Search This Blog

15.7.14

ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரசை விஞ்சிய பிஜேபி-மயக்கம் தெளிவீர்!

  • ஈழத் தமிழர் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட இலங்கைக்கு அதிகம் துணை போகும் இன்றைய பிஜேபி ஆட்சியைப் பாரீர்!
  • மோடி வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்று கூறிய தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்களே உங்களின் இன்றைய நிலை என்ன?
  • தமிழ்நாடு அரசு தனது நிலையை விளக்குமா?
தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்சினையில் முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைவிட இன்றைய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டு தமிழர்கள், தலைவர்கள், உலகத் தமிழர்கள் மயக்கம் தெளியட்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர்கள், அவர்கள் இலங்கையின் ஆதிகாலம் தொட்டே இருந்து வந்தமண்ணின் மைந்தர்கள்; கிபி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே வடக்கேயுள்ள ஒரிசா மற்றும் பல பகுதிகளிலிருந்து சென்ற ஆரியர்களின் வம்சாவளிகள் தான் - ஏற்பட்ட கலப்புக் காரணமாக, சிங்களர் என்ற ஒரு இனத்தோற்றம் என்பது அதன் வரலாறு.

இந்தச் சிங்களவர்கள் யார்?

அங்கே நாளடைவில் அவர்கள் பெருகி, ஈழத் தமிழர்களாகிய மண்ணின் மைந்தர்கள், வடக்கே ஒரு பகுதி, கிழக்கே மற்றொரு பகுதி, தலைநகர் கொழும்புவில், இந்தியாவிலிருந்து குடியேறிய வாணிபத் தொடர்புத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய வெள்ளைக்காரர்களின் டீ எஸ்டேட்டுகளில் பணிபுரிய கங்காணிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட கூலிக்கார தமிழர்கள். (அவர்களில் பலர் சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தால் குடி உரிமை இழந்த சுமார் 5 லட்சத்திற்கும், அதிகமான இங்கும் அங்கும் உரிமை பெறாத அகதிகள் போன்ற (Repatriates) மறு குடியேற்ற மக்கள் என்ற நிலையே யதார்த்தம்).

அய்.நா. விசாரணை மேற்கொண்டது ஏன்?

அந்த சொந்தக் குடி மக்களான தமிழர்களை அழித் தொழிக்கும் இன அழிவுப் படுகொலையில் தீவிரவாதத் திற்கு எதிரான போர் என்று உலக நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு கொத்துக் குண்டுகளைப் போட்டு தமிழினத்தை கொத்துக் கொத்தாய் அழித்த கொடுமை காரணமாகவே அய்.நா.வின் பெரும்பான்மை நாடுகள் இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவித்து, விசாரணை மேற்கொண்டுள்ளதற்குக் காரணம்.
பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்; ஈழத்துச் சகோதரிகளில் எண்ணற்றவர்கள் வன்புணர்ச்சிக்கு சிங்கள இராணுவத்தால் (கற்பழிக்கப்பட்டு) ஆளாக்கப்பட்டனர்; அவர்தம் கணவர்கள் கொல்லப்பட்டதால் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் விதவைகள் ஆக்கப்பட்டு, வீதியில் நிற்கும் வேதனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
இதனைக் கண்டித்து உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் தொடங்கியதால், அய்.நா. இலங்கையை போர்க் குற்றம் புரிந்த நாடாக அறிவித்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதனை வற்புறுத்திய தீர்மானத்திற்கு ஆதரவாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களோடு உண்டு என்பதையும் மறந்து விட்ட முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடுநிலை வகிக்கிறோம் என்ற நிலைப்பாட்டினை அறிவித்தது; தமிழ்நாட்டுத் தமிழர்களிலிருந்து உலகத் தமிழர்கள் அனைவரது கண்டனத்திற்கும்கூட ஆளானது.

தேர்தலில் வாக்களித்து இன்று ஏமாறும் நிலை!

பொதுத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஈழப் பிரச்சினையில் தீர்வை, மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு நொடியில் கண்டு விடுவார் என்பதுபோலவும், தமிழ்நாட்டு மீனவர்களைச் சிறைப் பிடிப்பது, சித்ரவதை செய்வது, அவர்களது மீன்பிடி படகுகள், வலைகளை அபகரிப்பது போன்ற அவலங் களுக்கு உடனே முற்றுப் புள்ளி வைத்து விடுவார் மோடி என்றும் தொடர்ந்து, பிரச்சாரம் செய்ததை தமிழ் நாட்டு அப்பாவித் தமிழர்கள் கேட்டு வாக்களித்தனர்; பெரிதும் நம்பிக்கையும் வைத்தனர்.

50 நாள்களுக்கு மேல் ஆகிய நிலையில்  மோடி தலைமையிலான புதிய மத்திய அரசின் நிலைப்பாடு  முந்தைய நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறுபடாத பழைய கறுப்பனாகவே இருக்கிறது!

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசை விஞ்சிய பிஜேபி

ஜி.எல். பெரிஸ் என்ற இலங்கை அரசின் வெளி உறவுத் துறை அமைச்சருக்கு டில்லி சிவப்பு கம்பள வரவேற்பு (பதவியேற்ற விழாவிற்கே இராஜபக்சேவை அமோக வரவேற்புடன்  அழைப்பு) தந்துள்ள நிலையில், நமது வெளிஉறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அம்மையார் தரப்பில், (முந்தைய காங்கிரஸ் ஆட்சிகூட வெளிப்படையாக கூறாத) போர்க் குற்றவாளி நாடாக இலங்கையை அய்.நா. மனித உரிமை ஆணையம் விசாரிப்பது கூடாது என்று பகிரங்கமாக நேற்று அறிவித் திருப்பது எதைக் காட்டுகிறது!

மோடிக்கு ஆதரவளித்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஏதோ, பெரிய மாற்றம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் வரும் என்று தமிழ்நாட்டில் உள்ள தே.மு.தி.க. பா.ம.க., ம.தி.மு.க. இன்னும் சில சில்லறை கட்சிகளும் தேர்தல் மேடைகளில் முழங்கினார்களே, அவர்கள் நிலைப்பாடு. இப்போது என்ன? மாலையில் வந்த குடு குடுப்பைக்காரர்கள் காலையில் காணாமற் போவது போன்றது தானா?

டெசோவின் குரல்

தி.மு.க. தலைமையிலான டெசோ மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தகாரணத்தினால் முழுக்க இலங்கை இராஜபக்சே பக்கம் அடியோடு  சாய்ந்திடாமல் தயங்கி தயங்கியாவது முந்தைய ஆட்சி இருந்தது. இலங்கைக்கு எதிராக ஒரு முறை எதிர்த்து வாக்களித்ததும் உண்டு. ஆனால் இன்று வெட்கமும், வேதனையும் தான் மேலோங்கி உள்ளன. தமிழ் மக்கள் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக உண்மையாகப் பாடுபடு பவர்களாக இருப்பின், இனிமேலாவது மோடி அரசின் அணுகுமுறைக்கும், காங்கிரசின் அணுகுமுறைக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதைப் புரிந்து தெளிவான நிலைப்பாட்டை எடுப்பார்களா?

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

இப்பிரச்சினையில், இப்படி இலங்கையைப் போர்க் குற்றவாளி நாடாகக் கருதி அய்.நா. மனித உரிமை ஆணையக்குழுவின் விசாரணை கூடாது என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை அப்படியே 100 சதவிகிதம் ஏற்கிற இன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டை தமிழக முதல் அமைச்சர் தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்தல் முடிவுகளால் மாற்றம் வரும் என்று கனவு கண்டவர்கள் இப்போது சந்திப்பது மாற்றம் அல்ல; ஏமாற்றமே!

மயக்கம் தெளிவீர்!

தமிழர்கள் - ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இனியாவது மயக்கம் கலைந்து உண்மைகளை உணர வேண்டும்!

                -----------------------கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம், சென்னை      
14.7.2014

23 comments:

ப.கந்தசாமி said...

ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிலிருக்கும் தொடர்பு என்ன? அவர்கள் நமக்கு பங்காளிகளா அல்லது மாமனா மச்சானா? இங்குருக்கும் தமிழர் நலனையே பாதுமாத்தால் போதும். அடுத்த நாட்டின் கவலை நமக்கு வேண்டாம்.

தமிழ் ஓவியா said...


சாமி சாகுமா?


இன்றைய ஆன்மிகம்?

சாமி சாகுமா?

குஜராத் மாநிலம் துவார கையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கொடி மரம் (துவஜஸ்தம்பம்) இல்லை. இந்தக் கோயில் கருவறை யில் கண்ணபிரான கரிய நிறத்துடன், நான்கு கரங்க ளோடு, வெள்ளி மஞ்சத்தின் மீது நின்ற கோலத்தில் மேற்குமுகமாக அருள் புரிகிறார். இங்கு கிருஷ்னை கருவறைக்குள் சென்று துளசி இலைகளை வைத்து வழி படலாமாம்.

சரி, தலைக்கொரு சீயக் காய் தாடிக்கொரு சீயக் காயா? மற்ற இந்துக் கோயில் களில் பக்தர்கள் கருவறைக் குள் சென்று வழிபடத் தடை ஏன்? அப்படி என்றால் தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துவிடும் என்பானேன்?

Read more: http://viduthalai.in/e-paper/84079.html#ixzz37aiAVIOn

தமிழ் ஓவியா said...


காமராசருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எது? எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து


சென்னை, ஜூன் 15_ அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப் படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடு தலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்து கிறது.

பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வரு கிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி வரு கிறது. கல்வியே சிறந்த செல்வம், கல்வியே மீட் சிக்கு வழி என்னும் உண்மையை அறிந்த நிலையிலும், எளிய மக்கள் எளிதில் பெற முடியாத அளவுக்கு கல்வியை மிகப் பெரும் விலைகொண்ட பொருளாக மாற்றி வரு வது பெரும் கவலையளிப் பதாக உள்ளது.

மழலை யர் வகுப்புகளிலிருந்தே பல்லாயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் கட் டணம் செலுத்தி கல்வி பெற வேண்டிய அவலம் பெருகியுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் புதிய தலைமுறையின ரிடையே மிகப்பெரும் முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மழலை யர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அளிக்க முடியாது என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிப் படையாக சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தமிழகத்தின் எதிர்காலத் தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, தமிழக அரசு கல்வித் தளத்தில் ஏற் பட்டுள்ள தனியார்மயம் மற்றும் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். தனி யார் கல்வி நிறுவனங் களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரசே ஊதியம் வழங்கவேண் டும்.

கல்விக் கட்டணத் தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய சீர் திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் ஏழை எளிய மக் களும் எளிதில் கல்வி பெற வாய்ப்புகள் உருவா கும். அத்துடன், தமிழக அரசின் இலவசத் திட்டங் கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டு கல் வியை முழுமையாக கட் டணமில்லாமல் வழங்கு வதற்கு முன்வரவேண்டும்.

இதுவே பெருந்தலைவர் காமராஜருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை யாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

- இவ்வாறு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/84078.html#ixzz37aoyjPEX

தமிழ் ஓவியா said...


மாலை மலரிலும் ஆர்.எஸ்.எஸா?


எங்குச் சுற்றி வந்தாலும் காமராசர் அவர்களைப்பற்றி எழுதும்பொழுது ஏதாவது ஓரிடத்திலாவது தந்தை பெரியார் அவர்களைச் சம்பந்தப்படுத்திதான் தீரவேண்டும் என்று யாரும் மார் தட்டாதீர்கள்!

ஏன் எழுத முடியாது?

கர்ம வீரர் காமராஜர் பேசுகிறார்! என்ற பெயரில் மாலைமலர் என்ற ஒரு தமிழ் ஏடு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளதே! (14.7.2014).

46 பக்கங்களைக் கொண்ட அந்த மலரில் எந்த ஒரு இடத்திலும் பெரியார் பெயர் வராமல் மிகவும் ஜாக்கிரதையுடன் மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவர்களோடு இருக்கும் படத்தில்கூட பெரியார் கிடையாது.

காமராசரின் பரம எதிரியான ராஜாஜி அடிக்கடி வருகிறார் - சத்தியமூர்த்தி அய்யர் வருகிறார், திரு.வி.க. வருகிறார், அண்ணா வருகிறார், கலைஞர் வருகிறார், ஆனால், பெரியார் மட்டும் ஊறுகாய்போலக்கூட இடம்பெறாமல், தப்பித் தவிறி கூட வந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவும் விழிப்பாகப் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அட, ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டதே, அதைப்பற்றியும் மலரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே - ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்த இடத்தில்கூட பெரியாரைக் காணோம். அதைவிட்டுத் தள்ளுங்கள்!

ஆச்சாரியார் பதவி விலகிய நேரத்தில் அந்த இடத்தில் முதலமைச்சராக அமர மறுத்த காமராசர் அவர்களை டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் அமர வைத்து தைரியம் கூறிய பெரியாரை மறைத்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனார் குடும்பத்தாரின் மாலைமலர் ஏடு வெளியிடுகிறது என்றால், இதுதான் தமிழர்களின் யோக்கியதை என்று தந்தை பெரியார் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. தினமலர்களை, தினமணிகளை நொந்து என்ன பயன்?

நல்ல பெயரை வைக்கிறேன் என்று கூறி, குழந்தைகளுக்கு காமராசர் பெயரைச் சூட்டியவர் அல்லவா பெரியார், பச்சைத் தமிழர் என்றும், கர்மவீரர் என்றும், கல்விக் கண்களைத் திறந்தவர் என்றும் பட்டிதொட்டியெல்லாம் பெருமைப்படுத்திய தலைவர் ஆயிற்றே பெரியார்; பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில், காமராசர் வாழ்த்துப் பாடச் சொன்னவர் பெரியார். அவரை எப்படி மலரில் இடம்பெறச் செய்ய முடியும்? கூடாது என்பதுதான் அந்த ஏட்டின் நிலைப்பாடு போலும்!

ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நிறுவனத்திலும்கூட கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஆதிக்கம் செய்கிறார்கள் போலும்!

இப்படியெல்லாம் இருட்டடிப்பதன்மூலம் காமராசரையும், பெரியாரையும் பிரிக்க முடியாது. பத்திரிகை நடத்தும் முதலாளிமார்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்களோ!

Read more: http://viduthalai.in/page-8/84092.html#ixzz37apYmjbT

தமிழ் ஓவியா said...


பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் கவனத்திற்கு...


அறிவியல் விஞ்ஞானம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஊருக்கு ஊர் கொள்ளை சம்பவங்களும், சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.

காவல்துறையினரும் வலைவீசி தேடிப் பிடித்து களவுபோன பொருள்களை மீட்கின்றனர். களவுபோன பொருளை மீட்க காவல்துறையை நாடினாலும், காவல்துறையினரைக் காட்டிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லாபுரியம்மனைத்தான் பலரும் நம்புகின்றனராம்.

ஆம்! தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லாபுரியம்மன் சாமியிடம்தான் தங்கள் வீட்டில் திருடுபோன பொருள் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உயிருடன் ஒரு கோழியை கோயில் அருகே உள்ள ஒரு மரத்தில் சாகும் வரை தூக்கில் போட்டுவிட்டுச் சென்றால், திருடுபோன பொருள் மற்றும் திருடனும் கிடைத்துவிடுவான் என்பது ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகின்றதாம்.

இந்த நம்பிக்கையின்படி சென்னை, பெங்களூரு, சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்துகூட கொல்லாபுரியம்மனை தேடி வந்து கோழியைத் தூக்கிலிடுகின்றனராம்.

அதேபோல திருடுபோன பொருள் கிடைத்துவிட்டால் மீண்டும் கோயிலுக்கு வந்து, பூஜை செய்து கொல்லாபுரியம்மனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆன்மிக நம்பிக்கை கொல்லாபுரியம்மனின் புகழ் லாரி ஓட்டுநர்கள் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் வரை பரவியுள்ளதால் நாள்தோறும் திருடுபோன பொருள்கள் கிடைக்கவேண்டும் என்று கோழிகளை தூக்குபோடுவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதாம்.

இதனால் கோழிகள் தூக்குபோடும் பகுதி சுகாதாரம் கெட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்கள் பரவி வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/84086.html#ixzz37apnJrCx

தமிழ் ஓவியா said...


நுழையாதே!


திருநெல்வேலி மாவட் டம் களக்காடுப் பகுதியில் சுப்பிரமணியபுரம் என்ற ஊர் - அங்கொரு கரும் பலகையில்,

பொது அறிவிப்பு!

இந்துக்கள் தவிர பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் மற்றும் மத மாற்றம் செய்யவோ இந்த ஊரில் அனுமதி இல்லை!

- இந்து சமுதாயம்

என்று எழுதி வைக்கப்பட் டுள்ளது.

சட்டப்படி இந்த விளம் பரப்பலகை சரியானது தானா? மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் தமிழ் நாட்டில்கூட இப்படியொரு விளம்பரப் பலகையை வைக்கலாம் என்ற துணிவு வந்துவிட்டதா?

தமிழ்நாட்டில் நடை பெறுவதும் ஒரு வகை யான (Soft) இந்துத்துவா ஆட்சிதானே - கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பா? (மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தவர் அல்லவா செல்வி ஜெயலலிதா!).

ராமன் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? என்று கேள்வி கேட்டவரு மாயிற்றே! அந்தத் தைரியத் தில் இப்படிச் செய்ய ஆரம் பித்துவிட்டார்களா?

தந்தை பெரியார் பிறந்து பக்குவப்படுத்தப் பட்ட மண்ணில், மதமாச் சரிய எரிமலைக் குழம்புகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர் - ஆரம்பத்திலேயே இந்த முளையைக் கிள்ளி எறியா விட்டால், ஆட்சியே கூடக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிப்பது மனிதநேயப் பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.

மோடி அரசாண்ட குஜராத் மண்ணிலே இப்படித் தான் ஒரு கிராமத்தின் நுழைவு வாயிலில் ஒரு விளம்பரப் பலகை இருந்தது.

நீங்கள் இந்து ராஷ்டி ரத்தில் நுழைகிறீர்கள்! என்பதுதான் அந்தப் பலகை.

இன்னொரு கிராமம்; குஜராத் தலைநகரமான அகமதாபாத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தனவாதா என்பது அதன் பெயர். அங்கு ஒரு தண்ணீர்த் தொட்டி - அதில் எழுதப்பட்டுள்ள திருவாசகங்கள் என்ன தெரியுமா?

காலை 9 மணிமுதல் 10 மணிவரை பிராமணர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்;

10 மணிமுதல் மதியம் 12 மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார் 12 மணிமுதல் ஒரு மணி வரை தலித் இனத்தவருக் காம் (ஆகா, எப்படிப்பட்ட மோடி ஆட்சி).

மறுபடியும் களக் காடுக்கு வருவோம் - இந்த ஊரில் படித்தவர்கள் பெரிய அரசுப் பணிகளில் உள்ள வர்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் எங்கே படித்தார்களாம்? கிறித்தவப் பள்ளிகளில்தான்! பாளையங்கோட்டை தூயயோவான் மற்றும் புனித சவேரியார் கல்லூரியில்தான். 40 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய கரும் பலகையை வைத்தி ருந்தால், இந்தக் கிராமத் தின் நிலை என்ன?

நீ, சூத்திரன் - உனக்கு ஏது, ஏன் படிப்பு? என்றது இந்து மதம். நீயும் படிக்கலாம் என்பதோடு, ஏற்பாடும் செய்தது கிறித்துவம் - தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84136.html#ixzz37eK7hOqI

தமிழ் ஓவியா said...


சிபிஎஸ்சி பள்ளிகளில் செத்த மொழியான சமஸ்கிருத வார விழாவாம்!


புதுடில்லி, ஜூலை16- சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இணைந்துவரும் 15 ஆயிரம் பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா ஆகஸ்டில் கொண்டாடப்பட உள்ளது. இதன் மூலம் சமஸ்கிருதத்தை இளைஞர்களிடம் வளர்க்கலாம் என்பதுதான் இதன் பின்னணி.

30.6.2014 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சமஸ்கிருதம் இல்லாத இடங்களிலும், வெளிநாடுகளிலும் சமஸ்கிருத விழா கொண்டாடப்பட உள்ளது.

சிபிஎஸ்சி இயக்குநரகம் சார்பில் கூறும்போது, எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், சமஸ்கிருதம், கற்பிப்பதை வளர்க்கவும், கற்பதை ஊக்குவிக்கும் வகை யிலும் சிபிஎஸ்சி ஈடுபட்டுள்ளது. சமஸ்கிருதம், இந்தியக் கலாச்சாரம் இரண்டும் பிரிக்க முடியாதவையாக உள்ளன வாகும். பூர்வீகத்தைக்குறித்து அறியக்கூடிய வாய்ப்பு உள்ள மொழி சமஸ்கிருதமாகும்

முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போதுதான் சிபி எஸ்சி முதன்முறையாக இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/84144.html#ixzz37eKYjaGR

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டிலும் நரபலியா?



சேலம், ஜூலை 16_ சேலம் அருகே புதையல் எடுப்ப தற்காக பள்ளிக் குழந்தை களை கடத்தி நரபலி கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக கிராம மக்கள் மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் அலுவலகத் திற்குத் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கவுண்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் என 50-_க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-

பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-_ மாணவியர் மந் தைமேடு என்ற இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் பகு தியில் புதையல் எடுப்பதா கக் கூறி வெளியூர்களைச் சேர்ந்த சில நபர்கள் வந்து தங்கி உள்ளனர். அங்குள்ள ஒருவரின் வீட்டில் தங்கி இதற்காக யாகம் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

யாகம் முடிந்தவுடன் நரபலி கொடுக்கவும் திட்ட மிட்டிருப்பதாகக் கூறப்படு கிறது. இதற்காக எங்கள் பகுதியில் இருந்து பள்ளிக் கூடத்திற்கு சென்ற தாம ரைச்செல்வி, மகேஷ், சந் தோஷ், சக்திவேல் ஆகிய மாணவ_ மாணவிகளிடம் நைசாக பேசியுள்ளனர். அப் போது சாக்லேட், பிஸ்கட் தருகிறோம், எங்களுடன் வாருங்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனால் பயந்து போன சிறு வர்,-சிறுமியர் பள்ளிக்கூடத் திற்கு வேகமாக சென்ற போது அவர்களை துரத் திச் சென்று பிடிக்க முயற்சி செய்துள் ளனர்.

எங்கள் பகுதியில் தங்கி யாகம் நடத்துபவர்கள் சில குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களில் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அந்த நபர் களின் செயல்பாடு பள்ளி செல்லும் குழந்தைகள் மற் றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. எனவே, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் குழந்தைகளின் உயி ரைக் காப்பாற்றவேண்டும். இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்

Read more: http://viduthalai.in/e-paper/84141.html#ixzz37eKiGhef

தமிழ் ஓவியா said...


கர்மா - விதியை நம்பினால்...


கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

Read more: http://viduthalai.in/page-2/84145.html#ixzz37eL5l3lV

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் கங்காப் பிரவாக் பாதனம் என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835ஆம் ஆண்டு அரசாங்கம் ஆணை போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

புற்றுநோயை உண்டாக்கும் கங்கை நீர்


இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த நீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருள்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்ய அறிக்கை தெரிவித்துள்ளது.

நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய கங்கை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்ததாக என்சிசிஎம் தலைவர் டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் காணப்படும் நச்சுத் தன்மையானது புற்றுநோய் உள்பட பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!

புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின், ரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கையை 8.7.2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே, 14.2 சதவிகித பயணிகள் கட்டண உயர்வும், 6.2 சதவிகித சரக்குக் கட்டண உயர்வும் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்ததின்மூலம், 8000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்: சில புல்லட் ரயில் அறிவிப்பு, ரயில்வே பல்கலைக்கழகம் போன்ற வாணவேடிக்கை அறிவிப்புகளும், வழக்கமான முந்தைய அரசின்மீது புகார் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வருமானத்தில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவுள்ள நிலையில், (எஞ்சியது 6 காசுகளே) என்கிற நிலையில், இத்தகைய வினோத வித்தைகள் தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

இந்த ரயில்வே பட்ஜெட்டின்மூலம் அந்நிய முதலீடு - வெளிநாட்டவர் உள்ளே நுழைதல், ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதாகவும், துப்புரவுப் பணிகள் உள்பட பல பணிகளை தனியாரிடம் ஒப்பந்தங்களுக்கு (காண்ட்ராக்ட்) விடுவதன்மூலம், ரயில்வே துறை இனிவரும் 5 ஆண்டுகாலத்திற்குள், வெளியார் கம்பெனியாகவும், தனி முதலாளிகளின் வசமாகவும் ஆவதற்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இது பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று சொன்னாலும், பா.ஜ.க.வின் கொள்கை, முந்தைய காங்கிரசின் (மன்மோகன்சிங் தலைமையின்) உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கையிலிருந்து மாறுபடாதது என்பதால், இத்தகைய நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்க வேண்டியவர்களே ஆவர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (UPA) கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தால், விபத்துகள் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பொழுது, கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததைத்தான் நாங்களும் செய்துவருகிறோம் என்று கூறும் இன்றைய பி.ஜே.பி. ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த இந்த மிக முக்கியமான அறிவிப்பைச் செயல்படுத்த முன்வராதது ஏன்? இன்னும் சொல்லப்போனால், இந்த அதிமுக்கியமான பயணிகளின் உயிர்காக்கும் பிரச்சினையைக் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்தப் பட்ஜெட்டில் சன்னமாக நுழைந்துள்ள ஒரு திட்டம் திடுக்கிட வைக்கக்கூடியது _- மக்கள் தலையில் இடியை இறக்குவதாகும்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில்வே கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதன் பொருள் என்ன? வாரா வாரம், மாதாமாதம் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதுதானே! இது குழப்பமானது _- நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஆண்டுக்கொருமுறை கட்டணத்தை ஏற்றும்போதே எதிர்ப்புகள் வெடிக்கும் நிலையில், இப்படி டீசல், பெட்ரோல் விலை ஏறும்பொழுதெல்லாம் பயணக் கட்டணத்தை ஏற்றுவது என்பது கோமாளித்தனமானதாகும்.

இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான எடுத்துக்காட்டுபோலும்! வாரா வாரம் ஏலம் போடும் இந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் _- நிறைவேற்றப்பட சுமார் 1800 கோடி ரூபாய் தேவைப்படக்கூடிய நிலையில், யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல, வெறும் 700 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்? ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டாமா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போது மோடி அரசை மிகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அவரது கருத்து (ஸிமீணீநீவீஷீஸீ) தெளிவாக்குகிறது.

முந்தைய அரசு கட்டணத்தை உயர்த்தியபோதும், பல வசதிகள் அறிவித்தபோதும் இப்படிப்பட்ட மென்மையான, வரவேற்புப் பத்திரம் அவர் படித்ததில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்; 5 ரயில்கள் வாரத்தில் சில நாள்கள் மட்டுமே ஓடும்! மற்றபடி தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, தேவை என்பதை அவரவர்கள் கருத்துக் கேட்டு, கருத்திணக்கத்தை (Consensual Approach) முன்பே செய்தால், பல மாநிலங்களும் வளர வாய்ப்பு ஏற்படும். அந்த நிலை இல்லையே!

30 நாள்தானே என்ற சமாதானம் எவ்வளவு நாளைக்கு ஓடும்? முந்தைய அரசின்மீது பழி போடுவதும் எடுபடாது. எனவே, ரயில்வே பட்ஜெட் ஒரு கானல் நீர்தான்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கருத்து


குறைந்த நிலப்பரப்பில் குறைவான தொழிலாளர்களுடன் அதிக உற்பத்தி கிடைக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் தேவை. எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம், கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது போன்றவற்றிலும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
இப்போது இருக்கும் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களைப் பெயர்த்து வேறு இடங்களில் நடும் தொழில்நுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த இடைவெளியைக் களையவேண்டும்.

- பொன்ராஜ் வெள்ளைச்சாமி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்.

தங்களது குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழைக் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். அவ்வாறு தமிழர்களிடையே முதலில் தமிழ்ப்பற்று வளர்ந்தால்தான் பிறமொழிகளின் திணிப்பை எதிர்கொள்ள முடியும். -கவிப்பேரரசு வைரமுத்து

செல்பேசி, மின்-அஞ்சல், முகநூல் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவோர் அடையாளம் தெரியாத பெயர்களில் தங்களுக்கு வரும் தகவல்களைக் காண ஆர்வம் காட்டக்கூடாது. தகவல் தொழில்நுட்பத்தை நல்ல நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் சைபர் குற்றங்கள் குறையும். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் இணையதளத்தில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

- லத்திகா சரண், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர்

வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலக நேரிடும்போது அதற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நீதிபதிகளிடமிருந்து உண்மையான காரணத்தைக் கொண்டு வருவதற்காக ஊடகங்கள் பல்வேறு யூகங்களை வெளியிடுகின்றன. பின்னர் அந்த யூகங்களுக்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகும்போது இந்தக் காரணங்களால் விலகுகிறேன் என்று கூறுவது நல்லது.

- பாலி நாரிமன், மூத்த வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

பரமண்டல பாஷையா சமஸ்கிருதம்?

விண்வெளியில் உள்ள பிற கோள்களில் வசிக்கும் மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தையும் சீன மொழியையும் நாசா ஆய்வு மய்யம் தேர்ந்தெடுத்துள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

விண்வெளியில் ஒலியலைகளைப் பரப்பும் அமெரிக்கக் கோள்கள் சமஸ்கிருத மொழியில், யாராவது இருக்கீங்களா, நாங்க பூமியிலிருந்து பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்குமாம். அப்படித் தான் சொல்கிறது அந்தச் செய்தி!

உண்மையில் உலகிலுள்ள மொழிகளிலேயே சீனமும் சமஸ்கிருதமும்தான் கடினமான மொழிகள் என்கிறார்கள். ஆனால், இணையதளத்தில் வெளிவரும் செய்திகளில் சீனமும் சமஸ்கிருதமும் மிகமிக எளிமையாக இருப்பதுடன் கணினிப் பயன்பாட்டு மொழிக்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் பொய்யாகக் கூறப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தில் 248 எழுத்துகள் உள்ளன. சீன மொழியில் 10 ஆயிரம் எழுத்துகள் உள்ளன. சீன மொழியினை எழுத படிக்கத் தெரிய வேண்டுமென்றால் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் எழுத்துகள் வரை தெரிந்திருக்க வேண்டும். தற்போது அதிக அளவில் கணினிப் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம்தான் மிக எளிதான மொழி என்று கணினி நிபுணர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதம் என்ற வார்த்தையே நாசா இணையதளப் பக்கத்தில் இடம்பெறவில்லை. மேலும், பிற கோள்களில் வசிக்கும் மனிதர்களுடன் தொடர்புகொள்ள என்று தனியாக எந்த ஒரு மொழியும் இருப்பதாகத் தெரிவிக்கப்படவுமில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் உலவும் தேவர்களின் பாஷை என்று இங்கு அவிழ்க்கும் புளுகு மூட்டைகளை நாசாவையும் முன்வைத்து அவிழ்க்கப் பார்க்கிறது ஆரியம்! எச்சரிக்கையடைந்திருக்குமா நாசா?

பி.கு: இதே போன்ற போலி மின்னஞ்சல் மூலம் தான் ராமர் பாலம் என்ற கட்டுக்கதையும் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டது.

தமிழ் ஓவியா said...

உடல்நலனை பாதிக்கும் சாண எரிபொருள்

உலக அளவில் இந்தியா, சீனா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளதாகவும் அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அய்.நா. கூறியுள்ளது.

இந்தியாவில் சுத்தமான எரிபொருள் அனைவரும் வாங்கும் குறைவான விலையில் கிடைப்பதில்லை. 85 விழுக்காடு கிராமப்புற வீடுகளில் சாண எரிபொருளையே (பயோமாஸ்) பயன்படுத்துகின்றனர். 45 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சாணத்தைத் தட்டி அதனை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்துவதால் அதிலிருந்து காற்றைக் கடுமையாக மாசுபடுத்தும் அளவு புகை வெளியாகிறது. இதனால் வளிமண்டலத்தில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 300லிருந்து 3000 மைக்ரோ கிராம் அளவிற்கு காற்று மாசு அடைவதுடன், உடல் நலத்தையும் பாதிக்கிறது. எனவே ஸ்டவ்களை அதிகம் பயன்படுத்தச் செய்வது புகையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

பக்கவாதத்தை வென்ற மருத்துவப் புரட்சி



பக்கவாதம் என்றாலே இன்னும் கிராமப் புறங்களில் செய்வினை, மந்திரம் செய்து கை கால்களை யாரோ முடங்கச் செய்துவிட்டார்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது மருத்துவ அறிவியல்.

மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பசைச் சேர்ந்த லான் புர்கர்ட் என்பவர் நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். கடல் நீரினுள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் சிக்கி மண் குதிருக்குள் மாட்டிக் கொண்டார். நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை கால்களை அசைக்க முடியாத நிலைக்கு ஆளானார். 19 வயதில் இந்த நிலைக்கு வந்த லான் புர்கர்ட்டிற்கு தற்போது 23 வயது ஆகிறது.

அவரது மண்டை ஓட்டில் சிறிய துளையிட்டு 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த சிப் லான் புர்கர்ட் நினைப்பதை _ எண்ண ஓட்டத்தை ஒரு கணினியின் மூலம் மொழிபெயர்க்கும் தன்மையுடையது.

எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலைத் தூண்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னர் மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளும் கணினியிலிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயலாற்றக்கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலதுகரத்தில் பொருத்தப்பட்டது. கணினியுடன் இணைக்கப்பட்ட தூண்டியின் மூலம் அவரது கையின் தசைகளைச் செறிவுடன் தூண்டக் கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்தக் கட்டளைகளின்படிச் செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.
இந்த நவீன சிகிச்சையின் மூலம் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைச் செயல்படுத்த முயன்றபோது, திறந்திருந்த வலது கையினை முழுமையாக மூடி முஷ்டியாக்கவும், மூடிய கையினை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் செய்ததுடன், விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்து மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மூளை பாதிப்படைந்து உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலிருக்கும் பக்கவாத நோயாளிகளை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் திருப்புமுனையான மருத்துவப் புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூட மருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

திரைப்பார்வை : சைவம்

கி.தளபதிராஜ்

இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை.

சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்?
சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல?
சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா?
சாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால நாமதான் சாமிக்கு சேவலைப் படைக்கணும்.

சாமி தானம்மா நம்ம சேவலையும் படைச்சுது. அதையும் அவர்தானே காப்பாத்தணும்?
..........????

வெற்றிலையில் மை தடவி சேவலைக் கண்டுபிடிப்பதாக சொல்லும் சாமியாரின் பித்தலாட்டக் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

செட்டிநாட்டின் அழகு மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான இசை. கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழ் ஆங்கிலம் பேசும் காட்சி நெத்தியடி.

நாசரின் துணைவியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அமெரிக்கச் சிறுவன் வரும் காட்சிகளும், அவன் நடிப்பும் அருமை. படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே துல்லியமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

நாசரைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல் விளையாடியிருக்கிறார்.

அசைவம் என்பது அன்புக்கு எதிரானது; மரக்கறி உணவே (சைவம்) மனிதத்தன்மை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. யாகங்கள் எனும் பெயரால் எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்த பார்ப்பனியம் இன்று சைவப் போர்வை போர்த்தி நிற்கிறது.

உலகின் கோடிக்கணக்கான எளிய மக்களின் புலால் உணவுப் பழக்கத்தைக் கிண்டல் செய்யும், பொய் விளக்கம் தரும் பிரச்சாரங்களின் மத்தியில் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கிறது இந்த சைவம். ஹிட்லரும், மோடியும் சைவ உணவுப் பிரியர்களே என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அசைவம் அன்புக்கு எதிரானது என்பது புரட்டு என்றும், மனிதத் தன்மைக்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பின்மையும் புலப்படும்.

சைவம் பார்க்க! அசைவம் சாப்பிட!!

தமிழ் ஓவியா said...

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்



உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் 86 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள், 2015ஆம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோவின் பொது இயக்குநர் இரினா போகொவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேஷியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும் 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து 25 விழுக்காட்டினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்த வேண்டும் என்று இரினா போகொவா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.



தமிழ் வழிக் கல்வி படிப்போரை ஏளனமாகப் பார்க்கும் காலத்தில் தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெயசீலன்.

ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும் தமிழில் தேர்வு எழுதிச் சாதித்துள்ள இவர், கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள கிராமத்திலும், விவசாயத்தில் பட்டப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திலும் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த விவசாய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முதுகலைப் பட்டத்தைத் தமிழில் முடித்து முனைவர் பட்ட ஆய்வினையும் தமிழ்ப் பாடப் பிரிவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவது என்பது எல்லோரும் நினைப்பதுபோல சுலபலமானது அல்ல என்று ஜெயசீலன் கூறியுள்ளார். மேலும், தமிழ்மொழியில் படிக்க தனியான பயிற்சி மய்யங்கள் இல்லை. தமிழில் விடைகளை எழுதும் வாய்ப்பு இருந்தும் சில கலைச்சொற்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தமிழில் படிப்பது என்பது அதிக உழைப்பைக் கோருவது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மேலும் மூவர் தமிழில் படித்துத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இன்னும் நிறையப் பேர் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கான தரவுகளை அதிகம் கொண்டுவர வேண்டியது அரசு மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழிலேயே தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியில் மட்டும் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று 5.1.1994 அன்று உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்தச் சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் அதனை ரத்து செய்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர்,

தமிழகத்தில் 1956ஆ-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1976ஆ-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்தத் திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் ரெங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்பு, தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் பொதுவிதிகள்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதேபோல, தமிழே சென்னை உயர்நீதிமன்ற மொழியாகவும் மாறும் நாள் எந்நாளோ?

தமிழ் ஓவியா said...

உடம்புக்கு நல்லது மாற்று வழிகளல்ல மனவலிமையே முக்கியம்


உடம்புக்கு நல்லது

மாற்று வழிகளல்ல
மனவலிமையே முக்கியம்

புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றலாம் என்று விளையாட்டாக சொல்லி நம்மவர்கள் சிகரெட் பிடிப்பதுண்டு. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் புகை போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பல இடங்களில் பள்ளிச் சிறுவர்கள் புகைக்கும் கொடுமையையும் காண முடிகிறது. இச்சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி உயிர் இழப்பு ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏனோ விடுவதில்லை.

சிகரெட் பழக்கத்தை விடப் போகிறேன் என்று சொல்லும் சிலரும் புகையிலை சிகரெட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு மாற்று வழிதான் ஈ-_சிகரெட்.

ஆனால் ஈ_-சிகரெட் புகைப்பழக்கத்தை விடுவதற்கான வழி கிடையாது. அதை பயன்படுத்தி புகைக்கும் பழக்கத்திலுருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் நாங்கள் உள்பட பலர் என்கிறார்கள் பல முறை புகையை விட்டவர்கள்.

இந்த ஈ_-சிகரெட் ஒரு சரியான ஃபோர்ஜரி, நூறில் இரண்டு பேர்தான் இதை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரெட் புகைய ஆரம்பித்துவிடும். காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து மீளவே முடியாது. சாதாரண சிகரெட்டுகளால் புகைவழியாக உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை இந்த ஈ-_சிகரெட் திரவ வடிவத்தில் புகையின்றி கொடுக்கிறது. இதனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு குறைவது இல்லை. ஈ_சிகரெட்டை எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட அதிகம் பயன்படுத்தும் ஆவல் வரும். இதனால் ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும். அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தான் அதிகமாகும்.

எனவே புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை -சிகரெட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! என்கிறார் ஒரு முன்னாள் புகைஞர்.

புகையை நிறுத்த முயலுவோருக்கு ஊக்கம் அளிப்பதற்கென்றே முகநூலில் https://www.facebook.com/groups/whyquit/ என்ற குழுவில் குவிகிறார்கள் புகையை வென்றவர்கள்.

- தளபதி பாண்டியன்

தமிழ் ஓவியா said...

நினைவிருக்கிறதா?


பார்ப்பனர் நடத்திய நாடகமும் சங்கராச்சாரியார் எதிர்ப்பும்

1985 செப்டம்பரில் சென்னையில் ஒரு நாடகம்; நடத்தியவர் வெங்கட் என்ற பார்ப்பனர். நாடகத்தின் பெயர் உயிரில் கலந்த உறவே என்பதாகும்.

அதில் பார்ப்பனச் சமூகத்தின் அவலங்கள் தண்ணீர் அடிப்பது முதல் மட்டன் வெட்டுவது வரை சிலாகிக்கப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர் சங்கத் தலைவர் என். காசிராமன் உள்பட பார்ப்பனர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாடகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கல்கி இதழில் (29.9.1985) காசிராமனின் பேட்டிகூட வெளிவந்தது.

பாலசந்தர், பாரதிராஜா பிராமண சமுதாயத்தைத் தாக்கிப் படம் எடுத்திருக்கலாம்; இனிமேல் எவரும் அதுபோல் எடுக்க முடியாது. அவர்கள் படம் எடுத்த காலங்களில் பிராமணர்களுக்கென்று சங்கம் இல்லை. இனி அது நடக்காது என்றெல்லாம் திருவாளர் காசிராமன் கொடுத்த பேட்டி கல்கி இதழில் வெளிவந்தது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்கியில் (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அது இதோ!

ஞானபீடம் என்ற ஒரு நாடகம்

வெகுநாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது!

ஜாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!

மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேதவித்தான சங்கரனாகவும், மிராசுதாரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக் கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டு, சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவர் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ் டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.

இதுதான் கல்கி கூறும் தகவல்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கதுதான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம். ஜாதிப் பிரச்சினைபற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும் இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக்கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.

இப்பொழுதுதான் உச்சக் கட்டமான முக்கியக் காட்சி. இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.

நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் -_ இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடி உள்ளனர்.

பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கான்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.

நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதை எல்லாம் சொல்லுகிறது.

சங்கர மடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையே இல்லை.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கமுக்கமா வச்சிருககாங்க்....



ஹீரோ சான்ஸ் போச்சே!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர், மே 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது. அன்றே அது முறியடிக்கவும்பட்டது என்பது செய்தி. இதெல்லாம் முடிந்து ஒரு வாரத்தில் ஒரு தகவல் அனைவருக்கும் பரப்பப்பட்டது.

மோடி ஆப்கானில் இருந்த இந்திய வீரர்களிடம் போனில் பேசி கட்டளைகளைப் பிறப்பித்தார். இன்றே இவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். நான் உங்களுடன் இன்றிரவு விருந்துண்ண வருகிறேன் என்று உற்சாகமூட்டினார் என்பதாக தகவல்கள் வெளிவந்தன. பதவியேற்காத நிலையில் இப்படி ஒருவர் பேசமுடியுமா? இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என்றெல்லாம் தெரியாமல் இப்புரளி பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, தேர்தலெல்லாம் முடிஞ்சு போச்சு, இன்னும் உங்க ரீலை முடிக்கலையா நீங்க? என்று மோடியின் விளம்பரக் குழுவுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

அந்த அளவுக்கு தேர்தல் பிரச்சார புரளிகளைப் போல, அதன் பிறகும் கொடுத்த காசுக்கு மேல கூவிக் கொண்டிருந்தது அவரது டீம். மோடி வந்ததும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக சிங்களக் கடற்படையைத் துவம்சம் செய்வார் என்று சொன்னவர்கள், மோடியின் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறார். இந்நிலையில்தான் செவிலியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் வெளிவந்தது. உலகளவில் கவனம் பெறப்போகும் இந்த விவகாரத்தில் மோடியின் ஹீரோயிச இமேஜை உயர்த்துவது எப்படி, மோடியை சர்வதேச இராஜதந்திரியாகக் காட்டுவது எப்படி என்றெல்லாம் அதுக்குன்னு இருக்கும் 11 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. ஆனால், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளால் செவிலியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்ததும் சான்ஸ் போச்சே என்று புலம்புகின்றனராம் மோடியும், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுதும் கும்பலும்.