Search This Blog

22.5.09

நட்சத்திரங்கள் - கிரகங்கள் மனிதர்களை ஆட்சி செய்கின்றனவா?




மனிதர்களை ஆதிக்கம் செய்வது 27 நட்சத்திரங்கள். அதன் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள். மனிதன் பிறந்ததிலிருந்து கிரகங்கள் அவனுடைய வாழ்க்கையை நிர்ணயித்து வருகின்றன என்று சோதிடர்கள் சொல்லுகின்றனர்.

சோதிடர்களின் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. நட்சத்திரங்கள் பேராற்றல் கொண்டவைதான். அங்கிருந்து கதிர் வீச்சுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தக் கதிர் வீச்சுகள் பூமியை எட்டுகின்றனவா? நட்சத்திரங்களிலிருந்து கதிர் வீச்சுகள் பூமியை வந்தடைந்தால் பூமியில் மனிதயினமே வாழமுடியாமல் போகும்!

சூரியன் நமக்குப் பக்கத்திலே இருக்கின்ற சிறிய நட்சத்திரம்! 15 கோடி கி.மீ. தூரத்தி லிருக்கும் சூரியனில் ஹைட்ரஜன், ஹீலியம் நிறைந்துள்ளதால் அணுக்கதிர் வெடிப்பாகி வினாடிக்கு 60 கோடிடன் ஆற்றல் தீப்பிழம்பாகவும், காந்தப் புயலாகவும் கதிர் வீச்சாகவும் விண்வெளியில் பாய்ந்து பூமியை நோக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத் திட வருகிறது. பூமியின் கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலத்திற்குள் கதிர் வீச்சுகள் நுழைந் தவுடன் காற்று மண்டலம் அந்தக் கதிர் வீச்சுகளைத் தடுத்து சின்னா பின்னமாகச் சிதைத்து பூமியை எட்ட முடியாமல் தடுத்து விடுகிறது.அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர் வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு, காஸ்மிக் கதிர்வீச்சு, காமா கதிர் வீச்சு என்று எத்தனை கதிர் வீச்சு வந்தாலும் தடுத்து நம்மைக் காப்பாற்றுவது காற்று மண்டலம்!

பேராற்றல் கொண்ட நட்சத்திரங்களிலிருந்தும் இத்தகைய கதிர் வீச்சுகள் வந்த வண்ணமிருந்தாலும் அவைகளும் காற்று மண்டலத்தால் தடுத்து நிறுத்தப்படுகின்றன! அதனால்தான் பூமி மனிதயினம் பாதுகாப்பாக வாழத்தகுந்த இடமாக கருதப்படுகிறது.
எனவே சோதிடர்கள் கூறுவது போல நட்சத்திரங்களால் மனித வாழ்வு எந்த வகையிலும் பாதிப்படையாது பலாபலனும் அடைந்திடாது!


---------------- "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்" என்ற நூலிலிருந்து...

3 comments:

Unknown said...

i already told you bleddy fucker do not see only hindus go and see all other religions.

Thamizhan said...

ஏன் இத்தனைக் குழந்தைகள் என்று கேட்டால் "எல்லாம் ஆண்டவன் கொடுத்தது" என்றார் அன்றைய படிக்காதவர்.
"எல்லாம் சோதிடத்தில் வைத்துத் தான்" என்று சொல்கிறது இன்றைய படித்த,ஆனால் பகுத்தறிவில்லாத உலகம்.இந்து மட்டு மல்ல,பலரும் சோதிட நம்பிக்கையுள்ளவர்கள்.

நவ கிரகங்களிலேயே ஒன்று குறைந்து விட்டது.சந்திரனில் காலூன்றியாகி விட்டது.ஆனால் இன்னும் இந்தச் சோதிடப் புரட்சி மட்டும் மறைய வில்லை.
இதிலே இந்து வெறியர்களின் அசிங்கங்கள் வேறு மானத்தை வாங்குகின்றன.
ஆறாவது அறிவை அடகு வைத்து விட்டவர்கள் தங்கள் பட்டங்களைக் கழுதையிடம் கொடுத்து விடவும்,கழுதை ஏற்றுக் கொண்டால்.இல்லாவிட்டால் நீங்களே கடித்துத் துப்பி விடுங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா