Search This Blog

25.7.14

ஆடி அமாவாசைப் பக்தர்களே! அறிவு கொண்டு சிந்திப்பீர்!

 

நாளை - சனியன்று ஆடி அமாவாசையாம்! அமாவாசை தான் மாதா மாதம் வருகிறதே, அது என்ன ஆடி அமாவாசை!

ஒவ்வொரு மாதமும் எந்த அக்கப் போரையாவது அள்ளி விட்டு மக்கள் பணத்தை அள்ளிக் கொள்ளும் புரோ கிதச் சுரண்டல் ஜாம் ஜாமென்று நடக்க வேண்டும் அல்லவா!

அதற்குத்தான் இந்தத் தெருப் புழுதி கள் எல்லாம். அமாவாசையன்று முன் னோர்களை வணங்கினால் நன்மை கிடைக்குமாம். அதில் ஆடி அமாவாசை என்பது விசேடமாம்!

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இறந்து போன முன்னோர்கள் தம் குடும்பத்த வரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை இறைவன் பூமிக்கு அனுப்பி வைக்கிறானாம்.

அந்த நாளில் தர்ப்பணம் செய்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார் களாம்! அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கு மாம்.

அய்தீகப்படி நம் முன்னோர்கள் தான் மறுபிறப்பு எடுத்துவிட்டார்களே, அப்படி இருக்கும்பொழுது ஆத்மா எங்கே இருந்து குதித்ததாம்.

கறந்தபால் முலைப்புகா
கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா
விரிந்த பூ உதிர்ந்த காய்
மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை, பிறப்பதில்லையே!

என்று நமது சித்தர் பாடியதுதான் நினை விற்கு வருகிறது!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம்
மறுபிறப்பு ஆகியவற்றைக்
கற்பித்தவன் அயோக்கியன்
நம்புகிறவன் மடையன்
இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்
மகாமகா அயோக்கியன்

என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதுதான் எத்தகைய அரு மையும், அறிவும், உண்மையும் வாய்ந்தது!
இப்பொழுது நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் நாடகத்திற்கு வருவோம்!

தனது தகப்பனாரின் திதிக்காக (திவ சத்துக்காக) புரோகிதப் பார்ப்பனர் வரு வார்.

நடிகவேளுக்கே உரித்தான குரலில் வரவேற்பார்!

அய்யர்வாள்! உங்களிடம் கொடுக்கும் பதார்த்தங்கள் எல்லாம் எங்கள் அப்பாவுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் தானே?
- நடிகவேள்

பேஷா, நன்னா கிடைக்கும் - சந்தேகம் வேண்டாம்!
- புரோகிதப் பார்ப்பான்

ஓ, பார்ப்பான் வயிறு பரலோகத் துக்குத் தபால் பெட்டியோ?
- நடிகவேள்

பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கலகலப்பு, சிரிப்பு வெடி!

இதோ பாருங்க அய்யர்வாள், எங்கள் அப்பா இருக்கிறாரே, அவருக்குக் கவிச்சு இல்லைன்னா ஓருண்டை சோறு உள்ளே போகாது; ஒரு துண்டு கருவாடாவது கண்டிப்பாக இருக்கவேண்டும். நீங்கள் என்னா செய்றேள், மீன், கோழி, முட்டை, ஆட்டுக்கறி சமையல் எல்லாம் தயாராக இருக்கிறது.

எனக்கு முன் உட்கார்ந்து திவ்யமா சாப்பிடனும் - அது எங்கள் அப்பாவுக்குக் கிடைக்கனும். உங்கள்மூலம் அந்தக் காட்சியை நான் கண்குளிரப் பார்க்கனும் - சந்தோஷப்படனும் - சாப்பாடு ரெடி - நீங்கள் ரெடிதானே? என்பார்.
அவ்வளவுதான்! அய்யர் ஓட்டம் பிடிப்பார்.

இதற்கு விளக்கம் தேவையில்லை.
 ஆடி அமாவாசைப் பக்தர்களே! அறிவு கொண்டு சிந்திப்பீர்! அய்யன்மார்களின் சுரண்டலுக்கு அடிபணியாதீர்! அடி பணியாதீர்!!

-----------------  25-07-2014 “விடுதலை” யில் கருஞ்சட்டை  எழுதிய கட்டுரை

45 comments:

தமிழ் ஓவியா said...


வச்சனந்தி மாலை

சமஸ்கிருதம் - நம் மொழியை நான்காகப் பிளந்தது!

சமஸ்கிருத - இந்து மதம் நம்மை நான்கு கூறுகளாக்கி நாலாஞ் ஜாதி ஆக்கியது.

தமிழ் எழுத்துக்களில் கூட வருணாசிரமத்தைத் திணித்தது.

பாட்டியலில் பன்னீருயிரும்
முதலாறு மெய்யும்
பிராமண வருணமாம்!
அடுத்த ஆறு மெய்கள்
சத்திரிய வருணமாம்!
அடுத்த நான்கு மெய்கள்
வைசிய வருணமாம்!
பிற இரண்டு மெய்யும் சூத்திர வருணமாம்

அதோடு விட்டதா ஆரியம்?

ல,வ,ற,ன - நான்கும் வைசிய எழுத்துக்களாம். ழ,ள என்பன சூத்திர எழுத்துக்களாம். ழ,ற,ன மூன்றும் வைசிய சூத்திர எழுத்துக்களாம். தமிழின் சிறப்பு எழுத்துக்களான ழவும், றவும் வட மொழியில் இல்லை - எனவே அதனை சூத் திரப் பட்டியலில் இணைத்து விட்டனர்.

அத்தோடு விட்டு விட்டார்களா? பாவிலும் பார்ப்பனப் பாணத்தைத் தொடுத்துவிட்டனர்.

பாக்களில் சிறந்தது வெண்பாவாயிற்றே! அது பார்ப்பனர்களுக்காம். ஆசிரியப்பா சத்திரியருக் காம் (அரசருக்காம்!) வைசியருக்கு கலிப்பா வாம்! சூத்திரருக்கு வஞ்சிப்பாவாம்.

கலம்பகம் எப்படி இருக்க வேண்டுமாம்? தேவருக்கு 100 செய்யு ளும், பார்ப்பனர்களுக்கு 95 செய்யுளும் அரச ருக்கு 90 செய்யுளும் - அமைச்சருக்கு 70 செய் யுளும் - வணிகருக்கு 50 செய்யுளும் - மற்றவர் களுக்கு 30 செய்யுளும் பாட வேண்டுமாம். இது பாட்டியல் விதியாம்.

இப்படி ஆரியம் - சமஸ்கிருதம் தமிழர் களுக்கு, தமிழ் மொழிக்கு செய்த வஞ்சகமும், துரோகமும் அட்டூழிய மும் கொஞ்சமா நஞ் சமா? வச்சனந்தி மாலை என்ற நூலையே இதற் காக நூலோர் தொகுத் துள்ளனர்.

தந்தை பெரியாரிடத் தில் 1937இல் உதைபட்ட ஆரியம் மீண்டும் மீசை முறுக்கித் தோள் தட்டு கிறது - காரணம் அதிகார பீடத்தில் அவாள் (ஆர். எஸ்.எஸ்.)ஆயிற்றே.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அறுதியிட்டுக் கூறிவிட்டபின் அவா ளுக்கு வேறு அட்டி என்ன!

வாலாட்டிப் பார்க் கிறது - தமிழ்நாட்டில், தந்தை பெரியார் மண் கொடுக்கும் சாட்டையில் ஜென்மத்துக்கும் திரும் பிப் பார்க்கக் கூடாது!

ஆகஸ்டு ஒன்று நினைவிருக்கட்டும் ஆர்த்தெழுவீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84634.html#ixzz38UJLCgho

தமிழ் ஓவியா said...

போர்க்குற்ற விசாரணைக்கு வரும் அய்.நா. நியமித்த குழுவினருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுப்பதா?

தி.மு.க. - அ.தி.மு.க.போல் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்

ஆகஸ்ட் 1 அறப் போராட்டத்தில் இக்கோரிக்கையும் வலியுறுத்தப்படும்


தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கு விரோதமான சோதிடவியல் படிப்பா? உடனே கைவிடுக! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

போர்க்குற்ற விசாரணைக்கு வரும் அய்.நா. மனித உரிமை ஆணையம் நியமித்த குழுவினர், அது சம்பந்தமாக பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழுவோரின் சாட்சியங்களைப் பதிவு செய்ய வசதியாக குழு உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று சந்திக்க வாய்ப்பளிக்கும் வகையில் விசா பெற முயற்சிக்கையில், இந்திய அரசு, அவர்களுக்கு விசா வழங்க மறுப்பது எவ்வகையில் நியாயம்? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு-

தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று கூறிக் கொண்டு, இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் சிங்கள இராஜபக்சே அரசால் வெறித்தனத்தோடு நடத்தப் பெற்ற தமிழர் இனப் படுகொலை, காரணமாக, அப்பாவி பொது மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, பல தமிழ்ப் பெண்களிடம் வன்புணர்ச்சியை நடத்தி, அருவறுக்கத்தக்க வகையில் அவர்களிடம் சிங்கள இராணுவத்தினர் நடந்து கொண்டது; ஏதுமறியா தமிழ் முதியவர்கள் பெண்கள், குழந்தைகளைக்கூட இராணுவ முள்வேலிக்குள் அடைத்து செய்த கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா. மனித உரிமை ஆணையம் அதன் வாக்கெடுப்பில் அமெரிக்கத் தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியதனால், இலங்கை அரசினை போர்க் குற்றவாளியென அறிவிக்கும் வகையில் விசாரணை நடைபெறத் துவங்கியுள்ளது.

நடுநிலை வகித்த மன்மோகன்சிங் அரசு

இத்தீர்மானம் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் முன்மொழியப் பட்டபோது, அதனை நிறைவேற்றவிடாமல், இலங்கை அரசு ஜகஜாலப் புரட்டுகளைச் செய்து தோல்வி அடைந்தது; இந்திய அரசோ, தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள நாடு இந்தியா என்பதைப் பற்றியோ, மனிதநேயம் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தீர்மானத்தை ஆதரிக்காமல், நடுநிலை வகித்தது. (மன்மோகன்சிங் தலைமையிலான தி.மு.க. விலகிய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு)

இந்த நிலைக்கெல்லாம் நரேந்திர மோடி பிரதமரானால் உடனடியாகத் தீர்வு காணப்படும்; நம்புங்கள், வாக்களி யுங்கள் என்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம், பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகள் சங்கநாதம் செய்தன!

தமிழ் ஓவியா said...


இன்றுள்ள நிலை என்ன? ஈழத் தமிழர் பிரச்சினை தீர்வும், அன்றாட அவலமான தமிழக மீனவர் உரிமை பறிப்பும் சிறைவாசம், உடைமை பறி முதல் போன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளும் மாறினவா? நீங்கினவா? குறைந்தனவா?

அவை இன்னும் முன்பைவிட மேலும் தீவிரமாகத் தொடர்ந்த வண்ணம் உள்ளதே.

உலகத் தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள்வரை

வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதாக உள்ளதே, நொந்த உள்ளத்தைமேலும் நோகடிக்கச் செய்வதாகவும் உள்ளதே - பிரதமர் மோடியின் புதிய பலம் பொருந்திய ஆட்சியில்...? இதுதான் தமிழர்கள் கண்ட பலன் - இப்படி உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை கேட்கின்றனர் - வேதனையுடன்!

1. இராஜபக்சேவுக்குப் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், மக்கள் எதிர்ப்பையும் மீறி சிவப்புக் கம்பள வரவேற்பு.

2. இரு நாட்டு வெளி உறவுத் துறை அமைச்சர்களும் மிகவும் சுமூகமான பல பிரச்சினைகளில் உடன்பாடு.

3. கச்சத்தீவு மீட்புப் பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கே உரிமையில்லை என்ற பழைய பல்லவியையே புதிதாகக் கூறிய உச்சநீதிமன்ற வழக்கில் மத்திய அரசின் பிரமாணப் பத்திரிக்கை.

விசா மறுப்பது எவ்வகையில் நியாயம்?

4. இவை எல்லாவற்றிற்கும் மேலாக - கேடாக - இலங்கையின் போர்க் குற்றச் செயல்கள்பற்றிய அய்.நா. மனித உரிமை ஆணையம் நியமித்த குழுவினர், அது சம்பந்தமாக பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழுவோரின் சாட்சியங்களை பதிவு செய்ய வசதியாக குழு உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று சந்திக்க வாய்ப்பளிக்கும் வகையில் விசா பெற முயற்சிக்கையில், இந்திய அரசு, ஏதோ இலங்கை அரசுக்கு மிகவும் கட்டுப்பட்ட பகுதி ராஜ்யம் என்பது போல, இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிபோல் நடந்து கொள்ளும் வகையில், அய்.நா. மனித உரிமை ஆணையத்தவருக்கு விசா மறுப்பது எவ்வகையில் நியாயம்?

அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் அவர்கள் அனுப்பப்படும் நிலையில், இந்திய அரசு விசாவை மறுப்பது எவ்வகையில் சரியானது?

மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கையாக இது கருதப்பட்டால் புதிய இந்திய (மோடி) அரசுக்கு பெருமையா அது?

மத்திய அரசின் வெளியுறவுத் துறை தெளிவுபடுத்த வேண்டாமா?

5. சுப்ரமணியசுவாமிகள், சேஷாத்திரிகள் இலங்கைக்குச் சென்று, இராஜபக்சேவைச் சந்தித்து, இந்திய அரசின் இராஜ தூதுவர்களைப்போல் கருத்துக்கூறி, இராஜபக்சேவைப் பாராட்டி, இந்திய அரசுபற்றி உத்தரவாதம் அளித்துள்ளதாக வந்துள்ளதே செய்திகள். இவைகளைப் பற்றி - இந்திய அரசின் வெளி உறவுத்துறை தெளிவுபடுத்த வேண்டாமா?

நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இவைபற்றியெல்லாம் பிரச்சினை ஏற்படுத்தி, தெளிவான நிலைப்பாடு என்ன என்று அறிய வேண்டியது அவர்கள் கடமை அல்லவா?

ஆகஸ்டு 1: அறப்போராட்டத்தில்...

வருகிற ஆகஸ்டு 1ஆம் தேதி சமஸ்கிருத வாரம் என்ற பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான அறப்போர் ஆர்ப்பாட்டத்தில்: (சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுவை, தஞ்சை, சேலம், ஈரோடு)

திராவிடர் கழகம், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, தமிழர் இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் போர்க் குற்றங்கள்பற்றி விசாரிக்க வரும் அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுவினருக்கு விசா வழங்கி, இங்குள்ள பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஒத்துழைப்புக் கொடுக்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கையும் இணைத்துக் கொள்ளப்படும் என்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறோம்.

அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்கவேண்டும்

தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி (அ.தி.மு.க.) முக்கிய எதிர்க் கட்சி (திமுக) இரண்டும் குரல் கொடுத்ததுபோல, அனைத் துக் கட்சிகளும் ஒரே குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

இது மனிதநேயம், மனித உரிமைப் பிரச்சினை என்பதை அனைவரும் மறக்கக் கூடாது.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
25.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84639.html#ixzz38UJYeqeE

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

தத்துவம்

பிராமணனான இராவணனை சம்ஹாரம் செய்ததால் ராமருக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷத்தைப் போக்கிக் கொண்ட இடம்தான் ராமேசுவரமாம்.

ராவணன் பிராமணனா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அது என்ன பிராமணனைக் கொன்றால் மட்டும் தோஷம்! மற்றவர்களைக் கொன்றால், மான் கறி பிரி யாணியா? இராமாயணம் கூறும் தத்துவம் இது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/84641.html#ixzz38UJmJ6LS

தமிழ் ஓவியா said...

அநாகரிக அரசியல்!


சிவசேனா என்ற அமைப்பு சங்பரிவார் வட்டத்தைச் சேர்ந்தது என்றாலும் சிறுபான்மையின மக்களை எதிர்ப்பதிலும் மகாராட்டிரத்தைத் தவிர்த்த வேறு மாநில மக்களை எதிர்ப்பதிலும் சங்பரிவார்க் கும்பலுக்கு அப்பனாகத் தான் நடந்து கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையைச் சேர்ந்ததுதான் டில்லியில் உள்ள மகாராட்டிர மாநில இல்லத்தில் நடந்த அநாகரிகச் செயல்!

கடந்த வாரம் டில்லியில் உள்ள மகாராட்டிர பவனுக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர்கள் சென்றுள்ளனர். மகாராட்டிரப் பாரம்பரிய உணவைக் கேட்டுள்ளனர்.

ஆனால், பணியில் இருந்த ஊழியர்கள் சப்பாத் தியைப் பரிமாறி உள்ளனர். இதனால் சீற்றம் அடைந்த சிவசேனை உறுப்பினர்கள் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக இழுத்து அவர் வாயில் சப்பாத்தியைத் திணித்துச் சாப்பிட வைத்துள்ளனர். அந்த மேற்பார்வையாளர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரம்ஜான் நோன்பை மேற்கொண்டவர் என்பதால் பிரச்சினை பேருரு எடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆவேசப் புயல் சுழன்று சுழன்று அடித்தது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் வெளி நடப்பு செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உண்மை கண்டறியப்படாத ஒரு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாராவது கூடாது என்று எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்துள்ளார். எல்.கே. அத்வானி மட்டும் தான் வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். மற்ற பிஜேபியினர் நழுவிக்கொள்கின்றனர். இவற்றிற்கு மேலாக மகாராட்டிர அரசு இந்தப் பிரச்சினைமீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. வரவேற்கத் தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...

சம்பந்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த ராஜன் பாபுராவ் விச்சாரே உலகறிந்த கிரிமினல், அவர்மீது மட்டும் 20 வழக்குகள் உள்ளன. கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது. கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்துக்குப் பங்கம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்ரமித்தது, போலி கையொப்பமிட்டுப் பண மோசடி செய்தது, பெண்களைப் மானப்பங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களைத் தாக்கியது என்று மொத்தம் 20 கிரிமினல் வழக்குகள் இந்தப் பேர் வழிமீது உண்டு. (விவரம் தனியே காண்க).

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் சிவசேனாவில் உள்ளவர்கள் பார்த்தீர்களா? இவர்களுக்கு வாக்களித் துப் பொது மக்களும் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! (ஜனநாயகத்தைக் காலி நாயகம் என்று தந்தை பெரியார் சொன்னதற்கான விளக்கம் இங்குக் கிடைத்து விட்டதல்லவா!)

16ஆவது மக்களவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம். இது கடந்த தேர்தலைவிட (2009) 4 விழுக்காடு அதிகமாம்! (ஜனநாயகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று திருப்தி அடையலாம்!)

டில்லியில் 7 உறுப்பினர்களுள் 5 பேர்கள், பிகாரில் 40 உறுப்பினர்களுள் 27 பேர்கள், மகாராட்டிரத்தில் 48 உறுப்பினர்களுள் 30 பேர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 42 உறுப்பினர்களுள் 20 பேர்கள், கேரளாவில் 20 உறுப்பினர்களுள் 9 பேர்கள், உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களுள் 28 பேர்கள், குஜராத்தில் 26 உறுப் பினர்களுள் 9 பேர்கள், கருநாடகத்தில் 28 உறுப்பினர்களுள் 9 பேர்கள், ஜார்க்கண்டில் 14 உறுப்பினர்களுள் 4 பேர்கள், அசாமில் 14 உறுப்பினர்களில் 4 பேர்கள் இமாசலப்பிரதேசத்தில் நான்கு உறுப்பினர்களுள் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் 29 உறுப்பினர்களுள் 7 பேர்கள், உத்தரகாண்டில் 5 உறுப்பினர்களுள் ஒருவர், மேற்கு வங்காளத்தில் 42 உறுப்பினர்களுள், 8 பேர்கள், ஒடிசாவில் 21 உறுப்பினர்களுள் 4 பேர்கள், தமிழ் நாட்டில் 39 உறுப்பினர்களுள் 7 பேர்கள், ஜம்மு-காஷ் மீரில் 6 உறுப்பினர்களுள் ஒருவர், அரியானாவில் 10 உறுப்பினர்களுள் ஒருவர், சத்தீஸ்கரில் 11 உறுப்பினர் களுள் ஒருவர், வடக்கு கிழக்கு மாநிலங்களில் 14 உறுப்பினர்களுள் ஒருவர், பஞ்சாபில் 13 உறுப்பினர் களுள் ஒருவர் ராஜஸ்தானில் 25 உறுப்பினர்களுள் ஒருவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்றால், நம் நாட்டின் ஒழுக்கத்தை, ஜனநாயக யோக்கியதையை எளிதில் எடை போட்டு விடலாமே!

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்று பதவிப் பிரமாணம் செய்தவர்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா?

ஆந்திராவிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் தூதராக பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா அம்மாநில முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைக் கூட பிஜேபி எம்.பி. எதிர்க்கிறார் - காரணம் அந்த வீராங் கனை முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான்.

குடியரசு தலைவர் அளிக்கும் இஃப்தார் விருந்தையே பிரதமராக இருப்பவர் புறக்கணிக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

இரண்டு மாதங்களுக்குள்ளேயே இவ்வளவு விபரீதங்கள் என்றால், மீதிக் காலம் எப்படி நகரப் போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இந்த மதவாத சக்திகளுக்கு ஊடகங்களும் துணைப் போவது கடைந்தெடுத்த வெட்கக் கேடே!

Read more: http://viduthalai.in/page-2/84650.html#ixzz38UK25bGQ

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும். - விடுதலை, 22.9.1972

Read more: http://viduthalai.in/page-2/84649.html#ixzz38UKXL1zz

தமிழ் ஓவியா said...


சிறு குழந்தைகளும் - தொலைக்காட்சிகளும்!


அண்மையில் வானொலியில் குழந்தைகள் வளர்ப்பு பற்றி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை (எழும்பூர்) மருத்துவர் ஒருவர் உரையாடலை காரில் பயணம் செய்து கொண்டே கேட்டு மகிழ்ந்தேன்.

அரிய பல தகவல்களை, கேள்வி - பதில் மூலம் வானொலி சார்பாக கேட்டவரும், பதிலளித்த மருத்துவ நண்பரும் மிக அருமையாக கூறி வந்தார்.

சிறு குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள பல பெற்றோர் களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்குப் பயன்படும் என்பதால், வானொலியில் கேட்ட குறிப்புகளைக் கொண்ட - நினைவில் நின்றவைகளைக் கொண்ட -கட்டுரை இது! படித்துப் பயன் பெறுங்கள்.

இப்போதெல்லாம் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்; தாய் மகப்பேறு மருத்துவத்திற்கு ஆளாகி, குழந்தை பிறந்த 2,3 ஆண்டுகள் ஆகும் நிலையில் - தொடர் விடுப்பு எடுக்க இயலாது என்ற காரணத்தாலும் சிறு குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையங்கள் அவ்வளவு திருப்தியாக இத்தாய்மார்களுக்கு அமையாத காரணத்தாலும், மாற்று முறைகள் தேடுகின்றனர்.

வேலையிலிருந்து திரும்பிய பிறகுகூட, சமையல் பணி (இன்னமும் இது பெண்கள் தலையில் சுமத்தப்பட்ட பணியாகத்தானே பெரும்பாலான வீடுகளில் உள்ளது) செய்தாக வேண்டிய நெருக்கடி.

அதன் காரணமாக, 2 வயது, 3 வயது குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் படுக்க வைத்தோ, ஆங்கில நர்சரி ரைம்ஸ் (Nursery Rhymes) பாட்டுகளைப் போட்டோ அல்லது குழந் தைகளின் ஈர்ப்புக்கான சி.டி.களையோ போட்டு அக்குழந்தைகள் சதா பார்த்துக் கொண்டே இருக்கும்படிச் செய்து தங்கள் பணிகளை இடையூறு, அவர்களது தொந்தரவு ஏதுமின்றி செய்து வருவது கண்கூடு.

கேட்டால் இந்த நவீன அறிவியல் தகவல் களஞ்சிய, பாட்டு சி.டி.கள் அக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் என்றும் நம்பி பல தாய்மார்கள் இதனைச் செய்கின்றனர். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளை அந்த வயதின் வளர்ச்சிக்குரிய கலகலப் புடன் பெற்றோர்களிடம் குடும்பத்தவரிடம் பழகுவதில்லாமல், பேச்சை அறவே தவிர்த்து விட்டு, எப்போதும் அரைத் தூக்கம், அரை மயக்கத்திலேயே இருந்து விடுகிறார்கள்.

(கிராமப்புற வயல்வெளியில் தூர வேலை செய்யும் பல தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் அழாமல் தூங்கிய வண்ணம் இருக்க, சில போதை மருந்து களை முலைக் காம்பில் தடவிக் கொண்டு குழந்தைக்கு வேலைக்கு வருவதற்குமுன் பாலூட்டிவிட்டு குழந்தைகளைத் தூங்க வைத்து சீனா போன்ற நாடுகளில் செய்வ தாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு)

அப்படி அறிவார்ந்த சி.டி.களைக் கூட போட்டு, மனித உறவுகளோடு, கலந்து கொள்ளச் செய்வது குழந்தைகளை வளரும்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்று அந்த மருத்துவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு பந்தை அக்குழந்தை முன் எறிந்தால் அது ஓடிப் போய் துடிப்புடன் எடுத்து, மீண்டும் எறியாமல் அது வெறுமனே அமைதியாக, ஏதோ ஒரு பொம்மை போல்தான் இருக்கும்; காரணம் அத்தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அது அப்படியே பார்த்து பார்த்து - அதனுடைய இயக்கங்களுக்கே அதில் வேலையில்லை அதன் காரணமாகத்தான் சும்மாவே இருக்கும்.

இதுவே வீட்டில் மற்றவர்களோடு கலந்து மற்ற குழந்தைகளுடன் தாத்தா, பாட்டி, பெற்றோர், அண்ணன், தங்கை, தம்பியுடன் கலந்து உறவாடினால் இப்படி இருக்கவே இருக்காது என்றார்!

ஜப்பானிய முறையில் முப்பரி மாண MRI Scan செய்து பார்த்ததில் அத்தகைய மேற்சொன்ன முறையில் - வளர்க்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அதற்குரிய அளவு வளரவில்லை என்பதை நன்கு நிரூ பணம் செய்யும் அளவில் உள்ளதாம்! கூறினார் மருத்துவர்.

நமது மூளை நான்கு பிரிவாக பகுக்கப்பட்டிருக்கிறது, நரம்பியல் மூளை நிபுணர்களால் (நூறு அளவு போன்ற மூளை முன் பகுதி (Frontal Lobe) தடித்துப் போகிறது.

அதனால் மின்னணு கருவிகள் (Electronic Gadgets) Mobile போன்ற வைகளை வைத்து பாட்டுகள் கேட்க வைத்தால் இவைகளை அருகில் கொண்டு சென்று 2 வயதுக்கு மேற் பட்ட சிறு குழந்தை வளர்ப்பில்கூட விரும்பத்தக்கது அல்ல என்கிறார் மருத்துவர்.

சில முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1 மணி 2 மணி நேரத் திற்கு மேல் - ஒரு வாரத்திற்கு இந்தக் குழந்தைகள் பார்க்காமல் தடுப்பது மிக மிக அவசியம் - என்கிறார் இந்த மருத்துவ வல்லுநர் அறிவுரைகள்!

கேட்டீர்களா? குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர் கள் இந்த அறிவுரையைப் புறக் கணிக்காதீர் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84653.html#ixzz38UKgztmH

தமிழ் ஓவியா said...


முஸ்லிம் மேலாளர் வாயில் சப்பாத்தியைத் திணித்த இந்த ராஜன் பாபுராவ் விச்சாரே - யார்?

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பின ராக இவர் மீதுள்ள காவல் நிலையத்தில் பதிந்த வழக்குகளின் விவரம் (கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பதி வானவை)

இவர்மீது கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது, கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவிப்பது, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தனியா ருக்கு சொந்தமான இடத்தை ஆக்ர மித்தது, போலி கையெழுத்துப் போட்டு பண மோசடி செய்தது, பெண்களை மானபங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களை தாக்கியது என மொத்தம் 20-ற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவற்றின் விவரங்கள்:

1) CRI 163/07/RCC 198/08 வாக்ளே எஸ்டேட் காவல்நிலையம் - தானே.

2) CRI 193/06 Sum CC 6252/2006 மாவ்படா காவல் நிலையம் - தானே.

3) CRII 73/11 நாவ்பாடா காவல் நிலையம் - தானே.

4) 4472/10 தானே காவல் நிலையம்

5) CRI 290/11 Under Section 143, 149.

6) CR II 39/2006 Under Section 37(3), 135, மும்பை காவல் சட்டத்தின்படி கைதாகி பிணையில் வெளியே வந்தவர்.

7) CRII 3033/09 Under Section 37(3), 135 கபூர்வாடி காவல் நிலையம் - தானே.

8) CRI 290/11 Under Section 143,149,323,342 of IPC with Sec. 37(1)1325
கல்வா காவல் நிலையம்.

9) CRII 3054/04 Under Section 37/(3)135

10) CRII 188/5 Under Section 37(3) 135

11) CRII 128/07 Under Section 291, 278, 188 of IPC with Sec.37(3) 135 O

12) CRII 73/11 Under Section 188, 268, 290, 291 with Sec. 6 of Environment Act 1986 and Under

Sec.33 (N) 113, 181, 136.

13) CRII 64/06 Under Section 37(3)135.

14) 193/06 Under Section 323, 504, 506, 143, 145, 147 of IPC

15) CRI 240/89 Under Section 143/147,336,337,353,427 of IPC

16) CRII 04/93 Under Section 37(3) 135.

17) CRII 08/93 Under Section 37(3)135, 36/135

18) CRII 73/06 Under Section 37(3) 135.

19) CRII 92/11 Under Section 37(3)135.

20) CRI 165/07 Under Section 353, 143,145,147, 148,149,427,504 of IPC

Read more: http://viduthalai.in/page-2/84656.html#ixzz38UKr8csO

தமிழ் ஓவியா said...

எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு தான்

எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு தான்
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூக்கு, கலைஞர் பதில்

சென்னை, ஜூலை 25--_ எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு தான் என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்விக்கு, கலைஞர் பதில ளித்துள்ளார்.
என் சொத்து திறந்த கணக்கு புத்தகம்

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று (24.7.2014) வெளியிட்ட கேள்வி- _ பதில் வடிவிலான அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே?

பதில்:- என்னுடைய சொத்துக்கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டி யிட்ட போதும், அந்த கணக்கு தரப்பட்டு நா ளேடுகளிலும் வந்துள்ளது. அந்த கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட் கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விவரம் தெரிந்தவர் என் பதைப் புரிந்து கொள்ள லாம்.

நான் அய்ந்து முறை முதல்-அமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு

என்னு டைய 25 வயது முதல் திரைக்கதை, உரையாடல் எழுதியிருக்கிறேன். எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள தெருவீடுதான்.

இந்தியாவிலே உள்ள எந்த முதல்-அமைச்சரும் இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாகத் தெரிய வில்லை. இந்த வீட்டைக் கூட எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு பொதுச் சொத்தாக்க, அறக் கட்டளைக்கு இப்போதே எழுதிக்கொடுத்து விட்டேன்.

நான் திருப்பிக் கேட் கிறேன். இந்த நீதிபதியின் சொத்துக்கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதல்-அமைச் சரின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக்குவிப்பு வழக்கு என்மீதா நடக் கிறது? அந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை காப் பாற்றத் தானே யாருடைய தூண்டுதலாலோ இவர் தற்போது புதிதாக புறப் பட்டிருக்கிறார்.

ரிமாண்ட் செய்தார்

கேள்வி:- உங்களை ஜாமீனில் விடுவித்தார் என்பதற்காக நீதிபதி ஒரு வருக்கு தாங்கள் பல்வேறு உதவிகளைச் செய்ததாக மார்க்கண்டேய கட்ஜூ சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அவர் என் மீது மறைமுகமாகச் சாட்டி யுள்ள குற்றச்சாட்டு, என்னை ஜாமீனில் நீதிபதி அசோக்குமார் விடுவித்தார் என்பதற்காக அவருக்கு நான் பல வகைகளிலும் பரிந்துரை செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.

நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார் என்பதே உண்மையல்ல. 2001-ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஜெய லலிதா அரசில் நள்ளிர வில் காவல்துறையினர் வீடு புகுந்து என்னைத் துன் புறுத்திக் கைது செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை ரிமாண்ட் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கே போலீஸ் வேனில் அழைத் துச் சென்றார்கள். நீதிபதி காவல் துறை யினரிடம் எப்.அய்.ஆர். நீதிமன்றத் திற்கு முறைப்படி அனுப்பப் பட்டு விட்டதா? என்று கேட்டபோது காவல் துறையினர் இல்லை என்றார்கள். வழக்கு பற்றிய விவரங்களும் அவர்களிடம் இல்லை. இந்த விவரங்கள் இல்லாமல் என்னை ரிமாண்ட் செய்யக்கூடாது என்று தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடி னார். ஆனால், அந்த வாதத்தை மறுத்து விட்டு நீதிபதி அசோக்குமார் என்னை ரிமாண்ட் செய் தார் என்பதுதான் உண்மை.

அய்.நா. விசாரணைக்குழு

கேள்வி:- அய்.நா. விசா ரணைக் குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறதே?

தமிழ் ஓவியா said...

பதில்:- அய்.நா. விசா ரணைக் குழு இந்தியாவுக் குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு விசா வழங்க மறுத்திருப்பது சிங்களப் பேரினவாத ராஜ பக்சேயின் போர்க்குற்றங் களுக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக் கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள் கிறதோ என்ற வேதனை யைத் தருகிறது. எனவே இந்திய அரசு இலங்கை மீதான தனது கருத்தினை வெளிப்படுத்த வேண்டு மென்பதோடு, போர்க்குற்ற விசாரணையை சென் னையில் நடத்த அனும திக்கும் முடிவினை மேற் கொள்ள வேண்டுமென்று உலகத்தமிழர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
முக்கிய பிரச்சினை

கேள்வி:- அய்.ஏ.எஸ்., தேர்வுக்காகப் பயிலும் மாணவர்கள் தங்களை சந்தித்து சில கோரிக்கை களை முன் வைத்தார்களே?

பதில்:- யு.பி.எஸ்.சி., முதல் நிலைத் தேர்விற்கான கேள் வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அச்சிடப்படுவதால், இந்தி மொழி பேசும் மாநிலங் களைச் சேர்ந்த மாண வர்கள் முதல் நிலைத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் சாதகமாக உள்ளது என்றும், இந்தி மொழி பேசாத தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வு முறை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், முதல் நிலை வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது மூன்று மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அச் சிடப்பட வேண்டுமென் றும் கூறினார்கள். குறிப்பாக வினாத்தாள்- 2 இந்தி மொழி பேசும் மாணவர் களுக்கு சாதகமாக அமை கின்றது என்றும், கிராமப் புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு மிகக் கடினமாக உள்ளது என்றும், எனவே கேள்வித் தாள்- 2_க்கு தரப்படுகின்ற முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். இந்தப் பிரச்சினை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நமது மாணவர்களின் இந்த முக்கியமான பிரச்சினை யைத் தீர்க்க முன்வர வேண்டுமென்று வலியுறுத் துகிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/84671.html#ixzz38UL5N1cG

தமிழ் ஓவியா said...

பார்ப்பனீயம்!

கடிவாளம் சிறியது, ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான்! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன் கூடத்தான் இல்லை, ஆனால் மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும்.

அதைப் போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்த சமூகத்தாரின் செல்வாக்கு நிச்சயம் வளரும்... இதனால் தான் பார்ப்பனீயம் என்னும் பிரச்சினை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

26.10.1947 திராவிட நாடு இதழில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMbkUzs

தமிழ் ஓவியா said...


குங்குமம் விபூதி பற்றி


பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்! நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச் சியே பண்ணி தீஸிஸ் கூட சப்மிட் செஞ்சிருக்காங்க. கலப்பட விபூதி பக்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒரு சிலக் குடும்பங்கள் பாரம் பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு. இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற் பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிக மாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்... என்றார். (நன்றி: ஜூனியர் விகடன் 26.10.1997)

Read more: http://viduthalai.in/page4/84802.html#ixzz38op45Q2V

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவை அதிர வைத்த பறை இசை


செயின்ட் லூயிஸ் (மிசௌரி, யுஎஸ்): 2014-ஆம் ஆண்டு ஃபெட்னா விழாவில் தமிழரின் கலாச்சார அடை யாளமான பறை இசை நிகழ்ச்சிகளை கட்டியது. வந்திருந்த பார்வையாளர் களை மயிர்க்கூச்செரியும்படி அமைந்தது இந்த பறை இசை நடன நிகழ்ச்சி. 2014, ஜூலை 4, 5 தேதிகளில் செயிண்ட் லூயிஸ் நகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27ஆம் ஆண்டு தமிழ்விழா நடந்ததது. வடஅமெரிக்க தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழைக் கொண்டாடிய இந்த இரு தினங்களும், நண்பர்கள் அனைவரும் உற்றார்களாகவும், உறவினர்களாகவும் மாறிய நாட்களாக மாறிப் போயின என்றால் மிகையல்ல. நகரின் பிரதான சாலைகளில் பாரம்பரிய உடையில் தமிழர்கள். செயின்ட் லூயிஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு தமிழால் மணத்தது. தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம் என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி இரு தினங்களும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடைப்பெற்றதுதான், தமிழனின் கலாச்சார அடையாளமான பறை நிகழ்ச்சி.

பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாட்டுப் புற இசை நிகழ்ச்சி அல்லது பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால், அதற்கு தாய்த் தமிழகத்திலிருந்து கலைஞர்களை வரவழைக்க வேண்டி யிருந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, பறை இசை நடன நிகழ்ச்சி நடத்துவதில், தேர்ந்த கலை ஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் இங்கு வாழும் தமிழர்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர் மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொற்செழியன் மற்றும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக நின்ற பேரவையின் தலைவர் தண்டபாணி குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்

பறை இசை கலைஞர்கள் இந்த பறை நடனக் குழுவில், பொற்செழியன், ரமேஷ், கோவிந்தராஜ், அசோக், நந்தகுமார், பாலா, தினேஷ், பிருத்வி ராஜ், யசோதா, ரம்யா, கவிதா, புவனா, வீணா, ஜெயஸ்ரீ ஆகியோரும், இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வலர்களாக ஆதிசரண், கனிஷ்க், ஜோதம்,ரியா, ரித்தன்யா ஆகிய சிறார்களும் இதில் மனமகிழ்வுடன் பறையாடினர்.

