சமாஜ் ஆதரவாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ராம்பால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டார்.
    2006ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரமத்தில் இருதரப் பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். அதில் சாமியார் ராம்பாலுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கில்தான் ராம்பாலை கைது செய்ய காவல்துறையினர் தேடுகின்றனர்.

    2008ஆம் ஆண்டு ஏப்ரலில் ரோட்டக் ஆசிரமத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதேபோல் பர்வாலா ஆசிரமத்தில் 2013ஆம் ஆண்டில் மிகப்பெரிய மோதல் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோல் சாமியார் ராம்பால் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்தார். 2008 ஏப்ரலில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை.

    Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTsZ2kT

    தமிழ் ஓவியா said...

    காவிரி, முல்லைப் பெரியாறு குறுக்கே தடுப்பணைகள், கர்நாடக, கேரள அரசுகளின் முயற்சிகளைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


    காவிரி, முல்லைப் பெரியாறு குறுக்கே தடுப்பணைகள்
    கர்நாடக, கேரள அரசுகளின் முயற்சிகளைக் கண்டித்து
    மத்திய, மாநில அரசுகளின் உடனடி நடவடிக்கைகளை வலியுறுத்தி

    கழகத்தின் சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    தஞ்சை, நவ. 19_ காவிரி, முல்லைப் பெரியாறு குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயலும் கர்நாடக, கேரள அரசுகளைக் கண்டித்தும், காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பைக் காட்டும் வகையிலும் அணை கட்டுவதை தடுக்க மத்திய _ மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திரா விடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று (19.11.2014) காலை 10.30 மணியளவில் தஞ்சா வூர் தலைமை அஞ்சலகம் எதிரில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு தலைமை ஏற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

    பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மண்டல செயலாளர் மு.அய்யனார், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வை.இளங்கோவன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்ட விவசாய அணி தலைவர் மா.இராசப்பன், தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.இராம சாமி, தஞ்சை மாவட்ட விவசாய அணி அமைப் பாளர் பா.சுதாகர், பட்டுக்கோட்டை மாவட்ட விவ சாய அணி அமைப்பாளர் பழ.வேதாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    தமிழ் ஓவியா said...

    ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி கழக பொதுச் செயலாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

    இறுதியாக கழக தலைமைக் கழக பேச்சாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன் கண்டன உரையாற்றினார். தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில ப.க. பொதுச் செயலாளர் வ.இளங்கோவன், மாநில ப.க. துணைத் தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் வை.தேசபந்து, மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ச.சந்தோஷ், தஞ்சை ஒன்றியத் தலைவர் இரா.சேகர், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம்,

    மாநகரத் தலைவர் வ.ஸ்டாலின், மாநகர செயலாளர் சு.முரு கேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் அல்லூர் பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் இரவி.தர்மசீலன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஏ.பாக்கியம், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அஞ்சுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.மணியன், அல்லிராணி கை.முகிலன், உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். உரத்தநாடு நகர செயலாளர் சாமி.அரசிளங்கோ கண்டன ஒலி முழக்கங்களை எழுப்ப அனைவரும் பின் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

    தமிழ் ஓவியா said...

    கண்டன முழக்கங்கள்

    ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! உரிமை கோரும் ஆர்ப்பாட்டம்

    மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்

    தடுப்பணையா தடுப்பணையா காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணையா தமிழ்நாட்டை வஞ்சிக்க தடுப்பணையா?

    தடுப்பணையா? தடுப்பணையா முல்லை பெரியாற்றின் குறுக்கே தடுப்பணையா? தரை மட்டமாக்கும் தடுப்பணையா?

    தமிழா தமிழா ஒன்றுபடு தமிழர் உரிமையை வென்றுவிடு

    சட்டவிரோதம் சட்டவிரோதம் தடுப்பணை கட்டுவது சட்ட விரோதம்

    தலையிடு தலையிடு மத்திய அரசே தலையிடு

    வஞ்சிக்காதே வஞ்சிக்காதே கர்நாடக அரசே வஞ்சிக்காதே

    கேரள அரசே வஞ்சிக்காதே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே

    மத்திய அரசே மத்திய அரசே தலையிடு தலையிடு

    சட்டவிரோத கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கேரள அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து

    குரல் கொடுப்போம் குரல் கொடுப்போம் தமிழ்நாட்டு உரிமைக்கு குரல் கொடுப்போம்.

    Read more: http://viduthalai.in/page-8/91463.html#ixzz3JZUEQjtM

    தமிழ் ஓவியா said...

    பார்ப்பனர்கள் மீது தனிப்பட்ட விரோதமா??

    நம்முடைய திருமணங்களிலோ,
    மற்ற நம் வீட்டு சடங்குகளிலோ,
    நம்மைச் சூத்திரன் ஈனஜாதி என்று கருதி,
    நம்மைத் தொடாமலும்,
    நாம் தொட்டதைச் சாப்பிடாமலும்,
    நம் எதிரில் சாப்பிட்டால் பாவம் தோஷம் என்று கூறி,
    நம்மை இழிவு செய்யும் மனிதனை,

    நம்மை விட உயர்ந்த ஜாதி என்று கருதி,
    அவனை நமது சபை நடுவே,

    உட்கார வைத்து பெருமைப்படுத்தி,
    நாம் இழிவடைவது கூடாது என்பதற்காகத்தான்

    இப்படிப்பட்ட காரியங்களில்

    பார்ப்பனர்களை விலக்க வேண்டும் என்று சொல்கிறோமே, தவிர,

    அவர்கள் மீது நமக்கு வெறுப்போ, துவேசமோ இல்லை,,

    --பெரியார், (03.09.1941)

    தமிழ் ஓவியா said...



    சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து சென்னையில் திராவிட மாணவர் கழகம் நடத்திய எழுச்சி ஆர்ப்பாட்டம்

    ஆரியப் பண்பாட்டுத் திணிப்பின் அடையாளமான சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்!

    மாணவர் பட்டாளம் சூளுரைத்தது


    சென்னை, நவ.20_ சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியை எதிர்த்து சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் இன்று (20.11.2014) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இவ்வார்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

    மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித் துறை அறிவிப்பதோடு, மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்று வந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    எனவே, மத்திய அரசின் இந்த செத்த மொழியான சமஸ்கிருத மொழி திணிப்பைக் கண்டித்து இன்று திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தலைவர் 15.11.2014 அன்று அறிவித்தார்.

    அதன்படி இன்று (20.11.2014) சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு காலை 11 மணியளவில் திராவிடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாநில மாணவரணி துணைச் செயலா ளர்கள் த.சீ.இளந்திரையன், அஜீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்

    Read more: http://viduthalai.in/e-paper/91475.html#ixzz3JfBnRagK

    தமிழ் ஓவியா said...

    அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு! பெருமகிழ்ச்சி - நன்றி!


    அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு!
    பெருமகிழ்ச்சி - நன்றி!

    ஒட்டுமொத்தமாக தமிழ்நாடே இணைந்து குரல் கொடுத்தது -

    போதை மருந்து கடத்தல் என்ற பொய்க் குற்றத்தின் பெயரில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட இராமேசுவரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தமிழர்களின் வாழ்வு மீட்கப்பட்டு விட்டது!

    இதில் மோடி அரசு, தமிழ் மக்களின் உணர் வினை மதித்து செயல்பட்டுள்ளது மகிழ்ச்சிக்கும், நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது.
    இதை ஒரு சாக்காக வைத்து இனி எமது தமிழக மீனவர் வாழ்வதாரமான மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை இராஜபக்சே அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது!

    தமிழ்நாட்டு மக்கள் எதையும் புரியாதவர்கள் அல்ல!

    ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மைக்குக்கூட மறைமுக அச்சுறுத்தலை புதிய நட்புகளின்மூலம் இராஜ பக்சேக்கள் மிரட்டிவரும் போக்குகளுக்கும்கூட முற்றுப்புள்ளி வைக்க மத்திய - மோடி அரசு முன்வரவேண்டும்.



    கி.வீரமணி
    தலைவர், திராவிடர் கழகம்.

    20.11.2014

    Read more: http://viduthalai.in/e-paper/91478.html#ixzz3JfCTtMgU

    தமிழ் ஓவியா said...

    இன்றைய ஆன்மிகம்?

    ஏன்? ஏன்? ஏன்?

    கேள்வி: ரமண மகரிஷி போன்ற மகான்கள் கூட கடுமையான நோயில் துன்பங்களை அனுபவிப்பது ஏன்?

    பதில்: மகான்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கர்ம வினைகளை (பிராரப்த கர்மம்) அனுபவித்தாக வேண்டும்.
    - விஜயபாரதம், (ஆர்.எஸ்.எஸ். இதழ்)

    கர்மவினைகளை அனுபவித்துதான் தீரவேண்டும் என்றால், கடவுள் பக்தி ஏன்? பிரார்த்தனை ஏன்? பிராயச்சித்தங்கள் ஏன்? கோவில், குளங்கள் ஏன்? ஏன்?

    Read more: http://viduthalai.in/e-paper/91483.html#ixzz3JfCdRpiE

    தமிழ் ஓவியா said...

    இதுதான் தெலங்கானா?



    தெலங்கானாவில் வரலாறு காணா வறட்சியால் 400 விவசாயிகள் தற்கொலை.

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ மாத சம்பளம் ரூ.2 லட்சமாக உயர்வு.

    சடங்கு, சம்பிரதாயம், இறை பக்தி இவைகளுக்கு மட்டும் முதலமைச்சரிடத்தில் குறைச்சல் இல்லை.

    Read more: http://viduthalai.in/e-paper/91482.html#ixzz3JfCmvOEg

    தமிழ் ஓவியா said...

    முற்போக்கு வெற்றி பெற...


    முற்போக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கும் நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. - (குடிஅரசு, 30.6.1929)

    Read more: http://viduthalai.in/page-2/91485.html#ixzz3JfCzQi7F

    தமிழ் ஓவியா said...

    அரசு விதிமுறைகளை மீறி கன்னியாகுமரியில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

    கன்னியாகுமரி மாவட்டம் மதப் பிரச்சினைகளில் மிகவும் பதற்றமான மாவட்டம், மதச்சண்டைகள் எங்கு எப் போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது? இப்போதும் குமரியில் ஆங் காங்கே மதச்சண்டைகள் நடந்துதான் வருகின்றன. 1982 ஆம் ஆண்டு மண்டைக் காட்டில் மிகப்பெரிய மதக்கலவரம் இந்து - கிறிஸ்தவ மதத்தினருக்கிடையே நடந் தது. இந்நிலையில் நீதியரசர் வேணு கோபால் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் முக்கிய அம் சம் என்னவென்றால் ஒரு மத வழி பாட்டுத்தலம் இருக்கும் குறிப்பிட்ட தூரத்திற்குள் அடுத்த மத வழிபாட்டுத் தலம் அங்கு அமைக்கக் கூடாது என்பது தான். குறிப்பாக ஒரு கோவில் அருகில் அமைக்கக் கூடாது என்பதுதான். குறிப் பாக ஒரு கோவில் அருகில் ஒரு கிறிஸ் தவ தேவாலயம் அமைக்கக் கூடாது என்பதுதான்.

    ஆனால் இப்போது கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிலின் கிளை (வெங்கடாஜலபதி கோவில்) அங்கு உருவாக்கப்படுகிறது ரூபாய் 22.5 கோடி செலவில் அந்தக் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    அதே கடற்கரையில் அருகே அலங் கார உபகார மாதா கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவமத வழிபாட்டுத்தலம் இருக்கும் இடத்தில் இந்த திருப்பதி கோவில் புதிதாக அங்கு கட்டுவது சட்ட விதிமுறை மீறலாகும். நீதி அரசர் வேணு கோபால் ஆணையத்தின் பரிந்துரையின் செயலை அவமதிப்பதாகும்.

    இந்த செயலை குமரி மாவட்ட நிரு வாகமும் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. மதப்பிரச்சினைகள் உள்ள இந்த மாவட்டத்தில் இந்த செயலுக்கு மதச்சார் பின்மையை விரும்புவோரும் பகுத்தறி வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.
    ஒரு கோவிலுக்கு கிளை தொடங்கு வது என்பதே வியாபாரம்தானே! கோவில் ஒரு வியாபாரஸ்தலம் தானே! 5 ஏக்கர் நிலத்தையும் 22.5 கோடியையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே! இப்படி கோவிலின் பெயரில் பாழாக்கு வது எந்த வகையில் நியாயம்!

    புதிதாக கோவில் கட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனு மதி வாங்கவேண்டும். இதற்கு வாங்கிய தாகக் கூடத்தெரியவில்லை. மதச்சார் பின்மைக்கும், நீதியரசரின் ஆணைக்கும் எதிராகக் கட்டப்படும் திருப்பதி கோவி லின் கட்டுமானப் பணிகளை அரசு தலை யிட்டு தடுத்து நிறுத்துமா? மதச்சார் பின்மை நிலை நிறுத்தப்படுமா? இதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

    - கோ.வெற்றிவேந்தன்
    திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர்

    Read more: http://viduthalai.in/page-2/91491.html#ixzz3JfDsDGfo

    தமிழ் ஓவியா said...

    சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டுமாம்!

    அசோக் சிங்காலின் மதவெறிப் பேச்சு!!

    டில்லி, நவ.22_ விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிரு தத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியுள் ளார். கேந்திரிய வித் யாலயா பள்ளிகளில் மூன் றாம் மொழியாக கற்பிக் கப்பட்டுவந்த ஜெர்மன் மொழியை நீக்கி மத்திய அரசின் மனிதவள மேம் பாட்டுத்துறை உத்தர விட்டதன்மூலம் மத்திய அரசு கடும் கண்டனத்துக் குள்ளாகி உள்ளது. உலக இந்து மாநாட் டில் பங்கேற்க வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் மத்திய அரசின் உத்தரவுகுறித்து கூறும் போது, சரியானதுதான். அந்நிய மொழி (ஆங் கிலம்) ஒன்று போதும். நேரம் வரும்போது மேலும் பல விஷயங்கள் கட் டாயம் ஆக்கப்படும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்துமே சமஸ் கிருதத்தில்தான் எழுதப் பட்டன. அதை நீக்க வேண்டும் என்று விரும் பினால், இந்த நாட் டையே நீக்குவதற்கு ஒப்பாகும் என்றார்.

    800 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு இந்து அரசின் கையில் வந்துள்ளதாம்! டில்லியில் நடக்கும் உலக இந்துமாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்துக்களின் கைகளில் வந்துள்ளது என்று பேசி புதிய பிரச் சினையைக் கிளப்பியுள் ளார். உலக இந்து மாநாடு டில்லியில் நவ.21ஆம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச் சியில் உலகில் 108 நாடு களின் இந்து மதத் தலை வர்கள் கலந்துகொண்ட தாக கூறுகின்றனர். இந்த மாநாட்டில் துவக்க நிகழ்ச் சியில் கலந்துகொண்டு பேசிய அசோக் சிங்கால் கூறியதாவது: இந்தியா 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்து நாடாக திகழ்ந்தது, அக்காலகட்டத்தில் இந் துக்கலாச்சாரம் செழித்து வளர்ந்திருந்தது, மக்கள் அவர்களுக்கான பணி களை செய்துவந்தனர். சமூகத்தில் அமைதியும் செழிப்பும் விளைந் திருந்தது. இந்த கால கட்டத்தில் முகலாயர்கள் அமைதியுடன் வாழ்ந்த இந்துக்களை வென்று தங் களின் கைகளில் டில் லியைக் கொண்டுவந்தனர். இதனை அடுத்து பெருத்த அளவில் மத மாற்றம் நடைபெற்றது. முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வந்தனர். அவர்களும் ஏழை இந்தியர்களை ஏமாற்றி மதம் மாறச்செய்து நமது கலாச்சாரத்தை முற்றிலும் சிதைத்தனர். ஆனால், இந்துமதத்தை உயிரென மதித்த இந்துமத தலை வர்கள் தங்களின் கட மையில் இருந்து தவற வில்லை, மேலும் சமூகத் தில் சிலர்(பார்ப்பனர்கள்) எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் மதக்கடமைகளில் இருந்து பிறழவில்லை இதன் விளைவாக இந்துமதம் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு இந்துமத வளர்ச்சி மதச் சார்பின்மை என்ற போலியான கொள்கை யின் கீழ் நசுங்கிக் கிடந்தது, இதற்கு முன்பு இருந்த சில அரசியல் வாதிகள் மதச்சார்பின்மை பெயரில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தினர். இந்த நிலையில் மக்கள் தெளிவுபெற்று இந்துமதத்தின் முக்கியத் துவத்தை புரிந்து கொண் டனர். இதன்விளைவாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இதன் மூலம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகவே இனி இந்துக் களுக்கு நல்லகாலம் தான் என்று பேசினார்.

    மீண்டும் இந்துக்கள் மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் அனைவரும் இந்துக்கள் என்ற பேச்சை துவக்கி யுள்ளார். மோகன் பகவத் தனது பேச்சில் கூறிய தாவது: இந்த நாடு இந்துக்களின் நாடு, இதைச் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை, இங்கு பல்வேறு மதத்தவர் வாழலாம், அந்த மதங்கள் எல்லாம் அயல்நாட்டவை ஆகவே அந்த மக்களை வேறு நாட்டவர் என்று கூறமுடியுமா? அது போல் தான் இந்தியாவில் வாழ் பவர்கள் எந்த மதத்தவரா னாலும் அவர்கள் இந் துக்களே, இந்த நாடு இந் துக்களுக்கான நாடு, இங்கு வசிப்பவர்கள் இந்துக்கள் இதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடு களில் இந்துக் கலாச் சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு திட் டங்களை வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப் போகிறோம் என்று கூறினார். இந்து அரசா பாஜக? அசோக் சிங்காலின் இந்து அரசுப்பேச்சு மிக வும் சர்ச்சைக்குள்ளதாக மாறியுள்ளது, மோடி அனைவருக்குமான அரசு, என்று கூறிவரும் நிலை யில் அவரது ஆட்சிக்கு துணையாக நிற்கும் இந்து அமைப்புகள் மோடி அரசு இந்து அரசு என்று கூறியிருப்பது, மோடிக்கு மேலும் சிக்கலை உண் டாக்கிவிடும் என்றே தெரிகிறது.

    Read more: http://viduthalai.in/e-paper/91628.html#ixzz3JnhAEugS

    தமிழ் ஓவியா said...

    சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்................

    1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

    2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

    3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

    4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

    5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

    6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

    7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

    8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

    - தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

    தமிழ் ஓவியா said...

    இரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -


    ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

    1. கைபலம் (பலாத்காரம்)

    2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

    மொகலாயர் கை பலத்தால் ஆண்டார்கள்.

    வெள்ளையர் புத்தி பலத்தால் ஆண்டார்கள்.

    இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லறை சில்லறை யாய் ஆண்டிருப்பார்கள்.

    ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

    திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்கு வதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்க கூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளு வார்கள்.

    ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

    பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம் என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

    குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.10.1931

    Read more: http://viduthalai.in/page-7/91620.html#ixzz3Jnl3lbFv

    தமிழ் ஓவியா said...

    பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்


    கன்னியாகுமரி

    பத்மனாபபுரம் டிவிஷன் அசிடண்டும் அடிஷனல் ஜில்லா மாஜி திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.

    ரெவன்யூ உத்தி யோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன.

    கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும் என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத் தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீ டேஷனில் நடந்தது.

    திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

    எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோ கஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை.

    சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்திலேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப் பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார்.

    இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன.

    கோர்ட்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

    நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள்.

    வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

    தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

    குடிஅரசு - செய்திக்கட்டுரை - 11.10.1931

    Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlFjt00

    தமிழ் ஓவியா said...

    புரட்டு! சுத்தப்புரட்டு!!

    நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப் பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

    நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

    அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல.

    நம்மைக் கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

    ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

    மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

    அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

    இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

    குடிஅரசு - பெட்டிச் செய்தி - 25.10.1931

    Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlQKiRL

    தமிழ் ஓவியா said...

    சி.இராஜகோபாலாச்சாரியின் ஜாதிப் பிரச்சாரம்


    உயர்திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி இந்து பத்திரிகையில் ஜாதிக் கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதைச் சர்க்காரார் ஆட்சேபிப்பதற்குச் சமாதானம் எழுதும் முறையில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப்பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

    உண்பது, பருகுவது, மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப்படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும் வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாய மென்றும் வற்புறுத்துகிறார்.

    மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். காங்கிரஸ் வருணாசிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபனமென்று நாம் கூறி வருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச் சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப்பார்க்க வேண்டும்.

    காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசியமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழு தாவது பொது ஜனங்கள்கண்டு கொள்வார் களென்று நம்புகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாதென்றும் பறையடிப் பவர்கள் ஜாதிப்பஞ்சாயத்துகள் மூலம் பலவந்தத்தை உபயோகிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணயமுண்டா?

    ஜாதிக் கட்டுப் பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா? தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத் திற்கும், பெண்ணடிமைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டுமென்று கருதுகின்றோமோ அதைக் காப்பாற்ற வேண்டும்,

    என்பதும், அதன்மூலம் செய்யப்படும் கொடுமையாலும், பலாத்காரத் தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டுமென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.

    குடியரசு - கட்டுரை - 13.09.1931.a

    Read more: http://viduthalai.in/page-7/91615.html#ixzz3Jnlb8Hvj

    தமிழ் ஓவியா said...

    முன்னாள் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு விலகியது சாமியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாம்!

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னேடுத்துச் செல் கிறது. தனக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்றிக் கடன் செலுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கோடீஸ்வர சாமியார் ராம்தேவ் பாபாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் சசின் பைலட், நவின் ஜிந்தால் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர்களாக சசின் பைலட், நவீன் ஜிந்தால் போன்ற அமைச்சர்களுக்கு பாதுகாப்பு என்பது தேவையற்ற செலவுகளாகும், தற்போது அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக் கான உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) விலக்கிக் கொள்ளப் படுகிறது. இது குறித்து அவர்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து விட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

    சாமியாருக்கு இசட் பிளஸ் கருப்புப் பணப் புகழ் ராம்தேவ் பாபாவிற்கு மத்திய உள்துறை அமைச் சகம் இசட் பிளஸ் வழங்க உத்தர விட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது பாபா ராம்தேவ் நாட்டு நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர்.

    அவருக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பகைவர்கள் உள்ளனர். சமீப காலமாக தீவிரவாதிகளிடம் இருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிரட் டல்களை மனதில் கொண்டு ராம்தேவ் பாபாவிற்கு உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) வழங்க உத்தரவிட்டுள் ளோம் இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வருகிறது. இதன்படி ராம்தேவ் பாபாவிற்கு 24 மத்திய படை வீரர்களுடன் 10 சிறப்பு கமெண்டோ படை வீரர்களும் ஒரு மருத்துவ வாகனம் மற்றும் முழுமை யான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய ஒரு சிறப்பு வாகனம் எப்போதும் உடனிருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ராம்தேவ் பாபாவிற்கு மகராஷ்டிரா, ஹரியானா, உத்தராகண்ட், உபி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தனது குரு சங்கர்தேவ் பாபா மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வு துறை (சிபிஅய்) ராம்தேவ் பாபா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கனடா நாட்டிற்கு அருகில் சுமார் 300 கோடி மதிப்பிலான தீவை இவர் 2008-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    Read more: http://viduthalai.in/page2/91588.html#ixzz3Jnm6GIfJ

    தமிழ் ஓவியா said...

    எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் இட மதிப்பு ரூ. ஒரு லட்சம் உண்மைதான்

    - மு.வி.சோமசுந்தரம்

    இடம் தேவை

    தமிழகத்தின் தலைநகரில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடம் எழும்பூர் தொடர் வண்டி நிலையம். இந்த கட்டடத்தைக் கட்ட இந்த இடம், அன்று தென்னிந்திய ரயில் நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த அமைப் புக்குத் தேவைப்பட்டது.
    110 ஆண்டுகளுக்குமுன் மதராஸ் இணை ஆட்சியர், ஜே.ஆர்.கூம்பஸ் J.R.Coombes
    இந்த இடத்தின் உரிமை யாளருக்கு 1894, சட்டப்பிரிவு 1 இன் அடிப்படையில் அவரின் இடத்தை விற்பதற்குத் தடையேதும் உள்ளதா என்று கேட்டுக் கடிதம் எழுதினார்.

    உரிமையாளர்

    1.83 ஏக்கர் நிலப்பரப்பு இடத்தில் பல கட்டிடங்களுடன் கூடிய இடத்தின் உரிமையாளர் மருத்துவர் புளுனே ஆன்டே (Dr.Pluney Andey) இவர், திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் சிறப்பான மருத்துவசேவை 30 ஆண்டுகள் செய்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார். அவர் பணியில் இருக்கும் போது, அவரின் மனைவியின் வடிவ மைப்பிலும் மேற்பார்வையிலும் கட்டப் பட்ட வீட்டில் மருத்துவர் புளுனே அவரின் மனைவி திருவிதாங்கூரில் இறந்த பிறகு தங்கி வசித்து வந்தார்.

    மதராஸ் இணைஆட்சியரிடமிருந்து அவரின் இடத்தை விற்பனைக்குக் கேட்டு வந்த கடிதத்துக்கு மருத்துவர் புளுனே ஆன்டே தன் சொத்தை விற்ப தற்கான தயக்க மனநிலையை விளக்கி 15, பிப்ரவரி 1904 இல் கடிதம் எழு தினார்.

    தயக்கத்தின் காரணம்

    அந்தக் கடிதத்தில் அவரின் இடத்தை விற்பதற்குத் தயங்கும் காரணங்களையும், அவரின் முடிவையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய உடல் நலம் பேணவும், பணியில் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ அந்த இடத்தில் வசிப்பதாகக் கூறினார். மேலும், என் மனைவி விரும்பிக் கட்டிய வீட்டில், அவர் நினைவாக வாழ விரும்புகிறேன். நான் கட்டடத்தை விரி வாக்கி, பழத்தோட்டம் அமைத் துள்ளேன். நான் இந்திய தேசிய கிறித் தவ சபையை நிறுவி அதன் தலைவராக உள்ளேன். நான் பணி ஒய்வு பெற்ற பிறகு, இந்திய கிறித்துவ தேவால யத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எழும்பூரில் உள்ள என் வீடு என் நிறுவனத்தின் தலைமையகம், இங்குள்ள என் கட்டிடம் ஒன்று வழி பாட்டுக் கூட்டம் நடத்த பயன்படுத்தப் படுகிறது. கடந்த காலத்தில் இரண்டு மத அமைச்சர்கள் சபையில் சேர்க்கப் பட்டுள்ளனர், மய்யப்பகுதியில் அமைந் துள்ள இந்த இடத்தில், பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் கோயில் அமைய பல கட்டிடங்கள் கட்ட உள் ளேன். இவை கிறித்துவ சமுதாயத்துக் கான ஏற்பாடு, இத்தகைய விசாலமான இடம் மய்யப்பகுதியில் கிடைக்குமா? வேறு தூரமான இடத்துக்கு மாற்றப் பட்டால், வழிபாட்டுக்கு வரும் மக் களுக்கு வசதிக் குறைபாடு ஏற்படும்.

    ரயில் நிலையம் அமைக்க என் சொத்து கட்டாயம் தேவை என்று கருதினாலும், சட்டவிதிப்படி அரசு என்னை கட்டாயப்படுத்தினாலும், என் சொத்துக்கான இழப்புத் தொகையாக ஒரு லட்சத்துக்குக் குறையாமல் வழங்குவதோடல்லாமல். இடத்தை காலி செய்ய போதுமான கால அவகாசமும் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

    போட்மெயில் புறப்பட்டது

    மருத்துவர் புளுனே ஆன்டேயின் வேண்டுகோள் விரைவாகவும், மகிழ்ச்சி யாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தகைமையுடனும் அலட்சியப் படுத்தாமலும், விரைவாக சொத்து ஒப்படைக்கப்பட்டது. ரயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கிருந்து முதல் தொடர்வண்டி - (நீராவி இன்ஜின் இழுத்து செல்ல) போட் மெயில் (BOAT MAIL)ஜூன், 11, 1908இல், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, மக்களுக்கு களிப்பை யும், பூரிப்பையும் ஏற்படுத்தி உருண்டு சென்றது.

    (தி இந்து 20.10.2014 இதழில், சென்னை நகர் தொடர் வரலாறு வழங்கும் திரு எஸ்.முத்தையா அவர்கள் வழங்கிய செய்தித் தமிழாக்கம் - நன்றி)

    இந்த பழைய போட்மெயில், தூத்துக்குடி வரை சென்று, அங்கிருந்து கொழும்புக்குச் செல்ல (நீராவிக்கப்பல் மூலம்) வசதி செய்து தந்தது. 1914 இல் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு, போட்மெயில் தனுஷ்கோடி வரை சென்றது. 1964 இல் ஏற்பட்ட புயலால், போட்மெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது முத்து விரைவுத் தொடர் வண்டி, தூத்துக்குடி செல்கிறது.

    Read more: http://viduthalai.in/page2/91586.html#ixzz3JnmQmRXQ

    தமிழ் ஓவியா said...

    டாக்டர் இஸ்லாம் கணிப்பு


    வரலாற்றின்படியும், மொழி அடிப்படையிலும் தமிழ்மொழியானது. இந்தியாவிலேயே மிகத் தொன்மையானது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் பொறுத்தமட்டிலும்கூட இது உண்மையேயாகும். ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தமிழர்களின் மூதாதையர்கள் இங்கு நிலைத்து வாழ்ந்துவந்தனர். சிறந்த கலாச்சாரத்தை வளர்த்து வந்தனர். ஆரியர்கள் உட்பட இந்தியாவில் குடியேறிய அனைத்து மக்களிடையிலும் தமிழர்களுடைய கலாச்சாரத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்தது.

    - ஆதாரம்: டாக்டர் இஸ்லாம் - (பங்களாதேஷ் அறிஞர் இந்து 30.1.1981

    Read more: http://viduthalai.in/page3/91590.html#ixzz3JnnFW3Y8

    தமிழ் ஓவியா said...

    அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

    வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட் டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதி யைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு - இவை, வயோ திகரை விட வாலிபர்களிடையே தான் மிகுந்திருக்கும்.

    முடியுமா? காலம் சரியா? போதுமான பலமிருக்கிறதா? இந்தப் பேச்சு வாலிபர்கட்கு. இனிப்பாய் இரா. சும்மா இருக்கலாமா - சொரணையற்ற வர்களா நாம் - புறப்படு - போரிடு - இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி புகும்.

    சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத் திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம். பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.

    பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசித்திரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள் களும் புத்திசாலியாகப் போற்றப் படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?

    இலட்சியம் வெற்றி பெற வேண்டு மானால் அந்த இலட்சியத்தின் நியா யத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.

    தொழிலாளி வெறும் உழைப்பாளி யாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங் காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.

    பகுத்தறிவுக் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்து விட் டது. நேர் மாறாக அவற்றைத் தூற்று வோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். அது இயற்கை.

    Read more: http://viduthalai.in/page4/91591.html#ixzz3JnnR6lfH

    தமிழ் ஓவியா said...

    மொழியறிவால் மூளை கூர்மையாகும்


    ஒரு மொழியை மட்டுமே பேசுபவர் களைக் காட்டிலும் இரு மொழிகளைப் பேசுபவர்களின் தகவல்பரிமாற்றம் திறனுள்ளதாக இருப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுத்தகவல் கூறுகிறது.

    நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஹோஸ்டன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு மொழி பேசுபவர்களைவிட இரண்டு மொழி பேசுபவர்களுக்கு புரிதல் திறன் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    ஒரு மொழிக்கும் மேலாக பேசுபவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, தேவை யற்ற சொற்களைத் தவிர்த்து பேசுவதையும், அவர்களின் மூளை அதே பணியை முடிக்க கூடுதலாக பணிசெய்வதாகவும் செயல் பாட்டு காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (functional magnetic resonance imaging -FMRI) முறையில் ஆய்வை மேற் கொண்டு கண்டறிந்துள்ளனர்.

    உலகின் மாபெரும் மருத்துவம் மற்றும் அறிவியல் நூல்களுக்கான பதிப்பகமாக உள்ள எல்வெவியர் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரக்கூடிய மொழிக்கான நரம்பு உயிரியல் இதழான மூளை மற்றும் மொழி இதழ் (The journal Brain and Language) இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.

    மூளையின் இருவேறு செயல்களான செயல்படுதலும், செயல்பாட்டைத் தடுத் தலும் ஆகிய இருவகை செயல்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கேட்கும்போது, சரியானதை தேர்வு செய்து கேட்கச் செய்கிறது.

    ஆய்வாளர்கள் இரண்டு மொழிகளை (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்) பேசக் கூடியவர்களான 17பேரையும், ஒரே மொழியை மட்டுமே அறிந்து பேசக்கூடிய 18 பேரையும் தேர்வு செய்து ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் இரு மொழியில் ஆற்றல் உள்ளவர்களின் மூளை தேவையற்ற சொற்களை தாமாகவே நீக்கிக்கொள்வதையும் கண்டறிந்தனர்.

    உதாரணத்துக்கு கிளவுட் என்கிற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களைக் கேட்கச்செய்தபோது, உடனடியாக திரையில் மூளையின் செயல்களைக் காட்டும் நான்கு படங்கள் தோன்றின. அதேபோன்று அதே ஒலி அமைப்புடன் உள்ள கிளவுன் எனும் சொல்லைக் கேட் கும்படி செய்யப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில், சரியான சொல்லுடன் மூளை எவ்வளவு விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது என்று கண் காணிப்பதே ஆகும். இந்த ஆய்வின்போது, இரு மொழி அறிந்தவர்கள் விரைவாக சரியாக செயல்பட்டார்கள்.

    முடிவானது கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதுபோல் தோன்றுகிறது. இரண்டு மொழியில் திறன் உள்ளவர்கள் இரண்டு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருப்பதால் சரியானவகையில் பணிகளை முடிப்பதில் வல்லவர்களாக அல்லது மற்ற வர்களைவிட அதிக புரிதல் அறிவுடன் பல மொழிகளைக் கற்றவர்களாக இருப்பதால் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக் கிறார்களா? என்றால், இரண்டும் சேர்ந்த கலவையாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

    ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து கண்ட றிந்துள்ளது என்னவெனில், மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் எனும்போது, சுடோகு போன்ற குழப்பத்தி லிருந்து (Puzzle)
    விடுவிப்பதற்குப் பதிலாக, புதிதாக ஒரு மொழியை ஏன் அளிக்கக் கூடாது? மூளைக்கு சவாலாக அதைத் தவிர வேறு உண்டா? என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.

    Read more: http://viduthalai.in/page4/91592.html#ixzz3Jnngokpg

    தமிழ் ஓவியா said...

    குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு


    ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்களின் முன்னால் நிற்க வைப்பதும், அணி வகுப்பு நடத்துவதும் அவர்களை காயப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

    இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக்கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வின் தலைமையில் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின் டன் நாரிமேன் ஆகிய மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதி பதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

    குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப் படும் வரைஅவர் அப்பா வியே; ஆனால் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை ஊடகங்களின் முன்னால் நிறுத்தி பேட்டி அளிப்பதும், அணிவகுப்பு நடத்துவதும் அவரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். விசாரணை நடக்கும் போதே ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது இனியும் நடக்கக்கூடாது.

    இது ஒரு கடுமையான விசயமாகும். இப்பிரச்சினை அரசியல் சட்டப்பிரிவு 21இன் கீழுள்ள உயிர்வாழும் உரிமை மற்றும் சுதந்திரத் திற்கும் சுதந்திரமான விசாரணை உட்பட அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சாட்சி களின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையை பாதிப்பதாகும். அவருக்கு எதிரான களங்கத்தை உருவாக்கவே அது பயன்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் அதற்கு இணையாக ஊடகங்கள் வழக்குப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    மேலும், வழக்கின் முடிவில் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாதுகாக்க மற்ற நாடுகளில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

    Read more: http://viduthalai.in/page5/91595.html#ixzz3JnoKz6Rp

    தமிழ் ஓவியா said...

    நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
    - குபேரன்

    உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

    நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

    பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

    நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

    நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

    தமிழ் ஓவியா said...

    தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

    ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும். இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

    உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

    நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!

    தமிழ் ஓவியா said...

    அயோத்தியில் சந்நியாசிகளுக்குள் தகராறு நான்கு பேர் படுகொலை


    அயோத்தியில் புகழ்பெற்ற கங்காபவன் ஆலயத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவது தொடர்பான தகராறில், கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு சந்நியாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்.அயோத்தியில் அதிக வருமானத்தைக் கொண்ட அறக்கட்டளையில் ஒன்றான மணிராம்தாஸ் சௌனிசேவா அறக்கட்டளையின் கீழ் ஆலயங்கள், தர்மசாலைகள், மருத்துவமனைகள், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 28 அன்று 45 வயதான மஹந்த் விஜயராம் என்ற சந்நியாசி ஆலய வளாகத்துக்குள்ளே கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். கொல்லப்படுவதற்கு சிலநாள்களுக்கு முன்னர்தான் விஜயராம், கங்காபவனின் பூசாரியாகவும் மேலாளராகவும் அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நித்ய கோபால்தாஸால் நியமிக்கப்பட்டிருந்தார். அயோத்தியில் பாபா மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் ஆலயம் கட்ட ஏற்படுத்தப்பட்டுள்ள ராமஜென்மபூமி நியாஸ் என்ற அமைப்பின் தலைவர்தான் இந்த நித்யதாஸ் ஆவார். இதனால்தான் மணிராம்தாஸ் சௌனி சேவா அறக்கட்டளைக்குப் புகழும் பணமும் கிடைத்தன.
    கங்காபவனில் பணியாற்றும் எல்லா சந்நியாசிகளையும் விசாரணை செய்த காவல்துறையினர், கொலை செய்த குற்றத்துக்காக, துர்கேஷ் திவாரி எனும் சந்நியாசியைக் கைது செய்துள்ளனர். தமக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பதவியும் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் திவாரி. ஓராண்டுக்குள் வேறு மூன்று சந்நியாசிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளி தங்கியிருந்த அறையைச் சோதனை செய்தபோது துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்வந்தர்களான சந்நியாசிகளுக்குச் சொந்தமாக குண்டர் படையும் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Read more: http://viduthalai.in/page6/91597.html#ixzz3Jnpebvi5

    தமிழ் ஓவியா said...

    நீங்களும் அம்பானி ஆகணுமா? மோடியின் பிரிமியம் திட்டம்


    அம்பி: கிட்டு மாமா, பக்கத் தாத்து பாச்சா, நேத்து வரைக்கும் நம்மளை, நிமிர்ந்து பாக்காம போயிண்டுருந்தான். இன்னைக்கு என்னைப் பார்த்து, விரைச்சுண்டு நடக்குறான். ஏன் மாமா? அவ னுக்கு என்னாச்சு?

    கிட்டு மாமா: அது ஒன்னும் இல்லைடா அம்பி. பாச்சா, பண்டி கைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னானோல்லியோ, அதுக் கொசரம், பிரிமியம் ரயில்ல டிக்கெட் எடுத்துட்டான்னு, இம்புட்டு அலட்டிக்கிறான்.

    அம்பி: அப்படியா மாமா, அது என்ன பிரிமியம் ரயில் டிக்கெட்.

    கிட்டு மாமா: அது வேற ஒன்னும் இல்லைடா, நம்ம மோடி இருக்காருல்ல.

    அம்பி: யாரு, நம்ம பிரதமர் மோடியா மாமா.

    கிட்டு மாமா: அம்பி, அவரை பிரதமர்னு சொன்னா அவருக்கு பிடிக்காது. நான் டீ ஆத்துனவன், கீழே இருந்து மேலே வந்தவன், மக்களையெல்லாம், அம்பானி ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறேன்னு, தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்ல, அவருதான். அவர் அறிவிச்ச, புதுத் திட்டம் தான் இந்த பிரிமியம் ரயில் திட்டம்.

    அம்பி: அவ்வளவு கஷ்டமா மாமா, பிரிமியம் டிக்கெட் எடுக்கறது.

    கிட்டு மாமா: பின்ன என்னடா, அம்பானி, அதானியெல்லாம், பிரிமி யம் ரயில்ல டிக்கெட் எடுக்கறதுக்கு பதிலா, பேசாம, தனி விமானத் துலேயே, போயிடலாம்னு பேசிண்டு ருக்காள்னா பாத்துக்கேயேன். அதான், நம்ம கிச்சா இப்படி விரைச்சுக்கிட்டு நடக்குறான்.

    அம்பி: எனக்கும் பிரிமியம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுங்கோ, மாமா. ஆசையாயிருக்கு.

    கிட்டு மாமா: உன் ஆசையிலே, தீயை வைக்க, ஏண்டா அம்பி, நமக்கு இருக்குறது ஒரு வீடுதாண்டா. அதை வித்துகூட, டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கு.

    இந்த பிரிமியம் ரயில்ல போறவாள் லிஸ்டை, வருமான வரித்துறையே கண்காணிக்கும் போலடா, ஏன்னா, இம்புட்டு காசு கொடுத்து, போறாளே, இவா எல்லாம் வரி கட்டிருக் காளான்னு, செக் பண்ணுவா போல இருக்குடா அம்பி.

    அம்பி: அப்பா, நாம அம்பானி ஆக முடியாதா மாமா.

    கிட்டு மாமா: அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்டா அம்பி. எதுக்கும் நம்ம பாச்சாவை சேவிச் சுட்டு, அவன் ஜோபியிலே இருக்குற, பிரிமியம் ரயில் டிக்கெட்டை, கையில் எடுத்து ஒத்திக்கோ, அது தாண்டா, இப்பதைக்கு நம்மால முடியும். பகவான், நம்ம தலையிலே, அம்புட்டுதாண்டா எழுதியிருக்கான். ஆனா, கவலைப்படாதேடா, அம்பி அம்போ நீ அப்படின்னு திட்டம் ஏதாவது மோடி கொண்டு வரு வார். அதுல நாம சேர்ந்திடுலாம். இப்ப புரியுதா அம்பி, நோக்கு.

    அம்பி: இது தானா மாமா, மோடி கொண்டாந்த, அம்பானி ஆகற. பிரிமியம் திட்டம் ரயில் கூட்டத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு. ஏறுன எல்லாரையும் அம் பானி ரேஞ்சுக்கு ஆக்கினது மாதிரியும் ஆச்சு. பேஷ், பேஷ், நேக்கு நன்னா புரியுது.

    Read more: http://viduthalai.in/page7/91601.html#ixzz3JnpxorN2

    தமிழ் ஓவியா said...

    உலகப் பகுத்தறிவாளர்கள்


    பேரறிஞர் அண்ணா அவர்கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சி யையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார். - அறிஞர் அண்ணா கூறுகிறார்;

    கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!

    உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

    பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

    மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்

    அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

    முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

    முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

    ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்

    துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்

    மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்

    சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா

    உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண் டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்?

    (நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)
    தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

    Read more: http://viduthalai.in/page1/91573.html#ixzz3JnqZl2SC

    தமிழ் ஓவியா said...

    பழைமைக்கு அடி

    உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

    நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

    உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

    மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
    காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

    நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

    இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

    நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

    எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

    நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

    ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்) ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

    Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnqkimUm

    தமிழ் ஓவியா said...

    பார்ப்பனர் பற்றி....

    சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

    பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

    தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
    அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்

    தீது என உரைத்த
    காரியத்தாற் காலக்கோட்
    பட்டானைச் சீரிய
    அந்தண்பொதியில்
    அகத்தியனார் ஆணையினாற்
    செந்தமிழே தீர்க்க சுவாகா

    திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

    தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப் படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

    அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

    -திரு.வி.க. (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

    Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnquMVUV

    தமிழ் ஓவியா said...

    சாத்தாணியின் புரோகிதம்

    நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

    அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

    அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

    - ஈ.வெ.ரா.
    (ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

    Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3Jnr2tIs2

    தமிழ் ஓவியா said...

    காந்தியார் புகுத்திய குழப்பம்

    ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

    நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை.

    மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம். பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

    (நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

    Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3JnrDjgyc

    தமிழ் ஓவியா said...

    காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம் திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது


    காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம்
    திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது
    கழகத் தலைவர் அறிக்கை

    காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை களைக் கட்டுவதை தடை விதிக்கக் கோரி காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற் கின்றனர். கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் விவசாயிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தஞ்சை யிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகம் ஆர்ப் பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளது.

    இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள் ளனர். காவிரி ஆற்று பாதுகாப்பு விவசாயத் தலைவர் தனபால் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது - அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் கட்சியில்லை பேதமில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்நாட்டின் நலன் தான் இதில் மய்யப் புள்ளி! இந்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடுவோம் - வெற்றி பெறுவோம்! நமது வாழ்வாதாரப் பிரச்சினையில், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம்.


    கி.வீரமணி
    தலைவர்
    திராவிடர் கழகம்

    சென்னை
    21-11-2014

    Read more: http://viduthalai.in/page1/91545.html#ixzz3JoEDkg5A

    தமிழ் ஓவியா said...

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி? கலைஞர் பேட்டி


    சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி - செய்தியாளர் கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு: அப்போது, மீனவர்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கலைஞர் அவர்கள்; அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு: செய்தியாளர் :- இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அய்ந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி? கலைஞர் :- அது பற்றிய செய்தி வந்த அன்றே அதை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

    செய்தியாளர்:- இன்று அவர்களுடைய விடுதலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதே?

    கலைஞர்:- அது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    செய்தியாளர்:- தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை பற்றி என்ன கூறு கிறீர்கள்?

    கலைஞர்:- தமிழ்நாட்டிலா? சட்டமா? ஒழுங்கா? செய்தியாளர்:- முல்லைப் பெரியாறு பிரச் சினையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பற்றியும் நமது அதிகாரிகள் அங்கே தாக்கப்படுவது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

    கலைஞர் :- இது பற்றியும் ஏற்கனவே விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளேன்.

    தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அதன் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
    இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

    Read more: http://viduthalai.in/page1/91544.html#ixzz3JoEXTwre

    தமிழ் ஓவியா said...

    சொல்லவேண்டும்

    பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

    - (குடிஅரசு, 17.8.1930)

    Read more: http://viduthalai.in/page1/91538.html#ixzz3JoF2SAkO

    தமிழ் ஓவியா said...

    நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்

    மனிதன் வன விலங்குகளை வேட் டையாடிக்கொண்டு இருந்த போது கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீன்பிடித்தொழிலை வேட்டைத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர்.

    நாம் வாழும் பூமி 71 விழுக்காடு ஆனது பெருங்கடல் நீரால் மூடப்பட் டுள்ளது. இதற்கு பெருங்கடல் பெரிதும் உதவியாக இருந்தது. மீன்கள் உணவிற் காக மாத்திரம் அல்ல கடலைச் சுத்தப் படுத்தும் பணியிலும் நமது பூமியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கடல் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்கள் பல்வேறு அரிதான செயல்களைச் செய்து வருகின்றன

    மீனினங்களின் இத்தகைய பணியைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மீன்வள நாள் கொண்டாடப்படுகிறது

    உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்கள் மீன்களின் மூலம் பெறப்படும் புரதச்சத்தை நம்பி உயிர்வாழ்கின்றனர். ஒரு ஆண்டிற்கு உலக மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

    உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமா னோர் (அதாவது) உலக மக்களில் 8 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்வா தாரத்திற்கு மீன்பிடித் தொழிலை நம்பி யுள்ளனர் உலகில், மீன்களில் 90 விழுக்காட்டிற் கும் அதிகமானவை பெருங்கடல் மற்றும் வளைகுடாக்களிலும் பிடிக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் சிலிநாட்டின் பெருஎல்லைக்கருகில் உள்ள கடற்கரை மீன் பிடி நிலையமான ஏஞ்சோல் மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும். கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன் பிடியானது 4 மடங்காக அதிகரித் துள்ளது. 1950ஆம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த மீன்பிடியானது 1992ஆம் ஆண் டளவில் 82.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

    அய்.நா சபையின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சி யடைந்துள்ளது அல்லது அளவுக் கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப் படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழி லானது மீனின் வாழிடங்கள் அழிக்கப் பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அய்.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70 விழுக்காடு மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட் டினால் பிடிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    Read more: http://viduthalai.in/page1/91539.html#ixzz3JoFRNlM4

    தமிழ் ஓவியா said...

    ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்...

    -குடந்தை கருணா

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென் றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.

    இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் Carmichael (Queensland) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத் திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு பில்லியன் அமெ ரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

    கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியா விற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் ஒரு பில்லி யன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -

    1 billion US dollars are equal to how many Indian rupees அதிர்ச்சியளிக் கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees. அதாவது ரூ.6000 கோடி ரூபாய்.

    இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல - ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

    அது மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவி ருக்கும் துறைமுகம் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து துறை முகம் வரையிலான 400 கி.மீ. தூரத் திற்கு அதானி கம்பெனியே ரயில் பாதையும் போடப் போகிறது. இந்த ஷரத்தும் இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

    “Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி??? ஒன்றுமே புரியவில்லை. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

    மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு/தொழில் நிறுவனத் திற்கு கடனாகக் கொடுக்கிறது.

    ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore (இதற்கு ஆஸ்திரேலியாவி லேயே 13 சுரங்க கம்பெனிகள் உள் ளன ) தற்போது அதன் 8000 ஊழி யர்களுக்கு வேலையின்மை/நஷ்டம் காரணமாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக் கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள்.

    இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா ?

    இந்த கடன் கொடுக்கப்படுவதற் கான காரணம் யார் ??? Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயை யும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது..???
    முட்டாள் இந்தியன் தலையிலா.?

    இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்கங்களில் மேற் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்..?

    ஆமாம் _ பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல _- அரசு வங்கிப் பணம் _ இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா ?

    Read more: http://viduthalai.in/page1/91542.html#ixzz3JoFfJgEq

    தமிழ் ஓவியா said...

    கருநாடகக் கோவில்களில் தீண்டாமை


    கோலார், நவ.21_ கரு நாடகத்தின் இந்து அறநிலையத் துறை முஸ் ராய் என்றழைக்கப்படும். இந்தத் துறையின்கீழ் நூற் றுக்கணக்கான கோவில் கள் உள்ளன. அவற்றுள் கோலார் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

    அதுகுறித்துக் கருத்தறி வித்துள்ள முஸ்ராய்த் துறை துணை ஆணையர் திரிலோகசந்திரா, இதுகுறித்துக் குற்ற சாட்டுகள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள் ளார். மேலும் அவர், தாழ்த் தப்பட்டோருக்குக் கோவில்களில் அனுமதி மறுப்பது மிகவும் கேடான நடவடிக்கை ஆகும்.

    தீண் டாமையைக் கடைப்பிடிப் பவர்கள்மீது குற்றசாட்டு களைப் பதிவு செய்திடுவீர் என்று தாழ்த்தப்பட் டோர் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அவர் குறிப்பாக முஸ் ராய் துறையின்கீழ் வரும் கோவில்களைப்பற்றி மட் டுமே இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

    கோலார் மாவட்டத் தில் இயங்கும் தாழ்த்தப் பட்டோர் அமைப்பைச் சார்ந்தவர்கள் உயர் ஜாதி யினர் வீடுகளில் நுழையும் நிகழ்ச்சியை, கிரகப் பிர வேசம் என்னும் பெயரில் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கோவில் களில் மட்டுமல்லாது எந்த இடத்திலுமே தீண் டாமை கடைப்பிடிக்கப் படக் கூடாது; அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டால், யார்? எவர்? என்று பார்க் காமல் தீண்டாமை ஒழிப் புச் சட்டம் பாயவேண் டும். குற்றம் புரிவோர் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத் தாகும்.

    முஸ்ராயின்கீழ் வரும் கோவில்களுள், மங்களூரு மாவட்டத்தில் உள்ள குத் ரோலி கோகர்ணானந்த் கோவிலில் கைம்பெண் கள் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டதும், அத னையே முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடகத்தில் உள்ள மற்ற முஸ்ராய் கோவில்களிலும் எதிர்ப் பில்லை என்றால் பெண் அர்ச்சகர்கள் அமர்த்தப் படுவார்கள் என்றும் மாநில முதல்வர் சித்தரா மையா கூறியதும் குறிப் பிடத்தக்கன.

    எனவே, கருநாடக மாநிலத்தின் அறநிலையத் துறையான முஸ்ராய்த் துறையே, குற்றச்சாட்டு களுக்காகக் காத்திராமல் தானே முன்வந்து புல னாய்ந்து எந்தக் கோவில் களில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது என் பதை ஆய்ந்து தக்க நட வடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

    Read more: http://viduthalai.in/page1/91576.html#ixzz3JoH4OohT