Search This Blog

23.7.14

எண்ணிக்கை முக்கியமல்ல கட்டுப்பாடுதான் மிக முக்கியம்!-கி.வீரமணி

வழக்குரைஞர் குமாரதேவன் தலைமையில் கழகத்திற்கு வந்துள்ள தோழர்களை வரவேற்கிறோம் 

புதிய தோழர்கள், பழைய தோழர்கள் என்ற பேதம் இல்லாமல் ஒன்றிணைந்து கட்டுப்பாட்டுடன் பெரியார் பணி முடிப்போம் வாரீர்!
கழகப் களப்பணி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

சென்னை, ஜூலை 23- வழக்குரைஞர் குமாரதேவன் தலைமையில் கழகத்தில் இணைந்துள்ள தோழர்களை வரவேற்று, கட்டுப்பாட்டுடன் தந்தை பெரியாரின் பணி முடிக்க வேண்டிய கடமை உணர்வை வலியுறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

20.7.2014 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சென்னை மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

களப் பணி முகாம் என்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை,  நம்முடைய கழகப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் என்னை சந்தித்து மகிழ்ச்சியோடு கூறினார்கள்.

பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா?

இது ஒரு நல்ல திருப்பம்; அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படைத் தத்துவத்திலிருந்து, அதனை உலகளாவிய நிலையிலே கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்றக்கூடியவர்கள் நாம் எல்லோரும்.

நம் எல்லோருக்கும் வழிகாட்டி, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான். பெரியார் அவர்களுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று பலர் கேட்டார்கள். அதனுடைய பொருள் என்னவென்றால், இயக்கம் இருக்காது என்பதுதான் விடையாகக் கிடைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான், அவர்கள் கேள்வியாகக் கேட்டார்கள்.

ஆனால், தந்தை பெரியாருக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை தாங்கிய நேரத்தில், இராவண லீலாவின் மூலமாக மிகப்பெரிய அளவிற்கு, உலகத்தையே கிடுகிடுக்கச் செய்தார்கள் அம்மா அவர்கள். இதே பெரியார் திடல், அதற்கு மிகப்பெரிய களமாக இருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

அதுபோலவே, மிகப்பெரிய சோதனையான கால கட்டம், நெருக்கடி காலம் - எமர்ஜென்சி என்று சொல்லக் கூடிய கட்டம்; எங்களையெல்லாம் சிறைச்சாலைக்குள்ளே அடைத்தார்கள்;

சிறைச்சாலைக் கண்காணிப்பாளராக இருந்தவர் எங்களையெல்லாம் பயமுறுத்திய நிலை இருக்கிறதே, அதை கொஞ்சம் பக்குவம் இல்லாத யாராக இருந்தாலும், அன்றைக்கே அவர்கள் தங்களுடைய வாழ்வை இழந்துவிட்டதாகத்தான், மாரடைப்பு வந்தவர் களாகத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

என்னோடு இருந்த பல அரசியல் கட்சி நண்பர்கள்,  அப்படிப்பட்ட நிலைக்கு ஆளானார்கள்; அப்படி அந்த நிலைக்கு ஆளாகி, அவர்கள் சொல்வதை நம்பிக்கொண்டு கூட என்னிடத்தில் பேசியதுண்டு. நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

அன்னை மணியம்மையாருக்கு துணையாக இருந்தார்கள்

ஏற்கெனவே சிறைச்சாலையில் நாங்கள் தாக்கப் பட்டிருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய கொடுமைக்கு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் கொண்டு சென்ற உடைகளோ, உடைமைகளோ எங் களுக்குத் தரப்படவில்லை. பல வாரங்களாக, பல மாதங் களாக அணிந்திருந்த உடையைத்தான் குளித்துவிட்டு, மீண்டும் அணிந்துகொள்வோம்; ஆகவே, எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. முதல் நேர்காணல்கூட நடைபெறவில்லை.

அந்த அளவிற்குச் சூழ்நிலை இருக்கும் பொழுது, நாங்கள் எந்தச் சிறைச்சாலையில் இருக்கிறோம் என்றுகூட வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. இந்த நிலையில், அம்மா அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எங்களைப் பார்க்க வந்தவர்கள்கூட, தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதால், மீண்டும் வராமல், நின்று விட்டார்கள்.
நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் போன்றவர்கள்தான், அரசு பணியில் இருந்தாலும்கூட, அதனைப்பற்றி கவலைப்படாமல் உறுதுணையாக இருந் தார்கள். அப்படிப் போட்ட சிலர் அன்னை மணியம் மையார் அவர்களுக்குத் துணையாக இருந்தார்கள்.

சிறையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்

நாங்கள் சிறைச்சாலையில் இருந்தபொழுது, இன்னும் சில மணிநேரத்தில் ஒரு அறிவிப்பு வரப் போகிறது; அது என்ன அறிவிப்பு என்றால், திராவிடர் கழகத்தை, திராவிட இயக்கத்தையே தடை செய்ய அறிவிக்க இருக்கிறார்கள்; இனிமேல் காங்கிரஸ் இயக்கம் ஒன்றுதான் இருக்கும்.

வேறு எந்த இயக்கமும் இருக்காது. ஆகவே, இதோடு எல்லாமே முடிந்தது; ஆகவே, நீங்கள் எல்லோரும் வெளியில் செல்வோம் என்றெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் எல்லாம் அடங்கி இருங்கள் என்று சொன்னார்கள். எங்களை தனித்தனியே அழைத்து சிறைக் கண் காணிப்பாளர் சொல்கிறார்:

இனிமேல் நீங்கள் வெளியில் போக முடியாது. வெளி உலகத்தை நீங்கள் பார்க்க முடியாது. உங்களுடைய வாழ்க்கை இந்த சிறைச்சாலையோடு முடிந்துவிடப் போகிறது.  இத னைக் கேட்டவுடன், பல பேர் அரண்டு போய்விட்டார்கள்.

ஒரு நண்பர், அதுவும் முக்கியமான நண்பர் என்னிடம் வந்து, என்ன இப்படி சொல்கிறார்களே, இனிமேல் நாம் வெளியிலே போகவே முடியாது போல இருக்கிறதே என்று சொன்னார்.

நான் அவரிடத்தில், சலனமில்லாமல், கொஞ்சம் கவலையோடு சொன்னது என்னவென்றால், இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது; நம்மை பயமுறுத்துவ தற்காக சொல்கிறார்கள். அப்படியே இருந்தால்தான் என்ன? இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களே இல்லையா? வேறுவிதமான சூழ்நிலைகளே இல்லையா? நிறைய இருந்திருக்கிறதே! இதையெல்லாம் நாம் ஏற் கெனவே பார்த்திருக்கிறோமே என்று அவரிடம் சொன் னேன்; சிறைக் கண்காணிப்பாளரிடம் சொன்னதைத்தான் அவரிடமும் சொன்னேன்.

சிறைக் கண்காணிப்பாளரும் தனித்தனியே எங்களைக் கூப்பிட்டு, அச்சுறுத்தி, எங்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்பார். இவர் எப்படி நினைக்கிறார்? அவர் எப்படி நினைக்கிறார்? என்பதற்காக. எல்லோரையும் ஒன்றாக வைத்துக் கொண்டு கேட்டால், அவருக்குப் பதில் சொல்வதற்கு வசதியாக இருக்கும். ஆனால், அவர் தனித்தனியே எங்களை அழைத்துக் கேட்டார்.

என்னை அழைத்து அப்படி கேட்டுவிட்டு, என்ன சொல்றீங்க வீரமணி? என்று சாதாரணமாகக் கேட்டார். நான் இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தேன். உடனே அவர், என்னங்க, பேசாமல் இருக்கிறீர்கள்; ரொம்ப யோசிக்கிறீங்களா என்று கேட்டார்.

என்னைப் பொறுத்தவரை நான் நம்பத் தயாராக இல்லை!

நான், யோசிக்கவில்லை, நீங்கள் சொன்னது உண்மை யாக இருக்கலாம்; உங்களுக்கு வந்த தகவல்களின்படி நீங்கள் சொல்கிறீர்கள். தடை வரட்டும்; எங்களையெல்லாம் கைது செய்து வந்திருக்கிறீர்கள். தடை வந்தால், இன்னும் கொஞ்சம் பேர் வருவார்கள். ஆனால், ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நீங்கள் சொன்னீங்களே, இனிமேல் வெளி உலகத்தைப் பார்க்க முடியாது; சிறைச் சாலைக்குள்ளேயே உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று, என்னைப் பொறுத்தவரை நான் நம்பத் தயாராக இல்லை என்று சொன்னேன். என்ன இப்படி சொல்றீங்க! என்று கேட்டார்.

நான் மிகவும் தெளிவாகச் சொன்னேன்,

கொஞ்ச நாள்களுக்கு முன்பு பங்களாதேஷ் பிரிந்ததே - அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முஜ்புர் ரஹ்மான் அவர்கள், சோனாலி பங்களா (தங்க வங்கம்) என்று அவருக்கு வாழ்த்துச் சொல்லி பாடினார்களே, அதுதான் அவர்களுக்கு பின்னாளில் தேசிய கீதமாக ஆயிற்று. அந்த வாழ்த்துச் சொல்வதற்கு முன்பு, நான்கு நாள்களுக்கு முன்பு, அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தூக்கு மேடைக்குப் போகப் போகிறார் என்கிற நிலை இருந்தது; எல்லோரும் எதிர்பார்க்கவேயில்லை, அதே முஜ்புர் ரஹ்மான், அந்த நாட்டிற்கே அதிபராக ஆகக்கூடிய அளவிற்கு வந்த வரலாறு இருக்கிறதே, அந்த வரலாறு எங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. உங்களுக்கும் அதனை ஞாபகப்படுத்துகிறேன்.

அரசியலில் ஒன்றே ஒன்று, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளைக்குக் காலையில் என்ன செய்தி என்று தெரியாததற்குப் பெயர்தான் அரசியல். ஆகவே, அதனைக் காட்டி எங்களையெல்லாம் அச்சுறுத் தலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். உடனே அந்த அதிகாரி, நான் அச்சுறுத்துவதற்காக சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொன்னார்.

நெருக்கடிக்கு ஆளாக்கியவர்களே, நெருக்கடிக்கு ஆளானார்கள்!

தவறாக எடுத்துக்கொள்கிறேனோ, சரியாக எடுத்துக் கொள்கிறேனோ அது ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால், ஒன்று, எவ்வளவு காலத்திற்கு இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களோ, நாங்கள் இருக்கப் போகிறோமே தவிர, வேறொன்றுமில்லை என்று சொன்னேன்.

ஆகவே, அந்த நெருக்கடி காலத்தில் பல நண்பர்கள் இந்தக் கருத்தோடு இருந்தார்கள். இந்த இயக்கம் இனிமேல் இருக்காது என்றெல்லாம் நினைத்தார்கள்.

ஆனால், நாம் நினைத்தோமே, மிகத் தெளிவாக, நெருக் கடிக்கு ஆளாக்கியவர்களே, பிறகு அவர்கள் நெருக் கடிக்கு ஆளானார்கள்; அவரே பிறகு சிறைச்சாலைக்குப் போனார். அதையெல்லாம் மிக விரைவில் நாம் பார்த் தோம். ஆகவே, அரசியலில் இதெல்லாம் மிகச் சாதாரணம். பொது வாழ்க்கையில் சர்வசாதாரணம்.

எனவே, இந்த இயக்கம் இருக்கவே இருக்காது என்று நினைத்தார்கள். ஒவ்வொரு கட்டமும் இருந்தது. அய்யா, அம்மாவிற்குப் பிறகு இனிமேல் இந்த இயக்கத்தை யார் நடத்தப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். அது மட்டுமல்ல, பெரியார் சொத்தை நிறைய சேர்த்து வைத் திருக்கிறார்; அந்தச் சொத்துக்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்துப் போவார்கள் என்று.

பார்ப்பான் இப்படிமே சொன்னான், இவர்கள் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுகிட்டு, குத்திக்கிட்டு, வெட்டிக்கிட்டு செத்துப் போவான் என்று சொன்னார்கள். எல்லோரும் உயிரோடு தான் இருக்கிறோம்.

இயக்கத்தினுடைய பலமே இதில்தான் இருக்கிறது

ஆகவே, இங்கே கூடியிருக்கும் தோழர்களைப் பார்த் தால், இதுவரையில் நடைபெற்ற களப்பணி பயிற்சியில் கூடியதைவிட, தோழியர்கள், தோழர்கள் நிறைய அளவிற்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சிகரமாக இருப்பதோடு மட்டுமல்ல, நம்முடைய தோழர்களுக்கு ஒரு மிகப்பெரிய சிறப்பு, கறுப்புச் சட்டை!

நம்முடைய ஒவ்வொரு தோழரும், மற்ற அமைப்புகளில், பொதுவாழ்க்கையில் இருக்கும், நூறு பேர்கள் - ஆயிரம் பேர்களுக்கு சமமானவர்கள்; எல்லா வகையிலும் - தியாகத்திலும் சரி, பக்குவத்திலும் சரி, கொள்கையை முன்னெடுத்துச் செல்வதிலும் சரி, ஈடுகொடுப்பதிலும் சரி தெளிவாக இருப்பார்கள். இதுதான் இந்த இயக்கத்தினுடைய பெரிய பலம்!
இன்றைக்கு அய்யா அவர்களுடைய இயக்கம் உலக ளாகவிய இயக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய மகிழ்ச்சி; அது என்னவென்று சொன்னால், வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஜெர்மனியில், பெரியாருடைய குரல்; கடலூரில் நேற்று முன்தினம் நானும், அறிவுக்கரசு அவர்களும் வாழ்க்கை இணையேற்பு விழாவில் கலந்து கொண்டோம். அந்த மணமகன் பின்லாந்தில் பணியாற்றக் கூடியவர். இங்கிருந்து சென்ற இளைஞர்கள் பலர் அங்கே கணினியில் பணியாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

நான் மணமகனிடம் சொன்னேன், அடுத்தபடியாக பின்லாந்தில் ஒரு கூட்டம் போடவேண்டும் என்று. உடனே மணமகன் கூறினார், நான் அங்கே சென்றதும், பெரியார் பன்னாட்டமைப்பை உருவாக்குவேன்; அதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்றார்.

ஜெர்மனியில் ஜூன் மாதத்தில் நடைபெற்றது என்று சொன்னால், அடுத்தது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அந்த வாய்ப்பு ஏற்படும்.
ஆகவே, பெரியாருடைய கொள்கை என்பது உலகளாவிய கொள்கையாக இருக்கிறது. இந்தக் கொள்கை தேய்ந்து போய்விட்டது; தேய்ந்து போய்விட்டது என்று காட்டுவதற்கு நிறைய பேருக்கு ஆசை இருக்கிறது. காரணம் என்னவென்றால், அதில் ஒரு விஷமத்தனமும், மயக்கமும் கலந்திருக்கிறது.
பயிற்சி வகுப்பில் சொல்லவேண்டிய மிக முக்கிய செய்தி இது.

இதோ போகிறான் கறுப்புச்சட்டைக்காரன்

என்னங்க, திராவிட இயக்கம் எல்லாம் கொள்கையை விட்டுவிட்டார்கள்; கொள்கை தேய்ந்து போய்விட்டது. இப்பொழுது திராவிட இயக்கமே இல்லையே! பெரியாரோடு முடிந்து போய்விட்டதே - இப்பொழுது என்ன கொள்கை இருக்கிறது என்று பெரிய விவாதத்தை செய்கிறார்கள். இடதுசாரிகள் மிக சன்னமாக செய்கிறார்கள்; மிக சாமர்த்தியமாக செய்கிறார்கள். இன்னும் வலதுசாரிகள், நடுசாரிகள், எல்லாருமே செய்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர்கள் என்னிடம் இதுபற்றி கேட்டபொழுது, நான் ஒரே கேள்வியை கேட்க விரும்புகிறேன். அவர்கள் கேட்ட கேள்விக்கும் அதுதான் பதில்.

திராவிட இயக்கங்கள் ஒன்று!

கொள்கையை வைத்து அடையாளம் என்பது நமக்குத் தான் நமக்கு ஒரு பெரிய சிறப்பு சாதாரணமாக கிராமத்தில் இருப்பவர்கள்கூட, நம்மைப் பார்த்து, இதோ போகிறான் கறுப்புச்சட்டைக்காரன் என்று சொல்வார்கள்.
அதைவிட மிக முக்கியம் என்னவென்றால்,  தனித் தன்மை; இப்பொழுது கறுப்புச் சட்டையை எல்லோரும் போட ஆரம்பித்துவிட்டார்கள். யாருக்காவது போராட்ட உணர்வு வந்ததென்றால், அன்றைக்குக் கறுப்புச் சட்டையைப் போட்டு வருகிறார்கள். போராட்டத்திற்கு உகந்தது கறுப்பு சட்டை தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது; அந்த மரியாதை நமக்கு இருக்கிறது. ஏதாவது போராட்டம் என்றால் கறுப்புச் சட்டை போடவேண்டும்; நியாயத்தைக் கேட்கவேண்டு மானால், கறுப்புச் சட்டை போடவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.

கறுப்புச் சட்டைக்காரன் என்று நம்மை சொல்வதைவிட, இன்னும் எளிமையாக சொல்வது, அதாங்க, அவங்கதான்; ஊருக்கு இரண்டு பேர்தாங்க இருப்பான்; அதாங்க, சாமி இல்லைன்னு சொல்ற கட்சிக்காரங்க அப்படின்னு சொல்வாங்க.


கொள்கையைச் சொல்லி நம்மை அறிமுகப்படுத்து கிறார்கள் பாருங்கள், அது நம்ம இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு.

சாமி இல்லை என்று சொல்வதுதான் நமது கொள்கை; அதில் ஒன்றும் சந்தேகமில்லை. வேறு எந்தக் கட்சிக்காவது இந்த சிறப்பு உண்டா? வேறு எந்த அமைப்பிற்காவது இந்த சிறப்பு உண்டா?

ஆடி மாதத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்

அப்படிப்பட்ட இந்த இயக்கம், இன்றைக்கு வளர்ந் திருக்கிறது. பெரியார் தலைமையில் நடைபெற்ற ஒரு திருமணம்; 50 ஆண்டுகள் கழித்து பொன்விழாவிற்கு நாங்கள் சென்று நடத்தி வைக்கிறோம். கடலூரில் உரையாற்றும்பொழுது நான் சொன்னேன், இந்த விழாவைக்கூட ஆடி மாதத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று.

ஆடி மாதத்தில் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள் என்றால், இவ்வளவு துணிச்சல், இவ்வளவு பக்குவம் வந்திருக்கிறது என்றால், பெரியார் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது; இந்தக் கொள்கையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இளைஞர்கள் உற்சாகத்தோடு வாருங்கள்; இந்த இயக்கத்தில் வயது இடைவெளியே கிடையாது; வயதானவர்கள், இளைஞர்கள் என்கிற பேதமே கிடையாது.

யாராலும் குறை சொல்ல முடியாது!

நம் இயக்கத்திற்கு என்ன பெருமை என்றால்,  ஒரே கொள்கையில், குடும்பம், குடும்பமாக இருக்கிறார்கள் என்று சொல்வது இருக்கிறது பாருங்கள், அதுதான் நமக்குப் பெருமை. அப்பன் ஒரு கட்சி; மகன் ஒரு கட்சி என்று சொல்வதற்கு இங்கே இடம் கிடையாது.

மனைவியா, மகனா, பெயரக் குழந்தைகளான பிஞ்சுகளுக்குக்கூட அந்த உணர்வை உண்டாக்கியிருக்கிறோம் என்றால், குடும்பம், குடும்பமாக, கொத்து கொத்தா, எப்படி ஒரு மரத்திற்கு வேர் சரியாக இருந்தால், பூக்களாக இருந்தாலும், காய்களாக இருந்தாலும், கனிகளாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கும்; அடி வேர், உழைப்பு, தொண்டர்கள், கொள்கை, இவை அத்தனையையும் யாராலும் குறை சொல்ல முடியாது.

எனவே, தோழர்களே, நம்முடைய இயக்கம் வெற்றி பெறக்கூடிய ஒரு இயக்கம். நம்முடைய இயக்கம் உலகளாவிய அளவில் இருக்கிறது. மத உதாரணத்தைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவேண்டும்;
விளங்க வேண்டும் என்பதற்காக அதனை சொல்கிறேன்; பைபிளை எடுத்துக்கொள்ளுங்கள்; குரானை எடுத்துக்கொள்ளுங்கள்; புத்தருடைய அந்தக் கொள்கைப் பரப்பலை நினைத்துப் பாருங்கள். அய்ந்து சீடர்; நான்கு சீடர்; மூன்று சீடர் என்றுதான் இருந்திருக்கிறார்கள். ஆனால், நமக்கிருக்கின்ற வசதிகள் அவர்களுக்குக் கிடையாது.

அவர்களுடைய முறைகள் எல்லாம் அதே முறையா? அல்லது திரிபுவாதம் ஏற்பட்டதா? திரிபுவாதம் ஏற்படவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், அய்யாவினுடைய கொள்கை அப்படியல்ல, இதில் யாரும் திரிபுவாதம் செய்ய முடியாத அளவிற்கு, உரைகளே பதிவு இருக்கிறது; உரைகளே அச்சாக இருக்கிறது; உரைகளே எழுத்தாக இருக்கிறது. 

ஏனென்றால், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு ஒலிப் பதிவுகள், ஒளிப்பதிவுகள் இவை அத்தனையும் நடைபெற்றது நமக்கிருக்கின்ற வாய்ப்பு.
ஆனால், அவர்களுடைய காலத்தில் பார்த்தீர்களே யானால், தொண்டர்கள், சீடர்கள்தான் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட தன்மானத்தையும் இழப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும்

தத்துவ ஞானியான தந்தை பெரியார் அவர்கள் வித்தியாசமான தலைவராக இருந்தார். எப்படியென்றால், அவர் கொள்கையை சொல்லியதோடு மட்டுமல்ல, அவரே பரப்பினார். அவரே தன்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்தார்; சொந்த செல்வத்தைப் பயன்படுத்தினார்.

எனவே, அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், அவருடைய உழைப்பினால், இந்த இயக்கம் வந்த தென்றால், அவருடைய தோழர்களாகிய நம் ஒவ்வொரு வரும், நம் இயக்கத்தை உலகளாவிய அளவிற்குக் கொண்டு போவது எப்படி என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது. நம்முடைய இயக்கம் பதவி நாடாத இயக்கம்.

நன்றி பாராட்டாத ஒரு இயக்கம். நம்முடைய இயக்கம் சொந்த லாபத்திற்காக எதையும் கருதாத ஒரு இயக்கம். எல்லாவற்றையும்விட, தன் மானத்தைச் சொல்லிக் கொடுத்த தலைவர், தேவைப் பட்டால், உன்னுடைய தனிப்பட்ட தன்மானத்தையும் இழப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இது ஒரு விசித்திரமான அமைப்பாகும்.

உன் தலைவன், உன்னுடைய கொள்கை, உன்னுடைய ஸ்தாபனம்

இனமானத்திற்காக தன்மானத்தை விடு; உன்னைப்பற்றி கவலைப்படாதே! உன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதே! கொள்கையை முன்னிலைப்படுத்து! நம்முடைய இயக்கமென்றால், அந்த இயக்கத்திற்குக் கடமை; அந்த இயக்கத்திற்குக் கொள்கை, தத்துவம், அந்த இயக்கத்திற்கு ஸ்தாபனம் (நிறுவனம்) இந்த மூன்றும்தான் மிக முக்கியம்.

அதைத்தான் அய்யா அவர்கள்,

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

என்பதை, உன் தலைவன், உன்னுடைய கொள்கை, உன்னுடைய ஸ்தாபனம் (நிறுவனம்) இந்த மூன்றிற்கும் தெளிவாக உன்னை ஒப்படை என்று தெளிவாகச் சொன்னார்.

புத்தி மார்க்கம் என்று சொல்லி, அதற்கு விளக்கம் கொடுத்தார். ஆகவே, இது தெரிந்த ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தை எவ்வளவு முன்னெடுத்துச் செல்லவேண்டு மோ, அவ்வளவு செல்லவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் களப்பணி என்பது, அதை இன்னும் பயனுறு வகையிலே, இன்னும் பலருக்கும் அது பயன்பட்டு, காலங்காலமாக அழிக்க முடியாத ஒன்று என்று, அடக்குமுறைகள் வரலாம்; எதிர்ப்புகள் வரலாம்; எதிர்ப்பு வரவர நமக்கு லாபம். அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல, அடக்க அடக்க நாம் வளருவோம் என்பதுதான் வரலாற்றுச் சுவடுகள். 

எதிர்ப்பைப்பற்றி நாம் கவலைப்படவேண்டாம்; எதிர்ப்பு இல்லை என்றால்தான் நாம் கவலைப்பட வேண்டும். எனவே, எதிர்த்தவர்கள்தான் நம் இயக்கத் திற்குப் பின்னாளில் வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஒவ்வொருவரும் நீங்கள் தெளிவாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முகாமியினுடைய வெற்றியே இதில்தான் இருக்கிறது

அந்த வகையில், நன்றாக இந்தக் களப்பணி முகாமை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக ஒன்றுபட்டு, ஒரு குடும்பமாக நாம் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

இங்கே பார்க்கும்பொழுது மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது; தாய்மார்கள், சகோதரிகள், தோழியர்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். இந்த முகாமினுடைய வெற்றியே இதில்தான் இருக்கிறது. மதவாதிகளைப் பாருங்கள், சர்ச்சுக்குப் போகவேண்டுமென்றால், குடும்பம் குடும்பமாகச் செல்கிறார்கள், அதை ஒரு அமைப்பாகவே கொண்டு வந்துவிட்டார்கள்.
அதுபோல், நம் நிகழ்ச்சிகள் என்றால், நான் தோழர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், நம் செயல் வீரர்கள் கூட்டம், கலந்துரையாடல் கூட்டம், நிர்வாகக் கூட்டம், இயக்க அமைப்புக் கூட்டம் என்றால், நீங்கள் தவிர்க்கவே கூடாது; குடும்பம் குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும். பெரியார் பிஞ்சுகள்முதல் பெரியார் தொண் டர்கள்வரை கலந்துகொள்ளவேண்டும். பிஞ்சுகளுக் கென்று தனியாக ஒரு இதழை நாம் நடத்துகின்றோம். அதனை வாங்கிப் பெரியார் பிஞ்சுகளுக்குக் கொடுங்கள்.


ஆகவே, இளைஞர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்; அந்த வகையில் நல்ல இளைஞர்களை யெல்லாம் இன்றைக்குக் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்கள் கொண்டு வந்து, இந்த அமைப்புக்குள்ளே அழைத்து வந்ததற்கு நன்றி! பாராட்டு!

என்னிடம் அவர் சொன்னார், நான் 18 ஆண்டுகளாக பிரிந்து போனதில் மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று சொன்னார்.

18-க்கும் 18-க்கும் ஒற்றுமை இருக்கிறது

18 ஆண்டுகள் பிரிந்து போனது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அய்யாவை விட்டு, அண்ணா அவர்கள் 18 ஆண்டுகள் பிரிந்து போனார். 18-க்கும் 18-க்கும் ஒற்றுமை இருக்கிறது. சங்கடங்கள் தேவையில்லை;  ஒரு குளத்திலுள்ள நீரை, ஒரு குடத்தில் எடுத்துக்கொண்டு போய் தனியே வைத்துவிட்டு, மறுபடியும் அந்தக் குடத்திலுள்ள நீரை குளத்திலேயே ஊற்றினால், அந்தத் தண்ணீர் என்ன மாறிப் போய்விடுமா? கண்டிப்பாக மாறாது. ஊற்றிய பிறகு குடத்திலிருந்த தண்ணீர், குளத்திலிருக்கும் தண்ணீர் என்று கோடு போட முடியுமா?

உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்

ஆகவே, இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.    நம்முடைய பணியை பல பேர் சரியாகப் புரிந்துகொள் ளாமல், நமக்கு ஏதோ சுயநலத்திற்காக அல்லது வேறு எதற்காகவோ என்று சில பேர் செய்த பிரச்சாரத்திற்கு அவர்கள் பலகீனமாக இரையாகியிருக்கலாம். பிறகு அவர்கள் சரியான உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவ்வளவுதானே தவிர, வேறொன்றுமில்லை.

எனவேதான், நாம் அதைப்பற்றியெல்லாம் பொருட் படுத்தாமல், நம் தோழர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், இதில் ஒன்றும், முன்னர், பின்னர் எல்லாம் கிடையாது. தண்ணீர் கதை போலத்தான்.

எல்லா தோழர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். 

எல்லோரையும் ஒருங்கிணைக்கவேண்டும். நமக்கு ஒரே தலைமை; அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமை; ஒரே கொள்கை; ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, வகுப்புரிமை பாதுகாப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை போராட்டம் இவை அத்தனையும்!

எண்ணிக்கை முக்கியமல்ல தோழர்களே, கட்டுப்பாடுதான் மிக முக்கியம்!

இதுமாதிரி கொள்கையில் நமக்கு வித்தியாசமில்லாமல், இதே கொள்கையை நன்றாகப் பலப்படுத்தவேண்டும்; ஸ்தாபனத்திற்கு என்ன அடையாளம் என்றால், எண்ணிக்கை முக்கியமல்ல தோழர்களே, கட்டுப்பாடு மிக முக்கியம். ராணுவக் கட்டுப்பாடு.

எனவே, இந்த இயக்கத்திற்கு வந்த தோழர்கள், இருக்கின்ற தோழர்கள் எல்லோருக்குமே, ஒரு குடும்பம்போல நடத்துகின்ற நேரத்தில், தயவு செய்து வேறு எதையும் நீங்கள் இழப்பதற்குத் தயாராக இருங்கள்; கட்டுப்பாடை மட்டும் இழப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கக்கூடாது.

முக்கியமாக நமக்குத் தேவை மூன்று:

1. கட்டுப்பாடு 2. கட்டுப்பாடு 3. கட்டுப்பாடு

ஆகவே, இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறோம். இதனை மனதில் நீங்கள் வைத்துக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றுங்கள்.

நம் இயக்கம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்!

அதைவிட இந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், இன்றைக்கு ஒரு அறிக்கை வருகிறது; சமஸ்கிருத மயம் என்கிற அறிவிப்பு வந்தவுடன், அந்த அறிவிப்பை மிகப்பெரிய அளவிற்கு, ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வரக்கூடிய அளவிற்கு, நம் இயக்கம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம், தமிழக முதலமைச்சர் அவர்களே, சமஸ்கிருதம் வாரம் கூடாது என்று சொல்லவேண்டிய அளவிற்கு வந்திருக்கிறார் என்றால், இந்தக் கொள்கை மிக ஆழமாக இருக்கிறது. அவருடைய அறிக்கையில் இருக்கிறது. இந்த சமுகநீதிக் கொள்கையாளர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.


இந்த நாட்டில், பெரியார் கொள்கையை நாங்கள் ஒழித்துவிட்டோம், ஒழித்துவிடுவோம் என்றெல்லாம் வரக்கூடிய நிலை இருக்காது. ஒருபோதும் முடியாது என்பதற்கு அடையாளம்தான், ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று சிறப்பாக போராட்டங்கள் நடைபெறும் என்று விடுதலையில் அறிக்கையாக எழுதியிருக்கிறோம்.

சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து, நடத்தக்கூடிய அறப்போராட்டம், ஆர்ப்பாட்டமாக, மத்திய அரசு அலுவலகத்திற்கு முன்பு, சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரையில் நடைபெற விருக்கிறது.

சென்னையில் நான் தலைமை தாங்குகிறேன்!

மேலும் ஒன்றிரண்டு நகரங்களில் தோழர்களுடன் கலந்துகொண்டு பேசி இது நீட்டிக்கப்படும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்க இருக்கிறேன். குடும்பம் குடும்பமாக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வரவேண்டும். நமது போராட்டம் என்றால், காலையில் சென்று மாலையில் வந்துவிடுவோம் என்று நினைத்துச் செல்வதில்லை.

ஆகஸ்டு ஒன்றாம் தேதிதான் போராட்டத்திற்கு நல்ல நாள்!

ஆகவேதான், தயாராகக் இருக்கக் கூடிய சூழ்நிலையில், இந்தக் களப்பணி முகாமிற்கே ஒரு நல்ல செய்தி என்ன வென்றால், போராட்டம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி என்று சொல்வதுதான் இன்றைய தெளிவான ஒரு பெரிய வாய்ப்பு.

போராட்டம் நடத்துகின்றவர்களுக்கு அய்யா அறிவுரை சொல்லியிருக்கிறார். ஆகஸ்டு ஒன்றாம் தேதிதான் போராட்டத்திற்கு நல்ல நாள். அதற்கு நல்ல நாள் குறித்திருக்கிறார்.

நாம் செயலில் இறங்குவோம்

ஏனென்றால், ஜெயிலில் தண்டிப்பதாக இருந்தாலும், நல்ல வசதியாக தண்டித்து, பயனுள்ளதாக சிறை வாழ்க்கையை கழிக்கலாம். போராட்டம் நடத்தவேண்டு மென்றால், எப்பொழுது நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவர் நமக்கு அறிவாசானாகக் கிடைத்திருக்கிறார்.

எனவே, உங்களைப் பார்க்கும்பொழுது உற்சாகத்தைப் பெருகிறேன். என்னுடைய பேட்டரி ரீ-சார்ஜ் ஆகியி ருக்கிறது; உங்களுடைய பேட்டரியும் ரீ-சார்ஜ் ஆகியிருக்கிறது. நாம் செயலில் இறங்குவோம்.

நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினர்.

இயக்கத்தில் இணைந்தோர்

வழக்குரைஞர் சு.குமாரதேவன், வடசென்னை சொ.அன்பு, வி.ஜனார்த்தனம், வடசென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த கருங்குழி கண்ணன், வடசென்னை பகுதியைச் சேர்ந்த திலகவதி, தெ.சரளா, வ.வெண்ணிலா, செ.சந்தியா, செ.கலையரசன், அ.புகழேந்தி, அ.செந்தமிழ்தாசன், ம.கயல்விழி, மணிகண்டன், க.கலைச்செல்வி, ஜெ.மாரீஸ்வரன், தி.சுதா, மல்லிகா, நந்தினி, இளவரசு, அன்புச்செல்வம், கலைச்செல்வி, சத்தியசீலன், அ.பல்லவி, ஜெ.மல்லிகா,

தி.இளவரசி, தெ.திலீபன் மற்றும் தென்சென்னையைச் சேர்ந்த ஜெகன், அடையார் அந்தோணி, கே.விஜயகுமார், புதுப்பேட்டை அன்பு, ஜி.சசி, இரா.சந்தோஷ்குமார், எழில், இராயப்பேட்டையைச் சேர்ந்த ரகுநாத், மூர்த்தி, வாசு, சூரியா, மோகன், பிரசாந்த், மதன், சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, அன்பு, சண்முகம், தாஸ், நரேஷ் மற்றும் காஞ்சிபுரம் கண்ணதாசன் ஆகிய 46 தோழர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

                                       -----------------------"விடுதலை” 23-07-2014

28 comments:

Unknown said...

குறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழுதுங்கள்.

அது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி, புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அடிகோலுவதா?


விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள் 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை மறந்திருக்கக் கூடும். ஆனால், முஸாபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை அவர்கள் மறக்கக்கூடாது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், தொகாடியாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளை கெட்டுள்ளது. உடனே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், தொகாடியா மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

சிபிஅய் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இப்படித்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் துவேஷத்தைக் கிளப்பி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், மத உணர்வு களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் பேச்சு இது - வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

சங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே வன்முறையைத் தூண்டும் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் கள் ஆயிற்றே அவர்கள். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில், மேலும் ஆணவக் கொம்பு கூர்மையாக முளைக்காதா?

தேர்தல் நேரத்தின்போதே கூட வி.எச்.பி.யின் தலைவரான இதே பிரவீன் தொகாடியா என்ன பேசினார்?

குஜராத் மாநிலம் பாவ் நகர் மற்றும் ராஜ்கோபு தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கக்கிய நாராசமான நச்சுவார்த்தைகள் என்ன தெரியுமா?

இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதி களில் ஒரு சில இஸ்லாமியர் குடும்பங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறவேண்டும். அப்படி வெளியேற மறுக்கும் பட்சத்தில் கற்கள் மற்றும் டயர்களைக் கொண்டு செல்லுங்கள் - டயர்களை எரித்து முஸ்லிம்களின் வியாபார நிறுவனத்துக்குள் எறியுங்கள். கற்களையும், தக்காளிகளையும் வீசுங்கள். ராஜீவ் கொலையாளி களுக்குத் தூக்கிலிருந்து மன்னிப்பு வழங்கும்போது எந்த சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது என்று சொன்னதோடு, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய 48 மணிநேரம் அவகாசமும் கொடுத்தார்.

குஜராத் முதல்வர் மோடி அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? எப்படி எடுக்கும்? ஆயிரக் கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை வெட்டிப் பலி கொடுத்த குஜராத்தின் காவல்துறை ஆயிற்றே!

இப்பொழுது மத்தியிலும் ஆட்சி வந்தாகிவிட்டது. தொகாடியாக்கள் எந்த எல்லைக்கும் சென்று கொக்கரிப்பார்கள்.

இந்த வி.எச்.பி.,க்கள் மக்களிடத்தில் திரிசூலங்களை நேரிடையாகவே அளித்து முஸ்லிம்களையும், கிறித் தவர்களையும், மதச்சார்பின்மைப் பேசும் இந்துக் களையும் குத்தச் சொல்பவர்கள் ஆயிற்றே - குடலைச் சரிக்கச் சொன்னவர்கள் ஆயிற்றே! எந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது?

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு இந்துத்துவாவாதி! எங்கள் கடவுள்களே ஆயுதம் தாங்கியுள்ளன - நாங்களும் ஆயுதம் தாங்குவோம்! என்று விஷம் கக்கியுள்ளார்!

இது அப்பட்டமான ஆயுதக் கலாச்சாரத்துக்குத் தூபம் போடும் துடுக்குத்தனமான வன்முறை வெறியின் வெளிப்பாடு.

தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவானேன்?

முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், விளைவு எங்கே போய் முடி யும் என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்குத் தெரியவே தெரியாதா?

அமைதிப் பூங்காவான மண்ணைக் காவிகள் கலவர மண்ணாக மாற்றிட நினைக்கிறார்கள் போலும்!

சட்டம் தன் கடமையைச் செய்யுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84539.html#ixzz38LTPnSDX

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


உச்சிஷ்ட கணபதி!

உச்சிஷ்டம் என்றால் எச்சில்; சாப்பிட்டபின் உள்ள எச்சத்தை - மீதியை இவருக்கு நிவே தனம் செய்தால் இந்தக் கணபதி மகிழ்வாராம்.

ஓ, எச்சக்கலை என்று இந்தக் கடவுளைச் சுருக்க மாகச் சொல்லலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/84477.html#ixzz38LV4vToo

தமிழ் ஓவியா said...


வெல்லட்டும் பிகார் முயற்சி!

பிகாரில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்; இந்த மூன்று கட்சிகளுக்குமே பா.ஜ.க. தான் பொது எதிரி என்று பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்) கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட நேரத்தில்கூட அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சிறிதும் பொருட் படுத்தியவர் அல்லர் பிகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார்.

மோடியின் கண் மூடித்தனமான இந்துத்துவா வெறியை ஒருக்காலும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி இருந்தும்கூட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது, அவர் படம் பொறித்த விளம்பரங்கள் பிகார் மாநிலத்தில் இடம் பெறக் கூடாது என்று கறாராகக் கூறியதோடு அல்லாமல், அவ்வாறே செயலும்படுத்தி தேர்தலில் வென்று காட்டியவரும்கூட!

சமூக நீதிக் கொள்கையில் அடங்கா ஆர்வம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்.

இடைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதுகிற கருத்து மிகவும் சிறந்ததே! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலில் (அஜண்டாவில்) இடம் பெற்றவைகளை மள மளவென்று செயல்படுத்திடத் துடியாய்த் துடிக்கிறது.

அய்ந்தாண்டு ஆட்சி தொடருமேயானால் அதன் விளைவு மிகவும் மோசமாகத் தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.

அதற்கிடையே பல மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் முக்கிய கடமையை ஆற்றுவதில் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இந்தியாவுக்கே நிதிஷ்குமார் வழிகாட்டி விட்டார்.

வட மாநிலங்களைப் பொறுத்தவரை, லாலு பிரசாத்யாதவ், முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஓரணியில் நிற்பார்களேயானால், வட மாநிலங்களில் அரசியல் தட்ப வெப்ப நிலையே தலைகீழாக மாறி விடும் என்பதில் அய்யமில்லை!

நியாயமாக, இந்தச் சமூக நீதி அணியில், மதச் சார்பற்ற அணியில் லோக் தள் கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இணைந்திருக்க வேண்டும்.

பி.ஜே.பி.யின் மதவாத நெடியைப் பொறுக்காமல் தான் அந்தக் கூட்டணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பஸ்வான்; இந்த நிலையில் கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் நின்று, மத்திய அமைச்சராகவும் ஆகி விட்டார்.

இன்றைய மத்திய ஆட்சி மதவாதத் தன்மை கொண்டது மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானதும் கூட!

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினார் என்பதற்காக வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர் என்பது வி.பி. சிங்கின் நெருங்கிய தோழரான ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமே!

தனிப்பட்ட முறையில் தலைவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், அகில இந்திய அளவில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து சமூக, அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.

இந்த முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்திய அரசிய லிலும் சமூகத்திலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.

பிகாரில் இடைத் தேர்தலில் இந்தக் கூட்டணி வென்று காட்டினால், அது இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டப்பட்டதாக அமையும்!

வெல்லட்டும் அந்த முயற்சி!

Read more: http://viduthalai.in/page1/84485.html#ixzz38LVWNY3l

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக் கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தின் நோக்கமாகும்.
(விடுதலை, 21.7.1950)

Read more: http://viduthalai.in/page1/84484.html#ixzz38LVe27a9

தமிழ் ஓவியா said...


மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

விடுதலை 15.7.2014 நாளிதழில் வெளி வந்த மாலை மலரிலும் ஆர்.எஸ்.எஸா? என்று பெட்டிச் செய்தி படிக்கும்போது தமிழ்நாளேடுகள் - இன உணர்வற்று எத் துணை அடிமைத்தனமாக மாறிவிட்டன என எண்ணும்போது மிகவும் கவலையாக உள்ளது.

46 பக்கங்களைக்கொண்ட அந்த மலரில் எந்த ஒரு இடத்திலும் பெரியார் பெயர் வராமல் மிகவும் ஜாக்கிரதையுடன் மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவர் களோடு இருக்கும் படத்தில் கூட பெரியார் கிடையாது. பார்ப்பன பத்திரிகையின் திரிபு வேலைகளை பற்றித் தெரியும்.

அவர்களின் சூழ்ச்சிகளும் நமக்கு புரியும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தந்தை பெரியாரின் தொண்டால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் - நடத்துபவர்களின் தமிழ் பத்திரிகைகள் இவ்வாறு நடந்து கொண்டால் யாரைப்போய் நொந்து கொள்வது?

விடுதலை இதழ் மட்டும் இல்லையென்றால் இத்தகைய செய்திகளை வெளிப்படுத்து வதற்கு வேறு நாதியில்லை. தமிழன் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிலிருந்து மீண்டு வர பாடுபடும் ஒப்பற்ற இயக்கம் திராவிடர் கழகம்.

அந்த தமிழ் மாந்தனை மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றவனாக மாற்று வதற்கு உரியதை விளக்கமாக வழங்குவது விடுதலை ஆனால் மாலை மலர்கள் இப்படியெல்லாம் இருட்டடிப்பதன் மூலம் காமராசரையும் பெரியாரையும் பிரிக்க முடியாது.

பெரியாரை மறைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனாரின் குடுப்பத்தாரின் மாலைமலர் ஏடு வெளி யிடுகிறது என்றால் இதுதான் தமிழர்களின் யோக்கியதை என்று தந்தை பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. தினமலர் களை, தினமணிகளை நொந்து என்ன பயன்?.

இந்த வாசகங்கள் எல்லாம் அழியாக் கல்வெட்டுகள் - மாலை மலர்களே திரும்பிப் பாருங்கள் - திசை தவறிப் போகாதீர்கள்.

- தி.க. பாலு, திண்டுக்கல் மாவட்ட தி.க. தலைவர்

Read more: http://viduthalai.in/page1/84491.html#ixzz38LWAcVWM

தமிழ் ஓவியா said...


இந்தித் திணிப்பைப் போன்று, சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது மத்திய அரசின் முடிவுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எதிர்ப்பு


சென்னை, ஜூலை 22_ இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப்போல் சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது என்று மத்திய அரசின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.இ. இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வார மாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30 ஆம் தேதியன்று பிறப் பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத பகுதி களுக்கும்கூட பொருந்தும் வகையில் உள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமஸ்கிரு தத்தைக் கற்பிக்கவும், பயிலவும் சி.பி.எஸ்.இ. உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர் சமஸ்கிருதம்தான். இதில் இந்திய அறிவுக்களஞ்சியம் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடி யாதோ, அதைப் போல சமஸ்கிருதத் திணிப் பையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்கு தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பி னரான நண்பர் இல.கணேசன், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழ் மொழிக் கும், தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லை என்றும், அ.தி.மு.க.வில் அகில என்பதும், திராவிட என்பதும் சமஸ்கிருத வார்த்தை கள்தான் என்றும், சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அதே நேரத்தில் செம்மொழித் தமி ழுக்கு தை மாதத்தின் முதல் ஏழு நாட்களை தமிழ் மொழி வாரம் என்று கொண்டா டலாம் என்றும் கூறியிருக்கிறார்.

சமஸ்கிருத வாரம் கொண்டாடினால்...

அவர் வாதப்படியே சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் மேலும் மேலும் சமஸ் கிருத வார்த்தைகள் உள்ளே வர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டு மென்றும், தமிழ்நாட்டில் தமிழ் செம்மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் சம்பந் தப்பட்ட மொழிகளின் வாரத்தையும் கொண் டாட உத்தரவிடுங்கள் என்றும், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்கமுடியா தென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக செய்தி வந்தது.

இதே ஜெயலலிதா, 8.7.2014 அன்று காமராஜர் சாலையிலே அமைந் துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதி உதவி யுடன் ராமகிருஷ்ணா மடம் நிருவாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றியும் செய்தி வெளிவந்தது.

விவேகானந்தரின் 150- ஆம் ஆண்டு பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பண்பாட்டு மய்யத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங் களை பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந் தார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பயிற்று விக்க அமைந்துள்ள பண்பாட்டு மய்யத் திற்கு அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி செய்து விட்டு, மத்திய அரசுக்கு தமிழ கத்திலே சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்தப் பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை என் றைக்கும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடு வதை ஏற்றுக்கொள்ள இயலாது.

எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு நம்முடைய கடுமையான கண்டனத் தையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, ஏற்கெனவே இந்தி மொழி பற்றிய அறிவிப் பில் மத்திய அரசு அது இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உரிய அறிவிப்பு என்று அறிவித்ததை போல, இந்த சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியும் உடனடியாக உரிய திருத்த அறிக்கையினை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.

_ இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/84506.html#ixzz38LWfzAdr

தமிழ் ஓவியா said...


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கு விரோதமான சோதிடவியல் படிப்பா? உடனே கைவிடுக! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவது ஜனநாயக நெறிமுறையல்ல!

அரசு எடுத்துக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கு விரோதமான சோதிடவியல் பாடத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் 2014 -2015 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டப் பிரிவுகள் பற்றிய அறி விக்கையை (PROSPECTUS) ஓய்வு பெற்ற கல்வி அதி காரியும் மாநில பகுத்தறிவாளர் கழகத்துணைத் தலைவரு மான மானமிகு. ம.அழகிரிசாமி அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றது.

சோதிடப் பாடத்திட்டமாம்!

ஓர் அதிர்ச்சியான தகவல்! அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலை சோதிடவியல் பட்டப்படிப்புப் பற்றி (MA-ASTROLOGY) விவரிக்கப்பட்டு இருந்தது. (1) பயிற்சிக் காலம் இரண்டாண்டுகள் (2), கல்வித் தகுதி அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதலாம் ஆண்டு: தாள் ஒன்று - சோதிடவியலின் அடிப்படை, தாள் 2 - முகூர்த்தம், தாள் 3 - சாதக பலன்களை நிர்ணயித்தல், தாள் 4 - அஷ்டக வர்க்கம், தாள் 5 - அஷ்ட பலம், தாள் 6 - வாஸ்து சாஸ்திரம்

இரண்டாம் ஆண்டு: தாள் 7 - சாதக பலன்களை நிர்ணயித்தல், தாள் 8 - பிரசன்னம், தாள் 9 - தாஜிசம், தாள் 10 - மேல்நாட்டு முறை சோதிடம், தாள் 11 - சம்ஹிதை, தாள் 12 - ஆய்வேடு மற்றும் வாய்மொழித் தேர்வு

இதே போல இளங்கலை சோதிடவியல் பாடங்கள் (BA-ASTROLOGY)
இவற்றைப் பார்க்கும்பொழுது ஒரு புறம் வேதனையும், இன்னொரு புறம் நகைச்சுவை உணர்வும் ஏற்படுகின்றன.

வானவியல் வேறு - சோதிடம் வேறு!

அறிவியலை வளர்க்க வேண்டிய ஒரு பல்கலைக் கழகத்தில் மூடத்தனத்தை கற்பிக்கிறார்களே அது சரியானது தானா? என்ற வினா எழுகிறது

வானவியல் (ASTRONOMY) என்பது வேறு, சோதிட வியல் (ASTROLOGY) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. முன்னது அறிவியல், பின்னது மூடவியல் போலி அறிவியல் ஆகும் (PSEUDO SCIENCE)

விஞ்ஞானிகள் எதிர்ப்பு

1975 ஆம் ஆண்டு 18 நோபல் பரிசு பெற்ற விஞ் ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டனர்.

மக்களின் வாழ்க்கைக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப்பூர்வமான ஆதாரமும் கிடையாது.

சோதிடம் பொது மக்களிடையே மூடத்தனத்தை வளர்த்து, பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்த சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருந்தனர். (ஆதாரம்: தினமணி 4.9.1975)

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A-(h) பிரிவில் அடிப்படைக் கடமைகள் என்பதில் விஞ்ஞான மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் கேள்வி கேட்டு ஆராய்வு போக்கு சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக மூடநம்பிக்கையின் மொத்த வடிவமான சோதிடத்தைச் சொல்லிக் கொடுப்பது சட்ட விரோதம் அல்லவா?

சோதிடவியலைக் கைவிட்ட பல்கலைக்கழகங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் சோதிடவியல் பாடம் இடம் பெற்றிருந்ததை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதாலும், விளக்கத்தாலும் அப்பல்கலைக் கழகங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதனைப் பின்பற்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் சட்டத்துக்கும், விஞ்ஞானத்துக்கும் விரோதமான சோதிடவியல் பாடத்திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

அரசின் முடிவை எதிர்பார்த்து அடுத்த கட்ட கழக நடவடிக்கை பிறகு அறிவிக்கப்படும்.



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 24.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84575.html#ixzz38RMn1W1Q

தமிழ் ஓவியா said...


அண்ணாநூலகம் படும்பாடு!




அண்ணா நூற்றாண்டை யொட்டி அண்ணா நினைவு நூலகம் சென்னை கோட்டூர் புரத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப் பட்டதால் அதனை மருத் துவமனையாக மாற்ற முயற்சி செய்தார் தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா - நீதிமன்றத் தடை காரணமாக அம்முயற்சி தடைப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் பணி வரன்முறையின்றி அல்லல்படுகின்றனர். வேறு வழியின்றி உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/84572.html#ixzz38RMxXvsz

தமிழ் ஓவியா said...


விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?



அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த உரிமை படைத்ததாகும்.

அவ்வாறு விசாரணை நடத்த உள்ள குழுவினர்க்கு இந்தியாவுக்கு வந்து விசாரணை நடத்திட இந்தியா விசா வழங்கவில்லை என்பது எவ்வளவுப் பெரிய மனிதாபிமானமற்ற முறையற்ற செயல்!

இனப்படுகொலையாளன் ராஜபக்சே பக்கம்தான் இந்தியா இருக்கிறது என்பதை இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் ஒப்புக் கொள்ளவோ, உணரவோ தவறியவர்கள்கூட இந்தியாவின் இந்த அணுகுமுறை மூலம் துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும்.

பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், இன்னொரு கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியும்கூட இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே (Genocide)
என்று சொன்ன பிறகும் கூட இந்தியா இப்படி நடந்து கொள்வது கண்டனத் திற்குரியதே!

மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் சுத்த மோசம்; இலங்கை அரசு பக்கம் சார்ந்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்குத் துணை போன அரசு; இந்த ஆட்சி போய் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்துக்கு வந்தால், அதுவும் நரேந்திர மோடி பிரதமராக வந்தால் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும்; ஈழத் தமிழர்கள் வாழ்வில் விடிவெள்ளி முளைக்கும் தமிழக மீனவர்கள் வாழ்வில் புது அத்தியாயம் பூக்கும் என்றெல்லாம் நம் மக்களை நம்பச் செய்ய தொண்டை வறளக் கத்திய வர்கள் இப்பொழு தெல்லாம் தமிழர்கள் மத்தியில் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கத் தவறி விட்டது இந்தியா என்று குற்றப் பத்திரிகை படித்தவர்கள், இப்பொழுது மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் தடை செய்து விட்டதே - மோடியின் பிஜேபி அரசு, இதற்கு என்ன பரிகாரம்?

தனக்குத் தானே விசாரணைக் குழு அமைத்து (LLRC) நாட்டில் ஒன்றும் நடந்து விடவில்லை; ஈழத் தமிழர் இப்பொழுது நல வாழ்வில் தான் திளைக் கிறார்கள் என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொண்டது ராஜபக்சே அரசு.

அய்.நா.வால் அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையிலான மூவர் குழு விரிவாக விசாரணை செய்து தனது அறிக்கையை அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனிடம் அளித்து விட்டது (13.4.2011).

ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று கூறிவிட்டார் கொடுங்கோலன் ராஜபக்சே. அய்.நா.வுக்குள்ள அதிகாரம் என்ன? மரியாதைதான் என்ன? மேல் நடவடிக்கைதான் என்ன?

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான அனைத்துக் காரணங்களையும் பட்டியலிட்டு விட்டது அந்தக் குழு இப்பொழுது.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழு - தொடக்கத்திலேயே தடுமாறும் நிலைக்கு ஆளாகி விட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்கு மிக மிக முக்கியமானது என்று உலக நாடுகள் அத்தனையும் உணருகின்றன. பல நாடுகள் வெளிப்படையாகக் கூறவும் செய்தன. என்றாலும் இந்தியா மட்டும் கல்லுளி மங்கனாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் நடந்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பூகம்பம் வெடித்திருக்க வேண்டாமா?
நாடாளுமன்றத்தில் என்னென்ன வெல்லாமோ நடந்திருக்கின்றன. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுக்காதது ஏன்?

கேரளத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இத்தாலியக் கப்பல் படையினரால் சுடப்பட்ட பொழுது கொந் தளித்தவர்கள், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிரச்சினையில் அலட்சியம் காட்டுவது உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடி தமிழர் களையும் மனிதநேய வாதிகளையும் அவமதிப்பதாகும்.

தேசிய ஒருமைப்பாடு பேசும் கட்சியினர்கள் தமிழர் பிரச்சினை என்கிற போது ஒதுங்கிக் கொள்வது ஏன்?

தமிழ்நாடு சட்டப் பேரவையும் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. விசாரணைக் குழு இந்தியா வருவதற்கு அனுமதி மறுப்பது குறித்து, சட்டப் பேரவையில் தீர்மானம்கூட நிறைவேற்றலாமே!

எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொடுத்தால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிராகரிக்கப்படும் நிலையில், முதல் அமைச்சரே அந்தக் கடமையை எடுத்துக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றி நல்ல பெயரைச் சம்பாதிக்கலாமே.

அதன் மூலம் இந்தத் தொடருக்கு ஒரு வகையில் முக்கியத்துவம் கூடக் கிடைக்குமே; செய்வாரா முதல் அமைச்சர்? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84583.html#ixzz38RNWNhw4

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.

- (விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/84581.html#ixzz38RNdhWhb

தமிழ் ஓவியா said...


சு.சாமியின் திமிர் பேச்சு


யாழ்ப்பாணம், ஜூலை 24_ ஈழச்சிக்கல் அங்குள்ள தமிழர்களின் சொந்தப்பிரச்சினை, இதில் எந்த அயல்நாட்டுத்தலையீடும் கூடாது என்ற சு.சாமியின் திமிர் பேச்சிற்கு பதில் கூறும் விதமாக சண்டே அப்சர்வருக்கு பேட்டியளித்த இரா. சம்பந்தன் கூறியதாவது பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றத்தில் இருந்து தப்புவிக்க வைக்கும் பொருட்டு வெளிப்படையாக பேசுகிறார் நீதிக்கு புறம்பாக பேசி நிலமையை மேலும் சீர்குலைக்க வேண்டாம் என்று தனது பேட்டியில் கூறினார். நேற்று இலங்கைக்கு அரசுமுறைப்பயணமாக சென்ற சு.சாமி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ஈழத்தமிழர்கள் பலவித சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் அது அவர்களின் சொந்தப்பிரச் சினைகள். இதில் எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது. அவர்கள் இலங்கை அரசுடன் பேசி தங்களது சிக்கல்களுக்கு தீர்வுகாணவேண்டும் என்றும், இலங்கையில் இனவாதம் எதுவும் கிடையாது அவ்வாறு கூறுவது முன்னாள் தீவிரவாதிகளுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவாக செயல்படும் சில அந்நியச்சக்திகள் பரப்பிவிடும் பொய்ப்பிரச்சாரம், இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு பிறகு பிரிவினைத்தீவிரவாதிகளை வென்று தற்போது இலங்கையில் அமைதியை மேற்கொண்டு வருகிறது, இங்கு நடந்த இனப் படுகொலை என்பது எந்த ஒரு நாடும் ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்

இந்தியா 13-ஆவது சட்டத் திருத்தம் பற்றிக் கூறினாலும் அதை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பு நரேந்திரமோடி தலைமை யினாலான அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது. மேலை நாடுகளில் சில தீவிரவாதச் செயல்களின் ஆதரவாளர்கள் இலங்கைமீது போர்க்குற்றம் சுமத்துவது பொய்யானது என்றும் தனது பேட்டியில் கூறியிருந்தார். இது குறித்து சண்டே அப்சர்வர் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பதிலளித்தபோது

அதிபர் மகிந்த ராஜபக்சே 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார். சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.

புதுடில்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சேவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வேயை சு. சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும்,நார்வே இலங் கையில் அமைதியைக் கொண்டுவரும் முயற்சியில் மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது.

விடுதலைப் புலிகளை அமைதிப்பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது.

ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப் பட்டாலும், நார்வே, எடுத்த முயற்சிகள் மதிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சு.சாமி தனது பேட்டியின் தொடர்ச்சியாக இலங்கைக்குள் நார்வே நாட்டினரை எந்த ஒரு காரணம் கொண்டும் அனுமதிக்க்கூடாது, அந்த நாட்டினரால் இலங்கை பல்வேறு காலகட்டங்களில் பெருத்த பின்னடைவை சந்தித்தது நார்வே தலையீட்டின் போது விடுதலைப்புலிகள் தங்களின் பலத்தை கூட்டிக்கொண்டனர். இலங்கையில் தற்போதுள்ள அமைதி தொடர்வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கம் நார்வே நாட்டினர் எந்த ஒரு காரணம் கூறிக்கொண்டு வந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்

Read more: http://viduthalai.in/page-3/84597.html#ixzz38RObQofd

தமிழ் ஓவியா said...


ஓவியக் கலைஞர்கள் கவனத்திற்கு...


திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அணிகளிலும் இருக்கக் கூடியவர்கள், பெரியார் கொள்கையேற்றுச் செயலாற்றும் இயக்க ஆதரவாளர்களில் தொழில் முறை ஓவியர்கள், தொழில்முறை அல்லாத ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள், ஓவிய விரும்பிகள், சுவரெழுத்து / தட்டி விளம்பரப் பணியாளர்கள், கணினி/ வரைகலை தொழில்நுட்ப ஓவியர்கள், கேலிச்சித்திரம் வரைவோர், சிற்பக் கலைஞர்கள், துணி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு ஓவிய ஊட கங்களிலும் பணியாற்றக் கூடியவர்கள் உள்ளிட்டோர் தங்களைக் குறித்த விவரங்களையும், தங்களின் சிறப்புகளையும் தொடர்பு முகவரி, எண் ஆகிய வற்றையும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் தத்தமது பகுதிகளில் உள்ள நமது தோழர்களில் மேற் கண்டோரை அடையாளம் கண்டு விவரம் அனுப்பிட வேண்டுகிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-_7. தொடர்பு எண் : 94442 10999

Read more: http://viduthalai.in/page-3/84603.html#ixzz38ROvpvBO

தமிழ் ஓவியா said...


நிமிர்ந்து உட்கார்ந்தால் நிறைய படிக்கலாம்


தேர்வு நேரத்தில் அதிகமாக படிக்க வேண்டி இருக்கும் அல்லவா... எப்படி உட்கார்ந்து படித்தால் அதிக நேரம் படிக்கலாம்?

குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸி ஜன் அளவும் குறையும். இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவோம்.

பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடு வோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறை பாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை. எனவே நன்றாக நிமிர்ந்து உட் கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது.

Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPHM9Hm

தமிழ் ஓவியா said...

பள்ளிகளில் தோப்புக்கரணம் தண்டனை ஏன்?: ஆய்வு

சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்தார்கள். காது மடல்களைப் பிடித்து தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குமாம்.

மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் அறிவுத்திறன் அதிகரிக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPcPara

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயா? காரணம் என்ன?


சென்னை, ஜூலை 24_ சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்தியர்களின் உணவு முறை குறித்து ஆராய வேண்டும் என சுவீடன் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் கூறினார்.

தமிழ்நாடு, புதுவை நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவும் இந்திய நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் சர்வதேசக் கருத்தரங்கமும் சென் னையில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த கருத் தரங்கில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இதய நோய்கள் ஆராய்ச்சி யாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் பேசியதாவது:

இந்தியர்களின் உணவுப் பழக்கம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்தியர்கள் அதிக அளவி லான உணவைச் சாப்பிடு கின்றனர்.

சுவீடன் நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நாங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப் பிடுகிறோம். ஆனால் வெப்ப நாடான இந்தியா விலும் அதிக கலோரிகள் கொண்ட உணவை மக்கள் சாப்பிடுகின்றனர். அதிக கலோரிகள் கொண்ட உணவை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பாலில் செறிவூட்டப் பட்ட கொழுப்பு இருக் கிறது; எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போதோ பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் பாலில் நோய் எதிர்ப்புச் சக்தியும், வைட்ட மின் டி உள்ளிட்ட பல் வேறு சத்துகளும் நிறைந் துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

பால் ஒரு கொழுப் புள்ள பொருளாக மட்டும் பார்க்கப்படாமல், உட லுக்குத் தேவையான சத்துகள் நிறைந்த பொரு ளாகவும் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள் யாருக்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு குடும் பத்தின் உணவு முறையை ஆராய வேண்டியது அவசியம்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோரின் உணவு முறை யை ஆராய்ந்தால், அவர் களுடைய வாரிசுகளுக்கு சர்க்கரை நோய் அல்லது இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என் பதைக் கண்டுபிடித்து விடலாம் என்று அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-5/84582.html#ixzz38RPrKBZp

தமிழ் ஓவியா said...

திராட்சை பழம் எந்த வகை பழம்?

ஆரஞ்சுப் பழம், எலுமிச்சைப் பழம் வகையைச் சார்ந்தது திராட்சை. ஹெஸ்பிரிடியம் என்பது அதன் தாவரவியல் பழம், திராட் சையில் பல கிளைகள் இருப்பது தெரியவில்லை அதற்குக் காரணம் திராட்சை பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மனிதனால் பிரித்தெடுக்கப்பட்டு கலப்பு செய் யப்பட்டு, தோட்டப் பயிராக்கப் பட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84612.html#ixzz38RQEi2Gr

தமிழ் ஓவியா said...


வச்சனந்தி மாலை

சமஸ்கிருதம் - நம் மொழியை நான்காகப் பிளந்தது!

சமஸ்கிருத - இந்து மதம் நம்மை நான்கு கூறுகளாக்கி நாலாஞ் ஜாதி ஆக்கியது.

தமிழ் எழுத்துக்களில் கூட வருணாசிரமத்தைத் திணித்தது.

பாட்டியலில் பன்னீருயிரும்
முதலாறு மெய்யும்
பிராமண வருணமாம்!
அடுத்த ஆறு மெய்கள்
சத்திரிய வருணமாம்!
அடுத்த நான்கு மெய்கள்
வைசிய வருணமாம்!
பிற இரண்டு மெய்யும் சூத்திர வருணமாம்

அதோடு விட்டதா ஆரியம்?

ல,வ,ற,ன - நான்கும் வைசிய எழுத்துக்களாம். ழ,ள என்பன சூத்திர எழுத்துக்களாம். ழ,ற,ன மூன்றும் வைசிய சூத்திர எழுத்துக்களாம். தமிழின் சிறப்பு எழுத்துக்களான ழவும், றவும் வட மொழியில் இல்லை - எனவே அதனை சூத் திரப் பட்டியலில் இணைத்து விட்டனர்.

அத்தோடு விட்டு விட்டார்களா? பாவிலும் பார்ப்பனப் பாணத்தைத் தொடுத்துவிட்டனர்.

பாக்களில் சிறந்தது வெண்பாவாயிற்றே! அது பார்ப்பனர்களுக்காம். ஆசிரியப்பா சத்திரியருக் காம் (அரசருக்காம்!) வைசியருக்கு கலிப்பா வாம்! சூத்திரருக்கு வஞ்சிப்பாவாம்.

கலம்பகம் எப்படி இருக்க வேண்டுமாம்? தேவருக்கு 100 செய்யு ளும், பார்ப்பனர்களுக்கு 95 செய்யுளும் அரச ருக்கு 90 செய்யுளும் - அமைச்சருக்கு 70 செய் யுளும் - வணிகருக்கு 50 செய்யுளும் - மற்றவர் களுக்கு 30 செய்யுளும் பாட வேண்டுமாம். இது பாட்டியல் விதியாம்.

இப்படி ஆரியம் - சமஸ்கிருதம் தமிழர் களுக்கு, தமிழ் மொழிக்கு செய்த வஞ்சகமும், துரோகமும் அட்டூழிய மும் கொஞ்சமா நஞ் சமா? வச்சனந்தி மாலை என்ற நூலையே இதற் காக நூலோர் தொகுத் துள்ளனர்.

தந்தை பெரியாரிடத் தில் 1937இல் உதைபட்ட ஆரியம் மீண்டும் மீசை முறுக்கித் தோள் தட்டு கிறது - காரணம் அதிகார பீடத்தில் அவாள் (ஆர். எஸ்.எஸ்.)ஆயிற்றே.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அறுதியிட்டுக் கூறிவிட்டபின் அவா ளுக்கு வேறு அட்டி என்ன!

வாலாட்டிப் பார்க் கிறது - தமிழ்நாட்டில், தந்தை பெரியார் மண் கொடுக்கும் சாட்டையில் ஜென்மத்துக்கும் திரும் பிப் பார்க்கக் கூடாது!

ஆகஸ்டு ஒன்று நினைவிருக்கட்டும் ஆர்த்தெழுவீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84634.html#ixzz38UJLCgho

தமிழ் ஓவியா said...

அநாகரிக அரசியல்!


சிவசேனா என்ற அமைப்பு சங்பரிவார் வட்டத்தைச் சேர்ந்தது என்றாலும் சிறுபான்மையின மக்களை எதிர்ப்பதிலும் மகாராட்டிரத்தைத் தவிர்த்த வேறு மாநில மக்களை எதிர்ப்பதிலும் சங்பரிவார்க் கும்பலுக்கு அப்பனாகத் தான் நடந்து கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையைச் சேர்ந்ததுதான் டில்லியில் உள்ள மகாராட்டிர மாநில இல்லத்தில் நடந்த அநாகரிகச் செயல்!

கடந்த வாரம் டில்லியில் உள்ள மகாராட்டிர பவனுக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர்கள் சென்றுள்ளனர். மகாராட்டிரப் பாரம்பரிய உணவைக் கேட்டுள்ளனர்.

ஆனால், பணியில் இருந்த ஊழியர்கள் சப்பாத் தியைப் பரிமாறி உள்ளனர். இதனால் சீற்றம் அடைந்த சிவசேனை உறுப்பினர்கள் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக இழுத்து அவர் வாயில் சப்பாத்தியைத் திணித்துச் சாப்பிட வைத்துள்ளனர். அந்த மேற்பார்வையாளர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரம்ஜான் நோன்பை மேற்கொண்டவர் என்பதால் பிரச்சினை பேருரு எடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆவேசப் புயல் சுழன்று சுழன்று அடித்தது.

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் வெளி நடப்பு செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உண்மை கண்டறியப்படாத ஒரு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாராவது கூடாது என்று எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்துள்ளார். எல்.கே. அத்வானி மட்டும் தான் வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். மற்ற பிஜேபியினர் நழுவிக்கொள்கின்றனர். இவற்றிற்கு மேலாக மகாராட்டிர அரசு இந்தப் பிரச்சினைமீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. வரவேற்கத் தக்கதாகும்.

சம்பந்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த ராஜன் பாபுராவ் விச்சாரே உலகறிந்த கிரிமினல், அவர்மீது மட்டும் 20 வழக்குகள் உள்ளன. கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது. கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்துக்குப் பங்கம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்ரமித்தது, போலி கையொப்பமிட்டுப் பண மோசடி செய்தது, பெண்களைப் மானப்பங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களைத் தாக்கியது என்று மொத்தம் 20 கிரிமினல் வழக்குகள் இந்தப் பேர் வழிமீது உண்டு. (விவரம் தனியே காண்க).

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் சிவசேனாவில் உள்ளவர்கள் பார்த்தீர்களா? இவர்களுக்கு வாக்களித் துப் பொது மக்களும் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! (ஜனநாயகத்தைக் காலி நாயகம் என்று தந்தை பெரியார் சொன்னதற்கான விளக்கம் இங்குக் கிடைத்து விட்டதல்லவா!)

16ஆவது மக்களவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம். இது கடந்த தேர்தலைவிட (2009) 4 விழுக்காடு அதிகமாம்! (ஜனநாயகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று திருப்தி அடையலாம்!)

டில்லியில் 7 உறுப்பினர்களுள் 5 பேர்கள், பிகாரில் 40 உறுப்பினர்களுள் 27 பேர்கள், மகாராட்டிரத்தில் 48 உறுப்பினர்களுள் 30 பேர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 42 உறுப்பினர்களுள் 20 பேர்கள், கேரளாவில் 20 உறுப்பினர்களுள் 9 பேர்கள், உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களுள் 28 பேர்கள், குஜராத்தில் 26 உறுப் பினர்களுள் 9 பேர்கள், கருநாடகத்தில் 28 உறுப்பினர்களுள் 9 பேர்கள், ஜார்க்கண்டில் 14 உறுப்பினர்களுள் 4 பேர்கள், அசாமில் 14 உறுப்பினர்களில் 4 பேர்கள் இமாசலப்பிரதேசத்தில் நான்கு உறுப்பினர்களுள் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் 29 உறுப்பினர்களுள் 7 பேர்கள், உத்தரகாண்டில் 5 உறுப்பினர்களுள் ஒருவர், மேற்கு வங்காளத்தில் 42 உறுப்பினர்களுள், 8 பேர்கள், ஒடிசாவில் 21 உறுப்பினர்களுள் 4 பேர்கள், தமிழ் நாட்டில் 39 உறுப்பினர்களுள் 7 பேர்கள், ஜம்மு-காஷ் மீரில் 6 உறுப்பினர்களுள் ஒருவர், அரியானாவில் 10 உறுப்பினர்களுள் ஒருவர், சத்தீஸ்கரில் 11 உறுப்பினர் களுள் ஒருவர், வடக்கு கிழக்கு மாநிலங்களில் 14 உறுப்பினர்களுள் ஒருவர், பஞ்சாபில் 13 உறுப்பினர் களுள் ஒருவர் ராஜஸ்தானில் 25 உறுப்பினர்களுள் ஒருவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்றால், நம் நாட்டின் ஒழுக்கத்தை, ஜனநாயக யோக்கியதையை எளிதில் எடை போட்டு விடலாமே!

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்று பதவிப் பிரமாணம் செய்தவர்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா?

ஆந்திராவிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் தூதராக பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா அம்மாநில முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைக் கூட பிஜேபி எம்.பி. எதிர்க்கிறார் - காரணம் அந்த வீராங் கனை முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான்.

குடியரசு தலைவர் அளிக்கும் இஃப்தார் விருந்தையே பிரதமராக இருப்பவர் புறக்கணிக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

இரண்டு மாதங்களுக்குள்ளேயே இவ்வளவு விபரீதங்கள் என்றால், மீதிக் காலம் எப்படி நகரப் போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இந்த மதவாத சக்திகளுக்கு ஊடகங்களும் துணைப் போவது கடைந்தெடுத்த வெட்கக் கேடே!

Read more: http://viduthalai.in/page-2/84650.html#ixzz38UK25bGQ

தமிழ் ஓவியா said...


சிறு குழந்தைகளும் - தொலைக்காட்சிகளும்!


அண்மையில் வானொலியில் குழந்தைகள் வளர்ப்பு பற்றி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை (எழும்பூர்) மருத்துவர் ஒருவர் உரையாடலை காரில் பயணம் செய்து கொண்டே கேட்டு மகிழ்ந்தேன்.

அரிய பல தகவல்களை, கேள்வி - பதில் மூலம் வானொலி சார்பாக கேட்டவரும், பதிலளித்த மருத்துவ நண்பரும் மிக அருமையாக கூறி வந்தார்.

சிறு குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள பல பெற்றோர் களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்குப் பயன்படும் என்பதால், வானொலியில் கேட்ட குறிப்புகளைக் கொண்ட - நினைவில் நின்றவைகளைக் கொண்ட -கட்டுரை இது! படித்துப் பயன் பெறுங்கள்.

இப்போதெல்லாம் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்; தாய் மகப்பேறு மருத்துவத்திற்கு ஆளாகி, குழந்தை பிறந்த 2,3 ஆண்டுகள் ஆகும் நிலையில் - தொடர் விடுப்பு எடுக்க இயலாது என்ற காரணத்தாலும் சிறு குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையங்கள் அவ்வளவு திருப்தியாக இத்தாய்மார்களுக்கு அமையாத காரணத்தாலும், மாற்று முறைகள் தேடுகின்றனர்.

வேலையிலிருந்து திரும்பிய பிறகுகூட, சமையல் பணி (இன்னமும் இது பெண்கள் தலையில் சுமத்தப்பட்ட பணியாகத்தானே பெரும்பாலான வீடுகளில் உள்ளது) செய்தாக வேண்டிய நெருக்கடி.

அதன் காரணமாக, 2 வயது, 3 வயது குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் படுக்க வைத்தோ, ஆங்கில நர்சரி ரைம்ஸ் (Nursery Rhymes) பாட்டுகளைப் போட்டோ அல்லது குழந் தைகளின் ஈர்ப்புக்கான சி.டி.களையோ போட்டு அக்குழந்தைகள் சதா பார்த்துக் கொண்டே இருக்கும்படிச் செய்து தங்கள் பணிகளை இடையூறு, அவர்களது தொந்தரவு ஏதுமின்றி செய்து வருவது கண்கூடு.

கேட்டால் இந்த நவீன அறிவியல் தகவல் களஞ்சிய, பாட்டு சி.டி.கள் அக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் என்றும் நம்பி பல தாய்மார்கள் இதனைச் செய்கின்றனர். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளை அந்த வயதின் வளர்ச்சிக்குரிய கலகலப் புடன் பெற்றோர்களிடம் குடும்பத்தவரிடம் பழகுவதில்லாமல், பேச்சை அறவே தவிர்த்து விட்டு, எப்போதும் அரைத் தூக்கம், அரை மயக்கத்திலேயே இருந்து விடுகிறார்கள்.

(கிராமப்புற வயல்வெளியில் தூர வேலை செய்யும் பல தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் அழாமல் தூங்கிய வண்ணம் இருக்க, சில போதை மருந்து களை முலைக் காம்பில் தடவிக் கொண்டு குழந்தைக்கு வேலைக்கு வருவதற்குமுன் பாலூட்டிவிட்டு குழந்தைகளைத் தூங்க வைத்து சீனா போன்ற நாடுகளில் செய்வ தாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு)

அப்படி அறிவார்ந்த சி.டி.களைக் கூட போட்டு, மனித உறவுகளோடு, கலந்து கொள்ளச் செய்வது குழந்தைகளை வளரும்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்று அந்த மருத்துவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு பந்தை அக்குழந்தை முன் எறிந்தால் அது ஓடிப் போய் துடிப்புடன் எடுத்து, மீண்டும் எறியாமல் அது வெறுமனே அமைதியாக, ஏதோ ஒரு பொம்மை போல்தான் இருக்கும்; காரணம் அத்தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அது அப்படியே பார்த்து பார்த்து - அதனுடைய இயக்கங்களுக்கே அதில் வேலையில்லை அதன் காரணமாகத்தான் சும்மாவே இருக்கும்.

இதுவே வீட்டில் மற்றவர்களோடு கலந்து மற்ற குழந்தைகளுடன் தாத்தா, பாட்டி, பெற்றோர், அண்ணன், தங்கை, தம்பியுடன் கலந்து உறவாடினால் இப்படி இருக்கவே இருக்காது என்றார்!

ஜப்பானிய முறையில் முப்பரி மாண MRI Scan செய்து பார்த்ததில் அத்தகைய மேற்சொன்ன முறையில் - வளர்க்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அதற்குரிய அளவு வளரவில்லை என்பதை நன்கு நிரூ பணம் செய்யும் அளவில் உள்ளதாம்! கூறினார் மருத்துவர்.

நமது மூளை நான்கு பிரிவாக பகுக்கப்பட்டிருக்கிறது, நரம்பியல் மூளை நிபுணர்களால் (நூறு அளவு போன்ற மூளை முன் பகுதி (Frontal Lobe) தடித்துப் போகிறது.

அதனால் மின்னணு கருவிகள் (Electronic Gadgets) Mobile போன்ற வைகளை வைத்து பாட்டுகள் கேட்க வைத்தால் இவைகளை அருகில் கொண்டு சென்று 2 வயதுக்கு மேற் பட்ட சிறு குழந்தை வளர்ப்பில்கூட விரும்பத்தக்கது அல்ல என்கிறார் மருத்துவர்.

சில முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1 மணி 2 மணி நேரத் திற்கு மேல் - ஒரு வாரத்திற்கு இந்தக் குழந்தைகள் பார்க்காமல் தடுப்பது மிக மிக அவசியம் - என்கிறார் இந்த மருத்துவ வல்லுநர் அறிவுரைகள்!

கேட்டீர்களா? குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர் கள் இந்த அறிவுரையைப் புறக் கணிக்காதீர் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84653.html#ixzz38UKgztmH

தமிழ் ஓவியா said...


முஸ்லிம் மேலாளர் வாயில் சப்பாத்தியைத் திணித்த இந்த ராஜன் பாபுராவ் விச்சாரே - யார்?

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பின ராக இவர் மீதுள்ள காவல் நிலையத்தில் பதிந்த வழக்குகளின் விவரம் (கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பதி வானவை)

இவர்மீது கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது, கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவிப்பது, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தனியா ருக்கு சொந்தமான இடத்தை ஆக்ர மித்தது, போலி கையெழுத்துப் போட்டு பண மோசடி செய்தது, பெண்களை மானபங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களை தாக்கியது என மொத்தம் 20-ற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவற்றின் விவரங்கள்:

1) CRI 163/07/RCC 198/08 வாக்ளே எஸ்டேட் காவல்நிலையம் - தானே.

2) CRI 193/06 Sum CC 6252/2006 மாவ்படா காவல் நிலையம் - தானே.

3) CRII 73/11 நாவ்பாடா காவல் நிலையம் - தானே.

4) 4472/10 தானே காவல் நிலையம்

5) CRI 290/11 Under Section 143, 149.

6) CR II 39/2006 Under Section 37(3), 135, மும்பை காவல் சட்டத்தின்படி கைதாகி பிணையில் வெளியே வந்தவர்.

7) CRII 3033/09 Under Section 37(3), 135 கபூர்வாடி காவல் நிலையம் - தானே.

8) CRI 290/11 Under Section 143,149,323,342 of IPC with Sec. 37(1)1325
கல்வா காவல் நிலையம்.

9) CRII 3054/04 Under Section 37/(3)135

10) CRII 188/5 Under Section 37(3) 135

11) CRII 128/07 Under Section 291, 278, 188 of IPC with Sec.37(3) 135 O

12) CRII 73/11 Under Section 188, 268, 290, 291 with Sec. 6 of Environment Act 1986 and Under

Sec.33 (N) 113, 181, 136.

13) CRII 64/06 Under Section 37(3)135.

14) 193/06 Under Section 323, 504, 506, 143, 145, 147 of IPC

15) CRI 240/89 Under Section 143/147,336,337,353,427 of IPC

16) CRII 04/93 Under Section 37(3) 135.

17) CRII 08/93 Under Section 37(3)135, 36/135

18) CRII 73/06 Under Section 37(3) 135.

19) CRII 92/11 Under Section 37(3)135.

20) CRI 165/07 Under Section 353, 143,145,147, 148,149,427,504 of IPC

Read more: http://viduthalai.in/page-2/84656.html#ixzz38UKr8csO

தமிழ் ஓவியா said...


சைவ - வைணவ சம்பாஷணை

வைணவதாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப்பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்கு போய்விடும் என்கிறீர்களே.

மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மை கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லு வேன்.

(9.11.1930 குடி அரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதியது

Read more: http://viduthalai.in/page-7/84670.html#ixzz38ULqsyCP

தமிழ் ஓவியா said...


ஆச்சாரியாரின் குழப்பமும் அண்ணாவின் பதிலும்!


சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும்.

திருநீறு, நாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை,

"சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக்குறியி லிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லா ருக்கும் தெரியும் படியாகப் போட்டுக் கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக் கிறார்கள்.''

இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்துகிறார். சைவர் களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்வோம்.

திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரே தவிர, அவருக்குக் குழப்பம் வரா மலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர் களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியில் நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது,

"எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை'' என்று கூறுகிறார்!

எப்படி இருக்கிறது வாதம்! எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு!'

திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சாரியாள் சொல்லி யிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான் - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்!

வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும் - எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.!

நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சாரியாரின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

எதிலும் உறுதிப்பாடும் உத் வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!!

இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப்படுவதிலே ஆச்சரியமென்ன.

- தம்பிக்கு கடிதம் என்ற நூலில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UM0RVRt

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி!

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங்களது அந்தக் கவிதையை சரிபார்த்து தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தரு வார்கள் காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்றும் ஒருவர் புரட்சிக் கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி எனும் புராண கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UMFjDNb

தமிழ் ஓவியா said...


காஞ்சி என்றால் அண்ணா!


சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் தன்னிகரற்று விளங்குபவர் திருமுருக கிருபானந்தவாரியார். அவர் பம்பாயில் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றும்பொழுது தமக்கு முன்னே திரண்டிருந்த பொது மக்களை நோக்கி அவர் அடியிற் கண்டவாறு புதிர் போட்டாராம்.

...சில பெரியவர்களுடைய ஊர்களைச் சொன்னாலே அவர்கள் பெயர் என்ன என்பது தெரிந்து விடும். உதாரணமாக அரியக்குடி என்றால் யாரை குறிக்கும் தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினாராம் வாரியார்.

இராமானுச அய்யங்கார் என்றனராம் கூட்டத்தினர்.

இவ்வாறே இன்னும் சில ஊர்களை அவற்றுக்குரிய மனிதர்களின் பெயர்களைக் கேட்டு வந்தவர் இறுதியாக,

காஞ்சி? என்றாராம். உடனே குழுமியிருந்த பொதுமக்கள், அண்ணாதுரை! அண்ணாதுரை என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனராம்.

இதைக் கேட்டதும் அயர்ந்து போனாராம் கிருபானந்தவாரியார். காஞ்சி என்றதும் பொது மக்களுக்குக் காமகோடி பீடாதிபதி, சங்கராச்சாரியார் நினைவுதான் வரும். அவர் பெயரைத்தான் கூறுவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், கூட்டத்தினரோ அண்ணாவின் பெயரை முழங்கியது அவருக்கு அளவற்ற வியப்பை அளித் திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMN8spQ

தமிழ் ஓவியா said...

பார்ப்பனீயம்!

கடிவாளம் சிறியது, ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான்! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன் கூடத்தான் இல்லை, ஆனால் மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும்.

அதைப் போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்த சமூகத்தாரின் செல்வாக்கு நிச்சயம் வளரும்... இதனால் தான் பார்ப்பனீயம் என்னும் பிரச்சினை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

26.10.1947 திராவிட நாடு இதழில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMbkUzs

தமிழ் ஓவியா said...

பச்சை நாஸ்திகம்

சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்

சாத்திரத்தைச் சுட்டு- மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையைப் பொய்யாக்கி - மேல் கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி, சூத்திரத்தைக் கண்டு - பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து, சுகம் பெறுவதெக்காலம் - அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?

- தந்தை பெரியார் குடிஅரசு - 5-5-1929

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMjDgF9