Search This Blog

16.11.14

பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்?

தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி

 
  தந்தை பெரியார்

நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக்காரன் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதாகும். நாம் ஓட்டு  வேட்டையாடுபவர்கள் அல்ல. ஓட்டு வேட்டையாடுபவனைக் கேட்டால் இவன் இதை ஜனநாயகம் என்பான். ஒன்று அப்படிச் சொல்பவன் மடையனாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கியனாக இருக்க வேண்டும். புரியாமலேயே சொல்லு கிறவன், தெரியாமல் சொல்லுபவன் மடையன். தெரிந்து வைத்துக்கொண்டே இதில் ஏதாவது பங்கு கிடைக்காதா என்று பார்ப்பவன் அயோக்கியன். இதுவா ஜன நாயக ஆட்சி? இது ஒரு சாதிக்காரன் ஆட்சி. அது அரசாட்சி அல்ல. மேல் சாதிக்காரன் ஆளுகிறான். அதுவும் சாஸ்திர சம்பிரதாயப்படி ஆளுகிறான்.


இப்போது நடைபெறுகிற இராஜ்ஜியம் - இந்துமத இராஜ்ஜியம் இதற்குக் கொள்கை வருணாசிரம தர்மம்தான்.


இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நான் சொல்லுகிறேன்.


முதலாவது ஆட்டைக் கொல்லலாம்; பன்றியைக் கொல்லலாம்; கோழி மற்ற பறவைகளைக் கொல்லலாம். ஆனால் மாட்டை  மாத்திரம் கொல்லக்கூடாது  என்று இந்த அரசாங்கத்தில் சிற்சில மாகா ணங்களில் சட்டம் செய்து வைத்திருக் கிறார்கள்! உலகில் பல நாடுகள் ரஷ்ய, சைனா, போன்ற நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் வாழும் நாடுகளில் மாடு நல்ல உணவாகப் பயன்படுகிறது.அதைக் கொல் வது  தவறு கிடையாது. ஆட்டிறைச்சி யைவிட  விலைமிகக் குறைவு. மாட்டி றைச்சி ஏழைகள் சுலபமாக  வாங்கிச் சாப்பிடும்படியாகக் கிடைக்கக் கூடியது. அந்த மாட்டை  அறுத்தால் தண்டனை என் றால் இது வருணாசிரம முறைப்படி  நடக் கும் இராஜ்ஜியம் என்றுதானே அர்த்தம்?


அடுத்தப்படி பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவ தில்லையே ஏன்? என்று கேட்கிறார்கள் சிலமடையர்கள். 100 க்கு 97 பேர் நாம் இருக்கிறோம். பார்ப்பான் 3 பேர்தானே இருக்கின்றான்? அந்த 3 பேருக்காவே சட்டம், ஆட்சி என்று வைத்துக் கொண் டானே ஏன் என்று எவனாவது கேட் கிறானா? இதன் பெயர் ஜனநாயகம் என்று சொல்கிறானே? நம் மடப்பசங்ககளும் 50 பேர் இங்கிருந்தால் அதில் 26  பேர் சொல் லுகிறபடி மற்ற 24 பேரும் கேட்பதுதான் ஜனநாயகம். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கூட 10 பேர் இருந்தால்6 உறுப் பினர்கள் ஓட்டு போடுகிற மாதிரிதான் தலைவர்  வருவார். இங்கே நாம் 100க்கு 97 பேர் இருக்கின்றோம். 100க்கு 3 பேராக இருக்கின்றவன் சொல்லுகிறபடி 97 பேர் கேட்டு நடக்க வேண்டும் என்று சொன் னால் இதற்குப் பெயர் ஜனநாயகமா? எவனாவது சொல்ல முடியுமா? இந்து மத நாயகமே வருணாசிர நாயகம் மனு தருமப்படி ஆளுகிற நாயகமே தான். 

இரண்டு சங்கதி உங்களுக்குத் தெரிந்தால் இது விளங்கிவிடும். அதாவது ஒன்று: பார்ப்பான் கடவுளுக்குச் சமம். சூத்திரன் நாய்க்குச் சமம், பார்ப்பனத்தி கடவுளுக்குச் சமம். சூத்திரச்சி என்றால் வைப்பாட்டி என்று அர்த்தம் என்று எழுதி வைத் திருக்கிறான்.


இரண்டு: பார்ப்பான் ஆட்சித் தலை வனாக இருக்க வேண்டும். சூத்திரன் சிப் பந்தியாக கீழே இருக்க வேண்டும். இதுதான் மனுதர்மப்படியான சாஸ்திரம் எழுதி வைத்துள்ளவைகளாகும்.


பிராமணன் சூத்திரனைச் சோற்றுக்குத் திண்டாடும்படியாக நடத்த வேண்டும் என்பது மனுதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன்  என்ன பாடுபட்டாவது பார்ப்பானுக்குக் கேடு செய்யாமல் சுகமாக பார்ப்பான்  வாழ வசதி செய்து கொடுக்க வேண்டும். சூத்திரன் ஏழையாகவே இருக்க வேண்டும். ஏண்டாவரி! என்று கேளுங் களேன்; வரிபோடுவது கூட மனுதர்மத்தை அடிப்படையாக  வைத்துதான். சூத்திரன் கையில் எதுவும் மிச்சமீதி தங்கக்கூடாது; அவன் வசதியாக வாழக்கூடாது என்பதற் காகவே. சூத்திரனைச் சோற்றுக்குத் திண் டாடும்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு தரும சாஸ்திரம்! அதை அனுசரித் துத்தான் நமக்கு வரி.

சாதி ஒழியக்கூடாது; சூத்திரன் படிக்கக் கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத் திற்குப் போகக்கூடாது; சூத்திரன்  வயிறாரக் கஞ்சி குடிக்கக்கூடாது என்றே எழுதி வைத் திருக்கிறான். இதுதான்  மனுதரும சாஸ்திரம்! இதுதான் இந்துலாவுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும் ஆதாரமும், அடிப் படையும் ஆகும். இதனால்தான் இதை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு ஜெயில். 4000 பேருக்குத் தண்டனை.  பத்துப் பேருக்கு மேல் சாவு முதலிய எல்லாமும் சாதாரணமாகப் பார்த்தால் தெரியும். இந்த நேரு, பட்டணத்துக்கு (சென்னைக்கு) வந்திருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டதே! என்ன ஆகிவிட்டது?திட்டம் போட்ட வீதிகளை விட்டு கார் வேறு வழியாக ஓடியும் தப்பிக்க முடியவில்லையே? 5, 6  பேருந்துகளைக் கொளுத்தினார்கள்.  12 பேர் செத்தானுங்களே! என்ன நடந்தது? ஒன்றும் நடக்கவில்லை. அதை வைத்து அதற்காக ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து ஒவ்வொருவருக்கும் 1 வருடம், 2 வருடம் என்று தண்டிப்பது என்றால் இந்த அரசாங் கத்தால் முடியாத காரியமா? ஏன் செய்ய வில்லை? அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு சாதாரணக் கடு தாசிகூட இல்லை நாங்கள் கொளுத்தியது! 


அதற்கு மாத்திரம் ஏன் 2, வருடம், 3 வருடம் தண்டனை? அதில் என்ன இந்த நேருவைக் கொல்லவேணும் என்று எழுதியிருந் ததா?அதில் சாதியைக் காப்பாற்றச் சட்டம் என்று இருக்கிறதே! நேற்றுதான் இந்த இராமனையும் பிள்ளையாரையும் எரித் தோம். வீதிக்கு விதி போட்டு உடைத்தோம்.  யாரும் கேட்கவில்லையே ஏன்? சாதியை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கேட்டால் உடனே 2 வருடம் என்றால் என்ன அர்த்தம்? இது மனுதர்ம ஆட்சி என்பதற்கு வேறு என்ன காரணம்வேண்டும்? நம்முடைய இழிவை ஒழிக்க நாம் தலையெடுக்க முயற்சித்தால் அதை ஒழிப்பதில்தான் பார்ப்பான் ஆட்சி எல்லாவற்றையும் கையாளுகிறது. நம்மை நம்முடைய இனப் பிரதிநிதிகள் இன்று ஆளுகிறார்களா? நமக்கு ஓட்டுக் கொடுத்திருக்கறார்கள். ஆனால் அதைச் சரியானபடி உபயோகிக்க வசதியிருந்தால், யோக்கியமான முறையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் களாயின் பிரதம மந்திரியாக எப்படி ஒரு பார்ப்பான் வரமுடியும்? 97 பேருக்கு யோக்கியமான முறையில் ஓட்டுக் கொடுத் திருந்தால் 97 பேரில் ஒருவர் அல்லவா பிரசிரெண்டாக (குடியரசுத் தலைவராக) இருப்பார்? இப்போது 3 பேராக உள்ள வர்களிடத்திலிருந்து தான்  பிரசிடெண்ட்... பார்ப்பார பிரசிடெண்டு-என்றால் என்ன அர்த்தம்? இவன் வைத்திருக்கிற சட்ட சபையின் மூலம் சாதியை ஒழிக்க முடியுமா? ஓட்டுப்போடுகிறவர்களில் 100க்கு 95 பேர் முட்டாள். பாக்கி 3 பேர் அயோக்கியன். 2 பேர் பார்ப்பான்! அவன் செலவு செய் கிறான்; பணத்தைத் தண்ணீர் மாதிரி; அதற்காகத்தான் சட்டசபைக்கு வா என்று எல்லோரையும் கூப்பிடுகிறான். எலிக் கூண்டு, புலிக்கூண்டு மாதிரிதான். எப்படி பெரிய பொறிவைத்து எலியைப் பிடிக் கிறார்களோ அதுபோலத்தான் எலெக்ஷன் (தேர்தல்) ஒரு பொறி மாதிரி! அதில் மாட்டிக் கொண்டால் ஒன்றும் பண்ணமுடியாது. கீழ்சாதிக்காரர்கள் ஜெயித்தால் கூட பெருவாரி மக்களின் ஆசைப்படி நடக்க இயலாது; சமுதாய இழிவு ஒழிய ஜன நாயகம் மூலம் செய்யமுடியாது. சட்ட சபைக்குப் போய் உட்காருவதற்கு முன்பே உன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடவேண்டும் என்கிறான். அதில் போய் நீ என்ன செய்ய முடியும்?


சட்டத்தை இலட்சியம் செய்யாமல், வலுவான கிளர்ச்சி நடத்துவது மூலம்தான் நாம் நம்முடைய இலட்சியத்தைச் சாதிக்க முடியும். ஜனநாயகத்தின் மூலம் இந்த பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது. கிளர்ச்சி ஒன்றில்தான் இந்தக் காரியம். முடியும். கிளர்ச்சியால் முடியாவிட்டால் அதற்கடுத்து பலாத்காரம் நிச்சயம். அடுத்த தலைமுறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையுமானால் பலாத்காரத்தைத் தவிர வேறுவழி என்ன? மயிலே மயிலே இறகுபோடு என்றால் முடியுமா? ஆகவே சட்டசபையோ, ஜனநாயகமோ இதைச் சாதிக்க முடியாது.


பலாத்காரம் என்றால் இன்னொருவனை ஒழிப்பது என்று  அர்த்தமல்ல. தன்னையே ஒழித்துக்கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தன்னையே இரண் டிலே ஒன்று பார்த்துக்கொள்கிறான் என்று தான் அர்த்தம். நீங்கள் பத்திரிகையிலே பார்க்கலாமே! நாட்டிலே நடக்கிற கொலை களில் 100க்கு 75கூட கொலை செய்கிற வனும் தன்னை மாய்த்துக்கொள்கிறான்! காந்தி சும்மா அதிகமாக வேசம் போட்டார். நிஜமாகவே எண்ணிச் சொன்னேன். பிறகு  மாற்றிக் கொள்ள வேண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.


ஆந்திராவில் முதலில் நேரு வீரம் பேசினார். நாலு இரயிலைக் கவிழ்த்து இரண்டு தண்டவாளத்தைப் பிடுங்கி னார்கள். உடனே மரியாதையாக அவரே போய்ப் பிரித்துக் கொடுத்தாரே!


ஜின்னா சாயுபு எப்படி பாகிஸ்தான் - தனிநாடு வாங்கினார்? காந்தியார் சொன் னார் என் பிணம் கடலில் மிதந்தபிறகுதான் முஸ்லிம்களுக்கு நாடு என்று பிறகு ஜின்னா வீட்டுக்குத் தேடிப்போய் வெள்ளித்தட்டில் வைத்தல்லவா கொடுத்தார்கள். இயற்கை யின் தத்துவமே அப்படித்தான் வரிசை யாகப்போகும். முடியவில்லை என்றால் அது திரும்பிவிடும். இப்போது ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் பார்க்கிறோமே! பர்மாவிலே (மியான்மர்) என்ன நடந்தது? 8 மந்திரிகளை சீவித் தள்ளினார்களே என்ன ஆயிற்று?


இப்போ இங்கே பார்ப்பார நாயகம். சாதிநாயகம். மத நாயகம், அப்புறம் இரண்டு எலெக்ஷனுக்குப் (தேர்தல்) பிறகு அரிவாள் நாயகம்தான்! அதில் சந்தேகமே யில்லை. அப்படிப்பட்ட நிலைமை வருவ தற்கு  முன்னால் நாம் பிரிந்து நம்மைச் சரிப்படுத்தி ஒழுங்குமுறை கைக்கொள்ள வேண்டும்.


சாதி, மதம், இவையெல்லாம் ஒழிந் தால்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். சாதிக்கு முதல் முட்டு கடவுள். இரண்டாவது மதம். இந்த இரண்டையும் அசைத்தால் எதற்கும் தீர்ந்தது மூன்றாவது சாஸ்திரம்; நாலாவது அரசாங்கம். இந்த நான்கையும் பிடுங்கி எறிந்தால்  அதுதானே சாய்ந்து விடும்! பொத்தென்று விழுந்துவிடும்; அது சாய்ந்தால் நாம் உருப்படியாக ஆகிவிடு வோம்.

----------------------------------------14-11-1958 அன்று மணச்சல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : "விடுதலை" 27-11-1958

30 comments:

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!


ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!

ஊசலாடிய 5 தமிழக மீனவ சகோதரர்களின் உயிர்

காப்பாற்றப்பட்டது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான்

தமிழர் தலைவர் அறிக்கை

ஊசலாடிய 5 தமிழக மீனவச் சகோதரர்களின் உயிர் எப்படியோ காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான்! ஈழத் தமிழர்களின் வாழ்வுரி மையில் உண்மையான விடியல் எப்போதோ! என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இராஜபக்சே அரசு, தனது சொந்த நாட்டின் குடிமக்கள், சிங்கள இனம் உருவாகுமுன்பே இலங்கையை ஆண்ட வரலாற்றுப் பெருமைக்குரிய மக்கள் தமிழர்கள் என்பதையெல்லாம் வசதியாக மறந்தும் மறைத்தும், எம் இனத்தை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

தீவிரவாத ஒழிப்பு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, அங்குள்ள தமிழர்களை குண்டு வீசியும் மற்றும் பல்வேறு ஜனநாயக விரோதச் செயல்களினாலும் அழித்தொழித்து, நிரந்தர அவலத்திற்குரிய நிலைக்குத் தள்ளப்படும் நிலை தொடர் கதையாக ஆகி வருகிறது.

2009இல் தீவிரவாதத்தை அறவே ஒழித்து, விடுதலைப்புலிகளையே அழித்து விட்டோம் என்று கூறி, அங்குள்ள நம் தாய்மார்களில் 90 ஆயிரம் விதவைகள், பல்லாயிரவர் வீடற்றவர், பல ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையில் அழிக்கப்பட்டவர்கள், எஞ்சியவர்கள் சிங்கள இராணுவத்தின் கொடுங்கோன்மை ஆளுமையின் கீழ் உள்ள முள் வேலிக்குள் அடைக்கப் பட்டவர்கள் என்ற நிலைதான் இருந்தது!

இந்த 5 ஆண்டுகளில் எம் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கு பெரிதாக விடியல் ஏதும் ஏற்படவில்லை.

ரூ.1300 கோடி நிதியை இந்திய அரசிடமிருந்து மறுவாழ் வுக்கான பணி - வீடு கட்டித் தருவது - போன்ற சாக்குகளில் பெற்றும்கூட, அதனால் தமிழர்களுக்குப் பயன் கிட்டாது, சிங்களவருக்கே நன்மை ஏற்படும் நிலைதான் உள்ளது என்பது உலக நோக்கர்கள் கருத்து.

சிங்களப் பெயர் மாற்றத்திலிருந்து - தமிழர் வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றம் வரை நீடிக்கும் என்ற நிலைதான்!

தமிழ் ஓவியா said...

13ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படியும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை

அதிபர் இராஜபக்சே அளித்த வாக்குறுதிப்படி ஏற்படவே அரசியல் தீர்வு ஏதும் இல்லை. 13ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படியும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முந்தைய அரசும் தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் அதனை இலங்கைக்கு வற்புறுத்த வேண் டிய கடமையைச் செய்யாது, பாம்புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் என்பது போன்ற ஒரு அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவது வேதனைக் கும், வெட்கத்திற்கும் உரியதாகும்!

அண்மையில் சென்னைக்கு வந்து பேட்டி அளித்த வடகிழக்கு மாகாண தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் முதல்வர் திரு. விக்னேஷ்வரன் அவர்கள், எவ்வித அதிகாரமும் தரப்படாத பொம்மை முதல்வனாகவே தான் இருப்பதாக வேதனையோடு கூறியிருக்கிறார்.

கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பும்
தமிழ் உணர்வுள்ள கட்சிகள் வலியுறுத்தியும்கூட


தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் இயங்கும் டெசோ அமைப்பு தொடங்கி, பல்வேறு தமிழ் உணர்வுள்ள கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தியும்கூட, மத்திய அரசு கேளாக் காதுடன் தான் நடந்து கொள்கிறது.

நமது மத்திய அரசினையே மிரட்டுவது போல, சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை தனக்குள்ள உறவுகள், உதவிகளைக் காட்டி, நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு அவர்கள் இருக்கிறார்கள் என்ற போக்கை இலங்கை காட்டி அச்சுறுத்தி வருகிறது!

நமது நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுவதுபோல, சில நாட்களுக்குமுன்பு வரை, சீனாவின் சப்மெரினை இலங்கைக் கடற்கரையில் நிறுத்தி வைக்க அனுமதியளித்துள்ளது.

இதுபற்றி தமிழர் தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான திரு. சம்பந்தம் அவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர்தம் வெளிஉறவுக் கொள்கையின் இரட்டைப் போக்கினை நன்கு படம் பிடித்துக் காட்டிப் பேசியுள்ளார்.

இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் இது தலைப் புடன் வெளியாகியுள்ளது.

Sri Lanka undermining Indian interests by favouring China: TNA என்பதில் நமக்கு உதவும் அண்டை நாடான இந்தியாவின் உணர்வுகளைப் புறந்தள்ளி, சீனாவுக்கு ஆதரவு காட்டி வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தி யாவைத் தனிமைப்படுத்தும் ஒரு நிலையை இலங்கை அரசு கடைப்பிடிக்கத் துணிந்துள்ளது.

சீன அரசின் உதவிகள் 98 விழுக்காடு கடன்களாகத் தான் தரப்படுகின்றன. ஆனால்,இந்திய அரசு 1300 கோடி ரூபாய் நமக்கு மான்யமாக உதவியுள்ளது. நாம் அதற்குக் காட்டும் கைம்மாறா? என்பது போன்று கேட்டுள்ளார்!

இந்திய அரசுக்கும் இது வெளிச்சம் ஆகட்டும்!

மற்றொரு பகுதி தமிழக மீனவர்களை அன்றாடம் கைது செய்து, சித்ரவதை செய்வது, படகுகளைப் பறிப்பது, பறித்த படகுகளை - விடுதலை செய்த பிறகும் திருப்பித் தராதது. உச்ச கட்டமாக 5 மீனவர்கள்மீது பொய் வழக்கு - போதைப் பொருள் கடத்தல் குற்றம் சுமத்தி - தூக்குத் தண்டனை தந்து, மற்றவர்களை மிரட்ட இதனையே ஓர் ஆயுதமாக்கி - பிறகு பொது மன்னிப்பு என்று தந்து நாடகத்தை முடித்து, இங்குள்ளவர்களின் பாராட்டையும் சேர்த்துப் பெறுவது போன்ற தந்திர உபாயங்களை நடத்தி வருகின்றது.
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!

ஊசலாடிய 5 மீனவச் சகோதரர்களின் உயிர் எப்படியோ காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியது தான், அதற்காக அந்த அளவு பிரதமர் மோடி எடுத்த முயற்சிகள் நமது நன்றிக்கும், பாராட்டிற்கும் உரியது என்ற போதிலும், உண்மை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வராமலா போகும்?

எனவே, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மை யான விடியல் எப்போதோ!.. புரியாத புதிர் - கிடைக்காத விடை! என் செய்வது தமிழர்களின் இன உணர்வு சிதறிய தேங்காய்களாகி உள்ள நிலையினால் ஏற்பட்ட விரும்பத் தகாத விளைவு இது அந்தோ!


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
16-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91235.html#ixzz3JHlo3Qur

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்களுக் குத் தானே பலன் சொல் லிக் கொண்டு திரிகி றார்கள். மீதி லட்சக்கணக் கான நட்சத்திரங்களுக் குப் பலன்களே கிடை யாதா?

அவர்களுக்கு இருந்த அறிவு அவ்வளவு தான். இன்றைக்கும் அதே 27 நட்சத்திரங்கள் பற்றிப் பலன் சொல்லுவது அடி முட்டாள்தனம்என்றால் நம்புவதோ கோடிக் கோடி பரம முட்டாள்தனமே!

Read more: http://viduthalai.in/e-paper/91241.html#ixzz3JHmGHThq

தமிழ் ஓவியா said...

அய்வருக்குத் தூக்கா?

2011 நவம்பர் 28 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 712 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. அன்றிரவு கச்சத்தீவு அருகே நூற்றுக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சன், அகஸ்டஸ், லாங்நைட் ஆகியோரைச் சிறைப் பிடித்துச் சென்றனர்.

பிடித்துச் சென்றபோது இலங்கைக் கடற்படை சார்பில் எல்லை கடந்ததாக உங்களைக் கைது செய்து இலங்கை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகத்தான் தெரிவிக்கப்பட்டது, இது குறித்து அகஸ்டிஸ் என்பவர் தமிழகத்தில் உள்ள தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறைப் பிடித்துச் சென்ற மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம் சிங்கள மொழியில் உள்ள சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இலங்கை ஊர்க்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை அடுத்து ஊர்க்காவல் படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவர் மீதும் போதைப் பொருள் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்ததாகக் கூறினார்கள். மீன்பிடிப் படகில் ஹெராயின் போதைப் பொருள் கடத்திச் சென்று நடுக்கடலில் பைபர் கிளாஸ் படகில் காத்திருந்த இலங்கையைச் சேர்ந்த மூவரிடம் கொடுத்ததாகவும், 8 பேர்களும் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அப்பட்டமான பொய் வழக்கு!

இது தொடர்பாக கியூ பிரிவு காவல் துறையினரும், தமிழக உளவுத்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை முடிவில் இது பொய் வழக்குதான் என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக இலங்கை மூத்த வழக்குரைஞர்கள் வாதாடினார்கள் என்றாலும் பயனில்லை.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வருவதற்கு முன் இப்பொழுது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அய்வரையும் அன்று விடுதலை செய்வதாக அறிவித்தாரே ராஜபக்சே - அது என்னாயிற்று? (26.5.2014) பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்கக் கூடாது - அவரை அழைக்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பைத் திசை மாற்ற ஏமாற்றிட அந்த அறிவிப்பா? இது ஒரு முக்கியமான விஷயம்! - மக்கள் மறந்திருந்தால் அதனை நினைவூட்டுவதுதான் எங்கள் முக்கிய வேலை. இது மிகப் பெரிய பிரச்சினை! இலங்கை அரசின் இந்த ஏமாற்று நயவஞ்சகச் செயலைக் கண்டிக்க உலக நாடுகள் எல்லாம் முன்வர வேண்டும்.


தமிழ் ஓவியா said...

அய்வரையும் விடுதலை செய்யக் கோரி தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியே வந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் அய்வர், இலங்கை மீனவர் மூவர் உட்பட எட்டுப் பேருக்கும் 30.10.2014 அன்று தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும் கடந்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அளவுக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு தொடர்ந்து காட்டி வரும் அலட்சியப் போக்கு - எவ்வளவு பெரிய விபரீதமான விலையைக் கொடுக்க வைத்துள்ளது என்பதை நினைத்தால் வேதனையும், கோபமும் பீறிட்டுக் கிளம்புகின்றன.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்த்த இந்தியா இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதற்குப் பிறகாவது கச்சத் தீவு பிரச்சினையில் மறு பரிசீலனைக்கு ஆட்பட வேண்டும். மத்தியில் ஆட்சி மாறியிருக்கலாம்; அது பொருட்டல்ல; நம் நாட்டு மக்களுக்குத் தூக்குத் தண்டனை இன்னொரு நாட்டில் சட்ட விரோதமாக - நியாய விரோதமாக அளிக்கப்பட்டுள்ளது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கேரள மீனவர் இருவரைக் கொன்ற இத்தாலியர் விஷயத்தில் இந்திய அரசு எப்படி நடந்து கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

இந்தியப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை வாய் திறக்கவில்லை. மேல்முறையீடு செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாம். இது போதுமானதல்ல.

எந்தளவுக்குக் கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அந்த எல்லை வரைக்கும் செல்ல இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள நீதிமன்றங்கள் எல்லாம் அதிபரின் கைப்பாவைகள்தாம். இலங்கை உச்ச நீதிமன்றத் தலைமைப் பெண் நீதிபதியாகவிருந்த சிராணி பண்டார நாயகா - தனக்குத் தாளம் போடவில்லை என்பதற்காக அதிபர் ராஜபக்சே என்ன செய்தார்? அவர்மீது குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, தலைமை நீதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டாரே!

எனது 54 ஆண்டு வாழ்க்கையில் 32 ஆண்டுகள் என்னுடைய தாய்நாட்டுக்காக பல்வேறு வழிகளில் சேவை செய்துள்ளேன்; சட்டத்தின் ஆட்சியும் இயற்கை நீதியும் தூக்கி எறியப்பட்டதுடன் காட்டுமிராண்டித்தனமாக சின்னா பின்னம் செய்யப்பட்டுள்ளது! என்று அந்நீதிபதி கூறினார்.
முள்வேலியில் முடக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் ஏதிலிகளைப் பார்வையிட்ட அன்றைய தலைமை நீதிபதி சரத் என் சில்வா வெளிப்படையாகவே சொல்ல வில்லையா?

இலங்கைத் தீவில் ஒரே இனம்தான் உள்ளது என்றோ பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் ஏதுமில்லை என்று நாம் கூறுவோமேயானால் அது அப்பட்டமான பொய்யாகும். இந்த நாட்டின் சட்டங்களி லிருந்து தமிழர்களின் இன்னல்களும், துயரங்களும் நமது நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படுவதில்லை. இதை நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று கூறினாரே - 2005ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ஒரு வழக்கில் மகிந்த ராஜபக்சேவை சிறையில் அடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பு நீதிபதி என்கிற முறையில் எனக்குக் கிடைத்தது; அப்படி சிறையில் அடைக்காமல் இருந்ததற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என்றும் அந்த நீதிபதியே சொன்னதுண்டு.

இப்பொழுது தூக்குத் தண்டனை வழங்கியுள்ள நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன என்பவர் அரசு வழக்குரைஞராக இருந்தவர் தானே! அதிபர் கோலெடுத்தால் ஆடுபவரே (His master’s Voice).

1987 ஜூலை 29ஆம் தேதி அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றார். மறுநாள் அங்கு இராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிங்களக் கடற்படை வெறியன் விஜிதரோகன விஜய முனி துப்பாக்கியின் பின்பகுதியால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கினான். குனிந்து கொண்டதால் உயிர் தப்பினார்.

தோள் பட்டையில் பலத்த அடி விழுந்தது. இராணுவச் சட்டப்படி அவனுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளேயே அவனுக்கு விடுதலை வழங்கப்பட்டது. சிறையில் நான் நன்றாக நடத்தப்பட்டேன் என்றுகூடக் கூறினான்.

மரணத்தைக் கொடுக்கும் தாக்குதலைத்தான் தொடுத்தேன். ஆனால் உயிர் தப்பிவிட்டார் ராஜீவ் காந்தி. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நான் விரும்பவில்லை என்று கூறினான்.

இந்தியப் பிரதமர் ராஜீவைத் தாக்க முயன்றது - கொலை செய்வதற்கே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவருக்குச் சட்டப்படி கொலை முயற்சியின்கீழ் கடுந் தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டும். இலங்கை நீதிமன்றமோ கண் துடைப்புக்காக ஆறு ஆண்டுகள் தண்டனை என்று அளித்தது. ஆனால், இரண்டாண்டுக் குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டாரே!

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை என்பது இந்திய அரசை அச்சுறுத்தவே என்பதில் அய்யமில்லை.

மக்கள் எரிமலை வெடிக்கும்முன் மத்திய அரசு செயல்படட்டும்!

என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? தமிழ்நாடே கட்சிகளை மறந்து பொங்குமாக்கடலாக பொங்கி எழுந்து விட்டது - அரசு ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

இன்னும் ராஜதந்திரம்தானா? வெளிநாட்டுப் பிரச்சினை என்ற நெளிவு சுளிவுக்குள் பதுங்கிக் கொள்ளப் போகிறதா?

மக்கள் எரிமலை வெடிக்குமுன் மத்திய அரசு விரைந்து செயல்படட்டும்! செயல்படவும் வேண்டும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்

- கல்வெட்டான்

சலூன்கடை சுந்தரம் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தார். அந்நேரம் அங்கே வந்த வாடிக்கையாளர் மதியழகன், "என்ன நண்பரே தீவிர சிந்தனையில் இருக்கறாப்புல தெரியுதே?" எனக் கேட்க,

"இப்பல்லாம் வியாபாரமே டல்லடிக்குது சார். பேசாமல் இந்தத் தொழிலை விட்டுட்டு சாமியாரா போயிடலாம்னு தோனுது!" என்றார் சுந்தரம்.

"அட, அதான் இப்போ நம்ம முதல்வரே ஷேவிங் பண்ணத் தொடங்கிட்டார்ல, இனி தொழில் பழையபடி பிக்-அப் ஆகிடும்!"

"அதேதான் சார்! என்னவோ பெரிய துக்கம் நடந்துட்ட மாதிரி ஆளாளுக்கு தாடி வளர்த்துக்கிட்டு சீன் போடத் தொடங்கிட்டாங்க சார்! இப்பதான் என் மனசுல பால் வார்த்திங்க!"

"அது சரி, நான் உங்க மனசுல பால் வார்த்துட்டேன், ஆனால் நம்ம டீக்கடை முதல்வர் ஏழைங்க வயித்துல பாலாலயே அடிச்சுட்டாரே!"

"பால் விலையேத்தத்தைத்தான சார் சொல்றீங்க? பாலை வச்சு கொள்ளையடிச்சவன் ஒருத்தன், தெண்டம் கட்டுறது இன்னொருத்தன்ங்கற கதையால்ல சார் இப்போ ஆயிடுச்சு! திருடுனவனை அப்படியே கமுக்கமா வச்சுட்டாங்க!"

"ம்ம்ம்... முன்னயாவது சட்டசபைன்னு ஒன்ன கூட்டினாங்க... இப்ப இருக்குற நிலைமையில இந்த ஆமாச்சாமிகள் என்னைக்கு சட்டசபையைக் கூட்டி மக்கள் பிரச்சினையப் பேசறதாம்!"

"சாமின்னு சொல்லவும்தான் இந்த விஷயம் நினைவுக்கு வருது! இப்பல்லாம் சாமியார்கள்-தான் ஜாலியா ராஜ வாழ்க்கை வாழறாங்க!"

தமிழ் ஓவியா said...

"நீங்க நித்தியைச் சொல்றீங்களா சார்??"

"அதுதான் தெரிஞ்ச கதையாச்சே! இது புதுக்கதை! காஞ்சி சங்கர மடத்துக்கு 3992 கோடி ரூபாய் பணம் நன்கொடையா வந்திருக்குன்னு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடிச்சிருக்காங்க நண்பரே! காஞ்சி மடத்தோட நிர்வாகி சிறீதரனே வாக்குமூலம் கொடுத்திருக்காராம்!"

"அடப்பாவிகளா! முற்றும் துறந்த முனிவர்னா, மானம், வெட்கம், நேர்மை, உண்மையைத் துறக்குறதுதான் போல! கோடிகோடியா கொள்ளையடிச்சுக்கிட்டு எப்படித்தான் கையில ஒரு தண்டத்தோட போஸ் கொடுக்க முடியுதோ நண்பா!"

"இவங்க கறுப்புப்பண கார்ப்பரேட்டுகளின் தண்டல்காரங்க என்பதை சிம்பாலிக்கா காட்டத்தான் இந்த தண்டம்! இப்பவாவது புரிஞ்சதா?!"

"ம்ம்ம்ம்... இனி எந்த சங்கரராமனைப் போட்டுத் தள்ளப் போறாங்களோ! அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!"

"இன்னுமா அந்தக் கடவுளை நம்புறீங்க? அப்படியொருத்தர் இருக்கார்னு நம்பினால் பூரி சங்கராச்சாரி அப்படிப் பேசியிருப்பாரா?"

"அப்படியென்ன பேசினார்?"

"துப்புரவுப் பணியாளர்கள் கோவிலுக்கு உள்ள வந்து சுத்தம் பண்ணக் கூடாதாம்... அவங்க உள்ள நுழைஞ்சால் தீட்டாயிடுமாம்!"

"அடங்கொய்யால! கத்தி படத்துல நடக்குற போராட்டம் மாதிரி இவங்க மட்டும் ஒரு வாரம் வேலை செய்யாமல் விட்டால் ஊரே நாறிப் போயிடும்! அபிஷேகம்ங்கற பெயர்ல கழுவுன சிலையையே மாற்றி மாற்றி கழுவி ஊத்திக்கிட்டிருக்குற இவங்களுக்கே இந்த அதுப்புன்னா, ஊர் முழுக்க சுத்தம் பண்ற நம்ம மக்களுக்கு எம்புட்டு அதுப்பு இருக்கும்! இதுல இவனுங்களுக்கு மட்டும் குடுமியை விட்டுட்டு வழிக்கணுமா? தலையைக் காட்டட்டும் இனிமேல்!" கோபத்தோடு நக்கலடிக்கும்போது நடிகர் சந்தானத்தையே மிஞ்சி விடுவார் நம்ம சலூன்கடை சந்தானம்!

"மோடி வந்துட்ட தைரியம்தான் நண்பரே, இப்படியெல்லாம் பேசச் சொல்லுது!" இது மதியழகன்.

"நீங்க வேற! மோடி வந்ததும் கறுப்புப் பணமெல்லாம் வந்துடும்னு சொன்னாங்க... இப்ப என்னடான்னா பிரசாதம் மாதிரி கவரை நீட்டுறாங்க!"

"அதுவே நீதிமன்றம் குட்டு குட்டுன்னு குட்டுன பிறகுதான்! பின்ன, காங்கிரஸை வெறுப்பேத்துறதுக்காகவே கறுப்புப் பணம் கறுப்புப் பணம்னு சொன்னவங்க மூஞ்சில அது கரியப் பூசும்னு நெனச்சிருப்பாங்களா?!"

"அதுசரி, அவங்களுக்கு தேசிய அளவுல எதாவது அசிங்கம் வந்தால் உடனே கலாச்சாரம், ஆன்மீகம்னு பேச ஆரம்பிச்சுடுவாங்களே, இப்ப அப்படி எதாவது நியூஸ் இருக்கா சார்?"

"இல்லாமலா? முன்ன பெங்களூர் பார்ல நுழைஞ்சு அடிச்ச மாதிரி, கேரளாவிலிருக்குற ஒரு ஹோட்டலில் முத்தம் கொடுத்த காதலர்களுக்கு எதிரா கலாட்டா பண்ணியிருக்காங்க! கேரளா பெரியார் கால்பட்ட பூமின்னு இவனுங்களுக்குத் தெரியாமப் போயிடுச்சு போல! உடனே கேரளாவிலிருக்கும் இளைஞர்களெல்லாம் முத்தப் போராட்டத்துல இறங்கவும் பி.ஜே.பி. வாயடைச்சுப் போயிடுச்சு!"

"அதுசரி, கலாச்சாரம் கலாச்சாரம்னு ஒருபக்கம் பேசிக்கிட்டே சட்டசபையில வச்சு நீலப்படம் பார்க்குற தில்லு பி.ஜே.பி.யத் தவிர வேற யாருகிட்ட இருக்கு?!"

"ஹஹஹ! அதுசரி, ரஜினி ஆதரவு தரணும் தரணும்னு தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்காரங்க காலில் விழாத குறையா கெஞ்சிக்-கிட்டிருந்தாங்களே இப்ப என்னாச்சு சார்?"

"இவங்களுக்கு ஆதரவு இல்லைங்கறதை ஒரு கடிதத்தாலயே புரியவச்சுட்டாரே! இப்போ சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு வேற ஆளைத் தேடத் தொடங்கிட்டாங்க!"

"இவங்களுக்கெல்லாம் பவர் ஸ்டார்தான் சார் லாயக்கு! கோமாளிக்குக் கோமாளி பொருத்தமா இருக்கும்! ஆனால் இவங்ககூட சேர்றதுக்கு பவர்ஸ்டார் ஒத்துக்கணுமே!"

"பி.ஜே.பி. தான் இப்படின்னா காங்கிரஸ்ல ஜி.கே. வாசன் சைக்கிளை எடுத்துட்டுக் கிளம்புன சைக்கிள் கேப்புல கார்த்திக் வந்து ஒட்டிக்கிட்டாரே சார்! இப்ப எனக்கு ரொம்ப யோசனையா இருக்கு சார்!"

"என்ன யோசனை?"

"வழக்கமா தேர்தல் நேரத்துல தூக்கத்துலருந்து முழிக்கிற ஆளை, நேரங்கெட்ட நேரத்துல யாரு முழிக்க வச்சாங்கன்னுதான்!"

"ஹஹஹஹ!"

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள்தான் பார்ப்பனர்களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்

--------------

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் சாமியார்கள், துறவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி ஏற்க முடியும்? பா.ஜ. தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

- அசோக் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர்

--------------

புதிய எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளில் உளவியலைக் கொண்டுவர வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் மன ஓட்டங்களை எழுத்தைத் தவிர வேறு எதிலும் பதிவு செய்துவிட முடியாது. வாழ்வில் வெளிச்சம் படாத பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வருவது எழுத்தாளனின் கடமை.

- கவிப்பேரரசு வைரமுத்து

--------------

ஆந்திரத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 54 விழுக்காடு தெலங்-கானாவுக்குத் தரப்பட வேண்டும். அதைத் தர ஆந்திர முதல்வர் மறுக்கிறார். இது தெலங்கானா மக்களுக்கு சந்திரபாபு நாயுடு இழைக்கும் அநீதியாகும்.

- சந்திரசேகர் ராவ்,
தெலங்கானா முதல் அமைச்சர்

--------------

கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்-துள்ளது. வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்சரிவு குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, வாக்கு சேகரிக்கச் சென்ற அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட உயிர்ப் பலிகளைத் தடுத்திருக்க முடியும்.

- விக்னேஸ்வரன், முதல் அமைச்சர், இலங்கை வடமாகாணம்

தமிழ் ஓவியா said...

காட்டிக் கொடுக்கும் புளூ-டூத்

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது மழை பெய்தால் எடுத்துச் செல்லப்படும் குடை, அங்கிருந்து திரும்பும்போது மழை பெய்யவில்லை என்றால் குடையை எடுத்துவர நிறையப் பேர் மறந்து விடுவ துண்டு. அப்படி மறந்துபோன குடையை அல்லது பிறரால் திருடப்படும் குடை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்தாள் குடையில் செல்பேசியில் பயன்படுவதைப் போல நவீன புளு_டூத் கருவி ஒன்று இணைக்கப்-பட்டிருக்கும். இது ஸ்மார்ட் போனுடன் இணைந்திருக்கும். குடை திருடப்-பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ நுட்பமான வரைபடத்தின் மூலம் குடை இருக்கும் இடத்தினை இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!


பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா அல்லது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுடன் பேச விரும்புகிறதா? இதுபற்றிய தெளிவான முடிவை எடுக்காதவரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை.

- அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்

காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது அய்.நா.தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்-பட்டது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தான் ஒருதரப்புவாதி. எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

- தஸ்னிம் அஸ்லாம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

சொல்றேங்க....!

நீங்க ரெண்டு பேரு சொல்றதைவிட காஷ்மீர் மக்கள் என்ன விரும்புறாங்கங்கறது தான் முக்கியம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் நிசாமி போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சசேனா அக்டோபர் 29 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

அய்.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

காணாமல் போன நபர்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம் பெறும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 3 அன்று நிராகரித்தது.

தந்தை மரணத்திற்குப் பின் விவாகரத்துப் பெற்ற மகளுக்கு தந்தையின் வேலையை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பகவான் பிரசாதம் (லட்டு) தொடர்பான விளம்பரத்தில் மறைத்தது ஏன்?

திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை.

100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 லிட்டர் வாசனைப் பன்னீர் மற்றும் ரோஜாச்சாறு சேர்க்கப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரு நாளில் தயார் செய்து உங்கள் கைக்கு பகவானின் பிரசாதமாக கொடுக்கிறோம் என்கிறது அந்த விளம்பரம்.

அது சரி, இவற்றுடன் கல், நட்போல்ட், பறவைக் கழிவு, இரும்புத்துரு, தலைமுடி, நகத்துண்டு இவையெல்லாம் எத்தனை கிலோ எத்தனை டன் சேர்ப்பீர்கள் என்று கூறவில்லையே! (சில நேரங்களில் வேறு சில உயிரினங்களும் வறுவலாக சேர்க்கப்-படுகிறது என்றும் சொல்கிறார்களே(?).

- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்ணடிமை

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் 20ஆம் நாள் ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய ஆண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியைக் காண இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்த இங்கிலாந்து_ஈரானிய சமூக ஆர்வலர் கோன்சே கவாமி ஒரு குழுவாகச் சென்றார். அந்தக் குழுவினரைக் காவல் துறையினர் அடித்து கைது செய்து விடுவித்தனர்.

கோன்சே கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைப்பந்துப் போட்டியைக் காண முயன்றதற்காக கவாமிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கைப்பந்துக்குத் தடை போட்டது ஈரான். அந்த தொந்தரவெல்லாம் எதற்கு? கண்ணிருந்தால் தானே கண்டதையும் பார்ப்பதற்கு! போடு தடை கண்களுக்கு என்று ஒருபடி மேலே (?!) சென்றிருக்கிறது சவுதி அரேபியா. பெண்களின் கண்களைக் காவியங்-களில் வர்ணித்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்-குறைக்கு, இந்தப் பொண்ணுங்களே இப்படித்-தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா என்கிறார்கள் திரைப்படக் கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கல்லறையே பெண்களின் கவர்ந்திழுக்கும் கண்கள் என்று யோசித்து இதுவரை புர்காவில் கண் மட்டும் தானே தெரிந்தது. அதையும் தடை செய்துவிடலாமே என்று முடிவு செய்திருக்கிறது சவுதி அரேபியா. சபலத்தைத் தூண்டும் கண்களை உடையவர்கள் அவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். நாங்கள் அவர்களின் கண்களை மறைக்கச் சொல்லி வலியுறுத்து-வோம். அப்படிச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் தீயொழுக்கத்தைத் தடுக்கும் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லப் அல் நபெத். அது என்ன சபலத்தைத் தூண்டும் கண் என்றால் எது?

அதற்கென்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கான ஸ்கேலையும் கையில் வைத்திருக்கிறார்கள் இந்த ஒழுக்க வாத்தியார்கள். மூடப்படாத அழகான வடிவம் கொண்ட, ஒப்பனை செய்யப்பட்ட கண்கள், ஒப்பனை செய்யப்படாவிடினும் அழகான கண்கள் என்கிறது அந்த ஸ்கேல். சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லா-வுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருக்கும் இளவரசர் நயிஃப் காலத்திலாவது இத்தகைய நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூடுதலாக ஏமாந்திருக்கிறார்கள்.

அவர், இது இஸ்லா-மின் தூண்களுள் ஒன்று. இந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். எதற்கு பாஸ், பெண்களிடம் தலையை மூடு, காலை மூடு, கையை மூடு, வாயை மூடு, முகத்தை மூடு, கண்ணை மூடு என்று பார்ட் பார்ட்டாக தடை செய்கிறீர்கள்? மொத்தமாக பெண்களையே தடை செய்துவிட்டால் ஒரே வேலையா முடிஞ்சுடுமே! அவங்களையெல்லாம் விரட்டி வெளியில அனுப்பிட்டா ஒரேடியா ஒழுக்கம் நட்டுக்கிட்டு நிற்கும். தீயொழுக்கம் இல்லாமல் போகும். அவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு எதுக்கு அவங்களை நாட்டுல வச்சிக்கணும்? அடுத்தடுத்த தலைமுறை இல்லாமல், நீங்களும் அழிஞ்சிடு-வீங்க... நாடாவது நல்லா இருக்குமே! என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் குறைந்தபட்ச மனிதநேயம் உள்ளவர்கள்!

தமிழ் ஓவியா said...

ராஜம் கிருஷ்ணன்


ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட,

அவள் தன் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன (அவள் விகடன்) என்றவர் அவர். தனது எழுத்துகளில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தி, பெண்ணுரிமைக் காகக் குரல்கொடுத்தவர். கடந்த மாதம் அவர் தனியார் முதியோர் காப்பகம் ஒன்றில் மறைவுற்றார் என்ற செய்தி மூலம் கவனத்தில் கொள்ளவேண்டிய சமூகப் பிரச்சினை ஒன்றை தன் வாழ்க்கை மூலம் எழுதிச் சென்றுள்ளார்.

தமிழ் ஓவியா said...

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

உலகைச் சுற்றி....

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.



இதோ 21 ஆம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் தாய்மார்கள் சிலர் வித்தியாசமான-தொரு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்-கிறார்கள். ஒருவகையில் இதுவும் தோள்சீலைப் போராட்டம் தான். இந்தியாவின் தமிழ்நாட்டுப் பெண்கள் மார்புகளை மறைக்க தோள்சீலையை அணிவதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்றால், லண்டன் தாய்மார்களோ பொது இடங்களில் தங்களின் மார்பு தெரிய குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு தமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காக இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.

லண்டன் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் (உணவுடன் கூடிய மதுபானச்சாலை) தன் குழந்தைக்குப் பால் கொடுத்த ஒரு தாய் தனது மார்புகளை மூடவில்லை என்று அந்தக் கடையின் பணியாள் அந்தப் பெண்ணிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்தத் தாய் புகார் தெரிவித்திருக்கிறார். கடையில் இருந்த ஒரு (அழுக்கு துடைக்கும்) துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து மார்புகளை மூடச்-சொல்லி அந்தப் பணியாள் வலியுறுத்திய செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணியாளரின் வார்த்தைகளும் அவர் அழுக்குத்துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்த செயலும், ஒரு தாய் என்கிற முறையில் தனது பால் கொடுக்கும் உரிமையையும், பெண் என்கிற முறையில் தனது சுயமரியாதையையும் பாதித்ததாக அந்தத் தாயார் உள்ளூர் பத்திரிகையில் புகார் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட உள்ளூர்த் தாய்மார்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அந்த பப்புக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்துவிட்டு, அந்த நாளில் தத்தம் குழந்தைகளுடன் அந்த பப்புக்கு வந்த தாய்மார்கள் எல்லோரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்பு மூடாமல் பாலூட்டியுள்ளனர். அந்தத் தாய்மார்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக குழந்தை இல்லாத பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்தச் செய்தியின் முழுமையான தகவல்-களை கீழ்கண்ட இணைப்புகளில் சென்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்.

இந்தப் போராட்டத்தை ஆதரித்த பெண் ஒருவர் தெரிவித்த காட்டமான கருத்து இது: Barbara Tanner, 76, also from Bexleyheath added: "Most of the men in this pub have seen breasts before, they’re groping them all the time".

தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் இடையில் எத்தனையோ ஆயிரம் மைல் இடைவெளி இருக்கிறது. தமிழ்நாட்டின் தோள்சீலைப் போராட்டத்துக்கும் லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்துக்கும் இடையில் 200 ஆண்டு கால வித்தியாசமும் இருக்கிறது. ஒன்று, இந்தியாவின் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும்கூட. மற்றதின் பின்னணியில் வர்க்கப்பார்வையும் இருக்கக்கூடும். ஒன்று, தமது மார்புகளை மறைக்க உரிமை கோரி நடந்த போராட்டம். மற்றது, மார்புகளைத் திறந்து காட்டியபடி பாலூட்ட நடந்த போராட்டம்.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தும் இரண்டிலும் வெளிப்பட்ட குரல் ஒன்றே. அது பெண்ணியக் குரல். பெண்ணின் உடல் என்பது அடிப்படையில் அவளுடைய உடைமையே தவிர ஆணின் உடைமை அல்ல என்கிற அடிப்படை உரிமைக்கான குரல். பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கே. ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் பேசும் காலகட்டத்தில், தங்கள் உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியலாம் அல்லது தெரியக்கூடாது என்கிற மிகச்சிறிய உரிமைக்காகக்கூட பெண்கள் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கான மற்றும் ஓர் எடுத்துக்காட்டே லண்டனில் நடந்த இந்த வித்தியாசமான 'boob and bottle feed-in'என்கிற 21 நூற்றாண்டின் தோள்சீலைப் போராட்டம்.

- ஜெகதீசன்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி என்பது என்ன?

சபரிமலை செல்லும் அய்யப்ப மார்கள் தலையில் சுமந்து செல்லும் பொருட்களை இருமுடியாகக் கட்டி சுமந்து செல்வார்கள். இரண்டு முடிகளில் முன்முடி புண்ணியம், பின்முடி பாவம் என்பதைக் குறிக்கும், புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் இரு முடிகளாக் கித் தலையில் சுமந்து செல்வதாக அய்தீகம்.

அய்யப்பனைத் தரிசித்துப் பின் இல்லம் திரும்புகையில், பாவம் எனும் பின் முடியை விட்டு விட்டுப் புண்ணியம் எனும் அய்யப்பனின் பிரசாதம் நிரம்பிய ஒரு முடியோடு திரும்பு கிறோம். முன் முடியில் உள்ள தேங்காயில் எடுத்துச் செல்லப்படும் நெய்யே அய்யப்பனுக்கு அபிஷேகம் ஆகிறது. தேங்காய் சிவபெருமான் எனவும் நெய் திருமாலாக வும் கருதப் பெறுகிறது என்று கூறு கிறார்கள்.

இந்த முன்முடி, பின் முடி வியாபாரம் இப்பொழுது மற்ற கோயில்களையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. எல்லாம் பிசினஸ்தான் அதுசரி, முன்முடி புண்ணியம் பின் முடி பாவம் என்று கதை விட்டவர்கள் யார்? எந்தக் காலத்திலோ எந்த ஒரு கிறுக்கனோ உளறியது எல்லாம் பக்தியாகி விட்டது என்பது தானே உண்மை?

பாவத்தை இறக்கி வைத்துத் திரும்பும் அய்யப்பப் பக்தர்கள் சாலை விபத்து களில் பலியாவது ஏன்? இது புண் ணியமா? அல்லது பாவமா?

Read more: http://viduthalai.in/e-paper/91322.html#ixzz3JKrRTYPO

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப்பட்ட கதைகளேயாகும். இவை களை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும். - (விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/91302.html#ixzz3JKryAtu8

தமிழ் ஓவியா said...

செத்தவர் - பிழைத்தார்! அலட்சிய நீக்கத்தால்!

செத்தவர் பிழைப்பரோ என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. ஆனால் இப்போது செத்தவர் பிழைக்கவும் செய்கின்றனர் என்பது அதிசயமான செய்தி அல்லவா? இன்று ஒரு நாளேட்டில் (17.11.2014) வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.

11 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் எழுந்த பாட்டி

இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு, பிணவறையில் வைக்கப்பட்ட 91 வயது பாட்டி, 11 மணி நேரத்திற்கு பின், எழுந்து டீ கேட்டதால், பிண வறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலந்து நாட்டின், ஆஸ்டிரோ லுபெலஸ்கி நகரை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் 91. கடந்த 6ஆம் தேதி காலை, ஜெனினாவின் இல்லத்தில், அவரை பரிசோதித்த டாக்டர் வைஸ்லாவா, அவர் இறந்து விட்டதாக சந்தேகமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பினார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவமனை டாக்டர்கள், ஜெனினா இறந்து விட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஒரு பையில் வைத்து மூடிய ஊழியர்கள், பிண வறையில் வைத்தனர்.

ஏறக்குறைய, 11 மணி நேரத்திற்குப் பின், மற் றொரு உடலை, பிணவ றையில் வைப்பதற்காக வந்த ஊழியர்கள், ஜெனி னாவின் உடல் அசை வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பையை திறந்து பார்த்தனர்.

இவர்களைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்த ஜெனினா, குடிப்பதற்கு சூடாக டீ கேட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்து மருத்துவ மனை டாக்டர்கள், ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

- இப்படியும் நடைபெறுகிறது. சாகாதவரைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கிய காரணமாகும்!

முதல் டாக்டருக்கு சந்தேகம் வந்ததால் தான் அவர் அந்த 91 வயது பாட்டியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்; ஆனால் அந்த மருத்துவ மனை டாக்டர் பொறுப் புணர்ச்சியுடன் தனது கடமையைச் செய்ய வில்லை என்பது புரிகிறது!

பையில் வைத்து மூடப்பட்டு 11 மணி நேர வாசம் பிணங்களுடன் - பிணவறையில் வாழ்ந்துள்ளார் அந்த வார்சா- போலந்து பாட்டி!

கால் அசைவைக் கண்டு அறிந்த பிணவறை ஊழியர் கவனம் பாராட்டத் தகுந்தது! அவர் அலட்சியம் காட்டி யிருந்தால், இந்த வார்சா பாட்டி திரும்பி இந்த பூவுலகத்திற்கு புறப்பட்டிருக்க முடியாதே!

சில டாக்டர்களின் அலட்சியத்தால் இப்படி பலப்பல நேர்ந்து விடுகிறது!

அறுவை சிகிச்சை செய்து கத்தியையோ, கத்திரிக்கோலையோகூட உடலுக்குள்ளேயே வைத்து தைத்து விட்ட மறதி நாயகர்களும் உண்டே! மறதியில்லை என்றால் அலட்சியம் தானே காரணம்! இப்படிப்பட்டவர் களை மன்னிக்கக் கூடாது. தண்டனை வழங்கவே செய்ய வேண்டும்.

மாரடைப்பால் இறந்தவரைக்கூட மீண்டும் உயிர்த்து எழ, மார்பில் குத்திக் குத்தி, அல்லது வாயில் வாயை வைத்து மூச்சுக் கொடுத்து முயற்சிகள் செய்வதும், அதன் மூலம் நின்று போன இதயத் துடிப்பு மீண்டும் இயங்கத் தொடங்குவதும் (10 ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும் கூட) மருத்துவர்களின் தொண்டற மாகக் கருதப்படும் நிலையில், இப் படியும் சில அலட்சியங்கள் அக்கிர மங்கள் நடைபெறவே செய்கின்றன

இதனைத் தடுக்க அத்தகைய டாக்டர்களை சில ஆண்டு காலம் மருத்துவத் தொழில் புரியாமல் தடுத்து வைத்து தண்டனை தந்தே ஆக வேண்டும்.

எற்றென்று இரங்குவ செய்யற்க - செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - குறள் (655)



- ஆசிரியர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91304.html#ixzz3JKsA0j4g

தமிழ் ஓவியா said...

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?

சென்னை, நவ.17:தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப் பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத் தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலை வர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத் தலாம்.

இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை காவல்துறை டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், அய்.ஜி.க்கள், டி.அய்.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக் குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சி யர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங் களின் தலைவர்கள், மாவட்ட நீதி பதிகள், பெருநகர முதன்மை நீதிபதி கள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநக ராட்சி மேயர்கள், மாவட்ட பஞ் சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/91305.html#ixzz3JKsZhFpB

தமிழ் ஓவியா said...

உடல் எடையை குறைக்கும் பழச்சாறு

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட் களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை சாறு: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை சாறில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி சாறு: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ சாறு: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை சாறு: திராட்சைப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறு எடுத்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யாப்பழச் சாறு: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதில் சாறு எடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழச்சாறு: ஆரஞ்சு பழ ஜூஸை குடித் தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச் சாறில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி பழச்சாறு: அன்னாசியை மட்டும் அரைத் தால், அது கெட்டியாக சாறு போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/91346.html#ixzz3JKtrZKPJ

தமிழ் ஓவியா said...

1923-1926

1923-1926 காலகட்டம் - சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சி என்னும் பொற்கொடி ஒளிவீசிய காலகட்டம். பார்ப்பனர்களால் மகாமகா சாணக்கியர் என்று வரு ணிக்கப்பட்ட பனகல் அரசர் (ராமராயநிங்கர்) பிரதமராக இருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் நெஞ்சமெல்லாம் பால் வார்த்த பண்பாளர்.

இவர் பிரதமராக (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) இருந்த காலத்தில்தான் அது வரை ஆங்கிலேயர் வசமே இருந்து வந்த சென்னை மாநில மருத்துவத் துறை, இந்தியர் கைக்குள் வருவ தற்கான சட்டம் இயற்றப் பட்டது.

(ஜஸ்டிஸ் கட்சியினர் வெள்ளைக்காரர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் என்று வாய்ச் சுளுக்கேறிப் பேசிய - பேசுகிற பார்ப்பனக் கொழுந்துகளுக்கு இது அர்ப்பணம்!).

எதிர்ப்பு எந்தப் பக்கத் தில் இருந்து வந்தாலும், அது இந்த நாட்டிற்கு நன் மையை விளைவித்தால் அதை வரவேற்கத் தயா ராய் இருக்கின்றேன். தீமை விளைவிக்குமானால், அதை எதிர்த்து முறியடிப் பேன் என்று சட்டமன்றத் தில் பனகல் முழங்கினார். வெள்ளையர்கள் பனகலை விழுந்து குதறாமல் இருந் ததுதான் பாக்கி.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித் திருக்கவேண்டும் என்று இருந்த நிபந்தனையை நெட்டித் தள்ளி, பார்ப்பனர் அல்லாதாரும், மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் கதவைத் திறந்து விட்ட கண்ணியம்மிக்க கல்விக் காவலரும் அவரே!

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் இந்தப் பெருமகன் காலத் தில்தான் பந்தற்கால் நாட் டப்பட்டது. அதுவரை அக் ரகாரத்தில் படுத்துறங்கிய வைக்கோல் போராகத்தான் கோவில்கள் குவிந்து கிடந் தன.

கடவுளச்சி அபிராமி யின் காதில் ஒரு நாள் மின்னிய கம்மல் மறுநாள் கோவில் குருக்கள் அப்பா சாமி பட்டரின் பாரியாள் காதுகளிலும் கண்ணடிக்கும்.

யார் கேட்க முடியும்? கர்ப்பக் கிரகத்துக்குள்ளி ருந்தாலும் சாமி பக்தர் களுக்கும், சாமிக்கும், தரகு வேலை பார்க்கும் ஆசாமி யும் சாமி!! சாமிக்கும், சாமிக்கும் பரிவர்த்தனை நடந்தால் யார்தான் மூக்கை உள்ளே நுழைக்க முடியும்?

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது முழங்கினாரே பார்க்கலாம்:

நீதிக்கட்சியினர் பிரா மணர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பிவிட் டார்கள், மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.

மதத் தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒரு மனதாக எதிர்க்கவேண்டும் என்று கொட்டித் தீர்த்தார்.

1923-1926 காலகட்டத் தில் இரண்டாவது நீதிக்கட்சி யின் சாதனைகள் விரிவா னவை. - மயிலாடன்

குறிப்பு: நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இப்பொன்னாள் (19.11.1923).

Read more: http://viduthalai.in/e-paper/91413.html#ixzz3JZSHHBbb

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டம் சீனிவாசய்யர்?

அய்.பி.எல். கிரிக்கெட் டில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முகுல்முட்கல் தலை மையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தன் அறிக்கையை வெளியிட் டுள்ளது. இதில், சீனிவாச னுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சீனி வாசன் உள்பட 4 பேரும் ஒரு விளையாட்டுக்காரர் நடத்தை விதிகளை மீறியதை அறி வார்கள்; ஆனாலும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறது அறிக்கை.

தெரிந்ததை மறைத்ததும் குற்றம்தானே!

சீனிவாச அய்யரின் மரு மகன் குருநாதன் மெய்யப் பன் பெட்டிங்கில் ஈடுபட் டது உறுதி செய்யப்பட்டுள் ளது.

Read more: http://viduthalai.in/e-paper/91423.html#ixzz3JZScqdaz

தமிழ் ஓவியா said...

சர்ச்சில் பெண் பிஷப்புகள் இந்து மதம் என்ன செய்யப் போகிறது?


லண்டன், நவ.19- இங்கிலாந்தில் பெண் பிஷப்புகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்து மதம் என்ன செய்யப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

1994 ஆம் ஆண்டுமுதல் பெண் பாதிரியார்கள் இங்கி லாந்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால், தேவாலயத்தின் சீனியர் பதவி வகிக்க முடியாத நிலை இருந்தது. பிஷப் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

2012 இல் ஒரே ஒரு பெண் பிஷப் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றமும், பிஷப் பொது மன்றக் குழுவும் ஆதரவு அளித்துவிட்டனர்.

கிறித்துவ மதத்தில் ஒரு பெரிய திருப்பமாக இது கருதப்படுகிறது. இந்து மதத்தின் ஆகமங்களிலேகூட பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கூறும் நிலையில், பெண் அர்ச்சகர் பற்றி நினைத்துப் பார்க்கத்தான் முடியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/91417.html#ixzz3JZSuTHiG

தமிழ் ஓவியா said...

நன்றாகத் தெரியும்...



மகன்: அய்யப்பப் பக் தர்களுக்கு உதவி செய்ய 24 மணிநேர தொலைப் பேசி சேவை மய் யத்தை இந்து அறநிலை யத் துறை தொடங்கி யுள்ளதே, அப்பா!

அப்பா: கடவுள் காப் பாற்ற மாட்டார். அது வெறும் சிலைதான் என் பது இந்து அறநிலை யத் துறைக்கு மிக நன் றாகவே தெரியும், மகனே!

Read more: http://viduthalai.in/e-paper/91418.html#ixzz3JZT1STTc

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு - பாடம் பெறுமா கேரளா?

முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது; அப்படித் தேக்கினால் அணை உடையும், இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கும்; இலட்சக்கணக்கான மக்கள் மடிவார்கள் என்று பெருங்குரல் கொடுத்தது கேரள அரசு.

999 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பது சட்டப்படி யான நிலை; 1885 இல் போடப்பட்ட ஒப்பந்தம் இது. சட்டமாவது - ஒப்பந்தமாவது - தூக்கி எறியுங்கள் என்ற மனப்பான்மையில் ஆட்டம் போட்டது கேரள அரசு.

கேரள மாநில அரசின் கூச்சல், அடாவடித்தனமாக இருந்ததன் விளைவாக 152 அடி தண்ணீர்த் தேக்க வாய்ப்பு இருந்தும் 136 அடி அளவில் நீர்மட்டம் குறைக்கப்பட்டது.

கேரள அரசு சொல்கிறபடி அணை பலமாக உள்ளதா இல்லையா என்று கண்டறிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மிட்டல் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 136-லிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்தது (27.2.2006).

அந்தத் தீர்ப்பினை முடக்கிட தனிச் சட்டம் ஒன்றையும் கேரள அரசு கொண்டு வந்ததுண்டு (18.3.2006).

2006 இல் தீர்ப்பு வழங்கியும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன என்பதைக் கவனிக்கவேண்டும் - அதுவும் உச்சநீதி மன்றம் காதைத் திருகித் தீர்ப்பை அளித்ததற்குப் பிறகு.

8000 ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த முல்லைப் பெரியாறு 4000 ஏக்கருக்குச் சுருக்கப்பட்டது. இந்தத் தேக்கடிப் பகுதிகள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளிடம் வியாபாரம் நடத்தும் வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்பட்டது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் 5 நட்சத்திர விடுதிகள் எழிலாக உருவாக்கப்பட்டன.

தண்ணீரை 136 அடியிலிருந்து 142 அடி ஆக்கினால், 152 அடியாக உயர அனுமதித்தால், இந்த அய்ந்து நட்சத்திர விடுதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இப்பொழுது 142 அடி தண்ணீர் உயர்ந்துள்ள நிலையிலேயே, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் மூழ்க ஆரம்பித்துவிட்டன என்ற செய்தி வெளிச்சத் துக்கு இப்பொழுது வந்துவிட்டன. இதற்குப் பிறகாவது கேரள அரசு புத்தி கொள்முதல் பெறுமா என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

1979 முதல் 35 ஆண்டுகாலமாக கேரள அரசின் சட்ட விரோதமான - நியாய விரோதமான - மக்கள் விரோதமான நடவடிக்கையால் தென்மாவட்டங்களில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகின. 86 ஆயிரம் இரு போக சாகுபடிகள் ஒரு போகச் சாகுபடியாக பின்னுக்குத் தள்ளப்பட்டன.

இப்பொழுதுகூட கேரள அரசு திருந்தியபாடில்லை. முல்லைப் பெரியாறு பாதையில் புதிய அணை கட்டும் திட்டத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.

கருநாடகமும், இதே வேலையில் இறங்கியுள்ளது. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகளை - உச்சநீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கிப் போடும் நீதிமன்ற அவதூறுகளையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதேயில்லை. சட்டத்தின் ஆட்சி எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இவையெல்லாம் கற்றூண் போன்ற சாட்சியங்களே!

தேசியத்தை உடைக்கப் போவது தேசியத்தை எதிர்க்கும் கட்சிகளல்ல; தேசியம் பேசும் கட்சிகளும் - ஆட்சிகளுமே!

Read more: http://viduthalai.in/page-2/91426.html#ixzz3JZTIXfEL

தமிழ் ஓவியா said...

மதம் மாறிய இணையர் கேரள முதல்வரிடம் பாதுகாப்பு கோரினர்

கோழிக்கோடு, நவ.19- அதிகம் படித்த வர்கள் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த வர்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பொறியாளராக இருப்பவர் கவுதம்(24). இவர் பல் மருத்துவக் கல்வி பயின்றுவரும் அன்ஷிதா(21) இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால், அவர் களிருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


அவர்களின் கல்வி, மற்ற பணிகள் தொடர்வதற்காக பாதுகாப்பான சூழ் நிலைக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் உதவி கோரி உள்ளார்கள். அன்ஷிதாவின் பெற்றோர் தரப்பில் அவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித் ததால், வீட்டைவிட்டு வெளியேறி, காவல் துறையினரின் பாதுகாப்பில் திருமணம் செய்து கொண்டனர். இன்னமும் அவர் கள் வசிக்கும் வீட்டில் தொடர்ச்சியாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், இளம் தம்பதியினருக்கு நாளுக்குநாள் அச் சுறுத்தல் அதிகமாகி உள்ளது.

இரு வேறு மதங்களைச் சேர்ந்த இளம்தம்பதியருக்கு மிரட்டல் தொடரும் நிலை உள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்கிறார்கள். மதத்துக்கு எதிராக திருமணம் செய்துவிட்டதாகக்கூறி அவர் களின் வாழ்வே கேள்விக்குரியதாகி உள்ளது. எல்லா நாள்களிலும் அவர்களின் வீட்டை நோக்கி கும்பலாக திரண்டு மிரட்டலை விடுத்து முழக்கமிடுவதும், வீட்டின் சன்னல்களில் கல்வீச்சுகளுமாக இருக்கிறது. கல்வீச்சில் சன்னல்கள் உடைந்து சேதமாயின.


கவுதம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாகும். நான் எந்த மதத்தை யும் பின்பற்ற வேண்டியதில்லை என் பதைத் தேர்வு செய்துள்ளேன். இப் போதும்கூட அன்ஷிதா இசுலாமிய மதமுறையைப் பின்பற்றுகிறார். அவருக் காக குர்-ஆன் நூலை வாங்கிக் கொடுத் துள்ளேன். இதில் எதிர்ப்பு தெரிவிப்பவர் கள் ஏன் மதத்

தைக் கொண்டுவரு கிறார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை. மதத்தின்பெயரால் எங்களை தூற்றி வருகிறார்கள் என்றார்.
உள்ளூர் காவல் ஆய்வாளர் ஜோஷி ஜோஸ் தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியை ஏற் படுத்த அனைத்துவித முயற்சிகளும் எடுத்து வருகிறோம். எந்த அமைப்போ, அரசியல் தலையீடுகளோ இந்த அச் சுறுத்தலில் இருப்பதாக யாரும் பொறுப் பேற்கவில்லை என்றார்.

கவுதம் கூறுகையில் எப்போது பணிக்குச் செல்லமுடியும் என்று உறுதி யாகச் சொல்ல முடியவில்லை என்றார். அவருடைய பெற்றோர் ஆதரவில் இரு வரும் இருக்கிறார்கள். கவுதம் கூறும் போது, நாங்கள் வீட்டைவிட்டு வெளியே அடி எடுத்துவைக்க முடியவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம் என்றார்.

அவர் தந்தை சுதாகரன் கூறுமபோது, 9 மாதங்களாக தங்கள் உறவை மறைத் துக்கொண்டிருந்த அவர்கள் திருமணம் முடிந்தபின்னரும் எதிர்த்துவருவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தமடையச் செய்கிறது. அன்ஷிதாவின் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு உதவவேண்டும் என்பதே என்னுடைய முதல் குறிக்கோள். இதற்காக எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவைப்படுகிறது என்றார்.

அண்ஷிதா மீண்டும் கசர்கோட்டில் உள்ள கல்லூரிக்குச் செல்ல முடியாது. அவர்மீதான அச்சுறுத்தல் அங்கு பதட்ட மான சூழலையே முழுமையாக ஏற்படுத்தி வந்துள்ளது. அவர் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே நம்பிக்கையுடன் படித்து வருவதுடன் இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத முடியும் என்று நம்புகிறார்.

வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளவரும், மதம் மாறித் திருமணம் செய்துகொண்டவர் நலனுக் காக செயல்பட்டுவருபவருமான அஜீதா கேரளாவில் உள்ள சூழல் குறித்து கூறும் போது, மதசார்பின்மை மற்றும ஜனநாயக மதிப்புகளைக் குறைக்கும்வகையில் குறிவைத்து பாதிப்புகள் உருவாகின்றன என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/91428.html#ixzz3JZTXY3xi

தமிழ் ஓவியா said...

சாமியாரா? சண்டைக்காரரா?: அரியானாவில் வன்முறை

பர்வாலா (ஹிஸார்), நவ.19_ அரியானாவில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வ தற்காக, அவருடைய ஆசிர மத்துக்குச் சென்ற காவல் துறையினருக்கும், ராம் பாலின் ஆதரவாளர் களுக்கும் இடையே செவ் வாய்க்கிழமை ஏற்பட்ட மோதல் கலவரமாக உரு வெடுத்தது.

இதில், பெண்கள், காவல் துறையினர், செய்தியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் நேரில் ஆஜராகாததால், அவருக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை உத்தரவைப் பிறப் பித்தது.

மேலும், அவரை வெள் ளிக்கிழமை நேரில் ஆஜர் படுத்துமாறும் உத்தர விட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்வ தற்காக, ஹிஸார் மாவட் டம், பர்வாலாவில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு துணை ராணுவப் படை யினருடன் செவ்வாய்க் கிழமை சென்றோம்.

ராம்பாலின் ஆதரவா ளர்கள், ஆசிரமத்தின் வாயிற் கதவுகளை மூடி, எங்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தி னார்கள். உள்ளே அனு மதிக்குமாறு பல முறை கூறியும், அவர்கள் வாயிற் கதவுகளைத் திறக்கவில்லை.

இதையடுத்து, உள்ளே நுழைய முயன்ற எங்கள் மீது ஆசிரமத்துக்கு உள்ளே இருந்து ராம்பாலின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்கினர். துப்பாக்கி யால் சுட்டதுடன் பெட் ரோல் குண்டுகளையும் வீசினர்.

ஆசிரமத்துக்கு உள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்.
இதையடுத்து, ஆசிரமத் துக்கு வெளியில் திரண்டி ருந்த கூட்டத்தை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி யடித்தோம்.

நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் பெண்கள், காவல்துறையினர், செய்தி யாளர்கள் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். தொலைக் காட்சி நிறுவனங்களின் சாதனங்கள் சேதப்படுத்தப் பட்டன. காயமடைந்த வர்கள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஆயிரம் பேர் தவிப்பு: இதனிடையே, அந்த ஆசிர மத்துக்குள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இருப்பதாகவும், அவர்களை வெளியே வர விடாமல் ராம்பாலின் ஆதரவாளர்கள் தடுப்பதாக வும் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரி வித்தனர். மேலும், தங்களை பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி ராம்பாலின் ஆதரவாளர்கள் காவல் துறையினர் மீது தாக்கு தலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஆசிர மத்தில் ராம்பால் இல்லை என்றும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாகவும் ஆசிரம செய்தித் தொடர் பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலக் காவல்துறை டிஜிபி எஸ்.என்.வசிஷ்ட், செய்தி யாளர்களிடம் கூறுகையில், "எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராம்பால் இன்னமும் ஆசிரமத்தில் தான் இருக்கிறார்; நிலை மையை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கண்காணித்து வருகிறார்' என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTkgCCA