Search This Blog

2.7.14

புரோகிதத் தன்மையை எதிர்க்க மாட்டேன்-ஏன்?- பெரியார் விளக்கம்

குற்றாலத்தில் சு.ம. திருமணம்

எனது மதிப்புக்கு உரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும் தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது.

இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும் இன்றைய திருமணத்தில் நான் கலந்திருந்ததை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக்கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.

எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத் திருமணத்துக்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இது தான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவு தான் வேலை என்றும் இருந்தால் நான் அந்த புரோகித பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவுமாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கின்றேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள் கூட இல்லாமல் திருமணங்கள் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன. 

ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக் கட்டிக் கொள்ள முடியாது, தொந்தரவு பண்ண முடியாது. ஆண் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு.

நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ, பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகிதக்கூலி, தக்ஷணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்றுகூட நாம் இங்குக்கூடி இந்தக் காரியங் களாவது செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால் தான் கல்யாணமாகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வரவர இவைகள் கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தங்கள் வேண்டும்.

மற்றும் ஆச்சாரியார் அவர்கள் நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன்.

இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டு விட்டது.

இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டு விட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.

இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். அதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகுதியும் கடமைப்பட்டவனேயாவேன்.

நிற்க, ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆக்ஷேபணையில்லை.

ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும், கடவுள்தான் செய்ய வேண்டும் என்றும் சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மண மக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசைகொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாவோ, தக்ஷணைக்கு ஆக செய்யும் ஆசியாகவோ ஆகிவிடுமா?

உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து "நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோசித்துப்பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசிபெற்று விட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசிபெறவேண்டுமென்பது.

மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக்கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். கடவுள் கிருபையில் வாழவேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள். அதனால் என்ன ஆகிவிடும்? 10, 12 குழந்தைகள் பெற்று அவைகள் கை முய் என்று பசியால் வாடி அழுதால் ஆசீர்வாதக்காரன் பக்கத்து வீட்டில் இருந்தால் என்ன சொல்லுவான். தன் ஆசீர்வாதத்தால் ஏற்பட்டதென்றோ, தனது பிரார்த்தனையில் கடவுள் கொடுத்தார் என்றோ எண்ணி உதவி செய்வானா? "இதென்னடா எழவு பன்றி குட்டி போட்ட மாதிரி 10, 12 உருப்படிகள் பெற்று பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு நமக்கு வீண் தொந்திரவு கொடுக்கிறார். தூக்கமில்லை" என்று வெறுப்புடன் இழித்துரைப்பான்.

ஆகையால் யாரும் ஆசீர்வாதம் செய்யலாம் என்பதும், கடவுள் மீது பழிபோடலாம் என்பதும் நியாயமாகிவிடாது. மணமக்களுக்கு ஆச்சாரியார் அவர்களது ஆசீர்வாதத்தை உண்மையாகவே பெருமையாய் கருதுகிறேன். ஆசீர்வாதம் என்றாலும், வாழ்த்து என்றாலும், ஆசி என்றாலும், ஆசைப் படுகிறேன் என்றாலும் கருத்து ஒன்றுதான். தனது ஆசையையும் நல்ல எண்ணத்தையும் தெரிவிப்பதேயாகும்.

தோழர் சிதம்பரநாத முதலியார் அவர்களும் இத்திருமணத்தை பாராட்டியதும் இங்கு விஜயம் செய்ததும் பாராட்டற்குரியதேயாகும்.

கடசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக்கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும், அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர் களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியார்களுக்கும் நன்றிகூறி அமருகிறேன்.

-------------------------------- 31.05.1936 ஆம் நாள் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் பங்களாவில் நடைபெற்ற சென்னை என்.டி. ஷண்முகம் (பட்டணம்பொடி) கம்பெனி நிறுவனர் என்.தங்கவேலு மதுரை அய்யம்பாளையம் வணிகர் கே.எஸ். ராமசாமி அவர்கள் குமாரத்தி பூரணத்தம்மாள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து தந்தைபெரியார்  அவர்கள் ஆற்றிய உரை."குடி அரசு" சொற்பொழிவு 07.06.1936

22 comments:

தமிழ் ஓவியா said...


யாத்ரீக நிவாஸ்


தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தனது சட்டப் பேரவைத் தொகுதியான சிறீரங்கத்தில் பக்தர்கள் வந்து தங்குவதற்காக, தங்கும் விடுதியைத் திறந்து வைத்துள்ளார். அப்படி அவரால் திறந்து வைக்கப்பட்ட கட்டடத் துக்கு அவர் சூட்டியுள்ள பெயர் என்ன தெரியுமா?

யாத்ரீக நிவாஸ் என்று பெயர் சூட்டியுள் ளார். தமிழைத் தாய் மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் ஒரு முதல் அமைச்சருக்குத் தமிழில் பெயர் கிடைக்கவில்லை.

தேடித் தேடி ஆய்வு செய்து இப்படி ஒரு பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளார். தமிழ் மண்ணில் தமிழில் மறு மலர்ச்சியை உண்டாக்கி யதில் திராவிடர் இயக்கத் துக்கு மிகப் பெரிய இடம் உண்டு.

நமஸ்காரம் - வணக் கம் ஆனது தொடங்கி, வந்தனோப சாரம் நன்றி யாக மலர்ந்தது வரை எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

ஆனால், அண்ணா பெயரிலும் திராவிட என்ற இனப் பண்பாட் டின் அடையாளப் பெயரிலும் அண்ணா திமுக என்ற கட்சியை வழி நடத்தும் ஒரு முதல் வரின் சிந்தனையோ எதிர்த் திசையில் அல் லவா சுழன்றடிக்கிறது!

இப்பொழுது மட்டு மல்ல, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினால் கூட ஜெயசீலன், ஜெயக் குமார், ஜெயராமன் என்று தான் முதல் அமைச்சர் வாயிலிருந்து வெளி வரும்.

உயிரியல் பூங்காவுக் குச் சென்று அங்குள்ள புலிகளுக்கோ, யானை களுக்கோ பெயர் சூட்டி னாலும் சமஸ்கிருதப் பெயர்கள்தான் சரமாரி யாக உதிரும்.

கடந்த ஆண்டு மார்ச்சு 15இல் புலிக் குட்டிகளுக்கு முதல் அமைச்சர் சூட்டிய பெயர்கள் அர்ஜுனா, ஆத்ரேயா, அனு, நம்ரதா, உத்ரா, ஆர்த்தி; 2014 மே 11இல் புலிக் குட்டிகளுக்கு முதல் அமைச்சர் எப்படிப் பெயர் சூட்டினார்?

கர்னாபீமா, தாரா, மீரா, வித்யா... யானை களுக்கும் கிரி, உரிகம் என்றுதான் பெயர் சூட்டு வார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்யப்பட்டதை மாற்றி, பிரபவ, யுவ என்னும் சமஸ்கிருதப் பெயர்களை மட்டும் கொண்ட - புராண ஆபாசக் கதைகளை உள்ளடக்கிய சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றி யமைத்தவராயிற்றே நம் முதல் அமைச்சர் - அவரிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83245.html#ixzz36GXhJH5k

தமிழ் ஓவியா said...


வெளியானது இந்துத்துவா முகம்! ஆண் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டி விட வேண்டும்!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஆரியத்தனம்

இந்தூர் ஜூலை 1-_ ஆணின் தேவையை நிறை வேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும் என்று பேசி தன் ஆரிய -_ இந்துத்துவா கொள் கையை வெளிப்படுத்தியுள் ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத். இந்தூரில் நடந்த ஆர் எஸ் எஸ் பொதுக் கூட்டத் தில் பேசிய மோகன் பகவத்: இன்று பெண்கள் அதிகம் கல்விகற்க ஆரம் பித்து விட்டனர்.

திரு மணத்தின் போது கணவன் மனைவி இருவரின் கல்வி யும் சரிசமமாக இருந்து விடுகிறது, சில வேலை களில் கணவனை விட மனைவி அதிகம் படித்த வளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்கு பிறகு படித்து பட்டம் பெற்றுவிடுகிறாள். சிலர் கணவனை விட உயர் பதவிக்கு சென்று விடுகிறார்கள். வருமான மும் கணவனைவிட அதி கம் வரத்துவங்கிவிட்டது.

இந்த இடத்தில் கண வனின் மனநிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனை விக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றி விடுகிறது, இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிக மான விவாகரத்திற்கு கார ணமாக அமைந்துவிடு கிறது என மோகன் பகவத் கூறினார்.

ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிடவேண்டும் பெண்கல்வியையும் பெண்ணின் சுதந்திரத்தை யும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரையை கூறினார். அதா வது மனைவி, கணவ னுக்கு (அடிமைச்)சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ளவேண்டும்.

பெண் கள் இந்தக்கடமையில் இருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்ராக்ட்) மாத்திரமே என்று தன் னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட் டுமே தலையாய கடமை யாக கொள்ளவேண்டும்.

வீட்டைக்கவனிக்கவேண்டும், கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும், கணவனுக்கு இன்பம் தரவேண்டும், இது பெண் ணின் கடமை; இந்தக் கடமையில் இருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

விலக்கி விடவேண்டும் கணவனின் தேவைகளை நிறைவேற் றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவ னுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும். என்று கூறினார்.

பாரதமும், இந்தியாவும்

பாரதத்தில் கற்பழிப்பு நடக்கவில்லை; இந்தியா வில்தான் கற்பழிப்பு நடந் துள்ளதாக முன்பு ஒரு முறை மாட்டிக் கொண்டு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். இதே ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்.

Read more: http://viduthalai.in/e-paper/83246.html#ixzz36GXuFPnh

தமிழ் ஓவியா said...

மனைவியை மறைத்த மோடி குற்றவாளியே! நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத், ஜூலை 1: வேட்புமனுவில் தனது திருமண விவரத்தை நரேந்திர மோடி மறைத் தது குற்றம்தான். ஆனா லும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட முடியாது என அகமதாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நிஷந்த் வர்மா, கடந்த ஏப்ரல் மாதம் அகமதா பாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2012 சட்டமன்ற தேர்தலில் மோடி தனது வேட்புமனுவில் திருமண விவரத்தை மறைத்ததாக வும், அவர் மீது காவல் துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம்.ஷேக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஷேக், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ)(3)இன்படி மோடி தனது வேட்புமனுவில் தகவலை மறைத்தது குற்றமே.

இக்குற்றத்துக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ)(3)இன் கீழ் வரும் வழக்குகள், சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்குள் தொடர வேண்டும். மனுதாரர், ஓராண்டு 4 மாதங்களுக்கு பிறகு மனு செய்துள்ளார். எனவே, பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது எனக் கூறினார்.

இது குறித்து வர்மா கூறுகையில், மோடி குற்றம் செய்திருக்கிறார் என நீதிமன்றமே கூறிவிட்டது. இதனால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/83247.html#ixzz36GYA5sCA

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பு - முல்லைப் பெரியாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, ஜூலை 1_ இந்தித் திணிப்புக் குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கூறியிருப்பதாவது:_

கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதே?

கலைஞர் :- 17-.6-.2014 அன்று தி எகானமிக் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை,- சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும், நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், இந்தி பேசாத மாநிலங் களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித் திருந்தது.

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர் களிடம் கூறும்போது, எந்த மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத் தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு! என்று தெரிவித்தார்.

இந்தச் செய்திக்குப் பிறகுதான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப் பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இன்று (30.6.2014) செய்தி வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. எம். துரைபாண்டியன் இது பற்றிக் கூறும்போது, மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மத்திய அரசும், பிரதமர் அவர்களும் இந்தப் பிரச்சினையில் மீண்டும் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மக்களிடம் எழுந்துள்ள கலக்கத்தைப் போக்க முன் வரவேண்டு மென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி :- முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதலமைச்சர் தெரிவித் திருக்கிறாரே?

கலைஞர் :- இதைத்தான் நான் 27-.6-.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந் தேன். கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை.

2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும், தமிழ்நாட் டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் நான் குறிப்பிட்டு, கேரள முதலமைச்சர் இவ்வாறு கேரள சட்டசபையில் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச் சருக்குப் பதில் சொல்லாமல், அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்ட என்னை எந்த அளவுக்கு அநாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து, பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்ற வார்த்தைகள் உள்ளன என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார்.

தமிழ் ஓவியா said...

ஆனால் நேற்றையதினம் (29.-6.-2014) கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, 4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது என்று பதில் கூறியதாக தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள் ளன.

எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்குத் தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்திரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை. கேரள முதல்வரின் இன்றைய பதிலுக் குப் பிறகாவது தமிழக முதலமைச்சர் அரைவேக்காடு அவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டி ருப்பார் என்று நம்புகிறேன்.

(முரசொலி, 1.7.2014

Read more: http://viduthalai.in/page-3/83220.html#ixzz36GZ0pXnB

தமிழ் ஓவியா said...


விலையில் சமரசம் உண்டு; தரத்தில் சமரசம் கிடையாது - பாராட்டுக்குரியது பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை

மதுரை, ஜூலை 1- மதுரையில் 29.6.2014 அன்று இரவு 7 மணிக்கு மதுரை கிரைம் பிராஞ்ச் சம்பளக் கணக்கு அலுவலகத்தின் எதிரில் விஜயலட்சுமி எடிசன் ராசா அவர்களின் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிட்., எடிசன் எண்டர்பிரைசஸ் என்ற புதிய பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் எடிசன் ராசா வரவேற்று உரையாற்றினார். தமது உரையில், இங்கே திறக்கப்படக் கூடிய பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்யும் நிறுவனமாக திகழும். இங்கே விலையில் சமரசம் உண்டு.

ஆனால், தரத்தில் சமரசம் கிடையாது. ஆகவே தரமான முறையில் எங்களிடம் பொருள்கள் கிடைக்கும். இது எனக்கு தந்தை பெரியார் வழியில் வந்த, வாழ்ந்த, தொழில்செய்த, எங்களது தந்தை பே.தேவசகாயம் காட்டிய வழியாகும். அந்த வகையில் நேர்மையாக நாங்கள் தொழில் செய்து வருகிறோம். அந்தப் பணி மேலும் தொடரும் எனக் கூறினார்.

தமிழர் தலைவருக்கு சிறப்பு

விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு எடிசன் ராசா குடும்பத்தினர் சுசீலா ராணி விஜயலட்சுமி, ஈரோட்டுப் பெரியார், தெய்வசன் பெரியார், செல்வப் பெரியார், தேவசன் பெரியார், நித்யா, சுசிநீலாமணி, டாக்டர் எஸ்.ராஜேஸ்வரி, சுசில்சன் பெரியார், நாகமணி, ஜீபிகா ராணி, அன்னமணி, ஏ.பாலாஜி, ஆதிகேசவ் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பித்தனர். அவர்களது குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் இயக்கத்திற்காக நன்கொடை வழங்கி சிறப்பித்தனர்.

பெட்ரோல் பங்க் திறப்பு

புதிய பெட்ரோல் பங்கினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திரையை நீக்கி அனைவரின் கரவொலிக்கிடையே திறந்து வைத்தார். முதல் நிகழ்வாக பிரச்சார வாகனத்திற்கு டீசல் நிரப்பி துவக்கி வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை தென் மாவட்ட அமைப்பு செயலாளர் வெ.செல்வம் தொகுத்து வழங்கினார். பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியில்பி.இராஜவேல் (கிளை மேலாளர், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, நாகமலை புதுக்கோடை), எஸ்.கவுசிக் (உதவி மேலாளர், பாரத் பெட்ரோலியம்), ஆசீர்வாதம் தேவசகாயம் உறவினர், நவநீதகிருஷ்ணன் (திமுக), ஜான் மோஜஸ் ஜனதாதளம், மோகனா வீரமணி, திருச்சி பெரியார் மாளிகை தங்காத்தாள், மாநில ப.க. தலைவர் வா.நேரு, பொ.நடராசன் (மாவட்ட நீதிபதி பணிநிறைவு, மாவட்டத் தலைவர் மா.பவுன்ராசா,

நெல்லை மண்டல தலைவர் மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் அழகர், அ.வேல்முருகன், பேரா.நம்.சீனிவாசன், தொப்பி முருகேசன், இராக்கு, மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, சி.பாண்டியன், திருப்பதி, பேக்கரி கண்ணன், கருப்பட்டி சிவா, வழக்கறிஞர்கள் இராசேந்திரன், கணேசன், நல்ல தம்பி, சுப்பையா, அன்புமதி, நாகராசு, மாரி, கனி, முருகானந் தம், சடகோபன், சந்திரன், பால்பண்ணை ஆறுமுகம், காளியப்பன், சிவா போட்டோ இராதா உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றார்கள்.


தமிழ் ஓவியா said...

கழக தலைவர் அவர்களுக்கு சால்வைக்கு பதிலாக கழக வளர்ச்சி நிதியாக தே.எடிசன்ராசா, விஜயலட்சுமி எடிசன்ராசா, ஈரோட்டுப் பெரியார், நித்யா, தெய்வசன் பெரியார், சுசிநிலாமணி, செல்வப் பெரியார், டாக்டர் ராஜேஸ்வரி, தேவசன் பெரியார், சுசில்சன் பெரியார், பாலாஜி, நாகமணி, ஆதிகேசவ், ஜீபிகாராணி, அன்னமணி நிறைவாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் உரையாற்றும்போது கூறியதாவது: நம்மை மகிழ்வுடன் வரவேற்க கூடிய ஏராளமான பெரியார்கள் நம்மிடம் இருக்கிறாகள் தெய்வசன் பெரியார், ஈரோட்டு பெரியா, செல்வப் பெரியார், தேவசன் பெரியார், சுசில்சன் பெரியார் என்று ஏராளமாக இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, மூன்றாவது தலைமுறையாக இந்த இயக்க கொள்கையை பின்பற்றியதால் யாரும் தாழவில்லை. நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

உறுதியாக இருக்கிறோம் அதில் எங்களுக்கு தடுமாற்றம் இல்லை, நாணயமாக தொழில் நடத்து என்று சொன்ன பெரியார் வழி நிற்கிறோம் என்று மூன்றாவது தலைமுறையிலே இருக்கக்கூடிய பிள்ளைகள் சிறப்பாக இதை அருமையாக செய்து கொண்டு இருக்கக்கூடிய ஈரோட்டு பெரியாராக இருந்தாலும், செல்வப் பெரியாராக இருந்தாலும் அவர்களுடைய வாழ்விணையரானாலும் எல்லோருக்கும் அன்பான பாராட்டுகள், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் இந்த குடும்பம் ஒரு கொள்கை பல்கலைக்கழகம்.

சுயமரியாதை கொள்கையிலே இருந்து சற்றும் நழுவாமல், வழுவாமல், கடைபிடிக்க கூடியவர்கள். இன்றைக்கு அவர்கள் தொடங்குகிற தொழிலுக்கு என்னை அழைத்து திறப்பு விழா செய்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையிலே நான் துவங்கி வைக்கக்கூடி பெட்ரோல் பங்க் என்பது இது 2-ஆவது நிகழ்ச்சியாகும்.

இரண்டாவது பங்க்

வல்லத்திற்கு பக்கத்திலுள்ள பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடகிருட்டிணனுடைய பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்துள்ளேன். அவர் கழகத்துக்கு அப்பாற்பட்டவராவார். அவர் பிள்ளைகள் நம் பல்கலைகழகத்திலே படிக்க கூடியவர்கள்.

எடிசன், விசயலட்சுமி அவரது குடும்பத்தினர் எங்களை அழைத்திருக்கிறார்கள். இது ஒரு குடும்ப விழா பெரியார் கொள்கைக்கு இது வெற்றி விழா என்பதற்கு இந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழா சான்றாகும்.

உறுதியான கொள்கை வீரர்

தமிழ் ஓவியா said...

அய்யா தேவசகாயம் எவ்வளவு உறுதியான கொள்கை வீரர் என்பது இங்கு இருக்கக்கூடிய வயதானவர்கள், அவரோடு பழகியவர்களுக்கும் நன்றாக தெரியும். அவரது 4ஆவது தமிழை கேட்டவரும் பலபேர் இங்கு இருக்கிறார்கள். தேவசகாயம் என்ன சொல்வார்கள் என்றால் நான் பெரியார் கொள்கையை பிற்பற்றியதாலே நாணயமாக தொழில் செய்ய வேண்டும் என முடிவுக்கு வந்தேன்.

வெளிநாட்டு உரை

சிங்கப்பூர், மலேசியா, அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு தேவசகாயம் அவர்களை நான் அழைத்து போனேன், அப்போது அவரது வளர்ச்சியை பார்த்து பலபேர் கேள்வி கேட்டனர். அங்கே அவர் என்ன பேசினார் என்றால் நான் சாதாரண நிலையில் இருந்து உயர்ந்தவன் தன்னுடைய நிலையை சொல்வதில் அவர் கூச்சப்பட்டதே கிடையாது.

உழைப்பால் உயர்ந்த தேவசகாயம் அவர்கள் நான் தட்டை தூக்கி விற்பனை செய்து அதன் மூலமாக பெரிய அளவிற்கு வந்தேன். திண்ணையிலே படுத்து கிடப்பேன் என்பார். அதுதான் உழைப்பினுடைய வளர்ச்சி. இன்றைக்கு நான் பல பேருக்கு உதவி செய்கிறேன். பள்ளிக் கூடங்கள், எத்தனை கல்வி நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு உதவிகள் இப்படியெல்லாம் அவர் நிறைய செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டு கேட்டார்கள்.

அப்போது அவர் ஒரு கருத்தை சொன்னார். பெரியார் அவர்களின் கொள்கையை பின்பற்றுவதால் உழைப்பு மட்டுமல்ல நாணயமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அய்யா அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எனக்கும் என் தொழிலுக்கும், என் குடும்பத்திற்கும் என்பிள்ளைகளுக்கும் அதுதான் சொல்லி கொடுத்திருக்கேன் என்றார்.

உதாரணமாக தமிழக எண்ணெய் பலகாரங்கள் என்றுதான் போட்டேன் ஆனால் நம்நாட்டில் பல காரத்திற்கு விளம்பரம் போடும்போது கூட நெய்யினால் என்பதை பெரிதாக போட்டு செய்யப்பட்ட பலகாரம், அல்ல என்பதில் அல்ல என்ற வார்த்தையை சிறியதாக போட்டு செய்யப்பட்ட பலகாரம் தான் என பெயர்பலகையில் எழுதினார்.

தமிழ் ஓவியா said...


இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அது பெரியார் கொடுத்த நாணயம் நேர்மை என்னை வளர்த்திருக்கிறது. வாழ்வித்து கொண்டிருக்கிறது என வெளிப்படையாக சொல்வார், கூச்சப்படாமல், வெட்கப்படாமல் உண்மையை சொல்வார். அப்படிப்பட்ட வழியிலே எடிசன் அவர்கள் கல்லூரி படிப்பு அது, இது என படித்து தவறான வழிக்கு போகாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்தார். கல்லூரி படிப்பு படித்து விட்டு நிறைய பேர் அந்த வேலை கிடைக்குமா.

இந்த வேலை கிடைக்குமா என போய் கொண்டிருக்கிறார்கள். எடிசன், மற்றும் மகள், மருமகன் பிள்ளைகள் இந்த தொழிலை பார்க்க வேண்டுமென தேவசகாயம் விரும்பினார். இது சாதாரணமான, கேவலமானதல்ல. மிகப் பெருமையாக தனது மகனுக்கு எடிசன் என பெயர் வைத்தார்.

எடிசனின் திறமை

அது மிகவும் பொருத்தமான பெயர். எடிசன் ராசா என்பது. எனது வீட்டில் ஸ்கூட்டர் நின்றது. எடிசனுக்கு ஓட்ட தெரியாது. சின்னபிள்ளை, ஆனால் எடிசன் எடுத்து ஓட்டிச்சு என பெருமையாக எடிசன் திறமையை பார்த்து வியந்தவர்.

பழையவர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் வித்தியாசம் உண்டு. நம்மை விட நம்முடைய பிள்ளைகள் 15 ஆண்டுகள் முன்னோக்கிய அறிவாளிகள். பேரக் குழந்தைகள் 30 ஆண்டு முன்னோக்கிய அறிவாளிகள்.

எடிசன் அவர்கள் என்னிடம் சில நேரத்தில் வந்து சொல்வார். அய்யா எங்கள் கடைகள் எல்லாம் சில மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. எங்கள் அப்பா இருந்தால் அதெல்லாம் எதுக்கு என கேட்டுக் கொண்டு இருப்பார். நீங்கள் ஒரு மாதம் வெளியிலே அழைத்து கொண்டு போங்கள் அதுக்குள்ளே நான் வேலையெல்லாம் முடிச்சுடறேன் என்பார்.

அது போல பல நேரங்களில் இருக்கும் அவர் வந்து பார்த்து மாற்றத்தோட இருக்கு என மகிழ்வார். அவருக்கு பிறகும் இந்த துறை வளர்ந்து இருக்கிறது. இன்றைக்கு பாரத் பெட்ரோலியம் அமைப்பின் சார்பாக இந்த பெட்ரோல் பங்க், நல்ல மய்யமான பகுதியிலே சிறப்பானதாக அமைந்துள்ளது. எடிசன் இங்கே ஒரு வார்த்தையை சொன்னார். நீங்களும் பார்த்தீர்கள்.

நானும் ரசித்தேன் கொள்கையிலே சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நட்பில் வேண்டுமானால் சமரசமாக இருப்போம் அது போல தரத்தில் சமரசம் செய்ய மாட்டோம் விலையில் வேண்டுமானால் சமரசம் உண்டு என்றார்.

தமிழ் ஓவியா said...

இதுதான் நல்ல தொழிலுக்கு அடையாளம் வெற்றி பாதையில் அடி எடுத்து வைக்கிறார் என்பதற்கு அடையாளம் தரத்தோடு நடத்துவேன் என்றார் அது தான் சிறப்பானது.. தேடி வருவார்கள் . அதுதான் மிக முக்கியம் அளவு, நிர்ணயம் ரொம்ப தெளிவானது என்று சொல்லி அற்புதமான அளவிற்கு இங்கே அமைந்திருப்பதை வளர்க்க வேண்டும்.

பெட்ரோல் பங்கின் பயன்

இங்கே அரசாங்க அனுமதியுடன் மாநகராட்சி அனுமதியுடன் பல துறைகளின் அனுமதியோடு இதனை விரிவுபடுத்தி மேலை நாடுகளில் உள்ளது போல சிறிய அங்காடிகள் போல புதுமைகளை புகுத்த வேண்டும். நாங்கள் நடுரோட்டில் சாப்பிடக் கூடியவர்கள். பெரியார் அவர்காலத்திலிருந்தே எமர்ஜென்ஸி துவங்கிய காலத்தில் ஜூன் 25 அன்று திண்டிவனத்தில் கூட்டத்தை முடித்து கொண்டு சென்னை செல்லும் போது வழியில் ரோட்டில் நின்று சாப்பிட்டோம்.

அன்னை மணியம்மையார் பரிமாறினார். அதன் பிறகு அவரிடம் சாப்பிடுவதற்கு 1 வருடம் ஆகியது. நாங்களெல்லாம் எமர்ஜென்சியில் கைதாகி சிறைக்கு சென்றுவிட்டோம். அந்த அளவிற்கு நடுரோட்டில் சாப்பிடக் கூடியவர்கள். ஓட்டுநர்கள் நெடுஞ்சாலையில் இருக்ககூடிய நல்ல அகலமான பெட்ரோல் பங்க் ஓரத்தில் நிறுத்துவார்கள். வசதியாக.

அண்மையில் நீலகிரிக்கு போகும்போது காங்கேயம் பகுதியில் பெட்ரோல் பங்கில் போய் நிறுத்தினார்கள். அந்த உரிமையாளர் வந்தார் அன்பாக பார்த்துட்டு என்ன செய்ய வேண்டும் அய்யா என்றார். ஒன்றும் வேண்டாம் மிக்க நன்றி என கூறிவிட்டு நாங்கள் சாப்பாடு கொண்டு வந்துள்ளோம். நீங்களும் வாருங்கள் சாப்பிடலாம் என அழைத்தோம்.

ஆகவே பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடவும், அதே போல நிறுத்தி சாப்பிடவும் போய் இருக்கிறோம். இப்போதுதான் 2வது முறையாக திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறோம். எனவே முறையாக முதல் வியாபாரமே நாங்கள் செய்வோம் போதிய அளவிற்கு டீசலை நிரப்புவதற்கு வாய்ப்பு இருந்தால் அதை செய்வோம்.

நிச்சயம் முதல் வியாபாரமே நாங்கள் தொடங்குவோம் என மகிழ்ச்சியோடு சொல்லி கொள்கிறேன். மெர்க்கன்டைல் வங்கி தமிழர்களால் துவக்கப்பட்ட ஒரு வங்கி அந்த வங்கியில் இருந்து இராஜவேல் இங்கே வந்திருக்கிறார். தூத்துக்குடி கணேசன் போன்றவர்கள் அதனை வளர்த்தார்கள். நாங்கள் அதனை பாராட்டுகிறோம். அந்த வங்கியை நாம் ஆதரிக்க வேண்டும்.

கடன் தவிர்க்கவும்

பலபேர் பெட்ரோல் பங்க் துவங்க தயங்குவதற்கு என்ன காரணம் என கேட்டேன். அது கடன் கொடுக்கின்ற வியாபாரமாக இருக்கிறது என்றார்கள். ஆகவே கடன் கொடுப்பதை தவிர்த்தவிட்டு ரொக்கத்தை கொடுத்து வாங்க வேண்டும் என்கிற அளவிற்கு அதனை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நாணயமாக தொழில் செய்யுங்கள் சிறப்பாக செய்யுங்கள், எடிசன் எண்டர் பிரைசஸ் பங்குக்கு போனால் அளவு, தரம், சரியாக இருக்கும் என்ற பெயர் மதுரையிலே பெறும் அளவிற்கு இருக்க வேண்டும். இதற்கு ஒரு பெண் விசயலட்சுமி உரிமையாளர்.

பெண்ணுக்கு உரிமை கிடைத்திருப்பது பெரிய வெற்றி எடிசனை நாங்கள் அடிக்கடி வெளியூருக்கு அழைத்து செல்வதால் அந்த அம்மையார் தொழில் செய்ய பழகி கொள்ள வேண்டும். எடிசனை தூக்கி அடிக்கும் அளவிற்கு பிள்ளைகளுக்கு ஆற்றல் உண்டு எனக்கு அதில் நம்பிக்கை உண்டு என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/83237.html#ixzz36Ga51Zx5

தமிழ் ஓவியா said...


அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/headline/83140-at-a-national-level-in-the-private-sector-should-be-implemented-fully-castes-reservation-league-struggle.html#ixzz36GcBHKWa

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைக் கொண்டு கோவில் கட் டினான் அமைச்சனான மாணிக்கவாசகன். மன் னன் சிறைப்படுத்திய தால், தன் பக்தன் மாணிக்க வாசகனின் அல்லலைப் போக்க நரிகளைப் பரி களாக்கி (குதிரைகளாக்கி) தன் சீடனைக் காப்பாற்றி னான் சிவன்; மறுபடியும் அந்தப் பரிகள், நரிகளாகி ஓலமிட்டதால், மன்னன் மாணிக்கவாசகனைத் தண்டித்தான் என்கிற ஆன்மீகம் மெச்சத் தகுந் ததுதானா? மன்னன் கட் டளையை மீறி குதிரை வாங்காமல் கோவில் கட்டியது, கடமை தவறி யது ஆகாதா? கடமை தவறியவனை சிவனாகிய கடவுள் காப்பாற்றியது எந்த வகையில் நல் லொழுக்கம்?

தன்மீது பக்தி கொண் டால் எந்தக் கயமையை யும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுபவர்தான் கடவுளா?

இதனால் நாட்டில் ஒழுக்கம் வளருமா?

Read more: http://viduthalai.in/e-paper/83265.html#ixzz36Md5gIZz

தமிழ் ஓவியா said...


கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

கீழ் நீதிமன்றங்களில்
இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு!

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 2_ சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கடந்த 1994 ஆம் ஆண்டு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். தமிழகத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தி லும் தீர்ப்புகள் எழுதலாம் என அதில் கூறப்பட்டிருந் தது. பதிவாளர் ஜெனரலின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் சோலை சுப்ரமணியம் உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, கீழமை நீதிமன் றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுத உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் சீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுமீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலு மணி ஆகி யோர் முன் வந்தது.

இருதரப்பு வாதம் முடிந்த நிலையில் நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு இரு முக்கிய திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டது. பிரிவு 4 ஏவில் உயர்நீதிமன்றத்தின் எல் லைக்கு உட்பட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களிலும் சாட்சி விசாரணை தமிழில்தான் நடத்தப்பட வேண்டும். தீர்ப்புகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது

இது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என வழக்குரைஞர் ரங்கா என்பவர் உயர்நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதன் பின் தமிழை தாய்மொழி யாக கொண்டிராத நீதி பதிகள் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் மூத்த நீதிபதிகள் குழு கூடி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என கூறியது. இது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இது ஆட்சி மொழி சட்டத் திருத்தத்திற்கு எதிரானது.

இதுபோன்ற சூழ்நிலை யில் சில குறிப்பிட்ட காலத்திற்கு நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்கலாம். இது நிரந்தரமாக இருக்கமுடி யாது. ஆனால் ஆங்கிலத் திலும் தீர்ப்பளிக்கலாம் என்ற உயர்நீதிமன்ற பதி வாளரின் உத்தரவு நிரந்தர மான ஒன்றாக உள்ளது. எனவே இதுகுறித்த பதி வாளரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. தமிழ் மொழி தெரியாதவர்களை பொறுத்தமட்டில், தமிழ் நாடு சார்நிலை பணியாளர் நியமன விதிப்படி குறிப் பிட்ட காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து இனிமேல் கீழ் நீதிமன்றங்களில் தமி ழில் மட்டுமே தீர்ப்பு வழங் கப்படும் நிலை உருவாகி யுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/83266.html#ixzz36MdIKITs

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற ஆயுதம்



உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும்.
_ (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page-2/83287.html#ixzz36MdWR311

தமிழ் ஓவியா said...


சூரத்தில் தமிழர்கள் தாக்கப்படும் கொடுமை!


குஜராத் மாநிலம் சூரத்தில் நெல்லை, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் பத்து ஆண்டுகளுக்குமுன் பிழைக்கப் போனார்கள். அங்கு நடைப் பாதைகளில் தள்ளுவண்டி இட்லிக் கடை களும், தேநீர்க் கடைகளும் வைத்துப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள பிரபல தாதா பூபேந்திர பாய் என்பவன் (பி.ஜே.பி.க்காரர்) நாள்தோறும் வந்து நடைப்பாதைகளில் கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூல் செய்வது வழக்கம். அவன் கேட்கும் பணத்தைக் கொடுத்தே தீரவேண்டும்; இல்லா விட்டால், அவன் வசம் உள்ள அடியாட்கள் வன்முறைகளில் இறங்கி விடுவார்கள். அதற்குப் பயந்து கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். (இதுதான் குஜராத் மாடல் போலும்!).

ஒரு நாள் நடைப்பாதைக் கடை வைத்துள்ளவர் களிடையே சிறு சச்சரவு. அப்பொழுது அங்கு வந்த அந்தப் பூபந்திரபாய் அதில் தலையிட்டான்.

எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ ஒன்றும் தலையிடவேண்டாம் என்று சொன்னதற்காக அந்தத் தமிழர்களை தனது ஆட்களை ஏவி கடுமையாகத் தாக்கி இருக்கிறான். தள்ளுவண்டிகளையும் தள்ளிக் கொண்டு போயிருக் கிறான்.

தங்கள் பொருள்களைக் கேட்கச் சென்ற தமிழர்களை மீண்டும் தாக்கி இருக்கின்றனர். இந்த நிகழ்வு நடந்த மறுநாள் அந்த பூபேந்திரபாய் கொல்லப்பட்டான். சூரத் நகர மேயர் அந்த ரவுடிக்குச் சொந்தக்காரர்.

இந்த நிலையில் தமிழர்கள்தான், பூபேந்திரபாய் என்ற அந்தப் பி.ஜே.பி.க்காரரைக் கொன்றதாகக் கிளப்பி விட்டார்கள்; விளைவு எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தார்களோ, அவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். உயிருக்குப் பயந்து பொருள்களைக்கூட விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்.

இந்த நிலையில், குருசாமி, ஆறுமுகச்செல்வன், ராஜா ஆகிய மூன்று தமிழர்கள் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளனர் (23.6.2014).

சூரத்தில் வாழும் தமிழர்களின் நலன் கருதி வழக்குரைஞர்களின் அறிவுரைப்படி சரணடைந் ததாக இம்மூவரும் தெரிவித்துள்ளனர். சூரத் பகுதியில் வாழும் தமிழர்கள் இன்னும் அச்சத்தின் பிடியிலிருந்து விலக முடியாத சூழல்!

வடமாநிலத்துக்காரர்கள், தமிழ்நாட்டில் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை மற்றும் அதனைச் சுற்றிலும் வடநாட்டுக்காரர்கள் ஏராளம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். உணவு விடுதி களில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறார்கள்!

