Search This Blog

1.7.14

நீதிக்கட்சி அரசாங்கத்தின் தொண்டுகள் சில...

நீதிக்கட்சி அரசாங்கத்தின் தொண்டுகள் சில:முனைவர் பு.இராசதுரை



நீதிக்கட்சி அரசு:


பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது;

பெண்களுக்குத் தேர்தலில் நிற்க உரிமை அளித்தது;

வகுப்புரிமைச் செயல்படுத்திற்று;

கோவில் பணம் கொள்ளை போகாமல் காத்திட இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றியது; தேவதாசி முறையைச் சட்டமூலம் ஒழித்தது; விபசாரத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது;

சூத்திரன் என்ற பெயரைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்தது; மாவட்ட முன்சீப் நியமனங்களைச் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து கைப்பற்றியது;

தொழில் நலம் வளர்வதற்கு உதவியாக 1923 ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தொழில் உதவித் சட்டத்தை நிறைவேற்றிற்று;

ஆந்திரப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது;

அண்ணாமைலப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது;

உள்நாட்டு மருத்துவத்திற்கு ஊக்கம் அளித்தது; சிற்றூர் மக்களுக்குக் கூட்டுறவுச் சட்டங்கள் அமைக்கப்பட்டன;

கடன்காரர் பாதுகாப்புச் சட்டம் அமைக்கப்பட்டது;

பத்து லட்சம் பரம ஏழைகளுக்குக் குடிவார உரிமையை உண்டாக்கிக் கொடுத்த இனாம்தார் சட்டத்தை நிறைவேற்றியது;

சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு 1930 வாக்கிலேயே இலவச நண்பகல் உணவை வழங்கியது;

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்கக் குழுக்களை நியமித்தது;

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் இடம்பெற சட்டம் இயற்றியது.

தாழ்த்தப்பட் வகுப்பு மாணவர்களுக்கென இருந்த தனிப்பள்ளிகளை மூடியது;

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், பிற வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து பயில வழிவகுத்தது;

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிக்கூடங்களில் கட்டணம் இல்லை என அறிவித்தது;

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி தரப்படமாட்டாது என அறிவித்தது; தாழ்த்தப்பட்டவர்கள் எந்தச் சாலையிலும் நடக்க உரிமை அளித்தது;

தாழ்த்தப்பட்டோர் எந்தப் பொதுநிலையத்தையும் பயன்படுத்த உரிமை அளித்தது;

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருந்த `பஞ்சமர் என்ற பெயரை நீக்கி `ஆதிதிராவிடர் ஆதி `ஆந்திரர் என்ற பெயர்களை அளித்தது; தாழ்த்தப்பட்டவர்கள் உந்து வண்டிகளில் பயணம் செய்யும் உரிமை அளித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீடுகட்டப் புறம்போக்கு நிலங்களை அளித்தது; இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தாழ்த்தப்பட்டவரைச் சென்னை மாகாணத்தில் அமைச்சராக்கிற்று; ஆதிதிராவிடர் வகுப்பு மாணவர்களைத் தன்மாதிரிப் பள்ளிகளில் சென்னை மாநகராட்சி சேர்த்திட 1918 ஆம் ஆண்டே முயன்று வெற்றி பெற்றது;

ஒரு கிறித்துவரைக் கல்லூரி முதல்வராக்கிற்று;

ஒரு கிறித்துவரைச் சட்டமன்றத் தலைவராக்கிற்று;


ஒரு கிறித்துவரை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக்கிற்று;


கிறித்துவர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கிற்று;


ஒரு கிறித்துவரை உள்துறை உறுப்பினராக்கிற்று;


முஸ்லிம்களுக்குத் தனிக்கலாசாலை நிறுவிற்று;


ஒரு முஸ்லிமை கைத்தொழில் இயக்குநராக்கிற்று;


ஒரு முஸ்லிமை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக்கிற்று; ஒரு முஸ்லிம் உள்துறை உறுப்பினராகக் காரணமாயிருந்தது;


ஒரு முஸ்லிம் தற்காலிக ஆளுராக நியமனமாகக் காரணமாக இருந்தது;


பச்சையப்பன் கல்லூரியில் முகமதிய கிறித்துவ மாணவர்களைச் சேர்க்க முயன்று வெற்றிபெற்றது;


மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் பிராமணர்களுக்கென்று அறைகள் தனியாக ஒதுக்கப்பட்டிருந்த முறையை ஒழித்தது;

10 comments:

தமிழ் ஓவியா said...


யாத்ரீக நிவாஸ்


தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தனது சட்டப் பேரவைத் தொகுதியான சிறீரங்கத்தில் பக்தர்கள் வந்து தங்குவதற்காக, தங்கும் விடுதியைத் திறந்து வைத்துள்ளார். அப்படி அவரால் திறந்து வைக்கப்பட்ட கட்டடத் துக்கு அவர் சூட்டியுள்ள பெயர் என்ன தெரியுமா?

யாத்ரீக நிவாஸ் என்று பெயர் சூட்டியுள் ளார். தமிழைத் தாய் மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் ஒரு முதல் அமைச்சருக்குத் தமிழில் பெயர் கிடைக்கவில்லை.

தேடித் தேடி ஆய்வு செய்து இப்படி ஒரு பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளார். தமிழ் மண்ணில் தமிழில் மறு மலர்ச்சியை உண்டாக்கி யதில் திராவிடர் இயக்கத் துக்கு மிகப் பெரிய இடம் உண்டு.

நமஸ்காரம் - வணக் கம் ஆனது தொடங்கி, வந்தனோப சாரம் நன்றி யாக மலர்ந்தது வரை எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

ஆனால், அண்ணா பெயரிலும் திராவிட என்ற இனப் பண்பாட் டின் அடையாளப் பெயரிலும் அண்ணா திமுக என்ற கட்சியை வழி நடத்தும் ஒரு முதல் வரின் சிந்தனையோ எதிர்த் திசையில் அல் லவா சுழன்றடிக்கிறது!

இப்பொழுது மட்டு மல்ல, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினால் கூட ஜெயசீலன், ஜெயக் குமார், ஜெயராமன் என்று தான் முதல் அமைச்சர் வாயிலிருந்து வெளி வரும்.

உயிரியல் பூங்காவுக் குச் சென்று அங்குள்ள புலிகளுக்கோ, யானை களுக்கோ பெயர் சூட்டி னாலும் சமஸ்கிருதப் பெயர்கள்தான் சரமாரி யாக உதிரும்.

கடந்த ஆண்டு மார்ச்சு 15இல் புலிக் குட்டிகளுக்கு முதல் அமைச்சர் சூட்டிய பெயர்கள் அர்ஜுனா, ஆத்ரேயா, அனு, நம்ரதா, உத்ரா, ஆர்த்தி; 2014 மே 11இல் புலிக் குட்டிகளுக்கு முதல் அமைச்சர் எப்படிப் பெயர் சூட்டினார்?

கர்னாபீமா, தாரா, மீரா, வித்யா... யானை களுக்கும் கிரி, உரிகம் என்றுதான் பெயர் சூட்டு வார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்யப்பட்டதை மாற்றி, பிரபவ, யுவ என்னும் சமஸ்கிருதப் பெயர்களை மட்டும் கொண்ட - புராண ஆபாசக் கதைகளை உள்ளடக்கிய சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றி யமைத்தவராயிற்றே நம் முதல் அமைச்சர் - அவரிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83245.html#ixzz36GXhJH5k

தமிழ் ஓவியா said...


வெளியானது இந்துத்துவா முகம்! ஆண் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டி விட வேண்டும்!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஆரியத்தனம்

இந்தூர் ஜூலை 1-_ ஆணின் தேவையை நிறை வேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும் என்று பேசி தன் ஆரிய -_ இந்துத்துவா கொள் கையை வெளிப்படுத்தியுள் ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத். இந்தூரில் நடந்த ஆர் எஸ் எஸ் பொதுக் கூட்டத் தில் பேசிய மோகன் பகவத்: இன்று பெண்கள் அதிகம் கல்விகற்க ஆரம் பித்து விட்டனர்.

திரு மணத்தின் போது கணவன் மனைவி இருவரின் கல்வி யும் சரிசமமாக இருந்து விடுகிறது, சில வேலை களில் கணவனை விட மனைவி அதிகம் படித்த வளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்கு பிறகு படித்து பட்டம் பெற்றுவிடுகிறாள். சிலர் கணவனை விட உயர் பதவிக்கு சென்று விடுகிறார்கள். வருமான மும் கணவனைவிட அதி கம் வரத்துவங்கிவிட்டது.

இந்த இடத்தில் கண வனின் மனநிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனை விக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றி விடுகிறது, இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிக மான விவாகரத்திற்கு கார ணமாக அமைந்துவிடு கிறது என மோகன் பகவத் கூறினார்.

ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிடவேண்டும் பெண்கல்வியையும் பெண்ணின் சுதந்திரத்தை யும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரையை கூறினார். அதா வது மனைவி, கணவ னுக்கு (அடிமைச்)சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ளவேண்டும்.

பெண் கள் இந்தக்கடமையில் இருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்ராக்ட்) மாத்திரமே என்று தன் னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட் டுமே தலையாய கடமை யாக கொள்ளவேண்டும்.

வீட்டைக்கவனிக்கவேண்டும், கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும், கணவனுக்கு இன்பம் தரவேண்டும், இது பெண் ணின் கடமை; இந்தக் கடமையில் இருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

விலக்கி விடவேண்டும் கணவனின் தேவைகளை நிறைவேற் றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவ னுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும். என்று கூறினார்.

பாரதமும், இந்தியாவும்

பாரதத்தில் கற்பழிப்பு நடக்கவில்லை; இந்தியா வில்தான் கற்பழிப்பு நடந் துள்ளதாக முன்பு ஒரு முறை மாட்டிக் கொண்டு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். இதே ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்.

Read more: http://viduthalai.in/e-paper/83246.html#ixzz36GXuFPnh

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பு - முல்லைப் பெரியாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, ஜூலை 1_ இந்தித் திணிப்புக் குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கூறியிருப்பதாவது:_

கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதே?

கலைஞர் :- 17-.6-.2014 அன்று தி எகானமிக் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை,- சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும், நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், இந்தி பேசாத மாநிலங் களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித் திருந்தது.

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர் களிடம் கூறும்போது, எந்த மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத் தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு! என்று தெரிவித்தார்.

இந்தச் செய்திக்குப் பிறகுதான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப் பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இன்று (30.6.2014) செய்தி வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. எம். துரைபாண்டியன் இது பற்றிக் கூறும்போது, மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மத்திய அரசும், பிரதமர் அவர்களும் இந்தப் பிரச்சினையில் மீண்டும் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மக்களிடம் எழுந்துள்ள கலக்கத்தைப் போக்க முன் வரவேண்டு மென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி :- முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதலமைச்சர் தெரிவித் திருக்கிறாரே?

கலைஞர் :- இதைத்தான் நான் 27-.6-.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந் தேன். கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை.

2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும், தமிழ்நாட் டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் நான் குறிப்பிட்டு, கேரள முதலமைச்சர் இவ்வாறு கேரள சட்டசபையில் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச் சருக்குப் பதில் சொல்லாமல், அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்ட என்னை எந்த அளவுக்கு அநாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து, பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்ற வார்த்தைகள் உள்ளன என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார்.

ஆனால் நேற்றையதினம் (29.-6.-2014) கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, 4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது என்று பதில் கூறியதாக தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள் ளன.

எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்குத் தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்திரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை. கேரள முதல்வரின் இன்றைய பதிலுக் குப் பிறகாவது தமிழக முதலமைச்சர் அரைவேக்காடு அவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டி ருப்பார் என்று நம்புகிறேன்.

(முரசொலி, 1.7.2014

Read more: http://viduthalai.in/page-3/83220.html#ixzz36GZ0pXnB

தமிழ் ஓவியா said...


அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/headline/83140-at-a-national-level-in-the-private-sector-should-be-implemented-fully-castes-reservation-league-struggle.html#ixzz36GcBHKWa

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைக் கொண்டு கோவில் கட் டினான் அமைச்சனான மாணிக்கவாசகன். மன் னன் சிறைப்படுத்திய தால், தன் பக்தன் மாணிக்க வாசகனின் அல்லலைப் போக்க நரிகளைப் பரி களாக்கி (குதிரைகளாக்கி) தன் சீடனைக் காப்பாற்றி னான் சிவன்; மறுபடியும் அந்தப் பரிகள், நரிகளாகி ஓலமிட்டதால், மன்னன் மாணிக்கவாசகனைத் தண்டித்தான் என்கிற ஆன்மீகம் மெச்சத் தகுந் ததுதானா? மன்னன் கட் டளையை மீறி குதிரை வாங்காமல் கோவில் கட்டியது, கடமை தவறி யது ஆகாதா? கடமை தவறியவனை சிவனாகிய கடவுள் காப்பாற்றியது எந்த வகையில் நல் லொழுக்கம்?

தன்மீது பக்தி கொண் டால் எந்தக் கயமையை யும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுபவர்தான் கடவுளா?

இதனால் நாட்டில் ஒழுக்கம் வளருமா?

Read more: http://viduthalai.in/e-paper/83265.html#ixzz36Md5gIZz

தமிழ் ஓவியா said...


கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

கீழ் நீதிமன்றங்களில்
இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 2_ சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கடந்த 1994 ஆம் ஆண்டு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தி லும் தீர்ப்புகள் எழுதலாம் என அதில் கூறப்பட்டிருந் தது. பதிவாளர் ஜெனரலின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் சோலை சுப்ரமணியம் உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, கீழமை நீதிமன் றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுத உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் சீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுமீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலு மணி ஆகி யோர் முன் வந்தது.

இருதரப்பு வாதம் முடிந்த நிலையில் நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு இரு முக்கிய திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டது. பிரிவு 4 ஏவில் உயர்நீதிமன்றத்தின் எல் லைக்கு உட்பட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களிலும் சாட்சி விசாரணை தமிழில்தான் நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது

இது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என வழக்குரைஞர் ரங்கா என்பவர் உயர்நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதன் பின் தமிழை தாய்மொழி யாக கொண்டிராத நீதி பதிகள் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மூத்த நீதிபதிகள் குழு கூடி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என கூறியது. இது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இது ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது.

இதுபோன்ற சூழ்நிலை யில் சில குறிப்பிட்ட காலத்திற்கு நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்கலாம். இது நிரந்தரமாக இருக்கமுடி யாது. ஆனால் ஆங்கிலத் திலும் தீர்ப்பளிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற பதி வாளரின் உத்தரவு நிரந்தர மான ஒன்றாக உள்ளது. எனவே இதுகுறித்த பதி வாளரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. தமிழ் மொழி தெரியாதவர்களை பொறுத்தமட்டில், தமிழ் நாடு சார்நிலை பணியாளர் நியமன விதிப்படி குறிப் பிட்ட காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து இனிமேல் கீழ் நீதிமன்றங்களில் தமி ழில் மட்டுமே தீர்ப்பு வழங் கப்படும் நிலை உருவாகி யுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/83266.html#ixzz36MdIKITs

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்



உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும்.
_ (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/83287.html#ixzz36MdWR311

தமிழ் ஓவியா said...


சூரத்தில் தமிழர்கள் தாக்கப்படும் கொடுமை!


குஜராத் மாநிலம் சூரத்தில் நெல்லை, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் பத்து ஆண்டுகளுக்குமுன் பிழைக்கப் போனார்கள். அங்கு நடைப் பாதைகளில் தள்ளுவண்டி இட்லிக் கடை களும், தேநீர்க் கடைகளும் வைத்துப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள பிரபல தாதா பூபேந்திர பாய் என்பவன் (பி.ஜே.பி.க்காரர்) நாள்தோறும் வந்து நடைப்பாதைகளில் கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூல் செய்வது வழக்கம். அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்தே தீரவேண்டும்; இல்லா விட்டால், அவன் வசம் உள்ள அடியாட்கள் வன்முறைகளில் இறங்கி விடுவார்கள். அதற்குப் பயந்து கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். (இதுதான் குஜராத் மாடல் போலும்!).

ஒரு நாள் நடைப்பாதைக் கடை வைத்துள்ளவர் களிடையே சிறு சச்சரவு. அப்பொழுது அங்கு வந்த அந்தப் பூபந்திரபாய் அதில் தலையிட்டான்.

எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ ஒன்றும் தலையிடவேண்டாம் என்று சொன்னதற்காக அந்தத் தமிழர்களை தனது ஆட்களை ஏவி கடுமையாகத் தாக்கி இருக்கிறான். தள்ளுவண்டிகளையும் தள்ளிக் கொண்டு போயிருக் கிறான்.

தங்கள் பொருள்களைக் கேட்கச் சென்ற தமிழர்களை மீண்டும் தாக்கி இருக்கின்றனர். இந்த நிகழ்வு நடந்த மறுநாள் அந்த பூபேந்திரபாய் கொல்லப்பட்டான். சூரத் நகர மேயர் அந்த ரவுடிக்குச் சொந்தக்காரர்.

இந்த நிலையில் தமிழர்கள்தான், பூபேந்திரபாய் என்ற அந்தப் பி.ஜே.பி.க்காரரைக் கொன்றதாகக் கிளப்பி விட்டார்கள்; விளைவு எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தார்களோ, அவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். உயிருக்குப் பயந்து பொருள்களைக்கூட விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்.

இந்த நிலையில், குருசாமி, ஆறுமுகச்செல்வன், ராஜா ஆகிய மூன்று தமிழர்கள் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளனர் (23.6.2014).

சூரத்தில் வாழும் தமிழர்களின் நலன் கருதி வழக்குரைஞர்களின் அறிவுரைப்படி சரணடைந் ததாக இம்மூவரும் தெரிவித்துள்ளனர். சூரத் பகுதியில் வாழும் தமிழர்கள் இன்னும் அச்சத்தின் பிடியிலிருந்து விலக முடியாத சூழல்!

வடமாநிலத்துக்காரர்கள், தமிழ்நாட்டில் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை மற்றும் அதனைச் சுற்றிலும் வடநாட்டுக்காரர்கள் ஏராளம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். உணவு விடுதி களில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறார்கள்!

வங்கிக் கொள்ளை, பாலியல் வன்முறை உள்பட பல்வேறு குற்றங்களில் அவர்களில் சிலர் ஈடு பட்டார்கள் என்பதற்காக வடநாட்டுக்காரர்களைத் தமிழ்நாட்டுக்காரர்கள் சென்று தாக்குவதில்லை. வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபட்டதில்லை.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பெருந்தொழில்களில் மார்வாடிகள், குஜராத்திகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் குடி யிருக்கும் பல அடுக்கு மாடிகளில் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதும் கிடையாது.

எழும்பூர் போன்ற பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்வதில் அவர்கள் எண்ணிக்கைதான் முக்கியமானதாக இருக்கிறது. என்றாலும், எந்தப் பிரச்சினையும் இன்றி, அமைதி யான சூழல்தான் இங்கு நிலவி வருகிறது.

அதேநேரத்தில், ஒரு பேட்டை ரவுடி கொல்லப் பட்டான் என்பதற்காக, தமிழர்கள் அடித்து நொறுக் கப்படுகிறார்கள் - விரட்டப்படுகிறார்கள் என்றால், அதன் விளைவு வேறு வகையாக திரும்பிவிடாதா?

அந்த ரவுடி பி.ஜே.பி.யைச் சார்ந்தவன் என்பதற்காக அரசும், காவல்துறையும் அதீதமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. இந்த நிலை தொடரக்கூடாது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனையை அனுபவிக்கட்டும். அதில் ஒன்றும் அட்டியில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் களையே அடித்து விரட்டுவது என்றால், அதைக் கேட்டு வாளாயிருந்து விடவும் முடியாது.

தமிழ்நாடு அரசும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, குஜராத் அரசுடன் தொடர்புகொண்டு, குஜராத்தில், குறிப்பாக சூரத்தில் வாழும் தமிழர் களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மற்ற பகுதிகளில் தாக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும். இந்த நிலை தொடரக்கூடாது. தேசியம்பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/83289.html#ixzz36MdeNjKW

தமிழ் ஓவியா said...


அட, காட்டு விலங்காண்டிகளே! காளி கோவிலுக்குள் இளம் பெண் பலி!


திந்தோரி (மபி) ஜூலை 2_ மத்தியபிரதேசம் திந்தோரி மாவட்டம் குர்னா கிராமத் தில் உள்ள காளி கோவில் பூசாரி இளம்பெண்ணைக் கொலை செய்து காளி கோவில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளைய டித்து தப்பி ஓட்டம் மத் தியப்பிரதேசம் திந்தோரி மாவட்டத்தில் உள்ளது குர்னா கிராமம்.

இந்த கிரா மத்தில் மிகவும் பழமை வாய்ந்த காளி(ப்ஹகுல முகி) கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் இருந்து தவமிருந்து கடவுள் அருள் பெற்று வந்ததாகக் கூறி ஒரு சாமியார் ஒருவர் வருகை புரிந்தார். தனது பெயரை சத்யானந்தா என் கூறிக்கொண்டு சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் பூசை செய்வார்.

