Search This Blog

19.11.14

பார்ப்பனர்கள்மீது எந்தவித தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது-கி.வீரமணி

பார்ப்பனர்கள்மீது எந்தவித தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது நம்மை பஞ்சமன், சூத்திரன் என்று அழைப்பதால்தான் பிரச்சினை!

சாக்கோட்டை அன்பழகன் இல்ல மணவிழா
பார்ப்பனர்கள்மீது எந்தவித தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது நம்மை பஞ்சமன், சூத்திரன் என்று அழைப்பதால்தான் பிரச்சினை!
வரலாற்று நிகழ்வினை சுட்டிக்காட்டி ப்ரீத்தி-பிரதீப் மணவிழாவில் தமிழர் தலைவர் உரை
சென்னை, நவ. 16- சாக்கோட்டை அன்பழகன் இல்ல மணவிழாவில் பார்ப்பனர்கள்மீது எந்தவித தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது, நம்மை பஞ்சமன், சூத்திரன் என்று அழைப்பதால்தான் பிரச்சினை! என வரலாற்று நிகழ்வினை சுட்டிக்காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
14.9.2014 அன்று சாக்கோட்டை அன்பழகன் அவர்களின் இல்ல மணவிழாவில் (ப்ரீத்தி - பிரதீப்) ஆகியோருடைய மணவிழாவில்) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மன நிறைவோடும் நடைபெறக் கூடிய அன்புச் செல்வர்கள் ப்ரீத்தி - பிரதீப் ஆகியோரு டைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியுள்ள மானமிகு சுயமரியாதைக்காரன் என்று எப்பொழுதுமே தன்னை நிரந்தரமாக அழைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், மூத்த தலைவர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்றால், அவர்தான் நம்முடைய அருமை தலைவர்  டாக்டர் கலைஞர் அவர்கள் ஆவார்கள்.

அத்தகைய மானமிகு சுயமரியாதைக்காரரான தலைவ ருக்குப் பெரியார் வழியில் என்றைக்கு சுயமரியாதைக் காரராகத் தன்னைப் பதித்துக் கொண்டார்களோ, அன்று முதல் இன்றுவரை கொள்கை வீரராக, பதவிகள் வரும், போகும், எனவே, முன்னாள் என்று நாம் அழைக்கவேண் டிய அவசியமே இல்லை. அமைச்சர் பதவிக்கு முன்னாள் என்று சொல்லலாம், அல்லது வேறு பதவிகளுக்கு முன்னாள் என்று சொல்லலாம், சுயமரியாதைக்காரர் என்று சொல்லிவிட்டால், எந்நாளும் அவர் சுயமரியாதைக்காரர் என்பதுதான் அவருடைய சிறப்பு; ஆகவே, மானமிகு சுயமரியாதைக்காரரான தலைவரின், மாறாத சுயமரியாதைக்காரரான அன்பிற்குரிய அருமைத் திராவிட இயக்கத் தளபதிகளிலே ஒருவரான, இந்தப் பகுதியில் இயக்கத்தை வளர்த்து, கட்டிக் காத்து, கட்டுப்பாடுகள் குலைகின்ற நேரத்தில் எல்லாம், அந்தக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்தவேண்டும் என்பதில், மிகவும் உறுதியாக இருக்கக்கூடிய அன்பிற்குரிய அருமைச் சகோதரர் மானமிகு கோ.சி.மணி அவர்களே,
நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய மணமகளுடைய தந்தையார் அருமைத் தோழர் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சீரிய சுயமரியாதைப் பாரம்பரி யத்தை என்றைக்கும் நழுவவிடாமல், வழுவாமல் இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் மானமிகு சாக்கோட்டை அன்பழகன் அவர்களே, அவருடைய குடும்பத்தவர்களே, வந்திருக்கக்கூடிய தாய்மார்களே, மேடையில் வீற்றிருக்கக் கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கக்கூடிய அருட்தந்தையர்களே, நண்பர்களே, உரையாற்றிய அம்மையார் அவர்களே மற்றும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.


அய்யா திரு.கணபதி அவர்களுடைய பாரம்பரியமான குடும்பம்!
இந்த மணவிழாவின் நாயகர்களான ப்ரீத்தி - பிரதீப் ஆகிய இருவருடைய வாழ்க்கை இணையேற்பு விழா என்பது, மிகப்பெரிய அளவிற்கு, ஒரு சமுதாயப் புரட்சியினுடைய நெற்றிக்கண்களாக அவர்கள் இந்த வாழ்க்கைத் துணை நலத்தை ஏற்றிருக்கிறார்கள். அருமை அய்யா திரு.கணபதி அவர்களுடைய பாரம்பரியமான குடும்பம், சேகர் - புவனா ஆகியோருடைய அன்பு மகள் தான் ப்ரீத்தி அவர்கள்.

அதுபோலவே, தஞ்சையில் இருக்கக்கூடிய அருமை நண்பர்கள், சிறப்பாக சொல்லவேண்டுமானால், சிறீதரன் - கல்யாண சுந்தரவள்ளி ஆகியோருடைய அன்பு மகன்தான் மணமகனாக இருக்கக்கூடிய பிரதீப் ஆவார்கள்.
இவர்கள் இருவருமே சிறப்பாக வளர்க்கப்பட்டு, தங்களுடைய ஆற்றல், அறிவு, திறன் ஆகியவற்றை வைத்து, இன்றைக்கு இருவரும் தலைசிறந்த மேற்பட்டப்படிப்பு பட்டதாரிகளாக ஆகி, சொந்தக்காலில் நிற்கக்கூடிய அளவிற்கு, துணிச்சலோடு இன்றைக்கு வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தியிருக்கிறார்கள்.

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, பாரம்பரியமான சுயமரியாதைக் குடும்பம். அதிலும், சாக் கோட்டை அன்பு அவர்கள், அவர்களுடைய தந்தையார், வழியிலே இருந்து அவர் என்றைக்கும் நழுவவில்லை என்பதை உறுதியாகச் சொன்னார்கள். தந்தை பெரியார் காலமாக இருந்தாலும், அதற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை தாங்கிய காலமாக இருந்தாலும், இப்பொழுது எங்களைப் போன்றவர்கள் இந்தப் பணியை செய்யக்கூடிய இந்தக் காலகட்டமானாலும் இந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய எல்லா நிகழ்வுகளும், திராவிட இயக்க நிகழ்வுகளாகத்தான் எல்லா நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.


ஆனால், அதேநேரத்தில், அனைத்துக் கட்சி நண்பர் களும், ஒரு குடும்பப் பாசத்தோடு, ஒரு உள்ளன்போடு, மரியாதையோடு இங்கே கலந்துகொண்டு பேசக்கூடியவர் களாக, வாழ்த்தக் கூடியவர்களாக வருவது இந்தக் குடும்பத்தின் சிறப்பாகும்.

இந்தக் குடும்பத்தினைப் பொறுத்தவரையில், இங்கே நண்பர்கள் உரையாற்றும்பொழுது குறிப்பிட்டார்கள்.  சாக்கோட்டை அன்பழகன் அவர்களின் தந்தையார் சாக் கோட்டை கணபதி ஆனாலும், அதேநேரத்தில், குடந்தையில் திராவிடர் கழகத்தை வலியுறுத்தி, அதுவும் திராவிடர் கழகம் இனிமேல் இருக்குமா என்கிற  கேள்வி எழும்பிய காலகட்டத்தில்கூட, தந்தை பெரியார் அவர்களு டைய அந்த வழியைவிட்டு, அந்தத் தலைமையை விட்டு நாங்கள் மாறமாட்டோம்; உறுதியாக அந்தக் கொடியைத் தூக்கிப் பிடிப்போம் என்பதைக் காட்டியவர்கள், இதே குடும்பத்தில், இவர்களுக்கெல்லாம் அய்யா கணபதி அவர்களுக்கு மிக நெருக்கமான உறவுக்காரரான அய்யா ஆர்.பி.எஸ்.சுந்தரம் அவர்கள், உள்ளூர்க்காரர்களுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர்கள், ஸ்டாலின் அவர்களுடைய தந்தையார் ஆவார்.
அதேபோலத்தான், இன்றைக்கு பட்டுக்கோட்டை மாவட்டத்தின் திராவிட கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களுடைய தந்தை யார், ஆர்.பி.சாரங்கன், சுந்தரம் அவர்களுடைய சகோதரர். கணபதி அவர்களுடைய மைத்துனர். அப்படிப்பட்ட உறவுக்காரர்களாக இருக்கக்கூடிய, பாரம்பரியமாக அத்துணை பேரும் பெரியார் பெருந்தொண்டர்கள்.

அத்தனைப் போராட்டங்களிலும் சிறைச்சாலைக்குச் சென்றவர்கள்
பெரியார் பெருந்தொண்டர்கள் ஓரளவிற்குத் தொழில் ரீதியாகவும் அல்லது நிலபுல வசதி வாய்ப்புகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இருக்கக்கூடியவர்கள் என்றா லும், பெரியார் அவர்கள் அறிவித்த அத்தனைப் போராட் டங்களிலும் சிறைச்சாலைக்குச் சென்று வந்தவர்கள் அவர்கள்.
சிறைச்சாலைக்குச் சென்று வந்தவர்கள் என்று சொன்னால், தண்டனையை ஏற்றவர்கள். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில், ஒரு இயக்கம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஆணையிட்டு விட்டார் என்றால், அதிலிருந்து நாங்கள் மாறமாட்டோம் என்று சொல்லுவது, பாரம்பரிய மாக வந்த குடும்பம் இந்தக் குடும்பமாகும்.

இங்கேகூட சொன்னார்கள், அய்யா கணபதி அவர் களை, பல ஆண்டுகளுக்கு முன்பு சந்திக்கும்பொழுது, அவர் சற்று உடல்நலக் குறைவாக இருந்து, அவர் வீட்டிலேயே இருந்தார். அப்படி உடல்நலக் குறைவாக இருந்தாலும்,  நல்ல துடிப்போடு உழைக்கக்கூடியவர். அந்த உடல்நலக் குறைவு கூட ஏற்பட்டதற்குக் காரணம், அவர் தந்தை பெரியார் அவர்களுடைய ஆணைக்கேற்ப, ஜாதியைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்டம் என்ற அந்தக் கையளவு கடிதாசியைக் கொளுத்தியதன் விளைவாக, ஆறு மாத சிறைத் தண்டனையைப் பெற்றார்கள் 1957 ஆம் ஆண்டு.
பெரியார் அவர்களுடைய ஆணைக்கேற்ப, சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தோம்!

அப்படி சிறைத் தண்டனையைப் பெற்று, திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், அங்கே வசதி குறைவாகும். அதனால், பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆனாலும், எங்கள் தோழர்கள் ஒருவர்கூட சிறு மன்னிப்பு எழுதிக் கொடுத்திருந்தால், அவர்களை வெளியே விட்டிருப்பார்கள். ஆனால், நம்முடைய தோழர் கள் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை. அப்படியிருந்த நேரத்தில், நானும், அன்னை மணியம்மையார் அவர்களும், தந்தை பெரியார் அவர்களுடைய ஆணைக்கேற்ப, எல்லா சிறைச்சாலைகளுக்கும் சென்று, தண்டனை அடைந்தவ ர்களையெல்லாம் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நலம் விசாரித்து வாருங்கள் என்று சொன்னார்கள். அதன்படி நாங்களும் சென்றோம்.

அய்யா அவர்களும் கைது செய்யப்பட்டு, சென்னை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனையில் ஆறு மாத தண்டனையை அனுபவித்த காலகட்டம் அது.

அப்படிப் பார்த்த நேரத்தில், எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. இந்த இயக்கத்தைப்பற்றி பலர் நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும்.  இளைஞர்கள் குறிப்பாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைக்குச் சோழமண்டலத் தலைவர் அவர்களோ, அல்லது அவர்களைப் போன்றவர்களோ, வெறும் பட்டத் திற்காக, பதவிக்காக இருக்கக்கூடிய இயக்கமாக திராவிடர் இயக்கம் இருந்ததில்லை. அதற்கு அடையாளமாகத்தான் அய்யா கணபதி அவர்களை நாங்கள் சென்று பார்த்தோம். அய்யா கணபதி அவர்களுடைய கைகள் வீங்கியிருந்தன!
அப்படி பார்த்த நேரத்தில், அவர் தண்டனைக் கைதிக்குரிய உடையோடு அவர் சிறைச்சாலையில் இருந்த காட்சி எனக்கு இன்னமும் மறக்காமல் நினைவில் இருக் கிறது. அவர்கள் எங்களை அன்போடு, உற்சாகத்தோடு வரவேற்றார்கள். அவர்கள் சோர்வோடு இருப்பார் என்று  நானும், அன்னை மணியம்மையார் அவர்களும் சென்ற நேரத்தில், அவர்களின் உருவம் வெள்ளைச் சட்டை, அரைக்கால் சட்டை, தலையில் வெள்ளைக் குல்லா போட்டுக்கொண்டு, தண்டனைக் கைதியாக இருக்கிறார் கள். அவர் எங்களைப் பார்த்து கும்பிட்டுச் சொன்ன நேரத் தில், அவருடைய கை வீங்கி இருந்தது.
உடனே, அம்மா அவர்கள் கேட்டார், என்ன, உங்களுக்கு உடல்நலக் குறைவா? என்று.

அவர் உடனே சிரித்துக் கொண்டார். அப்போது மாரிமுத்து அவர்களும் உடன் இருந்தார்கள்; பிறகு புதுக்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டார். திருச்சி சிறையில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கைதிகள் மாற்றப்பட்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நண்பர்களே, அவர்களுக்கு என்ன வேலை கொடுத்தார்கள் என்று சொன்னால், மிகப்பெரிய அளவிற்கு, நெல்லைக் குத்து கின்ற இரும்பு உலக்கையைக் கொடுத்து, சிறைச்சாலையில் கடுங்காவல் தண்டனை என்கிறபோது, அந்தப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான், அவருடைய கைகளெல்லாம் வீங்கிப் போயிருந்தது.

அதன் காரணமாகத்தான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் உறுதியோடு இருந்தார்கள்.

பெரியார் பெருந்தொண்டர் பட்டயத்தைக் கொடுப்பதற் காக விழா ஏற்பாடு செய்தபோது, அவரால் வர இயல வில்லை என்று சொன்ன நேரத்தில், அம்மா அவர்கள் சொன்னார்கள், நீங்கள் நேரில் சென்று, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களை வீட்டிலேயே சென்று பார்த்து கொடுத்துவிட்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.

