Search This Blog

10.7.14

ஜாதி ஒழிய நாம் என்ன செய்ய வேண்டும்?மதத்தை ஏற்காதவர்கள் என்ன குறிப்பிடலாம்?

ஜாதி ஒழிய நாம் என்ன செய்ய வேண்டும்?
குற்றாலம் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பதில்கள்


 

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் (ஜூன் 29) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பயிற்சி மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்.

ஆந்திரா, கருநாடகா, கேரளா போன்ற மாநில மக்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லையா?

கேள்வி: நாம் அனைவரும் திராவிடர் என்று கூறுகிறோம்; ஆனால், நம்மிடம் இருக்கின்ற உணர்வு தமிழ் உணர்வுதான்; திராவிடம் என்றால் ஈழத் தமிழர் பிரச்சினையில், ஆந்திரா, கருநாடகா, கேரளா போன்ற மாநில மக்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லையே!

                                                                                                         ----------- கோபி, சென்னை

பதில்: குழப்பத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்து இது. தயவு செய்து இந்தக் கருத்துள்ளவர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். இதுவரையில் அவர்கள் சொன்ன கருத்து, ஈழத் தமிழர் பிரச்சினையில், யார் ஆதரிக் கிறார்கள்? யார் ஆதரிக்கவில்லை? என்பது அதற்கு அடிப்படையான கருத்தல்ல. திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றியதற்குக் காரணமே, ஒரு கலாச்சார அடிப்படையில், திராவிட மொழிகள், திராவிடக் கலாச்சாரம் வேறு. ஆரிய கலாச்சாரம் வேறு; என்ற ஒரு தெளிவான அடிப்படையில்தான் திராவிடர் என்பது புகுத்தப்பட்டது - 1944 இல்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் - அவர்கள் ஏற் கிறார்கள், ஏற்கவில்லை என்பது முக்கியமல்ல; திரா விடர்கள் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் இருந்தவர் கள். நாகர்களுக்கே திராவிடர்கள் என்று பெயர் என்று அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூலில் தெளிவா கவே எழுதியிருக்கிறார்கள்.

ஆகவே, திராவிடர் என்பதை, தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இங்கே இருக்கின்ற குழப்பவாதிகள் சில பேர், தமிழுக் காக, தமிழ்த் தேசியவாதிகள் என்றெல்லாம் முகமூடி அணிந்துகொண்டு, திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் சொல்கின்ற தவறான கருத்துக்குப் பலியாகிவிடாதீர்கள்.

திராவிடர் என்று சொல்வதே, பார்ப்பனர்களை இணைக்கக்கூடாது; தமிழர்கள் என்று சொன்னாலே, நிச்சயமாகப் பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று புகுந்து வருகிறார்கள். அவர்களும் தமிழ் பேசுகிறார்கள். தமிழர்கள் என்றால் யார்? நாம் தமிழர்கள் என்று சிலர் சொல்கிறார்களே, அவர்கள் பார்ப்பனர்களை நீக்கிச் சொல்கிறார்களா? பார்ப்பனர்களையும் சேர்த்துச் சொல்கிறார்களா? அதனை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டாலே, அந்தச் சூது உங்களுக்குப் புரிந்துவிடும்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் அவர்களும் தமிழர்கள் என்று சொல்கிறார்கள், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்; மீசை வைத்தியநாதய்யர், அவரும் உச்சகட்டத் தமிழராக உருவாகிக் கொண்டிருக்கிறார் பல வித்தைகள் மூலம்!

ஆகவே, நம்முடைய பண்பாடு என்பதிருக்கிறதே, அதனை அடிப்படையாகக் கொண்டுதான் தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் என்று சொன்னார்.
அது ரத்தக் கலப்பைப் பொறுத்ததும் அல்ல; திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம் என்பது இருக்கிறதே, ஒரு இனத்தின் அடிப்படையைக் கொண்டது; ஆரியத்திலிருந்து வேறுபட்டது; தனித்த கலாச்சாரம்; தமிழ் அதில் ஒரு மூலப் பகுதியே தவிர, வேறொன்றும் இல்லை.

இதிலே,

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த   பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்   கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்    கமழக் கலைகள் சிறந்த நாடு. வாழ்க வாழ்கவே...!

என்று சொன்னார்கள்.

ஆகவே, மற்றவர்கள் தமிழ் ஈழத்தை ஏற்கிறார்களா, இல்லையா என்பதைப்பற்றி கவலையில்லை.

உதாரணமாக, தமிழ் ஈழத்தை ஏற்காதவர்கள் ஈழத்திலேயே இருக்கிறார்கள். கருணாவினுடைய தத்துவம் என்ன? மிகப்பெரிய அளவிற்கு இப்பொழுது வழக்கில் மாட்டிக் கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தம் போன்ற வர்கள் இங்கே வந்து செல்கிறார்களே, பிரபாகரனுக்கு எதிராக இருக்கக் கூடியவர்கள் ஈழத்தை ஆதரிக் கிறார்களா? அங்கே, ஈழத் தமிழர்கள்தானே அவர்கள். தமிழர்கள் என்கிற பெயராலே அங்கே அமைச்சரவை யிலே இடமும்பெற்றிருக்கிறார்களே!

ஆகவேதான், தமிழ் ஈழப் பிரச்சினையை வைத்துக் கொண்டு, ஒரு குறுகிய வட்டத்திலே நின்று மட்டும் இதனைப் பார்க்காதீர்கள். பல பிரச்சினைகளிலே, தமிழ் ஈழப் பிரச்சினை ஒன்று. இது இப்பொழுது தோன்றிய பிரச்சினை அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரச்சினை.

திராவிடர் கழகம் என்பது முழுக்க முழுக்க அடிப்படை யிலேயே திராவிடர் இனம், திராவிடர் கலாச்சாரம், திராவிடர் மொழி, ஆரியத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என்பதைத் தெளிவாக வைத்திருப்பது - தமிழன் என்று சொன்னால், பார்ப்பனர்களும் தமிழர்தான் என்ற அளவிலே வந்திருப்பார்கள், மிகத் தெளிவாக.

மறைமலையடிகளார் போன்றவர்கள் பார்ப்பனர் தமிழர் அல்லர் என்று தெளிவாகவே எழுதினர். ஆனாலும், இன்றைக்கு எல்லா பார்ப்பானையும் தமிழன், தமிழன் என்று எழுதுகிறார்கள்.

அதற்கு ஒரு உதாரணத்தை சொல்லவேண்டுமானால், மன்னார்குடியில் இருக்கின்ற அய்யர், கோபால் சுப்பிரமணியம் அவர்களுக்கு நீதிபதியாக வாய்ப்பில்லை என்று சொன்னால், தினமணி என்ன எழுதுகிறது, தமிழருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று மிகக் கவலையோடு எழுதுகிறது. 

தமிழர்கள் என்கிற போர்வை யில் யார் வருகிறார்கள்? பார்ப்பனர்கள் வருகிறார்கள். ஆகவேதான், முழுக்க முழுக்க திராவிடர் என்று சொன்னால் அவர்கள் வருவதில்லை; தமிழன் என்று சொன்னால், அவர்கள் வருகிறார்கள். எனவேதான், தெளிவாகவே இந்த அமைப்பை வைத்திருக்கிறோம். 

அதுமட்டுமல்ல, திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளாத இயக்கமாகவும் திராவிடர் கழகம் இருக்கிறது என்பது இருக்கிறதே, நம்முடைய தனித்தன்மையை அது காட்டக்கூடியதாக இருக்கிறது. மற்ற இயக்கங்களுக்கு இந்த உரிமையும், இந்தத் தெளிவும், இந்தக் கருத்தும் உண்டா? ஆகவேதான், தயவு செய்து அந்தக் குழப்பத்தில் யாராவது இருந்தால், இது சரியான நேரம்! அந்தக் குழப்பத்தில், மயக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்!

தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கெங்கே இருக்கிறது?

கேள்வி: திராவிடர் கழகம், தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கெங்கே இருக்கிறது?

                                                                                      ------------------- சசிக்குமார், சென்னை

பதில்: மும்பை மகாராஷ்டிரத்திலே திராவிடர் கழகம் இருக்கிறது. அதேபோல், கருநாடகத்திலே திராவிடர் கழகம் அமைப்பு இருக்கிறது. இன்னுங்கேட்டால், மற்ற இடங்களில் சுயமரியாதை உணர்வு படைத்தவர்களும், நம்மை ஒத்த கருத்துள்ளவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில், சுயமரியாதை இயக்கம் என்கிற ஒரு பண்பாட்டு அமைப்பு இருக்கிறது, அந்த உணர்வுகள் உலகம் முழுவதும் இருக்கிறது. பெரியார் பன்னாட்டமைப்பு இருக்கிறது. திராவிடர் கழகம் என்ற பெயரில் இருக்காதே தவிர, பன்னாட்டமைப்பு இருக்கிறது. மலேசியாவில் திராவிடர் கழகம் ஏறத்தாழ நூறு கிளைகளுக்குமேல் இருக்கிறது. ஆனால், நம்முடைய அமைப்பினுடைய கிளைகள் அல்ல. பெரியாருடைய கொள்கைகளை, அந்த நாட்டில் சுதந்திரமாக, அந்த நாட்டின் சூழ்நிலைகளுக் கேற்ப சொல்லக் கூடியவர்கள்.

சிங்கப்பூரில் பெரியார் மய்யம் - பெரியார் சமூக சேவை அமைப்பு என்கிற பெயரால் இருக்கிறது. பெரியார் பன்னாட்டு மய்யம், இப்பொழுது ஜெர்மனி யில்கூட தொடங்கப்பட்டது.

நாம் அகில இந்திய திராவிடர் கழகம் என்று சொல்வது கிடையாது. 

நம்முடைய பண்பாடு, நமது தேவைக்கேற்ப இதனை நாம் செய்துகொண்டிருக்கிறோம். கருநாடகத்தில் இருக்கின்ற தோழர்கள், அங்கே கருநாடக திராவிடர் கழக அமைப்பை வைத்திருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் உள்ள தோழர்கள் மராட்டியத்திலே அமைப்பு வைத்திருக் கிறார்கள்.

நீதிமன்றங்களில் தமிழ் மொழி வரவில்லை...

கேள்வி: தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் தமிழ் இல்லை. வழக்கு மொழி யாக நீதிமன்றங்களில் தமிழ் மொழி வரவில்லை - அதுபற்றி உங்கள் கருத்து என்ன? 

--------------- எ.தினகரன், சென்னை

பதில்: நாம் தொடர்ந்து அதுபற்றி விடுதலையில் எழுதி வருகின்றோம். விடுதலையைத் தொடர்ந்து படித்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பயிற்று மொழியாக இருந்தாலும், ஆட்சி மொழியாக இருந்தாலும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதுதான் இருமொழிக் கொள்கையாகும். இரு மொழிக் கொள்கையில், தமிழ் , ஆங்கிலம் என்று வருகின்றபொழுது, தமிழை செயல்படுத்தாதது, அதுவும் உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் தமிழிலேயே வாதாடுவதற்கும், தீர்ப்பு எழுதுவதற்கும் இடமில்லை சட்டத்திலே என்று சொல்கிறார்கள். கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது அதனை வலியுறுத்தி, மதுரையில் இருந்த நம்முடைய தோழர்கள், வழக்குரைஞர்கள், சென்னையில் இருந்த வழக்குரைஞர்கள் எல்லோரும் முயற்சி எடுத்த நேரத்தில், அது குடியரசுத் தலைவர் வரையில் சென்று, இன்னமும், மத்திய அரசாங்கத்தினுடைய அனுமதி இல்லாமல், கிடப்பில் கிடக்கின்ற செய்தியாக இருக்கிறது.

அதேநேரத்தில், இந்தி மொழியில், பல மாநிலங்களில் நிகழ்ச்சிகள், நீதித்துறை வாதங்கள் நடக்கின்றன. ஆங்கிலத்தையே அவர்கள் தவிர்த்திருக்கிறார்கள். ஆனால், உச்சநீதிமன்றம், பல உயர்நீதிமன்றங்களில் இன்னமும் ஆங்கிலம் இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் இந்தியில் பேசுவதற்கு அனுமதிப்பதுபோல, நம்முடைய  தாய்மொழியான தமிழை நீதிமன்றங்களில் அனுமதிக்க வேண்டும். கேள்வி கேட்டவர் ஒன்றை மறந்துவிட்டார்; நீதிமன்றங்களில் தமிழ் மொழி வரவேண்டும் என்று போராடுகிறார்கள்; அதேபோல், மருத்துவம், பொறியியல் படிப்பிலும் வரவேண்டும்  என்று போராடுகிறார்கள். ஆனால், கோவிலில் தமிழ் இருக்கிறதா? நாம் கேட்ட பிறகுதான், தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று எழுதி வைத்தார்கள். தமிழ்நாட்டில் ஏன், தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்பது  தேவையா? என்று கேட்ட பிறகு, உம்மை எடுத்து விட்டார்கள். தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று எழுதி வைத்தார்கள்.

அதுவும் கேட்டால்தான் செய்வார்களே தவிர, கேட்கா விட்டால், கிடையாது. அந்த அளவிற்கு அங்கே சமஸ்கிருத ஆதிக்கம்.

எனவேதான், எந்த மொழியினுடைய ஆதிக்கம் - ஆங்கில மொழியின் ஆதிக்கமும் இருக்கக்கூடாது; சமஸ்கிருத ஆதிக்கமும் இருக்கக்கூடாது; அதே நேரத்தில், இந்தி மொழி ஆதிக்கமும் இருக்கக்கூடாது; அதேநேரத்தில், ஆங்கிலம் என்பது உலக சாளரம்; உலக அறிவுக்குத் தேவை என்று சொல்கிற அளவிற்கு, நாம் அதனை அறவே ஒதுக்கிவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கக் கூடியவர்கள்.

ஆட்சி மொழி தமிழாக இருக்கவேண்டும் என்பதில், அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கக் கூடிய வர்கள். ஆட்சிமொழி தமிழாக எல்லாத் துறைகளிலும் இருக்கவேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை!

 

இளைஞர்களை எழுச்சியாளர்களாக மாற்ற உதவுவீர்களா?

கேள்வி: அய்யா, இளைஞர்கள் இன்று எழுச்சியை விரும்புகிறார்கள். திராவிடர் கழகம் வருங்காலங்களில் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி, இளைஞர்களை எழுச்சியாளர்களாக மாற்ற உதவுவீர்களா?

                                                                         ---------------- மாணிக்கம், ரிஷிவந்தியம்

பதில்: இப்பொழுதே உங்களுக்கு முன்புதானே ஒரு ஆகஸ்ட் போராட்டத்தை அறிவித்தோம். சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் உரையாற்றினேன். இந்தித் திணிப்பை எதிர்க்கக் கூடிய வகையில், அவர்கள் தொடர்ந்து வலை தளத்தில் அந்த முயற்சிகளை செய்துகாண்டிருப்பார்களேயானால், தந்தை பெரியார் அவர்களின் இயக்கம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி நடைபெறும் போராட்டத்தில், தார்ச்சட்டியும், பிரசையும் எடுத்து, ரயில்வே நிலையங்களில் உள்ள இந்தி எழுத்தை அழிப்போம் என்கிற போராட்டத்தினை அறிவித்துள்ளோம். இளைஞர்களான உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. தாராளமாக அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் வரலாம். ஆகவே, இப்பொழுதே நீங்கள் வீட்டிற்குச் சென்றவுடன் தார்ச் சட்டியையும், பிரசையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

கேள்வி: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்திரா காந்திக்குக் கிடைத்த தீர்ப்பு என்ன?

                                                                                                  ----------- ம.தேன்மொழி, திருச்சி

பதில்: இந்திரா காந்தியினுடைய தேர்தல் வெற்றி செல்லாது என்பது தீர்ப்பு. ராஜ் நாராயணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். சின்கா என்பவர் நீதிபதியாக இருந்தார். இந்திரா காந்தியினுடைய வெற்றி செல்லாது என்று சொன்னவுடன், தலைவணங்கி அதனை ஏற்பதற்குப் பதிலாக, நாட்டில் உள்ளவர்கள் அதைப்பற்றி பேசக்கூடாது என்று சொல்லி, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார்கள். பலரை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்று மிசா கைதிகளாக ஆக்கியதும், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரத் தைப் பறித்ததும்,  நீதிபதிகளையே மிரட்டி, அவர்களை மாற்றியதும், இப்படி தொடர்ந்து பல கொடுமைகள் நிகழ்வதற்கு அந்தத் தீர்ப்புதான் காரணமாக அமைந்தது.

மதத்தை ஏற்காதவர்கள் என்ன குறிப்பிடலாம்?

கேள்வி: அரசே விண்ணப்பங்களில் எந்த மதம் என்று கேட்குபொழுது, மதத்தை ஏற்காதவர்கள் என்ன குறிப்பிடலாம்? 

                                                                                     ------- தமிழ்ச்செல்வம், திருவரங்கம்


பதில்: தாராளமாக, மதம் பிடிக்காதவர்கள் என்று எழுதலாம். 

எங்களுக்கெல்லாம் மதம் பிடிக்காது; பிடிக்க விடமாட்டோம் என்று எழுதலாம்.

கேள்வி: தமிழகத்தில் காணப்படும் திராவிட இயக்கக் கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வாய்ப்பு உண்டா?

                                                                                      -------------------- பிரபாகரன், கோவை

பதில்: அவசியம் வரும்பொழுது தாராளமாக வரலாம். ஆனால், ஒன்றே ஒன்று, தலைமைத்துவ வியாதி நமக்குள் இருக்கக்கூடாது, அதுதான் மிக முக்கியம். ஏனென்றால், பொதுவாக தமிழர்களைப்பற்றி ஒரு கருத்துண்டு. அது என்னவென்றால், ஆறு தமிழர்கள் இருந்தால், ஏழு கருத்துகள் இருக்கும் என்று சொல்வார்கள். ஆகவே, அப்படி இருந்தாலும், நாம் மிகத் தெளிவாக ஒரு பொதுக் கருத்தை நோக்கி, பொது இலக்கை நோக்கி, கூட்டமைப்பை உருவாக்குகின்ற காலம் கனியும்பொழுது, நிச்சயம் திராவிடர் கழகம் முன்னின்று அதனை செய்யும் என்பது உறுதி.

பார்ப்பனர்களை நம்முடைய இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாமா?

கேள்வி: பார்ப்பனர் நம்முடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால், நம்முடைய இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாமா?

                                                                                 ---------------- தேவா, திருவானைக்காவல்

பதில்: இதற்குண்டான பதிலை முன்பே சொல்லி விட்டேன். பார்ப்பனர் நமது கொள்கையை ஏற்றுக் கொண்டால், அவரைப் பாராட்டலாம், ஒரு பயனாடை அணிவித்து, சிறப்பாக வாழுங்கள் என்று வாழ்த்தலாம். ஆனால்,அவர் அங்கேயே இருக்கவேண்டுமே தவிர, ஏன் அவர் இங்கே வந்து, நமக்கு அவர் ஏன் சந்தேகத்திற் குரியவராக ஆகவேண்டும்? அது தேவையில்லை. அவர் திருந்தினார் என்றால், திருந்தி வாழ்வதற்கு வாழ்த்து சொல்வோம்.  

எவ்வளவோ பேர் திருந்தியிருக்கிறார்கள். எல்லோரும் நம் வீட்டுக்குள்ளேயே வந்திருக்கிறார்கள். எதிர் வீட்டுக்காரர் திருந்திவிட்டார் என்றால், உடனே நாம் உங்கள் வீட்டை விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்று நாம் கூப்பிடவேண்டிய அவசியம் இல்லை. அவர் திருந்திவிட்டார் என்றால், நமக்கு நண்பராக இருப்பார்; நமக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டார். அவரை மதிப்போம்; வாழ்த்துவோம்; பாராட்டுவோம். நீங்கள் உங்கள் இடத்திலேயே இருங்கள்; நாங்கள் எங்கள் இடத்திலேயே இருக்கிறோம். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டாம் என்று சொல்லக் கூடிய நிலையில் இருப்போம். பழைய வரலாற்றிலிருந்து பாடம் பெறவேண்டாமா?

ஜாதி ஒழிய  நாம் என்ன செய்யவேண்டும்?


கேள்வி: ஜாதி ஒழிய  நாம் என்ன செய்யவேண்டும்? அரசு என்ன செய்யவேண்டும்?

                                                                                     --------------------- சரவணன், பெரம்பலூர்

பதில்: ஜாதி ஒழிவதற்கு நீங்கள் சுலபமாக செய்யவேண்டிய வழி இருக்கிறது. எங்கள் ஜாதிகளில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று உறுதி எடுங்கள்; யார் சொன்னாலும், அதனை செய்யமாட்டேன் என்று உறுதி எடுங்கள். கவுரவக் கொலை, அது, இது என்று மிரட்டினார்கள் என்றால், நாங்கள் ஒரு கை பார்ப்போம் என்று சொல்வதற்குத் துணிவு கொள்ளுங்கள். அதுதான் மிக முக்கியம். ஏனென்றால், தற்காப்பிற்கு சட்டத்தில் உரிமை உண்டு. அதில் ஒன்றும் சந்தேகமில்லை.

ஆகவே, உங்களைப் பொறுத்தவரையில், ஜாதி உணர்வுக்கு நான் ஆளாகமாட்டேன்; என் ஜாதி, உன் ஜாதி என்கிற பிரிவினைக்கு ஆளாகமாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

அடுத்தபடியாக, அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஜாதி ஒழிப்பிற்கு சட்டம் - நாம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம் - மத்திய அரசாங்கம் அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது. அந்த வார்த்தையை எடுக்கவேண்டும். ஜாதி தடை செய்யப்பட்டது என்று போடவேண்டும்.

இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் இருக்கிறதே என்று சில பேர் கேட்கலாம். தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது - ஆனால், அதன் காரணமாக கீழே உள்ளவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பவர்களுக்காக சில ஆண்டுகள் வரையில் சலுகைகள் கொடுக்கலாம்.

ஆகவே, மத்திய அரசு அரசியல் சட்டத்தைத் திருத்தி, மத்திய அரசு சட்டமாகவே, இந்தியாவில் ஜாதி கூடாது; ஜாதி தடை செய்யப்படுகிறது என்று வந்தால், தானாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.

                         ----------------------------------"விடுதலை” 10-07-2014

19 comments:

தமிழ் ஓவியா said...


கால்பந்து


உலகக் கால்பந்தாட் டத்தில் ஜெர்மனி பிரே சிலுக்கு இடையிலான போட்டியில் பிரேசில் வெற்றி பெற வேண்டி, ஊடோ மந்திரவாதிகள் (பொம்மைகளை வைத்து எதிரியை மடக்கும் மந்திர மாம்) நான்கு நாட்களாக ஜெர்மனிய வீரர்களின் உருவங்களைச் செய்து அவர்களின் கால்களை கட்டிப்போட்டு மந்திர வித்தைகள் செய்தார்கள்.

இதனால் ஜெர்மனிய வீரர் கள் சரியாக விளையாடா மல் எளிதில் பிரேசில் வெற்றிபெறும் என்று ஊர் முழுவதும் விளம்பரம் செய்தார்களாம், ஆமைகள் மற்றும் நண்டு மந்தி ரங்கள் என பல மந்திர தந்திர வித்தைகள் செய்தும் பிரேசில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தொடரிலேயே 7 கோல்கள் வாங்கிய ஒரே நாடு பிரேசில்தான்.

இது குறித்து பிரேசில் ரசிகர் கூறியபோது மந்திர வாதிகள் தவறுதலாக பிரேசில் வீரர்களின் கால்களை கட்டிப் போட்டு விட்டனராம் ஆகையால் தான் பிரேசில் தோல்வி யடைந்தது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பார்களே அது இதுதான் போலும்!

பிரேசிலையும் காப்பாற்ற முடியவில்லை- மந்திர வாதிகளையும் காப்பாற்ற முடியவில்லை- அந்தோ பரிதாபம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் பிரேசில் கபேகா என்ற கடல் ஆமையை களத்தில் இறக்கி விட் டுள்ளது.

ஜூலை 4ஆம் தேதி தொட்டியில் பிரேசில் கொடி கட்டிய மீனை ஆமையார் சாப்பிட்டு சமர்த்தாக ஆருடம் கூறி வருகிறார். காலிறுதிப் போட்டியில் பிரேசிலின் மீனை சாப்பிட்டு அந்த அணி வெல்லும் என்று கணித்துள்ளது.

ஆனால் பாவம் ஆமையார் சோதிடம் பலிக்காமல் போனது; ஆமை தற்போது பொரி யலுக்கு தயாராகிறதாம்.

1994இல் உலகக் கால் பந்து காலிறுதிப் போட்டி சுவீடனுக்கும் ருமேனியா வுக்கும் இடையே நடை பெற்றது.

இரு அணிகளும் ஒவ்வொரு கோல் போட் டன; கூடுதல் நேரத்திலும் தலா இரு கோல்கள் போட் டன. பெனல்டி முறை யிலும் தலா நான்கு கோல்கள் போட்டன.

வேறு வழியின்றி சடன் டெத் முறை கடைப் பிடித்ததில் சுவீடன் வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த ருமேனியா அணியின் கேப்டன் ஜியார்ஜி ஹாஜி என்ன கூறினார் தெரியுமா?

எங்கள் பிரார்த்தனை பலிக்கவில்லை; கடவுள் சுவீடன் அணி பக்கம் இருந்துவிட்டான் என் றாரே பார்க்கலாம்!

திறமைக்கும், வீரத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடத்திலும் மூடநம்பிக்கையா? வெட்கக் கேடு!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83766.html#ixzz374cwGTMW

தமிழ் ஓவியா said...


காஞ்சி சங்கராச்சாரிகள்மீது அப்பீல் வழக்கு: உரிய நியாயம் தேவை


- ஊசி மிளகாய்

காஞ்சி சங்கராச்சாரியாரான ஜெயேந்திரர், அவரது அடுத்த வாரிசு விஜயேந்திர சரசுவதி முதலியவர்கள் முதல் குற்றவாளி இரண்டாவது குற்றவாளிகள் என்ற நிலையில் கூலிப்படையை ஏவி, காஞ்சி சங்கரராமனைக் கொலை செய்த (கோவிலில்) கொலை குற்ற வழக்கில், பிறழ் சாட்சியங்கள் பலவற்றை வைத்து அனைவரும் விடுதலை ஆயினர்.

ஏற்கெனவே இடையில் அதை விசாரித்த மாவட்ட நீதிபதியிடம் சங்கராச்சாரி பேசினார் என்பது போன்ற புகார்களும் ஏடுகளில் வந்தன.

இந்நிலையில் புதுச்சேரி (மாவட்ட) நீதிமன்றத்தினரால் விடுதலை செய்யப்பட்டது செல் லாது என்று சென்னை உயர்நீதிமன் றத்திற்கு காலந்தாழ்ந்தாவது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு முன் வந்திருப்பதை, நியாயத்தை விரும்பும் அனைவரும் வரவேற்பார்கள் என்பது உறுதி.

ஏராளமான சாட்சிகள் பல்டி அடித்தார்களே, அவர்கள்மீது ஏன் சட்டப்படி இன்னமும் கிரிமினல் வழக்குகள் பாயவில்லை?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா?

இந்தமேல் முறையீட்டு வழக்கினைக் கூட, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையாக, கவனமாக நடத்திட முன் வர வேண்டும் புதுவை அரசு!

தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் துணிச் சலை - இருவரையும் கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்து வைத்து, சட்டம் தனது கடமையை பாரபட்சம் பாராது செய்தது என்ற நிலையை உலகமே வியந்து பாராட்டியது. அவரும் இதில் உரிய அக்கறை காட்ட வேண்டாமா?

நீதிக்குத் தலை வணங்கும் நிலையை புதுவை அரசு பின்பற்றி, நியாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிட வேண்டியது அவசரம், அவசியம் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/83773.html#ixzz374d6coj5

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


கால்நடைக் கோவில்

குமரி மாவட்டம் அளப்பன்கோடு எனும் ஊரில் ஈசுவரகால பூதத்தான் கோவில் உள்ளது. அந்த வட்டாரத்தில் மாடுகளோ, ஆடுகளோ கன்று ஈன்றால் அதன் முதல் பாலை இந்த சாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இது கால் நடைகளின் நோய் தீர்க்கும் கோவிலாம்.

கால்நடைகளுக்கென்று கோவில் இருக்கும் பொழுது கால்நடை மருத்துவ மனைகள் ஏன்?

சமீபத்தில் தமிழ்நாட்டில் Foot and Mouth என்ற நோய் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்து போயிற்றே - இந்தக் கடவுள் எங்கே போனாராம்?

Read more: http://viduthalai.in/e-paper/83768.html#ixzz374daJqPz

தமிழ் ஓவியா said...


இருந்து வரும்


பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.

- (விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/83780.html#ixzz374diw1ku

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கில்மேல் முறையீடு


காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப் பகலில் கோயில் சன்னதி யிலேயே படுகொலை செய்யப்பட்டார் (3.9.2004).

இந்தக் கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி, மடத்தின் மேலாளர் சுந்தரேசய்யர், விஜயேந்திரரின் உடன் பிறப்பு ரகு உட்பட 24 பேர்கள்மீது அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி (தீபாவளியன்று) ஆந்திரத்தில் இருந்த ஜெயேந்திரர் கைதானார். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர்.

என்றாலும் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தனர். செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இவ் வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது எனக் கூறி வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த 2005 ஆம் ஆண்டு புதுவை அமர்வு நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக தேவதாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் இறந்தார். வழக்கு விசாரணை முடிந்து கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் மேல் முறையீட்டை புதுவை அரசுதான் செய்யவேண்டும். மேல்முறையீடு செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, புதுவை அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்தது. அதற்கான ஒப்புதலுக்காக கோப்புகளை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது அக்கோப்பில் ஆளுநர் கையொப்ப மிட்டார்.

இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. காலங் கடந்தாவது மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

காரணம் பட்டப் பகலில் ஒரு கோவிலில் நடைபெற்ற படுகொலை! இதில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களோ பெரும் புள்ளிகள்; பாதிக்கப்பட்டவர்களோ சாமான்யர்கள்.

எந்த வழக்கிலும் கேள்விப்பட்டிராத ஒரு அதிசயம் இந்த வழக்கில் நடந்துள்ளது.

189 சாட்சிகளில் 81 பேர் பிறழ் சாட்சிகள் என்றால் என்ன சாதாரணமா? இவ்வளவுக்கும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நுணுக்கமாக ஒரு வேலையைச் செய்தார்.

பொதுவாக காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும். நீதிமன்றங்களில் அந்தச் சாட்சிகள் காவல்துறையினரின் அச்சுறுத்தலால் தான் அவ்வாறு சொல்ல நேர்ந்தது என்று பிறழ் சாட்சியாக மாறி விடுவார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் காவல்துறை அதிகாரி பிரேம்குமார் நீதிபதி முன்னதாக சாட்சியங்களைப் பதிவு செய்தார். இந்த நிலையிலே பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதான எந்தவித நடவடிக்கையும் இல்லாமற் போனது ஏன்? என்பது முக்கிய கேள்விகளாக மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்பட்ட அனுப வத்தை வைத்து நீதியரசர் திரு கே.என். இராதா கிருஷ் ணன் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.

தற்போது முக்கியமான சில வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விடும் போக்கு அதிகரித்து வருகிறது. பணம் மற்றும் கவர்ச்சியான சில சலுகைகளுக்கு மயங்கிப் பிறழ் சாட்சியர்களாக மாறி விடுகின்றனர்; இது ஆரோக்கியமானதல்ல. இந்தப் போக்கு அதிகரித்தால் நீதித்துறைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து போய்விடும். இந்த நடைமுறையை அனுமதிக்கக் கூடாது. பிறழ் சாட்சியாக மாறுவோரைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கவும் கூடாது. உண்மையை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும், அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்தான் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி திரு கே.எஸ். இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து இந்த வழக்கில் செயல்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.

இதில் என்ன கொடுமையென்றால் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவியும், மகனும்கூட பிறழ்சாட்சியாக மாறினர் என்பதுதான். தாங்கள் அச்சுறுத்தப்பட்டதால் அவ்வாறு சொல்ல நேரிட்டது; இப்பொழுது உண்மையைக் கூறத் தயாராகி விட்டோம்.

மீண்டும் எங்களை விசாரிக்க வேண் டும் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படாதது ஏன் என்பதும் மிக முக்கியமான கேள்வியாகும்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே சங்கரராமன் கொலை வழக்கில் சங்கரமடத்திற்கு அநீதி நடந்துள்ளது என்று, திரு. சோராமசாமி இந்தியா டுடே இதழுக்குப் பேட்டி அளித்தார் (9.2.2005). தீர்ப்பு வழங்கிய பிறகும் துக்ளகில் வரிந்து கட்டிக் கொண்டு எழுதினாரே பார்க்கலாம். (11.12.2013)

வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே திருவாளர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் தொடர்ந்து நான்கு கட்டுரைகளை அனல் பறக்க எழுதினார் (28.11.2013).

தீர்ப்பு வந்த நிலையில் சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள் பார்வை! என்று தினமணி சிறப்புக் கட்டுரையில் (28.11.2013) எப்படியெல்லாம் எழுதித் தள்ளியது. ஆனந்த விகடனும் (11.12.2013) தினமணிக்குச் சளைக்கவில்லை.

வேலூர் சிறையில் இருந்த காஞ்சி ஜூனியர் சங்க ராச்சாரியாரை தனது காரில் ஏற்றிக் கொண்டு காஞ்சி மடத்தில் கொண்டு வந்து விட்டவர் இந்து என். ராம்.

சங்கராச்சாரியார் ஒரு மடத்தின் தலைவர், துறவி; எனவே அவரை எல்லோரையும் போல் விசாரிக்கக் கூடாது. அவரைத் தனியாக ஒரு மாளிகையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி (தி இந்து 18.11.2004).

நிலைமை இப்படி இருக்கும் பொழுது, இவ்வழக்கு மேல் முறையீட்டுக்கு உரியது என்று பெரும்பாலான மக்கள் எதிர்ப்பார்ப்பது நியாயம்தான்; இதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/83781.html#ixzz374ecuh4f

தமிழ் ஓவியா said...


மீன் மருந்தா? பிரசாதமா? தெலங்கானாவில் மக்கள் நாத்திக அமைப்பு கோரிக்கை



கரீம்நகர், ஜூலை10_ மக்கள் நாத்திக அமைப்பு தெலங்கானா மாநிலக் குழுமம், கர்நூல், கமலாபூர் மண்டல், கமலாபூர், கரீம் நகரில் மாநிலத் தலைவர் ஜீ.டி.சாரையா செய்தி யாளர்களைச் சந்தித்து தெலங்கானா பகுதியில் பத்தினி சகோதரர்கள் நடத் திவரும் மீன் வைத்தியத்தைத் தடை செய்க! பத்தினி சகோ தரர்களைக் கைது செய்ய கோரி உள்ளார். அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், மாநிலத் தலைநகரில் நடுப் பகுதியாம் நாம்பள்ளியில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக குமுகாயத்தினரையும், மருத்துவ குமுகாயத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை; மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஈளை (ஆஸ்துமா) நோயைப் போக்குகிறோம் என்று பசப்பி, பத்தினி சகோதரர்கள் செய்யும் அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான சிகிச்சைக்கு எதிராக, மக்கள் நாத்திக சமாஜம் போர்க்கொடி உயர்த்துவ தோடு, வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறது;
பத்தினி சகோதரர்களின் வீட்டு முன் மீன் மருந்து தரப்படுவதை முந்தைய அரசு வாக்கு சேகரிப்புக் கண் ணோட்டத்தில், பத்தினி சகோதரர் களுக்கு சற்றொப்ப கோடி உருபா மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்ததுடன், மிருக சீர அறக் கட்டளை என்பாருக்கு உரிமமும் உவந்து தந்தது; தொலைதூரப் பகுதி மக்களும் ஆயிரக் கணக்கான தொகையையும் அளித்து உடல், உள்ள நலத்தையும் கெடுத்துக் கொள் கிறார்கள்; மீன் மருந்தை விழுங்கிய இலட்சக் கணக்கான மக்களில் ஒருவருக்குக் கூட இளைப்பு (ஆஸ் துமா) நோய் குணமாகவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக் கப்பட்டுவிட்டது; மீன் மருத்துவம் என்பது மருத்துவம் பயிலும் மாணாக் கர்களை அவமதிக்கும் செயலே என்பதில் எள்ளவும் அய்யமில்லை.


தமிழ் ஓவியா said...

மீன் மருத்துவம் செய்து கொள்ள வருபவர்களுக்கு தமக்கு என்ன மருந்து கொடுக்கிறார்கள் என்பதே தெரியாது; மருந்து தயாரிப்புச் சட்டத்தின்படி, என்ன மருந்து கொடுக்கப்படுகிறது, அதன் உள்ளடக்கம் என்ன, அதில் கலக்கப்படும் மருந்துகள், மூலப் பொருட்கள் என்னென்ன என்பது தெளிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக் கைகள் எதுவும் இல்லாத போது, அது சட்ட விதிகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கும் செயலே! நோயாளி எடுத்துக் கொள்ளும் மருந்தில் என்னென்ன உள்ளடக்கங் கள் உள்ளன எனத் தெரிந்து கொள் ளும் உரிமையை சட்டம் வழங்கி யுள்ளது; இது குறித்து பத்தினி சகோதரர்களிடம் வினவியபோது, பிரச்சினையை முற்றிலுமாகத் திசை திருப்பி, சிகிச்சைக்கு வரும் மக்களை 'எடுப்பார் கைப்பிள்ளையாக நடத்துவது மிகவும் கொடுமையாகும்.

நயன்மை மன்ற உத்தரவுகளின்படி, இந்த மீன் மருத்துவம் மருந்து அறிவியல் ஏற்றுக் கொள்ளக் கூடிய மருந்தே அல்ல என்பது அய்யத்துக் கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதனையடுத்து, பத்தினி சகோ தரர்கள், இது மருந்து அல்ல, பிரசாதம் என பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டனர்; இந்திய அரசியல் சட்டம் 51எ (ஹெச்) பிரிவைக் கேவலப்படுத்தும் செயலே இது; மாநில அரசு இதனை முற்றிலுமாகப் புறந்தள்ளியதோடல்லாமல், ஆண்டு தவறாமல், 5 தொடங்கி 8 டன் வரை மீன்களை மிருக சீர அறக்கட்டளைக் குத் தாரை வார்ப்பது கொடுங் கோன்மை ஆகும். இப்படி நாலா பக்கங்களிலும் தோண்டித் துருவி சலித்து எடுப்பதால், செய்வதால் மீன் இனத்துக்கு ஏற்படும் இழப்பு குறித்து, வல்லுநர்கள் ஏடுகள் வாயிலாக எடுத்துக் கூறியும் பயனில்லை; நாய்க் கடியால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டுகொள்ளாமல், அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான மீன் மருத்துவத்துக் குத் தரும் முதன்மையை நினைத்தால், கும்பி எரிகிறது; மக்கள் மீது இந்த அரசுக்கு எத்துணை அக்கறை(!) என் பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எனவே, இந்த பத்தினி சகோதரர் களை மருத்துவம் பார்ப்பதற்கு அருகதை அற்ற வர்கள் என அறிவித்து, அவர்கள் மீது சட்டப்படி யான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்:

1. மீன் மருந்து சட்டத்துக்குப் புறம் பானதென அறிவிப்பதோடு, மிருக சீர அறக்கட்டளையையும் செல்லா ததென அறிவிக்க வேண்டும்;

2. அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறையைக் கடைப்பிடிக்கும் போலி மருத்துவர்களைக் கைது செய்து, அவர்தம் அமைப்புகளை இழுத்து மூட வேண்டும்;

3. நலத் துறையின் ஊடாக கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பாடல்கள், விவாதங்கள் போன்ற நடவடிக்கை களை மாநில அரசு பின்பற்ற வேண் டும்;

4. மிருக சீர அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுத்துக்கொண்டு, அதனை மக்கள் நலப் பணிகளுக் காகத் திருப்பிவிட வேன்டும்.
ஆகிய கோரிக்கைகள் தெலங் கானா அரசுக்கு மக்கள் நாத்திக சமா ஜம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் கரீம்நகரில் செய்தியா ளர்கள் சந்திப்பில் முன்வைக்கப்பட் டுள்ளது.

மக்கள் நாத்திக அமைப்பின் மாநிலத் தலைவர் ஜீடி சாரையா, கரீம் நகர் மாவட்ட அமைப்பாளர் எம். லக்ஷ்மண், மாநிலக் குழு உறுப்பினர் மில்கூரி சங்கர் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற் றனர்.

குறிப்பு: மீன் சிறந்தஉணவு என் பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத் தில் பிரசாதம் என்று சொல்லி பித்த லாட்டப் பிரச்சாரம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/83782.html#ixzz374fFdL8r

தமிழ் ஓவியா said...


காந்தியார் கொலை வழக்கு ஆவணம் அழிப்பு? நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு


புதுடில்லி, ஜூன் 10_ காந்தியார் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப் பட்டதாக கூறப்படும் விவ காரத்தில் பிரதமர் நரேந் திரமோடி விளக்கம் அளிக் கக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று டில்லி மாநிலங் களவையில் கடும் அமளி யில் ஈடுபட்டனர்.

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நீண்ட காலமாக உள் துறை அமைச்சகத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு பழைய ஆவ ணங்கள் அழிக்கப்பட் டன. இதில் காந்தியார் படு கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்க ளும் அழிக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு உறுப்பினர் பி. ராஜீவ் பேசுகையில், மோடி உத்தரவின்பேரில் உள்துறை அமைச்சகத்தில் 1 லட்சம் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும், அதில் காந்தியார் கொலை தொடர்பான முக்கிய ஆவணம் காணாமல் போய் உள்ளதாகவும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கையில் பிரதமர் ஏன் முனைப்பு காட்டு கிறார்? என்று தெரிய வில்லை. நாட்டின் வரலாற்றை மாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறதோ? என பய மாக இருக்கிறது. காந்தி யார் படுகொலை வழக்கில் தொடர்புடைய மதவாத சக்திகளின் ஆதாரங்களை அரசு அழிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த குற்றச்சாட்டுகளை முழு மையாக மறுக்கிறேன். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவித் தார். ஆனால் அமைச்ச ரின் கருத்தை எதிர்க்கட்சி கள் ஏற்க மறுத்து விட்டன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகந்து சேகர் ராய் பேசுகையில், பிரதமர் மீது குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது. எனவே அவர் நேரடியாக வந்து பதில் அளிக்க வேண்டும். குற்றச் சாட்டு பொய்யாக இருந் தால் அதனை வெளியிட் டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநிலங்களவை துணை அவைத் தலைவர் பி.ஜெ.குரியன், இது விஷ யத்தில் அமைச்சரின் பதிலை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால், இது தொடர்பாக சபையில் அறிக்கை வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் பி.ஜெ.குரிய னின் நடவடிக்கையில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர் கள், தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர். இதனை யடுத்து சபை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/83792.html#ixzz374gQkE3j

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு! கலைஞர் எடுத்துக்காட்டு

சென்னை, ஜூன் 10_ தமிழ் நாட்டில் சட்டம் _ ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என் பதை ஏடுகளில் வெளிவந் ததை எடுத்துக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள். விவரம் வருமாறு:_

முதல் அமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை என்பதால், அதை எப்படி இறுதியாக விவாதிப்பது, முதலிலேயே விவாதிக்கப்பட வேண்டுமென்று நினைத்திருப்பார்கள். பொதுவாக தமிழகத்தில் சட்டம் _ ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி கடந்த வாரம் பத்திரிகைகளிலேயே செய்திகள் வந்துள்ளன.

3.7.2014 இந்து ஆங்கில நாளிதழ், ‘Month of Murders leaves City Reeling’ என்ற தலைப்பில் பெட்லீ பீட்டர் என்ற செய்தியாளர் சட்டம் _ ஒழுங்கு பற்றி விரிவாகவே எழுதியுள்ளார். அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு:_

Last month was one of the City’s bloodiest in recent times, with a staggering 16 murders rocking the peace of the City.

These include 3 Murders for Gain with women victims, the brutal hacking of a Hindu Munnani functionary in Ambattur and the hacking of a notorious gangster inside a Government Hospital in the heart of the City.

June recorded 16 Murders, the Highest Monthly Count in 2014.

தமிழகத்தின் தலைநகரிலே சட்டம் ஒழுங்கு எப்படி?

புறநகரில் அதிகரிக்கும் வழிப்பறிக் குற்றங்கள் என்ற தலைப்பில் இந்து தமிழ் நாளேடு ஒரு நீண்ட செய்தி வெளியிட்டுள்ளது.

“More than one child gets raped every day in TN” - என்ற தலைப்பில் _ தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண் மையில் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தைக்கு மேல் கற்பழிக் கப்படுவதாகவும், குழந்தைக் கற்பழிப்பு வழக்குகள் 2012ஆம் ஆண்டு 292 என்றிருந்ததற்கு மாறாக, 2013இல் 419 ஆக உயர்ந்திருப்பதாகவும் _ (சட்டப்படி இங்கே குழந்தை என்று கூறப்படுவது 18 வயதுக்குக் குறைந்தவர்களாகும்) _ கற்பழிக்கப்பட்ட மகளிர் என்ற பட்டியலில் 2012ஆம் ஆண்டு 737 என்றிருந்தது, 2013இல் 923 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் தமிழகத்தின் சட்டம் _ ஒழுங்கு _ முதல் அமைச்சரின் பொறுப்பிலே உள்ள காவல் துறை.

Read more: http://viduthalai.in/page-8/83795.html#ixzz374gcyPXn

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


பூமி பூஜை - வாஸ்து

பூமி பூஜையின்போது முதலில் வாஸ்து சாந்தியின் மூலம் வாஸ்து புருஷனை திருப்தி செய்ய வேண்டும். பூசணிக்காய் வெட்டுவது இதற்காகத் தான் பிறகு மஞ்சள் பிள்ளையார் பூஜை செய்து செங்கற்களில் நவக்கிரகங்களைப் பூஜிக்க வேண்டும் பின் பூமாதேவியை வழிபட்டு, கட்டடம் கட்டும் முகூர்த் தம் செய்ய வேண்டுமாம்.

ரொம்ப சரி போரூரையடுத்த முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பரிதாப மரணம்!

இதுவும் பூமி பூஜை நடத்தி வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/83815.html#ixzz37ATZYOli

தமிழ் ஓவியா said...


தேர்தலில் எத்தனை இடங்களை பெற்றோம் என்பதைவிட எத்தனை சு.ம. திருமணங்களை நடத்தினோம் என்பதுதான் முக்கியம்


தேர்தலில் எத்தனை இடங்களை பெற்றோம் என்பதைவிட
எத்தனை சு.ம. திருமணங்களை நடத்தினோம் என்பதுதான் முக்கியம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்துரை

சென்னை, ஜூலை. 11 நாம் தேர்தலிலே வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும், தேர்தலிலே எத் தனை இடங்களைப் பெற் றோம் என்பதை விட, எத்தனை திருமணங்களை இந்த ஆண்டு சுயமரி யாதைத் திருமணங்களாக நடத்தி வைத்தோம் என்ற அந்த எண்ணிக்கையிலே தான் நாம் பெருமையடை கிறோம். அந்தப் பெரு மையை தொடர்ந்து நாம் காப்பாற்ற, தொடர்ந்து நடைமுறைப்படுத்த, நம்முடைய இயக்கத்திலே இன்றைக்கு ஒரு தங்க வேலன் அல்ல, பல தங்க வேலன்கள் உருவாகியிருக் கிறார்கள். இன்றைய தினம் நாம் அரசியலிலே அடைய வேண்டிய அளவுக்கு வெற்றி அடைய விட்டாலும்கூட, சமுதாய சீர்திருத்தத்திலே நாம் பெற்ற வெற்றியை எண் ணிப் பார்த்து பெருமை அடையலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஆளுங் கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. இடைத் தேர் தலில் டெபாசிட் தொகையை இழந்த கட்சி யாக விளங்கியதை மறந்து விட முடியாது. அதற்காக அவர்கள் யாரும் தற் கொலை செய்து கொள் கின்ற முயற்சியிலே ஈடு படவில்லை. தொடர்ந்து கட்சி நடத்திக் கொண் டிருக்கிறார்கள். நாமும் அவர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக் கிறோம். எனவே வெற்றி தோல்வி என்பது ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை நிர்ணயித்து விடாது. நாம் நம்முடைய இயக்கத்தை, பெரியாரின் கொள்கை களை அடிப்படையாக வைத்து, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றி வளர்ந்தவர்கள், இன்றைக்கும் வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்.

இன்றைக்குப் பெரியார் இல்லை, அண்ணா இல்லை என்றாலும் அவர்கள் வார்த்துத் தந்த கொள்கைகளும், இலட் சியங்களும் இருக்கின்றன. நமக்கு அவைகள் தான் துணை. பெரியாருடைய துணையும், அண்ணா துணையும், அவர்கள் வளர்த்து ஆளாக்கிய திராவிட இயக்கத்தின் துணையும் இருக்கிற வரையில் திராவிட முன் னேற்றக் கழகத்தை, திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தி விட முடியாது என்பதை நான் உறுதிபடச் சொல்லி (பலத்த கைதட்டல்) இந்த உறுதி மொழி வழியில் நடக்கின்ற ஒரு குடும்பம், நெல்லை மாவட்டத்திலே வாழ்ந்து வருகின்ற சீர் திருத்த குடும்பம், செழிப் பான பகுத்தறிவைப் பெற்ற குடும்பம், தம்பி தங்கவேலனுடைய குடும்பம். அந்தக் குடும் பத்து செல்வங்கள் திலீ பன் -_ கலைவாணி இருவ ருக்கும் நடைபெற்றுள்ள இந்த வாழ்க்கை ஒப்பந்த திருவிழாவில் என்னு டைய இனிய வாழ்த்து களை மண மக்களுக்கு வழங்கி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு நாடாளு மன்ற உறுப்பினர் ச. தங்க வேலு அவர்களின் இல்ல மணவிழாவில் திமுக தலை வர் கலைஞர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83813.html#ixzz37ATiTdRU

தமிழ் ஓவியா said...


காவடி எடுத்தவரைக் கைவிட்ட கடவுள்!


மட்டக்களப்பு ஜூலை 11_ இலங்கை கிழக்கு மாவட்டமான மட் டக்களப்பு பகுதியில் உள்ள அம்மன் கோவில் விழாவை ஒட்டி பறவைக் காவடி எடுத்துச் சென்றவர் காவடி உடைந்ததன் காரணமாக மரண மடைந்தார்.

மட்டக்களப்பில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அருகில் உள்ள ஊர்க்காரர்கள் அனைவரும் நேர்த்திக் கடன் என்ற பெயரில் அலகு குத்திக்கொண்டும் தேர் இழுத்துக் கொண்டும் வருவார்கள் இந்த நிலையில் கொக்கடிச்சோலைப் பகுதியில் இருந்து ஒரு குடும்பம் நேர்த்திக்கடனுக்காக பறவைக்காவடி என்ற பெயரில் டிராக்டரில் கட்டி அதில் கவடி எடுப்பவரை தொங்க விட்டுச் சென்றார்கள். சாலையில் ஒரு பள்ளத்தை கடக்கும் போதுஏற்பட்ட அதிர்வின் காரணமாக டிராக்டர் ஒருபுறம் சரியவே பறவைக்காவடி முறிந்து காவடி தூக்கியவர் மீதே விழுந்தது, இதில் உடல் நசுங்கி பறவைக்காவடி தூக்கியவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். மேலும் காவடி விழுந்ததால் டிராக்டரில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள் ளனர். இச்சம்பவம் குறித்து மட்டக் களப்பு கொக்கடிச்சோலை காவல் துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83812.html#ixzz37ATyIfax

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்



நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

Read more: http://viduthalai.in/page-2/83817.html#ixzz37AUEb6lR

தமிழ் ஓவியா said...


இன்று உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11



மக்கள் தொகைப் பெருக்கத்தால் வரும் பாதிப்பை முதல்முதலில் உணர்ந்து கூறியவர் தந்தை பெரியாரே!

1990-ஆம் ஆண்டுக்கு முன்பு நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை பேருந்துப் பயணத்தில் தச்சநல்லூரைப் பேருந்து கடந்த உடனே பசுமை ஆக்ர மித்துவிடும். அதன் பிறகு கோவில் பட்டி வரை பசுமைதான். அதன் பிறகு திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் பசுமலை என கண்ணுக்கு குளிர்ச்சி யாக பசுமை மயமாக இருந்தது. மதுரை நகரம் அப்பொழுதெல் லாம் இரைச்சலின்றி மிகவும் அழகாக இருந்தது.

அப்போதைய மாட்டுத் தாவணி என்பது நகரத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த ஓரிடமாகும், பழைய நீதிமன்றத்தைத் தாண்டிய உடனே பசுமை, பிறகு திருச்சிவரை பசுமை அதன் பிறகு சென்னையை நெருங்கும் வரை பச்சைப் பசேலென்று தானிருக்கும். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்படி ஒன்றும் நாம் நூற்றாண் டுகள் கடந்து விடவில்லை. வெறும் 20 ஆண்டுகள் தான் கடந்து வந்தோம். இன்று சென்னையில் இருந்து திருச்சி வரை சிறு சிறு இடம் விட்டு கட்ட டங்கள் தான் தெரிகின்றன. மதுரைக் கும், திருநெல்வேலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வயல்வெளிகள் அழிந்து திருநெல்வேலிவரை எங்கும் நகரமயமாகிவிட்டது. ஏன் என்ற இந்தக் கேள்விக்கு ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் தொகைப்பெருக்கம் நெருக்கடியான சூழ்நிலையைக் கொண்டு வந்துவிட்டது. வளர்ச்சியடைந்த நாடுகளைத் தவிர வளரும் மற்றும் வளர்ச்சியடையா நாடுகள் அனைத்திலுமே மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் அச்சுறுத்த லாக அமைந்துவிட்டது. முக்கியமாக தெற்காசியப் பகுதியில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது மக்கள் தொகைப் பெருக்கமேயாகும்.

உலக நாடுகளில் பல இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்து சரியான சட்டதிட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வருகின்றன. எடுத் துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை எடுத்துக்கொண்டால் 1970ஆம் ஆண்டுகளில் சிட்னி நகர நிர்வாகம் வரும் நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி, எவ்வாறு பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பிட வசதி, குடிநீர்த்தேவை, போக்குவரத்து வசதி என பல்வேறு இன்றியமையாத தேவைகளுக்காக திட்டமிட்டது. அப்போது நகர நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று சுமார் 3-கோடி மக்கள் வசிக்கும் ஒரு நகரம் மிகவும் அமைதியாக எந்த ஒரு இன்றியமையாத தேவையான பொருட்கள் குறைவின்றி அளவாக திட்டமிடப்பட்டு நகர விரிவாக்கம் நடைபெறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது தற்போதைய நவீன மயமாகும் உலகத்தின் வளர்ச்சியின் குறுக்கே நிற்கும் மிகப்பெரிய தடையாக விளங்குகிறது. முக்கியமாக இந்தியா போன்ற நாடுகள் அனைத்து வளங்கள் இருந்தும், இன்றும் மேலைநாடு களோடு போட்டி போடமுடியாததற்கு காரணம் மக்கள் தொகைப் பெருக் கமேயாகும்.

தந்தை பெரியார் 1930ஆம் ஆண்டு-களில் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய போது மக்கள் தொகைப் பெருக்கத் தினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை வலியுறுத்தினார். அப்போது மேலை நாடுகள் கூட மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிக் கவலைப்படா மல் உலகப்போரிலும், நாடுகளைப் பிடிக்கும் பேராசையிலும் திளைத் திருந்த காலகட்டமது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சீர்திருத்த நட வடிக்கைகளைக் கேட்டு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இன்று மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார, சுகாதார, மற்றும் வசிப்பிட நெருக்கடி நமக்கு ஏற்பட்டிருக்காது.

தந்தை பெரியார் 1930-ஆம் ஆண்டுகளிலேயே மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டார் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன் மொழிந்தார்.

ஆனால் இன்றைய காலகட்டத் திலும் மதவாதிகள் நிறைய குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுக்கூட்ட மேடைகளில் பேசி வருகின்றனர்.

அளவிற்கு மிஞ்சும் போது அது அமிழ்தானாலும் நஞ்சாக மாறிவிடும். இந்த முதுமொழி வேறு எந்த வகையில் ஒத்துப்போகிறதோ இல்லையோ இன்றைய காலகட்டத் தில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு பெரிதும் ஒத்துப் போகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் இடப்பற்றாக்குறை நகரவிரிவாக்கம் விளைநிலங்கள் அழிப்பு என தொடர் பாதிப்புகள் மக்கள் தொகை பெருக் கதால் ஏற்படுகின்றன. தற்போதைக்கு இப்பரந்த பெரு வெளியில் பூமி மட்டுமே நாம் உயிர் வாழ ஏற்ற ஒரே ஒரு இருப்பிடமாகும். இது நமக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

- சரவணா ராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/83820.html#ixzz37AUoX3QQ

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களின் பகல் கொள்ளை


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களின் பகல் கொள்ளை

திராவிடர் கழகத்தின் விடுதலை 3.7.2014 தேதி இதழில் வெளிவந்துள்ள சிதம் பரம் தீட்சதர்களின் அடுத்த சுரண்டல் என்ற தலையங்கக் கட்டுரையை ஒவ்வொரு பெரியார் தொண்டரும் படித்து அதன் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

2008 ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வருமானம் என்று தீட்சதர்கள் கணக்கு காட்டி வந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அக்கோயில் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே! சுமார் 100 கிராம் தங்க நகைகளும் வந்ததுண்டே!

தீட்சதர்கள் எங்களுக்கே சிதம்பரம் கோயில் சொந்தம் என்று கூறும் இரகசியத் தின் பின்னணி இந்தப் பகற் கொள்ளைதான்

தீட்சதர்களின் இந்தப்பகல் கொள் ளையைக் கண்டிப்பதற்கு திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் முன்வரவில்லையே ஏன்? கோயில்கள் திருடர்களின் குகைகள் என்று யேசு கூறியது இன்றும் உண்மை யாகத்தானே இருக்கிறது?

சிதம்பரம் கோயிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த மூன்றரை கோடி மதிப்புள்ள பவள மாலை கணக்கில் வராததால் இந்து அற நிலையத்துறை தீட்சதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதம்பரம் கோயிலுக்கு 2594 ஏக்கர் நஞ்செய் நிலமும், 895 ஏக்கர் புஞ்செய் நிலமும் என மொத்தம் 3489 ஏக்கர் நிலத்தில் இருந்து வரும் வருமானம் தீட்சதர்களால் அனுபவிக்கப்பட்டு வந்தது (முரசொலி 22.9.2009)

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து தீட்சதர்கள் டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உச்ச நீதிமன்றம் தீட்சிதர் களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

முல்லைப் பெரியாறு வழக்கில் டில்லி உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கேரள அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதைப்போல் தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோயில் வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள திராவிடர் கழகத் தலைவர்கள் 3.7.2014 தேதி விடுதலை தலையங்கத்தை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

இந்து அறநிலையத் துறையின் மேற் பார்வையில் இருக்கும் தமிழகக் கோயில் கள் மொத்தம் 38481 (விடுதலை 24.2.2014). இந்தக் கோயில்கள் அத்தனையும் தமிழர் களின் கடின உழைப்பால் உருவானவை. ஆனால் கருவறையில் அர்ச்சகர்களாக இருந்து ஆதிக்கம் செலுத்தி வருவதோ பார்ப்பனர்கள். அவர்கள் மந்திரம் ஓது வதோ வடமொழியில்!

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி யார் அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சியை மேற்கொள்ள பெரியரியார் தொண்டர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.

- இர.செங்கல்வராயன், செய்யாறு

Read more: http://viduthalai.in/page-2/83821.html#ixzz37AUxPAVk

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்

தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடையாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப் பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித் திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக்கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள்ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

Read more: http://viduthalai.in/page-7/83854.html#ixzz37AVlHA2V

தமிழ் ஓவியா said...


தமிழகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான கமலா ரத்னத்திற்கு பெண் குழந்தை பிறந்தது


சென்னை, ஜூலை 11- தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம், நேற்று தனது 24 ஆவது வயதில் பெண் குழந்தையை பெற்றெ டுத்தார். நேற்று காலை ஜி.ஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 2.8 கிலோ எடையுள்ள குழந்தையை அவர் பெற்றுத் தந்தார்.

1990 ஆம் ஆண்டு பெண்களுக்கான சிறப்பு மருத்துவ ரான டாக்டர் கமலா செல்வராஜ் சோதனை குழாய் மூலம் குழந்தையான கமலா ரத்னத்தை பிறக்க வைத்தார். ஆனால் அந்த குழந்தை தனது 24 ஆவது வயதில் ஒரு பெண் குழந் தையை ஈன்றதிலும் தன்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டியது இருக்கும் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

இது குறித்து டாக்டர் கமலா செல்வராஜ் கூறுகையில்:-

இந்த நாளுக்காக தான் நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். 24 வருடங்களுக்கு முன் கமலா பிறந்த போது பல்வேறு விதங்களில் அச்சங்கள் எழுப்பப்பட்டது. அவளால் சகஜமான வாழ்க்கையை வாழ முடியுமா, அவருக்கு குழந்தை பிறக்குமா என்று கேள்வியெழுப்பப் பட்டது. அதற்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது என்றார்.

மருத்துவமனையில் உள்ள பிள்ளைப்பேறு அறைக்குள் காலை 9 மணிக்கு சென்ற கமலா 7 மணி நேரங்கள் உள்ளேயே இருந்து கமலா ரத்னம் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க கடும் சிரத்தை எடுத்துக்கொண் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/83828.html#ixzz37AWF04W0

தமிழ் ஓவியா said...


நிதிநிலை அறிக்கை: எதிர்க்கட்சிகள் கருத்து


புதுடில்லி, ஜூலை 11_ மோடி தலைமையிலான அரசு நேற்று (10.7.2014) நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

ப.சிதம்பரம்

மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடைபிடித்த கொள்கைகளின் பிரதிபலிப்பு. இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய அரசு அறிவித்த அம்சங்களை அருண்ஜெட்லி ஆமோதித்திருக்கிறார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் புதிய அறிவிப்புகளாக வெளிவந் துள்ளன.

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரித்திருப்ப தன்மூலம் ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை அரசு தியாகம் செய்திருக்கிறது. அதேசமயம் கூடுதல் உற்பத்தி வரி விதிப்புமூலம் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டியிருக்கிறார்கள்.

பொருளாதார சீர்திருத்தங்களில் கடந்த ஆண்டு நம்பிக்கையிழந்த பாரதீய ஜனதா, இப்போது திடீரென தனது நிலையை மாற்றிக் கெண்டு அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்புகளை அதிகரித்திருக்கிறது. உற்பத்தித் துறைக்கான எந்தக் கொள்கை அறிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. உணவுப் பாதுகாப்பு சட்டம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை.

_ இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ஏழை களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு வரிச்சலுகை அறிவித் துள்ளனர்.

முந்தைய அரசு நிர்ணயித்த வரியை, தொடரப் போவதாக கூறும் அரசு, தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் நெருக்கடி காரண மாக வரிச்சலுகை அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற நலத்திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெற வில்லை. பண வீக்கத்துடன் போராடும் சாதாரண மக்களுக்கு வரி விலக்கு உதவாது என்றார்.

நிதிஷ் குமார்

பிகார் முன்னாள் முதல்வரும், அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு சலுகை வழங்கப்படும் என பா.ஜ.வினர் வாக் குறுதி அளித்தார்கள். மக்களின் வாக் குகளை பெற்றபின் அனைத் தையும் மறந்து விட்டார்கள்.

பொருளாதார ஆய்வறிக் கையை பொருத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தி, மற்றும் வருமான வரி செலுத்துதல் ஆகியவற்றில் பிகார் சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனால், பிகார் மாநிலத் துக்கு எந்த சிறப்பு நிதியும் அளிக்கவில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என தேர்தலின்போது அறிவித்தார்கள்.

அந்த வாக்குறு தியையும் நிறைவேற்றவில்லை. ராணுவம் மற்றும் காப் பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரித்ததை தவிர இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. என்றார்.

சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண்துறை அமைச்சரு மான சரத்பவார் கூறுகையில், அறிவிப்பு மழைகள், மயக்கும் சொற்கள், ஆனால் இறுதியில் வளர்ச்சி இயந்திரத்திற்குத் தேவையான எரிபொருள்தான் கொடுக்கப்படவில்லை.

இது கார்ப்பரேட் பட்ஜட். சிறப்பான எதுவும் இதில் இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வில் தத்தளிக்கும் சாதாரண மக்களுக்கு எதுவும் உதவாது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ 50 ஆயிரம் உயர்த்தியது பலன் அளிக்காது. மறைமுக வரிகளை உயர்த்தி இருப்பதால், எல்லா பொருள்களின் விலையும் மேலும் உயரும்.

மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், அன்னிய முதலீட்டாளர் களுக்காக, அன்னிய முதலீட் டாளர்களால் நடத்தப்படும் அன்னிய முதலீடு அரசு தாக்கல் செய்துள்ள பட் ஜெட்டில், தொலைநோக்குப் பார்வை இல்லை, குறிக்கோள் இல்லை, செயல்திறன் இல்லை. ஏழைகளின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் உதவாது. சில்லரை விற்பனையில் ஏற்கெனவே அன்னிய முதலீடு உள்ளது.

தற்போது ராணுவம் மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 49 விழுக்காடு அதிகரித் துள்ளது. மேலும் வங்கித் துறையில் தனியார்மயம் ஆகியவை பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/83832.html#ixzz37AWTH6d8