Search This Blog

4.11.13

ஜாதி-மதமற்ற மனிதகுல சமத்துவத்தை உருவாக்கும் சின்னம் தந்தை பெரியார்

ஜாதி-மதமற்ற மனிதகுல சமத்துவத்தை உருவாக்கும் சின்னமாக தந்தை பெரியார் அவர்களின் பேருருவச் சிலை அமைப்போம்! 

திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

திண்டிவனம், நவ.3- ஜாதி மதமற்ற சமத்துவ சமு தாயத்தின் கொள்கைச் சின்னம்தான்  சிறு கனூரில் நாம் திறக்கவுள்ள தந்தை பெரியார் அவர்களின் 95 அடி உயர பேருருவச் சிலை என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
20.10.2013 அன்று  திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

மிகுந்த சிறப்போடு காலையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் முடிந்து, அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங் களை விளக்குகின்ற ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சி யாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பொதுக் கூட்ட நிகழ்ச்சி, அடாது மழை பெய்தாலும், விடாது நாடகம் நடத்தப்படும் என்று அந்தக் காலத்திலே துண்டறிக்கையிலே போடுவார்கள். ஆனால், அதையும் மிஞ்சக்கூடிய வகையில், திராவிடர் கழகத்துக்காரர்கள் இயற்கையைக் கூட எதிர்த்து வெல்லக்கூடியவர்கள்தான் என்று சொல்லக்கூடிய வகையில், இவ்வளவு பெரிய கடும் மழை பெய்தாலும், கூட்டத்தினை இந்த இடத்திலேயே நடத்துங்கள் என்று தோழர்கள் எங்களுக்கு ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி இங்கே இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

இந்த மேடை ஒரு நினைவுக்குரிய மேடை!

அருமை நண்பர்களே, மழை எந்த அளவிற்கு ஒத்துழைக்கிறதோ, அந்த அளவிற்கு நான் பேசு வேன் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக்குச் சொல்லிக்கொண்டு, இந்த திண்டிவனத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னால், உங்களை யெல்லாம் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை, மிகச் சிறப்பாக நம்முடைய இயக்கத் தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த மேடை ஒரு நினைவுக்குரிய மேடை; இந்த இடத்தில்தான் 37 ஆண்டுகளுக்குமுன்னால், அதற்கும் முன்னால் நான் மாணவப் பருவந் தொட்டு இந்த ஊருக்கு நான் வந்தவன். திண்டி வனம் ஒன்றும் எனக்குப் புதிதல்ல; பல பேர் நினைக்க முடியாத காலத்தில், 67 ஆண்டுகளுக்கு முன்னால், என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களோடு நான் இங்கே வந்தபொழுது, நம்முடைய ஆசிரியர் ஆதிகேசவலு அவர்கள், அதுபோல, நம்முடைய தங்கவேல் அவர்கள், எம்.எல்.சி., ஆனார்; பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர்; நாங்கள் எல்லாம் சேலம் மாநாட்டிற்குச் சென்றபொழுது, 1944 ஆம் ஆண்டு விருத்தாசலம் வழியாக சேலத்திற்குச் சென்றவர்கள். அதேபோல், வழக்கறிஞராக ஜஸ்டிஸ் கட்சியில் இருந்த நம்முடைய கோபால் கவுண்டர் என்று அழைக்கப்படக்கூடிய அவர் கள், அய்யாவிற்கு மிகவும் நெருக்கமான வழக் கறிஞர் அவர், அதுபோலவே, அய்யா இரும்புக் கடை வைத்துக் கொண்டிருந்த பழனி அவர்கள், வீரராகவன் அவர்கள், இன்னும் பல நண்பர்கள்; பல பகுதிகளில் இருந்து பல நண்பர்கள் இருந்தவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்; 37 ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில், அன்னை மணியம்மையாரோடு நாங்கள் எல்லாம் ஒன் றாகப் பேசினோம்; அப்படிப் பேசிக் கொண்டி ருந்தபொழுதுதான், ஒரு சீட்டை நண்பர்கள் கொடுத்தார்கள்; அந்தச் சீட்டை அன்னை மணியம்மையாரிடம் கொடுத்தேன். அதில் என்ன தகவல் இருந்தது என்று சொன்னால், 1976 ஜனவரி 31 ஆம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்தது; பிறகு நாங்கள் இங்கே உரையாற்றி விட்டு, சென்னைக்குப் புறப்பட்டோம்; அம்மா வோடு வேனில் சென்று, அம்மா அவர்களை பெரியார் திடலில் விட்டுவிட்டு, வழமையாக நான் வீட்டிற்குச் செல்வது வழக்கம்; அய்யா அவர்கள் இருந்த காலத்திலும் அப்படித்தான் வழக்கம்.

அப்படி நாங்கள் பெரியார் திடலுக்குள் நுழை வதற்கு முன்பாகவே, நூற்றுக்கணக்கான காவல் துறையினர் அங்கே நிறுத்தப்பட்டிருந்தார்கள்; திடலுக்குள் உள்ளே சென்றால், அங்கேயும் நூற் றுக்கணக்கான காவல்துறையினர் ஆயுதங்க ளோடு நின்றிருந்தனர்.

அய்யா, உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்!

விடுதலை அலுவலகத்தில் நாங்கள் நுழைந்த வுடன், காவல்துறை அதிகாரி ஒருவர் சொன் னார், அய்யா, உங்களைக் கைது செய்ய வந்தி ருக்கிறோம் என்று.

கைதாகி, சிறை சென்று ஓராண்டுக்குப் பிறகு தான் வெளியே வந்தோம்; அந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கக்கூடிய மீண்டும் பெறக்கூடிய நிலைக்கு வந்தோம் - இன்றைக்கு 38 ஆண்டு களுக்கு முன்பாக.

எதற்காக இதனைச் சொல்கிறோம் என்று சொன்னால், தியாக முத்திரையைக் குத்திக் கொள்ளவதற்காக அல்ல!

இந்த இயக்கம் எவ்வளவு கடுமையான அடக்கு முறைகளைச் சந்தித்தாலும், எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் எதிர்க்க, எதிர்க்க வளருகின்ற ஒரு இயக்கமே தவிர, அழிகின்ற இயக்கமல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மனிதநேயத்தோடு பிறந்ததுதான்
இந்த இயக்கம்
தந்தை பெரியாருடைய கொள்கை ஆயிரங் காலத்துப் பயிர்; இந்தக் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஒரு மூச்சுக்காற்று; இந்த மூச்சுக்காற்று இல்லாவிட்டால், மனித குலமே தழைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட இனம் மட்டும் என்று நினைக்கவேண்டிய அவசி யமில்லை. இனம், மொழி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகளாவிய நிலையில், மனித நேயத்தோடு பிறந்ததுதான் இந்த இயக்கம்.

சுயமரியாதை என்கிற சொல் இருக்கிறது பாருங்கள், அந்தச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் உண்டா? அதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதைத்தான் அய்யா சொன்னார்கள், உலகத்திலுள்ள எந்த அகராதியை வேண்டு மானாலும் புரட்டிப் பாருங்கள்; சுயமரியாதை என்பதற்குரிய அதற்குச் சமமான ஒரு சொல்லை கண்டுபிடித்துச் சொல்லுங்கள் என்று சொன் னார்.
எனவே, நண்பர்களே! இந்த இயக்கம் எங் களுக்காக அல்ல; உங்களுக்காக - உங்கள் சந்ததிக் காக- உங்கள் எதிர்காலத்திற்காக- உங்கள் வாழ் வுரிமைக்காக - உங்களுடைய மான வாழ்வுக்காக! எண்ணிப்பாருங்கள்!

இன்றைக்கு எங்களை எதிர்க்கின்றவர்கள் இருக்கிறார்கள்; சுயநலம் காரணமாக- பதவி ஆசை காரணமாக - புகழ் போதை காரணமாக - பார்ப்பனர்கள் தங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, பலர் பல ரூபத்தை எடுப் பார்கள். அவ்வப்பொழுது, சில சில அவதாரங் களை அரசியல்வாதிகள் எடுப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம், இந்தக் கொள்கை இருக்கிறதே, மனிதனை மனிதனாக்குகின்ற கொள்கை; இதற்கு ஈடாக இன்னொரு கொள்கையைக் காட்டுங்கள், தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.
பிறக்கும்பொழுதே பேதம் உலகத்தில் எங்கா வது இருக்கிறதா? எங்காவது பிறக்கும்பொழுதே ஒருவன் இழிந்த பிறவியாக இருக்கிறானா? பிறக்கும்பொழுதே ஒருவன் தொடக்கூடியவன்; இன்னொருவன் தொடக்கூடாதவன் என்கிற பேதம் இருக்கிறதே, அது எந்த நாட்டில் இருக் கிறது?

ஆப்ரிக்கக் கண்டம் ஒரு காலத்தில் இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்டது; நீக்ரோக்கள் அடிமைகளாக இருந்தார்கள்; தமிழர்களும் அடி மைகளாக, தமிழ்நாட்டிலும் அடிமை வியாபா ரம் இருந்திருக்கிறது, ஏராளமான ஆதாரங்களும் உண்டு. ஆனால், நண்பர்களே, நீக்ரோக்கள்கூட கறுப்பர்கள் - வெள்ளையர்கள் என்கிற இன பேதத்திற்கு ஆளான நிலையில், அந்த இன பேதம், நிறவெறி, ஆதிக்கம், இன ஒடுக்கல், இன வெறி பேதம் இருக்கிறதே, அதில்கூட, வெள் ளைக்காரனும் - கறுப்பனும் ஒன்றாக அமர்ந்து படிக்கக்கூடாது; ஒரே பள்ளிக்கூடத்தில் படிக் கக்கூடாது என்கிற அந்தத் தோளின் திமிர்த் தனம் இருந்தது என்றாலும், அவன் படிப்பதைத் தடுக்கவில்லை. நீங்கள் நன்றாக கவனியுங்கள்; நீக்ரோக்களுக்குப் படிக்க உரிமையில்லை என்று அவன் ஒருபோதும் சொல்லவில்லை.

எந்த நாட்டிலே இந்த நிலை உண்டு?

ஆனால், இந்தப் பரந்த பாரத புண்ணிய பூமியில், இந்துக்கள் மிகப்பெரிய அளவிற்கு, புராதன மதம்; உலகத்தில் எவ்வளவு காலத்திற்கு முன்பு தோன்றியது என்று யாராலும் சொல்ல முடியாத மதம்; எந்தக் கொள்கையில் இருக்கிறது என்று யாராலும் வரையறுக்க முடியாத மதம் என்றெல்லாம் மதம் பிடித்துப் பேசிக் கொண் டிருக்கிறார்களே, அவர்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், உலகத்தில் எந்த நாட்டில் பிறக்கும் பொழுதே ஒருவன் கீழ்ஜாதி, பள்ளன், பறையன், சக்கிலியன், தொடக்கூடாதவன், எட்டி நிற்க வேண்டியவன், படிக்கக்கூடாதவன்; பள்ளிக் கூடத்தில் நுழையக்கூடாதவன்; எல்லோருடனும் சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாதவன்; எல் லோருடனும் சமமாக திருமணம் செய்து கொள்ள முடியாதவன் என்ற நிலை எந்த நாட்டிலே உண்டு?

அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள் நண்பர் களே, இப்பொழுது உங்களுக்குக் கல்வி கிடைத் திருக்கிறது. இதுவரையில் கல்விக் கண் இல்லாது இருந்த இளைஞர்களுக்குக் கல்விக் கண்ணொளி கிடைத்திருக்கிறது இந்த இயக்கத்தினால்!

உங்களைப் பார்த்துக் கேட்கிறோம், எண்ணிப் பாருங்கள், இந்த வருணாசிரம தருமம் உலகத்தில் வேறு எங்காவது உண்டா? 66 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த இந்த நாட்டில், ஒவ்வொரு ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் கொடியேற்றிக் கொண் டிருக்கிறோம்; அன்றைய தினம் பள்ளிக்கூடங் களில் இனிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கி றார்கள்; ஆனால், இந்த நாட்டில் 66 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பும், இந்த நாட் டில் சுதந்திர மனிதன் இருக்கின்றானா? ஏன் சூத் திரன் இருக்கவேண்டும்? ஏன் பஞ்சமன் இருக்க வேண்டும்? ஏன் பறையன் இருக்கவேண்டும்? ஏன் பார்ப்பான் இருக்கவேண்டும்? ஏன் மனிதன் இல்லை?  இந்தக் கேள்வி முக்கியமல்லவா!
என்னைப் பார்த்து சூத்திரன் என்று சொன் னானே, என்னுடைய சகோதரனும் சூத்திரன், என்னுடைய அப்பனும் சூத்திரன், என்னுடைய தாய் சூத்திரச்சி - இதற்கு என்ன பொருள்? இதற்குமுன், பெரியாருக்கு முன்பு யாராவது இந்தக் கேள்வியை கேட்டார்களா? ஏன் தாழ்த் தப்பட்டவன் என்ற உணர்வு வந்ததா? ஏன் நான் தொடக்கூடாதவன்; எனக்கும், உனக்கும் அவய வத்தில் என்ன வேறுபாடு? உன்னுடைய உடம்பில் ஓடுவதும் ரத்தம்; என்னுடைய உடம்பிலும் ஓடு வதும் அதே ரத்தம்தான்; ரத்தப் பரிசோதனை யில் ஜாதிக்கு அடையாளம் உண்டா? மதத்திற்கு அடையாளம் உண்டா?

அதனை நாங்கள் வரவேற்கிறோம்!

உலகத்தில் ரத்தத்தை எடுத்தால், இன்றைக்கு ஒருவருடைய ரத்தம் மற்றொருவருக்கு ஏற்றப்படு கிறதே! ஒருவர் கொடுத்த விழிக்கொடை இன் னொருவருக்குப் பொருத்தப்படுகிறதே! ஒருவ ருடைய உறுப்பு, மற்றொவருடைய உடலில் பொருத்தப்படுகிறதே - எத்தனை இளைஞர்கள் - விபத்தினாலே இறக்கக்கூடியவர்களுக்கு- மூளைச் சாவு ஏற்படுகிறதே, அப்பொழுது மருத்துவர்கள், பொதுநல உணர்வு படைத்தவர்கள், பெற்றோர் களிடத்தில் கேட்கிறார்களே, உங்கள் பிள்ளை வாழவேண்டுமா - இனிமேலும் - ஆம், உங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், அவர்களை நாங்கள் வாழ வைக்க முடியும். எப்படி? இன்னொருவருக்கு அந்தக் கண்களைப் பொருத்தி; இன்னொருவருக்கு சிறுநீரகத்தைப் பொருத்தி, கல்லீரலைப் பொருத்தி எந்தெந்த உறுப்புகள் பயன்படுகிறதோ, அந்தந்த உறுப்பு களை எடுத்து யார் யாருக்குத் தேவைப்படு கிறதோ அவர்களுக்குப் பொருத்தி, உங்கள் மகனை அவர்கள் மூலமாக வாழ வைக்க முடி யும் என்று சொல்கிறார்கள்.

என் மகனைத்தான் எங்களால் காப்பாற்ற முடியவில்லை; ஆனால், என் மகன் மூலமாக இத்தனை பேர்களை வாழ வைக்க முடியும் என்றால், அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று எத்தனைப் பெற்றோர்கள் இன்றைக்குச் சொல்கிறார்கள்.

எவ்வளவு பெரிய மனிதநேயம் இது! அந்த மனிதநேயத்திற்கு மதம் உண்டா? அந்த மனித நேயத்திற்கு ஜாதி உண்டா? சொல்லட்டுமே, ஜாதி வெறியர்கள். நம் ஜாதி, நம் ஜாதி, வேறு ஜாதி என்று தோள் தட்டி, மார்தட்டி, தொடை தட்டி வருகிறீர்களே, உங்களைக் கேட்கிறோம், அறிவியலில் ஜாதிக்கு என்ன அடையாளம்? உட்கார்ந்திருக்கிறவர்களைப் பார்த்து, அவர் இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னாரே,
இருட்டறையில் உள்ளதடா உலகம்,
ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே,
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே,
வாயடியும், கையடியும் மறைவதென்னாள்
சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தமது என்று சொல்வார்தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே,
இல்லையாயின், விடுதலையும்,
கெடுதலையும் ஒன்றேயாகும் என்று சொன்னார்.

யாரையும் தாக்கவேண்டும் என்பது நோக்கமல்ல

இது விடுதலையா? கெடுதலையா? இது தானே மிக முக்கியம். எனவே, எங்களுக்கு யார் மீதும் தனிப்பட்ட முறையில் கோபம் இல்லை. யாரையும் திருத்தவேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, யாரையும் மிரட்டவேண்டும் என்பது நோக்க மல்ல; யாரையும் தாக்கவேண்டும் என்பது நோக்க மல்ல.
விருத்தாசலத்தில் தாக்கியதைப்பற்றி இங்கே சொன்னார்கள்; எங்களுடைய இயக்கம் எப்படிப் பட்டது? எங்களுடைய தலைவர் எப்படிப்பட்ட வர்? இதோ, என் கையில் உள்ள ஒரு சிறிய நூல். பட்டுக்கோட்டை தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள், 1947 ஆம் ஆண்டு திருவண் ணாமலையில், தந்தை பெரியாருடைய உருவப் படத்தினைத் திறந்து வைத்து, அய்யா முன்னி லையில்,இதோ பெரியாரில் பெரியார் என்ற தலைப்பில் ஒரு அற்புதமான உரையாற்றினார்.

அவருடைய கணீரென்ற வெண்கலக் குரல்; அவருடைய உருவம்; அவருடைய பீடுநடை இவைகளெல்லாம் எங்களுக்குத் தெரியும். இன் றைய இளைய தலைமுறையினர் அறிய மாட் டார்கள். அப்படிப்பட்ட அழகிரிசாமி அவர்கள் மிகத்தெளிவாக ஒரு கருத்தினைச் சொல்கிறார். பெரியார் எப்படிப்பட்டவர், பெரியாருடைய துணிவு சாதாரணமானதல்ல என்று சொல்லி விட்டு, பெரியார் என்று அழைக்கிறோம்!

ஒரு சமயம் விருதுநகரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத் தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும், அவர் அருகில் மேடைமீது அமர்ந்தி ருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டேன், ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக்கொண்டு, பெரியாரைக் குத்திவிட, ஓடோடி வந்தார்; வந்தவரைக் கண்டு அஞ்சிடாமல், அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் பெரியார்; அவரை ஒரு நாற்காலியில் அருகில் அமரச் செய்து, ஆத்திரம் அடங்கச் செய்தார்; அதன்பின் என்ன செய்தார், அவரை காவல்துறை யில் ஒப்படைத்துவிட்டாரா? அதுதான் இல்லை. அவரை வெளியே விட்டால், கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதை பெரியார் அறிவார் - ஆகவே அவரைத் தக்க பாதுகாப்போடு வீட் டிற்கு அனுப்பி வைத்தார்; அவ்வளவு பெருந் தன்மை படைத்திருப்பதால்தான், அவரைப் பெரியார் என்று அழைக்கிறோம்.

அன்றைக்கு விருத்தாசலத்தில் தாக்கியவர் கூலிப்பட்டாளம்; ஏவியவன் எங்கோ இருக் கிறான். எங்களுக்கெல்லாம் ஏவியவர்கள்தான் முக்கியமே தவிர, அவர்கள்தான் இனத் தத்துவப் படி கொள்கை எதிரிகளே தவிர, ஏவப்பட்ட வர்கள் - அம்புகள் எங்களுக்கு எதிரிகள் அல்ல; பெரியாரிடத்தில் நாங்கள் பயிற்சி பெற்ற கார ணத்தினால், நாங்கள் நிதானத்தினைக் கடைப் பிடிக்க முடிந்தது.  வன்முறைக்கு வன்முறை; அடிக்கு அடி; உதைக்கு உதை எவ்வளவு பேர் செய்தார்கள்; அவர்கள் எல்லாம் எப்படி இருக் கிறார்கள் இப்பொழுது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதேநேரத்தில், இந்த முறை எப் படிப்பட்டது, நாம் யாருடைய பயிற்சிக் களத்தில் வந்தோம். எனக்கு முன்பாக இங்கே உரையாற்றி யவர்கள் சொன்னார்கள், நாங்கள் எல்லாம் தற்கொலைப் பட்டாளம் என்று. கொலைப்பட் டாளமாகவும் ஆகவேண்டாம்; தற்கொலைப் பட்டாளமாகவும் இப்பொழுது ஆகவேண்டிய அவசியம் இல்லை. நம்மை நாமே இழந்து கொள்கிறோம் என்று சொன்னால், அதுதான் கடைசிக் கட்டம். அந்தக் கட்டத்திற்குள்ளாகவே பலர் மாறிவிடுவார்கள்; மாற்றப்படுவார்கள்.

செலவு கணக்கில்தான் எங்கள் வீட்டில் எழுதி வைத்துவிட்டு வருகிறோம்!

கடலூரிலே நாங்கள் பார்க்காத எதிர்ப்பா? ஒவ்வொரு கூட்டத்திலும் கல் வந்து விழும். இதே திண்டிவனத்தில் அப்படிப்பட்ட எதிர்ப்புகளை யெல்லாம் பழைய காலத்தில் சந்தித்திருக்கிறோம். அந்தக் கூட்டம் எனக்கு நன்றாக நினைவிருக் கிறது, குளத்துமேட்டிலே நடைபெற்ற கூட்டம்; அப்பொழுது மின்சாரம் கிடையாது; கேஸ் விளக்குதான்; மேடைமீது ஏறி நின்று உரை யாற்றியபொழுது, கல்வந்து விழும்; அதற்கெல் லாம் பதில் சொல்லியிருக்கிறோம்; கூட்டம் கலைந்துவிடவில்லை. பொதுமக்கள் மீது கல் விழுந்து காயம் பட்டுவிடுமோ என்பதுதான் எங்களது கவலையாக இருக்குமே தவிர, நாங்கள் அடிபட்டால், அதுபற்றி கவலைபடமாட்டோம்; எப்பொழுது வெளியே வருகிறோமோ, அப் பொழுது செலவு கணக்கில்தான் எங்கள் வீட்டில் எழுதி வைத்துவிட்டு நாங்கள் வெளியே வருவது வழக்கம். திரும்பி போனால், வரவு; இல்லை யானால், இயக்கம் வளருகிறது என்று பொருள் அவ்வளவுதானே தவிர, கொள்கைக்குப் போட்ட உரம் என்று  எங்களுக்குப் பொருள்.

ஆகவே, இந்த இயக்கம் என்பது அவ்வளவு கட்டுப்பாடானது; இதெல்லாம் எதற்காக, நாங் கள் பதவி பெறுவதற்கா? எம்.எல்.ஏ.,க்கள்., எம்.பி.,க்கள் ஆவதற்காகவா? இந்தாண்டு ஆட்சி யைப் பிடிப்போம்; அடுத்த அய்ந்தாண்டுக்குப் பிறகு நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிடையாது. பத விக்காக யாருடைய காலையும் பிடிப்போம்; அல் லது கூட்டுச் சேருவோம் என்று சொல்பவர்கள் நாங்கள் கிடையாது. அந்த அவசியமும் எங்களுக் குக் கிடையாது. எங்களைப் போன்ற மானஸ் தர்கள், சுதந்திர வீரர்கள் தந்தை பெரியா ருடைய தலைமையை ஏற்றுக்கொண்டதாலே, அதனைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டவர்கள் அல்ல. துறவிகளைவிட எங்கள் தோழர்கள் மேலானவர்கள்!

எங்களுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்; இந்தத் துறவி, துறவி என்றால் பெயிலுக்கும், ஜெயிலுக்குமாக அலைகின்ற சங் கராச்சாரியார்கள் அல்ல; அல்லது பிரேமானந் தாக்களும் அல்ல; இன்னொரு ஆனந்தா என்று கோபியாஸ்திரிகளோடு உட்கார்ந்திருக்கக்கூடிய நவீன கண்ணன் அவதாரங்களாக இருக்கக்கூடிய வர்கள் அல்ல; துறவிகள் என்றால், உள்ளபடியே துறந்தவர்கள் என்ற பொருளிலே இருக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்ட துறவிகளைவிட எங்கள் தோழர்கள் மேலானவர்கள் என்று பெரியார் அவர்கள் சொன்னார்.

ஏனென்றால், துறவிகளைப் பார்த்து கேட் டால், நீ எதற்காக துறவு ஏற்றாய் என்றால், நான் இந்த உலகம் அநித்தியம்; நிரந்தரமான உலகம் மேலே இருக்கிறது; மோட்சம் - அங்கே போனால், ரம்பை, மேனகா, திலோத்தமை, ஊர்வசி ஆகியவர்கள் இருப்பார்கள்; அங்கே போனால் பஞ்சம் இருக்காது; பட்டினி இருக் காது; பசி இருக்காது; நான் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருப்பேன்; உழைக்க வேண்டிய அவசியமிருக்காது. அதற்காகத்தான் நிரந்தரமான அந்த மோட்ச உலகத்திற்குப் போக வேண்டும்; சாளுப, சாமுப, சாருப விருந்தாக அது இருக்கும் என்றெல்லாம் சொல்வார்.
அப்படிப்பட்டவர்கள் அல்ல என்னுடைய தோழர்கள் என்று தந்தை பெரியார் சொன்னார். அந்த மோட்சமும், முடிச்சுமாறிகளின் பேச்சு என்று கருதுபவன் திராவிடர் கழகத்துக்காரன். ஆகவே, எல்லாவற்றிற்கும்மேலே தன்னை தியாகம் செய்துகொள்பவன்.

செத்த பிணத்தைச் சிங்காரித்துக்கொண்டு சிலர் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்

நாங்கள் எத்தனை முறை சிறைச்சாலைக்குச் சென்றிருப்போம்; சிறைச்சாலைக்குள் எத்தனை முறை அடிவாங்கி இருப்போம்; சிறைச்சாலை யைக் கண்டு அஞ்சியவர்களா? ஒருமுறையாவது நாங்கள் ஜாமீனில் வந்திருக்கிறோமா? இல்லை யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்திருக் கிறோமா? இல்லை, ஏன்? எதற்காக? எங்களுக் காகவா? இல்லை, நண்பர்களே, உங்களுக்காக, நமக்காக, நம்முடைய இழிவு ஒழிவதற்காக, நம் முடைய சூத்திரப் பட்டத்தினை அழிப்பதற்காக, நம்முடைய பஞ்சமப் பட்டத்தை விரட்டுவதற் காக - அய்ந்தாம் ஜாதி, நாலாஞ் ஜாதி என்று எழுதி வைத்து அதை மதம் என்று ஆக்கி வைத் திருக்கிறானே - அந்த மதத்தைத்தானே தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். அந்த மதம், பச்சையாக இந்த நாட்டை ஆளவேண்டும் என்று சொல்வதற்காகத்தானே மோடிகள் இங்கே இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அதற்குத் தானே ஜாதியத் தத்துவங்களுக்கு மீண்டும் உயிரூட்டுகிறார்கள்; அதற்காகத்தானே செத்துப் போய் புதைகுழியிலே இருக்கின்ற ஜாதியைத் தூக்கி வைத்துக்கொண்டு - செத்த பிணத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, செத்த பிணத்தைச் சிங்காரித்துக்கொண்டு சிலர் கொஞ்சிக் கொண் டிருக்கிறார்கள்; இதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
எந்த நாட்டிலே ஜாதி இருக்கிறது; நான் சொன்ன பதில் அறிவியல் ரீதியானது; ரத்த வகையில் எத்தனை குரூப் இருக்கிறது; நாடார் ரத்தம் நாடாருக்கு; முதலியார் ரத்தம் முதலி யாருக்கு; படையாச்சி ரத்தம் படையாச்சிக்கு; பிள்ளைமார் ரத்தம் பிள்ளைமாருக்கு; யாதவ் ரத்தம் யாதவருக்கு என்று எந்த ஜாதிக்காவது உண்டா? ஏ1 பாசிட்டிவ், ஓ பாசிட்டிவ், பி பாசிட் டிவ், பி நெகடிவ் என்றுதானே உலகம் முழுவதும் உள்ளது. இது நமக்கே தெரியும்பொழுது, டாக் டர்களுக்குத் தெரியவேண்டாமா? அவர்களுக் கும் தெரிந்த செய்திதானே இது.

கருப்புச் சட்டைக்காரரைத் தவிர
வேறு எவருக்கு உண்டு
செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் அனுப்பு கின்ற காலத்தில், செவ்வாய்த் தோஷத்தைப்பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்களே, இதனால், எத்தனை பெண்களுடைய வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது.  இதனைக் கண் டிப்பதற்கு எங்களைத் தவிர, வேறு யாராவது உள்ளார்களா? உனக்குப் புத்தி வேண்டாமா? முட்டாளே, உனக்கு அறிவு வேண்டாமா? என்று பெரியாருடைய கைத்தடியாக, அடித்துத் தட்டிக் கேட்கக்கூடிய துணிச்சல், தெளிவு இந்தக் கருப்புச் சட்டைக்காரனைத் தவிர வேறு எவருக்கு உண்டு. நாங்கள் இல்லாவிட்டால், இப்பொழுது நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், என்ன நிலைமை என்று?

அறியாமையைவிட கடுமையான நோய் வேறு உண்டா? வறுமையைக்கூட போக்கிவிடலாம்; அறியாமையைப் போக்கிவிட முடியுமா? அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்; இன்றைக்கு, நேற்றல்ல நண்பர்களே, இந்தக் கருத்தை, இந்த இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கம் தோன் றிய காலத்திலிருந்து சொல்லிக் கொண்டு வந் தார்கள். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியா தைக் கருத்துகளை ஒருபக்கம் பேசிக் கொண்டி ருந்தார்கள்.

இதோ என்னுடைய கையில் திராவிட இயக் கத்தினுடைய தனிப்பெரும் தோற்றுநர்களில் ஒருவராக இருந்த டாக்டர் டி.எம்.நாயர் அவர் கள், இவர் காது, மூக்குத் தொண்டை நிபுணர். லண்டனில் படித்த டாக்டர். இவர் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தினை உருவாக்கினார். பார்ப்பனர் தவிர மற்ற எல்லோரையும் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தினர் உள்பட - அதற்குப் பெயர்தான் சமூகநீதி; தாழ்த்தப்பட்ட சமூகத் திற்கு விரோதமாக ஆள் சேர்ப்பது சமூகநீதி அல்ல; சமூகஅநீதி; அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

டி.எம்.நாயரின் இரண்டு பெரும் முழக்கங்கள்!

அந்த வகையில், இதோ நாங்கள் வெளி யிட்டிருக்கிறோம், டி.எம்.நாயரின் இரண்டு பெரும் முழக்கங்கள் என்ற நூல். இதில், பழைய வரலாறு, ஏனென்றால், மீண்டும் பழைமை திரும்புமோ - கொஞ்சம் அயர்ந்தால் - கொஞ்சம் ஏமாந்தால் - நாம் எச்சரிக்கை செய்வதை மக்கள் உணராமல் தலையிலே கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வதைப்போல, ஜாதியத்தை ஆத ரித்தால், மதவாதத்திற்கு மகுடம் சூட்டினால் என் னாகும்? அதனை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அன்றைக்கே பாபா சாகேப் அண்ணல் அம் பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ஜாதிக் கொடுமை மட்டுமல்ல, இந்த நாட்டில், அந்த ஜாதியை, வர்ணாசிரம தருமத்தை எப்படி வைத்திருக்கிறது இந்த ஆரியம், பார்ப்பனியம் எப்படி அதனை வைத்தது என்று சொன்னால், இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அதற்கு இப்பொழுது ஒரு புது மெருகு ஏற்பட்டிருக்கிறது; அரசியல் மெருகு ஏற்றப்படக்கூடிய அளவிற்கு, சில பித்தளை நகைகளுக்கெல்லாம் தங்க முலாம் பூசப்படுவதைப்போல இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். மிகக் கடுமையாக நீங்கள் சிந்திக்கவேண்டும்.
ழுசயனநன ஐநேளூரயடவைல என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
மற்ற நாடுகளில் இருப்பது சமத்துவமின்மை; சமத்துவம் இல்லாத தன்மை. இங்கே அப்படி யில்லை. இந்த சமத்துவமின்மைகூட, ஏணிப்படிக் கட்டு போல, மேலே ஒருவன், அதற்குக்கீழே ஒருவன், அதற்கும்கீழே ஒருவன், அவனுக்கும்கீழே ஒருவன்.

மேலே இருப்பவன் லேசாக உலுக்கினால், கீழே இருக்கிறவன் விழுவான். இதனால், கலவரம் நடக்கும்; அதுதான் இப்பொழுது ஜாதிக்கலவர மாக நடந்து கொண்டிருக்கின்றது.

பெரியார் கோபத்தோடு சொன்னார்

வருணாசிரம தரும முறையில், பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன்; தோளில் பிறந்தவன் சத்திரியன்; தொடையில் பிறந்தவன் வைசியன்; காலில் பிறந்தவன் சூத்திரன்.

பஞ்சமன் எங்கே பிறந்தான் என்று 50 ஆண்டு களுக்கு முன்பு கூட்டங்களில் துண்டுப் பேப்பரில் எழுதி கேட்டார்கள்;
தந்தை பெரியாரிடம் கேட்டார்கள், அவன் தானடா, அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்திருப்பான் என்று கோபத்தோடு சொன்னார்.

அய்ந்தாவது ஜாதிக்கும் கீழே ஒரு அணி உண்டு. இதைத்தான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் மிக அழகாக சொன்னார், ழுசயனநன ஐநேளூரயடவைல என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அதற்கும்கீழே, அய்ந்தாவதாக இருப்பது யார் என்றால், பெண்கள்; எல்லா ஜாதிப் பெண்களும் என்று சொன்னார்கள்; இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனப் பெண்கள் உள்பட. பிராமணப் பெண்கள் என்று உயர்ந்திருந்தாலும் கூட, வருணதருமப்படி, பெண்கள் எல்லோரும் ஒரே கேட்டகிரிதான் என்று வைத்திருந்தார்கள்.

ஏனென்றால், அதற்கு ஒரு காரணம் உண்டு. அவர்கள் ஆடு, மாடு ஓட்டிக்கொண்டு, இந்த நாட்டில் நுழைந்து, குலதர்மம் இல்லாத ஒரு நாட்டில், சமதர்மம் இருந்த நாட்டில், குல தர்மத்தினை உண்டாக்கினார்கள் பாருங்கள், அப்பொழுது அவர்கள் வந்தபொழுது, அவர்கள் நாட்டுப் பெண்களோடு வரவில்லை; இங்கே இருக்கின்ற பெண்களோடு இணைந்து தன்னினத் தைப் பெருக்கிக் கொண்டான். அதனால்தான், பெண்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கை வரவில்லை.

குறிப்பிட்ட காரியத்திற்கு மட்டும் பெண் களைப் பயன்படுத்திக் கொண்டான்; மற்ற இடங்களில் இல்லை. அந்த இடத்தில் ஜாதி இன்றைக்குவரை கிடையாதல்லவா?  எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால், ஜாதியினு டைய தத்துவம்; ஆக, இந்தப் படிக்கட்டு ஜாதி முறை கீழே என்ற அளவுக்கு வந்தது - இதனை சொல்லும்பொழுது, நாயர் எப்படி அவர்கள் பிரித்தாண்டார்கள் என்று சொல்கிறபொழுது,
திராவிடரில் பலருக்குப் பெயரளவில் ஆரிய வருணாசிரம உயர்பட்டங்கள் கிடைத்தன வேயன்றி காரியக் கிரமப்படி, சொக்கமான ஆரிய பிராமணர்களே அமரும்படியான, சங்கராச்சாரி முதலிய பீடங்களில், அவர்களே இருந்தார்கள். நம்மவர்களுடைய, அவர்களுக்கு இந்தப் பட்டம் பெரியதாக எடுத்துச் சொன்னார்களே தவிர, அந்தப் பட்டத்திற்கு உரியவர்களாக அவர்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை எடுத்துச்சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு கேவலமாக மற்றவர்களையெல்லாம் துரத்தி, அவர்கள் கீழே ஆக்கினார்கள் என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார்.

அதுபோல், ஒவ்வொரு ஜாதிக்காரர்களையும் தனித்தனியே பிரித்து, அவனவன் தலைவிதி என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டே போகிறார்.

காரல் மார்க்ஸ் என்ற அறிஞர் சொன்னது மட்டுமல்ல, இன்னும் சிறப்பாக சொல்லுகின்ற நேரத்தில், எப்படி பிரித்தார்கள் என்று சொன்னால்,
98 ஆண்டுகளுக்கு முன்பாக - நம்மில் பலர் பிறக்காத காலத்தில் டாக்டர் நாயர் திராவிட இயக்கத்தை உருவாக்கி சொல்கிறார்.

திராவிடர்களின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் பார்ப்பனர்கள்
இவ்வாறாகவும் சாம, பேத, தான, தண்ட மென்னும் ஆரிய சதுர்வித உபாயங்கள் மூலமும் திராவிடர்களின் ஒற்றுமையையும் குலைக்கலா யினர் பார்ப்பனர்கள்.

எப்படியென்றால், திராவிடர்களிலேயே சில ருக்குச் சில இடங்களில் வர்ணாசிரம முறையின் கீழ் உயர்வுகள் கொடுத்தனர். உதாரணமாக, நம் தலைவர் பி.தியாகராய செட்டியாரின் இனமான நெசவாள திராவிடர்களை, தேவாங்க பிரா மணர்களென்றனர். பட்டு நூல் வியாபாரிகளை, சவுராஷ்டிர பிராமணர்களென பிரமோஷன் கொடுத்தனர். திராவிடப் பொற்கொல்லர்களை, விஸ்வகர்ம பிராமணர்களென்று மாற்றினர்.

திராவிட விவசாயிகளை வன்னியகுல சத் திரியர்களென்றும், பற்பல தொழிலில் ஈடுபட் டிருந்த திராவிடர்களை கவுரவ சத்திரியர் (நாயுடு, ரெட்டி)களென்றும், வியாபாரங்களில் ஈடுபட்டி ருந்த திராவிடர்களை, (கோமுட்டிகளை) ஆரிய வைசியர்களன்றும் பிரித்தனர்.

திராவிட நாட்டுக்கோட்டை செட்டிமார் களை, தன வைசியர்களென்றும், இதேபோல் வடநாட்டிலும் தங்களுக்குக் கங்காணி வேலை செய்யத் தயாரென்று சொன்ன திராவிடர்கள் பலரை பூமிஹார் பிராமணர்களென்றும், நாய் பிராமணர்களென்றும், விவசாயத்தில் ஈடுபட்டவர்களை குர்மி சத்திரியர்களென் றும், ராஜபுத்திர சத்திரியர்களென்றும், மகாஜன வைசியர்களென்றும் பலவாறாகப் பெயர் சூட்டி திராவிடர்களுக்குள்ளேயே - கோட்டைக்குள்ளேயே குத்து, வெட்டு, போட்டா போட்டியும், பொறாமையும் ஏற்படுத்தினர்.

இவ்வாறாக திராவிட இன ஒற்றுமையை நாளாவட்டத்தில் சின்னாபின்னப்படுத்தி, பிரித்து ஆளல் முறையைக் கையாண்டு இத்திராவிட நாட்டையும், திராவிட மக்களையும் அடிமை கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை ஆரியர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு இந்தியா வின் புரப்பரைட்டர்களாகி விட்டிருக்கின்றனர்.

98 ஆண்டுகளுக்கு முன்னால் டாக்டர் நாயர் சொல்லியிருக்கிறார். 66 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர், இந்த முறை திரும்பவும் வரலாமா?
எவ்வளவு தூரம் இந்த ஜாதியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதனை நீங்கள் எண் ணிப் பார்க்கவேண்டாமா?

எனவே, இந்த ஜாதி என்பது விஷம்; பெரியார் சொன்னார், விஷத்தைக்கூட ஒரே ஒருவகையில் மருந்துக்குப் பயன்படுத்துகிறோம்; எதற்காகப் பயன்படுத்துகிறோம், இட ஒதுக்கீட்டிற்காக - ஆண்டிபயாடிக் மருந்து இருக்கிறது பாருங்கள், அந்த நோய்க் கிருமிகளில், விஷக் கிருமிகளைக் கொல்வதற்கு விஷம் தேவை; அம்மைக் கிருமி களைக் கொல்வதற்கு, அம்மை குத்துவதைப் போல, காலராவைத் தடுப்பதற்காக ஊசி போடு வதைப்போல - இட ஒதுக்கீட்டிற்கு ஜாதி தேவை; ஏனென்றால், அந்த ஜாதியைச் சொல்லித்தான் நாம் படிக்கக் கூடாது என்று சொன்னான்; சூத்திரன் படிக்கக்கூடாது; பஞ்சமன் படிக்கக் கூடாது; பெண்கள் படிக்கக்கூடாது; கீழ்ஜாதிக் காரன் படிக்கக்கூடாது என்று சொன்னான். ஆகவே, எந்த வழியிலே நம்மை சிறைச்சாலைக் குள் அழைத்துச் சென்றானோ, அதே வழியா கவே நாம் வெளியே வரவேண்டும். அந்த வாய்ப் பைப் பயன்படுத்தவேண்டும் - அதற்காகத்தான் இட ஒதுக்கீட்டிற்கு ஜாதி பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னார்.இது காலம் முழுவதும் அல்ல; பள்ளம் மேடாகிற வரையில்தான் என்று சொன்னார்.

சமூகநீதி என்றால் என்ன?

அந்த இட ஒதுக்கீட்டிற்கு வகுப்புவாரி உரிமை யைச் சொன்னார்; அதுவும் யாருக்காகச் சொன் னார் - சமூகநீதி என்றால் என்ன? யார் மிகவும் அடித்தளத்தில் இருக்கிறார்களோ அவர்களைத் தூக்கிவிடவேண்டும் முதலில். அவன்தான் தாழ்த் தப்பட்ட சகோதரன் - பஞ்சமன்; அதை மட்டும் பிரித்துவிட்டான்; தாழ்த்தப்பட்ட சகோதரர் களிலேயே ஒருத்தனை பறையன் என்றான்; இன் னொருவரை பள்ளன் என்றான்; இன்னொருத் தனை சக்கிலியன் என்று சொன்னான்.

இப்படிச் சொல்லிச் சொல்லி  நம்மவர்களைப் பிரித்துவிட்டானே!
கூந ழுசயனநன ஐநேளூரயடவைல அம்பேத்கர் முதல்  டாக்டர் நாயரிலிருந்து தந்தை பெரியார் வரை சொன்னதாகும்.

இன்றுவரை யாராலும் பதில் சொல்ல முடியவில்லை!

எனவே, இப்பொழுது நாம் மனிதநேயத்தை உண்டாக்கி, சமத்துவத்தை உருவாக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும்; எல்லாருக்கும் எல்லாமும் என்பதை உருவாக்கவேண்டுமானால், என்ன செய்யவேண்டும் நண்பர்களே, தாழ்த்தப் பட்ட சகோதரனுக்கு நாம் துணைபோக வேண்டும்; அவனை முதலில் மேலே தூக்க வேண்டும். ஏனென்றால், அவன்தான் அடியில் இருக்கின்றவன்; அவனிடம் உள்ள பேதத்தை முத லில் நீக்கவேண்டும். அவனைத் தொடாதே என்று சொன்னான் பாருங்கள், அவன் நமக்கு விரோதி என்று தந்தை பெரியார் சொன்னார்.

தந்தை பெரியாருக்கு, சுதந்திரம், தேசாபி மானம், பூச்சாண்டி இவையெல்லாம் முக்கிய மல்ல; ஒரே ஒரு கேள்வி கேட்டார், அந்தக் கேள் விக்கு இன்றுவரை யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

அந்தக் கேள்வி என்னவென்றால்,

எனக்குப் பக்கத்து வீட்டில் ஒருவன் இருக் கிறான்; என்னைக் கண்டால் காததூரம் ஓடுகி றான்; அவன் தோள் என் தோளின்மீது பட்டு விடக் கூடாது என்று நினைக்கிறான்; என் கை, அவன் கைமீது படக்கூடாது என்று நினைக்கி றான். இன்னொருவன் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்திருக்கிறான். அவன் வந்தவுடன் என்னை பார்த்து என்ன சொல்கி றான், ஹலோ, கமான் என்று என்னைப் பிடித்து கைகொடுக்கிறான். இவன் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கின்றவன்; பக்கத்து வீட்டில் இருக்கிறவன் என்னை பார்த்து ஓடுகிறான் பாருங்கள், தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, ருளேநயடைவைல டிவ ருவேடிரஉயடைவைல யடடிநே; ருளேநயடைவைல என்று சொல்லக்கூடிய பார்க்காமை, நெருங்காமை, தொடாமை, தீண்டாமை என்று இருக்கிறது பாருங்கள், அதனைப் பார்த்து பெரியார் சொன்னார், ஏன்டா, அந்நியனைப் பார்த்து அந்நியனை விரட்டு, அந்நியனை விரட்டு என்கிறாயே, எவன்டா எனக்கு அந்நியன்; எனக்குப் பக்கத்தில் வீட்டில் இருக்கிறவன், என்னை தொட்டால் தீட்டு என்கிறான்; பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவன் எனக்குக் கைகொடுக்கிறானே அவன் எனக்கு அந்நியனா? என் பக்கத்து வீட்டுக்காரன் அந்நியனா? என்று பெரியார் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு யாராவது இதுவரையில் பதில் சொல்லியிருக்கிறார்களா? இதுதான் மனிதநேயம். பள்ளன் கட்சி, பறையன் கட்சி
எனவே, இந்த அடிப்படையில், தாழ்த்தப் பட்ட சகோதரர்களுக்கு இன்றைக்கும் சொல்கி றேன், அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றவர் கள் எல்லாம் கூட்டு சேர்ந்து கொண்டு நாங்கள் அக்ரிபாட்சா கொழுக்கட்டை வேலை செய் வோம் என்றால், நடக்காது; தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மிகப்பெரிய அரணாக இருக் கக்கூடிய ஒரு இயக்கம் என்றால், அது இந்த இயக் கம்தான்; பெரியார் இயக்கத்திற்கு ஆதிகாலத்தில் என்ன பெயர் தெரியுமா? பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று - அதனை நாங்கள் பெருமையாக நினைத்தோம். தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப் பட்டவன் அத்தனை பேரும், பார்ப்பனர்களால் பிரித்து வைக்கப்பட்டனர். அதனால்தான், பார்ப் பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனால் தான் வகுப்புரிமை; அதனால்தான் கம்யூனல் ஜி.ஓ. அதனால்தான் படித்தோம், அதனால்தான் டாக்டரானோம்; அதனால்தான் அய்.ஏ.எஸ். ஆனோம்; அதனால்தான் என்ஜினியராக ஆனோம். இன்னமும் இந்த இயக்கம் பாடுபட்டு - வி.பி.சிங் பிரதமராக வந்தபொழுது கதவைத் திறந்து வைத்தவர்களால்தான் மண்டல் கமிஷன் வந்தது; கதவை மூடச் சொன்னவர்களால் மண்டல் கமிஷன் வரவில்லை தோழர்களே!

                                              --------------------------------03-11-2013
தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தக்கூடிய அமைப்புகளுக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை!
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
திண்டிவனம், நவ.4- தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தும் அமைப்புகளுக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

20.10.2013 அன்று  திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்ட உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

காய்கறி விற்கக்கூடிய முத்தம்மாள் மகன் கந்தசாமி அய்.ஏ.எஸ். அதிகாரி இப்பொழுது; கீரை விற்கின்ற முனியம்மாள் மகன் அய்.பி.எஸ். அதிகாரியாக இருக்கிறார். அந்த மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்திய வி.பி.சிங் அவர்களே, சமூகநீதிக்காவலரே, வாருங்கள், வாருங்கள் என்று அழைத்த இயக்கம்தான் இந்த இயக்கம்.
திராவிடர் கழக மேடையில் வந்து உரை யாற்றினாரே, திராவிடர் கழகத்திலிருந்துதான் நான் சமூகநீதியைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னார் வி.பி.சிங்.

எனவே, இந்த இயக்கம் யாருக்காக? எங் களுக்குத் தனிப்பட்ட முறையில் யார்மீதும் வெறுப்பில்லை, இன்றைக்கும்கூட!

ஜாதிக் கலவரங்கள் வரக்கூடாது இந்த பூமி யில்! தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் எல்லா ஊர்களிலும் சகோதரர்களாக இருக்க வேண்டும். அதேபோல், மதக்கலவரங்களுக்கு இங்கே இடமில்லை.
காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட நேரத்தில், கோட்சே, முஸ்லிம்களுடைய சின்னத்தை தன்னு டைய கையில் பச்சை குத்திக் கொண்டிருந்தவன் - மராட்டிய பார்ப்பான் அவன்.

பெரியார் நினைத்திருந்தால்...

திருவண்ணாமலை, வாணியம்பாடி, ஈரோடு இன்னும் பல ஊர்களில் மதவெறியைப் பரப்பு கின்ற நேரத்தில், அன்றைக்கே ஆர்.எஸ்.எஸ். ஆட்டம் போட்டது; செய்வதையும் செய்து விட்டு, முஸ்லிம்தான் கொன்றான் என்று சொல்லி ஒரு மதவெறியை உண்டாக்கினார்கள்.

திண்டிவனத்தில் பக்கத்திலுள்ள ஓமந்தூரைச் சேர்ந்த ஒழுக்க சீலர் ஓமந்தூர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்த காலகட்டத்தில், சமூக நல்லிணக்கத்திற்காக திருச்சி வானொலிக்கு தந்தை பெரியாரை அழைத்து பேசச் சொன்னார்கள். பிறகுதான் அமைதி திரும்பியது. அப்பொழுதுகூட தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்களுக்கு எதிராகப் பேசவில்லை. பெரியார் நினைத்திருந்தால், மகாராஷ்டிரத்தில் காலியான அக்கிரகாரங் களைப்போல இங்கும் சுலபத்தில் தூண்டிவிட்டி ருக்கலாம். ஆனால், தந்தை பெரியார் சொன் னார், துப்பாக்கியின்மீது கோபப்படாதே, துப்பாக்கிப் பிடித்த கைகள் எவை என்பதை சிந்தித்துப் பார்! என்று சொன்னார்.
எனவே, அந்த மதவாதம், அந்த ஜாதி வெறி இன்றைக்குப் புதிய ரூபத்தில் வந்தால், தமிழர் களே, ஏமாந்துவிடாதீர்கள். யாரோ சிலர் பத விக்குப் போவதற்காக, மீண்டும் பார்ப்பனர்க ளோடு கூட்டு; மீண்டும் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார்கள் என்ற பெருமை இருக்கிறதே, அது பெருமையல்ல; காலங்காலமாக இந்த இனத்திற்கு நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

வகுப்புவாரி உரிமை இல்லாவிட்டால், நாமெல்லாம் படித்திருக்க முடியுமா?
யாருக்கும் நாங்கள் விரோதிகள் அல்ல; யாரையும் நாங்கள் விரோதிகளாகக் கருதாத வர்கள்; எங்கள் சகோதரர்கள்; தவறான பாதை யில் நாம் வழி தெரியாமல் போவதுண்டு. ஆனால், சரியான பாதை தெரிந்த பின்பும், பிடிவாதமாக தவறான பாதையில் செல்வோமா?

பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது எதற்காக? பார்ப்பனர்கள் படித்தார்கள்; நம்மைப் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். நமக்குத் திறமை இருந்தாலும், படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். வகுப்புவாரி உரிமை இல்லாவிட் டால், நாமெல்லாம் படித்திருக்க முடியுமா?

டாக்டர்களாகப் படிக்கவேண்டுமென்றால், சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்ற நிலை இருந்ததே, அதனை மாற்றியது யார்?
இவையெல்லாம் சரசுவதி பூஜை செய்வத னாலே வந்ததா? சத்ய சாய்பாபா கையைத் தூக்கியதால் வந்ததா? ஆதிபராசக்தி ஓம், ரீம் சக்தி என்பதால் வந்ததா? இல்லையே, நண்பர் களே!

திராவிட இயக்கத்தினுடைய எழுச்சி; திரா விட இயக்கத்தால் எவரும் வீழ்ந்துவிட மாட் டார்கள்; திராவிட இயக்கம்தான், பள்ளத்தில் விழுந்திருந்த மனிதனை எழுந்து நில் என்று சொல்லக்கூடிய இயக்கம் இந்த இயக்கம். எனவே, ஜாதிய வாதத்தைப் புதுப்பித்து, புது அவதாரத் தோடு வந்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்; தவறான நிலை. அது நல்ல சோப்பு அல்ல; நல்ல சீப்பு அல்ல; அதனை எடுத்து தலையை நீங்கள் சொறிந்துகொள்ளவேண்டும் என்று நினைத் தால், உங்கள் தலைக்கும் ஆபத்து; மற்றவர் களுடைய வீட்டிற்கும் ஆபத்து.

சில நேரங்களில் சிறுபிள்ளைத்தனமாக சிலர் நினைப்பார்கள்; கொள்ளிக்கட்டையை எடுத்து, கூரைமீது சுழற்றுபவன்தான் நல்ல பிள்ளைகள் என்று சொன்னால், மற்ற பிள்ளைகளின் நிலை என்ன? என்று ஒருமுறை பெரியார் கேட்டார். அதுபோல இருக்கக்கூடாது; தாழ்த்தப்பட்ட சகோதரனுக்குக் கைகொடுக்கின்ற இயக்கங் கள்தான் இந்த நேரத்தில் தேவை. தாழ்த்தப்பட் டவனை தனிமைப்படுத்தக் கூடிய இயக்கங் களுக்கு இந்த நாட்டில் வேலையில்லை, இருக்கக் கூடாது; இருக்க விடமாட்டோம், அதுதான் மிக முக்கியம்.

தவறுகள் நடைபெறுகின்றன என்று சொன் னால், அதனைக் கண்டிக்கின்ற உரிமை உங் களுக்கும் உண்டு; எங்களுக்கும் உண்டு. கொலை வழக்குகளில்கூட சில நேரங்களில் காவல்துறை யில்கூட சில நேரங்களில் தவறு நடைபெறு கின்றன. அதற்காக காவல்துறையே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? நம் எல்லோ ருக்கும் பாதுகாப்பு காவல்துறைதானே! காவல் துறை இல்லாவிட்டால் நாடு என்னவாகும்?

சில ராணுவ வீரர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள்; நேற்றுகூட வெளிவந்த ஒரு செய்தி; மதுபோதையில்  ஒரு பெண்ணிடத்தில் தவறாக நடந்துகொண்டிருக்கிறார் ஒரு ராணுவ வீரர். அதற்காக ராணுவச் சட்டங்கள் மாற்றப் படவேண்டும் என்று சொல்லலமா? ராணுவத் தில் இருப்பவர்கள் எல்லோருமே மோசம் என்று சொல்லலாமா? ராணுவமே நமக்கு எதிரி என்று சொல்லலாமா? ராணுவம் இல்லாவிட்டால், இந்த நாட்டிற்குப் பாதுகாப்பு இருக்குமா? சிந்திக்கவேண்டியவர்கள், சிந்திக்கவேண்டும். இந்த மண், இந்த இடம் சிந்திக்கவேண்டிய இடம். அவர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்கள்; எங்களின் மரியாதைக்குரியவர்கள். எங்களுக்கு நீங்கள் எதிரிகள் அல்ல; நாளைக்கு நாங்கள் இருவரும் ஒன்று சேரவேண்டியவர்களே தவிர, பிரிந்து நிற்கவேண்டியவர்கள் அல்ல. அந்தப் பொறுப்புணர்ச்சியின் பேரால், பெரியாரின் தொண்டர்கள் நாங்கள் சொல்கிறோம், வெறுப் புணர்ச்சியின் பேரால் அல்ல, பொறுப்புணர்ச் சியின் பேரால் சொல்கிறோம், சிந்திக்கவேண்டும்.

அதைவிட மிக ஆபத்து மதவாதம்; அந்த மத வாதம் புதிய ரூபத்தில் வருகிறது. 10 ஆண்டுகள் ஆண்ட போது வரலாற்றினை மாற்றவில்லையா? மோடி என்ன அவ்வளவு பெரிய வித்தைக்காரரா? மோடி வித்தை என்றாலே எல்லோருக்குமே தெரியுமே! பாம்பும், கீரியும் சண்டை போடப் போகுது; போடப் போகுது என்று சொல்லிக் கொண்டு இருப்பான் தாயத்தை விற்பான். இப்பொழுது ரொம்பப் பேர் தாயத்து விற்க வடக்கேயிருந்து வந்திருக்கிறான்.
அந்தத் தாயத்து விற்கிறவர்கள் எல்லாம் இன்றைக்கு ஊடகங்கள், கம்பெனிகள், முதலா ளிகள், பன்முதலாளிகள், பகாசுர முதலாளிகள் இருக்கிறார்களே, டாட்டா வரவேற்கிறார்; அம் பானி, கிருபானிகள் மோடிதான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

மோடி ஏன் வரக்கூடாது என்பதற்கு வேறு காரணமே வேண்டாம்; இந்த ஒரு காரணமே போதும்.

ஏழை விவசாயிகளின் நிலம் முக்கியம்!

ஏழைகளுடைய நலத்திற்காகவா டாட்டா இருக்கிறார்; மேற்கு வங்காளத்தில் கார் தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டும் என்று நிலத்தை ஏழைகளிடமிருந்து பிடுங்கினார்கள்; அதற்காக அங்குள்ள அம்மா போராட்டம் நடத் தினார்கள்; கார் தொழிற்சாலை வேண்டாம்; ஏழை விவசாயிகளின் நிலம் முக்கியம் என்று போராட்டம் நடத்தினார்கள். போராட்டமும் வெற்றி பெற்றது.
உடனே, குஜராத் டாட்டாவை வரவேற்றது; இங்கே வாருங்கள் நாங்கள் நிலம் தருகிறோம் என்று; அங்கேயுள்ள விவசாய நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு விவசாயிகள் வெளியேற்றப்பட் டார்கள். குஜராத்தில், தொழில் வளர்ச்சி என்று சொல்கிறார்கள், யாருக்கு தொழில் வளர்ச்சி? மோட்டார் காரில் செல்பவன் முக்கியமா? ஏழை விவசாயிகள் முக்கியமா? ஏழை விவசாயிக்குக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம்தான் எங்களைப் போன்ற இயக்கங்கள். எனவே, மோடிகள் வந்தால், டாட்டாக்களுக்கு லாபம்; பிர்லாக் களுக்கு லாபம்; அம்பானிகளுக்கு லாபம்.

ஆனால், மோடி பிரதமராக வந்தால், இந்த நாட்டினுடைய ஏழைகளுடைய நலன், விவசாயி களுடைய நலன் பாதிக்கப்படும்.

பெரியார் பண்படுத்தியிருக்கின்ற நிலம்; திராவிட இயக்கம் ஆண்ட மண்!

பாபர் மசூதியை இடித்தபொழுது, இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடியது; ஒரே ஒரு மாநிலத்தைத் தவிர - அமைதிப் பூங்காவாக, ஒரே ஒரு ஆள்கூட உயிரிழக்காத - மத நல்லிணக்கம் தழைத்த - மதவெறிக்கு இடமில்லாத - மனித நேயம் இருந்ததென்றால், அது பெரியார் மண் ணாகிய இந்த தமிழ் மண்தான். பத்திரிகைகள் எல்லாம் எழுதின; வெறும் சட்ட ஒழுங்கினால் மட்டுமல்ல, பெரியார் பண்படுத்தியிருக்கின்ற நிலம்; திராவிட இயக்கம் ஆண்ட மண்; ஆளும் மண். ஆகவே, இங்கே மதவெறியை உண்டாக் கலாம் என்று இறக்குமதி செய்யப்பட்டால், என்னாகும் தெரியுமா?

குஜராத்தில் மனுதர்மத்தினை பாடமாக வைத் தார்கள். மனுதர்மத்தினை பாடமாக வைத்தால் என்னாகும்?

மோடி போட்ட கண்ணாடி; மோடி போட்ட சட்டை; எப்படியெல்லாம் பிரபலப்படுத்துகி றார்கள்;  18 வயது இளைஞர்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது என்று நினைத்து, 18 வயது இளைஞர்களை நம்புகிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாதா என்ன?

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே பி.ஜே.பி. ஒரு விசித்திரமான கட்சி. எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க முடியாது; அதுதான் அந்த விசித்திரமான கட்சி என்பதற்கான அடை யாளம்; எல்லா முடிவுகளுக்கும் சக்தி எங்கே இருக்கிறது என்றால், நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில்தான் உள்ளது. மோடிகூட ஆர்.எஸ்.எஸினால் நிறுத்தப்பட்ட வர். அதனால்தான் அத்வானியால்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை; அவர்கூட, இப்பொழுது நான் ஏற்றுக்கொள்கிறேன், வெற்றி பெற்றால் எனக்கு மிக மகிழ்ச்சி என்று சொல்கிறார். அவர் வெற்றி பெற மாட்டார் என்று அவருக்கும் தெரியும்.

ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது மிக தைரியமாக வெளியே வந்திருக்கிறார்கள்; ஏனென்றால், ஊடகங்கள் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள்; பன்னாட்டு முதலாளிகள் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள்; அவர்களால் நடத்தப்படுகின்ற தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அவர்கள் பக்கம் இருக்கின்றன; அதிலே அவர்கள் என்ன வேண்டுமானாலும் கருத்தை உருவாக்குவார்கள்.
இண்டர்நெட்டில் படிக்கின்றவர்களுக்கு குலக் கல்வித் திட்டம் பற்றி தெரியுமா? மனுதர்மம்பற்றி தெரியுமா? நாயரைத் தெரியுமா? தந்தை பெரியாரையே தெரியாதே!

இப்பொழுது பாலத்தின்மேல் செல்பவர் களுக்கு, பாலம் இல்லாதபொழுது இருந்த கஷ்டம் தெரியுமா? அதுபோன்றதுதான் வகுப் புரிமை.

இந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தி

இரண்டு நாள்களுக்கு முன்பு இந்து பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி:
RSS plays on majority-as-victim card
At the Rashtriya Swayamsevak Sangh (RSS) headquarters in Mahal, the second floor is home to a museum. Images of past Sarsanghchalaks, photos of pracharaks who set up Sangh units in various States, and the various gifts and citations received by the organisation in its 88-year history adorn the walls.
Sadanand Shirdale is looking around, absorbing the past of his organisation. As we sit for a cup of tea on the ground floor of the HQ, the former Bharatiya Janata Party (BJP), Pune district, secretary says Narendra Modi will “change the system.”
When asked to elaborate, he says the current system is geared to benefit the “so-called minorities.” “Appeasement will end when we come to power. In Gujarat, there is no Muslim MLA. That is how it should be.”

இதன் தமிழாக்கம்:

பெரும்பான்மை பலம் சேர்ந்த பிறகு
ஆர்.எஸ்.எஸின் எதிர்கால சூழ்ச்சி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தின் இரண்டாவது தளத்தில் விசாலமான அரங்கம் ஒன்று உள்ளது. அந்த அரங்கின் சுவர்கள் எங்கும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய தலைவர்கள் அவர்கள் பங்கெடுத்த கூட்டங்கள் மற்றும் பல நினைவுச் சின்னங்கள், பாரட்டு பத்திரங்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை அங்கு இருக்கும். அவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் என்னும் 88 ஆண்டு பயணத்தை கூறும், அந்த அரங்கம் ஒரு விசாலமான கண்காட்சி கூடம் போல் இருக்கும்.
ஆர்.எஸ்.எஸின் முக்கிய நபரான சதானந்த் சர்டலே என்பவர் அவற்றைப்பற்றி விளக்கிக்கொண்டு இருந்தார்.   அனைத்தையும் பார்த்த பிறகு கீழ்த்தளத்தில் தேனீர் அருந்த அமர்ந்தபோது அங்கு புனே மாவட்டத்தின் முன்னாள் பாரதிய ஜனதா கட்சி செயலாளர் இருந்தார். அவரிடம் பேச்சை தொடர்ந்த போது  நரேந்திர மோடி பற்றிய பேச்சு வந்தது; அப்போது அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி இந்த அமைப்பையே மாற்றிக் காட்டுவார் என்றார்.  கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் என கேட்டதற்கு அவர் தொடர்ந்தார்;  நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வரும்போது சிறுபான்மை இனத்திற்கு தற்போது கொடுத்து வரும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூகத்தில் நன்மை தருவதாகவே உள்ளது, இந்தச் சலுகைகளை நியாமான முறையில் தடுப்பது போல்  ஏதாவது ஒரு சட்டம் கொண்டுவந்து தடுத்துவிடுவார். இப்போது குஜராத்தில் எந்த முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இல்லை; இதே நிலைதான் நாளை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லா இடத்திலும் மெல்ல மெல்ல கொண்டுவருவோம் என்றார்.
சிறுபான்மையோர்களே, பெரும்பான்மை யோர்களே, ஜனநாயகத்தில் நம்பிக்கையுடை யவர்களே, நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
இந்த நாட்டில் எல்லா வகையிலான குடிமக் களும் இருக்கிறார்கள்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சிறு பான்மையோர் எல்லோரும் உள்ளனர்.
A Sovereign Socialist Secular Democratic Republic

இதுதான் இந்திய அரசியல் சட்டம்.

ஆனால், மோடி ஆளுகின்ற குஜராத்திற்கு என்ன பெருமை தெரியுமா? ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ.வைகூட நாங்கள் வரவிடவில்லை. இதுதான் இனிமேல் இந்தியா என்று சொன் னால் என்ன அர்த்தம்? இனிமேல் அவர்களுக்கு வாழ்வுரிமை கிடையாது என்றுதானே அர்த்தம். அது செக்குலாரிசமா? அது டெமாக்கரசியா? எல்லா மக்களுக்கும், எல்லாமும் வேண் டாமா? எனக்கு இருக்கின்ற உரிமை எல்லா மக்களுக்கும் உண்டே!

தந்தை பெரியாரைப் பார்த்து கேட்டார்கள், பார்ப்பனர்களுக்கு எவ்வளவு இடம் கொடுப் பீர்கள் என்று.

நாங்கள் வந்தால், பார்ப்பானை வங்காள விரிகுடாவில் தூக்கிபோடமாட்டோம்; 3 சத விகிதம் இருந்தால், கண்டிப்பாக 3 சதவிகிதத் தினை தாராளமாகக் கொடுப்போம் என்று சொன்னார்.

ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ.கூட இல்லை; அதுதான் இனி இந்தியா என்று சொன்னால், என்ன அர்த்தம்; மீண்டும் ஒரு இட்லர் வரப் போகிறார்; மீண்டும் ஒரு பாசிசம் வரப்போகிறது என்று அர்த்தம்.

இதற்கு முகமூடிதான் தொழில் வளர்ச்சி; என்ன தொழில்வளர்ச்சி; ஏழைகளின் நிலங்களை யெல்லாம் பிடுங்கி பணக்காரர்களிடம் கொடுத்து, தொழில் வளர்ந்தால் யாருக்கு லாபம்? முதலாளி களுக்கு லாபமே தவிர ஏழைகளுக்கு அல்ல.

வறுமை ஒழிந்ததா? வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்திருக்கிறதா?
ஏழைகள் இன்னும் ஏழைகளாகி, பஞ்சையாய், பராரியாய், தற்கொலை பட்டாளமாக ஆகிக் கொண்டிருக்கிறானே, வறுமை ஒழிந்ததா? வேலை இல்லாத் திண்டாட்டம் இங்கே குறைந் திருக்கிறதா?

ஆகவே நண்பர்களே, இந்த ஏமாற்றுப் பிரச் சாரத்திற்குப் பலியாகி விடாதீர்கள்! மீண்டும் காவி ஆட்சி இந்த மண்ணில் வந்தால், மனுதர்மம் வரும்; மனுதர்மம் வந்தால், குலதர்மம் நிலைக்கும்; குலதர்மம் நிலைத்தால், நாம் யாரும் படிக்க முடி யாது. மீண்டும் ராஜகோபாலாச்சாரியாருடைய குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான ஒரு நிலை இந்தியாவிற்கு வரும்.
சூத்திரன் என்று பச்சை குத்திக் கொள்ள வேண்டும்; பஞ்சமன், பறையன் என்று ஜாதியை வெளிப்படையாகப் போட்டாகவேண்டும்.

முஸ்லிம்கள் அடிபட்டால் என்ன, காரில் ஒரு நாய்க்குட்டி அடிபடுவதுபோல் என்று சொன் னாரே, இது எவ்வளவு கொடுமையானது, அவன் மனிதன் அல்லவா?

இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் யார்? அரேபியாவில் இருந்து குதித்தவர்களா? மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உன்னுடைய இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தானே - இங்கே இருக் கின்ற கிறித்தவர்கள் யார்? அய்ந்து தலைமுறை களுக்கு முன்பு அவர்களும் உன்னுடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தானே - இஸ்ரேலில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தவர்கள் அல்லவே!

உணரவேண்டியவர்கள் உணரவேண்டும்

எனவே, நண்பர்களே! மிகப்பெரிய ஆபத்து இந்த நாட்டை நோக்கி இருக்கிறது. அதுவும் தேர்தல் காலத்தில் வர இருக்கிறது. அந்த ஆபத்து எந்த ரூபத்தில் வந்தாலும், கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்று எச்சரிக்கை செய்யவேண்டியது எங்களு டைய கடமை. நாங்கள் எச்சரிக்கை செய்கின் றோம், மதவாதத்திற்கு பலியாகி விடக்கூடாது இந்த நாடு; காவி மண்ணாக இந்த மண் ஆகக்கூடாது; அதேபோல், ஜாதி வெறிக்கு இந்த மண் ஆகக்கூடாது; யாரோ சிலர் பதவிக்குப் போவதற்காக, மீண்டும் தாழ்த்தப்பட்ட சகோத ரர்களுக்கு எதிரான ஒரு அணியை உருவாக்குவது என்று, சில விலாசம் இழந்தவர்களையெல்லாம் நாம் விலாசம் கொடுத்து தூக்கி வைத்துக்கொண் டால், அது பலம் என்று நினைக்காதீர்கள்; அது தான் மிகப்பெரிய பலவீனம் என்பதை உண ருங்கள். யார் உங்களுக்குத் தெளிவானவர்களோ, அவர்களை நீங்கள் கட்டிப் பிடியுங்கள்! யார் உங்களுக்கு பலமானவர்களோ, அதனை அஸ்தி வாரமாகப் போடுங்கள்; சரிந்து போகின்ற மண் ணைக் கொட்டி, அதன்மீது நான் மிகப்பெரிய மாளிகையை எழுப்புகின்றேன் என்று சொன் னால், நிச்சயமாக அந்த மாட மாளிகைகள் கூட கோபுரங்களாக இருக்காது; எந்த நேரத்திலும் அது சரிந்துபோகும், அதை உணரவேண்டியவர் கள் உணரவேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லி, அற்புதமாக கேட்ட உங்களுக்கும், ஒத்துழைத்த மழைக்கும் எங்களுடைய நன்றியை சொல்லி விடைபெறுகிறேன்!

இரண்டு ஆபத்துகள்!

தந்தை பெரியாருடைய 95 அடி உயரமான சிலை திருச்சி - சிறுகனூரில் தயாராகக் கூடிய ஒரு சூழல்; பெரியார் உலகம் என்ற உலகம் ஜாதியற்ற சமுதாயத்தை, சமநீதியுள்ள ஒரு சமுதாயத்தை, மூடநம்பிக்கையற்ற ஒரு சமுதாயத்தை, செவ் வாய்க் கிரகத்தில் மனிதன் இறங்கி, அங்கே குடியேறிக் கொண்டிருக்கக்கூடிய அறிவியல் மனப்பான்மை வளருகின்ற ஒரு சமுதாயத்தை இளைய தலைமுறையினருக்கும், இனிவரும் தலைமுறையினருக்கும் சேர்த்து வழிகாட்டக் கூடிய திட்டங்களையெல்லாம் செய்துகொண்டி ருக்கக்கூடிய இந்த இயக்கத்திற்கு வாருங்கள் இளைஞர்களே! இந்த இயக்கம் உங்களுக்காக, உங்கள் எதிர்காலத்திற்காக, உங்களுடைய ஒளிமிகுந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, எனவேதான், படுபாதாள ஜாதிவெறிக் குழியிலே வீழ்ந்துவிடாதீர்கள்! மதவெறி சமாதியிலே நீங்கள் தாழ்ந்துவிடாதீர்கள். அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். இரண்டு ஆபத்து கள் இருக்கிறது - நீங்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். எனவேதான், இந்த இயக்கம் ஒரு கலங்கரை விளக்கம்போல் காட்டுவது எங்களுடைய கடமை. நாங்கள் எது வந்தாலும் எதிர்த்து நிற்கக்கூடியவர்கள்; காரணம், எங் களுக்கு உயிர் வெல்லம் அல்ல என்ற உணர் வினைப் பெற்றவர்கள் என்று கூறி முடிக்கிறேன்.

வாழ்க பெரியார்! வாழ்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

                              ------------------------------"விடுதலை” 4-11-2013

25 comments:

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் பெரியார் விழா!


பெரியார் கொள்கை உலகமயம் ஆக்கப்படவேண்டும்!

பல்துறைப் பெருமக்கள் பங்கேற்றுப் பரவசம்!

வாசிங்டன், செப்.4- அமெரிக்காவின் தலை நகரமான வாசிங்டனில் தந்தை பெரியார் அவர் களின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பல்துறைப் பெருமக்கள் பங்கேற்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் அருகே உள்ள நகரத்தில் விழா எடுப்பது பெரியார் பன்னாட்டு மய்யத்தின் வழக்கம் என்றால் அது மிகையாகாது. அதைப் போலவே இந்த ஆண்டும் மேரிலாந்து மாநிலத்தில், கொலம் பியா நகரத்தில், பெரி யாரின் பிறந்தநாள் நினைவு கூரப்பட்டது. பெரியார் பன்னாட் டமைப்பின் இயக்குநர் சோம.இளங்கோவன் அனைவரையும் வரவேற் றார். கடவுள் நம்பிக்கை உலகெங்கும் குறைந்து மனித நேயம் தழைத் தோங்கி வருகின்றது. அமெரிக்காவின் தலை நகரிலேயே இரண் டாண்டுகளுக்கு முன் 10000 பேர் கூடி கடவுள், மத நம்பிக்கையில்லா மல் மனிதநேயத்துடன் வாழ வழிபற்றிப் பேசி, பாடிக் கொண்டாடி னார்கள். உலக அறி ஞர்கள், நோபல் பரிசு வாங்கிய அறிஞர்கள், சுப்பிரமணியன் சந்திர சேகர், அமர்த்தியாசென், ஏன் இந்து பத்திரிகை யின் ஆசிரியராகச் சில புதுமைகள் பற்றி எழுதி வந்த சித்தார்த் வரத ராஜன் போன்றோர் கடவுள் நம்பிக்கையற் றவர்கள். மனிதநேயமே பெரியாரைக் கடவுள் மறுப்பாளர் ஆக்கியது என்றுரைத்தார்.

நாசா விஞ்ஞானி!

நாசா என்ற விண் வெளித் துறையில் பெரும் அறிஞராகப் பணியாற்றியவர் ச்டூவர்ட் ஜோர்டன். கிறித்துவப் பெற்றோர் களால் வளர்க்கப்பட்டு நாத்திகரானவர். உலகில் மதங்கள் பற்றிய அடிப் படை, அதைத் தகர்த் தெறிந்த அறிவியல் வளர்ச்சி, அதன் பயனாக வளரும் மனிதநேயப் புத்தொளிபற்றி ஆழ மாகப் பேசினார். இது அறிவு வளர்ச்சியின் புத் துலகம், அதில் பணி ஆற்றும் பல அறிஞர் கள்பற்றியும் எப்படி அறிவும், மூளையும் வளர்ந்து மக்களைப் புது வாழ்விற்கு வழி காட்டி அழைத்துச் செல்லும் என்பதை விளக் கினார். அவருடைய புது நூலை The Enlightenment Vision பேராசிரியர் பால் கர்ட்சுக்கு அர்ப்பணித் துள்ளார்.

முனைவர் பிரபாக ரன் பெரியாரும் கல் வியும் என்ற தலைப் பில் உரையாற்றினார். பள்ளிக்கூடமே செல் லாத (மூன்றாண்டுகள் மட்டும் அடி, உதையு டன் பள்ளிக்கூடம் என்று துன்புறுத்தப்பட் டதை அவரே நினைவு கூர்ந்தது மட்டுந்தான்) பெரியார் பெரிய அறி வாளி, சிந்தனையாளர் ஆனார். தனது இனத் தின் அதுவும் முக்கிய மாகப் பெண்கள் கல் வியின் போராட்ட வீரர் ஆனார் என்பதை எடுத் துரைத்தார். தென்கிழக்கு ஆசியா வின் சாக்ரடீசு என்று சொல்வதே தவறு, சாக் ரடீசைவிட ஆழமாகச் சிந்தித்தார்; துணிவாகச் செயல்படுத்தினார். அவர் இல்லாவிட்டால் நாமெல்லாம் படித் திருக்க முடியாது; இங்கு வந்திருக்க முடியாது என்றுரைத்தார். படிப்பு, பட்டம் இதெல்லாம் வேறு, கல்வி, அறிவு என்பது வேறு. ஓராண்டு கூட ஒழுங்காகப் பள்ளி சென்று படிக்காத ஆபிர காம்லிங்கன் அமெரிக் காவின் தலை சிறந்த ஆளுநர்; அது போலவே பெரியார் உலகின் தலை சிறந்த சிந்தனையாளர், செயல் வீரர் என்றார்.

தமிழ் ஓவியா said...

மருத்துவர் சரோஜா இளங்கோவன்!

பெரியாரும் பெண் கள் முன்னேற்றமும் என்ற தலைப்பில் உரை யாற்றிய மருத்துவர் சரோஜா இளங்கோவன், தனது மதமும், பக்தியும், மூட நம்பிக்கையும் நிறைந்த வளர்ப்பில் இருந்து மானமிகு ஆசிரி யர் அவர்கள் அமெரிக் காவில் தங்கள் இல்லத் திற்கு வந்து அமைதியாக எடுத்துரைத்த கருத்து களைக் கேட்டுப் பெரியார்பற்றி ஆர்வம் கொண்டு மாறியதை எடுத்துரைத்தார். பெண்கள் முதலில் தாங்கள் மாறி, நகை, உருப்படியில்லாதத் தொலைக் காட்சி, மூடநம்பிக்கை பூஜைகள், பொருள் நேரம் வீணாக்கும் அர்த்த மற்ற வழிபாடுகளை ஒதுக்கிக் குடும் பத்தை வளர்க்க வேண்டும் என்றார். எப்படிப் பெண்கள், அடிமைகள், அலங்காரப் பதுமைகள், குழந்தை அதுவும் - ஆண் குழந்தைகள் தான் வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இதை யெல்லாம் பெரியார் முறியடித்தார்; இன்றும் பெண்கள் மூளையில் விடு தலை அடைந்து தொழில் கற்று அவர் சொன்ன சிக்கன வாழ்க்கையை வாழ்ந்து முன்னோடிகளாக வேண்டும், ஆண்கள் தன்னால் மாறி வழி நடப்பார்கள் என்று ரைத்தார்.

பெரியார் உலகமயம்!

முனைவர் சங்கரபாண்டி பெரியார் ஏன் இன்னும் உலகமயமாக்கப்பட வில்லை, அறுபதுகளில் எழுந்த ஆராய்ச் சிப் பதிப்புக்கள் வெளிநாட்டவர்களால் தொடர்ந்து வளரவில்லை; திராவிட இயக்கம், பெரியாரியல் உலகெங்கும் பரவ நாம் என்ன செய்யவேண்டும் என்றும், பெரியாரால் இன்று தமிழ்நாடு கல்வி, மற்ற வளர்ச்சியில் சிறந்துள்ளது. இட ஒதுக்கீட்டால் திறமை போய் விட்டது என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஆதாரத்துடன் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று இடம் பிடிப்போர் மதிப்பெண்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் வாங்கியுள்ள மதிப் பெண்களைக் காண்பித்து விளக்கினார்.

ஈழத் தோழியர் புஷ்பராணி பெரி யாரின் பெண்ணுரிமைப் பேச்சுகளை எடுத்துக்காட்டி, துணிவுடனும், தெளிவு டனும் எவ்வளவு உண்மைகளை எடுத் துச் சொல்லியிருக்கின்றார் என்று விளக்கினார்.

பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட தோழர் பன்னீர்செல்வம் பெரியாரின் நினைவுகளை எடுத்துக் கூறினார். இன்றும் மதமும், ஜாதியும் எவ்வாறு மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறது என்று விளக்கிக் கூறினார்...

சுந்தர் குப்புசாமி, நமது தமிழக இந்திய ஊடகங்கள் பெரியாரின் கருத் துகளை முன் வைப்பது இல்லை என வும், மூட நம்பிக்கைகளை பரப்புவதில் உள்ள ஆர்வம், சமுதாய மாற்றத்தில் இல்லை என்பதையும் கூறினார்..

முனைவர் அரசு செல்லையா எப்படி பெரியார் நேரம் தவறாமையும், சிக்கன மாக வாழ்ந்தார் என்பதையும் ஆங்கில வார்த்தை குசரபயடவைலக் கொண்டு விவரித் தார். மறைமலை அடிகளாரின் பேரன் தாயுமானவர்... பெரியாருக்கும், மறை மலை அடிகளார்க்கும் உள்ள நட்பைப் பற்றியும், பெரியார் அவருக்கு நேர் எதிரான கொள்கை உடையவர்களை கூட எப்படி மிகப் பண்பாக நடத் தினார் எனவும், பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

நன்றி - மயிலாடுதுறை சிவா

நன்றியுரையில் மயிலாடுதுறை சிவா, பெரியாரின் கருத்துக்களை இணையம் மூலம் தொடர்ந்து பரப்ப வேண்டும் எனவும், இந்த கூட்டம் நடைபெற கொலம்பியா நகரத்தில் உள்ள நூலகத்தைப் பதிவு செய்து கொடுத்த குழந்தைவேல் ராமசாமி, விழா ஏற்பாட்டை செய்த நாஞ்சில் பீட்டர் மற்றும் வாசிங்டன் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் கல்பனா மெய்யப்பன் அவர்களுக்கும், விழா வில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூர்ந்தார்.

கட்டுரை தொகுப்பு, புகைப்படம் உதவி: மயிலாடுதுறை சிவா

தமிழ் ஓவியா said...


பதிப்பாளர் பார்வையில் பெரியார்



இத்தனை ஆண்டுகள் பதிப் பாளர் வாழ்வில் வர்த்தகரீதி யாக வெற்றிகரமானவராக இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

வியாபாரத்துக்கு எந்தப் புத்தகம் உதவும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கிராமத்தி லிருந்து தனது முதல் புத்தகத்தை யாரும் போடுவதற்கு வழியில்லாமல் யார் எடுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களது புத்தகங்களைப் போடவேண்டும் என்பதே எனது கொள்கை. இதுவரை ஆயிரத்துக்கும் மேல் தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுள்ளேன். நூல்களை ஒரு ரசிகனாக, ஒருவனாகவே வெளியிட்டு வருவ தால் நான் ஒரு வியாபாரியாக ஆக முடிய வில்லை. ஒரு எழுத்தாளனின் முதல் எழுத்தை எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்று நினைப்பேன். எல்லாரும் போடும் நூல்களைப் போடுவதில்லை என் பதை நான் குறிக்கோளாகவே வைத் துள்ளேன். திரு.வி.கவையும், பெரி யாரையும், காந்தியையும் படிப்பவன், பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்க மாட்டான்.

சிலப்பதிகாரம், தொல்காப் பியம் மற்றும் திருவாசகத்தின் காலம் குறித்து தமிழுணர்வாளர் களின் உணர்வுகளுக்கு எதி ரான கருத்துகள் உங்களிடம் உள்ளனவே?

திருவாசகத்தின் காலம் குறித்த ஒரு விவாதத்தில் மறைமலை அடிகள் அப்போது மூன்றாம் நூற்றாண்டுதான் என தொடர்ந்து வலிந்து எழுதி வந்தார். அதைப்பற்றி அப்பாதுரையிடம் விவாதித்தபோது, அவர் தமிழ்க் கடலையே குற்றம் சொல்கிறாயா என்றுதான் என்னிடம் கேட்டார். அவருக்கு ஒரு கருத்து இருந்தும் அதை அவர் வெளிப் படுத்தவே இல்லை. அறிஞர்களுக்குள்ளும் பக்தி உணர்வு உண்டு என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

ஒரு புதிய கருத்தைக்கேட்டால் அதைப் பரிசீலிக்க வேண்டும். அதை நான் பெரியார் வழியாகவே கற்றுக்கொண்டேன். மனிதனை உயர்த்தாத எதையும், மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்காத எதையும் அவர் எதிர்த்தார். அவர் வழியில் வந்ததால் எந்தப்புதிய கருத் துக்கும் என்னிடம் ஆதரவுண்டு. பெரியார் யாரையும் மேற்கோள் காட்டியதில்லை. சிக்கலுள்ள ஆயிரம் சமூகச் சிக்கல்களைப் பெரியார்தான் எடுத்துக்கொண்டார். மகாத்மா காந்தி அச்சப்பட்ட இடத்தில் பெரியார் நுழைந்தார். பெரியாரின் சிந்தனை கள் இன்னும் புதுமையாகவே இருக்கின்றன. அவரிடம் எதன்மீதும் கண்மூடித்தனமான பக்தி இல்லை. பக்தி இருக்கும் இடத்தில் ஆய்வுகள் உண்மையாக இருக்காது என்பதே எனது எண்ணமும்கூட.
- வெள்ளையாம்பட்டு சுந்தரம்

(தமிழில் வரலாறு, தொல்லியல் சார்ந்த நூல்களை பதிப்பித்தவர் - ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்)

நன்றி: தி இந்து 2.11.2013

தமிழ் ஓவியா said...

கேள்வி: சிற்றுந்தில் இரட்டை இலை அரசு தவிர்த்திருக்கலாம்தானே?

பதில்: அது இரட்டை இலை இல்லை. பசுமையைக் குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் நான்கு இலைகள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தில் இரட்டை இலை, பிகாஸஸ் குதிரையின் உயரே எழும் சிறகுகளாக மாற முடியுமென்றால் சிற்றுந்தில் இரட்டை, இரட்டை இலைகள் பசுமையைக் குறிப்பதில் வியப் பில்லைதான்! அமைச்சர் காணும் கலைநயம் பலருக்கு ஜனநாயகப் பண்புகளின் கொலைக் களமாகத் தோன்றுவதிலும் வியப்பில்லை!
(நன்றி: கல்கி 10.11.2013)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்



நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர்களாவார்கள் இந்தப் பார்ப்பனர்.
(விடுதலை, 12.11.1960)

தமிழ் ஓவியா said...


போலிக் கண்ணீர் மோடி


பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே; காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் - காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்ல வேண்டுமா?


சென்னை, நவ. 4-இசைப்பிரி யாவுக்கு நடந்த கொடூரத்திற்குப் பிறகும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதிநிதிகள் செல்ல வேண்டுமா? என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (3.11.2013) வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று கூடச் சொல்லலாம். 27 வயதே நிரம்பியவள்! அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம் விடுதலைப் புலிகளின் ஊட கப் பிரிவில் அவளும் ஒருத்தியாக தன்னை இணைத்துக் கொண்டது தான். விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன், பாலச்சந்திரனை சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண் களையும், முதியோர்களையும் கொன்ற கொடுமைகளுக்கு ராஜபக்சே பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணு வத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப் பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தற்போது இசைப்பிரியா தொடர் பான காட்சிகளையும் படமாக்கி வெளியிட்டுள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கும் நேரத்தில், இசைப்பிரியா தொடர்பான காட்சி களை, அதே சேனல் 4 நிறுவனம் உலகம் முழுவதிலும் வெளிக் கொணர்ந்து நம்மையெல்லாம் தேம்பிப் புலம்ப வைத்துள்ளது. இந்தக் கொடுமையான காட்சியை, நம்முடைய நாட்டுப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், ஏன் அந்தக் காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ள வேண் டுமென்று இன்னமும் குரல்கொடுத்து கொண்டிருப்பவர்களும் கண்ட பிறகும், அந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணு கிறார்களா? அதில் இந்தியா கலந்து கொண்டால், நாமெல்லாம் தமிழர் கள் தானா என்று சரித்திரம் சாப மிடாதா?

ஈழத்தில் நடந்த இனத் துடைப்பு நடவடிக்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், வரலாறு கண்டிராத போர்க் குற்றங்களுக்கும் சுதந்திரமான தும், நம்பகமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; ஈழத் தமிழர் களுக்கு அவர்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்து கொள்ளும் வகையில், அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்; என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ் வுக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட் டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இங்குள்ள தமிழர்களும், உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள். என்ன செய்திடப் போகிறது இந்திய அரசு? இசைப்பிரியா வுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பிறகும் இந்தியா இலங்கை செல்ல வேண்டுமா? இவ்வாறு கலைஞர் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


செவ்வாய்க்கான ராக்கெட்: சாதனையும் - வேதனையும்!

- ஊசி மிளகாய்

மங்கள்யான் என்ற பெயரில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி 38 நிமிடத்திற்கு, ஸ்ரீஹரிகோட்டா, சத்திஷ் தவான் பி.எஸ். எல்.வி.சி.-25 ராக்கெட் மூலம், ஏவுதளத்தில் விண்கலம் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் இந்த முயற்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முதற் கொண்டு பல நூற்றுக்கணக்கான விண்வெளி ஆய்வாளர் களான விஞ்ஞானிகளின் உழைப்பும், சாதனை யும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது.

செவ்வாய்தோஷம் என்ற பெயரில் மூடநம்பிக் கைக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான பெண்களுக்குத் திருமணமே ஆகாமல் மன உளைச்சலில் சிக்கி மாண்டு கொண்டுள்ள மகளிர் உலகம் உள்ள ஒரு நாடு, செவ்வாய்க் கோளுக்குத் தனது விண்கலத்தை அனுப்ப ஒரு செவ்வாய்க்கிழமையையே தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சி சாதனை என்றாலும்,

ஆனால் விளக்கு அடியில் சூழ்ந்துள்ள இருட்டுப் போல, ஒரு வேதனையும் வெட்கப்பட வேண்டிய செய்தியும் உள்ளது!

கீழே உள்ள படத்தையும், செய்தியையும் படியுங்கள்:

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகப் பறக்க வேண்டி இஸ்ரோ தலைவர் இராதா கிருஷ்ணன் (நாயர்) தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். கோயில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப் பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அதி காரிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் நடந்த சுப்ரபாத சேவையிலும் கலந்து கொண்டு, இஸ்ரோ தலைவர் மீண்டும் சாமி தரிசனம் செய்தார். அப்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதங் களில் வைத்து வழிபட்டார்; விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பறக்க வேண்டிக் கொண்டார்.

பின்னர் இஸ்ரோ தலைவர் தன் மனைவியுடன் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். (- தினந்தந்தி 5.11.2013)

- அங்கு உழைத்த விஞ்ஞானி களால் முடியாததை திருப்பதி ஏழுமலையானும், காளஹஸ்தி சிவனும் (இவரது கோபுர கலசம் இரு முறை வீழ்ந்ததை காப்பாற்ற முடியாதவர் இந்தச் சிவன்; ஏழுமலையான் உண்டியலுக்கே துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்பு - அவ்வளவு சர்வ சக்தி அவருக்கு!) - காப்பாற்றப் போகிறார்களா?

இஸ்ரோ தலைவர் நாயருக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதுபற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை; அது அவரது சொந்த விஷயம். ஆனால் விண்கலத்தின் மாதிரி வடிவத்தைக் கோயி லுக்கு எடுத்துச் செல்வது, வேண்டுவது எவ்வகையில் நியாயம்? யார் இவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள Secularism - - மதச் சார்பின்மையைக் காப்பதா இது?

எல்லா மதங்களையும் ஒன்று போல் பாவிக்க என்று ஒரு விளக்கம் என்றால் இவர் எந்த சர்ச்சுக்குப் போனார்? எந்த மசூதிக்குப் போனார்?

போனாலும் நியாயமாகுமா என்பது முக்கிய கேள்வி!

அதோடு அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகள் 51A(h) பிரிவின்படி -
இதுதான் அறிவியல் மனப்பான்மையை பரப்பும் முறையா? Scientific Temper
என்பது இஸ்ரோ தலைவரின் அகராதியில் இதுதானா?

மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய் பொத்தி, கைகட்டி இருக்க லாமா?

முன்பு ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்த போதும், அதற்குமுன் ஏழுமலையானைத் தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தித்தானே நடந்தது? அதற்கு என்ன சமாதானம் கூறப்பட்டது?

அறிவியல் மனப்பான்மைப் பரப்புதலின் லட்சணம் இதுதானா?

வெட்கம்! மகா வெட்கம்!! சாதனை ஒருபுறம் - வேதனை மறுபுறம்!

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியா


இசைப்பிரியா என்ற பெயர் இன்றைய தினம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிறது. என்னதான் சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்தாலும், என்னதான் உலகின் சில நாடுகள் இலங்கையின் பக்கம் நின்று அதன் அதிபர் ராஜபக்சேவின் முதுகுப் பக்கம் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் - ராஜபக்சே என்பவர் மனித குலத்தின் நாசகார சக்தி - ஹிட்லரே வெட்கப்படும்படியான குரூரர், நரமாமிசம் தின்னும் காட்டு மனிதன் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நோஃபயர் சோன் என்ற ஆவணப்படத்திலிருந்து பிரிட்டனின் 4ஆவது அலை வரிசை வெளியிட்ட இந்தப் படம் உலகில் மனச்சாட்சியைக் குலுக்கித் திகிலடையச் செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இசைப் பிரியா பலத்த காயங்களுடன் மரணம் அடைந்து கிடக்கும் அந்தக் காட்சி அசாதாரணமானது.

2010இல் இசைப்பிரியா காட்டப்பட்ட காட்சி யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இப்பொழுது வெளியாகி இருக்கும் காட்சி - அந்தப் பெண்ணை உயிருடன் பிடித்து நிர்வாண மாக்கி அரைகுறை உடையுடன் இராணுவத் தினர் இழுத்துச் செல்வதும், அந்தப் பெண் பிரபாகரனின் மகள் என்று கருதுவதும், அந்தப் பெண் மறுத்த நிலையில், பாலியல் வக்கிரத் துக்கு இரையாக்கிக் கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

வழக்கம்போல இலங்கை சிங்கள இனவாத அரசு அந்தக் காட்சிகள் போலியானவை என்று கூறுவது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையிலும் சரி, வெள்ளைக் கொடியேந்தி சமாதானக் கோரிக்கையுடன் சென்ற போராளி களைச் சுட்டுக் கொன்ற போதும் சரி எதை அந்த வல்லூறுகள் ஒப்புக் கொண்டுள்ளன?

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ராஜபக்சேவுக்குத் தொண்டையில் குத்திய ஈட்டியாகி விட்டது இந்த ஒளிபரப்பு!
இதற்குப் பிறகும் ராஜபக்சே பக்கம் பேசுவதற்கு எவரும் கூச்சமும், வெட்கமும் படவே செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்ற குற்றங்களின்மீது உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட முழுத் தகுதியான பேர் வழிதான் ராஜபக்சே என்பதி லிருந்து தப்பிக்கவே முடியாத நிலை இன்று.

இந்திய அரசு இதற்கு முன் எந்த நிலை எடுத்திருந்தாலும் சரி, இதற்குப் பிறகு மறு சிந்தனைக்கும், முடிவுக்கும் உட்பட்டே தீர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு மேலும் செல்ல நினைத்தால், ராஜபக்சே பற்றி என்ன பொது அபிப்ராயம் ஏற்படுமோ அதில் பங்கு வாங்கிக் கொள்ளும் மானக்கேடு தான் மிஞ்சும்.

காங்கிரசைச் சேர்ந்த முக்கிய மத்திய அமைச்சர்களான ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்களே இந்த முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரசின் உயர் மட்டக் குழுவானாலும் சரி இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை;

வரலாற்றில் வீண் பழியையும், உலகத் தமிழர்களின், உலக மனித உரிமை யாளர்களின் நிரந்தர வெறுப்பையும் வலிய சம்பாதித்துக் கொள்ளவும் வேண்டாம் - வேண் டவே வேண்டாம் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


அடைய முடியும்


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!

சங்கரன்கோவிலில் கோயில்
ராஜகோபுரத்தை மின்னல் தாக்கியது

சங்கரன்கோவில், நவ. 5-சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமையான 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மீது நேற்று மின்னல் தாக்கியதில், ராஜாளி பொம்மை மற்றும் சிற்பங்கள் சேதம் அடைந்து நொறுங்கி விழுந்தன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மன்னரால் எழுப்பப் பட்ட சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் 9 நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைந் துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய் தது. அப்போது பலத்த ஓசையுடன் ராஜகோபுரத்தின் தென்பகுதியில் மின்னல் தாக்கி யது.

இதில் கோபுரத்தின் 9ஆவது நிலையின் கிழக்கு பகுதியில் இருந்த ராஜாளி பொம்மை சேதம் அடைந்தது. கோபுரத்தின் உச்சியில் பெரிய அளவில் அமைந்திருந்த கண் திருஷ்டியாளியின் கண்கள் சேதம் அடைந்தன. மேலும், கோபுரத்தின் பல பகுதிகளில் அமைந்திருந்த சிற்பங்களும் உடைந்தன.

கோவில் அருகே இருந்த வீடு களில் நூற்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் கணி னிகள் சேதமுற்றன.

தமிழ் ஓவியா said...

சாலை விபத்து : அய்யப்ப பக்தர்கள் நால்வர் சாவு

ரெட்டியார்சத்திரம், நவ.5- திண்டுக்கல் அருகே வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி யதில், பெங்களூருவைச் சேர்ந்த, அய்யப்ப பக்தர்கள் நால்வர் இறந் தனர்; 18 பேர் காயமடைந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த, 14 பேர், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, டெம்போ டிராவலர் வேனில் சபரிமலை சென்றனர். அங்கிருந்து மதுரை வந்து, மீனாட்சிஅம்மன் கோயிலில், சாமி தரிசனம் செய் ததும், பழநிக்குப் புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம், மாங்கரை, பிரிவு அருகே வேன் சென்ற போது, ஓட்டுநர் தூங்கியதால், கோவையில் இருந்து மதுரை சென்ற, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், வேன் ஒட்டுநர் உட்பட, பெங்களூருவைச் சேர்ந்த நான்கு பேர் இறந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயமுற்றனர். ரெட்டியார் சத்திரம் காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

பைக் மீது கார் மோதி
கோயில் பூசாரி பரிதாப பலி

புழல், நவ.5-புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வர் ஆனந்தன் (43). புழல் யாகாத் தம்மன் கோயில் பூசாரி. தீபாவளி யன்று பட்டாசு வாங்க தனது மகன் லோகேஷ் (16), மகள் தீபிகா (18) ஆகியோருடன் பைக்கில் புழலுக்கு புறப்பட்டார் ஆனந்தன்.

புழல் மத்திய சிறைச்சாலை ஜிஎன்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட் டனர். ஆனந்தன் படுகாயம் அடைந் தார். லோகேஷ், தீபிகா லேசான காயத்துடன் தப்பினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி னர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

தமிழ் ஓவியா said...

காளஹஸ்தி கோவிலில் தீ விபத்து: கலைப் பொருள் விற்பனைக் கடை எரிந்து சாம்பல்

காளஹஸ்தி, நவ. 5- காள ஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவி லில் முகப்பு கோபுரத்தின் உள்ளே பக்தர்கள் தங்கள் காலணிகளை விடும் கவுண்டர் அருகே வெங்கடே சன் என்பவர் கலைப்பொருள் விற்பனைக் கடை வைத்து உள்ளார்.
நேற்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 3.30 மணி அள வில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவிற்று.

தகவல் கிடைத்ததும் காளஹஸ்தி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த விலை உயர்ந்த கலைப் பொருட்கள், சுவாமி படங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. சேத மதிப்பு ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


மக்களின் பகுத்தறிவுப் பூங்கா பெரியார் உலகம்!


திராவிடர் கழகப் பொதுக் குழுவில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக் கின்றன! ஆனால்.

எல்லாவற்றிற்கும் சிகரமாக... உலகத் தமிழர் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்கி வழிய போடப்பட்ட தீர்மானம் தான். திண்டிவனத்தில் 20.10.2013 அன்று போடப்பட்ட தீர்மானம் எல்லோருமே எழுந்து நின்று கைதட்டி, வரவேற்ற தீர்மானம் என்ற செய்தியை இதோ ஒரு பெரியார் உலகம் என்ற விடுதலை தலையங்கத்தின் வாயிலாக (21.10.2013) படித்த உலகத் தமிழர்கள் மட்டுமல்ல. உலகப் பகுத்தறிவாளர்கள் அனைவருமே எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்திருப் பார்கள் என்பது உறுதி!.. காரணம்...

தூக்கு மேடையில் இருந்துகொண்டு நான் நாஸ்திகன்தான்,அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடு போட்டுச் சொல்லிக் கொள்ளத் தயாராயிருக்கிறேன் (குடியரசு 19.5.1929) என, 1929ஆம் ஆண்டிலேயே முழுக்க மிட்ட ஒரு நாத்திகப் பேரறிவாளருக்கு வைக்கப்படும் சிலையல்லவா, அதனால் தான்! அதோடு மட்டுமா?

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலேயே விடுதலை எனும் பெயரில் இதழ் நடத்தினார். நாடு வெள்ளையரின் முடியாட்சியின் கீழ் இருந்தபோதே குடியரசு என்ற ஏடு நடத்தினார். ஆகஸ்டு பரட்சிக்கு முன்பாகவே, சுடிஎடிடவ (புரட்சி) எனும் ஏடு நடத்தினார். அறியாமை இருளிலே மூழ்கி அடிமைத்தனத்திலே கட்டுண்ட கிடந்த தமிழினத்தை ஒளி உலகுக்கு அழைத்து வந்து அவர்களது பகுத் தறிவுக் கண்களைத் திறந்தார். அடிமை விலங்கை உடைத்து எறிந்து உரிமை உலகிலே நடமாட வைத்தார்... மொத்தத் தில் மனிதனை மனிதனாக வாழ வைத்தார்! இதனை எதிர்த்த பார்ப்பனீ யத்தின் ஆணிவேரையே அறுத் தெறிந்தார்! ஆம்.

இத்தகைய புரட்சியாளருக்குத்தான் சிலை! உலகிலேயே உயரமான வெண்கலச் சிலை 95 அடி உயரத்தில்! அதுவும் ஒரு எட்டாவது அதிசயமாக ஒர முழுமையான நாத்திகவாதிக்கு சிலை! உலகில் வேறு எந்த நாட்டிலுமே இல்லாத புதுமை! புரட்சி!!

சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில், கூடிய பெரியார் உலகம்! அதில், அய்யாவின் வரலாறு ஒலி - ஒளிக் காட்சியாக! அறிவும், அறிவியலும் கலந்த கோளரங்கம், பொழுது போக்குப் பூங்கா குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொழுதுபோக்கு.. எண் ணிப் பார்க்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடு கிறது!

பார்ப்பனியம் என்ற வெடி மருந்துக் கிடங்குக்குள் சுயமரியாதை எனும் தீப்பந்தத்தை ஏந்தி நடக்கும்...

மிகத் துணிவான காரியத்தில் ஈடு பட்டு வெற்றி கண்ட தந்தை பெரியா ருக்கு நன்றி மறவா, பெரியாரின் பெருந் தொண்டர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்... காலத்தாலழியாத.. வரலாற்றுச்சிறப்பு மிக்க நினைவுச் சின்னமே... பெரியார் உலகம்!...

அய்யாவின் சிலைக்காக.. அள்ளித் தருகிறது தமிழ்க் குடும்பங்கள்! ஆம்! உலகச் சுற்றுலாப் பயணிகளின் மையமாகி விளங்க இருக்கும் பெரியார் உலகம், 81வது பிறந்த நாள் காண இருக்கும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின்...

70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வரும் தொண்டறத்தின் சிகரம்! அவரு டைய பிறந்த நாளன்று தமிழினம் காட்டும் நன்றி 1000 பவுன் அன்பளிப்பு!

திராவிடர் கழகத் தலைவருக்கு அளிக் கப்படும் ஒவ்வொரு காசும் பல லட்சங் களாக தமிழினத்திற்கே பயன்பட்டிருக் கிறது என்பதுதான் கடந்த கால வர லாறு ஆகவேதான் அய்யாவுக்கு சிலை என்றால்... அள்ளி, அள்ளித் தருகிறார்கள்!
சிறுகனூர் விரைவில் உலக மக்களின் பகுத்தறிவுப் பூங்கா! பாரே போற்றும் பெரியார் உலகம்!!

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


தமிழை இங்கிலீஷ் வரிவடிவத்தில் எழுதலாம் என்பதா?


தமிழ் இந்து ஏட்டுக்குக் கடும் எதிர்ப்பு!

இந்து அலுவலகத்துக்கு நேரில் சென்று தமிழின உணர்வாளர்கள் கண்டனம்!

சென்னை, நவ.5- தமிழை இங்கிலீஷ் வரி வடிவத்தில் எழுதலாம் என்று மலையாள நாட்டைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற பார்ப்பனர் இந்து தமிழ் நாளேட்டில் எழுதிய கட்டுரையைக் கண்டித்து திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சி களை, இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்து நாளிதழ் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதன் ஆசிரியரைச் சந்தித்து கண்டனங் களை நேரில் பதிவு செய்தனர்.

தமிழால் இணைவது தமிழை அழிப்ப தற்கா? எனும் தலைப்பில் கண்டனமும் எழுத் துப்பூர்வமாக இந்து ஆசிரியரிடம் அளிக்கப் பட்டது.

அதன் விவரம் வருமாறு:

இம்மடலின் இறுதியில் கையொப்ப மிட்டுள்ள, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர் களும், தமிழ் உணர்வாளர்களும் ஆகிய நாங்கள் தி இந்து நாளிதழில் (4.11.2013) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோக னின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மொழிக்கும், இனத்துக்கும் எதிரான அக் கட்டுரையை வெளியிட்டுள்ள தி இந்து நாளிதழுக்கும் எங்களின் கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதழியல் துறையில் மிக நீண்ட அனுபவம் உடைய ஒரு நிறுவனம் தமிழால் இணை வோம் என்னும் முழக்கத்தோடு தமிழ் நாளிதழ் ஒன்றைத் தொடங்கியபோது தமிழ் மொழிக் கும், இனத்திற்கும் வலிமை சேர்க்கும் முயற்சி என்று அதனை நம்பிய பலரின் தலையிலும் இடி விழுந்தாற்போல் இக்கட்டுரை அமைந் துள்ளது. தமிழ் மொழியை எவராலும் அழிக்க முடியாது, என்றாலும், எப்படியாவது அழித்து விடவேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர் களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும், ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரையை தன் ஏட்டில் வெளியிட்டதன் மூலம் தமிழ்கூறு நல்லுலகை தி இந்து நாளிதழ் வேதனைப்படுத்தியுள்ள உண்மையை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வரு கின்றோம்.

எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழி யாகிய உயிர் அழியும் என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு மாமேதை இறங்கியுள்ளார். அதற்கு தி இந்து நாளிதழ் துணை போகலாமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என் பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெய மோகன்கள் புறப்படட்டும்.

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக் காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரி வடிவம் இல்லாத நேரத்தில், பிற வரி வடிவங்களைக் கையாள் வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாய் இக்கட்டுரை யாளர் சொல்கிறார். அது இலத்தீன் எழுத் துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத் துருவிலும் கூட எழுதப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து பிராமி என்பது தவறான கருத்து என்பதை மொழி யியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அத னால்தான் தமிழ் பிராமி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழி யியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது ஒலிப்பு முறை (உச்சரிப்பு) முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது?

கனத்த நெஞ்சுடன் மீண்டும், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக்கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் பட்டியல் வருமாறு:

தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தலைமை இலக்கிய அணி, தி.மு.க.

க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்,

சைதை க.வ.சிவா, தமிழக வாழ்வுரிமை கட்சி,

மே.ப.காமராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி

தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

கீ.த.பச்சையப்பன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

வா.மு.சே.திருவள்ளுவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

பா.இறையெழிலன், உலகத் தமிழ்க் கழகம்

கோ.பாவேந்தன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

தமிழ்மகன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

உதயன், தமிழக கலை இலக்கியப் பேரவை

முத்தையாகுமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி,

இரா.வில்வநாதன், தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

ஆகியோர் கையொப்பமிட்டுக் கொடுத் தனர்

தமிழ் ஓவியா said...


மோடியை வாரிசாக ஏற்பாரா படேல்? காந்தியாரின் பேரன் சாடல்

புதுடில்லி, நவ. 5- குஜராத் முதல் வர் நரேந்திர மோடியை தனது கொள்கை ரீதியான வாரிசாக நாட் டின் முதல் உள்துறை அமைச்ச ரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார் என்று காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சமீப காலமாக படேலை சொந் தம் கொண்டாடி புகழ்வதில் பாஜ கவின் பிரதமர் வேட்பாளரான மோடியும், காங்கிரஸ் கட்சித் தலை வர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ் மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி. என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கல வரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை மோடி கடைப்பிடிக் காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜ ராத்தைச் சேர்ந்த படேல், கலவ ரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்ப வத்தை கண்டும் மிகவும் வருந்தி யிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங் கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல்பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையை கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட் டமைப்பதில் வல்லவர். மற்றவர் களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதே போன்று மோடியும் செயல் பட்டால், அது பாராட்டுக் குரியதே" என்றார்.

அதே சமயம், கடந்த 63 ஆண்டு களாக படேலை காங்கிரஸ் மறந்து விட்டது.

அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்குப் பின், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் காங்கிரஸ் கட்சி யில் முக்கிய பங்கு வகித்தனர். அதே சமயம், படேலின் வாரிசுகள் கட் சியிலோ ஆட்சியிலோ பங்கேற்க வில்லை. நேருவை விட படேல் 14 ஆண்டுகள் மூத்தவர். அவரது உடல் நிலையும் சீராக இல்லை. அதனால்தான், படேலுக்கு பதிலாக நேருவை பிரதமராக்கினார் காந்தி யார். அவரின் இந்த முடிவை பின் னர் படேல் ஏற்றுக் கொண்டார். அதுதான் சரியானது என்றும் தெரிவித்தார். ஒரு காங்கிரஸ்கார ராக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார். 1947 ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். ஸின் பணிகளை பாராட்டி வந்த படேல், காந்தி படுகொலைக்குப் பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்" என்றார் ராஜ்மோகன் காந்தி.

தமிழ் ஓவியா said...

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் தலைமை உரையாற்றினார்.

அவர் தமதுரையில்...

இன்றைய தினம் ஒடிசா மாநில அரசு, தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கொண்ட நூலை ஒடிசா மாநில மொழியில் வெளியிட்டிருக்கிறது. இதில் நமது கழகத்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ஒடிசா மாநிலம், புவனேஷ்வருக்குச் சென்றிருக்கிறார். நமக்கெல்லாம் பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்கிற பெருமை உண்டு. அய்யா அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அந்த வகையில் பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார். சிறீரங்கத்தை பார்த்த மக்கள் இனி சிறுகனூரைப் பார்க்கப் போகிறார்கள். மதமற்ற உலகமே மனித இனம் அமைதியாக வாழ நிரந்தரத் தீர்வாகும். இந்த வகையில் மதமற்ற உலகிற்கான கருத்துகள் பெரியாரின் கருத்துகள் ஆகும். இன்று (27.10.2013) காலையில் சென்னையில் மறைந்த பொறியாளர் மணிசுந்தரம் அவர்களது மறைவிற்கு சென்று வந்தோம். அவர்தான் நமது பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கு தமிழர் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். கல்லூரி தொடங்கப் போதுமான நிதி இல்லையே என்று வருத்தப் பட்டார். அப்போது ஆசிரியரிடம் மணி சுந்தரம், மிஸ்டர் வீரமணி, உலகில் யாரிடத்திலும் இல்லாத பெரும் மூலதனம் உங்களிடம் இருக்கிறது. அதுதான் பெரியார் எனும் டார்ச். அந்த டார்ச்சை எடுத்துக்கொண்டு நீங்கள் பாலைவனம் சென்றால் கூட அது சோலைவனம் ஆகும் என்று குறிப்பிட் டார். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அப்படிப் பட்ட ஆற்றல் நம் இயக்கத்துக்கு உண்டு. எனவே கழகத்தோழர்கள் புதிய நம்பிக்கை - உற்சாகத்துடன் நம்மால் மட்டுமே முடியும் என்பதைக் காட்டுவோம் இவ்வாறு அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மோடி- ஒரு தமாஷ்!


