Search This Blog

3.5.09

பார்ப்பனர்கள் செய்து கொண்ட சுயமரியாதைத் திருமணம்




ஈரோடு பெரியார் மன்றத்தில் 24.4.2009 வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம். இரா. ராஜா - பாகீரதி இணையர்கள் ஆகியோருடன் மாவட்டத் தலைவர் கோ. பாலகிருஷ்ணன் மணமகனின் தந்தை இராமசுந்தரம் அய்யர், மாவட்டச் செயலாளர் த. சண்முகம், பேராசிரியர் ப. காளிமுத்து கா.பா. ஆறுமுகம், இனியன் பத்மநாபன் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களது ஒப்புதலோடு சுயமரியாதைத் திருமணத் தகவல் மய்ய மாநில அமைப்பாளர் திருமகள் அவர்கள் ஈரோட்டில் சுயமரியாதைத் திருமண தகவல் மய்யத்தைத் தொடங்கினார்.

ஈரோடு பெரியார் மன்றத்தில் இயங்கி வரும் இத்திருமணத் தகவல் மய்யம் இது வரை 73 வாழ்விணையர்களுக்கு சுயமரி யாதைத் திருமணம் நடத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். மய்யத்தோடும் தொடர்பு வைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள் என்பது சிறப்பு.

ஆணும், பெண்ணும் சமம் எனும் வாழ்வியல் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பது சுயமரியாதைத் திருமணம். சுயமரியாதை, தன்னம்பிக்கையுள்ள மக்களாக உருவாகவேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தை ஆயிரக் கணக்கில் நடத்தி வைத்துள்ளார்கள்.

புரோகிதப் பார்ப்பனர்கள் நடத்தி வைக்கின்ற திருமணமே செல்லும்; அதுவும் புரோகித மந்திரம் சொல்லி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தீவலம் வந்து தாலி கட்டினால்தான் திருமணம்; அதுதான் சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றங்களே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்.

அவற்றை மீறி அய்யா பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். 1967-இல் அய்யாவின் பகுத்தறிவுக் குடும்பத் தலைமகன் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவந்து அய்யாவுக்கு ஆட்சியையே காணிக்கையாக்கினார்கள்.

சுயமரியாதைத் திருமண முறையே அறிவுக்குப் பொருத்தமானது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதனை இப்பொழுது பார்ப்பனர்களே புரிந்து உணர்ந்துள்ளார்கள்.

கடந்த 24.04.2009 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் ரா.ராஜா - பாகீரதி என்ற இணையாக்குச் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்கள் இருவருமே பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மணமகன் ராஜா எம்.சி.ஏ., எம்.பி.ஏ., முடித்துள்ளார். ஈரோடு வீரப்பன்சத்திரம் - மணமகள் பாகீரதி பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்துள்ளார். (கும்பகோணம்) குட முக்கைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் உள்ளார்.

இந்தச் சுயமரியாதைத் திருமணத்திற்கு ஈரோடு மாவட்டத் தி.க. தலைவர் கோ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து அவர்கள் முன்னிலை வகித்து மணமக் களுக்கு அறிவுரை வழங்கினார். ஈரோடு மாவட்ட தி.க. செயலாளர் த.சண்முகம் திருமண உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்தி வைத்தார். மாலை மாற்றிக் கொண்டனர். தாலி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
.

மணமக்கள் நன்கொடை: விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா ரூ. 1270; நாகம்மை குழந்தைகள் காப்ப கத்திற்கு ரூ.1000 சு.ம.திருமண மய்யத்திற்கு பதிவுக்கட்டணம் ரூ. 300. மொத்தம் ரூ. 2570 பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குத் திரு மணத்தை நடத்தி வைக்கும் நிலைமாறி நாமும், பார்ப்பனர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கின்ற நிலை வந்திருக்கிறது. ஆம், பெரியார் வென்றிருக்கிறார்!

பெரியாரியல் என்பது உயர்ந்த - பண்பட்ட வாழ்வியல் கோட்பாடு.

---------------தகவல்: த. சண்முகம், ஈரோடு- நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 2-5-2009

3 comments:

? said...

பார்ப்பனர்களுக்குள் திருமணம் செய்யவா பெரியார் வலியுறுத்தி உள்ளார்..

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கல் வைதீகத் திருமணத்தை கைவிட்டு சுயமரியாதை திருமணத்தை அதுவும் தாலி இல்லாமல் திருமனம் செய்துள்ளார்கள். பார்ப்பனர்கள் தான் திருமனம் செய்து வைத்தால்தான் திருமணம் செல்லும், மரியாதை நிலமை என்பது மாறி பார்ப்பனர்களுக்கு நம்மவர்கள் செய்து வைக்கும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கும் போது நிலைமை மாறியுள்ளது.



கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த (பார்ப்பனர்) பி. ராமமூர்த்தி அவர்கள் பெரியார் தலைமையியில்தான் திருமனம் செய்து கொண்டார் என்ற தகவலும் உற்று நோக்கத்தக்கது.

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்