பிறகு இதே கோவிலுக்கு வந்து தங்கிவிடுவார். ஊர்க் காரர்களும் சாமியாருக்கு சகலவசதிகளையும் செய்து அங்கேயே தங்குவதற்கு உறைவிடமும் கட்டித்தந் தனர். தோசம் கழிப்பது, செய் வினை எடுப்பது, மந்திரம் செய்வது என பல்வேறு வித தந்திரவித்தைகளால் மக்களை ஏமாற்றி தன் வசப்படித்தினார்.

பழமை வாய்ந்த கோவிலாகையால் பலர் கோவிலுக்கு காணிக் கையாக தங்க நகைகளை வழங்கினர். இந்த நிலை யில் கோவிலுக்கு குட முழுக்கு செய்யவேண்டும் எனக்கூறி மக்களிடம் பண மாக சேகரிக்கத்துவங் கினார். தான் தனிமையில் கோவில் பணிசெய்ய சிர மப்படுவதாகவும் தனக்குத் துணையாக ஒரு பெண் சீடர் ஒருவர் தேவை என்று கூறினார்.

இதனை அடுத்து அந்த கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினப் பெண்ணான மஞ்சு சியாம் வயது (24) என்பவரை அந்த சாமியாருக்கு சீஷ்யாக பணிபுரிய ஊரார் வற்புறுத் தினர். மஞ்சு சிங்கின் குடும்பம் மிகவும் வறுமையில் இருந் ததால் அந்தப்பெண்ணின் பெற்றோரும் இதற்கு ஒப் புக்கொண்டனர். கடந்த ஜனவரிமாதம் மஞ்சு சிங் சாமியாரிடம் தீட்சிதை பெற்று சாமியாரினியாகி விட்டார். இந்த நிலையில் மஞ்சு சிங்கிற்காக சேர்த்து வைத்த நகையையும் அவ ரிடமே அவரது பெற்றோர் சமீபத்தில் கொடுத்துவிட் டனர்.

சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்குக்கு செய்வதற்காக முன்பணம் தரவேண்டும் பூசைச் சாமான்கள் எல்லாம் வாங்கவேண்டும் என்று கூறி மக்கள் கொடுத்த பணம் அத்தனையும் வங் கியில் இருந்து சத்யானந் தன் எடுத்துக்கொண்டார். கடந்த சனிக்கிழமை தனது மகளைப்பார்க்க கோவிலுக்கு சென்ற மஞ்சுவின் தந்தை கோவில் வெளிவரை ரத்தம் வழிந் திருப்பதை கண்டு திடுக் கிட்டார்.

இதனை அடுத்து ஊராரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்ற போது அந்தப் பெண்ணின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு காளிதேவியின் காலடியில் கிடந்தது காளிதேவி சிலை யின் முன்பு உடல் கயிரால் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இளம்பெண் கொலை செய்யப்பட்ட தக வல் கிடைத்ததும் திந்தோரி மாவட்ட ஆணையர் அஸ்ரய் சவுபே நேரில் சென்று சம்பவத்தை பார் வையிட்டார். பிறகு இந்தக் கொலை குறித்து பத்திரிகை யாளர்களிடம் பேசும் போது பெண் கட்டி வைத்து கொல்லப்பட்டு உள்ளார்.

உடலிலும் பல பாகங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது, போஸ்ட்மார்டம் ரிப் போர்ட் வந்த பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கும். கொலை வெள்ளி இரவு நடந்து இருக்கலாம் என்று தெரி கிறது, காரணம் வெள்ளிக் கிழமை பலர் கோவிலுக்கு வந்து சென்றிருக்கின்றனர். மேலும் கோவிலில் உள்ள நகை பணம் எது வும் காணவில்லை, அதே போல் சமீபத்தில் தான் பெண்ணின் தந்தையும் பெண்ணிற்கான நகை களை கொலைகாரனிடம் ஒப்படைத்து உள்ளார்.

கொலை நோக்கம் நகைகள் மற்றும் பணத்தைக் கொள் ளையடிப்பதற்காக இருக் கலாம். சாமியார் குறித்த விவரங்களை நாங்கள் சேகரித்துகொண்டு இருக் கிறோம், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயு தம் இங்கு தான் எங்காவது புதைத்து வைத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. விரைவில் கொலைகா ரனை கண்டுபிடித்து கைது செய்வோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/83305.html#ixzz36MetWQoF