Search This Blog

11.7.14

பிராமணன் வந்தானா?

பிராமணன் வந்தானா? (சித்திர புத்திரன்)
 

குடித்தனக்காரன்:- அய்யா ஆ ஆ ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கின்றது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளை குட்டிகளுக்கு புண்ணி யமாகும்

சித்திரபுத்திரன்: அய்யய்யோ ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடி: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா !

சித்தி: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணன் இருக்கின்றார்களா?
குடி: ஆம் அய்யா, காலையில் ஒரு பிரா மணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொண மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.

சித்தி: சரி, சரி, உங்க வீதி வீடுகள் வெந்து போனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.

குடி: என்ன அய்யா, எனக்கு தெரிய வில்லையே !

சித்தி: இது தெரியாதா உனக்கு; பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்ட தில்லையா?

குடி: நான் கேட்டதில்லையே !

சித்தி: அட பயித்தியமே, பிராம ணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில தூக்குகிறார்களே ! அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய்விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடி: அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்க விட்டு இருக்கமாட்டேனே, ஏமாந்து போய் விட்டேன்.

சித்தி: அது மாத்திரமா! _ பிராமணாள் வாயிலும் நெருப்பு வயிற்றிலும் நெருப்பு: இது உனக்கு தெரியாதா?

குடி: தெரியவில்லையே! சற்று தெரியும்படியாய் சொல்லுங் களேன்.

சித்தி: பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய்ப் போய்விடுவாய் என்று சொல்லுகின்றார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்பதால்தானே அவர்கள் அப்படிச் சொல்லுவது. தவிரவும், பிராமணாள் நம்மைப்பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின் றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவ தாயிருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லாவிட்டால் முடியுமா?

குடி: இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு. இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழுவது. இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவதானால். இந்த நாலு பிராமணாளாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய்விடும் போலிருக்கிறதே.

சித்தி: பின்னே தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராமணர்களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடி: ஓ ! ஹோ !! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்லுகின்றார் களா ! சரி இனி புத்தியாய் பிழைத்துக் கொள்ளுகிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங்களய்யா.

---------------------------- சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட  உரையாடல் - “குடிஅரசு” 18.3.1928

30 comments:

தமிழ் ஓவியா said...


கசப்பும் பழைய புளிப்பும் ஏற்றப்பட்ட மோடி அரசின் முதலாவது பட்ஜெட்!



சுவிஸ் வங்கி கருப்புப் பண மீட்பு என்னாயிற்று?

கங்கைக்கு ரூ.2037 கோடி; சேது சமுத்திரத் திட்டம்பற்றி குறிப்பே இல்லையே ஏன்?



திராவிடர் கழகத் தலைவர்

பட்ஜெட்பற்றி தமிழர் தலைவர் கணிப்பு 2014-2015ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பிரதமர் மோடி அரசின் 2014-2015ஆம் நிதி ஆண்டிற் குரிய வரவு - செலவு திட்டம் (பட்ஜெட்) நேற்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி அடைவர்

இதில் பெரிதும் கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி யடையவும், அந்நிய மூலதனத்திற்கு இந்தியாவின் நிதிக் கதவுகளை முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைவிட மிக வேகமாகவும் அதிகமாகவும் திறந்துள்ள நிலைதான் பளிச் சென்று தெரிகிறது.

சரிந்த பொருளாதாரத்தைச் சரிப்படுத்துகிறோம் என்று தேர்தல் நேரத்தில் வாய் வீரம் பேசிய பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள ஆட்சி, திணறுகிறது; திக்குமுக்காடி, திசை தெரியாத காட்டில் பயணிப்பது போல் (DirectionLess) பழைய பாதையிலேயே புதிய ஜொலிப்புகளுடன் செல்வது போன்று உள்ளது என்பதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது!

விலைவாசி ஏற்றத்தை ஏதோ மாய மந்திரக்கோலை வைத்து இறக்கிக் காட்டுவோம் - பண வீக்கத்தை குறைப்போம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள், 50 நாள்கள் ஆன நிலையில்கூட, இன்னமும் பழைய அரசின்மீதே குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் பணியைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்!

தமிழ் ஓவியா said...


பதுக்கப்பட்ட கருப்புப் பண மீட்பு என்னாயிற்று?

பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்று மேடைதோறும் முன்பு கூறினார்கள். சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்போர் பட்டியலைப் பெற்று, அப்பணத்தை இங்கே கொண்டு வருவதில் ஏன் தயக்கம் என்று முன்பு எதிர்க்கட்சியாக இருந்து, நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் முழக்கமிட்டவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில் மவுனம் ஏன்?

கடிதம் எழுதியுள்ளோம் என்ற பதில் போதுமானதா? சிலநாள்களுக்கு முன் இந்தியர்கள் யாரும் பணம் போட வில்லை என்று சுவிஸ் வங்கியோ, சுவிஸ் அரசோ கூறியது போன்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே!

உள்நாட்டுக் கருப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வர - முன்பு அறிவித்த Amnesty
மன்னிப்பு திட்டத்தையே மாற்றிக் கூறுவதுபோல கிசான் விகாஸ் பத்திரங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரிசர்வ் வங்கி இந்தத் திட்டத்தை எதிர்த்ததால் கைவிடப்பட்ட திட்டத்தை புதுமுறுக்கோடு - உள்நாட்டுச் சேமிப்பைப் பெருக்க, இது உதவக் கூடும் என்று புதிய வாதத்துடன் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

ராணுவத்திற்கு 2.28 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். முந்தைய ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட இது 12.5 சதவீதம் அதிகமாகும்.

பாதுகாப்புத் துறைக்கு அந்நிய முதலீடு 49 சதவீதமாம்

முந்தைய அரசு பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் 26 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது.

மோடி அரசின் இந்த முதல் பட்ஜெட்டில் இது 49 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது!

இதுபோலவே இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டின் அளவு 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதிய பட்ஜெட் அறிவிப்புக் கூறுகிறது!

இதைப்பற்றிக் கூறும்போது மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் அந்நிய முதலீட்டுக் காக, அந்நிய முதலீட்டாளர்களின் அந்நிய முதலீடு களமாகவே இந்த பட்ஜெட் விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது!

இதில் கம்யூனிஸ்ட்களின் விமர்சனமும் அவர்களை எதிர்க்கும் மம்தாவின் விமர்சனமும் ஒன்றாக இருப்பது என்பதன் மூலம் மறுக்க முடியாத உண்மையே ஓங்கி நிற்கிறது!

தனி நபர் வருமான வரிச் சலுகையை 5 லட்சமாக உயர்த்துவோம் என்பது தேர்தல் அறிக்கை வாக்குறுதி; ஆனால், வெறும் 50 ஆயிரம் தான் உயர்த்தப்பட் டுள்ளதானது ஏமாற்றம் தருவதாகும் - குறிப்பாக நிரந்தர வருவாய் பிரிவினருக்கு, முதுகுடிமக்களுக்கு மூன்று லட்சம் என்பது வரவேற்கத்தக்கதாகும்!

கங்கையைச் சுத்தப்படுத்த 2037 கோடி ரூபாய்

கங்கையை சுத்தப்படுத்த 2037 கோடி ரூபாய்; அதே நேரத்தில் நதிகள் இணைப்புக்கு 100 கோடி மட்டும் ஒதுக்கீடு என்பதும் எதைக் காட்டுகிறது?

முந்தைய ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் கங்கை விழுங்கியுள்ள தொகை இதுவரை பல ஆயிரம் கோடிகள் ஆகும். கங்கையை புனித கங்கை (Holy Ganges) என்று கூறிவிட்டு, இதைத் தூய்மைப்படுத்த இப்படி பல்லாயிரக் கணக்கில் செலவழிப்பது சுற்றுச் சூழல் கண்ணோட்டமா? மத உணர்வின் வெளிப்பாடா என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

ஹிந்துத்துவா தலைவர்களின் பெயர்கள்

அது மட்டுமல்ல, புதிய திட்டங்களுக்கெல்லாம் ஹிந்துத்துவா தலைவர்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.

1. மதன்மோகன் மாளவியா திட்டம்
2. சியாமப் பிரசாத் முகர்ஜி நினைவுத் திட்டம்
3. தீனதயாள் உபாத்தியா திட்டம்
(மூவரும் பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள் - ஹிந்து மகாசபை, ஜனசங்கம், இவைகளை வழி நடத்தியவர்கள்)

பழைய சிதம்பரம் பட்ஜெட்டே!

தமிழ்நாட்டிற்கு சில திட்டங்கள் ஒதுக்கீடுகள் கிடைத் துள்ளன என்பது ஓர் சிறு ஆறுதல்!

