Search This Blog

10.7.14

இந்து ராஜ்ஜியத்துக்கு அடிக்கல்லா?


இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம், ராம ராஜ் ஜியம் அமைப்போம் என்று சொல்லி வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவுடன் அதற்கான ஆயத்த வேலைகளில் அதற்குள்ளாக அவசரம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

பி.ஜே.பி. ஆளும் சத்தீஸ்கரில் அவர்கள் மொழியில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர்.

அம்மாநிலத்தில்  பஸ்டர் மாவட்டத்தில் உள்ள 50 கிராமங்களில் இந்துக்களைத் தவிர பிற மதத் தவர்கள், குறிப்பாகக் கிறித்தவர்கள் நுழைவதற்கும், மதப் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதாம். இதனை வெளிப்படையாக பஸ்டர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் சுரேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இந்து மத திருவிழாவுக்குக் கிறித்தவர்கள் நன்கொடை அளிக்க மறுத்த நிலையில், இது தீவிரத்தன்மை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
நன்கொடை அளிப்பதும், அளிக்காததும் தனி மனித உரிமையைச் சார்ந்ததாகும். அது நன் கொடையே தவிர வன்கொடையல்ல.

ஒரிசா மாநிலத்தில் தொழுநோயாளிகளுக்குத் தொண்டூழியம் செய்து வந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58), அவருடைய இருமகன்களான பிலிஸ் (வயது 9), திமோதி (வயது 6) ஆகியோரை ஜீப்பில் வைத்துக் கொளுத்திய கொடியவர்கள் ஆயிற்றே (23.1.1999).

தான் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பையும் அலட்சியப்படுத்தி எல்.கே.அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? பஜ்ரங்தள்காரர்கள் மிகவும் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள் அவர்கள் இந்தக் கொலையைச் செய்திருக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லையா?

பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சேர்ந்த தாராசிங் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தண் டிக்கப்பட்டாரே!

குஜராத்தில் டாங்ஸ் மாவட்டத்தில் சர்ச்சுகளைக் கொளுத்தியதோடு வெறி நோய் அடங்கிவிடாமல், பைபிள்களைக் கொளுத்தியவர்கள் யார்?
நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி - மத மாற்றம்பற்றி மக்கள் மத்தியிலே  தேசிய விவாதம் எழுப்பப்படவேண்டும் என்று சொன்னாரா, இல்லையா? இதன் பொருள் என்னவாம்? டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் தாக்கப்பட்டதற்கும், சர்ச்சுகள் எரிக்கப்பட்டதற்கும் காரணம் கிறித்தவர்கள் செய்த மத மாற்றமே என்று வக்காலத்து வாங்கினார் மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர்!


ஒரிசா மாநிலத்தில் என்ன நடந்தது? ஒரு காவி சாமியார் கொல்லப்பட்டார் என்பதைக் காரணம் காட்டி கிறித்தவர்களைக் கொன்று குவித்தார்களே - கிறித்தவப் பெண்களைச் சூறையாடினார்களே!


இவ்வளவுக்கும் அந்தச் சாமியாரைக் கொன்றது நாங்கள்தான் என்று நக்சலைட்டுகள் பொறுப்பேற்ற பிறகும்கூட, அதனைக் காதில் போட்டுக் கொள் ளாமல், அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி கிறித்தவர்கள்மீது வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் இந்த இந்துக் கும்பல்தானே!
சட்டமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து இரகளை செய்யவில்லையா!
அதிகாரத்தில் இல்லாதபோதே ஆட்டம் போட்ட வர்கள், இப்பொழுது மத்தியில் ஆட்சி அதிகாரம் கிடைத்த நிலையில், அதனை ஆயுதமாகப் பயன்படுத்தத் தலைப்பட்டு விட்டார்கள்.


மோடிக்கு மதச்சார்பற்ற மகுடத்தைச் சூட்டிய மகானுபவர்கள் தான் இதற்குப் பதில் கூறவேண்டும், ஏன், பொறுப்பும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நாற்பது நாள்களுக்குள்ளேயே இந்த அட்டகாசம் என்றால், இன்னும் நாள்கள் நகர நகர என்னென்ன வெல்லாம் நாட்டில் நடக்குமோ என்ற அச்சம் வெகுமக்கள் மத்தியில் இப்பொழுது ஏற்பட்டு விட்டது, வெட்கக்கேடு!

    ----------------------" விடுதலை” தலையங்கம் 10-07-2014

56 comments:

தமிழ் ஓவியா said...


சோதிடரே!



மேட்டூர் மருத்துவ மனையில் கொலை ஒன்று நடந்துள்ளது. கொலை செய்தவர் ஒரு சோதிடர் - அவர் பெயர் இரவிக்குமார். கொலை செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரியின் வளர்ப்புத் தந்தை.

சாமுண்டீஸ்வரிக்குத் திருமண ஏற்பாடு நடந் துள்ளது. அந்த மண மகனை சோதிடர் இரவிக் குமாருக்குப் பிடிக்க வில்லையாம். (சோதிடம் சரியில்லையோ!) அதனால் வளர்ப்பு மகள் சாமுண் டீஸ்வரியை சோதிடர் குத்திக் கொலை செய்தார் என்பது செய்தி.
அவர் இப்பொழுது கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கிறார்.

நினைவு கொள்ளுங் கள் - கொலை செய்தவர் ஒரு சோதிடர்.

மற்றவர்களுக்கு சோதி டம் சொல்லியது எப் படியோ தொலைந்து போகட்டும்; அவரைப் பொறுத்தவரையாவது அவ ரது செயல் ஆபத்தானது - தீங்கிழைக்கக் கூடியது - தூக்குக் கயிற்றில் தொங்க வேண்டிய அளவுக்குக் கொண்டு போய்விடும் என்று சோதிடராகிய அவ ரால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா?

சோதிடரின் இந்தக் கொலையைப்பற்றி விரி வாக செய்திகளை வெளி யிடும் இந்த ஊடகங்கள், செய்தித்தாள்கள், சோதிட சிறப்பிதழ்களை வெளியிடு கின்றனவே - இதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

நாய் விற்ற காசு குரைக் காது என்பதுதான் இந்த ஊடகங்களின் ஊத்தை மனப்பான்மையா?

சோதிடந்தனை இகழ்! என்று அக்ரகாரத்துப் பார தியே பாடினாரே! அறிவி யலுக்குமுன் சோதிடம் நிற்காது என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்கூட தலை நகரமாம் சென்னையில் பேசவில்லையா?

ஏன் ராஜாஜி அவர் களேகூட சோதிடத்தை எள்ளி நகையாடவில் லையா?

தினமணி (19.10.2007) சோதிடரிடம் ஒருவர் விளக் கம் கேட்டார். என் மகளுக்கு 22 வயது. அவள் சாதகத்தைப் பார்த்த ஜோதி டர் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றார். வேறு ஒரு சோதிடர் எந்தத் தோஷமும் இல்லை என் றார். இன்னொரு சோதிடர் களத்ர தோஷம் உள்ளது என்று கூறியிருக்கிறார். எது உண்மை என்று கேட்டிருக் கிறார்.

காந்தியாருக்கு 125 வயது ஆயுள் கணித்தார் அன்றைய பிரபல சோதி டர் திருத்தணி கிருஷ்ண மாச்சாரி. கதை கந்தலாகி விட்டதே! காந்தியார் கொல்லப்பட்டது காந்தியா ருக்குப் போதாத காலமா? அல்லது நாதுராம் கோட் சேவுக்கு ஆகாத காலமா?

அஷ்டமி, நவமி பார்த்து நள்ளிரவில் சுதந் திரம் வாங்கி என்ன பயன்? இன்னும் வறுமைக் கோடு தானே இந்தியா கண்ட பலன்?

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால், தம்பி சண்ட பிரசண்டன்தான் என்பார்கள். சோதிடமும் இந்தக் குட்டையில் ஊறி யதுதான்.

வைத்தியரே! முதலில் உங்கள் நோயைக் குணப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவதுபோல,

சோதிடர்களே, முதலில் உங்கள் சோதிடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83699.html#ixzz371RrCkSY

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?



காரைக்காலில் மாங்கனித் திருவிழா! அதன் புராண சங்கதி என்ன?

புனிதவதி என்ற சிவபக்தர் - பிச்சை கேட்க வந்த சிவனடியார்க்குத் தன்னிடம் இருந்த மாங்கனிகளில் ஒன்றைக் கொடுத்தார். கணவன் மதிய உணவு அருந்திட வந்தான். ஒரு மாங்கனியைச் சாப்பிட்டான். சுவையாக இருந்ததால், இன்னொரு மாங்கனியையும் கேட்டான். பதற்றமடைந்தார் மனைவி. ஒன்றுதான் சிவனடியார்க்கு அளிக்கப்பட்டு விட்டதே! சிவனை நினைத்து, தன் நிலையை வெளிப்படுத்தினார்.

என்ன ஆச்சரியம்! சிவன் அருளால் மாயா மந்திரம்போல அவள் கைக்கு ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குக் கொடுத்தாள். இந்தக் கனி முந்தையக் கனியைவிட அதிக ருசி. அது எப்படி என்று கணவன் பரமதத்தன் கேட்டான். அதற்குமேல் அவளால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை.

நடந்ததைச் சொன்னாள். கணவன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு பழத்தைக் கொண்டு வந்து காட்டு என்கிறான். புனிதவதி சிவனிடம் இரைஞ்சினாள் - ஆம் பழம் ஒன்று வந்து சேர்ந்தது சிவன் அருளால்.

திடுக்கிட்ட கணவன், இவள் தெய்வப் பெண் என்று கருதி, மனைவியின் காலில் விழுந்து வெளியேறினான். வேறு ஊருக்குச் சென்று கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்தான்.

தன் கணவன் வருவான், வருவான் என்று காலம் கழித்த புனிதவதி, ஏமாற்றம் அடைந்து சிவனிடம் தன் அழகு அழிந்து பேயுரு வேண்டினாள். அவ்வாறே ஈசன் அளித்தான் - எலும்புரு ஆனாள்.

உடனே கயிலைக்குச் சென்று சிவனை தரிசனம் காண விரும்பினாள். கயிலைக்கு காலால் நடந்து செல்லலாமா? என்ன செய்தாள்? தலையால் நடந்து சென்றாள்.

இவ்வாறு கதை சென்று கொண்டே இருக்கிறது.

இந்த அம்மையாருக்குக் காரைக்காலில் தனிக் கோயிலே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதப் பவுர்ணமி அன்று மாங்கனித் திருவிழா நடை பெறுகிறது. இவ்விழா 4 நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கதையில் கடுகத்தனை அளவுக்காவது பொது அறிவோ, நல்லொழுக்கமோ இருக்கிறதா?

தன் கணவனிடம் முதலிலேயே உண்மையைச் சொல்லியிருந்தால், கணவனைப் பிரிந்திருக்க நேருமா?

ஒரு பெண் தலைகீழாக நடந்து சென்றாள் என்று எழுதி வைத்திருப்பது எத்தகைய வக்கிரப் புத்தி?

மாம்பழத்தை வாரி இறைப்பது புத்திசாலித்தனமா? ஆன்மீகம், அறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் பொருத்த மற்றது மட்டுமல்ல, விரயத்துக்கும் அல்லவா காரணமாக இருக்கிறது!

Read more: http://viduthalai.in/e-paper/83701.html#ixzz371T6tOkx

தமிழ் ஓவியா said...


சங்கரராமன் கொலை வழக்கு: சங்கராச்சாரியார்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!


புதுச்சேரி, ஜூலை 9-_ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர் பாக மேல்முறையீடு செய்ய துணைநிலை ஆளுநர் கட் டாரியா உத்தரவிட்டுள் ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலா ளராக இருந்தவர் சங்கர ராமன். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி கோயில் வளா கத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர் பாக காஞ்சிபுரம் சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் சகோதரர் ரகு, அப்பு உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டது.

இவ்வழக்கில் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ஆந்திரத்தில் இருந்த ஜெயேந்திரர் கைதானார். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந் தனர். செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது.

189 சாட்சிகள்

தமிழகத்தில் இவ் வழக்கு விசாரணை நேர் மையாக நடைபெறாது எனக் கூறி வேறு மாநி லத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த 2005 ஆம் ஆண்டு புதுவை அமர்வு நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக தேவ தாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்த னர்.

வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட கதிரவன் இறந் தார். வழக்கு விசாரணை முடிந்து கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் மேல் முறையீட்டை புதுவை அரசுதான் செய்யவேண் டும். மேல்முறையீடு செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆளுநர் கையொப்பம்

இதையடுத்து, புதுவை அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்தது. அதற்கான ஒப்புதலுக்காக கோப்புகளை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட் டாரியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது அக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியதாவது:

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத் தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஆளுநர் வீரேந்திர கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் நகல் திங்கள்கிழமை எங்களிடம் தரப்பட்டது.

கொலை வழக்கு விசாரணை முதலில் தமிழகத்தில் நடைபெற்று வந்ததால், ஆளுநர் உத்தரவு தொடர்பான ஆணையை, தமிழக அதிகாரிகள் பெற்றுச் சென்றுள்ளனர். மேல் முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தயார் செய்த பின்பு தலைமை வழக்குரைஞர் முருகேசன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/83712.html#ixzz371THkrZl

தமிழ் ஓவியா said...

மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்! - கி.வீரமணி


மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை ஒரு கானல்நீர்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின், ரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கையை நேற்று (8.7.2014) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே, 14.2 சதவிகித பயணிகள் கட்டண உயர்வும், 6.2 சதவிகித சரக்குக் கட்டண உயர்வும் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்ததின்மூலம், 8000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசின்மீது புகார் பட்டியல்

இந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்: சில புல்லட் ரயில் அறிவிப்பு, ரயில்வே பல்கலைக் கழகம் போன்ற வாண வேடிக்கை அறிவிப்புகளும், வழக்கமான முந்தைய அரசின்மீது புகார் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வருமானத்தில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவுள்ள நிலையில், (எஞ்சியது 6 காசுகளே) என்கிற நிலையில், இத்தகைய வினோத வித்தைகள் தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது

இந்த ரயில்வே பட்ஜெட்டின்மூலம் அந்நிய முதலீடு - வெளிநாட்டவர் உள்ளே நுழைதல், ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதாகவும், துப்புரவுப் பணிகள் உள்பட பல பணிகளை தனியாரிடம் ஒப்பந்தங்களுக்கு (காண்ட்ராக்ட்) விடுவதன்மூலம், ரயில்வே துறை இனிவரும் 5 ஆண்டுகாலத்திற்குள், வெளியார் கம்பெனியாக வும், தனி முதலாளிகளின் வசமாகவும் ஆவதற்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இது பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று சொன்னாலும், பா.ஜ.க.வின் கொள்கை, முந்தைய காங்கிரசின் (மன்மோகன்சிங் தலைமையின்) உலகமயம், தாராளமயம், தனியார் மயக் கொள்கை யிலிருந்து மாறுபடாதது என்பதால், இத்தகைய நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்க வேண்டிய வர்களே ஆவர்.

தீ விபத்து நடந்தால்....

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (UPA) கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் டில் ரயில் பெட்டிகளில் தீ பிடித்தால், விபத்துகள் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ் ஓவியா said...

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பொழுது, கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததைத்தான் நாங் களும் செய்துவருகிறோம் என்று கூறும் இன்றைய பி.ஜே.பி. ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த இந்த மிக முக்கியமான அறிவிப்பைச் செயல்படுத்த முன்வராதது ஏன்? இன்னும் சொல்லப்போனால், இந்த அதிமுக்கியமான பயணிகளின் உயிர்காக்கும் பிரச்சினையைக் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

வாரா வாரம் ஏலமா?

இந்தப் பட்ஜெட்டில் சன்னமாக நுழைந்துள்ள ஒரு திட்டம் திடுக்கிட வைக்கக்கூடியது - மக்கள் தலையில் இடியை இறக்குவதாகும்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில்வே கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதன் பொருள் என்ன? வாரா வாரம், மாதாமாதம் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதுதானே! இது குழப்பமானது - நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஆண்டுக்கொருமுறை கட்டணத்தை ஏற்றும் போதே எதிர்ப்புகள் வெடிக்கும் நிலையில், இப்படி டீசல், பெட்ரோல் விலை ஏறும்பொழுதெல்லாம் பயணக் கட்டணத்தை ஏற்றுவது என்பது கோமாளித்தனமானதாகும்.

இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான எடுத்துக்காட்டுபோலும்! வாரா வாரம் ஏலம் போடும் இந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது!

அழுத பிள்ளைதானே பால்குடிக்கும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - நிறைவேற்றப்பட சுமார் 1800 கோடி ரூபாய் தேவைப்படக் கூடிய நிலையில், யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல, வெறும் 700 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அழுத பிள்ளை தானே பால்குடிக்கும்? ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டாமா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போது மோடி அரசை மிகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அவரது கருத்து (Reaction) தெளிவாக்குகிறது.

தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது

முந்தைய அரசு கட்டணத்தை உயர்த்திய போதும், பல வசதிகள் அறிவித்தபோதும் இப்படிப் பட்ட மென்மையான, வரவேற்புப் பத்திரம் அவர் படித்ததில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்; 5 ரயில்களில் வாரத்தில் சில நாள்கள் மட்டுமே ஓடும்! மற்றபடி தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட் டுள்ளது.

இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, தேவை என்பதை அவரவர்கள் கருத்துக் கேட்டு, கருத்திணக்கத்தை (முன்பே Consensual Approach) செய்தால், பல மாநிலங்களும் வளர வாய்ப்பு ஏற்படும். அந்த நிலை இல்லையே!

30 நாள்தானே என்ற சமாதானம் எவ்வளவு நாளைக்கு ஓடும்? முந்தைய அரசின்மீது பழி போடுவதும் எடுபடாது. எனவே, ரயில்வே பட்ஜெட் ஒரு கானல் நீர்தான்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/83700.html#ixzz371TR6SEF

தமிழ் ஓவியா said...

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.

_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/83716.html#ixzz371Td2VUj

தமிழ் ஓவியா said...


பனகல் அரசர் பிறந்த நாள்


பனகல் அரசர் பிறந்த நாள்
தோற்றம்: 09.07.1866 மறைவு: 16.12.1928

பனகல் அரசரின் உண்மையான பெயர் பி.ராமராய நிங்கார். இவரின் பூர்வீகம் ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பனகல்லு என்னும் ஊராகும். இருந்தாலும் இவருடைய பெயர் ராஜா ஆஃப் பனகல். இவர் 1866 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவர் 1892ஆம் ஆண்டு மாநில கல்லூரியில் பி.ஏ., (வேதியல்) பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் மற்றும் தெலுங்கில் எம்.ஏ., பட்டம் பெற்றார்.

பம்மல் சம்பந்த முதலியார் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நல்ல படிப்பாளி, அறிவாளி, வசதி நிறைந்த ஜமீன்தார், செல்வாக்கு நிறைந்தவர், ஜஸ்டீஸ் பிரமுகர்களில் ஒருவர். இவர் கல்வி, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் அநேக சீரமைப்புகளைச் செய்தார். டிசம்பர் 1920 முதல் ஜூலை 1921 வரை மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் சார்பாக அமைச்சராக இருந்தார். ஜூலை 1921 முதல் செப்டம்பர் 1921 வரை பனகல் அரசர் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.

இவர் ஆட்சியில் அமலுக்கு வந்த முக்கியமான சட்டத்திற்கு ஹிந்து ரிலீஜியஸ் எண்டோன்மெண்ட் ஆக்ட் என்று பெயர். இவர் கீழ்ப்பாக்கத்தில் காலேஜ் ஆஃப் இந்தியன் மெடிசன் என்ற வைத்தியமுறைக் கல்லூரி அமைக்க உறுதுணையாக இருந்தார். இவர் நாட்டுக்குச் செய்த பணிகளைக் கவுரவிக்கும் முறையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு கே.ஸி.அய்.இ. (ரி.சி.மி.ணி) நைட் கம்பானியன் ஆஃப் இண்டியன் எம்ஃபயர் என்ற விருதை அளித்தது. இவர் டிசம்பர் 16, 1928 இல் இயற்கை எய்தினார்.

Read more: http://viduthalai.in/page-2/83723.html#ixzz371TrqzkB

தமிழ் ஓவியா said...


தந்தைபெரியார் கொள்கை உலகமயமாகி வருகிறது தா.இளம்பரிதி - பா.நிவேதா இணை ஏற்பு விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம்


தமிழர் தலைவரிடமிருந்து இயக்க நூல்களைப் பெறும் மணமக்கள், தமிழர் தலைவரிடமிருந்து பயனாடை, பாராட்டு பெறும் மணமக்களின் பெற்றோர் (திண்டிவனம், 7.7.2014)


திண்டிவனம், ஜூலை 9_ திண்டிவனம் கழக மாவட் டத் தலைவர் க.மு.தாஸ்-பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோரின் மகன் திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் தா.இளம்பரிதி, சென்னை கொளத்தூர் பார்த்தசாரதி-_இலட்சுமி மகள் பா.நிவேதா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா 7.-7.-2014 அன்று திண்டிவனம் ஜே.வி.எஸ்.சக்தி மகாலில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று இணை ஏற்பு விழாவை நடத்திவைத்து சிறப்புரை ஆற்றினார்கள். திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் க.மு.தாஸ் வரவேற்றார்.

திண்டிவனம் கழக மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் வே.மணி, சே.பாலசுப்பிரமணியன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.கந்தசாமி, செயலாளர் செ.பரந் தாமன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், திராவிட முன்னேற் றக் கழகம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மணவிழாவை நடத்திவைத்து தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்து ஆற்றிய சிறப்புரை:

கழகம் ஒரு குடும்பம். கொள்கை உறவுகள் இரத்த உறவுகளைவிட வலிமையானதாகும். கழகத்தின் சார்பில் அறிவிப்பு, போராட்டம் என்று எதுவாக இருந்தாலும் தாஸ் குடும்பத்தினர் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. அவர்கள் இல்லத்தில் அனைத்து விழாக்களுக்கும் வந்துள்ளேன் என்று கூறும்போது, அவர்கள் எங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆவார்கள். பெரியார் கொள்கையில் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக, வளமாக இருக்கிறார்கள். வாழ்வியலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கொள்கை என்றால் வெறும் கடவுள் மறுப்பு மட்டுமல்ல. ஒழுக்கம், கட்டுப்பாடு, முன்னேற்றம் இருக்கும். சிக்கனமாக செலவழியுங்கள் என்று தந்தை பெரியார் திருமணத்துக்குக் கட்டுப்பாடு விதித்துள் ளார்கள். ஒரு நாள் சம்பளம் இவ்வளவு என்றால், ஒருவார சம்பளத்தை, பத்து நாட்களுக்கான சம்பளத்தை திருமணத்துக்கு செலவு செய்யலாம் என்று தந்தை பெரியார் கூறுகிறார். வாழ்க்கையில் சிக்கனமும், எளிமையும் இருக்கும்போது, தாராளமாக வரவு இருக்கும். 2040 ஆண்டுகளுக்கும் முன்பாக வள்ளுவர் கூறியதை தந்தைபெரியார் மிக எளிமை யாகக் கூறிவிட்டார்.ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை என்று கூறி யுள்ளார். கடனற்ற வாழ்வு, சுயமரியாதை வாழ்வு கடன் வாங்காததால் யாரைக்கண்டும் ஓடி ஒளிய வேண்டியதில்லை.

பெண்கள் கோலம் போடும்போது செயினை அறுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார்களாம். மீண்டும் வந்து கில்ட் நகையை ஏன் போட்டிருந்தாய் என்று அடித்துவிட்டு செல்கிறானாம் அந்தத் திருடன். நகை அணிவது குறித்துக்கூறும்போது தந்தை பெரியார் கேட்கிறார் பெண்கள் என்ன அலங்காரப் பொம்மை களா? என்று கேட்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் நம் முன்னேற்றத்துக்கான தத்துவங்கள், குடும்பம் கொள்கையால் தாழவில்லை. வீழவில்லை.


தமிழ் ஓவியா said...

பழனியில் நடைபெற்ற கூட்டத்தில் கழகத்துக்கு அளிக்கப்பட்ட பொருளை, கழகத்தின் சார்பில் ஏலம் விடப்பட்டு, அப்படி ஏலம் எடுக்கும்போது அதிக மதிப்பில் ஏலம் எடுத்தவர்கள் தாஸ் குடும்பத்தினர். விஜயலட்சுமி தன்னுடைய கழுத்தில் போட்டிருந்த செயினை அப்படியே கழற்றிக் கொடுத்துவிட்டார். பெரியாரால் வாழ்கிறோம் என்பது வெறும் முழக்கமல்ல. வாழ்வியல் தத்துவம்.

திண்டிவனம் மாவட்டத்துக்குத் தலைவர் தாஸ். மாவட்ட இளைஞரணித் தலைவர் மணமகன் இளம்பரிதி. வாரிசுகள் இருக்கலாமா என்றால் கொள் கையில் குடும்பம் குடும்பமாகத்தான் இருக்க வேண் டும். அரசியலுக்கு வேண்டுமானால் வேறுவிதமாகக் கூறுவார்கள். கொள்கை என்று வரும்போது, ஊடுருவல் இருக்கக் கூடாது. தாஸ் குடும்பத்தார் இந்த சுயமரியாதைத் திருமணத்தை நடத்துவது என்பது இயல்பானதே. ஆனால், அவர் சம்பந்தியாக உள்ள சென்னை கொளத்தூர் பார்த்தசாரதி -இலட்சுமி ஆகிய மணமகள் குடும்பத்தாரைப் பாராட்ட வேண்டும். அவர்களை இயக்கத்தின் சார்பில் உரிமையுடன் பாராட்டுகின்றேன். மணமகன் இளம்பரிதி பிஏ பட்டம், பட்டவியலும் பெற்றுள்ளார். மணமகள் நிவேதா நன்கு படித்து உள்ளார். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் மாறிவிட்டது. கலைஞர்தான் ஊது வதை விட்டுவிட்டு திருகுவதற்கான அடுப்பை வழங் கினார். ஆனாலும், ரூ.200தானே தேர்தலில் வேலை செய்கிறது. நம்முடைய பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்திலே பட்டமளிப்பு விழா நடைபெறும் போது, மாணவியரின் குடும்பத்தாரும் கலந்து கொள் வார்கள். பாட்டி சரசுவதிக்கு கையெழுத்துப்போடத் தெரியாது. பேத்தி சரசுவதி வக்கீல், டாக்டர், பொறியாளர் சரசுவதிகளாக உள்ளனர். பெரியார் மாபெரும் அளவில் சமதர்மத்துக்கு கதவைத் திறந்து வைத்தவர். அன்று நீதிக்கட்சி, கர்மவீரர் காமராசர் என்று அனைவருமே தந்தைபெரியார் வழியில் செயல்பட்டவர்கள்.

தமிழ் ஓவியா said...

நாடெல்லாம் கல்வி நீரோடை பரவியுள்ளது. இந்த இயக்கம் என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார் என்று கேட்பவர்கள் இதை உணர வேண்டும். 100, 50 ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கள் இங்கே அமர்ந்துள்ளதுபோல், நாற்காலியில் உட்காரும் துணிச்சல் உண்டா? நாற்காலிகள் இருக்கும், உட்காரும் துணிச்சல் இருக்காது. அந்தத் துணிச்சலைக் கொடுத்தவர் பெரியார். இங்கே மணமக்கள் மகிழ்ச்சி யாக அமர்ந்துள்ளார்கள்.

இதுபோல் புரோகிதர் நடத்தும் திருமணங்களில் வாய்ப்பு உண்டா? தீயை வளர்த்து அதில் நெய்யை ஊற்றிப் புகைமண்டலமாக்கி அனைவரையும் கண்கலங்கச் செய்வார்கள். தந்தை பெரியார்தான் கேட்டார் பருப்பில் ஊற்றும் நெய்யை நெருப்பில் ஊற்றலாமா? என்றுகேட்டார். இதுதான் பகுத்தறிவு. ஆட்சிகள் மாறலாம். நல்லமுறையிலும் மாற்றங்கள் இருக்கும். சில நேரங்களில் வேறுவிதமாகவும் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

ஆட்சிகள் மாறினாலும், பேரறிஞர் அண்ணா செய்தது சமூகப்புரட்சி. இந்தத் திருமண முறையை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 1928இல் தொடங்கி 1952 வரையிலும் நடைபெற்ற திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பில் கூறப் பட்டது. நாரதர், மனு தர்மம், யக்ஞம் இவை இல்லை, சடங்குகள் இல்லை, சப்த ரிஷிகள் இல்லை என்று எதைஎதையோ கூறி இந்தத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் கூறியது. பேரறிஞர் அண்ணாவின் சட்டப்படி இரண்டு பேர் இருந்தால் போதும். 1967 ஆம் ஆண்டில் அண்ணா ஆட்சியைத் தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார்.

சட்டப்படியும், சமூகப்படியும் செல்லும் திருமண முறையாக சுயமரியாதைத் திருமணம் உள்ளது. எங்களுக்கு பெரியார்தான் சட்டம். சட்டப்படி திரு மணம் செல்லாது என்றால் பிறக்கும் குழந்தைகளுக்கும் சட்டப்படியான அங்கீகாரம் இருக்காது. வேறு வகையில் பிறந்த குழந்தைகள் என்று அவமரியாதை இருந்தது. அந்த அவமரியாதையை நீக்கியவர் சட்டப் படி செல்லும் என்று சட்டம் போட்டவர் பேரறிஞர் அண்ணா. ஓர் அமைதிப்புரட்சியாக, ரத்தம் சிந்தாத புரட்சியாக தந்தைபெரியாரால் உருவாக்கித்தரப் பட்டது சுயமரியாதைத் திருமணம். 1948இல் மாசேதுங் சீனப்புரட்சிக்கும் முந்தையப் புரட்சியாக 1928இல் தந்தை பெரியாரால் ஏற்படுத்திய புரட்சிதான் இந்த சுயமரியாதைத் திருமணப்புரட்சி ஆகும்.

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூரில் சுயமரியாதைத் திருமணம்

மலேசியா நாட்டில் சட்டப்படி செல்லும் திரு மணமாக சுயமரியாதைத் திருமணம் உள்ளது. அங்கு மூன்று கிளைகள் திராவிடர் கழகத்துக்கு உள்ளது. மலேசியாவில் அரசால் அனுப்பப்படும் பதிவு அதிகாரி யாக மலேசிய திராவிடர் கழகத் தோழர்களை நிய மித்துள்ளது. சிங்கப்பூரில் சுயமரியாதைத் திருமணம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செல்லும். புரட்சிக்கவிஞர் கூறுவதுபோல் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்கிற வகையில் தந்தை பெரியார் கொள்கை உலகெங்கிலும் பின்பற்றப்படு கிறது.

ஜூன் மாதம் 5ஆம் தேதி அன்று ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத்தில் சுயமரியாதைத் திரு மணத்தை நடத்திவைத்தேன். ஜெர்மானியர் நிக் கோலஸ் முன்னிலையில் ஈழத்தமிழர்களான மண மக்களுக்கு ஜாதி மறுப்பு, மத மறுப்பு சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது. பார்வையாளர்கள் 60 பேர் பல்கலைக்கழகத்திலேயே நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர். அவர்களில் இருவர் பார்ப்பன நண்பர் கள். அவர்கள் என்னிடம் வந்து இவ்வளவு சிறப்பாக, எளிமையாக இருக்கிறதே என்று பாராட்டினார்கள்.

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் சுயமரியாதைத் திருமணம்

கர்நாடகாவில் பெங்களூருவில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது, அதுவும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலம் என்று சொல்லக்கூடிய மாலை 5 மணியளவில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சு கலந்து கொண்டு பேசும்போது, இவ்வளவு எளிமையாக இருப்பதைத் தெரியாமலே இருந்துவிட்டேன். நான் பதவியில் இருக்கும் போது தெரிந்திருந்தால், அண்ணாபோல் கர்நாடகத்திலும் சட்டம் கொண்டு வந்திருப்பேன் என்றார். கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த நாடாளுமன்ற உறுப் பினராக பலமுறை நாடாளுமன்றத்துக்கு சென்றவர் ஹிரேன்பாபு என்றழைக்கப்படும் ஹிரேன் முகர்ஜி கம்யூனிஸ்ட்டான அவர் நானே என் மகளுக்கு புரோகிதரை வைத்தே திருமணம் செய்தேன் என்று கூறினார். பெரியாருடைய சுயமரியாதைத் திருமணம் இருப்பது தெரிந்திருந்தால் அவ்வாறே செய்திருப்பேன் என்று கூறினார். பெரியார் உலகம் முழுவதும் தேவைப் படுகிறார். பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்தவர் சோம.இளங்கோவன் அவர் இல்லத் திருமணம், என் மகள் திருமணம் என்று அமெரிக்காவில் சுயமரி யாதைத் திருமணம் நடைபெற்றது. இந்த மணமுறை உலகம் முழுவதும் பரவி உள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்தவர் லெவி பிராகல் பெரியார் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்றார்.

இல்லறத்துடன் தொண்டறம்

மணமக்கள் அறிவார்ந்தவர்கள். பெரியார் கொள்கையால் வளர்ச்சி காண்பார்கள். அறிவுரை எப்போதும் கூறுவதில்லை. அறிவுரையைக் கேட்க யாரும் தயாராக இருப்பதில்லை. வேண்டுகோளா கத்தான் கூறுகிறேன். நீங்கள் வளர வேண்டும். இது குடும்பத்துக்கு மட்டுமின்றி இயக்கத்துக்கும் வேண்டும். நன்றி மறக்காதீர்கள். பெற்றோர்களை அலட்சியப் படுத்தாதீர். அன்பு காட்டுங்கள். இல்லறத்துக்கு மாற்று துறவறம் என்று தான் இருந்தது. ஆனால், இல்லறத் துடன் தொண்டறம் என்று தந்தைபெரியார்தான் தொண்டறம் என்றார்.

தன்பெண்டு, தன் பிள்ளை என்று இருப்பது கடுகு உள்ளம். மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உதவுங் கள். மூடநம்பிக்கையற்ற, சுயமரியாதை, பகுத்தறிவுத் திருமணம் என்று வரும்போது, புரட்சிக்கவிஞர் கூறு வதுபோல், ஒரு மனதாயினர் தோழி, திருமணமக்கள் வாழி என்பதற்கேற்ப, இனிமேல் ஈருடலாக இருந்தாலும் ஒரு மனமுடன் சிறப்பாக வாழுங்கள். விட்டுக்கொடுத்து வாழுங்கள். அண்ணா கூறுவது போல், விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. நண்பர்களாக பழகுங்கள். பகுத்தறிவுத் தலைவர் தந்தை பெரியார் உருவாக்கினார். பேரறிஞர் அண்ணா சட்ட வடிவம் தந்தார். அவர்களின் தொண்டுக்கு வீரவணக் கம் செலுத்தி வாழ்விணையராக இணைந்து வாழ்வீர். -இவ்வாறு தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையில் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-4/83692.html#ixzz371UuAlGr

தமிழ் ஓவியா said...


ஒரு வரலாற்றுச் சுவடு காந்தியார்

ராஜாஜி எதிர்ப்பு

பழனியிலிருந்து ரயில் புறப்படுவதற்கு முன் அப்போது தமிழக அரசியலில் இருந்த ஒரு முக்கியமான சிக்கலைப் பற்றியும் அது எவ்வாறு காந்திஜி வருகையில் எதிரொலித்தது என்பதைப் பற்றியும் நாம் அறிய வேண்டும். இம் முறை காந்திஜி தமிழகத்திற்கு வந்த போது ராஜாஜி எதிர்ப்பு இயக்கம் கடுமையாக இருந்தது. இதன் எதிரொலி யாக எழுந்த அய்யப்பாடுகளும் வாக்கு வாதங்களும் பல. சுந்தரராஜ அய்யரின் கிராமத்திற்குச் சென்றதும் அரிஜன விடுதிக்குச் செல்லாமல் ரயிலுக்கு காந்திஜி சென்றதும் அப்போது பெரிய கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளித் தது. ரயில் எப்போது பழனியிலிருந்து புறப்படுகிறது என்பது தெரியாததன் காரணமாக, காமராஜ் தனி ரயிலில் போகமுடியவில்லை. அண்ணலுடைய வருகை ஏற்பாடுகளில் தொண்டாற்றிய ஊழியர்களை அவர் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அவர்களுக்கு அன்று காந்திஜியைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் ராஜாஜியும் அவருடைய ஆதரவாளர்களும், காந்தி ஜியைக் காமராஜூம் காமராஜூடைய ஆதரவாளர்களும் அணுகவிடாமல் திட்டமிட்டுத் தடுத்துவிட்டதாக, ஒரு பலமான குற்றச்சாட்டு எழுந்தது. காமராஜ் பழனியிலிருந்து அந்த ரயிலில் போகாது. திண்டுக்கல் வரை காரில் சென்று அந்த ரயில் அரசுக்கு அனுப்பிய அறிக்கையிலேயே குறிப்பிட்டது என் றால் இந்தக்கருத்து வேறுபாடு எவ்வளவு முக்கியத்துவம் அடைந்திருக்கும் என்பதை ஒருவாறு யூகிக்கலாம். இறுதியில் இப்புகாரை அண்ணலிடமே கொண்டு போனார்கள். பழனியிலிருந்து அண்ணல் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு ரயில் நிலையத்தில் எழுத்து வடிவத்திலேயே அண்ணலிடம் இந்தப்புகாரை அளித்தார் ஒருவர். அதன் பின்னர் இதைக்குறித்துத் தம் அரிஜன் சஞ்சிகையில் 10.2.1946 ஆம் தேதி இதழில் காந்திஜி கீழ்க்கண்டவாறு விளக்கி எழுதினார்.

தமிழ் ஓவியா said...


யார் காரணம்

பழனியிலிருந்து நான் திரும்பி வந்த பயணத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, ஒருவர் என்னிடம் ஒரு கடிதத்தைத் கொண்டு வந்து கொடுத்தார். அதில் ராஜாஜி மீதும் எல்.என்.கோபால சாமி மீதும் கடும் வசைமாறிகள் சாட்டப்பட்டிருந்தன. யாரையும் அவர்கள் என்னருகே வரவிடுவதில்லை என்றும் எனக்குத் தெரிவிக்கப் பெற்றி ருந்தது. ஆனால் நான் அறிந்தவரை இதற்கு நேர்மாறான நிலைதான் இருந்தது. உருப்படியான எதையும் என்னிடம் சொல்ல விரும்பியவர்கள் யாரும் என்னிடம் பேசுவதோ அல்லது எனக்கு எழுதுவதோ தடை செய்யப் பட்டிருக்க முடியாது. இந்தப்புகார்க் கடிதம் என்னிடம் அளிக்கப்பெற்றதே இதற்கு ஒரு சான்று. இதே தனி ரயிலில் என்னுடம் காமராஜ் நாடாரும் இருந்தார். பழனிமலை ஆலையத்திலும் என்னுடன் அவர் இருந்தார்.


தமிழ் ஓவியா said...

ஆனால், இந்த பயணத்தில் ராஜாஜியும் கோபால சாமியும் என்னிடம் மிக நெருங்கி இருந்தனர் என்பது உண்மையே. அவர்கள் தாம் இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள். என்னுடைய மிகப் பழங்கால நண்பர்களில் ராஜாஜி ஒருவர். என்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் சொல்லிலும், செயலிலும் மிகச்சிறந்த முறையில் விளக்கக்கூடியவர் அவர் என்பது எல்லோரும் அறிந்ததே. 1942 இல் அவர் என்னுடன் கருத்து வேறு பட்டார் என்பதை நான் அறிவேன். இந்தக் கருத்து வேறுபாட்டைப் பகிரங்கமாக எடுத்துரைத்த அவருடைய தைரியம் வாழ்க! அவர் ஒரு பெரிய சமூக சீர்திருத்தவாதி. தம்முடைய நம்பிக்கை யின்படி நடக்க அவர் அஞ்சுவதே யில்லை. அவருடைய அரசியல் விவேகமும் நாணயமும் மாசற்றவை யாகும். ஆகையால் அவருக்கு எதிராக அங்கு ஒரு Clique (கும்பல்) இருப்பதைக் கண்டு நான் மனம் வருந்தினேன். சென்னையில் அதிகாரப்பூர்வமாக உள்ள காங்கிரசில் புறக்கணிக்க முடியாத செல்வாக்குள்ள Clique கும்பல் அது என்பது வெளிப்படை. ஆனால், பொதுமக்கள் ராஜாஜியிடம் பக்தி கொண்டவர்களாயிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள பொது மக்களிடையே அவருக்குச் செல்வாக்கில்லாமல் இருந்தாலும் என்னுடைய யாத்திரையின் வழி நெடுகிலும் அவ்வளவு திரளாக மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தோடு என்னை வரவேற்றிருப்பார்கள் என்று கருதும் அளவுக்கு நான் கர்வியோ முட்டாளோ அல்ல. தென்னாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு எது சிறந்த முடிவாகப்படுகிறதோ அதன்படி அவர்கள் செயல்படலாம். ஆனால், ராஜாஜியின் விலைமதிப்பற்ற சேவையை இழந்து விடாதீர்கள்; தற்போதைய நிலையில் அவரைப்போன்று பொறுப்பு வகிக்கக்கூடியவர்கள் இல்லை, என்று நான் எச்சரிக்காவிட்டால், நான் காங்கிரஸ் நிறுவனத்திற்கு விசுவாசமான வனாக இருக்க முடியாது.

சிக்கல் அதிகமாகியது

இந்தக் கட்டுரை சிக்கலைத் தீர்த்து வைப்பதற்குப் பதிலாக, அதன் கடுமையை அதிகமாக்கியது. தென்னாட்டுச் சுற்றுப் பயணத்தில் காந்திஜியை மற்றவர்கள் அண்டாமல் வைத்திருந்து, தம் கருத் தையே அண்ணல் கருத்தாக ராஜாஜி உருவாக்கி விட்டார் என்பதற்கு இதை விடச் சிறந்த சான்று எதுவும் இல்லை என்று ராஜாஜி எதிர்ப்பாளர்கள் கூறினார்கள். சென்னை மாநில காங்கிரசில் அப்போதிருந்த ராஜாஜி எதிர்ப்பாளர்களை Clique என்று காந்திஜி குறிப்பிட்டது பலருக்கு சொல்லொணா வருத்தத்தை அளித்தது. இவ்வாறு காந்திஜி குறிப்பிட்டது தம்மையும் தம்முடைய ஆதரவாளர் களையும் தாம் என்று கருதிய காமராஜ், பாராளுமன்றக் குழுவில், அதாவது சட்டசபை உறுப்பினர் தேர்தலுக்குக் காங்கிரஸ் அபேட்சகர்களை பொறுக்கும் குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அச்சொல்லை எதிர்த்துப் பல தந்திகளும் கடிதங்களும் காந்திஜிக்குப் பறந்தன. காந்திஜி மீது சிறந்த பக்தி கொண்டவர்கள் கூட தம்மைக் காண வந்த திரளான கூட்டத்திற்கு ராஜாஜி மீது மக்கள் கொண்ட பக்தியே முக்கிய காரணம் என்று அண்ணல் கூறியதற்காக மிகவும் மனம் வருந்தினர். மகாத்மாவின் வாயிலிருந்தும் உண்மைக்குமாறான சொற்கள் வரலாமா? என்று சிலர் கருதினார்கள். இவ்வாறு கருதிய (பிற்கால பூதானத்தலைவராகிய) எஸ்.ஜகந்நாதன் (தமிழக நிர்மாண இயக்கத்தில் அப்போது முக்கிய தொண்டர்களில் ஒருவர்) மதுரையில் உண்ணா நோன்பைத் தொடங்கி விட்டார். இதன் பின்னர் Clique என்ற சொல்லை காந்திஜி பயன்படுத்தியது குறித்தும், காமராஜ் பாராளுமன்றக் குழுவிலிருந்து விலகியது குறித்தும் செய்தித்தாள்களிலும் அரிஜனிலும் கடுமையாக வாக்குவாதங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனாலும் இறுதிவரை அச்சொல்லைத் திருப்பிப்பெற மகாத்மா மறுத்து விட்டார்.

1946_ஆம் ஆண்டில் ராஜாஜியை முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்குமாறு மகாத்மா காந்தி கூறிய யோசனையை ஏற்க இயலாது என்று காமராஜ் பதி லளித்து விட்டார். பல்வேறு வித அரசியல் காரணங்களினால் தமிழகத்தில் ராஜாஜி மீது வெறுப்பு இருக்கிறது என்றும் சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை வைத்தே முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருப்பதால் யாரை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்துவிட்டார். அதே சமயம் பிரகாசத்தை முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுப்பதை காந்திஜி ஆதரிக்கவில்லை. காந்திஜி கூறுவதை மீண்டும் நாம் தட்டக்கூடாது. ஏற்கெனவே ஒருமுறை அவர் கூறியதை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்று கருதி, பிரகாசத்திற்கு எதிராக முத்துரங்க முதலியாரைக் காமராஜ் நிறுத்தினார். ஆனால் பின்னவர் (முதலியார்) இத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.

(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 937-_940)

Read more: http://viduthalai.in/page2/83494.html#ixzz371Vo9Vlo

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் அன்றே சொன்னார்!



யாரோ சில பிராமணர்கள், பெரியார் ராமசாமி நாயக்கர், இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை _- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல- _ திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் _ திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவ தெல்லாம் _ நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டும் என்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது.அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை.அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும், பிராமணர்களுக்கும் நமக்கும் பிரதான பேதம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அனுசரிக்கின்ற சில பழக்க வழக்கங் களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும், அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கின் றோம்.ஒரு தெருவிலே நடக்கின்றோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கி றோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக் கொருவர் சமமாகவும், சகோதர உரிமை யுடனும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத் காரம் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.

எப்போதுமே காலம் ஒன்றுபோல் இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறு மைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகின்றது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் சிறீனிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது. சென்னை ராயப்பேட்டை பார்ப்பனர்களின் அமைப்பான லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் -_ -தந்தை பெரியார் 5.1.1953

புல்லேந்தியவர்கள், வாளேந்தினால்- வாளேந்தியவர்கள் என்ன ஏந்து வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! விரல் உரல் ஆனால், உரல் என்னவாகும்? அப்புறம் உங்கள் கதி என்னவாகும்? என்பதையும் நினைத்துப் பாருங்கள். அனுதினமும், பார்ப்பனர் தாம் திராவிடர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேண் டும். பார்ப்பனர்கள் வாழை இலைகள்! திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலைமீது மோதினாலும் வாழை இலைதான் அழிந்துவிடும். அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர் கள்மீது மோதினால் அவர்கள்தான் அழி வார்கள். திராவிடர்கள் பார்ப்பனர் களை மோத ஆரம்பித்தார்களோ- _ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந் நாட்டில் இருக்காது. இதைப் பார்ப் பனர்கள்உணரவேண்டும். பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலி கள் என்று பெருமையடித்துக் கொள் ளாதீர்கள்.ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள். புத்திசாலிகளானால், புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொள்ளுங்கள்.

_ -தந்தை பெரியார்: 1948இல்

Read more: http://viduthalai.in/page3/83497.html#ixzz371WNWWA9

தமிழ் ஓவியா said...


நோன்புக்குத் தடை இங்கல்ல, சீனாவில்



சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பள்ளி, அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ரமலான் புனித மாதம் என்று நோன்பு மேற்கோள்வதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு வலைத்தளத்தின்மூலம் பள்ளிகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மக்களுக்கான நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதரீதியிலான செயல்களில் ஈடுபடவோ முடியாது என்று டர்ஃபன் நகர் வணிகவியல் விவகாரத் துறை அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சிங்ஜியாங் அரசு தன்னுடைய அரசுப் பணியாளர்களை நோன்பு இருப்பதால் அவர்களின் உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்று கூறியுள்ளது.

ரமலான் நோன்பு இருப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அனைவருக்கும் நினைவூட்டி வருகிறோம் என்று அரசின் சார்பில் இயங்கும் போஷவ் வானொலி மற்றும் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் கூறியுள்ளது. கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கானத் தடையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவோம் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்ஜியாங் அரசு பெரும் அளவில் கூடுவது , பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை பிரிவினைவாத அச்சத்தால் தடுத்து வருகிறது.

உலக உய்குர் காங்கிரஸ் பேச்சாளர் தில்க்சாட் ரக்சிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, சீனா இதுபோன்ற அதிகார, அளவீடுகள்மூலம் ஊழியர்களின் நம்பிக்கையை முடக்குகிறது. மத சுதந்திரத்தை உறுதிப் படுத்துமாறும், ரமலான்மீது அரசியல் அழுத்தங்களை நிறுத்துமாறும் சீனாவைக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

-டைம்ஸ் ஆப் இந்தியா, 3-.7.-2014

Read more: http://viduthalai.in/page4/83503.html#ixzz371WxKa19

தமிழ் ஓவியா said...


இறைவா! ஒரு சொல் கேளாய்.....




உச்ச வெறி கொண்டு
உயிர் வதம் செய்தான் சொத்தில் தகராறாம் சொந்த தந்தையிடம்......

பத்து வயது சிறுமி தானே பார்த்து பழகிய மனிதர் தானே

பக்கத்து வீடு சென்றாள் ஈனப்பிறவியவன் விளையாட்டில் பித்தானாள் பிஞ்சு குடி குடியை கெடுக்கும் நான்காம் நிலையில் நாற்சக்கரம் ஓட்டினான் எதிரில் வந்தவன் இறைவனடி சேர்ந்தான் .....

கீதையின் நாயகனே.....
ரட்சிப்பின் மீட்பரே ......
நபிகள் நாயகரே.......
கேட்பீரோ இதனை.......?

அழுக்கடைந்த சமூகத்தில் அக ஒளி தேடினேன் மீட்பு எங்கே ஓடினேன் என் பகுத்தறிவு என்னை கேட்டது......
கோவில் சிலை திருட்டு உண்டியல் கொள்ளை முதலில் அந்த கோப்புகளை பார்க்க சொல் இறைவனைஎன்றது......

- செ.கவுதமி தமிழரசன் மேலமெய்ஞானபுரம்.

Read more: http://viduthalai.in/page4/83501.html#ixzz371XM7800

தமிழ் ஓவியா said...


சிலந்திப்பட்டிலிருந்து இராணுவ உடை


சிலந்தியிடமிருந்து பெறப்படும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யக்கூடிய குண்டுதுளைக்காத ஆடைகளை எதிர்காலத்தில் இராணுவ வீரர்கள் அணியலாம் என்று ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.

மரபியல் பொறியியல் ஆய்வாளர் கள் பட்டுப்புழுக்களில் தொடங்கி, தற்போது சிலந்திப்பட்டு தயாரிக்கும் முயற்சியில் ஆய்வு செய்துவரு கின்றனர்.

அமெரிக்காவில் லாங்சிங் பகுதியில் உள்ள க்ரெய்க் பையோகிராப்ட் ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பு அதிகாரி கிம் தாம்சன் கூறும்போது, சிலந்தி பட்டு இயற்கையாகவே வேறு எதற்கும் இல்லாத தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளதாகும். சிலந்திக் கூட்டைப்பற்றி எண்ணும் போது அதன் வடிவமைப்பு காற்றைத் துளைக்கும் ஏவுகணையைக்கூட தடுக் கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். ஈ அல்லது பறக்கும் பூச்சிகளையும் தடுத்துவிடும். பட்டு இயற்கையாகவே இழுவைத்தன்மை அதிகம் உள்ள தாகும். அதில் பிடிபடும் இரையின் சத்துக்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்டதுமாகும் என்று கிம் தாம்சன் கூறினார். மேலும் அவர் கூறும்போது, கணித முறையில் அணுகும்போது, ஈயின் எடை, அதன் வேகம், அதன் அளவு ஆகியவற்றைத் ஒரேயொரு இழையில் சிக்கிக்கொண்டால்கூட அதன் வலிமையின் விகிதம் அளவிட முடியாதது என்று கிம் தாம்சன் கூறினார். எதிர்காலத்தில் அதுபோன்ற பட்டு பல்வேறு வகைகளிலும் பயன் படுத்தப்படக் கூடியதாக இருக்கும்.

பழைமையான உறுதியான கெவ் லார் ஆடைகளைவிட சிலந்தியிட மிருந்து பெறப்படும் பட்டு புதிய முறை யில் பாதுகாப்பை குறிப்பாக இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும்வகையில் இருக்கும் என்று லைவ் சயின்ஸ் அறிக்கை கூறுகிறது.

ஆய்வாளர் தாம்சன் இந்த ஆய்வுக்காக சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கூறும்போது, பட்டுப்புழு மரபியல்முறையில் பொறியியல்மூலம் செய்வதுபோலவே சிலந்திபட்டின் மூலமும், அதன் தொடர்ச்சியாக உள்ள தலைமுறைகளிலிருந்தும் அவற்றி லுள்ள குணங்களின் அடிப்படையில் எப்போதுமே இதுபோன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

சிலந்தி, பட்டுப்புழு இவை இல் லாமல் பட்டாடைகளுக்கு அதிக அளவில் பட்டுத் தேவைக்காக, பட்டுக் கான புரோட்டீனைச் செயற்கையாக சேர்த்து செயற்கைப் பட்டு இழைகள் பயன்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத் தக்கது.

Read more: http://viduthalai.in/page4/83499.html#ixzz371XUZTTJ

தமிழ் ஓவியா said...


இங்கர்சாலின் பொன்மொழிகள்


போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

#####

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள்களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!

Read more: http://viduthalai.in/page3/83498.html#ixzz371Xn6RpI

தமிழ் ஓவியா said...


ஆஸ்திரேலியாவின் மனிதாபிமானமற்ற செயல்


ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் கடுமை யான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தில் இருந்து பாதுகாப்பு வேண்டி ஆஸ்தி ரேலியா நோக்கிச்சென்ற 150-_க்கும் மேற்பட்டவர்களை நடுக்கடலில் வைத்தே இலங்கை கப்பற்படையிடம் ஒப்படைத்தது.

இது தொடர்பாக இலங்கை கப்பற்படை அதிகாரி ஒருவர் சிங்கள பத்திரிகைக்கு கூறியதாவது, இலங்கை யில் இருந்து சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு செல்வோரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது, இவர் களில் பெரும்பாலானோர் வடக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இவர்களின் கடல் வழிப்பயணம் சட்ட விரோத மாகவும் ஆபத்தான பயணமாகவும் அமைந்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத பயணத்தின் மூலம் பல குற்றவாளிகளும் தப்பி ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் அகதிகள் என்றபோர்வையில் உலக நாடுகளின் பார்வையில் தங்களை காட்டிக்கொள்கின்றனர். இது போன்ற சட்டவிரோத ஆபத் தான கடற்பயணம் குறித்து ஆஸ்தி ரேலிய அரசும் கவலை தெரிவித் துள்ளது. சமீபத்தில் இலங்கைக் கப்பற்படைத்தளத்திற்கு ஆஸ்திரேலியா ஒரு தகவல் ஒன்றை அனுப்பியது. அதில் கிருஸ்துமஸ் தீவிற்கு அருகில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கப்பல் ஒன்று தென் பட்டதாகவும் அவை அநேகமாக இலங்கையில் இருந்து வந்த கப்பலாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த தகவலை அடுத்து இலங்கை கப்பற்படை கப்பல் ஒன்று அந்த அகதிகள் கப்பலை சோதனையிட பயணம் மேற்கொண்டு கிருஸ்துமஸ் தீவிற்கு அருகில் அந்தக் கப்பலை கண்டுபிடித்தோம். அப்பகுதி இயற்கை சூழல் பேராபத்து நிறைந்த பகுதியாகை யால் மிகவும் சிரமப்பட்டு அனை வரையும் இலங்கை கப்பற்படை கப்பல் ஏற்றினோம் என்று கூறினார். இதனி டையே, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டு கிரீன் கட்சி அறிவித்துள்ளது.

கிருஸ்துமஸ் தீவின் கடற்பரப்பில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் 150_க்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பிய இந்த நட வடிக்கை மிகவும் கொடிய மனிதாபி மானமற்ற செயல் என அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. புகலிடம் கோரிவரும் மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்த நடவடிக்கை இரக்கமற்ற செயலாகும், குற்றவாளிகளினால் பாதிக்கப்பட்டவர் களை குற்றவாளிகளிடமே ஒப்படைத் தமைக்கு நிகரான காரியத்தை அர சாங்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இச்செயல் நாட்டின் மனித உரிமை குறித்த நற்பெயருக்கு இந்த நடவடிக்கை களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது புகலிடம் கோரி வருபவர்களை திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது அய்க்கிய நாடுகள் பிரகடனத்தை மீறும் செய லாகும் என தெரிவித்துள்ளது. இதனிடையே இலங்கைக் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் புதன் (03.07.14) இலங்கையை சென்றடைதிருப்பார்கள் என ஆஸ்திரேலிய செய்தி மய்யம் உறுதி செய்தது. அந்த வகையில் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாகவே நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் இந்த மனிதாபிமானமற்ற கொடிய செயல் உலகத் தமிழர்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வில் ஆட்சி மாற்றமடையத் துவங்கி யதும், இலங்கை அரசு இந்திய வெளி யுறவுத்துறையின் துணையுடன் அடைக்கலம் கோரி பல்வேறு நாடு களுக்குச் செல்லும் அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியின் ஆரம்ப கட்டமாகவே இது கருதப்படுகிறது.

_ சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page5/83502.html#ixzz371Xz4a6P

தமிழ் ஓவியா said...


யாகம் யாருக்காக?

யாகம் என்பது ஆரிய முறை. இதைச் செய்வதால் கடவுள்கள் திருப்தி அடைந்து வேண்டுவதைத் தருவார்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

7000 கோடி ரூபாய் அளவுக்கு பொய்க் கணக்கு எழுதி மோசடி செய்தார் என்ற புகாரில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முதலாளி ராமலிங்க ராஜூ என்பவர் சிறையில் அமைக்கப்பட்டுள் ளார். பிணையில் வெளிவர அனுமதிக்கு மாறு நீதிமன்றத்தில் மனு கொடுத் துள்ளார். மனு - வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணை நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் யாகம் நடத்தியுள்ளன ராம்! குற்றம் செய்தவர்களுக்குக்கூட யாகம் செய்தால் -_ பகவான் அனுக்கிரகம் கிடைக்கும் என்றால், கடவுள் எப்பேர்ப் பட்ட மோசமான ஜென்மமாகப் படைக்கப்பட்டுள்ளது?

சிந்திக்க வேண்டும். சாமியை வேண்டிக் கொண்டு திருடன் திருடப் போகிறான்; சாமியை வேண்டிக் கொண்டு திருடனைப் பிடிக்கக் காவல ரும் போகிறார் என்றால்... கடவுள் யார் பக்கம்? என்று கேட்டார், பெரியார்!

அதே கேள்வியை இப்போதும் கேட்டுப் பார்க்க வேண்டிய நிலை உள் ளதே, இருக்கலாமா? சிந்திப்பீர்!

குறிப்பு: பிணை கொடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Deccan Chronicle 13.1.2009).

Read more: http://viduthalai.in/page5/83556.html#ixzz371Y6Kf5h

தமிழ் ஓவியா said...


அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் பெண்ணுரிமை இடம் பெறவில்லையா?


அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் பெண்ணுரிமை இடம் பெறவில்லையா?

கலைமாமணி மறைமலையான் விளக்கம்

சாகித்திய அகாடமி மற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை சார்பில் விந்தன் நூற்றாண்டை நோக்கி... என்னும் தலைப்பில் 25.6.2014 அன்று நடை பெற்ற கருத்தரங்கில், வ. கீதா என்பவர் காலமெல்லாம் பெண்ணிய உரிமை களுக்காக எழுத்தாலும், பேச்சாலும் போர் முரசு கொட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகளில் பெண்ணுரிமை பற்றி எழுதப்பட வில்லை என்றும், அவரது படைப் புகள் பெண்ணிய மறுமலர்ச்சிக்கு வித்திடவில்லை என்றும் பெருமை வாய்ந்த பல்கலைக் கழகத்தில் பேசி அண்ணாவின் தமிழின வளர்ச்சிப் பணியை இழிவுபடுத்திக் கூறியுள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஈ.வெ.ரா.வின் எழுத்துகளில் பெண் உரிமைகள் பிரதிபலிக்கும். ஆனால், அவரைப் பின்தொடர்ந்த அண்ணா துரை எழுத்துகளில் அதைப் பார்க்க முடியவில்லை என்று அந்தப் பெண் எழுத்தாளர் பேசியுள்ளார்.

ஏதோ, பேரறிஞர் அண்ணா தீட்டிய அத்தனை வகையான இலக்கியப் படைப்புகளையும் ஆழ்ந்து படித்து விட்ட அறிவுக் கொழுந்தாகத் தம்மை நினைத்துக் கொண்டு, பொறுப்பற்ற முறையில் புழுதிவாரித் தூற்றலாமா? இந்த எழுத்தாளி அம்மையார் என்கிற நியாயமான கேள்வியைத் திராவிட இயக்கத்தின் நீண்ட காலத் தொண் டர்கள் எழுப்பவே செய்வர்.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள், தம்முடைய சொந்தச் சிந் தனையால் என்னென்ன சமுதாயச் சீர்திருத்தப் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தமிழ்நாட்டின் உரிமை - தமிழ்மொழியின் உரிமை - _ பெண் குலத்தின் உரிமை - தொழிலாளர் உரிமை - வகுப்புவாரிய இடஒதுக்கீடு உரிமை முதலானவற்றுக்காக முழங்கி னாரோ, அத்தனைக்கும், புத்தம் புதிய மறுமலர்ச்சி உரை நடையுடன் - கவிதைச் சாரலுடன் _ தம்முடைய கற் பனை வளம் கொழிக்கும் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

சிறுகதை, நெடுங்கதை, நாடகம், கவிதை என்பதாக எதை எழுதினாலும், பெரியாரின் கொள்கைகளையே கருப்பொருளாக வைத்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிய அந்தப் படைப்பு இலக்கியப்பகலவன் அண்ணா _ தம்முடைய ஒரே தலைவர். பெரியார் பரப்பிய பெண்ணுரிமைக் கொள்கையை மட்டும் மறப்பாரா? துறப்பாரா?

வேலைக்காரி என்னும் அண்ணா தீட்டிய நாடகத்தை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சாவூரில் ஆண்டுக் கணக்கில் நடத்தினாரே? அதுவே பிறகு திரைப்படமாகவும் தமிழ்நாட்டைக் கவர்ந்து பணத்தைக் குவித்ததே! அது ஏழைப் பெண்ணின் உரிமைகளுக்காக எழுதப்பட்ட கலைப்படைப்பு இல்லையா?

சந்திரோதயம், பாவையின் பயணம் போன்ற நாடகங்களிலும் பெண்ணியம் பற்றிப் பேசவில்லையா? கபோதிபுரக் காதல், இரங்கோன்ராதா, பார்வதி பி.ஏ., குமரிக்கோட்டம், தசாவதாரம் -_ இப்படி, எத்தனையோ புதினங்களும், வள்ளித் திருமணம், கோமளத்தின் கோபம், உண்ணாவிரதம் ஒரு தண் டனை - இப்படி எத்தனையோ சிறு கதைகளும், அண்ணாவின் பெண்ணிய உரிமைப் படைப்புகள் இல்லையா?

எப்படி முகத்தில் இரண்டு கண்கள் சரியாக அமைந்து, முகத்திற்கு ஒரு பொலிவை ஏற்படுத்துகிறதோ அது போல், சமூகத்தின் இரண்டு கண்களாக அமைந்த ஆண்களும், பெண்களும் சமமான உரிமை பெற்றால்தான் சமூகம் பொலிவு பெறும். என்று எழுதியுள் ளவர் அண்ணா.

ஆனால், மேலே நாம் தொட்டுக் காட்டியுள்ள படைப்புகளில் சிலவற் றைக்கூடப் படிக்காமல் - அண்ணா துரை எழுத்துகளில் பெண் உரிமை பிரதிபலிக்கவில்லை என்று வ.கீதா அவதூறாகப் பேசலாமா? இப்படிப் பட்ட நுனிப்புல் மேயும் ஆணவக் காரர்கள் இந்திய அரசின் சாகித்திய அகாடமியில் உறுப்பினராக இடம் பெற்று இருப்பது அந்த இலக்கிய அமைப்புக்கே இழுக்கு இல்லையா?

பெண்ணிய உரிமையில் எந்த அளவுக்கு அண்ணா அழுத்தமாக அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு - சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வரும் அண்ணாவைப் பற்றிய ஆய்வு நூல்களைப் படிக்க வேண்டும் வ.கீதா.

அந்த நிறுவனம் தழைத்து ஓங்குவதற்கு இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூபாய் பத்து லட்சம் வைப்புத் தொகையாக வைத்து அண்ணாவின் பெயரில் ஓர் அறக்கட் டளையை அங்கு ஆரம்பித்து அவ்வறக் கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் அண்ணாவின் பன்முக இலக்கியங் களைக் குறித்து இன்றைக்கும், என் றைக்கும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆராய்ச்சிப் படைப் புகள் வெளியிடுகிறது. இதை ஆழ்ந்து படிக்க வ.கீதா அவர்கள் முனைந்திடுக! அறிஞர்களைப் பற்றிப் பேசும் முன் தன்னைப்பற்றி அறிந்திடுக!

பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப் பெற்ற அந்த நிறுவனத்தின் நூல்களைப் படித்தாவது தமது எழுத்தாளர் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனப் பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு என்னும் அவரது வரலாற்று நூலை 1967லேயே எழுதிய இந்த 82 வயது அ. மறை மலையான், வ. கீதா அவர்களைக் கேட் டுக் கொள்கின்றேன்.

தமிழ் ஓவியா said...


பழத்தின் நன்மைகள்


எலுமிச்சம்பழம்: அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச் சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத் தால் உடனடியாக பேதி நின்று விடும். கடுமை யான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப் படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்ட மின் ஏ அதிக மாகவும், வைட்ட மின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண் ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படு கிறது. பல நாட் களாக நோயால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

காய்கறிகள்....

பழங்களைப் போலவே காய்கறிகளும் மனிதர் களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுதுமாக குணப்படுத்துகிறதோ இல்லையோ ஆனால், நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர் களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத் துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகை யான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப் பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்ச்சத்து நிரம்பியிருப் பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய்கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்ச்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Read more: http://viduthalai.in/page7/83561.html#ixzz371ZFs2nD

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆதிசங்கரர் கடவுளா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் சன்னதி உள்ளது காமாட்சியம்மன் உற்சவ மூர்த்தி பவனி வருமுன் ஆதி சங்கரர் சன்னதி முன் நின்று அவருடைய உத்தரவு பெற்றே வலம் வருகிறதாம்.

அப்படியானால் ஆதிசங்கரர் மனிதரா? அல்லது கடவுளே உத் தரவு கேட்டு செயல்படும் பெரிய கடவுளா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது இந்த அடிப் படையில்தானோ!

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆதிசங்கரர் கடவுளா?

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் சன்னதி உள்ளது காமாட்சியம்மன் உற்சவ மூர்த்தி பவனி வருமுன் ஆதி சங்கரர் சன்னதி முன் நின்று அவருடைய உத்தரவு பெற்றே வலம் வருகிறதாம்.

அப்படியானால் ஆதிசங்கரர் மனிதரா? அல்லது கடவுளே உத் தரவு கேட்டு செயல்படும் பெரிய கடவுளா?

கடவுளுக்கு மேலே பிராமணன் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியது இந்த அடிப் படையில்தானோ!

Read more: http://viduthalai.in/page1/83575.html#ixzz371abGBEC

தமிழ் ஓவியா said...


மத்தியப்பிரதேச பிஜேபி அரசு தொழில் நுட்பப் பணியாளர் தேர்வில் ஊழல்! ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சிக்கினார்கள்


அவர்களைக் காப்பாற்ற மோகன்பகவத் மத்தியப்பிரதேசம் விரைந்தார் போபால், ஜூலை 7_ மத்தியப்பிரதேசத்தின் தொழில் நுட்பப்பணி களுக்காக நடந்த தேர்வில் மாபெரும் ஊழல் நடந்தது சமீபத்தில் வெளிவந்தது. இந்த ஊழலில் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் மற்றும் மத்தியப் பிரதேச முதல மைச்சரின் மனைவி சாதனா சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த ஊழலில் தொடர் புடைய இரண்டு அமைச் சர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஆவர். ஊழலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர் வந்ததை அடுத்து இது குறித்து விளக்கம் தர மோகன் பகவத் கடந்த வாரம் உத்தரவிட்டதாக பத்திரிகைச் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசம் கேடா என்ற இடத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு வருகை புரிந்த மோகன் பகவத்தை முதலமைச்சர் சிவ்ராஜ் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப் பின் போது ஆர்.எஸ்.எஸ் பெயர் ஊழல் விவகாரத் தில் வந்தது குறித்து விளக்கமளித்ததாக கூறப் படுகிறது.

கூறுவது இந்துஸ்தான் டைம்ஸ்

முதலமைச்சரை சந் தித்த பிறகு ஊழலில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் மபி அமைச்சர்களுமான பையாஜி ஜோஷி, மற்றும் சுரேஷ் சோனி ஆகி யோரையும் அழைத்து இந்த ஊழல் குறித்து விளக்கம் கேட்டதாக பிரபல ஆங்கிலப்பத்தி ரிகை இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை மறுத்துப் பேட்டியளித்த சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியபோது நான் மரியாதை நிமித் தமாகத்தான் மோகன் பகவத்தை சந்தித்தேன். இது ஒரு பொதுவான நிகழ்ச்சி. சந்திப்பின் போது மோகன் பகவத்திடன் நான் ஊழல் குறித்து பேசவும் இல்லை, அதே நேரத்தில் ஊழல் தொடர்பாக மோகன் பகவத் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. மற்ற இரண்டு அமைச்சர்களும் ஆர். எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்கள் ஆகவே அவர்களும் மரியாதை நிமித்தமாகவே மோகன் பகவத்தை சந்தித்தனர். வியாபம் அமைப்பில் நடந்த ஊழல் என்பது ஆதாரமில்லாத குற்றச் சாட்டாகும். எனது தலைமையிலான அரசுக்கு அவப்பெயர் வாங்கித் தர வேண்டும் என்ற நோக் குடன் சாதாரணமான ஒரு விவகாரத்தை காங்கிரஸ் கட்சி பெரிதுபடுத்துகிறது. 3 லட்சத்து 58 ஆயிரம் ஆணையில் வெறும் 228 பதவிகளில் தான் ஊழல் நடந்துள்ளது. இதைபெரிது படுத்தத்தேவையில்லை என்று கூறினார். Madhya Pradesh Professional Examination Board
என்ற வியவசாயிக் பரிக்ஷா மண்டல் (வியாபம்) ஊழல் மத்தியப்பிரதேச அரசுப்பணி தேர்வாணை யத்தில் மாபெரும் ஊழல் நடந்த விவகாரம் மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு வெளியானது. இதனை அடுத்து நடை பெற்ற விசாரணையில் தேர்வாணையத்தில் ஊழல் நடந்திருப்பது உறு தியானது. இந்த ஊழலில் விவகாரத்தில் ஆர்.எஸ். எஸ் மத்தியப்பிரதேச தலைவர் பெயர்களும் வெளியானது. இந்த ஊழல் விவகாரம் குறித்து சிவ்ராஜ் சிங் பதவி விலகவேண்டும் என்றும் இந்த ஊழல் குறித்து சி.பி.அய் விசாரணை செய்யவேண்டும் என்று மபி காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா கூறி யிருந்தார்.

இந்த நிலையில் மோகன் பகவத் சந்திப்பு மத்தியபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை உண் டாக்கியுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/83573.html#ixzz371amRF00

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச் சுண்டை என்று கசப்புடனும், கசப்பின்றியும் கிடைக் கின்றது. கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக் காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) ஆண்டிற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது.

அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக் காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.

கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் செரிமானத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும்.

மலச்சிக்கலைப் போக்கி செரிமானக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண் களை ஆற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.

மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.

இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடு களை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடி யாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

Read more: http://viduthalai.in/page1/83607.html#ixzz371d2vvRM

தமிழ் ஓவியா said...

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பூண்டு

ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது. செரிமானமின்மை, சளி பிடித்தல், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதன பொருளாக பயன்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவக் குணங்கள் உள்ளன. பூண்டில் அலிசின் என்ற ஆன்டி ஆக்சி டண்ட் உள்ளது. இந்தச் சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Read more: http://viduthalai.in/page1/83607.html#ixzz371dWegRC

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page1/83581.html#ixzz371dorGH4

தமிழ் ஓவியா said...


இளவரசன் நினைவு ஒரு சிந்தனை!




தருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்கள் எரியூட்டப்பட்டன (7.11.2012) 226 வீடுகள் தீயின் கோரப் பசிக்கு இரையாயின.

உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள கழகத் தோழர்களுடன் நேரில் சென்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (14.11.2012).

நேரில் கண்ட உண்மைகளின் அடிப்படையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிக்கை காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அளிக்கப்பட்டது (27.11.2012).

தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (9.12.2012).

பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பிரம்மாண்ட மான அந்த மாநாட்டில் பங்கேற்று ஆக்கரீதியான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அன்று காலையில் சிறப்பான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது; இது தொடர்பாக அரசு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இதுவரை அளிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன.

அங்கு நேரில் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தனிப்பட்ட பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக்கிய ஜாதீய வாதம் இதன் பின்னணியில் இருப்பதை அறிய முடிந்தது.

அதே பகுதியில் தாழ்த்தப்பட்டவரும், வன்னிய பிரிவைச் சேர்ந்தவரும் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டு காலமாக எவ்வித சிக்கலுமின்றி மக்கள் பேற்றுடன் மகிழ்ச்சியாக வாழக் கூடிய பல குடும்பத் தினரையும் காண வாய்ப்புக் கிடைத்தது.

பிரச்சினை நீதிமன்றம் வரை சென்ற நிலையில்கூட சம்பந்தப்பட்ட பெண் தன் காதலில் உறுதியாக இருந்து காதலனுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை நாடு அறியும்.

இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்புக்கு வித்திட்டு மக்கள் மத்தியிலே சமத்துவ சிந்தனை தமிழ் மண்ணில் ஊன்றப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட இயக்கமும்தான்.

ஜாதி ஒழிப்புத் திருமணங்களும் அதிகம் நடைபெறும் மண்ணாக தமிழ்நாடு இருந்து வருகிறது. திராவிடர் கழக மாநாடுகளில்கூட ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றும் வருகின்றன!

இதற்கென்றே சுயமரியாதைத் திருமண நிறுவனமும் பெரியார் திடலில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மன்றல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களுக்கான ஏற்பாடுக ளும் செய்யப்பட்டன.

விதவையர் திருமணம், மணவிலக்குச் செய்யப் பட்டோருக்கான திருமணங்களுக்கும் மன்றல் நிகழ்ச்சிகள் வழி வகுத்தன - இளைஞர்கள் மத்தியிலும் ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் இவற்றின் மூலம் தட்டி எழுப்பப்பட்டன.

இதற்கிடையே நல்லவிதமாகப் போய் கொண்டிருந்த இளவரசன் வாழ்க்கைப் பயணத்தில் புயல் வீச வழி செய்யப்பட்டது. அதன் விளைவு இளவரசன் தற்கொலை(?) செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை யாரும்மறுக்க முடியாது.

அந்த இளைஞன் மறைந்து ஓராண்டு ஓடி விட்டது; இதற்கிடையே தலித் மக்களை சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெறத் தொடங்கின.

இது ஒரு பார்ப்பன ஆதிக்கச் சமுதாயம். அந்த ஆதிக்கத்திலிருந்து அனைத்து வழிகளிலும் பெரும் பாலான பார்ப்பனர் அல்லாத மக்களை விடுதலை பெறச் செய்யவும், இம்மக்களுக்கு உரிய உரிமைகளை ஈட்டவும் தந்தை பெரியார் சமூகப் புரட்சியை நடத்தினார்.

பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார்; அப்படிப்பட்ட நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்கப் பிரிவினரான பார்ப்பனர்களையும் இணைத் துக் கொண்டு தனிமைப்படுத்தும் முயற்சி என்பது மிகவும் பிற்போக்குத்தனமான ஜாதீய நோக்காகும். எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்றால் வன்கொடுமை தடுப்புச் சட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத் துள்ளனர். அதனைத் திராவிடர் கழகம் உரிய முறையில் சந்திக்கும்.

இந்த ஜாதீய நோக்கு எடுபடவில்லை என்பது நாடாளுமன்றத் தேர்தலும் நிரூபித்து விட்டது.

இளவரசன் நினைவு நாளில் ஜாதி ஒழிந்த சமுதாயத்தை உருவாக்கும் திசையில் முழு மூச்சாகப் பாடுபட உறுதி எடுப்பதுதான் அந்த ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞனுக்கு செலுத்தும் தலை சிறந்த வீர வணக்கமாக இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page1/83582.html#ixzz371dwtOSV
7-7-14

தமிழ் ஓவியா said...

ஹெலிகாப்டர் ஊழல்: தொடக்கம் வாஜ்பேயி அரசே!


புதுடில்லி, ஜூலை 6-_ ஹெலி காப்டர் ஊழல் விவகாரம் திடீரென்று விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது. மாநில ஆளுநர்களாக இருந்த எம்.கே. நாராயணன் மற்றும் பி.வி.வான்சூ ஆகியோரிடம் மத்திய குற்றப் புலனாய்வுக்கழகம் (சிபிஅய்) நடத்தி யுள்ள விசாரணை விவரங்கள், இந்த ஹெலிகாப்டர் ஊழலுக்கு வித்திட்டதே பாரதீய ஜனதா கட்சித் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதனால் மன்மோகன் அரசில் நடந்ததாகக் கூறப்படும் மிகப்பெரும் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தற்போது அதற்கு முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் கதவுகளைத் தட்டத் துவங்கியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு, அரசின் அதி முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான பாதுகாப்பு வசதிகள் நிறைந்த ஹெலிகாப்டர்களை வாங்கு வதற்கு பாதுகாப்புத்துறை சார்பில் கடந்த 2005ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ. 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தம், இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் எனும்மிகப்பெரும் ஆயுதக்கம்பெனியி டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய விமானப் படைக்கு விநியோகம் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் வானத்தில் பறக்கும் உயரத்தின் அளவு ஏற்கெனவே இருந்த 6,000 மீட்டர் என்பதிலிருந்து 4,500 மீட்டர் என்ற அளவிற்குக் குறைக்கப் பட்டது. இப்படி உயரத்தை குறைப்ப தற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், இந்திய விமானப்படையின் அப்போதைய தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி மற்றும் விமானப் படை மற்றும் பாதுகாப்புத்துறை உயரதி காரிகள் பலருக்கும் லஞ்சம்கொடுத்தது என்பதே இந்த வழக்கின் பிரதானக் குற்றச்சாட்டு.

சி.பி.அய். விசாரணை

இந்த ஊழல் விவகாரம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி யின் போது மிகப்பெரும் பிரச்சனை யாக வெடித்தது. சிபிஅய் விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபி அய்யின் விசாரணையில் எஸ்.பி. தியாகி, மிகப்பெருமளவில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. தியாகியும் அவரது சில உறவினர்கள் மற்றும் அய்ரோப்பிய இடைத்தரகர்கள் உட்பட 13 பேரும் இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளி களாக சேர்க்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள சிபிஅய்யும், அமலாக்கப்பிரிவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இவர்கள் தவிர பாதுகாப்புத் துறை யின் மிக முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில், விமானப் படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டம் 2005 மார்ச் 1ஆம் தேதி நடந்தது என்பதும், அந்தக் கூட்டத் திலேயே ஹெலிகாப்டர்கள் பறக்கும் உயரத்தை குறைத்து ஒப்புதல் வழங் கப்பட்டது என்பதும் சிபிஅய் விசா ரணையில் தெரியவந்தது. மேற்கண்ட கூட்டத்தில் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன் மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் பொறுப்பிலிருந்த வான்சூ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அவர்களது முன்னிலை யிலேயே, ஹெலிகாப்டர்களின் உயரத்தைக் குறைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட இருவரிட மும் விசாரணை நடத்துவது என சிபிஐ முடிவு செய்தது. ஆனால், இது தெரியவந்தபோது எம்.கே.நாராயணன் மேற்குவங்க ஆளுநர் பொறுப்பிலிருந் தார். வான்சூ, கோவா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்தார். அரசியல மைப்புச்சட்ட பொறுப்பான ஆளுநர் பதவியில் இருக்கும் இரண்டு பேரை ஊழல் வழக்கில் விசாரணை நடத் துவதற்கு முந்தைய மன்மோகன் சிங் அரசு அனுமதி மறுத்தது. ஆனால் மோடிஅரசு பதவியேற்றதும், ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் அவர்களி டம் விசாரணை நடத்தலாம் என்று சிபிஅய்க்கு அனுமதி அளித்தது.

பிரதமர் வாஜ்பேயி காலத்தில் தொடக்கம்

இதைத்தொடர்ந்து ஜூன் மாத இறுதிவாக்கில் எம்.கே.நாராயணனிட மும் வான்சூவிடமும் சிபிஅய் விசா ரணை நடத்தியது. இந்தவிசாரணை யில் தெரியவந்த விவரங்கள், விசாரணைக்கு அனுமதி அளித்த பாரதீய ஜனதா கட்சிக்குதற்போது ஆபத்தாக மாறிவிட்டது. விசாரணை யின் போது, அதிமுக்கிய பிரமுகர் களை அழைத்துச்செல்லும் விமானப் படை விமானங்களின் பறக்கும் உயர அளவை குறைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்ததே 2003ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட் சியில் தான் என்று வான்சூ சிபிஅய் யிடம் தெரிவித்தார். வாஜ்பாய் தலை மையிலான அந்த அரசின் பாதுகாப்பு ஆலோசகராக பாஜகவிற்கு நெருக் கமான உயரதிகாரியாம் பிரிஜேஷ் மிஸ்ரா பொறுப்பு வகித்தார். அவரது உத்தரவின் பேரிலேயே 2003ஆம் ஆண்டு இத்தகைய முடிவுகள் எடுக்கப் பட்டன என்றும் அந்தமுடிவுதான் 2005ஆம் ஆண்டுஅமலான ஒப்பந்தத் தில் அப்படியே இடம்பெற்றது என்றும் வான்சூவின் வாக்குமூலத்தில் தெரிய வந்தது.

விமானப்படைக்கு இத்தகைய ஹெலிகாப்டர்களை வாங்குவதில் உயர அளவும், தரமும் எப்படி இருக்க வேண்டும் என்று 1970களிலேயே மத்திய அரசின் பாதுகாப்புத்துறை விரிவான விதிமுறைகளை வரையறை செய்துள்ளது. ஆனால் அந்த விதிமுறைகளை முதல் முறையாக மாற்றியது 2003ஆம் ஆண்டுதான் என்றும் வான்சூவின் வாக்குமூலத்தில் தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து வான்சூவும் எம்.கே.நாரா யணனும் ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வான்சூவின் வாக்கு மூலத்தின்படி, ஹெலிகாப்டர் ஊழ லின் துவக்கப்புள்ளியே வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் உருவானது என்று தெரியவந்துள்ளது. எனவே இதை விசாரித்து வரும் சிபிஅய், வாஜ்பாய் ஆட்சியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பாஜக வட் டாரத்திலும் மோடி அரசின் வட்டா ரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/83583.html#ixzz371eADLUk

தமிழ் ஓவியா said...


சத்தீஸ்கரில் இந்துமத ஆட்சியா?

சத்தீஸ்கரில் இந்துமத ஆட்சியா?

பிற மதத்தவர்கள் உள்ளே நுழையக் கூடாதாம்!

சிரிஸ்குடா (சத்தீஸ்கர்), ஜூலை 8_ - சங் பரிவாரத்தின் மதப் பிரிவான விஸ்வ இந்து பரீசத் அமைப்பு நடத்தி வந்த ஆவேசமான மத வெறி பிரச்சாரத்தின் விளைவாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்டர் மாவட்டத்தின் 50_க்கு மேற்பட்ட கிராமங்களில் இந்துமதம் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்த வர்கள், குறிப்பாக கிறிஸ் தவர்கள், நுழைவதற்கும், மதப்பிரச்சாரம் செய்வ தற்கும் அந்த கிராமங் களின் பஞ்சாயத்துகள் தடை விதித்துள்ளன. இந்தத் தடை கடந்த ஆறுமாதங்களாக நடை முறையில் இருந்து வருகிறது.

சத்தீஸ்கர் பஞ்சாயத் துராஜ் சட்டத்தின் 129 ஜி பிரிவின் படி கிராமங் களில் இந்து மதம் அல் லாத மதப்பிரச்சாரம், வழிபாடுகள் மற்றும் விளக்கவுரைகளுக்குத் தடை விதித்து 50_க்கு மேற்பட்ட பஞ்சாயத்துகள் உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளன என்று பஸ்டர் மாவட்ட விஎச்பி தலைவர் சுரேஷ்யாதவ் கூறுகிறார். பஸ்டர் மாவட்டத்தின் டோகாபால் வட்டத்தில் உள்ள சிரிஸ்குடா கிராமப் பஞ்சாயத்து மே 10 அன்று நடத்தப்பட்ட சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் இந்த உத்தரவைப் பிறப் பித்தது.

பிற மதப்பிரச்சாரகர் களின் கட்டாய மதமாற் றத்தைத் தடை செய்யவும், இந்து தெய்வங்களுக்கும், சடங்குகளுக்கும் எதிராக அவர்கள் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத் துவதைத் தடுக்கவும், இந்து மதம் தவிர்த்த பிறமதங் களின் பிரார்த்தனைகள், கூட்டங்கள், பிரச்சாரங் கள் உள்ளிட்ட மதநட வடிக்கைகளை சிரிஸ்குடா கிராம சபை தடை செய் கிறது என்று கூறப்பட் டுள்ளதாக இந்து நாளிதழ் கூறுகிறது. இந்தத் தடை உத்தரவின் நகல் ஒன்றும் அதனிடம் உள்ளது.

இந்து மதத் திரு விழாவுக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் நன்கொடை அளிக்கமறுத்ததைத் தொடர்ந்து இந்த பிரச்சினை சிரிஸ்குடாவில் தொடங்கியது. அவர்கள் நன்கொடை தர மறுத்து விட்டனர். அண்மையில் இக்கிராமத்தில் சில கிறிஸ் தவர்கள் தாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப் பட்டது. அவர்களுக்கு கிராமப்பஞ்சாயத்து உத்தர வின்படி ரேசன் பொருட் கள் மறுக்கப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு மேலாக கிராமத்தில் ரேசன் பொருட்கள் எங் களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ரேசன் பொருட் களை வாங்கச் சென்ற பத்து கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டனர் என்று 2002ஆம் ஆண்டில் கிறிஸ் தவ மதத்துக்கு மாறிய குடும்பத்தைச் சேர்ந்த சோனுரு மாண்டவி குற்றம் சாட்டுகிறார். கிராமத்தினர் தங்கள் பிரச்சினைகளை எங்களி டம் கொண்டு வந்தனர். விஎச்பி சட்டம் பற்றி கூறியது. இப்போது கிரா மப் பஞ்சாயத்துகள் உத் தரவுகளைப் பிறப்பித்துள் ளன. இப்போது இந்த உத்தரவை நிறைவேற் றுவது மாவட்ட நிர்வா கத்தின் பொறுப்பாகும். இல்லாவிடில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.

தடையுத்தரவை நிறை வேற்ற உத்தரவிடும்படி நாங்கள் ஆளுநரையும், முதல்வரையும் அணுகு வோம் என்று சுரேஷ் யாதவ் கூறுகிறார். இந்தத் தடை சட்டவிரோதமா னது என்றும், அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சத்தீஸ்கர் கிறிஸ்தவ அமைப்பினர் இதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளனர். கட்டப்பஞ்சாயத்துகளில் நடப்பது போல் இங்கும் நடந்துள்ளது. ஒரு பஞ்சாயத்து சட்டத்தின் அடிப்படையில் எங்களு டைய மத நடவடிக்கை களை தடுக்கவேண்டும் என்று நீங்கள் எப்படி கேட்க முடியும் என்று இந்த அமைப்பின் தலை வர் அருண் பன்னாலால் கேள்வி எழுப்புகிறார்.

அரசியல் சட்டம் அனைவருக்கும் மதச்சுதந் திரம் அளித்துள்ளது என்று அவர் கூறினார். பஸ்டரில் மதமாற்றம் ஒரு பெரிய விஷயமில்லை . கிராமத்தினர் அனைவருக் கும் இடையூறின்றி ரேசன் பொருட்கள் கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்து வோம் என்று மாவட்ட ஆட்சியர் அங்கிட் ஆனந்த் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/83636.html#ixzz371euGqvV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


சண்டை

ஈசனுக்கு தன் கண்ணை கொடுத்த கண்ணப்பநாயனாரின் பக்தி பலருக்கும் தெரியும். திருமால் தனது கண்ணை தந்த கதை தெரியுமா?

திருமாலுக்கும், திதீசி எனும் சிவபக்தருக்கும் பகை ஏற்பட்டதாம். இரு வருக்குமான சண்டை யில், திருமாலின் அனைத்து பாணங்களும் வீணாகின. ததீசியை அவரது சிவபக்தி காத்தருளியது.

இறுதியாக, சக்கரா யுதத்தைப் பிரயோகித் தார் திருமால். அதில் இருந்தும் ததீசி தப்பினார். பிறகு திருமால், சிவ பூஜையில் ஈடுபட்டார். தினமும் ஆயிரம் மலர் களால் வழிபட எண்ணி னார்.

ஒரு நாள்... பூ ஒன்று குறைந்து போக, தனது கண்ணை பெயர்த்த ஆயிரமாவது பூவாக சிவனாருக்குச் சமர்ப்பித் தார். அந்த நிமிடமே சிவனார் திருக்காட்சி தந்தார். இழந்த கண்ணை யும் தந்து, சுதர்சன கண்ணன் என்றும் பெயர் சூட்டி அருள்புரிந்தார் என்கிறது தல புராணம்.
இந்தத் தல புரா ணத்தை வைணவர்களி டம் சொல்லிப் பாருங்கள் - ஒரு மொத்து மொத் துவார்கள். விஷ்ணுவை விட சிவன் பெரிய ஆள் என்பதற்காகக் கட்டி விட்ட கதை என்று கூடச் சொல்லுவார்கள்.

இந்துமதக்காரர்கள் முதலில் இந்தச் சண்டை யிலிருந்து வெளிவரட் டும் பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/83635.html#ixzz371f5F4ew

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரின் பிழைப்புக்கு கட்டப்படும் கோவில்


தங்களுடைய பிழைப்பை நடத்துவதற்காக பார்ப் பனர்கள் மக்களுக்கு தீங்கு செய்வதற்கும் இடையூறு செய்வதற்கும், அஞ்ச மாட்டார்கள் என்பதற்கும், சட்டத்தை மதிக்காமலும், சட் டத்தை மீறியும் காரியங் களை செய்ய தயங்க மாட் டார்கள் என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

தற்போதுகூட கோவை மாநகராட்சி 51ஆம் வார்டு 100 அடி சாலையிலிருந்து 9ஆவது வீதிக்கு திரும்பும் இடதுபுறத்தில் சாலையை ஆக்கிரமித்து பத்து அடி அகலத்தில் முத்துமாரியம்மனுக்கு ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையை மறித்து, தட்டி மறைப்புகள் வைக்கப்பட்டுள்ள தோடு மேற்கண்ட சட்டவிரோத கோவிலுக்கு நிதி கொடுக்கவேண்டிய மிகப் பெரிய நெகிழ்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டப்படுவது குறித்து விசாரித்தபோது, பார்ப்பனர் ஒருவர் பிழைப்பில்லாமல் இருப்ப தாகவும் அவருக்கு பிழைப்பை ஏற் படுத்திக் கொள்ள அவர் கொடுத்த ஆலோசனையின்படி இந்த சட்ட விரோதக் கோவில் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிய வந்தது.

தன்னுடைய பிழைப்புக்குகூட, தன்னுடைய முதலீடு இல்லாமல் பொது மக்களின் பயன்பாட் டிற்குரிய சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்டி வரும் பார்ப்பனரின் புத்திக் கூர்மை யாருக்கு வரும்.

என்னே பார்ப்பனர்களின் புத்தி.

தகவல்: கண்ணன்

Read more: http://viduthalai.in/page1/83640.html#ixzz371fELcMI

தமிழ் ஓவியா said...


இனி ஒரே இனம் தான் இலங்கையில்!


இலங்கைத் தீவில் இரண்டு இனங்கள் என்பது எல்லாம் கிடையாது, ஒரே இனம்தான் உண்டு - அது சிங்கள இனம்தான் என்பதை நிலைப்படுத்தும் நோக்கத்தோடுதான், ஆங்கே சிங்கள இனவெறி ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்களர் மயமாக்கப்பட்டு வருகிறது; அநேக மாக முழுப் பணிகள் இந்தத் திசையில் முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் கையொப்பமிட்ட ஒப்பந் தப்படி தமிழர்களின் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாகாணமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்ன நடந்தது அங்கே? சிங்கள இனவெறி அமைப்பான ஜெவிபியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கொன் றைத் தாக்கல் செய்யச் சொல்லி, இரு மாநில இணைப்பு கிடையாது என்ற ஒரு தீர்ப்பைப் பெற்றுக் கொண்டாகி விட்டது.

2009 முள்ளி வாய்க்கால் கொடும் போரின் விளைவாக மாண்டு மடிந்தனர் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள்; சொந்த வீடுகளை, ஊர்களை விட்டு வெளியேறியோர் ஏராளம்! அப்படி வெளியேறிய மக்கள் அய்ந்தாண்டுகள் கழிந்த நிலையிலும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத ஒரு சூழ் நிலையை இலங்கை சிங்கள அரசு உருவாக்கி விட்டது.

தமிழர் பகுதிஎல்லாம் இராணுவ ஆக்கிரமிப்பு - சிங்களவர் குடியேற்றம்! 2013 டிசம்பரில் அய்.நா.வின் உத்தரவுப்படி யாழ்ப் பாணம் முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்ற சிறப்புப் பிரதிநிதி சலோகா பியானி ஆய்வு அறிக்கையினை அளித்துள்ளார். 29 பக்கங்களைக் கொண்ட அறிக்கை மனித உரிமை சபைக்கு அளிக்கப் பட்டது (20.6.2014).
இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதபடி இலங்கையின் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. நில அபகரிப்பு மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம், நிலை கொண்டுள்ள இராணுவத்தின்பிடி இவற்றின் காரணமாக தங்களின் அவல நிலையைத் துணிந்து வெளிப்படுத்தும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை.

மேலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் களின் நிலப் பகுதிகள் இராணுவத் தேவைகளுக்காக என்று கூறிக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 32 முக்கியமான இராணுவ முகாம்கள் அங்கு நிலை கொண்டுள்ளன.

தமிழ் மக்களின் நிலங்களில் புத்தர் சிலைகள் நிறுவப் படுகின்றன. (எத்தகைய மனிதகுல நேயத்திற்காக உயர் தத்துவங்களை வழங்கிய மாபெரும் அறக்கோட்பாட்டுச் சிந்தனையாளர் கவுதம புத்தர் எந்தக் காரியத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறார் என்பதை எண்ணும் பொழுது ரத்தக் குழாய்கள் வெடிக்கும் என்ற நிலைதான்!)

சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதவர்கள் பெண்களும், சிறுவர்களும் பெரும் சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் இராணுவத்தின ரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த விவரங்களை எல்லாம் இடம் பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளை மய்யமாக கொண்ட பிரதிநிதி சலோகா பியானி தமது அறிக்கையில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
இப்பொழுது இன்னொரு பயங்கர வேலையில் அதிபர் ராஜபக்சே இறங்கியுள்ளார்.

சம்புர் பகுதி என்பது ஈழத் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்த நிலப்பகுதி. விவசாயம் கொழிக்கும் செல்வப் பூமி இது.

ராஜபக்சேயின் கண்கள் உறுத்தாதா? ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தத் திட்டம் தீட்டி விட்டார்.

அங்கு ஒரு அனல் மின் நிலையத்தை இந்திய அரசின் துணையுடன் நிறுவும் வேலையில் இறங்கியுள் ளார். அதற்காக 1700 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் தமிழர்களின் நிலங்கள் தமிழர்களுக்கு ஆகாமல் இருக்க நம் கை விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் நயவஞ்சக வேலையில் இறங்கி விட்டனர். (இதெல்லாம் இந்திய அறிவு ஜீவிகளுக்கு எங்கே இருந்து தெரியப் போகிறது? அப்படியே தெரிந்தாலும் கேவலம் ஈழத் தமிழர்கள் தானே என்ற நினைப்பு எப்பொழுதும் உண்டே!)

அனல் மின் நிலையம் என்று வந்து விட்டால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து, முழுக்க முழுக்க இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் பூர்வீகத் தமிழ் மண் வந்து சேர்ந்து விடுமே!
தங்கள் செல்வச் செழிப்பான மண் பறிபோவது பற்றி இலங்கை உயர்நீதிமன்றத்தில் அம்மக்கள் வழக்கு ஒன்றையும் போட்டுப் பார்த்தார்கள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற பாணியில், மின் நிலையம் அமைப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேறு இடத்தில் குடியேற்றும்படி உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது! (தெரிந்ததுதானே - எதிர்ப்பார்க்கப்பட வேண்டியது தானே!)

இந்தப் போக்குத் தொடர்ந்தால் சிங்கள இனம் மட்டும்தான் இலங்கையில் என்ற அந்த ஒற்றைத் திட்டம் நம் கண் முன்னாலேயே நிறைவேறிவிடும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page1/83644.html#ixzz371fTTW9x

தமிழ் ஓவியா said...


கால்பந்து


உலகக் கால்பந்தாட் டத்தில் ஜெர்மனி பிரே சிலுக்கு இடையிலான போட்டியில் பிரேசில் வெற்றி பெற வேண்டி, ஊடோ மந்திரவாதிகள் (பொம்மைகளை வைத்து எதிரியை மடக்கும் மந்திர மாம்) நான்கு நாட்களாக ஜெர்மனிய வீரர்களின் உருவங்களைச் செய்து அவர்களின் கால்களை கட்டிப்போட்டு மந்திர வித்தைகள் செய்தார்கள்.

இதனால் ஜெர்மனிய வீரர் கள் சரியாக விளையாடா மல் எளிதில் பிரேசில் வெற்றிபெறும் என்று ஊர் முழுவதும் விளம்பரம் செய்தார்களாம், ஆமைகள் மற்றும் நண்டு மந்தி ரங்கள் என பல மந்திர தந்திர வித்தைகள் செய்தும் பிரேசில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தொடரிலேயே 7 கோல்கள் வாங்கிய ஒரே நாடு பிரேசில்தான்.

இது குறித்து பிரேசில் ரசிகர் கூறியபோது மந்திர வாதிகள் தவறுதலாக பிரேசில் வீரர்களின் கால்களை கட்டிப் போட்டு விட்டனராம் ஆகையால் தான் பிரேசில் தோல்வி யடைந்தது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பார்களே அது இதுதான் போலும்!

பிரேசிலையும் காப்பாற்ற முடியவில்லை- மந்திர வாதிகளையும் காப்பாற்ற முடியவில்லை- அந்தோ பரிதாபம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் பிரேசில் கபேகா என்ற கடல் ஆமையை களத்தில் இறக்கி விட் டுள்ளது.

ஜூலை 4ஆம் தேதி தொட்டியில் பிரேசில் கொடி கட்டிய மீனை ஆமையார் சாப்பிட்டு சமர்த்தாக ஆருடம் கூறி வருகிறார். காலிறுதிப் போட்டியில் பிரேசிலின் மீனை சாப்பிட்டு அந்த அணி வெல்லும் என்று கணித்துள்ளது.

ஆனால் பாவம் ஆமையார் சோதிடம் பலிக்காமல் போனது; ஆமை தற்போது பொரி யலுக்கு தயாராகிறதாம்.

1994இல் உலகக் கால் பந்து காலிறுதிப் போட்டி சுவீடனுக்கும் ருமேனியா வுக்கும் இடையே நடை பெற்றது.

இரு அணிகளும் ஒவ்வொரு கோல் போட் டன; கூடுதல் நேரத்திலும் தலா இரு கோல்கள் போட் டன. பெனல்டி முறை யிலும் தலா நான்கு கோல்கள் போட்டன.

வேறு வழியின்றி சடன் டெத் முறை கடைப் பிடித்ததில் சுவீடன் வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த ருமேனியா அணியின் கேப்டன் ஜியார்ஜி ஹாஜி என்ன கூறினார் தெரியுமா?

எங்கள் பிரார்த்தனை பலிக்கவில்லை; கடவுள் சுவீடன் அணி பக்கம் இருந்துவிட்டான் என் றாரே பார்க்கலாம்!

திறமைக்கும், வீரத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடத்திலும் மூடநம்பிக்கையா? வெட்கக் கேடு!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83766.html#ixzz374cwGTMW

தமிழ் ஓவியா said...


காஞ்சி சங்கராச்சாரிகள்மீது அப்பீல் வழக்கு: உரிய நியாயம் தேவை


- ஊசி மிளகாய்

காஞ்சி சங்கராச்சாரியாரான ஜெயேந்திரர், அவரது அடுத்த வாரிசு விஜயேந்திர சரசுவதி முதலியவர்கள் முதல் குற்றவாளி இரண்டாவது குற்றவாளிகள் என்ற நிலையில் கூலிப்படையை ஏவி, காஞ்சி சங்கரராமனைக் கொலை செய்த (கோவிலில்) கொலை குற்ற வழக்கில், பிறழ் சாட்சியங்கள் பலவற்றை வைத்து அனைவரும் விடுதலை ஆயினர்.

ஏற்கெனவே இடையில் அதை விசாரித்த மாவட்ட நீதிபதியிடம் சங்கராச்சாரி பேசினார் என்பது போன்ற புகார்களும் ஏடுகளில் வந்தன.

இந்நிலையில் புதுச்சேரி (மாவட்ட) நீதிமன்றத்தினரால் விடுதலை செய்யப்பட்டது செல் லாது என்று சென்னை உயர்நீதிமன் றத்திற்கு காலந்தாழ்ந்தாவது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு முன் வந்திருப்பதை, நியாயத்தை விரும்பும் அனைவரும் வரவேற்பார்கள் என்பது உறுதி.

ஏராளமான சாட்சிகள் பல்டி அடித்தார்களே, அவர்கள்மீது ஏன் சட்டப்படி இன்னமும் கிரிமினல் வழக்குகள் பாயவில்லை?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா?

இந்தமேல் முறையீட்டு வழக்கினைக் கூட, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையாக, கவனமாக நடத்திட முன் வர வேண்டும் புதுவை அரசு!

தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் துணிச் சலை - இருவரையும் கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்து வைத்து, சட்டம் தனது கடமையை பாரபட்சம் பாராது செய்தது என்ற நிலையை உலகமே வியந்து பாராட்டியது. அவரும் இதில் உரிய அக்கறை காட்ட வேண்டாமா?

நீதிக்குத் தலை வணங்கும் நிலையை புதுவை அரசு பின்பற்றி, நியாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிட வேண்டியது அவசரம், அவசியம் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/83773.html#ixzz374d6coj5

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


கால்நடைக் கோவில்

குமரி மாவட்டம் அளப்பன்கோடு எனும் ஊரில் ஈசுவரகால பூதத்தான் கோவில் உள்ளது. அந்த வட்டாரத்தில் மாடுகளோ, ஆடுகளோ கன்று ஈன்றால் அதன் முதல் பாலை இந்த சாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இது கால் நடைகளின் நோய் தீர்க்கும் கோவிலாம்.

கால்நடைகளுக்கென்று கோவில் இருக்கும் பொழுது கால்நடை மருத்துவ மனைகள் ஏன்?

சமீபத்தில் தமிழ்நாட்டில் Foot and Mouth என்ற நோய் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்து போயிற்றே - இந்தக் கடவுள் எங்கே போனாராம்?

Read more: http://viduthalai.in/e-paper/83768.html#ixzz374daJqPz

தமிழ் ஓவியா said...


இருந்து வரும்


பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும்.

- (விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/83780.html#ixzz374diw1ku

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கில்மேல் முறையீடு


காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் ஒரு பட்டப் பகலில் கோயில் சன்னதி யிலேயே படுகொலை செய்யப்பட்டார் (3.9.2004).

இந்தக் கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி, மடத்தின் மேலாளர் சுந்தரேசய்யர், விஜயேந்திரரின் உடன் பிறப்பு ரகு உட்பட 24 பேர்கள்மீது அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி (தீபாவளியன்று) ஆந்திரத்தில் இருந்த ஜெயேந்திரர் கைதானார். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர்.

என்றாலும் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தனர். செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் இவ் வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது எனக் கூறி வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த 2005 ஆம் ஆண்டு புதுவை அமர்வு நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக தேவதாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் இறந்தார். வழக்கு விசாரணை முடிந்து கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு புதுச்சேரியில் வழங்கப்பட்டதால் மேல் முறையீட்டை புதுவை அரசுதான் செய்யவேண்டும். மேல்முறையீடு செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, புதுவை அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்தது. அதற்கான ஒப்புதலுக்காக கோப்புகளை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது அக்கோப்பில் ஆளுநர் கையொப்ப மிட்டார்.


தமிழ் ஓவியா said...

இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. காலங் கடந்தாவது மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

காரணம் பட்டப் பகலில் ஒரு கோவிலில் நடைபெற்ற படுகொலை! இதில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களோ பெரும் புள்ளிகள்; பாதிக்கப்பட்டவர்களோ சாமான்யர்கள்.

எந்த வழக்கிலும் கேள்விப்பட்டிராத ஒரு அதிசயம் இந்த வழக்கில் நடந்துள்ளது.

189 சாட்சிகளில் 81 பேர் பிறழ் சாட்சிகள் என்றால் என்ன சாதாரணமா? இவ்வளவுக்கும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நுணுக்கமாக ஒரு வேலையைச் செய்தார்.

பொதுவாக காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும். நீதிமன்றங்களில் அந்தச் சாட்சிகள் காவல்துறையினரின் அச்சுறுத்தலால் தான் அவ்வாறு சொல்ல நேர்ந்தது என்று பிறழ் சாட்சியாக மாறி விடுவார்கள்.

ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் காவல்துறை அதிகாரி பிரேம்குமார் நீதிபதி முன்னதாக சாட்சியங்களைப் பதிவு செய்தார். இந்த நிலையிலே பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதான எந்தவித நடவடிக்கையும் இல்லாமற் போனது ஏன்? என்பது முக்கிய கேள்விகளாக மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஏற்பட்ட அனுப வத்தை வைத்து நீதியரசர் திரு கே.என். இராதா கிருஷ் ணன் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.

தற்போது முக்கியமான சில வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விடும் போக்கு அதிகரித்து வருகிறது. பணம் மற்றும் கவர்ச்சியான சில சலுகைகளுக்கு மயங்கிப் பிறழ் சாட்சியர்களாக மாறி விடுகின்றனர்; இது ஆரோக்கியமானதல்ல. இந்தப் போக்கு அதிகரித்தால் நீதித்துறைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து போய்விடும். இந்த நடைமுறையை அனுமதிக்கக் கூடாது. பிறழ் சாட்சியாக மாறுவோரைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கவும் கூடாது. உண்மையை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும், அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்தான் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி திரு கே.எஸ். இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து இந்த வழக்கில் செயல்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.

இதில் என்ன கொடுமையென்றால் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவியும், மகனும்கூட பிறழ்சாட்சியாக மாறினர் என்பதுதான். தாங்கள் அச்சுறுத்தப்பட்டதால் அவ்வாறு சொல்ல நேரிட்டது; இப்பொழுது உண்மையைக் கூறத் தயாராகி விட்டோம்.

மீண்டும் எங்களை விசாரிக்க வேண் டும் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படாதது ஏன் என்பதும் மிக முக்கியமான கேள்வியாகும்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே சங்கரராமன் கொலை வழக்கில் சங்கரமடத்திற்கு அநீதி நடந்துள்ளது என்று, திரு. சோராமசாமி இந்தியா டுடே இதழுக்குப் பேட்டி அளித்தார் (9.2.2005). தீர்ப்பு வழங்கிய பிறகும் துக்ளகில் வரிந்து கட்டிக் கொண்டு எழுதினாரே பார்க்கலாம். (11.12.2013)

வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே திருவாளர் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் தொடர்ந்து நான்கு கட்டுரைகளை அனல் பறக்க எழுதினார் (28.11.2013).

தீர்ப்பு வந்த நிலையில் சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள் பார்வை! என்று தினமணி சிறப்புக் கட்டுரையில் (28.11.2013) எப்படியெல்லாம் எழுதித் தள்ளியது. ஆனந்த விகடனும் (11.12.2013) தினமணிக்குச் சளைக்கவில்லை.

வேலூர் சிறையில் இருந்த காஞ்சி ஜூனியர் சங்க ராச்சாரியாரை தனது காரில் ஏற்றிக் கொண்டு காஞ்சி மடத்தில் கொண்டு வந்து விட்டவர் இந்து என். ராம்.

சங்கராச்சாரியார் ஒரு மடத்தின் தலைவர், துறவி; எனவே அவரை எல்லோரையும் போல் விசாரிக்கக் கூடாது. அவரைத் தனியாக ஒரு மாளிகையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி (தி இந்து 18.11.2004).

நிலைமை இப்படி இருக்கும் பொழுது, இவ்வழக்கு மேல் முறையீட்டுக்கு உரியது என்று பெரும்பாலான மக்கள் எதிர்ப்பார்ப்பது நியாயம்தான்; இதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/83781.html#ixzz374ecuh4f

தமிழ் ஓவியா said...


மீன் மருந்தா? பிரசாதமா? தெலங்கானாவில் மக்கள் நாத்திக அமைப்பு கோரிக்கை


கரீம்நகர், ஜூலை10_ மக்கள் நாத்திக அமைப்பு தெலங்கானா மாநிலக் குழுமம், கர்நூல், கமலாபூர் மண்டல், கமலாபூர், கரீம் நகரில் மாநிலத் தலைவர் ஜீ.டி.சாரையா செய்தி யாளர்களைச் சந்தித்து தெலங்கானா பகுதியில் பத்தினி சகோதரர்கள் நடத் திவரும் மீன் வைத்தியத்தைத் தடை செய்க! பத்தினி சகோ தரர்களைக் கைது செய்ய கோரி உள்ளார். அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், மாநிலத் தலைநகரில் நடுப் பகுதியாம் நாம்பள்ளியில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக குமுகாயத்தினரையும், மருத்துவ குமுகாயத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை; மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஈளை (ஆஸ்துமா) நோயைப் போக்குகிறோம் என்று பசப்பி, பத்தினி சகோதரர்கள் செய்யும் அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான சிகிச்சைக்கு எதிராக, மக்கள் நாத்திக சமாஜம் போர்க்கொடி உயர்த்துவ தோடு, வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறது;
பத்தினி சகோதரர்களின் வீட்டு முன் மீன் மருந்து தரப்படுவதை முந்தைய அரசு வாக்கு சேகரிப்புக் கண் ணோட்டத்தில், பத்தினி சகோதரர் களுக்கு சற்றொப்ப கோடி உருபா மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்ததுடன், மிருக சீர அறக் கட்டளை என்பாருக்கு உரிமமும் உவந்து தந்தது; தொலைதூரப் பகுதி மக்களும் ஆயிரக் கணக்கான தொகையையும் அளித்து உடல், உள்ள நலத்தையும் கெடுத்துக் கொள் கிறார்கள்; மீன் மருந்தை விழுங்கிய இலட்சக் கணக்கான மக்களில் ஒருவருக்குக் கூட இளைப்பு (ஆஸ் துமா) நோய் குணமாகவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக் கப்பட்டுவிட்டது; மீன் மருத்துவம் என்பது மருத்துவம் பயிலும் மாணாக் கர்களை அவமதிக்கும் செயலே என்பதில் எள்ளவும் அய்யமில்லை.

மீன் மருத்துவம் செய்து கொள்ள வருபவர்களுக்கு தமக்கு என்ன மருந்து கொடுக்கிறார்கள் என்பதே தெரியாது; மருந்து தயாரிப்புச் சட்டத்தின்படி, என்ன மருந்து கொடுக்கப்படுகிறது, அதன் உள்ளடக்கம் என்ன, அதில் கலக்கப்படும் மருந்துகள், மூலப் பொருட்கள் என்னென்ன என்பது தெளிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக் கைகள் எதுவும் இல்லாத போது, அது சட்ட விதிகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கும் செயலே! நோயாளி எடுத்துக் கொள்ளும் மருந்தில் என்னென்ன உள்ளடக்கங் கள் உள்ளன எனத் தெரிந்து கொள் ளும் உரிமையை சட்டம் வழங்கி யுள்ளது; இது குறித்து பத்தினி சகோதரர்களிடம் வினவியபோது, பிரச்சினையை முற்றிலுமாகத் திசை திருப்பி, சிகிச்சைக்கு வரும் மக்களை 'எடுப்பார் கைப்பிள்ளையாக நடத்துவது மிகவும் கொடுமையாகும்.


தமிழ் ஓவியா said...

நயன்மை மன்ற உத்தரவுகளின்படி, இந்த மீன் மருத்துவம் மருந்து அறிவியல் ஏற்றுக் கொள்ளக் கூடிய மருந்தே அல்ல என்பது அய்யத்துக் கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதனையடுத்து, பத்தினி சகோ தரர்கள், இது மருந்து அல்ல, பிரசாதம் என பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிட்டனர்; இந்திய அரசியல் சட்டம் 51எ (ஹெச்) பிரிவைக் கேவலப்படுத்தும் செயலே இது; மாநில அரசு இதனை முற்றிலுமாகப் புறந்தள்ளியதோடல்லாமல், ஆண்டு தவறாமல், 5 தொடங்கி 8 டன் வரை மீன்களை மிருக சீர அறக்கட்டளைக் குத் தாரை வார்ப்பது கொடுங் கோன்மை ஆகும். இப்படி நாலா பக்கங்களிலும் தோண்டித் துருவி சலித்து எடுப்பதால், செய்வதால் மீன் இனத்துக்கு ஏற்படும் இழப்பு குறித்து, வல்லுநர்கள் ஏடுகள் வாயிலாக எடுத்துக் கூறியும் பயனில்லை; நாய்க் கடியால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டுகொள்ளாமல், அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான மீன் மருத்துவத்துக் குத் தரும் முதன்மையை நினைத்தால், கும்பி எரிகிறது; மக்கள் மீது இந்த அரசுக்கு எத்துணை அக்கறை(!) என் பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

எனவே, இந்த பத்தினி சகோதரர் களை மருத்துவம் பார்ப்பதற்கு அருகதை அற்ற வர்கள் என அறிவித்து, அவர்கள் மீது சட்டப்படி யான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கைகள்:

1. மீன் மருந்து சட்டத்துக்குப் புறம் பானதென அறிவிப்பதோடு, மிருக சீர அறக்கட்டளையையும் செல்லா ததென அறிவிக்க வேண்டும்;

2. அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறையைக் கடைப்பிடிக்கும் போலி மருத்துவர்களைக் கைது செய்து, அவர்தம் அமைப்புகளை இழுத்து மூட வேண்டும்;

3. நலத் துறையின் ஊடாக கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பாடல்கள், விவாதங்கள் போன்ற நடவடிக்கை களை மாநில அரசு பின்பற்ற வேண் டும்;

4. மிருக சீர அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுத்துக்கொண்டு, அதனை மக்கள் நலப் பணிகளுக் காகத் திருப்பிவிட வேன்டும்.
ஆகிய கோரிக்கைகள் தெலங் கானா அரசுக்கு மக்கள் நாத்திக சமா ஜம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் கரீம்நகரில் செய்தியா ளர்கள் சந்திப்பில் முன்வைக்கப்பட் டுள்ளது.

மக்கள் நாத்திக அமைப்பின் மாநிலத் தலைவர் ஜீடி சாரையா, கரீம் நகர் மாவட்ட அமைப்பாளர் எம். லக்ஷ்மண், மாநிலக் குழு உறுப்பினர் மில்கூரி சங்கர் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற் றனர்.

குறிப்பு: மீன் சிறந்தஉணவு என் பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத் தில் பிரசாதம் என்று சொல்லி பித்த லாட்டப் பிரச்சாரம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

Read more: http://viduthalai.in/page-2/83782.html#ixzz374fFdL8r

தமிழ் ஓவியா said...


வாங்கிடுவீர்! மோடி வாஷிங் பவுடர்


- குடந்தை கருணா

பாஜகவின் தலைவராக அமீத் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம். தேர்தலுக்குமுன், 2014 ஏப்ரல் 20ஆம் தேதி, உத்தரபிரதேசம் ஹர்தாய் எனும் ஊரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு முழங்கினார். என்னவென்று? நான் பிரதமராக வந்ததும், குற்றப் பின்னணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களையும், வெளியேற்றுவேன்; பாஜக உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் சரி; யாரையும் விட்டு விடப் போவதில்லை என முழங் கினாரே; மக்கள் எல்லாம், ஆகா, ஒரு புதிய அவதாரம் மோடி ரூபத்தில் தோன்றி, எல்லா கெடுதிகளையும் தீர்க்கும் என நினைத்தார்களே.

மோடியும் பிரதமராகிவிட்டார். உத்தரப் பிரதேசத்தில் முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பாஜக சட்ட மன்ற உறுப்பினர், சஞ்சீவ் பல்யான். அவரை, நாடாளுமன்ற உறுப்பினராக்கி, தமது அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் பதவியும் தந்து அழகு பார்க்கிறார்.

தற்போது, மோடியின் வலது கரம் என கருதப்படும் அமீத் ஷா, பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். அமீத் ஷாவின் இந்த நியமனம், முற்றிலுமாக, மோடியின் முடிவு என பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். யார் இந்த அமீத் ஷா? குஜராத் மாநிலத்தில், மோடியின் அமைச்சர வையில் உள்துறை அமைச்சர் மட்டு மல்ல; சட்டம், நீதித்துறை என 12 துறைகளுக்கு அமைச்சராக, செல் வாக்கோடு இருந்தவர்.

சொகராபுதீன் போலி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமீத் ஷா, உள்துறை அமைச்சர் பதவியை விட்டு விலக நேரிட்டது மட்டுமல்ல, அவர் கைதும் செய்யப்பட்டார். அவர் மீது என்ன குற்றச்சாட்டு தெரியுமா? கொலை, கடத்தல், பணப்பறிப்பு. 2004இ-ல் மும்பையில் இருந்து குஜராத் சென்ற இஷ்ரான் ஜகான் எனும் பெண், அவருடன் மூன்று ஆண்கள் கொலை யிலும் அமீத் ஷாவின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குஜராத்தில் வேலை பார்த்த பெண் மணியை வேவுபார்க்கும் விஷயத்தில், அமீத்ஷாவின் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலின் போது, உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாள ராக பாஜகவிற்கு அமீத் ஷா நியமிக்கப் பட்டார். உடன் அங்கே முசாபர் நகரில் கலவரம் வெடித்தது. சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் பழி வாங்கப்பட வேண்டும் என்ற வார்த்தையை உதிர்த்த வரும் இவரே! இத்தகைய, குற்றப்பின்னணி உள்ள வர்தான், தற்போது, மோடியால், பாஜகவின் தேசியத் தலைவராக பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்கப் பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன், குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளியேற்றப்படுவார் கள் என மோடி பேசினாரே; இப் போது, அமீத் ஷா, சஞ்சீவ் பல்யான் போன்றோருக்கு பதவி வழங்குகிறாரே என குழம்பத் தேவையில்லை;

இந்தக் குற்றத்தை அழிக்கும், புதிய வாஷிங் பவுடரை, மோடி வைத்துள் ளார். அதனைப் பயன்படுத்தி, அவர்களது குற்றத்தை நீக்கும் ஆற்றல் அந்த வாஷிங் பவுடருக்கு உள்ளது. இனி யாரும், கும்ப மேளாவிற்கோ, கும்பகோணம் மகாமகத்திற்கோ சென்று பாவத்தைக் கழுவ பன்னி ரெண்டு ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை;

நமது பிரதமர் மோடி வசம், உள்ள வாஷிங் பவுடரை பயன்படுத்தினாலே போதும்; பாவங்கள் எல்லாம் உடன டியாக நீங்கும். பதவி கிடைக்கும்.

வாங்கிடுவீர்; மோடி வாஷிங் பவுடர்.

Read more: http://viduthalai.in/page-2/83784.html#ixzz374frXDss

தமிழ் ஓவியா said...


காந்தியார் கொலை வழக்கு ஆவணம் அழிப்பு? நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு


புதுடில்லி, ஜூன் 10_ காந்தியார் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப் பட்டதாக கூறப்படும் விவ காரத்தில் பிரதமர் நரேந் திரமோடி விளக்கம் அளிக் கக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று டில்லி மாநிலங் களவையில் கடும் அமளி யில் ஈடுபட்டனர்.

பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றவுடன் நீண்ட காலமாக உள் துறை அமைச்சகத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு பழைய ஆவ ணங்கள் அழிக்கப்பட் டன. இதில் காந்தியார் படு கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்க ளும் அழிக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அய்க்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு உறுப்பினர் பி. ராஜீவ் பேசுகையில், மோடி உத்தரவின்பேரில் உள்துறை அமைச்சகத்தில் 1 லட்சம் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும், அதில் காந்தியார் கொலை தொடர்பான முக்கிய ஆவணம் காணாமல் போய் உள்ளதாகவும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கையில் பிரதமர் ஏன் முனைப்பு காட்டு கிறார்? என்று தெரிய வில்லை. நாட்டின் வரலாற்றை மாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறதோ? என பய மாக இருக்கிறது. காந்தி யார் படுகொலை வழக்கில் தொடர்புடைய மதவாத சக்திகளின் ஆதாரங்களை அரசு அழிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த குற்றச்சாட்டுகளை முழு மையாக மறுக்கிறேன். குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவித் தார். ஆனால் அமைச்ச ரின் கருத்தை எதிர்க்கட்சி கள் ஏற்க மறுத்து விட்டன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகந்து சேகர் ராய் பேசுகையில், பிரதமர் மீது குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது. எனவே அவர் நேரடியாக வந்து பதில் அளிக்க வேண்டும். குற்றச் சாட்டு பொய்யாக இருந் தால் அதனை வெளியிட் டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநிலங்களவை துணை அவைத் தலைவர் பி.ஜெ.குரியன், இது விஷ யத்தில் அமைச்சரின் பதிலை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால், இது தொடர்பாக சபையில் அறிக்கை வெளியிடலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் பி.ஜெ.குரிய னின் நடவடிக்கையில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர் கள், தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர். இதனை யடுத்து சபை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/83792.html#ixzz374gQkE3j

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு! கலைஞர் எடுத்துக்காட்டு

சென்னை, ஜூன் 10_ தமிழ் நாட்டில் சட்டம் _ ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என் பதை ஏடுகளில் வெளிவந் ததை எடுத்துக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள். விவரம் வருமாறு:_

முதல் அமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை என்பதால், அதை எப்படி இறுதியாக விவாதிப்பது, முதலிலேயே விவாதிக்கப்பட வேண்டுமென்று நினைத்திருப்பார்கள். பொதுவாக தமிழகத்தில் சட்டம் _ ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி கடந்த வாரம் பத்திரிகைகளிலேயே செய்திகள் வந்துள்ளன.

3.7.2014 இந்து ஆங்கில நாளிதழ், ‘Month of Murders leaves City Reeling’ என்ற தலைப்பில் பெட்லீ பீட்டர் என்ற செய்தியாளர் சட்டம் _ ஒழுங்கு பற்றி விரிவாகவே எழுதியுள்ளார். அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு:_

Last month was one of the City’s bloodiest in recent times, with a staggering 16 murders rocking the peace of the City.

These include 3 Murders for Gain with women victims, the brutal hacking of a Hindu Munnani functionary in Ambattur and the hacking of a notorious gangster inside a Government Hospital in the heart of the City.

June recorded 16 Murders, the Highest Monthly Count in 2014.

தமிழகத்தின் தலைநகரிலே சட்டம் ஒழுங்கு எப்படி?

புறநகரில் அதிகரிக்கும் வழிப்பறிக் குற்றங்கள் என்ற தலைப்பில் இந்து தமிழ் நாளேடு ஒரு நீண்ட செய்தி வெளியிட்டுள்ளது.

“More than one child gets raped every day in TN” - என்ற தலைப்பில் _ தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண் மையில் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தைக்கு மேல் கற்பழிக் கப்படுவதாகவும், குழந்தைக் கற்பழிப்பு வழக்குகள் 2012ஆம் ஆண்டு 292 என்றிருந்ததற்கு மாறாக, 2013இல் 419 ஆக உயர்ந்திருப்பதாகவும் _ (சட்டப்படி இங்கே குழந்தை என்று கூறப்படுவது 18 வயதுக்குக் குறைந்தவர்களாகும்) _ கற்பழிக்கப்பட்ட மகளிர் என்ற பட்டியலில் 2012ஆம் ஆண்டு 737 என்றிருந்தது, 2013இல் 923 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் தமிழகத்தின் சட்டம் _ ஒழுங்கு _ முதல் அமைச்சரின் பொறுப்பிலே உள்ள காவல் துறை.

Read more: http://viduthalai.in/page-8/83795.html#ixzz374gcyPXn

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


பூமி பூஜை - வாஸ்து

பூமி பூஜையின்போது முதலில் வாஸ்து சாந்தியின் மூலம் வாஸ்து புருஷனை திருப்தி செய்ய வேண்டும். பூசணிக்காய் வெட்டுவது இதற்காகத் தான் பிறகு மஞ்சள் பிள்ளையார் பூஜை செய்து செங்கற்களில் நவக்கிரகங்களைப் பூஜிக்க வேண்டும் பின் பூமாதேவியை வழிபட்டு, கட்டடம் கட்டும் முகூர்த் தம் செய்ய வேண்டுமாம்.

ரொம்ப சரி போரூரையடுத்த முகலிவாக்கத் தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பரிதாப மரணம்!

இதுவும் பூமி பூஜை நடத்தி வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டது தானே!

Read more: http://viduthalai.in/e-paper/83815.html#ixzz37ATZYOli

தமிழ் ஓவியா said...


இயற்கைத் தடைகள்



நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)

Read more: http://viduthalai.in/page-2/83817.html#ixzz37AUEb6lR

தமிழ் ஓவியா said...


இன்று உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11



மக்கள் தொகைப் பெருக்கத்தால் வரும் பாதிப்பை முதல்முதலில் உணர்ந்து கூறியவர் தந்தை பெரியாரே!

1990-ஆம் ஆண்டுக்கு முன்பு நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை பேருந்துப் பயணத்தில் தச்சநல்லூரைப் பேருந்து கடந்த உடனே பசுமை ஆக்ர மித்துவிடும். அதன் பிறகு கோவில் பட்டி வரை பசுமைதான். அதன் பிறகு திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் பசுமலை என கண்ணுக்கு குளிர்ச்சி யாக பசுமை மயமாக இருந்தது. மதுரை நகரம் அப்பொழுதெல் லாம் இரைச்சலின்றி மிகவும் அழகாக இருந்தது.

அப்போதைய மாட்டுத் தாவணி என்பது நகரத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த ஓரிடமாகும், பழைய நீதிமன்றத்தைத் தாண்டிய உடனே பசுமை, பிறகு திருச்சிவரை பசுமை அதன் பிறகு சென்னையை நெருங்கும் வரை பச்சைப் பசேலென்று தானிருக்கும். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்படி ஒன்றும் நாம் நூற்றாண் டுகள் கடந்து விடவில்லை. வெறும் 20 ஆண்டுகள் தான் கடந்து வந்தோம். இன்று சென்னையில் இருந்து திருச்சி வரை சிறு சிறு இடம் விட்டு கட்ட டங்கள் தான் தெரிகின்றன. மதுரைக் கும், திருநெல்வேலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வயல்வெளிகள் அழிந்து திருநெல்வேலிவரை எங்கும் நகரமயமாகிவிட்டது. ஏன் என்ற இந்தக் கேள்விக்கு ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அங்கிங்கெனாதபடி எங்கும் மக்கள் தொகைப்பெருக்கம் நெருக்கடியான சூழ்நிலையைக் கொண்டு வந்துவிட்டது. வளர்ச்சியடைந்த நாடுகளைத் தவிர வளரும் மற்றும் வளர்ச்சியடையா நாடுகள் அனைத்திலுமே மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் அச்சுறுத்த லாக அமைந்துவிட்டது. முக்கியமாக தெற்காசியப் பகுதியில் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது மக்கள் தொகைப் பெருக்கமேயாகும்.

உலக நாடுகளில் பல இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் மக்கள் தொகைப் பெருக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்து சரியான சட்டதிட்டங்களை வகுத்து அதன்படி நடந்து வருகின்றன. எடுத் துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை எடுத்துக்கொண்டால் 1970ஆம் ஆண்டுகளில் சிட்னி நகர நிர்வாகம் வரும் நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி, எவ்வாறு பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பிட வசதி, குடிநீர்த்தேவை, போக்குவரத்து வசதி என பல்வேறு இன்றியமையாத தேவைகளுக்காக திட்டமிட்டது. அப்போது நகர நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று சுமார் 3-கோடி மக்கள் வசிக்கும் ஒரு நகரம் மிகவும் அமைதியாக எந்த ஒரு இன்றியமையாத தேவையான பொருட்கள் குறைவின்றி அளவாக திட்டமிடப்பட்டு நகர விரிவாக்கம் நடைபெறுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் என்பது தற்போதைய நவீன மயமாகும் உலகத்தின் வளர்ச்சியின் குறுக்கே நிற்கும் மிகப்பெரிய தடையாக விளங்குகிறது. முக்கியமாக இந்தியா போன்ற நாடுகள் அனைத்து வளங்கள் இருந்தும், இன்றும் மேலைநாடு களோடு போட்டி போடமுடியாததற்கு காரணம் மக்கள் தொகைப் பெருக் கமேயாகும்.

தந்தை பெரியார் 1930ஆம் ஆண்டு-களில் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய போது மக்கள் தொகைப் பெருக்கத் தினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை வலியுறுத்தினார். அப்போது மேலை நாடுகள் கூட மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிக் கவலைப்படா மல் உலகப்போரிலும், நாடுகளைப் பிடிக்கும் பேராசையிலும் திளைத் திருந்த காலகட்டமது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சீர்திருத்த நட வடிக்கைகளைக் கேட்டு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இன்று மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார, சுகாதார, மற்றும் வசிப்பிட நெருக்கடி நமக்கு ஏற்பட்டிருக்காது.

தந்தை பெரியார் 1930-ஆம் ஆண்டுகளிலேயே மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டார் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன் மொழிந்தார்.

ஆனால் இன்றைய காலகட்டத் திலும் மதவாதிகள் நிறைய குழந்தை களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுக்கூட்ட மேடைகளில் பேசி வருகின்றனர்.

அளவிற்கு மிஞ்சும் போது அது அமிழ்தானாலும் நஞ்சாக மாறிவிடும். இந்த முதுமொழி வேறு எந்த வகையில் ஒத்துப்போகிறதோ இல்லையோ இன்றைய காலகட்டத் தில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு பெரிதும் ஒத்துப் போகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் இடப்பற்றாக்குறை நகரவிரிவாக்கம் விளைநிலங்கள் அழிப்பு என தொடர் பாதிப்புகள் மக்கள் தொகை பெருக் கதால் ஏற்படுகின்றன. தற்போதைக்கு இப்பரந்த பெரு வெளியில் பூமி மட்டுமே நாம் உயிர் வாழ ஏற்ற ஒரே ஒரு இருப்பிடமாகும். இது நமக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

- சரவணா ராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/83820.html#ixzz37AUoX3QQ

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களின் பகல் கொள்ளை


ஆசிரியருக்குக் கடிதம் >>>

சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சதர்களின் பகல் கொள்ளை

திராவிடர் கழகத்தின் விடுதலை 3.7.2014 தேதி இதழில் வெளிவந்துள்ள சிதம் பரம் தீட்சதர்களின் அடுத்த சுரண்டல் என்ற தலையங்கக் கட்டுரையை ஒவ்வொரு பெரியார் தொண்டரும் படித்து அதன் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

2008 ஆம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் என்பதே கிடையாது. அதுவரை ஆண்டு ஒன்றுக்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வருமானம் என்று தீட்சதர்கள் கணக்கு காட்டி வந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அக்கோயில் வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் உண்டியலில் சேர்ந்ததே! சுமார் 100 கிராம் தங்க நகைகளும் வந்ததுண்டே!

தீட்சதர்கள் எங்களுக்கே சிதம்பரம் கோயில் சொந்தம் என்று கூறும் இரகசியத் தின் பின்னணி இந்தப் பகற் கொள்ளைதான்

தீட்சதர்களின் இந்தப்பகல் கொள் ளையைக் கண்டிப்பதற்கு திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் முன்வரவில்லையே ஏன்? கோயில்கள் திருடர்களின் குகைகள் என்று யேசு கூறியது இன்றும் உண்மை யாகத்தானே இருக்கிறது?

சிதம்பரம் கோயிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த மூன்றரை கோடி மதிப்புள்ள பவள மாலை கணக்கில் வராததால் இந்து அற நிலையத்துறை தீட்சதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதம்பரம் கோயிலுக்கு 2594 ஏக்கர் நஞ்செய் நிலமும், 895 ஏக்கர் புஞ்செய் நிலமும் என மொத்தம் 3489 ஏக்கர் நிலத்தில் இருந்து வரும் வருமானம் தீட்சதர்களால் அனுபவிக்கப்பட்டு வந்தது (முரசொலி 22.9.2009)

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து தீட்சதர்கள் டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உச்ச நீதிமன்றம் தீட்சிதர் களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

முல்லைப் பெரியாறு வழக்கில் டில்லி உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கேரள அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதைப்போல் தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோயில் வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள திராவிடர் கழகத் தலைவர்கள் 3.7.2014 தேதி விடுதலை தலையங்கத்தை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

இந்து அறநிலையத் துறையின் மேற் பார்வையில் இருக்கும் தமிழகக் கோயில் கள் மொத்தம் 38481 (விடுதலை 24.2.2014). இந்தக் கோயில்கள் அத்தனையும் தமிழர் களின் கடின உழைப்பால் உருவானவை. ஆனால் கருவறையில் அர்ச்சகர்களாக இருந்து ஆதிக்கம் செலுத்தி வருவதோ பார்ப்பனர்கள். அவர்கள் மந்திரம் ஓது வதோ வடமொழியில்!

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி யார் அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சியை மேற்கொள்ள பெரியரியார் தொண்டர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.

- இர.செங்கல்வராயன், செய்யாறு

Read more: http://viduthalai.in/page-2/83821.html#ixzz37AUxPAVk

தமிழ் ஓவியா said...


இங்கர்சால் மணிமொழிகள்


தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தி யடையமாட்டார்.

************

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

************

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

************

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

************

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்டவனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

************

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

Read more: http://viduthalai.in/page-7/83852.html#ixzz37AVXHTMB

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்

தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடையாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப் பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித் திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக்கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள்ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

Read more: http://viduthalai.in/page-7/83854.html#ixzz37AVlHA2V

தமிழ் ஓவியா said...


தமிழகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான கமலா ரத்னத்திற்கு பெண் குழந்தை பிறந்தது


சென்னை, ஜூலை 11- தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம், நேற்று தனது 24 ஆவது வயதில் பெண் குழந்தையை பெற்றெ டுத்தார். நேற்று காலை ஜி.ஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 2.8 கிலோ எடையுள்ள குழந்தையை அவர் பெற்றுத் தந்தார்.

1990 ஆம் ஆண்டு பெண்களுக்கான சிறப்பு மருத்துவ ரான டாக்டர் கமலா செல்வராஜ் சோதனை குழாய் மூலம் குழந்தையான கமலா ரத்னத்தை பிறக்க வைத்தார். ஆனால் அந்த குழந்தை தனது 24 ஆவது வயதில் ஒரு பெண் குழந் தையை ஈன்றதிலும் தன்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டியது இருக்கும் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

இது குறித்து டாக்டர் கமலா செல்வராஜ் கூறுகையில்:-

இந்த நாளுக்காக தான் நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். 24 வருடங்களுக்கு முன் கமலா பிறந்த போது பல்வேறு விதங்களில் அச்சங்கள் எழுப்பப்பட்டது. அவளால் சகஜமான வாழ்க்கையை வாழ முடியுமா, அவருக்கு குழந்தை பிறக்குமா என்று கேள்வியெழுப்பப் பட்டது. அதற்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது என்றார்.

மருத்துவமனையில் உள்ள பிள்ளைப்பேறு அறைக்குள் காலை 9 மணிக்கு சென்ற கமலா 7 மணி நேரங்கள் உள்ளேயே இருந்து கமலா ரத்னம் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க கடும் சிரத்தை எடுத்துக்கொண் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/83828.html#ixzz37AWF04W0

தமிழ் ஓவியா said...


நிதிநிலை அறிக்கை: எதிர்க்கட்சிகள் கருத்து


புதுடில்லி, ஜூலை 11_ மோடி தலைமையிலான அரசு நேற்று (10.7.2014) நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

ப.சிதம்பரம்

மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடைபிடித்த கொள்கைகளின் பிரதிபலிப்பு. இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய அரசு அறிவித்த அம்சங்களை அருண்ஜெட்லி ஆமோதித்திருக்கிறார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் புதிய அறிவிப்புகளாக வெளிவந் துள்ளன.

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரித்திருப்ப தன்மூலம் ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை அரசு தியாகம் செய்திருக்கிறது. அதேசமயம் கூடுதல் உற்பத்தி வரி விதிப்புமூலம் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டியிருக்கிறார்கள்.

பொருளாதார சீர்திருத்தங்களில் கடந்த ஆண்டு நம்பிக்கையிழந்த பாரதீய ஜனதா, இப்போது திடீரென தனது நிலையை மாற்றிக் கெண்டு அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்புகளை அதிகரித்திருக்கிறது. உற்பத்தித் துறைக்கான எந்தக் கொள்கை அறிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. உணவுப் பாதுகாப்பு சட்டம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை.

_ இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ஏழை களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு வரிச்சலுகை அறிவித் துள்ளனர்.

முந்தைய அரசு நிர்ணயித்த வரியை, தொடரப் போவதாக கூறும் அரசு, தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் நெருக்கடி காரண மாக வரிச்சலுகை அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற நலத்திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெற வில்லை. பண வீக்கத்துடன் போராடும் சாதாரண மக்களுக்கு வரி விலக்கு உதவாது என்றார்.

நிதிஷ் குமார்

பிகார் முன்னாள் முதல்வரும், அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு சலுகை வழங்கப்படும் என பா.ஜ.வினர் வாக் குறுதி அளித்தார்கள். மக்களின் வாக் குகளை பெற்றபின் அனைத் தையும் மறந்து விட்டார்கள்.

பொருளாதார ஆய்வறிக் கையை பொருத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தி, மற்றும் வருமான வரி செலுத்துதல் ஆகியவற்றில் பிகார் சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனால், பிகார் மாநிலத் துக்கு எந்த சிறப்பு நிதியும் அளிக்கவில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என தேர்தலின்போது அறிவித்தார்கள்.

அந்த வாக்குறு தியையும் நிறைவேற்றவில்லை. ராணுவம் மற்றும் காப் பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரித்ததை தவிர இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. என்றார்.

சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண்துறை அமைச்சரு மான சரத்பவார் கூறுகையில், அறிவிப்பு மழைகள், மயக்கும் சொற்கள், ஆனால் இறுதியில் வளர்ச்சி இயந்திரத்திற்குத் தேவையான எரிபொருள்தான் கொடுக்கப்படவில்லை.

இது கார்ப்பரேட் பட்ஜட். சிறப்பான எதுவும் இதில் இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வில் தத்தளிக்கும் சாதாரண மக்களுக்கு எதுவும் உதவாது. வருமான வரி விலக்கு வரம்பை ரூ 50 ஆயிரம் உயர்த்தியது பலன் அளிக்காது. மறைமுக வரிகளை உயர்த்தி இருப்பதால், எல்லா பொருள்களின் விலையும் மேலும் உயரும்.

மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், அன்னிய முதலீட்டாளர் களுக்காக, அன்னிய முதலீட் டாளர்களால் நடத்தப்படும் அன்னிய முதலீடு அரசு தாக்கல் செய்துள்ள பட் ஜெட்டில், தொலைநோக்குப் பார்வை இல்லை, குறிக்கோள் இல்லை, செயல்திறன் இல்லை. ஏழைகளின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் உதவாது. சில்லரை விற்பனையில் ஏற்கெனவே அன்னிய முதலீடு உள்ளது.

தற்போது ராணுவம் மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 49 விழுக்காடு அதிகரித் துள்ளது. மேலும் வங்கித் துறையில் தனியார்மயம் ஆகியவை பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/83832.html#ixzz37AWTH6d8