Search This Blog

24.7.14

சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?- கி.வீரமணி

களவுபோன கடவுளைக் கண்டுபிடிக்க மனிதர்களைவிட நாய்தான் உதவுகிறது! சிவகிரியில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சிவகிரி, ஜூலை 22- சிவகிரியில் 28.6.2014 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

நீண்ட இடைவெளிக்குப் பின், பக்கத்தில் இருக்கின்ற ஒரு ஊரில், உரையாற்றிவிட்டுச் சென்ற அனுபவம் எனக்குப் பழைய அனுபவம். சிவகிரியைப் பொறுத்தவரை யில், ராயகிரியில் பலமுறை பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தாலும், சிவகிரியில் நான் பேசுவது இதுதான் முதல்முறை என்று நினைக்கின்றேன்.

தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற பைனர்
இந்தப் பகுதியைப்பற்றி இங்கே வரவேற்புரையாற்றிய நல்லசிவன் அவர்கள், வரலாற்று ரீதியாக இரண்டு செய்திகளை மிக அழகாகச் எடுத்துச் சொன்னார்கள். பாராட்டத் தகுந்த அளவில் இருந்தது. இது ஒரு ஜமீன் பகுதி - ஆரம்பத்தில்; இந்தப் பகுதியில் ஜமீன்தாராக இருந்தவர், அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய அளவிற்கு தேவதாசிகள் ஒழிக்கப்படவேண்டும்; தேவதாசிகள் என்கிற பெயரால் நம்முடைய சமுதாயத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, கடவுளுக்குப் பணியாற்று கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையில், கேவலப்படுத்திய அந்தத் தன்மைகளையெல்லாம் எடுத்து விளக்குவதற்காக, மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் அவர்கள், தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்ற ஒரு நாவலை எழுதினார். அது கற்பனை நாவல் போல் இருந்தாலும், புதினத்திலே, எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் கொடுமைகள் நடைபெற்றன; பெண்களை எப்படி ஒரு வியாபாரப் பொருள்களாக ஆக்கினார்கள் என்பதையெல்லாம், அந்தக் கொடுமைகளையெல்லாம் போக்கவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் தீவிரமான முயற்சியை, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் எடுத்த நேரத்தில், அதற்கு ஆதரவாக, அப்பொழுது இந்த நூல் ஒரு ஆதாரபூர்வமான நூலாக வெளிவந்தது, மிகப்பெரிய அளவிற்கு.

சுயமரியாதை இயக்கம் மிகப்பெரிய பணியை செய்தது. அதுபோலவே, அற்புதமான மற்றொரு செய்தியையும், இந்த நகரத்தின் வரலாறு எப்படிப்பட்டது என்பதையும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார் நல்லசிவன்.
மிகப்பெரிய அளவிற்கு, ஜமீன் அளவிற்கு இருந்தாலும், மற்றவர்கள் அதை வியந்து பாராட்டக்கூடிய அளவிற்கு, இந்தப் பகுதி மக்கள் சிறப்பாக இதனைச் செய்திருக்கிறார் என்று நினைக்கும்பொழுது, மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஏனென்றால், அந்தக் காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஜமீன் என்றால், மக்களுக்குச் சம்மந்தமில்லாத இடத்தில் இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி, மிகப்பெரிய அளவில், அவர்கள் எல்லாம் நல்ல அளவிற்கு, சமுதாயத்திற்கு வரவேண்டும் என்ற சூழல்.

எனவே, இப்பொழுது குற்றாலம் பயிற்சி முகாமிற்கு வந்ததைப் பயன்படுத்தி, தோழர் குருசாமி அவர்களும், திருப்பதி அவர்களும், கேட்டுக்கொண்டனர் எங்களை. அதுபோல, நம்முடைய மாவட்டத் தோழர்கள் எல்லோரும், அவர்களுடைய முயற்சியில். உங்களை எல்லாம் சந்திக்கும்பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

பேராசிரியர்கள் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்

பகுத்தறிவாளர் கழகம் என்பது, தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப் பெற்ற ஒரு சிறந்த பொது அமைப்பு. பகுத்தறிவாளர் கழகத்தைத் தந்தை பெரியார் அவர்கள், சென்னையில் தொடங்கினார்கள் 1971, 72 ஆம் ஆண்டில். அப்படித் தொடங்கியபொழுது, பெரிய அதிகாரி கள் எல்லாம், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம்கூட தொடக்கத்தில் இருந்தார்கள்; பேராசிரியர்கள் பொறுப் பாளர்களாக இருந்தார்கள். இப்படி பல தலைமை அதிகாரிகள் எல்லாம் இருந்தார்கள். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள், அந்தப் பகுத்தறிவாளர் கழகத்தி னுடைய தொடக்க விழாவில், சென்னையில், எப்படித் தொடங்கினார்கள் என்று கேட்கும்பொழுது, மிகவும் வியப்பாக இருக்கும்.
பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்றால், அதுவும் சென்னையில், தலைநகரத்தில் இப்பொழுதுதான்  பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறேன். அப்படி பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்குகிறேன் என்று சொன்னால், என்ன அர்த்தம் என்றால், மனிதர்கள் கழகத்தை இப்பொழுதுதான் நான் உருவாக்குகிறேன் என்று அர்த்தம் என்று தந்தை பெரியார் ஆரம்பித்தார்.

பகுத்தறிவாளர் கழகம் என்று சொன்னால், மனிதர்கள் கழகம். அப்படி என்றால், இவ்வளவு நாள் மனிதர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உருவத்தால் மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறார்களே, தவிர, ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுதான், மனிதனை, மிருகங்களிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடியது.
நாய்க்கு இருக்கின்ற ஆற்றல், மனிதனுக்கு இல்லாத ஆற்றல்!
மனிதன் மிருகங்களைவிட உயர்ந்தவன் என்று சொன்னால், மிருகங்களுக்குச் சில சக்திகள் இருக்கின்றன; சில உணர்வுகள். அது மனிதனுக்குக் கிடையாது. இருந்தாலும், மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். உதாரணமாக, இங்கே உரையாற்றிய திருப்பதி அவர்கள் நாயைப்பற்றி ஒரு கதையை சொன்னார்.

நாய்க்கு நன்றி உணர்ச்சி மட்டும் முக்கியமல்ல; நாய்க்கு இருக்கின்ற ஆற்றல், மனிதனுக்கு இல்லாத ஆற்றல் என்னவென்று சொன்னால், மோப்ப சக்தியின் மூலமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது நாய்தான். ஒரு கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது; அதையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொன்னால், காவல்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் - நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து, அந்த மோப்ப நாய்களை குற்றம் நடைபெற்ற இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். மோப்ப சக்தியின் மூலமாக பலவிடங்களுக்குச் சென்று குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்ற ஆற்றல், நாய்களுக்கு உண்டு.

அதுமட்டுமல்ல, யார் எதிரிகள்? யார் பழகியவர்கள்? யார் பழகாதவர்கள்? இதனை சிறப்பாகக் கண்டுபிடிக்கக் கூடிய சக்தி நாய்களுக்கு உண்டு.
மனிதர்களைவிட, நாய்தான், கடவுளையும் சேர்த்து கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கிறது

இன்னுங்கேட்டால், கடவுள் சிலைகளே காணாமல் போவது இப்பொழுது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருடு போகிறது; காணாமல் போன கடவுள் சிலைகளை எப்படிக் கொள்ளையடித்தார்கள். கோவில் உள்ளே எப்படி நுழைந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டுமானால், மனிதர்களைவிட, நாய்தான், கடவுளையும் சேர்த்து கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
என்றாலும், ஆறறிவு படைத்த மனிதன் அதைவிட மேலானவனாக இருக்கிறான். காரணம் என்னவென்றால், அய்ந்தறிவு பெற்றவைகளுக்கு உணர்வுகள் மேலானதாக இருந்தாலும், மிகப்பெரிய அளவிற்கு மனிதனுக்குத்தான் சிறப்பு உண்டு.

குருவிகள் கூடு கட்டுகின்றன; அவை தனக்கு மட்டும் தான் கூடு கட்டிக் கொள்ளும். மனிதன்தான் வீடு கட்டு கிறான்; அதுவும் தனக்காக மட்டும் கட்டிக் கொள்வதில்லை; அடுத்தவர்களுக்காகவும் கட்டுகிறான். மனிதன் அவன் ஒரு சமுதாயப் பிராணி; கூட்டு வாழ்க்கையை விரும்புகின்றவன் என்று அர்த்தம்.

மிக முக்கிய தேவையானது சுயமரியாதை!

அதுமட்டுமல்ல, மான உணர்ச்சி என்பதை, பகுத்தறிவின்மூலம்தான் மனிதன் பெறுகிறான். பெரியார் ஆரம்பித்த இயக்கத்திற்கு, சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்கள். அந்த சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்த நேரத்தில், அய்யா அவர்கள், மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கிய தேவையானது சுயமரியாதையாகும் என்றார்.

உங்களுடைய பணி என்ன என்று தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து கேட்டபொழுது, 90 ஆம் வயதில் தந்தை பெரியார் தன்னுடைய கருத்தைச் சொன்னார்:

திராவிடச் சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே பணி. உலக மக்களை நான் பார்க்கிறேன்; என்னுடைய மக்களையும் நான் பார்க்கிறேன். உலக மக்களெல்லாம் எவ்வளவோ முன்னேறி போய் விட்டார்கள். ஆனால், நம்முடைய மக்கள் இன்னமும் மூட நம்பிக்கையிலே உழன்று கொண்டிருக்கிறார்கள்; இன்ன மும் மான உணர்ச்சியற்றவர்களாக இருந்து கொண்டிருக் கிறார்கள். இன்னமும் அடிமை வாழ்வை சகிப்பதிலே மட்டுமல்ல,  சுவைப்பதிலேயும் அவர்கள் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவைகளெல்லாம் மாற்றவேண்டாமா? இதற்காகத்தான் நான் என்னால் முடிந்த வரையில், பதவிக்குப் போகாமல், புகழ் வேட்டையில் ஈடுபடாமல், எவ்வளவு அதிகமான கெட்ட பெயர் எனக்கு வந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், துணிந்து விமர்சனங்களை எதிர்கொண்டு நான் செய்கிறேன், அப்படிப்பட்ட தோழர்களையே என்னுடைய தோழர் களாகவும், என்னுடைய அமைப்பிலே உருவாக்குகிறேன்.

ஒரு விஞ்ஞானி விருப்பு வெறுப்பில்லாமல் எப்படி பார்த்து சொல்வாரோ, அதேபோலத்தான் முழுக்க முழுக்க இதைச் செய்கிறார்கள் என்ற அளவில், தெளிவாக இந்தக் கருத்தை எடுத்துச் சொன்னார்.

இன்றைக்கும் அதுதானே தேவைப்படுகிறது.
இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் நாம் ஏமாறுவது இருக்கிறது, மிகப்பெரிய அளவில்.


நம்முடைய நாட்டில், நாள்தோறும் மூட நம்பிக்கைகள், எல்லையற்ற மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடுகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது; வாழ்க்கை முறை கூடியிருக்கிறது. ஆனால், இதெல்லாம் எப்படி என்று சிந்திப்பதற்கு நாம் தயாராக இல்லையே!

ஒரு பொது அமைப்பு மாதிரிதான் பகுத்தறிவாளர் கழகம்; திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழகம் ஏன் தேவைப்படுகிறது? பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன? ஊரில் உள்ள ஒரு பொது அமைப்பு மாதிரிதான் பகுத்தறிவாளர் கழகம். திரா விடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் எல்லாம் ஒன்றுதான். அது தேவைதான். அவை எல்லோருக்கும் பாதுகாப்பானது தான். தயவு செய்து அது ஒரு கட்சி என்று ஒதுக்காதீர்கள்.

காவல் நிலையம் என்பது பொதுவானது - ஆட்சிகள் மாறும், கட்சிகள் மாறும்; ஊர் நலத்திற்கு ஒரு காவல் நிலையம் எப்படி தேவை - எந்தக் குற்றமும் நடை பெறாமல் இருப்பதற்கு காவல் நிலையம் தேவை.

அதுபோலவே, மருத்துவமனையும்; அந்த மருத்துவ மனையின் தத்துவம் என்னவென்றால், யார் நோயாளியாக இருந்தாலும், அவர்களுக்குச் சிகிச்சை அளித்து, அவர்கள் நீண்ட காலம் வாழக்கூடிய அளவிற்கு - நோய்நாடி நோய் முதல் நாடக் கூடிய அளவிற்குச் செய்யவேண்டியது மருத்துவமனையின் பொறுப்பு. மருத்துவமனை என்பது எல்லோருக்கும் பொதுவானது; இந்தக் கட்சிக்கு, இன்ன ஜாதிக்கு,  இந்த மதத்திற்கு, இன்னாருக்கு, பணக்காரருக்கு என்பதெல்லாம் கிடையாது.

அதேபோல், தீயணைப்பு நிலையம், அதேபோல், ஒரு பள்ளிக்கூடம் - ஆகவே மேற்சொன்ன அத்தனையும் மக் களுக்குப் பொதுவானது. அதேபோல தான் நண்பர்களே, திராவிடர் கழகமும் மக்களுக்குப் பொதுவானது; பகுத்தறிவாளர் கழகமும் மக்களுக்குப் பொதுவானது. ஆகவே, உங்களுடைய நலனைப் பாதுகாப்பது.

இங்கே வந்ததும், நம்முடைய ராயகிரி தோழர்கள், நல்லசிவன் போன்றவர்கள் எல்லாம் என்னிடம், இந்த ஊரில் கல்லூரி கிடையாது; மகளிர் கல்லூரி ஒன்று அமைப் பதற்கு நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. எங்கள்மேல் வைத்திருக்கின்ற உங்கள் நம்பிக்கைக்கு நான் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன். அதேநேரத்தில், ஒரு காலத்தில் திராவிடர் கழகத்துக்காரன் என்றால், ஊரைக் கெடுக்கிறவர்கள்; கருப்புச் சட்டைக்காரன் வந்தால், ஊரில் மழை பெய்யாது; அவர்கள் ஊருக்குள் வரவே கூடாது; கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் அவர்கள் என்றெல்லாம் சொன்ன கருத்துகள் போய், பெரியார் சொன்னதுபோல், கடவுளை மற என்று சொன்னதோடு நிறுத்தவில்லை; அடுத்து, மனிதனை நினை என்று சொன்னார். அதுதான் மிக முக்கியம் என்று சொன்னார்.

நாலணாவை வாங்கிய பிறகுதான், கையெழுத்துப் போடுவார்

இங்கே படிப்பதற்காக மிக நீண்ட தூரம் செல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு மகளிர் கல்லூரி இல்லை, அதைத் தொடங்க உதவி செய்யுங்கள்; ராயகிரியில் தொடங்குங்கள் என்று அவர் கேட்டார்; இவையெல்லாவற்றையும் யாரைப் பார்த்து கேட்கிறார்கள், பதவிக்கே போகாதவர்களைப் பார்த்து,  பதவி பக்கமே தலை வைத்துப் படுக்காதவர் களைப் பார்த்து, இருந்தாலும், உங்களுக்கு எங்கள்மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது என்னவென்றால், இந்த மாதிரி பணிகளைச் செய்கின்ற இயக்கம் இந்த இயக்கம். அதன் விளைவுதான், தந்தை பெரியார் அவர்களிடம் கொடுக் கப்பட்ட ஒவ்வொரு காசினையும், முடிச்சுப் போட்டு வைத்திருந்தார். கையெழுத்து வேண்டும் என்று யாராவது கேட்டால், நாலணா இருக்கிறதா? என்று கேட்பார். நாலணாவை வாங்கிய பிறகுதான், ஆட்டோ கிராப் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவார். இயக்க நூல்களை வாங்கினால், கையெழுத்திற்குப் பணம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அப்படியெல்லாம் வாங்கிய பணம்தான், இன்றைக்கு அறக்கட்டளையாக அவரால் உருவாக்கப் பட்டு, மிகப்பெரிய அளவில், தன்னுடைய சொந்த வருமானம், சொந்த பூர்வீக சொத்து, மக்கள் கொடுத்தது எல்லாவற்றையும் அறக்கட்டளையாக ஆக்கி, அவரும் சரி, அவருக்குப் பிறகு தலைமை தாங்கிய அன்னை மணிய ம்மையார் அவர்களும் சரி, எல்லாம் சேர்ந்து உருவாக்கியது தான், இன்றைக்குப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உருவாகி இருக்கிறது; பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் 35 காலமாக நடைபெற்று வருகிறது; பெரியார் மருந்தியல் கல்லூரி உருவாகியிருக்கிறது. பல ஊர்களில், பல உயர்நிலைப்பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ராயகிரியில்கூட, ஒரு தொழில்நுட்பத் துறையில், அங்கிருந்த இடத்தைப் பயன்படுத்தி, அதை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரியார் அறக்கட்டளை நடத்தினால், பொது நலனுக்காக நடத்துவீர்கள்!

நேற்றுகூட கீழப்பாவூரில் நடைபெற்ற கூட்டத்தில், கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர், ஷாஜகான் என்பவர், பெரியார் உலகத்திற்கு 50 ஆயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு,  அய்யா உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்று சொல்லிவிட்டு, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும்தான் பள்ளி, கல்லூரிகள் எல்லாம் வைத்திருக்கிறீர்கள்.

தென்மாவட்டங் களில் சட்டக் கல்லூரி ஒன்றை தொடங்குங்கள்; அதற்கு நாங்கள் உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். நானும் உதவி செய்கிறேன். இதை பெரியார் அறக்கட்டளை நடத்தினால், பொது நலனுக்காக நடத்துவீர்கள்; ஒழுக்கமாக நடத்துவீர்கள்; மிகவும் கண்டிப்பாக நடத்துவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே அதனை நீங்கள் செய்யவேண்டும் என்று சொன்னார்.
நான், இந்தக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
இங்கே வந்தால், நம்முடைய தோழர்கள் வரிசையாக மனு கொடுக்கிறார்கள். நான் சட்டமன்ற உறுப்பினரும் அல்ல; நாடாளுமன்ற உறுப்பினரும் கிடையாது; ஆளுங் கட்சியை ஆதரிக்கின்றவர்களும் அல்ல; தேவையில்லாமல் எதிர்க்கின்றவர்களும் கிடையாது. அதேநேரத்தில், தெளிவாக எங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், சிவகிரி, ராயகிரி போன்ற பகுதிகளில், நீங்கள் இயக்கத்தின்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்குத் தலைவணங்கி நான் நன்றி செலுத்துகிறேன். நிச்சயமாக, நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. அது எந்த அளவிற்கு, எந்தக் காலகட்டத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகிறபொழுது செய்ய முடியுமோ, அதை நாங்கள் அவசியம் செய்வோம். தேர்தல் வாக்குறுதிபோல நாங்கள் வாக்குறுதிகளை கொடுக்கமாட்டோம்.
உங்களுக்குத் தெரியும்; பல்வேறு சூழ்நிலைகள் ஒத்துப் போகவேண்டும்; நாங்கள் செய்யவேண்டும் என்று முன் வந்தாலும், பல்கலைக் கழகங்கள் ஒத்துழைக்கவேண்டும்; இந்தப் பகுதியில் பல்கலைக் கழகம் என்று சொன்னால், இங்கே உள்ள பல்கலைக் கழகம் எதுவோ, அது ஒத்துழைக்க வேண்டும். அதைவிட, முதலில் அரசாங்கத்தினுடைய ஒத்துழைப்பு வேண்டும். எங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட முறையில் எந்த அரசாங்கம்மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது.

மக்கள் நலம் சார்ந்ததாக இருந்தால், ஆதரிப்போம், வரவேற்போம். மக்கள் நலனுக்கு விரோதமாக இருந்தால், தயவு தாட்சண்யமின்றி கண்டிப்போம், எதிர்ப்போம். இதுதான் எங்களுடைய அணுகுமுறையாக இருக்கக் கூடிய சூழ்நிலை.
அந்த நிலையில், நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை செயல்படுத்த, நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்வோம். இந்த ராயகிரி பகுதியில் தேவையான இடம் இருக்கிறது; நீண்ட காலத்திற்கு முன்பே இங்கே கல்லூரி வந்திருக்கவேண்டும்; ஆனால், வர முடியாத அளவிற்கு பல சூழ்நிலைகளை உள்ளூர்காரர்களே உருவாக்கினார் கள். நல்ல காரியங்கள் நடைபெறுவதற்குத் தடையாக இருப் பவர்களும் நம் நாட்டில் ஏராளம் உண்டு. இது உங்களுக்குத் தெரியாததில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நிச்சயமாக இந்தப் பகுதியில், இந்த இயக்கம் வளரக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கின்ற நேரத்தில், உங்களுடைய எண்ணங்களை செயல்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம்.கடவுள் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார்; அது உண்மைதான். அதனை நாங்கள் மறுப்பதற்குத் தயாராக இல்லை. ஏன்? இல்லை, அதனால் இல்லை என்றோம்.

உலக நாடுகளில், எங்கேயாவது ஜாதி இருக்கிறதா?

நாங்கள் கல்லூரி தொடங்குவது ஒரு பக்கத்தில் இருக் கட்டும்; எல்லா இடங்களிலும், படிக்கவேண்டும், படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது பாருங்கள், இதுவே தந்தை பெரியார் அரும்பாடு பட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்று அர்த்தம். பெரியாருடைய உழைப்பு. ஏனென்றால், இந்த சமுதாயத்தில் ஜாதியை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்? யாரோடு நாங்கள் போராடுகிறோம்?  தனிப் பட்ட முறையில், எந்தப் பார்ப்பனர் எங்களுக்கு விரோதி? ஜாதி வெறியோ, மதவெறியோ கூடாது; மனித நேயம்தான் இருக்கவேண்டும் என்று பகுத்தறிவாளர்கள், தந்தை பெரியாருடைய தொண்டர்களாகிய நாங்கள் பாடு படுகிறோம் என்றால், என்ன காரணம்? மனிதனுக்குப் பகுத்தறிவு வரவேண்டும் என்றால், கல்வி வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதுதானே மிக முக் கியம். அப்படிப் பயன்படுத்திக் கொண்ட உலக நாடுகளில், எங்கேயாவது ஜாதி இருக்கிறதா?
பெரியார் என்ன செய்தார் என்று பல பேர் நினைக் கிறார்கள். பெரியாருடைய கருத்துகளை, அவருடைய தொண்டை, மனிதநேயப் பணிகளை எல்லாம் மறந்து விட்டு, ஏதோ கடவுள் இல்லை என்று  சொன்னவர், சாமி இல்லை என்று சொன்னவர், பார்ப்பனர்களைத் திட்டியவர் என்று இரண்டே வரிகளில் அடக்கிவிடுகிறார்கள், தந்தை பெரியாரை!

பெரியார் அவர்களின் தொண்டு என்பது, 95 ஆண்டு காலம் அவர்கள் வாழ்ந்தார்கள்; தன்னுடைய சொந்த செல்வத்தையெல்லாம் மக்களுக்கே கொடுத்துவிட்டுச் சென்றார்; அதனை அறக்கட்டளையாக ஆக்கினார்.
மக்களுக்கே கொடுத்ததினால்தால், இங்கே இதெல்லாம் செய்யுங்கள்; உங்கள் அமைப்பினால்தான் இவையெல்லாம் நடக்கும் என்று எங்களிடம் கேட்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார்; அது உண்மைதான். அதனை நாங்கள் மறுப்பதற்குத் தயாராக இல்லை. ஏன்? இல்லை, அதனால் இல்லை என்றோம்.

கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது?

ஒருவர் புதிதாக இயக்கத்தில் இணைந்தவர், தந்தை பெரியாரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார், அய்யா, நாம் கடவுள் இல்லை என்று சொல்கிறோமே, திடீரென்று ஒரு நாள் கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு எங்களைப் போன்றவர்களாக இருந்தால் என்ன பதில் சொல்லியிருப்போம், யோவ், இல்லாத ஆள் எப்படிய்யா வருவார்? ஏனய்யா, மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறாய். ஏனய்யா பயப்படுகிறாய் என்று. ஆனால், பெரியார் அய்யா அப்படி பதில் சொல்லவில்லை. அவரைப் போல் பதில் சொல்வதற்கு ஆளே கிடையாது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் சொல்வார். இன்றைக்கு அவரைப் பற்றி தெரியாத தலைமுறையினருக்காக இதை சொல்கிறேன்.
                                             ---------- தொடரும்  --"விடுதலை” 22-07-2014
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?

சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
சிவகிரி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி
சிவகிரி, ஜூலை 23- சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா? என்ற கேள்வியை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

சிவகிரியில் 28.6.2014 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

வந்துட்டார் என்றால், இருக்கு என்று சொல்லிட்டுப் போவோம்!
உடனே அவர் கேட்ட கேள்விக்கு, பளிச்சென்று பதில் சொன்னார், வந்துட்டார் என்றால், இருக்கு என்று சொல்லிட்டுப் போவோம்; நமக்கு என்ன நட்டம்; இதுவரையில் வரமாட்டேன் என்கிறானே!  துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்தாலும் வரமாட்டேன் என்கிறானே! என்று தெளிவாகப் பதில் சொன்னார்.
சாமி சிலையை திருடுகிறார்கள்; கர்ப்பக் கிரகத்தில் பெண்ணை பாலியல் வன்முறை செய்கிறார்கள்; காஞ்சிபுரத்தில் தேவநாதன் அர்ச்சகரும் அந்த வேலையைத் தான் செய்தார்.  இவ்வளவு நடந்தும் கடவுள் வரமாட்டேன் என்கிறானே, இருக்கின்னு சொல்றதா? இல்லையென்று சொல்வதா? அதுதானே மிக முக்கியம். அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், மனித வாழ்வு! மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும்; கைகோர்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
ஜாதியால் பிளவுபட்டிருக்கக்கூடாது! 
ஜாதி முறை உலகத்தில் வேறு எங்காவது உண்டா? சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே, இந்த 67 ஆண்டுகளில் எந்த நாட்டிலாவது சூத்திரன் என்று ஒருவன் இருக்கிறானா? பஞ்சமன் என்று ஒருவன் இருக்கிறானா? தாழ்த்தப் பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று நம் நாட்டில் இருப்பதுபோல, வேறு எந்த நாட்டிலாவது உண்டா? 1944 ஆம் ஆண்டு டிவேலி நிக்கோலஸ் என்பவர் வெளி நாட்டுப் பத்திரிகையின் ஆசிரியரை இந்தியாவிற்கு அனுப்பினார்கள்; அப்பொழுது இந்தியா சுதந்திரமடைய வில்லை. அவர் காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார்; அந்த புத்தகத்தின் தலைப்பு இந்தியாவைப்பற்றி எனது தீர்ப்பு! A Verdic on India அதில் அவர் எழுதுகிறார், நான்  காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை சுற்றிப் பார்த்தேன்.
பல பேரை சந்தித்தேன். இந்தியா முழுவதும் நான் சுற்றியிருக்கிறேன். ஆனால், இவ்வளவு நான் சுற்றினாலும், ஒரு இந்தியரைக்கூட பார்க்க முடியவில்லை. அடுத்து சொல்கிறார், இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரையும் நீங்கள் யார்? என்று கேட்டால், நான் ஒரு இந்தியன் என்று பதில் சொன்னவர்கள் ஒருவர்கூட கிடையாது.

நான்  ரெட்டியார்; நான் செட்டியார்; நான் கவுண்டர்; நான் வன்னியர்; நான் சாஸ்திரி; நான் மிஸ்ரா; நான் சட்டோபாத்தியா என்றுதான் சொன்னார்களே தவிர, நான் ஒரு இந்தியன் என்று யாரும் சொல்லவேயில்லை.
இதைத்தான் நான், இந்தியாவில் ஒரு இந்தியனைக்கூட பார்க்கவில்லை என்று சொன்னேன்; நான் இனிமேல்தான் அதுகுறித்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றார்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கலாகாது!

ஜாதியால் நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம்; ஜாதியால் பிளவுபட்டிருக்கிறோம்; ஒன்றாக சேர வாய்ப்பில்லாமல் இருந்தோம். நல்ல வாய்ப்பாக திராவிடர் இயக்கம் வந்ததினால், மக்கள் எல்லாம் ஒன்றாக சேரக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மற்ற இடங்களில் அந்த வாய்ப்பு கிடையாதே! மற்ற நாடுகளில் ஜாதியே கிடையாதே! சூத்திரர்களுக்கு எதை கொடுத் தாலும், அறிவைக் கொடுக்கலாகாது என்று வைத்திருந்தார்கள்.
 
ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப் பெதற்கு என்று கேட்டார்கள்; இன்றைக்கு கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊதுகிற அடுப்பே கிடை யாது; திருகுகின்ற அடுப்பைத்தான் கொடுத்திருக்கிறார்.  இன்றைக்கு மக்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்.

பெண்கள் மிகப்பெரிய அளவிற்கு படிக்கிறார்கள்; பிளஸ் டூ தேர்விலும் சரி, பத்தாம் வகுப்புத் தேர்விலும் சரி, பெண்கள்தான் முதல் இடத்தைப் பிடிக்கின்றனர்.

சரசுவதி பூஜை ஆண்டுதோறும் கொண்டாடக்கூடிய நாட்டில், கல்விக்குத் தனியாக ஒரு கடவுளை வைத் திருக்கும் நமது நாட்டில், பாட்டி சரசுவதிக்குக் கையொப்ப மிடத் தெரியாது; ஆனால், பேத்தி சரசுவதி டாக்டர் சரசுவதி; வழக்குரைஞர் சரசுவதி; நீதிபதி சரசுவதி; பொறியாளர் சரசுவதி; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., சரசுவதி இவ்வா றெல்லாம் வந்திருக்கின்றார்களே, இது சரசுவதி பூஜை யினால் வந்ததா? தயவு செய்து நடுநிலையாளர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். பெரியார் பாடுபட்டதின் விளைவாகத்தான் பெண்கள் இன்றைக்கு இவ்வளவு படித்திருக்கிறார்கள்; திராவிடர் இயக்கத்தினுடைய சாதனைதான், இத்தனை கல்விப் பெருக்கம். திராவிட இயக்கத்தினுடைய சாதனை மட்டுமல்ல, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசருடைய அரிய முயற்சியினால்தான், இவ்வளவு பெரிய சமுதாய மாற்றங்கள். இன்னும் படிக்கவேண்டும்; படிக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் என்ற நிலை வந்துவிட்டது.
ஆனால், ஜாதிய அமைப்பில் என்ன சொல்கிறான்,  சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக் காதே, கல்வியைக் கொடுக்காதே என்று. இந்த இயக்கம் வந்த பிறகுதானே, சூத்திரன் என்றாலே என்ன தெரிந்து கொண்டோம்! பெரியார் கேட்டார், அறிவும், மானமும் உள்ள சமுதாயமாக இந்த சமுதாயத்தை மாற்றிடவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.
நம்மாளிடம் சென்று, ஏங்க, உங்களிடம் பணம் இருக்கிறதா? என்று கேட்டாலும் சரி, உங்களிடம் வீடு, நிலம் இல்லையா? என்று கேட்டாலும் சரி கோபம் வராது. ஆனால், ஏங்க, உங்களுக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்டால்,
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
உடனே அவர், ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு என்னைப் பார்த்தா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று அடிப் பதற்குப் பாய்ந்து வருவார்.
மானமும் அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும் என்று சொன்னால், அறிவும், மானமும் நமக்கிருந்திருந்தால், பெரியாருக்கு முன்னால், எவ்வளவு மகாத்மாக்கள், ஜீவாத்மாக்கள், பரமாத்மாக்கள், அவதாரங் கள் எல்லாம் தோன்றினார்களே, அவர்கள் ஏன் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும் என்று சொல்லவில்லை.
சூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா? பாரத ரத்னா பட்டமா?
சூத்திரன் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே, இன்னமும் சட்டத்திலே இருக்கிறதே! வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா! அந்த ஜாதிப்படி, சூத்திரன் என்கிற வார்த்தை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?

செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள் 

இன்றைக்கும் நாம் கட்டிய கோவிலுக்குள் செல்ல முடியாதே! வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவிற்கு உள்ளே செல்லலாம். தமிழர்கள் நிலம் கொடுத்து; தமிழர்களின் பணத்தினால் கட்டப்பட்ட கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் செல்வதற்கு இன்னமும் உரிமை உண்டா? இதனைக் கேட்பதற்கு வேறு ஆள் உண்டா?
நீங்கள், இன்றைக்குப் பெண்கள் படிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்; பெண்கள் கல்லூரி வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது வரவேற்கத்தகுந்ததுதான்; பெண் களுக்கு அப்பொழுதுதான் அறிவும், தெளிவும், துணிவும் ஏற்படும்; சொந்தக்காலில் நிற்க முடியும். இன்றைக்கு மூட நம்பிக்கைகள் பரவியிருப்பதால், 45 வயதானாலும் பெண்களுக்குத் திருமணம் நடக்காமல் இருக்கிறதே, ஏனென்று கேட்டால், செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள். ஒரு செவ்வாய் தோஷக்காரர், இன்னொரு செவ்வாய் தோஷக்காரரைத்தான் தேடவேண்டும் என்று கதை கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைய நிலை என்ன? அறிவியல் வளர்ந்துவிட்டது; செவ்வாய்க் கோளிற்கே ராக்கெட் விட்டுவிட்டார்கள்; அதுவும் என்றைக்கு அனுப்பினார்கள் என்றால், செவ்வாய்க்கிழமை அன்று. ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான்

மூட நம்பிக்கைக்கு மூளையில் போட்ட விலங்கு இருக்கிறது பாருங்கள், அது சாதாரண விலங்கல்ல; கையில் போட்ட விலங்கு, அரசியல் விலங்கு; காலில் போட்ட விலங்கு, பொருளாதார விலங்கு. ஆனால், மூளையில் போட்ட விலங்கு இருக்கிறதே, அது பண்பாட்டு படை யெடுப்பினால் போடப்பட்ட விலங்காகும். காலிலோ, கையிலோ விலங்கு போட்டால், அதனை உடைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். ஆனால், கண்ணுக்குத் தெரியாத மூளையில் அல்லவா விலங்கினை போட்டுள் ளான். அதை உடைப்பதற்கு ஒரே ஒரு சம்மட்டிதான்;  ஈரோட்டு சம்மட்டியால் மட்டுமே, பெரியாருடைய தத்துவங்கள் மட்டுமேதான் அந்தத் துணிச்சலை உண்டாக்கும்.
இன்றைக்கு அறிவியல் பரவினாலும், அங்கேயும் மூட நம்பிக்கை நிரவியிருக்கிறது; தயார் செய்கிறவர் என்ன செய்கிறார்; 1000 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பாடுபட்டு, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு அறிக்கை தயார் செய்தால், அதைக் கொண்டு போய், திருப்பதி வெங்கடாசல பதி முன் வைத்து, ஒரு சுற்று சுற்றி, அங்குள்ள அய்யர் அதற்கு ஒரு அபிஷேகம் செய்வதுபோல், ஏதோ செய்த பிறகு, அதனை எடுத்துக்கொண்டு வருகிறார். ஏற்கெனவே விட்ட ராக்கெட்டால் ஒன்றும் ஆகவில்லை.

திருப்பதி வெங்கடாசலபதிக்கு ராக்கெட்டை விடக் கூடிய சக்தி இருந்தால், அவருக்கு ஏன் காவல்துறை யினரின் பாதுகாப்பு? உண்டியலுக்குப் பக்கத்தில் பாதுகாப்பு? உண்டியலிலுள்ள பணத்தை எண்ணும்போது, அறிவியல் சாதனமான கேமராக்கள் ஏன்?

சர்வசக்தி வாய்ந்தவர்; சர்வ வியாபி; அங்கிங்கெனாபடி எங்கும் இருக்கிறவர்தான் கடவுளாச்சே! காவலர் ஒருவரின் முன்பு பிக்பாக்கெட் அடித்தால், உடனே அவர் பிடித்துக் கொள்வாரா? மாட்டாரா? சாதாரண மனிதனுக்கே அந்த ஆற்றல் உள்ளபோது, சர்வ சக்தி ஆற்றல் வாய்ந்த கடவுள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்? செவ்வாய் தோஷம் என்று சொன்ன காலம் போய், இன்றைக்கு செவ்வாய்க் கோளில் மனிதன் குடியேறப் போகிறான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அறிவு வளர்ந்திருக்கக்கூடிய காலகட்டத்தில், இன்னமும், நம்மில் கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக்கூடாது; இன்னமும் நம் சொந்த சகோதரர்கள், நாய், பன்றி, கழுதை போகலாம்; ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் செல்லக்கூடாது என்று வைத்திருந்தார்களே; அதற்காகத்தானே தந்தை பெரியார் போராடினார்; அதுதானே வைக்கம் போராட்டம். காந்தியார்கூட தந்தை பெரியாரை கண்டித்தார்; நீங்கள் ஏன் கேரளாவுக்குச் சென்று ரகளை செய்கிறீர்கள்; தமிழ்நாட்டில் இருப்பவர் ஏன் அங்கே சென்றீர்கள் என்று கடிதம் எழுதினார்.

சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா? தவறா?

பெரியார் அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினார், மகாத்மா ஜி அவர்களே, வைக்கத்திலுள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நாய், கழுதை, பன்றி செல்கிறது; இவையெல்லாம் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமை யைப் பெற்றன. நாங்களெல்லாம் சத்தியாகிரகம் செய்து அந்த உரிமைக்காகப் போராடுகிறோம்; இது நியாயமா? தவறா? என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கடிதம் எழுதினார்.

காந்தியார் அதற்குப் பதில் சொல்லவில்லை.

கீழ்ஜாதியைச் சேர்ந்த ஒருவர் வழக்குரைஞரான பிறகுகூட அந்தத் தெருக்களில் நடமாடக் கூடாது என்பதன் விளைவுதானே, அந்த வைக்கம் போராட்டமே வெடித்தது; இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஜாதி ஒழியவேண்டும் என்பது எதற்காக? எல்லோருக் கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். இன்றைய தலைமுறையினருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம்; இன்றைக்குக் கல்வி நீரோடை நாடெல்லாம் ஓடியிருக்கிறது; பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், திராவிட  ஆட்சியினால்!

பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 575 கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்தவை. இவை யெல்லாம் தனித்தனியே பல்கலைக் கழகங்கள்; தனித்தனி அமைப்புகள்.

முத்தன் மகன் முனியன்; குப்பன் மகன் சுப்பன் இவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்; அமெரிக்காவில் இருக்கிறார்கள்; எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றுகூட பெற்றோர்களுக்குத் தெரியாது! ஏதோ ஒரு ஊரில் இருக்கிறான்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்வான்; நாங்கள் பேசுவோம் என்று சொல்வார்கள்.

ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு!
அந்த அளவிற்கு இன்று வளர்ந்து வந்தது எப்படி? இதென்ன, மந்திரக்கோலால் வந்ததா? இல்லையே! தொடர்ந்து இந்த இயக்கம் பாடுபட்டதால், எல்லோருக்கும் படிப்பு வேண்டும்; சமூகநீதி வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டும்; இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவனுக்கு முன்னுரிமை கொடு; பசியேப்பக்காரனை  பந்தியில் முன்னால் உட்கார வையுங்கள்; புளியேப்பக்காரன் அஜீரணத்தினால் இருக்கிறான் - மேல்ஜாதிக்காரன் அவர்கள் எல்லாம் கொஞ்சம் பின்னால் இருக்கட்டும்; இப்படி இந்த இயக்கம் பாடுபட்டதினால், அருமை நண்பர்களே மிகப்பெரிய அளவிற்கு மாற்றங்கள் இன்றைக்கு வந்திருக்கிறது.

எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், நம்முடைய மக்களுக்கு அறிவும், மானமும் ஏற்பட வேண்டும். எனவே, இந்த சூத்திர இழிவு பட்டம் - ஜாதி ஒழியவேண்டும். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் என்று இருக்க வேண்டும்; பெண்ணடிமை நீங்கவேண்டும்; மனிதர்கள் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டிருக்கவேண்டும்; இருப்பதை எல்லாருக்கும் பங்கிட்டு வாழவேண்டும்.
இப்படி ஒரு நல்ல கொள்கையைச் சொல்லி, இந்த நாட்டில் அது இடையறாமல் வரவேண்டும் என்று நினைத் தால், ஆதிக்கவாதி சும்மா இருப்பானா? இன்றைக்குப் போராட்டம் அதற்காகத்தானே! இட ஒதுக்கீடு கூடாது! இட ஒதுக்கீடு கூடாது என்று இன்னமும் போராடிக் கொண்டிரு க்கிறார்கள். இன்னமும் நீதித் துறையில் பார்த்தீர்களே யானால், இந்த ஊரில் நிறைய வழக்குரைஞர்கள் இருக் கிறீர்கள்; நீதிமன்றம் இருக்கின்ற இடம்; உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார்கள்; 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட கிடையாது. தாழ்த்தப்பட்ட சமுதாயம் இந்தியா முழுவதும் 24 சதவிகிதம் இருக் கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் 75 சதவிகிதம் இருக்கிறார்கள்; சிறுபான்மையர்களான கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து 90 சதவிகிதம் உள்ளனர்.  உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் இருக்கிறார் கள்; ஆனால் 31 நீதிபதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட கிடையாது.

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நன்றி அறிவிப்பு விழா!

நீண்ட காலத்திற்கு முன்பு, பெரியார் அவர்கள் பாடு பட்டு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், 1971 காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்; தந்தை பெரியாரை அழைத்து, நன்றி அறிவிப்பு விழா போல் ஒரு விருந்து கொடுத்தார்கள்;


அய்யா உங்கள் உழைப்பினால்தான் நாங்கள் இவ்வளவு பேர் இந்தளவிற்கு வந்திருக்கிறோம்; அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம் என்று சொன்னார்கள்.

கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும்

உடனே அய்யா சொன்னார், உங்கள் அறிவு, ஆற்றல், திறமையினால், வந்திருக்கிறீர்கள்; என்னுடைய கொள்கைக் காக நான் பாடுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எல்லாம் இதை சொல்கிறீர்கள். என்னுடைய கவலை என்னவென்றால், நூறு வருஷத்தைத் தாண்டிய (அன்றைய காலகட்டத்தில்) சென்னை உயர்நீதிமன்றத்தில், தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், நீதிபதியாக வர முடியவில்லை. எவ்வளவு பேர் படித்து வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் வர முடியவில்லை. இப்பொழுது தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. ஆகவே, கலைஞருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவேண்டும் என்று சொல்கிறார். என்னை அழைத்து, விடுதலையில் இதுபற்றி தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார்.

உடனே நான் மறுநாளே அதுபற்றி தலையங்கம் எழுதினேன்.

12 ஆவது இடத்தில் இருந்த, வரதராஜன்
அடுத்த நாள் தாமதிக்கவில்லை கலைஞர் அவர்கள், சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், மாவட்ட நீதிபதிகளாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டார். 12 ஆவது இடத்தில் இருந்தார், வரதராஜன் என்பவர். அவருக்குச் சலுகை கொடுத்து, வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இல்லை, அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

வரதராஜன் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் நீதிபதி யாக இருந்தார். அவருக்கு உத்தரவு வந்தது; நீங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டீர்கள் என்று.
அவருக்கு ஆச்சரியம்! நான் 12 ஆவது இடத்தில் இருக்கிறேனே, வரவே வராது என்று நினைத்திருந்தேனே; உடனே வந்துவிட்டதே என்று. அது பெரியார் சொல்லி உடனே நடைபெற்றது.

திருவில்லிபுத்தூர் வீராசாமி அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக வரவேண்டும் என்பதில், அவருடைய பங்கும் இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களும் ஒத்துழைத்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வரதராஜன் வந்தார். அதற்காக கலைஞர்மேல் பல பேருக்கு ஆத்திரம். தி.மு.க.வின்மீதும் ஆத்திரம், அது இன்றைய காலகட்டம் வரையில் நீடிக்கிறது.

ஏனென்றால், அதுவரையில் வழக்குரைஞர்களாக பார்ப் பனர்கள்தான் இருப்பார்கள்; நம்மாள் வழக்குரைஞராக வர முடியாது. நீதிபதிகளும் பார்ப்பனர்களாகத்தான் இருப் பார்கள்.
அங்கே நீதிபதியாக அய்யர் உட்கார்ந்திருக்கும்போது, அவரைப் பார்த்து, ஓ! மை லாட்! (கடவுளுக்கு சமமானவரே) என்று சொல்வார்கள்.
                 ---------- தொடரும்  --"விடுதலை” 23-07-2014
சூத்திரன் என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்று எழுதி வைத்திருக்கிறானே, இன்னமும் சட்டத்திலே இருக்கிறதே! வழக்குரைஞர்களாக இருக்கக்கூடிய நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்; அவர்கள் தயவு செய்து இந்து சட்டத்தின் அடிப்படையில் எவ்வளவு மாற்றங்கள் வந்திருந்தாலும், இன்னமும் ஜாதி என்கிற வார்த்தை இருக்கிறது அல்லவா! அந்த ஜாதிப்படி, சூத்திரன் என்கிற வார்த்தை நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?

Read more: http://viduthalai.in/page-4/84550.html#ixzz38JXYtG00

மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பே பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் 

மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பே பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும்
சிவகிரி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை
சிவகிரி, ஜூலை 24- மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பே பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


சிவகிரியில் 28.6.2014 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


ஓ மை சூத்திரனே! என்று சொல்ல முடியுமா?


சூத்திரனும், பஞ்சமனும் நீதிபதியாக உட்கார்ந்தவுடன், அய்யர் வழக்குரைஞர், ஓ! மை லாட்! (கடவுளுக்கு சமமானவரே) என்றுதானே சொல்லவேண்டும்; அதற்குப் பதில் ஓ மை பறையனே! என்றோ! ஓ மை சூத்திரனே! என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால்தான் விட்டு விடுவார்களா?


அங்கே போய், ஓ! மை லாட்! என்று சொல்லிக் கொண்டே, மனதில் என்ன நினைக்கிறான், பெரியார் ஒழிக! கருணாநிதி ஒழிக, தி.மு.க. ஒழிக! தி.க. ஒழிக! நாசமாக போக, நம்மை இப்படி சொல்ல வைத்துவிட்டார்களே என்று!


அன்றைக்குத் தொடங்கிய கோபம், ஆத்திரம் இன்று வரைக்கும் நீடிக்கிறது.


21 ஆம் நூற்றாண்டில், 31 பேர் நீதிபதிகளாக இருக்கின்ற உச்சநீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவர்கூட நீதிபதியாக இல்லையே! பிற்படுத் தப்பட்ட சமுதாயத்திலிருந்து 80 விழுக்காடு இருக்கின்ற மக்கள்; வழக்குரைஞர்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை; நல்ல ஆற்றல் உள்ளவர்கள்; திறமை உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; நாம் போராடியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான நீதிபதிகள், அனுபவம் பெற்ற நீதிபதிகள் இருக்கின்றனர். டில்லியில் அவாள்தானே இருக்கிறார்கள்; இதனைக் கேட்பதற்கு ஆளில்லையே! இந்த மாதிரி இயக்கம்தானே அதற்காகப் போராடக்கூடியது! நாங்கள் என்ன எங்களுடைய அண்ணன் தம்பிகள் வரவேண்டும் என்று விரும்புகிறோமா? எங்கள் குடும்பத்திலிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறோமா? சொந்த ஆசாபாசங்கள் உண்டா? அருள்கூர்ந்து இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.


பந்தியில் பரிமாறும்போது எல்லோருக்கும் பரிமாற வேண்டும் அல்லவா? ஒருத்தனுக்கு இலையை மட்டும் போட்டுவிட்டு, எதையும் பரிமாறாமல் விட்டுவிட்டு, இன்னொருவன் வயிறு முட்ட முட்ட அவனே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன நியாயம்?


இந்தப் புரட்சியை செய்தவர் எங்கள் நாட்டின் பெரியார்; எங்கள் நாட்டின் திராவிட இயக்கம்!


வரதராஜன் அவர்கள் உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்; அதேபோல், ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்.


மண்டல் கமிஷன் அறிக்கைக்காக 9 பேர் அடங்கிய நீதிபதிகள் உட்கார்ந்திருந்தபொழுது, ரத்தினவேல்பாண்டி யன் அவர்கள் சொன்னார்: நான் இங்கே உட்கார்ந் திருக்கிறேன் என்றால், முற்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த உங்களுக்கெல்லாம் ஜாதிக் கொடுமை தெரியாது; உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்; சகோதரர் களே, நான் எந்த சமுதாயம் என்று என்னை ஆக்கியிருந் தார்கள் தெரியுமா? ஒரு குற்றமும் செய்யாத எங்களை குற்றப்பரம்பரை என்று ஆக்கி வைத்திருந்தார்கள் ஒரு காலத்தில். காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொன்னார்கள். அதையெல்லாவற்றை யும் திராவிட இயக்கம் ஒழித்ததினால்தான், நான் உங்கள் பக்கத்தில் நீதிபதியாக உட்கார்ந்ததோடு மட்டுமல்ல, காவல் நிலைய ஆய்வாளரையோ, காவல்துறை அதிகாரியையோ கூப்பிட்டு, நான் விசாரிக்கின்ற அதிகாரத்தைப் பெற்றிருக்கிறேன். இதுதான் ஒரு துளி ரத்தம் சிந்தாமல், இந்தப் புரட்சியை செய்தவர் எங்கள் நாட்டின் பெரியார்; எங்கள் நாட்டின் திராவிட இயக்கம் என்று சொன்னார்.


அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஒரு சமுதாய மாற்றத்தை இந்த இயக்கம் செய்திருக்கிறது. இன்னமும் போராடவேண்டியது இருக்கிறது.
உதாரணத்திற்கு, இன்றைக்கு 31 பேர் நீதிபதிகளாக உள்ள உச்சநீதிமன்றத்தில், தாழ்த்தப்பட்ட நீதிபதிகளே கிடையாது. நேற்றுவரையில், ஒரே ஒரு சதாசிவம், தமிழ்நாட்டிலிருந்து சென்றார்; அவரும் குறுகிய காலத்திலேயே ஓய்வு பெற்றுவிட்டார்.  மறுபடியும் வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பு, வரதராஜன், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன், ஒரு சதாசிவம், ஆந்திராவிலிருந்து ஒரு ராமசாமி அவ்வளவு தான். வேறு யாரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து நீதிபதிகளாக வரவில்லை.


அப்புறம் என்ன சுதந்திரம்? சுதந்திரம் என்றால், எல் லோருக்கும் எல்லாமும் இருக்கவேண்டாமா? இன்னா ருக்கு இதுதான் என்று சொன்னால் என்ன அர்த்தம்? கேட்டால், தலையெழுத்து என்கிறான்! அப்பொழுதுதான் பெரியார் கேட்டார், எவன்டா உன் தலையில் எழுதினவன்? என்று!


இதையே காமராசர் கேட்டார், எவன் உன் தலையில் எழுதினவன்? என்று!
தலையில் எழுதுகின்றவரையில் தலையைக் காட்டிக் கொண்டிருப்பானா? இதனை நம்ப முடியுமா?


குன்றக்குடி அடிகளார் கேட்டார், தலையில் எழுதி வைத்துவிட்டான்; எழுதி வைத்துவிட்டான் என்று சொல்கிறார்களே, அதை நாமும் நம்புகின்றோமே, சாதாரண முடி திருத்துகின்ற கடைக்குத் தமிழன் சென்றால், முடி வெட்டுகிறவர், அரை மணிநேரத்திலேயே முடியை வெட்டுகிறார்; அந்த அரை மணிநேரத்திலேயே நான்கு, அய்ந்து முறை தலையைத் திருப்புகின்ற தமிழன், தலையில் எழுதுகின்றவரையில் தலையைக் காட்டிக் கொண்டிருப் பானா? இதனை நம்ப முடியுமா? என்று மிக அழகாகக் கேட்டார்.


அதனால்தான், மானமும், அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். மானமும்  வரவேண்டும்; அறிவும் வரவேண்டும் அதுதான் மிக முக்கியம்.


உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் கணினி மீது எச்சிலை துப்புங்கள்; அது என்ன செய்யும் என்று வி.பி. சிங் கேட்டாரே, அது என்ன கோபப்படுமா? என்று. அதுவே, ஒரு ஆள்மீது எச்சிலை துப்பிப் பாருங்கள், உடனே ஓங்கி ஒரு அறை விடுவான்; இதனை சொன்னது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.


மழை பெய்யவில்லை என்று யாகங்களை நடத்துகிறார்கள்!

இப்பொழுது பார்த்தீர்களேயானால், யானை ஊருக்குள் புகுந்துவிட்டது, ஊருக்குள் புகுந்துவிட்டது என்று சொல்கிறார்கள்; காரணம் என்ன? யானைகள் வசித்த இடத்தை எல்லாம் மனிதர்கள் அழித்துவிட்டார்கள்; வனத்தை எல்லாம் அழித்துவிட்டார்கள்; பிறகு மனிதர்கள் வசிக்கின்ற இடத்திற்கு யானை வரத்தானே செய்யும். காடுகளை அழித்தார்கள் மரங்களை வெட்டி; மரங்களை வெட்டி விட்டால், மழை எப்படி பெய்யும்! மழை பெய்ய வில்லை என்று யாகங்களை நடத்துகிறார்கள்; மரத்தை வெட்டியதால், மழை இல்லை என்பதுபற்றி சிந்திப்பதில்லை. ஆகவே, அறிவுபூர்வமான சிந்தனை, பகுத்தறிவு சிந்தனை என்பது அறிவியல் ரீதியாக மக்களுக்குச் சொல்லப்பட வேண்டிய கருத்துகள். அதனைச் சொல்வதுதான் இந்த இயக்கம்.


எனவே, இந்த இயக்கத்தினுடைய வாழ்வு என்பது இருக் கிறதே, ஜாதி இருக்கின்ற வரையில், மனித சமுதாயத்தில் ஒற்றுமை இருக்க முடியாது.
மதவெறியை உண்டாக்கவேண்டும் என்று விரும்பு கிறார்கள்; அண்ணன் தம்பிகளாக இருக்கவேண்டிய வர்கள், கைகோர்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக அல்லாமல், இந்த மதத்தை வெறுக்கவேண்டும்; அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஜாதி வெறிக்கு இடமில்லாமல், மதவெறிக்கு இடமில்லாமல் நாம் நடக்கவேண்டும்.


இன்றைக்கு ஒரு நல்ல திருப்பமாக, ஜாதிக்கோ, மதத் திற்கோ ஒரு அடிப்படையான, ஒரு விஞ்ஞானபூர்வமான அடிப்படை கிடையாது.


அய்யங்கார் ரத்தம் என்றா சொல்வார்?

சாதாரணமாக விபத்துகள் நடக்காத நாளே கிடையாது; நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடக்கிறது; அந்த விபத்தில் அடிபட்டவர் ஒரு அய்யங்கார்; அருகிலுள்ள ஒரு மருத்துவ மனையில் அட்மிட் செய்கிறார்கள்; அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்; அதற்காக ரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர் சொல்கிறார். உடனே அந்த அய்யங்காரிடம் உங்கள் ரத்த குரூப் என்ன என்று கேட்டால், அய்யங்கார் ரத்தம் என்றா சொல்வார்? ஏ-1 பாசிட்டிவ் ரத்தம் என்று சொல்கிறார் அந்த அய்யங்கார்.

உடனே மருத்துவமனையிலிருந்து விளம்பரம் கொடுக்கிறார்கள், ஏ-1 பாசிட்டிவ் ரத்தம் தேவை என்று.

அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு, ஒரு இளைஞர் வருகிறார்; என்னுடைய ரத்தம் ஏ-1 பாசிட்டிவ்தான்; நான் இதற்குமுன் பலமுறை ரத்தம் கொடுத்திருக்கிறேன்; இது ஏழாவது முறையாகக் கொடுக்க வந்துள்ளேன் என்று சொல்கிறார்.

அய்யங்கார் அவர்கள் மருத்துவரிடம் கேட்கிறார், டாக்டர், உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னீர்களே, ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இல்லை, உங்களிடம் அனுமதி கேட்கவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம் என்று மருத்துவர் சொன்னார்.

எதற்காக அனுமதி? என்று அய்யங்கார் கேட்கிறார்.

மருத்துவரோ, ரத்தம் கொடுக்க வந்திருப்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்; ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்; அவர்களைத் தொட்டாலே தீட்டு என்று சொல்வீர்களே; தலையிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்வீர்களே! உங்கள் அனுமதியில்லாமல், அவருடைய ரத்தத்தை உங்கள் உடம்பில் ஏற்றலாமா? அதற்காக உங்களிடம் அனுமதி கேட்க வந்தோம் என்று மருத்துவர் சொல்கிறார்.


நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று!
  அய்யங்கார் என்ன, இல்லை இல்லை, நான் செத்தாலும் பரவாயில்லை என்றா சொல்வார்?


உடனே அய்யங்கார் மருத்துவரின் கையைப் பிடித்துக் கொண்டு, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! இப்பொழுதெல்லாம் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? என்று சொல்வார்.
ஏனென்றால், அவர் பிழைக்கவேண்டும் பாருங்கள்; அதனால் அப்படித்தான் சொல்வார்.


ஜாதி எங்கே சென்றது? ஜாதிக்கு என்ன ஆதாரம்? குரூப் ரத்தம் என்றால், அதற்கு தனியே அறிவியல் ரீதியாக இருக்கிறது. ஜாதிக்கு அதுபோல் அறிவியல் ரீதி கிடையாது.


இப்பொழுது ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால், உறுப்புக் கொடையளிக்கிறார்கள். இந்துவினுடைய உறுப்பு களை இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள்.  இஸ்லாமி யருடைய உறுப்புகளை இந்துக்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊரில் உள்ளவர்களுக்கு உறுப்புக் கொடை அளிக்கப்படுகிறது. நல்ல ஒரு முன்னேற்றம்தான்.
கவுரவக் கொலை என்று சொல்கிறார்களே! இன்னமும் நம்மாள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள்; நம் ஜாதிக்குள்ளே ஏன் காதலை செய்யவில்லை; கத்தியை எடுத்து வெட்டிக் கொள்கிறார்களே! கவுரவக் கொலை என்று சொல்கிறார்களே! இதைவிட ஒரு காட்டுமிராண்டித்தனம், இதைவிட ஒரு சமுதாயத்தில் கொடுமையான ஒரு சூழல் வேறு இருக்குமா என்பதை எண்ணிப்பாருங்கள்.


எனவே, இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்; இன்னமும் பகுத்தறிவாளர் கழகம் தேவைப்படுகிறது; இன்னமும் திராவிடர் கழகத்தினுடைய பிரச்சாரம் தேவைப்படுகிறது. எப்படி மருத்துவமனைகள் என்றைக்கும் தேவையோ! எப்படி காவல் நிலையங்கள் என்றைக்கும் தேவையோ! எப்படி பள்ளிக்கூடங்கள் என்றைக்கும் தேவையோ! அதுபோல், சமுதாயத்தில் பகுத்தறிவாளர் கழகம், பள்ளிக்கூடம்போல, திராவிடர் இயக்கம் காவல் நிலையம் போல ஒரு பொது அமைப்பாகும்!


எனவே, இந்த பொது அமைப்பை நீங்கள் பலப்படுத்தி, புதிதாக இளைஞர்கள், ராஜபாளையத்தைச் சேர்ந்த இங்கே வந்து இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.


ராஜபாளையத்தில் ஒரு காலத்தில் மாலை 4 மணிக்கு மேல் பெரியார் கூட்டத்தை கேட்டார்கள் என்பதற்காக, திருக்கை மீன் வாலால் அடித்த ஊர். அப்படிப்பட்ட அந்த ஊரிலிருந்து இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள்.
நீங்கள் கொள்கை ரீதியாக வாழுங்கள்; சமுதாயத் திற்குப் பாடுபடுங்கள்; ஒவ்வொருவரும் தொண்டறத்தோடு வாழுங்கள்; தவறான பழக்கவழக்கம் இருக்கக்கூடாது; தேவையற்ற செலவுகள் வேண்டாம்; ஆனால், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று சின்னதோர் கடுகு உள்ளத்தோடு இருக்காதீர்கள். தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள் என்று கருதி, பிறருக்குத் தொண்டு செய்யுங்கள்! பெரியாருடைய தொண்டறம் என்பதிருக் கிறதே, அது மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.


பெரியாருடைய சிந்தனைகள் உலகம் முழுவதும்!

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிக அழகாகச் சொன்னார்,

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில்  சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் பார்! - என்று சொன்னார்.


இன்றைக்குப் பெரியாருடைய சிந்தனைகள் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டன. எனவேதான், நீங்கள் பெரிய அளவிற்கு ஆதரவு கொடுப்பதற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நிச்சயமாக, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உங்கள் பகுதிகளில் கல்லூரிகள் வருவதற்குரிய நல்ல வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் முயற்சிகளை எடுப்போம் என்று கூறி, சிறப்பாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும், இறுதி வரை சிறப்பாகக் கேட்ட உங்களுக்கும், நன்றியைத் தெரிவித்து, முடிந்தவரையில், புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்; அதன்மூலமாக நீங்கள் புது வாழ்வைப் பெறுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.


மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பு

காவல்துறையினுடைய அதிகாரிகளுக்கு எங்கள் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் நினைவுபடுத்து கிறேன், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஒரு பொது அமைப்பு. மக்கள் நலன் சார்ந்த அமைப்பு; மக்களுக்கு ஏற்படும் கேடுகளைத் தடுப்பதற்காக இருக்கின்ற அமைப்பு; இதற்கு மகத்தான ஆதரவைக் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவாளர் கழகம்!! வளர்க பகுத்தறிவு!!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
                  --------------------- ---------- தொடரும்  --"விடுதலை” 24-07-2014
Read more: http://viduthalai.in/page-4/84589.html#ixzz38PROnF6K

57 comments:

தமிழ் ஓவியா said...


அண்ணாநூலகம் படும்பாடு!




அண்ணா நூற்றாண்டை யொட்டி அண்ணா நினைவு நூலகம் சென்னை கோட்டூர் புரத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப் பட்டதால் அதனை மருத் துவமனையாக மாற்ற முயற்சி செய்தார் தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா - நீதிமன்றத் தடை காரணமாக அம்முயற்சி தடைப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் பணி வரன்முறையின்றி அல்லல்படுகின்றனர். வேறு வழியின்றி உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/84572.html#ixzz38RMxXvsz

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


இலாபம்

ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமி என்பவை இந்த ஆடி மாதத்தில் மட்டும் என்றால் இதற் காகக் கொட்டியழும், பணமும், நேரக் கேடும் சாதாரணமா?

இந்த நாள்களைக் கொண்டாடாத பிற மதத்தவர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் இலாபம் என்பதுதானே உண்மை!

Read more: http://viduthalai.in/e-paper/84574.html#ixzz38RN6Ex00

தமிழ் ஓவியா said...


விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?



அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த உரிமை படைத்ததாகும்.

அவ்வாறு விசாரணை நடத்த உள்ள குழுவினர்க்கு இந்தியாவுக்கு வந்து விசாரணை நடத்திட இந்தியா விசா வழங்கவில்லை என்பது எவ்வளவுப் பெரிய மனிதாபிமானமற்ற முறையற்ற செயல்!

இனப்படுகொலையாளன் ராஜபக்சே பக்கம்தான் இந்தியா இருக்கிறது என்பதை இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் ஒப்புக் கொள்ளவோ, உணரவோ தவறியவர்கள்கூட இந்தியாவின் இந்த அணுகுமுறை மூலம் துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும்.

பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், இன்னொரு கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியும்கூட இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே (Genocide)
என்று சொன்ன பிறகும் கூட இந்தியா இப்படி நடந்து கொள்வது கண்டனத் திற்குரியதே!

மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் சுத்த மோசம்; இலங்கை அரசு பக்கம் சார்ந்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்குத் துணை போன அரசு; இந்த ஆட்சி போய் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்துக்கு வந்தால், அதுவும் நரேந்திர மோடி பிரதமராக வந்தால் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும்; ஈழத் தமிழர்கள் வாழ்வில் விடிவெள்ளி முளைக்கும் தமிழக மீனவர்கள் வாழ்வில் புது அத்தியாயம் பூக்கும் என்றெல்லாம் நம் மக்களை நம்பச் செய்ய தொண்டை வறளக் கத்திய வர்கள் இப்பொழு தெல்லாம் தமிழர்கள் மத்தியில் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கத் தவறி விட்டது இந்தியா என்று குற்றப் பத்திரிகை படித்தவர்கள், இப்பொழுது மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் தடை செய்து விட்டதே - மோடியின் பிஜேபி அரசு, இதற்கு என்ன பரிகாரம்?

தனக்குத் தானே விசாரணைக் குழு அமைத்து (LLRC) நாட்டில் ஒன்றும் நடந்து விடவில்லை; ஈழத் தமிழர் இப்பொழுது நல வாழ்வில் தான் திளைக் கிறார்கள் என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொண்டது ராஜபக்சே அரசு.

அய்.நா.வால் அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையிலான மூவர் குழு விரிவாக விசாரணை செய்து தனது அறிக்கையை அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனிடம் அளித்து விட்டது (13.4.2011).

ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று கூறிவிட்டார் கொடுங்கோலன் ராஜபக்சே. அய்.நா.வுக்குள்ள அதிகாரம் என்ன? மரியாதைதான் என்ன? மேல் நடவடிக்கைதான் என்ன?

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான அனைத்துக் காரணங்களையும் பட்டியலிட்டு விட்டது அந்தக் குழு இப்பொழுது.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழு - தொடக்கத்திலேயே தடுமாறும் நிலைக்கு ஆளாகி விட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்கு மிக மிக முக்கியமானது என்று உலக நாடுகள் அத்தனையும் உணருகின்றன. பல நாடுகள் வெளிப்படையாகக் கூறவும் செய்தன. என்றாலும் இந்தியா மட்டும் கல்லுளி மங்கனாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் நடந்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பூகம்பம் வெடித்திருக்க வேண்டாமா?
நாடாளுமன்றத்தில் என்னென்ன வெல்லாமோ நடந்திருக்கின்றன. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுக்காதது ஏன்?

கேரளத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இத்தாலியக் கப்பல் படையினரால் சுடப்பட்ட பொழுது கொந் தளித்தவர்கள், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிரச்சினையில் அலட்சியம் காட்டுவது உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடி தமிழர் களையும் மனிதநேய வாதிகளையும் அவமதிப்பதாகும்.

தேசிய ஒருமைப்பாடு பேசும் கட்சியினர்கள் தமிழர் பிரச்சினை என்கிற போது ஒதுங்கிக் கொள்வது ஏன்?

தமிழ்நாடு சட்டப் பேரவையும் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. விசாரணைக் குழு இந்தியா வருவதற்கு அனுமதி மறுப்பது குறித்து, சட்டப் பேரவையில் தீர்மானம்கூட நிறைவேற்றலாமே!

எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொடுத்தால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிராகரிக்கப்படும் நிலையில், முதல் அமைச்சரே அந்தக் கடமையை எடுத்துக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றி நல்ல பெயரைச் சம்பாதிக்கலாமே.

அதன் மூலம் இந்தத் தொடருக்கு ஒரு வகையில் முக்கியத்துவம் கூடக் கிடைக்குமே; செய்வாரா முதல் அமைச்சர்? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84583.html#ixzz38RNWNhw4

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.

- (விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/84581.html#ixzz38RNdhWhb

தமிழ் ஓவியா said...


மார்க்கண்டேய கட்ஜுபற்றி ஓர் ஆசிரியர் கடிதம் (டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்)



மார்க்கண்டேய கட்ஜுவின் கட்டுரை யில் உள்ள பொய்யான தகவல்கள் மார்கண்டேய கட்ஜு எழுதிய சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஊழல்கள் (TOI, July 21) பல சந்தேகத்திற்குரிய கருத்துகளும் கட்டு கதைகளைப் போன்ற சம்பவங்களும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளன.

மார்கண்டேய கட்ஜுவின் உண்மைதன்மை மற்றும் அவர் இதை வெளிக்கொணர்ந்த விதம் ஒருபக்கச்சார்புத்தனமாக உள்ளதையே குறிக்கிறது. அவரது கட்டுரையில் ஒரு நீதிபதி தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் முழுமையான ஆதரவின் கீழ் இயங்கி வந்தார் என்று கூறியிருந்தார். ஒரு மாவட்ட நீதிபதி ஒரு அரசியல் தலை வருக்கு பிணை வழங்கினார் என்று கூறி யிருப்பது கேள்விக்குரியதாகும். மறைந்த நீதிபதி அசோக்குமார் இந்தியாவின் மிகவும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு சாதகமாக நடந்தார் என்ப தற்கு எந்தஒரு முகாந்திரமும் இல்லை.


தமிழ் ஓவியா said...

2001-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கலைஞர் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு அப் போதைய மாவட்ட நீதிபதியான அசோக் குமார் அவர்களின் முன்னிறுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவர்கள் கலைஞரின் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்தீர்களா? என்று கேட்டார். அதற்கு அப்போதைய காவல்துறை அதிகாரி பத்மநாபன் முதல்தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனால் காவல்நிலைய நாட்குறிப்பில் பதிவுசெய்துவிட்டோம் என்றார். அந்த நாட்குறிப்பும் அப்போது கொண்டு வரவில்லை.

தமிழ் ஓவியா said...

நான் அப்போது வழக் கறிஞராக இருந்தேன். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜீ.கே மூப்பனார் தொடர்பான ஒருவழக்கில் முதல் தகவல் அறிக்கை, அல்லது வழக்கு நாட்குறிப்பு போன்றவை இல்லாமல் சிறைக்கு அனுப்பக்கூடாது என்று நான் சொன்னதை எடுத்துக்காட்டி வாதிட்டேன். ஆனால், நீதிபதி `இது விடுமுறை நீதிமன்றம்; இங்கே பிணை தரமுடியாது. வழக்கமான நீதிமன்றத்தில்தான் பிணை தரமுடியும் என்றார். அப்போது, கலைஞர் தன் உடல்நலம் குறித்து விளக்கினார். ``சமீபகாலமாக சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் நான் உட்கார்ந்துதான் பேசுகிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் என்னால் நிற்க முடியாது என்றார். அதற்கு நீதிபதி கூறியதாவது நீங்கள். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றார் நீதிபதி அசோக்குமார். கலைஞர் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதன் பின் பேசிய நீதிபதி அசோக் குமார், கலைஞரிடம், நீங்கள் முன்னாள் முதல்வர், தற்போதைய எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் உங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவிடுகிறேன் என்றார். மருத்துவமனைக்கு அனுப்பப் படலாம் அல்லது பிணை கிடைக்கும் என சிறிது நம்பிக்கை மட்டுமே கொண்டிருந்த கலைஞருக்கு, நீதிபதியின் இந்த முடிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உடல்நிலையை பரிசோதித்து, டாக்டர்கள் சம்மதித்த பின்னரே சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இவரைக் கைது செய்யும் போது காவலர் நடந்து கொண்ட முறை கடுமையாக இருந்திருக்கிறது. இனி எக்காரணம் கொண்டும் இவர் மீது கை வைக்கக் கூடாது என ரிமாண்ட் மெமோவில் நீதிபதி குறிப்பிட்டார். ஜூலை 10-ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்வதாக உத்தரவிட்டார். அதன் பிறகு காவல்துறையினர் கலைஞரை ஒரு காரில் அழைத்துச் சென் றனர். அவருடன் டாக்டர் கோபாலும் மகள் கனிமொழியும் சென்றனர். பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவரின் ஆலோசனைப்படியே கலைஞரை சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்த தால், கலைஞரை எதிர்பார்த்து மருத்துவ மனை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், காவலர் நேராக சென்னை மத்திய சிறைச் சாலைக்கு கலைஞரின் காரைக் கொண்டு சென்றனர்.

தமிழ் ஓவியா said...

நிலைமை இப்படி இருக்க, மார்கண் டேய கட்ஜு நீதிபதி அசோக்குமார் பிணை வழங்கினார் என்று பச்சைப் பொய்யை கூறியிருக்கிறார். நான் வழக்கறிஞர் ஆக 37 ஆண்டு அனுபவம் பெற்றுள்ளேன். மூத்த வழக் கறிஞராக 15 ஆண்டுகள் நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய அனுபவ முண்டு. எந்த ஒரு நீதிபதி பணிநியமனத் தின் போதும் பணப்பரிமாற்றம் எதுவும் நடந்தது கிடையாது. இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். அப்படி எதுவும் நடந்தது என்றால் தாராளமாக விசாரணை செய்யட்டும்!

ஆனால் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை நீதிபதி கட்ஜு பரப்பாமல் இருப்பது நல்லது. அவர் இப்போது நீதிபதிகள் நியமனம் குறித்துக் கையில் எடுத்திருப்பது சந்தேகத்திற் கிடமாக உள்ளது. நீதிபதிகள் நியமனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நேரிடையாக பங்கேற்றுள்ளார். அவர் பல நிகழ்வு களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். நீதிபதிகள் நியமனம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்த போது பல்வேறு கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. சாதாரணமாக தெரியாது, நினைவில்லை என்று சொல்லி மக்கள் முன் உண்மையைக் கூறவேண்டிய தருணத்தை புறக்கணித்து விட்டார்.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மூன்று தலைமை நீதிபதிகளின் மீது ஊழல் குற்றசாட்டு கூறியுள்ளார். முன்னாள் பிரதமரையும் தன்னுடைய கேள்வி வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளார். எந்த ஒரு முகாந்திரமுமில்லாமல் இது போன்று கண்மூடித்தனமாக ஆதார மில்லாமல் குற்றச்சாட்டை சுமத்துவது நாட்டின் நீதித்துறை மற்றும் முக்கிய உயர் பதவியின் மீது மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் சூழல் உள்ளது. - இரா.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.

(டைம்ஸ் ஆப் இந்தியா- நாளேட்டில் வெளி வந்த கடிதம் இது - 23.07.14

Read more: http://viduthalai.in/page-2/84585.html#ixzz38RNl1xLD

தமிழ் ஓவியா said...


முல்லைப் பெரியாறு அணை: காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது மத்திய நீர் வள ஆணைய தலைமைப் பொறியாளர் தகவல்


புதுடில்லி, ஜூலை 24_ "நூறு ஆண்டுகளைக் கடந்த முல்லைப் பெரி யாறு அணை காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது' என்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலை மைப் பொறியாளர் எல். அறம் வளர்த்தநாதன் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதையும், அணையின் பாதுகாப்பை கண்காணிக் கவும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுத் தலைவராக அறம்வளர்த்தநாதன் உள்ளார். டில்லி தமிழ்ச் சங்கத்தில் முல்லைப் பெரியாறும், முழு விவரங்களும் என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:

ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ஆங்கிலேயர் அளித்த கொடைதான் முல்லைப் பெரியாறு அணை. குறைவான மழைப் பொழிவு இருந்த பகுதிகள் பாசனம் பெறும் வகையில், மழைப் பொழிவு அதிகம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டப் பட்டது. 1880 ஆண்டுகளில் திட்ட மிடப்பட்டு, கர்னல் பென்னி குயிக் தலைமையில், மிகவும் கடுமையாக மேற்கொண்ட முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை உருவானது. அது இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் அளித்த பரிசாகக் கருதுகிறேன்.

தற்போது நதி நீர் இணைப்புத் திட்டங்களை பலரும் பரவலாகப் பேசி வருகின்றனர். ஆனால், அக் காலத்திலேயே, மாநிலங்களிடையே ஓடும் ஆற்று நீரின் ஓட்டத்தைக் கணக்கிட்டு தொலைநோக்குப் பார்வை யுடன் முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேயர்கள் கட்டினர்.

இந்த அணையைக் கட்டும் திட்டம் தயாரிக்கப்பட்டவுடன் முதல் முயற்சியிலேயே இத்திட்டம் தோல்வி யடைந்தது. இதன் விளைவாக அணை உடைந்தது. ஆனால், அணையை மீண்டும் கட்டுவதற்காக பென்னி குயிக் அவரது தாயகம் சென்று தனது சொத்துகளை விற்றார். விடாமுயற்சி யுடன் அவர் மேற்கொண்ட பணிகளால் முல்லைப் பெரியாறு அணை வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்து காலத்தால் அழியாத 155 அடி உயரம் கொண்ட அணையாக முல்லைப் பெரியாறு விளங்குகிறது.


தமிழ் ஓவியா said...

ஆங்கிலேய அரசுக்கும், நிஜாம் அரசுக்கும் ஒரு காலத்தில் எல்லைக் கோடாக துங்கபத்ரா நதி விளங்கியது. அப்போது அந்த நதியில் கட்டப்பட்ட துங்கபத்ரா அணை, கரிகால சோழன் கட்டிய கல்லணை போன்றவை காலத்தால் அழியாதவையாகும். அது போலவே, முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமான நுட்பங்களை தற்போதும் நாம் கண்டு வியக்கிறோம் என்றார் அறம்வளர்த்தநாதன்.

முல்லைப் பெரியாறு அணை ஆய்வுப் பணியில் மத்திய நீர்வள ஆணையம் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளையும், தனது அனுபவங் களையும் டில்லிவாழ் தமிழர்களி டையே அவர் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் கற்பது அவசியம்: இதே போல, "எல்லாம் தமிழ்' என்ற தலைப்பில் உலகத் தமிழ் சங்கத்தின் தனி அலுவலர் (பொறுப்பு) க. பசும்பொன் பேசியதாவது:

தமிழ் அல்லது திராவிட பண்பாடுதான் சிந்து சமவெளி நாகரிகம். இதற்கு ஆதாரமாக பலுசிஸ்தான் பகுதியில் பிராகுயி என்ற திராவிட மொழி பேசப்படு கிறது. தொல்காப்பியம் 2,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதில் கூறப்பட்டுள்ள பொருள் அதிகாரம், திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகள் தமிழின் இலக்கிய வளத்துக்குச் சான்றுகள். சமண சமயத்துக்கு சீவக சிந்தமாணி, நாக குமார காவியம்; சைவ சமயத்துக்கு பெரிய புராணம், கந்த புராணம், வைண சமயத்துக்கு ஆழ் வார்கள், இஸ்லாத்துக்கு சீறாப் புராணம், யூசு நபி காவியம், கிறிஸ்த வத்துக்கு தேம்பாவணி, இயேசு காவி யம் என சமயங்கள் அனைத்துக்குமான இலக்கியங்கள் தமிழில் உள்ளதால், சமயத்துக்கான மொழி என அறியப் படுகிறது.

வணிகத்தின் மொழி ஆங்கிலம், தூதின் மொழி பிரெஞ்சு, கவிதை, காத லின் மொழி இத்தாலி, தத்துவத்தின் மொழி ஜெர்மனி என்றால் உலகி லேயே சமயத்தின் மொழி தமிழ் என தனிநாயகம் அடிகள் கூறுகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சியைத் தவிர்த்து, தொல்காப்பியம் காலம் தொடங்கி தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. இதற்கு அந்தந்த கால கட்டத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களில் காணப்படும் சொற் கள் ஆதாரமாக உள்ளன. ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக தமிழ் உள்ளது. இந்நி லையில், சுயசிந்தனை உருவாக தமிழ் மொழி கற்பது அவசியம் என்றார் பசும்பொன்

Read more: http://viduthalai.in/page-2/84586.html#ixzz38RNyzDoA

தமிழ் ஓவியா said...


ஓவியக் கலைஞர்கள் கவனத்திற்கு...


திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அணிகளிலும் இருக்கக் கூடியவர்கள், பெரியார் கொள்கையேற்றுச் செயலாற்றும் இயக்க ஆதரவாளர்களில் தொழில் முறை ஓவியர்கள், தொழில்முறை அல்லாத ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள், ஓவிய விரும்பிகள், சுவரெழுத்து / தட்டி விளம்பரப் பணியாளர்கள், கணினி/ வரைகலை தொழில்நுட்ப ஓவியர்கள், கேலிச்சித்திரம் வரைவோர், சிற்பக் கலைஞர்கள், துணி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு ஓவிய ஊட கங்களிலும் பணியாற்றக் கூடியவர்கள் உள்ளிட்டோர் தங்களைக் குறித்த விவரங்களையும், தங்களின் சிறப்புகளையும் தொடர்பு முகவரி, எண் ஆகிய வற்றையும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் தத்தமது பகுதிகளில் உள்ள நமது தோழர்களில் மேற் கண்டோரை அடையாளம் கண்டு விவரம் அனுப்பிட வேண்டுகிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-_7. தொடர்பு எண் : 94442 10999

Read more: http://viduthalai.in/page-3/84603.html#ixzz38ROvpvBO

தமிழ் ஓவியா said...


நிமிர்ந்து உட்கார்ந்தால் நிறைய படிக்கலாம்


தேர்வு நேரத்தில் அதிகமாக படிக்க வேண்டி இருக்கும் அல்லவா... எப்படி உட்கார்ந்து படித்தால் அதிக நேரம் படிக்கலாம்?

குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸி ஜன் அளவும் குறையும். இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவோம்.

பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடு வோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறை பாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை. எனவே நன்றாக நிமிர்ந்து உட் கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது.

Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPHM9Hm

தமிழ் ஓவியா said...

பயோமேக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

பூச்சிகளையே ரோபாட்டாகப் பயன்படுத்தும் முறை. கரப்பான் புச்சிகள் எல்லா இடுக்குகளிலும் புகுந்து செல்லக்கூடியன. தண்ணீர் தாகம் பார்க்காது, வெப்பம் குளிர் என்று கவலைப்படாது. எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா பிரதே சங்களில் வாழக் கூடியது.

கரப்பான் பூச்சிகளின் மீசை போன்ற உறுப்புகளின் நரம்பு கடிளைத் தூண்டும் மின் முனை களையும், அவற்றை கட்டுப் படுத்தும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் அதன் முதுகில் ஒட்ட வைத்துவிட்டால் பயோ பாட்ரெடி.

பூகம்பத்திற்குப் பிறகு குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடக்கும் உயிருடைய உயிரற்ற வஸ்துக்களைப் பார்ப்பதற்கு பயோபாட்டுகள் உதவும். கரப்பான் பூச்சி தன் இஷ்டத்திற்கு ஓடிவிடாமல் தொலைத்தொடர்பு கருவி மூலம் அதை போக வைக்கலாம், போகாமல் நிறுத்தி வைக்கலாம்.

Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPTpcc1

தமிழ் ஓவியா said...

பள்ளிகளில் தோப்புக்கரணம் தண்டனை ஏன்?: ஆய்வு

சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்தார்கள். காது மடல்களைப் பிடித்து தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குமாம்.

மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் அறிவுத்திறன் அதிகரிக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPcPara

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயா? காரணம் என்ன?


சென்னை, ஜூலை 24_ சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்தியர்களின் உணவு முறை குறித்து ஆராய வேண்டும் என சுவீடன் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் கூறினார்.

தமிழ்நாடு, புதுவை நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவும் இந்திய நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் சர்வதேசக் கருத்தரங்கமும் சென் னையில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த கருத் தரங்கில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இதய நோய்கள் ஆராய்ச்சி யாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் பேசியதாவது:

இந்தியர்களின் உணவுப் பழக்கம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்தியர்கள் அதிக அளவி லான உணவைச் சாப்பிடு கின்றனர்.

சுவீடன் நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நாங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப் பிடுகிறோம். ஆனால் வெப்ப நாடான இந்தியா விலும் அதிக கலோரிகள் கொண்ட உணவை மக்கள் சாப்பிடுகின்றனர். அதிக கலோரிகள் கொண்ட உணவை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பாலில் செறிவூட்டப் பட்ட கொழுப்பு இருக் கிறது; எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போதோ பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் பாலில் நோய் எதிர்ப்புச் சக்தியும், வைட்ட மின் டி உள்ளிட்ட பல் வேறு சத்துகளும் நிறைந் துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

பால் ஒரு கொழுப் புள்ள பொருளாக மட்டும் பார்க்கப்படாமல், உட லுக்குத் தேவையான சத்துகள் நிறைந்த பொரு ளாகவும் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள் யாருக்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு குடும் பத்தின் உணவு முறையை ஆராய வேண்டியது அவசியம்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோரின் உணவு முறை யை ஆராய்ந்தால், அவர் களுடைய வாரிசுகளுக்கு சர்க்கரை நோய் அல்லது இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என் பதைக் கண்டுபிடித்து விடலாம் என்று அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-5/84582.html#ixzz38RPrKBZp

தமிழ் ஓவியா said...

திராட்சை பழம் எந்த வகை பழம்?

ஆரஞ்சுப் பழம், எலுமிச்சைப் பழம் வகையைச் சார்ந்தது திராட்சை. ஹெஸ்பிரிடியம் என்பது அதன் தாவரவியல் பழம், திராட் சையில் பல கிளைகள் இருப்பது தெரியவில்லை அதற்குக் காரணம் திராட்சை பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மனிதனால் பிரித்தெடுக்கப்பட்டு கலப்பு செய் யப்பட்டு, தோட்டப் பயிராக்கப் பட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84612.html#ixzz38RQEi2Gr

தமிழ் ஓவியா said...


வச்சனந்தி மாலை

சமஸ்கிருதம் - நம் மொழியை நான்காகப் பிளந்தது!

சமஸ்கிருத - இந்து மதம் நம்மை நான்கு கூறுகளாக்கி நாலாஞ் ஜாதி ஆக்கியது.

தமிழ் எழுத்துக்களில் கூட வருணாசிரமத்தைத் திணித்தது.

பாட்டியலில் பன்னீருயிரும்
முதலாறு மெய்யும்
பிராமண வருணமாம்!
அடுத்த ஆறு மெய்கள்
சத்திரிய வருணமாம்!
அடுத்த நான்கு மெய்கள்
வைசிய வருணமாம்!
பிற இரண்டு மெய்யும் சூத்திர வருணமாம்

அதோடு விட்டதா ஆரியம்?

ல,வ,ற,ன - நான்கும் வைசிய எழுத்துக்களாம். ழ,ள என்பன சூத்திர எழுத்துக்களாம். ழ,ற,ன மூன்றும் வைசிய சூத்திர எழுத்துக்களாம். தமிழின் சிறப்பு எழுத்துக்களான ழவும், றவும் வட மொழியில் இல்லை - எனவே அதனை சூத் திரப் பட்டியலில் இணைத்து விட்டனர்.

அத்தோடு விட்டு விட்டார்களா? பாவிலும் பார்ப்பனப் பாணத்தைத் தொடுத்துவிட்டனர்.

பாக்களில் சிறந்தது வெண்பாவாயிற்றே! அது பார்ப்பனர்களுக்காம். ஆசிரியப்பா சத்திரியருக் காம் (அரசருக்காம்!) வைசியருக்கு கலிப்பா வாம்! சூத்திரருக்கு வஞ்சிப்பாவாம்.

கலம்பகம் எப்படி இருக்க வேண்டுமாம்? தேவருக்கு 100 செய்யு ளும், பார்ப்பனர்களுக்கு 95 செய்யுளும் அரச ருக்கு 90 செய்யுளும் - அமைச்சருக்கு 70 செய் யுளும் - வணிகருக்கு 50 செய்யுளும் - மற்றவர் களுக்கு 30 செய்யுளும் பாட வேண்டுமாம். இது பாட்டியல் விதியாம்.

இப்படி ஆரியம் - சமஸ்கிருதம் தமிழர் களுக்கு, தமிழ் மொழிக்கு செய்த வஞ்சகமும், துரோகமும் அட்டூழிய மும் கொஞ்சமா நஞ் சமா? வச்சனந்தி மாலை என்ற நூலையே இதற் காக நூலோர் தொகுத் துள்ளனர்.

தந்தை பெரியாரிடத் தில் 1937இல் உதைபட்ட ஆரியம் மீண்டும் மீசை முறுக்கித் தோள் தட்டு கிறது - காரணம் அதிகார பீடத்தில் அவாள் (ஆர். எஸ்.எஸ்.)ஆயிற்றே.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அறுதியிட்டுக் கூறிவிட்டபின் அவா ளுக்கு வேறு அட்டி என்ன!

வாலாட்டிப் பார்க் கிறது - தமிழ்நாட்டில், தந்தை பெரியார் மண் கொடுக்கும் சாட்டையில் ஜென்மத்துக்கும் திரும் பிப் பார்க்கக் கூடாது!

ஆகஸ்டு ஒன்று நினைவிருக்கட்டும் ஆர்த்தெழுவீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84634.html#ixzz38UJLCgho

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

தத்துவம்

பிராமணனான இராவணனை சம்ஹாரம் செய்ததால் ராமருக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷத்தைப் போக்கிக் கொண்ட இடம்தான் ராமேசுவரமாம்.

ராவணன் பிராமணனா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அது என்ன பிராமணனைக் கொன்றால் மட்டும் தோஷம்! மற்றவர்களைக் கொன்றால், மான் கறி பிரி யாணியா? இராமாயணம் கூறும் தத்துவம் இது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/84641.html#ixzz38UJmJ6LS

தமிழ் ஓவியா said...

அநாகரிக அரசியல்!


சிவசேனா என்ற அமைப்பு சங்பரிவார் வட்டத்தைச் சேர்ந்தது என்றாலும் சிறுபான்மையின மக்களை எதிர்ப்பதிலும் மகாராட்டிரத்தைத் தவிர்த்த வேறு மாநில மக்களை எதிர்ப்பதிலும் சங்பரிவார்க் கும்பலுக்கு அப்பனாகத் தான் நடந்து கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையைச் சேர்ந்ததுதான் டில்லியில் உள்ள மகாராட்டிர மாநில இல்லத்தில் நடந்த அநாகரிகச் செயல்!

கடந்த வாரம் டில்லியில் உள்ள மகாராட்டிர பவனுக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர்கள் சென்றுள்ளனர். மகாராட்டிரப் பாரம்பரிய உணவைக் கேட்டுள்ளனர்.

ஆனால், பணியில் இருந்த ஊழியர்கள் சப்பாத் தியைப் பரிமாறி உள்ளனர். இதனால் சீற்றம் அடைந்த சிவசேனை உறுப்பினர்கள் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக இழுத்து அவர் வாயில் சப்பாத்தியைத் திணித்துச் சாப்பிட வைத்துள்ளனர். அந்த மேற்பார்வையாளர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரம்ஜான் நோன்பை மேற்கொண்டவர் என்பதால் பிரச்சினை பேருரு எடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆவேசப் புயல் சுழன்று சுழன்று அடித்தது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் வெளி நடப்பு செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உண்மை கண்டறியப்படாத ஒரு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாராவது கூடாது என்று எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்துள்ளார். எல்.கே. அத்வானி மட்டும் தான் வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். மற்ற பிஜேபியினர் நழுவிக்கொள்கின்றனர். இவற்றிற்கு மேலாக மகாராட்டிர அரசு இந்தப் பிரச்சினைமீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. வரவேற்கத் தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...

சம்பந்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த ராஜன் பாபுராவ் விச்சாரே உலகறிந்த கிரிமினல், அவர்மீது மட்டும் 20 வழக்குகள் உள்ளன. கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது. கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்துக்குப் பங்கம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்ரமித்தது, போலி கையொப்பமிட்டுப் பண மோசடி செய்தது, பெண்களைப் மானப்பங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களைத் தாக்கியது என்று மொத்தம் 20 கிரிமினல் வழக்குகள் இந்தப் பேர் வழிமீது உண்டு. (விவரம் தனியே காண்க).

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் சிவசேனாவில் உள்ளவர்கள் பார்த்தீர்களா? இவர்களுக்கு வாக்களித் துப் பொது மக்களும் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! (ஜனநாயகத்தைக் காலி நாயகம் என்று தந்தை பெரியார் சொன்னதற்கான விளக்கம் இங்குக் கிடைத்து விட்டதல்லவா!)

16ஆவது மக்களவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம். இது கடந்த தேர்தலைவிட (2009) 4 விழுக்காடு அதிகமாம்! (ஜனநாயகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று திருப்தி அடையலாம்!)

டில்லியில் 7 உறுப்பினர்களுள் 5 பேர்கள், பிகாரில் 40 உறுப்பினர்களுள் 27 பேர்கள், மகாராட்டிரத்தில் 48 உறுப்பினர்களுள் 30 பேர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 42 உறுப்பினர்களுள் 20 பேர்கள், கேரளாவில் 20 உறுப்பினர்களுள் 9 பேர்கள், உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களுள் 28 பேர்கள், குஜராத்தில் 26 உறுப் பினர்களுள் 9 பேர்கள், கருநாடகத்தில் 28 உறுப்பினர்களுள் 9 பேர்கள், ஜார்க்கண்டில் 14 உறுப்பினர்களுள் 4 பேர்கள், அசாமில் 14 உறுப்பினர்களில் 4 பேர்கள் இமாசலப்பிரதேசத்தில் நான்கு உறுப்பினர்களுள் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் 29 உறுப்பினர்களுள் 7 பேர்கள், உத்தரகாண்டில் 5 உறுப்பினர்களுள் ஒருவர், மேற்கு வங்காளத்தில் 42 உறுப்பினர்களுள், 8 பேர்கள், ஒடிசாவில் 21 உறுப்பினர்களுள் 4 பேர்கள், தமிழ் நாட்டில் 39 உறுப்பினர்களுள் 7 பேர்கள், ஜம்மு-காஷ் மீரில் 6 உறுப்பினர்களுள் ஒருவர், அரியானாவில் 10 உறுப்பினர்களுள் ஒருவர், சத்தீஸ்கரில் 11 உறுப்பினர் களுள் ஒருவர், வடக்கு கிழக்கு மாநிலங்களில் 14 உறுப்பினர்களுள் ஒருவர், பஞ்சாபில் 13 உறுப்பினர் களுள் ஒருவர் ராஜஸ்தானில் 25 உறுப்பினர்களுள் ஒருவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்றால், நம் நாட்டின் ஒழுக்கத்தை, ஜனநாயக யோக்கியதையை எளிதில் எடை போட்டு விடலாமே!

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்று பதவிப் பிரமாணம் செய்தவர்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா?

ஆந்திராவிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் தூதராக பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா அம்மாநில முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைக் கூட பிஜேபி எம்.பி. எதிர்க்கிறார் - காரணம் அந்த வீராங் கனை முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான்.

குடியரசு தலைவர் அளிக்கும் இஃப்தார் விருந்தையே பிரதமராக இருப்பவர் புறக்கணிக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

இரண்டு மாதங்களுக்குள்ளேயே இவ்வளவு விபரீதங்கள் என்றால், மீதிக் காலம் எப்படி நகரப் போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இந்த மதவாத சக்திகளுக்கு ஊடகங்களும் துணைப் போவது கடைந்தெடுத்த வெட்கக் கேடே!

Read more: http://viduthalai.in/page-2/84650.html#ixzz38UK25bGQ

தமிழ் ஓவியா said...


சிறு குழந்தைகளும் - தொலைக்காட்சிகளும்!


அண்மையில் வானொலியில் குழந்தைகள் வளர்ப்பு பற்றி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை (எழும்பூர்) மருத்துவர் ஒருவர் உரையாடலை காரில் பயணம் செய்து கொண்டே கேட்டு மகிழ்ந்தேன்.

அரிய பல தகவல்களை, கேள்வி - பதில் மூலம் வானொலி சார்பாக கேட்டவரும், பதிலளித்த மருத்துவ நண்பரும் மிக அருமையாக கூறி வந்தார்.

சிறு குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள பல பெற்றோர் களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்குப் பயன்படும் என்பதால், வானொலியில் கேட்ட குறிப்புகளைக் கொண்ட - நினைவில் நின்றவைகளைக் கொண்ட -கட்டுரை இது! படித்துப் பயன் பெறுங்கள்.

இப்போதெல்லாம் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்; தாய் மகப்பேறு மருத்துவத்திற்கு ஆளாகி, குழந்தை பிறந்த 2,3 ஆண்டுகள் ஆகும் நிலையில் - தொடர் விடுப்பு எடுக்க இயலாது என்ற காரணத்தாலும் சிறு குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையங்கள் அவ்வளவு திருப்தியாக இத்தாய்மார்களுக்கு அமையாத காரணத்தாலும், மாற்று முறைகள் தேடுகின்றனர்.

வேலையிலிருந்து திரும்பிய பிறகுகூட, சமையல் பணி (இன்னமும் இது பெண்கள் தலையில் சுமத்தப்பட்ட பணியாகத்தானே பெரும்பாலான வீடுகளில் உள்ளது) செய்தாக வேண்டிய நெருக்கடி.

அதன் காரணமாக, 2 வயது, 3 வயது குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் படுக்க வைத்தோ, ஆங்கில நர்சரி ரைம்ஸ் (Nursery Rhymes) பாட்டுகளைப் போட்டோ அல்லது குழந் தைகளின் ஈர்ப்புக்கான சி.டி.களையோ போட்டு அக்குழந்தைகள் சதா பார்த்துக் கொண்டே இருக்கும்படிச் செய்து தங்கள் பணிகளை இடையூறு, அவர்களது தொந்தரவு ஏதுமின்றி செய்து வருவது கண்கூடு.

கேட்டால் இந்த நவீன அறிவியல் தகவல் களஞ்சிய, பாட்டு சி.டி.கள் அக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் என்றும் நம்பி பல தாய்மார்கள் இதனைச் செய்கின்றனர். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளை அந்த வயதின் வளர்ச்சிக்குரிய கலகலப் புடன் பெற்றோர்களிடம் குடும்பத்தவரிடம் பழகுவதில்லாமல், பேச்சை அறவே தவிர்த்து விட்டு, எப்போதும் அரைத் தூக்கம், அரை மயக்கத்திலேயே இருந்து விடுகிறார்கள்.

(கிராமப்புற வயல்வெளியில் தூர வேலை செய்யும் பல தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் அழாமல் தூங்கிய வண்ணம் இருக்க, சில போதை மருந்து களை முலைக் காம்பில் தடவிக் கொண்டு குழந்தைக்கு வேலைக்கு வருவதற்குமுன் பாலூட்டிவிட்டு குழந்தைகளைத் தூங்க வைத்து சீனா போன்ற நாடுகளில் செய்வ தாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு)

அப்படி அறிவார்ந்த சி.டி.களைக் கூட போட்டு, மனித உறவுகளோடு, கலந்து கொள்ளச் செய்வது குழந்தைகளை வளரும்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்று அந்த மருத்துவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு பந்தை அக்குழந்தை முன் எறிந்தால் அது ஓடிப் போய் துடிப்புடன் எடுத்து, மீண்டும் எறியாமல் அது வெறுமனே அமைதியாக, ஏதோ ஒரு பொம்மை போல்தான் இருக்கும்; காரணம் அத்தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அது அப்படியே பார்த்து பார்த்து - அதனுடைய இயக்கங்களுக்கே அதில் வேலையில்லை அதன் காரணமாகத்தான் சும்மாவே இருக்கும்.

இதுவே வீட்டில் மற்றவர்களோடு கலந்து மற்ற குழந்தைகளுடன் தாத்தா, பாட்டி, பெற்றோர், அண்ணன், தங்கை, தம்பியுடன் கலந்து உறவாடினால் இப்படி இருக்கவே இருக்காது என்றார்!

ஜப்பானிய முறையில் முப்பரி மாண MRI Scan செய்து பார்த்ததில் அத்தகைய மேற்சொன்ன முறையில் - வளர்க்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அதற்குரிய அளவு வளரவில்லை என்பதை நன்கு நிரூ பணம் செய்யும் அளவில் உள்ளதாம்! கூறினார் மருத்துவர்.

நமது மூளை நான்கு பிரிவாக பகுக்கப்பட்டிருக்கிறது, நரம்பியல் மூளை நிபுணர்களால் (நூறு அளவு போன்ற மூளை முன் பகுதி (Frontal Lobe) தடித்துப் போகிறது.

அதனால் மின்னணு கருவிகள் (Electronic Gadgets) Mobile போன்ற வைகளை வைத்து பாட்டுகள் கேட்க வைத்தால் இவைகளை அருகில் கொண்டு சென்று 2 வயதுக்கு மேற் பட்ட சிறு குழந்தை வளர்ப்பில்கூட விரும்பத்தக்கது அல்ல என்கிறார் மருத்துவர்.

சில முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1 மணி 2 மணி நேரத் திற்கு மேல் - ஒரு வாரத்திற்கு இந்தக் குழந்தைகள் பார்க்காமல் தடுப்பது மிக மிக அவசியம் - என்கிறார் இந்த மருத்துவ வல்லுநர் அறிவுரைகள்!

கேட்டீர்களா? குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர் கள் இந்த அறிவுரையைப் புறக் கணிக்காதீர் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84653.html#ixzz38UKgztmH

தமிழ் ஓவியா said...


முஸ்லிம் மேலாளர் வாயில் சப்பாத்தியைத் திணித்த இந்த ராஜன் பாபுராவ் விச்சாரே - யார்?

