tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6776571103800513679..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சூத்திரர்கள், தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்?-பூரி சங்கராச்சாரியார் தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50990204074402083932014-11-07T19:54:13.252+05:302014-11-07T19:54:13.252+05:30தமிழக மீனவர்கள் தூக்கு! ஏனிந்த இரட்டை வேடம்!
கொழ...தமிழக மீனவர்கள் தூக்கு! ஏனிந்த இரட்டை வேடம்!<br /><br /><br />கொழும்பு, நவ. 6- கொழும்பில் தமிழக மீன வர்கள் தூக்கு தொடர்பாக தனது கருத்தை அதிபர் ராஜபக்சே வெளியிட்டார். இதுகுறித்து இலங்கை பத்திரிகையாளர்கள் இணையதளத்தில் அதிபர் தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம் இலங்கை சட்டம் தொடர் பானது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியிருந்தார்.<br /><br />ஆனால் மாலையில் டில்லி வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா வேறு மாதிரி அறிக்கையை விட்டிருந்தார். இலங்கைக்குப் போதை பொருள் கடத்தி வந்ததாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக் குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், இயக்கங்களுக்கும், மீனவர்கள் அமைப்புகளும் போராடி வருகின்றன.<br /><br />தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண் டனையை எதிர்த்து இலங்கையில் உள்ள இந்தி யத் தூதரகம்மூலம் மேல்முறையீடு செய்வதற் கான நடவடிக்கையில் மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. செவ்வாயன்று அய்ந்து மீனவர்களை யும் இந்திய தூதர் சந்தித்து வந்ததாகச் செய்திகள் வெளியாயின.<br /><br />இந்த நிலையில் புதன் காலை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர் பாக தனது கருத்தை முதல்முதலாக வெளியிட்ட அதிபர் ராஜபக்சே, இலங்கையின் சட்ட விதிகளில் அரசியல் தலையீடு எதுவும் இருக் காது. மேலும் இலங்கை சட்டம் என்பது இலங் கையில் இறையாண்மை அதில் வேறு எந்த ஒரு சக்தியும் தலையிட்டு களங்கம் ஏற்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதை இலங்கையில் பல்வேறு செய்தி இணையதளங்கள் உடனடியாக வெளிட்டிருந் தன.<br /><br />இந்த நிலையில், டில்லியில் தெற்காசிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண் டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. எனவே இதனை அழிக்கும் விதமாக எதுவும் நடந்து விடாது. நல்லதோ, கெட்டதோ, கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினையில் இலங்கை அரசு யாருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது இல்லை.<br /><br />எனவே, இந்த வழக்கிலும் கவலைப்படுவதற்கு எதுவும் கிடையாது என்று பேசியுள்ளார். இலங்கையில் இருக்கும்போது, அதிபர் மிரட்டலான அறிக்கையும் இந்தியாவிற்கு வந்த பிறகு மத்திய அரசின் ஆலோசனையில் வேறு அறிக்கையும் விட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது ஏன், மேலும் அதிபரின் அறிக்கை ஏன் செய்திதளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசும், இலங்கை அரசும் சேர்த்து இந்த இரட்டை நாடகம் நடத்துவது ஏன்?<br /><br />தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையி லிருந்து காப்பாற்றப்படவில்லையானால்... நாடே எரிமலையாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/90623.html#ixzz3IOPVVoQh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53844346413668724022014-11-07T19:53:17.029+05:302014-11-07T19:53:17.029+05:30அந்தோ, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு த...அந்தோ, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி மறைந்தாரே! அவருக்கு நமது வீரவணக்கம்!<br /><br /><br />குடந்தை - வலங்கைமான் பகுதியில் உள்ள கோவிந்தக்குடியைச் சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி அவர்கள் நேற்றிரவு (5.11.2014) மறைந்தார் என்ற செய்தி, மாவட்டச் செயலாளர் மானமிகு குருசாமி மூலம் கிடைக்க, அது ஆற்றொணாத் துயரத்தை யும், துன்பத்தையும் தந்தது. அவருக்கு வயது 85.<br /><br />அவர் ஒரு எடுத்துக்காட்டான முதுபெரும் லட்சிய வீரர்; கொண்ட கொள்கைக்கும், இணைந்த இயக்கத்திற்கும், ஏற்றுக்கொண்ட தலைமைக்கும் என்றும் மாறாத கட்டுப்பாட்டுடன் செயலாற்றிய செம்மல்!<br /><br />கோவிந்தக்குடியில் அவரும், அவரது குடும்பமும் - பல தலைமுறைகள் - இயக்கக் கொள்கைக் குடும்பமான பெரியார் குடும்பத்தினர் ஆவார்கள். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். கோவிந்தக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்; அவ்வட்டாரத்தில் அனைத்துக் கட்சி - பொது அமைப்பின் பொறுப்பாளர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட மரியாதைக்குரியவராக இறுதிவரை திகழ்ந்தவர்.<br /><br />சுமார் 50 ஆண்டுகாலமாகவே எனக்கு அறிமுகமான அருமையான கொள்கைத் தோழர், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.<br /><br />முன்பு அவரையும், அவருடைய ஆசிரிய நண்பர்கள் மாசிலாமணி, ஜம்புநாதன் மற்றும் சிலருடன் எப்போதும் இணைந்தே பார்த்து உரையாடுவோம்.<br /><br />பண்ருட்டி கழகப் பொறுப்பாளர் தோழர்கள் புத்தன் - கோவிந்தசாமி குடும்பத்தின் உறவுக்காரர்; இவரது மறைவு இவரது நான்கு மகள்கள் - அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வளவு இழப்போ, அதைப் போன்றே இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.<br /><br />அவரது உடல், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு - உடற்கொடை செய்யப்படுவதன்மூலம், அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி என்றும் வாழுபவராக - வரலாற்றில் திகழ்வார் என்பது உறுதி!<br /><br />அவருக்கு நமது வீரவணக்கம்! அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />இன்று (6.11.2014) மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடையின்போது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாக உறுப்பினர் (டிரஸ்டி) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்கள், தலைமைக் கழகத்தின் சார்பில் கலந்துகொள்வார்.<br /><br /><br />6.11.2014<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/90631.html#ixzz3IOPM16Kj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55391205172036029562014-11-07T19:52:27.109+05:302014-11-07T19:52:27.109+05:30பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்...பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்கல்ல, ஆஸ்திரேலியாவில்<br /><br /><br />சிட்னி, நவ.6- ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் குழந்தைகளை பர்தா அணியக் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களாக இருந் தாலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 68 ஆயிரம் (ரூபாய் மதிப்பில் 36 இலட்சத்து 63 ஆயிரத்து 308) தண்டத்தொகையாக விதிக்கப் படும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் கூறியுள்ளார்.<br /><br />டாஸ்மேனியாவின் செனட்டர் ஜாக்குய் லாம்பி பால்மர் அய்க்கிய கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பர்தா எனும் பழக்கத்தில் உள்ள முகத்தை முழுவதுமாக மூடும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்ட வரைவு குறித்து பேசும்போது இசுலாமியர்கள் வழக்கத்தில் கொண்டுள்ள பர்தா முறையைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளார்.<br /><br />பர்தா அணிவது அல்லது பொது இடத்தில் முகத்தை முழுவதுமாக மூடுவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகி யோரை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று விதங்களில் குற்றமாக உள்ளது.<br /><br />தனிநபர் மசோதாகுறித்து லாம்பி கூறும் போது, பிரெஞ்ச் அரசில் உள்ளவாறு அதை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறைப் படுத்துவது எளிமையானதே என்றார்.<br /><br />சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு நபர்மீதும் காவல் அலுவலர்கள் அதே இடத்திலேயே தண்டத்தை விதிக்கலாம். தண்டத் தொகை 3,400 ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப்படும்.<br /><br />பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு வயதில் முதிர்ந்த பருவத்தினரிடையே பர்தா வைக் கட்டாயப்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத்தொகையாக 34ஆயிரம் ஆஸ்திரே லிய டாலர் விதிக்கப்படுவதுடன் 6 மாத சிறைத்தண்டனை அளிக்கப்படும். அதேபோல், குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே பொது இடத்தில் முகத்தை மூடுவதற்குக் கட்டாயப் படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத் தொகை யாக 68 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப் படுவதுடன் 12 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.<br /><br />எந்தவகையிலும் அச்சுறுத்தலின்மூல மாகவோ, திணிக்கப்படுவதன்மூலமாகவோ அல்லது வேறு எந்த உறுதியளிப்பின் வாயிலா கவோ இருக்கக்கூடாது என்று சட்டமுன் வரைவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறை மிக எளிமையானது.