Search This Blog

31.5.09

விடுதலை சிறுத்தைகள் பேரணியைத் துவக்கி வைத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை உரை




உணர்ச்சிப் பிழம்பான இந்த பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு!
இந்திய அரசே, இலங்கை அரசே! தப்புக் கணக்குப் போடாதே!

விடுதலை சிறுத்தைகள் பேரணியைத் துவக்கி வைத்து
தமிழர் தலைவர் எச்சரிக்கை உரை


உணர்ச்சிப் பிழம்பான இந்த பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு. இலங்கை அரசும், இந் திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தை கள் சார்பில் 28.5.2009 அன்று மாலை 5.15 மணிக்கு இலங்கையில் வீரமரணமடைந்த விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அமைதி பேரணி சென்னை மன்றோ சிலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்றிட ஏற்பாடாகியிருந்தது. இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணியைத் தொடங்கி வைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:

தலைநகரில் காணா எழுச்சி

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தலைநகரத்தில் இதுவரை காணாத எழுச்சி மிகுந்த வீரவணக்கப் பேரணியைத் துவக்கி அந்தப் பேரணியின் மூலமாக இதுவரை ஈழத்தமிழர் களுடைய குரலை அடக்கிவிட்டோம், ஒடுக்கிவிட்டோம் என்று கொக்கரித்துக் கொண் டிருக்கின்ற சக்திகளுக்கு இல்லை - தமிழ்நாடு உரியவர்களுடைய தலைமையிலே எழுந்து நிற் கிறது என்பதைக் காட்டுவதற்கு (ஆரவாரம் கைதட்டல்) இளைஞர்கள், தாய்மார்கள், இன உணர்வாளர்கள், வீர அணியினர் எத்தகைய உயிர்த் தியாகத்திற்கும் தயார் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுடைய தலைமையிலே நாம் இங்கு திரண்டிருக்கின்றோம். இப்பொழுது சிறுத்தைகள் திரளுகிறார்கள்

பக்கத்திலே தொப்புள்கொடி உறவுள்ள நம்முடைய ஈழத்திலே இலங்கையிலே தமிழ் ஈழத்திற்காகப் போராடியவர்களை எல்லாம் நாங்கள் அடக்கி விட்டோம். இனிமேல் புலிகள் இல்லை. புலிகளுக்கு வேலை இல்லை. புலிகளை அழித்துவிட்டோம். ஒழித்துவிட்டோம் என்றெல்லாம் சொல்கின்ற நேரத்தில் புலிகளை நீங்கள் அழித்தது உண்மை அல்ல என் பதற்காக சிறுத்தைகள் திரண்டிருக்கக் கூடிய (பலத்த ஆரவாரம் கைதட்டல்) ஓர் உணச்சிகர மான நிலையைப் பார்க்கின்றோம்.

எனவே திரண்டிருக்கின்ற இவர்கள் வெறும் உணர்ச்சிப் பிழம்புகள் அல்ல. உணர்வுகளினுடைய வெளிப்பாடு. அதுவும் அறுபடாத உறவுகளினுடைய வெளிப்பாடு. அது வும் அரசியல் இலாபத்தைக் கருதாமல் மனித நேயத்தோடு இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.

யாரை அடக்கிவிட்டோம் ஒடுக்கி விட்டோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்களோ; யாருடைய உரிமைக் குரல் வளையை நெரித்து விட்டோம் என்று கருதிக்கொண்டி ருக்கின்றார்களோ அது இல்லை என்று காட்டுவதற்கு திரண்டிருக்கின்ற அணிதான் இந்த அணி யாகும். (கைதட்டல்)

எனவே அதிகமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களிலே நம்முடைய அமை திக்கே - பேசுவதைவிட வலிமை அதிகம்.

பிரபாகரன் தனிமனிதரல்ல

ஆகவே நாம் அமைதியாக கட்டுப்பாடாக நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு ஈழம் மலர்வது உறுதி என்று தெளிவான அந்த உணர்வுகளை உருவாக்க வேண்டும். ( ஆரவாரம் - பலத்த கைதட்டல்)

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதரல்ல; அவர் தமிழர்களின் திரண்ட உணர்வு. (பலத்த கைதட்டல்)

அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பது முக்கியமல்ல.

அந்த உணர்வுகளை தட்டி எழுப்புவதற்கு நம்முடைய திருமா போன்ற தளபதிகள் இருக் கிறார்கள். எனவே யாருக்கு அக்கறை இருக்கிறது என்பது இங்கு தெளிவாக ஆகியிருக்கிறது.

நமக்கோ உயிர் பிரச்சினை

சிலருக்கு அது தேர்தல் பிரச்சினை; நமக்கோ அது உயிர்ப் பிரச்சினை, மானப்பிரச்சினை. கொளுத்தும் வெய்யிலாக இருந்தாலும், அதே போல கொட்டும் மழையாக இருந்தாலும், சீறும் புயலாக இருந்தாலும் இந்த அணியைப் பொறுத்தவரையிலே, ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தைப் பொறுத்தவரையிலே இந்த இயக்கமானாலும் திராவிடர் கழகமானாலும் இறுதிவரை குரல் கொடுக்க நாம் இங்கே திரண்டிருக்கின்றோம்.

கட்டுப்பாடு காக்க வேண்டும் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இது போன்ற அமைதிப் பேரணியிலே கட்டுப்பாடு காக்க வேண்டும். அது தான் தலைமைக்கு நீங்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய வாய்ப்பு.

எதிரிகளுக்கு எது பலம் என்று சொன்னால் இது போன்ற பேரணி யிலே ஊடுருவி கலவரம் விதைத்து விடுவார்கள். இங்கே இருபாலரும் திரண்டிருக்கின்றோம். கட்டுப்பாடாக இந்த கொள்கையை வலியுறுத்துவதற்கு, சர்வபரித் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றவர்கள்.

மீண்டும் பிறப்பார்கள்

நம்முடைய உணர்வுகளை காட்டுவதற்கு இது ஒரு சிறு ஒத்திகை.

ஈழத்திலே இறந்தவர்கள் அவர்கள் மீண்டும் பிறப்பார்கள். எப்படிப் பிறப்பார்கள்? நம்முடைய இன உணர்வின் மூலம் பிறப்பார்கள். நம்முடைய கட்டுப்பாட்டின் மூலம் பிறப்பார்கள். நம்முடைய உரிமைக் குரல் மூலம் பிறப்பார்கள்.

அவர்கள் புதைக்கப் படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே விதைக்கப்பட்ட வர்கள் பெரும் ஆலமரமாக அவர்கள் கிளம்புவார்கள்.

தப்புக்கணக்கு போடாதீர்!

எனவே யாரும் வரலாற்றைப் பார்த்து தப்புக் கணக்குப் போட வேண்டாம். எல்லா அரசுகளுக் கும் சொல்லுகிறோம். இலங்கை அரசுக்கும் சொல்கிறோம். இந்திய அரசுக்கும் சொல்கி றோம். இந்தப் பேரணியை தவறாகக் கணிக்காதீர்கள். இந்தப் பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு. இந்த உணர்ச்சிக் கொப்பளிப்பு என்பது ஒரு சின்ன ஒத்திகை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்லக்கூடிய இந்த இனமானப் போரிலே, அறப்போரிலே நம் அனைவரையும் ஒப்படைப்போம்.

தமிழ்ஈழம் மலரும்

அங்கே மறைந்தவர்கள், மறைந்தவர்கள் அல்லர்; நம் நெஞ்சில் நிறைந்தவர்கள். எனவே அப்படிப்பட்ட அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த அமைதிப் பேரணியைத் துவக் குகின்றேன்.

விரைவில் வரும் தமிழ் ஈழம், வருக தமிழ் ஈழம், விரைவில் மலரும் தமிழ் ஈழம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் உரை யாற்றினார்.

தொல்.திருமாவளவன் பேச்சு

விடுதலைச் சிறுத்தைகள் ஊர்வலம் மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தலைமை தாங்கினார். ஊர்வலத்தை திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து பேசினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும் பங்கேற்றார்.

பின்னர் வீரவணக்கம் வீரவணக்கம்! வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம்!

சாகவில்லை சாகவில்லை, பிரபாகரன் சாகவில்லை என்று தொல். திருமாவளவன் ஒலி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து அமைதி பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஒலி முழக்கமிட்டனர்.

பின்னர் ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை சென்றடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், வீரமரணம் அடைந்த 50 ஆயிரம் ஈழத்தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரிய மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தப்பட் டது.

பின்னர் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தலைவர் தொல்.திருமாவளவன் :

ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்று விட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிர பாகரனை சுட்டுக் கொன்று விட்டதாக சிங்கள இனவெறியன், கோழைப் பயல் ராஜபக்சே அண்டப் புளுகு புளுகினான்.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கிளிநொச்சி பகுதியை ராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப் போனேன். அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த சோனியா காந்தியிடம் எப்படியாவது இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினேன்.

ஆனால் இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டு கோளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இலங்கைக்கு சீனா உதவு கிறது.

தா.பாண்டியன் போன்றவர்கள் சீனா உதவுவது பற்றி பேசமாட்டார். நடேசன், பூலித்தேவன், சார்லஸ் அந்தோணி ஆகியோர் இறந்த பிறகு தான் எம்.கே.நாராயணன் இலங்கை சென்றார். அதற்கு முன் செல்ல எத்தனை முறை சொன்னோம் கேட்கவில்லை.

நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக் கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்டப் போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்டப் போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் என்று தொல். திருமாவளவன் பேசினார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அய்.நா. மனித உரிமை பாதுகாப்புப் பேரவையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

போர் மரபுகளை மீறி விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களான நடேசன், பூலித் தேவன் கொல்லப்பட்டதற்கு சர்வதேச வல்லுநர்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

3 லட்சம் ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழீழத்தை மீட்டுத்தர விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளோடு பேச்சு வார்த்தை நடத்த சர்வ தேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் இந்த அமைதி பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் நிருவாகிகள் வன்னியரசு, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

----------------"விடுதலை" 30-5-2009

2 comments:

Unknown said...

/எனவே யாரும் வரலாற்றைப் பார்த்து தப்புக் கணக்குப் போட வேண்டாம். எல்லா அரசுகளுக் கும் சொல்லுகிறோம். இலங்கை அரசுக்கும் சொல்கிறோம். இந்திய அரசுக்கும் சொல்கி றோம். இந்தப் பேரணியை தவறாகக் கணிக்காதீர்கள். இந்தப் பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு. இந்த உணர்ச்சிக் கொப்பளிப்பு என்பது ஒரு சின்ன ஒத்திகை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்லக்கூடிய இந்த இனமானப் போரிலே, அறப்போரிலே நம் அனைவரையும் ஒப்படைப்போம்.

தமிழ்ஈழம் மலரும்

அங்கே மறைந்தவர்கள், மறைந்தவர்கள் அல்லர்; நம் நெஞ்சில் நிறைந்தவர்கள். எனவே அப்படிப்பட்ட அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த அமைதிப் பேரணியைத் துவக் குகின்றேன்.//

எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா