
பூட்டுப் போடும் போராட்டம் ஏன்?
இலங்கையில் முழுப் போர் நிறுத்தம் தேவை என்ற முக்கிய உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் முதலிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கொழும்பு விரைந்துள்ளனர். அதிபர் ராஜபக்சேயிடம் நேரில் வலியுறுத்திட சென்றுள்ளனர்.
ஏற்கெனவே இவ்வேண்டுகோளை ஏற்று, விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தினை அறிவித்துவிட்ட நிலையில், பிடிவாதம் காட்டும் இராஜபக்சே அரசின் போக்கிற்கு முடிவு கட்டிட, அனைத்துலகமும் ஓரணியில் திரளும் நிலையில், சீனாவும், பாகிஸ்தானும், ஜப்பானும்தான் சிங்கள இராணுவத்திற்கு முழுத் துணை என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்நிலையில், இந்திய அரசு தனது வலிமையான அழுத்தத்தினை மேலும் தீவிரப்படுத்தி, தலையிட்டே ஆகவேண்டிய அவசர அவசியத்தை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை வலியுறுத்துகின்றனர்.
இதன் அடையாளம்தான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை இழுத்துமூடும் போராட்டமாகும்.
அணிதிரள்வீர்! திரள்வீர்!
---------------------------------------------------------------------------------------
நேற்று இப்போராட்டம் பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை இதோ:
நாளை இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை
இழுத்து மூடும் போராட்டம்!
"ஈழத் தமிழர்களைக் காப்போம், காப்போம்!"
தமிழர் தலைவர் அறிவிப்பு
எவ்வளவோ போராடினோம் - பொறுத்துப் பார்த்தோம். இலங்கை இட்லர் ராஜபக்சே போர் நிறுத்தம் செய்வதாக இல்லை. ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிப்பதுவரை போர் நிறுத்தம் செய்வதாக இல்லை என்று தெரிகிறது.
நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டியதுதான். முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த 86 ஆம் வயதிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார். தமிழ்நாடெங்கும் பதற்றமான நிலை!
திராவிடர் கழகம் நாளை (28.4.2009) காலை 11 மணிக்கு சென்னை - டாக்டர் நடேசன் சாலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, சோழா ஓட்டல் பின்புறமுள்ள இலங்கைத் துணைத்தூதரக அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமும், அந்த அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டமும் எனது தலைமையில் நடைபெறுகிறது.
கழகத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும், கட்சிகளைக் கடந்து - நம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நடத்தப்படும் இந்த இன மீட்சிப் போராட்டத்திற்குத் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதி மறுக்கப்பட்டாலும் அதனை மீறி இப்போராட்டம் நடைபெறும்! நடைபெறும்!!
வாரீர்! வாரீர்!!
--------------- கி.வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம். -"விடுதலை" 27.4.2009
2 comments:
சபாஷ்!
ஈழத்தமிருக்காக நீங்களும் கருணாநிதியும்
என்னமா? பீல் பன்றீங்கப்பா!
இது எப்போ போட்ட பதிவு. டிராமா ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குதே
Post a Comment