Search This Blog

18.5.09

இசுலாம் மார்க்கம் பெண்களுக்குச் சுதந்திரம் தந்துள்ளதா?

மதமெலாம் பெண்ணைத் தாழ்த்தும்

எல்லா மதங்களும் பெண்களைத் தாழ்த்தித்தான் வைத்துள்ளன. இதை மறைக்கவோ, என்னவோ, மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்ற போப் கிறித்துவர்களிடம் பேசுகையில், பெண்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்துள்ளார். ஆணின் எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்றுதான் அம்மதம் கூறுகிறது. ஆணாகிய ஆதாமைப் படைத்ததைப் போல, மண்ணைப் பிசைந்து தன்னைப் போல படைக்கப் பட்டவளல்ல பெண்!

இசுலாம் மார்க்கம் பெண்களுக்குச் சுதந்திரம் தந்திருப்பதைப் போலச் சொல்லப்பட்டாலும் உண்மை நிலை அப்படி இல்லை. மூக்கிள் பிளாச்சுகளால், கயிறால், பெண்களை அடிக்கலாம் என்றும் முகம் தவிர வேறு பாகங்களில் அடிக்கலாம் என்றும் அனுமதி தந்துள்ளது.

பெண்களை முழுவதுமாகப் போர்வை போர்த்தி மறைக்க வேண்டும்; முகம் மட்டும் தெரியலாம் என்று அந்த மத நூல் கூறுகிறது, இரண்டு கண்கள் மட்டும் தெரிகிற மாதிரி வைத்து மீதி முழுவதையும் மறைத்து விடுவது என்று இந்தியாவில் மாறியுள்ளது.

இந்தப்படிக்கு உடலை மூடப்பயன்படுத்தும் பர்தாவுக்கு அபயா என்று பெயர். ஒரு முகமதியப் பெண் சவூதி அரேபியாவில் 900 ரியாலுக்கு அபயா எனும் கறுப்பு நிற அங்கியை வாங்கி விட்டாராம். அவரின் கணவன் கொடுத்த 1200ரியாலில் 900 ரியாலை இதற்கே செலவழித்துவிட்டதால், புருசன் பெண்டாட்டியைப் போட்டு அடித்தானாம். அப்படி அடிப்பது குற்றம் இல்லை என்பதாக ஒரு கருத்தரங்கில் பேசினாராம் ஒருவர்.பேசியவர் அந்த நாட்டு நீதிபதி ஹமத் அல் ரஜின் என்பவர்.

கருத்தரங்கில் பங்கு பெற்றவர்கள் நீதிபதியின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய சேதியாகும்.


-------------செங்கோ அவர்கள் 16-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியது

5 comments:

VANJOOR said...

வாசகர்களும் "செங்கோ" அவர்களும் அன்பு கூர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகளின் மூலம் தகவல் பெறுங்கள்.

இஸ்லாத்திலே பெண் குழந்தைகள் வரவேற்கப்படுகின்றதா?அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்வது முஸ்லீம்களா? முஸ்லீம்கள் பெண்களை அடக்கி கல்வி அறிவில்லாமல் செய்கிறார்களா ?.
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்.
பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா? முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?இஸ்லாத்தில் தாலி உண்டா?முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

VANJOOR said...

வாசகர்களும் "செங்கோ" அவர்களும் அன்பு கூர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகளின் மூலம் தகவல் பெறுங்கள்.



29. "நச்"இஸ்லாத்திலே பெண் குழந்தைகள் வரவேற்கப்படுகின்றதா?

28. "நச்"அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்வது முஸ்லீம்களா?

27. "நச்" முஸ்லீம்கள் பெண்களை அடக்கி கல்வி அறிவில்லாமல் செய்கிறார்களா ?.

இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்.

25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?

24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?

15. "நச்"இஸ்லாத்தில் தாலி உண்டா?
6) "நச்."கேள்வி.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
5.)”நச்”.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

VANJOOR said...

வாசகர்களும் "செங்கோ" அவர்களும் அன்பு கூர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டி மூலம் தகவல் பெறுங்கள்.

இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?மாற்று மதத்தினர் முஸ்லீம்களிடம் கேட்கும் பல "நச்" கேள்விகளும் அதற்குண்டான பதில்களும்.வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

தெய்வமகன் said...

பெரியாரின் கருத்தை பரப்பும் இந்த தளம் VANJOOR அவர்களுக்கு இசுலாம் பரப்ப வசதியாகிவிட்டது.

ஆனால் எதுவும் தெரியாமல் காதில் பூ வைத்திருக்கும் யாரிடமாவதும் இசுலாமின் பெண் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசிவிட்டு போகட்டும்.

இசுலாமை பற்றியும்,அதில் பெண்ணடிமைத்தனத்தையும் அறிந்தவர்கள் மத்தியில் இந்த பீத்தல் வேண்டாமே!!!

கீழே உள்ள வசனம் அல்லா சொன்னதாகும்.

அதில் () அடைப்பு குறிக்குள் இலேசாக என்று மொழி பெயர்த்த புண்ணியவான்கள் நம் தமிழ் நாட்டு முசுலீம்கள்.

தமிழில் உள்ள பல மொழிபெயர்ப்புகளை தோண்டினால் இதில் உள்ள சிக்கல் அம்பலமாகும்.



4:34
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

Unknown said...

இஸ்லாம் எங்கே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கு.பெண்கள் கையில் அதிகாரம் இருந்திருந்தால் இந்த வாஞ்சூர் போல் கோரமாக மூஞ்சூருக்கு தாடி ஒட்டி விட்டாற்போல் இருக்கும் ஆண் மூஞ்சிகளையல்லவா பர்தாவால் மூட வேண்டும் என்று அல்லா ஆணையிட்டுருப்பதாக குரானில் எழுதியிருப்பார்கள்