Search This Blog

17.7.14

பார்ப்பான் கையில் மண் வெட்டி! பாப்பாத்தி கையில் களைக் கொத்து!!

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் - ஜூலை 15



காமராசரை
ஆதரிப்பது ஏன்?

திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும். கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்யோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல் இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள் அவரை எப்படியாவது ஒழித்துக் கட்டத் திட்டமிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு.காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வர முடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத்திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகுமென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டுமானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.

             ------------------2.10.1956 அயன்புரம் திரு.வி.க. நினைவு நாள் - தந்தை பெரியார் உரை விடுதலை 9.10.1956



பார்ப்பான் கையில் மண் வெட்டி!
பாப்பாத்தி கையில் களைக் கொத்து!!


இன்றைய ஆட்சியானது ஏதோ தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளதாக இருப்பதனால் நாங்கள் காங்கிரஸ்காரன் அழைத்தாலும் அழைக்கா விட்டாலும் வலியச் சென்று ஆதரிக்கின்றோம். பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களுக்கு எங்களைப் பிடிக்காது. எங்கள் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றே முடிவு பண்ணிக் கொண்டு உள்ளார்கள். எங்கள் பத்திரிக்கை அரசாங்க சம்பந்தமான வாசக சாலைக்கு வரக் கூடாது என்று தடுக்கப்பட்டுவிட்டது.

நன்றியோ பிரதிபலனோ இல்லா உழைப்பு!

காங்கிரஸ்காரர்கள் நன்றி செலுத்துவார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் ஆதரிக்க முற்படவில்லை. சமுதாயத்தில் இன்றைய ஆட்சியின் காரணமாக ஏற்பட்டு உள்ள நன்மையினை உத்தேசித்தே ஆதரிக்கிறோம்.

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குக் காமராசரையே பதவியில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால், பார்ப்பனர் கைக்கு மண் வெட்டியும் பாப்பாத்தி கைக்குக் களைக் கொத்தும் வந்துவிடும். இது உறுதியாகும்.

இதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்கப் பாடுபடுகின்றார்கள். மற்றவர்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் காமராசர் ஆட்சியினை ஒழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். காமராசர் ஒழிந்தால் பழையபடியும் வீதிக்கு ஒதுக்குப்புறத்தில் அனுப்பிவிடுவார்கள். தோழர்களே, நாங்கள் தோன்றுகின்ற வரையிலும் ஜாதியினை ஒழிக்க எவனும் தோன்றவில்லை.

புத்தருக்குப் பிறகு ஜாதி ஒழிப்புப் பற்றிப் பேசவும் அதற்காகப் பாடுபடவும் நாங்கள்தான் உள்ளோம்.

                  ------------------------(25.4.1963 கொறுக்கையில் தந்தை பெரியார் உரை)

38 comments:

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் கங்காப் பிரவாக் பாதனம் என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835ஆம் ஆண்டு அரசாங்கம் ஆணை போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

புற்றுநோயை உண்டாக்கும் கங்கை நீர்


இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த நீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருள்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்ய அறிக்கை தெரிவித்துள்ளது.

நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய கங்கை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்ததாக என்சிசிஎம் தலைவர் டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் காணப்படும் நச்சுத் தன்மையானது புற்றுநோய் உள்பட பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!

புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின், ரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கையை 8.7.2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே, 14.2 சதவிகித பயணிகள் கட்டண உயர்வும், 6.2 சதவிகித சரக்குக் கட்டண உயர்வும் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்ததின்மூலம், 8000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்: சில புல்லட் ரயில் அறிவிப்பு, ரயில்வே பல்கலைக்கழகம் போன்ற வாணவேடிக்கை அறிவிப்புகளும், வழக்கமான முந்தைய அரசின்மீது புகார் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வருமானத்தில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவுள்ள நிலையில், (எஞ்சியது 6 காசுகளே) என்கிற நிலையில், இத்தகைய வினோத வித்தைகள் தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

இந்த ரயில்வே பட்ஜெட்டின்மூலம் அந்நிய முதலீடு - வெளிநாட்டவர் உள்ளே நுழைதல், ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதாகவும், துப்புரவுப் பணிகள் உள்பட பல பணிகளை தனியாரிடம் ஒப்பந்தங்களுக்கு (காண்ட்ராக்ட்) விடுவதன்மூலம், ரயில்வே துறை இனிவரும் 5 ஆண்டுகாலத்திற்குள், வெளியார் கம்பெனியாகவும், தனி முதலாளிகளின் வசமாகவும் ஆவதற்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இது பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று சொன்னாலும், பா.ஜ.க.வின் கொள்கை, முந்தைய காங்கிரசின் (மன்மோகன்சிங் தலைமையின்) உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கையிலிருந்து மாறுபடாதது என்பதால், இத்தகைய நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்க வேண்டியவர்களே ஆவர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (UPA) கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தால், விபத்துகள் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பொழுது, கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததைத்தான் நாங்களும் செய்துவருகிறோம் என்று கூறும் இன்றைய பி.ஜே.பி. ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த இந்த மிக முக்கியமான அறிவிப்பைச் செயல்படுத்த முன்வராதது ஏன்? இன்னும் சொல்லப்போனால், இந்த அதிமுக்கியமான பயணிகளின் உயிர்காக்கும் பிரச்சினையைக் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்தப் பட்ஜெட்டில் சன்னமாக நுழைந்துள்ள ஒரு திட்டம் திடுக்கிட வைக்கக்கூடியது _- மக்கள் தலையில் இடியை இறக்குவதாகும்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில்வே கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதன் பொருள் என்ன? வாரா வாரம், மாதாமாதம் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதுதானே! இது குழப்பமானது _- நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஆண்டுக்கொருமுறை கட்டணத்தை ஏற்றும்போதே எதிர்ப்புகள் வெடிக்கும் நிலையில், இப்படி டீசல், பெட்ரோல் விலை ஏறும்பொழுதெல்லாம் பயணக் கட்டணத்தை ஏற்றுவது என்பது கோமாளித்தனமானதாகும்.

இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான எடுத்துக்காட்டுபோலும்! வாரா வாரம் ஏலம் போடும் இந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் _- நிறைவேற்றப்பட சுமார் 1800 கோடி ரூபாய் தேவைப்படக்கூடிய நிலையில், யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல, வெறும் 700 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்? ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டாமா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போது மோடி அரசை மிகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அவரது கருத்து (ஸிமீணீநீவீஷீஸீ) தெளிவாக்குகிறது.

முந்தைய அரசு கட்டணத்தை உயர்த்தியபோதும், பல வசதிகள் அறிவித்தபோதும் இப்படிப்பட்ட மென்மையான, வரவேற்புப் பத்திரம் அவர் படித்ததில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்; 5 ரயில்கள் வாரத்தில் சில நாள்கள் மட்டுமே ஓடும்! மற்றபடி தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, தேவை என்பதை அவரவர்கள் கருத்துக் கேட்டு, கருத்திணக்கத்தை (Consensual Approach) முன்பே செய்தால், பல மாநிலங்களும் வளர வாய்ப்பு ஏற்படும். அந்த நிலை இல்லையே!

30 நாள்தானே என்ற சமாதானம் எவ்வளவு நாளைக்கு ஓடும்? முந்தைய அரசின்மீது பழி போடுவதும் எடுபடாது. எனவே, ரயில்வே பட்ஜெட் ஒரு கானல் நீர்தான்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கருத்து


குறைந்த நிலப்பரப்பில் குறைவான தொழிலாளர்களுடன் அதிக உற்பத்தி கிடைக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் தேவை. எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம், கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது போன்றவற்றிலும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
இப்போது இருக்கும் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களைப் பெயர்த்து வேறு இடங்களில் நடும் தொழில்நுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த இடைவெளியைக் களையவேண்டும்.

- பொன்ராஜ் வெள்ளைச்சாமி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்.

தங்களது குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழைக் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். அவ்வாறு தமிழர்களிடையே முதலில் தமிழ்ப்பற்று வளர்ந்தால்தான் பிறமொழிகளின் திணிப்பை எதிர்கொள்ள முடியும். -கவிப்பேரரசு வைரமுத்து

செல்பேசி, மின்-அஞ்சல், முகநூல் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவோர் அடையாளம் தெரியாத பெயர்களில் தங்களுக்கு வரும் தகவல்களைக் காண ஆர்வம் காட்டக்கூடாது. தகவல் தொழில்நுட்பத்தை நல்ல நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் சைபர் குற்றங்கள் குறையும். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் இணையதளத்தில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

- லத்திகா சரண், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர்

வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலக நேரிடும்போது அதற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நீதிபதிகளிடமிருந்து உண்மையான காரணத்தைக் கொண்டு வருவதற்காக ஊடகங்கள் பல்வேறு யூகங்களை வெளியிடுகின்றன. பின்னர் அந்த யூகங்களுக்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகும்போது இந்தக் காரணங்களால் விலகுகிறேன் என்று கூறுவது நல்லது.

- பாலி நாரிமன், மூத்த வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

உடல்நலனை பாதிக்கும் சாண எரிபொருள்

உலக அளவில் இந்தியா, சீனா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளதாகவும் அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அய்.நா. கூறியுள்ளது.

இந்தியாவில் சுத்தமான எரிபொருள் அனைவரும் வாங்கும் குறைவான விலையில் கிடைப்பதில்லை. 85 விழுக்காடு கிராமப்புற வீடுகளில் சாண எரிபொருளையே (பயோமாஸ்) பயன்படுத்துகின்றனர். 45 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சாணத்தைத் தட்டி அதனை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்துவதால் அதிலிருந்து காற்றைக் கடுமையாக மாசுபடுத்தும் அளவு புகை வெளியாகிறது. இதனால் வளிமண்டலத்தில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 300லிருந்து 3000 மைக்ரோ கிராம் அளவிற்கு காற்று மாசு அடைவதுடன், உடல் நலத்தையும் பாதிக்கிறது. எனவே ஸ்டவ்களை அதிகம் பயன்படுத்தச் செய்வது புகையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை வென்ற மருத்துவப் புரட்சி



பக்கவாதம் என்றாலே இன்னும் கிராமப் புறங்களில் செய்வினை, மந்திரம் செய்து கை கால்களை யாரோ முடங்கச் செய்துவிட்டார்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது மருத்துவ அறிவியல்.

மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பசைச் சேர்ந்த லான் புர்கர்ட் என்பவர் நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். கடல் நீரினுள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் சிக்கி மண் குதிருக்குள் மாட்டிக் கொண்டார். நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை கால்களை அசைக்க முடியாத நிலைக்கு ஆளானார். 19 வயதில் இந்த நிலைக்கு வந்த லான் புர்கர்ட்டிற்கு தற்போது 23 வயது ஆகிறது.

அவரது மண்டை ஓட்டில் சிறிய துளையிட்டு 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த சிப் லான் புர்கர்ட் நினைப்பதை _ எண்ண ஓட்டத்தை ஒரு கணினியின் மூலம் மொழிபெயர்க்கும் தன்மையுடையது.

எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலைத் தூண்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னர் மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளும் கணினியிலிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயலாற்றக்கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலதுகரத்தில் பொருத்தப்பட்டது. கணினியுடன் இணைக்கப்பட்ட தூண்டியின் மூலம் அவரது கையின் தசைகளைச் செறிவுடன் தூண்டக் கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்தக் கட்டளைகளின்படிச் செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.
இந்த நவீன சிகிச்சையின் மூலம் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைச் செயல்படுத்த முயன்றபோது, திறந்திருந்த வலது கையினை முழுமையாக மூடி முஷ்டியாக்கவும், மூடிய கையினை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் செய்ததுடன், விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்து மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மூளை பாதிப்படைந்து உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலிருக்கும் பக்கவாத நோயாளிகளை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் திருப்புமுனையான மருத்துவப் புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூட மருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : சைவம்

கி.தளபதிராஜ்

இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை.

சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்?
சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல?
சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா?
சாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால நாமதான் சாமிக்கு சேவலைப் படைக்கணும்.

சாமி தானம்மா நம்ம சேவலையும் படைச்சுது. அதையும் அவர்தானே காப்பாத்தணும்?
..........????

வெற்றிலையில் மை தடவி சேவலைக் கண்டுபிடிப்பதாக சொல்லும் சாமியாரின் பித்தலாட்டக் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

செட்டிநாட்டின் அழகு மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான இசை. கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழ் ஆங்கிலம் பேசும் காட்சி நெத்தியடி.

நாசரின் துணைவியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அமெரிக்கச் சிறுவன் வரும் காட்சிகளும், அவன் நடிப்பும் அருமை. படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே துல்லியமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

நாசரைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல் விளையாடியிருக்கிறார்.

அசைவம் என்பது அன்புக்கு எதிரானது; மரக்கறி உணவே (சைவம்) மனிதத்தன்மை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. யாகங்கள் எனும் பெயரால் எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்த பார்ப்பனியம் இன்று சைவப் போர்வை போர்த்தி நிற்கிறது.

உலகின் கோடிக்கணக்கான எளிய மக்களின் புலால் உணவுப் பழக்கத்தைக் கிண்டல் செய்யும், பொய் விளக்கம் தரும் பிரச்சாரங்களின் மத்தியில் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கிறது இந்த சைவம். ஹிட்லரும், மோடியும் சைவ உணவுப் பிரியர்களே என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அசைவம் அன்புக்கு எதிரானது என்பது புரட்டு என்றும், மனிதத் தன்மைக்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பின்மையும் புலப்படும்.

சைவம் பார்க்க! அசைவம் சாப்பிட!!

தமிழ் ஓவியா said...

விளையாட்டிலும் விபரீத மூடநம்பிக்கை விளையாட்டுகள்



டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் உள்ள வீரர், வீராங்கனை என்று சொல்லக்கூடியவர்களிடம் இருக்கும் பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கை, அறியாமையால் விளையக்கூடிய அச்சத்தால் ஏற்பட்டுள்ள பல்வேறு மூடநம்பிக்கைச் செயல்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (3.7.2014) பட்டியலிட்டு உள்ளது.

ஒவ்வொரு விம்பிள்டன் போட்டிக்கு முன்பாகவும் பிஜோர்ன் போர்க் தாடி வளர்ப்பதிலிருந்து, மரியா ஷரபோவா விளையாடும் இடத்தில் கோடுகளை மிதிக்காமல் செல்லுவதுவரை டென்னிஸ் விளையாட்டை விளையாடுபவர்களிடையே அதிகப்படியான மூடநம்பிக்கைகள் உள்ளன.

ரோஜர் ஃபெடரர்: 17 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான இவர் மூடநம்பிக்கைகள் இல்லாதவராக இருப்பார் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று பிறந்தார். அதனால் பெடரர் எட்டாம் தேதியை நல்வாய்ப்பான (அதிருஷ்ட) எண்ணாகக் கருதிக்கொண்டு, எட்டு ராக்கெட்டுகளை (பந்தடிப்பான்) எடுத்துச் செல்வார். எட்டு குடிநீர் புட்டிகளை எடுத்துச் செல்வார். ஒவ்வொரு செட் முடிந்த பின்னும் எட்டுமுறை துண்டால் துடைத்துக் கொள்வார். விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக எட்டுமுறை பந்தடித்துப் பார்ப்பார். (இம்முறை விம்பிள்டன் போட்டியில் பட்டத்தைக் கோட்டை விட்டுவிட்டார். இப்போதும் துண்டை 8 முறை துடைத்தாரா, இல்லை ஏழரை முறைதான் துடைத்தாரா?)

தமிழ் ஓவியா said...


நோவோக் டிஜோகோவிக்: பெரும்பாலும் விளையாடுபவர்கள் ஒரே மாதிரியாகப் பின்பற்றும் நடைமுறைகளுக்கு சற்று மாறாக, இவர் தனக்கு கெட்டவாய்ப்பு (துரதிர்ஷ்டம்) என்று கருதும் ஷவரை இரண்டாவது முறை பயன்படுத்துவதில்லையாம். மேலும் விளையாடப்போகும்போது தனது இரு வளர்ப்புப் பிராணிகளான பூடில், பியரே ஆகியவற்றையும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். (2011-ஆம் ஆண்டில் விம்பிள்டனில் அவ்வாறு அழைத்துச் செல்ல முடியாதபோது அதனால் பெரும் மன அவதியும் உற்றாராம். இந்த முறை 2014-இல் இவர்தான் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஆனால் அவரது செல்லப் பிராணிகள் அரங்கில் இல்லை என்பதை எப்படிச் சொல்வார்?)

தமிழ் ஓவியா said...

ரபேல் நடால்: குடிநீர் புட்டியைப் பயன்படுத்துவதன்மூலம் உலகில் பிரபலமடைந்தவர். விளையாடும்போது விளையாட்டு அரங்கின் இடப்பக்கம் பெயர் தெரியும்படியாக இரு குடிநீர்ப் புட்டிகளை வைத்திருப்பார். ஒரு மிடறுக்குமேல் (ஷீஸீமீ வீஜீ) எந்தப் புட்டியிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டார். அந்தப் புட்டியை வேறு எவரும் தொடவும் விடமாட்டார். அவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வார். முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் லாயிட் நகைச்சுவையாகக் கூறும்போது, அவருடைய எதிர் விளையாட்டு வீரர் அவருடைய (ரபேல்) புட்டிகளைத் தள்ளட்டும், அப்போது என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டுமே என்று கூறுகிறார்.

செரினா வில்லியம்ஸ்: அவருடைய மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது என்று கேட்டீர்களானால், அவருடைய காலுறை (சாக்ஸ்) என்று கூறுவார். இது மிகவும் விநோதமானதே! ஒரு போட்டியில் வென்றுவிட்டால் அந்தக் காலுறையையே தொடர்ந்து அணிந்து வருவார். அடுத்து தோல்வி அடைந்தால்தான் காலுறை மாறும். அதுவரை அதே காலுறைதான். அதுவும் துவைக்கப்படாததாகவே இருக்கும். ரிச்சர்ட் காஸ்குவெட்: காஸ்குவெட் ஒரே முறைமையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். எப்போதெல்லாம் புள்ளிகளை வெல்கிறாரோ அப்போதெல்லாம் அதே பந்தையே கேட்பார். அந்தப் பந்து அவருக்கு அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார். வேறு பந்தைப் பயன்படுத்த மறுத்துவிடுவார். பந்து தேடித்தரும் பையன்களிடமிருந்து அதே பந்தைத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும். மறுமுனையில் நின்றுவிட்டால்கூட அதே பந்தையே கேட்பார்.

மரியன் பர்தோலி: இந்தப் பெண்மணி கடந்த ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிரெஞ்சு டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான அவர் விளையாடுவதற்கு முன்பாக கோமாளித்தனமான செய்கைகளைச் செய்வார். பந்தடிக்கும் ஒவ்வொரு முறையும் கைகளைச் சுழற்றியபடி ஓய்வின்றிக் குதிப்பாராம். அப்படியான செய்கை அவருக்கு அதிருஷ்டத்தைப் பெற்றுத்தரும் என்று எண்ணிக் கொள்வார். எதிரில் விளையாடுபவருக்கும், பார்வையாளர்களுக்கும் அவருடைய நடவடிக்கை வேடிக்கையாக இருக்கும்.

ஆண்ட்ரே அகாசி: அனைத்தையும் விட இவருடைய பழக்கம் விசித்திரமானது. 1999-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஒப்பன் போட்டிக்குச் செல்லும்போது இவருடைய உள்ளாடையை எடுத்து வைக்க மறந்துவிட்டார். முதல் சுற்றை உள்ளாடையின்றியே விளையாட முடிவு செய்தார். அதில் வெற்றி பெற்றதும், உள்ளாடையில்லாமல் விளையாடியது அதிர்ஷ்டம் என்று நினைத்துவிட்டார் அகாசி. தொடர்ந்து அந்தப் போட்டித் தொடர் முழுக்க உள்ளாடையின்றியே விளையாடிய அகாசி, தனது 20 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் அம்முறை மட்டும்தான் பிரெஞ்சு ஓப்பனை வென்றார். தனது உழைப்பால் வென்றவர், அதற்கு உள்ளாடையில்லாமையே காரணம் என்று கருதியதுதான் கொடுமை.

கோரான் இவானிசெவிக்: 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின்போது நாள்தோறும் காலையில் தொலைக்காட்சியில் டெலிடப்பீஸ் என்ற சிறுவர் தொடரைப் பக்தி சிரத்தையோடு பார்த்து வந்தார். குரோஷியரான அவர் இரவு உணவை விடுதியின் எஸ்டபிள்யூ19 என்கிற ஒரே மேசையில்தான் தொடர்ந்து உணவருந்தி உள்ளார். அந்த முறை விம்பிள்டனை வென்றதற்கு இதுதான் காரணம் என்ற மூடநம்பிக்கை அவருக்கு!

இவர்கள் விளையாட்டு வீரர்களா? தன்னம்பிக்கையற்ற கோழைகளா?

மனிதனைப் பிடித்த மூடநம்பிக்கை, அவனிடம் இருக்கும் திறமையைக்கூட கொச்சைப்படுத்திக் கீழே தள்ளிவிடவில்லையா? வெற்றி ஆட்டத் திறனுக்கா? அதிர்ஷ்டத்துக்கா? அதிர்ஷ்டம் என்றால் என்ன பொருள் தெரியுமா? குருட்டுத்தனம் என்று பொருள். திருஷ்டம் என்றால் பார்வை, அதற்கு எதிர்ப் பதம்தான் அதிர்ஷ்டம்! அதிர்ஷ்டத்தை நம்பும் இந்த விளையாட்டு வீரர்கள் அறிவுக் குருடர்கள்தான் போலும்!

தமிழ் ஓவியா said...

ரபேல் நடால்: குடிநீர் புட்டியைப் பயன்படுத்துவதன்மூலம் உலகில் பிரபலமடைந்தவர். விளையாடும்போது விளையாட்டு அரங்கின் இடப்பக்கம் பெயர் தெரியும்படியாக இரு குடிநீர்ப் புட்டிகளை வைத்திருப்பார். ஒரு மிடறுக்குமேல் (ஷீஸீமீ வீஜீ) எந்தப் புட்டியிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டார். அந்தப் புட்டியை வேறு எவரும் தொடவும் விடமாட்டார். அவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வார். முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் லாயிட் நகைச்சுவையாகக் கூறும்போது, அவருடைய எதிர் விளையாட்டு வீரர் அவருடைய (ரபேல்) புட்டிகளைத் தள்ளட்டும், அப்போது என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டுமே என்று கூறுகிறார்.

செரினா வில்லியம்ஸ்: அவருடைய மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது என்று கேட்டீர்களானால், அவருடைய காலுறை (சாக்ஸ்) என்று கூறுவார். இது மிகவும் விநோதமானதே! ஒரு போட்டியில் வென்றுவிட்டால் அந்தக் காலுறையையே தொடர்ந்து அணிந்து வருவார். அடுத்து தோல்வி அடைந்தால்தான் காலுறை மாறும். அதுவரை அதே காலுறைதான். அதுவும் துவைக்கப்படாததாகவே இருக்கும். ரிச்சர்ட் காஸ்குவெட்: காஸ்குவெட் ஒரே முறைமையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். எப்போதெல்லாம் புள்ளிகளை வெல்கிறாரோ அப்போதெல்லாம் அதே பந்தையே கேட்பார். அந்தப் பந்து அவருக்கு அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார். வேறு பந்தைப் பயன்படுத்த மறுத்துவிடுவார். பந்து தேடித்தரும் பையன்களிடமிருந்து அதே பந்தைத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும். மறுமுனையில் நின்றுவிட்டால்கூட அதே பந்தையே கேட்பார்.

மரியன் பர்தோலி: இந்தப் பெண்மணி கடந்த ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிரெஞ்சு டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான அவர் விளையாடுவதற்கு முன்பாக கோமாளித்தனமான செய்கைகளைச் செய்வார். பந்தடிக்கும் ஒவ்வொரு முறையும் கைகளைச் சுழற்றியபடி ஓய்வின்றிக் குதிப்பாராம். அப்படியான செய்கை அவருக்கு அதிருஷ்டத்தைப் பெற்றுத்தரும் என்று எண்ணிக் கொள்வார். எதிரில் விளையாடுபவருக்கும், பார்வையாளர்களுக்கும் அவருடைய நடவடிக்கை வேடிக்கையாக இருக்கும்.

ஆண்ட்ரே அகாசி: அனைத்தையும் விட இவருடைய பழக்கம் விசித்திரமானது. 1999-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஒப்பன் போட்டிக்குச் செல்லும்போது இவருடைய உள்ளாடையை எடுத்து வைக்க மறந்துவிட்டார். முதல் சுற்றை உள்ளாடையின்றியே விளையாட முடிவு செய்தார். அதில் வெற்றி பெற்றதும், உள்ளாடையில்லாமல் விளையாடியது அதிர்ஷ்டம் என்று நினைத்துவிட்டார் அகாசி. தொடர்ந்து அந்தப் போட்டித் தொடர் முழுக்க உள்ளாடையின்றியே விளையாடிய அகாசி, தனது 20 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் அம்முறை மட்டும்தான் பிரெஞ்சு ஓப்பனை வென்றார். தனது உழைப்பால் வென்றவர், அதற்கு உள்ளாடையில்லாமையே காரணம் என்று கருதியதுதான் கொடுமை.

கோரான் இவானிசெவிக்: 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின்போது நாள்தோறும் காலையில் தொலைக்காட்சியில் டெலிடப்பீஸ் என்ற சிறுவர் தொடரைப் பக்தி சிரத்தையோடு பார்த்து வந்தார். குரோஷியரான அவர் இரவு உணவை விடுதியின் எஸ்டபிள்யூ19 என்கிற ஒரே மேசையில்தான் தொடர்ந்து உணவருந்தி உள்ளார். அந்த முறை விம்பிள்டனை வென்றதற்கு இதுதான் காரணம் என்ற மூடநம்பிக்கை அவருக்கு!

இவர்கள் விளையாட்டு வீரர்களா? தன்னம்பிக்கையற்ற கோழைகளா?

மனிதனைப் பிடித்த மூடநம்பிக்கை, அவனிடம் இருக்கும் திறமையைக்கூட கொச்சைப்படுத்திக் கீழே தள்ளிவிடவில்லையா? வெற்றி ஆட்டத் திறனுக்கா? அதிர்ஷ்டத்துக்கா? அதிர்ஷ்டம் என்றால் என்ன பொருள் தெரியுமா? குருட்டுத்தனம் என்று பொருள். திருஷ்டம் என்றால் பார்வை, அதற்கு எதிர்ப் பதம்தான் அதிர்ஷ்டம்! அதிர்ஷ்டத்தை நம்பும் இந்த விளையாட்டு வீரர்கள் அறிவுக் குருடர்கள்தான் போலும்!

தமிழ் ஓவியா said...

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்



உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் 86 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள், 2015ஆம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோவின் பொது இயக்குநர் இரினா போகொவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேஷியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும் 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து 25 விழுக்காட்டினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்த வேண்டும் என்று இரினா போகொவா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.



தமிழ் வழிக் கல்வி படிப்போரை ஏளனமாகப் பார்க்கும் காலத்தில் தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெயசீலன்.

ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும் தமிழில் தேர்வு எழுதிச் சாதித்துள்ள இவர், கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள கிராமத்திலும், விவசாயத்தில் பட்டப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திலும் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த விவசாய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முதுகலைப் பட்டத்தைத் தமிழில் முடித்து முனைவர் பட்ட ஆய்வினையும் தமிழ்ப் பாடப் பிரிவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவது என்பது எல்லோரும் நினைப்பதுபோல சுலபலமானது அல்ல என்று ஜெயசீலன் கூறியுள்ளார். மேலும், தமிழ்மொழியில் படிக்க தனியான பயிற்சி மய்யங்கள் இல்லை. தமிழில் விடைகளை எழுதும் வாய்ப்பு இருந்தும் சில கலைச்சொற்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தமிழில் படிப்பது என்பது அதிக உழைப்பைக் கோருவது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மேலும் மூவர் தமிழில் படித்துத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இன்னும் நிறையப் பேர் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கான தரவுகளை அதிகம் கொண்டுவர வேண்டியது அரசு மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழிலேயே தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியில் மட்டும் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று 5.1.1994 அன்று உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்தச் சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் அதனை ரத்து செய்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர்,

தமிழகத்தில் 1956ஆ-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1976ஆ-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்தத் திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் ரெங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்பு, தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் பொதுவிதிகள்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதேபோல, தமிழே சென்னை உயர்நீதிமன்ற மொழியாகவும் மாறும் நாள் எந்நாளோ?

தமிழ் ஓவியா said...

உடம்புக்கு நல்லது மாற்று வழிகளல்ல மனவலிமையே முக்கியம்


உடம்புக்கு நல்லது

மாற்று வழிகளல்ல
மனவலிமையே முக்கியம்

புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றலாம் என்று விளையாட்டாக சொல்லி நம்மவர்கள் சிகரெட் பிடிப்பதுண்டு. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் புகை போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பல இடங்களில் பள்ளிச் சிறுவர்கள் புகைக்கும் கொடுமையையும் காண முடிகிறது. இச்சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி உயிர் இழப்பு ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏனோ விடுவதில்லை.

சிகரெட் பழக்கத்தை விடப் போகிறேன் என்று சொல்லும் சிலரும் புகையிலை சிகரெட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு மாற்று வழிதான் ஈ-_சிகரெட்.

ஆனால் ஈ_-சிகரெட் புகைப்பழக்கத்தை விடுவதற்கான வழி கிடையாது. அதை பயன்படுத்தி புகைக்கும் பழக்கத்திலுருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் நாங்கள் உள்பட பலர் என்கிறார்கள் பல முறை புகையை விட்டவர்கள்.

இந்த ஈ_-சிகரெட் ஒரு சரியான ஃபோர்ஜரி, நூறில் இரண்டு பேர்தான் இதை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரெட் புகைய ஆரம்பித்துவிடும். காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து மீளவே முடியாது. சாதாரண சிகரெட்டுகளால் புகைவழியாக உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை இந்த ஈ-_சிகரெட் திரவ வடிவத்தில் புகையின்றி கொடுக்கிறது. இதனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு குறைவது இல்லை. ஈ_சிகரெட்டை எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட அதிகம் பயன்படுத்தும் ஆவல் வரும். இதனால் ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும். அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தான் அதிகமாகும்.

எனவே புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை -சிகரெட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! என்கிறார் ஒரு முன்னாள் புகைஞர்.

புகையை நிறுத்த முயலுவோருக்கு ஊக்கம் அளிப்பதற்கென்றே முகநூலில் https://www.facebook.com/groups/whyquit/ என்ற குழுவில் குவிகிறார்கள் புகையை வென்றவர்கள்.

- தளபதி பாண்டியன்

தமிழ் ஓவியா said...

வியாபாரியும் பிக்காரியும் -2

- மதிமன்னன்.சு

மாற்றம் தருவாரா மாமன்னர்



இந்தியர்கள் வியாபாரிகள் ஆவார்களா? பிக்காரிகள் ஆவார்களா?

முதுநிலைப் பட்டம் பெற்று நடித்துக் கொண்டிருக்கும் வங்க நடிகை நந்திதா தாஸ் (தமிழில் அழகியில் நடித்தவர்) நாத்திகத் தந்தைக்குப் பிறந்த நாத்திகர். சமூகப் பிரக்ஞை உள்ளவர். பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மியுடன் சேர்ந்து நடித்த ஃபயர், வாட்டர் போன்ற படங்களுக்காக விமர்சிக்கப்பட்டவர். ஆர்எஸ்எஸ் பிற்போக்குவாதிகளால் எதிர்க்கப்பட்டவர். இப்படங்களை எழுதியவரும் தயாரித்தவருமே குஜராத்திப் பெண்கள்தாம். பாப்சி சித்வாவும் தீபா மேதாவும். 2008இல் நந்திதா தாஸ் தயாரித்த ஃபிராக் எனும் திரைப்படம் கோத்ரா கலவரம் தொடர்பானது. இப்படத்தைப் பிரத்தியேகமாக மாமன்னர் நரேந்திர மோடிக்குத் திரையிட்டுக் காட்டவேண்டும் எனக் கோரப்பட்டது.

இவர் மறுத்துவிட்டார். குஜராத்தில் திரையிடப்படும்போது திரையரங்கில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். (பம்பாய் திரைப்படத்தை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரே பார்ப்பதற்காகத் திரையிட்டு அவரின் யோசனைகளின்படி வெளியிட்ட நம்மூர் மணிரத்னத்தை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.) அவரது அச்சம் தற்போது, தனக்கு என்ன நடக்குமோ, தாம் எப்போது பாகிஸ்தானுக்கு இவர்களால் அனுப்பப்படுவோமோ என்பதாக இருக்கிறது.

புகழ்பெற்ற ஓவியர் ஹூசேன், நாடு கடந்து கத்தாரில் தங்கி இறந்துபோனார் இவர்களது கொடுமையால்! இந்து மதத்தைச் சேர்ந்த ஓவியர்கள் சுபாஷ் அவ்சட், சுபோத் கர்கர் ஆகியோர்கூட இந்துமதப் பழங்கதைக் காட்சிகளை வரைந்ததற்காகக் கண்டிக்கப்பட்டனர். சங் பரிவாரம் கருத்துச் சுதந்திரம் என்பதையே அளிக்க மறுக்கிறது; சந்திரமோகன் எனும் ஓவிய மாணவர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னிலையிலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அவற்றை நினைத்துக் கல்வியாளர்கள், கருத்துச் சுதந்தரம் பேசுபவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் _ மாமன்னர் என்ன செய்வாரோ? எப்படிச் செய்வாரோ? என்று.

தமிழ் ஓவியா said...

பெண் இனத்தை மதிப்பாரா?

50 ஆண்டுக்காலமாக தனக்கொரு மனைவி உண்டு என்பதையே மறைத்த மகானுபாவர் மாமன்னர் ஆகிவிட்டார். மகளிர் நிலை என்னவாகும்? நா ஸ்த்ரீ சுவதந்தர மர்ஹாட்டி என்ற மனுநீதிப்படிப் பெண்கள் எவ்வித சுதந்தரத்திற்கும் அருகதை உடையவர்கள் அல்லர் என்கிற தத்துவம் தலைமை தாங்குமா எனக் கவலையும் அச்சமும் மகளிரைப் பிடித்துள்ளது. வாக்காளர்களில் சரிபாதிப் பேர் பெண்கள். அவர்களின் வாக்குகளைப் பெற மகளிர் வாக்குச் சேகரிப்பது வாடிக்கை. ஆனால் வசுந்தராஜேவும் சுஷ்மா சுவராஜும் மாமன்னர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றனரா? ராஜஸ்தான், டெல்லி மாநில முதலமைச்சர்களாக இருந்தவர்கள் என்றாலும் கட்டைப் பிரம்மச்சாரி எனப்படும் ஆஞ்சநேயருடன் பவனி வர அனுமதிக்கப்படாத சீதாக்களாகவே அவர்கள் வைக்கப்பட்டனர். 5 ஆண்டோ 25 ஆண்டுகளோ அவர்கள் நிலை என்ன ஆகும் என்பதே இப்போதைய கவலை! ஆர்எஸ்எசின் கொள்கையான மூன்று சி-சமையல் (சிஷீஷீளீவீஸீரீ), பெருக்குவது (சிறீமீணீஸீவீஸீரீ), குழந்தை பெறுவது (சிலீவீறீபீக்ஷீமீஸீ) மட்டுமே முதன்மை பெறுமா? காலம் காட்டும்.

தமிழ் ஓவியா said...


இந்து நாடா?

குஜராத் மாடல் வளர்ச்சி என்கிறார்கள். இவருக்கு முன்பு குஜராத் ஒன்றும் பிகார் மாதிரிப் பின்தங்கி இருந்தது கிடையாது. குஜராத் வளர்ச்சி என்பதுவேகூட, விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறுகிறார் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா. மோடியை ஹிந்து என்கிறார்கள். இந்தியா என்ன இந்துநாடா? இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் தனியே விடுதிகள் கட்டித் தரப் போகிறார்களா? இசுலாம் இல்லாத இந்து கலாச்சாரமோ, இந்து இல்லாத இசுலாமியக் கலாச்சாரமோ, இந்து அல்லாத கிறித்துவமோ, பழங்குடிப் பண்பாட்டுக் கூறு இல்லாத இந்துப் பண்பாடோ இங்கே கிடையாது என்று அடித்துக் கூறுகிறார் டி.எம்.கிருஷ்ணா. (டி.டி.கிருஷ்ணமாச்சாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.) மாமன்னர் மோடியின் அரசு நம்மையெல்லாம் எங்கே அழைத்துப் போகுமோ? என்கிற அச்சம் நமக்கும் ஏற்படுகிறது.

மக்கள் மகிழ்ச்சிதான் தேவை

96 வயதில் பெங்களூருவில் வசிக்கும் சமக்கிருதப் பேராசிரியர் கே.டி.பாண்டுரங்கி மாமன்னர் நரேந்திர பாய்க்குச் சொல்ல அனுப்பியிருக்கும் புத்திமதி இதுதான் _ ப்ரஜா ஹிதே ஹிதம் ராஜ்நா, பிரஜா சுகி சுகம் ராஜ்நா. அதாவது தம் மக்களின் தேவைகளைவிட தனியான தேவை ஆள்வோனுக்குக் கிடையாது. தம் மக்களின் மகிழ்ச்சிதான் மன்னனுக்கும் மகிழ்ச்சி.

தமது தேவைகளும் மகிழ்ச்சியுமே முக்கியம்! மக்கள் தேவையும் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியமல்ல, ஆர்எஸ்எசின் தேவையும் திருப்தியும்தான் என் நோக்கம் என்பாரோ மாமன்னர்?

வெறிபிடித்த வெகுசிலரைத் தவிர மீதியுள்ள 125 கோடி மக்களை யார் காப்பாற்றுவது? இந்தக் கவலைதான் நமக்கு! இந்தத் தேர்தல் நடப்பதற்கு அரசு செலவழித்தது 3426 கோடி ரூபாய். அரசியல் கட்சிகள் எல்லாம் செய்த செலவு 32 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பீடு. அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான செலவு 2012இல் 42 ஆயிரம் கோடி. அப்படியானால் இந்தியா வியாபாரி நாடா? பிக்காரி நாடா? இதில் பிஜேபி செலவு செய்தது மட்டுமே 21 ஆயிரம் கோடிக்கு மேலே என்கிறார்கள். மொத்த செலவில் 3இல் 2 பங்கு பிஜேபி செய்திருக்கிறது எனும்போது வியாபாரிகள் நாடுதான் என்றே சொல்ல முடியும்! அத்தகைய வியாபாரிகள் யார் என நினைக்கிறீர்கள்? குஜராத்திகள்தான்.

இந்தியக் கோடீசுவரன்களில் முதல் 10 பேர் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர்களில் 7 பேர் குஜராத்திகள் என்றால் வியாபாரிகள் குஜராத்திகள்தானே! அந்த 7 பேர் போன்றவர்களை வளர்த்துவிட்ட வியாபாரிதான் இப்போது இந்தியாவின் மாமன்னர்! வெகு சிலரின் வாழ்வில் வசந்தத்தை வானளாவ உயர்த்திடத் தன் பதவியைப் பயன்படுத்திய மாமன்னர் வெகு மக்களின் வாழ்வில் எதை ஏற்படுத்தப் போகிறார்?

கோவிலா? கழிப்பறையா?

கிராமங்களில் கழிப்பறை இல்லாத நிலை பல்வேறு பாலியல் வன்முறைகளுக்கு வழியேற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு வடபுலத்தில் எழுந்துள்ளது. பெரிய உரு எடுத்து மிரட்டுகிறது. 60 கோடி மக்களுக்குக் கழிப்பறை இல்லை. இதில் 30 கோடிப் பெண்கள் திறந்தவெளிக் கழிப்பறையைத்தான் பயன்படுத்தும் கேவலம். கோவில்கள் கட்டுவதைவிடக் கழிப்பறைகள் கட்டுவதில் அக்கறை காட்டவேண்டும் என்றார் பழைய மந்திரி ஜெய்ராம் ரமேஷ்! ஆர்எஸ்எஸ் வகையரா பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டனர் அவரை! அந்நேரத்தில் அதே குரலில் - ஜெய்ராம் ரமேஷைப் போலவே குரல் கொடுத்தவர் மோடிபாய்! இப்போது எப்படி? போகப் போகத் தெரியும்!

ஆனால் ஒன்று! நம் ஊரில் ஒரு முதலமைச்சர் கழிப்பறை கட்டினார். தண்ணீர் வசதி தரவில்லை. அதனால் கழிப்பறை _ கழிவுகளால் நிரம்பிக் காய்ந்தது _ இடிந்தன! அப்படிப்பட்ட நிலை இவர் காலத்தில் வந்துவிடக் கூடாது!

கன்னடத்தில் ஒரு சினிமா. கஜகேசரி என்ற பெயரில். ஒரு பொறுக்கித்தனமான ரவுடி ஒரு மடாலயத்தின் தலைவனாக நியமிக்கப்பட்டதால் அவன் செயல்பாடுகள் எப்படி மாறிப் போயின என்பதைக் காட்டுகிறதாம்! அப்படிப்பட்ட மாற்றத்தை மாமன்னரான வியாபாரி காட்டுவாரா?

நாடு எதிர்பார்க்கிறது! நாமும்தான்!

பழைய கருப்பனே என்று காட்டிவிட்டால்... என்ன செய்வது என்கிற கவலை நாட்டுக்கும்! நமக்கும்தான்! பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

நினைவிருக்கிறதா?


பார்ப்பனர் நடத்திய நாடகமும் சங்கராச்சாரியார் எதிர்ப்பும்

1985 செப்டம்பரில் சென்னையில் ஒரு நாடகம்; நடத்தியவர் வெங்கட் என்ற பார்ப்பனர். நாடகத்தின் பெயர் உயிரில் கலந்த உறவே என்பதாகும்.

அதில் பார்ப்பனச் சமூகத்தின் அவலங்கள் தண்ணீர் அடிப்பது முதல் மட்டன் வெட்டுவது வரை சிலாகிக்கப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர் சங்கத் தலைவர் என். காசிராமன் உள்பட பார்ப்பனர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாடகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கல்கி இதழில் (29.9.1985) காசிராமனின் பேட்டிகூட வெளிவந்தது.

பாலசந்தர், பாரதிராஜா பிராமண சமுதாயத்தைத் தாக்கிப் படம் எடுத்திருக்கலாம்; இனிமேல் எவரும் அதுபோல் எடுக்க முடியாது. அவர்கள் படம் எடுத்த காலங்களில் பிராமணர்களுக்கென்று சங்கம் இல்லை. இனி அது நடக்காது என்றெல்லாம் திருவாளர் காசிராமன் கொடுத்த பேட்டி கல்கி இதழில் வெளிவந்தது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்கியில் (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அது இதோ!

ஞானபீடம் என்ற ஒரு நாடகம்

வெகுநாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது!

ஜாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!

மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேதவித்தான சங்கரனாகவும், மிராசுதாரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக் கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டு, சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவர் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ் டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.

இதுதான் கல்கி கூறும் தகவல்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கதுதான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம். ஜாதிப் பிரச்சினைபற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும் இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக்கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.

இப்பொழுதுதான் உச்சக் கட்டமான முக்கியக் காட்சி. இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.

நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் -_ இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடி உள்ளனர்.

பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கான்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.

நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதை எல்லாம் சொல்லுகிறது.

சங்கர மடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையே இல்லை.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ஈராக் : செவிலியர்கள் மீண்டு வநதது எப்படி?


இதுவரை வெளிவராத தகவல்

- சரவணா இராசேந்திரன்

2014 -மே மாத இறுதியில் சிரியாவின் தெஹர் அஸ் ஸூர் பிராந்தியத்தில் இருந்து அதிரடியாக பெரும்படையுடன் ஈராக்கின் எல்லையைக் கடந்த ஈராக்கிய அய்.எஸ்.அய்.எஸ் போராளிகள் மொசூல், கிர்குக் எர்பில் என முக்கிய நகரங்களைக் கைப்பற்றி திக்ரித் நகர் நோக்கி படைநடத்திச் சென்றனர். திக்ரித் நகரம் மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் ஆகும். இந்த நகரத்தில் ஈராக் அரசும் சில தனியார் அமைப்புகளும் இணைந்து நடத்தும் ஈராக்கின் 4-ஆவது பெரிய மருத்துவமனை உள்ளது.

General Hospital Salahuddin என்ற இந்த மருத்துவமனைக்காக 2012-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஓர் அரசு அனுமதிபெற்ற தனியார் நிறுவனத்தினரால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 70-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அனுப்பபட்டனர். திக்ரித் நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான சலாஹத்தீனில் பங்களாதேஷ், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த செவிலியர், மருந்தாளுநர், பிசியோதெரபிஸ்ட் என 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்தனர். இவர்களில் பலர் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். சிலர் விடுப்பில் சென்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 49 செவிலியர்களுடன் 13 வேற்று நாட்டு மருத்துவப் பணியாளர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் ஜூன் 13 ஆம் தேதி திக்ரித் நகரம் போராளிகளின் கைவசம் சென்றது. ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற சண்டையில் மருத்துவமனைப் பகுதியில் குண்டு விழாவிட்டாலும் துப்பாக்கிச்சுடும் சத்தமும், பீரங்கிகளின் ஓசையும் செவிலியர்களை மிகவும் அச்சத்திற்குள்ளாக்கியது. மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியாக பல ஈராக்கிய மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையைக் காலிசெய்துவிட்டு ஈராக் இராணுவத்தினருடன் வேறு இடம் சென்றுவிட்டனர். இவர்கள் வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திக்ரித் நகரைக் கைப்பற்றிய போராளிகள் மருத்துவமனையை முழுவதுமாக சோதனையிட்டனர்.

தமிழ் ஓவியா said...

நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விவரங்களை வாங்கிக் கொண்டனர். இந்திய செவிலியர்களின் விவரங்களை அரபி தெரிந்த பங்களாதேச பெண்மணி ஒருவர் கொடுத்தாக சோனா என்ற மலையாள செவிலியர் அரபி பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்தார். போராளிகள் அனைவரின் விவரங்களையும் வாங்கிக்கொண்டு அனைவருக்குமான உணவு மற்றும் தண்ணீர் இருப்பையும் உறுதிசெய்துவிட்டு திக்ரித் நகரம் தங்கள் வசம் வந்துவிட்டதை அவர்களிடம் கூறினர். ஆசியன் லைட் என்ற அரபி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சோனு மரியா கூறியதாவது, போர் ஆரம்பித்துவிட்டது என்றதுமே எங்கள் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் பாக்தாத் சென்றுவிட்டனர். எங்களால் அப்படிச் செல்ல முடியாது, மேலும் போரின்போது மருத்துவமனை தாக்குதலுக்கு இலக்காகாது என்றும் போராளிகளை எளிதாக ஈராக் இராணுவம் விரட்டிவிடும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் அதற்கு மாறாக போர் தொடங்கிய 24 மணிநேரத்திற்குள் திக்ரித் போராளிகளின் கைவசம் சென்றுவிட்டது. நாங்கள் மிகவும் அச்சத்தில் இருந்தோம். 14 ஆம் தேதி மதியவேளையில் போராளிகள் குழுவில் சிலர் ஆங்கிலம் தெரிந்த இரண்டுபேருடன் வந்து மருத்துவமனையில் இருந்த எங்களைப் பற்றி விசாரித்தனர். பிறகு எங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு வெளியேறிவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

அவ்வப்போது தூரத்தில் ஈராக் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் மிடையே நடக்கும் சண்டையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தது, மேலும் கீழ்த்தளத்தில் நாங்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் இருந்தன, நீங்கள் அனைவரும் மருத்துவமனையின் பணிகளை அச்சமின்றிப் பார்க்க வேண்டும் என்று போராளிகள் கூறியதாக பங்களாதேஷ் தோழி எங்களுக்குக் கூறினார்.

25-ஆம் தேதி போராளிகள் மருத்துவமனைக்கு வந்து நிலைமை சீரான பிறகு நீங்கள் அனைவரும் உங்கள் நாட்டிற்குச் சென்றுவிடலாம் என்று கூறினார். இதனிடையே இந்தியத் தூதரகத்துடனும் தொடர்பில் இருந்தோம். இந்தியாவில் இருந்த எங்களது உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இதுதான் எங்களுக்குப் பெரிய நிம்மதியையும் நம்பிக்கையையும் தந்தது. இந்நிலையில் திக்ரித்தை அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து ஈராக் தாக்கப் போவதாக செய்தி பரவத் தொடங்கிவிட்டது. ஈராக் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மருத்துவமனையும் பாதிக்கப்படும் என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தியத் தூதரகமோ தற்போது உங்களை வெளியே கொண்டுவர முடியாது. நிலைமை சீரான பிறகு முயற்சிக்கிறோம் என்று கூறிவிட்டது. அமெரிக்கா போருக்கான உதவிகளைச் செய்வது குறித்த தகவல் பரவியதும் ஜூன் ஒன்றாம் தேதி எங்களைப் போராளிகள் 3 பேருந்துகளில் 200 கி. மீட்டர் தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர். பங்களாதேஷ் தோழி எங்களுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறினாலும் எங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை. பாலைவனப் பகுதிப் பயணத்தைக் கடந்து மொசூல் நகரம் சென்ற பிறகுதான் தெரிந்தது எங்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்புவதற்குத்தான் இங்கு அழைத்து வந்தார்கள் என்று! அங்கிருந்தும் எங்கள் வீட்டாருக்குத் தகவல் தந்துவிட்டோம்.

இந்த நிலையில் 3ஆம் தேதி இரவு எர்பில் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். மொசூல் நகரில் தங்கி இருந்த போதுதான் மின்சாரவசதி இன்றி சிறிது சிரமப்பட்டோம். ஆனால் மறுநாள் நாங்கள் இங்கு அழைத்துவரப்பட்டோம் என்று அவர் அரபு பத்திரிகையாளரிடம் கூறினார். ஜூலை நான்காம் தேதி இரவு ஈராக் நாட்டில் உள்ள எர்பில் நகர விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் செவிலியர்களை அழைத்துவரச் சென்றது. இந்த விமானத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

எர்பில் நகர விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட சிறப்பு விமானத்தில், 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட 116 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் ஜூலை 5ஆம் தேதி காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த 46 இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறுதியாக இந்த விமானம் இன்று புதுடில்லி விமான நிலையம் சென்றடைந்தது.

கொச்சி விமான நிலையத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும், கேரள மாநில முதல்வர் நேரில் ஆறுதல் கூறினார். மீட்கப்பட்டவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த செவிலியரான மோனிஷா, கொச்சின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் மேற்கண்ட தகவலை உறுதி செய்தார். இந்திய அதிகாரிகள் தயங்கித் தயங்கி நின்ற போதும், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளின் நியாயமான செயல்பாடுகளே செவிலியர்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இச்செய்தி இந்தியாவில் பெரும்பாலான ஏடுகளில் வெளிவராமலே பார்த்துக் கொண்டனர். இந்தியாவே சென்று மீட்டுவந்தது போல இவர்கள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதைத்தான் மீண்டுவந்த செவிலியர்கள் தரும் நேரடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டு வந்த செவிலியர்களில் பெரும்பான்மையரான கேரளாவைச் சேர்ந்த அனைவருக்கும் அரசு வேலை தருவதாக அவர்களை நேரில் சென்று பார்த்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி உறுதியளித்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பெண்ணான மோனிஷாவுக்கு தமிழக அரசிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையாம்.

தமிழ் ஓவியா said...

அவ்வப்போது தூரத்தில் ஈராக் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் மிடையே நடக்கும் சண்டையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தது, மேலும் கீழ்த்தளத்தில் நாங்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் இருந்தன, நீங்கள் அனைவரும் மருத்துவமனையின் பணிகளை அச்சமின்றிப் பார்க்க வேண்டும் என்று போராளிகள் கூறியதாக பங்களாதேஷ் தோழி எங்களுக்குக் கூறினார்.

25-ஆம் தேதி போராளிகள் மருத்துவமனைக்கு வந்து நிலைமை சீரான பிறகு நீங்கள் அனைவரும் உங்கள் நாட்டிற்குச் சென்றுவிடலாம் என்று கூறினார். இதனிடையே இந்தியத் தூதரகத்துடனும் தொடர்பில் இருந்தோம். இந்தியாவில் இருந்த எங்களது உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இதுதான் எங்களுக்குப் பெரிய நிம்மதியையும் நம்பிக்கையையும் தந்தது. இந்நிலையில் திக்ரித்தை அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து ஈராக் தாக்கப் போவதாக செய்தி பரவத் தொடங்கிவிட்டது. ஈராக் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மருத்துவமனையும் பாதிக்கப்படும் என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தியத் தூதரகமோ தற்போது உங்களை வெளியே கொண்டுவர முடியாது. நிலைமை சீரான பிறகு முயற்சிக்கிறோம் என்று கூறிவிட்டது. அமெரிக்கா போருக்கான உதவிகளைச் செய்வது குறித்த தகவல் பரவியதும் ஜூன் ஒன்றாம் தேதி எங்களைப் போராளிகள் 3 பேருந்துகளில் 200 கி. மீட்டர் தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர். பங்களாதேஷ் தோழி எங்களுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறினாலும் எங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை. பாலைவனப் பகுதிப் பயணத்தைக் கடந்து மொசூல் நகரம் சென்ற பிறகுதான் தெரிந்தது எங்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்புவதற்குத்தான் இங்கு அழைத்து வந்தார்கள் என்று! அங்கிருந்தும் எங்கள் வீட்டாருக்குத் தகவல் தந்துவிட்டோம்.

இந்த நிலையில் 3ஆம் தேதி இரவு எர்பில் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். மொசூல் நகரில் தங்கி இருந்த போதுதான் மின்சாரவசதி இன்றி சிறிது சிரமப்பட்டோம். ஆனால் மறுநாள் நாங்கள் இங்கு அழைத்துவரப்பட்டோம் என்று அவர் அரபு பத்திரிகையாளரிடம் கூறினார். ஜூலை நான்காம் தேதி இரவு ஈராக் நாட்டில் உள்ள எர்பில் நகர விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் செவிலியர்களை அழைத்துவரச் சென்றது. இந்த விமானத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

எர்பில் நகர விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட சிறப்பு விமானத்தில், 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட 116 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் ஜூலை 5ஆம் தேதி காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த 46 இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறுதியாக இந்த விமானம் இன்று புதுடில்லி விமான நிலையம் சென்றடைந்தது.

கொச்சி விமான நிலையத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும், கேரள மாநில முதல்வர் நேரில் ஆறுதல் கூறினார். மீட்கப்பட்டவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த செவிலியரான மோனிஷா, கொச்சின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் மேற்கண்ட தகவலை உறுதி செய்தார். இந்திய அதிகாரிகள் தயங்கித் தயங்கி நின்ற போதும், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளின் நியாயமான செயல்பாடுகளே செவிலியர்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இச்செய்தி இந்தியாவில் பெரும்பாலான ஏடுகளில் வெளிவராமலே பார்த்துக் கொண்டனர். இந்தியாவே சென்று மீட்டுவந்தது போல இவர்கள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதைத்தான் மீண்டுவந்த செவிலியர்கள் தரும் நேரடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டு வந்த செவிலியர்களில் பெரும்பான்மையரான கேரளாவைச் சேர்ந்த அனைவருக்கும் அரசு வேலை தருவதாக அவர்களை நேரில் சென்று பார்த்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி உறுதியளித்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பெண்ணான மோனிஷாவுக்கு தமிழக அரசிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையாம்.

தமிழ் ஓவியா said...

வாஸ்து : இடிந்து விழுந்த நம்பிக்கை

- இளையராஜ்

சென்னை போரூரை அடுத்த மவுலி வாக்கத்தில் ப்ரைம் ஸ்ருஷ்டி என்ற கட்டுமான நிறுவனம் கட்டிய இரண்டு 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று ஜூன் 28-ஆம் தேதி பெய்த ஒரு நாள் மழைக்கும், இடி-மின்னலுக்குமே தாங்காமல் இடிந்து, தமிழகம் இதுவரை காணாத ஒரு விபத்து நடந்துள்ளது. சனிக்கிழமை கூலி வாங்கத் திரண்டிருந்த பணியாளர்கள், மழைக்கு ஒதுங்கியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டடத்திற்குள் மாட்டிக் கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற மீட்பு முயற்சிகளுக்குப் பின் அடுக்குமாடி கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்து 61 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மண்ணுக்குள் புதைந்த இரண்டு தளங்கள் என்னாயிற்று? மேலும் பலர் இருந்தார்களே, அவர்கள் என்ன ஆனார்கள்? போன்ற கேள்விகளெல்லாம் இன்னும் புதைந்தவாறே இருக்கின்றன. ஜூலை 8-ஆம் தேதி அன்றே மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிழைப்புத் தேடி தமிழகம் வந்த பிற மாநிலத்தவர்கள் தமிழக மண்ணிலேயே புதையுண்டிருக்கிறார்கள்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், விவசாய நிலங்களையும் குடியிருப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் கும்பலின் கோரப் பசியும், பெருநகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் நெரிசலும் இதற்கான மூலகாரணங்களாக இருக்கின்றன. ஆய்வு செய்யப்படாமல் வழங்கப்பட்ட முறையற்ற அனுமதி, தொடர்ந்து கவனிப்பின்றி இருக்கும் அரசு இயந்திரம், இதற்குப் பின்னால் இருக்கும் லஞ்சம்- ஊழல், தரமற்ற பொருள்கள், நியாயமற்ற வணிகம், லாப வெறி, பேராசை, படாடோபம் என்று இதற்கான காரணங்கள் அடுக்ககங்களை விட உயரமாக இருக்கின்றன. கட்டடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்தக் குழு விசாரணையைத் தொடரலாம். அந்தக் குழு விசாரணை செய்யாத, செய்ய விரும்பாத சில கோணங்களும் இருக்கின்றன.

அவற்றை எளிதில் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் மண்வளம், கட்டடத்தின் தரம், கட்டுமானப் பொருள்கள் போன்றவை எப்படி யிருக்கின்றன என்று ஓரளவு தெரிந்துகொள்ளும் பொதுமக்கள், அதனை வாங்குவதற்கு முன் மிகுந்த அக்கறையோடு விசாரித்துத் தெரிந்துகொள்வது கட்டடம் வாஸ்துப்படி கட்டப்பட்டிருக்கிறதா என்பதைத்தான். தவிர, அதற்கென்று இருக்கும் வாஸ்து வல்லுநர்களிடமும் கருத்துக் கேட்டு உறுதி செய்து கொள்கிறார்கள். இந்தப் போக்கிற்கு ப்ரைம் ஸ்ருஷ்டி கட்டி சரிந்திருக்கும் இந்தக் கட்டடமும் விதிவிலக்கல்ல... (கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதிகள் எல்லாம் விலக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதுதான் கொடுமை!)

இடிந்து விழுந்த கட்டடத்தின் பெயர் ஜிலீமீ திணீவீலீ, அதாவது நம்பிக்கை. இதன் அருகில் இருக்கும் மற்றொரு கட்டடத்திற்குப் பெயர் ஜிலீமீ ஙிமீறீவீமீயீ, அதாவது இன்னும் கடும் நம்பிக்கை. இந்த இரண்டு அடுக்ககங்கள் குறித்தும் ப்ரைம் சிருஷ்டி நிறுவனம் தனது இணையதளத்தில் கீழ்க்காணுமாறு தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


TRUST HEIGHTS is a living space created through twin eleven-storied apartment blocks situated on Moulivakkam near Porur junction. Tower “THE FAITH’’ has four apartments of 2bkh and the Tower ‘’THE BELIEF’’ has four apartments of 3bkh on each floor.

... ...

Most of the apartments have been designed very carefully to have maximum cross ventilation and sufficient light. Vastu shilpa has been kept in mind while designing each and every apartment in TRUST HEIGHTS in order to create a deep sense of trust that me and my family shall always live in good health and prosperity.

(http://www.primesristi.com/project-about-trust-heights.html)

இதில் உள்ள இரண்டாம் பத்தி மிக முக்கியமானது. நானும் என் குடும்பமும் நல்ல உடல்நலத்துடனும், வளத்துடனும் வாழ்வோம் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டிரஸ்ட் ஹைட்ஸ் அடுக்ககத்தின் ஒவ்வொரு வீடும் வாஸ்து சாஸ்திரத்தை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரைம் ஸ்ருஷ்டி நிறுவனம் ஒப்புக்கொண்டபடி, இக்கட்டடம் வாஸ்து நிபுணர்களின் உதவியுடன் மிகுந்த கவனத்துடன் வாஸ்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அப்பளம் போல் நொறுங்கிவிட்டதே, ஏன்? இக்கட்டடத்திற்கு மண்வளம் பரிசோதித்தவர், வரைபடம் தயாரித்தவர், பொறியாளர் போன்றோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால், வாஸ்து ஆலோசகரும் கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டாமா? ஒருவேளை அறிவியலின்படி, வாஸ்துவை ஒரு பொருட்டாகக் கருதாமல் அரசு அமைத்துள்ள குழு விட்டுவிடலாம்; காவல் துறை விட்டுவிடலாம். ஆனால், நம்பிக்கையாளர்கள் விடலாமா?

அது மட்டுமல்லாமல், அந்தக் கட்டடத்திற்குப் போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கட்டடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர் வரைக்கும் மனதளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜையை அதிக செலவில் சிறப்பாகச் செய்துவிட்டோம் என்கிற அசாத்தியத் துணிச்சலில் கட்டுமானப்பணியில் உரியவர்கள் கோட்டைவிட்டிருக்கலாம்.

அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏமாற்றிய மேற்படி கடவுளர் மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடரவேண்டும். அதற்கு காரணமான புரோகிதர் மீதும் சட்டம் பாயவேண்டும். மறைந்த நாவலர் சோமசுந்தரபாரதியார் ஒருநாள் ஒரு புரோகிதத் திருமணத்திற்குச் சென்றிருந்தார். திருமண நிகழ்வு நடைபெற்றுகொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்குகையில் திருமணத்தை நடத்திக்கொண்டிருந்த புரோகிதர் சொல்லும் மந்திரம் நாவலர் காதில் தவறாக விழ குருக்களை நெருங்கி மீண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லுமாறு வேண்டினார் நாவலர். இரண்டு ஸ்லோகங்கள் சொன்னதுதான் தாமதம். நிறுத்து நிறுத்து என்று சப்தமிட்டார். காரணம், புரோகிதர் சொன்னது கருமாதி வீட்டில் சொல்லப்படும் மந்திரம். நாவலர் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலுமே புலமை பெற்றவர் என்பதால் அவர் மந்திரத்தின் பொருளை உணர்ந்து நிறுத்தச் சொன்னார். இந்தத் தகவலை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இதைச் சொல்வதற்குக் காரணம், மேற்கண்ட கட்டடத்திற்கு பூமிபூஜை போடப்பட்டபோது மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் மந்திரங்கள் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் சங்கராச்சாரி போன்றவர்கள் தலைமையில் கூட ஒரு குழு போடலாம். மந்திரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட புரோகிதருக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். மந்திரங்கள் சரியாக இருந்தால் கடவுளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.

இதை ஏதோ கிண்டலுக்குக் கேட்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இறந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் எந்த மாநிலத்தவர் என்பது முக்கியமல்ல; அவர்கள் மனிதர்கள் என்பதால் மனிதநேயத்துடன் அவர்தம் குடும்பங்களுக்கு -_ பாட்டாளிகளின் சொந்தங்களுக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கையில், வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்துக் கட்டப்பட்டுள்ளதுதான் இந்த இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடம். பூமி பூஜை பலமாகப் போடப்பட்ட பிறகே, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து அடிக்கல் நாட்டப்பட்டது; பின் ஏன் இந்த அவலம் நடந்தது? இதிலிருந்து வாஸ்து, பூமி பூஜை என்ற மூட நம்பிக்கைகள் மனிதர்களைக் காப்பாற்றாது. புரோகிதர் பிழைக்க, ஜோசியர்கள் பிழைக்க வழிதான் அவை என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டிருக்கும் கேள்விக்கு வாஸ்து பக்தர்களும், அதைவைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும், அதைப் பரப்பும் ஊடகங்களும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

தமிழ் ஓவியா said...


கமுக்கமா வச்சிருககாங்க்....



ஹீரோ சான்ஸ் போச்சே!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர், மே 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது. அன்றே அது முறியடிக்கவும்பட்டது என்பது செய்தி. இதெல்லாம் முடிந்து ஒரு வாரத்தில் ஒரு தகவல் அனைவருக்கும் பரப்பப்பட்டது.

மோடி ஆப்கானில் இருந்த இந்திய வீரர்களிடம் போனில் பேசி கட்டளைகளைப் பிறப்பித்தார். இன்றே இவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். நான் உங்களுடன் இன்றிரவு விருந்துண்ண வருகிறேன் என்று உற்சாகமூட்டினார் என்பதாக தகவல்கள் வெளிவந்தன. பதவியேற்காத நிலையில் இப்படி ஒருவர் பேசமுடியுமா? இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என்றெல்லாம் தெரியாமல் இப்புரளி பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, தேர்தலெல்லாம் முடிஞ்சு போச்சு, இன்னும் உங்க ரீலை முடிக்கலையா நீங்க? என்று மோடியின் விளம்பரக் குழுவுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

அந்த அளவுக்கு தேர்தல் பிரச்சார புரளிகளைப் போல, அதன் பிறகும் கொடுத்த காசுக்கு மேல கூவிக் கொண்டிருந்தது அவரது டீம். மோடி வந்ததும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக சிங்களக் கடற்படையைத் துவம்சம் செய்வார் என்று சொன்னவர்கள், மோடியின் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறார். இந்நிலையில்தான் செவிலியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் வெளிவந்தது. உலகளவில் கவனம் பெறப்போகும் இந்த விவகாரத்தில் மோடியின் ஹீரோயிச இமேஜை உயர்த்துவது எப்படி, மோடியை சர்வதேச இராஜதந்திரியாகக் காட்டுவது எப்படி என்றெல்லாம் அதுக்குன்னு இருக்கும் 11 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. ஆனால், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளால் செவிலியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்ததும் சான்ஸ் போச்சே என்று புலம்புகின்றனராம் மோடியும், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுதும் கும்பலும்.

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!


இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது! - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ்

காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடே தொடரும்! - இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் பேட்டி

பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!

புதுடில்லி, ஜூலை 17_ இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசிய பின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர் களிடம் பேசும்போது இந்தக் கருத்தை வழி மொழிந் தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு கிடைக் கும் என்று தமிழ்நாட்டில் துள்ளிக் குதித்தவர்களின் நெற்றியை இழுத்துப் பட்டை நாமத்தைச் சாத்தி விட்டது பி.ஜே.பி. ஆட்சி.

இந்தியப்பிரதமர் எங்களின் நிலையை நன்கு அறிந் திருக்கிறார். அவரது அனைத்து நடவடிக்கைகளும் எங்களுக்கு ஆதரவாக அமையும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறுகிறார்

இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டில் நமக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுத்து வருகிறது என சமீபத்தில் டில்லி வந்து சுஷ்மா சுவராஜை சந்தித்துவிட்டுச் சென்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார். இது தொடர் பாக அவர் லங்கவேப் என்ற அரசு இணையதளப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியின் விரிவு இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நமது அதிபர் அனைவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல சந்திப்புகளை நிகழ்த்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.


தமிழ் ஓவியா said...

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் நான் டில்லி சென்று சுஷ்மா சுவராஜ் அவர் களைச் சந்தித்தேன். சுஷ்மா சுவராஜ் இலங்கையுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் விதமாக நம்பிக்கையான பல உறுதிமொழிகளைக் கூறினார். முக்கியமாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு என்ற அச்சுறுத்தலை தொடர்ந்து வைத்து வரும் வேளையில் சுஷ்மா சுவராஜ் அவர்களின் பேச்சு நமக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது.

நீண்ட காலமாக இலங்கையில் நடந்து வந்த தீவிரவாதச் செயல்களை நமது அதிபர் தலைமையில் அடக்கி வைத்தோம். உலகெங்கும் சிதறியுள்ள தீவிரவாதிகளின் ஆதவாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைக்கின்றனர். மேலும் பொய்யான தகவலை மேற் குலகிற்கு வழங்கி நம்மீது அழுத்தம் கொடுக்க முயல் கின்றனர். சில மேற்குலக நாடுகளுக்கு அவர்களின் சொந்த லாபம் கருதி இலங்கை மீது பெரிய அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நாம் ஒன்று கூடி தடுத்து வருகிறோம். இந்த நிலையில் நரேந்திர மோடி அரசின் பதவியேற்பு நமக்கு மிகவும் சாதக மானதாகும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கும் வரை மேற்குலக நாடுகள் நம்மை எதுவும் செய்ய முடியாது, நமது முடிவில் என்றும் உறுதியாக இருப்போம்.

தமிழ் ஓவியா said...

மோடி அரசின் ஆதரவு

முக்கியமாக இந்தியாவும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆகையால் தான் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றிணைந்து உலக அரங்கில் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதே நேரத்தில், மோடி அரசும் நமக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதை இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிபடக் கூறினார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது

'உள்நாட்டுப் போருக்கு பிறகு எமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள், வாழ் வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், இலங்கை எமது நட்பு நாடு மாத்திரமல்ல; கலாச்சார ஒற்றுமை கொண்ட நாடும்கூட; அய்நா விசாரணைக் குழு அமைக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே முன்னாள் அரசின் நிலைப்பாட்டையே நாங்களும் கையாள் வோம் என்று உறுதிபடக்கூறினார்.

மேலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. என்று அந்த இணைய தளத்திற்கு ஜி.எல்.பிரீஸ் பேட்டியளித்தார்;

முந்தைய காங்கிரஸ் நிலைப்பாடே தொடர்கிறது!:சையத் அக்பருதீன்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுஷ்மா _ ஜி.எல்.பிரீஸ் சந்திப்பின்போது இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்புத் திட் டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டன. இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்துள்ளமை இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் வலிமை பெற்று வருவதைக் காட்டுகிறது. இலங்கையில் அய்.நா. மனித உரிமைகள் பேரவை யின் விசாரணைக் குழு மேற்கொள்ளவுள்ள நட வடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப் பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அய்.நா. மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கெனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது என்று பதி லளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அக்பருதீன்.

இலங்கை இராணுவ செய்தி இணையதளம்

இலங்கையில் நடந்தது தண்டனைக்குரிய குற்ற மல்ல, இலங்கையின் அனைத்து முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம்! என்று இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளதாக இலங்கை இராணுவச் செய்தி இணையதளம் (http://www.defence.lk/) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீது மீண்டும் போர்க் குற்றவிசாரணை என்ற பெயரில் தீர்மானம் கொண்டுவந்தால் இலங் கைக்கு ஆதரவான நிலையை நாங்கள் எடுப்போம் என்றும், மேலும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் நடைபெறவில்லை, அங்கு நடந்தவை அனைத்தும் தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளே என்றும் இந்திய அரசாங்கம் கூறியதாம்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமி ழர்ப் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்று துள்ளிக் குதித்து தமிழ்நாட்டு மக்களிடம் உத் தரவாதம் கொடுத்த கட்சிகள், தலைவர்கள் இந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டிய குற்றவாளி களாகவே கருதப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/84194.html#ixzz37mKFzwtm

தமிழ் ஓவியா said...

வழிக்கு வந்தது கிரிக்கெட் கிளப்!

வேட்டி அணிவது தொடர் பாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புக் காரணமாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் முதலமைச்சரின் அறி விப்புக் காரணமாகவும் கிரிக் கெட் கிளப்பின் விதிமுறை களை மாற்றத் தயாராக இருப்பதாக கிளப்பின் தலை வர் சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/84188.html#ixzz37mLEiaiP

தமிழ் ஓவியா said...


பிரதமரும்-கட்சித் தலைவரும்!


பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல மோடிக்கேற்ற ஜோடியாக இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

உண்மையைச் சொல்லப்போனால், எல்லா வகைகளிலும் எல்லாமுமாக நரேந்திர மோடிக்கு இருக்கக் கூடியவர் தான் இந்த அமித்ஷா.

அசல் ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி ஏடே கூட நேற்று (16.7.2014) தீட்டிய தலையங்கத்தில் அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராக அமைத்துக் கொண்டது மோடிக்கு மரியாதை சேர்க்காது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதே!

தினமணி எழுதுகிறது:

அமித்ஷாவின் அரசியல் திறமைகள்பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேநேரத்தில் கட்சித் தலைவராக, அதிலும் குறிப்பாக, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவராக அமித்ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்து நியமித்திருப்பது - தார்மீக ரீதியில் சரியானதுதானா என்ற கேள்விக்கு மன சாட்சியுடைய யாரும் ஆம் என்று பதிலளித்து விடவும் முடியாது! என்கிறது தினமணி

பி.ஜே.பி. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மூச்சு முட்ட எழுதி வந்த - செய்திகளை அந்தக் கோணத்தில் சித்தரித்த தினமணியே, அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராகக் கொண்டு வந்தது மனச்சாட்சியற்ற செயல் என்று காலை வாரிவிட்டதே!

குஜராத் மாநிலத்தில் காவல்துறை டி..அய்.ஜி.யாக இருந்த வன்சாரா, வெளியிட்ட அறிக்கை மிக முக்கியமானது.

போலி என்கவுன்டர்களுக்கு குஜராத் முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பு. அவர்கள் வழிகாட்டியபடிதான் போலி என்கவுன்டர்கள் நடந்தன.

நாங்கள் குற்றவாளிகள் என்றால், எங்களுக்கு ஆணையிட்ட, வழிநடத்திய முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றவாளிகள்தான் என்று சொன்னாரே!

இந்தியாவிலேயே மோடி ஆண்ட குஜராத்தில்தான், காவல்துறை அதிகாரிகள் 32 பேர் அதிக எண்ணிக்கை யில் கைது செய்யப்பட்டனர். மோடி அரசாட்சி எத்தகையது என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?

என்கவுன்டரில் அமித்ஷாவின் பங்குபற்றி தினமணி தனது தலையங்கத்திலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சொராபுதீன் போலி துப்பாக்கிச் சூடு (என்கவுன்டர்) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான குற்றவாளியும், சூத்திரதாரியும், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா 2010 இல் அந்த வழக்கின் பின்னணியில், பதவி விலகியவர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக் கப்பட்டவர். அந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை என்று தினமணி தலையங்கத்திலேயே அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளதே, என்ன பதில்? இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகப் பண்பாட்டின் தலைசிறந்த அரசியல் ஒழுக்கமா?

உத்தரப்பிரதேசத்திலும், மோடியின் பிரதிநிதியாக இருந்து தேர்தலில் மொத்தம் 80 இடங்களில் 73 இடங் களில் பி.ஜே.பி. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று மகுடம் சூட்டுகிறார்கள்; இருக்கட்டும், அந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறை என்ன? மதக் கலவரத்தைத் தூண்டியதுதானே? படுகொலைகள் எத்தனை? இலட் சக்கணக்கான சிறுபான்மையினர் முகாம்களில் தஞ்ச மடைய நேர்ந்த அவல நிலைக்கு இவர்தானே பொறுப்பு?

மதக்கலவரத்தை நடத்தி இந்து வாக்கு வங்கி, முஸ்லிம் வாக்கு வங்கி என்று கூறு போட்டு, வாக்குகளை அள்ளியதுதானே அவர் மேற்கொண்ட யுக்தி.

தேர்தல் நேரத்தில் அவர் என்ன பேசினார்? மக்களை எப்படித் தூண்டினார்?

உத்தரப்பிரதேச மக்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல் ஒரு கவுரவப் பிரச்சினை. முசாபர் நகர் கல வரத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்கு வதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். கலவரத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் புகட்டவேண்டும்.

உணவு, தூக்கம் இல்லாமல்கூட மனிதன் உயிர் வாழலாம். பசி, தாகம் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால், அவமதிக்கப் பட்டால், அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது; இங்கு நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். நமக்கு நீதி கிடைக்கவில்லை. முன்பெல்லாம் அம்புகளையும், வாளையும் வைத்து, பழிவாங்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது அதற்கான அவசியம் இல்லை. ஓட்டுப் பதிவு இயந்தி ரத்தில், பட்டனை அழுத்தினாலே பழிவாங்க முடியும் என்று பேசியவர் தான் பி.ஜே.பி.யின் இன்றைய அகில இந்தியத் தலைவர்.

குஜராத்தில் மதக் கலவரத்தை ஊக்குவித்தவர் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் அதையே செய்தவர் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்.

நாடு எங்கே போகிறது? எதிர்காலம் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் காலமாக மாறிவிடுமோ என்கிற அச்சம், வெகுமக்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு, வெகுமக்களா தண்டனையை அனுபவிக்கவேண்டும்?

விழிப்புணர்வு தேவை! தேவை!!

Read more: http://viduthalai.in/page-2/84208.html#ixzz37mLiOB00

தமிழ் ஓவியா said...


பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது ஆய்வில் தகவல் இதயத்துடிப்பின் வேகம் உடம்பின் அளவைப் பொறுத்து அமையும். பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது.

சுண்டெலி, மூஞ்சுறு போன்றவை மிகச் சிறிய பிராணிகள். அவற்றின் இதயம் நிமிடத்துக்கு ஆயிரம் தடவை துடிக்கிறது. திமிங்கலம் மிகப் பெரிய விலங்கு. அதன் இதயம் நிமிடத்துக்கு 5 முறைதான் துடிக்கிறது. வயது வந்த ஒரு ஆணின் இதயத்தின் எடை 284 கிராமில் இருந்து 430 கிராம் வரை இருக்கும். வயதுக்கு வந்த பெண்ணின் இதயம் 227 கிராமில் இருந்து 340 கிராம் வரை இருக்கும்.

குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இதயத்துடிப்பு அதிகம் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் 70 சதவிகிதத்தைத் தான் உபயோகத்துக்கு இதயம் எடுத்துக் கொள்கிறது. இதயம் துடிப்பதற்கு இவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

சாதாரண மனிதனின் இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக் கிறது. ஒரு மணி நேரத்துக்கு 1,03,680 தடவை துடிக்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் 37 கோடியே 83 லட்சத்து 120 தடவை துடிக்கும்.

இதயத் துடிப்பு சாதாரணமாக காலையில் குறைவாக இருக்கும். பிற்பகலில் அதிகரிக்கும்.

100 மில்லி ரத்தத்தில் 20 முதல் 45 மில்லி கிராம் புரதமும், 50 முதல் 80 கிராம் வரை குளுகோசும், 700 முதல் 750 மில்லி கிராம் வரை குளோரைடுகளும் உள்ளன. ஒரு ஆணின் ரத்தம் ஒரு கன மில்லி மீட்டரில் 4.5 6.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் கொண்டதாக உள்ளது. அதே அளவு கொண்ட பெண்ணின் ரத்தத்தில் 4.05.5 மில்லியன் சிவப்பு அணுக்களே இருக்கின்றன.

ஹீமோகுளோபினை எடுத்துக் கொண்டால் ஆணின் ரத்தத்தில் 13.5 முதல் 18.0 வரை உள்ளது.

பெண்ணின் ரத்தத்தில் 11.5 முதல் 16.5 வரையே உள்ளது. பொதுவாக மனித ரத்தத்தில் 100 மில்லியன் லிட்டர் அளவில் 125300 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 1740 மில்லி கிராம் யூரியா உள்ளது. 14.5 மில்லி கிராம் யூரிக் அமிலம் உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/84201.html#ixzz37mMNEPr4

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


அவ்வையார்

தமிழ்ப் புலவர் அவ்வையார் ஒன்றும் புராணப் பாத்திரம் அல்ல - வரலாற்று மாந்தர்தான்! அவருக்கே கோவில்கள் என்றால் பலருக்கும் ஆச் சரியமாக இருக்கும் குமரி மாவட்டத்தில் தோவாளை தாலுகாவில் மூன்று கோவில்கள் இருக்கின்றன. ஆடி மாதம் செவ்வாய்க் கிழமைகளில் கொழுக் கட்டை வைத்துப் படைக் கின்றனர் - நோன்பும் இருக்கின்றனர்.

அப்படியானால் கடவுள் என்பதும், கோவில் என்பதும்தான் என்ன? இப்படித்தான் உண்டாகி இருக்கின்றன என்பது தெரியவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/84266.html#ixzz37sEFBrAE

தமிழ் ஓவியா said...

பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும்

விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் - 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய சக்திகளும் பிளவு சக்திகளும் நமது அடையாளத்தை அழிப்பதற்காக முஸ்லிம் அரசியலை பயன்படுத்தினர். ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் பொது பிரஜைகளாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் இந்துமத உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்?முஸ்லிம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா கோவில்கள் ஆகியவற்றின் மீதான உரிமை கோரலை கைவிட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தையும் ஏற்க வேண்டும். நாங்கள் முஸ்லிம்களுடன் அன்பாக நடந்து கொள்வோம், மேலும் மற்ற எந்த ஒரு மசூதி வளாகத்தின் மீதும் (ஆயிரக்கணக்கான மசூதிகள் பழைய கோவில் களின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டிருந்தாலும்) நாங்கள் உரிமை கோர மாட்டோம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒத்துக் கொள்ளா விட்டால், மேலும் ஏற்படவுள்ள இந்து ஒருமைப்பாட்டை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

தற்போது இது மத்திய அரசில் நிகழ்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது நிகழும். தற்போதைய பா.ஜ.க. அரசு பின்வாங்காது. மேலும் பின்வாங்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க.வுக் குப் பெரும்பான்மை உள்ளது. மேலும் நாங்கள் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதனை அரசியல் சட்ட ரீதியாக செய்யவே விரும்புகிறோம்.

ராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை சாத்தியமாக்கின. பா.ஜ.க.வின் வெற்றிக்கு இந்த விவகாரங்கள் அடித்தளமாக இருந்தன. அத்துடன் வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களும் இளைஞர்களைக் கவர்ந்தன - இவ்வாறு சிங்கால் கூறியுள்ளார்.

இதுதான் சங்பரிவார்களின் - அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும் ஆகும். இந்த விசுவ ஹிந்து பரிஷத்துதான் பொது மக்கள் மத்தியில் திரிசூலங்களை வழங்கி வருபவர்கள்! திரிசூலத்தில் ஒரு முனை முஸ்லீம்களையும், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் மதச் சார்பின்மைப்பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் தான்.

இந்தக் காரணத்தால்தான் பிகாருக்கு வி.எச்.பி.யின் பொதுச் செயலாளரான தொகாடியா வரக் கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப்பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (We or our Nation hood Defined) என்ற நூல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனப்பான்மை தானே அசோக் சிங்கால் களுக்கு இருக்க முடியும். இதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவரான மறைந்து குப்பஹள்ளி சீத்தாராமய்யா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) என்ன சொன்னார்?

கிருத்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும்; முஸ்லீம்கள் ராமனைத் தொழ வேண்டும் என்றெல்லாம் சொன்ன துண்டு.

இப்படி ஒரு பாசிச அமைப்பு இந்தியாவில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டது. இந்த நிலையில் இந்தப் பாசிசக் கும்பல் பந்தயக் குதிரை வேகத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் வந்தால் இந்து முஸ்லீம் ஒற்றுமை சீர்குலையும் என்று அரக்கோணம் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் (14.3.2014) கூறியதை நினைவு கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலொழிய இதற்கு வேறு மார்க்கம் கிடையாது.

குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மக்கள் சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நொண்டி அடித்துக் கொண்டாவது அரசு பின்னால் வந்து சேரும் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பது நல்லது.

அரசியல் கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் சங்பரிவாரை (பிஜேபி உட்பட) எவரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதைவிட - மிகப் பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

தெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டு சில அரசியல் கட்சிகள் இந்தத் தவறைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க பிற்போக் கான நிலையாகும்.
அசோக் சிங்கால் பேட்டியைப் படித்த பிறகாவது திருந்துவார்களா?

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவின் சிகரம்


பெரியார் ஈ.வெ.ரா. பிராமணத் துவேஷி - பிராமணர்கள் அவருக்குப் பிடிக்காது என்று பெருவாரியான பிராமணர்கள் நினைப்பதோடு பிரச்சாரமும் செய்து வருகின்றார்கள். இந்தக் கருத்து முற்றிலும் தவறு. இது பெரியாரைப் பற்றிய அவதூறுப் பிரச்சாரமாகும். பெரியார் அவர்களே பல கூட்டங் களிலும் நேரடியாக பலர் அவருடன் உரையாடிய காலத்திலும் பிராமணர் களையல்ல.

பிராமணீயத்தை யேதான் நான் எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் பிராமணீயத்தை எதிர்த்தது நாத்திக கண்ணோட்டத்தால் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. இந்தத் தத்துவமும், சமயமும் வருணாசிரம தருமம் என்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டடங்கள் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

பிராமணீயம் வருணாசிரம தர்மத்தின் அடிப்படை யாகும் - வருணாசிரம தர்மம் ஜாதிப் பிரிவினை யையும், அவரவர் ஜாதிக்குரிய வேலையைச் செய்வதும் தான் அவரவர்க்கு ஈசன் விதித்த கட்டளை என்று கூறுவதையும், ஜாதிக் கொடுமைகள் சமுதாய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை போன்ற பல சீர்கேடுகளையும் நியாயப் படுத்துகின்றது.

இத்தீமைகளையே பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் கடுமையாக, வன்மையாக எதிர்த்துச் சாடி வந்தார். இந்த தத்துவ சாத்திரம் பிராமணீயத்தை தூக்கிப் பிடித்து தாங்கி நிற்கின்றது.

ஆகவே இவை எல்லா வற்றையும் எதிர்ப்ப தென்றால் கண்டதற்கெல்லாம் கடவுள் என்ற கற்பனைப் பொருளை முன் கொண்டு வந்து நிறுத் துவதை எதிர்ப்பதா கும் சுருங்கக் கூறின், கடவுள் நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங் கள் முதலியவற்றை எதிர்ப்பதென்றால் அது நாத்திகம் தான். நாத்திகத்தின் அடுத்த உயர்நிலைப்படி தர்க்க இயல்பொருள் முதல் வாதமாகும்.

இவற்றின் அடிப்படை விஞ்ஞானம் தழுவிய பகுத்தறிவேயாகும். பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் பகுத்தறிவின் சிகரமாக விளங்கி வந்தார். புகழ்பெற்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே.அய்யங்கார் (பார்ப்பனர்) பகுத்தறிவின் சிகரம் ஈ.வெ.ரா. என ஒரு நூல் எழுதியுள்ளார். பெரியாரைப் பற்றிய நூல் எழுதுவதற்கு காரணமாக இதை குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/84259.html#ixzz37sFofTuL

தமிழ் ஓவியா said...


மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை


நமது கலாச்சாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையான வற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.

இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்கு வதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84262.html#ixzz37sFzjh30

தமிழ் ஓவியா said...


இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் உரிமையில்லையாம்



அசோக் சிங்காலின் அப்பட்டமான பாசிசக் குரல்!

புதுடில்லி ஜூலை -18 இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் ஓட்டுரிமை செல்லாக்காசாகிவிட்டது. இங்கு இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகை யால் இஸ்லாமியர்கள் தங்களது நடவடிக்கை களை குறைத்துக்கொண்டு இந்துக்களின் மதநீதிகளை மதித்து நடக்கவேண்டும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த விஷ்வ இந்துப் பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்

இதன் விவரம் வருமாறு இந்தியாவில் இதுவரை இஸ்லாமியர்களின் ஓட்டுக் களைப் பெற்று ஆட்சிக்கு வந்த சகாப்தம் முடிந்து விட்டது. இனி இந்து ராஜ்ஜியம் மலர்ந்து விட்டது. இனி இஸ்லாமி யர்களின் ஓட்டிற்கு வேலையில்லை. இஸ்லாமி யர்அனைவரும் சிறப்பான மக்கள் அல்ல அவர்கள் சாதாரண குடிமகன் தான், அவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகளோ அல்லது வேறு வகையான சிறப்பு வசதிகளோ செய்து கொடுக்கக்கூடாது.

இங் குள்ள கோடானு கோடி இந்துக்களுக்கு உள்ள அதே உரிமை இஸ்லாமி யர்களுக்கு கொடுக்கப்பட் டுள்ளது. ஆகவே இஸ்லா மியர்கள் இந்துக்களின் மதநம்பிக்கையை மதிக்கவேண்டும். அரசியல் கட்சிகள் முஸ்லீம் ஓட்டிற்காக அலையத்தேவையில்லை, இஸ்லாமியர்களின் ஓட் டுக்கள் இல்லாமலேயே ஒரு இந்து அரசு அமைந்து விட்டது. இனி இஸ்லாமிய ஓட்டின் முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது. நரேந்திரமோடி உண்மையான இந்துத்துவப்போராளி

அசோக் சிங்கால் பிரதமர் நரேந்திரமோடி பற்றிக்கூறும் போது மோடி அவர்கள் உண்மை யான இந்துத்துவாதி, தீவிரமான இந்துமதப் பற்றாளர், சங்கப்பரிவாரங் களின் காப்பாளர், முந் தைய அரசின் ஆட்சி முறையில் இருந்து முற்றி லும் விலகி தனித்துவமான ஆட்சியைத் தரவல்லவர்.இராமனும் பரதனும் தந்த ஆட்சியை மோடி தருவார் என்பதில் அய்யமில்லை. மேலும் வாஜ்பாய் அரசு செய்யத்துணியாத பல மாற்றங்களை மோடி செய்வார்.

இதற்காகத்தான் இந்துக்கள் அனைவரும் இணைந்து மோடியை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். காசி அயோத்தியா மதுரா போன்ற பகுதி களில் பழமையான இந் துக்கோவில்கள் தான் மசூதிகளாக மாற்றப்பட் டுள்ளன. நீண்டநாட் களாக தவறான செய்திகள் மற்றும் தகவலின் காரண மாக அவற்றை உரிமை கொண்டாடி வருகின்ற னர். இனி இஸ்லாமியர்கள் இந்த இடங்களுக்கு உரிமைக் கொண்டாடக் கூடாது. இங்குள்ள ஆயி ரக்கணக்கான மசூதிகள் இந்துக்கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவை தான். விரைவில் ஆதாரங் களை முன்வைப்போம். இஸ்லாமியர்கள் எங்களது நடவடிக்கைகளில் தலை யிடக்கூடாது. இனி இந் துக்களுக்கு எதிராகவோ இந்துமதத்திற்கு எதிரா கவோ எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கும் முன்பு சிந்திக்கவேண்டும். யாரு டைய ஆட்சி என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

அசோக் சிங்காலின் இந்த மக்கள் விரோத பேச்சிற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித் துள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனீஷ் தீவாரி கூறியபோது அசோக் சிங்காலின் இந்த பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர் நரேந்திர மோடியின் பெயரை முன்மொழிந்து இதுபோன்ற நச்சுகலந்த பேட்டியைக் கொடுத் துள்ளார். சுதந்திரம் அடைந்த பிறகு இந்து-முஸ்லீம்கள் ஒன்று கூடி அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இது போன்ற விவாதத்திற்கு உரிய அறிக்கையை கூறுவதால் சமூகத்தில் ஒற்றுமை குலைந்து அமைதி கொட் டுப்போக வாய்ப்புள்ளது. நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு செல்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி இது குறித்து என்ன சொல்லப்போகி றார் என்று தெரியவில்லை. அசோக் சிங்கால் இத் தனை காலமாக கூறிவந்த தற்கும் இன்று கூறியதற் கும் பெரிய வேறுபாடு உண்டு என்று கூறினார். அசோக் சிங்கால் மீது காவல்த்துறையில் புகார் - பிருந்தாகாரத்
சிறிமி(வி) கட்சியின் பொலிட் பீரோ உறுப் பினர் பிருந்தா காரத் ராஞ் சியில் பத்திரிகையாளர் களிடம் பேட்டியளித்தார்.

அப்போது அசோக் சிங்கால் விவகாரம் குறித்து பேசியபோது நாட்டில் அமைதியை குலைக்கும் விதத்தில் இவ்வாறு விவாதத்திற்கு உரிய பேச்சை பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகைச் செய்தி கையில் கிடைத்த பிறகு நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய் வோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட் டோம். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இதுபோன்றவர்களின் பேச்சை இனிமேலும் மற்ற மதத்தலைவர்கள் தொட ராமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/84265.html#ixzz37sGe0BtU

தமிழ் ஓவியா said...

அப்போது அசோக் சிங்கால் விவகாரம் குறித்து பேசியபோது நாட்டில் அமைதியை குலைக்கும் விதத்தில் இவ்வாறு விவாதத்திற்கு உரிய பேச்சை பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகைச் செய்தி கையில் கிடைத்த பிறகு நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய் வோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட் டோம். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இதுபோன்றவர்களின் பேச்சை இனிமேலும் மற்ற மதத்தலைவர்கள் தொட ராமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/84265.html#ixzz37sGnglzG