அதற்காக நாங்கள் சென்றபொழுது, கருப்புச் சட்டை அணிந்துகொண்டு படுத்திருப்பார் என்று நாங்கள் நினைத்த நேரத்தில், அவர் வாசலுக்கே வந்து எங்களை வரவேற்று, அழைத்துச் சென்று அந்தப் பட்டயத்தை அவர்கள் பெற்றார்கள்.

எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால், இந்த இயக் கம் என்றால், எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும், எவ்வளவு மூத்தவர்களாக இருந்தாலும், கட்டுப்பாடு காக்கின்ற ஒரு இயக்கம் இந்த இயக்கமாகும்.
ஆகவேதான், தலைமையை சந்திக்கின்ற நேரத்தில், அவர் கருப்புச் சட்டையோடு சந்திக்கவேண்டும். இது கட்டுப்பாட்டினுடைய அடையாளமாகும். ஆகவேதான், அந்த உணர்வு என்பது இந்தக் குடும்பத்தில் பாரம்பரியமாக நடக்கின்ற எல்லா திருமணங்களும் இப்படிப்பட்ட திருமணங்கள்தான்.

சுயமரியாதைத் திருமணத்திற்கு இருக்கின்ற சிறப்பு என்ன? இந்த மேடையைப் பார்க்கிறீர்கள்; எல்லோரும் இங்கே இருக்கிறார்கள். இதில் ஜாதியில்லை, மதம் இல்லை, கட்சியில்லை. இதுதான் மிக முக்கியம்.

இது சுயமரியாதைத் திருமணம் மட்டும்தான் உண்டு. வைதீகத் திருமணத்தில் இல்லாத ஒரு பெருமை, வைதீகத் திருமணத்தைப் புரோகிதர் நடத்தவேண்டும். தமிழர்கள்கூட நடத்த முடியாது. நமக்குத் தனிப்பட்ட முறையில் பார்ப்பனர் கள்மீது எந்தவிதமான வெறுப்பும் கிடையாது; விரோதமும், குரோதமும் கிடையாது. எல்லோருக்கும் நண்பர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அதிலும் அன்பழகன் அவர்க ளுக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. அதுதான் மிக முக்கியமானது.

தேர்தல் நேரத்தில்கூட, அவர் என்னுடைய கூட்டத் தைக்கூட, இந்த நகரத்தைவிட்டு வெளியே போடச் சொன்னார்களே தவிர, அந்த நண்பர்கள் எங்கே கோபித் துக் கொள்வார்கள் என்பதற்காக, அந்தக் கூட்டத்தை புறநகரில்தான் நடத்தினார்களே தவிர, நகரத்தில்கூட அல்ல.
மற்றவர்கள் சங்கடப்படக்கூடாது  என்ற அளவிற்கு, அவருக்குப் பார்ப்பன நண்பர்கள் உண்டு. நான் ஏதோ குத்திக் காட்டுவதைப்போல் பேசுகிறேன் என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அவருடைய நட்பு வட்டம் என்பது பரந்தது. எனக்கும் நண்பர்கள் உண்டு.

அந்த அளவிற்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில், வைதீகத் திருமணத்தை, புரோகிதர் மட்டும்தான் நடத்த முடியும். சுயமரியாதைத் திருமண முறையில் அப்படியல்ல; ஒரு பார்ப்பன நண்பர் தலைமை தாங்கி நடத்துகிறேன் என்று சொன்னால், நாங்கள் மகிழ்ச்சியாக அந்த வாய்ப் பைக் கொடுப்போமே தவிர, அதை நாங்கள் யாரும் மறுக்க மாட்டோம். ஏனென்றால், மனிதர்களாக மற்றவர்களை மதிக்கின்ற நேரத்தில், நாங்கள் அதனை வரவேற்போம்.
நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன். நான் தொடவேண்டி யவன், நீ தொடக்கூடாதவன். நான் பிராமணன், நீ கீழ்ச்சாதி சூத்திரன் என்று சொல்லும்பொழுதுதான் பிரச்சினையே தவிர, வேறொன்றும் கிடையாது.
எனவேதான், சுயமரியாதைத் திருமணத்தினுடைய தத்துவம் என்ன?
இங்கே பாதிரிமார்கள் வந்திருக்கிறார்கள்; அவர்களும் நடத்தலாம் இந்தத் திருமணத்தை. அதேபோல், இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த நண்பர்கள் ஏராளமாக அவர்களுக்கு உண்டு. அவர்களும் இந்தத் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தலாம், வாழ்த்தலாம். அதற்கொன்றும் தடை கிடையாது.

அண்ணா அவர்களாலேயே உருவாக்கப்பட்ட சட்டம், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துப்படி, சுயமரியா தைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று செய்தார்களே, அந்த சட்டப்படி செல்லக்கூடிய சுயமரியாதைத் திருமணத் தில் என்ன சிறப்பு என்று சொன்னால், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டவேண்டிய அவசியம் இல்லை. எதிர் காலத்தில் இவையெல்லாம் மாறும், மாறவேண்டும். அந்த மாற்றங்கள் வேண்டும்.
இந்தக் கொள்கையைப் பின்பற்றக்கூடியவர்கள் யாரும் தாழ்ந்துவிடவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது, எல்லோருக்கும் அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும். ஆகவேதான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது.
பெரியார் அவர்கள் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்திருந்தால், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டவேண்டுமா? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டிருப்பார்.

ஆகவே, இப்பொழுதெல்லாம் திருமண முறைகள் மாறியிருக்கின்றன.  இணையத்திலேயே திருமணம் நடை பெறக்கூடிய காலம் இந்தக் காலகட்டம்.
மணமகன் அமெரிக்காவில் இருக்கிறார்; மணமகள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர்களுக்கு இணையத் தின்மூலம் திருமணம் நடைபெறுகிறது. ஆறு மாதங்கள் கழித்து சந்திக்கக்கூடிய நிலை இருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார்...
தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகத்தில் சொல்லியிருக்கிறார்,
இனிமேல் அறிவியல் எந்த அளவிற்கு வளரும் என்று சொன்னால்,
தொலைக்காட்சியில்கூட, தொலைப்பேசியில்கூட, ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளலாம் என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு அதனை சொல்லி யிருக்கிறார்.

இன்றைக்கு வந்தாயிற்றே! ஸ்கைப் என்று சொல்லக்கூடிய அறிவியல் வளர்ச்சியில்;3ஜி என்ற முறையில், அந்த முனையில் யார் பேசுகிறார் களோ, அவர்களுடைய உருவத்தை, இந்த முனையில் நாம் பார்க்கலாம்; அந்த முனையில் நம்முடைய உருவத்தை அவர் பார்க்கலாம்.

மயிலாப்பூரில் புரோகிதர் மந்திரம் சொல்ல, இங்கிலாந்தில் நடைபெற்ற திருமணம்!
இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ் நாளேடுகளில் ஒரு செய்தி வந்தது; அது என்ன செய்தி என்றால் நண்பர்களே உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
இங்கிலாந்தில் திருமணம் செய்துகொள்கின்ற இணை யர்களுக்கு, அவர்களுக்கு வைதிகத்தின்மேல் நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் என்ன செய்கிறார் கள் என்றால், சென்னை மயிலாப்பூரில் இருக்கின்ற புரோகிதர் அய்யர், ஸ்கைப்மூலம் மந்திரம் சொல்லச் சொல்ல, இங்கிலாந்தில் உள்ளவர்கள் திரை அமைத்து, அந்த மந்திரங்களைத் திரும்பச் சொல்லி அந்தத் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள்.
                   -----------------------------(தொடரும்)   ---------------"விடுதலை” 16-11-2014
Read more: http://viduthalai.in/page-4/91242.html#ixzz3JHmaYdSQ
 ****************************************************************************************
சாக்கோட்டை மணவிழாவில் தமிழர் தலைவர் உரை

உலகத் தமிழர்களின் உள்ளத்தின் அன்பைப் பெற்றவர்
எப்போதும் சுயமரியாதை உணர்வோடு இருப்பவர் அன்பழகன்
சாக்கோட்டை மணவிழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, நவ. 17- உலகத் தமிழர்களின் உள்ளத்தின் அன்பைப் பெற்றவர் எப்போதும் சுயமரியாதை உணர் வோடு இருப்பவர் அன்பழகன் என்று கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

14.9.2014 அன்று சாக்கோட்டை அன்பழகன் அவர்களின் இல்ல மணவிழாவில் (ப்ரீத்தி - பிரதீப் ஆகியோருடைய மணவிழாவில்) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பழைமையைக் காப்பாற்றுவதற்காகவும் டெக்னாலஜி பயன்படுகிறது
இன்றைக்கு அந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந் திருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி, டெக்னாலஜி மிகவும் பயன்படும் என்று. அந்த டெக்னாலஜி புதுமைக்கு மட்டுமல்ல, பழைமையைக் காப்பாற்றுவதற் காகவும் இப்பொழுது பயன்படுகிறது.

ஆகவே, அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கின்ற நேரத்தில், இந்த சுயமரியாதைத் திருமணத்திற்கு இருக் கின்ற ஒரு சிறப்பு என்னவென்றால்,
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், இரண்டு மாலை, இரண்டு சாட்சிகள் மட்டும் போதும். இதற்குமேல் எதுவும் தேவையில்லை என்று சொன்னார். ஆகவே இந்த சுயமரியாதைத் திருமணம் மிகவும் சிறப்பானதாகும்.

அன்பு அவர்களிடம் சுயமரியாதை உணர்வு என்பது கொஞ்சம்கூட மங்கிப்போகவில்லை

அன்பு அவர்களைப் பொறுத்தவரையில், அய்யா கணபதி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்களுக்குப் பின்னாலும் சரி, அந்தக் கொள்கையிலிருந்து நழுவ வில்லை; அரசியல் ரீதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தில் தன்னை இணைத்துக் கொண்டு, கலைஞர் அவர் களுக்கு உண்மையான தொண்டராக இருந்து, தளபதி யினால் உருவாக்கப்பட்டு, சோழமண்டலத் தளபதியினாலே உருவாக்கப்பட்டு, இன்றைக்கு அவருக்கு ஒரு நல்ல, நம்பிக்கைக்குரியவராக, செயல் வீரராக, இந்தப் பகுதியில் இருக்கின்ற எண்ணற்றவர்களைப்போல அவரும் இருக் கிறார்.


அவரிடத்தில் இருக்கின்ற அதேநேரத்தில், சுயமரி யாதை உணர்வு என்பது கொஞ்சம்கூட மங்கிப்போக வில்லை. அதுமட்டுமல்ல, அன்பு அவர்களுக்கு இன் னொரு சிறப்பு என்னவென்றால், எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அதன் காரணமாகத்தான், உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எல்லாம், தோழர் அன்பழகன் அவர்களை நன்றாக அறிவார்கள்.


எங்கு சென்றாலும் அவருக்கு அறிமுகம் உண்டு. அவருக்குப் பல நாட்டுத் தமிழ்ச் சங்க அமைப்புகள், தமிழர்கள் பங்கேற்கக்கூடிய அமைப்புகள், இதோ அமீரகத்தினுடைய வாழ்த்தினை நீங்கள் பார்த்தீர்கள்.


அதுபோலவே, நாங்கள் வெளிநாடுகளில் நடை பெறுகின்ற நிகழ்வுகளுக்கு செல்கின்றபொழுதெல்லாம், அங்கே அன்பு அவர்களும் வந்திருப்பார்கள்.
ஆகவே, உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அன்பைப் பெற்றவர் அன்பு அவர்கள். நல்ல கொள்கை உள்ளத்தோடு, சிறப்போடு இருக்கக்கூடியவர்.
இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், மண்டபம் கொள்ளாத அளவிற்கு, ஒரு பெரிய மாநாடாக இந்த மணவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


சுயமரியாதைத் திருமண முறைக்கு ஒரு காலத்தில் எவ்வளவு எதிர்ப்புகள்!
ஒரு காலத்தில், பெரியார் அவர்கள் தொடங்கி நடத்தி வைத்த நேரத்தில், இந்தத் திருமண முறையில் திரு மணத்தை நடத்திய நேரத்தில், அவருக்கு எவ்வளவு எதிர்ப் புகள்; எவ்வளவு சங்கடங்கள், அதையெல்லாம் தாண்டி, இன்றைக்கு எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.


அதுவும், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக வாழ்த்தினார்கள். அதுபோலவே, நமக்கு அப்பாற் பட்டவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்,  அவர்களு டைய நம்பிக்கையோடு வாழ்த்தினார்கள். நாங்கள் கடவுளை ஏற்கிறோமா  இல்லையா  என்பது முக்கியமல்ல. ஆனால், அவர்களுடைய நட்பை மதிக்கின்றோம்; அது தான் மிக முக்கியம். இவர்களுடைய மனிதநேயத்தை மதிக் கின்றோம். சுயமரியாதைக்காரர்களுடைய தத்துவமே அதுதான்.


திராவிடத்தால் எழுந்தவர்களாகத்தான் இந்த நாட்டில் வரலாறு இருக்கிறது!


அதுபோல, இது மிகப்பெரிய சமுதாய மாறுதல்; சமு தாயப் புரட்சி. இந்தக் கொள்கை  வெற்றி பெற்றிருக்கிறது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் புரியாதவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல வேண்டுமானால், திராவிடத்தால் யாரும் வீழ்ந்தவர்களாக வரலாறு கிடையாது. திராவிடத்தால் எழுந்தவர்களாகத்தான் இந்த நாட்டில் வரலாறு இருக்கிறது. அதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்பதற்கு அடையாளமாகத்தான், அதனுடைய வெற்றியினுடைய சின்னம்தான், இங்கே மணமக்களாக இருக்கக்கூடிய இந்த இரண்டு பேர்களின் இணையேற்பு விழாவாகும்.


மணமகள் ப்ரீத்தி அவர்கள், எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். இருப்பதிலேயே மேலாண்மை பட்டம் எம்.பி.ஏ. மாஸ்டர் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் என்பது.
அதுபோலவே, மணமகன் பிரதீப் அவர்கள். அவர்களு டைய குடும்பம் மிகப்பெரிய அளவில் தலையெடுத்து, அவர் பொறியாளராக பி.இ. படித்து, அதற்கு மேல் வெளி நாட்டில், எம்.எஸ். என்று சொல்லக்கூடிய பொறியாளர் மேல் பட்டப் படிப்பு படித்து இங்கே வந்திருக்கிறார்.

அருமைத் தாய்மார்களே, இங்கே சரி பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்காகத்தான் இதனைச் சொல் கிறேன்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு என்ன நிலை?

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பெரியார் பிறப்பதற்கு முன்பு, திராவிடர் இயக்கம் வருவதற்கு முன்பு, பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி இந்த நாட்டில் மலருவதற்கு முன்பு, என்ன சூழ்நிலை இருந்தது?


இவ்வளவு பேர் இந்த நாட்டில் படித்தவர்கள் உண்டா? இன்றைக்கு மணமகள் எம்.பி.ஏ. படித்திருக்கிறார். பெரிய அளவிற்கு உயர்ந்திருக்கிறார். நிர்வாகத் திறமை பெண் களுக்கு உண்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் படித்திருக்கிறார். அதனை மணமகள் ப்ரீத்தி அவர்கள் பெற்றிருக்கிறார். அதுவே, ஒரு நூறாண்டுக்கு முன்பு என்ன நிலை? ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், மணமக் களுக்கு அறிவுரை தேவையில்லை. பல மணமக்கள் அறிவுரையைக் கேட்பதற்கும் தயாராக இல்லை.


இன்றைக்கு இளைஞர்கள் நம்மைவிட தெளிவான வர்கள். ஏனென்றால், அவர்களுடைய கைகளிலேயே இணையத்தினை வைத்திருக்கிறார்கள். என்ன தகவல்கள் வேண்டுமானாலும், அதன்மூலம் அவர்கள் பெற்றுக்கொள் வார்கள். ஆகவே, அறிவுரையை நாங்களும் சொல்லி,  நேரத்தை வீணாக்கமாட்டோம். அதேநேரத்தில், வந்திருக் கின்ற உங்களுக்குத் தெளிவுரை தேவை. அதுதான் மிக முக்கியம்.


மணமக்களை இங்கே மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள்!

இந்தத் திருமண முறையினால் என்ன ஆகுமோ? மந்திரம் சொல்லவில்லையே, சம்பிரதாயம் நடைபெறவில் லையே, சடங்கு இல்லையே என்று. இவ்வளவு பேர் அருமையாக வாழ்த்தியதைவிட, வேறு என்ன செல்வம் உங்களுக்கு வேண்டும். இங்கே உரையாற்றிய அனைவரும் தமிழ் மொழியில் பேசினார்கள். இது நமக்குப் புரியாத மொழியும் அல்ல. மந்திரம் என்கிற பெயரால், புரியாத மொழியில் பேசுவதைவிட, மணமக்களை அவர்கள் மனப்பூர்வமாக வாழ்த்தினார்களே, அதுதானே மிகச் சிறப்பு.
அதுமட்டுமல்ல, சரசுவதி என்று பெயர் இருக்கும்; கல்விக்குக் கடவுள் சரசுவதி என்று, சரசுவதி பூஜையைக் கொண்டாடுகின்ற நாட்டில், பாட்டி சரசுவதிக்கு கையொப் பம் போடத் தெரியாது. எப்பொழுது, 80 ஆண்டுகளுக்கு முன்பு; திராவிடர் இயக்கம் பிறப்பதற்கு முன்பு.


ஆனால், இன்றைக்குப் பெயர்த்தி சரசுவதி, வழக்குரை ஞர் சரசுவதி, டாக்டர் சரசுவதி, பொறியாளர் சரசுவதி, நீதிபதி சரசுவதி என்றால், நண்பர்களே, இவையெல்லாம் சரசுவதி பூஜையினால் வந்ததல்ல; பெரியாருடைய உழைப் பினால் வந்தது. திராவிட இயக்கத்தினுடைய அருட் கொடையினால் வந்தது. பச்சைத் தமிழர்  காமராசர் செய்த திருப்பத்தினால் வந்தது. குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததினால் ஏற்பட்ட மாறுதல், இவ்வளவு பெரிய மாறுதலாகும். தமிழ்நாட்டில், பஞ்சாயத்து யூனியன்களின் எண்ணிக்கையைவிட, 575 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவையில்லாமல் பல்கலைக் கழகங்கள் தனியே உள்ளன. இன்னும் ஒரு லட்சம் பொறியியல் படிப்பிற்கான இடங்கள் காலியாக உள்ளன.

இச்சுப்பட்டன வாடுக்கு எஞ்ஜினியரிங் படிப்பு!

ஒரு காலத்தில் இருந்த நிலைபற்றி பெரியார் அவர்கள் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது சொல்வார்கள், தாய்மார் கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறேன், இந்த இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்களே, அவர்களுக்காகத்தான் இதனைச் சொல் கிறேன். பெரியார் அவர்கள் சொல்வார்கள், இச்சுப்பட்டன வாடுக்கு எஞ்ஜினியரிங் என்று. எஞ்ஜினியரிங் படிப்பதற்குக் கொடுத்து வைக்கவேண்டும் என்று சொன்ன ஒரு நிலை உண்டு.
ஆனால், நண்பர்களே, நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு அந்த நிலை இல்லையே!


முத்தன் மகன் முனியன், குப்பன் மகன் சுப்பன் சுவிட் சர்லாந்தில் இருக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யன்றும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பெற்றோர் களிடம் பேசுகிறார். அந்தப் பெற்றோர்களிடம் கேளுங்கள், உங்கள் மகன் எந்த நாட்டில் இருக்கிறார் என்று; அவர்க ளுக்குத் தெரியாது என்றுதான் சொல்வார்கள்.  ஆனால், வாரா வாரம் எங்களுடன் தொலைப்பேசியில் உரையாற்று வார் என்று சொல்வார்கள்.


பெரியார் அவர்கள், வன்முறையை நம்பியதே இல்லை!

இந்தக் கல்விப் புரட்சி, அதுதான் இங்கே மணமக்கள் சிறப்பாகப் படித்திருக்கிறார்கள். அய்யா கணபதி போன் றோர் எதற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றார். இந்த இயக்கம் எதற்காகப் போராடியது? நாளைக்குப் போராட்டம் என்று அறிவித்தாலும், சிறைச்சாலைக்குச் செல்வதற்கும் தயார் என்று; சட்டமன்றத்திற்குச் செல்வதற்கு மட்டுமல்ல, சிறைச்சாலைக்குச் செல்வதற்கும் தயார் என்று சொல்லக் கூடிய உணர்வைப் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த இயக்கம் அமைதி வழியில், இவ்வளவு பெரிய சமுதாயப் புரட்சியை செய்த பெரியார், வன்முறையை நம்பியதே இல்லை. அதனை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
பொதுச்சொத்துக்கு நாசம் வரக்கூடாது என்று கருதியவர். பொது அமைதிக்குப் பங்கம் வரக்கூடாது என்று கருதியவர். அதுமட்டுமல்ல, பெரியார் புரட்சி, ரத்தம் சிந்தாத புரட்சி; அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சியை உண்டாக்கினார். அதனுடைய விளைவுதான், மணமக்கள் இருவரும், இன்றைக்கு இவ்வளவு அற்புதமான இணையர் களாக, இன்றைக்குப் படித்தவர்களாக, ஒருவருக்கொருவர் புரிந்தவர்களாக இருக்கிறீர்கள்.


ஆகவே, அன்பார்ந்த மணமக்களே, நீங்கள் சிறப்பாக வாழுங்கள். உங்களுக்கு அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. நான் ஏற்கெனவே கூறியதைப்போல, இது அறிவுரையும் அல்ல. மாறாக, வேண்டுகோள் என்று சொல்கின்ற நேரத்தில், உங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.


உங்களுடைய ஆற்றல், அறிவு, திறன் இவைக ளெல்லாம் இன்றைக்கு வெளியாகியிருக்கிறது. பாராட்டத் தகுந்தது; வாழ்த்துதலுக்குரியது. அதேநேரத்தில், நீங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயருவீர்கள். உயரவேண் டும். வளரவேண்டும். முன்னேறவேண்டும். இன்றைக்கு இருக்கின்ற மகிழ்ச்சி, என்றைக்கும் உங்களிடத்தில் இருக்கக்கூடிய அளவிற்கு நீங்கள் சிறப்பாக வாழவேண்டும். கைநிறைய நீங்கள் சம்பாதிப்பீர்கள். மனம் நிறைய பதவிகளுக்கு நீங்கள் செல்வீர்கள். பெருநிலைக்கு நீங்கள் உயர்வீர்கள். இவைகளெல்லாம் சிறப்பானதுதான்.


தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய திருப்பம்!

ஆனால், ஒன்றே ஒன்று, நீங்கள் எந்த நிலைக்குச் சென்றாலும் ஒன்றை நீங்கள் மறவாதீர்கள். தந்தை பெரியார் உருவாக்கிய திருப்பம் அது. என்ன அந்தத் திருப்பம் என்று சொன்னால்,
இதற்கு முன்பு இருந்தவர்கள், இல்லறத்தைவிட்டால், துறவறம் என்று சொன்னார்கள். பெரியார் அவர்கள்தான் சொன்னார், இல்லறத்தை விடாதே! இல்லறத்தில் இருந்து கொண்டே, தொண்டறத்தை செய் என்று சொன்னார்.
எனவே, இல்லறம் - தொண்டறம் இவை இரண்டையும் நீங்கள் நினைத்துச் செய்யுங்கள்.


தொண்டறம் என்றால் என்ன? நன்றி காட்டுவது. பிறருக்காக உதவுவது. பிறருடைய உணர்வுகளை மதித்து செயல்படுவது. அதுதான் மிக முக்கியம். ஆகவே, இல்லறத் தில் இருக்கக்கூடிய நீங்கள் தொண்டறத்தை மறவாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய பெற்றோ ருக்கு நன்றி காட்டுவதை, பாசம் காட்டுவதை வாழ்நாளில் என்றைக்கும் மறவாதீர்கள். பல நேரங்களில், படிப்பு உயர்கிறது இன்றைய இளைய தலைமுறையினரில், பாசம் குறைகிறது. இதுதான் ஏக்கமாக இருக்கிறது, பல குடும்பங் களில், அந்தக் குடும்பமாக நம்முடைய குடும்பங்கள் இருக்காது. இருந்தாலும், உங்களைப் பயன்படுத்திக் கொண்டு, இங்கே வந்திருக்கின்ற இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இதனைத் தெளி வாகச் சொல்கிறோம்.

படிப்பறிவில் உயர்ந்தவர்கள்கூட, பகுத்தறிவு என்று வருகின்ற நேரத்தில், கொஞ்சம் பின்வாங்குகிறார்கள்

அந்த வகையில், இன்றைக்கு மாறுதல்கள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிறது. அந்த மாறுதல்களுக்கு ஏற்ப, பகுத்தறிவைத் துணை கொள்ளுங்கள். மூடநம்பிக்கை களுக்கு இடம் தராதீர்கள். இது பெரியாருக்காக அல்ல; உங்களுக்காக; உங்கள் வாழ்க்கை வழிகாட்டுதல்களுக்காக, பகுத்தறிவை எப்பொழுதும், படிப்பறிவில் நீங்கள் உயர்ந் திருக்கிறீர்கள், அது சிறப்பானதுதான். படிப்பறிவில் உயர்ந்த வர்கள்கூட, பகுத்தறிவு என்று வருகின்ற நேரத்தில், கொஞ் சம் பின்வாங்குவதை நாம் பார்க்கிறோம்; பயப்படுவதை நாம் பார்க்கிறோம். நீங்கள் அப்படிப்பட்டவர்களாக இருக் கக்கூடாது. ஏனென்றால், அவர்கள் சொன்னதைப்போல இது நான்காவது தலைமுறைத் திருமணம். பாரம்பரியமான சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்து, அய்யா கணபதி அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்து, சாக்கோட்டை அன்பழகன் குடும்பத்தைச் சார்ந்து வந்த பெருமை என்பது, திராவிட இயக்கவரலாற்றில், சாக்கோட்டைக்கு ஒரு தனி அத்தியாயம் உண்டு. அப்படிப்பட்ட மிகச் சிறப்பான வரலாற்றைப் பெற்றது.


முதன்முறையாக, இந்தியாவிலேயே சமதர்மப் பாடசாலை, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுத்த பாடசாலை என்று ஆரம்பித்ததே, சாக்கோட்டை வரலாறுதான் என்ற வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.

பெரியார் அவர்கள் சொன்ன சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு!

ஆகவே, அப்படிப்பட்ட நீங்கள் பகுத்தறிவை மறக்கா தீர்கள்; எவ்வளவுக்கெவ்வளவு உயருகிறீர்களோ, அவ்வள வுக்கவ்வளவு எளிமையைக் கையாளுங்கள்! எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் எளிமையைக் கையாளுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு சிறப்பு இருக்கும்; சேமிப்பு இருக்கும். சேமிப்புப் பெருகப் பெருக, சுயமரியா தைக்குப் பங்கம் வராது; யார் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறார்களோ, நிச்சயம் சுயமரியாதை வீரர்களாக இருப்பார்கள். கடன் வாங்க வேண்டிய அவசியம்கூட அவர்களுக்கு வராது. பெரியார் தத்துவங்களிலேயே, பெரியார் சொன்ன சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்ற கருத்துக்களிலேயே மிகவும் முக்கியமானது, வரவுக்குட்பட்டு செலவழிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.


அதுபோலவே, இங்கே காங்கிரஸ் நண்பர்களும், மற்ற நண்பர்களும், அய்யா அவர்களும் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், அளவோடு பெற்று, வளமோடு வாழுங்கள் என்று.


மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழுங்கள்!

எனவே, சிக்கனம் என்பது பொருளாதாரச் சிக்கனம் மட்டுமல்ல; குழந்தைப் பேற்றிலேகூட சிக்கனம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நல்ல வாழ்வியலை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன்மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழுங்கள்.