பெரும் வெற்றி தமிழ் கலைகளைக் காக்கும் பொருட்டு இக்குழுவினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. குறிப்பாக 2014 ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியில் முக்கியப் பங்கு பறை இசை நடனம் மற்றும் தமிழரின் தொன்மை கலைகளான தெருக்கூத்து மற்றும் தோல்பாவைக் கூத்து போன்ற வற்றுக்கும் உண்டு.

அமெரிக்க பேராசிரியர்கள் இதில் பெருமைப்பட வேண்டியது, ஒக்கல ஹாமா பல்கலைகழகத்தின் இசைப் பேராசிரியர் ஜோயி செரினியன் மற்றும் ஏரன் பேகி தமிழ் பறை நடனக் குழுவி னருடன் இணைந்து சிறப்பித்ததுதான். அவர்களுடைய பறை பட்டறையும் பேரவையின் ஒரு அங்கமாக விளங்கி யது. ஆம்... நம் தமிழரின் பறை இசையை மையமாக வைத்து அமெ ரிக்கர்கள் பறைப் பட்டறை நடத்து வதை தாயகத் தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பறையால் விண்ணதிரட்டும் இசை மனதை மகிழ்வூட்டும், அமைதியாக்கும், ஆவாரப்படுத்தும், சுத்தமாக்கும். நம் முன்னோர்கள் கண்ட பறை, அமெ ரிக்கன் தமிழ் பறை குழுவின் மூலம் புது பரிமாணத்தை அடைந்துள்ளது. அவர்களின் முயற்சி தமிழரின் பறையை விண்ணை முட்டச் செய்யும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்கன் தமிழ் பறை குழுவினர், பறை உலகறிய செய்வதற்கு என்றும் ஆர்வமுடன் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. இக்கலையை கற்றுக்கொள்வதற்கோ, மேடையில் கண்டு ரசிக்கவோ அவர்களைத் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழகத்தில் எந்த ஒரு விழா என்றாலும் மலையாளத்தாரின் செண்டைமேளத்தையும் பார்ப்பனர் புகுத்திய கலாச்சாரத்துடன் கொண் டாடி வரும் வேலையில் அமெரிக் காவை அதிரவைத்த பறைஇசை இனி அனைத்து பொது நிகழ்ச்சியிலும் ஒலிக்குமாம், எந்த தமிழிசையை அமங் கலம் என்று ஒதுக்கிவைத்தார்களோ அதே இசை இன்று மேற்குலகில் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page5/84803.html#ixzz38opVgRtU

தமிழ் ஓவியா said...


உயிர் உருவாகிறது, படைக்கவில்லை

1. வெள்ளை புழு: ஆம் செம்மறி ஆட்டு புழுக்கை (சாணி) அள்ளி ஓரி டத்தில் (குப்பைக் குழி) தினம் 4, 5 தட்டுக்கூடை அளவுக்கு ஆறுமாதம் வரையில் அதன் மேல் போட்டு வந்து அதன்பின் ஓரளவு மழை அதாவது தண்ணீர் தெளித்து காயாமல் நனைந்து இருக்க வேண்டும். அதன்பின் அதனை மண்வெட்டியால் அள்ளும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அதிலே இரண்டு மூன்று அங்குல நெட்டு அரை ஒரு அங்குலம் உள்ள வெள்ளை நிறமுள்ள பூச்சி உயிருடன் இருக்கிறது.

2. எருவில் புழு: மாடுகளை மேய்க்க நிலத்துப்பக்கம் போகும்போது அதன் எருவில் அடுத்த நாள் பார்க்கும்போது சிறு வெள்ளை புழுக்களும் இருக்கிறது அதை காக்கை கொத்தி இரையாக்கிக் கொள்கிறது எல்லா இடங்களிலும் இவ்விதம் ஏற்படுவதில்லை உப்பு நிலம், உவட்டுத்தரை, கந்தகத்தரை, உவர்மண் இப்படி உள்ள இடங்களில் புழுக்கள் தோன்றுவதில்லை.

3. ஈசல்: மழை பொழியும் போதெல்லாம் இல்லை; அய்ப்பசி கார்த்திகை மாத வாக்கில் மழை பொழிந்தால் உடனே ஈசல் என்ற பறக்கும் உயிரினம் மிக அதிகமான அளவில் உருவாகிறது கொஞ்ச நேரத்தில் இறக்கை உதிர்ந்து தரையில் இளைகிறது. உருமாற்றம் ஆகிறது. இது உணவாகவும் பயன்படுகிறது.

4. பனம் மட்டை: பனம் மட்டையை அடர்த்தியாக ஆறுமாத அளவில் அடுக்கி வைத்து அதில் பலமுறை மழை பொழிவு அல்லது பலமுறை தண்ணீர் தெளித்தால் கருப்பு நிறப்பூச்சி, அட்டை மாதிரி உயிருடன் கூடுதலாக உருவாகிறது.

5. தேள்: பழைய பனம் மட்டை, பழங்கூரை, வரகு, வைக்கோல், சாம்பல் இவைகளை ஒரே இடத்தில் போட்டு அதிகம் காயாமல் தண்ணீர் தெளித்து வந்தால் ஆறுமாத அளவில் தேள் உயிரினம் தோன்றுகிறது.

6. சிகப்பு அட்டை: இற்றுப்போன மட்டை, வைக்கோல், கூரை, பழைய வீடுகளில் மழைக்காலங்களில் சிகப்பான அட்டை உயிருடன் உண்டாகிறது.

7. பாசி: தண்ணீர் உள்ள தொட்டி யில் உயிரான பாசம் ஏற்படுகிறது குறைவான தண்ணீர் உள்ள கிணற்றில் கொடி போன்ற பாசி உயிருடன் உண் டாகிறது. இவை எனது கவனிப்பில் தென்பட்டவை: இடத்திற்கு ஏற்பவும் பொருள்கள் மூலமும் தட்ப வெப்ப பருவகாலங்களில் உயிரினம் ஏற்பட்டு அதுவே வளர்ச்சியின் மூலமாக மனிதன் என்ற உயிரினம் உருவாயிருக்க வேண்டும் சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி சரிதான் கடவுள் என்பது ஒரு பொருள் கூட இல்லையே; அப்படி இருக்க, இல்லாத பொருள் எப்படி எதையும் உருவாக்க முடியும்?

8. விட்டில்: ஆறுமாத அளவில் ஒரே இடத்தில் பல தென்னம் மட்டைகள் காய்ந்து இற்றுப் போய் இருந்தன. மழை பொழியும்போது அந்த மட்டையில் இருந்து விட்டில்கள் பொரி வானம் போல 50 அளவில் பறந்தன. கால நிலைக்கேற்ப உயிரினம் தோன்றும் இந்நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

கோழி: கோழி முந்தியா? முட்டை முந்தியா? உயிர் இனம் கோழி தான் முந்தியது. ஆம், இவ்விதம் செல்கள் உருவாகி அதற்கேற்ப உயிர் இனம் தோன்றி இருக்கும். இதன் பின்தான் இன சேர்க்கை ஏற்பட்டு உற்பத்தி ஆகிறது ஒவ்வொன்றும் அபிவிருத்தி ஆகி இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. முதலில் செல் உருவாக வேண்டும் இவை சேர்ந்து உயிர்ப் பொருள் உருவாகி நிறங்கள் வடி வங்கள் ஆண்பால். பெண்பால் அமை வதற்கு செல்களே காரணமாகின்றன. கடல், மழை, இப்படி பல இடங்களில் சூழ்நிலைக்கேற்ப உயிர் இனம் தோன்றி ஆண், பெண் என்பன தோன்று கின்றன. அதன்பின் தான் இனச் சேர்க்கை மூலமாக, முட்டை மூலமாக அல்லது குஞ்சு, குட்டி போன்றவை உருவாகின்றன. இதன்படி பார்த்தால் கோழிதான் முந்தியது.

Read more: http://viduthalai.in/page7/84808.html#ixzz38opvRna6

தமிழ் ஓவியா said...


இந்த நாள்!


29.07.1944இல் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் முத்தையா டாக்கிஸ் திரைப் பட அரங்கில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்டம் திராவிடர் கழக மாநாட்டில் அகவை பதினோர் வயது நிரம்பாத நிலையில் சிறுவன் வீரமணியை மேசை மீது தூக்கி நிறுத்தி மனப்பாடம் செய்த பேச்சுத் தொகுப் பினைத் தங்குதடையின்றி பேசி மாநாட்டிற்கு வந்திருந்தோர் அனைவரின் பாராட்டைப் பெற்ற நாள்.

இந்த மேடையில் சிறுவன் வீரமணியின் பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வீரமணியின் பேச்சைப் பாராட்டிப் பேசும்போது இப்பொழுது பேசிய சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்.

சிறுவன் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார் அண்ணா. தந்தை பெரியார் மேடையில் அகமகிழ்வு அடைந்தார். மாநாட்டுப் பந்தலே கையொலியால் அதிர்ந்த நாள்! இந்த நாள்!!

Read more: http://viduthalai.in/e-paper/84827.html#ixzz38orBRK3p

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கோட்புலி நாயனார்

சோழர்களின் படைத் தளபதி கோட்புலியார். சிவாலய அன்னதானத் திற்கான நெல் அளிக்கும் திருப்பணி புரிந்து வந் தார். அதற்காக நெல்லை பெரியதொரு களஞ்சியத் தில் சேமித்து வைத்திருந் தார்.

ஒருமுறை அவர் போருக்குச் சென்றிருந்த போது நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசிப் பட்டினியால் வாடிய அவருடைய உறவினர் கள் அந்த நெல்லைப் பயன்படுத்தி விட்டனர். போரிலிருந்து திரும்பிய கோட்புலியார் சிவ கைங்கரியத்திற்காக வைத்திருந்த நெல்லை அபகரித்த அவர்கள் அனைவரையும்வெட்டி வீழ்த்தி தன் சிவபக்தியை மெய்ப்பித்தார்.

இதைப் படிக்கும் பொழுது என்ன தோன்று கிறது? அன்பே சிவம் என்பது இதுதானோ! பக்தி இருக்கும் இடத்தில் கொலை வெறிதான் மிஞ்சும் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/84838.html#ixzz38orSoOkC

தமிழ் ஓவியா said...

விதைகளை மலடாக்கும் விபரீதம்!


மத்தியில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதவாத அரசு மட்டுமல்ல - வெகு மக்கள் விரோத அரசு - பாட்டாளி மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு - கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை - பொருளாதாரத்தில் அமெரிக்கப் பார்வை கொண்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நாளும் பெருகிக் கொண்டே போகின்றன. இதன் மூலம் வெகு மக்கள் வெறுப்பை வெகுவாக வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களைப் பரிசோதனை முறையில் சாகுபடிசெய்யலாம் என்று ஜூலை 18ஆம் நாள் மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாக ஆகி விட்டது.

மோடியின் குஜராத் மாநிலத்திலேயே இதற்கான ஆக்கப்பூர்வ எதிர்ப்பு களைகட்டுகிறது. இன்று முதல் மூன்று நாள்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்த மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது. தெற்காசிய விவசாயம் ஒருங்கிணைந்த மாநாடாக இது உருவாகியுள்ளது. இதன் அவசர நோக்கம் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்ப்பதே!

மரபணு மாற்று விவசாயத்துக்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு மேலோங்கி நிற்கிறது. இதன் சூத்ரதாரி அமெரிக்காவாகும். இவர்கள் சொல்லுகிற முறைப்படி மரபணு மாற்று முறையைக் கையாண்டால் விதை நெல்லுக்கு இந்த நிறுவனங்களிடம் கையேந்தித் தான் நிற்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இந்த மரபணு மாற்று முறை விவசாயத்தால் கிடைக்கும் நெற்களை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. வீரிய கோழி முட்டைகளை (HYBRID) கொண்டு எப்படிக் குஞ்சு பொரிக்க வைக்க முடியாதோ அதே போன்று தான் இதுவும்
ஏதோ பி.ஜே.பி. இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் திட்டத்தைக் கைக் கொள்கிறது என்று அவசரப்பட்டு யாரும் முடிவு செய்ய வேண்டாம்.

அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான மத்தியில் அமைந்த ஆட்சியின் போதே 1998ஆம் ஆண்டிலேயே இந்த நாசப்படுத்தும் நச்சுக் கொள்கைக்கு நாற்று நடப்பட்டு விட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம் தனது தாவர மரபணு ஆய்வுக்கான அணுக்களை (டெர்மினேட்டட் ஜீன்) இந்திய நாட்டின் வயல்களில் சோதனை செய்து பார்க்க அனுமதி வழங்கியது. கருநாடகம் உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது - பிஜேபி ஆட்சியில். இதில் என்ன கொடுமையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இது குறித்த தகவலோ அவர்களின் அனுமதியோ கிடையாது என்பதுதான் அது.

அமெரிக்காவின் மான்சான்டோவுக்கு வழங்கப் பட்டுள்ள இந்த அபாயகரமான அனுமதி குறித்து அந்தக் கால கட்டத்திலேயே பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் பயிர்களின் மரபுரிமை திருடப்படுவதைக் கண்டித்துக் குரல் கொடுத்ததுண்டு; இந்தத் திட்டத்தால் விளை பொருள்களில் சத்துக்கள் அதிகரிக்கும் என்கிற விளம்பரத்திலும் உண்மையில்லை என்று பெங்களூர் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அழுத்தந் திருத்தமாக வெளிப்படுத்தினரே!

நிலத்தையும், நீரையும் தெய்வமாக வழிபட வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பா.ஜ.க. இப்படி இந்தப் பூமாதேவியை (பூமாதேவி அவர்கள் மொழியில் இப்படித்தானே!) மாசுபடுத்தலாமா?

ஒவ்வொரு முறையும் விவசாயம் செய்து விட்டு, அடுத்த விவசாயத் தொடக்கத்திற்கு அந்த அமெரிக்க நிறுவனங்களின் திசை நோக்கித் தண்டனிட்டுக் கிடக்க வேண்டுமா? அவர்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் மலட்டு விதைகளுக்காக காத்துக் கிடக்க வேண்டும். வேறு வழியில்லை நம்மை அண்டித் தான் இந்தியாவின் விவசாயம் நடந்தாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டு விட்டால், அவர்கள் வைத்தது தானே சட்டம், நிர்ணயித்ததுதானே விலை என்ற சுரண்டல்தானே ஜாம் ஜாமென்று நடக்கும்.

மரபணு மாற்று விதையில் பயிர் செய்யப் படுவனவற்றைத் தொடர்ந்து உண்டால் உடல் நோய்க்கு ஆளாக வேண்டும். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறையில் உற்பத்தி செய்யப்படுபவை பெரும்பாலும் கால்நடைகளுக்குத் தீவனங்களாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஒரு முக்கிய தகவலாகும்.
மரபணு மாற்றுப் பயிர்களின் திறந்தவெளிப் பரி சோதனை குறித்த முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. நாடாளுமன்ற வேளாண் நிலைக் குழு ஆய்வு நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கை 2013இல் வெளி வந்தது.

இந்த மலட்டு விதை விவசாயத்தின் வாழ்வா தாரத்தையே முற்றிலும் அழிக்கக் கூடியது என்று தெளிவாக தெரிவித்து விட்டதே! இந்த அடிப்படையில் கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது.

இப்பொழுது நரேந்திர மோடி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, பழைய பிஜேபி அரசு (1998) தொடங்கியதைப் புதுப்பித்துக் கொள்ள தோள் தட்டிக் கிளம்பியுள்ளது.

அறுபது நாட்களுக்குள் இவ்வளவு விபரீதங்கள் என்றால் வரும் காலம் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதிதான் மக்கள்முன் நிற்கிறது.

இந்துத்துவா கொள்கைப்படி விவசாயம் என்பது பாவத் தொழிலாகும். (மனு தர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84) அது எப்படியோ நாசமாக போகட்டும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர்கள் நம்பும் அந்த பாவப்பட்ட தொழிலில் தான் இந்தநாட்டில் கோடானு கோடி விவசாயப் பெருங்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திண்டோள் பொங்கி எழுந்தால் அவற்றை எதிர் கொள்ளும் சக்தி எந்த அரசுக்கும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84841.html#ixzz38orhYiwR

தமிழ் ஓவியா said...


தீராது



பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந் தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/84840.html#ixzz38orrEooA

தமிழ் ஓவியா said...


வாய்ப் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி கீரை


மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும்போது கசப்பு குறைவாய் இருக்கும். இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.

மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

இதுகுறித்து தருமபுரி அரசு சித்த மருத்துவ பிரிவு செல்வமூர்த்தி கூறியதாவது:

மணத்தக்காளி சிவப்பு, கறுப்பு என இரண்டு வகைப் படும். இலை, காய் இரண்டும் பெரிதும் பயன்படுகிறது. மணத்தக்காளியை மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, விடைக்கந்தம், உலக மகா என வழக்கத்தில் அழைக்கப் படுகிறது. கபநோயால் உண்டாகும் நாப்புண், நாவேக்காடு, உட்சூடு, நா எரிச்சல், இருமல் சளி மணத்தக்காளி பயன்படுத்தினால் தீரும்.

ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை சாப்பிடவேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலி நீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளி காயை வற்றல் போடலாம்.

வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/84817.html#ixzz38otOZdmU

தமிழ் ஓவியா said...


தொண்டை வலிக்குத் தீர்வு


தொண்டை வலி என்பது எல்லா வயதினருக் கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ் வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும் போதும் சிரமம் இருக்கும்.

எனவே இதை விரட்ட சில வழிமுறைகள்...

சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாள்களில் குணமாகி விடும்.

சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும் பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா தேநீர் குடித்தால் நல்லது. மசாலா தேநீர் என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்கவேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

தடை: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/84816.html#ixzz38oteWMex

தமிழ் ஓவியா said...


வயிறு பிரச்சினைகளைத் தீர்க்கும் கறிவேப்பிலை....

தமிழர்களின் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது கறிவேப்பிலை. சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உணவு ருசி மிகுந்ததாகவும், வாசனை மிகுந்ததாகவும் மாறும்.

கறிவேப்பிலை தென் னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் தென்னிந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.

இலங்கை, இந்தியா தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படு கின்றது.

தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர் களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது. கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணி.. இதுகுறித்து அரசு சித்தா மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: கறிவேப்பிலை தூக்கி எறிவதற்கல்ல, உண்பதற்கே.

புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி. இவற்றால் கண் பார்வைக் கோளாறுகள் வராது. எலும்புகள் ஏற்றம் பெறும். சோகை நோய் அண்டாது. தொற்று நோய் ஊரில் இருந்தாலும் நமக்கு வராமல் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.

புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவும். சிறப்பாக வாய்ப்புண் குணமாகும். பல் ஈறு வலுவாகும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டியடிக்கும் வலிமை இதற்கு உண்டு. மலச்சிக்கலை போக்கும். செரிமான சக்தியை மிகுவிக்கும். பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலைத் தொலைக்கும்.

தலைமுடி வளரவும், வனப்பாக விளங்கவும், கண்களுக்கு ஒளிதரவும், சுக்கிலம் விருத்தியடையவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். பசி எடுப்பதில்லையா? செரிமான மந்தமா? கறிவேப் பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து உப்புச் சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி கிளர்ந்தெழும்

Read more: http://viduthalai.in/page-7/84818.html#ixzz38ottkYaW

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் 1,10,19,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுப பலன் உண்டாம். புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் உண்டாம்.

7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத் தொடக்கத்தில் பண வரத்து இருக்குமாம்.

ஒரு நாளில் பிறந்தால் போதும், திறமை முக்கி யம் இல்லை; உழைப்பு முக்கியம் இல்லையா? இது ஒரு சோம்பேறித்தன மான நம்பிக்கையை அல்லவா வளர்க்கும்!

Read more: http://viduthalai.in/page1/84723.html#ixzz38ouKCkRt

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னி யன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

- (விடுதலை, 24.9.1950

Read more: http://viduthalai.in/page1/84714.html#ixzz38oudCrNg

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடும் பாலியல் வன்கொடுமையும்


தேசிய ஆவணக் கழகம் (National Crime Records Bureau) என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் ஓர்ஆவணக் காப்பகமாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக் கைகளில் தமிழ்நாட்டின் பங்கு 2.41 சதவீதம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லை களுக்கு அதாவது 4 முதல் 18 வயது வரையிலான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 280 என்றும், 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களின் எண்ணிக்கை 395 எனவும், 30 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களில் பாதிப்புக்குள்ளான வர்கள் 93 பேர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 16 பேர் பாலியல் கொடுமைக் குள்ளாகி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களாக இருக்கின்றன.

இதிலே இன்னும் கொடுமையென்றால் பாலியல் வன்முறைக்குள்ளான 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 61. அத்துடன், 10 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளில் பாலியல் கொடுமைக் குள்ளானவர்கள் 78 பேர்.

அண்மையில்கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டையில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யுள்ளார்.

2013ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 475. 2012ஆம் ஆண்டில் அது 7ஆயிரத்து 192. அது மட்டுமல்ல;

பாலியல் கொடுமைகள் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டு 923. அதே 2012இல் 677.

தமிழ்நாட்டில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட தற்காக நாடே பொங்கி எழுந்தது. நமது அண்டை மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்காகக் கடும் கண்டனப் புயல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் இவ்வளவு நடந்திருந்தும் ஒன்றும் நடக்காததுபோல மூடி மறைக்கப்படுவது - ஏன்? தமிழ் நாட்டு ஊடகங்களும் வாய் மூடி மவுனம் சாதிப்பது - ஏன்?

சட்டப் பேரவையில் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றால் - மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த முடியும்?

உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவது என்றாலே அது ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

எதிர்க்கட்சிகள் என்றாலும் சரி, ஊடகங்கள் என்றாலும் சரி நாட்டில் நடைபெறும் உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தினால் தானே ஆளும் கட்சியும் சரியான திக்கில் பயணிக்க முடியும்? செயல்பாட்டிலும் வேகத்தை முடுக்கி விட முடியும்.

பெண்ணென்றால் ஓர்ஆணுக்குச் சமையல் காரி ஓர்ஆணின் வீட்டுக்கு வேலைக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்

(குடிஅரசு 21.7.1946).

தமிழ் ஓவியா said...

சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் பெண்கள் பற்றிய மனப்பான்மையில் மாற்றங் கொண்டு வரப்பட வேண்டும்.

இத்திசையில் கல்வியில் பெரும் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் ஏன் அடிமையானாள்? - என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் கல்லூரிகள் மட்டத்தில் இடம் பெற்றாக வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்கு மேலான மாணவர், மாணவி யர்கள் மத்தியில் பாலியல் கல்விபற்றித் தேவையான அளவில் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆபாசமாக அருவருப்பாக, அநாகரிகமாக நாட்டு நடப்புகள் இருப்பதைவிட, இந்தப் பாலியல் கல்வி எப்படித் தவறானதாகும்? இதில் போதிய புரிதல் இல்லாமையும் தவறுகள் நடப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியுமா? போதும் போதாதற்கு நமது ஊடகங்களும், சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் இளம் உள்ளங்களைப் பாலியல் வெறி உணர்வுகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அட்டைப் படங்கள் என்பவை - அரை குறை ஆடையுடன் கூடிய சினிமா நடிகைகளின் படங்கள் என்பது நிரந்தரமாகி விட்டனவே!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன என்று நிகழ்வுகள் நடக்கும் அந்தந்த காலங்களில் மட்டும் கூக்குரல் போடுவதும், சில நாட்களில் மறந்து விடுவது என்பதும் ஒரு தீய வட்டச் சுழற்சியாக அல்லவா இருக்கின்றது.

குற்றங்கள் நடக்கின்றன என்றால் அதற்கான மூலவேர் எங்கு இருக்கிறது என்று கண்டாய்ந்து அதனை வேரும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிய அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமா?

பெண்கள் என்றால் உடல் வன்மையற்றவர்கள் ஆண்கள் பலசாலிகள் என்ற மரபணுவை மாற்றி அமைத்திட விஞ்ஞான மார்க்கத்தை தேடுவதிலும் குற்ற மில்லை; தற்காப்புப் பயிற்சிகள் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்காவது பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து தற்காப்புக்காக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்ன கருத்து கவனிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது. அரசு சிந்திக்கட்டும் ஊடகங்களும் மனம் விரியட்டும்!

Read more: http://viduthalai.in/page1/84713.html#ixzz38ounIXmT

தமிழ் ஓவியா said...


பாசிசத் தொழிற்சாலையாகிறதா, குஜராத் மாநிலம்?


- குடந்தை கருணா

சென்ற ஜூன் 30-ஆம் தேதி, குஜராத்தில் உள்ள 42000 தொடக்கப்பள்ளி, மற்றும் இடை நிலைப் பள்ளிகளுக்கும், அரசு ஓர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், தினாநாத் பாத்ரா என்பவரின் ஆறு புத்தகங்களையும், துணைப்பாடமாக, கட்டாயம் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரி. யார் இந்த தினாநாத் பாத்ரா? சிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் தலைவராக இருந்த, பாத்ரா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்; இவர் தான், அமெரிக்க பேராசிரியர் வென்டி டோங்கியர் எழுதிய இந்துக்கள்; ஓர் மாற்று வரலாறு என்கிற புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்.

இந்த பாத்ராவின் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டுள்ளது? இந்து கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்ற போர்வையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இனி, பிறந்த நாளுக்கு, மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென் றால், இது மேற்கத்திய பண்பாடு. அதற்குப் பதிலாக, ஓர் விளக்கை ஏற்றி, காயத்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.

வரலாற்றுப் பாடங்களில், இந்தியாவின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என சொல்லப் பட்டிருக்கிறது. அதன்படி, தற்போதைய, இந்திய வரைப்படம் மாற்றப்பட்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், திபெத், பர்மா, இலங்கை நாடு களையும் உள்ளடக்கிய வரைபடம் தான் இந்தியா என வரையப்பட வேண்டும். ஏனென்றால், இதுதான், பண்டைய அகண்ட பாரதம், என பிள்ளைகளுக்கு சொல்லப்பட் டுள்ளது.

இது குறித்து, குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சவுடா சாமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பாடங்கள் அனைத்தும், பள்ளிகளில் கட் டாயப்பாடம் என்று கூறி உள்ளார்.

குஜராத்தில் 2002இல் நடை பெற்ற மதக்கலவரத்தின் மூலமாகத் தான், மோடி அடையாளப்படுத்தப் பட்டார். இந்துக்களிடையே, முஸ்லீம் விரோதப் போக்கை உருவாக்கி, அதன் காரணமாக தொடர்ந்து குஜராத்தில் அவர் பெற்ற அரசியல் வெற்றி, பிரதம ராவதற்கான காரணமாக அமைந்தது.

மோடியிடம் குஜராத்தில் அவரது உத்தரவிற்கு பணிந்து வேலை பார்த்த அதிகாரிகள்தான், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் அவருக்குத் துணையாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

குஜராத் கலவரம் நடை பெற்றபோது, உள்துறை அமைச்ச ராக இருந்து, பல போலி கொலை குற்றங்கள் செய்த அமீத்ஷாதான் தற்போது பாஜகவின் அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா என உலகம் முழுவதும் பரப்பப்பட்டுவரும், காந்தி, குஜ ராத்தில் பிறந்திருந்தாலும், காந் தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸைக் கண்டிப்பதுபோல், காப்பாற்றிய, குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலுக் குத்தான், மோடி சிலை வைக்க இருக்கிறார். அதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளார்.

தற்போது, பள்ளிக்குழந்தைகள் மனதில், காலத்திற்கும் நிற்கும் வகை யில், பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, இந்துத்துவா விஷ விதை விதைக்கப்படுகிறது. பாசிசப் பார்த்தினீயம் உருவாக்கப்படுகிறது.

இவையெல்லாம்தான் நடை பெறும் என்று நாம் படித்து படித்துச் சொன்னோம்; இடித்தும் சொன் னோம். ஆனால், இங்கே உள்ள சில தலைவர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை எனச் சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றினார்களே; இவர் களெல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/84716.html#ixzz38ovLY4Iw

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருப வர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது.

தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட் டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக் காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.

Read more: http://viduthalai.in/page1/84704.html#ixzz38owA7lNy

தமிழ் ஓவியா said...

சேலம் வன்னியர் குலச்சத்திரியர் மகாநாடு


ஆகையால், சகோதரர்களே! இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான ஜாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற ஜாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ்ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த ஜாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபடவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆகவேண்டாமா? இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிப்பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய் இருக்கின்றதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் கண்காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் கண்காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமான தாகுமா? என்பதை நீங்களே யோசித் துப்பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி, நம்ம நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக்கொள்ளுவ தென்று போட்டிப் போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரிய மானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின் றார்கள்.

நாம் இன்றையதினம் யார் சத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக் கின்றோம். சத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பெயரினால் என்ன லாபம்? அந்தப்பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டுவிட்டது? எந்தத் தேசத்தைப் பிடித் தோம்? எதை ஆளுகிறோம்? யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம்? ஏதோ சிலர் பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள் கூலிகளாய் இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே.

எனது நாடார் நண்பர்கள் அனேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால், ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்துகொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன்.

உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மைல் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதன் மணிக்கு 50 மைல் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலையில் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளி மலை.

அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக் கொண்டு, தொடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு, தலையில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக்கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும், வெள்ளைக்காரன் கைலாயத் திற்கு போய் பரமசிவனின் தலையைப் பிடித்து ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான்.

ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவர் களைப் பிழைக்க வைக்கவும் முயற்சிக்கிறான். கிழவனைக் குமரனாக்குகிறான். ஆண்குழந்தை வேண்டுமானால் ஆண்குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமானால் பெண் குழந்தையும் பெற்றுக்கொள்ள வழிகண்டு பிடிக்கிறான். செவ்வாய் மண்டலம் போகிறான். தந்தியில் சேதி அனுப்பி, பாட்டு அனுப்பி, இப்போது ஆட்டம் அனுப்புகிறான்.

தமிழ் ஓவியா said...

பொம் மைகள் எல்லாம் கம்பியில்லாத தந்தியில், உருவங்கள் எல்லாம் ஆகாய தந்தியில் வருகின்றது. (நமக்கு யார் சத்திரியர் என்பதும், சத்திரியர் உலகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதும் இன்னமும் நமது ஆராய்ச்சியில் முடிவு பெறவில்லை) ஆகவே, அந்தமாதிரி உலகப்போக்கை நீங்களும் தயவு செய்து திரும்பிப்பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளத்தான் இங்கு வந்தேனே ஒழிய இவ்வளவு காயலாவுடன் உங்கள் மனம் நோகும்படியே நான் இங்கு வரவில்லை.

மற்றபடி, இந்த நாட்டில் இருக்கும் உங்கள் சமுகம் ஒற்றுமையுடன் பாடுபட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மைபெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை தல தாபனம் இவைகளைக் கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர்நிலைக்குக் கொண்டுவாருங்கள்.

வெறும் நாமமும், பூணூலுமே ஒன்றையும் அளித்துவிடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவைப் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள். சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன்வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள்.

முதலில் உங்கள் சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்து வாழமுடியும் என்பதைத் தெரியப்படுத்திக் கொண்டு நான் இதுவரை சொன்னவைகளை அப்படியே நம்பிவிடாமல் உங்கள் சொந்த அறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து பாருங்கள் என்று கேட்டுக்கொண்டு இம்மகாநாட்டை திறந்து வைத்ததாகச் சொல்லி அமர்கின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 01.06.1930

Read more: http://viduthalai.in/page1/84704.html#ixzz38owI5ukO

தமிழ் ஓவியா said...


சாரதா சட்டம்


சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4வது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் அட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண் களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுகளுடையவும், பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரேரேபணை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற்கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக் கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக் கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும்.

மூடனுடைய மனசாட்சி முட்டாள் தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப் பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/84705.html#ixzz38ownkQaS

தமிழ் ஓவியா said...


ஆரியம் தான் சமஸ்கிருதம் - உஷார்! உஷார்!!


சமஸ்கிருதம் ஒரு மொழிதானே?

இதற்குப் போய் முண்டா தட்டுவதா? என்று சிலர் முணுமுணுப்பர் - அவர்கள் விரிக்கும் வலையில் வீழாதீர்!

தமிழை - தமிழர்களைத் தாழ்த்த வந்த தாம்பு அது - தமிழை நான்கு கூறு போட்டதும் அதுதான் - மக்களை நான்கு கூறு போட்டதும் அதுதான்.
கோவிலுக்குள்ளிருந்து தமிழை வெளியேற்றியதும் இதுதான்.

தமிழனைப் பிடரியைப் பிடித்துத் தள்ளியதும் - தள்ளி வருவதும் அதுதான்.

அர்ச்சனை மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் குரல் கிளம்பிய நேரத்தில், ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றம் சென்றார். அவர் பெயர் வி.எஸ்.சிறீகுமார்; ஹிந்துக் கோவில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவராம். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களை மாற்ற அறநிலையத் துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின்போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

சமஸ்கிருத மொழி மூலமாக கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும். இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்துக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் என்று மனு தாக்கல் செய்தார் மனுவாதியான பார்ப்பனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழர்கள் கொடுக்கும் தட்சணையால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தமிழை வெறுக்கின்றனர் - சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

நம் தமிழர்களை வெறுக்கும், நம் தமிழை மறுக்கும் சமஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தத்தான் சமஸ்கிருத வாரம்!

உஷார்! உஷார்!!

தமிழர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்த ஆகஸ்டு முதல் தேதி களம் காண்போம் தோழர்களே!

கருஞ்சட்டைச் சேனையே, தயார், தயார் தானா?

Read more: http://viduthalai.in/page1/84698.html#ixzz38oxGNAH4

தமிழ் ஓவியா said...


பல்லக்கிலா?


திராவிடர் இயக்க ஆர்வலரும், நீண்ட நாள் விடுதலை வாசகருமான தோழர் நெய்வேலி க. தியாகராசன் அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்துள் ளார். தனியார்த் தொலைக் காட்சி ஒன்றில் ஒரு சொற் பொழிவாளர் சொன்ன தகவல்தான் அது.

மனிதனை மனிதன் வைத்து இழுத்த கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டு விட் டது. மனிதக் கழிவுகளை மனிதன் சுமக்கும் கொடுமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மனி தனை சாமி சிலையோடு சேர்த்துச் சுமக்கும் இழிவு இன்னமும் தொடர்கிறதே ஏன்? ஆன்மீகவாதிகள் சிந்திப்பார்களா!

அந்தத் தனியார்த் தொலைக்காட்சியில் இவ் வாறு கூறியவர் ஒர் ஆன் மிகவாதியென்றால் ஆச் சரியமாகவே இருக்கும். அவர் வேறு யாருமல்ல - சுகி சிவமே!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மனிதனை மனிதன் சுமக்கும் இந்த மனித உரிமை மீறலை எதிர்த்துத் திராவிடர் கழகம் போராட்டங்களை கூட நடத்தியதுண்டு.

திருவாரூரையடுத்த தப்பளாம்புலியூர் என்ற ஊரில் சாமியோடு அர்ச்ச கப் பார்ப்பனரைச் சுமந்து வரும் வழக்கம் இருந்து வந்தது. திராவிடர் கழகம் எச்சரித்து, அடுத்து போராட நடவடிக்கைகளில் ஈடு பட்ட நிலையில் அந்த பழக்கம் கைவிடப்பட்டது.

சிறீரெங்கத்தில் ரெங்க நாதன் கோயிலில் நெடுங் காலமாக பிரம்மரத முறை உண்டு; பல்லக்கில் பார்ப்பனர்களைச் சுமந்து வரும் நிகழ்ச்சி அது. கைசிக ஏகாதசியில் கைசிகப் புராணம் பாடி முடித்து, காலையில் பிரம்ம ரதத்தில் ஏறிக் கொள்வர் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள். அவர்களை சிறீ பாதம் தாங்குவோர் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்கள். (சூத்திரத் தமிழர்களான தூக்கிச் செல்பவர்களுக்கு அப்படி ஒரு பெயர்) திராவிடர் கழகம் அதனை எதிர்த் தது; இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் அதனைக் கை விடக் கோரினர் எதிர்த்து அர்ச் சகப் பார்ப்பனர்கள் நீதி மன்றம்கூட சென்றனர்; தீர்ப்பையும் மீறி பல்லக்கில் பார்ப்பனர்கள் பவனி வர முயன்றனர். திராவிடர் கழகம் களத்தில் இறங்கி யது. விளைவு சிறீபாதம் தாங்குவோரும் (சுமப்பவர் களுக்கு இப்படியொரு பெயர்) இனி பார்ப்பனர் களைப் பல்லக்கில் வைத் துத் தூக்க மாட்டோம் என்று எழுத்து மூலமா கவே எழுதிக் கொடுத்து விட்டனர். அத்தோடு ஒழிந்தது (7.12.2011)

மடாதிபதிகளும் பல்லக்கில் வருவதுண்டு. அப்படித்தான் திருவா வடுதுறை ஆதீன கர்த்தர் ஆண்டுதோறும் பட்டினப் பிரவேசம் என்று கூறி மற்றவர்கள் தூக்கி சுமக்கப் பவனி வருவார்.

திராவிடர் கழகம் களத் தில் இறங்கி மறியலுக்குத் தயாரானது. விளைவு அந்தப் பட்டினப் பிரவே சத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சங்கராச்சாரியார்கள் பல்லக்கில் செல்லுவதும் அடியோடு ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் காரணம் தந்தைபெரியா ரும், திராவிடர் கழகமுமே!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84882.html#ixzz38ud1zNN4

தமிழ் ஓவியா said...


சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?

ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் மூடப்படும் நிலை ஏன்?

முதல் அமைச்சர் உடனடித் தீர்வு காண வேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து, இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை முதல் அமைச்சர் காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த தமிழ்நாட்டுக் கல்வித் துறை இப்போது பல்வேறு அவலங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளாக உள்ளவை பல - போதிய அடிக்கட்டுமான வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை - அதன் காரணமாக, பல ஏழைப் பெற்றோர் கள்கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியதால் ஏற்பட்ட மாணவர்கள் போதாமை.

அரசுப் பள்ளிகளை மூடும் நிலை

அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் இல்லாததால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை என்று சில பகுதிகளில் உள்ள கிராமப் பெற்றோர்கள் கூறுவதாக தொலைக்காட்சியில் செய்திக் கோவைகள் வருகின்றன.

அரசின் கல்வித் துறை இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; ஏற்கெனவே படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகள் - இலவச சைக்கிள், உயர் வகுப்பு மாணவர் களுக்கு மடிக்கணினி, சம்பளமில்லா படிப்புச் சலுகை எல்லாம் வரவேற்கத்தக்கவை என்றாலும், புதிதாக பல ஊர்களில் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட, மாற்றுப் பரிகாரம் செய்ய வேண்டியதும் அவசர அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதனை எழுதுகிறோம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும் மூடப்படும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏன்?

தமிழ்நாட்டில் 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 450 தனியார் பள்ளிகள் (ஒரு காலத்தில் வாரிவழங்கியதன் விளைவு இது) உள்ளன.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித் திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந் தாழ்ந்து விடவில்லை. முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

1. இடை நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை பெறாதது.

2. பல்வேறு போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின் பரிதாப நிலை.

இவை காரணமாக இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான நிலை!

மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை!

மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும் அதிகம் வாய்ப்பாக அமையும்.

ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது.

ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும்.

மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான்.

முதல் அமைச்சர் கவனிப்பாரா?

ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல் பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா?


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
29.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84886.html#ixzz38udDxLea

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் 60 நாட்கள்


மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்று 60 நாட்கள் பறந்தோடின.

இந்த 60 நாட்களில் இந்த ஆட்சியின் சாதனைகள் என்ன? வேதனைகள் யாவை? என்ற விமர்சனங்கள் நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டு தானிருக் கின்றன.

எடுத்த எடுப்பிலேயே சொல்ல வேண்டும் என்றால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நகல் என்று பெரு வாரியான மதிப்பீடுகள் கூறுகின்றன.

2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிதி நிலை அறிக்கையைப்பற்றிக் கூறும் பொழுது, முந்தைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் குரல் ஒலித்ததாகவும் பரவலாகப் பேசப்பட்டது.

பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை இரண்டிலும் காங்கிரசும், பி.ஜே.பி.யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது.

எடுத்துக்காட்டாக, ஆயுள் காப்பீட்டுத் துறை, இராணுவத் துறைகளில் அந்நிய முதலீடு 49 சதவிகிதத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

பெட்ரோல், டீசல் விலையை அவற்றின் உரிமையா ளர்கள் கச்சாப் பொருள் விலையின் அடிப்படையில் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டு விட்டது. (பி.ஜே.பி. எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படியெல் லாம் இதனை எதிர்த்து எகிறிப் பாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே)

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட விலைவாசி ஏற்றம் வானத்தை எட்டி விட்டது கறுப்புப் பணத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று சவடால் விட்டவர்கள் சவுத்துப் போய் விட்டனர். டாலர் மதிப்பு ரூ.50லிருந்து 60 ரூபாயைத் தாண்டி விட்டது.

வெளிநாட்டுக் கொள்கையை எடுத்துக் கொண் டாலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் மோடி அரசு மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றே போதுமானது.

கச்சத் தீவு தொடர்பான வழக்கில் மேனாள் காங்கிரஸ் அரசு கொடுத்த அதே பிரமாணப் பத்திரத்தில் அரைப் புள்ளி வித்தியாசம் கூட இன்றிச் சமர்ப்பித்ததை நாடே பார்த்து கை கொட்டிச் சிரித்தது.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது, படகுகளைப் பறி முதல் செய்வது என்பது அதிக அளவில் கிட்டத்தட்ட அன்றாடமே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது; இதிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

எல்லாவற்றையும் விடக் கொடுமை - அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதியில்லை என்று கூறுவது எவ்வளவுப் பெரிய கொடுமை!

அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ முன் அவர்களால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவை அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவுக்கும், அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவை அனுமதிக்க மறுக்கும் நரேந்திர மோடிக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

இலங்கை அதிபருக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தது என்பதற்காக அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் அவர்களை நோக்கி முதுகெலும்பு இல்லாத மனிதர் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார் மதிப்புக்குரிய வைகோ அவர்கள்.

அதே நிலைதானே இன்றும்; வைகோ அவர்கள் வேண்டுமானால் அதே வார்த்தைகளைப் பயன்படுத்த இன்றைக்குத் தயங்கலாம் - ஆனால் அடிப்படை ஒன்றே!

பிஜேபி ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று ஊசி முனையில் தவமிருந்து ஓங்கி ஒலித்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இன்றைக்கு மக்கள் மத்தியில் தோன்ற முடியாத ஒரு நிலையை உருவாக் கிய சாதனையின் பெருமை மோடி தலைமையிலான இன்றைய மத்திய ஆட்சிக்கு உண்டு.

தேர்தல் அறிக்கையில் பிஜேபி வெளியிட்டிருந்த ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவா கொள்கை தொடர்பான திட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக சிவப்பு மையால் கோடு கிழித்துக் கொண்டு செயல்படத் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லுவதாகும்.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதே என்று ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ். கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகமான ஞான கங்கையில் குறிப்பிட்டுள்ளதுதான் அவர்களின் வேத வாக்கு.

இந்தியாவின் பிற பகுதிகளில் இதுபற்றிப் போதிய எதிர் விளைவுகள் ஏற்படாமல் இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் அது வேகாது; இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாடு கொடுக்கும் முழக்கம் இதுவரை உணர்ச்சி பெறாத மாநிலங்களில்கூட புத்தெழுச்சியைத் தட்டி எழுப்பும்.

பிஜேபி ஆட்சியைத் தலையில் வைத்துக் கரகாட்டம் ஆடும் ஒரு தனியார்த் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பில்கூட இன்றைய பிஜேபி அரசுக்கு எதிராக 62 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஒளிபரப்பியது.

60 நாட்களுக் குள்ளேயே 62 சதவீத எதிர்ப்பு என்றால் சொச்ச காலத்தில்?

Read more: http://viduthalai.in/page-2/84894.html#ixzz38udtq0bS

தமிழ் ஓவியா said...


தொல்லை



வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/84893.html#ixzz38ue3o7aL

தமிழ் ஓவியா said...

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

இந்நாள் :

கடலூரில் காலிகளால் தந்தை பெரியாரின்மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட நாள்

13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள். விழாவில் அமைச்சர்கள் ப.உ. சண்முகம், எஸ். இராமச்சந்திரன், பரூக் மரைக்காயர் உள்ளிட்டோரும் அன்பில் தர்மலிங்கம், முன்னாள் எம்.பி.யும் சென்னை மாநில கூட்டுறவு வங்கியின் மேனாள் தலைவருமான ஆர். கனகசபை, எம். செல்வராஜ், (தென்னார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர்), சிதம்பரம் பிரபல டாக்டர் கே. அரங்கசாமி எம்.பி.பி.எஸ். (முன்னாள் எம்.பி.) வி.வி. சாமிநாதன், ஆர்.கோவிந்தராசன் எம்.எல்.ஏ., ஆர். சுப்பிரமணியம், (கடலூர் நகராட்சி தலைவர்) உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர். விழாவில் நான் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினேன்.

தந்தைபெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா கடலூரில் ஒரு மாபெரும் இன எழுச்சி விழாவாக நடைபெற்றது. சிலை திறந்து வைத்து தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பிற தோழர்களும், அமைச்சர் பெரு மக்களும் ஆற்றிய பாராட்டுரைகள் பகுத்தறிவு முழக்கங்களாக அமைந்தன. முன்னதாகவே கடலூர் நகராட்சி வரவேற்பளித்து மகிழ்ந்தது.

விழாவிற்கு அய்யா அவர்களும் நாங்களும் சிலை அமைப்புக் குழு பொருளாளரும் வழக்குரைஞருமான எஸ். ஜனார்த்தனம் அவர்களின் (பிறகு இவர் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதி மன்ற நீதிபதியாகி ஜஸ்டீஸ் எஸ். ஜனார்த்தனம் ஆகி, ஓய்வு பெற்ற பின்பும் மாநில நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ஆகவும், பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டவர்) இல்லத்தில் தங்கி இருந்த அய்யா அவர்களை கழகத் தோழர்களும், பிரமுகர்களும் குடும்பங் குடும்பமாக வருகை தந்து சந்தித்து, தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துச் சென்ற வண்ணமாக இருந் தனர். விழாவையொட்டி நகரமெங்கும் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும் பந்தல்களும் கலை வண்ணம் குலுங்க காட்சி அளித்தன. கழகக் கொடிகள் எங்கு நோக்கினும் காற்றில் அசைந்தாடி அனைவருக்கும் நல்வரவேற்பு அளிப்பதுபோல இருந்தன.

விழா சார்பாக மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள். சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடி நின்று மலர் மாலைகள் அணிவித்து, அன்பளிப்பாக பழங்களும், ரூபாய் நோட்டுகளும் வழங்கி, தங்களை வாழ வைத்த தானைத் தலைவருக்குத் தன் நன்றிக் காணிக்கையைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பல்லக்கில் துவக்கத்தில் தந்தை பெரியார் அவர்களும் பவனி வந்தார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் பல்லக்கில் அமர்ந்து வர மிகவும் கூச்சப் பட்டு எங்கேயிருக்கிறார் என்று எவருக் கும் சொல்லாமலேயே தேவனாம் பட்டினம் கடற்கரை அருகில் இருந்த ஈ அய்.டி. பாரி நிறுவன பங்களாவுக்கு சென்று விட்டார். ஊர்வலத்தில் தந்தை யும் தனயர்களும் அமர்ந்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கடலூர் மக்கள், தந்தைபெரியார்மீது செருப்பு வீசியவர் கள், அய்யாவின் கொள்கை வெற்றியைக் கண்டு பூரிக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தோம்.

அய்யாவை மட்டும் அமர வைத்து திருப்பாதிரிப்புலியூரில் ஊர்வலத்தை துவக்கி வைத்துவிட்டு, காரை எடுக்கச் சொல்லி, கலைஞர் சென்ற தேவனாம் பட்டினம் பங்களாவை அடைந்தேன். முதல்வர் கலைஞருக்கும் அமைச்சர் களுக்கும் இது அதிர்ச்சி! அவர்கள் ஊர்வலத்தில் வந்தே ஆக வேண்டும் என்று உரிமையெடுத்துக் கொண்டு வற்புறுத்தினேன். வேறு வழியின்றி, ஒப்புக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு ஊர்வலம் நோக்கி முதல்வருடன் நானும் அமைச்சர்களும் வந்தோம்!

உங்களுடன் எப்போது போட்டி யிட்டாலும் வீரமணி வென்று விடுகிறார் என்று அமைச்சர் ப.உ. சண்முகம் உட்பட அனைவரும் வேடிக்கையாகக் கூற, முதல்வர் கலைஞர், அவர் பிடிவாதமாக எதையும் சாதித்தே தீருவார் என்று கூறி ரயில்வே கேட் அருகில் ஊர்வலம் வரும்போது முதல்வரை பல்லக்கில் ஏற்றி அமர வைத்தோம்.

ஜாதியை ஒழிக்க வந்த செம்மல் பெரியார் வாழ்க! இனக்காவலர் பெரியார் வாழ்க! சிந்தனை சிற்பி பெரியார் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் ஊர் வலம் முடிவுவரை கேட்டுக் கொண்டி ருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரிபுலியூர் கடைத் தெரு) வந்து கொண்டிருக்கையில் முதல்வர் கலைஞர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர் ப.உ. சண்முகம் அவர்களும், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் பல்லக்கிற்கு வந்து தந்தை பெரியார் அவர்களுடன் ஊர்வலத்தில் அமர்ந்து கொண்டார்கள். இந்தக் காணற்கரிய காட்சியைக் கண்ட தமிழர் இனம் அப்படியே உணர்ச்சி எல் லையின் உருவமாகி விட்டது! உணர்ச்சி வயப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாத ஒன்றாகி விட்டது. பெரியார் வாழ்க என்ற ஒலி முழக்கத்துடன், தஞ்சை கலைஞர்களின் அதிர்வேட்டுச் சத்தம் விண்ணையும் பிளக்கச் செய்தது. இந்த இடத்தில் மேலவைத் தலைவர் சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு அவர்கள் அய்யா அவர் களுடன் அலங்கார பல்லக்கில் அமர்ந்து கொண்டார்கள். மக்கள் சமுத்திரத்தின் ஒட்டு மொத்த வாழ்த்து முழக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அதற்கு முன்பு அங்கே அய்யா அவர்களுக்கும் அமைச்சர் பெரு மக்களுக்கும் எனக்கும் நகராட்சி மன்றத்தின் சார்பாக வரவேற்பு இதழ்கள் படித்தளிக்கப்பட்டன. அய்யா அவர்களும், கலைஞர் அவர்களும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றினார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/84895.html#ixzz38ueHYmcB

தமிழ் ஓவியா said...


எப்பொழுதும் தொடரும் சமூகநீதிக் குடும்ப உணர்வு

நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சமூகநீதியின் நடைமுறைக்குப் பங்களித்த முக்கியமான தலைவர் ஆவார். சமூகநீதிக்கான உந்துதல் உணர்வினை பெரியார் இயக்கத்திலிருந்தும், இயக்கத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடமிருந்தும் பெறுவதாக அடிக்கடி, கூட்ட மேடைகளில் வெளிப் படுத்தியவர்.

சமூகநீதி சார்ந்த பொது நிகழ்ச்சிகள் அய்தராபாத் நகரில் நடைபெறும் பொழுது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமது சொந்த விருந்தினராகக் கருதி அன்பினைப் பொழிந்தவர். தமிழர் தலைவரை விடுதியில் தங்கிட அனுமதிக்கமாட்டார்கள். தமது வீட்டிலேயே தங்க வைத்து, உணவு அளித்து ஒரு குடும்ப உணர்வோடு, கொள்கை உணர்வோடு வாழ்ந்தவர்.

நீதியரசர் மறைந்த பின்னரும், அவர்தம் பெயரால் அமைந்த கல்வி அறக் கட்டளை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிட தமிழர் தலைவர் அய்தராபாத் நகருக்குச் செல்லும் பொழுதெல்லாம் நீதி யரசரின் குடும்பத்தாரும் அதே வழக்கத்தை - வீட்டிலேயே தங்க வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றபின் வழி அனுப்பிடும் வழக்கத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

தமிழர் தலைவருடன் செல்லும் பிற தோழர்களும், நீதிபதி சுவாமி குடும்பத்தார்களின் விருந்தோம்பில் திளைத்திடுவர். சுவாமி அவர்களின் துணைவியார் ஜெயலட்சுமி அம்மையார், மகள் சவீதாகுமாரி, மருமகன் சுதாகர் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் தமிழர் தலைவரின் வருகையை சொந்தக் குடும்பத்தவர் வருகையாகவே கருதிடும் வழக்கம் இந்த முறை சென்றபொழுதும் தொடர்ந்தது.

நீதியரசர் சுவாமி அவர்களின் சமூகநீதிக் கொள்கை உணர்வு, குடும்ப உணர்வாகவே தொடர்வது மிகவும் பாராட்டுதலுக்குரியது; அனைவரும் போற்றத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-8/84885.html#ixzz38ufxwonY

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!


ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரஸ் ஆட்சியை விஞ்சிய பி.ஜே.பி. அரசை எதிர்த்து

ஒன்றுபட்டுப் போராடுவோம் வாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் காங்கிரசை விஞ்சியதாகச் செயல்படும் இன்றைய பி.ஜே.பி. அரசை எதிர்த்துப் போராட அழைப்புக் கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகையாளர் பயிலரங்கம் - சிங்கள இனவெறியர்களின் அத்துமீறிய செயல்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங் கைத் தீவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை, நெருக்கடியை அமெரிக்கா கண்டித்துள்ளது - இந்தியா வழக்கம்போல் குறட்டை விடுகிறது.

சிங்கப்பூரில் பி.ஜே.பி. பொறுப்பாளர் சேஷாத்திரி சாரியின் கருத்து

சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பி.ஜே.பி. யின் வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப் பாளர் சேஷாத்திரி சாரி என்பவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்குவங்காளம் மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

சு.சாமி வகையறாக்கள்

சுப்பிரமணியசாமி தலைமையில் ஆன குழு இலங்கைக்கு சென்று மகிந்த ராஜபக்சேவை சந்தித்து விட்டுத் திரும்பியது. இலங்கையில் நடந்த பத்திரிகையாளர் குழுவி லேயே இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல; மேலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் அவர்கள் சிக்கல் களை அவர்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என் றும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அஞ்சத் தேவையில்லை என்றும் சுப்பிரமணியசாமி, பேட்டியளித்திருந்தார். பத்திரிகையாளர்களுக்கு நேற்று (29.7.2014) பேட்டி யளித்த முன்னாள் இணையமைச்சர் (வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில்) சுரேஸ் பிரபு கூறியதாவது, இலங்கை நமது நட்பு நாடு, வர்த்தகம் மாத்திரமல்ல; நமது பழம்பெரும் கலாச்சார உறவு கொண்ட நாடு, இலங்கையில் நடக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக இந்தியாவையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இனவாதக்குழுக்கள் தோன்றி இலங்கையில் பெரிய அளவில் வன்முறையை நிகழ்த்தியுள்ளன.

தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. அந்த நாட்டின் வர்த்தகம் மற்றும் உள்நாட்டுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் துணை நிற்கும், அதேவேளையில் தமிழ் நாட்டில் சில அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் இனவாதக் குழுக்களுக்கு துணைபோகும் நிலையில் உள்ளது. வாக்கு அரசியலுக்காக இலங்கைப் பிரச்சினையை இன்றளவும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு தீர்க்கமான முடிவெடுப்பதற்கு தடையாக இருக் கிறது. இதற்கு முன்பு இருந்த அரசு திராவிடக்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து மென்மையான நட வடிக்கை எடுத்து வந்தது.


தமிழ் ஓவியா said...

தற்போது நரேந்திரமோடி தலைமையில் ஆன அரசு இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கையின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்தி யாவிற்கு நன்மை தருவதாக இருக்கும் பட்சத்தில் முழு மையான ஆதரவு அளிக்கும், இதற்கான உத்திரவாதத்தை நரேந்திரமோடி ஆட்சியேற்ற போது டில்லி வந்த மகிந்த ராஜபக்சேவிடமும், அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஆன குழுவிடமும் நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம். தற்போது இலங்கையின் வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். முக்கியமாக இந்திய தொழில் முனைவோர்கள் இலங்கையில் சென்று தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்காக அவர்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு நாங் கள் பலியாக மாட்டோம், எங்களுக்குத் தேவை இலங்கை யில் வளர்ச்சி அதற்குத்தான் முக்கியத்துவம் தருவோம்.

விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை சென்று பல்வேறு முடிவு களை அறிவிப்பார் என்றும் ராஜபக்சேவின் உடன்பிறவா சகோதரராகப் பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று வெளிவந்த ஒரு தகவல்:

ஆகஸ்டு 18 முதல் 20 முடிய மூன்று நாள்கள் இலங்கை யில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற் பார்களாம்!

இந்தக் கருத்தரங்கின் நோக்கம் இலங்கைக்கு அதன் நட்பு நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த அளவுக்கு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காகவாம். அய்.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் நடந்துள்ள போர்க் குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து, அது விசாரணையைத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இந்தக் கருத்தரங்கம் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இராணுவ அதிகாரிகள் குழுவோடு பி.ஜே.பி. சார்பில் சுப்பிரமணியசாமி, தலைமையில் ஒரு குழுவும் செல்லு கிறதாம். (தொடக்கமுதல் ஈழப் பிரச்சினையில் எவ்வளவுப் பெரிய ஜாதி வெறியராக இவர் நடந்துகொண்டு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே!)

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி யில்லை என்று பி.ஜே.பி. அரசு ஏற்கெனவே அறிவித்து விட்டது.

காங்கிரஸ் பரவாயில்லை!

நிலைமைகளைப் பார்க்கும்பொழுது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி பல மடங்கு மேலானது என்று நினைக்கக் கூடிய வகையில், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தங்கக் காப்பு அணிவித்து - மிச்ச சொச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு ஒழித்திட ஆணையிடுங்கள், செய்து முடிக்கிறோம் என்று ராஜபக்சேவிடம் மனு போடும் ஒரு நிலையை பி.ஜே.பி. அரசு எடுத்திருக்கிறதோ என்று கருத ஏராள இடம் இருக்கிறது.

இந்தப் பி.ஜே.பி.தான் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமரவேண்டும்; மோடி வந்தால் ஈழப் பிரச்சினையில் முழு வெற்றி தமிழர்களுக்குக் கிடைக்கும் என்று பீரங்கி முழக்கம் செய்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தியைப் போல விழி பிதுங்கிய நிலையில், விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

தவறு செய்த அந்தத் தோழர்கள், வெட்கத்தை மறந்து விட்டு, வீதிக்கு வந்து போராட முன்வரவேண்டும். ஒட்டு மொத்த தமிழர்களும் கட்சிக் கோடுகளைத் தாண்டி ஒன்று பட்டு எழுந்தால்தான் இன்றைய பி.ஜே.பி. முரட்டுக் காளையை அடக்க முடியும்!

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!

என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை

30.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84944.html#ixzz390YZuqy1

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


விநாயகர் கூறியவாறு கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அரு ளால் தேவ ரிஷியாகப் பதவி பெற்றாராம்.

இதன்மூலம் விநாய கரைவிட முருகன் பெரிய கடவுள் என்று காட்டு வதற்காக யாரோ இடை யில் புகுந்து புராணம் எழுதியிருப்பார்கள்போல் தெரிகிறது.

தேவரிஷிப் பதவி பெறுவது இருக்கட்டும் - எத்தனை ஆண்டு கார்த் திகை விரதம் இருந்தால் எம்.எல்.ஏ. பதவி பெற லாம்?

அதற்குமேல் அமைச்சர் பதவியைப் பெறலாமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/84945.html#ixzz390Z61Dze

தமிழ் ஓவியா said...


குலத் தொழிலுக்குத் தலைமுழுக்கிடுக!



எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு, ஜாதி வேலையைவிட்டு, வேறு வேலைக்கு அனுப்பவேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வதுதான் முக்கிய கடமையாகும்..

_ (விடுதலை, 9.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/84950.html#ixzz390Zgm34Y

தமிழ் ஓவியா said...


இந்த நாள்


இந்த நாள்

அந்தோ, ஒன்பதாவது பலி


30.7.1958 அன்று நன்னி மங்கலம் கணேசன் அவர்கள் கோயமுத்தூர் சிறை யில் மாண்டு போனார் என்ற செய்தி!

ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் இது ஒன்ப தாவது உயிர் பலி! ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒன்பதாவது பலி! ஜாதியைக் காப்பாற்றும் அக்கிர காரத்திற்கு ஒன்பதாவது பலி!

ஒரு பார்ப்பானை, யாரோ ஒருவன் கத்தியினால் குத்திச் சிறுகாயப்படுத்திவிட் டான் என்றால் நாடே கிடுகிடுக்கிறது! ஒரு பார்ப்பான் குளித்துக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவன் அவன் பூணூலை அறுத்து விட்டான் என்றால் பார்ப்பன ஏடுகள் அலறுகின்றன. அதிகார வர்க்கம் சீறி எழுகிறது! சில அமைச்சர்கள் கூடத் துடிக்கிறார்கள்.

ஆனால் சுயநலமற்ற தொண்டினால், ஜாதி ஒழிப்புக்காகச் சிறைத்தண்டனை பெற்றதனால் ஒன்பது இளம் உயிர்களைப் பதறப் பதறப் பறிகொடுத்திருக்கிறார்களே, திராவிடர் கழகத்தார்! இதற்காக அதிகார வர்க்கம் சிறிதாவது மனம் இளகுவதாகத் தெரியவில்லை.

இந்தக் கருஞ்சட்டைக்காரன் ஒருவன் இருப்பதனால்தான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்கிறான். ஜாதி ஒழிந்தால் நாம் ஒழிந்ததாகத்தானே அர்த்தம்? இவனைத் தவிர்த்த மற்றெல்லாப் பயல்களும் நம் காலடியில்தானே கிடக்கிறார்கள்? மற்றக் கட்சிக்காரர்களில் எவனாவது நம்மை எதிர்க்கிறானா? எவனாவது சாதி ஒழிய வேண்டுமென்று கிளர்ச்சி செய்கிறானா? ஜாதி ஒழிந்துவிட்டால் நமக்கு மரியாதை ஏது? நமக்கு வாழ்வுதான் ஏது? இந்த கருஞ்சட் டைக்காரக்கும்பல் பூண்டோடு அழியாதா?

நாலாயிரம் பேர் சிறைக்குள்ளே சென்ற தற்கு மூவாயிரம் பேராவது செத்திருக்க வேண்டாமா? நம் ராஜாஜி ஆட்சியிருந்தால் அதற்கான ஏற்பாட்டை நிச்சயம் செய்தி ருப்பாரே!

இப்படித்தான் அக்கிரகாரம் இன்று, நாள் தவறாமல் புலம்பிக்கொண்டிருக்கிறது! இப்புலம்பல் அடியோடு வீணாகக் கூடாது என்பதுபோல் சிறைச்சாவின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருக்கிறது என்று தலையங்கம் தீட்டியது விடுதலை.

Read more: http://viduthalai.in/page-2/84953.html#ixzz390aWNWEH