புகையிலைப் பொருள்கள், சிகரெட் போன்றவை களுக்கு மிக கூடுதல் வரி போட்டுள்ளதன் மூலம், நாட்டைப் புகை மண்டலத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. அதை நாம் வரவேற்கிறோம்; அதுபோலவே மென் பானங்களைக் குடித்து தங்கள் உடல் நலத்தை இளைய தலைமுறையினர் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அந்தள வில் இவை பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் ஆகும்.

பொருளாதார எழுத்தாளரான சுவாமிநாதன் எஸ். ஆங்கிலேசாரிய அய்யர் அவர்கள் இந்த பட்ஜெட் பற்றிக் கூறுவதை பழைய சிதம்பரம் பட்ஜெட்தான் இது; புதிய காவி உதட்டுச் சாயம் தடவப்பட்டு (A Chidambaram Budget with Saffron Lip Stick) வெளி வந்துள்ளது என்று கூறுகிறார்.

பெரு முதலாளிகளின் வரவேற்புதான். சரியான அளவுகோல், இது யாருக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

கிராமவாசிகள், ஏழை, எளியவர்களின் வாழ்க்கைத் தரம் உயர, மருத்துவக் காப்பீடு மருத்துவ உதவி - இவை ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன!

அதன்மூலம் அதன் அடையாளம் மாற்றிக் காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே!
என்றாலும் பெரிய பொருளாதாரப் புரட்சி என்று கூறியவர்கள் முதல் பட்ஜெட் கசப்பாக இருந்தாலும், பழைய புளிப்பும் அதிகம் ஏற்றப்பட்டுள்ளதால், புளித்த தாகவும் உள்ளது என்பதே உண்மை!

சேது சமுத்திரத் திட்டத்தைக் காணோமே!

அந்நிய மூலதனம் சதிராடும் பட்ஜெட், அதில் நடராஜன் உருவத்தின்கீழ் மிதிபடும் அசுரன் முயலகன் போல உள்ளது.

வடக்கே கங்கைக்கு 2037 கோடி ஒதுக்கி விட்டு, தென்னாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய பேச்சு மூச்சே இல்லை; தடம் மாற்றி செயல்படுத்துவோம் என்று பா.ஜ.க.வினர் மேடைகளில் முழங்கியது என்னவாயிற்று? தமிழக மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்போ?

பொதுவாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் முந்தைய சமையல்காரர் தயாரித்த பழைய உணவுதான்; ஆனால், புதிய தட்டு; பரிமாறுகிறவரும் புதியவர் இவ்வளவு தான் வேறுபாடு!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
11.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/83811.html#ixzz37ATHUXeL

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


பூமி பூஜை - வாஸ்து

பூமி பூஜையின்போது முதலில் வாஸ்து சாந்தியின் மூலம் வாஸ்து புருஷனை திருப்தி செய்ய வேண்டும். பூசணிக்காய் வெட்டுவது இதற்காகத் தான் பிறகு மஞ்சள் பிள்ளையார் பூஜை செய்து செங்கற்களில் நவக்கிரகங்களைப் பூஜிக்க வேண்டும் பின் பூமாதேவியை வழிபட்டு, கட்டடம் கட்டும் முகூர்த் தம் செய்ய வேண்டுமாம்.

ரொம்ப சரி போரூரையடுத்த முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பரிதாப மரணம்!

இதுவும் பூமி பூஜை நடத்தி வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/83815.html#ixzz37ATZYOli

தமிழ் ஓவியா said...


தேர்தலில் எத்தனை இடங்களை பெற்றோம் என்பதைவிட எத்தனை சு.ம. திருமணங்களை நடத்தினோம் என்பதுதான் முக்கியம்


தேர்தலில் எத்தனை இடங்களை பெற்றோம் என்பதைவிட
எத்தனை சு.ம. திருமணங்களை நடத்தினோம் என்பதுதான் முக்கியம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்துரை

சென்னை, ஜூலை. 11 நாம் தேர்தலிலே வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும், தேர்தலிலே எத் தனை இடங்களைப் பெற் றோம் என்பதை விட, எத்தனை திருமணங்களை இந்த ஆண்டு சுயமரி யாதைத் திருமணங்களாக நடத்தி வைத்தோம் என்ற அந்த எண்ணிக்கையிலே தான் நாம் பெருமையடை கிறோம். அந்தப் பெரு மையை தொடர்ந்து நாம் காப்பாற்ற, தொடர்ந்து நடைமுறைப்படுத்த, நம்முடைய இயக்கத்திலே இன்றைக்கு ஒரு தங்க வேலன் அல்ல, பல தங்க வேலன்கள் உருவாகியிருக் கிறார்கள். இன்றைய தினம் நாம் அரசியலிலே அடைய வேண்டிய அளவுக்கு வெற்றி அடைய விட்டாலும்கூட, சமுதாய சீர்திருத்தத்திலே நாம் பெற்ற வெற்றியை எண் ணிப் பார்த்து பெருமை அடையலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஆளுங் கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. இடைத் தேர் தலில் டெபாசிட் தொகையை இழந்த கட்சி யாக விளங்கியதை மறந்து விட முடியாது. அதற்காக அவர்கள் யாரும் தற் கொலை செய்து கொள் கின்ற முயற்சியிலே ஈடு படவில்லை. தொடர்ந்து கட்சி நடத்திக் கொண் டிருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக் கிறோம். எனவே வெற்றி தோல்வி என்பது ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை நிர்ணயித்து விடாது. நாம் நம்முடைய இயக்கத்தை, பெரியாரின் கொள்கை களை அடிப்படையாக வைத்து, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றி வளர்ந்தவர்கள், இன்றைக்கும் வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்.

இன்றைக்குப் பெரியார் இல்லை, அண்ணா இல்லை என்றாலும் அவர்கள் வார்த்துத் தந்த கொள்கைகளும், இலட் சியங்களும் இருக்கின்றன. நமக்கு அவைகள் தான் துணை. பெரியாருடைய துணையும், அண்ணா துணையும், அவர்கள் வளர்த்து ஆளாக்கிய திராவிட இயக்கத்தின் துணையும் இருக்கிற வரையில் திராவிட முன் னேற்றக் கழகத்தை, திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தி விட முடியாது என்பதை நான் உறுதிபடச் சொல்லி (பலத்த கைதட்டல்) இந்த உறுதி மொழி வழியில் நடக்கின்ற ஒரு குடும்பம், நெல்லை மாவட்டத்திலே வாழ்ந்து வருகின்ற சீர் திருத்த குடும்பம், செழிப் பான பகுத்தறிவைப் பெற்ற குடும்பம், தம்பி தங்கவேலனுடைய குடும்பம். அந்தக் குடும் பத்து செல்வங்கள் திலீ பன் -_ கலைவாணி இருவ ருக்கும் நடைபெற்றுள்ள இந்த வாழ்க்கை ஒப்பந்த திருவிழாவில் என்னு டைய இனிய வாழ்த்து களை மண மக்களுக்கு வழங்கி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு நாடாளு மன்ற உறுப்பினர் ச. தங்க வேலு அவர்களின் இல்ல மணவிழாவில் திமுக தலை வர் கலைஞர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83813.html#ixzz37ATiTdRU

தமிழ் ஓவியா said...


காவடி எடுத்தவரைக் கைவிட்ட கடவுள்!


மட்டக்களப்பு ஜூலை 11_ இலங்கை கிழக்கு மாவட்டமான மட் டக்களப்பு பகுதியில் உள்ள அம்மன் கோவில் விழாவை ஒட்டி பறவைக் காவடி எடுத்துச் சென்றவர் காவடி உடைந்ததன் காரணமாக மரண மடைந்தார்.

மட்டக்களப்பில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அருகில் உள்ள ஊர்க்காரர்கள் அனைவரும் நேர்த்திக் கடன் என்ற பெயரில் அலகு குத்திக்கொண்டும் தேர் இழுத்துக் கொண்டும் வருவார்கள் இந்த நிலையில் கொக்கடிச்சோலைப் பகுதியில் இருந்து ஒரு குடும்பம் நேர்த்திக்கடனுக்காக பறவைக்காவடி என்ற பெயரில் டிராக்டரில் கட்டி அதில் கவடி எடுப்பவரை தொங்க விட்டுச் சென்றார்கள். சாலையில் ஒரு பள்ளத்தை கடக்கும் போதுஏற்பட்ட அதிர்வின் காரணமாக டிராக்டர் ஒருபுறம் சரியவே பறவைக்காவடி முறிந்து காவடி தூக்கியவர் மீதே விழுந்தது, இதில் உடல் நசுங்கி பறவைக்காவடி தூக்கியவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். மேலும் காவடி விழுந்ததால் டிராக்டரில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள் ளனர். இச்சம்பவம் குறித்து மட்டக் களப்பு கொக்கடிச்சோலை காவல் துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83812.html#ixzz37ATyIfax

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்



நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

Read more: http://viduthalai.in/page-2/83817.html#ixzz37AUEb6lR

தமிழ் ஓவியா said...

கல்விக் கடன் பற்றிய வரவேற்கத்தக்க தீர்ப்பு


திருப்பூரைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 படித்து முடித்து விட்டேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க கடன் கேட்டு திருப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு விண்ணப்பித்தேன்.

எனது விண்ணப்பத்தை வங்கி மேலாளர் பரிசீலித்து பிளஸ் 2வில் 60 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் தான் கடன் கொடுப்போம். நான் 59 சதவீதம் எடுத்ததால் தர முடியாது என்று வங்கி மேலாளர் உத்தரவிட்டார். இது தவறானது. இதை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் நோக்கமே மாணவர்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கடன் வழங்க வங்கிகளுக்கு உத் தரவிட்டுள்ளது. எனவே வங்கி கடன் எனக்கு தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து வங்கி மேலாளர் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு கூறினார்.

இதை எதிர்த்து வங்கி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்த குமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

வங்கி கடன் வழங்க மறுத்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தது சரியானதுதான். வங்கியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம். உயர்கல்வியில் சேர்ந்து படிக்க மாணவர்களுக்குக் கல்விக் கடன் தரத் தான் மத்திய அரசு வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

இத்தனை சதவீதம் மார்க் எடுக்கவேண்டும் என்று வங்கி கூறுவது தவறானது. கடன் தர மதிப்பெண்ணை கருத்தில் கொள்ளக் கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கத் தான் இந்த திட் டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. எனவே மனுதாரருக்கு வங்கி கடன் தர வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள் 27.9.2012 அன்று நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினையும் சுட்டிக் காட்டி யுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

15 முதல் 30 நாள்களுக்குள் கல்விக் கடன்கள் விண்ணப்பங்கள்மீது முடிவெடுக்க வேண்டும். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலமாகவோ அல்லது 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலோ இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரும்போது அவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கலாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தகுதி நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பில் 60 சதவீதம் மற்றும் - அதற்குமேல் மதிப் பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கல்விக் கடன் வழங்க முடியும் என்று வங்கிகள் கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு மிகச் சிறந்தது - சமூகநீதி நோக்கம் கொண்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் மிக நீண்ட காலம் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்கள்; முதல் தலைமுறையாகக் கல்லூரிப் படிக்கட்டுகளை மிதிக்கும் நிலை உண்டு.

அத்தகையவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்று எதிர்ப் பார்க்க முடியுமா? வெகு காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களைக் கை தூக்கி விடுவதுதான் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கடமையே தவிர, தட்டிக் கழிப்பதல்ல.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வழக்குத் தொடுத்துள்ள ரவி 59 மதிப்பெண் பெற்றுள்ளாராம் - இன்னும் ஒரு மதிப்பெண் கூடுதலாக (60) பெற்றிருந்தால் கடன் கிடைத்திருக்குமாம். இந்த ஒரு மதிப்பெண்ணில் என்ன பெரிய தராதரத்தைக் கண்டுபிடித்து விட்டனர்? அதிகாரிகளின் மனப்போக்கு தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

கல்வியைக் கொடுப்பதும், வளர்ப்பதும் ஒரு நல்ல அரசின் அடிப்படைக் கடமையாகும்.

வங்கிகளில் பெரும்பாலும் உயர் ஜாதியினர் ஆதிக்கம் என்பது தான் யதார்த்தம். அந்த நிலையில் உள்ளவர்கள் கல்விக் கடன்களை வழங்குவதில் தங்களுக்கென்று வித்தியாசமான கருத்தினைக் கொண்டிருப்பார்கள் என்பதும்கூட யதார்த்தம்தான்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களேகூட, கல்விக் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தும், வங்கி அதிகாரிகள் அதற்கு மாறாகவே நடந்து கொள்கிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறியதுண்டே!

நீதிமன்றம் சென்றுதான் கடன் உதவி பெற முடியும் என்பது சரியல்ல; கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறுவது என்பது நடைமுறை சாத்தியம் அல்ல.

பெரும் பெரும் பணத்திமிங்கலங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களைக் கட்டுவதில்லை; வாராக் கடன் என்று சொல்லி அக்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யும் நாட்டுடைமை வங்கிகள், கல்விக் கடன்களை வழங்குவதில் மட்டும் கறாராக இருப்பது ஏனோ!

கல்விக்காகக் கடன் பெற்றோர், வேலை வாய்ப்பைப் பெறும்போது வட்டியுடன் கடனைச் செலுத்த வேண்டும்; எழுத்து மூலமான அந்த நிபந்தனையின் பேரில்தான் கடனும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வங்கி அதிகாரிகள் கல்விக் கடன் வழங்குவதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும். இதில் முரண்பாடாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு வழக்கைத் தாக்கல் செய்த ரவி என்பவருக்கு மட்டும் பொருந்தக்கூடியது என்று கருதாமல், பொதுவான தீர்ப்பாக எடுத்துக் கொண்டு வங்கி மேலாளர்கள் செயல்படுவார்களாக!

இல்லையேல் வீதி மன்றத்திற்கும் வந்து போராடத் தயங்க மாட்டோம்!

Read more: http://viduthalai.in/page-2/83818.html#ixzz37AUOEyJG

தமிழ் ஓவியா said...


பிஞ்சு உள்ளத்தின் கொஞ்சும் புரட்சி!


ஆப்ரிக்க குழந்தைக் கவிஞர் ஒருவரது கவிதையை, 2005ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை (Best Poem of 2005) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நிறம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கவிதையின் தமிழாக்கம் இதோ:

நான் பிறந்தபோதும் நான் கறுப்புதான்;

நான் வளர்ந்தபோதும் நான் கறுப்புதான்;

நான் வெயிலில் நடந்தபோதும் நான் கறுப்புதான்;

நான் நோயில் வதிந்தபோதும் நான் கறுப்புதான்;

நான் இறக்கும்போதும் நான் இன்னமும் கறுப்புதான்;

ஆனால் வெள்ளை ஆட்களான நீங்களோ நீங்கள் பிறந்த போது நீங்கள் பழுப்பு நிறத்தவர்

நீங்கள் வளர்ந்தபோது நீங்கள் வெள்ளை நிறத்தவர்

நீங்கள் வெயிலில் நடந்தபோது நீங்கள் சிவப்பு நிறத்தவர்

நீங்கள் குளிரில் நனைந்தபோது நீங்கள் நீல நிறத்தவர்

நீங்கள் பயத்தால் நடுங்கியபோது நீங்கள் மஞ்சள் நிறத்தவர்

நீங்கள் நோயில் வாடியபோது நீங்கள் பச்சை நிறத்தவர்

நீங்கள் மரணம் அடையும்போது நீங்கள் சாம்பல் நிறத்தவர்

இருந்தபோதிலும் எங்களைப் பார்த்து நிறத்து மக்கள் (“Coloured”)
என்று அழைக்கிறீர்களே - இதுதான் அந்தக் கவிதை.

இணையதளத்தில் எத்தனையோ சிறந்த தகவல்களும், காட்சிகளும் வரத்தான் செய்கின்றன! (சில நேரங்களில் அதே தளம் குற்றவாளிகளின் வாளாகவும், கேடயமாகவும் கூடப் பயன்படுகிறது என்பது உண்மையானாலும்கூட!)

இரண்டு நாள்களுக்கு முன் என் மின் அஞ்சலில் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் நம் நண்பர்களுக்குக் கிடைத்த ஓர் அற்புதமான கவிதை, போற்றற்கரிய இலக்கியப் புதையல் ஆகும்!

பிஞ்சுகளின் நெஞ்சுகளிலும் எரிமலை வெடிக்கத் துவங்கி விட்டது!

எத்தனைக் காலம்தான் இத்தனை அவமானங்களைச் சுமந்து, சுமந்து வேதனைத் தீயில் அவர்கள் வெந்து கருகுவது? அந்தக் குமுறல்கள் - கொஞ்சும் மொழியாக இல்லாமல், புரட்சியின் பூபாளங்களாக இசைக்கத் தோன்றி விட்டன!
விடியலை நோக்கி விரைகின்றனர் புதிய தலைமுறையினர் -

மனிதம் மறுமலர்ச்சி பெறத் துவங்கி விட்டது!

(மொழி பெயர்ப்பு என்றால் அந்த மொழி யில் கேட்கும் சுவையை அப்படியே கொடுத்து விட முடியாதல்லவா அதனால் ஆங்கிலக் கவிதையையும் அப்படியே கீழே தந்துள்ளேன் - வாசகர்கள் சுவைக்காக).

(This poem, written by an African child was nominated for the best poem 2005).

