Search This Blog

31.5.09

உலக நாடுகள் -தூரப்பார்வை-அங்கோலா- அர்ஜென்டினா


அங்கோலா

கொய்சாம் எனும் மொழி பேசும் ஆப்ரிக்க இன மக்கள் ஆதியில் வசித்து வந்த அங்கோலா நாட்டில், பான்டு மொழி பேசும் மக்கள் 1000 ஆண்டு களுக்கு முன் பெருமள வில் இடம் பெயர்ந்து வந்து குடியேறினார்கள். நாளடைவில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியாகிவிட்ட கதை நடந்துவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பான்டு மொழி பேசும் மக்கள் வளர்ந்துவிட்ட னர்.

1480 ஆண்டு வாக்கில் போர்த்துகீசிய வணிகர்கள் இந்நாட்டுக்கு வந்தனர். 1575 இல் லுவான்டா எனும் தலைநகரை உரு வாக்கியதே அவர்கள் தான்! அதுவே பின்னர், இந்தியாவுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் வணிகம் செய்ய வாய்ப்பான மய்ய இட மாக வளர்ந்தது. கொடுமை என்னவென்றால், போர்த்துக்கீசிய குடியேற்ற நாடான பிரேசில் நாட்டுக்கு ஆப்ரிக்க அடிமைகளை அனுப்பும் முக்கிய நகர மாகவும் வளர்ந்துவிட்டது.

அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் விடுதலை எண்ணம் வேரூன் றத் தொடங்கியது. தேசிய உணர்வு மிக்க இயக்கங் கள் தோன்றின. விடுதலை யைப் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் கொரில்லாப் போர் முறைத் தாக்குதலில் இறங்கினர். பாப்புலர் லிபரேஷன் மூவ்மெண்ட் ஆப் அங்கோலா எனும் சமதர்மக் கொள்கை கொண்ட அமைப்பு (MPLA) 1956 இல் அமைக்கப்பட்டது. (FNLA)1957இல் போராளி இயக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டது. (UNITA)எனும் மற்றொரு அமைப்பும் முழுச் சுதந்திரம் அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் 1966இல் தொடங்கப்பட்டது. ஜொனாஸ் சாவிம்பி என்பவர் இதனைத் தொடங்கினார்.

இவர்களின் போராட்டத்தின் விளைவாக 1975இல் போர்த்துகீசிய ஆதிக்கவாதிகள் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதிகாரத்தை மாற்றிக் கொடுக்காமலே வெளியேறி விட்டார்கள். 500 ஆண்டுக் காலம் ஆண்டு அனுபவித்த நாட்டைக் கைமாற்றிக் கொடுக்க மனம் வரவில்லை போலும்! மவுனமாகப் போய்விட் டனர்.

உள்ளூரில் இருந்த பல கட்சிகளில் பதவிப் போட்டி தொடங்கியது. ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு வெளி நாட்டின் ஆதரவு தானாகவே கிடைத்தது. MPLA அமைப்புக்கு கியூபா ஆதரவு அளித்தது. FNLAவும் UNITAவும் இணைந்து போட்டியில் இறங்கிய போது தென் ஆப்ரிகாவும் அமெரிக்காவும் ஆதரவு தந்தன.

லுவான்டா (தலைநகர்)வில் கட்டுப்பாடு செலுத்திய MPLL அமைப்பு விடுதலை பெற்ற அங்கோலாவின் அரசாங்கமாகத் தம்மை அறிவித்துக் கொண்டது. மற்ற இரு அமைப்புகளும் வேறொரு நகரமான ஹூவாம்போவில் தங்கள் அரசு அமைந்திருப்பதாகப் பிரகடனப்படுத் தினார்கள். இம்மாதிரி நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் போர்த்துகீசியர்கள் பேசாமல் வெளியேறி விட்டார்களோ?

பதவிப் போட்டிகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகளுக்கி டையே 1994 இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. லூசாகா அமைதிப் பேச்சு ஒப்பந்தம் 1996 இல் ஏற்பட்டது. MPLA அமைப்பின் எடுவர்டோ டாஸ் சன்டேர்ஸ் என்பவரும் UNITA அமைப்பின் நிறுவனர் ஜொனாஸ் சவிம் பியும் இணைந்து அரசு அமைப்பதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை.

2002 பிப்ரவரி மாதத் தில் ஜொனாஸ் சவிம்பி அரசு தரப்புப் படையின ரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு அரசும் UNITA அமைப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். இது நடந்தது 2002 ஏப்ரல் மாதத்தில்! ஜொனாஸ் சவிம்பி தடையாக இருந்தாரோ? தலைமையை இழந்துவிட்டதால் அமைதியை நாடினார்களோ?

ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் கடலோர நாடாக உள்ள அங்கோலா 12 லட்சத்து 46 ஆயிரத்து 700 ச.கி.மீ. பரப்புள்ளது. 1 கோடியே 22 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட இந் நாட்டில், போர்த்துகீசிய மொழியும் பான்டு உள்பட ஆப்ரிக்க மொழிகளும் பேசப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்தை 38 விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர். புரொடஸ்டன்ட் பிரிவை 15 விழுக்காட்டினரும் மீதமுள்ள 45 விழுக்காட்டினர் ஆப்ரிக்கப் பழைய நம்பிக்கைகளையும் பெற்றுள்ளனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே 70 விழுக்காடு மக்கள் உள்ளனர்.

அர்ஜென்டினா

தென் அமெரிகாவின் தென் பகுதியில் அட்லாண் டிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள அர்ஜென்டினா நாட்டின் டீகோ மாரடோனா, சிறந்த கால் பந்தாட்ட வீரர். இந்நாட்டின் வட மேற்குப் பகுதியில இன்கா வமிசத்தினர் ஆட்சி புரிந்தனர்.

1535 ல் ஸ்பெயின் நாடு ஒரு குழுவை இந்நாட்டுக்கு அனுப்பிக் குடியேறச் செய்தது. பெட்ரோ டி மென்டோசா என்பவரின் தலைமையிலான இக்குழுவினர் தொடக்கத்தில் வெற்றிகளைப் பெற்று சான்டா மரியா டெல் புவோன் அயர் நகரத்தை உருவாக்கினர். இந்நகரம்தான் தற்போது போனஸ்அயர்ஸ் எனும் இந்நாட்டின் தலைநகர்.

1776 இல் ஸ்பெயின் நாடு தன் சாம்ராஜ்ய எல்லையை விரிவுபடுத்தியது. தற்போதைய அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியாவின் தென்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய நாட்டை உருவாக்கி, போனஸ் அயர்சைத் தலைநகராக்கிக் ஆண்டது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேசில், உருகுவே, ஆகியவற்றுடன் அர்ஜென்டினாவும் சேர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் ரத்தப் போராட்டம் எனத்தக்க; சண்டையில் இறங்கியது. பராகுவே நாட்டிற்கு எதிராக இந்த மூன்றுநாடுகளும் நடத்திய போரில் பராகுவே தோற்கடிக்கப்பட் டது. 1865 முதல் 1870 வரை 5 ஆண்டுகள் இப்போர் நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போர் நேரத்தில் தான் ஒரு நடு நிலை நாடு என அர்ஜென்டினா அறி வித்துக் கொண்டது. ஆனாலும் 1943 இல் ராணுவ ஆட்சி இங்கு அமைந்துவிட்டது. கர்னல் ஜூவான் பெரோன் என்பவர் இந்த ஆட்சியின் முக்கியப் புள்ளி. 1944 இல் ஜப்பான், ஜெர்மனி நாடுகளுடன் அரசு ரீதியான உறவை முறித்துக் கொண்ட அர்ஜென்டினா 1945 இல் அந்நாடுகளுடன் போரிட்டது.

1946இல் பெரோன் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் இரண்டாம் மனைவி ஈவா பெரோன். எவிட்டா என்று அழைக்கப்பட்ட இவர் சமூகநலத் துறையின் பொறுப்பாளராக அதிகார பூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவாகத் தொழிலாளர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்து அதன் வாயிலாக அதிப ரான தன் கணவருக்கு உதவினார்.

ஆனாலும் 1955 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பெரோன் மீண்டும் 1973 இல் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் 1974இல் மரணம் அடைந்துவிட்டார். பெரோனின் மூன் றாம் மனைவியும் துணை அதிபராக இருந்தவருமான இசபெல் அடுத்த அதிபராகப் பதவி ஏற்றார்.

பணவீக்கம் எக்கச்சக்கமாக ஏறிக் கொண்டே போய், 1976இல் ராணுவம் புரட்சி செய்து, ஜார்ஜ் விடெலா எனும் ராணுவத் தளபதியின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொடுமைகளும் கொலைகளும் திட்டமிட்டுச் செய்யப் பட்டன. அசிங்கமான போர் என வருணிக்கப் படும் சண்டைகளில் ஆட்சியை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டனர்.

1981 இல் லியோ போல்டோ கல்டியரி எனும் தளபதி ஆட்சித் தலைமையை ஏற்றார். இவர் காலத்தில்தான் பக்கத்தில் இருந்த ஃபாக் லாண்டு தீவில் அர்ஜென்டினா தாக்குதல் நடத்தி கைப்பற்றிக் கொண்டது. வல்லரசுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தீவு இது. பிரிட்டன் எதிர்த் தாக்குதல் தொடுத்து மீண்டும் தீவைக் கைப்பற்றிக் கொண்டது. இதனால் தளபதி கல்டியரி பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு ஜெனரல் ரெனால்டோ பிக்னான் என்பார் அதிபரானார்.

1983 இல் நாட்டில் மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது. ரவுல் அல் போன்சின் என்பவர் அதி பரானார். பணவீக்கம் மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது. 900 விழுக் காடு எனச் சொல்லக் கூடிய அளவுக்கு உயர்ந்து விட்டது. அதன் காரண மாக கார்லோஸ் மெனம் என்பவர் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளை எடுத்தார். புதிய பண நோட்டுகளைப் புகுத்தினார். பழைய நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். ஆயினும் என்ன? பொருளாதார மந்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

2002 இல் உலக வங்கிக்குச் செலுத்தவேண்டிய 8 ஆயிரம் லட்சம் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. மேற்கொண்டு சர்வதேச நிதியத்திடம் (IMF) இருந்து கடன் பெறவும் முடியவில்லை. கடன் தொகைக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதும் என்கிற அளவில் அர்ஜென்டினாவும் சர்வதேச நிதியமும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

இதுவாவது அந்நாட்டைக் காப்பாற்றிக் கரை சேர்க்குமா?

27 லட்சத்து 66 ஆயிரத்து 890 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி ஆகும். 92 விழுக்காட்டி னர் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். யூதர்களையும் புராடெஸ்டன்ட் கிறித்தவர்களும் 2 விழுக்காடு வீதமே உள்ளனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 இல் விடுதலை பெற்ற பழம் பெரும் குடியரசு நாட்டின் கதி என்று தேருமோ?

------------------நன்றி:-"விடுதலை" 28-5-2009

0 comments: