Search This Blog

4.7.14

சாய்பாபா Vs சங்கராச்சாரி பக்தர்களின் சண்டை!கொடும்பாவி எரிப்பு


ஆதி சங்கரர் ஏற்படுத்திய 4 திசைகளிலும் நான்கு மடங்களே.
பத்திரிநாத், சிருங்கேரி, துவாரக பீடம், பூரி

இதில் காஞ்சி மடம் கிடையாது; கும்பகோணத்தில் உள்ள கிளை மடமாகத்தான் இருந்து பிறகு அங்கே மாறிய பின்தான் காஞ்சி சுமார் 150 ஆண்டுகளுக்குள் வந்த மடமாகும்.

சிருங்கேரி மட்டும்தான் தென்னாட்டு மடமாகும்.

துவாரக பீட சங்கராச்சாரியார் ஒரு புது சண்டை - கடவுள் சண்டையை உருவாக்கி நடத்தி வருகிறார்.

சீரடி சாய்பாபா, (முதலாமவர்) ஒரு முஸ்லீம்; அவரை ஹிந்துக்கள் வணங்கக் கூடாது என்று எதிர்ப்பு இயக்கம் ஒன்றைத் தொடங்கி சர்ச்சை முற்றி கைகலப்பு வழக்கு உட்பட அலகாபாத் நீதிமன்றத்தில்.

அவர் ஹிந்துக்களின் கடவுளோ, அவதாரமோ அல்ல; முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் அவர். சாய்பாபா அசைவம் சாப்பிடுபவர், சுன்னத்தை ஆதரிப்பவர், ஒரு முஸ்லீம் பக்கிரி!

அமைச்சர் உமாபாரதி அந்த சாய்பாபா பக்தை என்றால் அவர் ஹிந்து மதத்தை, தர்மத்தை அவமதிக்கிறார் என்று பொருள் என்று கூறியவுடன் சுவாமி சொரூபானந்த சரஸ்வதியை சாய்பாபா பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அந்த சங்கராச்சாரியின் கொடும்பாவியை கொளுத்தியுள்ளனர்.

இதோ முழுச் செய்தி:

கொடும்பாவி எரிப்பு:
துவாரகை சங்கராச்சாரியார் மீது அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு!
சீரடி சாய்பாபா பக்தர்கள் தொடர்ந்தனர்!!

புதுடெல்லி, ஜூலை. 3-_ சீரடி சாய்பாபாவை துவாரகை சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த சரஸ்வதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு சாய் பாபா பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வா-ர-ணா-சி-யில் துவாரகை சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை அவர்கள் கொளுத்தினர். இதனால் பரபரப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சொரூபானந்த சரஸ்வதிக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் சாய்பாபா பக்தர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

சர்ச்சை

இந்நிலையில், துவாரகை சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த சரஸ்வதி, சீரடி சாய்பாபா ஒரு முஸ்லிம். அவர் கடவுளின் அவதாரம் கிடையாது. அவரை உண்மையான இந்துக்கள் யாரும் வழிபடக்கூடாது' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தான் ஒரு சாய்பாபா பக்தை என்று கூறியுள்ளார். இதை சொரூபானந்த சரஸ்வதி மிகக் கடுமையாக விமர்சித் துள்ளார். உமா பாரதி, ராமபிரானின் பக்தை என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான், அவர் சாய்பாபா என்ற முஸ்லிமை பின்பற்றுகிறார் என்பது தெரிகிறது. இதனால்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உமாபாரதி போன்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று சொரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார்.

ருத்ராட்சம்

சொரூபானந்த சரஸ்வதியின் கருத்துக்கு சாய்பாபா பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடமாநி லங்களில் சாய்பாபா பக்தர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் சொரூபானந்த சரஸ்வதியின் கொடும்பாவியை சாய்பாபா பக்தர்கள் எரித்தனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது, பதற்றம் விஸ்வரூபம் எடுத் துள்ளது.

இதற்கிடையே, சொரூபானந்த சரஸ்வதி, சாய்பாபாவை மீண்டும் காட்டமாக விமர்சித் துள்ளார். சாய்பாபாவை வழிபடுவது அதர்மமாகும். சாய்பாபா கடவுளின் அவதாரம் கிடையாது. சிலர் எனது கொடும்பாவியை கொளுத்தலாம். என்னை சிறைக்கும் அனுப்பலாம். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.

சனாதன தர்மத்தை பாதுகாப்ப தற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.  சாய்பாபா அசைவம் சாப்பிடுபவர். சுன்னத்தை அவர் ஆதரித்துள்ளார். ஒரு முஸ்லிம் பக்கிரியை இந்து கடவுளோடு ஒப்பிடுவதை ஒருபோதும்  ஏற்றுக் கொள்ள முடியாது என்று சுவாமி சொரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். லக்னோவில் உள்ள சாய்பாபா பக்தர்கள், அலகா பாத் ஐகோர்ட்டில் சொரூபானந்த சரஸ்வதிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். பக்தர்களின் மன உணர்வுகளை சொரூபானந்த சரஸ்வதி புண்படுத்தி வருகிறார் என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள் ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இப்படி கடவுள் மதச் சண்டை, ஜாதிச் சண்டை, உட்பிரிவுகள் சண்டை என்று 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தால் இதைவிட வெட்கக் கேடு உண்டா?

கடவுள் உண்டு என்று கூறி சண்டைகள் போடுபவர்களைவிட, ஒரே வரியில் இல்லை என்று கூறுபவர்கள் பல்லாயிரம் மடங்கு மேலானவர்கள் அல்லவா?
கடவுள் மறுப்பாளர்களால் எங்காவது கலவரம்  வந்தது உண்டா?

பக்த கோடிகளே, நம்பிக்கையாளர்களே, வைதீகர் களே உங்கள் பதில்தான் என்ன? என்ன? என்ன?

---------------- ஊசி மிளகாய் --'விடுதலை” 4-7-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிள்ளையார்

இந்தியாவில் மட்டுமல்ல - பிள்ளையார் ஜப்பானிலும் உள்ளார்; கணபதி கங்கிதேன், பினாயக்தேன் என்று அழைக் கப்படுகிறாராம். புத்தனுக்கு விநாயகர் என்று பெயர். இதை உல்டா பண்ணி தமிழ் நாட்டில் புத்தர் சிலைகளை உருமாற்றி விநாயகர் என்று அழைத்த சூழ்ச்சி, ஜப்பானிலும் அரங்கேறியுள்ளது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YKl8Rf7

தமிழ் ஓவியா said...

இப்படியும் மூட நம்பிக்கை

தான் விரும்புகின்ற எண்ணை (ஜிஷி09 ணிகி 3456) தன்காருக்குப் பெறுவதற்காக பிவிஎஸ் ராஜூ என்பவர் அந்த விருப்ப எண்ணுக்காக மட்டும் ரூ.2.70 இலட்சம் தொகையை செலவிட்டுள்ளார். அவர் புதிதாக வாங்கி உள்ள ஆடிகாரின் விலை ரூ.41.23 இலட்சமாகும். இத்தகவலை தெலங்கானா போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YL0GYt4

தமிழ் ஓவியா said...

நாங்கள் ஒன்றும் காவி அணியவில்லை!

மகாராட்டிர மாநில அரசு, முஸ்லீம்களுக்கு அளித்துள்ள இட ஒதுக்கீடு நன்மை பயக்குமா என்று ஆராய நான் விருப்ப வில்லை. மக்கள் பயன் பெறும் திட்டங்களை வரவேற்போம். இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்க நாங்கள் என்ன காவி உடை அணிந்தவர்களா? - சரத்பவார் (தலைவர் தேசியவாத காங்கிரஸ்)

Read more: http://viduthalai.in/e-paper/83397.html#ixzz36YL9VRk3

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுக்கு லகான் போடும் இந்துத்துவா அமைப்பு!


மத்திய அரசுக்கு லகான் போடும் இந்துத்துவா அமைப்பு!
தேசிய கலாச்சாரம் என்ற போர்வையில் அரசைக் கண்காணிக்கிறது


புதுடில்லி ஜூலை 4_ வாஜ்பாயி ஆட்சிக்கு பிறகு 10 ஆண்டுகளாக சற்று அமைதியாக இருந்த இந்துத்துவ அமைப்புகள் தற்போது மீண்டும் தங் களது பழமைவாத திட் டங்களை நம் நாடு நமது தொன்றுதொட்ட கலாச் சாரம் என்ற பெயரில் செயல்படுத்த ஆரம்பித் துள்ளது. மத்திய அரசுக்கு லகான் போடும் வேலை யிலும் இறங்கியுள்ளது.

வாஜ்பாய் அரசு பல் வேறு திட்டங்களில் பழ மைவாதக் கொள்கை களை சங்க்பரிவாரங்களின் துணை அமைப்புகளின் உதவியுடன் செயல்படுத்தி வந்தது. இதுபோன்ற அமைப்புகளின் ஒன்று சுதேசி ஜாகரன் மஞ்ச் (உள்நாட்டு கலாச்சார விழிப்புணர்வு இயக்கம்)

இந்த அமைப்பு தற் போது வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சிக்கு எதிரான கொள்கைகளை கொண்டது. அதாவது தற் போதைய காலகட்டத்தில் அனைத்துத் துறையிலும் அதிநவீன தொழில் நுட் பம் வந்துவிட்டது, இத னால் பல்வேறு வேலை கள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் முடிக்கப் பட்டு வருகிறது இந்த அமைப்பு வாஜ்பாய் அரசின் அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வந்ததும் இங்கு குறிப் பிடத்தக்கது. மய்ய அரசுடன் நேரடித் தொடர்பு

தற்போது இந்த அமைப்பின் புதிய தலைமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் மீண்டும் இந்திய கலாச்சாரத்திற்கு உகந்த கொள்கைகளைக் கொண்ட செயல் திட் டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி யுள்ளது.

சுவதேசி ஜாகரன் மஞ் சின் ஆலோசனைப்படி பாரதிய கிசான் சங் (இந்திய விவசாயிகள் அமைப்பு) பாரதிய மஸ் தூர் சங் போன்றவை மய்ய அரசுடன் நேரடித் தொடர்பில் இருப்பது போன்ற பொது அமைப்பு ஒன்றை அமைத்து அதன் மூலம் அரசிடம் தங்களது கொள்கைகளை வலியுறுத் துவதோடு அது நடை முறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்கானிக் கவும் முடிவு செய்யப்பட வுள்ளது. கடந்த மே மாதம் சுவதேசி ஜாகரன் மன்சின் தலைவர்கள் ஆர்.எஸ். எஸ் அமைப்பின் தலை வர் மோகன் பகவத்தை சந்தித்த போது தங்களது கொள்கை முடிவுகளை பற்றிக்கூறி மோடி அரசு தங்களின் ஆலோ சனையை ஏற்குமாறு வலியுறுத்திக் கூறினர்.

சுதேசி ஜாகரன் மஞ்சு சார்பாக பேசிய அதன் தலைவர்களில் ஒருவரான அருண் ஓஜா பத்திரிகை யாளர்களிடம் பேசும் போது இந்த அமைப்பு இந்தியக்கலாச்சாரத்தை பாதுகாக்கவும், இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையை மாற்றவும் பாடுபடுகிறது. புதிய அரசு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக் கையுடன் உள்ளோம். எங்களைப்பொறுத்தவரை மத்திய அரசின் நேரடி முதலீட்டுக்கொள்கை மற்றும் பல்வேறு அயல் நாட்டு நிறுவனங்களின் உள்நாட்டு வியாபாரம் தொடர்பான சட்டதிட் டங்களில் மாற்றங்கள் கொண்டுவர அரசை வலியுறுத்துவோம். இழந்துபோன நமது கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டு வரும் வகையில் எங்களது நடவடிக்கைகள் அமையும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83389.html#ixzz36YLJGt7V

தமிழ் ஓவியா said...

குழந்தை இறப்பை தடுக்க புதிய தடுப்பூசிகள்

புதுடில்லி, ஜூலை 4-_ குழந் தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய தடுப்பூசிகள் அனைத்து குழந்தை களுக்கும் இலவசமாக அளிக்க உள்ள தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் தார். இது குறித்து டில்லியில் பிரதமர் மோடி கூறியதாவது:

சர்வதேச தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு தடுப்பூசிகள் அளிக்கப்படு கின்றன. இந்த புதிய 3 தடுப்பூசிகளையும் சேர்ந்து 13 உயிர் பலியை ஏற்படுத்தும் நோய்களில் இருந்து 2.7 கோடி குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசிகள் அளிக்கப்படும்.

சிறு குழந்தைகளை தாக்கும் ரோடாவைரஸ், ருபெல்லா, போலியோ ஆகியவற்றுக்கு தடுப்பூசிகளும், பெரியவர்களை தாக்கும் ஜாப்பனீஸ் என்சபாலிடிஸ் (மூளைக் கொதிப்பு மூலம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்) நோய்க்கான தடுப்பூசியும் படிப்படியாக அளிக்கப்படும்.

உலகளாவிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் இலக்கை அடைவதற்கும், குழந்தைகள் இறப்பு விகிதத்தை அடுத்த ஆண்டில் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கவும் இவை அளிக்கப்படு கின்றன. தற்போது இவை சில மருத் துவமனைகளில் கிடைத்தாலும், அனைத்து மக்களுக்கும் இதன் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவசமாக அளிக்க உள்ளது என்றார் மோடி. ரோடாவைரஸ் கிருமி மூலம் ஏற்படும் வயிற்று போக்கால் ஆண்டுக்கு 80 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. 10 லட்சம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் 300கோடி கூடுதல் சுமை ஏற்படுகிறது.

ருபெல்லா என்பது பிறவியிலேயே ஏற்படும் பார்வையின்மை, காது கேளாமை, இருதய நோயாகும். ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இந்த குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. போலியோவை ஒழிக்க ஏற் கெனவே சொட்டு மருந்து அளிக்கப் படுகிறது. தற்போது அத்துடன் போலியோ தடுப்பூசியும் அளிக்கப்பட உள்ளது. ஜாப்பனீஸ் என்சபாலிடிஸ் தடுப்பூசிகள் 9 மாநிலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 179 மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அளிக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/83402.html#ixzz36YMFD9xn

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலுக்கும் பாதிரியாருக்கும்

ஒருநாள் பாதிரியார் ஒரு வருக்கும் இங்கர்சாலுக்கும் நடை பெற்ற தர்க்கமாவது;-

பாதிரியார் ஞானஸ்நானம் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதற்கு இங்கர்சால் பதில் இறுத்த தாவது:

எனது ஞானஸ் நானம் சுத்தமாக குளிப்பதுதான்! அது தங்கள் ஞானஸ்நானத்தை விடச் சிறந்தது என்றார்.

Read more: http://viduthalai.in/page-7/83405.html#ixzz36YNz2tzo

தமிழ் ஓவியா said...


நாங்கள் நாத்திகர்கள் ஏன்? (இது ஒரு அமெரிக்க நாத்திகர் வெளியீடு)


நாங்கள் நாத்திகர்கள் தான்! ஏனென்றால்,

1. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எங்களுக்கு போதிய ருஜூ இல்லை.

2. ஒரு கடவுள் இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு அவசியமோ அவரால் ஒரு உபயோகமோ இருப்பதாக நாங்கள் கருதுவது இல்லை.

3. ஒரு நல்ல கடவுள் என்பவர் சர்வசக்தி வாய்ந்தவராய் இல்லாவிட்டால் அவர் பிரயோஜனமற்றவரே யாவார்.

4. ஒரு சக்திவாய்ந்த கடவுள் நல்லவராக இல்லா விட்டால் அவர் வணக்கத்துக்குரியவராகமாட்டார்.

5. சர்வசக்தி வாய்ந்த ஒரு நல்ல கடவுள் இல்லவே இல்லை. அப்படி இருப்பதாக இருந்தால், எல்லாம் தோஷமற்றதாகவும், சம்பூர்ண மாகவுமிருக்கும்.

6. கடவுளால் உண்டாக்கப்பட்ட எல்லா உலகங்களிலும் இந்த உலகம் ஒன்று மட்டும் சிரேஷ்டமான உலகமாயிருக்கின்றதானால், அப்பொழுது மோட்ச உலகத்தைப் பற்றிக் கூறும் கதைகள் எல்லாம் பொய்யானவைகளாகத்தான் இருக்க வேண்டும்.

7. மனிதன் இடைவிடாமல் அடுத்தடுத்து விஞ்ஞான சாஸ் திரத்திலும், சுதந்திரத்திலும், சீர்திருத் தத்திலும் முயற்சி செலுத்திக் கொண்டே வந்திருக்கின்றபடியால், கடவுள் கொள்கை விவகாரத்திற்கு வந்துவிட்டதுடன் கடவுள் உணர்ச் சியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது.

8. ஆதியில் மனிதர்கள் அறியாமை என்னும் அந்த காரத்தில் மூழ்கி இருந்த போது தனக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் கடவுள் தன்மை, கடவுள் செயல் எனக் கூற வேண்டியதாகி ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டு அதை அநுபவத்தில் கொண்டு வந்து விட்டார்கள். ஆதிகால மனிதர்கள் ஒவ்வொன்றையும் தப்பிதமாகவே யூகித்துக் கொண்டு வந்தார்களெனக் கூறிவிட்டு, ஆனால், ஜீவனைப் பற்றி மட்டும் உண்மை யாகவே அவர்கள் அறிந்து வைத்திருப்பார்களெனக் கூறுவதும் பொருத்தமானதல்ல.

9. விஞ்ஞான சாஸ்திரங்களின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்டவைகள் யாவும், அவை கண்டுபிடிப்பதற்கு முன் அவைகள் ஒவ்வொன்றையும் கடவுளின் செயல்; கடவுளின் அற்புதம் எனக் கூறப்பட்டுக் கொண்டே வரப்பட்டது. ஏதாகிலும் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப் பட்டால், அப்பொழுது கடவுளின் தன்மையும், கடவுளின் அற்புதமும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடை கின்றன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டவைகளில் எதுவும் ஒன்று கூட கடவுளின் தன்மையை வலுப்படுத்த வேயில்லை.

10. கடவுள் தன்மை என்று இதுவரை பகிரங்கப்பட்டு வந்த விஷயங்கள் யாவையும் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, அவைகள் யாவும் இப்போது மனிதத் தன்மைக்கு அடங்கியவைகள் தான் எனவும், சூதும், மோட்சமும்தான் எனவும் நிரூபிக்கப்பட்ட வருகின்றன.

11. குற்றம் கொடுமை, பொறாமை, பகைமை, அசூயை, காமம், எரிச்சல், தர்மசிந்தையில்லாமை ஆகியவைகள் யாவும், கடவுளின் தன்மைக்கு பொருந்தி இணக்கமாயிருக்கின்றது.

நாஸ்திகம் போதிப்பது யாதெனில்:-

கைலாசத்திலோ அல்லது வைகுண்டத்திலோ அல்லது பரலோகத்திலோ ஒருவிதக் கடவுளும் இல்லை.

தாய் தந்தையற்ற குழந்தைகளையும், திக்கற்றவர் களையும், மனிதர்கள்தான் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். கடவுள் காப்பாற்றுவார் என்பது வீண் வார்த்தை.

நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய ஒரு கடவுள் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

மனிதர்களே மனிதர்களின் அபயக் குரலோசைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

நரகமென்பது கிடையாது. நாம் பயப்படக்கூடிய அல்லது பின்பற்றக்கூடிய பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்கிற துர் எண்ணங்கொண்ட கடவுளாவது, அல்லது பூதமாவது எங்குமில்லை.

Read more: http://viduthalai.in/page-7/83413.html#ixzz36YO6RRtt

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

பதில்: புல்லு, வைக்கோல், தவிடு, பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை போட்டால் பால் கறக்கும்!

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதெதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.
அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? -என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவைகள் ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து - அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் - சரவணப் பொய் கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தாம் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளையுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதானம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்;

இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-7/83408.html#ixzz36YOSB18K

தமிழ் ஓவியா said...


பன்னாட்டு மனித நேயத்தலைவர் லெவி பிராகலுக்குப் பாராட்டு விழா


வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக் காட்டிலும் வளர்ந்துள்ளோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்

பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல், ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் ஆகியோருக்கு பகுத்தறிவாளர்கழகத்தின் புரவலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் நினைவுப் பரிசாக நூலை வழங்கினார் (சென்னை, 3.7.2014)

சென்னை, ஜூலை 4_ வளர்ந்த நாடுகள் பொருளா தார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேயத்தலைவர் லெவிபிராகல் அவர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.

சீரிய பன்னாட்டு மனித நேயத்தலைவரும், பன்னாட்டு மனித நேய,நன்னெறிகள் ஒன்றியம் (IHEU) நார்வே (அய்ரோப்பா) நாட்டின் மேனாள் தலை வருமாகிய லெவி பிராகல் அவர்களுக்கு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதையொட்டி, தமிழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள அவருக்கு சென்னையில் வரவேற்பு, பாராட்டு விழா நடைபெற்றது.

மின்னஞ்சல்மூலம் வாழ்த்தும், பாராட்டும்!

இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்னயா, இந்திய பகுத்தறிவாளர் அமைப்பு, கோவா தலைவர் சோமு, கேரள யுக்தி வாகினி என்னும் பகுத்தறிவாளர் அமைப்பின் சார்பில் கே.அனில்குமார், ஈகிள் நிறுவனம் சார்பில் பிரதாப்சிங் உள்ளிட்ட பலரும் மின்னஞ்சல்மூலம் இந்த விழாவுக்கு தங்கள் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்திருந்தனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (3.7.2014) சென்னை வேப்பேரி, பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டு, தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்றுப் பேசினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் லெவி பிராகல் ஆற்றிவரும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிமுக உரை ஆற்றினார்.

ஆந்திர நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் கோ.விஜயம் தந்தைபெரியார், கோரா ஆகியோரின் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர், லெவி பிராகல் உள்ளிட்ட அனைவருமே மனித நேயத்துக் காகவும், சுயமரியாதைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டுவரும் சமூகத்தொண்டர்கள் என்று ஆங்கிலத்தில் விரிவாகப் பேசினார். மேலும், தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பிவரும் இயக்கம், கல்விப் பணியையும் மேற்கொண்டு மனித நேயத் தொண்டை ஆற்றி வருவதாகத் தமிழர் தலைவர் ஆசிரியரைப் பாராட்டிப் பேசினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

சிறப்புரையாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை ஆற்றினார்.

டாக்டர் பட்டம் பெறவுள்ள பன்னாட்டு மனித நேய முக்கிய தலைவர் லெவி பிராகல் இந்தியாவுக்கு அறிமுகம் என்பது தந்தை பெரியாரால், அவர் கொள்கைகளால், திராவிடர் கழகத்தால்தான் என்றும், இதற்குமுன்பாக 1989ஆம் ஆண்டில் தொடங்கி, 25 முறை இந்தியாவுக்கு வருகை தந்து இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் கொள்கைகள் உலகமயமாகி வருவதற்கானத் தேவைகள், விளையாட்டு வீரர்களிடம் உள்ள மூடநம்பிக்கைகள், வளர்ந்த நாடுகள் பொருளாதார அளவில்தான் வளர்ந்துள்ளன. பகுத்தறிவில் நாம்தான் அவர்களைக்காட்டிலும் வளர்ந்துள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டி பல்வேறு தகவல்களை சிறப்புரையில் குறிப்பிட்டார். லெவி பிராகல் பாராட்டு பெறுவதற்கான பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

லெவி பிராகல்

லெவி பிராகல் உரையின்போது தமிழர்தலைவருடன் இணைந்து ஆற்றிய பணிகள்குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற பொது நிகழ்வுகளில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்பதன்மூலம் மனித நேயம் சிறக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு லெவி பிராகல், தமிழர் தலைவர் ஆசிரியர் சளைக்காமல் பதிலளித்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/83427.html#ixzz36YOycpms

Hari said...

hindukkalukkul sandai enraal udane kalavaratthai undu panna vandhu viduveergale? iraq il irandu muslim pirivinarukku idaiyil sandai . enge adhai patri katturai yezhudhen paarpom. payandhaangoli. hindu na ilachavaayan. enna vendumaanaalum yezhudhalaam . idhe oru muslim naattil veroru naadu sandai pottaal udane dhaam dheem enru kudhippeergale. ippo enge ponadhu ungal veeraappu ellam. muslim avargalukkul sandai ittaal madhyastham seiyya bayappadugireergal. hindukkalukkul sandai enraal varindhu kattikkondu varugireergal , eppadi muslimgalukkul sandai varum podhu potthikittu irundheergalo adhe maadhiri ippodhum irungal..

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க தினத்தந்தி தலையங்கம்

குஜராத் அல்ல, தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது!

குஜராத்தில் முதல்மந்திரியாக பணி யாற்றிய நரேந்திர மோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அபரிமிதமான வெற்றிக்கு பிறகு, பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவருக்கு பிறகு யார் குஜராத் முதல்மந்திரியாக பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என்று நாடே உற்று நோக்கிக்கொண்டு இருந்தது. அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக 72 வயதான ஆனந்திபென் பட்டேல் பதவி ஏற்று இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஆமதாபாத் நகரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பில் கலந்துகொண்ட அவர், குஜராத் மாநில போலீஸ் படையில் 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்காக ஒதுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். இந்த இடஒதுக்கீடு அனைத்து மட்டத்திலும் அமல் நடத்தப் படும் என கூறினார். அவரது அறிவிப்பு அந்த மாநிலத்தை பொறுத்தமட்டில், பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்குள் பல ஊடகங்கள் அனைத்து மாநிலங் களுக்கும் முன்னோடியாக இந்த அறி விப்பை குஜராத் முதல்மந்திரி வெளி யிட்டது போலவும், அனைத்து மாநிலங் களும் பின்பற்றவேண்டிய அறிவிப்பு போலவும் சித்தரித்துவிட்டார்கள்.

இவர்களெல்லாம் தமிழ்நாட்டின் வரலாற்றை கண்டிப்பாக படிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டுக்கென நீண்ட, நெடிய பாரம்பரியமும், பெருமையும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஒளி விளக்கான தந்தை பெரியார் சமுதாய சீர்திருத் தத்துக்கான அவரது போராட்டத்தில் மிக முக்கியமாக பெண்களின் முன்னேற்றத் துக்காகவும், பெண் விடுதலைக்காகவும் தான் போராடினார். பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக அச்சாரம் போட்டவர் தந்தை பெரியார் தான். அதுபோல, பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதி யாரும், ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவி லோங்கி இவ் வையம் தழைக்கும் என்று பாடிவிட்டு, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று முழங்கினார். இத்தகைய பெரும்பேறு பெற்ற தமிழ்நாட்டில் 1989ல் முதல்அமைச்சராக இருந்த கருணாநிதி அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசு உத்தரவு பிறப்பித்தார். பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு புதுக்கணக்கு தொடங்கியது. 1991ல் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற முதல் பெண் முதல்அமைச்சர் என்ற பெருமையோடு பதவியேற்ற ஜெயலலிதாவின் சிந்தை யில் உதித்து அடுத்த ஆண்டே செய லுக்கு வந்த திட்டம்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் போலீசாரிடம் இருந்த திறமைகளை யெல்லாம் வெளியே கொண்டுவந்தவர் அவர்தான். 1995ல் போலீஸ் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு தேவையில்லை என்று ஒரு கருத்துரு வந்தபோது, அதை ஆரம்ப கட்டத் திலேயே நிராகரித்து கண்டிப்பாக 30 சதவீத இடஒதுக்கீடு அமல்நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். வீரதீர கமாண்டோ படைகூட பெண் போலீசில் இருக்கிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்களை வெளிநாடுகளில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளெல்லாம் வந்து பார்த்து, தங்கள் நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டு சென்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 773 பெண் போலீசார், அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். 199 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின் றன. இந்தியா முழுவதிலும் உள்ள மொத்தம் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தற்போது 7 மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளாக பெண்கள்தான் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரும், 2 பெண் போலீ சாரும் இருக்கவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்றாலும், பொதுப்பட்டியலிலும் திறமை உள்ளவர்கள் போட்டியிட்டு தேர்வாக லாம். ஆக, அரசு பணிகள் என்றாலும் சரி, போலீஸ் துறை என்றாலும் சரி, பெண் களுக்கு இடஒதுக்கீடும், பெண்களின் திறமையை மிளிரச்செய்ததிலும் தமிழ் நாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டு கிறது. தமிழ்நாட்டின் அடிச்சுவடைப் பின்பற்றித்தான், மற்ற மாநிலங்கள் பெண் போலீசில் பல திட்டங்களை செயல் படுத்த தொடங்குகிறதே யல்லாமல், இன்னும் பெண் போலீசுக்கு இட ஒதுக் கீட்டையே தொடங்காத குஜராத்தை பார்த்து அல்ல.

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 5-7-2014

Read more: http://viduthalai.in/page-2/83484.html#ixzz36eEwilFx

தமிழ் ஓவியா said...


வாஸ்து?

வாஸ்து என்ற ஒன்று மிக அதிகமாகப் பேசப் படும் காலம் இது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கட்டும் வீட்டுக்கு மட்டும் தானா இது? மற்ற மதக்காரர்கள் வீடு களைக் கட்டுவதே கிடையாதா? அவர்கள் வாஸ்து பார்க்கிறார்களா? மதச் சார்பற்றவர்கள் வீடு கட்டுவதில்லையா? அவர்கள் வாஸ்து பார்க்காததால் என்ன கெட்டு விட்டதாம்? ஒரே ஒரு கேள்வி - வாஸ் துவில் கழிவறைக்கு (Toilet) இடம் உண்டா?

சோதிடம் எப்படி அறிவியலுக்குப் பொருத்தமற்றதோ, அதே நிலைதான் வாஸ்துவுக் கும். எல்லாவற்றிற்கும் இந்து மதத்தில் அறி வுக்குப் பொருத்தமற்ற புராண சமாச்சாரங்கள் உண்டு. அது இதோ:

ஒரு சமயம், தேவ, அசுரர் யுத்தத்தில் பிருகு முனிவரும் அவரது பத் தினியும் அசுரர்களைப் பாதுகாத்துக் காப்பாற் றினர். இதனை அறிந்த தேவர்கள், பிருகு முனிவரின் பத்தினியின் தலையை வெட்டிவிட்ட னர். இதனைக் கண்டித்த பிருகு முனிவர் கோபம் கொண்ட சமயம் அவரது தேகத்தில் உண்டான வியர்வை பூமியில் விழுந்து, ஓர் அசுர உத்த மன் (வாஸ்து புருஷன்) உண்டாகித் தேவர்களை அழிக்க ஆரம்பித்தான். இதனை அறிந்த தேவர்கள் வாஸ்து புரு ஷனின் தலையிலிருந்து பாதம் வரை அவனது உடலை ஆக்கிரமித்து அவனை எழுந்திருக்க விடாமல் செய்தனர்.

அது சமயம் பிரம்மா அவன் பூமியிலிருந்து தோன்றியதால், அவனைப் பூமியின் புதல்வன் என்று கூறி, உன்னை மனிதர்கள் பூமியில் வீடு, கிராமம், பட்டினம், யாகசாலை, ஆலயங்கள் ஆகிய வற்றை உண்டாக்கும் சமயம் வழிபடுவார்கள்.

அதனால் உனக்கு அளவற்ற திருப்தி உண் டாகும் உன்னை வழிபடு பவர்கள் அனைத்து நலன்களும் பெறுவர் என வாஸ்து புருஷ னுக்கு வரமளித்தார். இதுதான் வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு.

எந்தக் காலத்திலோ, எந்தக் கிறுக்கனோ எழுதி வைத்த இந்தக் குப்பைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? முகலிவாக்கம் 11 மாடி கட்டடம் வாஸ்து பார்த் துக் கட்டப்பட்டதுதான். அவர்களின் வலைத் தளத்திலேயே இது இருக் கிறது.

61 பேர் பலி கொண்ட பிறகும் வாஸ்துவை, வாஸ்தவமாக நம்பு கிறீர்களா? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83471.html#ixzz36eFOmaSI

தமிழ் ஓவியா said...


சாயிபாபாவின் சிலைகளை உடைப்போம் சங்கராச்சாரியாரின் சண்டியர்த்தனம்!

சாயிபாபா பற்றி இந்து மதத்தின் நான்கு பீடங் களுள் ஒன்றான துவா ரகா பீடத்தின் சங்கராச் சாரியார் சுவரூபானந்தா சமீபத்தில் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதாவது சாயி பாபா இந்து கிடையாது அவர் ஒரு முஸ்லீம் பாபா(பகீர் எனப்படும் பண்டாரம்) அவர் இந்து அல்ல. அவரைக் கும்பிடு பவர்கள் முட்டாள்கள் என்று குறிப்பிட்டிருந் தார். இந்த விவாதம் தற் போது மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. சாயி பக்தர்கள் இந்துக் களாக இருக்கும் பட்சத் தில் வீட்டில் உள்ள சாயி படங்கள் மற்றும் சிலை களை வீசிவிடவேண்டும் படங்களை எரித்து விட வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் சீர டிக்கு செல்லும் இந்து மதத்தவர்கள் தங்களின் மதத்திற்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள் என் பதை நினைவில் கொள் ளுங்கள் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனே நகரில் போராட்டம் நடத்திய சாயிபக்தர்களால் சங்கராச்சாரியார் மிகவும் கோபமடைந்து விட்டார். வியாழன் இரவு செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார் இந்துமததிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாயிபக்தர்கள் ஈடுபடுகி றார்கள். இது தொடரு மானால் சாயிபாபாவின் சிலைகள் உடைக்கப்படும் என்று அறிவித்தார்.

களத்தில் இறங்கும் அம்மணச் சாமியார்கள் அயோத்தியில் உள்ள ஜூனா அகாடா என்ற மடத்தின் அம்மண சாமி யார்களின் தலைவர் நரேந்திர கிரி கூறியதா வது, சங்கராச்சாரியார்கள் இந்துமத பாதுகாவலர்கள், அவர்களின் வாக்கு வேத வாக்கு! சீரிடி சாயிபாபா ஒரு முஸ்லீம் பண்டாரம், சிலர் குழுக்களாக சேர்ந்து தங்களதுபிழைப்பிற்காக அவரைக் கடவுளாக்கிக் கும்பிட்டு வருகின்றனர். மேலும் முஸ்லீம் சாமி யாரை இந்துக்கடவுளுக்கு சமமாக வைத்து வழிபடு கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலா கும். நாங்கள் சங்கராச் சாரியாவின் ஆணைக்காக காத்து இருக்கிறோம், சங்கராச்சாரியார் கூறியது போல் சாயிபாபா வழி பாட்டை இந்துமக்கள் கைவிடவேண்டும், மேலும் சாயிபாபாவின் படங்கள் மற்றும் சிலைகளை இந் துக்கள் தங்கள் வீட்டில் இருந்தும் கோவிலில் இருந்தும் அகற்றவேண் டும். சங்கராச்சாரியாரின் இந்தக் கட்டளையை கண்டுகொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் நாங்கள் நடவடிக்கையில் இறங்கவேண்டிவரும்.

கறி தின்பவராம் சாயிபாபா

இது குறித்து மடத் தலைவர் கியான் மகந்த் கூறும் போதுசாயிபாபா முஸ்லீம் அவர் (மாட்டுக்) கறி உண்பவர், அவருக்கும் இந்துமத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது, அவரது வழிபாட்டை இந்துமக்கள் கைவிட வேண்டும். இஸ்லாமியர்கள் கூட சாயிபாபாவை வழிபடு வது கிடையாது, அப்படி இருக்க இந்துக்கள் ஏன் அவரை வழிபடவேண் டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/83472.html#ixzz36eFXNFmJ

தமிழ் ஓவியா said...


இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாம் மதுபானம் சொல்கிறார் கோவா பா.ஜ.க., - எம்.எல்.ஏ



பனாஜி, ஜூலை 5_ கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாச் சாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ஆம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல் வதும், மதுபானக் கூடங் களுக்கு செல்வதும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது' என, தெரி வித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச் சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியா தது. தவாலிகரின் மூதா தையர்கள் எல்லாம், வேட்டி தான் அணிந்தனர். அதனால், அவரும் வேட்டி அணிந்து சட்ட சபைக்கு வர வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் மீது, அவருக்கு உண்மை யிலேயே அக்கறை இருந் தால், இதைச் செய்ய வேண்டும். பண்டைக் காலங் களில், கடவுளுக்கு மது பானத்தை படைத்து வழிபாடும் நடத்தி உள்ள னர். எனவே, மதுபானக் கூடங்களுக்கு செல்வதை யும், மது அருந்துவதையும், மதம் மற்றும் கலாச்சாரத் தின் பெயரில் எதிர்ப்பது சரியல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83474.html#ixzz36eG1Phsq

தமிழ் ஓவியா said...


முத்துலட்சுமி ரெட்டி மசோதா


(டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)

1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் விபசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.

வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை. ஆனால், சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.

தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபசாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும்வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கெனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.

ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

- குடிஅரசு - கடிதம் -30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83438.html#ixzz36eHlierK

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி இப்போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்து வார்களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப் பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83445.html#ixzz36eHvBqDD

தமிழ் ஓவியா said...

சிவகாமி - சிதம்பரனார் திருமண அழைப்பு

திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர் கட்கும் 05.05.1930 திங்கட்கிழமை மாலை5 மணிக்கு திரு. ஈ. வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுய மரியாதை மகாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - திருமண அழைப்பிதழ் - 04.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83439.html#ixzz36eI81IPQ

தமிழ் ஓவியா said...

ஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்!.



2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்திய போது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக் கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது. எனவே இதை ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார் என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரசின் திக் விஜய் சிங்.

தமிழ் ஓவியா said...

கர்ப்ப காலத்தில் உறவு - இந்திரன் தந்த வரமா?


பிரம்மஹத்யம் அஞசலைன
ஜகரஹ யத் அபிஸ்வராஹ
சாமவதசரந்தோ தத அக்ஹம் புதா(ஹ)னம்
ப்ஹுமய் அம்பு(ஹ) துர்ம யொஸித்பயாஸ்
சதுரத வயப்ஹஜத த(ஹ)ரிய(ஹ) - பகவத் கீதை

மேலுள்ள வேதமொழிச் செய்யுளின் விளக்கம் இதுதான்.

இந்திரன் தெரியாத்தனமாக ஒரு பார்ப்பனனைக் கொலை செய்துவிட்டானாம். அவனுக்கு மிகவும் கொடுமையான பிரம்மஹஸ்தி தோசம் பிடித்துவிட்டதாம். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அதைப் பங்கிட்டுக் கொடுக்க பார்ப்பனர்களுக்கு மாத்திரம் அனுமதியுள்ளது. தன்னுடைய தோசத்தைப் பெண்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டானாம். அதற்குப் பரிகாரமாக பெண்கள் என்ன வரம் கேட்டார்கள் தெரியுமா? அதாவது தனது கர்ப்பகாலத்திலும் ஆண்களுடன் உறவு கொள்ளும் வரத்தை இந்திரனிடம் கேட்டு, கர்ப்பகாலத்திலும் உறவு கொள்ளலாம் என்ற வரத்தைப் பெற்றார்களாம். பெண்களுக்கு வரம் கேட்பதற்கு வேறு விசயமே இல்லை பாருங்க! எதிலும் இதே சிந்தனைதான்.



- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.

பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

- பென்யாம் மெஜ்முர்,
அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

சிவப்புதான் அழகா? விளம்பர வாய்ப்பை மறுத்த நடிகை


சிவப்பழகு கிரீம்கள் என்று நடிகர் நடிகையரெல்லாம் கோடிகளைப் பெற்றுக்கொண்டு மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைத்துக்கொண்டிருக்க நடிகை கங்கணா ரனாவத் 2 கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை மறுத்துள்ளார்.

அதோடு அவர் எழுப்பியுள்ள மனிதத் தன்மையுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது. அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

அப்படி இருக்கும் நிலையில், பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்.

அழகு கிரீம் விளம்பர வாய்ப்பை (ரூ.2 கோடி) மறுத்ததற்கு எந்தவிதக் கவலையும் இல்லை. ஒரு பொது மனுஷியாக எனக்குப் பொறுப்புகள் உள்ளன. என் சகோதரி மாநிறம் கொண்டவள். ஆனாலும் அழகானவள்.

இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நான் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்ய முடியும்? என்கிறார் கங்கணா. மற்ற நடிகர்கள் சிந்திப்பார்களா?

தமிழ் ஓவியா said...

ஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்


மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா.

விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். ஜாதிகளை ஒழிக்க மகாமனே மற்றும் அனுபவ மண்டபங்களை உருவாக்கி அனைத்து மக்களும் சரிசமமாக வாழ நடவடிக்கை மேற்கொண்டவர்.

இன்றுவரை ஜாதிகள் ஒழியவில்லை. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு ஜாதி உள்ளது. அந்த ஜாதிகளை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால்தான் நம் நாடு முன்னேறும். மனிதர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஜாதி வெறியைத் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்


தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பினை மேற்கொண்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 10,800 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது தற்போது 27,400 என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பிராமணாள் கபே!



ஜாதிப் பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப் பெயரை வெளிப்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள செய்தியை நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

எந்த ஜாதிப் பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான், கடந்த திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த ஜாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்பட வேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா?

தேவரும், நாடாரும், அய்யரும், அய்யங்காரும் ஜாதிப்பெயர்கள். பிராமணாள் என்பது ஜாதிப்பெயரா? வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமைப் போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள் என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித் திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி அய்ம்பது தோழர்கள் புறப்பட்டு முரளி கபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடைத் தொழிலாளர்கள் மூலம் கழகத் தோழர்களைத் தாக்கிய வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்த இயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப் பலகையை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப் பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போயின.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பனியம் படமெடுத்தாடத் தொடங்கியிருக்கிறது. ஆரிய பவன்களும், உடுப்பி ஹோட்டல்களும்கூட நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு!. மான உணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான். கொசுறுச் செய்தி: சிவகாசிப் பார்ப்பனர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் படிப்போம்


கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும்.



- ரவீந்திரன்,
இதழியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளைப் படம்பிடித்த முண்டாசுப்பட்டி


அண்மைக் காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய தடத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பது அதன் முழு வடிவம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் கிராமங்களில் நிலவும் பல வகையான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு கிராமமாக ஒட்டு மொத்த அடிமையாக இருக்கும் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் முண்டாசுப்பட்டி. அதென்ன முண்டாசுப்பட்டி? அந்த ஊரில் எல்லோரும் எப்போதும் தலையில் முண்டாசு கட்டிய படியே உள்ளனர். எனவே அது முண்டாசுப்பட்டி அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு ஒரு பெரிய விளக்கம் இல்லை.



1947இல் இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன் அந்த கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி அங்கு உள்ள கலாச்சாரங்களை தனது புகைப்பட கருவியில் (போட்டோ கேமரா) பதிவு செய்கிறார்.

அப்போது ஒரு வயதான மூதாட்டியைப் படம் பிடிக்கும்போது தன்னியல்பாக அவர் இறந்து போகிறார். மேலும், அந்தக் கிராமத்தில் ஒரு விதமான நோய் பரவி பலர் இறக்கின்றனர். அதைக் கண்டு அச்சப்படும் மக்களிடயே மேலும் ஒரு பிரச்சினையாக கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து கொள்ளையடிக்கின்றனர். அப்போது அந்த கிராம மக்கள் கடவுளை நோக்கி எங்களைக் காப்பாற்று என்று வேண்டும்போது வானியல் அதிசய நிகழ்வாக விண்கல் ஒன்று வேகமாகப் பயணித்து அந்த முண்டாசுப்பட்டி கிராமத்திலேயே அதுவும் அந்த கொள்ளைக்காரர்கள் மீதே வந்து விழுந்து விட, அந்தக் கல்லையே கடவுளாக வழிபடத் தொடங்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை பரவுகிறது. அடுத்து கதைக்களம் 1982ஆம் ஆண்டில் பயணிக்கிறது. இது போக மேலும் பல சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் அந்த மக்களிடையே நிலவுகிறது. பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் கதாநாயகன், அவனது உதவியாளர், முண்டாசுப்பட்டி கிராமத்தின் தலைவரின் மகள் கதாநாயகி, நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்றிருக்கும் முனீஸ்காந்த், என இந்த நால்வரைச் சுற்றியே கதை நகருகிறது. முன்பு போட்டோ எடுத்த அந்த வெள்ளைகார அதிகாரி அந்த ஊரில் விழுந்த விண்கல்லின் துகள்களை ஆய்வு செய்து அது விலை மதிக்க முடியாத கனிமம் என்று கோமளப்பட்டி ஜமீன்தாரிடம் சொல்ல அவரும் அந்தக் கல்லைத் (வானமுனி இது அந்த விண்கல்லுக்கு கிராமத்தினர் வைத்த பெயர்) திருட முயற்சிக்கும் வேலை ஒரு பக்கம் என்று படம் மிகச் சிறப்பாக நகர்கிறது. ஒருவரிக் கதையை வைத்துக் கொண்டு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அதே நேரத்தில் இப்படித்தான் சினிமா என்பதை உடைத்து சாதாரணமாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். இது போக அந்த ஊரில் ஒரு சாமியார். அவரிடம் குறி கேட்டுத்தான் அந்தக் கிராமமே இயங்குகிறது. ஆனால் அவரின் பின்புலம் என்ன என்று பார்த்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி வந்தவர். வெளியில் வந்து முண்டாசுப்பட்டி கிராமத்தின் கோவிலில் ஓர் இரவு படுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தால் கிராம மக்கள் அவர் முன் கூடி சாமி! நீங்கதான் எங்க கிராமத்தைக் காப்பாத்தணும் என்று சொல்ல, அவரும் நமக்கு ஒரு சரியான இடம் கிடைத்து விட்டது என்று அந்த ஊரிலேயே தங்கி தனது வாழ்க்கையை நடத்துகிறார்.

(இப்படி பல ஊர்களில் சாமியார்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோமல்லவா?). அந்தக் கிராமத்தில் உள்ள வானமுனியைக் கடத்திப் போக அதை மீட்டு வந்து தந்து கதாநாயகன், தன் காதலியான அந்த ஊரின் தலைவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இறுதியில் கதாநாயகன் திட்டப்படிதான் வானமுனி காணாமல் போனது என்று தெரியவர, கல்யாணம் நடத்தி முடித்த கையோடு ஊரை விட்டு ஓடிப்போகும் போது அந்த ஊர் மக்கள் அவர்களைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அப்போது வேறு வழியே இல்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க, திரும்பி கேமராவை எடுத்துக் காட்ட கிராம மக்கள் பயந்துகொண்டு திரும்ப ஓடுகிறார்கள்.படம் முழுக்க சின்னச் சின்ன விசயங்களை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்து மக்கள் மத்தியில் மண்டக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லியுள்ள இயக்குனர் வசனங்களிலும் சரியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.

மற்றபடி ஒளிப்பதிவு, பின்னணி இசைப் பாடல்கள்,என அனைத்தும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை முழு நீள நகைச்சுவைப் படமாக நகர்கிறது. கதை நாயகன், நாயகி தவிர மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதியவர்கள். மிக சாதாரண மனிதர்களிடம் உள்ள திறமைகள் கண்டிப்பாய் மதிக்கப்பட வேண்டும். அதைச் சரியாக இனங்கண்டு பயன்படுததியிருக்கிறார்கள். எள்ளி நகையாடப்படவேண்டிய மூடநம்பிக்கைகளை அதே சுவையில் சொல்லி அனைவரையும் கவர்ந்திருக்கும் மூடநம்பிக்கைப்பட்டி மன்னிக்கவும் முன்டாசுப்பட்டி நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குப் படம்.

- தம்பியப்பா