Search This Blog

13.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 11

இதுதான் வால்மீகி இராமாயணம்


(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


பத்தாம் அத்தியாயம் ஸ்வாமித்திரன் தென் திசையில் தன் மனைவி யோடு போய்த் தவமியற்றினான்.  அவனுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர்.  அதனோடு ராஜரிஷி பட்டமும் கிடைத்தது.  ஒருவன் மனைவியோடு காட்டில் தனியே இருந்து பிள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொண்டு செய்யும் தவம் தானென்னே!  அதுகண்டு வியந்து நான்முகன் தோன்றிப் பட்டங்கொடுத்ததும் மிக அழகியதே.  இவ்வாறு செய்பவன் நூறு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறா னென்றறிகின்றோம்.  கவுதம முனிவனும் அகலிகையிடம் சதானந்தனைப் பெற்றான்.  அவனே இவ்வரலாற்றை இராமனிடம் கூறுகிறான்.  கீழ்த் திசையையே விஸ்வா மித்திரன் முதன் முதல் அடைந்தானென்றும், அங்கே திலோத்தமையை இந்திரன் ஏவ, அவள் மையலில் முனிவன் அகப்பட்டானென்றும், அதனால் அவன் தவம் குலைந்ததென்றும் கம்பர் கூறுகிறார்.  திலோத்தமை என்ற தாசிப் பெண்ணைக் கூடுவதால் கெட்ட தவம், தன் மனைவியைக் கூடிப் பல பிள்ளைகளைப் பெறுவதால் கெடாதுபோலும்.  தவத்தைப் பற்றிய இவர்கள் அறிவு மிக நன்றே!  கோசிகனுக்கு ராஜரிஷிப் பட்டம் கிடைத்ததைக் கம்பர் திரிசங்கு சுவர்க்கத்தின் பின் கூறுகிறார்.

திரிசங்கு, குருவாகிய வசிட்ட முனிவனைத் தன்னிடம் வரவழைத்ததாக வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ, அவனே முனிவன் இருந்த இடத்திற்குச் சென்றதாகக் கூறுகிறார்.  வால்மீகி, கம்பர் இவர்களின் குரு சீடமுறை கவனிக்கற் பாலது.  குரு இருக்குமிடத்திற்கு மாணவன் செல்ல வேண்டியதே முறை.  ஆதலின், கம்பர் மாற்றிக் கூறினர் போலும்.  வசிட்டன் தன்னால் முடியாதென்று கூறினான் என்று வால்மீகி கூற, அதைக் கம்பர், சுவர்க்கத்திற்கு மாண்டுபோதி என்று கூறினதாகக் கூறுகிறார்.

திரிசங்கு வசிட்ட முனிவனுடைய பிள்ளைகளிடத்துப் போனதையும், அவர்கள் சபித்ததையும் கம்பர் கூறவே யில்லை.  வசிட்டனே சபித்தனனென அவர் கூறுகிறார்.  இது வால்மீகி கூறும் கதைக்கு மாறுபட்டது.  இனி கம்பர் கூறுகிறபடி வசிட்டனோ வால்மீகியோ கூறுமாறு அவன் மக்களோ திரிசங்கைச் சபித்தது சரியா என்பதை ஆராய்ந்தால், அது ஆச்சரியமாகவே இருக்கிறது.  இவனை விடுத்து வேறொருவனைக் குருவாக அடைய ஒருவன் விரும்பினால், அதற்காக அவனைச் சண்டாளனாதி என்று குரு சபித்தனனேல், அக்குருவின் அறிவும் பெருந்தன்மையும் இருந்தவா றென்னே!  இவர்கள் பெரிய முனிவர்களாம்!  இவர் களுக்குக் கடவுள் தோன்றி அருளினாராம்!!
திரிசங்கு சண்டாளனானவுடன், அவன் மந்திரிகள் அவனை விட்டுவிட்டு ஓடிவிட்டனராம்.  அதன்மேல் அவன் விஸ்வாமித்திரனை அடைகிறானாம்.  கம்பர் இவ்வரலாற்றை இன்னும் இழிவாகக் கூறுகிறார்.  அதாவது மன்னன் சண்டாளனாகி ஊரையடைந்த தாகவும், அவனைக் கண்டவரெல்லாம் சீ!  சீ! என்றிகழ்ந் தனரென்பதும், அதனால் அவன் திரும்பவும் காட்டையடைந்து கோசிகனைச் சந்திக்கிறானென்பது மாம்.  வால்மீகி முனிவர் வரலாறு, கோசிகன் மன்னனை இன்னானெனவறிந்து கொண்டு நடந்த வரலாற்றைக் கேட்கிறானென்பது.  இதற்கு மாறாகக் கம்பர் கூறுவது, சண்டாளா நீ யார்?  உன் வரலாறென்ன? என்று கேட்ட னனென்பது.

கோசிகன் செய்த யாகத்திற்கு வசிட்டன் மக்கள் வராதது பற்றிச் சினந்த அம்முனிவன், அவர்களைச் சாம்பலாக்கி எமனுலகடைந்து எழுநூறு பிறப்பெடுத்துப் பிணத்தையும், நாயையும் தின்னவேண்டுமென்று சபிக்கிறான்.  இம்முனிவர்களுடைய பெருங்குணந்தா னென்னே!  கம்பரோ, இதற்கு மாறாக அக்குமாரர் வேடர்களாகச் சபித்தனரெனவும் கூறுகிறார்.  மகோதய முனிவனடைந்த சாபத்தைக் கம்பர் கூறுகின்றிலர்.

கோசிகன் திரிசங்குக்காகப் படைத்த சுவர்க்கத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், அந்தச் சுவர்க்கத்தை ஏற்றுக் கொண்டு முனிவனைச் சாந்தப்படுத்தினரென வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ, இந்திரனும் நான்முகனும், சிவபெருமானும் ஏனையோரும் முனிவனையடைந்து, சாந்தப்படுத்தியதோடு, ராஜரிஷி என்ற பட்டத்தையும் தந்தனர் என்று கூறுகிறார்.  இதனால், அவர் (கம்பர்) ஆரிய வைணவரைத் திருப்தி செய்ய நினைத்தனர் போலும்.  இனி மேற்செல்லுதும்.
மேலும், இராமனிடம் சதானந்தன் கூறுகிறான்; விஸ்வாமித்திரன் மேற்குத் திசையில் தவம் செய்து கொண்டு இருக்கும்போது, அயோத்தியில் அம்பரீஷன் என்றொரு மன்னனிருந்தான்.  அவன் ஒருகால் ஒரு யாகம் செய்ய, அந்த யாகப் பசுவை இந்திரன் திருடிக் கொண்டு போய் விட்டான்.  அதனால் இருத்விக்குகள் அந்தப் பசுவைக் கொண்டுவர வில்லையானால் அநேக கோடி பாவம் வருமென்றும், இல்லையானால் ஒரு நரப் பசுவைக் கொண்டு வர வேண்டுமென்றும் கூறிவிட்டனர்.  அதனால் அம்பரீஷன் பலவிடங்களிலும் திரிந்து கடைசியாக குசீகன் என்ற முனிவனையடைந்து, அவன் பிள்ளைகளில் ஒருவனை வேண்டினன்.  அம்முனி வனுக்கு மூன்று பிள்ளைகள்.  அம்முனிவன் மூத்த மகனை விலைக்குத் தர மாட்டேனென்றான்.  அவன் மனைவி இளைய பிள்ளையைத் தாரேன் என்ன, நடுமகன் தானே வருவதாக ஒப்புக் கொண்டான்.

உடனே அரசன் முதியவனுக்கு, அநேக ஆயிரம் பசுக்களைக் கொடுத்து அப்பிள்ளையை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்தான்.  அந்தப் பையன் பெயர் கநச்சேபன்.  வழியில் கநச்சேபன் விஸ்வாமித்திரனைப் பார்த்துத் தன்னைக் காக்க வேண்டினன்.  விஸ்வா மித்திரன் இவனுக்கு மாமன்.  முனிவன் தன்னுடைய பிள்ளைகளை அழைத்து, அவர்களில் யாராவது ஒருவன் கநச்சேபனுக்குப் பதிலாகப் போக வேண்டினன்.  உடனே அவர்கள் தகப்பனைப் பார்த்து அகங்காரங்கொண்டு, நீர் தன் பிள்ளையைக் கொன்று அயலான் பிள்ளையைக் காக்க விரும்பினீர்.  இது நாயின் மாமிசத்தைத் தின்பதுபோலத் தகாத செயலாம் என்றனர்.  உடனே முனிவன் சினந்து, நீங்கள் வசிட்டனுடைய பிள்ளை களைப் போலாகி ஆயிரமாண்டு நாய் இறைச்சியைத் தின்று திரிக என்று சபித்தான்.  பின் கநச்சேபனுக்கு இரண்டு மந்திரங்களைக் கூறியனுப்பினான்.  மன்னவன் அப்பிள்ளைக்குச் சிவப்பு ஆடையுடுத்தி, பூபஸ்தம்பத்தில் கட்டி யாகத்தை நடத்தினான்.  முடிவில் அந்த மந்திரங் களை அப் பையன் சொல்ல, இந்திரன் தோன்றி அப் பையனைக் காப்பாற்றி யாகத்தை ஒப்புக் கொண்டான்.

பின் விஸ்வாமித்திரன் அங்கேயே ஆயிரமாண்டு தவம் செய்ய நான்முகன் தோன்றி, ரிஷி என்ற பட்டந் தந்தான்.  நெடுநாள் கழித்து அந்த மேற்குத் திசைக்கு மேனகையென்ற பெண் வந்தாள்.  அவள் ஒரு குளத்தில் நீராடும்போது, முனிவன் அவளைக் கண்டு மயங்கி வேண்ட, அவளும் அவனோடு கூடத் தங்கினாள்.  கவுசிகன் அவளோடு பத்தாண்டு கூடியிருந்தான்.  பின் அவனுக்குத் தான் காம விகாரத்தில் ஈடுபட்டிருப்பது பிழையென்பது தோன்றிற்று.  அதனால், அவன் மனம் வருந்தி அது தேவர்களுடைய கேடு என்று நினைந்து, அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அந்த மேன கையைச் சபியாமல் இனியசொற்கூறி அனுப்பி விட்டான்.  பின் அம்முனிவன் அவ்விடத்தை விட்டு நீங்கி, இமயமலையை யடைந்து அங்கே கவுசிகி நதிக்கரையில் தவம் செய்தான்.  ஆயிரமாண்டுகள் கழிந்தபின் நான்முகன் தோன்றி, மகரிஷி என்ற பட்டம் தந்தான்.  அதிலும் திருப்தியடையாமல் விஸ்வாமித்திரன் திரும்பவும் கடுந்தவம் செய்தான்.  அதனால், தேவர்களுக்கும் இந்திரனுக்கும் பெரிய பயமுண்டாய் விட்டது.  இந்திரன் தேவர்களோடு அரம்பையைப் பார்த்து, விஸ்வாமித்திரனிடம் போய் அவனை மயக்கும்படி கூறினான்.  அதற்கு அரம்பை அஞ்சி, முனிவன் கொடிய சாபந்தருவான், ஆதலால் என்னை அனுப்ப வேண்டாம் என்று வேண்டினள்.  அவ்வாறு கூறி நடுங்கி நிற்கும் அரம்பையைத் தேற்றித் தானும் மன்மதனும்  குயிலாக வந்து அவளுக்குத் துணை புரிவதாகக் கூறினன் இந்திரன்.  அவ்வாறே அரம்பை போய் முனிவனை மயக்க முயன்றாள்.  இந்திரன் குயிலாகக் கூவினான்.  அதுகண்ட விஸ்வாமித்திரன் சந்தேகித்து, உண்மையையுணர்ந்து அரம்பையை நோக்கி, நீ பதினாயிர மாண்டு கல்லாகக் கடவாய்; உன்னை ஓர் அந்தணன் விடுவிப்பான் என்று சபித்தான்.  உடனே அவள் கல்லாகிவிட்டாள்.   அதைக் கண்ட இந்தி ரனும் அவன்கூட வந்த மன்மதனும் பயந்து ஓடிவிட்டனர்.

பின்னர் கோசிக முனிவன் வட திசையை விட்டுக் கீழ்த்திசை சென்று தவமியற்றினான்.  இந்திரன் பல கேடுகள் புரிந்தும் முனிவன் சினங்கொள்ளாமல் தவம் புரிந்தான்.  ஒரு நாள் இந்திரன் ஒரு பிராமணனைப்போல் உருக்கொண்டு முனிவன் உண்ணும்போது அவ்வுணவை இரந்தான்.  முனிவன் தடையின்றி அதைக் கொடுத்து விட்டுப் பட்டினியிருந்தான்.  இவ்வாறு கடுந்தவம் செய்த விஸ்வாமித்திரனிடம் தேவர்களுடைய வேண்டு கோளால் நான்முகன் தோன்றிப் பிரம்ம ரிஷிப் பட்டம் தந்து வசிட்டனையும் அதை ஒப்புக் கொள்ளச் செய்தான்.
இவ்வாறு சதானந்தன் விஸ்வாமித்திரன் வரலாற்றை யெல்லாம் சொல்லி முடித்தான்.  அப்போது மாலைக் காலமாய்விட்டபடியால், சனக மன்னன் முனிவனிடம் விடைபெற்றுச் சென்றான்.  விஸ்வா மித்திரனும் இராம இலக்குவருடன் தாம் தங்குமிடம் சென்றான்.
இதுவரை யுள்ள வரலாற்றை ஆராய்வோம்.
                   -----------------------"விடுதலை” 11-07-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


கடவுளானாலும் சட்டம் ஒன்றுதான் நடைபாதைக் கோவில்களை அகற்றுக!



கருநாடக உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க தீர்ப்பு

பெங்களூர் ஜூலை 12-_ நடைபாதைக் கோயில் களை அகற்றலாம் கடவு ளானாலும் சட்டம் ஒன்று தான் என்று கருநாடக உயர்நீதிமன்றம் சிறப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்பு அகற் றுவதில், மனிதர்களானா லும் கடவுள்களானாலும் சட்டம் ஒன்றே என்று கருநாடக உயர்நீதிமன்றம் கருத்தறிவித்துள்ளது..


நடைபாதைகளில் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளால், குழந்தை களும் மற்றவர்களும் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. அத னால் ஏற்படும் விபத்து களில் அவர்கள் இறக்கும் நிலைகளும் உண்டாகின் றன. நடைபாதைகளில் நிறுவப்பட்டுள்ள சிலை முக்கியமானதா? அல்லது சிறுவர்களின் உயிர் முக்கியானதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப் பியுள்ளது. பெங்களூர் நகரில் உள்ள பெரும் பாலான நடைபாதை களை கோயில்களும் கடவுள் சிலைகளும் ஆக்ரமித்துள்ளதாக, பெங்களூர் பெருநகர மன்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத் துரைத்தபோது, தலைமை நீதியரசர் டி.எச். வகேலா, நீதியரசர் எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 09.07.2014 அன்று மேற்கண்ட கருத்தைக் கூறியது.

உயர்நீதிமன்றம் ஏற் கெனவே அறிவுறுத்தி யதன் பேரில் பெங்களூரு மாநகரத்தில் உள்ள நடைபாதைகளின் நிலை குறித்த பெரு நகர மன்ற ஆணையர் நடத்திய கள ஆய்வின் அடிப்படையில் பகுதிவாரியாகப் பிரிக்கப் பட்டு அவற்றுள் எவை அகற்றப்படக் கூடியன; எவை அகற்ற இயலாதன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக வழக்குரைஞர் கூறினார்.. கோயில்கள் போன்ற அகற்ற இயலாத ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் சிக்கல்கள் உள்ளதாக வழக்குரைஞர் கூறிய போது குறிக்கிட்ட நீதி யரசர்கள், அத்தகைய ஆக்ரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடை யாக இருப்பது எது? நடை பாதைகளில் உள்ள ஆக்ர மிப்புகளை அகற்றுவதில் மனிதர்களானாலும் கட வுள்களானாலும் சட்டம் ஒன்றே. நடை பாதை களில் நிறுவப்பட் டுள்ள சிலைகள் முக்கியமான வையா? அல்லது சிறுவர் களின் உயிர் முக்கியான வையா? என்று கேட்டனர்.

நடைபாதைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட உரிய அதிகாரி களுக்கு ஆணையிட வேண் டுமென்று ஜெனிபர் பிண்டோ, பிரியா ராவ் ஆகி யோர், கடந்த ஆண்டு தொடுத்த பொது நல வழக்கின் விசாரணையின் போது கருநாடக உயர்நீதி மன்ற நீதியரசர்கள் தெரி வித்த பொருள் பொதிந்த அறிவு நாணயம் மிக்க கருத் துரைகள் பெங்களூருக்கு மட்டுமன்று; இந்தியா வுக்கே பொருந்துவதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/83907.html#ixzz37JMESYuK

தமிழ் ஓவியா said...


கருநாடக நீதிமன்றத்தில் நியாயத் தீர்ப்பு

கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எச். வகேலா, எச்.ஜி. ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நடைபாதைகளில் ஆக்கிரமித்துள்ள கோவில்களை அகற்றிட வேண்டும் என்று ஜெனிபர் பிண்டோ, பிரியாராவ் ஆகியோர் கடந்தஆண்டு கருநாடக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

நடைபாதைப் பகுதிகளில் உள்ள கோவில் ஆக்கிரமிப்புகளால் குழந்தைகளும், பெரியோர்களும், பொது மக்களும் சாலை விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெங்களூரு மாநகரத்தில் நடைபாதைக் கோவில்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் எவை அகற்றப்படக் கூடியவை? எவை அகற்ற இயலாதவை? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு வழக்குரைஞர் கூறியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு, அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் உங்களுக்குத் தடையாக இருப்பது எது? நடைபாதைகளில் உள்ள கோவில்கள் முக்கியமா? அல்லது சிறுவர்களின் உயிர்கள் முக்கியமா? நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பிரச் சினையினை மனிதர்களானாலும், கோவில்கள் ஆனாலும் சட்டம் ஒன்றே இதில் விதி விலக்குக் கிடையாது - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கறாராகக் கருத்து கூறினார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது ஒன்றும் புதுத் தீர்ப்போ, ஆணையோ அல்ல. உச்சநீதி மன்றமே இதைவிட அழுத்தமாக தீர்ப்புக் கூறியுள்ளது.

பொது இடங்களில் அரசுக்குச் சொந்தமான இடங் களில் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காலி செய்வதில் தன் இயலாமையை பல நேரங்களில் அரசுகள் காட்டி வருகின்றன. இந்தக் கோவில்களில் எவ்விதப் புனிதமும் கிடையாது. பொதுப் பயன்பாட்டுக்கும் போக்குவரத்துக் கும் இடையூறாக உள்ள கோவில்களை அகற்றும்போது பிரச்சினைகள் உருவாகும் நிலை உண்டு என்றாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை அரசுதான் நிர்ணயிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்தத் தீர்ப்பு வெளி வந்தது. 2006இல்.

அதன் தொடர்ச்சியாக 2010 செப்டம்பரில் இதே உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்தது. பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர் (14.9.2010).

தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் நடைபாதைகளில் கட்டப்பட் டுள்ளன. அதன் எண்ணிக்கை 77,450. ராஜஸ்தானில் 58,253, குஜராத்தில் 15,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அதே நேரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ஒரு கோவில் கூடக் கிடையாது என்று அம்மாநில அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டதை நீதிபதிகள் நாகரிகமான மாநிலம் என்ற வார்த்தைகளைக் கூடப் பயன்படுத்தினர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அனுமதியின்றியும், பொது மக்களுக்கு இடையூறாக கோயில்களைக் கட்டுவது அநாகரீகம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தீர்ப்புக் கூறியிருப்பது தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிற திராவிடர் கழகத் தலைவரோ அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்பதை மறந்து விடக் கூடாது.

சட்டத்தின் முன் அனைவரும் அனைத்தும் சமம் என்பதை அரசுகள் உணருமா? ஊடகங்களும் இந்த வகையில் வலியுறுத்துமா?

காலந் தாழ்ந்தாலும் மாநில அரசுகள், உள்ளாட்சித் துறைகள் செயல்படுத்துமா? எங்கே பார்ப்போம்!

யாருக்காவது கோவில்களை இடிப்பதில் தயக்கம் அச்சம் இருக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கழகம் தயாரே! கலைஞர் சிலை திறப்பு விழாவின் போது கழகத் தலைவர் அன்னை மணியம் மையார் சொன்னதுதான் இது. (21.9.1975).

Read more: http://viduthalai.in/page-2/83923.html#ixzz37JMSrO9U

தமிழ் ஓவியா said...


தலையெழுத்தாம்


ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.
(குடிஅரசு, 6.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/83922.html#ixzz37JMb0hWG

தமிழ் ஓவியா said...


புரட்டு


பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.

கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல் வதுண்டு. நாட்டில் செய்யப்படும் வதுக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு.

அவ்வாறாகவே பஞ்சமர்கள் என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும், கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.

இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்று கிறோம்.

தீர்மானத்தைச் சபையின்முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்துவிடும் என்ற புரட்டுச்சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார்.

மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும், ஊக்கமும், அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாசிரமிகள்) வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.

கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்குண்டு கிடக்கும் காலத்திலே ஜாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமையடைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11. 05.1930

Read more: http://viduthalai.in/page-7/83875.html#ixzz37JNBvGjt

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடு களைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

Read more: http://viduthalai.in/page-7/83877.html#ixzz37JNfggpu

தமிழ் ஓவியா said...


தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்


தேவஸ்தான போர்டு நிருவாக கமிசனர்கள் நியமனமும், சர்க்கிள்கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங்களைப் பொறுத்த மட்டில் ஏற்பட்ட விசேஷம் என்னவென்றால் தேவதான போர்டு தலை வர்கள் அய்ந்து பேரும் பார்ப்பனரல்லாதவர்களாக நியமிக் கப்பட்டிருக்கின்றனர்.

அதோடு நீலகிரி ஜில்லா தேவதான கமிட்டிக்கு ஒரு ஆதிதிராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது.

தேவதானம் என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றி திரியும் சில ஆதிக்க கூலிகளுக்குமே உரியது. மற்றயோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கக் கூடாதென்ற கட்டுப்பாட்டைக்கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப் பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத் திற்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டி யாக முன்வந்து மேற்படி நியமனங்களைத் துணிகரமாக செய் துள்ள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய தைரியத்தையும் நிருவாகத்தையும் சுயமரியாதை உலகம் பாராட்டற்பாலது.

தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைத்தூக்க இரட்டை மெஜாரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும்படியான காரியங்கள் இந்தக் காலத்தில் வெகுதாராளமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 25.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83878.html#ixzz37JNocWXt

தமிழ் ஓவியா said...


கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு


கணிதவிய லில் 50 ஆண்டு களுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்க லான கோட் பாட்டுக்கு இந் தியாவைச் சேர்ந்த நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக் காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனி யல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணித வியல் மற்றும் தொழில்துறையியல் கூட்ட மைப்பு சார்பில் ஜார்ஜ் போல்யா-2014 என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில் சிறீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்.

குவாண்டம் மெக்கானிக்ஸ் உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடு களுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959 ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளி யிட்டனர். ஆனால், அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், அதற்கு நிகில் சிறீவாஸ் தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.

ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ் போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/83883.html#ixzz37JOH9xoF

தமிழ் ஓவியா said...

உறவினரும் கொள்கையும்!


தந்தை பெரியார் அவர்களின் தொண் டர்களாகிய நமக்குப் பல நேரங்களில் எதிரிகளை விட உற்றார் உறவினரே பெரும் இடர்ப்பாடு தருகின்றனர். இது தந்தை பெரியாருக்கே நிகழ்ந்தது தான் நமக்கெல்லாம் சிரிப்பு மூட்டும்.

ஈரோட்டிலே முனிசிபல் தலைவராக இருந்து ஆச்சாரியார் அவர்களே உமது சுகாதார அதிகாரியைச் சேலத்திற்குக் கொஞ்ச நாள் கடன் தரவும் என்று வேண்டிய அளவு நன்மைகள் செய்தவர். குடிநீர் வசதிக்காகத் தண்ணீர்த் தொட்டி கட்டி, குழாய்களில் தண்ணீர் வரும்படிச் செய்தவர்.அதில் தீட்டு கழுவித் தண்ணீர் பிடிக்கும் நிகழ்ச்சியை நாம் பெரியார் படத்தில் பார்த்தோம்.

கடைசிவரை தந்தை பெரியார் அவர்களின் தாயார் அந்தக் குழாய் நீரைப் பயன் படுத்தாமல் ஆற்றிலிருந்து நீர் பிடித்து வந்துதான் பயன்படுத் தினார்களாம்.அய்யாவும் கடைசியில் ஏன் என்று பிடிவாதமாகக் கேட்க, அம்மா அந்தத் தண்ணீர் சுத்தமில்லாதது என்றாராம்.

ஒன்றும் புரியாத பெரியார் எப்படிச் சுத்தமில்லை என்று கேட்ட தற்கு அம்மா அளித்த பதில் நம் ஒவ் வொருவருக்கும் கன்னத்தில் கொடுக்கும் அறை போன்று அந்தக் காலத்தை நினை வூட்டும்.

" குழாய் தண்ணீரெல்லாம் சரி தான். ஆனால் அந்தப் பம்பு சுவிட்ச்சைப் போடும் ஆள் கீழ்ச்சாதிக்காரர்" என்றா ராம்.

இன்று நமது உற்றார், உறவினர் செய்கைகள் பல நமக்குச் சங்கடத்தைத் தருவது நம்மில் பலருக்கு வெட்கமும், வேதனையும் தரக்கூடியது என்றாலும் நாம் தலைவர் பெரியாரைப் போலவே பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர கோபமோ,முரட்டு வார்த்தைகள் வரும் படியோ வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன படி "அவர்கள் சுபாவம் அது" என்று அவர் களுக்குத் துணிவில்லை, அறிந்தது அவ் வளவு தான் என்று எடுத்துக் கொண்டு அன்பு காண்பிக்க வேண்டுமே தவிர ஒதுங்கக் கூடாது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த எதிரிகளின் வார்த்தைகளைப் பற்றிக் கவலை படக் கூடாது.

எனது மகள் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமெரிக்காவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் வரவேற்பு வைத்திருந்தோம். அதை விரும் பாத எனது மாமியார் வரவில்லை. அவர்களைப் பார்க்கச் சென்ற மணமக்களைப் பார்க்கவும் இல்லை. இது வளர்ந்து எனக்கும் அவர்களுக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தையே இல்லை. ஆசிரியர் அய்யா கூட நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லியும் நான் போக வில்லை. எப்படி ஆசிரியர் அவர்கள் கொள்கைக்காக தனது மாமனாருக்குக் கொள்ளி வைக்க மாட்டேன் என்று மாமியார் கொள்ளி வைக்காவிட்டால் அவ்வளவு சொத்துக்களையும் கிருத்துவ மிசனரிக்கு எழுதிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும், தந்தை பெரியார் அவர்களும் " நெருப்புத் தானே, வைத்து விடு, அவ்வளவு சொத்துக்களும் போகப்போகின்றதே என்று சொல்லியும், வைக்க மறுத்துக் கடைசிவரை அவ ருடன் பேசாமலே இருந்தாரே அது மாதிரி நம்மில் பலருக்கு நேர்ந்துள்ளது.

எனது மாமியார் கடும் உழைப்பாளி. நல்ல அறிவாளி. அத்தனை குழந்தை களையும் நன்றாகப் படிக்க வைத்து அனைத்தும் செய்தவர்.இரண்டு பெண் களையும் மருத்துவர்களாக்கி மகிழ்ந்தவர் எனது மாமனார் தனது பிள்ளைகளை விடத் தனது உடன் பிறப்புக்களுக்குத் தான் எல்லாம் செய்கின்றார், என்ற நமது அனைவர்க்கும் பழக்கப்பட்ட தொடர்கதை வசனந்தான். அதுவே என் துணைவியாரும், அவரது தங்கையும் இரண்டு குடும்பங்களும் நம் குடும்பங்கள் தான் என்று மனமாரச் செய்ய வழி செய்து விட்டது.

தமிழ் ஓவியா said...


எனது அம்மா அமெரிக்காவில் பலகாலம் வாழ்ந்தாலும் கடைசியில் ஊருக்குத் தான் செல்ல வேண்டும் என் றார். ஏன் என்றால் இங்கே அமெரிக் காவிலே என்னைப் பெட்டியிலே போட்டு அனுப்பி விடுவாய். எனக்கு உற்றார், உறவினர் அனைவரும் வந்து கொட்டி, முழக்கித்தான் செல்ல வேண் டும் ,என்றார்கள். நான் அதெல்லாம் பார்க்க முடியாதே, காதிலேயும் விழாதே என்றேன். அதெல்லாம் எனக்குத் தெரியும், விழும் என்று சொல்லி, ஏன் மானமிகு ஆசிரியரின் இரங்கலுரை யையும் கேட்டுத் தான் சென்றார்கள். அவர்கள் கடைசியாக ஊருக்குப் போகப் போகின்றார்கள் என்பதால் உறவினர், நண்பர்கள் (அம்மாவுக்கு அமெரிக்கா வில் நிறைய நண்பர்கள் )அனைவரையும் வரச் சொல்லி பிரிவு விழா நடத்தினோம். அதில் பேரக் குழந்தைகளும், நண்பர் களும் ,ஒவ்வொருவரும் அப்பா, அம்மா விற்கு அவர்களைப் பற்றிச் சொன்னது அனைவரையும் அழ வைத்து விட்டது. இதை நான் பலரிடம் சொவதுண்டு. வய தானவர்கட்கு அவர்கள் இருக்கும் போதே விழாக்கள் நடத்த வேண்டும், சென்ற பின் சொல்வது அவர்களுக்குக் கேட்காது என்று.

ஒரு வழியாகச் சென்ற முறை ஊருக்கு வந்த பொழுது என் துணைவி யாரின் பெரு முயற்சியாலும், மாமியாருக் கும் கடைசிகால அச்சம் வந்ததாலும் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்து எனது அப்பா அம்மா படங்களுக்கு வருத்தமும், வாழ்த்தும் தெரிவிக்க உறவு மீண்டது. நிற்க முடியாமல், திருவெறும் பூர் பெரியார் மணியம்மை செவிலியர் பயிற்சி மாணவியர் உதவியுடன் நின்று அவரது கையாலேயே செய்த அற்புத மீன் குழம்பைச் சாப்பிட்டு வந்தேன். அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் அனை வரும் சென்று பார்த்து விடை பெற்றும் வந்தனர். அவர் விருப்பப் படியே எளிமையாக அவர் இறுதி நிகழ்வுகளும், படத்திறப்பும் நடந்தது. நமக்குப் பிடிக்காத மந்திரங்கள் நிகழ்வுகளும் அவர் விருப்பப் படி நடந்தது.

அடுத்து நமக்கெல்லாம் பெரிய இடர் ப்பாடு நமது குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இல்லத் திருமணங்கள். இதிலேயும் நாம் எவ்வளவு தான் மந்திரங்களின் பொருளை விளக்கிச் சொல்லி வெட்கப் பட்டாலும், இன்றும் பலர் அர்த்தமற்ற மத வழித் திருமணங் கள் நடத்துகின்றனர். அதில் நாம் பெண்ணின் பெற்றோர்கள் என்றால் கட்டாயம் மணமகன் இல்லத்தார்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. நான் சென்னையில் தங்கும் போது வசதிக்காக நியூ உட்லண்ட்சு விடுதியில் தங்குவேன்.அங்கு பார்க்க வந்த பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா வேல் சோமசுந்தரம் அவர்கள் பார்ப்பன விடுதி என்று காபி குடிக்க மறுத்து விட்டார். அவருக்கே அவரது பெயர்த்தியின் மணவிழா நடந்தது பெரும் இடர்ப்பாடாகி விட்டது. விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. இது நம்மில் பலருக்கு நிகழும் போது எதிரி களின் பேச்சுக்கள் பற்றிக் கவலையில்லை என்றாலும், நமது கொள்கையை நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கே செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் மகிழ்வைக் குறைத்து விடுகின்றது.

இதையெல்லாம் மானமிகு ஆசிரியர் அவர்கள் நமது கொள்கைக் குடும்பத் தினர்க்கே, எனக்கும் சேர்த்துத் தான் ,அறிவுரைகள், ஆறுதல்கள் வழங்கி அய்யா வழியில் "அவர்கள் சுபாவம்" ஆனால் எதிர் காலம் நமது தான் என்ற உறுதியைச் சொல்வார்கள். காலம் மாறித்தான் வருகின்றது. நாம் நமது கொள்கையைக் கடைப்பிடிப்போம், உற்றாரும் ,உறவுகளும் திருந்தும் காலம் வரும். அது வரை பொறுமை காப்போம், அவர்களிடம் அன்பு செலுத்துவோம், கோபம் தவிர்ப்போம்.

வாழ்க பெரியார். வளர்க பகுத்தறிவு.

- சோம.இளங்கோவன் (அமெரிக்கா)

Read more: http://viduthalai.in/page2/83871.html#ixzz37JOTrt85

தமிழ் ஓவியா said...


தபால் டெலிவரி! இல்லை!

தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும் பட்ட அரும்பாட்டின் காரணமாகவேதான் இன்றைக்குத் தமிழரினம் குறிப்பாக, ஆதி திராவிடப் பெரு மக்கள் மஞ்சள்குளிக்க முடிகிறது.

அய்யா அவர்கள் இயக்கம் காண்பதற்கு முன்பு இந்நாடு இருந்த நிலை இன்றைய இளைஞர் தலைமுறையினர் அறிந்திட வாய்ப்புகள் இல்லை. அதனாலேதான் அய்யா அவர்களது தொண்டின் மேன்மையை உணராது அரசியல் வெட்டுக்கிளிகளாகப் பச்சை கண்ட இடம் பறந்து குதிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

எங்கள் வில்லிவாக்கத்தை எடுத்துக் கொண்டால், உயர் ஜாதிக்காரர்கள் வசிக்கும் இடம் என்று கருதப்படும் சன்னதி தெரு மாடவீதிகள் பக்கம் ஆதித் திராவிடர்கள் நடந்து போகவே முடியாது. முதலாவது உலக யுத்தம் நடந்த போது, ரஜ்பட், ஈரான், பாக்தாத் முதலிய வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த ஆதிதிராவிடத் தோழர்கள் ஆவலோடு தங்கள் வீடுகளுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களை, சேரிக்குள் வந்தால் தீட்டுப்பட்டு விடும் என்று கருதி, தபால்காரன் ஆஞ்சநேயர் மண்டபத்தின் அருகே போட்டு விட்டுப் போய் விடுவான். அவன் போட்டு விட்டு வெகுதூரம் போனதற்குப் பின்னாலேயே அந்தத் தபால்களை வேகவேகமாக எடுத்து வருவார்கள்.

- பெரியார் பெரும் தொண்டர் வில்லிவாக்கம் அ. தியாகராசன் கூறிய தகவல் இது.

Read more: http://viduthalai.in/page2/83873.html#ixzz37JP4f1DN

தமிழ் ஓவியா said...


அறிவார்ந்த குறும்புகள் அறப்போர்களாயின

- மா.பால்ராசேந்திரம்

அகிலத்தோர் பண்ணிய குறும்புகள் போலல்ல அய்யாவின் இளமைக்காலக் குறும்புகள் அவை. அறிவுள்ள குறும் புகள். ஆன்மீகப் புரட்டுகளைப் புரட்டிப் போட்ட குறும்புகள். அறப்போர்களுக்கு வித்தாகிப் பயன் விளைத்த குறும்புகள்.

சின்ன மலர்வாய் சிரித்தபடிப் பால் குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே என்று சீராட்ட வேண்டிய சின்னஞ்சிறு குழந்தையைச் செவிலித்தாயிடம் வாரிக்கொடுத்தார் சின்னத்தாயம் மையார். தாய்ப்பாலின் வாடையின்றிப் பாட்டி வீட்டு ஆட்டுப்பாலை அருந்தி வளர்ந்தார் பெரியார். தம் அகவழகு கெடுமெனப் புட்டிப்பால் தந்தே பிள்ளை வளர்க்கின்றார் மகளிரெல் லாம். என்னே! கொடுமையிது. இதனால் தான் தாய், பிள்ளைப் பாசம் குறைகிற தென்பார் உளவியலாளர். ஆனால் அய் யாவோ இதற்கு எதிர்மறையாகக்காட்சி தந்தார். தமிழ்நாட்டு மக்களனைவரையும் தம் குழந்தைகளாகப் பாவித்துப் பரிவோடு அவர்தம் குறைகளை நீக்கிட அரும்பாடுபட்டார். பார்ப்பான் பால் படியாதீர் _ பார்ப்பானைப் பிராமணன் என்காதீர் என்றார். இந்த உணர்வே 1957 இல் உணவு விடுதிகளில் பிராமணாள் ஒழிப்புப் போராக மாறி வெற்றி ஈட்டியது.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கத்தோடு வாழ்பவர் உயர் குடிப்பிறப்பினர், ஒழுக்கக்கேடாய் வாழ்பவர் இழிகுடிப்பிறப்பினர். வள்ளு வத்துக்கு மாறாய்த் தமிழர் அனைவரும் இழிமக்களாய்க் கருதப்பட்டனர், ஜாதிக் குறியிட்டுப் புழங்கக்கூடாதவர்களாய் ஆக்கப்பட்டனர். திண்ணைப் பள்ளிக்குச் சென்ற சிறுவன் இராமசாமி, தன்னை யொத்த சிறுவர்களுடன் ஜாதி வேறு பாடின்றிக் கூடிவிளையாடி, பண்டங் களைப் பரிமாறி உண்டதற்காகக் காலில் விலங்கிட்டுத் தண்டிக்கப்பட்டார். பெற்றோரே இக்கொடுந் தண்டனையைத் தந்தனரென்றால் இந்து ஆச்சாரங்களில் அவர்கள் எந்த அளவிற்கு மூழ்கடிக்கப் பட்டார்கள் என்பது தெளிவாகிறது. அந்த வேகம்தான் 1924 இல் வைக்கத்தில் அறப்போராக எழுந்தது. பாலபருவத்தில் உடன் படித்த சிறார்களுக்காக இன்றோ, தன்மானமிழந்து, தடுமாறிடும் திராவிடர் தம் இனத்தார்க்காக சிறைப்பட்டார், விலங்கிடப்பட்டார், சாவுக்கு மரண ஓலை ஓதப்பட்டார். ஆனாலும், தீண் டாமைப் போரில் வெற்றி பெற்றார். 1957 இல் சாதி ஒழிப்புச் சட்ட எரிப்புப்போர் நடைபெற வழிவகுத்தார்.

மாணவப் பருவத்தில், நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுத முடியாது எனக்கு என்கிறார் பெரியார். அந்தப் பெரியாரின் பேச்சுக்கள் தாம் எழுத்துக்கள்தாம் இன்றைய அறிஞர் களுக்கு ஆய்வுக்குரிய பொருட்களாம். 1935 இல் திருச்சி அகிலத் தமிழர் மாநாட்டுத் தமிழறிஞர்கள் அய்யாவின் வாய்ச்சொல்லிற்காகக் காத்திருந்தனர். தை முதல் நாள் தான் தமிழர் புத்தாண்டு என அறிவித்துக் கொண்டாடினர்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

மறதியாய்க்கூடப் பிறர்க்குக் கேடு செய்யலாகாது என்ற நெறி விளங்கிய நாட்டில்தான் பார்ப்பனர்கள், தமிழர்க்கு நாளும் நினைந்து கேடு புரிந்தனர். எல்லாம் அவனவன் தலைவிதி என்று கல்லிடைக்குறிச்சிப் பார்ப்பனன் சொன்ன சொல்லுக்குச் சிறுவன் இராம சாமி தலைவணங்கினாரல்லர். சொன் னவன் தலைமையில் கடைத்தட்டியைத் தட்டிவிட்டு, உன் தலைவிதி என்னால் அடிபட வேண்டுமென்றிருக்கு என்று கேட்டிற்குக் கேட்டால் பதிலுரைத்தார். பார்ப்பனனாய்ப் பிறப்பதும், பறையனாய்ப் பிறந்து வதிவதும் தலைவிதிதான் என்பதை மாற்றிட 1951 இல் வகுப்புரிமைப் போராக ஆக்கி, கிளர்ச்சி செய்து, சட் டத்திருத்தம் செய்யச்செய்து மாற்றி யமைத்தார்.


தமிழ் ஓவியா said...

இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல எண்ணெய்க்கும் சப்புக்கொட்டி விரதமென்றிடுவார் அஃதொன்றும் நாட்டில் பெய்யும் மழைபோலல்ல, நலன் பலப்புரிந்திட விரதம் வீண்; முறியடிக்கப்பட வேண் டியது என்பது பெரியார் கருத்து. வீட் டார் விரதமென்றால், எனக்குப் புலால் உணவு வேண்டும் என்பது சிறுவன் இராமசாமி கோரிக்கை. இணையர் விரதமிருக்க, எலும்பைச் சோற்றில் புதைத்து விரதத்தைக் கெடுத்தார். உண்ணாவிரதம் சண்டித்தனம் என்றார் தலைவராய். மூடத்தனமான இச்செயல் களை முறியடிக்கத்தான் 1971 இல் சேலத் தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்தினார். தடுத்த இராமனுக்குச் செருப்படி கொடுத்து, திமுகவை அமோக வெற்றிபெறச் செய்து ஆளச் செய்தார்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைத்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தவக்கோலத்தில் தன்னை மறைத் துக்கொண்டு, தீச்செயல் புரிந்திடுவோர் கோயில்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது இளம் வயதிலேயே அய்யாவின் எண்ணம். அந்தக் கோவில் கொடிய வரின் கூடாரம். கள்ளர்களின் குகை. குச்சிக்காரிகளின் குடியிருப்பிடம். அங்கே செல்வதால் பணம் மட்டுமல்ல; மானம் மரியாதையையும் இழக்க நேரிடும் என்பது பெரியாரின் கருத்து. கோவி லுக்குச் செல்லாதீர் என்பதனைக் குடும்பத்திலிருந்து தொடங்கினார். நண்பர்களைக் காலிகளாக்கி இணையர் நாகம்மையாரின் பக்திக்கு முட்டுக் கட்டை போட்டார். கோவில் சிலைகள் கற்சிலைகளே. உண்மை இதுவென 1953 இல் விநாயகர் உருவத்தை உடைக்கும் போராட்டத்தை நடத்தி உலகிற்குக் காட்டினார். பல்லாண்டுகளுக்குப்பின் இன்றோ பலரும் அறிந்திடப்பக்தி வேட மிட்டுப் பார்ப்பனர்கள் கோவில்களில் ஆடிடும் காமக்களியாட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் கோவில்கள் ஜாதியைக் காத்திடும் இடமானால் எம்மக்களுக்கும் அவ்விடம் சொந்தமாக வேண்டுமென 1971 இல் கோயில் நுழைவு அறப்போரினை அறிவித்தார்.

இணையரின் தாலியைச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு ஊர் சுற்றியது. வாய்ப்புக் கிட்டியதால், கணவர் ஊரிலிருக்கையில் தாலி இருந்தாலென்ன? இல்லாவிட்டால் என்ன?

என நாகம்மைச் சிறுமியைப் பேச வைத்தது.

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?

ஊமை என்று பெண்ணை உரைக்கும் மட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு.

எனக்கொதித்தெழுந்தார் பெரியார். 1929 இல் முதல் சுயமரியாதை மாநாட் டிலேயே பெண்களுக்கு ஆண்களிட மிருந்து அனைத்து நிலைகளிலும் உரிமை வேண்டுமென்றார். தாலியில் லாச் சுயமரியாதைத் திருமணங்கள் நாளும் நடந்திடச் செய்தார்.
சிறுவன் இராமசாமியாய் இருந்து செய்த அன்றைய குறும்புகள் ஆன்மீகச் சம்பிரதாயங்களைச் சாடியுள்ளன. இன்றையச் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்துக்களாய் அமைந்தன அய்யாவின் குறும்புத்தனங்கள், இயக்கமாய், தலைவராய், பெரியாராய் நின்று அய்யா நடத்திய போராட்டங்கள், வெற்றிகள் எல்லாமே அவரின் இளமைக்காலப் பதிவுகளின் வெளிப்பாடுகள். பெரி யாரின் உள்ளக்கருத்துகள் தாம் வெடித்துச் சிதறிய மகரந்தங்களாய்த் தமிழ்நாடெங்கும் பட்டிதொட்டி யெல்லாம் பரவிப் புத்துணர்ச்சியைத் தமிழர்க்கு நல்கி வருகின்றதென்றால் மிகையன்று. பெரியாரியம் தொடரட்டும்!

Read more: http://viduthalai.in/page3/83882.html#ixzz37JPRnZaX

தமிழ் ஓவியா said...


மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?


- கி.தளபதிராஜ்

தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்? 1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர். "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.


தமிழ் ஓவியா said...

"நாடார் சகோதரர்களை உண்மை யான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தன மான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள். நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார். கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது. 1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.

திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்? எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன? தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது. மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?

1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.

தமிழ் ஓவியா said...


திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.

மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார். கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

Read more: http://viduthalai.in/page3/83884.html#ixzz37JQFXF9R

தமிழ் ஓவியா said...


தாய்வழி பாட்டனாரின் சொத்தில் தந்தையின் உரிமை என்ன? சட்டம் என்ன சொல்கிறது?




பரம்பரை சொத்துப் பங்கீட்டில், பல்வேறு சட்டசிக்கல்கள்இன்னும் புரிந்து கொள்ளப்படாமலேயே உள்ளன. இவற்றில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படாததே, பல்வேறு குடும்பங்களின் சொத்துப் பங்கீடு தொடர்பான வழக்குகள் அதிகரிக்க, முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் தந்தையின் பெயரில் உள்ள, அவரின் சுய சம்பாத்திய சொத்துக்கள், அவர் காலத்துக்கு பின் யார் யாருக்கு சென்று சேர வேண்டும் என்பது, அவரது விருப்பத்தை பொறுத்தது. ஆனால் பரம்பரை வழியாக, அவரது பெயருக்கு வந்த சொத்தில் இப்படி அவர் செயல்பட முடியாது. அந்த சொத்து தனக்குப்பின், யாருக்கு சேர வேண்டும் என்று சட்டம் சொல்கிறதோ, அதன் படியே செயல்பட வேண்டும்.

இதில் குறிப்பாக பரம்பரை, ஒரு பொண்ணுக்கு வரும் சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகிடும். அந்த மனைவி இறந்து விட்டால் அந்த சொத்துகள், அவரது கணவரின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதை அவர் யார் பெயருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். இது போன்ற சமயங்களில், அந்த கணவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டாலும், முதல் மனைவியின் முன்னோர் வாயிலாக வந்த சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகவே இருக்கும்.

இதில் மறுமணத்துக்கு பின் பிறக்கும் குழந்தைக்களுக்கும், அவர் அவர் பங்கு கொடுக்கலாம். சட்டம் இதை ஏற்கிறது. ஆனால் நடைமுறையில், முதல் மனைவியின் வாரிசுகள், இதை ஏற்பது அரிது. ஒரு வேளை மறுமணத்துக்கு பின் அவருக்கு குழந்தைகள் பிறக்காவிட்டால், முதல் மனைவியின் வாரிசுகள், தங்களுக்குள் பேசிவைத்து, சொத்தை பங்கிட்டுக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு அம்சமாக அந்த கணவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது முதல் மனைவியின் வாரிசுகள் சொத்து மீதான உரிமையைப் பெறுவர். இதுபோன்ற சொத்துகள், விற்பனைக்கு வரும்போது, அது, அப்போது, யார் வாயிலாக, தற்போதைய உரிமையாளருக்கு வந்தது. இதற்கு அடுத்து யார், யாருக்கு அதில் உரிமை உள்ளது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது என்கின்றனர், கட்டுமான வல்லுநர்கள்.

- குடிமக்கள், ஆனி/ஜூன் 2014

Read more: http://viduthalai.in/page3/83885.html#ixzz37JQmYImw

தமிழ் ஓவியா said...


சடங்குகளால் செல்லரித்துப் போன ஜாட்டுகள்!

மங்கள்சிங் காம்ப்ளே (31) இவர் மனீஷா சிக்கந்தர் மச்சாரே(21) என்பவரை ஜூன் மாதம் 15ஆம் நாளன்று திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்திற்கு வருகைபுரிந்த ஜாட் பஞ்சாயத்தார் திருமண சடங்கில் குறைபாடு உள்ளதாகக் கூறி அதற்கு அபராதமாக ரூ.150அய் செலுத்துமாறு மணமகன் தரப்பினரிடம் கூறி உள்ளனர். அபராதம் செலுத்தவில்லையானால், அந்தத் திருமணமே செல்லாது என்றும் பஞ்சாயத்தார் தெரிவித்துள்னர். மணமகன் மங்கள்சிங் காம்ப்ளே கூறும்போது, அபராதம் செலுத்தினால் தவறு நேர்ந்துள்ளதாக பொருளாகும் என்று அபராதம் செலுத்தமாட்டோம் என்று கூறிவிட்டோம். அப்போது மணமகனின் தந்தையிடம் பஞ்சாயத்தார் அபராதம் இல்லாமல் சுமுகமாக முடித்துக்கொள்ள வாய்ப்பு அளிப்பதாகவும் அதற்கு ரூ. 50ஆயிரம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

மாநிலம் முழுமையாக இதுபோன்ற ஜாட் பஞ்சாயத்தார் பல்வேறு காட்டுமிராண்டித்தனமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

கோல்ஹாப்பூர் பகுதியில் கஞ்சர்பட் என்கிற சமூ கத்தைச் சேர்ந்தவர்களின் திருமண விழாவில் பங்கேற்ற ஜாட் பஞ்சாயத்தார் சமூகத்தைவிட்டு வேறு சமூ கத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் செய்வதற்காக செய்ய வேண்டிய சடங்குகளை செய்யாமல் விட்டு விட்டதால் அந்தத் திருமணம் சட்டவிரோதத் திரு மணம் என்று கூறி அந்தத் திருமணமே செல்லாது என்றும் ஜாட் பஞ்சாயத்தார் தீர்ப்பாகக் கூறிவிட்டனர். அந்த தவறுக்குப் பரிகாரமாக ஜாட் பஞ்சாயத்தாரிடம் அபராதமாக ரூ.150அய் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளனர். மணமகன் தரப்பில் அபராதம் செலுத்த மறுத்துள்ளனர். அதனால் அந்தத் திருமணத்தையேச் செல்லாது என்று பஞ்சாயத்தார் கூறிவிட்டனர். மேலும், மணமகள் தரப்பினர் மிகவும் வறுமையில் இருப்ப தால், அவர்களைத் தள்ளிவைத்துவிடுவோம் என்று மிரட்டி, மணமகளிடமிருந்து, சடங்குகள் சரிவர நடை பெறவில்லை, ஆகவே, அந்தத் திருமணத்தை அவர் ஏற்கவில்லை என்று எழுதி வாங்கி உள்ளனர். ஆனால், மணமகளைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை.

இதனிடையே ஜூன் 24ஆம் தேதி அன்று காய்கறி அங்காடியில் கூடிய பஞ்சாயத்தார் அபராதம் செலுத் தினாலே போதும் திருமணம் செல்லும் என்று தெரிவித் துள்ளனர். மணமகன் காம்ப்ளே கூறும்போது, சட்டவிரோதத் திருமணம் என்று கூற ஜாட் பஞ்சாயத்தாருக்கு அதி காரம் இல்லை. ஆகவே, இதுகுறித்து காவ்பாக் காவல் நிலையத்தில் பஞ்சாயத்தார்மீது புகார் கொடுக்கப்பட் டது. 11மணிநேரம் காவல் நிலையத்தில் காத்திருந்தும் காவல்துறையினர் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தனர். அதேபோல் மணமகள் ஊரான இச்சல்கராஞ்சி காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


நாஷிக் அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி என்கிற அமைப்பின் தலைவர் கிருஷ்ணா சான்ட்குடே கூறும் போது, மகாராட்டிரத்தில் ஜாட் பஞ்சாயத்தாருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் வெளிவந்துள்ளபிறகு, பம்பாய் உயர்நீதிமன்றத்தில் 2013இன்படி மாநில அரசு ஒரு மனுவைத்தாக்கல் செய்துள்ளது. ஒரு மாதம் ஆகியும், இன்னமும் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-இல் மகாராட்டிர மாநில உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தனிநபர் மீதான சமூகப்புறக்கணிப்புக் குறித்த புகார் அளிக்கும்போது, பிரிவுகள் 503,34,153(அ), 383, 283லிருந்து 289வரையிலும் மற்றும் 120(ஆ) ஆகிய இந்திய தண்டனைச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளது. ஓராண்டில் இதுவரை 100 புகார் களை பெற்றுள்ளோம். ராய்காட்டில் மட்டும் 20 வழக் குக்கள்தான் (எப்அய்ஆர்) பதிவாகி உள்ளது.

குற்றப் பரம்பரையினர் என்று கூறப்பட்ட நாடோடி கள், நாடோடிப் பழங்குடிகளுக்கான தேசிய ஆணை யத்தின் தலைவர் பால்கிருஷ்ணா ரெங்கே கூறும்போது, 200 குற்றப்பரம்பரையினர் என்று கூறப்படும் பழங் குடியினர் சமூகம் உள்ளது. அவர்கள் பிறக்கும்போதே குற்றப் பரம்பரையினராக 1871 பிரிட்டிஷ் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டு, 1952ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

ஜாதித் துணைப்பிரிவுகளையும் சேர்த்து மொத்தத் தில் 1620 பழங்குடியினர் மற்றும நாடோடி சமூகத்தவர் உள்ளனர். அவர்கள் அனைவரிடையேயும் ஜாட் பஞ்சா யத்தார் உள்ளனர். அவர்கள் கடும் கண்காணிப்பில் உள்ளனர். மற்றவர்கள் சுதந்திரமாக உள்ளனர். சீர்திருத்தவாதிகள் மாநில அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். மகாராட்டிர மாநிலத் தில் ஜாட் பஞ்சாயத்தார் இல்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும் என்று விளக்கமாகக் கூறினார்.

காவல்துறையின் சார்பில் காவ்பாக் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் பி.ஏ.தேஷ்முக் கூறும்போது,ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவர் களுக்கு (பஞ்சாயத்தார்) தலைவர்களாக இருப்பார்கள் என்பதால், தொடக்கத்தில் அவை புகார்கள் அளிப் பவர்கள்மீதான தாக்குதலாகப் பார்க்கப்படவில்லை. தற் போது, பஞ்சாயத்தார் தலைவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று, அதன்மீதான நடவடிக்கைக்கு அரசுத்தரப்பு வழக்குரைஞரிடம் கருத்துக் கேட்க உள்ளோம் என்றார்.

கோல்ஹாபூரில் கான்ஜர்பட் வகுப்பினருக்கான பஞ்சாயத்தார் தலைவர் லால்சிங் மச்சேரே என்ப வரிடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர் ஒட்டு மொத்தமாக அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்துவிட்டார். இந்தக் குற்றச்சாட்டு எங்கள் சமூகத்த வர்களுக்கு மரியாதைக்குறைவை ஏற்படுத்துவதாகும். காம்ப்ளே குடும்பத்தினருக்கு அபராதம் ஏதும் விதிக்கப் படவில்லை என்று கூறினார்.

- பூனா மிர்ரர், 5-7-2014

Read more: http://viduthalai.in/page3/83886.html#ixzz37JRI7e72

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானம் - அஞ்ஞானம்


விஞ்ஞானம்: கிருஷ்ணகிரி சுண்டே குப்பம் பகுதியைச் சார்ந்த வேலப்பன் மகன் மதியழகன் (28) ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்குமிடத்தில் படுக்கைகளை சரி செய்யும் பணியில் பணியாற்றி வருகிறார். அவர் ஊருக்கு வரும்போது பழுதான செயற்கைகோள் செல்பேசியைக் கொண்டு வந்தார். ஊரில் பழுதை நீக்கி செயல்பட வைத்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கியூ பிரிவு காவலருக்கு கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிராமத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செயற்கைகோள் செல்பேசி பயன் படுத்துவது குறித்து ஜி.பி.ஆர்.எல் கருவி மூலம் தெரியவந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அஞ்ஞானம்: நாகர்கோவில் வடிவீசுவரம், அழகம்மன் கோவிலில் 29.6.2014 அன்று பலகோடி ரூபாய் செலவு செய்து மகாகும்பாபிஷேகம், யாரும் நடத்தாத முறையில் அதிக விளம்பரத்துடன் காலை 8.30 மணியளவில் நடந்தது. வடசேரியைச் சார்ந்த சி.இரத்தினம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிடும்போது கழுத்தில் உள்ள நாலேகால் பவுன் தங்க செயின் தாலியுடன் கூடியது. பெண் திருடர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளார்கள். அழகம்மாள் இன்று வரை திருடர்களை பிடிக்கவில்லை, செயினும் கிடைக்க வில்லை. என்ன மகிமை! - எஸ்.நல்லபெருமால் (வடசேரி)

Read more: http://viduthalai.in/page3/83889.html#ixzz37JRTVzFD

தமிழ் ஓவியா said...


இனி இம்மண்ணை ஆள்வது அரசப் பயங்கரவாதமே!


அடிப்படைக்கே அல்லாடும் கோடானு கோடி
மக்கள் வதியும் மண்ணில்மத
அடிப்படை வாதிகள் கையில் ஆட்சி;
மீண்டும் வேதகாலம் திரும்பும்
மக்கள் நாயகத்தின் பேரால் மதப்பயங்
கரவாதி பிடியில் இந்தியம்
சிக்கலைத் தீர்க்காமல் சீர்குலைவு செய்யும்
புஷ்யமித்திர சுங்கன் கூட்டம்!

பேராயக் கட்சியின் பித்தலாட்ட ஆட்சியைத்
துடைத்தெறிய எண்ணிய மக்கள்
ஆராய்ந்து பார்க்காமல் அவசரக் கோலத்தில்
அளித்த தீர்ப்பின் வெளிப்பாடு!
குரங்கு கையில் பூமாலை குரங்குப்
படைகளுக்குச் சொல்லவும் வேண்டுமா?
அரத்தக் களரியால் நாட்டை அமளிக்
காடாக்கத் துடிக்கிறது ஆரியம்!

இந்நாட்டுத் தேசியம் இந்து இந்தியை
உருஉள் ளடக்கமாய்க் கொண்டது
இந்நாட்டில் தேசிய இனங்களை ஒடுக்கியது
பார்ப்பன டில்லி வாலாக்கள்
மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துவந்த
மய்யஅரசை மக்கள் நிராகரிக்க
மாநில அரசுகளின் தயவில் கடந்த
முப்பது ஆண்டுகளாய் மய்யஅரசு!

மண்டல் குழுப் பரிந்துரையை வி.பி.சிங் மய்யஅரசில்
ஏற்றதால் ஆட்சியைக் கவிழ்த்தனர்
மண்டலுக் கெதிராய்க் கமண்டலம் தூக்கியோர்
பரிந்துரையை ஏற்றிட வைத்தது
தமிழரின் கனவுத் திட்டமாம் தமிழன்
கால்வாய்த் திட்டம் செயலாக்கம்
செம்மொழியாய்த் தமிழும் இன்னபிற மொழிகளும்
ஆனது மாநிலப் பங்கேற்பால்!

பார்ப்பன சனதாவின் எதிர்பாரா வெற்றியால்
பார்ப்பனர் உள்ளங் குளிர்ந்தது!
பார்ப்பனர் பண்ணையம் ஏற்கெனவே கேட்பா
ரில்லை; ஆட்சி அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ். கட்டுக்குள்! இவ்வாட்சி எந்தத்
திசையில் பதவியேற்பில் ராசபக்ஷே!
பார்ப்பனர்க்குக் கொண்டாட்டம் திண்டாட்டம்
பார்ப்பன ரல்லாத மக்கட்கே!

மக்கள் நலத் திட்டத்தை மாநிலத்தை யாளும்
செயா, ராமன்பேரால் முடக்கினார்
மக்கள் நலனைவிட மக்கள் விரோத
இந்துவியத் திட்டம் செயலாக்கம்
மய்ய மாநில அரசுகளின் தலைவர்கள்
மதவெறிச் சிந்தனையில ஊறியவர்
அய்ந்தாண்டுக் காலம் இம்மண்ணை ஆள்வது
இனி அரசப் பயங்கர வாதமே!

- கவிஞர் இனியன், திருச்சி-13

Read more: http://viduthalai.in/page3/83887.html#ixzz37JRcPwhi

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தீர்த்தம் எத்தகையது?


பம்பை நதியில் சேரும் அசுத்தங்களால் நீரில் நோய்க் கிருமிகள் அபாய நிலையைவிட மிக அதிக அளவில் உள்ளன என கேரள மாநில சுற்றுச்சூழல் துறையினர் எச்சரித்துள்ளனர். சாதாரணமாக 100 மி.லிட்டர் நீரில் 500 கோலிபாம் கிருமிகள் வரை, இருக்கலாம் இதுவே சற்று கடுமையான நோய்களை உண்டாக்கும் அளவாகும். சில தினங்களுக்கு முன்னர் பம்பை நதியில் 100 மி.லி. நீரில் 3000 அளவு கோலிபாம்கள் இருந்தன.

தற்போது பம்பை நதியில் குறைந்த அளவு நீர்வரத்து இருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்காக வலியானை வட்டம் அருகே உள்ள நிரந்தர தடுப்பணை மதகுகளை அடைத்து வைத்துள்ளனர். பம்பை திரிவேணி சங்கமத்துக்கு மேலே மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட இப்பகுதிக்கு மேலே சென்று அறுசெழிக்குழி ஆற்றில் குளித்தும், துணிகளைத் துவைத்தும் அசுத்தப்படுத்துகின்றனர்.

ஹக்கி ஆற்றின் கரையில் பேருந்து நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வரும் பக் தர்கள் கழிவறைகளைப் பயன்படுத்தாமல் ஆற்றங்கரைகளை அசுத்தப்படுத்துகின்றனர். மேலும், சிறியான வட்டம் அருகே நுனுஞான் ஆற்றங்கரையில் உள்ள விரிகளில் தங்கியுள்ள பக்தர்கள் இந்த ஆற்றைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின் றனர். பலர் சமையல் செய்து சாப்பிட்டபின் எச்சில் இலை மற்றும் கழிவுகளை ஆற்றில் போடுகின்றனர்.

செழிக்குழி, ஹக்கி நுனஞான் ஆறுகளில் வரும் சிறிய அளவிலான நீர் பம்பையில் சேருகிறது. மொத்த நீரும் தேக்கி வைக்கப்பட்டு தடுப்பணைக்கு மேலே வழிந்தோடுகிறது.
பக்தர்கள் குளிக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் துறையினர் செவ்வாய்க்கிழமை நீரை ஆய்வு செய்தனர். அப்போது 100 மி.லிட்டர் நீரில் 5000 கோலிபாம் கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் துறை யினர், குடிநீர் எடுக்கும் பகுதி மற்றும் அசுத்தமாக்கப்படும் பகுதிகளில் அசுத்த மாக்கப்படுவதைத் தடுக்கவும், பம்பை நீரை சுத்தம் செய்யவும் கோரியுள்ளனர்.

நன்றி: தினமணி நாளிதழ் நாள்: 7.1.1999

Read more: http://viduthalai.in/page3/83891.html#ixzz37JRqODDV

தமிழ் ஓவியா said...


அன்று விடுதலை வெளியிட்ட சவால்!

சென்னையைச் சார்ந்த எஸ்.ஆர்.எஸ். சர்மா என்ற பார்ப்பனர் பாதரசத்தைப் பயன்படுத்தி சிவலிங்கம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபற்றிதினமணி ஏடு வெளியிட்டி ருக்கும் செய்தி இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.

இந்த திட்டத்தில் இறங்குவதற்கு முன் இந்த பார்ப்பனர் காஞ்சி சங்கராச் சாரியாரை சந்தித்து ஒரு சிறிய பாதர சலிங்கம் ஒன்றை அவரிடம் கொடுத்து - _ ஆசிபெற்றுக் கொண்டார். பிறகு - சிவலிங்கம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் இதற்கு 60 கிலோ எடை யுள்ள பாதரசம் தேவைப்பட்டது. இதில் 35 கிலோ மெக்சிகோவிலிருந்து வரவ ழைக்கப்பட்டது இதற்கு ஒரு லட்சம் நன்கொடையாகப் பெறப்பட்டது. அந்த பார்ப்பனர் தன்னுடைய மந்திர சக்தி மற்றும் தியானத்தின் மூலம் திரவ வடிவில் இருந்த அந்த பாதரசத்தைக் கெட்டியாக்கினார்.

மகாசிவராத்திரி அன்று இதை 27 செ.மீ. உயரமுள்ள லிங்கமாக அவர் உருவாக்கினார்.

100 டிகிரி உஷ்ணம் கொண்ட ஒரு பாத்திரத்தில் 5 நாட்கள் இதை வைத்து மந்திரங்களை ஓதி, அதில் இருந்த உலோகங்களை அகற்றினார்.

பிறகு, இதைப் புனிதப்படுத்த தமஷ்ட்ரகராண ருத்ர ஹோமம் நடத்தினார். இந்த லிங்கத்தை பிர திஷ்டை செய்வதற்கு முன் அதற்கு சக்தி கொடுக்க ஆருத்ரா ஹோமம் செய்யப் போகிறார்; இதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்
இவ்வாறு தினமணி ஏடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

பித்தலாட்டம்: பாதரசத்திலிருந்து _ சிவலிங்கம் உருவாக்க மந்திர சக்திகளும் யாகங்களும் கை கொடுத்தன என்றும் இப்படி தயாரிப்பது ஒரு அபார சாதனை என்றும் பார்ப்பன ஏடுகள் எழுதியிருப்பது (உண்மைக்கும், விஞ்ஞானத்துக்கும் எதிரான, ஒரு பித்தலாட்டம் என்பதை, ஒரு விஞ்ஞானி சவால் விட்டுக் கூறியிருக்கிறார்.)

இதுபற்றி அந்த விஞ்ஞானியிடம் நாம் கேட்டபோது -_ அவர் கீழ்க்கண்ட வினாக்களை முன் வைத்தார். 1. பாதரசத்தை திடப் பொருளாக்க மந்திர சக்தியும் தியானமும் பயன் படுத்தப்பட்டது என்று யாரிடம் கதை விடுகிறீர்கள்? பாதரசம் இரும்பைத் தவிர மற்ற எல்லா உலோகங்களுடன் சாதா ரண வெப்ப நிலையிலேயே கூடி திடப் பொருளாக மாறக் கூடியது என்பது அடிப்படை விஞ்ஞானம்; இந்த பொற் கொல்லர்கள், தங்கத் தூள்களை சேகரிக்க பாதரசத்தைப் பயன்படுத்துகின்றனர். இது சாதாரணமாக அன்றாடம் பொற்கொல்லர்கள் செய்து வரும் தொழில்! ஆனால் ஒரு பார்ப்பனர் சிவலிங்கம் செய்து விட்டார் என்றவுடன் அதற்கு இப்படி ஒரு போலிப் பெருமையை ஏற்படுத்துவதா?

2. திரவ நிலையில் இருக்கும் பாதர சத்தை திடப் பொருளாக மாற்ற, மந்திர சக்தியோ யாகமோ பயன்படாது; சாதா ரண துத்தநாகத்தூளை சேர்த்தாலே போதும் திடப் பொருளாக மாறி விடும் இதுதான் விஞ்ஞான உண்மை! இப்படி விஞ்ஞான முறைகளைப் பின்பற்றாமல் வெறும் மந்திரத்தால் மட்டுமே அந்த பார்ப்பனர் பாதரசத்தை திடப் பொரு ளாக பொது மக்கள் முன்னிலையில் மாற்றிக் காட்டத் தயாராக இருக்கிறாரா? சவால் விட்டுக் கேட்கிறோம்!

3. 100 டிகிரி வெப்ப கொதி நீரில் கொதிக்க வைத்து பாதரசத்தில் உபரியாக இருந்த பாதசரம் ஆவியாகி விட்டதாம்? காதிலே பூ சுற்றுகிறார்கள்! 100 டிகிரி வெப்பத்திலே பாதரசம் ஆவியாகப் போய் விட்டது என்று சொன்னால், விவரம் புரிந்தவர்கள் கை கொட்டித்தான் சிரிப்பார்கள்! இந்த வாதப்படி பார்த்தால் -_ தெர்மா மீட்டர் 100 டிகிரிக்கு அதிக வெப்பத்தைக் காட்டினால் உடனே பாதரசம் ஆவியாகப் போய் விடும் என்கிறார்களா? அப்படியானால் தெர்மா மீட்டரை இனி மேல் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான்!

4. உலகத்திலேயே மிகவும் அரிதாக வரும் பொருள்களில் பாதரசமும் ஒன்று வளர்ந்துவரும் விஞ்ஞானப் புதுமை களுக்குப் பயன்படக் கூடிய இந்த அரிய பொருளைப் பயன்படுத்தி சிவலிங்கம் செய்கிறார்கள் என்றால் இப்படிப்பட்ட வீண் விரயங்கள் தடுக்கப்பட வேண் டாமா?

இந்த மோசடிச் செய்திகளைத் தந்த, அந்தப் பார்ப்பனரானாலும் --_ அவருக்கு ஆசீர்வாதம் தந்த சங்கராச்சாரியானா லும், அதை வெளியிடுவதில் அற்ப மகிழ்ச்சி காணும் பார்ப்பன ஏடுகளானா லும் விடுதலை சார்பில் அனைவருக்கும் சவால் விட்டுக் கேட்கிறோம், துணி விருந்தால் இந்தச் சவாலை ஏற்கட்டும்.

வெறும் மந்திர சக்தியால் இவைகள் நடந்தன என்பதை நேரடியாக நிரூபித்துக் காட்டத் தயாரா?

மந்திர சக்தி எதுவும் இல்லாமல் கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்களே - அந்த சிவலிங்கத்தை செய்து காட்டவும் தயாராக இருக்கிறோம், இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்த பார்ப்பனர் தயாரா?

-விடுதலை 23.7.1983

Read more: http://viduthalai.in/page8/83898.html#ixzz37JSfTajF

தமிழ் ஓவியா said...


பேரீச்சம்பழம்


தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழவழப்பாகவும் இருக்கும். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page8/83899.html#ixzz37JSrHheu

தமிழ் ஓவியா said...


ஆபாச வீடியோவில் சிக்கிச் சிறை சென்ற சாமியார் நித்யானந்தா கருநாடகத்தை விட்டு வெளியேற வேண்டும் - கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


பெங்களூரு ஜூலை 13- ஆபாச வீடியோவில் சிக்கிச் சிறை சென்ற சாமியார் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி, பெங்களூரு அருகே பிடதியில் உள்ள அவரது ஆசிரமம் முன், கன்னட அமைப்பினர் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூரு அருகே, ராம்நகர் மாவட்டம், பிடதியில் 'தியான பீடம்' என்ற பெயரில் நித்யானந் தாவின் ஆசிரமம் உள்ளது.

இங்கு சனிக்கிழமை குரு பூர்ணிமா சிறப்பு பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கன்னட அமைப் புகள் எதிர்ப்பு தெரிவித் தன. பெங்களூரு -மைசூர் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ. தூரம் வைக்கப் பட்டிருந்த (பிளெக்ஸ்) பேனர்களை கன்னட அமைப்பினர் வெள்ளிக் கிழமை தீயிட்டு கொளுத் தினர்.

கன்னட அமைப்பு களின் எதிர்ப்பை மீறி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிடதி ஆசிர மத்தில் குரு பூர்ணிமா பூஜை தொடங்கியது. இதனிடையே கன்னட சலுவளி கட்சி, கன்னட நவநிர்மாண் சேனை, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்பு களை சேர்ந்த 100_-க்கும் மேற்பட்டோர் பிடதி பேருந்து நிலையத்தில் இருந்து நித்யானந்தாவின் ஆசிரமம் நோக்கி ஊர் வலமாக சென்றனர். பின்னர் ஆசிரமத்துக்குள் நுழைய முயன்ற அவர் களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அனை வரும் ஆசிரமம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நித்யானந்தா பேனர்களை அவமரி யாதை செய்தும், தீயிட்டு கொளுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து கன்னட சலுவளி கட்சி யின் மாநில தலைவர் மது கவுடா கூறும்போது, ஆபாச வீடியோவில் சிக்கி சிறைக்குச் சென்ற சாமியார் நித்யானந்தா, இந்து மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வரு கிறார்.

ஆசிரமம் நடத்துவ தாக கூறி கோடிக்கணக் கில் பணம் வசூலித்து பல குடும்பப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார். அவர் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து அவரை சிறை யில் அடைக்க வேண்டும். அவரது ஆசிரமத்துக்கு கருநாடக அரசு உடனே சீல் வைக்கவேண்டும்.

நித்யானந்தா கருநா டகத்தை விட்டு வெளி யேற வேண்டும். இல்லா விட்டால் நாங்கள் அவரைத் துரத்துவோம் என்றார். இந்தப் போராட்டம் காரணமாக சனிக்கிழமை மாலை பிடதியில் நடைபெற இருந்த நித்யானந்தாவின் ரத ஊர்வலத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83987.html#ixzz37LqsVynv

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர்கள் என்றும் வெற்றியாளர்கள்....!


ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரத்தினைச் சார்ந்த தோழர் பகுத்தறிவாளர் செல்வபாண்டியன் அவர்தம் குடும்பத்தினர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் எமரால்ட் ஒளிவண்ணன் அவர்கள் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் இருந்தார் (9.7.2014, இரவு 8 மணி).

செல்வபாண்டியன் அவர்கள் உலகப் புகழ் பெற்ற மெல்பெர்ன் ஸிமிவிஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பேராசிரியராக பணி புரிகிறார். சமீபத்தில் இப்பல்கலைக்கழகம், சிறந்த பேராசிரியர்கள் என்ற வகையில் செல்வபாண்டியன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.

அவரது மகன் எழிலன் பொறி யியல் துறை மற்றும் மேலாண்மை துறை இவற்றில் ஒரே நேரத்தில் பயின்று பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவ ராக தேர்ச்சிப் பெற்று விருது வாங்கியவர். செல்வ பாண்டியன் அவர்களது வாழ்விணையர் சங்கமித்திரை கணிதப் பேராசிரியராக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். மகன் எழிலன் அவர்தம் வாழ்விணையர் சாருபிரபா இருவரும் சமீபத்தில் புதுச்சேரியில் மிக எளிமையான முறையில் சுயமரியாதைத் திருமணம் செய்துக் கொண்டனர்.

செல்வபாண்டியன் அவர்களது தந்தையார் திரு. சே.ப.வெங்கடேசன் அவர்கள் வேலூரில், அன்னை ஈ..ரா.மணியம்மையாரிடம் பெரியார் பெருந் தொண்டர் பட்டம் பெற்றவர். மூன்று தலைமுறையாக தந்தை பெரியார்தம் கொள்கைகளைப் போற்றி பின்பற்றி வரும் இக்குடும்பத்தினர் நம் பாராட்டுக்குரியவர்கள்.

பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள் என்றும் சோடை போனவர்கள் அல்லர், பெரும் சாதனை யாளர்கள் என்பதற்கு இவர்தம் குடும்பம் இன்னொரு எடுத்துக் காட்டு.
ஆசிரியர், வாழ்த்துகளை தெரிவித்தார். சிறிது நேரம் ஆசிரியரிடம் உரையாடிச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/83970.html#ixzz37LtKmExJ