<br /><br />போக்குவரத்து விதிமீறல்களின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும். எந்தப் புனித நூலிலும் முகத்தை முழுமையாக மூடுமாறு குறிப்பிடப் படவில்லை. அதற்காக மதத்தை சாக்காகக் கொண்டோ, விதிவிலக்கு கோருவதையோ, சட்டப்பாதுகாப்பு உள்ளதாகக் கூறுவதையோ ஏற்கமுடியாது என்று லாம்பி கூறினார்.<br /><br />முழுமையாக முகத்தை மூட விதிக்கப்படும் தடைக்கு விதிவிலக்காக தனியார் வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் அளிக்கலாம் என்னும் கான்பெர்ரா சாரா பாலின் கூற்றையே லாம்பியும் கூறினார்.<br /><br />மேலும் அவர் கூறும்போது,<br /><br />முகத்தை முழுவதுமாக மறைப்பது என்பதை தடுப்பதுடன் நோக்கம் நிறைவடையவில்லை. தடுப்பதற்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுகாதார காரணங்கள், தொழில்முறை காரணங்கள் மற்றும் கலை மற்றும் பாரம்பர்ய விழாக்களில் முழுவதுமாக முகம் மூடப்படுவதை தடுப்பது பொருந்தாது என்றார்.<br /><br />சட்ட முன்வரைவில் லாம்பி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிராக உள்ள எதிர்ப்பாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குள் நுழை யும் போராட்டத்தை நடத்தினார்கள்.<br /><br />கூ குக்ஸ் கிளான் அமைப்பை அட்டைகளை அணிந்த வாறு, மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் முகமூடிகளை அணிந்து பர்தாவை எதிர்ப்பவர் களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/90625.html#ixzz3IOP55FOt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46048537341060059102014-11-07T19:50:25.787+05:302014-11-07T19:50:25.787+05:30பார்ப்பனன்
செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற...பார்ப்பனன்<br /><br /><br />செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட் டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான். - (விடுதலை, 14.3.1970)<br /><br />Read more: http://viduthalai.in/page1/90614.html#ixzz3IOOXbJp3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59948137471380336452014-11-07T19:49:20.596+05:302014-11-07T19:49:20.596+05:30ஆட்சி செயல்படுகிறதா?
2011ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறு...ஆட்சி செயல்படுகிறதா?<br /><br />2011ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. தொடக்க நிலையிலேயே மூன்று முக்கியமான மக்களின் இன்றியமையாத அன்றாடத் தேவைகளின் தலையின்மீது கை வைத்தது.<br /><br />மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என்ற உயிர் மூச்சுப் பிரச்சினைகளில் கை வைத்து மக்களுக்கு மிகப் பெரிய மூச்சுத் திணறலை உருவாக்கிற்று.<br /><br />இப்பொழுது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு முறை பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்ற அடியைப் பரிசாக மக்களுக்குக் கொடுக்கிறது.<br /><br />தி.மு.க. ஆட்சியிலிருந்து இன்றியமையாத இந்த பொருள்களின் விலையை உயர்த்தியிருந்தால் அ.இ.அ.தி.மு.க. என்ன செய்திருக்கும்?<br /><br />சபாஷ்! சரியான நடவடிக்கை என்று திமுக ஆட்சியின் முதுகைத் தட்டிக் கொடுத்திருக்குமா?<br /><br />சாலையில் ஏதோ ஓர் இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தாலோ, எங்கோ ஓரிடத்தில் கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, குடிநீர்க் குழாய் உடைந்திருந்தாலோ - உடனே அங்கெல்லாம் கொடி தூக்கிப் போராட்டம் நடத்துவதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க.தானே இப்பொழுது ஆட்சிப் பொறுப் பில் இருக்கிறது?<br />எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை; ஆளும் கட்சியாக இருந்தால் வேறொரு நிலை என்பது ஏன்? என்று கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்கள்; வெகு மக்கள் வைக்கும் கேள்விக்கு விடை எங்கே?<br /><br />அ.இ. அ.தி.மு.க. 2011இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாமர மக்களை மயக்கும் மலிவான தந்திரத்தில் சில திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறதே தவிர, நிரந்தரத் தீர்வை நோக்கி கால் அங்குலம்கூட - அடி எடுத்து வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை யாகும். தானாக உருப்படியான ஆக்கப் பூர்வமான திட்டங்களைச் செய்யாததோடு நின்றுவிடக் கூடாதா?