Search This Blog

8.4.09

தர்மத்திற்கு விரோதமா?


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".


என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
---------------------------------------------------------------------------------------------


16. தர்மம்

நமக்கு எறும்பை மிதித்துவிட்டாலும் பாவம்; அவனுக்கோ (மேல் நாட்டானுக்கோ) இதைப்பற்றிக் கவலையில்லை. இங்கும் பசுவை அடித்தாலும் பாவம் என்கிறோம். அங்கு அவனோ - அதைக் கொன்று தின்னாவிட்டால் மார்க்கமில்லை.

ஒருவன் சிற்றப்பன் மகளைக் கட்டலாமென்கிறான்; மற்றவன் அதைப் பாவமென்கிறான். இப்படிச் சௌகரியத்திற்குப் பழக்கத்திற்கும் ஏற்றவாறுதான் கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கக்கூடும். ஆதலால், அனைத்தும் காலதேச வர்த்தமானத்திற்கேற்றவாறு இருக்க வேண்டும் என்பது நன்கு விளங்கும். அன்றியும், அந்தக் காலத்தில் திறமைக்கேற்றவாறு ஏதேதோ எழுதிவைத்திருக்கலாம். அவற்றைக் குறித்து இப்போது கவலையில்லை. ஆனால், நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, இன்றைய நிலைமையில் எப்படி இருக்கவேண்டும் என்பதேயாகும். அதிலிருந்து தப்ப வழியுண்டா, என்றும் பார்க்கவேண்டும். நாம் நமது செல்வம் - அறிவு - ஒழுக்கம் முதலியவை பிரயோசனமான வழியில் செலவிடப்பட வேண்டு மென்பதனால் அது தர்மத்திற்கு விரோதமானதென்று சொல்ல முடியாது.

------------------------------------------ தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-38

1 comments:

Anonymous said...

பிரயோசனமான வழியில்