நரேந்திர தாமோதர தாஸ் மோடி இந்திய நாட்டை ரட்சிக்க வந்த தேவதூதன், பாரத நாட் டைப் பாவிக்க வந்த மகா விஷ்ணுவின் அடுத்த கட்ட அவதாரம்போல இந்த நாட்டு ஊடகங்கள் காற்றடித்து வானில் பறக்க விடுகின்றனவே- அந்தச் சூட்சமத்தின் பின்ப(பு)லம் என்ன தெரி யுமா?

இந்தியாவில் ஊடகங் களில் பிரம்மாவின் நெற் றியிலே பிறந்த ஜாதியி னர் 71 சதவிகிதம். புதுடில்லியில் 300 இந்தி, ஆங்கில ஏடுகளில் மூத்த பத்திரிகையாளர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவ ரும் கிடையாது. எல்லாம் அவாள் மயமே!

மோடிபோல ஒரு தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ பேசி இருந்தால் எப்படி எப்படி யெல்லாம் கேலி பேசி, கிண்டல் அடித்து கூவத் தில் தூக்கி எறிந்திருப் பார்கள்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி. தலைமையில் நடந்தது என்று சென்னையில் மோடி பேசவில்லையா? (ராஜாஜி தலைமையில் நடந்தது என்பதுதான் சரி!).

பாட்னாவில் என்ன பேசினார்? குப்தர் வம்ச பெருமையை நாம் நினைக் கும்போது சந்திரகுப் தரின் ராஜநீதி நினை விற்கு வருகிறது என் றாரே பார்க்கலாம். (சந் திரகுப்தர் மவுரிய வம்சம் என்பதே சரி!).

அடுத்த தமாஷ், அலக்சாண்டர் படை, உலகையே வென்றது. ஆனால், அந்தப் படை யைத் தோற்கடித்தவர்கள் பீகாரிகள் என்று பீகாரின் தலைநகரான பாட்னா வில் நீட்டி முழங்கினார்.

(உண்மை என்ன தெரி யுமா? அலக்சாண்டர் கங்கையைக் கடந்து இக்கரைக்கு வரவில்லை. தட்சசீலா என்று மோடி குறிப்பிடுவது பீகாரில் இல்லை, பாகிஸ்தானில் உள்ளது.

அலக்சாண்டர் சட்லஜ் நதிவரை மட்டுமே வந்தார் என்பது வரலாறு).

எப்படிப்பட்ட கோமா ளிக் கூத்துகள் இவை! மற்றவர்கள் இப்படியெல் லாம் உளறியிருந்தால், நம் ஊர் சோ ராமசாமி அய் யர்கள் எப்படியெல்லாம் நக்கல் அடித்திருப்பார் கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


நான் பெரியார் அவர்களை நன்கு அறிவேன்; அவர் கொள்கைகளைப் பின்பற்றி வருபவன் நார்வே நாட்டு அறிஞர் பெருமிதம்


நார்வே, நவ.6- நார்வே நாட்டுக்காரர் தமிழ் நாட்டுக்காரர் அறவழி என்று அறிந்தவுடன், ஓ, நீங்கள் பெரியார் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்று கேட்டு அசத்தினார் நார்வே நாட்டுப் பேராசிரியர்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அறவழி அவர்கள் திராவிடர் கழகத் தலைவர்

கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பிய கடிதமும், தகவல்களும் வருமாறு: வணக்கம், என் பெயர் அறவழி. நான் நார்வே நாட்டின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றுகிறேன். பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலக பணி நிமித்தமாக நான் முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை; மறு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற போது பயிற்சியாளர் அர்லிட் நொர்டெ பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு என்னைப்பற்றி அனைவரிடமும் அறிமுகப் படுத்தும்படி கூறினார். அதில் நான் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றதும் அவர் வியப்படைந்தார். அவரது அடுத்த கேள்வி நீங்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து வந்தவரா? என்று கேட்டார். மேலும் அவர், தந்தை பெரியாரின் கருத்து களை பல காலங்களாக படித்து வருபவர் என் றும், அவரது கருத்து களை தவறாது பின் பற்றிவருவதாகவும், கூறினார்.



அதன் பிறகு நானும், அவரும் தந்தை பெரி யாரின் சிந்தனைகள் பற்றி பல கருத்துகளை பரிமாறிக் கொண் டோம். ஆனால் அவர் என்னைவிட பெரியா ரைப்பற்றி அதிகம் அறிந்துள்ளார். கருத் தரங்கம் முடிந்ததும் அவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் இருவரும் பேசியது மற்றும் தந்தை பெரியார் பற் றிய அர்லிட் நொர் டெவின் கருத்துகளை பெரியார் பகுத்தறிவு என்ற எனது சமூக இணைய தளத்தில் பதியவிட்டிருந்தேன். அது உடனடியாக பல அயல்நாட்டு நண்பர் களிடம் சென்றடைந் தது. உடனடியாக இதை செய்தியாக்கி நார்வே உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு தந்தை பெரி யார் மற்றும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நிழற்படத்துடன் அனுப்பி வைத்தேன்.

அதை அந்த பத்திரிகை அப்படியே மறுநாள் வெளியிட்டிருந்தது. தந்தை பெரியாரின் கருத்துகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சமுதாயப்பணிகள் கடல் கடந்து அய் ரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதை தமிழக மக்களுக்குத் தெரி விக்கும் விதமாக இந்தச் செய்தியை தெரிவிப்ப தில் பெருமையடைகி றேன். - இவ்வாறு அறவழி கிருபானந்தன் (பொறி யாளர் ரெனிஸெர்ச்ன் எஸ்லேவ் இரிக்ச்சன் செண்டர் நார்வே) அவர்கள் வெளியிட் டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கி யனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக் கியனாகவும், மடையனாகவும் ஆகின் றான்.
(விடுதலை, 11.11.1968)

தமிழ் ஓவியா said...

படேலின் முதுகுக்குப்பின் ஒளியும் மோடி!


படேலை, நரேந்திர மோடி கையில் எடுத்துக்கொண் டாலும், எடுத்துக்கொண்டார்; எட்டுத் திசையிலிருந்தும் மோடியை நோக்கி மொத்துகள் மொத்தமாக வந்துகொண் டிருக்கின்றன.

காந்தியார் அவர்களின் பேரன் ராஜ்மோகன் காந்தி உள்பட கணைகள் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சர்தார் வல்லபாய் படேல் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ள ராஜ்மோகன் காந்தி, சி.என்.என். அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜ நீதியை, மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தை தடுக்க மோடி அரசு தவறி விட்டது குறித்தும், துயரச் சம்பவத்தை கண்டும் மிகவும் வருந்தியிருப்பார். தன்னை படேலின் வாரிசாக மோடி காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இது படேல் குறித்த கருத்தை தவறாக மாற்றி விடும்.

காந்தியின் சீடராகவும், காங்கிரஸ்காரராகவும் இருந்தவர் படேல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழித்தடத்தில் செல் பவர் மோடி. படேல் பின்பற்றிய கொள்கையைக் கடைப்பிடித்து, மோடி தன்னை வளர்த்துக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே. படேல் அணியை கட்டமைப்பதில் வல்லவர். மற்றவர்களுக்கு தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார். அதேபோன்று மோடியும் செயல்பட்டால், அது பாராட் டுக்குரியதே! என்று காந்தியார் அவர்களின் பேரன் சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

தமது அமைப்பின் கொள்கைகளை, கோட்பாடுகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியாது என்பதை சந்தேகத் துக்கு அப்பாற்பட்ட முறையில் உணர்ந்துவிட்ட நிலையில், 450 அடி உயர வல்லபாய் படேலின் சிலையின் பக்கவாட்டில் நின்று கொண்டு தம் தோற்றப் பொலிவை (போஸ்) கொடுக்கிறார் என்பதுதான் உண்மை.

குஜராத் மாநிலத்துக்காரர் படேல் என்பதுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படுமேயானால், படேலுக்கும் தலைவரான காந்தியார் அவர்களும் அதே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்தானே - அவருக்கல்லவா 450 அடி உயரத்தில் சிலையை நிறுவிட முன்வரவேண்டும்!

காந்தியாரிடம் நெருங்கினால் பாமர மக்கள் மத்தியி லிருந்தும், சுனாமி புறப்பட்டுவிடுமே! அட பாவிகளா! காந்தியாரையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு, அவருக்குச் சிலை வேறா நிறுவுகிறீர்கள்? என்று பற்களை நரநரவென்று கடித்துக்கொண்டு சம்ஹாரம் செய்யப் புறப்பட்டுவிட மாட்டார்களா?

படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது டில்லியில் முசுலிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையை சரியாகக் கையாளாமல் இருந்துவிட்டார் என்று கூறி காந்தியார் அவர்களே உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்; அதனை வைத்துக்கொண்டு படேல் முசுலிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவா குணம் - கொண்டவர் என்ற அனுதாபம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இருக்கக்கூடும்.

அதேநேரத்தில், காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தடை செய்து, ஆணை பிறப்பித்தவர் உள்துறை அமைச்சரான படேல் என்பதை மறந்துவிட்டார்களா அல்லது மறைக்கிறார்களா?

தமிழ் ஓவியா said...

அந்த ஆணையில் படேல் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்கள் நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. விரும்பத்தகாத அதே சமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. சட்ட விரோத ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித் துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுமாறும், ஆயுதங்களைச் சேகரிக்குமாறும், அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும், காவல் துறை, இராணுவம் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட மறுக்கு மாறும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் ரகசியமாக உள்ளன என்று தடை அறிக்கையில் காரணங் கள் சொல்லப்பட்டனவே - தடை அறிக்கையை வெளியிட் டவர் உள்துறை அமைச்சர் படேல் அல்லவா!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் எழுதியுள்ள கடிதமும் மிக முக்கியமானது.

இந்துத்துவாவாதிகளின் பேச்சுகள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவைகளாக உள்ளன. இந்துக்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அமைப்பாக்குவதற் காகவும் இப்படி விஷத்தைப் பரப்பவேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்கவேண்டியதாயிற்று. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

- இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு, உள்துறை அமைச்சர் படேல் எழுதிய கடிதம் ஆகும் (செப்டம்பர் 11-1948).

படேலுக்கு 450 அடி உயரத்தில், 2500 கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்ப இருக்கும் - ஆர்.எஸ்.எஸின் பிரத மருக்கான வேட்பாளர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, ஆர்.எஸ்.எஸ்.பற்றி படேல் சொன்னதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்?

இந்தக் கேள்வியை எழுப்பினால், அந்த 450 அடி உயர சிலைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதைத் தவிர மோடிக்கு வேறு வழியேயில்லை.

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் ஒருவர் மீது ஒருவர் 'சாணி'யை அடிக்கும் விழாவாம்!

சத்தியமங்கலம், நவ. 6-ஈரோடு மாவட்டம், கர்நாடகா மாநில எல்லையையொட்டி சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது தாளவாடி. இதன் அருகே உள்ள கும்டாபுரத்தில் பீரேஸ்வரர் கோவில் உள்ளது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் சாணியடி திருவிழா நடைபெறுமாம்.

இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை உருண் டையாக பிடித்து வீசுவார்களாம்.

இந்தக் கோவிலில் உள்ள சிவலிங் கத்தை யாரோ ஒருவர் எடுத்து சாணம் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்து விட்டாராம். ஒரு சமயம் அந்த குப்பை மேட்டில் மாட்டு வண்டி ஒன்று செல் லும்போது ரத்தம் பீறிட்டதாம். இதைக் கண்ட மக்கள் என்னமோ... ஏதோ... என்று தோண்டி பார்த்த போது கோவிலில் காணாமல்போன சிவலிங்கம் இருப்பதை கண்டன ராம்.

அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சாமி, தீபாவளி முடிந்து 4 ஆவது நாள் சாணத்தில் இருந்து மீண்டெழுந்திருக்கிறேன். இதன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என்று கூறிற்றாம்.

இதையடுத்து இந்த பீரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவ ளிக்கு அடுத்த 4 ஆவது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெற்று வருகிறதாம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று இந்த சாணியடி விழா கொண் டாடப்பட்டதாம்.

சாமிக்கு காலை சிறப்பு பூஜை யுடன் விழா தொடங்கியதாம். முன் னதாக கும்டாபுரம் கிராம மக்கள் அனைத்து பசு மாட்டு சாணங் களைச் சேகரித்து கோவில் பின்புற மாக குவித்து வைத்திருந்தனராம்.

தொடர்ந்து அங்குள்ள ஊர்க் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்ததாம்.

இதைத் தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பீரேஸ்வர ருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததாம். கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும் சட்டை அணியாமல் கோவிலுக்கு வந்தனராம்.

பிறகு அங்கு குவித்து வைக்கப் பட்டிருந்த சாணத்தை அவர்கள் உருண்டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்தனர்.

ஒருவர் மீது ஒருவர் சாணியை அடித்த போது கூடி இருந்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள் கைதட்டி ரசித்து பார்த்தனராம்.

சாணியடி நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஊர்க் குளத்தில் குளித் தனராம். பிறகு அவர்கள் வரிசையாக நின்று பீரேஸ்வரரை வழிபட்டனராம்.

இந்த சாணியடி திருவிழாவை ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஏராளமான பக்தர்களும், மேலும் கர்நாடக மாநில பக்தர்களும் நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தனராம்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவு பொருந்துகிறது பார்த்தீர்களா...!

தமிழ் ஓவியா said...


திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!


ஜாதி-மதவாதங்களுக்குச் சம்மட்டி அடிகொடுக்க
திருச்சியில் திராவிடர் கழகம் கூட்டும் மாநாட்டுக்கு
விடுதலைச் சிறுத்தைகளே திரண்டு வாரீர்!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, நவ. 6- ஜாதி - மதவாதங்களை எதிர்த்து வரும் 9ஆம் தேதி திருச்சியில் திரா விடர் கழகத்தின் சார்பில் கூட் டம் மற்றும் திராவிடர் எழுச்சி மாநாட்டுக்கு அனைவரும் வருகை தருமாரு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப் புக் கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் சார் பில் வரும் 9-11-2013 அன்று திருச் சிராப்பள்ளியில் 'திராவிடர் எழுச்சி மாநாடு' ஒருங்கிணைக் கப்படுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் தலைமையில் நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் ஜாதிய வாதமும், மதவாதமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. நிறைவாக, திருச்சி உழவர் சந்தை மைதா னத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

தமி ழக அளவிலும், அகில இந்திய அளவிலும் ஜாதியவாதமும் மத வாதமும் இருபெரும் ஆபத்து களாகச் சூழ்ந்துள்ளன. அப்பாவி உழைக்கும் மக் களுக்கிடையில் ஜாதிவெறியை யும் மதவெறியையும் தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ஜாதியவாதிகளும், மதவாதிகளும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவரிடை யேயும் இந்த நஞ்சைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய சூழ் நிலையில்தான் திராவிடர் கழ கம் மிகுந்த பொறுப்புணர் வோடு உடனடியாகக் களமிறங் கிச் சிறப்பாகச் செயலாற்றி வரு கிறது. தருமபுரியில் சேரிகளைச் சூறையாடிக் கொளுத்திய ஜாதி வெறியர்களைக் கண்டிக்கும் வகையில் உடனடியாக ஜாதி ஒழிப்பு மாநாட்டை தருமபுரி யில் திராவிடர் கழகம் நடத்தி யது. தற்போது நரேந்திரமோடி யின், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் ஸின் சமூக விரோத அரசிய லைக் கண்டிக்கவும், எதிர்க்கவும் ஏதுவாக, திருச்சிராப்பள்ளியில் திராவிடர் எழுச்சி மாநாட்டை ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார். இது இன்றைய சூழலில் மிகவும் வரவேற்கத்தக்கதாகும். திராவிடர் எழுச்சி மாநாடு என்பது தலித்துகள், பழங்குடி யினர் மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்புக்கான மாநாடா கும். இந்த மாநாடு ஜாதி-மத வெறியர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பதாக அமைய வேண் டும். ஆகவே, இந்த மாநாட்டை முழுமையாக வெற்றி பெறச் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று யாவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.