அறிஞர் அண்ணா அவர்கள், எல்லா மேடைகளிலும், திருமண மேடைகளிலே ஒரு கருத்தை பெரியார் கருத்தை யொட்டி மிக அழகாகச் சொல்வார்கள். அவர்தான் சுய மரியாதைத் திருமணத்தையே சட்ட வடிவமாக்கி, அந்த சுய மரியாதைத் திருமணத்தில் இருந்த குறைகளைப் போக் கியவர். இன்னுங்கேட்டால், அவர்களைப் போன்றவர்கள் இருந்த காரணத்தினால்தான், சுயமரியாதைத் திருமணத் திற்கு சட்டம் வடிவம் வந்தது. அப்படிப்பட்ட அந்த சுய மரியாதைத் திருமணத்திற்கு சட்டம் வடிவம் கொடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்,

மணமக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழுங்கள்; விட்டுக் கொடுத்து வாழுங்கள்; விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று சொன்னார்கள். அதுதான் மிகவும் முக்கியம்.


கடைசியாக ஒன்று, விளையாட்டிற்கும், வாழ்க்கைக்கும், அதாவது குறிப்பாக, இல்வாழ்விற்கும் ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. அது என்ன வேறுபாடு என்றால், விளையாட்டில் யார் முந்திக் கொண்டு முதல் பரிசைப் பெறுவது யார்? வெற்றியைப் பறிப்பது யார்? என்பதுதான் விளையாட்டில் முக்கியம். தோல்வி அடைந்துவிட்டோமே என்று விளையாட்டில் சங்கடப்படுபவர்கள் உண்டு.

ஆனால், வாழ்க்கை இருக்கிறதே, அருமை மண மக்களே, உங்களுக்குச் சொல்கிறோம்,


தோல்வியில்தான் உங்களுக்குச் சுகம் இருக்கிறது!

வாழ்க்கை என்பதில், உங்கள் இருவரில் வெற்றியைத் தேடுவதைவிட, தோல்வியைத் தேடுங்கள்; அதுதான் மிக முக்கியம். யார் முந்திக் கொண்டு தோல்வி அடைகிறீர் களோ, அந்தத் தோல்வியில்தான் உங்களுக்குச் சுகம் இருக் கிறது. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, வெற்றிக்காக ஒருவர் விட்டுக் கொடுக்கிறார் என்றால், அவர் தோல்வி அடைந்தார் என்று பொருளல்ல; ஒரு புது அனுபவத்தைப் பெற்றார் என்று பொருள். எனவே, இப்படி இருவரும் வாழ்ந்து காட்டுவீர்களேயானால், அந்த வாழ்க்கை எடுத்துக்காட்டான வாழ்க்கையாக இருக்கும் என்று சொல்லி, இவ்வளவு சிறப்பான மணவிழாவினை, கொள்கை விழாவாக நடத்திக் காட்டிய சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அன் பழகன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், வந்திருக் கின்ற நண்பர்களுக்கும் சிறப்பான நன்றியையும், பாராட் டையும் தெரிவித்து, மணமக்கள் வாழ்க! பெரியார் வாழ்க! சுயமரியாதை நெறி ஓங்குக! பகுத்தறிவு வளர்க என்று கூறி, முடிக்கிறேன், வணக்கம், நன்றி!

---------------- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  ------------"விடுதலை” 17-11-2014

41 comments:

தமிழ் ஓவியா said...

1923-1926

1923-1926 காலகட்டம் - சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சி என்னும் பொற்கொடி ஒளிவீசிய காலகட்டம். பார்ப்பனர்களால் மகாமகா சாணக்கியர் என்று வரு ணிக்கப்பட்ட பனகல் அரசர் (ராமராயநிங்கர்) பிரதமராக இருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் நெஞ்சமெல்லாம் பால் வார்த்த பண்பாளர்.

இவர் பிரதமராக (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) இருந்த காலத்தில்தான் அது வரை ஆங்கிலேயர் வசமே இருந்து வந்த சென்னை மாநில மருத்துவத் துறை, இந்தியர் கைக்குள் வருவ தற்கான சட்டம் இயற்றப் பட்டது.

(ஜஸ்டிஸ் கட்சியினர் வெள்ளைக்காரர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் என்று வாய்ச் சுளுக்கேறிப் பேசிய - பேசுகிற பார்ப்பனக் கொழுந்துகளுக்கு இது அர்ப்பணம்!).

எதிர்ப்பு எந்தப் பக்கத் தில் இருந்து வந்தாலும், அது இந்த நாட்டிற்கு நன் மையை விளைவித்தால் அதை வரவேற்கத் தயா ராய் இருக்கின்றேன். தீமை விளைவிக்குமானால், அதை எதிர்த்து முறியடிப் பேன் என்று சட்டமன்றத் தில் பனகல் முழங்கினார். வெள்ளையர்கள் பனகலை விழுந்து குதறாமல் இருந் ததுதான் பாக்கி.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித் திருக்கவேண்டும் என்று இருந்த நிபந்தனையை நெட்டித் தள்ளி, பார்ப்பனர் அல்லாதாரும், மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கக் கதவைத் திறந்து விட்ட கண்ணியம்மிக்க கல்விக் காவலரும் அவரே!

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் இந்தப் பெருமகன் காலத் தில்தான் பந்தற்கால் நாட் டப்பட்டது. அதுவரை அக் ரகாரத்தில் படுத்துறங்கிய வைக்கோல் போராகத்தான் கோவில்கள் குவிந்து கிடந் தன.

கடவுளச்சி அபிராமி யின் காதில் ஒரு நாள் மின்னிய கம்மல் மறுநாள் கோவில் குருக்கள் அப்பா சாமி பட்டரின் பாரியாள் காதுகளிலும் கண்ணடிக்கும்.

யார் கேட்க முடியும்? கர்ப்பக் கிரகத்துக்குள்ளி ருந்தாலும் சாமி பக்தர் களுக்கும், சாமிக்கும், தரகு வேலை பார்க்கும் ஆசாமி யும் சாமி!! சாமிக்கும், சாமிக்கும் பரிவர்த்தனை நடந்தால் யார்தான் மூக்கை உள்ளே நுழைக்க முடியும்?

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் அப்பொழுது முழங்கினாரே பார்க்கலாம்:

நீதிக்கட்சியினர் பிரா மணர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பிவிட் டார்கள், மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.

மதத் தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒரு மனதாக எதிர்க்கவேண்டும் என்று கொட்டித் தீர்த்தார்.

1923-1926 காலகட்டத் தில் இரண்டாவது நீதிக்கட்சி யின் சாதனைகள் விரிவா னவை. - மயிலாடன்

குறிப்பு: நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இப்பொன்னாள் (19.11.1923).

Read more: http://viduthalai.in/e-paper/91413.html#ixzz3JZSHHBbb

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட் சூதாட்டம் சீனிவாசய்யர்?

அய்.பி.எல். கிரிக்கெட் டில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முகுல்முட்கல் தலை மையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தன் அறிக்கையை வெளியிட் டுள்ளது. இதில், சீனிவாச னுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், சீனி வாசன் உள்பட 4 பேரும் ஒரு விளையாட்டுக்காரர் நடத்தை விதிகளை மீறியதை அறி வார்கள்; ஆனாலும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறது அறிக்கை.

தெரிந்ததை மறைத்ததும் குற்றம்தானே!

சீனிவாச அய்யரின் மரு மகன் குருநாதன் மெய்யப் பன் பெட்டிங்கில் ஈடுபட் டது உறுதி செய்யப்பட்டுள் ளது.

Read more: http://viduthalai.in/e-paper/91423.html#ixzz3JZScqdaz

தமிழ் ஓவியா said...

ஓங்காரம்

என்ன ஆனது?

ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும், ஆயி ரம் இடம்புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஒரு வலம்புரிச் சங்கும், ஆயி ரம் வலம்புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஒரு சலஞ்சமும் (சங்கில் உயர்ந்த வகை) ஆயிரம் சலஞ்சமும் கூடிய இடத் தில் ஒரு பாஞ்சசன்யமும் (இதுவும் ஒரு வகை உயர்ந்த சங்கு) இருக்கும். அந்த பாஞ்சசன்யந்தான் கிருஷ்ணபகவான் கையில் இருந்த சங்கு. காரணம் அதுதான் ஓங்காரத்தின் தொனியை ஒழுங்காகக் கிளப்பவல்லதாம்.

அது சரி... அப்படிப் பட்ட அந்த உயர்ந்த சங்கு இப்பொழுது எங்கே இருக்கிறதாம்?

அந்தச் சங்கை இப் பொழுதெல்லாம் அந்தக் கிருஷ்ணன் ஊதுவதில் லையா? ஓங்காரம் என்ன ஆனது?

Read more: http://viduthalai.in/e-paper/91424.html#ixzz3JZSkte6g

தமிழ் ஓவியா said...

சர்ச்சில் பெண் பிஷப்புகள் இந்து மதம் என்ன செய்யப் போகிறது?


லண்டன், நவ.19- இங்கிலாந்தில் பெண் பிஷப்புகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்து மதம் என்ன செய்யப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

1994 ஆம் ஆண்டுமுதல் பெண் பாதிரியார்கள் இங்கி லாந்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால், தேவாலயத்தின் சீனியர் பதவி வகிக்க முடியாத நிலை இருந்தது. பிஷப் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

2012 இல் ஒரே ஒரு பெண் பிஷப் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றமும், பிஷப் பொது மன்றக் குழுவும் ஆதரவு அளித்துவிட்டனர்.

கிறித்துவ மதத்தில் ஒரு பெரிய திருப்பமாக இது கருதப்படுகிறது. இந்து மதத்தின் ஆகமங்களிலேகூட பார்ப்பனரைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கூறும் நிலையில், பெண் அர்ச்சகர் பற்றி நினைத்துப் பார்க்கத்தான் முடியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/91417.html#ixzz3JZSuTHiG

தமிழ் ஓவியா said...

நன்றாகத் தெரியும்...



மகன்: அய்யப்பப் பக் தர்களுக்கு உதவி செய்ய 24 மணிநேர தொலைப் பேசி சேவை மய் யத்தை இந்து அறநிலை யத் துறை தொடங்கி யுள்ளதே, அப்பா!

அப்பா: கடவுள் காப் பாற்ற மாட்டார். அது வெறும் சிலைதான் என் பது இந்து அறநிலை யத் துறைக்கு மிக நன் றாகவே தெரியும், மகனே!

Read more: http://viduthalai.in/e-paper/91418.html#ixzz3JZT1STTc

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு - பாடம் பெறுமா கேரளா?

முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்குமேல் தண்ணீரைத் தேக்கக் கூடாது; அப்படித் தேக்கினால் அணை உடையும், இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கும்; இலட்சக்கணக்கான மக்கள் மடிவார்கள் என்று பெருங்குரல் கொடுத்தது கேரள அரசு.

999 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பது சட்டப்படி யான நிலை; 1885 இல் போடப்பட்ட ஒப்பந்தம் இது. சட்டமாவது - ஒப்பந்தமாவது - தூக்கி எறியுங்கள் என்ற மனப்பான்மையில் ஆட்டம் போட்டது கேரள அரசு.

கேரள மாநில அரசின் கூச்சல், அடாவடித்தனமாக இருந்ததன் விளைவாக 152 அடி தண்ணீர்த் தேக்க வாய்ப்பு இருந்தும் 136 அடி அளவில் நீர்மட்டம் குறைக்கப்பட்டது.

கேரள அரசு சொல்கிறபடி அணை பலமாக உள்ளதா இல்லையா என்று கண்டறிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மிட்டல் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 136-லிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்தது (27.2.2006).

அந்தத் தீர்ப்பினை முடக்கிட தனிச் சட்டம் ஒன்றையும் கேரள அரசு கொண்டு வந்ததுண்டு (18.3.2006).

2006 இல் தீர்ப்பு வழங்கியும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டன என்பதைக் கவனிக்கவேண்டும் - அதுவும் உச்சநீதி மன்றம் காதைத் திருகித் தீர்ப்பை அளித்ததற்குப் பிறகு.

8000 ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த முல்லைப் பெரியாறு 4000 ஏக்கருக்குச் சுருக்கப்பட்டது. இந்தத் தேக்கடிப் பகுதிகள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளிடம் வியாபாரம் நடத்தும் வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்பட்டது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் 5 நட்சத்திர விடுதிகள் எழிலாக உருவாக்கப்பட்டன.

தண்ணீரை 136 அடியிலிருந்து 142 அடி ஆக்கினால், 152 அடியாக உயர அனுமதித்தால், இந்த அய்ந்து நட்சத்திர விடுதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இப்பொழுது 142 அடி தண்ணீர் உயர்ந்துள்ள நிலையிலேயே, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் மூழ்க ஆரம்பித்துவிட்டன என்ற செய்தி வெளிச்சத் துக்கு இப்பொழுது வந்துவிட்டன. இதற்குப் பிறகாவது கேரள அரசு புத்தி கொள்முதல் பெறுமா என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

1979 முதல் 35 ஆண்டுகாலமாக கேரள அரசின் சட்ட விரோதமான - நியாய விரோதமான - மக்கள் விரோதமான நடவடிக்கையால் தென்மாவட்டங்களில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகின. 86 ஆயிரம் இரு போக சாகுபடிகள் ஒரு போகச் சாகுபடியாக பின்னுக்குத் தள்ளப்பட்டன.

இப்பொழுதுகூட கேரள அரசு திருந்தியபாடில்லை. முல்லைப் பெரியாறு பாதையில் புதிய அணை கட்டும் திட்டத்தில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.

கருநாடகமும், இதே வேலையில் இறங்கியுள்ளது. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகளை - உச்சநீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கிப் போடும் நீதிமன்ற அவதூறுகளையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்வதேயில்லை. சட்டத்தின் ஆட்சி எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இவையெல்லாம் கற்றூண் போன்ற சாட்சியங்களே!

தேசியத்தை உடைக்கப் போவது தேசியத்தை எதிர்க்கும் கட்சிகளல்ல; தேசியம் பேசும் கட்சிகளும் - ஆட்சிகளுமே!

Read more: http://viduthalai.in/page-2/91426.html#ixzz3JZTIXfEL

தமிழ் ஓவியா said...

உரிமையைப் பெறும் வழி


நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம், நம் உரிமைகளைப் பெற முடியும்.
_ (விடுதலை, 30.5.1951)

Read more: http://viduthalai.in/page-2/91425.html#ixzz3JZTPodlD

தமிழ் ஓவியா said...

மதம் மாறிய இணையர் கேரள முதல்வரிடம் பாதுகாப்பு கோரினர்

கோழிக்கோடு, நவ.19- அதிகம் படித்த வர்கள் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த வர்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பொறியாளராக இருப்பவர் கவுதம்(24). இவர் பல் மருத்துவக் கல்வி பயின்றுவரும் அன்ஷிதா(21) இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால், அவர் களிருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


அவர்களின் கல்வி, மற்ற பணிகள் தொடர்வதற்காக பாதுகாப்பான சூழ் நிலைக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் உதவி கோரி உள்ளார்கள். அன்ஷிதாவின் பெற்றோர் தரப்பில் அவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித் ததால், வீட்டைவிட்டு வெளியேறி, காவல் துறையினரின் பாதுகாப்பில் திருமணம் செய்து கொண்டனர். இன்னமும் அவர் கள் வசிக்கும் வீட்டில் தொடர்ச்சியாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், இளம் தம்பதியினருக்கு நாளுக்குநாள் அச் சுறுத்தல் அதிகமாகி உள்ளது.

இரு வேறு மதங்களைச் சேர்ந்த இளம்தம்பதியருக்கு மிரட்டல் தொடரும் நிலை உள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்கிறார்கள். மதத்துக்கு எதிராக திருமணம் செய்துவிட்டதாகக்கூறி அவர் களின் வாழ்வே கேள்விக்குரியதாகி உள்ளது. எல்லா நாள்களிலும் அவர்களின் வீட்டை நோக்கி கும்பலாக திரண்டு மிரட்டலை விடுத்து முழக்கமிடுவதும், வீட்டின் சன்னல்களில் கல்வீச்சுகளுமாக இருக்கிறது. கல்வீச்சில் சன்னல்கள் உடைந்து சேதமாயின.


கவுதம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாகும். நான் எந்த மதத்தை யும் பின்பற்ற வேண்டியதில்லை என் பதைத் தேர்வு செய்துள்ளேன். இப் போதும்கூட அன்ஷிதா இசுலாமிய மதமுறையைப் பின்பற்றுகிறார். அவருக் காக குர்-ஆன் நூலை வாங்கிக் கொடுத் துள்ளேன். இதில் எதிர்ப்பு தெரிவிப்பவர் கள் ஏன் மதத்

தைக் கொண்டுவரு கிறார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை. மதத்தின்பெயரால் எங்களை தூற்றி வருகிறார்கள் என்றார்.
உள்ளூர் காவல் ஆய்வாளர் ஜோஷி ஜோஸ் தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியை ஏற் படுத்த அனைத்துவித முயற்சிகளும் எடுத்து வருகிறோம். எந்த அமைப்போ, அரசியல் தலையீடுகளோ இந்த அச் சுறுத்தலில் இருப்பதாக யாரும் பொறுப் பேற்கவில்லை என்றார்.

கவுதம் கூறுகையில் எப்போது பணிக்குச் செல்லமுடியும் என்று உறுதி யாகச் சொல்ல முடியவில்லை என்றார். அவருடைய பெற்றோர் ஆதரவில் இரு வரும் இருக்கிறார்கள். கவுதம் கூறும் போது, நாங்கள் வீட்டைவிட்டு வெளியே அடி எடுத்துவைக்க முடியவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம் என்றார்.

அவர் தந்தை சுதாகரன் கூறுமபோது, 9 மாதங்களாக தங்கள் உறவை மறைத் துக்கொண்டிருந்த அவர்கள் திருமணம் முடிந்தபின்னரும் எதிர்த்துவருவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தமடையச் செய்கிறது. அன்ஷிதாவின் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு உதவவேண்டும் என்பதே என்னுடைய முதல் குறிக்கோள். இதற்காக எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவைப்படுகிறது என்றார்.

அண்ஷிதா மீண்டும் கசர்கோட்டில் உள்ள கல்லூரிக்குச் செல்ல முடியாது. அவர்மீதான அச்சுறுத்தல் அங்கு பதட்ட மான சூழலையே முழுமையாக ஏற்படுத்தி வந்துள்ளது. அவர் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே நம்பிக்கையுடன் படித்து வருவதுடன் இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத முடியும் என்று நம்புகிறார்.

வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளவரும், மதம் மாறித் திருமணம் செய்துகொண்டவர் நலனுக் காக செயல்பட்டுவருபவருமான அஜீதா கேரளாவில் உள்ள சூழல் குறித்து கூறும் போது, மதசார்பின்மை மற்றும ஜனநாயக மதிப்புகளைக் குறைக்கும்வகையில் குறிவைத்து பாதிப்புகள் உருவாகின்றன என்றார்.

Read more: http://viduthalai.in/page-2/91428.html#ixzz3JZTXY3xi

தமிழ் ஓவியா said...

யாரிந்த ராம்பால்?

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8இல் ராம் பால் பிறந்தார். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த அவர் அரியானா மாநில நீர்ப்பாசனத் துறையில் 2000ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றினார்.
அனுமாரின் தீவிர பக்தரான ராம்பால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பூஜித்து வருகிறார். 1999இல் சட்லக்கில் அவர் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா ஆகிய பகுதிகளிலும் ஆசிரமத்தை தொடங்கினார். பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ராம்பால் அதிக ஆர்வம் கொண்டவர். யு டியூபில் அவரை ஆயிரக் கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

சட்டத்துக்கும் ராம்பாலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். 2000ஆம் ஆண்டில் ஆர்ய சமாஜ் ஆதரவாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ராம்பால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டார்.
2006ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரமத்தில் இருதரப் பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். அதில் சாமியார் ராம்பாலுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கில்தான் ராம்பாலை கைது செய்ய காவல்துறையினர் தேடுகின்றனர்.

2008ஆம் ஆண்டு ஏப்ரலில் ரோட்டக் ஆசிரமத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதேபோல் பர்வாலா ஆசிரமத்தில் 2013ஆம் ஆண்டில் மிகப்பெரிய மோதல் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோல் சாமியார் ராம்பால் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்தார். 2008 ஏப்ரலில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page-3/91433.html#ixzz3JZTsZ2kT

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் மீது தனிப்பட்ட விரோதமா??

நம்முடைய திருமணங்களிலோ,
மற்ற நம் வீட்டு சடங்குகளிலோ,
நம்மைச் சூத்திரன் ஈனஜாதி என்று கருதி,
நம்மைத் தொடாமலும்,
நாம் தொட்டதைச் சாப்பிடாமலும்,
நம் எதிரில் சாப்பிட்டால் பாவம் தோஷம் என்று கூறி,
நம்மை இழிவு செய்யும் மனிதனை,

நம்மை விட உயர்ந்த ஜாதி என்று கருதி,
அவனை நமது சபை நடுவே,

உட்கார வைத்து பெருமைப்படுத்தி,
நாம் இழிவடைவது கூடாது என்பதற்காகத்தான்

இப்படிப்பட்ட காரியங்களில்

பார்ப்பனர்களை விலக்க வேண்டும் என்று சொல்கிறோமே, தவிர,

அவர்கள் மீது நமக்கு வெறுப்போ, துவேசமோ இல்லை,,

--பெரியார், (03.09.1941)

தமிழ் ஓவியா said...



சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து சென்னையில் திராவிட மாணவர் கழகம் நடத்திய எழுச்சி ஆர்ப்பாட்டம்

ஆரியப் பண்பாட்டுத் திணிப்பின் அடையாளமான சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்!

மாணவர் பட்டாளம் சூளுரைத்தது


சென்னை, நவ.20_ சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியை எதிர்த்து சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் இன்று (20.11.2014) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித் துறை அறிவிப்பதோடு, மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்று வந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் இந்த செத்த மொழியான சமஸ்கிருத மொழி திணிப்பைக் கண்டித்து இன்று திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தலைவர் 15.11.2014 அன்று அறிவித்தார்.

அதன்படி இன்று (20.11.2014) சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு காலை 11 மணியளவில் திராவிடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாநில மாணவரணி துணைச் செயலா ளர்கள் த.சீ.இளந்திரையன், அஜீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்

Read more: http://viduthalai.in/e-paper/91475.html#ixzz3JfBnRagK

தமிழ் ஓவியா said...

அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு! பெருமகிழ்ச்சி - நன்றி!


அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு!
பெருமகிழ்ச்சி - நன்றி!

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடே இணைந்து குரல் கொடுத்தது -

போதை மருந்து கடத்தல் என்ற பொய்க் குற்றத்தின் பெயரில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட இராமேசுவரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தமிழர்களின் வாழ்வு மீட்கப்பட்டு விட்டது!

இதில் மோடி அரசு, தமிழ் மக்களின் உணர் வினை மதித்து செயல்பட்டுள்ளது மகிழ்ச்சிக்கும், நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது.
இதை ஒரு சாக்காக வைத்து இனி எமது தமிழக மீனவர் வாழ்வதாரமான மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை இராஜபக்சே அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது!

தமிழ்நாட்டு மக்கள் எதையும் புரியாதவர்கள் அல்ல!

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மைக்குக்கூட மறைமுக அச்சுறுத்தலை புதிய நட்புகளின்மூலம் இராஜ பக்சேக்கள் மிரட்டிவரும் போக்குகளுக்கும்கூட முற்றுப்புள்ளி வைக்க மத்திய - மோடி அரசு முன்வரவேண்டும்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

20.11.2014

Read more: http://viduthalai.in/e-paper/91478.html#ixzz3JfCTtMgU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏன்? ஏன்? ஏன்?

கேள்வி: ரமண மகரிஷி போன்ற மகான்கள் கூட கடுமையான நோயில் துன்பங்களை அனுபவிப்பது ஏன்?

பதில்: மகான்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கர்ம வினைகளை (பிராரப்த கர்மம்) அனுபவித்தாக வேண்டும்.
- விஜயபாரதம், (ஆர்.எஸ்.எஸ். இதழ்)

கர்மவினைகளை அனுபவித்துதான் தீரவேண்டும் என்றால், கடவுள் பக்தி ஏன்? பிரார்த்தனை ஏன்? பிராயச்சித்தங்கள் ஏன்? கோவில், குளங்கள் ஏன்? ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/91483.html#ixzz3JfCdRpiE

தமிழ் ஓவியா said...

முற்போக்கு வெற்றி பெற...


முற்போக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கும் நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. - (குடிஅரசு, 30.6.1929)

Read more: http://viduthalai.in/page-2/91485.html#ixzz3JfCzQi7F

தமிழ் ஓவியா said...

குடி - "குடித்த" செல்வங்கள்!

இன்று (20.11.2014) - சுயமரியாதைத் தோட்டத்தில் பூத்த புரட்சி மலர்களில் ஒன்றான கவிஞர் பொன்னி வளவனின் நினைவு நாள் என்றபோது, எனது சிந்தனைகள் மிசா காலத்து சிறை வாயிலுக்குள் சென்றன!

கவிஞர் பொன்னி வளவன் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை யால் பூத்த தஞ்சைத் தரணி தந்த ஒரு தனித்துவமான, நறுக்குத் தெறித்தாற் போல் எழுதி, எரிமலையைத் தனது எழுத்துள் கொண்டுவரும் ஈடற்ற கவிஞர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பரம்பரை என்ற கவிஞர்கள் வரிசையில் இடம்பெற்று, மறைந்தும் மறையாத கொள்கைக் கோமான்!

தமிழாசிரியராகப் பணிபுரிந்த தகை மையாளர்; அறிஞர் அண்ணாவிடமும், கலைஞரிடமும், பெரியார் திடலுடனும் மிகுந்த பாசப் பொழிவைக் கொட்டியவர்!

பொடி போட்டுப் பழகிய இச்சுயமரி யாதைச் சுடரொளி, பொடி வைத்தும் கவிதை எழுதி புகழ்பெற்ற, தகுதியான சீரிய பேச்சாளர். தி.மு.க.வின் அணி மணிகளில் ஒன்றானவர். எனவேதான், காரணமறியாத சிறைக் கைதியான மிசா கைதியாக எங்களோடு (1976 இல்) பிடித்து வந்து அடைக்கப்பட்டார்.

அவரின் நகைச்சுவை உணர்வுக்கு அறையிலேயே நடந்த சம்பவமும், அதையொட்டிய ஒரு கவிதையும் சிறைவாசம் என்ற கோடை (பலருக்கு அப்படித்தான்)யைத் தணித்துக் குளிரூட் டிய நிகழ்வும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அறிஞர் அண்ணாவுக்கு, கலைஞருக்கு வேண்டிய தி.மு.க. தோழர் சொக்கலிங்கம்.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி அவர்களுக் கும், நமக்கும்கூட நல்ல நண்பர்.

அவரும், மிசா கைதியாக சிறைவாசி யானார்; அவரால் எளிதில் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன தளவில் மிகவும் உளைச்சலுக்கு ஆளா னார். காரணமின்றி, எப்போது விடுதலை என்பதே தெரியாது என்பதால், பல ருக்கும் இப்படித்தான் (ஒரு சிலர்தான் அதை ஓய்வுக்கான வாய்ப்பு என்று கருதி, ஏற்ற பக்குவத்தினர்).

திரு.சொக்கலிங்கம் திடீரென்று பக்திப் பழமானார். நெற்றியில் பட்டை, குங்குமம் அடித்து, தாடி வளர்த்து, சிறைக்குள்ளே ஒரு சிறுபிள்ளையார் கோவிலில் கும்பிடத் தொடங்கி விட்டார்! அருட்பா பாடுவார்!!

கடவுள் பக்தி என்பது மனிதர்களின் பலவீனமான நேரத்தில் தாக்கும்; அல்லது அதிகரிக்கும் என்பதை நாங்கள் பலரும் உணர்ந்தோம் - இப்படிப்பட்ட அனுபவங்கள்மூலம்.

நானோ, கழகத் தோழர்களோ (மிசாவில்) இருந்த நிலையில் - யாரை யும் வெறுத்ததுமில்லை; கேலி பேசி யதும் இல்லை. அவர்கள் மனப்பக்குவ மின்மைக்காக இரங்கி, பரிதாபப்பட் டோம்!

இதனாலா சிறைக்கதவு திறக்கும்? இல்லை. புலவர் பொன்னி வள வனுக்குத் தீராத கோபம். எல்லோரும் பகல் உணவு வாங்கி கும்பலாக உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில்,
தனது துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து, கவியரசர் பொன்னி வளவன் ஒரு ஏழு வரி கவிதையை சத்தமாகப் படித்தார்.

பட்டை யடித்தாலும் அதன் நடுவே நன்றாய்
பொட்டு வைத்தாலும் தாடி வளர்த்திட்டாலும்
பொழுதெல்லாம் திருவருட்பா பாடினாலும்
விட்டுவிட முடியாது எனச் சிறைக்குள்
விடாப் பிடியாய் வைத்துள்ளார் சொக்கலிங்கம்
பட்ட துயர்போதாதா? நாளைக்கும்
நீ பற்ற வைக்க வேண்டுமா டீ அடுப்பு?
எல்லோரும் கலகலவெனச் சிரித் தனர்.

சொக்கலிங்கமும் எங்களோடு சேர்ந்து சிரித்தார் - கொஞ்சம் வெட்கங் கலந்த நிலையில்!

அந்நாள் சிறைவாசக் கொடுமை என்ற பாலைவனத்துச் சோலைபோல இத்தகைய நிகழ்வுகள்!

இவ்வளவு இலக்கியச் செறிவுள்ள ஈரோட்டுக் கவிஞன் இன்று நம்முடன் இல்லாமற் போனார் - இலக்கியத்தில் எப்போதும் இருக்கிறவர் என்றாலும் கூட!

காரணம், நேற்று இனமானத் தலை வர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும், நானும் பேசிக் கொண்டிருந்தபோது, வருந்திப் பேசி னோம் - குடி எத்தனை அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், வாழ்வு தொடங்கி, எண்ணற்றவர்களின் வாழ் வைக் குடித்த - குடிக்கும், குடி கெடுக்கும் மதுப்பழக்கம்பற்றி.

மூன்று வரிகளில் ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது.

(முதலில்) மனிதன் குடிக்கிறான்,
(அடுத்து) குடி குடிக்கிறது
(இறுதியில்) குடி மனிதனையே குடிக் கிறது.

என்றுதான் விடியலோ! ஏக்கத்தோடு எழுதுகிறேன்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91488.html#ixzz3JfD9o5Bh

தமிழ் ஓவியா said...

அரசு விதிமுறைகளை மீறி கன்னியாகுமரியில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் மதப் பிரச்சினைகளில் மிகவும் பதற்றமான மாவட்டம், மதச்சண்டைகள் எங்கு எப் போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது? இப்போதும் குமரியில் ஆங் காங்கே மதச்சண்டைகள் நடந்துதான் வருகின்றன. 1982 ஆம் ஆண்டு மண்டைக் காட்டில் மிகப்பெரிய மதக்கலவரம் இந்து - கிறிஸ்தவ மதத்தினருக்கிடையே நடந் தது. இந்நிலையில் நீதியரசர் வேணு கோபால் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் முக்கிய அம் சம் என்னவென்றால் ஒரு மத வழி பாட்டுத்தலம் இருக்கும் குறிப்பிட்ட தூரத்திற்குள் அடுத்த மத வழிபாட்டுத் தலம் அங்கு அமைக்கக் கூடாது என்பது தான். குறிப்பாக ஒரு கோவில் அருகில் அமைக்கக் கூடாது என்பதுதான். குறிப் பாக ஒரு கோவில் அருகில் ஒரு கிறிஸ் தவ தேவாலயம் அமைக்கக் கூடாது என்பதுதான்.

ஆனால் இப்போது கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிலின் கிளை (வெங்கடாஜலபதி கோவில்) அங்கு உருவாக்கப்படுகிறது ரூபாய் 22.5 கோடி செலவில் அந்தக் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே கடற்கரையில் அருகே அலங் கார உபகார மாதா கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவமத வழிபாட்டுத்தலம் இருக்கும் இடத்தில் இந்த திருப்பதி கோவில் புதிதாக அங்கு கட்டுவது சட்ட விதிமுறை மீறலாகும். நீதி அரசர் வேணு கோபால் ஆணையத்தின் பரிந்துரையின் செயலை அவமதிப்பதாகும்.

இந்த செயலை குமரி மாவட்ட நிரு வாகமும் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. மதப்பிரச்சினைகள் உள்ள இந்த மாவட்டத்தில் இந்த செயலுக்கு மதச்சார் பின்மையை விரும்புவோரும் பகுத்தறி வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.
ஒரு கோவிலுக்கு கிளை தொடங்கு வது என்பதே வியாபாரம்தானே! கோவில் ஒரு வியாபாரஸ்தலம் தானே! 5 ஏக்கர் நிலத்தையும் 22.5 கோடியையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே! இப்படி கோவிலின் பெயரில் பாழாக்கு வது எந்த வகையில் நியாயம்!

புதிதாக கோவில் கட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனு மதி வாங்கவேண்டும். இதற்கு வாங்கிய தாகக் கூடத்தெரியவில்லை. மதச்சார் பின்மைக்கும், நீதியரசரின் ஆணைக்கும் எதிராகக் கட்டப்படும் திருப்பதி கோவி லின் கட்டுமானப் பணிகளை அரசு தலை யிட்டு தடுத்து நிறுத்துமா? மதச்சார் பின்மை நிலை நிறுத்தப்படுமா? இதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

- கோ.வெற்றிவேந்தன்
திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர்

Read more: http://viduthalai.in/page-2/91491.html#ixzz3JfDsDGfo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நெய் விளக்கு

வீட்டில் ஒவ்வொரு வரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் அய்ந்து முக விளக்கேற்றி அதில் அய்ந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட் களில் வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக் கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முகதீபம் ஏற்ற வேண்டும். ஜோடிதீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதி யரின் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த விளக்கைத் துலக்குவ தற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் விளக்கைத் துலக்கக் கூடாது. விளக் கில் குபேரனும், லட்சுமி யும் குடியிருப்பதாக அய்தீகம். திங்கள் அல் லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு விளக் கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். ஓர் ஆன்மிக இதழில் கைச் சரக்கு இது.

நான்கு முக விளக் கேற்றினால் நல்லது நடக்கும். அய்ந்து முக விளக்கேற்றினால் அபாயம் காத்திருக்கிறது. ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி கள் பிரியும். ஒரு முக திரி ஏற்றினால் ஒற்றுமைப் பலனாகும் என்று நாம் எழுதினால், அது தவறு என்று நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/91635.html#ixzz3JngavGwX

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டுமாம்!

அசோக் சிங்காலின் மதவெறிப் பேச்சு!!

டில்லி, நவ.22_ விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிரு தத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியுள் ளார். கேந்திரிய வித் யாலயா பள்ளிகளில் மூன் றாம் மொழியாக கற்பிக் கப்பட்டுவந்த ஜெர்மன் மொழியை நீக்கி மத்திய அரசின் மனிதவள மேம் பாட்டுத்துறை உத்தர விட்டதன்மூலம் மத்திய அரசு கடும் கண்டனத்துக் குள்ளாகி உள்ளது. உலக இந்து மாநாட் டில் பங்கேற்க வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் மத்திய அரசின் உத்தரவுகுறித்து கூறும் போது, சரியானதுதான். அந்நிய மொழி (ஆங் கிலம்) ஒன்று போதும். நேரம் வரும்போது மேலும் பல விஷயங்கள் கட் டாயம் ஆக்கப்படும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்துமே சமஸ் கிருதத்தில்தான் எழுதப் பட்டன. அதை நீக்க வேண்டும் என்று விரும் பினால், இந்த நாட் டையே நீக்குவதற்கு ஒப்பாகும் என்றார்.

800 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு இந்து அரசின் கையில் வந்துள்ளதாம்! டில்லியில் நடக்கும் உலக இந்துமாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்துக்களின் கைகளில் வந்துள்ளது என்று பேசி புதிய பிரச் சினையைக் கிளப்பியுள் ளார். உலக இந்து மாநாடு டில்லியில் நவ.21ஆம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச் சியில் உலகில் 108 நாடு களின் இந்து மதத் தலை வர்கள் கலந்துகொண்ட தாக கூறுகின்றனர். இந்த மாநாட்டில் துவக்க நிகழ்ச் சியில் கலந்துகொண்டு பேசிய அசோக் சிங்கால் கூறியதாவது: இந்தியா 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்து நாடாக திகழ்ந்தது, அக்காலகட்டத்தில் இந் துக்கலாச்சாரம் செழித்து வளர்ந்திருந்தது, மக்கள் அவர்களுக்கான பணி களை செய்துவந்தனர். சமூகத்தில் அமைதியும் செழிப்பும் விளைந் திருந்தது. இந்த கால கட்டத்தில் முகலாயர்கள் அமைதியுடன் வாழ்ந்த இந்துக்களை வென்று தங் களின் கைகளில் டில் லியைக் கொண்டுவந்தனர். இதனை அடுத்து பெருத்த அளவில் மத மாற்றம் நடைபெற்றது. முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வந்தனர். அவர்களும் ஏழை இந்தியர்களை ஏமாற்றி மதம் மாறச்செய்து நமது கலாச்சாரத்தை முற்றிலும் சிதைத்தனர். ஆனால், இந்துமதத்தை உயிரென மதித்த இந்துமத தலை வர்கள் தங்களின் கட மையில் இருந்து தவற வில்லை, மேலும் சமூகத் தில் சிலர்(பார்ப்பனர்கள்) எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் மதக்கடமைகளில் இருந்து பிறழவில்லை இதன் விளைவாக இந்துமதம் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு இந்துமத வளர்ச்சி மதச் சார்பின்மை என்ற போலியான கொள்கை யின் கீழ் நசுங்கிக் கிடந்தது, இதற்கு முன்பு இருந்த சில அரசியல் வாதிகள் மதச்சார்பின்மை பெயரில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தினர். இந்த நிலையில் மக்கள் தெளிவுபெற்று இந்துமதத்தின் முக்கியத் துவத்தை புரிந்து கொண் டனர். இதன்விளைவாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இதன் மூலம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகவே இனி இந்துக் களுக்கு நல்லகாலம் தான் என்று பேசினார்.

மீண்டும் இந்துக்கள் மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் அனைவரும் இந்துக்கள் என்ற பேச்சை துவக்கி யுள்ளார். மோகன் பகவத் தனது பேச்சில் கூறிய தாவது: இந்த நாடு இந்துக்களின் நாடு, இதைச் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை, இங்கு பல்வேறு மதத்தவர் வாழலாம், அந்த மதங்கள் எல்லாம் அயல்நாட்டவை ஆகவே அந்த மக்களை வேறு நாட்டவர் என்று கூறமுடியுமா? அது போல் தான் இந்தியாவில் வாழ் பவர்கள் எந்த மதத்தவரா னாலும் அவர்கள் இந் துக்களே, இந்த நாடு இந் துக்களுக்கான நாடு, இங்கு வசிப்பவர்கள் இந்துக்கள் இதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடு களில் இந்துக் கலாச் சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு திட் டங்களை வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப் போகிறோம் என்று கூறினார். இந்து அரசா பாஜக? அசோக் சிங்காலின் இந்து அரசுப்பேச்சு மிக வும் சர்ச்சைக்குள்ளதாக மாறியுள்ளது, மோடி அனைவருக்குமான அரசு, என்று கூறிவரும் நிலை யில் அவரது ஆட்சிக்கு துணையாக நிற்கும் இந்து அமைப்புகள் மோடி அரசு இந்து அரசு என்று கூறியிருப்பது, மோடிக்கு மேலும் சிக்கலை உண் டாக்கிவிடும் என்றே தெரிகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/91628.html#ixzz3JnhAEugS

தமிழ் ஓவியா said...

அந்நிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாம்! ஸ்மிருதி இராணி சொல்கிறார்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனியை நீக்கிவிட்டு அங்கு சமஸ் கிருதம் கொண்டுவருவது என்ற மத்திய அரசின் முடிவிற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்விவ காரம் தொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறும் போது அந்நிய மொழிக்கு முக் கியத்துவம் கொடுக்கப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமான காரியம் என்று கூறியுள்ளார். நவம்பர் முதல்வாரம் அனைத்து கேந்திரிய வித் யாலயா பள்ளிகளிலும் மூன்றாம் மொழியாக கற்றுக்கொடுக்கப்படும் ஜெர்மனியை விலக்கி விட்டு அங்கு சமஸ்கிரு தத்தை கற்றுக்கொடுக்கும் படி மனிதவள அமைச் சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப்பிரச்சினை ஆஸ்தி ரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டிலும் எதிரொ லித்தது. மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஏஞ் சலா மார்க்கல் ஜெர்மன் மொழி நீக்கம் தொடர் பாக மறுபரிசீலனை செய்யுமாறு மோடியைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பொது நலவழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி டில்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது இந் தியாவில் இந்திய மொழி களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச்சியை ஆதரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடிமைப் பட்டவர்களாக இருந்து விட்டதால் நாம் இதை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்நிய மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர், அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் அந்நிய மொழி கற்பிக்க தனித் துறைகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் யாரும் சென்று கற்றுக் கொள்ளலாம். ஜெர்மன் மொழியை நீக்கி சமஸ்கிருதம் அல் லது வேறு இந்திய மொழி யைக் கொண்டு வருவது என்பது இந்தியாவை முழுமையாக அடிமை மனநிலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஒன்றுதான் இது, நாம் இதைச் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? என்று அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/91632.html#ixzz3JnhNPbnE

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்................

1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...

இரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -


ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தால் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தால் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லறை சில்லறை யாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்கு வதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்க கூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளு வார்கள்.

ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம் என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91620.html#ixzz3Jnl3lbFv

தமிழ் ஓவியா said...

புரட்டு! சுத்தப்புரட்டு!!

நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப் பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல.

நம்மைக் கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 25.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlQKiRL

தமிழ் ஓவியா said...

சி.இராஜகோபாலாச்சாரியின் ஜாதிப் பிரச்சாரம்


உயர்திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி இந்து பத்திரிகையில் ஜாதிக் கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதைச் சர்க்காரார் ஆட்சேபிப்பதற்குச் சமாதானம் எழுதும் முறையில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப்பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

உண்பது, பருகுவது, மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப்படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும் வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாய மென்றும் வற்புறுத்துகிறார்.

மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். காங்கிரஸ் வருணாசிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபனமென்று நாம் கூறி வருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச் சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப்பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசியமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழு தாவது பொது ஜனங்கள்கண்டு கொள்வார் களென்று நம்புகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாதென்றும் பறையடிப் பவர்கள் ஜாதிப்பஞ்சாயத்துகள் மூலம் பலவந்தத்தை உபயோகிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணயமுண்டா?

ஜாதிக் கட்டுப் பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா? தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத் திற்கும், பெண்ணடிமைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டுமென்று கருதுகின்றோமோ அதைக் காப்பாற்ற வேண்டும்,

என்பதும், அதன்மூலம் செய்யப்படும் கொடுமையாலும், பலாத்காரத் தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டுமென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.

குடியரசு - கட்டுரை - 13.09.1931.a

Read more: http://viduthalai.in/page-7/91615.html#ixzz3Jnlb8Hvj

தமிழ் ஓவியா said...

முன்னாள் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு விலகியது சாமியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாம்!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னேடுத்துச் செல் கிறது. தனக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்றிக் கடன் செலுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கோடீஸ்வர சாமியார் ராம்தேவ் பாபாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சசின் பைலட், நவின் ஜிந்தால் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர்களாக சசின் பைலட், நவீன் ஜிந்தால் போன்ற அமைச்சர்களுக்கு பாதுகாப்பு என்பது தேவையற்ற செலவுகளாகும், தற்போது அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக் கான உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) விலக்கிக் கொள்ளப் படுகிறது. இது குறித்து அவர்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து விட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

சாமியாருக்கு இசட் பிளஸ் கருப்புப் பணப் புகழ் ராம்தேவ் பாபாவிற்கு மத்திய உள்துறை அமைச் சகம் இசட் பிளஸ் வழங்க உத்தர விட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது பாபா ராம்தேவ் நாட்டு நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர்.

அவருக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பகைவர்கள் உள்ளனர். சமீப காலமாக தீவிரவாதிகளிடம் இருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிரட் டல்களை மனதில் கொண்டு ராம்தேவ் பாபாவிற்கு உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) வழங்க உத்தரவிட்டுள் ளோம் இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வருகிறது. இதன்படி ராம்தேவ் பாபாவிற்கு 24 மத்திய படை வீரர்களுடன் 10 சிறப்பு கமெண்டோ படை வீரர்களும் ஒரு மருத்துவ வாகனம் மற்றும் முழுமை யான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய ஒரு சிறப்பு வாகனம் எப்போதும் உடனிருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராம்தேவ் பாபாவிற்கு மகராஷ்டிரா, ஹரியானா, உத்தராகண்ட், உபி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தனது குரு சங்கர்தேவ் பாபா மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வு துறை (சிபிஅய்) ராம்தேவ் பாபா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கனடா நாட்டிற்கு அருகில் சுமார் 300 கோடி மதிப்பிலான தீவை இவர் 2008-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page2/91588.html#ixzz3Jnm6GIfJ

தமிழ் ஓவியா said...

விபரீதப் படைப்பு

- கவிவேந்தர் கா. வேழவேந்தன்

அன்றொரு நாள் சாய்மாலை, கடலோரம் நடந்தேன்!
அலைகள்வந்து கால்வருடத் தனிமையிலே அமர்ந்தேன்!
தென்திசையின் மென்காற்றால் கண்ணயர்ந்து போனேன்!
திடீரென்றே எங்கிருந்தோ பேரொளியைத் தேக்கிப்
பொன்வடிவில் ஒருமங்கை என்எதிரில் நின்றாள்!
பூவையவள் யாரென்றே ஆவலுடன் கேட்டேன்.
இன்றுள்ள வையகத்தைப் படைத்தவள்நான்! என்றாள்.
ஏகடியம் இழைந்தோட வினாக்கணைகள் தொடுத்தேன்:
படைத்தஇக் கோளத்தில் மூன்றிஇரு பகுதி
பயனில்லா உவர்நீரால் நிறைத்ததுமேன்? கடலால்
உடைத்திட்டக் கண்டங்கள் சரிசமமாய் இன்றி,
உருவத்தால், உளவளத்தால் வேறுபடல் நன்றா?
வடதுருவத் தென்துருவப்ப் பகுதிகளில் எல்லாம்
வசிப்பதற்கே இயலாமல் பனிஉறையச் செய்தாய்!
சுடுநெருப்பை நிதம்உமிழும் எரிமலை ஓர் பக்கம்;
துயர்கூட்டும் கடும்பாலை மறுபக்கம்! ஏன்? ஏன்?
நெல்லூரைக் கரும்பூரை நீ படைத்தாய் என்றால்,
நெருஞ்சியூர் கள்ளியூர் ஏனிங்கே படைத்தாய்?
நல்லசுவை மாங்கனியைப் பலாக்கனியைப் படைத்தாய்;
நச்சுமிழும் எட்டியினை உடன்படைத்த தேன், நீ?
கொல்லைமலர் முல்லையினால் கொள்ளைமணம் தந்தாய்:
கூடஇங்கே எருக்கம்பூ பூப்பதனால் பயன்ஏன்?
நல்லவர்கள் சிலர் படைத்து நலம் தழைக்கச் செய்தாய்!
நஞ்சுநெஞ்ச வஞ்சகரை உடன்படைத்த தேன்? ஏன்?
விதம்விதமாய் மதங்களினைச் சாதிகைளப் படைத்து,
விபரீதம் விளைவித்தாய்! எரிகிறதே பூமி!
நிதம்நிதமும் மதவெறியர் பிணவாடை பிடிக்க,
நிணச்சேற்றில் ஆடுகின்ற வெறிக்கூத்தும் ஒன்றா?
மதிகெட்ட சதிகாரி நீ செய்த செயலால்
மண்வையம் குருதியினால் சிவக்கிறதே! என்றேன்!
அதுதானே என்பொழுது போக் கென்றே கூறி,
அவள்மறைந்தாள்! அலைக்கரங்கள் எழுப்பியதே என்னை!

Read more: http://viduthalai.in/page2/91587.html#ixzz3JnmGPEuU

தமிழ் ஓவியா said...

எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் இட மதிப்பு ரூ. ஒரு லட்சம் உண்மைதான்

- மு.வி.சோமசுந்தரம்

இடம் தேவை

தமிழகத்தின் தலைநகரில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடம் எழும்பூர் தொடர் வண்டி நிலையம். இந்த கட்டடத்தைக் கட்ட இந்த இடம், அன்று தென்னிந்திய ரயில் நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த அமைப் புக்குத் தேவைப்பட்டது.
110 ஆண்டுகளுக்குமுன் மதராஸ் இணை ஆட்சியர், ஜே.ஆர்.கூம்பஸ் J.R.Coombes
இந்த இடத்தின் உரிமை யாளருக்கு 1894, சட்டப்பிரிவு 1 இன் அடிப்படையில் அவரின் இடத்தை விற்பதற்குத் தடையேதும் உள்ளதா என்று கேட்டுக் கடிதம் எழுதினார்.

உரிமையாளர்

1.83 ஏக்கர் நிலப்பரப்பு இடத்தில் பல கட்டிடங்களுடன் கூடிய இடத்தின் உரிமையாளர் மருத்துவர் புளுனே ஆன்டே (Dr.Pluney Andey) இவர், திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் சிறப்பான மருத்துவசேவை 30 ஆண்டுகள் செய்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார். அவர் பணியில் இருக்கும் போது, அவரின் மனைவியின் வடிவ மைப்பிலும் மேற்பார்வையிலும் கட்டப் பட்ட வீட்டில் மருத்துவர் புளுனே அவரின் மனைவி திருவிதாங்கூரில் இறந்த பிறகு தங்கி வசித்து வந்தார்.

மதராஸ் இணைஆட்சியரிடமிருந்து அவரின் இடத்தை விற்பனைக்குக் கேட்டு வந்த கடிதத்துக்கு மருத்துவர் புளுனே ஆன்டே தன் சொத்தை விற்ப தற்கான தயக்க மனநிலையை விளக்கி 15, பிப்ரவரி 1904 இல் கடிதம் எழு தினார்.

தயக்கத்தின் காரணம்

அந்தக் கடிதத்தில் அவரின் இடத்தை விற்பதற்குத் தயங்கும் காரணங்களையும், அவரின் முடிவையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய உடல் நலம் பேணவும், பணியில் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ அந்த இடத்தில் வசிப்பதாகக் கூறினார். மேலும், என் மனைவி விரும்பிக் கட்டிய வீட்டில், அவர் நினைவாக வாழ விரும்புகிறேன். நான் கட்டடத்தை விரி வாக்கி, பழத்தோட்டம் அமைத் துள்ளேன். நான் இந்திய தேசிய கிறித் தவ சபையை நிறுவி அதன் தலைவராக உள்ளேன். நான் பணி ஒய்வு பெற்ற பிறகு, இந்திய கிறித்துவ தேவால யத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எழும்பூரில் உள்ள என் வீடு என் நிறுவனத்தின் தலைமையகம், இங்குள்ள என் கட்டிடம் ஒன்று வழி பாட்டுக் கூட்டம் நடத்த பயன்படுத்தப் படுகிறது. கடந்த காலத்தில் இரண்டு மத அமைச்சர்கள் சபையில் சேர்க்கப் பட்டுள்ளனர், மய்யப்பகுதியில் அமைந் துள்ள இந்த இடத்தில், பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் கோயில் அமைய பல கட்டிடங்கள் கட்ட உள் ளேன். இவை கிறித்துவ சமுதாயத்துக் கான ஏற்பாடு, இத்தகைய விசாலமான இடம் மய்யப்பகுதியில் கிடைக்குமா? வேறு தூரமான இடத்துக்கு மாற்றப் பட்டால், வழிபாட்டுக்கு வரும் மக் களுக்கு வசதிக் குறைபாடு ஏற்படும்.

ரயில் நிலையம் அமைக்க என் சொத்து கட்டாயம் தேவை என்று கருதினாலும், சட்டவிதிப்படி அரசு என்னை கட்டாயப்படுத்தினாலும், என் சொத்துக்கான இழப்புத் தொகையாக ஒரு லட்சத்துக்குக் குறையாமல் வழங்குவதோடல்லாமல். இடத்தை காலி செய்ய போதுமான கால அவகாசமும் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

போட்மெயில் புறப்பட்டது

மருத்துவர் புளுனே ஆன்டேயின் வேண்டுகோள் விரைவாகவும், மகிழ்ச்சி யாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தகைமையுடனும் அலட்சியப் படுத்தாமலும், விரைவாக சொத்து ஒப்படைக்கப்பட்டது. ரயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கிருந்து முதல் தொடர்வண்டி - (நீராவி இன்ஜின் இழுத்து செல்ல) போட் மெயில் (BOAT MAIL)ஜூன், 11, 1908இல், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, மக்களுக்கு களிப்பை யும், பூரிப்பையும் ஏற்படுத்தி உருண்டு சென்றது.

(தி இந்து 20.10.2014 இதழில், சென்னை நகர் தொடர் வரலாறு வழங்கும் திரு எஸ்.முத்தையா அவர்கள் வழங்கிய செய்தித் தமிழாக்கம் - நன்றி)

இந்த பழைய போட்மெயில், தூத்துக்குடி வரை சென்று, அங்கிருந்து கொழும்புக்குச் செல்ல (நீராவிக்கப்பல் மூலம்) வசதி செய்து தந்தது. 1914 இல் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு, போட்மெயில் தனுஷ்கோடி வரை சென்றது. 1964 இல் ஏற்பட்ட புயலால், போட்மெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது முத்து விரைவுத் தொடர் வண்டி, தூத்துக்குடி செல்கிறது.

Read more: http://viduthalai.in/page2/91586.html#ixzz3JnmQmRXQ

தமிழ் ஓவியா said...

டாக்டர் இஸ்லாம் கணிப்பு


வரலாற்றின்படியும், மொழி அடிப்படையிலும் தமிழ்மொழியானது. இந்தியாவிலேயே மிகத் தொன்மையானது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் பொறுத்தமட்டிலும்கூட இது உண்மையேயாகும். ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தமிழர்களின் மூதாதையர்கள் இங்கு நிலைத்து வாழ்ந்துவந்தனர். சிறந்த கலாச்சாரத்தை வளர்த்து வந்தனர். ஆரியர்கள் உட்பட இந்தியாவில் குடியேறிய அனைத்து மக்களிடையிலும் தமிழர்களுடைய கலாச்சாரத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்தது.

- ஆதாரம்: டாக்டர் இஸ்லாம் - (பங்களாதேஷ் அறிஞர் இந்து 30.1.1981

Read more: http://viduthalai.in/page3/91590.html#ixzz3JnnFW3Y8

தமிழ் ஓவியா said...

இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெங்க் பேண்டிங்

இன்சுலினை கண்டு பிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற விஞ் ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி இன்று வயது வேறுபாடின்றி அனைவருக்கும் வரும் நோயாக மாறிவிட்டது.

இந் நோயை முழுதாக குணமாக்க முடியாது.மருத்துவரின் ஆலோசனை மற்றும் சரியான உணவுக் கட்டுப்பாடு மூலம் இந்நோயின் தொடர் விளை வுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். வயது வேறுபாடு, தகைமை, தராதரம், பாலின பேதம், செல்வம், வறுமை, நகரம், கிராமம் என வேறு பாடின்றி நீரிழிவு நோய் வேகமாக பரவி வருகிறது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் பன்னாட்டளவில் முன்னெடுக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், அய்க்கிய நாடுகள் சபை, இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடை யாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டி ருக்கிறது. நீலநிறத்திலான வளையம், நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்த படியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே அய்க்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித் துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை அய்க்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-இல் 36 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பன்னாட்டளவில் நீரிழிவு நோயாளி கள் அதிகம் உள்ள 10 நாடுகளில் இந்தியாவில் தான் அதிக அளவு நீரழிவு நோயாளிகள் உள்ளனர். இரண்டாமிடத்தில் சீனா, இதனை அடுத்து அமெரிக்கா, இந்தேனேசியா, ஜப்பான், பாகிஸ்தான், ரஷ்யா, பிரேஸில், இத்தாலி, பங்களாதேஷ் ஆகியவை உள்ளன. முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலோருக்கு இல்லை.
நீரிழிவு நோய் என்றால் என்ன?

உடலில் உள்ள திசுக்களின் தேவை யான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப் படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவ தில்லை. இதனால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது. நீரிழிவு நோய் உடையவர்கள் சரியான முறையில் மருத்துவ ஆலோசனை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் நீண்ட நாட்கள் எந்த பாதிப்பும் இல் லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Read more: http://viduthalai.in/page4/91593.html#ixzz3Jnnx0BMs

தமிழ் ஓவியா said...

குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு


ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்களின் முன்னால் நிற்க வைப்பதும், அணி வகுப்பு நடத்துவதும் அவர்களை காயப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக்கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வின் தலைமையில் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின் டன் நாரிமேன் ஆகிய மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதி பதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப் படும் வரைஅவர் அப்பா வியே; ஆனால் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை ஊடகங்களின் முன்னால் நிறுத்தி பேட்டி அளிப்பதும், அணிவகுப்பு நடத்துவதும் அவரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். விசாரணை நடக்கும் போதே ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது இனியும் நடக்கக்கூடாது.

இது ஒரு கடுமையான விசயமாகும். இப்பிரச்சினை அரசியல் சட்டப்பிரிவு 21இன் கீழுள்ள உயிர்வாழும் உரிமை மற்றும் சுதந்திரத் திற்கும் சுதந்திரமான விசாரணை உட்பட அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சாட்சி களின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையை பாதிப்பதாகும். அவருக்கு எதிரான களங்கத்தை உருவாக்கவே அது பயன்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் அதற்கு இணையாக ஊடகங்கள் வழக்குப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வழக்கின் முடிவில் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாதுகாக்க மற்ற நாடுகளில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page5/91595.html#ixzz3JnoKz6Rp

தமிழ் ஓவியா said...

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
- குபேரன்

உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

தமிழ் ஓவியா said...

ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும். இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!

தமிழ் ஓவியா said...

நீங்களும் அம்பானி ஆகணுமா? மோடியின் பிரிமியம் திட்டம்


அம்பி: கிட்டு மாமா, பக்கத் தாத்து பாச்சா, நேத்து வரைக்கும் நம்மளை, நிமிர்ந்து பாக்காம போயிண்டுருந்தான். இன்னைக்கு என்னைப் பார்த்து, விரைச்சுண்டு நடக்குறான். ஏன் மாமா? அவ னுக்கு என்னாச்சு?

கிட்டு மாமா: அது ஒன்னும் இல்லைடா அம்பி. பாச்சா, பண்டி கைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னானோல்லியோ, அதுக் கொசரம், பிரிமியம் ரயில்ல டிக்கெட் எடுத்துட்டான்னு, இம்புட்டு அலட்டிக்கிறான்.

அம்பி: அப்படியா மாமா, அது என்ன பிரிமியம் ரயில் டிக்கெட்.

கிட்டு மாமா: அது வேற ஒன்னும் இல்லைடா, நம்ம மோடி இருக்காருல்ல.

அம்பி: யாரு, நம்ம பிரதமர் மோடியா மாமா.

கிட்டு மாமா: அம்பி, அவரை பிரதமர்னு சொன்னா அவருக்கு பிடிக்காது. நான் டீ ஆத்துனவன், கீழே இருந்து மேலே வந்தவன், மக்களையெல்லாம், அம்பானி ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறேன்னு, தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்ல, அவருதான். அவர் அறிவிச்ச, புதுத் திட்டம் தான் இந்த பிரிமியம் ரயில் திட்டம்.

அம்பி: அவ்வளவு கஷ்டமா மாமா, பிரிமியம் டிக்கெட் எடுக்கறது.

கிட்டு மாமா: பின்ன என்னடா, அம்பானி, அதானியெல்லாம், பிரிமி யம் ரயில்ல டிக்கெட் எடுக்கறதுக்கு பதிலா, பேசாம, தனி விமானத் துலேயே, போயிடலாம்னு பேசிண்டு ருக்காள்னா பாத்துக்கேயேன். அதான், நம்ம கிச்சா இப்படி விரைச்சுக்கிட்டு நடக்குறான்.

அம்பி: எனக்கும் பிரிமியம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுங்கோ, மாமா. ஆசையாயிருக்கு.

கிட்டு மாமா: உன் ஆசையிலே, தீயை வைக்க, ஏண்டா அம்பி, நமக்கு இருக்குறது ஒரு வீடுதாண்டா. அதை வித்துகூட, டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கு.

இந்த பிரிமியம் ரயில்ல போறவாள் லிஸ்டை, வருமான வரித்துறையே கண்காணிக்கும் போலடா, ஏன்னா, இம்புட்டு காசு கொடுத்து, போறாளே, இவா எல்லாம் வரி கட்டிருக் காளான்னு, செக் பண்ணுவா போல இருக்குடா அம்பி.

அம்பி: அப்பா, நாம அம்பானி ஆக முடியாதா மாமா.

கிட்டு மாமா: அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்டா அம்பி. எதுக்கும் நம்ம பாச்சாவை சேவிச் சுட்டு, அவன் ஜோபியிலே இருக்குற, பிரிமியம் ரயில் டிக்கெட்டை, கையில் எடுத்து ஒத்திக்கோ, அது தாண்டா, இப்பதைக்கு நம்மால முடியும். பகவான், நம்ம தலையிலே, அம்புட்டுதாண்டா எழுதியிருக்கான். ஆனா, கவலைப்படாதேடா, அம்பி அம்போ நீ அப்படின்னு திட்டம் ஏதாவது மோடி கொண்டு வரு வார். அதுல நாம சேர்ந்திடுலாம். இப்ப புரியுதா அம்பி, நோக்கு.

அம்பி: இது தானா மாமா, மோடி கொண்டாந்த, அம்பானி ஆகற. பிரிமியம் திட்டம் ரயில் கூட்டத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு. ஏறுன எல்லாரையும் அம் பானி ரேஞ்சுக்கு ஆக்கினது மாதிரியும் ஆச்சு. பேஷ், பேஷ், நேக்கு நன்னா புரியுது.

Read more: http://viduthalai.in/page7/91601.html#ixzz3JnpxorN2

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்) ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnqkimUm

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி....

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்

தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப் படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க. (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnquMVUV

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3Jnr2tIs2

தமிழ் ஓவியா said...

காந்தியார் புகுத்திய குழப்பம்

ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை.

மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம். பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

(நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3JnrDjgyc

தமிழ் ஓவியா said...

காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம் திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது


காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம்
திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது
கழகத் தலைவர் அறிக்கை

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை களைக் கட்டுவதை தடை விதிக்கக் கோரி காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற் கின்றனர். கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் விவசாயிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தஞ்சை யிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகம் ஆர்ப் பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள் ளனர். காவிரி ஆற்று பாதுகாப்பு விவசாயத் தலைவர் தனபால் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது - அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் கட்சியில்லை பேதமில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்நாட்டின் நலன் தான் இதில் மய்யப் புள்ளி! இந்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடுவோம் - வெற்றி பெறுவோம்! நமது வாழ்வாதாரப் பிரச்சினையில், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21-11-2014

Read more: http://viduthalai.in/page1/91545.html#ixzz3JoEDkg5A

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சிவராத்திரி மகிமை

மகாசிவராத்திரி அன்று காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவனை புலி துரத்தியது. புலிக்கு பயந்து, வில்வ மரத்தில் ஏறிய வேடன், தூங்கி னால் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடு வோம் என்பதால், மரத் தில் இருந்து ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டபடி தூங்காமல் இருந்தான். அன்றைய தினம் சிவராத்திரி. மேலும் அவன் இருந்தது ஒரு வில்வ மரம் ஆகும். அந்த மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந் தது. வேடன் பறித்து போட்ட வில்வ இலையா னது, லிங்கத்தின்மீது விழுந்து ஈசனை அர்ச் சித்துக் கொண்டிருந்தது. சிவராத்திரி தினத்தில் நான்கு சாமங்களிலும் விழித்திருந்தான் அந்த வேடன். தெரியாமல் செய்தாலும்கூட ஈசனை அர்ச்சித்த வேடனுக்கும், வேடனை கொல்லத்தான் என்றாலும் வில்வ மரத் தையே அன்றிரவு முழு வதும் சுற்றி வந்த புலிக்கும், முக்திப் பேறு அழித்து அருளினார் சிவபெருமான். இந்த வரலாறு ஓமாம்புலியூர் தலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அற்பம் வில்வ இலைக்காகவெல்லாம் தற்பெருமை கொள்பவன் சந்தோஷப்படுபவன் கடவுள் என்றால் அவன் எப்படி விருப்பு - வெறுப் புகளுக்கு எல்லாம் அப் பாற்பட்டவன்?

Read more: http://viduthalai.in/page1/91548.html#ixzz3JoEOoo7s

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி? கலைஞர் பேட்டி


சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி - செய்தியாளர் கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு: அப்போது, மீனவர்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கலைஞர் அவர்கள்; அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு: செய்தியாளர் :- இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அய்ந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி? கலைஞர் :- அது பற்றிய செய்தி வந்த அன்றே அதை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

செய்தியாளர்:- இன்று அவர்களுடைய விடுதலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதே?

கலைஞர்:- அது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

செய்தியாளர்:- தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை பற்றி என்ன கூறு கிறீர்கள்?

கலைஞர்:- தமிழ்நாட்டிலா? சட்டமா? ஒழுங்கா? செய்தியாளர்:- முல்லைப் பெரியாறு பிரச் சினையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பற்றியும் நமது அதிகாரிகள் அங்கே தாக்கப்படுவது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இது பற்றியும் ஏற்கனவே விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அதன் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/page1/91544.html#ixzz3JoEXTwre

தமிழ் ஓவியா said...

நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்

மனிதன் வன விலங்குகளை வேட் டையாடிக்கொண்டு இருந்த போது கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீன்பிடித்தொழிலை வேட்டைத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர்.

நாம் வாழும் பூமி 71 விழுக்காடு ஆனது பெருங்கடல் நீரால் மூடப்பட் டுள்ளது. இதற்கு பெருங்கடல் பெரிதும் உதவியாக இருந்தது. மீன்கள் உணவிற் காக மாத்திரம் அல்ல கடலைச் சுத்தப் படுத்தும் பணியிலும் நமது பூமியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கடல் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்கள் பல்வேறு அரிதான செயல்களைச் செய்து வருகின்றன

மீனினங்களின் இத்தகைய பணியைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மீன்வள நாள் கொண்டாடப்படுகிறது

உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்கள் மீன்களின் மூலம் பெறப்படும் புரதச்சத்தை நம்பி உயிர்வாழ்கின்றனர். ஒரு ஆண்டிற்கு உலக மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமா னோர் (அதாவது) உலக மக்களில் 8 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்வா தாரத்திற்கு மீன்பிடித் தொழிலை நம்பி யுள்ளனர் உலகில், மீன்களில் 90 விழுக்காட்டிற் கும் அதிகமானவை பெருங்கடல் மற்றும் வளைகுடாக்களிலும் பிடிக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் சிலிநாட்டின் பெருஎல்லைக்கருகில் உள்ள கடற்கரை மீன் பிடி நிலையமான ஏஞ்சோல் மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும். கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன் பிடியானது 4 மடங்காக அதிகரித் துள்ளது. 1950ஆம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த மீன்பிடியானது 1992ஆம் ஆண் டளவில் 82.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

அய்.நா சபையின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சி யடைந்துள்ளது அல்லது அளவுக் கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப் படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழி லானது மீனின் வாழிடங்கள் அழிக்கப் பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அய்.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70 விழுக்காடு மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட் டினால் பிடிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/91539.html#ixzz3JoFRNlM4

தமிழ் ஓவியா said...

கருநாடகக் கோவில்களில் தீண்டாமை


கோலார், நவ.21_ கரு நாடகத்தின் இந்து அறநிலையத் துறை முஸ் ராய் என்றழைக்கப்படும். இந்தத் துறையின்கீழ் நூற் றுக்கணக்கான கோவில் கள் உள்ளன. அவற்றுள் கோலார் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

அதுகுறித்துக் கருத்தறி வித்துள்ள முஸ்ராய்த் துறை துணை ஆணையர் திரிலோகசந்திரா, இதுகுறித்துக் குற்ற சாட்டுகள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள் ளார். மேலும் அவர், தாழ்த் தப்பட்டோருக்குக் கோவில்களில் அனுமதி மறுப்பது மிகவும் கேடான நடவடிக்கை ஆகும்.

தீண் டாமையைக் கடைப்பிடிப் பவர்கள்மீது குற்றசாட்டு களைப் பதிவு செய்திடுவீர் என்று தாழ்த்தப்பட் டோர் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அவர் குறிப்பாக முஸ் ராய் துறையின்கீழ் வரும் கோவில்களைப்பற்றி மட் டுமே இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலார் மாவட்டத் தில் இயங்கும் தாழ்த்தப் பட்டோர் அமைப்பைச் சார்ந்தவர்கள் உயர் ஜாதி யினர் வீடுகளில் நுழையும் நிகழ்ச்சியை, கிரகப் பிர வேசம் என்னும் பெயரில் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோவில் களில் மட்டுமல்லாது எந்த இடத்திலுமே தீண் டாமை கடைப்பிடிக்கப் படக் கூடாது; அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டால், யார்? எவர்? என்று பார்க் காமல் தீண்டாமை ஒழிப் புச் சட்டம் பாயவேண் டும். குற்றம் புரிவோர் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத் தாகும்.

முஸ்ராயின்கீழ் வரும் கோவில்களுள், மங்களூரு மாவட்டத்தில் உள்ள குத் ரோலி கோகர்ணானந்த் கோவிலில் கைம்பெண் கள் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டதும், அத னையே முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடகத்தில் உள்ள மற்ற முஸ்ராய் கோவில்களிலும் எதிர்ப் பில்லை என்றால் பெண் அர்ச்சகர்கள் அமர்த்தப் படுவார்கள் என்றும் மாநில முதல்வர் சித்தரா மையா கூறியதும் குறிப் பிடத்தக்கன.

எனவே, கருநாடக மாநிலத்தின் அறநிலையத் துறையான முஸ்ராய்த் துறையே, குற்றச்சாட்டு களுக்காகக் காத்திராமல் தானே முன்வந்து புல னாய்ந்து எந்தக் கோவில் களில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது என் பதை ஆய்ந்து தக்க நட வடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/91576.html#ixzz3JoH4OohT