Colour

When I born, I Black;
When I grow up, I Black;
When I go in Sun, I Black;
When I scared, I Black;
When I sick, I Black;
And when I die, I still black;
And U White fellows;
When U born, U Pink;
When U grow up, U White;
When U go in Sun, U Red;
When U cold, U Blue;
When U scared, U Yellow;
When U sick, U Green;
When U die, U Gray;
And you call me Coloured



- கி.வீரமணி -

- வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/83819.html#ixzz37AUao3ws

தமிழ் ஓவியா said...


இன்று உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11



மக்கள் தொகைப் பெருக்கத்தால் வரும் பாதிப்பை முதல்முதலில் உணர்ந்து கூறியவர் தந்தை பெரியாரே!

1990-ஆம் ஆண்டுக்கு முன்பு நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை பேருந்துப் பயணத்தில் தச்சநல்லூரைப் பேருந்து கடந்த உடனே பசுமை ஆக்ர மித்துவிடும். அதன் பிறகு கோவில் பட்டி வரை பசுமைதான். அதன் பிறகு திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் பசுமலை என கண்ணுக்கு குளிர்ச்சி யாக பசுமை மயமாக இருந்தது. மதுரை நகரம் அப்பொழுதெல் லாம் இரைச்சலின்றி மிகவும் அழகாக இருந்தது.

அப்போதைய மாட்டுத் தாவணி என்பது நகரத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த ஓரிடமாகும், பழைய நீதிமன்றத்தைத் தாண்டிய உடனே பசுமை, பிறகு திருச்சிவரை பசுமை அதன் பிறகு சென்னையை நெருங்கும் வரை பச்சைப் பசேலென்று தானிருக்கும். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்படி ஒன்றும் நாம் நூற்றாண் டுகள் கடந்து விடவில்லை. வெறும் 20 ஆண்டுகள் தான் கடந்து வந்தோம். இன்று சென்னையில் இருந்து திருச்சி வரை சிறு சிறு இடம் விட்டு கட்ட டங்கள் தான் தெரிகின்றன. மதுரைக் கும், திருநெல்வேலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வயல்வெளிகள் அழிந்து திருநெல்வேலிவரை எங்கும் நகரமயமாகிவிட்டது. ஏன் என்ற இந்தக் கேள்விக்கு ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் தொகைப்பெருக்கம் நெருக்கடியான சூழ்நிலையைக் கொண்டு வந்துவிட்டது. வளர்ச்சியடைந்த நாடுகளைத் தவிர வளரும் மற்றும் வளர்ச்சியடையா நாடுகள் அனைத்திலுமே மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் அச்சுறுத்த லாக அமைந்துவிட்டது. முக்கியமாக தெற்காசியப் பகுதியில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது மக்கள் தொகைப் பெருக்கமேயாகும்.

உலக நாடுகளில் பல இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்து சரியான சட்டதிட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வருகின்றன. எடுத் துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை எடுத்துக்கொண்டால் 1970ஆம் ஆண்டுகளில் சிட்னி நகர நிர்வாகம் வரும் நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி, எவ்வாறு பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பிட வசதி, குடிநீர்த்தேவை, போக்குவரத்து வசதி என பல்வேறு இன்றியமையாத தேவைகளுக்காக திட்டமிட்டது. அப்போது நகர நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று சுமார் 3-கோடி மக்கள் வசிக்கும் ஒரு நகரம் மிகவும் அமைதியாக எந்த ஒரு இன்றியமையாத தேவையான பொருட்கள் குறைவின்றி அளவாக திட்டமிடப்பட்டு நகர விரிவாக்கம் நடைபெறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது தற்போதைய நவீன மயமாகும் உலகத்தின் வளர்ச்சியின் குறுக்கே நிற்கும் மிகப்பெரிய தடையாக விளங்குகிறது. முக்கியமாக இந்தியா போன்ற நாடுகள் அனைத்து வளங்கள் இருந்தும், இன்றும் மேலைநாடு களோடு போட்டி போடமுடியாததற்கு காரணம் மக்கள் தொகைப் பெருக் கமேயாகும்.

தந்தை பெரியார் 1930ஆம் ஆண்டு-களில் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய போது மக்கள் தொகைப் பெருக்கத் தினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை வலியுறுத்தினார். அப்போது மேலை நாடுகள் கூட மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிக் கவலைப்படா மல் உலகப்போரிலும், நாடுகளைப் பிடிக்கும் பேராசையிலும் திளைத் திருந்த காலகட்டமது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சீர்திருத்த நட வடிக்கைகளைக் கேட்டு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இன்று மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார, சுகாதார, மற்றும் வசிப்பிட நெருக்கடி நமக்கு ஏற்பட்டிருக்காது.

தந்தை பெரியார் 1930-ஆம் ஆண்டுகளிலேயே மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டார் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன் மொழிந்தார்.

ஆனால் இன்றைய காலகட்டத் திலும் மதவாதிகள் நிறைய குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுக்கூட்ட மேடைகளில் பேசி வருகின்றனர்.

அளவிற்கு மிஞ்சும் போது அது அமிழ்தானாலும் நஞ்சாக மாறிவிடும். இந்த முதுமொழி வேறு எந்த வகையில் ஒத்துப்போகிறதோ இல்லையோ இன்றைய காலகட்டத் தில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு பெரிதும் ஒத்துப் போகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் இடப்பற்றாக்குறை நகரவிரிவாக்கம் விளைநிலங்கள் அழிப்பு என தொடர் பாதிப்புகள் மக்கள் தொகை பெருக் கதால் ஏற்படுகின்றன. தற்போதைக்கு இப்பரந்த பெரு வெளியில் பூமி மட்டுமே நாம் உயிர் வாழ ஏற்ற ஒரே ஒரு இருப்பிடமாகும். இது நமக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

- சரவணா ராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/83820.html#ixzz37AUoX3QQ

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்

தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடையாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப் பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித் திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக்கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள்ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

Read more: http://viduthalai.in/page-7/83854.html#ixzz37AVlHA2V

தமிழ் ஓவியா said...


கடவுளானாலும் சட்டம் ஒன்றுதான் நடைபாதைக் கோவில்களை அகற்றுக!



கருநாடக உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க தீர்ப்பு

பெங்களூர் ஜூலை 12-_ நடைபாதைக் கோயில் களை அகற்றலாம் கடவு ளானாலும் சட்டம் ஒன்று தான் என்று கருநாடக உயர்நீதிமன்றம் சிறப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்பு அகற் றுவதில், மனிதர்களானா லும் கடவுள்களானாலும் சட்டம் ஒன்றே என்று கருநாடக உயர்நீதிமன்றம் கருத்தறிவித்துள்ளது..


நடைபாதைகளில் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளால், குழந்தை களும் மற்றவர்களும் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. அத னால் ஏற்படும் விபத்து களில் அவர்கள் இறக்கும் நிலைகளும் உண்டாகின் றன. நடைபாதைகளில் நிறுவப்பட்டுள்ள சிலை முக்கியமானதா? அல்லது சிறுவர்களின் உயிர் முக்கியானதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது. பெங்களூர் நகரில் உள்ள பெரும் பாலான நடைபாதை களை கோயில்களும் கடவுள் சிலைகளும் ஆக்ரமித்துள்ளதாக, பெங்களூர் பெருநகர மன்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத் துரைத்தபோது, தலைமை நீதியரசர் டி.எச். வகேலா, நீதியரசர் எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 09.07.2014 அன்று மேற்கண்ட கருத்தைக் கூறியது.

உயர்நீதிமன்றம் ஏற் கெனவே அறிவுறுத்தி யதன் பேரில் பெங்களூரு மாநகரத்தில் உள்ள நடைபாதைகளின் நிலை குறித்த பெரு நகர மன்ற ஆணையர் நடத்திய கள ஆய்வின் அடிப்படையில் பகுதிவாரியாகப் பிரிக்கப் பட்டு அவற்றுள் எவை அகற்றப்படக் கூடியன; எவை அகற்ற இயலாதன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக வழக்குரைஞர் கூறினார்.. கோயில்கள் போன்ற அகற்ற இயலாத ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் சிக்கல்கள் உள்ளதாக வழக்குரைஞர் கூறிய போது குறிக்கிட்ட நீதி யரசர்கள், அத்தகைய ஆக்ரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடை யாக இருப்பது எது? நடை பாதைகளில் உள்ள ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் மனிதர்களானாலும் கட வுள்களானாலும் சட்டம் ஒன்றே. நடை பாதை களில் நிறுவப்பட் டுள்ள சிலைகள் முக்கியமான வையா? அல்லது சிறுவர் களின் உயிர் முக்கியான வையா? என்று கேட்டனர்.

நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட உரிய அதிகாரி களுக்கு ஆணையிட வேண் டுமென்று ஜெனிபர் பிண்டோ, பிரியா ராவ் ஆகி யோர், கடந்த ஆண்டு தொடுத்த பொது நல வழக்கின் விசாரணையின் போது கருநாடக உயர்நீதி மன்ற நீதியரசர்கள் தெரி வித்த பொருள் பொதிந்த அறிவு நாணயம் மிக்க கருத் துரைகள் பெங்களூருக்கு மட்டுமன்று; இந்தியா வுக்கே பொருந்துவதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/83907.html#ixzz37JMESYuK

தமிழ் ஓவியா said...


கருநாடக நீதிமன்றத்தில் நியாயத் தீர்ப்பு

கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எச். வகேலா, எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நடைபாதைகளில் ஆக்கிரமித்துள்ள கோவில்களை அகற்றிட வேண்டும் என்று ஜெனிபர் பிண்டோ, பிரியாராவ் ஆகியோர் கடந்தஆண்டு கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

நடைபாதைப் பகுதிகளில் உள்ள கோவில் ஆக்கிரமிப்புகளால் குழந்தைகளும், பெரியோர்களும், பொது மக்களும் சாலை விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெங்களூரு மாநகரத்தில் நடைபாதைக் கோவில்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் எவை அகற்றப்படக் கூடியவை? எவை அகற்ற இயலாதவை? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு வழக்குரைஞர் கூறியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு, அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது? நடைபாதைகளில் உள்ள கோவில்கள் முக்கியமா? அல்லது சிறுவர்களின் உயிர்கள் முக்கியமா? நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச் சினையினை மனிதர்களானாலும், கோவில்கள் ஆனாலும் சட்டம் ஒன்றே இதில் விதி விலக்குக் கிடையாது - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறாராகக் கருத்து கூறினார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது ஒன்றும் புதுத் தீர்ப்போ, ஆணையோ அல்ல. உச்சநீதி மன்றமே இதைவிட அழுத்தமாக தீர்ப்புக் கூறியுள்ளது.

பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங் களில் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காலி செய்வதில் தன் இயலாமையை பல நேரங்களில் அரசுகள் காட்டி வருகின்றன. இந்தக் கோவில்களில் எவ்விதப் புனிதமும் கிடையாது. பொதுப் பயன்பாட்டுக்கும் போக்குவரத்துக் கும் இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும்போது பிரச்சினைகள் உருவாகும் நிலை உண்டு என்றாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை அரசுதான் நிர்ணயிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்தத் தீர்ப்பு வெளி வந்தது. 2006இல்.

அதன் தொடர்ச்சியாக 2010 செப்டம்பரில் இதே உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்தது. பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் (14.9.2010).

தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் நடைபாதைகளில் கட்டப்பட் டுள்ளன. அதன் எண்ணிக்கை 77,450. ராஜஸ்தானில் 58,253, குஜராத்தில் 15,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அதே நேரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கோவில் கூடக் கிடையாது என்று அம்மாநில அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டதை நீதிபதிகள் நாகரிகமான மாநிலம் என்ற வார்த்தைகளைக் கூடப் பயன்படுத்தினர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அனுமதியின்றியும், பொது மக்களுக்கு இடையூறாக கோயில்களைக் கட்டுவது அநாகரீகம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தீர்ப்புக் கூறியிருப்பது தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிற திராவிடர் கழகத் தலைவரோ அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பதை மறந்து விடக் கூடாது.

சட்டத்தின் முன் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை அரசுகள் உணருமா? ஊடகங்களும் இந்த வகையில் வலியுறுத்துமா?

காலந் தாழ்ந்தாலும் மாநில அரசுகள், உள்ளாட்சித் துறைகள் செயல்படுத்துமா? எங்கே பார்ப்போம்!

யாருக்காவது கோவில்களை இடிப்பதில் தயக்கம் அச்சம் இருக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கழகம் தயாரே! கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது கழகத் தலைவர் அன்னை மணியம் மையார் சொன்னதுதான் இது. (21.9.1975).

Read more: http://viduthalai.in/page-2/83923.html#ixzz37JMSrO9U

தமிழ் ஓவியா said...


தலையெழுத்தாம்


ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.
(குடிஅரசு, 6.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/83922.html#ixzz37JMb0hWG

தமிழ் ஓவியா said...


புரட்டு


பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.

கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல் வதுண்டு. நாட்டில் செய்யப்படும் வதுக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு.

அவ்வாறாகவே பஞ்சமர்கள் என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும், கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.

இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்று கிறோம்.

தீர்மானத்தைச் சபையின்முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்துவிடும் என்ற புரட்டுச்சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார்.

மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும், ஊக்கமும், அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாசிரமிகள்) வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.

கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்குண்டு கிடக்கும் காலத்திலே ஜாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமையடைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11. 05.1930

Read more: http://viduthalai.in/page-7/83875.html#ixzz37JNBvGjt

தமிழ் ஓவியா said...


சிவகாமி - சிதம்பரனார் புனர் (மறு) விவாகம்

இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து, மெய்க்காதல் கொண்டு, தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்து வதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது, ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.

பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை யான கொள்கையுடைய சுயமரி யாதை இயக்கம் தோன்றி, இன் றைக்கு 4, 5 வருஷங்களே யாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரி யாதைத் திருமணங்கள் நடந்தேறி யிருப்பது உங்களுக்குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.

இத்திருமணத்தில் தாலி கட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டி ருக்கிறது. கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக நடத்தி வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து கலியாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும், பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்ப தற்குமென்றே கருதப்பட்டு வருகிறது.

அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா?

அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்டவேண்டும். அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்த தோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேக மில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள் ளலாம்.

கணவனையிழந்த கன்னிகை, தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப் பாட்டில் கழிக்கவேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமிபோல தைரியமாய் முன்வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரிக மான செய்கை யென்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய எதிர்ப் பையும், இடைஞ்சலையும், மூடக் கட்டுப் பாடுகளையும் உதறித்தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடுகூடிய செய்கைகளையும், நடவடிக்கை களையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக் கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.

(05-05-1930 தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கும்பகோணம் பிரபல மிராஸ்தாரும், முனிசிபல் கவுன்சிலரும் ஆனரிமேஜிஸ்திரேட்டுமாகிய உயர்திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் செல்வி திருமதி சிவகாமி அம்மைக்கும் தமிழ் பண்டிதர் சாமி. சிதம்பரனார் அவர்கட்கும் ஈரோடு திரு.ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் 2ஆவது சுயமரியாதை மகாநாட்டுக்கென அமைந்திருந்த சிங்காரக் கொட்டகையில், திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் நடத்திவைத்த (தாலி கட்டுதல் ஒழிந்த) திருமணத்தில் பேசியது ).

- குடிஅரசு - சொற்பொழிவு - 11.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNPVS6m

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடு களைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNfggpu

தமிழ் ஓவியா said...


கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு


கணிதவிய லில் 50 ஆண்டு களுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்க லான கோட் பாட்டுக்கு இந் தியாவைச் சேர்ந்த நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக் காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனி யல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணித வியல் மற்றும் தொழில்துறையியல் கூட்ட மைப்பு சார்பில் ஜார்ஜ் போல்யா-2014 என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்.

குவாண்டம் மெக்கானிக்ஸ் உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடு களுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959 ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளி யிட்டனர். ஆனால், அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், அதற்கு நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ் போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/83883.html#ixzz37JOH9xoF

தமிழ் ஓவியா said...


உறவினரும் கொள்கையும்!


தந்தை பெரியார் அவர்களின் தொண் டர்களாகிய நமக்குப் பல நேரங்களில் எதிரிகளை விட உற்றார் உறவினரே பெரும் இடர்ப்பாடு தருகின்றனர். இது தந்தை பெரியாருக்கே நிகழ்ந்தது தான் நமக்கெல்லாம் சிரிப்பு மூட்டும்.

ஈரோட்டிலே முனிசிபல் தலைவராக இருந்து ஆச்சாரியார் அவர்களே உமது சுகாதார அதிகாரியைச் சேலத்திற்குக் கொஞ்ச நாள் கடன் தரவும் என்று வேண்டிய அளவு நன்மைகள் செய்தவர். குடிநீர் வசதிக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டி, குழாய்களில் தண்ணீர் வரும்படிச் செய்தவர்.அதில் தீட்டு கழுவித் தண்ணீர் பிடிக்கும் நிகழ்ச்சியை நாம் பெரியார் படத்தில் பார்த்தோம்.

கடைசிவரை தந்தை பெரியார் அவர்களின் தாயார் அந்தக் குழாய் நீரைப் பயன் படுத்தாமல் ஆற்றிலிருந்து நீர் பிடித்து வந்துதான் பயன்படுத் தினார்களாம்.அய்யாவும் கடைசியில் ஏன் என்று பிடிவாதமாகக் கேட்க, அம்மா அந்தத் தண்ணீர் சுத்தமில்லாதது என்றாராம்.

