Search This Blog

19.5.09

பாதுகாப்பான இடத்திலே பிரபாகரன் இருக்கிறார். - ராஜபக்சே சர்வதேச போர் குற்றவாளி


ராஜபக்சே சர்வதேச குற்றவாளியாக நிறுத்தப்படுவார்
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் தொடங்கப்பட்டது
தமிழர் தலைவர் அறிவிப்பு


இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளியாக சர்வதேச நாடுகள் முன்பு நிறுத்தப் படுவார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று சென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தார்.

ஈழத் தமிழர்களை காப்பாற்றிட வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று காலை 11.15 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் காப்பாற்று, காப்பாற்று, ஈழத் தமிழர்களைக் காப்பாற்று. உணவு கொடு, மருந்து கொடு, இந்திய அரசே, இந்திய அரசே வேடிக்கை பார்க்காதே வேடிக்கை பார்க்காதே, தொப்புள்கொடி உறவு கொண்ட எங்கள் தமிழர்கள் ஈழத்தமிர்கள், காப்பாற்று காப்பாற்று மத்திய அரசே காப்பாற்று என்ற ஒலி முழக்கங்களை கவிஞர் செ.வை.ர. சிகாமணி தலைமையில் அரை மணிநேரம் முழங்கினர்.

தமிழர் தலைவர் உரை


அதன் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:-

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள இராணுவம் திட் டமிட்டே ஒரு பொய்யை உலகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறது.
தெளிவாக நாங்கள் சொல்கிறோம். பாதுகாப்பான இடத்திலே பிரபாகரன் இருக்கிறார். (வெற்றி வெற்றி, கைதட்டல்). பிரபாகரன் எடுத்த நிலையை முன்னெடுத்துச் செல்வார் (கைதட் டல்).
இலங்கை இராணுவமும், இங்குள்ள ஊடகமும் பரப்பி வருபவை முழுக்க உண்மை கலப் பில்லாத பொய் செய்திகளாகும்.


முதலிலே சில பகுதிகளிலே பல பேர் மாண்டிருக்கிறார்கள். களச்சாவை கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் ஈழ விடுதலைப் பயிருக்காக இடப்பட்ட உரங்களாகத்தான் எங்களுக்குத் தெரிகின்ற காரணத்தால் அந்த வீரர்கள் அனைவருக்கும் எங்களுடைய வீர வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்னும் எஞ்சிய தமிழர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதலாவதாக இந்திய மத்திய அரசுக்கு உண்டு. அதேபோல, வெளி நாட்டைச் சேர்ந்தவர்களும் காப்பாற்ற முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் தெளிவாக இருக்கவேண்டும்.

உலகக் குற்றவாளி ராஜபக்சே

ராஜபக்சே அரசு மாபெரும் தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறது.
அதற்காக போர் குற்றவாளியாக அவர் உலக நாடுகள் மத்தியிலே பல அமைப்புகள் மத்தியிலே நிறுத்தப்பட்டு, இன்றில்லாவிட்டாலும் நாளைக்கு நாளை இல்லா விட்டாலும் நாளை மறுநாள் அவர் குற்றவாளியாக விசாரிக்கப்படுவார் என்பது உறுதி (கைத்தட்டல்).

இப்படிப்பட்ட போர்க் குற்றவாளிகளைப்பற்றி அய்ரோப்பிய நாடாளு மன்றம் 27 நாடுகளிலே உள்ள வெளிநாட்டு அமைச்சர்கள் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள நாம் மட்டும் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.
ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக உணவு தேவை. மருந்து தேவை. பட்டினி கிடந்து அவர் கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் உணவு தேவை. அந்த மக்கள் சுதந்திரமாக உலவக் கூடிய ஒரு தீர்வை உருவாக்கவேண்டும்.

அரசியல் தீர்வாவது

இதுவரை அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு என்றுதான் நம்முடைய மத்திய அரசு உள்பட சொல்லிக் கொண்டிருந்தது.

எனவே, அரசியல் தீர்வுக்குரிய நேரம் அவர்கள் கணித்துள்ளபடியே போர் இல்லை என்ற நிலைக்கு வந்தவுடனே அரசியல் தீர்வுக்கு வந்தாக வேண்டும். ஆனால், எந்த அளவுக்கு உண்மை. எந்த அளவுக்கு போலித்தனம் இருக்கிறது என்பதை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கவேண்டும்.

சர்வதேச பார்வையாளர்கள் வரவேண்டும்


சர்வதேச செஞ்சிலுவை அமைப்பதற்கு முன்னாலே ஈழத் தமிழர்களுக்கு உணவுகள், மருந்துகள் கொடுக்கப்படவேண்டும்.

சர்வதேச பொது நோக்காளர்களாக பன்னாடுகளிலே இருந்து வந்து பார்க்கவேண்டும்.
அய்.நா. போன்ற அமைப்புகள் உடனடியாக முன்வரவேண்டும்.

இன்னமும் சிங்கள அரசுக்கு சீனத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும், ரஷ்யாவிலிருந்தும் ஏராளமான ஆயுதங்கள் வந்திருக்கின்றன. இலங்கை ஏராளமான ஆயுதங்களை குவித்திருக் கிறது.
இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. நேற்று முன்தினம்கூட பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

இன்னும் கேட்டால் ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக, விடுதலைப் புலிகளுக்கு விரோதமாக எழுதுவதிலே - முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு ஆங்கில ஏடு எழுதுகிறது.

இலங்கை அரசுக்கு உதவி செய்தது. சீனா, ரஷ்யா. நேற்று கூட ஆயுதங்கள் வந்து இறங்கியிருக்கின்றன என்று எழுதியிருக்கிறது.

எனவே, ஈழத் தமிழர்களை கொல்வதற்கு யார் யார் காரணமாக இருந்தார்கள்? யார் அதை நடைமுறைப்படுத்தினார்கள் என்பது சர்வதேச நாடுகள் முன்பு விசாரிக்கப்படும். எப்படி ஹிட்லரைப்பற்றி விசாரணை நடந்ததோ அதுபோல விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதேநேரத்திலே இப்பொழுது இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தெளிவான சூழ்நிலை ஏற்படவேண்டும். எல்லா வற்றையும்விட இப்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவை.
இன்னமும் இராணுவம் அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது வேட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் சண்டையை நிறுத்திவிட்டார்கள். ஆனால் ராஜபக்சே அரசு அதே நிலையை ஏன் எடுக்கவில்லை?
தொடர்ந்து பொய்யை இலங்கை அரசு பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆதாரமில்லாமல் செய் தியை வெளியிடக்கூடாது. இதையும் சர்வதேச நாடுகள் விசாரிக்க வேண்டும் என்பது தான் இந்த போராட்டத்தினுடைய நோக்கம்.


உலக மக்களின் குரல்

இது தமிழ்நாட்டில் எங்கோ இருந்து கிளம்பிய குரல் அல்ல. உலகம் முழுவதும் இருந்து கிளம்பிய குரல் நியாயத்தின் அடிப்படையிலே, மனிதாபிமானத்தின் அடிப்படையிலே கிளம்பி யிருக்கின்ற ஒரு குரல்.
இந்த குரலில் நாளுக்கு நாள் உரமேற்றப்படும். இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.




------------------------------------------------------------------------------------

தொல் திருமாவளவன் உரை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவள வன் பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மொத்த இடத்தையும் கைப்பற்றி விட்டோம் என்று காட்டுவதற்காக, உலக நாடுகள் இந்தப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதற் காக சிங்கள இனவெறியன் ராஜபக்சே திட்டமிட்டு நடத்துகின்ற இனப் படுகொலை இது. இந்த இனப்படு கொலையை மூடி மறைப்பதற்கான நாடகம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற வதந்தி. இதை உலகத் தமிழர்கள் நம்பிட வேண்டிய அவசியமில்லை.

25 ஆயிரம் பேருக்கு மேலான தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிற ராஜபக்சே, மிச்ச மிருக்கிற தமிழர்களையும் படுகொலை செய்வதற்காக காத்திருக்கிற ராஜபக்சே அதை மூடி மறைப்பதற்காக தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற வதந் தியை பரப்புகிறார்கள்.

ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அய்.நா. பேர வையை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த கோரிக்கையை மய்யப்படுத்தி நாடெங்கும், உலகெங்கும் எடுத்துச் செல்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின் தலைமையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பு இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அய்யா அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
ஆகவே தொடர்ந்து இந்த இயக்கத்தின் மூலமாக ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளி யாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இந்திய அரசுக்கு நாங் கள் விடுக்கிற வேண்டுகோள். இனி இலங்கை அரசிடம் கெஞ்சிப் பயனில்லை அல்லது நட்பு தோழமை அடிப்படையிலே இந்தப் பிரச்சினையை தீர்க்க நினைக் கக் கூடாது. இலங்கையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ராஜபக்சே ஏமாற்று கிறார் என்று ஒபாமாவே எச்சரித்திருக்கிறார். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

-------------------------------------------------------------------------------------


சுப.வீரபாண்டியன்

திராவிடர் தமிழர் இயக்கப் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீர பாண்டியன் பேசியதாவது:

ஏசு நாதர் ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உலகத் திலேயே பலமுறை உயிர்த்தெழுந்த ஒரு மாவீரன் பிரபாகரன் மட்டும்தான்.

பலமுறை அவர் மரணம் என்று அறிவிக்கப் பட்ட பிறகு இன்றைக்கும் அவர் உயிர்த்தெழுந் திருக்கிறார்.

இலங்கைக்கு சோறு போட்டு வன்னி நிலம் இன்றைக்குப் பட்டினியால் செத்துக் கொண்டி ருக்கிறது.

இது ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை. அவர்களுடைய வாழ்வுரிமை மீட்கப்பட்ட வேண்டிய பிரச்சினை. எனவேதான் ஆசிரியர் அவர்களுடைய தலைமையிலே - இன்று ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் தொடங்கப்பட் டிருக்கிறது.

ராஜபக்சேவை விரைவில் நாம் கூண்டில் நிறுத்த வேண்டும்.

இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழக பொரு ளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, உலகத் தமிழர் பேரவை இயக்கப் பொதுச் செயலாளர் இரா. ஜனார்த்தனம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர் கள் பல்வேறு கட்சியினர், இனஉணர்வாளர்கள் பங்கேற்றனர்.

நன்றி

இறுதியாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் நன்றி கூறிட ஆர்ப்பாட்டம் மதியம் 12 மணிக்கு நிறைவுற்றது.


----------------"விடுதலை"19-5-2009

1 comments:

Thamizhan said...

உலகத்திலேயே பொய்,புரட்டு,துரோகம்,கொலை,
கொள்ளை என்று அனைத்தும் நிறைந்திருக்கும் அரசு சிங்கள இனவாத அரசுதான்.
புலிகளைப் பலி வாங்குவதாக எண்ணி இவர்களுக்கு உதவிய இந்தியா பெரும் விலை கொடுக்கப் போகிறது,இலங்கையின் முதலாளி சீனாவிடம்.