Search This Blog

27.5.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -"ஆண்டிகுவா மற்றும் பார்புடா"




ஆண்டிகுவா மற்றும் பார்புடா

மேற்கிந்திய தீவுகளின் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்டிகுமா தீவை ஆங்கிலேயர்கள் 1632 இல் கைப்பற்றிக் குடியேறினர். பக்கத்தில் உள்ள பார்புடா தீவில் 1678 இல் குடியேறினார்கள். அவர்களின் ஆதிக்கத்தில் 20 ஆம் நூற்றாண்டு வரை இருந்த இந்த இரண்டு தீவுகளும் 1958 இல் லீவார்ட் தீவுக் கூட்டத்தில் இணைந்து மேற்கிந்தியக் கூட்டமைப்பில் சேர்ந்தன. 1981 இல் நவம்பர் மாதத்தில் முதல் நாள் விடுதலை பெற்ற நாடுகளாயின.

ஆண்டிகுவா 280 சதுர கி.மீ.பரப்பும் பார்புடா 161 ச.கி.மீ. பரப்பும் ஆக இரண்டும் சேர்ந்து 441 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே உள்ள மிகச் சிறிய நாடுகள் ஆகும். சுமார் 70 ஆயிரம் மக்கள் மட்டுமே வகிக்கின்றனர் இங்கிலீஷ் மொழிதான் பேசப்படுகிறது. கிறித்துவ மதம் - குறிப்பாக புரொடஸ்டன்ட் பிரிவு. மிகச் சிலர் ரோமன் கத்தோலிக்க மதம்.

இங்கிலாந்து நாட்டைப் போல குடிக்கோனாட்சி முறை. எலிச பெத் அரசிதான் நாட்டுத் தலைவர். அவர் சார்பாக கவர்னல் ஜெனரல் ஜேம்ஸ் கார்லைஸ்ல் 1993 முதல் இருந்து வருகிறார். பிரதமர் பால்ட்வின் ஸ்பென்சர் 2004 முதல் பதவியில் இருக்கிறார்.

ஆர்மீனியா

ஆர்மீனியா நாடு பழம் பெரும் நாகரிகச் சிறப்புடன் கூடிய நாடு. பொது ஆண்டுதொடங்கிய 300 ஆண்டுகளுக்கு முன்பே கிறித்துவத்தை மதமாக ஏற்றுக் கொண்ட நாடு.

துருக்கியின் ஒட்டோமான் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டை ஆண்டனர். தேசிய உணர்வும் விடுதலை வேட்கையும் முகிழ்த்துக் கிளம்பியதைக் கண்ட இக்கொடுங்கோலரசு 1894 முதல் 1896 வரை மூன்றாண்டுகள் கொன்று ஒழித்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. ஒட்டோமான் அரசர்கள் எத்தகைய கொடுங்கோலர்கள் என்பதற்கு ஒன்றைக் குறிப்பிடலாம்- 1915 இல் முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆர்மீனிய நாட்டவர்கள் அனைவரையும் மத்திய கிழக்குப் பகுதியில உள்ள பாவைனத்திற்குஇடம் பெயரச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 15 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டும் பட்டியினால் இறந்தும் போயினர்.

உலகப் போரில் துருக்கி தோற்றது. அதற்காகவே காத்திருந்த ஆர்மீனியா 1918 மே மாதத்தில் விடுதலையை அறிவித்துக் கொண்டது. ஆனாலும் 1920 இல் சோவியத் ஒன்றியம் இந்நாட்டைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1936 இல் சோவியத் நாடுகளுடன் ஒன்றாக ஆர்மீனியா ஆகிப்போனது. 1991 செப்டம்பர் மாதத்தில் சோவியத் ஒன்றியம் உடைந்து போன சமயத்தில் ஆர்மீனியா தன்னை விடுவித்துக் கொண்டது.

ஆர்மீனியர்கள் தமிழ்நாட்டுடன் அந்தக் காலத்திலேயே உறவு கொண்டவர்கள். வணிகத் தொடர்பு இருந்துள்ளது. அதன் அடையாளமாகச் சென்னைத் துறைமுகத்திற்குப் பக்கத்தில் இவர்கள் வசித்த பகுதிக்குப் பெயர் ஆர்மீனியன் தெரு என்றே அழைக்கப்படுகிறது. அந்தத் தெருவில உள்ள கிறித்துவக் கோயிலின் பெயர் ஆர்மீனியன் சர்ச் என்பது.

29 ஆயிரத்து 800 ச.கி.மீ. பரப்புள்ள நாட்டில் 30 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆர்மீனிய அபோஸ்டோலிக் மதத்தை 94 விழுக்காட்டினர் சார்ந்துள்ளனர். 4 விழுக்காடு பேர் கிறித்துவர்கள். 2 விழுக்காட்டினர் பாரசீக ஜொராஷ்டிரிய (நெருப்பை வணங்கும்) மதத்தினராக உள்ளனர்.

ஆஸ்திரேலியா

தனியொரு கண்டமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவில், ஆதி மனித குலம் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் பரவினார்கள் என்ற வகையில், சுமார் 40-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடியினர் வசிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த நாட்டிற்கு நாடு பிடிக்கும் ஆங்கிலேயர்கள் 17 ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தனர். ஜேம்ஸ்குக் என்பாரின் தலைமையில் ஒரு குழுவினர் 1770 இல் வந்து குடியமர்ந்தனர். உள்ளூர் தொல்மக்களுக்கு இவர்கள் இழைத்த கொடுமைகள் சொல்லி மாளாது. செய்த கொலைகளும் அத்தனையே!

ஆஸ்திரேலியாவைத் தன்னுடைய குடியேற்ற நாடாக்கிட இங்கிலாந்து முடிவெடுத்தது. 1788 இல் இங்கிலாந்து கடற்படை தளபதி தல் பிலிப் என்பவர் சிட்னி துறைமுக நகரில் குற்றவாளி களுக்கான குடியிருப்பை ஏற்படுத்தினார். 800 நாடு கடத்தல் தண்டனை பெற்ற கொடும் குற்றவாளிகளை 11 கப்பல்களில் ஏற்றிக் கொண்டு வந்து சிட்னியில் இறக்கினார்.

அந்தக் குற்றவாளிகளின் பரம்பரை ஆஸ்திரேலியாவில் வளர்ந்தது. 1901 இல் ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு ஏற்பட்டது. கொன்று குவிக்கப்பட்ட பழங்குடி மக்களின் நிலங்களையும் வளம் மிகுந்த காடுகளையும் கைப்பற்றிக் கொண்ட இங்கிலாந்துக்காரர்கள் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். இங்கிலாந்தின் அரசியே இந்நாட்டுக்கும் அதிபர். குடிக்கோனாட்சி முறையில் கவர்னல் ஜெனரலும் உண்டு; நாடாளுமன்றமும் பிரதமரும் உண்டு. ஆனால் மனித நேயமும் மனிதனை மதிக்கும் மாண்பும் மறைந்துவிட்ட நாடு.

ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட நேரத் தில் தாங்கள் செய்த கொலைகளுக்காகவும் கொடுமை களுக்காகவும் வருத்தம் தெரிவித்து நாடகம் ஒன்றை அந்நாட்டு வெள்ளையர்கள் நடத்தினர். பழங்குடியினரின் ஆதிகால நடனம் போன்றவற்றைக் கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நடத்தி, முதல் மரியாதை தந்து தங்களின் பழைய காலக் குற்றங்களை மறைக்கப் பார்த்தனர்.

76 லட்சத்து 86 ஆயி ரத்து 850 சதுர கி.மீ. பரப் பும் 2 கோடியே 3 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட நாடு. கத்தோலிக்க, ஆங்கிலிகன், கிறித்துவப் பிரிவினரும் கிறித் துவத்தில் பல்வேறு பிரிவினரும் நிறைந்த நாடு. புத்த மதத்தினர் 2 விழுக் காடு, முசுலிம்கள் 1 . 5 விழுக்காடு. துக்கடா மதங்கள் 12 விழுக்காடு என்றும் மக்கள் உள்ளனர். மதம் கிடையாது எனச் சொல்பவர்கள் 2001 கணக்கெடுப் பின்படி 15 விழுக்காட் டுக்கு மேல் உள்ளனர்.

ஆட்சித் தலைவராக இங்கிலாந்தின் ராணி உள்ளார். அவரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் மைக்கேல் ஜெஃப்ரே என்பவர் 2003 முதல் உள்ளார்.


-------------நன்றி:-"விடுதலை" 26-5-2009

0 comments: