Search This Blog

19.5.09

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்




ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்


பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கும், ராஜபக்சே தலைமையிலான சிங்கள இன வெறி அரசு, அதனை மறைத்துத் திசை திருப்பும் நோக்கத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக ஒரு வதந்தியை உலகெங்கும் பரப்பி வருகின்றது.

இலங்கைக்கே உணவளித்துக் கொண்டிருந்த வன்னிப்பெருநில மக்கள், இன்று உணவின்றியும், குடிநீர் இன்றியும், காயங்களுக்கு மருந்தின்றியும் பேரவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அம்மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமை, உலகத் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கே உரியதாக உள்ளது.

இச்சூழலில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கும், ஜனநாயக உரிமைகளை அவர்கள் பெற உதவுவதற்கும், தமிழ் மக்களைக் கொன்றொழித்து வரும் ராஜபக்சே என்னும் போர்க் குற்றவாளியை அனைத்து நாடுகளின் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் உரிய முயற்சிகளை எடுக்க, திராவிடர் கழகத் தலைவர் திரு கி.வீரமணி தலைமையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் தொடங்கப்படுகிறது.

சர்வதேச இயக்கமாக விரிவு பெறவிருக்கும் இவ்வியக்கத்தில், திரு தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகளும், திரு சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. ஒத்த கருத்துள்ள பல்வேறு இயக்கங்களும், இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு அழைக்கப்படுகின்றன.





--------------நன்றி:-"விடுதலை"19-5-2009

1 comments:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அடேங்கப்பா.ஒரு பக்கம் மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிப்பது,இன்னொரு பக்கம் ராஜபக்சேயை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியே தீருவோம் என்று சூளுரைப்பது.செமத்தியா கபட நடகம் ஆடுவதில் தாடிக்காரன் கொள்ளை அடித்து சேர்த்த, சொத்தைக் கபளீகரம் செய்து, நோகாமல் வாழும் பாசறை சூரமணியும்,அவனது ஆஸ்தான நாய்களான ஓவியா,தமிழன் போன்றவர்களும் செம கில்லாடிங்க தான்.இந்த இயக்கத்துல போண்டாத் தலையன் சு ப வீரபாண்டியன்,கருஞ்சட்டித் தலையன் திருமா போன்ற பன்றிகளும் இருக்காங்களா?பேஷ்.

பாலா

அது சரி.ப்ளாட்பாரம் ஜோசியன் கணக்கா நம்ம தலைவர் பல தலைவர்களோடு நெருக்கமா இருப்பது போல் ஃபோட்டோ எடுத்து ஃபிலிம் காட்டறீங்களே,நல்ல காமெடி.

என்றைக்கு தமிழர்களுக்கு, தெளிவு ஏற்பட்டு,மனம் திருந்தி,உங்கலைப் போன்ற வெறி நாய்களை சோமாலியாவுக்கு துரத்தப் போறாங்களோ தெரியவில்லை.