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பின ராக இவர் மீதுள்ள காவல் நிலையத்தில் பதிந்த வழக்குகளின் விவரம் (கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பதி வானவை)

இவர்மீது கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது, கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவிப்பது, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தனியா ருக்கு சொந்தமான இடத்தை ஆக்ர மித்தது, போலி கையெழுத்துப் போட்டு பண மோசடி செய்தது, பெண்களை மானபங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களை தாக்கியது என மொத்தம் 20-ற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவற்றின் விவரங்கள்:

1) CRI 163/07/RCC 198/08 வாக்ளே எஸ்டேட் காவல்நிலையம் - தானே.

2) CRI 193/06 Sum CC 6252/2006 மாவ்படா காவல் நிலையம் - தானே.

3) CRII 73/11 நாவ்பாடா காவல் நிலையம் - தானே.

4) 4472/10 தானே காவல் நிலையம்

5) CRI 290/11 Under Section 143, 149.

6) CR II 39/2006 Under Section 37(3), 135, மும்பை காவல் சட்டத்தின்படி கைதாகி பிணையில் வெளியே வந்தவர்.

7) CRII 3033/09 Under Section 37(3), 135 கபூர்வாடி காவல் நிலையம் - தானே.

8) CRI 290/11 Under Section 143,149,323,342 of IPC with Sec. 37(1)1325
கல்வா காவல் நிலையம்.

9) CRII 3054/04 Under Section 37/(3)135

10) CRII 188/5 Under Section 37(3) 135

11) CRII 128/07 Under Section 291, 278, 188 of IPC with Sec.37(3) 135 O

12) CRII 73/11 Under Section 188, 268, 290, 291 with Sec. 6 of Environment Act 1986 and Under

Sec.33 (N) 113, 181, 136.

13) CRII 64/06 Under Section 37(3)135.

14) 193/06 Under Section 323, 504, 506, 143, 145, 147 of IPC

15) CRI 240/89 Under Section 143/147,336,337,353,427 of IPC

16) CRII 04/93 Under Section 37(3) 135.

17) CRII 08/93 Under Section 37(3)135, 36/135

18) CRII 73/06 Under Section 37(3) 135.

19) CRII 92/11 Under Section 37(3)135.

20) CRI 165/07 Under Section 353, 143,145,147, 148,149,427,504 of IPC

Read more: http://viduthalai.in/page-2/84656.html#ixzz38UKr8csO

தமிழ் ஓவியா said...


சைவ - வைணவ சம்பாஷணை

வைணவதாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப்பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்கு போய்விடும் என்கிறீர்களே.

மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மை கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லு வேன்.

(9.11.1930 குடி அரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதியது

Read more: http://viduthalai.in/page-7/84670.html#ixzz38ULqsyCP

தமிழ் ஓவியா said...


ஆச்சாரியாரின் குழப்பமும் அண்ணாவின் பதிலும்!


சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும்.

திருநீறு, நாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை,

"சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக்குறியி லிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லா ருக்கும் தெரியும் படியாகப் போட்டுக் கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக் கிறார்கள்.''

இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்துகிறார். சைவர் களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்வோம்.

திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரே தவிர, அவருக்குக் குழப்பம் வரா மலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர் களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியில் நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது,

"எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை'' என்று கூறுகிறார்!

எப்படி இருக்கிறது வாதம்! எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு!'

திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சாரியாள் சொல்லி யிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான் - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்!

வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும் - எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.!

நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சாரியாரின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

எதிலும் உறுதிப்பாடும் உத் வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!!

இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப்படுவதிலே ஆச்சரியமென்ன.

- தம்பிக்கு கடிதம் என்ற நூலில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UM0RVRt

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி!

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங்களது அந்தக் கவிதையை சரிபார்த்து தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தரு வார்கள் காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்றும் ஒருவர் புரட்சிக் கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி எனும் புராண கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UMFjDNb

தமிழ் ஓவியா said...


காஞ்சி என்றால் அண்ணா!


சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் தன்னிகரற்று விளங்குபவர் திருமுருக கிருபானந்தவாரியார். அவர் பம்பாயில் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றும்பொழுது தமக்கு முன்னே திரண்டிருந்த பொது மக்களை நோக்கி அவர் அடியிற் கண்டவாறு புதிர் போட்டாராம்.

...சில பெரியவர்களுடைய ஊர்களைச் சொன்னாலே அவர்கள் பெயர் என்ன என்பது தெரிந்து விடும். உதாரணமாக அரியக்குடி என்றால் யாரை குறிக்கும் தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினாராம் வாரியார்.

இராமானுச அய்யங்கார் என்றனராம் கூட்டத்தினர்.

இவ்வாறே இன்னும் சில ஊர்களை அவற்றுக்குரிய மனிதர்களின் பெயர்களைக் கேட்டு வந்தவர் இறுதியாக,

காஞ்சி? என்றாராம். உடனே குழுமியிருந்த பொதுமக்கள், அண்ணாதுரை! அண்ணாதுரை என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனராம்.

இதைக் கேட்டதும் அயர்ந்து போனாராம் கிருபானந்தவாரியார். காஞ்சி என்றதும் பொது மக்களுக்குக் காமகோடி பீடாதிபதி, சங்கராச்சாரியார் நினைவுதான் வரும். அவர் பெயரைத்தான் கூறுவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், கூட்டத்தினரோ அண்ணாவின் பெயரை முழங்கியது அவருக்கு அளவற்ற வியப்பை அளித் திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMN8spQ

தமிழ் ஓவியா said...

பார்ப்பனீயம்!

கடிவாளம் சிறியது, ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான்! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன் கூடத்தான் இல்லை, ஆனால் மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும்.

அதைப் போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்த சமூகத்தாரின் செல்வாக்கு நிச்சயம் வளரும்... இதனால் தான் பார்ப்பனீயம் என்னும் பிரச்சினை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

26.10.1947 திராவிட நாடு இதழில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMbkUzs

தமிழ் ஓவியா said...

பச்சை நாஸ்திகம்

சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்

சாத்திரத்தைச் சுட்டு- மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையைப் பொய்யாக்கி - மேல் கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி, சூத்திரத்தைக் கண்டு - பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து, சுகம் பெறுவதெக்காலம் - அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?

- தந்தை பெரியார் குடிஅரசு - 5-5-1929

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMjDgF9

தமிழ் ஓவியா said...


குங்குமம் விபூதி பற்றி


பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்! நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச் சியே பண்ணி தீஸிஸ் கூட சப்மிட் செஞ்சிருக்காங்க. கலப்பட விபூதி பக்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒரு சிலக் குடும்பங்கள் பாரம் பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு. இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற் பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிக மாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்... என்றார். (நன்றி: ஜூனியர் விகடன் 26.10.1997)

Read more: http://viduthalai.in/page4/84802.html#ixzz38op45Q2V

தமிழ் ஓவியா said...


அவமதிக்கப்படும் 50 சதவீத முதியோர்கள்.


நம் நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50 சதவீதம்பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் என 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி 'உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக' அனுசரிக்கப்படு கிறது. இதை அனுசரிக்கும் வகையில் கர்நாடக முதியவர்கள் சங்கம் சார்பாக சனிக்கிழமை பெங்களூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கர்நாடக மாநில 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசுகையில், "ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பாக, கடந்த 7 ஆண்டு களாக நாட்டி லுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு நாட்டிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 12 பெரிய மாநகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தினோம்.

அதில் 50 சதவீதமான முதியவர்கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் அவமதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 38 சதவீதமும், பெண்கள் 53 சதவீதமும் அவமதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த அவமதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நாட்டிலே பெங்களூரில் தான் 75 சதவீத, அதாவது அதிக அளவில் அவமதிக்கப்படு கிறார்கள். முதியவர்களை அவமதிப்பதில் சென்னை 53 சதவீதமும், டெல்லி 22 சதவீதமும், கான்பூர் 13 சதவீதமும் (கடைசி இடம்) பெற்றிருக்கிறது.

இதில் 77 % அவமதிப்புகள் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன. மற்றவை சாலை, பேருந்து நிலையம், மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். நாட்டில் 61% முதியவர்கள் தங்களுடைய மருமகளா லும், 59 சதவீத பெற்றோர் தங்களுடைய மகனாலும் அவமதிக்கப்படுகின்றனர். பெங்களூரை பொறுத்தவரை 65 சதவீதம் மகனாலும், 45 சதவீதம் மருமகளாலும் அவமதிக்கப்படுகின்றனர்.

ஆண்டுதோறும் முதியவர்களை அவமதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதற்கு என்ன காரணம் என முதியவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய முடிவதில்லை. அதனால் பணம் சம்பாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் எங்களை பாரமாக நினைத்து வதைக்கிறார்கள்'' என்றார்கள்.

முதியவர்கள் துன்புறுத்தப் படுவதை தடுக்கும் வகையில், கடந்த 2007ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் வதைபடும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் கொடுக் கப்பட்டுள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லாததால் முதியவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மேலும் அரசு சார்பாக முதியவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டந்தோறும் உதவி மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page5/84804.html#ixzz38opKKUSF

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவை அதிர வைத்த பறை இசை


செயின்ட் லூயிஸ் (மிசௌரி, யுஎஸ்): 2014-ஆம் ஆண்டு ஃபெட்னா விழாவில் தமிழரின் கலாச்சார அடை யாளமான பறை இசை நிகழ்ச்சிகளை கட்டியது. வந்திருந்த பார்வையாளர் களை மயிர்க்கூச்செரியும்படி அமைந்தது இந்த பறை இசை நடன நிகழ்ச்சி. 2014, ஜூலை 4, 5 தேதிகளில் செயிண்ட் லூயிஸ் நகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27ஆம் ஆண்டு தமிழ்விழா நடந்ததது. வடஅமெரிக்க தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழைக் கொண்டாடிய இந்த இரு தினங்களும், நண்பர்கள் அனைவரும் உற்றார்களாகவும், உறவினர்களாகவும் மாறிய நாட்களாக மாறிப் போயின என்றால் மிகையல்ல. நகரின் பிரதான சாலைகளில் பாரம்பரிய உடையில் தமிழர்கள். செயின்ட் லூயிஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு தமிழால் மணத்தது. தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம் என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி இரு தினங்களும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடைப்பெற்றதுதான், தமிழனின் கலாச்சார அடையாளமான பறை நிகழ்ச்சி.

பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாட்டுப் புற இசை நிகழ்ச்சி அல்லது பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால், அதற்கு தாய்த் தமிழகத்திலிருந்து கலைஞர்களை வரவழைக்க வேண்டி யிருந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, பறை இசை நடன நிகழ்ச்சி நடத்துவதில், தேர்ந்த கலை ஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் இங்கு வாழும் தமிழர்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர் மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொற்செழியன் மற்றும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக நின்ற பேரவையின் தலைவர் தண்டபாணி குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்

பறை இசை கலைஞர்கள் இந்த பறை நடனக் குழுவில், பொற்செழியன், ரமேஷ், கோவிந்தராஜ், அசோக், நந்தகுமார், பாலா, தினேஷ், பிருத்வி ராஜ், யசோதா, ரம்யா, கவிதா, புவனா, வீணா, ஜெயஸ்ரீ ஆகியோரும், இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வலர்களாக ஆதிசரண், கனிஷ்க், ஜோதம்,ரியா, ரித்தன்யா ஆகிய சிறார்களும் இதில் மனமகிழ்வுடன் பறையாடினர்.

பெரும் வெற்றி தமிழ் கலைகளைக் காக்கும் பொருட்டு இக்குழுவினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. குறிப்பாக 2014 ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியில் முக்கியப் பங்கு பறை இசை நடனம் மற்றும் தமிழரின் தொன்மை கலைகளான தெருக்கூத்து மற்றும் தோல்பாவைக் கூத்து போன்ற வற்றுக்கும் உண்டு.

அமெரிக்க பேராசிரியர்கள் இதில் பெருமைப்பட வேண்டியது, ஒக்கல ஹாமா பல்கலைகழகத்தின் இசைப் பேராசிரியர் ஜோயி செரினியன் மற்றும் ஏரன் பேகி தமிழ் பறை நடனக் குழுவி னருடன் இணைந்து சிறப்பித்ததுதான். அவர்களுடைய பறை பட்டறையும் பேரவையின் ஒரு அங்கமாக விளங்கி யது. ஆம்... நம் தமிழரின் பறை இசையை மையமாக வைத்து அமெ ரிக்கர்கள் பறைப் பட்டறை நடத்து வதை தாயகத் தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பறையால் விண்ணதிரட்டும் இசை மனதை மகிழ்வூட்டும், அமைதியாக்கும், ஆவாரப்படுத்தும், சுத்தமாக்கும். நம் முன்னோர்கள் கண்ட பறை, அமெ ரிக்கன் தமிழ் பறை குழுவின் மூலம் புது பரிமாணத்தை அடைந்துள்ளது. அவர்களின் முயற்சி தமிழரின் பறையை விண்ணை முட்டச் செய்யும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்கன் தமிழ் பறை குழுவினர், பறை உலகறிய செய்வதற்கு என்றும் ஆர்வமுடன் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. இக்கலையை கற்றுக்கொள்வதற்கோ, மேடையில் கண்டு ரசிக்கவோ அவர்களைத் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழகத்தில் எந்த ஒரு விழா என்றாலும் மலையாளத்தாரின் செண்டைமேளத்தையும் பார்ப்பனர் புகுத்திய கலாச்சாரத்துடன் கொண் டாடி வரும் வேலையில் அமெரிக் காவை அதிரவைத்த பறைஇசை இனி அனைத்து பொது நிகழ்ச்சியிலும் ஒலிக்குமாம், எந்த தமிழிசையை அமங் கலம் என்று ஒதுக்கிவைத்தார்களோ அதே இசை இன்று மேற்குலகில் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page5/84803.html#ixzz38opVgRtU

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி



மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன். மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page6/84806.html#ixzz38opiron9

தமிழ் ஓவியா said...


உயிர் உருவாகிறது, படைக்கவில்லை

1. வெள்ளை புழு: ஆம் செம்மறி ஆட்டு புழுக்கை (சாணி) அள்ளி ஓரி டத்தில் (குப்பைக் குழி) தினம் 4, 5 தட்டுக்கூடை அளவுக்கு ஆறுமாதம் வரையில் அதன் மேல் போட்டு வந்து அதன்பின் ஓரளவு மழை அதாவது தண்ணீர் தெளித்து காயாமல் நனைந்து இருக்க வேண்டும். அதன்பின் அதனை மண்வெட்டியால் அள்ளும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அதிலே இரண்டு மூன்று அங்குல நெட்டு அரை ஒரு அங்குலம் உள்ள வெள்ளை நிறமுள்ள பூச்சி உயிருடன் இருக்கிறது.

2. எருவில் புழு: மாடுகளை மேய்க்க நிலத்துப்பக்கம் போகும்போது அதன் எருவில் அடுத்த நாள் பார்க்கும்போது சிறு வெள்ளை புழுக்களும் இருக்கிறது அதை காக்கை கொத்தி இரையாக்கிக் கொள்கிறது எல்லா இடங்களிலும் இவ்விதம் ஏற்படுவதில்லை உப்பு நிலம், உவட்டுத்தரை, கந்தகத்தரை, உவர்மண் இப்படி உள்ள இடங்களில் புழுக்கள் தோன்றுவதில்லை.

3. ஈசல்: மழை பொழியும் போதெல்லாம் இல்லை; அய்ப்பசி கார்த்திகை மாத வாக்கில் மழை பொழிந்தால் உடனே ஈசல் என்ற பறக்கும் உயிரினம் மிக அதிகமான அளவில் உருவாகிறது கொஞ்ச நேரத்தில் இறக்கை உதிர்ந்து தரையில் இளைகிறது. உருமாற்றம் ஆகிறது. இது உணவாகவும் பயன்படுகிறது.

4. பனம் மட்டை: பனம் மட்டையை அடர்த்தியாக ஆறுமாத அளவில் அடுக்கி வைத்து அதில் பலமுறை மழை பொழிவு அல்லது பலமுறை தண்ணீர் தெளித்தால் கருப்பு நிறப்பூச்சி, அட்டை மாதிரி உயிருடன் கூடுதலாக உருவாகிறது.

5. தேள்: பழைய பனம் மட்டை, பழங்கூரை, வரகு, வைக்கோல், சாம்பல் இவைகளை ஒரே இடத்தில் போட்டு அதிகம் காயாமல் தண்ணீர் தெளித்து வந்தால் ஆறுமாத அளவில் தேள் உயிரினம் தோன்றுகிறது.

6. சிகப்பு அட்டை: இற்றுப்போன மட்டை, வைக்கோல், கூரை, பழைய வீடுகளில் மழைக்காலங்களில் சிகப்பான அட்டை உயிருடன் உண்டாகிறது.

7. பாசி: தண்ணீர் உள்ள தொட்டி யில் உயிரான பாசம் ஏற்படுகிறது குறைவான தண்ணீர் உள்ள கிணற்றில் கொடி போன்ற பாசி உயிருடன் உண் டாகிறது. இவை எனது கவனிப்பில் தென்பட்டவை: இடத்திற்கு ஏற்பவும் பொருள்கள் மூலமும் தட்ப வெப்ப பருவகாலங்களில் உயிரினம் ஏற்பட்டு அதுவே வளர்ச்சியின் மூலமாக மனிதன் என்ற உயிரினம் உருவாயிருக்க வேண்டும் சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி சரிதான் கடவுள் என்பது ஒரு பொருள் கூட இல்லையே; அப்படி இருக்க, இல்லாத பொருள் எப்படி எதையும் உருவாக்க முடியும்?

8. விட்டில்: ஆறுமாத அளவில் ஒரே இடத்தில் பல தென்னம் மட்டைகள் காய்ந்து இற்றுப் போய் இருந்தன. மழை பொழியும்போது அந்த மட்டையில் இருந்து விட்டில்கள் பொரி வானம் போல 50 அளவில் பறந்தன. கால நிலைக்கேற்ப உயிரினம் தோன்றும் இந்நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

கோழி: கோழி முந்தியா? முட்டை முந்தியா? உயிர் இனம் கோழி தான் முந்தியது. ஆம், இவ்விதம் செல்கள் உருவாகி அதற்கேற்ப உயிர் இனம் தோன்றி இருக்கும். இதன் பின்தான் இன சேர்க்கை ஏற்பட்டு உற்பத்தி ஆகிறது ஒவ்வொன்றும் அபிவிருத்தி ஆகி இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. முதலில் செல் உருவாக வேண்டும் இவை சேர்ந்து உயிர்ப் பொருள் உருவாகி நிறங்கள் வடி வங்கள் ஆண்பால். பெண்பால் அமை வதற்கு செல்களே காரணமாகின்றன. கடல், மழை, இப்படி பல இடங்களில் சூழ்நிலைக்கேற்ப உயிர் இனம் தோன்றி ஆண், பெண் என்பன தோன்று கின்றன. அதன்பின் தான் இனச் சேர்க்கை மூலமாக, முட்டை மூலமாக அல்லது குஞ்சு, குட்டி போன்றவை உருவாகின்றன. இதன்படி பார்த்தால் கோழிதான் முந்தியது.

Read more: http://viduthalai.in/page7/84808.html#ixzz38opvRna6

தமிழ் ஓவியா said...


இந்த நாள்!


29.07.1944இல் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் முத்தையா டாக்கிஸ் திரைப் பட அரங்கில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்டம் திராவிடர் கழக மாநாட்டில் அகவை பதினோர் வயது நிரம்பாத நிலையில் சிறுவன் வீரமணியை மேசை மீது தூக்கி நிறுத்தி மனப்பாடம் செய்த பேச்சுத் தொகுப் பினைத் தங்குதடையின்றி பேசி மாநாட்டிற்கு வந்திருந்தோர் அனைவரின் பாராட்டைப் பெற்ற நாள்.

இந்த மேடையில் சிறுவன் வீரமணியின் பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வீரமணியின் பேச்சைப் பாராட்டிப் பேசும்போது இப்பொழுது பேசிய சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்.

சிறுவன் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார் அண்ணா. தந்தை பெரியார் மேடையில் அகமகிழ்வு அடைந்தார். மாநாட்டுப் பந்தலே கையொலியால் அதிர்ந்த நாள்! இந்த நாள்!!

Read more: http://viduthalai.in/e-paper/84827.html#ixzz38orBRK3p

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கோட்புலி நாயனார்

சோழர்களின் படைத் தளபதி கோட்புலியார். சிவாலய அன்னதானத் திற்கான நெல் அளிக்கும் திருப்பணி புரிந்து வந் தார். அதற்காக நெல்லை பெரியதொரு களஞ்சியத் தில் சேமித்து வைத்திருந் தார்.

ஒருமுறை அவர் போருக்குச் சென்றிருந்த போது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசிப் பட்டினியால் வாடிய அவருடைய உறவினர் கள் அந்த நெல்லைப் பயன்படுத்தி விட்டனர். போரிலிருந்து திரும்பிய கோட்புலியார் சிவ கைங்கரியத்திற்காக வைத்திருந்த நெல்லை அபகரித்த அவர்கள் அனைவரையும்வெட்டி வீழ்த்தி தன் சிவபக்தியை மெய்ப்பித்தார்.

இதைப் படிக்கும் பொழுது என்ன தோன்று கிறது? அன்பே சிவம் என்பது இதுதானோ! பக்தி இருக்கும் இடத்தில் கொலை வெறிதான் மிஞ்சும் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/84838.html#ixzz38orSoOkC

தமிழ் ஓவியா said...

விதைகளை மலடாக்கும் விபரீதம்!


மத்தியில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதவாத அரசு மட்டுமல்ல - வெகு மக்கள் விரோத அரசு - பாட்டாளி மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு - கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை - பொருளாதாரத்தில் அமெரிக்கப் பார்வை கொண்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நாளும் பெருகிக் கொண்டே போகின்றன. இதன் மூலம் வெகு மக்கள் வெறுப்பை வெகுவாக வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களைப் பரிசோதனை முறையில் சாகுபடிசெய்யலாம் என்று ஜூலை 18ஆம் நாள் மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாக ஆகி விட்டது.

மோடியின் குஜராத் மாநிலத்திலேயே இதற்கான ஆக்கப்பூர்வ எதிர்ப்பு களைகட்டுகிறது. இன்று முதல் மூன்று நாள்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்த மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது. தெற்காசிய விவசாயம் ஒருங்கிணைந்த மாநாடாக இது உருவாகியுள்ளது. இதன் அவசர நோக்கம் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்ப்பதே!

மரபணு மாற்று விவசாயத்துக்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு மேலோங்கி நிற்கிறது. இதன் சூத்ரதாரி அமெரிக்காவாகும். இவர்கள் சொல்லுகிற முறைப்படி மரபணு மாற்று முறையைக் கையாண்டால் விதை நெல்லுக்கு இந்த நிறுவனங்களிடம் கையேந்தித் தான் நிற்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இந்த மரபணு மாற்று முறை விவசாயத்தால் கிடைக்கும் நெற்களை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. வீரிய கோழி முட்டைகளை (HYBRID) கொண்டு எப்படிக் குஞ்சு பொரிக்க வைக்க முடியாதோ அதே போன்று தான் இதுவும்
ஏதோ பி.ஜே.பி. இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் திட்டத்தைக் கைக் கொள்கிறது என்று அவசரப்பட்டு யாரும் முடிவு செய்ய வேண்டாம்.

அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான மத்தியில் அமைந்த ஆட்சியின் போதே 1998ஆம் ஆண்டிலேயே இந்த நாசப்படுத்தும் நச்சுக் கொள்கைக்கு நாற்று நடப்பட்டு விட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம் தனது தாவர மரபணு ஆய்வுக்கான அணுக்களை (டெர்மினேட்டட் ஜீன்) இந்திய நாட்டின் வயல்களில் சோதனை செய்து பார்க்க அனுமதி வழங்கியது. கருநாடகம் உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது - பிஜேபி ஆட்சியில். இதில் என்ன கொடுமையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இது குறித்த தகவலோ அவர்களின் அனுமதியோ கிடையாது என்பதுதான் அது.

அமெரிக்காவின் மான்சான்டோவுக்கு வழங்கப் பட்டுள்ள இந்த அபாயகரமான அனுமதி குறித்து அந்தக் கால கட்டத்திலேயே பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் பயிர்களின் மரபுரிமை திருடப்படுவதைக் கண்டித்துக் குரல் கொடுத்ததுண்டு; இந்தத் திட்டத்தால் விளை பொருள்களில் சத்துக்கள் அதிகரிக்கும் என்கிற விளம்பரத்திலும் உண்மையில்லை என்று பெங்களூர் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அழுத்தந் திருத்தமாக வெளிப்படுத்தினரே!

நிலத்தையும், நீரையும் தெய்வமாக வழிபட வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பா.ஜ.க. இப்படி இந்தப் பூமாதேவியை (பூமாதேவி அவர்கள் மொழியில் இப்படித்தானே!) மாசுபடுத்தலாமா?

ஒவ்வொரு முறையும் விவசாயம் செய்து விட்டு, அடுத்த விவசாயத் தொடக்கத்திற்கு அந்த அமெரிக்க நிறுவனங்களின் திசை நோக்கித் தண்டனிட்டுக் கிடக்க வேண்டுமா? அவர்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் மலட்டு விதைகளுக்காக காத்துக் கிடக்க வேண்டும். வேறு வழியில்லை நம்மை அண்டித் தான் இந்தியாவின் விவசாயம் நடந்தாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டு விட்டால், அவர்கள் வைத்தது தானே சட்டம், நிர்ணயித்ததுதானே விலை என்ற சுரண்டல்தானே ஜாம் ஜாமென்று நடக்கும்.

மரபணு மாற்று விதையில் பயிர் செய்யப் படுவனவற்றைத் தொடர்ந்து உண்டால் உடல் நோய்க்கு ஆளாக வேண்டும். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறையில் உற்பத்தி செய்யப்படுபவை பெரும்பாலும் கால்நடைகளுக்குத் தீவனங்களாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஒரு முக்கிய தகவலாகும்.
மரபணு மாற்றுப் பயிர்களின் திறந்தவெளிப் பரி சோதனை குறித்த முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. நாடாளுமன்ற வேளாண் நிலைக் குழு ஆய்வு நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கை 2013இல் வெளி வந்தது.

இந்த மலட்டு விதை விவசாயத்தின் வாழ்வா தாரத்தையே முற்றிலும் அழிக்கக் கூடியது என்று தெளிவாக தெரிவித்து விட்டதே! இந்த அடிப்படையில் கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது.

இப்பொழுது நரேந்திர மோடி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, பழைய பிஜேபி அரசு (1998) தொடங்கியதைப் புதுப்பித்துக் கொள்ள தோள் தட்டிக் கிளம்பியுள்ளது.

அறுபது நாட்களுக்குள் இவ்வளவு விபரீதங்கள் என்றால் வரும் காலம் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதிதான் மக்கள்முன் நிற்கிறது.

இந்துத்துவா கொள்கைப்படி விவசாயம் என்பது பாவத் தொழிலாகும். (மனு தர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84) அது எப்படியோ நாசமாக போகட்டும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர்கள் நம்பும் அந்த பாவப்பட்ட தொழிலில் தான் இந்தநாட்டில் கோடானு கோடி விவசாயப் பெருங்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திண்டோள் பொங்கி எழுந்தால் அவற்றை எதிர் கொள்ளும் சக்தி எந்த அரசுக்கும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84841.html#ixzz38orhYiwR

தமிழ் ஓவியா said...


தீராது



பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந் தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/84840.html#ixzz38orrEooA

தமிழ் ஓவியா said...


வாய்ப் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி கீரை


மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும்போது கசப்பு குறைவாய் இருக்கும். இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.

மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

இதுகுறித்து தருமபுரி அரசு சித்த மருத்துவ பிரிவு செல்வமூர்த்தி கூறியதாவது:

மணத்தக்காளி சிவப்பு, கறுப்பு என இரண்டு வகைப் படும். இலை, காய் இரண்டும் பெரிதும் பயன்படுகிறது. மணத்தக்காளியை மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, விடைக்கந்தம், உலக மகா என வழக்கத்தில் அழைக்கப் படுகிறது. கபநோயால் உண்டாகும் நாப்புண், நாவேக்காடு, உட்சூடு, நா எரிச்சல், இருமல் சளி மணத்தக்காளி பயன்படுத்தினால் தீரும்.

ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை சாப்பிடவேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலி நீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளி காயை வற்றல் போடலாம்.

வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/84817.html#ixzz38otOZdmU

தமிழ் ஓவியா said...


தொண்டை வலிக்குத் தீர்வு


தொண்டை வலி என்பது எல்லா வயதினருக் கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ் வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும் போதும் சிரமம் இருக்கும்.

எனவே இதை விரட்ட சில வழிமுறைகள்...

சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாள்களில் குணமாகி விடும்.

சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும் பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா தேநீர் குடித்தால் நல்லது. மசாலா தேநீர் என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்கவேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

தடை: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/84816.html#ixzz38oteWMex

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் 1,10,19,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுப பலன் உண்டாம். புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் உண்டாம்.

7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத் தொடக்கத்தில் பண வரத்து இருக்குமாம்.

ஒரு நாளில் பிறந்தால் போதும், திறமை முக்கி யம் இல்லை; உழைப்பு முக்கியம் இல்லையா? இது ஒரு சோம்பேறித்தன மான நம்பிக்கையை அல்லவா வளர்க்கும்!

Read more: http://viduthalai.in/page1/84723.html#ixzz38ouKCkRt

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடும் பாலியல் வன்கொடுமையும்


தேசிய ஆவணக் கழகம் (National Crime Records Bureau) என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் ஓர்ஆவணக் காப்பகமாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக் கைகளில் தமிழ்நாட்டின் பங்கு 2.41 சதவீதம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லை களுக்கு அதாவது 4 முதல் 18 வயது வரையிலான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 280 என்றும், 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களின் எண்ணிக்கை 395 எனவும், 30 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களில் பாதிப்புக்குள்ளான வர்கள் 93 பேர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 16 பேர் பாலியல் கொடுமைக் குள்ளாகி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களாக இருக்கின்றன.

இதிலே இன்னும் கொடுமையென்றால் பாலியல் வன்முறைக்குள்ளான 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 61. அத்துடன், 10 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளில் பாலியல் கொடுமைக் குள்ளானவர்கள் 78 பேர்.

அண்மையில்கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டையில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யுள்ளார்.

தமிழ் ஓவியா said...

2013ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 475. 2012ஆம் ஆண்டில் அது 7ஆயிரத்து 192. அது மட்டுமல்ல;

பாலியல் கொடுமைகள் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டு 923. அதே 2012இல் 677.

தமிழ்நாட்டில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட தற்காக நாடே பொங்கி எழுந்தது. நமது அண்டை மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்காகக் கடும் கண்டனப் புயல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் இவ்வளவு நடந்திருந்தும் ஒன்றும் நடக்காததுபோல மூடி மறைக்கப்படுவது - ஏன்? தமிழ் நாட்டு ஊடகங்களும் வாய் மூடி மவுனம் சாதிப்பது - ஏன்?

சட்டப் பேரவையில் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றால் - மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த முடியும்?

உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவது என்றாலே அது ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

எதிர்க்கட்சிகள் என்றாலும் சரி, ஊடகங்கள் என்றாலும் சரி நாட்டில் நடைபெறும் உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தினால் தானே ஆளும் கட்சியும் சரியான திக்கில் பயணிக்க முடியும்? செயல்பாட்டிலும் வேகத்தை முடுக்கி விட முடியும்.

பெண்ணென்றால் ஓர்ஆணுக்குச் சமையல் காரி ஓர்ஆணின் வீட்டுக்கு வேலைக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்

(குடிஅரசு 21.7.1946).

சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் பெண்கள் பற்றிய மனப்பான்மையில் மாற்றங் கொண்டு வரப்பட வேண்டும்.

இத்திசையில் கல்வியில் பெரும் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் ஏன் அடிமையானாள்? - என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் கல்லூரிகள் மட்டத்தில் இடம் பெற்றாக வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்கு மேலான மாணவர், மாணவி யர்கள் மத்தியில் பாலியல் கல்விபற்றித் தேவையான அளவில் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆபாசமாக அருவருப்பாக, அநாகரிகமாக நாட்டு நடப்புகள் இருப்பதைவிட, இந்தப் பாலியல் கல்வி எப்படித் தவறானதாகும்? இதில் போதிய புரிதல் இல்லாமையும் தவறுகள் நடப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியுமா? போதும் போதாதற்கு நமது ஊடகங்களும், சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் இளம் உள்ளங்களைப் பாலியல் வெறி உணர்வுகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அட்டைப் படங்கள் என்பவை - அரை குறை ஆடையுடன் கூடிய சினிமா நடிகைகளின் படங்கள் என்பது நிரந்தரமாகி விட்டனவே!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன என்று நிகழ்வுகள் நடக்கும் அந்தந்த காலங்களில் மட்டும் கூக்குரல் போடுவதும், சில நாட்களில் மறந்து விடுவது என்பதும் ஒரு தீய வட்டச் சுழற்சியாக அல்லவா இருக்கின்றது.

குற்றங்கள் நடக்கின்றன என்றால் அதற்கான மூலவேர் எங்கு இருக்கிறது என்று கண்டாய்ந்து அதனை வேரும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிய அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமா?

பெண்கள் என்றால் உடல் வன்மையற்றவர்கள் ஆண்கள் பலசாலிகள் என்ற மரபணுவை மாற்றி அமைத்திட விஞ்ஞான மார்க்கத்தை தேடுவதிலும் குற்ற மில்லை; தற்காப்புப் பயிற்சிகள் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்காவது பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து தற்காப்புக்காக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்ன கருத்து கவனிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது. அரசு சிந்திக்கட்டும் ஊடகங்களும் மனம் விரியட்டும்!

Read more: http://viduthalai.in/page1/84713.html#ixzz38ounIXmT

தமிழ் ஓவியா said...


பாசிசத் தொழிற்சாலையாகிறதா, குஜராத் மாநிலம்?


- குடந்தை கருணா

சென்ற ஜூன் 30-ஆம் தேதி, குஜராத்தில் உள்ள 42000 தொடக்கப்பள்ளி, மற்றும் இடை நிலைப் பள்ளிகளுக்கும், அரசு ஓர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், தினாநாத் பாத்ரா என்பவரின் ஆறு புத்தகங்களையும், துணைப்பாடமாக, கட்டாயம் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரி. யார் இந்த தினாநாத் பாத்ரா? சிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் தலைவராக இருந்த, பாத்ரா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்; இவர் தான், அமெரிக்க பேராசிரியர் வென்டி டோங்கியர் எழுதிய இந்துக்கள்; ஓர் மாற்று வரலாறு என்கிற புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்.

இந்த பாத்ராவின் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டுள்ளது? இந்து கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்ற போர்வையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இனி, பிறந்த நாளுக்கு, மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென் றால், இது மேற்கத்திய பண்பாடு. அதற்குப் பதிலாக, ஓர் விளக்கை ஏற்றி, காயத்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.

வரலாற்றுப் பாடங்களில், இந்தியாவின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என சொல்லப் பட்டிருக்கிறது. அதன்படி, தற்போதைய, இந்திய வரைப்படம் மாற்றப்பட்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், திபெத், பர்மா, இலங்கை நாடு களையும் உள்ளடக்கிய வரைபடம் தான் இந்தியா என வரையப்பட வேண்டும். ஏனென்றால், இதுதான், பண்டைய அகண்ட பாரதம், என பிள்ளைகளுக்கு சொல்லப்பட் டுள்ளது.

இது குறித்து, குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சவுடா சாமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பாடங்கள் அனைத்தும், பள்ளிகளில் கட் டாயப்பாடம் என்று கூறி உள்ளார்.

குஜராத்தில் 2002இல் நடை பெற்ற மதக்கலவரத்தின் மூலமாகத் தான், மோடி அடையாளப்படுத்தப் பட்டார். இந்துக்களிடையே, முஸ்லீம் விரோதப் போக்கை உருவாக்கி, அதன் காரணமாக தொடர்ந்து குஜராத்தில் அவர் பெற்ற அரசியல் வெற்றி, பிரதம ராவதற்கான காரணமாக அமைந்தது.

மோடியிடம் குஜராத்தில் அவரது உத்தரவிற்கு பணிந்து வேலை பார்த்த அதிகாரிகள்தான், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் அவருக்குத் துணையாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

குஜராத் கலவரம் நடை பெற்றபோது, உள்துறை அமைச்ச ராக இருந்து, பல போலி கொலை குற்றங்கள் செய்த அமீத்ஷாதான் தற்போது பாஜகவின் அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா என உலகம் முழுவதும் பரப்பப்பட்டுவரும், காந்தி, குஜ ராத்தில் பிறந்திருந்தாலும், காந் தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸைக் கண்டிப்பதுபோல், காப்பாற்றிய, குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலுக் குத்தான், மோடி சிலை வைக்க இருக்கிறார். அதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளார்.

தற்போது, பள்ளிக்குழந்தைகள் மனதில், காலத்திற்கும் நிற்கும் வகை யில், பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, இந்துத்துவா விஷ விதை விதைக்கப்படுகிறது. பாசிசப் பார்த்தினீயம் உருவாக்கப்படுகிறது.

இவையெல்லாம்தான் நடை பெறும் என்று நாம் படித்து படித்துச் சொன்னோம்; இடித்தும் சொன் னோம். ஆனால், இங்கே உள்ள சில தலைவர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை எனச் சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றினார்களே; இவர் களெல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/84716.html#ixzz38ovLY4Iw

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருப வர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது.

தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட் டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக் காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.

Read more: http://viduthalai.in/page1/84704.html#ixzz38owA7lNy

தமிழ் ஓவியா said...

சேலம் வன்னியர் குலச்சத்திரியர் மகாநாடு


ஆகையால், சகோதரர்களே! இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான ஜாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற ஜாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ்ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த ஜாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபடவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆகவேண்டாமா? இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிப்பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய் இருக்கின்றதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் கண்காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் கண்காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமான தாகுமா? என்பதை நீங்களே யோசித் துப்பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி, நம்ம நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக்கொள்ளுவ தென்று போட்டிப் போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரிய மானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின் றார்கள்.

நாம் இன்றையதினம் யார் சத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக் கின்றோம். சத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பெயரினால் என்ன லாபம்? அந்தப்பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டுவிட்டது? எந்தத் தேசத்தைப் பிடித் தோம்? எதை ஆளுகிறோம்? யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம்? ஏதோ சிலர் பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள் கூலிகளாய் இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே.

எனது நாடார் நண்பர்கள் அனேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால், ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்துகொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன்.

உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மைல் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதன் மணிக்கு 50 மைல் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலையில் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளி மலை.

அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக் கொண்டு, தொடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு, தலையில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக்கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும், வெள்ளைக்காரன் கைலாயத் திற்கு போய் பரமசிவனின் தலையைப் பிடித்து ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான்.

தமிழ் ஓவியா said...


சாரதா சட்டம்


சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4வது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் அட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண் களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுகளுடையவும், பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரேரேபணை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற்கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக் கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக் கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும்.

மூடனுடைய மனசாட்சி முட்டாள் தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப் பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/84705.html#ixzz38ownkQaS

தமிழ் ஓவியா said...

உதிர்ந்த மலர்கள்

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.

புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை யென்று கருதுகின்ற வர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையு மேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

- குடிஅரசு - பொன்மொழி - 18.05.1930

Read more: http://viduthalai.in/page1/84703.html#ixzz38ox5SPIp

தமிழ் ஓவியா said...


ஆரியம் தான் சமஸ்கிருதம் - உஷார்! உஷார்!!


சமஸ்கிருதம் ஒரு மொழிதானே?

இதற்குப் போய் முண்டா தட்டுவதா? என்று சிலர் முணுமுணுப்பர் - அவர்கள் விரிக்கும் வலையில் வீழாதீர்!

தமிழை - தமிழர்களைத் தாழ்த்த வந்த தாம்பு அது - தமிழை நான்கு கூறு போட்டதும் அதுதான் - மக்களை நான்கு கூறு போட்டதும் அதுதான்.
கோவிலுக்குள்ளிருந்து தமிழை வெளியேற்றியதும் இதுதான்.

தமிழனைப் பிடரியைப் பிடித்துத் தள்ளியதும் - தள்ளி வருவதும் அதுதான்.

அர்ச்சனை மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் குரல் கிளம்பிய நேரத்தில், ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றம் சென்றார். அவர் பெயர் வி.எஸ்.சிறீகுமார்; ஹிந்துக் கோவில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவராம். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களை மாற்ற அறநிலையத் துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின்போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

சமஸ்கிருத மொழி மூலமாக கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும். இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்துக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் என்று மனு தாக்கல் செய்தார் மனுவாதியான பார்ப்பனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழர்கள் கொடுக்கும் தட்சணையால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தமிழை வெறுக்கின்றனர் - சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

நம் தமிழர்களை வெறுக்கும், நம் தமிழை மறுக்கும் சமஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தத்தான் சமஸ்கிருத வாரம்!

உஷார்! உஷார்!!

தமிழர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்த ஆகஸ்டு முதல் தேதி களம் காண்போம் தோழர்களே!

கருஞ்சட்டைச் சேனையே, தயார், தயார் தானா?

Read more: http://viduthalai.in/page1/84698.html#ixzz38oxGNAH4

தமிழ் ஓவியா said...


பல்லக்கிலா?


திராவிடர் இயக்க ஆர்வலரும், நீண்ட நாள் விடுதலை வாசகருமான தோழர் நெய்வேலி க. தியாகராசன் அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்துள் ளார். தனியார்த் தொலைக் காட்சி ஒன்றில் ஒரு சொற் பொழிவாளர் சொன்ன தகவல்தான் அது.

மனிதனை மனிதன் வைத்து இழுத்த கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டு விட் டது. மனிதக் கழிவுகளை மனிதன் சுமக்கும் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மனி தனை சாமி சிலையோடு சேர்த்துச் சுமக்கும் இழிவு இன்னமும் தொடர்கிறதே ஏன்? ஆன்மீகவாதிகள் சிந்திப்பார்களா!

அந்தத் தனியார்த் தொலைக்காட்சியில் இவ் வாறு கூறியவர் ஒர் ஆன் மிகவாதியென்றால் ஆச் சரியமாகவே இருக்கும். அவர் வேறு யாருமல்ல - சுகி சிவமே!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமை மீறலை எதிர்த்துத் திராவிடர் கழகம் போராட்டங்களை கூட நடத்தியதுண்டு.

திருவாரூரையடுத்த தப்பளாம்புலியூர் என்ற ஊரில் சாமியோடு அர்ச்ச கப் பார்ப்பனரைச் சுமந்து வரும் வழக்கம் இருந்து வந்தது. திராவிடர் கழகம் எச்சரித்து, அடுத்து போராட நடவடிக்கைகளில் ஈடு பட்ட நிலையில் அந்த பழக்கம் கைவிடப்பட்டது.

சிறீரெங்கத்தில் ரெங்க நாதன் கோயிலில் நெடுங் காலமாக பிரம்மரத முறை உண்டு; பல்லக்கில் பார்ப்பனர்களைச் சுமந்து வரும் நிகழ்ச்சி அது. கைசிக ஏகாதசியில் கைசிகப் புராணம் பாடி முடித்து, காலையில் பிரம்ம ரதத்தில் ஏறிக் கொள்வர் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள். அவர்களை சிறீ பாதம் தாங்குவோர் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்கள். (சூத்திரத் தமிழர்களான தூக்கிச் செல்பவர்களுக்கு அப்படி ஒரு பெயர்) திராவிடர் கழகம் அதனை எதிர்த் தது; இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் அதனைக் கை விடக் கோரினர் எதிர்த்து அர்ச் சகப் பார்ப்பனர்கள் நீதி மன்றம்கூட சென்றனர்; தீர்ப்பையும் மீறி பல்லக்கில் பார்ப்பனர்கள் பவனி வர முயன்றனர். திராவிடர் கழகம் களத்தில் இறங்கி யது. விளைவு சிறீபாதம் தாங்குவோரும் (சுமப்பவர் களுக்கு இப்படியொரு பெயர்) இனி பார்ப்பனர் களைப் பல்லக்கில் வைத் துத் தூக்க மாட்டோம் என்று எழுத்து மூலமா கவே எழுதிக் கொடுத்து விட்டனர். அத்தோடு ஒழிந்தது (7.12.2011)

மடாதிபதிகளும் பல்லக்கில் வருவதுண்டு. அப்படித்தான் திருவா வடுதுறை ஆதீன கர்த்தர் ஆண்டுதோறும் பட்டினப் பிரவேசம் என்று கூறி மற்றவர்கள் தூக்கி சுமக்கப் பவனி வருவார்.

திராவிடர் கழகம் களத் தில் இறங்கி மறியலுக்குத் தயாரானது. விளைவு அந்தப் பட்டினப் பிரவே சத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சங்கராச்சாரியார்கள் பல்லக்கில் செல்லுவதும் அடியோடு ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் காரணம் தந்தைபெரியா ரும், திராவிடர் கழகமுமே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84882.html#ixzz38ud1zNN4

தமிழ் ஓவியா said...


தங்கம் வென்ற தமிழருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!!

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் கிளாஸ் கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விழாவில், 71 நாடுகள் கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டியில் சதீஷ்குமார் வேலூரைச் சேர்ந்த தமிழரான விளையாட்டு வீரர் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வீரவிளையாட் டில் வெற்றி வீரராக சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக் களைத் தெரிவித்து மகிழ்கிறோம். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர். இவர் மேலும் ஒலிம்பிக் வீரராக வெற்றியின் உச்சத்திற்கே செல்வார் என்று நம்பி வாழ்த்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை 29.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84881.html#ixzz38udSOUw7

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒரு முறை பார்வதிதேவி, சிவபெருமானை விட்டு விலகி இருந்தாள். இதை அறிந்த ஆடி என்னும் அசுரன் சிவபெருமானது தனிமையைப் பயன் படுத்திக் கொண்டு பாம்பு உருவம் எடுத்து உள்ளே நுழைந்தான். பிறகு பார்வதி தேவியாக உருமாறினான். சிவபெருமான் அருகில் சென்றான்.

தன்னோடு சேர்ந் திருக்க வந்திருப்பது ஆடி அசுரன் என்பதை சிவ பெருமான் உணர்ந்து கொண்டார். அசுரனுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது.

கயிலையில் சிவபெரு மானுக்கு அணுக்கத் தொண்ட ராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பி யாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத் தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில் தவறாமல் இறை வழிபாடு செய்து பயன் பெறலாமாம்.

இந்துப் புராணம் என்று எடுத்துக் கொண்டால் அசுரன் என்ற பாத்திரம் எப்படியோ வந்து புகுந்து விடும். அசுரன், அரக்கன், ராட்சதன் என்று எங்கு சொல்லபட்டு இருந்தாலும் அவன் வேறு யாருமல்ல- திராவிடன் தான் என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கதையிலும்கூட அசுரன் கேவலமான தாகத்தான் படைக்கப் பட்டு இருப்பதைக் கவனிக் கத் தவறக் கூடாது; இந்தக் கதையும் சற்றும் அறிவுக் குப் பொருந்துகிறதா என் பதையும் ஆன்மிக சிரோன் மணிகள் சிந்திக்கட்டும்!

Read more: http://viduthalai.in/e-paper/84892.html#ixzz38udceXyF

தமிழ் ஓவியா said...

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

இந்நாள் :

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள். விழாவில் அமைச்சர்கள் ப.உ. சண்முகம், எஸ். இராமச்சந்திரன், பரூக் மரைக்காயர் உள்ளிட்டோரும் அன்பில் தர்மலிங்கம், முன்னாள் எம்.பி.யும் சென்னை மாநில கூட்டுறவு வங்கியின் மேனாள் தலைவருமான ஆர். கனகசபை, எம். செல்வராஜ், (தென்னார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர்), சிதம்பரம் பிரபல டாக்டர் கே. அரங்கசாமி எம்.பி.பி.எஸ். (முன்னாள் எம்.பி.) வி.வி. சாமிநாதன், ஆர்.கோவிந்தராசன் எம்.எல்.ஏ., ஆர். சுப்பிரமணியம், (கடலூர் நகராட்சி தலைவர்) உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர். விழாவில் நான் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன்.

தந்தைபெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா கடலூரில் ஒரு மாபெரும் இன எழுச்சி விழாவாக நடைபெற்றது. சிலை திறந்து வைத்து தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பிற தோழர்களும், அமைச்சர் பெரு மக்களும் ஆற்றிய பாராட்டுரைகள் பகுத்தறிவு முழக்கங்களாக அமைந்தன. முன்னதாகவே கடலூர் நகராட்சி வரவேற்பளித்து மகிழ்ந்தது.

விழாவிற்கு அய்யா அவர்களும் நாங்களும் சிலை அமைப்புக் குழு பொருளாளரும் வழக்குரைஞருமான எஸ். ஜனார்த்தனம் அவர்களின் (பிறகு இவர் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதி மன்ற நீதிபதியாகி ஜஸ்டீஸ் எஸ். ஜனார்த்தனம் ஆகி, ஓய்வு பெற்ற பின்பும் மாநில நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஆகவும், பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டவர்) இல்லத்தில் தங்கி இருந்த அய்யா அவர்களை கழகத் தோழர்களும், பிரமுகர்களும் குடும்பங் குடும்பமாக வருகை தந்து சந்தித்து, தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துச் சென்ற வண்ணமாக இருந் தனர். விழாவையொட்டி நகரமெங்கும் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும் பந்தல்களும் கலை வண்ணம் குலுங்க காட்சி அளித்தன. கழகக் கொடிகள் எங்கு நோக்கினும் காற்றில் அசைந்தாடி அனைவருக்கும் நல்வரவேற்பு அளிப்பதுபோல இருந்தன.

விழா சார்பாக மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள். சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடி நின்று மலர் மாலைகள் அணிவித்து, அன்பளிப்பாக பழங்களும், ரூபாய் நோட்டுகளும் வழங்கி, தங்களை வாழ வைத்த தானைத் தலைவருக்குத் தன் நன்றிக் காணிக்கையைத் தெரிவித்துக் கொண்டனர்.

பல்லக்கில் துவக்கத்தில் தந்தை பெரியார் அவர்களும் பவனி வந்தார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் பல்லக்கில் அமர்ந்து வர மிகவும் கூச்சப் பட்டு எங்கேயிருக்கிறார் என்று எவருக் கும் சொல்லாமலேயே தேவனாம் பட்டினம் கடற்கரை அருகில் இருந்த ஈ அய்.டி. பாரி நிறுவன பங்களாவுக்கு சென்று விட்டார். ஊர்வலத்தில் தந்தை யும் தனயர்களும் அமர்ந்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கடலூர் மக்கள், தந்தைபெரியார்மீது செருப்பு வீசியவர் கள், அய்யாவின் கொள்கை வெற்றியைக் கண்டு பூரிக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தோம்.

அய்யாவை மட்டும் அமர வைத்து திருப்பாதிரிப்புலியூரில் ஊர்வலத்தை துவக்கி வைத்துவிட்டு, காரை எடுக்கச் சொல்லி, கலைஞர் சென்ற தேவனாம் பட்டினம் பங்களாவை அடைந்தேன். முதல்வர் கலைஞருக்கும் அமைச்சர் களுக்கும் இது அதிர்ச்சி! அவர்கள் ஊர்வலத்தில் வந்தே ஆக வேண்டும் என்று உரிமையெடுத்துக் கொண்டு வற்புறுத்தினேன். வேறு வழியின்றி, ஒப்புக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு ஊர்வலம் நோக்கி முதல்வருடன் நானும் அமைச்சர்களும் வந்தோம்!

உங்களுடன் எப்போது போட்டி யிட்டாலும் வீரமணி வென்று விடுகிறார் என்று அமைச்சர் ப.உ. சண்முகம் உட்பட அனைவரும் வேடிக்கையாகக் கூற, முதல்வர் கலைஞர், அவர் பிடிவாதமாக எதையும் சாதித்தே தீருவார் என்று கூறி ரயில்வே கேட் அருகில் ஊர்வலம் வரும்போது முதல்வரை பல்லக்கில் ஏற்றி அமர வைத்தோம்.

தமிழ் ஓவியா said...


ஜாதியை ஒழிக்க வந்த செம்மல் பெரியார் வாழ்க! இனக்காவலர் பெரியார் வாழ்க! சிந்தனை சிற்பி பெரியார் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் ஊர் வலம் முடிவுவரை கேட்டுக் கொண்டி ருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரிபுலியூர் கடைத் தெரு) வந்து கொண்டிருக்கையில் முதல்வர் கலைஞர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களும், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பல்லக்கிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் அமர்ந்து கொண்டார்கள். இந்தக் காணற்கரிய காட்சியைக் கண்ட தமிழர் இனம் அப்படியே உணர்ச்சி எல் லையின் உருவமாகி விட்டது! உணர்ச்சி வயப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாத ஒன்றாகி விட்டது. பெரியார் வாழ்க என்ற ஒலி முழக்கத்துடன், தஞ்சை கலைஞர்களின் அதிர்வேட்டுச் சத்தம் விண்ணையும் பிளக்கச் செய்தது. இந்த இடத்தில் மேலவைத் தலைவர் சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு அவர்கள் அய்யா அவர் களுடன் அலங்கார பல்லக்கில் அமர்ந்து கொண்டார்கள். மக்கள் சமுத்திரத்தின் ஒட்டு மொத்த வாழ்த்து முழக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அதற்கு முன்பு அங்கே அய்யா அவர்களுக்கும் அமைச்சர் பெரு மக்களுக்கும் எனக்கும் நகராட்சி மன்றத்தின் சார்பாக வரவேற்பு இதழ்கள் படித்தளிக்கப்பட்டன. அய்யா அவர்களும், கலைஞர் அவர்களும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றினார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/84895.html#ixzz38ueHYmcB

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து

ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரசை விஞ்சியதாகச் செயல்படும் இன்றைய பி.ஜே.பி. அரசை எதிர்த்துப் போராட அழைப்புக் கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம் - சிங்கள இனவெறியர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங் கைத் தீவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை, நெருக்கடியை அமெரிக்கா கண்டித்துள்ளது - இந்தியா வழக்கம்போல் குறட்டை விடுகிறது.

சிங்கப்பூரில் பி.ஜே.பி. பொறுப்பாளர் சேஷாத்திரி சாரியின் கருத்து

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பி.ஜே.பி. யின் வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப் பாளர் சேஷாத்திரி சாரி என்பவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்குவங்காளம் மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

சு.சாமி வகையறாக்கள்

சுப்பிரமணியசாமி தலைமையில் ஆன குழு இலங்கைக்கு சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்து விட்டுத் திரும்பியது. இலங்கையில் நடந்த பத்திரிகையாளர் குழுவி லேயே இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல; மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அவர்கள் சிக்கல் களை அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என் றும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அஞ்சத் தேவையில்லை என்றும் சுப்பிரமணியசாமி, பேட்டியளித்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு நேற்று (29.7.2014) பேட்டி யளித்த முன்னாள் இணையமைச்சர் (வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில்) சுரேஸ் பிரபு கூறியதாவது, இலங்கை நமது நட்பு நாடு, வர்த்தகம் மாத்திரமல்ல; நமது பழம்பெரும் கலாச்சார உறவு கொண்ட நாடு, இலங்கையில் நடக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக இந்தியாவையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இனவாதக்குழுக்கள் தோன்றி இலங்கையில் பெரிய அளவில் வன்முறையை நிகழ்த்தியுள்ளன.

தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் துணை நிற்கும், அதேவேளையில் தமிழ் நாட்டில் சில அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் இனவாதக் குழுக்களுக்கு துணைபோகும் நிலையில் உள்ளது. வாக்கு அரசியலுக்காக இலங்கைப் பிரச்சினையை இன்றளவும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு தீர்க்கமான முடிவெடுப்பதற்கு தடையாக இருக் கிறது. இதற்கு முன்பு இருந்த அரசு திராவிடக்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான நட வடிக்கை எடுத்து வந்தது.

தற்போது நரேந்திரமோடி தலைமையில் ஆன அரசு இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கையின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தி யாவிற்கு நன்மை தருவதாக இருக்கும் பட்சத்தில் முழு மையான ஆதரவு அளிக்கும், இதற்கான உத்திரவாதத்தை நரேந்திரமோடி ஆட்சியேற்ற போது டில்லி வந்த மகிந்த ராஜபக்சேவிடமும், அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆன குழுவிடமும் நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம். தற்போது இலங்கையின் வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முக்கியமாக இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் சென்று தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்காக அவர்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு நாங் கள் பலியாக மாட்டோம், எங்களுக்குத் தேவை இலங்கை யில் வளர்ச்சி அதற்குத்தான் முக்கியத்துவம் தருவோம்.

விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்று பல்வேறு முடிவு களை அறிவிப்பார் என்றும் ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரராகப் பேட்டியளித்துள்ளார்.


தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


விநாயகர் கூறியவாறு கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அரு ளால் தேவ ரிஷியாகப் பதவி பெற்றாராம்.

இதன்மூலம் விநாய கரைவிட முருகன் பெரிய கடவுள் என்று காட்டு வதற்காக யாரோ இடை யில் புகுந்து புராணம் எழுதியிருப்பார்கள்போல் தெரிகிறது.

தேவரிஷிப் பதவி பெறுவது இருக்கட்டும் - எத்தனை ஆண்டு கார்த் திகை விரதம் இருந்தால் எம்.எல்.ஏ. பதவி பெற லாம்?

அதற்குமேல் அமைச்சர் பதவியைப் பெறலாமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/84945.html#ixzz390Z61Dze

தமிழ் ஓவியா said...


இந்த நாள்


இந்த நாள்

அந்தோ, ஒன்பதாவது பலி


30.7.1958 அன்று நன்னி மங்கலம் கணேசன் அவர்கள் கோயமுத்தூர் சிறை யில் மாண்டு போனார் என்ற செய்தி!

ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் இது ஒன்ப தாவது உயிர் பலி! ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒன்பதாவது பலி! ஜாதியைக் காப்பாற்றும் அக்கிர காரத்திற்கு ஒன்பதாவது பலி!

ஒரு பார்ப்பானை, யாரோ ஒருவன் கத்தியினால் குத்திச் சிறுகாயப்படுத்திவிட் டான் என்றால் நாடே கிடுகிடுக்கிறது! ஒரு பார்ப்பான் குளித்துக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவன் அவன் பூணூலை அறுத்து விட்டான் என்றால் பார்ப்பன ஏடுகள் அலறுகின்றன. அதிகார வர்க்கம் சீறி எழுகிறது! சில அமைச்சர்கள் கூடத் துடிக்கிறார்கள்.

ஆனால் சுயநலமற்ற தொண்டினால், ஜாதி ஒழிப்புக்காகச் சிறைத்தண்டனை பெற்றதனால் ஒன்பது இளம் உயிர்களைப் பதறப் பதறப் பறிகொடுத்திருக்கிறார்களே, திராவிடர் கழகத்தார்! இதற்காக அதிகார வர்க்கம் சிறிதாவது மனம் இளகுவதாகத் தெரியவில்லை.

இந்தக் கருஞ்சட்டைக்காரன் ஒருவன் இருப்பதனால்தான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்கிறான். ஜாதி ஒழிந்தால் நாம் ஒழிந்ததாகத்தானே அர்த்தம்? இவனைத் தவிர்த்த மற்றெல்லாப் பயல்களும் நம் காலடியில்தானே கிடக்கிறார்கள்? மற்றக் கட்சிக்காரர்களில் எவனாவது நம்மை எதிர்க்கிறானா? எவனாவது சாதி ஒழிய வேண்டுமென்று கிளர்ச்சி செய்கிறானா? ஜாதி ஒழிந்துவிட்டால் நமக்கு மரியாதை ஏது? நமக்கு வாழ்வுதான் ஏது? இந்த கருஞ்சட் டைக்காரக்கும்பல் பூண்டோடு அழியாதா?

நாலாயிரம் பேர் சிறைக்குள்ளே சென்ற தற்கு மூவாயிரம் பேராவது செத்திருக்க வேண்டாமா? நம் ராஜாஜி ஆட்சியிருந்தால் அதற்கான ஏற்பாட்டை நிச்சயம் செய்தி ருப்பாரே!

இப்படித்தான் அக்கிரகாரம் இன்று, நாள் தவறாமல் புலம்பிக்கொண்டிருக்கிறது! இப்புலம்பல் அடியோடு வீணாகக் கூடாது என்பதுபோல் சிறைச்சாவின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருக்கிறது என்று தலையங்கம் தீட்டியது விடுதலை.

Read more: http://viduthalai.in/page-2/84953.html#ixzz390aWNWEH