ஒன்றும் புரியாத பெரியார் எப்படிச் சுத்தமில்லை என்று கேட்ட தற்கு அம்மா அளித்த பதில் நம் ஒவ் வொருவருக்கும் கன்னத்தில் கொடுக்கும் அறை போன்று அந்தக் காலத்தை நினை வூட்டும்.

" குழாய் தண்ணீரெல்லாம் சரி தான். ஆனால் அந்தப் பம்பு சுவிட்ச்சைப் போடும் ஆள் கீழ்ச்சாதிக்காரர்" என்றா ராம்.

இன்று நமது உற்றார், உறவினர் செய்கைகள் பல நமக்குச் சங்கடத்தைத் தருவது நம்மில் பலருக்கு வெட்கமும், வேதனையும் தரக்கூடியது என்றாலும் நாம் தலைவர் பெரியாரைப் போலவே பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர கோபமோ,முரட்டு வார்த்தைகள் வரும் படியோ வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன படி "அவர்கள் சுபாவம் அது" என்று அவர் களுக்குத் துணிவில்லை, அறிந்தது அவ் வளவு தான் என்று எடுத்துக் கொண்டு அன்பு காண்பிக்க வேண்டுமே தவிர ஒதுங்கக் கூடாது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த எதிரிகளின் வார்த்தைகளைப் பற்றிக் கவலை படக் கூடாது.

எனது மகள் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமெரிக்காவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் வரவேற்பு வைத்திருந்தோம். அதை விரும் பாத எனது மாமியார் வரவில்லை. அவர்களைப் பார்க்கச் சென்ற மணமக்களைப் பார்க்கவும் இல்லை. இது வளர்ந்து எனக்கும் அவர்களுக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தையே இல்லை. ஆசிரியர் அய்யா கூட நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லியும் நான் போக வில்லை. எப்படி ஆசிரியர் அவர்கள் கொள்கைக்காக தனது மாமனாருக்குக் கொள்ளி வைக்க மாட்டேன் என்று மாமியார் கொள்ளி வைக்காவிட்டால் அவ்வளவு சொத்துக்களையும் கிருத்துவ மிசனரிக்கு எழுதிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும், தந்தை பெரியார் அவர்களும் " நெருப்புத் தானே, வைத்து விடு, அவ்வளவு சொத்துக்களும் போகப்போகின்றதே என்று சொல்லியும், வைக்க மறுத்துக் கடைசிவரை அவ ருடன் பேசாமலே இருந்தாரே அது மாதிரி நம்மில் பலருக்கு நேர்ந்துள்ளது.


தமிழ் ஓவியா said...

எனது மாமியார் கடும் உழைப்பாளி. நல்ல அறிவாளி. அத்தனை குழந்தை களையும் நன்றாகப் படிக்க வைத்து அனைத்தும் செய்தவர்.இரண்டு பெண் களையும் மருத்துவர்களாக்கி மகிழ்ந்தவர் எனது மாமனார் தனது பிள்ளைகளை விடத் தனது உடன் பிறப்புக்களுக்குத் தான் எல்லாம் செய்கின்றார், என்ற நமது அனைவர்க்கும் பழக்கப்பட்ட தொடர்கதை வசனந்தான். அதுவே என் துணைவியாரும், அவரது தங்கையும் இரண்டு குடும்பங்களும் நம் குடும்பங்கள் தான் என்று மனமாரச் செய்ய வழி செய்து விட்டது.

எனது அம்மா அமெரிக்காவில் பலகாலம் வாழ்ந்தாலும் கடைசியில் ஊருக்குத் தான் செல்ல வேண்டும் என் றார். ஏன் என்றால் இங்கே அமெரிக் காவிலே என்னைப் பெட்டியிலே போட்டு அனுப்பி விடுவாய். எனக்கு உற்றார், உறவினர் அனைவரும் வந்து கொட்டி, முழக்கித்தான் செல்ல வேண் டும் ,என்றார்கள். நான் அதெல்லாம் பார்க்க முடியாதே, காதிலேயும் விழாதே என்றேன். அதெல்லாம் எனக்குத் தெரியும், விழும் என்று சொல்லி, ஏன் மானமிகு ஆசிரியரின் இரங்கலுரை யையும் கேட்டுத் தான் சென்றார்கள். அவர்கள் கடைசியாக ஊருக்குப் போகப் போகின்றார்கள் என்பதால் உறவினர், நண்பர்கள் (அம்மாவுக்கு அமெரிக்கா வில் நிறைய நண்பர்கள் )அனைவரையும் வரச் சொல்லி பிரிவு விழா நடத்தினோம். அதில் பேரக் குழந்தைகளும், நண்பர் களும் ,ஒவ்வொருவரும் அப்பா, அம்மா விற்கு அவர்களைப் பற்றிச் சொன்னது அனைவரையும் அழ வைத்து விட்டது. இதை நான் பலரிடம் சொவதுண்டு. வய தானவர்கட்கு அவர்கள் இருக்கும் போதே விழாக்கள் நடத்த வேண்டும், சென்ற பின் சொல்வது அவர்களுக்குக் கேட்காது என்று.

ஒரு வழியாகச் சென்ற முறை ஊருக்கு வந்த பொழுது என் துணைவி யாரின் பெரு முயற்சியாலும், மாமியாருக் கும் கடைசிகால அச்சம் வந்ததாலும் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து எனது அப்பா அம்மா படங்களுக்கு வருத்தமும், வாழ்த்தும் தெரிவிக்க உறவு மீண்டது. நிற்க முடியாமல், திருவெறும் பூர் பெரியார் மணியம்மை செவிலியர் பயிற்சி மாணவியர் உதவியுடன் நின்று அவரது கையாலேயே செய்த அற்புத மீன் குழம்பைச் சாப்பிட்டு வந்தேன். அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனை வரும் சென்று பார்த்து விடை பெற்றும் வந்தனர். அவர் விருப்பப் படியே எளிமையாக அவர் இறுதி நிகழ்வுகளும், படத்திறப்பும் நடந்தது. நமக்குப் பிடிக்காத மந்திரங்கள் நிகழ்வுகளும் அவர் விருப்பப் படி நடந்தது.

அடுத்து நமக்கெல்லாம் பெரிய இடர் ப்பாடு நமது குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இல்லத் திருமணங்கள். இதிலேயும் நாம் எவ்வளவு தான் மந்திரங்களின் பொருளை விளக்கிச் சொல்லி வெட்கப் பட்டாலும், இன்றும் பலர் அர்த்தமற்ற மத வழித் திருமணங் கள் நடத்துகின்றனர். அதில் நாம் பெண்ணின் பெற்றோர்கள் என்றால் கட்டாயம் மணமகன் இல்லத்தார்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. நான் சென்னையில் தங்கும் போது வசதிக்காக நியூ உட்லண்ட்சு விடுதியில் தங்குவேன்.அங்கு பார்க்க வந்த பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா வேல் சோமசுந்தரம் அவர்கள் பார்ப்பன விடுதி என்று காபி குடிக்க மறுத்து விட்டார். அவருக்கே அவரது பெயர்த்தியின் மணவிழா நடந்தது பெரும் இடர்ப்பாடாகி விட்டது. விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. இது நம்மில் பலருக்கு நிகழும் போது எதிரி களின் பேச்சுக்கள் பற்றிக் கவலையில்லை என்றாலும், நமது கொள்கையை நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கே செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மகிழ்வைக் குறைத்து விடுகின்றது.

இதையெல்லாம் மானமிகு ஆசிரியர் அவர்கள் நமது கொள்கைக் குடும்பத் தினர்க்கே, எனக்கும் சேர்த்துத் தான் ,அறிவுரைகள், ஆறுதல்கள் வழங்கி அய்யா வழியில் "அவர்கள் சுபாவம்" ஆனால் எதிர் காலம் நமது தான் என்ற உறுதியைச் சொல்வார்கள். காலம் மாறித்தான் வருகின்றது. நாம் நமது கொள்கையைக் கடைப்பிடிப்போம், உற்றாரும் ,உறவுகளும் திருந்தும் காலம் வரும். அது வரை பொறுமை காப்போம், அவர்களிடம் அன்பு செலுத்துவோம், கோபம் தவிர்ப்போம்.

வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு.

- சோம.இளங்கோவன் (அமெரிக்கா)

Read more: http://viduthalai.in/page2/83871.html#ixzz37JOTrt85

தமிழ் ஓவியா said...


கடவுளை பரிகாசம் செய்யலாமா?


சிவன் தன் பாரியாளுடன் 3,60,000 நாட்கள் கலவி செய்துள்ளான். அதனால் வந்த விந்தை சூன்ய வெளியில் பீச்சி அடித்துள்ளான். அதை அக்னி பகவான் எடுத்து குளிக்க வந்த பெண்களிடம் கொடுக்க அவர்கள் பெற்றவுடன் குழந்தைகளாய் மாறிவிட அந்த ஆறும் ஓரிடத்தில் வைக்க ஆறும் ஓருடலாயும் தலை ஒன்றாகவும் மாறி நின்றுள்ளது. அதுதான் ஆறுமுக கடவுளானது.

சிவன் 3,60,000 நாட்கள் தன் மனைவியுடன் கலவி செய்ததை பார்த்து எண் ணியவன் யார்? ஆறு குழந்தைகளும் உடல் ஒன்றானது - தலை மாறாதது ஏன்? முருகக் கடவுளுக்கு மனைவிகள் இரண்டு இவருக்கு குழந்தை இல்லை. ஏன்?

கடவுள் சிலை செய்து அதற்கு கோவில் கட்டி பிரதியாண்டும் திருமணம் செய்கிறோம் எல்லாம் கொடுக்கும் கடவுள் செயலைக் கண்டு இப்படியெல்லாம் எழுதி கேளிக்கையாக்கி கும்பிடுவது சரியா?

- மா. சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page2/83872.html#ixzz37JPD4Ysl

தமிழ் ஓவியா said...

மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?


- கி.தளபதிராஜ்

தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்? 1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர். "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.

"நாடார் சகோதரர்களை உண்மை யான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தன மான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள். நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார். கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

தமிழ் ஓவியா said...

"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது. 1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.

திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்? எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன? தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது. மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?

1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.

மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார். கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/83884.html#ixzz37JQFXF9R

தமிழ் ஓவியா said...


தாய்வழி பாட்டனாரின் சொத்தில் தந்தையின் உரிமை என்ன? சட்டம் என்ன சொல்கிறது?




பரம்பரை சொத்துப் பங்கீட்டில், பல்வேறு சட்டசிக்கல்கள்இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளன. இவற்றில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படாததே, பல்வேறு குடும்பங்களின் சொத்துப் பங்கீடு தொடர்பான வழக்குகள் அதிகரிக்க, முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் தந்தையின் பெயரில் உள்ள, அவரின் சுய சம்பாத்திய சொத்துக்கள், அவர் காலத்துக்கு பின் யார் யாருக்கு சென்று சேர வேண்டும் என்பது, அவரது விருப்பத்தை பொறுத்தது. ஆனால் பரம்பரை வழியாக, அவரது பெயருக்கு வந்த சொத்தில் இப்படி அவர் செயல்பட முடியாது. அந்த சொத்து தனக்குப்பின், யாருக்கு சேர வேண்டும் என்று சட்டம் சொல்கிறதோ, அதன் படியே செயல்பட வேண்டும்.

இதில் குறிப்பாக பரம்பரை, ஒரு பொண்ணுக்கு வரும் சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகிடும். அந்த மனைவி இறந்து விட்டால் அந்த சொத்துகள், அவரது கணவரின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதை அவர் யார் பெயருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். இது போன்ற சமயங்களில், அந்த கணவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் முன்னோர் வாயிலாக வந்த சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்.

இதில் மறுமணத்துக்கு பின் பிறக்கும் குழந்தைக்களுக்கும், அவர் அவர் பங்கு கொடுக்கலாம். சட்டம் இதை ஏற்கிறது. ஆனால் நடைமுறையில், முதல் மனைவியின் வாரிசுகள், இதை ஏற்பது அரிது. ஒரு வேளை மறுமணத்துக்கு பின் அவருக்கு குழந்தைகள் பிறக்காவிட்டால், முதல் மனைவியின் வாரிசுகள், தங்களுக்குள் பேசிவைத்து, சொத்தை பங்கிட்டுக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு அம்சமாக அந்த கணவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது முதல் மனைவியின் வாரிசுகள் சொத்து மீதான உரிமையைப் பெறுவர். இதுபோன்ற சொத்துகள், விற்பனைக்கு வரும்போது, அது, அப்போது, யார் வாயிலாக, தற்போதைய உரிமையாளருக்கு வந்தது. இதற்கு அடுத்து யார், யாருக்கு அதில் உரிமை உள்ளது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது என்கின்றனர், கட்டுமான வல்லுநர்கள்.

- குடிமக்கள், ஆனி/ஜூன் 2014

Read more: http://viduthalai.in/page3/83885.html#ixzz37JQmYImw

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தீர்த்தம் எத்தகையது?


பம்பை நதியில் சேரும் அசுத்தங்களால் நீரில் நோய்க் கிருமிகள் அபாய நிலையைவிட மிக அதிக அளவில் உள்ளன என கேரள மாநில சுற்றுச்சூழல் துறையினர் எச்சரித்துள்ளனர். சாதாரணமாக 100 மி.லிட்டர் நீரில் 500 கோலிபாம் கிருமிகள் வரை, இருக்கலாம் இதுவே சற்று கடுமையான நோய்களை உண்டாக்கும் அளவாகும். சில தினங்களுக்கு முன்னர் பம்பை நதியில் 100 மி.லி. நீரில் 3000 அளவு கோலிபாம்கள் இருந்தன.

தற்போது பம்பை நதியில் குறைந்த அளவு நீர்வரத்து இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்காக வலியானை வட்டம் அருகே உள்ள நிரந்தர தடுப்பணை மதகுகளை அடைத்து வைத்துள்ளனர். பம்பை திரிவேணி சங்கமத்துக்கு மேலே மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிக்கு மேலே சென்று அறுசெழிக்குழி ஆற்றில் குளித்தும், துணிகளைத் துவைத்தும் அசுத்தப்படுத்துகின்றனர்.

ஹக்கி ஆற்றின் கரையில் பேருந்து நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வரும் பக் தர்கள் கழிவறைகளைப் பயன்படுத்தாமல் ஆற்றங்கரைகளை அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், சிறியான வட்டம் அருகே நுனுஞான் ஆற்றங்கரையில் உள்ள விரிகளில் தங்கியுள்ள பக்தர்கள் இந்த ஆற்றைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின் றனர். பலர் சமையல் செய்து சாப்பிட்டபின் எச்சில் இலை மற்றும் கழிவுகளை ஆற்றில் போடுகின்றனர்.

செழிக்குழி, ஹக்கி நுனஞான் ஆறுகளில் வரும் சிறிய அளவிலான நீர் பம்பையில் சேருகிறது. மொத்த நீரும் தேக்கி வைக்கப்பட்டு தடுப்பணைக்கு மேலே வழிந்தோடுகிறது.
பக்தர்கள் குளிக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் துறையினர் செவ்வாய்க்கிழமை நீரை ஆய்வு செய்தனர். அப்போது 100 மி.லிட்டர் நீரில் 5000 கோலிபாம் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை யினர், குடிநீர் எடுக்கும் பகுதி மற்றும் அசுத்தமாக்கப்படும் பகுதிகளில் அசுத்த மாக்கப்படுவதைத் தடுக்கவும், பம்பை நீரை சுத்தம் செய்யவும் கோரியுள்ளனர்.

நன்றி: தினமணி நாளிதழ் நாள்: 7.1.1999

Read more: http://viduthalai.in/page3/83891.html#ixzz37JRqODDV

தமிழ் ஓவியா said...


கேபினட்டில் உயர் சாதியினர்...


மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் சாதியினர். என்னென்ன சாதியினர்? பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசியர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதியினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸூம் கேபினட்டில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் இருவர் தலித்துகள், ஒருவர் பழங்குடி இனத்தவர்.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10: தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் 5 பேர் உயர் சாதியினர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர் ஒருவர். 12 இணை அமைச்சர்கள்: இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 3 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியினருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ்வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page3/83892.html#ixzz37JS1Tnxl

தமிழ் ஓவியா said...


கேபினட்டில் உயர் சாதியினர்...


மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் சாதியினர். என்னென்ன சாதியினர்? பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசியர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதியினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸூம் கேபினட்டில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் இருவர் தலித்துகள், ஒருவர் பழங்குடி இனத்தவர்.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10: தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் 5 பேர் உயர் சாதியினர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர் ஒருவர். 12 இணை அமைச்சர்கள்: இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 3 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியினருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ்வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page3/83892.html#ixzz37JS1Tnxl

தமிழ் ஓவியா said...


அன்று விடுதலை வெளியிட்ட சவால்!

சென்னையைச் சார்ந்த எஸ்.ஆர்.எஸ். சர்மா என்ற பார்ப்பனர் பாதரசத்தைப் பயன்படுத்தி சிவலிங்கம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபற்றிதினமணி ஏடு வெளியிட்டி ருக்கும் செய்தி இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.

இந்த திட்டத்தில் இறங்குவதற்கு முன் இந்த பார்ப்பனர் காஞ்சி சங்கராச் சாரியாரை சந்தித்து ஒரு சிறிய பாதர சலிங்கம் ஒன்றை அவரிடம் கொடுத்து - _ ஆசிபெற்றுக் கொண்டார். பிறகு - சிவலிங்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் இதற்கு 60 கிலோ எடை யுள்ள பாதரசம் தேவைப்பட்டது. இதில் 35 கிலோ மெக்சிகோவிலிருந்து வரவ ழைக்கப்பட்டது இதற்கு ஒரு லட்சம் நன்கொடையாகப் பெறப்பட்டது. அந்த பார்ப்பனர் தன்னுடைய மந்திர சக்தி மற்றும் தியானத்தின் மூலம் திரவ வடிவில் இருந்த அந்த பாதரசத்தைக் கெட்டியாக்கினார்.

மகாசிவராத்திரி அன்று இதை 27 செ.மீ. உயரமுள்ள லிங்கமாக அவர் உருவாக்கினார்.

100 டிகிரி உஷ்ணம் கொண்ட ஒரு பாத்திரத்தில் 5 நாட்கள் இதை வைத்து மந்திரங்களை ஓதி, அதில் இருந்த உலோகங்களை அகற்றினார்.

பிறகு, இதைப் புனிதப்படுத்த தமஷ்ட்ரகராண ருத்ர ஹோமம் நடத்தினார். இந்த லிங்கத்தை பிர திஷ்டை செய்வதற்கு முன் அதற்கு சக்தி கொடுக்க ஆருத்ரா ஹோமம் செய்யப் போகிறார்; இதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்
இவ்வாறு தினமணி ஏடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

பித்தலாட்டம்: பாதரசத்திலிருந்து _ சிவலிங்கம் உருவாக்க மந்திர சக்திகளும் யாகங்களும் கை கொடுத்தன என்றும் இப்படி தயாரிப்பது ஒரு அபார சாதனை என்றும் பார்ப்பன ஏடுகள் எழுதியிருப்பது (உண்மைக்கும், விஞ்ஞானத்துக்கும் எதிரான, ஒரு பித்தலாட்டம் என்பதை, ஒரு விஞ்ஞானி சவால் விட்டுக் கூறியிருக்கிறார்.)

இதுபற்றி அந்த விஞ்ஞானியிடம் நாம் கேட்டபோது -_ அவர் கீழ்க்கண்ட வினாக்களை முன் வைத்தார். 1. பாதரசத்தை திடப் பொருளாக்க மந்திர சக்தியும் தியானமும் பயன் படுத்தப்பட்டது என்று யாரிடம் கதை விடுகிறீர்கள்? பாதரசம் இரும்பைத் தவிர மற்ற எல்லா உலோகங்களுடன் சாதா ரண வெப்ப நிலையிலேயே கூடி திடப் பொருளாக மாறக் கூடியது என்பது அடிப்படை விஞ்ஞானம்; இந்த பொற் கொல்லர்கள், தங்கத் தூள்களை சேகரிக்க பாதரசத்தைப் பயன்படுத்துகின்றனர். இது சாதாரணமாக அன்றாடம் பொற்கொல்லர்கள் செய்து வரும் தொழில்! ஆனால் ஒரு பார்ப்பனர் சிவலிங்கம் செய்து விட்டார் என்றவுடன் அதற்கு இப்படி ஒரு போலிப் பெருமையை ஏற்படுத்துவதா?

2. திரவ நிலையில் இருக்கும் பாதர சத்தை திடப் பொருளாக மாற்ற, மந்திர சக்தியோ யாகமோ பயன்படாது; சாதா ரண துத்தநாகத்தூளை சேர்த்தாலே போதும் திடப் பொருளாக மாறி விடும் இதுதான் விஞ்ஞான உண்மை! இப்படி விஞ்ஞான முறைகளைப் பின்பற்றாமல் வெறும் மந்திரத்தால் மட்டுமே அந்த பார்ப்பனர் பாதரசத்தை திடப் பொரு ளாக பொது மக்கள் முன்னிலையில் மாற்றிக் காட்டத் தயாராக இருக்கிறாரா? சவால் விட்டுக் கேட்கிறோம்!

3. 100 டிகிரி வெப்ப கொதி நீரில் கொதிக்க வைத்து பாதரசத்தில் உபரியாக இருந்த பாதசரம் ஆவியாகி விட்டதாம்? காதிலே பூ சுற்றுகிறார்கள்! 100 டிகிரி வெப்பத்திலே பாதரசம் ஆவியாகப் போய் விட்டது என்று சொன்னால், விவரம் புரிந்தவர்கள் கை கொட்டித்தான் சிரிப்பார்கள்! இந்த வாதப்படி பார்த்தால் -_ தெர்மா மீட்டர் 100 டிகிரிக்கு அதிக வெப்பத்தைக் காட்டினால் உடனே பாதரசம் ஆவியாகப் போய் விடும் என்கிறார்களா? அப்படியானால் தெர்மா மீட்டரை இனி மேல் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான்!

4. உலகத்திலேயே மிகவும் அரிதாக வரும் பொருள்களில் பாதரசமும் ஒன்று வளர்ந்துவரும் விஞ்ஞானப் புதுமை களுக்குப் பயன்படக் கூடிய இந்த அரிய பொருளைப் பயன்படுத்தி சிவலிங்கம் செய்கிறார்கள் என்றால் இப்படிப்பட்ட வீண் விரயங்கள் தடுக்கப்பட வேண் டாமா?

இந்த மோசடிச் செய்திகளைத் தந்த, அந்தப் பார்ப்பனரானாலும் --_ அவருக்கு ஆசீர்வாதம் தந்த சங்கராச்சாரியானா லும், அதை வெளியிடுவதில் அற்ப மகிழ்ச்சி காணும் பார்ப்பன ஏடுகளானா லும் விடுதலை சார்பில் அனைவருக்கும் சவால் விட்டுக் கேட்கிறோம், துணி விருந்தால் இந்தச் சவாலை ஏற்கட்டும்.

வெறும் மந்திர சக்தியால் இவைகள் நடந்தன என்பதை நேரடியாக நிரூபித்துக் காட்டத் தயாரா?

மந்திர சக்தி எதுவும் இல்லாமல் கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்களே - அந்த சிவலிங்கத்தை செய்து காட்டவும் தயாராக இருக்கிறோம், இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்த பார்ப்பனர் தயாரா?

-விடுதலை 23.7.1983

Read more: http://viduthalai.in/page8/83898.html#ixzz37JSfTajF

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர்கள் என்றும் வெற்றியாளர்கள்....!


ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரத்தினைச் சார்ந்த தோழர் பகுத்தறிவாளர் செல்வபாண்டியன் அவர்தம் குடும்பத்தினர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் எமரால்ட் ஒளிவண்ணன் அவர்கள் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் இருந்தார் (9.7.2014, இரவு 8 மணி).

செல்வபாண்டியன் அவர்கள் உலகப் புகழ் பெற்ற மெல்பெர்ன் ஸிமிவிஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பேராசிரியராக பணி புரிகிறார். சமீபத்தில் இப்பல்கலைக்கழகம், சிறந்த பேராசிரியர்கள் என்ற வகையில் செல்வபாண்டியன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.

அவரது மகன் எழிலன் பொறி யியல் துறை மற்றும் மேலாண்மை துறை இவற்றில் ஒரே நேரத்தில் பயின்று பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவ ராக தேர்ச்சிப் பெற்று விருது வாங்கியவர். செல்வ பாண்டியன் அவர்களது வாழ்விணையர் சங்கமித்திரை கணிதப் பேராசிரியராக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். மகன் எழிலன் அவர்தம் வாழ்விணையர் சாருபிரபா இருவரும் சமீபத்தில் புதுச்சேரியில் மிக எளிமையான முறையில் சுயமரியாதைத் திருமணம் செய்துக் கொண்டனர்.

செல்வபாண்டியன் அவர்களது தந்தையார் திரு. சே.ப.வெங்கடேசன் அவர்கள் வேலூரில், அன்னை ஈ..ரா.மணியம்மையாரிடம் பெரியார் பெருந் தொண்டர் பட்டம் பெற்றவர். மூன்று தலைமுறையாக தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் போற்றி பின்பற்றி வரும் இக்குடும்பத்தினர் நம் பாராட்டுக்குரியவர்கள்.

பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள் என்றும் சோடை போனவர்கள் அல்லர், பெரும் சாதனை யாளர்கள் என்பதற்கு இவர்தம் குடும்பம் இன்னொரு எடுத்துக் காட்டு.
ஆசிரியர், வாழ்த்துகளை தெரிவித்தார். சிறிது நேரம் ஆசிரியரிடம் உரையாடிச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/83970.html#ixzz37LtKmExJ