<br /><br />நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன? விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்ற சொலவடை நாட்டில் உண்டு.<br /><br />அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை தன்னாலும் ஒன்றும் சாதிக்க முடியாது; அதே வேகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நல்ல திட்டங்களை யாவது அனுமதிக்க வேண்டாமா?<br /><br />அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்ட சென்னைக் கோட்டூர்புரத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது; சங்கராச்சாரியாரை அழைத்து வந்து யாகம் எல்லாம்கூட நடத்தப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.<br /><br />ஆனால், தி.மு.க. ஆட்சியில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தலைமைச் செயலகத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் போனது ஏன்?<br /><br />ஓர் ஆட்சி போகும். இன்னொரு ஆட்சி வரும்; ஆனால் நிருவாகம் என்பதும், ஆட்சி முறை என்பதும் தொடரக் கூடிய ஒன்றாகும்.<br /><br />ஆனால் அ.இ.அ.தி.மு.க. அப்படியல்ல; நானும் எதையும் செய்ய மாட்டேன்; மற்றவர் செய்திருந்ததை யும் செயல்பட விட மாட்டேன் என்கிற - ஆட்சி முறைக்குச் சற்றுமே பொருத்தமில்லாத வன்மத்தோடு செயல்படுகிறதே!<br /><br />சென்னை துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை பறக்கும் பாலம் மத்திய அரசின் உதவியோடு நடைபெறக் கூடியது. அந்தத் திட்டப் பணிகளும் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது அ.இ.அ.தி.மு.க. அரசு.<br /><br />ஓர் அரசு என்றால் மக்கள் நல அரசாக (Welfare State) இருக்க வேண்டும் என்பது ஆட்சிக்குரிய இலக்கணம் ஆகும். அ.இ.அ.தி.மு.க. அரசோ மக்கள் நல அரசாக செயல்படவில்லை என்பது வெளிப்படை!<br /><br />சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் மிகப் பெரிய திட்டம்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பெற்று, அதன் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் அது திமுகவுக்கு சாதகமாகப் போகும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டத்தை முடக்க உச்சநீதிமன்றம் சென்றதை என்னவென்று சொல்லுவது!<br /><br />உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது அரசு என்ற பதத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகவே ஆகி விட்டது.<br /><br />அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அவர் உருவத்தைக் கட்சியின் கொடியிலும் பொறித்துக் கொண்டு பகுத்தறிவு முதற்கொண்டு மக்கள் நலம் ஈறாக உள்ள அனைத்திலுமே அண்ணாவின் கண் ணோட்டத்தை, கருத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, ஏட்டிக்குப் போட்டி என்றும் சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக நடந்த கொண்டுள்ளது என்பது பெரிதும் வருத்தத்திற்குரியது ஆகும்.<br /><br />மத்தியிலே ஒரு மதவாத ஆட்சி; தமிழ் மாநிலத்தி லும் அத்தகைய ஓர் ஆட்சி என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தந்தைபெரியார் மண் இவற்றையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/90615.html#ixzz3IOOMel7L<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36384251659341742952014-11-07T19:48:27.019+05:302014-11-07T19:48:27.019+05:30பிரார்த்தனையும், அரசியலும்
மும்பை, நவ.5- சிவசேனா...பிரார்த்தனையும், அரசியலும்<br /><br /><br />மும்பை, நவ.5- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா மற்றும் 63 விசேனா சட்டமன்ற உறுப்பினர் களுடன் பெஹெர்கான் கர்லா பகுதியில் உள்ள ஏக்வீரா கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்காலத்தில் 180 சட்டமன்ற உறுப்பினர் களுடன் வருவதாக கடவுளிடம் உறுதி அளித் துள்ளதாகவும், மாநிலத்தில் மக்களின் ஆட்சியைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.<br />லோனவாலாவை அடுத்த கர்லா குகையில் உள்ள ஏக்வீரா கோயிலில் வழிபடுவது அவர்கள் குடும்பத்தின் வழமையாம். அரசியலில் முடி வெடுப்பதற்கு முன்பாக இக்கோயிலில் வழிபட்டு கடவுளின் அருளைப் பெறுவாராம் உத்தவ். அதெல்லாம் இருக்கட்டும் நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தலில் ஆசை நிறைவேறவில்லையே! அப்படியானால் கடவுளுக்கு சாபம் விட வேண்டியது தானே!<br /><br />Read more: http://viduthalai.in/page1/90613.html#ixzz3IOOAbuPU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14270199816237586082014-11-07T19:46:26.330+05:302014-11-07T19:46:26.330+05:30இன்றைய ஆன்மிகம்?
அவதாரம்
பொறுமையின் மறு வடிவமான ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />அவதாரம்<br /><br />பொறுமையின் மறு வடிவமான பூமாதேவி உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமா ளும் உலகில் உள்ள அசுரர் களால் மக்களுக்கு ஏற் படும் அநீதிகளை அழிக்க அவதாரம் எடுத்து வரு வேன் என்று அருள் புரிந்தாராம்.<br /><br />உலகில் இப்பொழுது அநீதிகளே நடைபெற வில்லையா? குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசு துணை யுடன் படுகொலை செய்யப்படவில்லையா? இலங்கையில் மண்ணுக் குள் பல்லாயிரவர் கொல் லப்படவில்லையா?<br /><br />ஏன் பெருமாள் அவ தாரம் எடுக்கவில்லை? அவதாரம் எல்லாம் இந் தியாவில் மட்டும்தானா? இங்கிலாந்தில் ஏன் எடுக்கவில்லை - இவை எல்லாம் பிராந்திய கட வுள்கள் மட்டும் தானா?<br /><br />Read more: http://viduthalai.in/page1/90610.html#ixzz3IONf38AK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58461096690116319122014-11-07T19:40:45.023+05:302014-11-07T19:40:45.023+05:30மகாராட்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களே ...மகாராட்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களே அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்களாம்!<br /><br /><br />மும்பை, நவ.7- ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்களையே மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாக ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.<br /><br />பிரதமருடன் இரண்டு முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுடன் பத விக்கு வந்துள்ளார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இதுவரை எதுவும் செய் யாமல் இருந்துவந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர் களை மாநில அரசின் அதிகாரம் உள்ள துறைகளில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.<br /><br />ஒரு வார கால பயிற்சி....<br /><br />பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (ஆர்.எம்.பி.) என்கிற அமைப்பு இந்த ஒரு மாதத்துக்குள் ஒரு வார கால பயிற்சியை அளிக்கிறதாம்.<br /><br />அந்த அமைப்பின் நிர்வாக இயக்கு நரும், பாஜகவின் தேசிய துணைத்தலை வருமாகிய வினய் சகஸ்ரபுத்தே கூறும் போது, அலுவலக ஊழியர்கள் ஒப்பந்ததாரர் களுடன் உள்ள உறவை துண்டிக்கவேண் டும் என்கிற எண்ணத்தால் இத்திட்டம் ஏற்பட்டது என்றார்.<br /><br />மேலும் அவர் கூறும்போது, புதிதாக அலுவலகப் பணிகள் குறித்த விவரங்கள் தெரிந்த அலுவலக ஊழியர் களை நியமிப்பதன்மூலம், முறைகேடுகள் மற்றும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.<br /><br />பெரும்பாலான நேரங்களில் அமைச்சர்கள் மாறினாலும், கீழ்நிலை ஊழியர்கள் மாறாமல் பணியில் தொடரு கின்றனர். தொடர்ச்சியாக உள்ள தீமையை இதன்மூலம் களைய விரும்பு கிறோம் என்று கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/90708.html#ixzz3IOMCXMlg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19131902990394494902014-11-07T19:39:21.467+05:302014-11-07T19:39:21.467+05:30தந்தை பெரியார் பொன்மொழிகள்
படிப்பு எதற்கு? அறிவுக...தந்தை பெரியார் பொன்மொழிகள்<br /><br />படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLtZWFj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73286085366621418382014-11-07T19:38:57.968+05:302014-11-07T19:38:57.968+05:30இந்துமதம் பற்றி தாகூர்!
டாக்டர் ரவீந்திரநாத் தாக...இந்துமதம் பற்றி தாகூர்!<br /><br /><br />டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:<br /><br />இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.<br /><br />இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.<br /><br />இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத் திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.<br /><br />நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.<br /><br />- இரவீந்திரநாத் தாகூர்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLmBg5N<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44421090800223400252014-11-07T19:37:48.611+05:302014-11-07T19:37:48.611+05:30இங்கர்சாலின் பொன்மொழிகள்
போப் ஆண்டவர்களை விட - கு...இங்கர்சாலின் பொன்மொழிகள்<br /><br />போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.<br /><br />இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள் களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!a<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLVRYWk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90025652710858739332014-11-07T19:20:14.526+05:302014-11-07T19:20:14.526+05:30முயற்சி செய்யுங்கள்!
யார் எந்தக் கருத்தினைச் சொன...முயற்சி செய்யுங்கள்!<br /><br /><br />யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.<br /><br />- (விடுதலை, 25.7.1968)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90694.html#ixzz3IOH3rPFW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88550206465350352592014-11-07T19:19:47.281+05:302014-11-07T19:19:47.281+05:30கருநாடகத்தைப் பாரீர்!
கருநாடக மாநில ஆட்சிப் பக்கத...கருநாடகத்தைப் பாரீர்!<br /><br />கருநாடக மாநில ஆட்சிப் பக்கத்திலிருந்து - குறிப்பாக அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா அவர்களிடமிருந்து பாராட்டத்தக்க கருத்துகளும், அறிவிப்புகளும் நாளும் வந்து கொண்டுள்ளன.<br /><br />கருநாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகருக்கு எந்த முதல் அமைச்சர் செனறு வந்தாலும் மூன்று மாதங்களில் அவர் ஆட்சியை இழந்து தவிப்பார் என்ற மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறித்துக் காட்டினார்.<br /><br />ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடாது - பரப்பக் கூடாது; மாறாக பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15ஆம் ஆண்டு விழாவில் பேசுகிறார்.<br /><br />அதே நேரத்தில் நம் தமிழ்நாட்டின் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்? மூடநம்பிக்கையின் மொத்த குத் தகைக்காரர்களாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்.<br /><br />மண் சோறு சாப்பிடும் அளவுக்கு அல்லவா மவுடீகத்தின் மடியில் தவழுகிறார்கள். யாகம் நடத்தினால் வழக்கில் வெற்றி பெறலாம் என்று யாகங்களை நடத்திக் கொண்டு திரிகிறார்களே! திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள் கிறார்களே! இவ்வளவுக்கும் அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் - கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவத்தைப் பொறித்துள்ளார்கள் (அண்ணாவின் கொள்கை காற்றில் பறக்கிறது என்று இதன் மூலம் சொல்லாமல் சொல்லு கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்).<br /><br />இதில் திராவிட இனக் கலாச்சாரத் தொக்கு வேறு. கட்சியின் பெயரிலிருக்கும் பொருள் கூடப் புரியாமல் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்களே என் சொல்ல!<br /><br />இன்னொரு செயலையும், பண்பாட்டுத் தளத்தில் சாதனை ஒன்றினை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.<br /><br />கன்னட மொழியில் இருந்த ஊர்களின் பெயர்கள் வேற்று மொழியில் மாற்றப்பட்டு உரு திரிந்தன - இது ஒரு மொழி வழி பண்பாட்டுப் படையெடுப்பாகும்.<br /><br />இதனை நன்குணர்ந்த கருநாடக முதல் அமைச்சர் 12 மாநகரங்களின் பெயர்களை மீண்டும் கன்னட மொழியில் மாற்றம் செய்துள்ளார்.<br /><br />பெங்களூர், மங்களூர், மைசூர், பெல்லாரி, ஹூப்ஸி தும்குர், பிலூப்பூர், விஜயபுரா, சிம்கரூர், குல்பர்கா ஹோஸ்கேட், ஷிமோகா என்று உருமாற்றப்பட்ட பெயர்களை முறையே பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பல்லாரி, ஹுப்பள்ளி, தும்கூரு, விஜயபுரா, சிம்மகளூரு, கல்புர்கி, ஹொசப்பேட்டே, சிவமெக்கா என்று மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு எழுதி அதற்கான அனுமதியையும் முறைப்படி பெற்றுள்ளார்.<br /><br />தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருமுதுகுன்றம் -விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை - கபிஸ்தலம் என்றும், திருமரைக்காடு - வேதாரண்யம் என்றும், புளியந்தோப்பு -திண்டிவனம் என்றும், சிற்றம்பலம் - சிதம்பரம் என்றும் குடமூக்கு - கும்ப கோணம் என்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள் ளனவே, எடுத்துக்காட்டுக்குத்தான் இவை; விரித்தால் பெருகும் என்ற நிலையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.<br /><br />மயிலாடுதுறை மாயூரம் - மாயவரம் என்று இடைக்காலத்தில் மாற்றப்பட்டது; ஊர் மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும் சட்டப் பேரவை உறுப்பினராகவிருந்த சுயமரியாதை வீரர் மானமிகு ந. கிட்டப்பா அவர்களின் தொடர் முயற்சியாலும் மீண்டும் மயிலாடுதுறை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.<br /><br />சமஸ்கிருதமயமாக்கப்பட்ட எண்ணிறந்த ஊர்களின் பெயர்களையும், தமிழில் கொண்டு வர தமிழ்நாடு அரசு தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.<br /><br />இதற்கு எடுத்துக்காட்டாக கருநாடக மாநில அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றனவே - அதனைச் சுட்டிக் காட்டி நம் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து விடலாமே!<br /><br />இன்றைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் பொருளாதார ரீதியாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்றாலும், பண்பாட்டு ரீதியில் இதனைச் சாதிக்கலாமே! இதற்கென்று எந்த செலவும் கூடக் கிடையாதே! மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எழுதினால், எளிதாகவே பெயர் மாற்ற உரிமைகளைப் பெற்று விடலாமே! முடியுமா என்று தயங்க வேண்டியதில்லை நமது அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் இது நடந்திருக்கிறது.<br /><br />இதனைச் சாதித்துக் காட்டுவதன் மூலம் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் அவர் பெயர் ஒலித்துக் கொண்டு இருக்குமே! எங்கே, முயலட்டும் பார்க்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டுவாரேயானால், எந்தவிதத் தயக்கமும் இன்றி மனந் திறந்து பாராட்ட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கும். தமிழ் உணர்வாளர்களும், இனவுணர் வாளர்களும் கட்சிகளை மறந்து மனம் நிரம்பி நன்றி கூறுவார்கள் - பாராட்டு மாமழையையும் பொழி வார்கள்.<br /><br />ஓ.பி.எஸ். அவர்கள் துக்கத்தைத் துரத்தி விட்டு துரிதமாக இந்தப் பணியைச் செய்து காட்டட்டும் பார்க்கலாம்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90695.html#ixzz3IOGucuvN<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90689743793797086252014-11-07T19:17:46.912+05:302014-11-07T19:17:46.912+05:30
வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இ...<br />வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இப்பொழுது மழைக் காலத்திலும் தொற்றி யுள்ளது. வழக்கமாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும் இந்த நோய், இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் பாதிப்பதாக அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நமிதா புவனேஸ்வரி கூறுகிறார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90686.html#ixzz3IOGSxVQJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61927014811271264342014-11-07T19:17:04.686+05:302014-11-07T19:17:04.686+05:30ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதமானதாம் - உச்சநீத...ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதமானதாம் - உச்சநீதிமன்றம்<br /><br />சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை<br /><br />டில்லி, நவ.7 ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத் திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்புக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கும் அது இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அனுமதி வழங் கியது.<br /><br />சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல் களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு உதவும். கடந்த 2010 ஆம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. 2012ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கணக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் (கிருஷ்ணமூர்த்தி என்பவர்?) வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பல மாநிலங்களில் இன்னும் நடத்தப் படவே இல்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.<br /><br />(ஜாதிகள் உள்ளன அரசியல் சட்டப்படி என்ற நிலையில் இத் தடை விசித்திரமானது என்பது சட்ட நோக்கர்கள் கருத்து).<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90681.html#ixzz3IOFyzoAy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2100672170895787822014-11-07T19:14:20.914+05:302014-11-07T19:14:20.914+05:30தென்னக ரயில்வேயில் குரூப் டி பணிகளுக்கு, தமிழர்கள்...தென்னக ரயில்வேயில் குரூப் டி பணிகளுக்கு, தமிழர்கள் நிராகரிப்பா?<br /><br />தென்னக ரயில்வேயில் 5430 குரூப் டி பணிகளுக்கு விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.<br /><br />இந்தப் பதவிகளுக்கு, விண்ணப்பிப்போர், அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களை (Attested Copy) இணைத்திட வேண்டும் என தென்னக ரயில்வே, ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்தது. ஆனால், தமிழ் நாளிதழில் வெளியிட்ட விளம்பரத்தில், இந்த அத்தாட்சி முறை தேவையில்லை என செய்தி வெளியிட்டது. இதனை நம்பி, எந்த அத்தாட்சி பெற்ற சான்றிதழும் இணைக்காத ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.<br /><br />ஆனால், ஆன்லைன் மூலமாக விண்ணப் பித்தவர்களுக்கு, இந்த அத்தாட்சி பெற்ற சான்றி தழ்கள் இணைக்காத நிலையில், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகு அத்தாட்சி முறை இனி தேவையில்லை என்று மத்திய அரசே இதற்குமுன் அறிவித்து விட்ட நிலையில் இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?<br /><br />பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் தமிழ் நாட்டில் உள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து, அவர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />மொத்தம் பதினோரு லட்சம்பேர், இந்த பதவிக்கு நாடு முழுவதும் விண்ணப்பித்த நிலையில், இந்தத் தேர்வுகள் அய்ந்து நாட்கள் நடைபெறுகின்றன. முதல் தேர்வாக, திருச்சியில் 2.11.2014 அன்று தேர்வு நடைபெற்று, ஆயிரக்கணக்கான பீகாரிகள் தேர்வு எழுதி உள்ளனர்.<br />குரூப் டி பதவிகளில் டிராக்மேன், போர்ட்மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகள் பல ஆண்டு களாக அந்தந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்படுவர். மாநில மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு அடிப்படை சம்பளம் ரூ.1800. ஆனால், இந்த பணிகளுக்கு, வட மாநிலத்தவர்களை, அனுமதித்திருக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் செயல், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.<br /><br />இது வேலை வாய்ப்புப் பிரச்சினை என்பதையும் தாண்டி, ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர், தமிழகத்தில் கடை நிலை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதால், சமூக, மொழி பிரச்சினையையும் உருவாக்குவது நிச்சயம்.<br /><br />தமிழ்நாடு அரசும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனே தலையிட்டு தவறான காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட இரண்டரை லட்சம் தமிழர்கள் மீண்டும் தேர்வு எழுதிட அனுமதிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.<br /><br /><br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />சென்னை<br />7-11-2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90684.html#ixzz3IOFYz9iu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17192280587463068812014-11-07T19:13:01.751+05:302014-11-07T19:13:01.751+05:30சொல்கிறார் மத்திய அமைச்சர்
தமிழகத்தில் போக்குவரத்...சொல்கிறார் மத்திய அமைச்சர்<br /><br />தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத் துவதிலும், ஆக்ரமிப்புகளை அகற்றுவதிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசு, ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், தமிழக சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்<br />மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு<br /><br />என்ன செய்யப் போகிறது அதிமுக அரசு?<br /><br />இந்தப் பேச்சில் ஒரு சொடுக்குவைத்துள்ளார் மத்திய அமைச்சர். மாநில அமைச்சர் ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில்... என்பதுதான் அந்தச் சொடுக்கு!<br /><br />அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்மீது பொதுவாக இந்த வகையான குற்றச்சாட்டு உண்டு. எடுத்துக்காட்டு மதுர வாயல் - துறைமுகம் பறக்கும் பாலம்; சாலைப் போக்கு வரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கத் தயார் என்கிறது மத்திய அரசு - மாநில அரசு என்ன செய்யப் போகிறது.?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90685.html#ixzz3IOFG4ged<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64241479680689554682014-11-07T19:12:18.753+05:302014-11-07T19:12:18.753+05:30இன்றைய ஆன்மிகம்?
உயிர்கள்தானே
சாப்பாட்டு விஷயத் ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />உயிர்கள்தானே<br /><br />சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண் டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.<br /><br />இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90678.html#ixzz3IOF3jkAl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64740056092012159062014-11-06T07:19:52.501+05:302014-11-06T07:19:52.501+05:30மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையாக அமலாக...மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?<br /><br /><br />மாற்றுத் திறனாளிகளுக்கு<br />இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?<br />அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு<br /><br />சென்னை, நவ. 5_ உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத் தரவுகளின்படி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத் திறனாளி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1107 பின்னடைவு காலி இடங்களை முதலில் நிரப்ப வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.<br /><br />இவ்வழக்கு திங்களன்று (நவ.3) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத் தியநாராயணா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டப்படி, அரசு துறைகளில் உள்ள மொத்த பணியாளர் எண் ணிக்கை அடிப்படையில் 3 சதவீத இடங்களை உறுதி செய்ய வேண்டு மென்றும், 3 மாதங்களுக்குள் பின்ன டைவு காலி பணியிடங்களை கண் டறிந்து நிரப்ப வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013 அக்.8 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன் றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி இடங்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனை யடுத்து, பெயரளவிற்கு ஒரு சில துறை களை மட்டும் குறிப்பிட்டு, அத் துறைகளில் இருக்கும் மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை சுட்டிக்காட்டி, மாற்றுத் திறனாளி நலத்துறை அரசாணை எண் 10 அய் மார்ச் மாதம் வெளி யிட்டது.<br /><br />ஆசிரியர் பணி நியமனத்தில் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அரசாணையில் உத்தர விடப்பட்டது.<br /><br />ஆனால், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற உத்தரவுகளின்படியும், அர சாணைப் படியும் 1107 மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை நிரப்பாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 9000 ஆசிரியர் பணி இடங்களை சமீபத்தில் நிரப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டது.<br /><br />இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் என அனைவரின் சார்பில் மாற்றுத் திறனாளி துறை செயலாளர் பி.சிவ சங்கரன் ஏற்கனவே பதில் மனு தாக் கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணா முன்னிலையில் இவ் வழக்கு திங்களன்று (நவ. 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளி துறை செயலாளருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என கூறி, அதில் திருப்தி அடையாத நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமலாகிறதா? என்பதை முழுமை யாக ஆராய்ந்து 19.01.2015- ஆம் ஆண்டிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு உத்தரவிட்டனர்.<br /><br />இவ்வழக்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.சி.காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதாடினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90576.html#ixzz3IFV9MVBK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45092311732299633432014-11-06T07:18:01.990+05:302014-11-06T07:18:01.990+05:30புத்தன்
புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அ...புத்தன்<br /><br /><br /><br />புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக்கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை.<br />_ (விடுதலை, 16.5.1961)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90573.html#ixzz3IFUba4ww<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com