வங்கிக் கொள்ளை, பாலியல் வன்முறை உள்பட பல்வேறு குற்றங்களில் அவர்களில் சிலர் ஈடு பட்டார்கள் என்பதற்காக வடநாட்டுக்காரர்களைத் தமிழ்நாட்டுக்காரர்கள் சென்று தாக்குவதில்லை. வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபட்டதில்லை.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பெருந்தொழில்களில் மார்வாடிகள், குஜராத்திகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் குடி யிருக்கும் பல அடுக்கு மாடிகளில் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதும் கிடையாது.

எழும்பூர் போன்ற பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்வதில் அவர்கள் எண்ணிக்கைதான் முக்கியமானதாக இருக்கிறது. என்றாலும், எந்தப் பிரச்சினையும் இன்றி, அமைதி யான சூழல்தான் இங்கு நிலவி வருகிறது.

அதேநேரத்தில், ஒரு பேட்டை ரவுடி கொல்லப் பட்டான் என்பதற்காக, தமிழர்கள் அடித்து நொறுக் கப்படுகிறார்கள் - விரட்டப்படுகிறார்கள் என்றால், அதன் விளைவு வேறு வகையாக திரும்பிவிடாதா?

அந்த ரவுடி பி.ஜே.பி.யைச் சார்ந்தவன் என்பதற்காக அரசும், காவல்துறையும் அதீதமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. இந்த நிலை தொடரக்கூடாது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனையை அனுபவிக்கட்டும். அதில் ஒன்றும் அட்டியில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் களையே அடித்து விரட்டுவது என்றால், அதைக் கேட்டு வாளாயிருந்து விடவும் முடியாது.

தமிழ்நாடு அரசும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, குஜராத் அரசுடன் தொடர்புகொண்டு, குஜராத்தில், குறிப்பாக சூரத்தில் வாழும் தமிழர் களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மற்ற பகுதிகளில் தாக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும். இந்த நிலை தொடரக்கூடாது. தேசியம்பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/83289.html#ixzz36MdeNjKW

தமிழ் ஓவியா said...


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் சா.கணேசன் அவர்களின் மலரும் நினைவுகள்


குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம் நான்கு நாட்கள் நடைபெற்றது முதல் நாள் நிகழ்ச்சியில் (26.6.2014) கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகி யோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சா.கணேசன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: இந்த அரிய நிகழ்ச்சியில் பேசுகின்ற வாய்ப்பை பெற்றமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே இந்த அரங்கத்தில் இளைஞர்களை, மாணவர்களைப் பார்க்கின்றேன். பெரியாரியல் அறிந்து, ஏற்று இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்ற முனைகின்ற உங்களுக்கு எனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரி வித்துக்கொள்கிறேன்.

மூடநம்பிக்கை ஒழிப்பும், பகுத் தறிவுப் பரப்பலும் அறிவியலை நோக்கி, தந்தை பெரியாரின் இலட்சி யத்தை முன்னெடுத்துச் செல்லுகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஏனெனில் 37 ஆண்டுகளாக இப் பயிற்சி முகாமினைத்தொடர்ந்து தொய்வில்லாமல் ஆண்டு தோறும் நடத்தி வரும் அரும் பெருமையை, கடமையை எண்ணி இலட்சக்கணக் கான தமிழர்கள் தமிழர் தலைவரைப் பாராட்டுவதை எண்ணிப் பார்க்கிறேன். பரவசம் அடைகிறேன். ஏனெனில் அரசியல் பதவியோ அதன் மூலமாக பொருளீட்டலும் உள்ள தமிழகக் களத்தில் எந்தப் பயனையும் எதிர்பார்க் காமல் நாள் தோறும் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தை மேடை தோறும் முழங்கிவருவதும் விடுதலை நாளேட்டின் மூலம் எழுதி பரப்பி வருவது தமிழர் தலைவரின் தன்னலங் கருதாத் தொண்டாகும்.
தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வையில் விடுதலை நாளேட்டை மக்களுக்குத் தேவையான நல்ல செய்திகளையும் குறிப்பாக வாழ்வியல் சிந்தனையும் அனைத்து மக்களும் ஏற்கின்ற வகையில், பொது நாளேடாக பல வண்ணங்களில் தமிழர்களின் கைகளில் தவழ்ந்து வருவதை பார்க்க வியப்பாக உள்ளது. பெருமகிழ்ச்சியாக உள்ளது. நானும் விடுதலை ஏட்டினைத் தொடர்ந்து படித்துவருபவர்களில் ஒருவனாவேன். மாணவர்களாகிய, இளைஞர்களாகிய உங்களைப் பார்க்கின்றபோது எனது இளமைக்கால நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

காலத்தின் அருமை கருதி ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.

1948 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசு கட்டாய இந்தியைப் புகுத் தியது. பள்ளிகளில் மாணவர்கள் இந்தி யைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணை.

அரசின் ஆணை தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழறிஞர் கள் ஒன்று கூடினர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த் தென்றல் திருவிக, நாவலர், சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இலக்குவனார் போன்றோர் ஒன்று கூடினர் இந்தியை எதிர்த்து போராட் டம் நடத்த முடிவு செய்தனர்.

தந்தை பெரியார் விடுதலை ஏட் டின் மூலம் கட்டாய இந்தியை திரும் பப்பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். பள்ளிகளின் முன்பு இந் தியை ஒழிக்கும் மறியல் நடத்தப்படும் என்றும் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தப்போராட்டத்திற்கு முதல் சர்வாதிகாரியாக செயல்படுவார் என்று அறிவித்துப்போராட்டத்தை தொடங் கினார்.

சென்னையில் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளி இந்து தியாலாஜிகல் பள்ளி, முத்தி யாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் முன்பு மறியல் தொடங்கியது.

தங்க சாலையிலுள்ள தொமதுவே பள்ளியில் படித்த நானும், த.கு.முரு கேசன், து.இராமலிங்கம், விசு கிருஷ்ண மூர்த்தி மற்றும் சில மாணவர்கள் முன்னின்று மறியல் போராட்டக்காரர் களை வரவேற்று மாலையிட்டு நாங்களும் மறியலில் பங்கு பெற்றோம்.

எல்லாப் பள்ளிகளிலும் மறியல் தொடர்ந்தது. தமிழகமே கொந் தளித்தது. சென்னை சிவஞானம் பூங் காவில் அண்ணா அவர்கள் உரை யாற்றி மறியலில் கலந்து கொள்ளும் தொண்டர்களை ஊக்கப்படுத்துவார். அவரது உரை தொண்டர்களை வீறு கொள்ளச்செய்தது. என்.வி.நடராசன் அவர்களும் உடன் இருப்பார்.

தந்தை பெரியாரின் பேச்சும், எழுத் தும் தமிழர்களைத் தட்டி எழுப்பியது. தமிழகமே இந்தி மொழிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத் தனர். மக்களும், அரசின் மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த் தனர்.

தந்தை பெரியாரின் தலைமையில் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் தமிழக அரசு பணிந்தது.

கட்டாய இந்தி திரும்பப்பெறப்பட் டது. தந்தை பெரியார் இந்தியை எதிர்த்து நடத்திய இரண்டாவது போரிலும் வெற்றி பெற்றார். மாணவர் களும் மக்களும் பெரியாரின் தலைமை யால் வெற்றி பெற்றதை உணர்ந்தனர். அவரைப் பாராட்டினர். அவர் வழி நடக்க மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள், திராவிடர் கழகத்தில் இணைந் தனர்.

மேலும் சம்பவங்களைக் கூற நேர மில்லாத காரணத்தால் எனது உரையை நிறைவு செய்கிறேன் வணக்கம் என்று கூறி முடித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/83294.html#ixzz36MeCwLhS

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


கண்ணன்

சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடினான், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் கண்ணன் என்பது பின்பற்றத் தகுந்ததுதானா? இத்தகையவன் வழிபடத்தக்கவன் தானா?

Read more: http://www.viduthalai.in/e-paper/83332.html#ixzz36STaiip3

தமிழ் ஓவியா said...


என்ன படிக்கலாம்?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

என்ன படிக்கலாம்?

சென்னை சன் தொலைக்காட்சியின் என்ன படிக்கலாம் என்னும் நிகழ்ச்சி 29.6.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியினை பல லட்சம் நேயர்கள் கேள்வி கேட்டு உரிய கருத்தினை பகிர்ந்தமையை நானும் நண்பர்களும் பார்த்து மகிழ்ந்தோம்.

பல லட்சம் மாணவர் மாணவியர்கள் கடுமையான உழைப்பின் அடிப்படையில் பள்ளித் தேர்வினை முடித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உயர்க்கல்வியை நோக்கி பயணிக்கின்ற அரிய நேரத்தில், அதாவது திசை தெரியாமல் புலம் விளங்காது படகில் தப்பி கரை ஏறுபவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் அமைந்தது என்ன படிக்கலாம் நிகழ்ச்சி.

என்னதான் குடும்ப பின்னணியும் உற்றார் உறவினர்களின் வழிகாட்டல் இருந்தாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இமய வளர்ச்சி காணும் அறிவியல் உலகில் கல்வித்துறையில் ஆய்ந்து தோய்ந்து வழிகாட்டிகள் அமைவது அரிதிலும் அரிதாகும். இந்த வகையில் அனைத்துக் கல்வி சார்ந்த தகவல்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு, நேயர்களும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர கேட்கின்ற கேள்விகளுக்கு அதற்கான வழிகாட்டலை எவ்வித மனச்சலிப்பும் அலுப்பும் கொள்ளாமல், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் ஊட்டி விடையளித் தமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த அய்ந்தாயிரம் ஆண்டுகளாய் எந்தவித அறிவியல் முன்னேற்றமும், கல்வி யறிவு அற்ற சமுதாயமாக மிகப்பெரும் பான்மையினர் இருந்த காலம், சமுதாய விடிவெள்ளி தந்தை பெரியார் போன்ற மேதைகளால் மாற்றியமைக்கப்பட்டு மிகச்சாதாரண குடும்ப மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்று மிக உயர்ந்த பதவிகளிலும், நீதிவேந்தர்களாகவும், மாவட்ட ஆட்சியாளராகவும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாக விளங்குவதை இன்று நாம் காணும்போது மட்டிலா மகிழ்வும் பெரியார் கண்ட சமுதாய பெரும் விளைச்சல் வெற்றி பெற்றுள்ளது.

வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்கிறார் ஓர் சூரியக்கவிஞர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் துணை வேந்தர் அவர்கள் வாழ்வில் முன்னேற படிக்க வழி கேட்கும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் அமைந்திருந்த இந்நிகழ்ச்சி பலவாறு பாராட்டப்பட வேண்டும்.

நான் முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். எனது மகனுக்கு குறிப்பிட்டக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை என்றால் வேறு கல்லூரியை சொல்லுங்கள் என ஒரு பெற்றோர் கேட்கும் கேள்வி, மிகத்தெளிவாக இந்த இடத்தில் இருந்து கொண்டு ஒரு கல்லூரியை மட்டும் கூறுவது நல்லதல்ல. கட்டாயம் உங்களது மகனின் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். எப்போது இரண்டாவதாக ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்க முற்பட வேண்டும் என்று நடுநாயகமாக கூறிய கருத்து மிகவும் போற்றப்பட வேண்டியதாகும்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர் களாலும், இனமானத்தை போற்றிக்காக்கும் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களின் சமூக நீதியையும், சமூக முன்னேற்றத்தினை மனதில் கொண்டு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தினை நிர் வகிக்கும் தங்களையும் காலத்தின் அருமைக்கருதி என்ன படிக்கலாம் எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சன் தொலைக்காட்சியை உளமார பாராட்டி மகிழ்கின்றோம்.

- மு. சானகிராமன் தலைவர்

(கர்நாடக மாநில திராவிடர் கழகம்)

Read more: http://www.viduthalai.in/page-2/83350.html#ixzz36SUK5uvC

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது!



உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது. (விடுதலை, 28.10.1967)

Read more: http://www.viduthalai.in/page-2/83340.html#ixzz36SUTFCNN

தமிழ் ஓவியா said...


கச்சத்தீவு: இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தமே இல்லையாம்!


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில்

கோவை, ஜூலை 3_ கச்சத்தீவில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடை யே எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மய்யப் படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவ நல அமைப்புகள் முடிவெடுத் துள்ளன.

கச்சத்தீவை மீட்டு, அங்கு தமிழக மீனவர் களுக்கு மீன் பிடி உரிமை கள் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சி களும் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இந்தியா_இலங்கை இடையிலான 1974ஆ-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவை யைச் சேர்ந்த சமூக சேவகர் எம்.சஞ்சய் காந்தி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பதிலைப் பெற்றுள் ளார். இலங்கைக்கான இந்திய வெளியுறவு அமைச் சக துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி கையெழுத் திட்டு அளித்துள்ள அந்த பதிலில், தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா_இலங்கை இடையில் கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒப்பந்த மும் இல்லை. அதேநேரம் இரு நாடு களுக்கு இடை யிலான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப் பந்தம் உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோ பரில் இந்த பதில் வெளி யுறவுத் துறை மூலம் அளிக் கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் மீனவர் கள் மற்றும் கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சஞ்சய் காந்தி கூறும்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் நகல் வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மத்திய வெளி யுறவுத் துறையிடம் கேட் டேன். அவர்கள் அப்படி ஒரு விண்ணப்பமே இல்லை என்று பதில் அளித்துள்ள னர். எனவே, இல்லாத ஒப்பந்தத்தை இருப்பதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் வேலை நடக் கிறது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறை யிலும், இரு நாடுகளிடை யே எந்தவிதமான அரசு முத்திரையோ, நாடாளு மன்ற அனுமதியோ, அரசு அதிகாரிகளின் கையெழுத் தோ இல்லை. எனவே, வெறும் வெற்றுத் தாளை ஒப்பந்தம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இல்லை என்றார்.

சமூக நல அமைப்பு...

கச்சத்தீவு மீட்பு போராட்டங்களை நடத்தி வரும் தூத்துக்குடி வீராங் கனை சமூக நல அமைப் பின் தலைவர் பாத்திமா பாபு, கூறும்போது, மத்திய வெளியுறவுத் துறையின் இந்தத் தகவல் அதிர்ச் சியளிப்பதாக உள்ளது. வெற்றுத்தாளை எப்படி ஒப்பந்தமாக ஏற்க முடி யும். அதுவும் மீன் பிடிப்பது தொடர்பாகவே, தீவு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவோ எந்தவித மான திட்டவட்ட வரைய றையும் இதுவரை இல்லை என்பதே எங்களுக்கு பெரிய ஆவணமாக உள்ளது. எனவே, மத்திய வெளி யுறவுத் துறையின் தகவலை மய்யமாக வைத்து, சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து போராட முடிவு செய்துள் ளோம் என்றார்.

மத்திய அரசு வெளி யிட்டுள்ள ஆவணத்தில், 1974-ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் 28ஆ-ம் தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ள வரையறை பிரிவு அய்ந்தில், கச்சத் தீவுக்கு தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர் கள் சென்று வரலாம். இதற்கு இலங்கை அரசிடம் விசா போன்ற போக்குவரத்து ஆவணங் கள் எதுவும் பெறத் தேவை யில்லை. ஒவ்வொருவரின் கடல் பகுதியிலும், இரு நாட்டு பாரம்பரிய நீர் வழி கலங்கள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கச்சத்தீவு மீட்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதை யின் மைந்தன் கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே பாரம்பரிய நீர் வழிப் பகுதிகள் குறித்து எல்லை வரையறுத்ததில், நியாய மான முறை பின்பற்றப்பட வில்லை. இந்தியாவுக்கு 18 கி.மீ, வரை நீர் எல்லை வகுத்துவிட்டு, இலங்கைக்கு 22 கி.மீ. வரை வகுத்துள் ளனர். சர்வதேச நீர் எல்லை விதிகளின்படி, இந்தியாவுக்கு 20 கி.மீ. என்று குறிப்பிட்டிருந்தால், கச்சத்தீவு சொந்தமா, இல்லையா என்ற கேள்வி யே எழுந்திருக்காது.

மேலும் பாரம்பரிய நீர் எல்லை வரையறை ஒப்பந் தத்திலும், இரு நாட்டு நீர் வழிக் கலன்கள் (ஊர்திகள்) இயங்கலாம்; நீர் வழி உரிமைகளும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்தப் படியே மீன் பிடிக்கும் உரிமை, வலை காயவைக்கும் உரிமை அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

Read more: http://www.viduthalai.in/page-3/83364.html#ixzz36SUn4J7Y

தமிழ் ஓவியா said...


அடடே, கண்டுபிடித்துவிட்டாரே காரணத்தை! நாயுடு பொறுப்பேற்ற நேரம் சரியில்லையாம்! கூறுகிறார் சாரதா பீடம் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி


அய்தராபாத், ஜூலை 3_ தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் உள்ள, ஆந்திர மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு பதவி யேற்ற நேரம் சரியில்லை என்பதால் தான், அம் மாநிலத்தில் தொடர்ந்து சோக சம்பவங்கள் நடக் கின்றன என, சாரதா பீடத்தின் சுவாமி ஸ்வரூ பானந்த சரஸ்வதி கூறி யுள்ளாராம்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திர பாபு நாயுடு, சீமாந்திரா என அழைக்கப்பட உள்ள, தெலங்கானா மாநிலம் தவிர்த்து பிற பகுதியின் முதல்வராக, கடந்த மாதம் 8 இல், பொறுப்பேற்றார். தேர்தல் முடிவுகள் வெளி யாகி, 20 நாள்களுக்குப் பின், ஜூன் 8, இரவு 7:27 மணிக்கு, குண்டூர் மாவட் டத்தின் மங்களகிரி என்ற இடத்தில் பொறுப்பேற்றார்.

இதுகுறித்து, விசாகப் பட்டினம் அருகே உள்ள பெண்டுருத்தி என்ற இடத்தில் உள்ள, சாரதா பீடத்தின் சுவாமி, ஸ்வரூ பானந்த சரஸ்வதி கூறிய தாவது:

முதல்வர், நாயுடு பொறுப்பேற்ற நேரம் சரியில்லை. மன்னர்கள் முடிசூடும் நாள், மங்கள கரமான நாளாகவும், முன்னேற்றம் தரும் நாளா கவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அதை கவனிக்காமல், 8 ஆம் தேதி பொறுப்பேற்றார்; அது மட்டுமின்றி, இரவு, 7 மணிக்கு மேல் பொறுப் பேற்றுள்ளார்.

இது போன்ற முக்கிய பொறுப்பு ஏற்பவர்கள், சூரியன் உலா வரும் காலத்தில் பதவியேற்க வேண்டும். சந்திரன் பார் வையுள்ள இரவு நேரத் தில் பதவியேற்கக் கூடாது. மேலும், நீண்ட தாமதத் திற்கு பின், முதல்வராகி யுள்ளார்.

அதனால் தான், பியாஸ் நதியில் ஆந்திர மாணவர்கள், 25 பேர் இறந்தனர்; விசாகப்பட்டி னம் ஸ்டீல் தொழிற் சாலையில் விபத்து ஏற் பட்டது; கிழக்கு கோதா வரியில், காஸ் பைப் உடைந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், நாயுடு பொறுப் பேற்ற நாள் முதல், ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. இதனால், குடிநீர், தொழிற்சாலை களுக்குத் தண்ணீர் தட் டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மோசமான நேரத்தில் அவர் முதல்வராக பொறுப் பேற்றதால், இந்த ஆண்டு இறுதிவரை, இந்நிலை நீடிக்கும். அதற்குப் பரி காரங்களும் உள்ளன. அவற்றை செய்தால், பாதிப்பிலிருந்து சற்று விலகலாம் என்று கூறியுள்ளார்.

Read more: http://www.viduthalai.in/page-8/83355.html#ixzz36SW7GSwz

தமிழ் ஓவியா said...


பாம்புக்கடிக்கு மூக்கு மருந்து: கண்டுபிடிப்பில் முன்னேற்றம்

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள்.

எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென் றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டு பிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ள தாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் உயிரிழக்கிறார்கள்.

நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண் ணிக்கை.

உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.அய்.வி.யால் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பாம்புக் கடியால் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது. பாம்புக் கடிக்கான பொதுவான சிகிச்சை என்பது விஷம் முறிக்க வல்ல மாற்று மருந்து ஒன்றை பாம்பு கடித்தவருக்கு கொடுப்பது தான்.

ஆனால் பாதிக்கப்பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்து, ஊசி மூலமாக அவருக்கு அந்த மருந்தை செலுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதாக இந்த முறை அமைந்துள்ளது. தவிர இந்த மருந்தின் விலையும் அதிகம்.

விஷ முறிவு மருந்து அல்லாது பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கவல்ல ஆன்டி பராலிடிக் மருந்தான நியோஸ்டிக்மீன் என்ற மருந்தை பாம்பு கடித்தவருக்கு வழங்கும் ஒரு சிகிச்சை முறையும் இருந்துவருகிறது.

ஆனால் இதுவும் நரம்பு ஊசி வழியாகத் தான் செலுத்தப்பட முடியும்.

அதிகம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாவது என்னவோ ஏழ்மையான, கிராமப் பகுதிகளில் தான், அவர்களால் எல்லா நேரத்திலும் மருத்துவ வசதிகளைப் பெற முடிவதில்லை.

எனவே பாம்புக்கடிக்கு மேம்பட்ட மருந்தும் சிகிச்சையும் தேவைப்படுகின்ற அவசியம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில்தான் விரைவாகவும் சுலபமாகவும் மூக்கில் அடிக்கக்கூடிய ஸ்பிரேயாக பயன்படுத்தவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றை கண்டறிவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கலிஃபோர்னியா அறிவியல் கழகத்தில் சென்டர் ஃபார் எக்ஸ்ப்ளொ ரேஷன் அன்ட் டிராவல் ஹெல்த் என்ற மய்யத்தின் இயக்குநராகவுள்ள டாக்டர் மேத்யூ லூவின் கூறுகிறார்.

இந்த மருந்து எலிகளிடம் பரிசோதிக் கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மனிதர்களிடம் ஆய்வுகளை நடத்தி மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஏராளமானோருக்கு பலன் தரும் மருந்தாக இந்தக் கண்டுபிடிப்பு உருவெடுக் கலாம்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனித தயாரிப்பு ஸ்புட்னிக் என்ற ரஷ்ய செயற்கைக்கோள் ஆகும். அனுப்பப்பட்ட ஆண்டு 1957.

Read more: http://www.viduthalai.in/page-7/83342.html#ixzz36SWUI7Hg